Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 660

இதுதாண்டா தொழிலாளி வர்க்கம் – மே நாளில் சிவந்த ஓசூர்

1

மே தினம் என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவரும் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினம். சூரியன் உதித்து அந்திசாயும் வரையிலும் ஓய்வின்றி உழைத்த கரங்கள் 1886 மே-1 ல் அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட் சதுக்கத்தில் ஒன்று கூடி தங்களுக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உரிமை குரலெழுப்பி விண்ணதிர முழங்கினார்கள்.

தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கண்டு அரண்டுப்போன முதலாளிகள் தமது ஏவல் நாய்களான போலீசை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டிலே சுருண்டு விழுந்த எண்ணற்ற தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்த ஹேமார்ட் சதுக்கமே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தது. அன்றைய நாளில் உயிர் இழந்த தொழிலாளர்களை நினைவுகூறவே அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவே, தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை சாதிக்கவே நாம் செல்ல வேண்டிய பாதையைப்பற்றி நினைவுகூர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்ல உறுதி பூணுவதே மேதினத்தின் சிறப்பு.

உலகமே உழைக்கும் தொழிலாளர்களால்தான் இயங்குகிறது. ஆனால் அந்த உழைப்பாளர்களுக்காக ஒரே ஒரு நாள்மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும்கூட முதலாளித்துவ ஓநாய்கள் மனமிறங்கி கொடுத்த சலுகையல்ல. தொழிலாளர்கள் தாங்களே போராடி தம் கரத்தாலே பறித்துப் பெற்றுக் கொண்ட நாள் இது. அந்த வர்க்க பெருமிதத்தோடு முன்பெல்லாம் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதிநாடகங்கள், ஆர்ப்பாட்டங்கள் என போர்க்குணமான நிகழ்வுகள் தங்களது வர்க்கத்துக்காக, உரிமைக்காக நடந்தவண்ணம் இருந்தன. ஆனால் இப்போது, குறிப்பாக தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் .. புரட்சிகர இயக்கங்களைத் தவிர பிற எவையுமே இந்த பாரம்பரியத்தை எடுத்து வரித்துக்கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும் கண்ணோட்டம் கொண்டதாக அறவே இல்லை.

எல்லாருமே தங்களின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் நலனை முன்னுறுத்தியோ அல்லது முதலாளிகளின் நலனை பேணும் பொருட்டோ அல்லது பேரம்பேசி ஆதாயம் பெறும் பொருட்டோ அல்லது தங்களின் கட்சிகளை அதன் தலைமையின் போலிக் கௌவரத்தை வெளிப்படுத்திக் கொள்ளவோதான் ஒரு அடையாளமாக நடத்துகின்றன. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதனை பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. கூர்ந்து அவதானிப்போர் உணரமுடியும்.

இங்கே, ஓசூரிலே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய இவ்விரு புரட்சிகர அமைப்புகள் சார்பாக மேதினத்தை தொழிலாளர்களுக்கான உண்மையான பொருளில் அதன் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து உயர்த்திப் பிடிக்கின்ற வகையிலே மேதினத்தன்று நான்கு தலைப்புகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுக் கொண்டன. அதன்படி திட்டமிட்டவகையில் எடுத்துச்செல்லும்போது ஏற்படுத்தப்பட்ட தடைகளை எதிர்கொண்டு முறியடித்து போர்க்குணத்தோடு எழுச்சிகரமாக நடத்திமுடித்தன. திரளான மக்கள் இறுதிவரை கலந்துக்கொண்டு ஆதரித்தும் வாழ்த்துத் தெரிவித்து சென்றதும் போலிகம்யூனிஸ்டுகளின் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தோழர் இதில் இறுதிவரை கலந்துக்கொண்டு நெகிழ்வோடு தனது ஆதரவைத் தெரிவித்துச் சென்றதுமே இதற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.

1) காலை 7.30 மணிமுதல் 10.30 வரை பு.ஜ.தொ.மு-ன் கிளைச் சங்கங்களில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழிகள் பற்றிய விளக்க உரைகள்.

2) இருசக்கர வாகனங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் ஊர்வலமாக துண்டறிக்கைகளை கொடுத்து வழிநெடுக பிரச்சாரம் செய்தல்

3) கார்போரண்டம் யுனிவர்சல் ஆலையில் காலை 11.00 மணியளவில் அவ்வாலைத் தொழிலாளர்கள் சங்கம் பு.ஜ.தொ.மு வுடன் இணைக்கப்படும் விழாவில் கலந்துக்கொண்டு அவர்களை வாழ்த்தி எழுச்சியுரையாற்றுதல்

4) மாலை 5 மணியளவில் பன்னாட்டுக் கம்பெனிகள்- பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்! என்கின்ற அரசியல் முழக்கத்தின்கீழ் மேநாளில் சூளுரைத்து ஓசூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பே திரளான மக்கள் பங்கேற்போடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்துதல்

மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் மேதின ஒரே நாளில் கம்பெனி முதலாளிகள் அவர்களின் ஏவலாளிகளின் தடைகளை எதிர்கொண்டு நடத்தியது என்பது ஒசூர் தொழிலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக இருந்தது.

காலை 8.00 மணியளவில் சிப்காட்-1ல் உள்ள கமாஸ் வெக்ட்ரா ஆலைவாயில் முன்பு அவ்வாலை தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு வின் கிளைச்சங்கத் தலைவர் கொடியேற்றி தலைமைத்தாங்கினார். பு.ஜ.தொ.மு வின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். இறுதியாக கிளைச் சங்க பொருளாளர் தோழர் முரளி நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு அங்கிருந்து கொடி, பதாகைகளுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று சிப்காட்-2 ல் உள்ள வெக் இந்தியா ஆலைவாயில் முன்பாக அவ்வாலையில் இயங்கும் பு.ஜ.தொ.மு வின் கிளைச்சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ் கொடியேற்றி தலைமை தாங்கினார். இதில் அவ்வாலை கிளைச்சங்கத்தின் செயலாளர் தோழர் வேல்முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குறிப்பாக ஆலையில் நடைமுறையில் உள்ளதாக சொல்லப்படும் நிலையாணை என்பது என்ன என்றே பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு தெரியாது. பு.ஜ.தொ.முவில் இணைந்தபிறகுதான் இதுபற்றியும் இது ஆலை முதலாளியின் நலனுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளமுடிந்தது. இருப்பினும் இதன்படிகூட முதலாளி நடந்துக்கொள்ள மறுக்கிறான் என்பதை பார்க்கும்போது நாமும் முதலாளியைப்போலவே நமக்கான அதிகார அமைப்புகளை கட்டப்போராடவேண்டும் என்பதை உணரவேண்டும் என்றவகையில் தொழிலாளர்களுக்கு புரியும்படியாக எளிமையாக உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு ஊர்வலமாக இருசக்கரவாகனங்களில் கொடி, பதாகையோடு துண்டறிக்கைகளைக் கொண்டு பிரச்சாரம் செய்துக்கொண்டே காலை 11 மணியளவில் மீண்டும் சிப்காட்-1 ற்கு வந்து கார்போரண்டம் ஆலையில் பு.ஜ.தொ.மு ல் அவ்வாலைத் தொழிலாளர்கள் இணைப்புவிழாவில் கலந்துக்கொண்டனர்.

கார்போரண்டம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பு.ஜ.தொ.மு ல் இணைப்பு விழா :

காலை 11 மணியளவில் நடத்தப்படுவதற்காக தோழர்கள் முன்கூட்டியே வந்து கொடிநட்டு, தகவல்பலகை பொறுத்தப்படும் வகையில் முயற்சி செய்தனர். இதனை தடுக்கும் பொருட்டு நிர்வாகம் போலீசை அழைத்தவுடன் உடனே ஓடோடி வந்தார்கள் போலீசுப்பட்டாளம். ஆலை நிர்வாகம் இஞ்சக்சன் ஆர்டர் வாங்கிவைத்துள்ளது. 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் எதுவுமே நீங்கள் செய்துக்கொள்ளவேண்டும் என சட்டவாதம் பேசி தடுக்க முயற்சித்தது போலீசு. கலெக்டரிடம் பேசுங்கள் என்று அறிவுறுத்தி காலம் தாழ்த்தியது. இதனைப்பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் இந்த நாளில் கம்பெனி வாயில்முன்பாக தொழிலாளர்கள் கூடி தங்களின் தலைவிதியைப்பற்றியும் தங்களின் மூதாதையர்களைப்பற்றியும் நினைவுகூர்ந்து உறுதிமொழியேற்பது என்பது சாதாரண நடைமுறைதான். இது எல்லோருக்கும் பொருந்துவதைப்போலவே எங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிக்கொண்டே தங்களின் வேலையை கவனித்தனர். பிறகு போலீசு ஒதுங்கிக்கொண்டது.

பிறகு மிரட்டும் தொனியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவு செய்யத்தொடங்கியது. நன்றாகவே பதிவுசெய்துக்கொள்ளுங்கள் எங்களின் நடவடிக்கை என்பது வெளிப்படையானது என்று கூறிவிட்டு வேலையை தொடர்ந்தனர் தோழர்கள்.

முதல் நிகழ்ச்சியாக தோழர் பரசுராமன் தலைமையில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிறகு ஆலைமுன்பு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இணைப்புவிழா சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்விற்கு கார்போரண்டம் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் அந்தோனி தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். தோழர் சங்கர் மாவட்ட செயலாளர், தோழர் செந்தில்குமார் கமாஸ்வெக்ட்ரா கிளைச்சங்க செயலாளர், தோழர் வேல்முருகன் வெக் இந்தியா கிளைச்சங்க செயலாளர், தோழர் வெங்கடேசன் அசோக்லேலாண்டு தொழிலாளி, தோழர் சிவலிங்கம் கார்போரண்டம் ஐ.சி எம்ளாயிஸ் யூனியன் இணைச்செயலாளர் , தோழர் கோபால் ஹரிதா ரப்பர் நிறுவன தொழிலாளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தோழர் சுந்தரேசன் கா.யு.தொ.தொழிற்சங்க இணைச்செயலாளர் நன்றியுரையாற்றினார்.

அமைதியாக நடந்தேறவேண்டிய இவ்விணைப்பு விழாவை பரப்பரப்பூட்டி போலீசு பட்டாளம், பத்திரிக்கையாளர்கள், அதிகார வர்க்கங்கள் புடைசூழ வெற்றிகரமாக எழுச்சியாக நடந்தது. முருகப்பா குழுமநிறுவனமான இந்த ஆலை நிர்வாகம் இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். இல்லையேல் ஒசூர் தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் ஆதரவைத் திரட்டி சட்டப்படியும் சட்டத்திற்கு வெளியே தெருப்போராட்டங்களை நடத்தி பணியவைப்போம் என்று எச்சரிக்கும் வகையில் இவ்விழா நடந்தேறியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

நகராட்சி அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட எழுச்சிமிகு அரசியல் ஆர்ப்பாட்டம்:

சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வந்தடையும் வண்ணம் போலீசு அனுமதி கோரப்பட்டிருந்தது.

“அவ்வாறு அனுமதிதரமுடியாது. நாங்கள் சொல்கின்ற ரூட்டில் வேண்டுமானால் பேரணி வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.

“இது தொழிலாளர் தினம், இது எங்களுடைய தினம் நாங்கள் விரும்பும் வழியை எங்களுக்கு ஒதுக்கித்தர உங்களுக்கென்ன பிரச்சினை” என்றால் அதற்கு எவ்வித பதிலும் இல்லை.

மாறாக, “நாங்கள் சொல்கிறபடி பேரணி நடத்துங்கள் இல்லையேல் உங்கள் பேரணிக்கு அனுமதியில்லை” என்றனர்.

ஆதலால் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தமுடிவு செய்து அதன்படி நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்திருந்தனர். அதே இடத்தில் வலது-இடது போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி யினர் குவிந்து முழக்கமிட முயன்றனர்.

அவர்களை கேட்டால் “எங்களுக்கும் இங்கதான் அனுமதியளித்துள்ளனர்” என்றனர். பிறகு போலீசிடம் கேட்டால்..”அவர்கள் அங்க நடத்திக்கொள்ளட்டும், நீங்கள் இங்க நடத்திக்கொள்ளுங்கள். நாங்க என்ன செய்யமுடியும் ? எங்கள் மேல்அதிகாரிகள் இப்படி கொடுத்திருப்பது குறித்து எங்களுக்கே தெரியாது” என கைவிரித்தனர்.

பிறகு நமது தோழமை அமைப்பான ம.க.இ.க பாடல் ஒலிப்பேழையில் வருகின்ற போலீக்கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தும் பாடலை ஒலிப்பெருக்கியில் போட்டவுடன் அவர்கள் துண்டக்காணோம் துணியக்காணோம் என கிளம்பிவிட்டனர். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் சாதாரணமாக நடந்தேறவேண்டிய ஆர்ப்பாட்டம் பரபரப்பாகவும், திரளான மக்களின் பங்கேற்போடும்,விவாதங்களோடும் போர்க்குணத்தோடு எழுச்சிகரமாக நடந்தேறியது.

சரியாக 5.00 மணிக்கு பறையோசை அதிர தொடங்கிய இவ்வார்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில்குமார் முன்மொழிதலுடன், மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையேற்று நடத்தினார். பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு வின் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தெலுங்கில் கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.

தோழர் சங்கர் தனது தலைமையுரையில் இரண்டாண்டிற்கு முன்பு இதே நாளில் மேதினத்தில் பேருந்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கால்தவறி விழுந்து இறந்த தியாகத் தோழர் முன்னால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்வராசை நினைவுகூர்ந்து உரையாற்றினார். அவரது தியாகத்தை நாம் நெஞ்சிலேந்திப் போராட அழைத்துப்பேசியது உருக்கமாக இருந்தது.

தோழர் ரவிச்சந்திரன் தனது கண்டன உரையில் இங்கே பாகலூர் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் தென்பெண்ணையாறாகட்டும், நமது தமிழகத்தின் நெற்களஞ்சமாம் தஞ்சையை வளமான பூமியாக்கிய காவிரியாகட்டும் இவைகள் எல்லாமே கார்பரேட் முதலாளிகளின் நலன்பொருட்டே பொட்டல் காடாக்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர்கூட இனி கிடைக்காது என்ற நிலைக்கு அழைத்துச் செல்லும் இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வேரோடு வெட்டி சாய்த்திட புரட்சிகர இயக்கங்களில் அணிதிரண்டுப்போராட வேண்டிய அவசியத்தை வலியிறுத்திப்பேசினார். அவர் பேசும்போது இந்த தண்ணி எந்த முதலாளித்துவ கொமபனும் கண்டுப்பிடித்ததல்ல. இயற்கையாகவே இந்த பூமியில் உள்ளது. இதைகூட விட்டுவைப்பதில்லை என்றால் நாம் சும்மா வேடிக்கைப் பார்க்கமுடியாது என்று கூறியது நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில் இந்த நாட்டின் சட்டமன்றம், பாராளுமன்றம் , நீதிமன்றம், போலீசு, இராணுவம், பத்திரிக்கைகள் எல்லாமே முதலாளி வர்க்கத்துக்கான நிலையாணைகள். இவை எதுவுமே இந்நாட்டின் கோடான கோடி மக்களுக்கு பயன்தருவதில்லை. மாறாக கார்பரேட் முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்கானவை. ஓட்டுக்கட்சிகள் எல்லாமே இதற்கு துணைநிற்பவை. இதனைப்புரிந்துக்கொண்டு நாம் நமக்கான உண்மையான மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைக்கும் வகையில் எழுச்சிகரமாக உரையாற்றியது வியாபாரிகள், தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மேநாள் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
விவசாயிகள் விடுதலை முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!

ஓங்குக, ஓங்குக!
புதிய ஜனநாயகப் புரட்சி
ஓங்குக, ஓங்குக!

வாழ்க வாழ்க வாழ்கவே!
மே நாள் வாழ்கவே!

***

வெட்டி வீழ்த்துவோம்! வெட்டி வீழ்த்துவோம்!
பன்னாட்டுக் கம்பெனிகளின்
பார்ப்பன சர்வாதிகாரத்தை
வெட்டி வீழ்த்துவோம்! வெட்டி வீழ்த்துவோம்!

கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!
உண்மையான ஜனநாயகத்திற்கான
மாற்று அதிகார அமைப்புகளைக்
கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!

***

பகற்கொள்ளை, பகற்கொள்ளை
தனியார் பள்ளிகள் பகற்கொள்ளை
கட்டணக் கொள்ளையைத் தாங்காமல்
பெற்றோர்களோ தற்கொலை!
மாறிவிடுமா? மாறிவிடுமா?
மோடி ஆட்சி வந்தாலும்
லேடி ஆட்சி வந்தாலும்
மாறிவிடுமா? மாறிவிடுமா?

ஜூன் மாதம் பள்ளி திறக்குது
பெற்றோர்களுக்கோ பீதி பரவுது
கல்விக் கட்டணத்தை நினைத்தாலே
வாழ்க்கையே நொந்து போகுது!
மாறிவிடுமா? மாறிவிடுமா?
மோடி ஆட்சி வந்தாலும்
லேடி ஆட்சி வந்தாலும்
மாறிவிடுமா? மாறிவிடுமா?
யார் ஆட்சி வந்தாலும்
ஒழியாது, ஒழியாது!
கல்வித் தனியார்மயம் ஒழியாது!

அம்மை நோய் பரவுது
வைரஸ் நோய் பரவுது
டாக்டரிடம் காரணம் கேட்டா
குடிநீரில் கோளாறு என்கிறாரு
அம்மா தண்ணீரு பத்துரூபா
அக்வா தண்ணீரு இருபதுரூபா
ஜோரா நடக்குது, ஜோரா நடக்குது!
தண்ணீர் வியாபாரம் ஜோரா நடக்குது!
தண்ணியை விக்கிற அம்மாதான்
தனியார்மயத்தின் காவலாளி!

இஞ்ஜினியரிங் காலேஜெல்லாம்
காத்து வாங்குது, காத்துவாங்குது!
பி.இ. படிச்சவன் பட்டமெல்லாம்
காத்துல பறக்குது, காத்துல பறக்குது!
வேலையின்மையை உருவாக்கிய
தனியார்மயத்தின் தாசர்களான
ஓட்டுக் கட்சிகளின் ஆட்சி மாற்றம்
வேலையில்லாத் திண்டாட்டத்தை
ஒழிக்காது, ஒழிக்காது!

வாஜ்பாயி தொடங்கி வைத்து
மன்மோகன் அழைத்து வந்த
வால்மார்ட்டும், ரிலையன்சும்
சில்லரை வணிகத்தை
நசுக்க வருது! நசுக்க வருது!
நாலு கோடி வியாபாரிகளை
ஒழிக்க வருது! ஒழிக்க வருது!
புதிய ஆட்சி என்பதெல்லாம்
போராடும் வணிகர்களை
-ஒடுக்க வருது! ஒடுக்க வருது!

பால் குடிக்கும் குழந்தையைக் கூட
பாலியல் வன்முறை விட்டுவைக்கல
பள்ளிக் கூட மாணவர்களை
செக்ஸ் வெறி விட்டுவைக்கல
காரணம் என்ன, காரணம் என்ன?
தனியார்மயத்தின் முன்னேற்றமெனும்
செல்ஃபோனும் இன்டர்நெட்டும்

இன்டர்நெட்டில் பிரச்சாரம் செய்து
ஆட்சிபுடிக்கும் ஓட்டுக்கட்சிகள்
பாலியல் வன்முறை ஒழிக்காது!

விவசாயிகளுக்கு சோறுபோட்டது
விவசாயம் என்பதெல்லாம்
அந்தக்காலம்! அந்தக்காலம்!
விவசாயத்தைக் காப்பாற்ற
பெங்களூருக்கும் திருப்பூருக்கும்
ஓடியது கடந்தகாலம்!
விளைநிலத்தை விற்றுவிட்டு
ஊரைவிட்டே ஓடுவது
இந்தக்காலம்! இந்தக்காலம்!
விவசாயம் ஒழிந்ததற்கு
காரணம் யார்? காரணம் யார்?
மூன்று இலட்சம் விவசாயிகள்
தற்கொலைக்குக் காரணம் யார்?
டாடா, பிர்லா, அம்பானிக்காக
விவசாயத்தை ஒழித்துக் கட்டிய
தனியார்மயத்தின் தாசர்களே!
தனியார் முதலாளிகளுக்கு
விளைநிலங்களை தாரைவார்த்த
குஜராத்தின் முதலமைச்சர்
விவசாயிகளின் எதிரியே!

எட்டு மணிநேர வேலையில்லை
பணிப்பாதுகாப்பு ஏதுமில்லை
நிரந்தமான வேலையில்லை
மருத்துவ வசதி ஏதுமில்லை
உரிமைகள் ஏதுமில்லாமல்
உழன்று சாகிறான் தொழிலாளி!
தனியார்மயத்தின் பரிசு இது!
தொழிலாளர்கள் கொத்தடிமைகள்
உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு
சங்கம் வைக்கும் உரிமையில்லை!
ஏட்டளவில் இருக்கின்ற
தொழிலாளர் உரிமைகளை
இல்லாமல் ஒழிப்பதற்கு
கார்ப்பரேட் கம்பெனிகள்
ஓநாய்களாக திரிகின்றன.

கான்ட்ராக்ட் தொழிலாளி என்பதெல்லாம்
கன்ஃபார்ம் தொழிலாளி என்பதெல்லாம்
தொழிலாளர்களை பிரித்துவைத்து
ஒடுக்குவதற்கே ஒடுக்குவதற்கே
புரிந்து கொள் புரிந்து கொள்!

பயிற்சி மாணவர் என்ற பெயரில்
வேலை செய்பவரும் தொழிலாளியே
பயிற்சி என்ற பெயரிலே
நமது உழைப்பை சுரண்டுகிறான்!
தீவிரமடையும் தீவிரமடையும்
புதிய ஆட்சி அமைந்தபின்னர்
தொழிலாளர் மீதான
அடக்குமுறைகள் தீவிரமடையும்!

ஜனநாயக ஆட்சி என்ற பெயரில்
இயற்கை வளங்களை சூறையாடுறான்!
இரும்புத்தாதை கொள்ளையடிக்க
சட்டீஸ்கர் மாநிலத்தில்
பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறான்!
திரு வண்ணாமலை மாவட்டத்திலேயே
கவுத்தி வேடியப்பன் மலைகளை
ஜிண்டாலுக்கு தாரை வார்க்க
விவசாயிகளை விரட்டியடிக்கிறான்!
தஞ்சை, திருவாரூர் மாவட்ட
விவசாயிகளை விரட்டியடிக்க
மீத்தேன் நிலக்கரி எடுப்புத் திட்டமாம்
தீவிரமடையும் தீவிரமடையும்!
மோடி ஆட்சி என்றாலும்
கேடி ஆட்சி என்றாலும்
இயற்கை வளத்தை சூறையாடும்
தனியார்மயத்தின் கொடுமைகள்
தீவிரமடையும் தீவிரமடையும்!

பொதுசிவில் சட்டமென்றும்
முசுலீமகள் எதிரியென்றும்
ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. பேசுவது
கார்ப்பரேட் கொள்ளையை மறைப்பதற்கே!
உழைக்கும் மக்களை கூறுபோடவே!
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
உழைக்கும் வர்க்கம் என்ற பெயரில்
ஓரணியாய் அணிதிரள்வோம்!

***

ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
தனியார்மயத்தின் தாசர்களே!
மாறிவிடாது, மாறிவிடாது!
புதிய ஆட்சி வந்துவிட்டாலே
நமது அவலங்கள் மாறிவிடாது!
தீவிரமடையும், தீவிரமடையும்
விலைவாசி உயர்வும் நெருக்கடிகளும்
தீவிரமடையும், தீவிரமடையும்!

சலுகைகளும் மானியங்களும்
பன்னாட்டு முதலாளிக்கு
வறுமையும் தற்கொலையும்
நம்நாட்டு மக்களுக்கு
இதுதான் போலி ஜனநாயகம்!

ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
தனியார்மயத்தின் அடிமைகளே
ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
கார்ப்பரேட் கம்பெனிகளே

***

நாட்டை கூட்டிக் கொடுக்கும் மன்றம்
சட்டமன்றம், பாராளுமன்றம்!
காசுக்கு நீதியை விற்கும் மன்றம்
நீதிமன்றம் நீதிமன்றம்!
கார்ப்பரேட்டுகளின் அடியாள் படை
தாசில்தாரும் கலெக்டரும்!
உழைக்கும் மக்களை ஒடுக்கும் படை
போலீசும் இராணுவமும்!
பத்திரிகை டீவி என்பதெல்லாம்
கார்ப்பரேட்டுகளின் பாக்கெட்டிலே
பத்திரிகை சுதந்திரம் என்பதெல்லாம்
ஆபாச சீரழிவு பிரச்சாரம்தான்!
புரிந்து கொள்வோம்! அடையாளம் காண்போம்!
உழைக்கும் மக்கள் எதிரிகளைப்
புரிந்து கொள்வோம்! அடையாளம் காண்போம்!

ஆணையங்கள் என்ற பெயரில்
கார்ப்பரேட்டுகளின் ஆட்சி நடக்குது!
சட்டமியற்றும் அதிகாரம் கூட
நாடாளுமன்றத்திற்கு இனிமேல் இல்லை
அரசியலமைப்புச் சட்டம் என்பதே
கார்ப்பரேட் கம்பனிகளின் நிலையாணை தான்

கொள்ளையடிப்பதே கொள்கையானபின்
சட்டம் – நீதி தேவையில்லை
என்பதுதான் மோடி மந்திரம்!
பாசிசத்தின் மூடு மந்திரம்!

***
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்!

நிலம், நீர், காற்று எல்லாம்
கல்வி, மருத்துவம், சாலை எல்லாம்
உழைக்கும் மக்களின் உரிமையாக்குவோம்!
பொது உடைமை யாக்குவோம்!
போக்குவரத்து, மின்சாரம்
தொலைபேசி எல்லாமே
உழைக்கும் மக்களின் உரிமையாக்குவோம்!
பொது உடைமை யாக்குவோம்!
தனியார் உடைமையை ஒழித்துக் கட்டுவோம்!
பொது உடைமை யாக்குவோம்!

நில முதலைகள், கல்வி வியாபாரிகளின்
மருத்துவம், தண்ணிர் வியாபாரிகளின்
சொத்துரிமையைப் பறித்தெடுப்போம்!
வாக்குரிமையைப் பறித்தெடுப்போம்!

பன்னாட்டுக் கம்பெனிகள்
டாடா – பிர்லா – அம்பானிகளின்
சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!
உரிமைகளை பறித்தெடுப்போம்!

இலஞ்ச ஊழலில் கொள்ளையடித்த
அதிகாரிகள், அரசியல்வாதிகளின்
சொத்துக்களைப் பறித்தெடுப்போம்!
வாக்குரிமையைப் பறித்தெடுப்போம்!

ஆலைகள் தோறும் கமிட்டிகள் அமைப்போம்!
ஆலை நிர்வாகத்தைக் கையிலெடுப்போம்!
நகரங்கள் தோறும் கமிட்டிகள் அமைப்போம்!
நகரத்தை நிர்வாகம் செய்வோம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளை
நாடு முழுவதற்குக் கட்டியமைப்போம்!
விளை பொருளுக்கு விலை நிர்ணயம்
சாலை அடிப்படை வசதிகள் வரை
அனைத்து பிரச்சனைகளையும்
மக்கள் கமிட்டிகள் மூலமே
தீர்வு காண்போம்! தீர்வு காண்போம்!

போலீசு, இராணுவம், நீதிமன்றங்களின்
அதிகாரங்களைப் பறித்தெடுப்போம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளின்
அதிகாரத்தின் கீழ் கட்டுப்படுத்துவோம்!

இரட்டையாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!
சட்டமியற்றவும் அமுல்படுத்தவும்
அதிகாரம் கொண்ட அமைப்பாக்குவோம்!
மக்கள் பிரதிநிதி தவறிழைத்தால்
திருப்பியழைக்கவும் தண்டிக்கவும்
அதிகாரம் மக்களுக்கே!

போராட்டங்களைக் கட்டியமைப்போம்!
எழுச்சிகளை வளர்த்தெடுப்போம்!
உண்மையான ஜனநாயகத்தை
மாற்று அதிகார அமைப்புகளை
வளர்த்தெடுப்போம்! வளர்த்தெடுப்போம்!

அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்!
போலி ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டுவோம்!
புதிய ஜனநாயகத்தை கட்டியமைப்போம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- விவசாயகள் விடுதலை முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள். தொடர்புக்கு:செல்-9788011784

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

3

ன்றைய “இராம ஜென்மபூமி”யும் இன்றைய “ஒளிரும் குஜராத்”தும் வேறு வேறானவையா? இல்லை. இரண்டும் புனைவுகள்தான். முன்னது ஆர்.எஸ்.எஸ்-ன் சொந்த சரக்கு; பின்னது இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தந்த சரக்கு என்பதுதான் வேறுபாடு. இராமாயணம் என்ற புனைகதையை, ஒரு நம்பிக்கையாக மக்கள் மனதில் நிலைநாட்ட பார்ப்பனர்களுக்கு சில நூறு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், ஒளிரும் குஜராத் என்ற புனைசுருட்டை, மிகக் குறுகிய காலத்தில் ஒரு ‘தேசிய’ மூடநம்பிக்கையாக நிலைநிறுத்தி விட்டது, இந்தியத் தரகு முதலாளி வர்க்கம்.

“ஒளிரும் குஜராத்” என்பது ஒரு குறியீடு. மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என்று ஆளும் வர்க்கம் உருவாக்கும் கருத்தாக்கம்தான் அதன் உள்ளடக்கம். தீவிரமான வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வையும் நியாயப்படுத்தும் இந்தக் கருத்தாக்கத்தின் இதயமாக இந்துத்துவம் மறைந்திருக்கிறது.

“நாளைய பிரதமர் மோடி” என்ற முழக்கம், இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தீர்மானித்த நிகழ்ச்சி நிரல்தான் என்பது இன்று முற்றுமுழுதாக அம்பலமாகிவிட்டது. இந்த முடிவுக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் வந்ததைப் பற்றித் தனது கட்டுரையொன்றில் விளக்குகிறார் சித்தார்த் வரதராஜன் (தி இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர்).

மன்மோகன் அரசு 2009-ல், இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றிருந்த அந்த ஆண்டிலேயே, கார்ப்பரேட் வர்க்கத்தின் இந்தக் கனவு துவங்கி விட்டது. “மோடியின் தலைமையில் குஜராத் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது; இந்த தேசத்துக்கு தலைமையேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால், எப்படி இருக்கும்; எண்ணிப் பாருங்கள்” என அன்றே “வைப்ரன்ட் குஜராத்” நிகழ்ச்சியில் பேசினார் அனில் அம்பானி. உடனே மிட்டல் உள்ளிட்டோர் அதனை வழிமொழிந்தனர். 2010-ல் மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்ட டாடாவுக்கு குஜராத்தில் சர்வமானியம் அளித்து மோடி குடியேற்றியவுடன், “வீடற்றவர்களாக நடுத்தெருவில் நின்ற எங்களுக்குத் தஞ்சமளித்தவர் மோடி” என்று நெகிழ்ந்தார் டாடா மோட்டார்ஸின் எம்.டி. ரவி காந்த். “மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கு 6 மாதங்கள் ஆகும்; குஜராத்தில் இரண்டே நாட்கள்தான்” என்று மோடியின் ஒற்றைச் சாளர நிர்வாகத்தைப் புகழ்ந்தார் டாடா.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

“குஜராத் மாநிலமே ஒரு தங்கக் குத்துவிளக்காக மின்னுவதாகவும், அதன் பெருமை அனைத்தும் மோடியையே சேரும்” என்றும் 2011-ல் புகழ்ந்து, பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்தார் முகேஷ் அம்பானி. “இன்று சீனாவைப் போன்ற வளர்ச்சி என்று எல்லோரும் பேசுகிறார்கள். விரைவில் குஜராத்தைப் போல வளரவேண்டும் என்று சீனாவில் பேசப்போகிறார்கள். அந்த நாள் தொலைவில் இல்லை” என்று 2013-ம் ஆண்டு “வைப்ரன்ட் குஜராத்” நிகழ்ச்சியில் பேசினார் ஆனந்த் மகிந்திரா. இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. மோடியின் பத்தாண்டு ஆட்சியில் தனது சொத்தைப் பத்து மடங்கு பெருக்கிக் கொண்ட அதானியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்தான் மோடியின் அதிகாரபூர்வ ஸ்பான்சர்; “சர்வதேச அரங்கில் குஜராத்தின் கவுரவம் குலைக்கப்படுவதை எதிர்த்து” (இனப்படுகொலைக்காக) 2002-லேயே குரல் கொடுத்தவர்.

ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் இப்படியெல்லாம் துதிபாடிப் பதவியில் அமர்த்த துடித்தது இந்திய அரசியலில் இதுவரை நடந்ததில்லை. அதுவும் முதலாளிகளுக்குச் சலுகை வழங்குவதில் “நீ, நான்” என்று மாநில முதல்வர்கள் போட்டி போடும் இந்தக் காலத்தில், இனப்படுகொலை குற்றவாளி என்று அம்பலப்பட்டுப்போன ஒரு நபரை, முதலாளி வர்க்கம் இந்த அளவுக்குத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே மோடியின் தனிச்சிறப்பை யாரும் ஊகிக்க முடியும்.

மோடி, குஜராத்தின் கடற்கரையையும், விளைநிலங்களையும் அதானி, டாடா, அம்பானி சகோதரர்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலான அனைவருக்கும் வாரிக்கொடுத்ததும், வரிச்சலுகைகள் – மானியங்கள் அளித்ததும் ஏற்கனவே அம்பலமாகியிருக்கின்றன. கேட்பதற்கு முன் வாரிவழங்கும் மோடியின் பரந்த உள்ளத்தைக் காட்டிலும் முதலாளிகளுக்குப் பிடித்திருப்பது மோடியின் வேகம். சட்டம்-நெறிமுறை எதையும் பொருட்படுத்தாத வேகம்! 8 அமைச்சரவைகளைக் கையில் வைத்துக் கொண்டு மோடி என்ற ஒற்றைச் சாளரத்திலேயே முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் முடித்துத் தரும் நிர்வாகத் திறன் அல்லது சர்வாதிகாரம்! மக்களின் எதிர்ப்பு இயக்கங்களை இல்லாதொழிக்கும் சாமர்த்தியம் அல்லது துணிச்சல்!

2009 முதல் 2012 வரையிலான இந்தக் காலத்தில்தான் கலிங்காநகர், போஸ்கோ, நியம்கிரி முதலான போராட்டங்கள் நடந்தன. ராடியா டேப்புகள் வெளியாகின. தங்களது அந்தப்புர இரகசியங்களைக் காப்பாற்றுவதற்குக்கூட முடியாத அளவு இந்திய ஜனநாயகம் பலவீனமடைந்திருப்பதை எண்ணிக் குமுறினார் டாடா. முகேஷ் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகள் தொழில் செய்வதற்குரிய சூழல் இந்தியாவில் இல்லையென்றும், வெளிநாட்டில் முதலீடு செய்வதாகவும் பகிரங்கமாக அரசை மிரட்டினர்.

இதனைத் தொடர்ந்து முதலாளிகளைத் தாஜா செய்வதற்கான நடவடிக்கைகளில் மன்மோகன் அரசு ஈடுபட்டது. என்றபோதிலும், சிங்குர், மாருதி உள்ளிட்ட பிரச்சினைகளில் துணிச்சலாக முதலாளி வர்க்கத்துக்கு அடியாள் வேலை பார்த்த மோடியைத்தான் ஆளும் வர்க்கம் விரும்பியது. இந்தப் பின்புலத்திலும் சில்லறை வணிகம், ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றைத் திறந்து விடுவதில் மன்மோகன் அரசு காட்டிய தாமதம் போன்ற பல காரணங்களினாலும்தான், மோடியைப் புகழ்ந்து எழுதிய அமெரிக்க டைம்ஸ் வார ஏடு, மனமோகனை “அண்டர் அச்சீவர்” என்று விமரிசித்தது.

தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மோடியைக் கொண்டு வருவதற்கு இன்று காட்டிவரும் வெறி, பாபர் மசூதியை இடிப்பதற்கு அன்று அத்வானி காட்டிய வெறியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது. இது முதலாளிகளிடம் வெளிப்படும் வழக்கமான இலாப வெறி அல்ல; கடற் கொள்ளையர்களிடம் மட்டுமே காணத்தக்க வெறி! இதற்கும் ஒரு பின்புலமிருக்கிறது.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

நிலக்கரி, இரும்பு, பாக்சைட் உள்ளிட்ட கனிம வளங்கள், நீர்வளம், நிலவளம், கடல்வளம், எண்ணெய், எரிவாயு, காடுகள், மலைகள் முதல் அலைக்கற்றை வரையிலான எல்லா பொதுச்சொத்துக்களையும் இலவசமாகவோ, அடிமாட்டு விலைக்கோ கைப்பற்றிக் கொள்வதற்கான போட்டி இன்று உலகெங்கும் தீவிரமடைந்திருக்கிறது. 2008-க்குப் பிந்தைய பொருளாதார மந்தத்திலிருந்து மீள வழி தெரியாமல், உலக முதலாளித்துவம் திணறுகிறது. சந்தைகளின் தேக்கம், மிகை உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக தொழில் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. மூலதனத்தின் ரத்தப்பசியைத் தீர்ப்பதற்கு, பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் நிதி மூலதனச் சூதாட்டமுமே முதலாளி வர்க்கம் தெரிவு செய்யத்தக்க தொழில்களாக இன்று எஞ்சியிருக்கின்றன. சூதாட்டத்தைக் காட்டிலும் உத்திரவாதமானது கொள்ளை என்ற உண்மையை விளக்கத் தேவையில்லை. இந்தக் கொள்ளைதான் இந்தியத் தரகு முதலாளிகளின் இலாப விகிதத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து, அவர்களில் பலரை உலக கோடீசுவரர்களாகவும் ஆக்கியிருக்கிறது.

மக்கள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், மாவோயிஸ்டு பிரச்சினை, சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தொந்திரவுகள் போன்றவற்றால் இந்தக் கொள்ளையைத் தாங்கள் விரும்பிய வேகத்தில் நடத்த முடியவில்லை என்பதுதான் காங்கிரசு அரசின் மீது தரகு முதலாளிகள் கோபம் கொள்ளக் காரணம். மாறாக, சுற்றுச்சூழல் தடையகற்றுதல் (environmental clearance) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துத் தரப்படும் என்று கூறும் மோடியின் தேர்தல் அறிக்கை அவர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.

“சுற்றுச்சூழலைப் பேணுதல், பழங்குடி மக்களின் உரிமை, விவசாயிகளின் உரிமை” என்பன போன்ற பசப்பு வார்த்தைகள் ஏதுமின்றி, மரங்கள், மலைகள் முதல் பழங்குடிகள், மீனவர்கள் வரையிலான அனைத்தையும், நாட்டின் ‘வளர்ச்சி’க்காக அகற்றப்படவேண்டிய தடைகளாக மோடி கருதுகிறார் என்பது மட்டுமின்றி, இந்து ராஷ்டிரத்துக்கான தடையகற்றும் நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே குஜராத்தில் வெற்றிகரமாக செய்தும் காட்டியிருக்கிறார் என்பதால், மோடியை இயல்பாகவே அவர்கள் ஆதரிக்கிறார்கள். பிரதமர் பதவியின் மீது மோடி என்ற பாசிஸ்டு கொண்டிருக்கும் மோகத்தைக் காட்டிலும், பிரதமர் நாற்காலியில் மோடியை அமர்த்துவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் காட்டும் வேகம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

80-களில் ராம ஜென்மபூமி என்ற கட்டுக்கதையையும் இந்துத்துவ அரசியலையும் எதிர்த்து எழுதுவதற்கு, பல்வேறு சிந்தனைப் போக்குகளைச் சார்ந்த அறிவுத்துறையினரும் இருந்தனர். வெளியிடுவதற்கும் ஊடகங்களில் ஓரளவு இடமிருந்தது. இன்றோ தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையம் என எல்லா ஊடகங்களும் மோடிக்காக குரைக்கின்றன. முன்னர் பார்ப்பன மதத்தை எதிர்த்தவர்கள் வேட்டையாடிக் கொன்றொழிக்கப் பட்டதைப் போலவே, இன்று மோடியை விமரிசிக்கும் ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள்.

ஒளிரும் குஜராத் என்பது முதலாளி வர்க்கத்தால் படைக்கப்பட்ட கடவுள். மோடி அதன் தலைமைப் பூசாரி. தனது கடவுளோ, பூசாரியோ கேள்விக்குள்ளாக்கப்படுவதைத் தரகு முதலாளி வர்க்கம் விரும்பவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

ஒளிரும் குஜராத் என்ற புனைவைத் தகர்க்கும் புள்ளி விவரங்கள் அன்றாடம் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 11 ரூபாய்க்கு குறைவாக ஈட்டுவோரே வறியவர்கள் என்ற குஜராத் அரசின் வரையறை, 4.5 இலட்சம் மாநில அரசு ஊழியர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்பட்டிருப்பது, நகர்ப்புற சேரிகளில் 75% வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமலிருப்பது, இந்தியாவிலேயே அதிக கடன்பட்ட மாநிலங்களில் குஜராத் மூன்றாம் இடத்தில் இருப்பது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீடு 7000 கோடி டாலர்கள்தான் என்று ரிசர்வ் வங்கி கூற, பத்தாண்டு மோடி ஆட்சியில் 8 இலட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடு குஜராத்திற்கு வந்திருப்பதாக வைப்ரன்ட் குஜராத் இணைய தளம் புளுகுவது… என அடுக்கடுக்காக உண்மைகள் வருகின்றன.

மோடியின் குற்றங்கள், குஜராத் அரசின் ஊழல்கள் பற்றிய சி.ஏ.ஜி.- யின் அறிக்கை, நிலப்பறிப்புக்கும் அணு உலைக்கும் எதிரான மக்கள் போராட்டங்கள் என அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன. ஆனால், அனைத்தும் மோடி ஆதரவு பிரச்சாரம் எனும் அடைமழையில் மூழ்கடிக்கப்படுகின்றன.

இந்துக்களின் வெகுளித்தனமான மத நம்பிக்கையை, தனது இராம ஜென்மபூமி என்ற சதித் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதைப் போலவே, இன்று தனியார்மயத் தாக்குதல்கள், ஊழல், விலை உயர்வு போன்ற பல காரணங்களால் காங்கிரசு அரசின் மீது அதிருப்தியுற்று, ஏதேனும் ஒரு மாற்றத்துக்காக ஏங்குகின்ற, ஆனால் என்ன மாற்றம் வேண்டும் என்று அறிந்திராத மக்களிடம், ஒளிரும் குஜராத்தைப் புதிய கடவுளாகவும், மோடியை மீட்பனாகவும் சந்தைப்படுத்துகிறது பா.ஜ.கட்சி.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

ஒரு வகையில், ஒளிரும் குஜராத் என்பதே புதிய மொந்தையில் பழைய கள்ளுதான். 2004 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில், ஆடு மேய்ப்பவர்களும் செல்போன் வைத்திருப்பதைக் காட்டி, “இந்தியா ஒளிர்கிறது” என்று பிரச்சாரம் செய்தது பாரதிய ஜனதா. இந்தியா ஒளிரவில்லை என்பதைத் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருந்த மக்கள் பாரதிய ஜனதாவைத் தோற்கடித்தார்கள். அதனால்தான் மக்கள் தமது சொந்த அனுபவத்தில் கண்டுபிடிக்க முடியாததும், சிங்கப்பூர், துபாயைப் போல எங்கோ இருப்பதும், யாரும் காணாததுமான குஜராத்தின் படத்தைக் காட்டி ஒளிர்கிறது, ஒளிர்கிறது என்று கூவுகிறது.

இராம ஜென்மபூமி என்ற புனைகதையை வரலாற்றாசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் ஆதாரங்களுடன் கேள்விக்குள்ளாக்கிய போது, அவர்களை இந்து விரோதிகள் என்று பார்ப்பன பாசிஸ்டுகள் சாடியதைப் போலவே, இன்று குஜராத்தின் வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கியவுடனே கேஜ்ரிவாலையும் பாகிஸ்தான் கைக்கூலி என்று முத்திரை குத்துகிறார் மோடி. ஒரு சிறிய விமரிசனமே மோடியின் கனவான் மேக்கப்பைக் கலைத்து அவரது உண்மைச் சொரூபத்தை வெளிக் கொணர்ந்து விடுகிறது.

“மோடியைத் தீமையின் உருவமாக சித்தரிப்பதன் மூலம் அவரை வீழ்த்திவிட முடியாது. ஏனென்றால், இளைய தலைமுறைக்குத் தீமைதான் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது; ‘நான், எனது’ என்று மோடி, தன்னை மட்டுமே முன்நிறுத்திப் பேசுவதும்கூட சுய முன்னேற்றத்தை விரும்பும் இன்றைய தலைமுறைக்குப் பிடிக்கத்தான் செய்யும். நெறிகளைப் பேசிப் பயனில்லை, வெற்றி பெறுவது எதுவோ அதுவே சிறந்த நெறி” என்று அம்பானிக்குச் சொந்தமான ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற இணைய இதழில் அதன் ஆசிரியர் கட்டுரை எழுதுகிறார்.

இது மோடிக்கு ஆதரவான வெறிபிடித்த எழுத்து என்றபோதிலும், மோடியை ஆதரிக்கும் புதிய நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலை இது சரியாகத்தான் சொல்கிறது. 2002 இனப்படுகொலை என்பது இந்தப் பிரிவினருக்கெல்லாம் தெரியாத உண்மையல்ல; ஆனால் மோடிக்கு எதிராக நீங்கள் எத்தனை ஆதாரங்களைக் கொடுத்தாலும், “நிரூபிக்க முடியுமா?” என்று மடக்குவார்கள். அதேபோலத்தான், குஜராத்தின் பொய்மைகளை அம்பலப்படுத்துவோரையும் அவர்கள் மடக்குகிறார்கள். மோடி இந்துத்துவ அரசியலைப் பேசாமல் தவிர்ப்பதையும், ராஜ்நாத் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்பதையும், அதே நேரத்தில் அமித் ஷா பழிவாங்கச் சொல்வதையும் முரண்பாடுகளாகவோ சந்தர்ப்பவாதமாகவோ இவர்கள் கருதுவதில்லை. மாறாக, இதனைச் சாமர்த்தியம் என்று மெச்சுகிறார்கள்.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

மோடியின் காலாட்படைகள் அனைவரும் முன்னாள் கரசேவகர்களாகேவா, இந்து வெறியர்களாகவோ இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை மட்டும்தான் ராமபிரானால் அன்று திரட்ட முடிந்தது. ஒளிரும் குஜராத் என்ற இந்தப் புதுக்கடவுளோ, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர்ஜி போன்ற கார்ப்பேரட் சாமியார்களை ஒத்தது. இது, இந்து மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவகை கார்ப்பரேட் மத நம்பிக்கை. வாழும் கலையால் வனைந்து உருவாக்கப்பட்ட புதிய பார்ப்பன மதம். இந்த நம்பிக்கையின் மத உள்ளடக்கம், ஏறத்தாழ மோடி அணிந்துவரும் டிசைனர் குர்த்தாவின் காவி நிறத்துக்கு ஒப்பானது.

மறுகாலனியாக்கம் தோற்றுவித்துள்ள ஏற்றத்தாழ்வை “வளர்ச்சி” என்று கொண்டாட முடிகின்ற மனோபாவத்துக்கும், பார்ப்பனியத்துக்குமான இடைவெளி கூப்பிடு தூரம்தான். 2002 படுகொலைக்கு நீதி கேட்கும் முஸ்லிம் மக்களுக்கு “வளர்ச்சியை” வழங்குவதாக வாக்களிக்கிறார் மோடி. அது சிறுபான்மையினர்க்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அனைவருக்குமான வளர்ச்சி என்றும் வலியுறுத்துகிறார்.

நீதி என்ற சொல்லைப் பார்ப்பனியம் மட்டுமின்றி முதலாளித்துவமும் விரும்புவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்ற ‘ஓர வஞ்சனையை’ எதிர்ப்பதற்கு, தகுதி-திறமை என்ற ‘நடுநிலையான’ மாற்றை பார்ப்பனியம் முன்நிறுத்தியதைப் போலவே, ‘நீதி’க்கு எதிரான நடுநிலையான மாற்று, ‘வளர்ச்சி’ என்று முன் நிறுத்துகிறார் மோடி.

சல்வா ஜுடும் கூலிப்படையால் தாய் மண்ணிலிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டப்பட்ட பழங்குடி மக்கள், 2002 இனப்படுகொலையின் போது வீடும், தொழிலும், உடைமைகளும் பறிக்கப்பட்டு அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்ட முஸ்லிம்கள், முசாபர் நகரின் முஸ்லிம் அகதிகள், விவசாய அழிப்பு என்ற அறிவிக்கப்படாத வளர்ச்சித் திட்டத்தின் விளைவாக மாநிலம் விட்டு மாநிலம் நாடோடிகளாக ஓடும் விவசாயிகள் – இவர்கள் வேண்டி நிற்பது வளர்ச்சியா, நீதியா? சட்டீஸ்கரின் அகதி முகாம்களுக்கும், அகமதாபாத்தின் அகதி முகாம்களுக்கும் என்ன வேறுபாடு?

“வலியது வெல்லும்” என்ற தத்துவத்தைப் பார்ப்பனியப் பின்வாயால் கூறி வந்த மோடி, இனி அதனை முதலாளித்துவ முன்வாயால் முழங்குவார் என்பதைத் தவிர பார்ப்பன பாசிசத் தாக்குதலுக்கும், மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கும் வேறு என்ன வேறுபாடு? மனித முகம் கொண்ட “வளர்ச்சி”யும் இல்லை, மனித முகம் கொண்ட ராமராச்சியமும் இல்லை. எனவே, மோடியின் மனித முகம் என்பது ஒரு முகமூடி.

“நல்ல இந்து மதம், மத நல்லிணக்கம்” போன்ற வாதங்களின் மூலமன்றி, பார்ப்பன இந்து மதத்தைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும். அதேபோல, “எந்த வர்க்கத்துக்கான வளர்ச்சி” என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம்தான், மறுகாலனியாக்க கொள்ளையையும், முதலாளித்துவக் கொள்ளையர்களின் சொர்க்கபுரியான குஜராத்தின் உண்மை முகத்தையும் மக்களுக்குக் காட்ட முடியும். இல்லையேல், “நல்ல முதலாளித்துவம், மனித முகம் கொண்ட வளர்ச்சி” என்பன போன்ற பித்தலாட்டங்களுக்கு நாம் பலியாக வேண்டியிருக்கும்.

குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்பதை வர்க்கக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்ளுங்கள்” என்று தங்களது நடவடிக்கைகள் மூலம், டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள் மீண்டும் மீண்டும் நமக்கு வலியுறுத்திச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்.
*

மோடியை விஞ்சுகிறார் லேடி :

மோடியை விஞ்சுகிறார் லேடி

ஒளிரும் குஜராத், விஷன் தமிழ்நாடு போன்ற எல்லாமே மெக்கின்சி போன்ற பன்னாட்டு கன்சல்டன்சி நிறுவனங்களும், ஃபிக்கி, சி.ஐ.ஐ. போன்ற இந்தியத் தரகு முதலாளித்துவ சங்கங்களும் தத்தம் எதிர்கால தொழில் வளர்ச்சியை மனதிற்கொண்டு வழுவழு தாளில் அடித்துக் கொடுக்கும் விளம்பரக் காகிதங்கள் என்பதே உண்மை. அவற்றைத் தமது சொந்தக் கண்டுபிடிப்புகள் போல மோடியும் ஜெயாவும் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு, பத்து இலட்சம் விசைத்தறி முதலாளிகள் – தொழிலாளர்களின் போராட்டம், குடிக்கத் தண்ணீரில்லாமல் எங்கு நோக்கினும் பெண்களின் சாலை மறியல் போராட்டம் என இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்தான், இவை எதையும் பற்றிக் கவலைப் படாமல், தமிழகம் முதன்மை மாநிலம் என்று பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் புரட்சித் தலைவி. எங்கோ இருக்கும் குஜராத்தைக் காட்டி ஏமாற்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

– சூரியன்
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

ராம்கோவை முறியடித்த ராஜபாளையம் மே நாள் மற்றும் சென்னை ஆர்ப்பாட்டம்

3

1. சென்னை

மே நாள்… உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வுக்கு உரமூட்டும் நாள்.

128-வது மே நாளில், இந்தப் போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக, 01.05.2014- வியாழக்கிழமையன்று, சென்னைக்கு அருகே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளில் அதிகளவில் பணிபுரியும் தொழிலாளர்கள் வசிக்கின்ற நகரமான பூவிருந்தவல்லியில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில்

  • பன்னாட்டுக்கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!

என்ற தலைப்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமார் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய தோழமை அமைப்புகளின் தோழர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்ட இந்தப் பேரணியை பு.ஜ.தொ.மு.-வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா தொடங்கி வைத்தார்.

பூவிருந்தவல்லி கல்லறைத்தோட்டம் அருகிலிருந்து தொடங்கி தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வசிக்கின்ற தெருக்களின் வழியாகச் சென்ற இப்பேரணியில், “தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி, உதிரம் குடித்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, கொழுத்துத் திரிவதுடன், நம் நாட்டின் இயற்கை வளங்களையும், நமது வாழ்வாதாரத்தையும் சூறையாடிவரும் பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டைவிட்டே துரத்தியடிக்கவேண்டும்; நடந்து முடிந்துள்ள போலி ஜனநாயகத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவது எந்தக் கட்சியாக இருந்தாலும் நமது பிரச்சினைகள் தீரப்போவதில்லை; ஏனென்றால் லேடி, மோடி, டாடி என எல்லோருமே பன்னாட்டுக் கம்பெனிகளின் கூஜாக்களே… எனவே, இந்த தரகு, அதிகாரவர்க்க முதலாளிகளின் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!” என்பனவற்றை உள்ளடக்கி தோழர்கள் எழுப்பிய முழக்கங்களை பகுதிவாழ் மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.

பேரணியின் முடிவில் பூவிருந்தவல்லி பேருந்துநிலையத்தின் அருகிலுள்ள அம்பேத்கர் சிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமையுரையாற்றிய தோழர் சிவா, “8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர பொழுதுபோக்கு ஆகிய கோரிக்கைகளுக்காகப் போராடிய நமது முன்னோடிகள், தமது இன்னுயிர் ஈந்து அந்த உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். ஆனால் இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் இந்த உரிமைகளனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் கழிப்பறைக் காகிதங்களாகி விட்டன. தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய மாருதி கார் தொழிற்சாலையின் தொழிலாளர்களைக் கைது செய்த, முதலாளிகளின் ஏவல்நாயான இந்திய அரசு அவர்களுக்குப் பிணை வழங்கக்கூட மறுத்து சிறையிலடைத்து வதைக்கிறது. திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டுச் சுரண்டப்படுகின்றனர். இக்கொடுமைகளை ஒழித்துக்கட்டி, நமது உரிமைகளை மீட்டெடுக்க தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு புரட்சிகரத் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் இணைந்து போராட முன்வரவேண்டும்” எனத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், உலக இயக்கத்தின் அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டி, இதற்குக் காரணமாகவுள்ள தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற இந்த மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். “இன்றைய சூழலில், உயிர் வாழ்வதற்காக ஏதாவதொரு வேலையில் சேர்ந்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள் தமது உரிமைகள், தொழிற்சங்க சட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வற்று உள்ளனர். அத்தகைய புரிதல் ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ஆபாசச் சீரழிவுகள், மது, போதைப்பழக்கம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நச்சுக் கலாச்சாரத்தைத் திட்டமிட்டே திணிக்கிறது ஆளும் வர்க்கம். இதனுடைய உச்சக்கட்டமாக தொழிலாளர்களின் போராட்ட தினமான மேதினத்தில் தொழிலாளர்களுக்குக் கட்டாய மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர் சில நயவஞ்சக முதலாளிகள். உரிமை, போராட்டம் எனும் உணர்வு சிறிதளவுகூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். ஆகவே, தொழிலாளி வர்க்கம் முன்னெப்போதையும்விட கூடுதலான விழிப்புணர்வுடன் தமது போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தொழிலாளர்கள் தமது வரலாற்றுக்கடமையை உணர்ந்து, சரியான அரசியல் புரிதலுடன் வர்க்கமாக அணிதிரண்டு, புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட போராட்டங்களின் வாயிலாகத்தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள GSH எனும் ஆலையின் முதலாளி, தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி, மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பாடு செய்திருந்த கட்டாய மதுவிருந்தை பு.ஜ.தொ.மு. தோழர்கள் தடுத்து முறியடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள CRP ஆலையில் மே நாளில் பு.ஜ.தொ.மு.-வின் செங்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து ஆளுங்கட்சியின் ஆசிபெற்ற பிழைப்புவாதத் தொழிற்சங்கம் ரவுடிகளை ஏவிவிட்டு மிரட்டிய காலித்தனத்தை முறியடித்து பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஆதரவோடு கொடியேற்றியுள்ளனர் பு.ஜ.தொ.மு. தோழர்கள்.

இப்படிப்பட்ட வர்க்க உணர்வுடன் கூடிய போராட்டங்களே இன்றைய அவசர, அவசியத் தேவைகளாகவுள்ளன. போராடாமல் வாழ்க்கையில்லை. எனவே, தொழிலாளிவர்க்கம் இழந்துவிட்ட தனது உரிமைகளை மீட்டெடுக்க, வாழ்க்கையின் அவலத்தைப் போக்க, புதியதொரு சமுதாயத்தைப் படைத்திட முன்வரவேண்டும். நிலவுகின்ற இந்தப் போலி ஜனநாயகத் (முதலாளித்துவ சர்வாதிகாரத்)தைத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைக்க வேண்டும். இந்த மேநாளில் அதற்கான உறுதிமொழியை நாமனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகரத் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் இணைந்து போராட முன்வரவேண்டும்” என்று மே தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உரையாற்றினார்.

தமது இன்னுயிர் ஈந்து மே தினம் உருவாகக் காரணமாகவிருந்த தொழிலாளத் தோழர்களுக்கும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தியதுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை.

2. ராஜபாளையம்

“பன்னாட்டுக்கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!” எனும் மே நாள் சூளுரை முழக்கத்தின் கீழ் தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிகளில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே நாளன்று இராஜபாளையத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என முடிவு செய்து அதற்கான துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகளில் ஒட்டி பிரச்சாரம் செய்து வந்தன.

ஏற்கனவே அப்பகுதியில் தொழிலாளர் வர்க்கத்தை நசுக்கிப் பிழிந்து, தொழிலாளர் நலச் சட்டங்களை மயிரளவிற்கும் மதிக்காமல், ஆண்டாண்டு காலமாக தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ராம்கோ குரூப்பின் அக்கிரமங்களை எதிர்த்து அப்பகுதி வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரத்தால் பீதியடைந்து போயிருந்த ராம்கோ கும்பல் மேநாள் பேரணியினை நடத்த விடாமல் தடுக்க தனது வளர்ப்புப் பிராணிகளான போலீசை ஏவிவிட்டது. போலீசும் திங்கிற சோத்துக்கு விசுவாசத்தோடு வாலை ஆட்டியது. என்றைக்கோ பிறந்த ராம்கோ குரூப்பின் முதலாளி ராமசாமி ராஜாவின் பிறந்த நாளை மே 1-ம் தேதி கொண்டாடப் போவதாக அறிவித்து அன்று பார்ப்பன அரை லூசான எஸ்.வி. சேகரின் அல்வா நாடகம் நடத்தப்போவதாக நகரமெங்கும் விளம்பரம் செய்திருந்தது.

இராசபாளையம் நகரில் மே நாள் அன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட உடன், ஏப்ரல் 24 அன்றே போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

முதலில் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிகழ்ச்சி இருப்பதால் அனுமதி கிடையாது என்று மறுத்தது போலீசு. இந்த பதிலைக் கூறவே போலீசுக்கு இரண்டு நாள் ஆனது.  பின் வேறு பாதையில் அனுமதி கேட்டோம். அதற்கு பதிலளிக்காமல், அனுமதி கேட்கச் சென்ற தோழர்களை கூட்டம் நடத்த மாட்டோம் என எழுதித் தரவேண்டும் என்றும் அப்போதுதான் ஸ்டேசனில் இருந்து வெளியில் விடுவோம் என்றும் கூறியது. இது சட்டவிரோதமானது என போராடிய தோ0ழரை ஒரு போலீசு அடித்துள்ளான்.

இது பற்றி தகவல் அறிந்தவுடன் , போலீசின் இந்த சட்ட விரோத நடவடிக்கை பற்றி மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர். வாஞ்சிநாதன் எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோருக்கு புகார் செய்த பிறகு தோழர்களையும் விடுவித்தது.

பின்னரும், ஆளே இல்லாத  சாலையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்றது போலீசு.

இதை ஏற்க முடியாது, என்று “ஓரளவாவது மக்கள் கூட்ட இடத்தில் கூடும் , ஆர்ப்பாட்டம் மட்டுக்குமாவது அனுமதி பெறுவதற்கு தோழர்களும் ம.உ.பா.மை. தோழர் நடராசனும் போராடினார்கள்.

இறுதி வரை போலீசு அனுமதி வழங்கவில்லை.காரணம்,  ராம்கோ முதலாளியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மே நாள் அன்று நடை பெற இருப்பதால் புரட்சிகர அமைப்புகள் மே நாளை கடைபிடிக்க கூடாது என்பது தான்.  இதை வெளிப்படையாகவே போலீசு கூறியது. மேலும், மே நாளை தவிர வேறு நாளில் நாம் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும், அல்லது சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் அனுமதி தருவதாகவும் கூறியது போலீசு .

அப்பட்டமாக தான் ராம்கோ முதலாளியின் கைக்கூலி என தன்னை காட்டிக் கொண்டது போலீசு. டவுன் ஸ்டேசன், டி.எஸ்.பி, எஸ்.பி இன்ஸ்பெக்டர், எஸ்.பி, என தோழர்களை அலைக்கழித்தது போலீசு. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் இந்தியாவிலுள்ள சட்டங்களும் மனித உரிமைகளும் ராம்கோ வீட்டுக் கக்கூசிற்குள் கிடப்பதை விட உயர்வானதல்ல என எண்ணுகிற ராஜபாளையம் போலீசு இறுதியில் அனுமதியினை மறுத்தது.

ஆனால், அனுமதி கொடுத்து நிகழ்ச்சியினை நடத்தியிருப்பதைக் காட்டிலும் கூடுதலான போராட்ட உணர்வினைத் தோழர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கேயுரிய போர்க்குணமிக்க ஒரு போரட்டத்தினைக் காணுகிற வாய்ப்பினை ராஜபாளையம் மக்களுக்கும் 2014 மேநாள் வழங்கியது.

பரபரப்பும் நெருக்கடியுமான நான்கு சாலைகள் கூடும் காந்திசிலை சிக்னலின் அருகே சரியாக காலை 10 மணிக்கு நான்கு சாலைகளின் வழியாக செஞ்சட்டையும் கொடியும் ஏந்திய தோழர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு ஒன்று சேர்ந்தனர். மே நாள் மைய முழக்கங்களோடு ராம்கோ குரூப்பையும் அதன் ஏவல் நாய்களாக விளங்கும் போலீசையும் கண்டித்து முழக்கங்கள் விண்ணதிரும் வகையில் எழுப்பப்பட்டன. ஏற்கனவே அப்பகுதியில் பாதுகாப்பு எனும் பெயரில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில போலீசார்கள் நின்ற இடத்திலேயே பதட்டமடைந்ததோடு மேல்போலீசுக்குத் தகவல் அனுப்பினர்.

ரொட்டித் துண்டைக் கவ்வத் தாவுவதைப் போலவே பாய்ந்து வந்த போலீசு முதலில் சட்டம் பேசிப் பார்த்தது. பின்னர் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களோடு வாக்குவாதம் செய்து பார்த்தது. எதுவும் தோழர்களின் முழக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே பேசாமல் நின்றுகொண்டு, மேநாள் மைய முழக்கங்கள், ஆசான்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், மாமேதை லெனின், பாட்டாளி வர்க்கத் தளபதி ஸ்டாலின், சிவப்புச் சூரியன் மாசேதுங், புரட்சியாளன் பகத்சிங் ஆகியாரின் பிரம்மாண்டமான உருவப்பட பேனர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அதன்பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமை உரையாற்றினார். மேநாள் ஒரு போராட்ட நாள் என்பதை விளக்கிய அவர் ராம்கோ குரூப்பின் சட்டவிரோதமான செயல்களையும் அதற்கு வாலாட்டும் போலீசுத்துறையையும் கண்டித்துப் பேசியதும் ஆர்ப்பாட்ட்த்தை முடித்துக்கொள்ளக் கோரிய போலீசு அனைவரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் இறக்கியது.

மண்டபத்திலும் கூட்டம் தொடர்ந்தது, தலைமையேற்றுப் பேசிய தோழர் மருது, நடந்த நிகழ்ச்சிகளையும் அதற்கான காரணங்களையும் விளக்கினார். அதன்பிறகு மீண்டும் தோழர் நாகராசன், தொழிலாளி வர்க்கம் இன்று எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை விரிவாகப்பேசினார். அதன்பின்னர், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் மேநாள் எவ்வாறு தொழிலாளர் தினமாக உருவெடுத்தது என்பதையும், பாட்டாளி வர்க்கத் தலைவர்களாகிய லெனின், ஸ்டாலின் , மாவோ ஆகியோர் மேநாளுக்குக் கொடுத்துவந்த முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

அதன்பிறகு மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளருமான தோழர் வாஞ்சிநாதன், அனுமதி பெறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவற்றைப் போலீசு அனுமதி மறுத்ததையும் விளைக்கியதோடு, மேநாளை இப்படி ஒரு போராட்ட நாளாக நடத்த புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே முடியும் என்பதை விளக்கி பகுதியின் தோழர் அய்யனார் துணிச்செயலான செயல்பாடுகளுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு தோழர்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இறுதியாக நன்றி தெரிவித்துப் பேசிய தோழர் அய்யனார், ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை ராஜபாளையத்தில் நடத்த வேண்டும் எனும் தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஓட்டுக்கட்சிகளும் போலிக்கம்யூனிஸ்டுகளும் மேநாளை ஒரு கேலிக்கூத்தான நாளாக ஆக்கிவைத்திருக்கும் சூழ்நிலையில் புரட்சிகர அமைப்புகள் மேநாளை ஒரு போராட்ட நாளாக மாற்றியதால் ஏற்படும் வர்க்க உணர்வோடு தோழர்கள் விடைபெற்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ராஜபாளையம்

ஜிண்டாலை அடித்து விரட்டுவோம் – மே நாள் போராட்டச் செய்தி

3

திருவண்ணாமலையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது கவுத்தி-வேடியப்பன் மலைகள். இம்மலைகளில் இரும்பு கனிமம் இருப்பதையறிந்து அதை வெட்டியெடுக்க தமிழ் நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO-Tamilnadu Industrial Development Corporation) ஏலமுறையில் தேர்வு செய்த ஜிண்டால் விஜய நகர் ஸ்டீல் லிமிடெட் (JVS Limited) என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் 30 ஆண்டுகளுக்கான கூட்டு முதலீடு ஒப்பந்தம் ஒன்றை டிம்கோ (TIMCO-Tamilnadu Iron Ore Minarals Corporation) என்ற பெயரில் 29.03.2005 அன்று செய்து கொண்டது.

அரசு அதிகாரிகள், ஓட்டுச்சீட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் ஏல முறைகள் மூலம் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிக்க பலவழிகளை கையாண்டு வந்தார்கள். தெரிந்தவர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுப்பது, பினாமி முறையில் கான்ட்ராக்ட் எடுப்பது ஆகியவை மக்களின் விழிப்புணர்வில் மாறுதல் அடைந்து டெண்டர் முறை வந்து அதிலும் ஊழல் நாறிய பின் முன்னேற்றம் ஏற்பட்டதா என்றால் மாறாக ஓட்டப் பந்தயத்தில் முதலில் வருபவருக்கு பரிசு என்பது போல் அலைக்கற்றை ஊழல் நடந்து நாறியதை அறிவோம்.

ஆனால் தற்போது ஜிண்டாலுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எல்லாவற்றையும் விஞ்சக்கூடியது. ஜிண்டால் ரூ 135 கோடி முதலீடு செய்வாராம், தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக்கழகம் 1%  (1.35 கோடி) முதலீடு செய்யுமாம். இரும்புத்தாது விற்பனை மூலம் 1,000 கோடி ரூபாய் லாபம் வரும் என்றால் ஜின்டாலுக்கு பங்கு 999 கோடி ரூபாய், அரசுக்கு லாபத்தில் பங்கு 1 கோடி ரூபாய் என்பது இதன் அர்த்தம்.

ஒப்பந்தத்தை பார்த்தாலேயே அதிகாரிகளூம், அரசியல் வாதிகளும் கூட்டுக்கொள்ளை அடித்துள்ளனர் என்று தெரிந்து விடும். ஜிண்டால் சுரங்கம் வெட்ட கேட்ட நிலப்பரப்பு 325 ஹெக்டேர் (சுமார் 800 ஏக்கருக்கு மேல்). இதில் உள்ள கனிமத்தை எடுத்து பதிலுக்கு ஜிண்டால் கொடுப்பது ஒரு பேரழிவை.

ஜிண்டால் அமைக்கும் திறந்தவெளி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் , கழிவுகள் தேக்கி வைக்கும் குட்டைகள், இரும்புத் தாது தொடர்வண்டி நிலயத்தில் சேர்க்க டம்பர்கள் மூலம் எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு தடையாக உள்ள 2,22,00 மரங்களை வெட்ட வேண்டும். மரங்களை வளர்க்க வக்கற்ற இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒரு முதலாளி தரும்  பிச்சை காசுக்காக பல லட்சம் மரங்களை வெட்டுவதை ஏற்கமுடியுமா?

ஒவ்வொரு நாட்டிலும் மழை ஆதாரத்திற்காக நிலப்பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது உள்ள காடுகள் 25%-க்கும் குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல லட்சம் மரங்களை வெட்டி ஒரு தனிநபருக்கு தாரை வார்க்கும் கயவர்களை நாம் அனுமதிக்க முடியுமா?

சுரங்கம் அமைக்க வெட்டப்படும் காடுகளில் 20 வகை மூலிகைகளும் அழியும். மேலும் பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் மயில்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான அழகிய பறவைகள் அழியும், மான்கள், குரங்குகள் போன்ற ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்படும்.

கிராமத்து மக்களின் வேடியப்பன் சாமி தூக்கியெறியப்படுவார். வெடியினால், பாறைகள் வெட்டுவதால், இரும்புத்தாது எடுத்துவரும் டம்பர்களால் ஏற்படும் தூசிகள் திருவண்ணாமலை முழுமைக்கும் பதிப்பை ஏற்படுத்தும்.

பெண்கள் குடிநீர் கேட்டு போராடினால் போலீசு குண்டாந்தடி சுழற்றி அடித்து விரட்டுகிறது. ஆனால் ஜிண்டால் நிறுவனம் சுரங்கம் தோண்ட நாள் ஒன்றிற்கு சாத்தனூர் அணையிலிருந்து 560 கன மீட்டர் அதாவது 5,60,000 லிட்டர் ( அம்மா இதை 10/-ரூ வீதம் விற்றால் நாள் ஒன்றுக்கு 56 லட்சம் ரூபாய் கிடைக்கும் ) தண்ணீர் வழங்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மலைகளை சுற்றியுள்ள 51 கிராமங்களில் உள்ள 2 லட்சம் மக்கள் 20,000 க்கு மேற்பட்ட விவசாயிகள், அவர்கள் பயிரிடும் 18,000 ஏக்கர் விவசாய நிலங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் இந்த திட்டம் மனிதகுலத்திற்கு உடனுக்குடன் பேரழிவை தரும் வல்லமை உள்ளது.

தங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கும் இந்த கொடிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு சங்கத்தை கட்டி சாதி, கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து ஓட்டுக்கட்சிகளின் ஆதரவை கேட்டனர்.

இவர்களுக்காக எந்த ஓட்டு பொறுக்கி கட்சியும் நேரில் வந்து ஆதரவு அளிக்கவில்லை. பகுதிமக்களே பலவகை போராட்டங்களை முன்னெடுத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மக்களின் ஆவேசம் கலவரமாக மாறும் வாய்ப்புள்ளதை உணர்ந்து மக்களுக்கு சாதகமாக பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்.

அதேசமயம் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை வனத்துறை ஆட்சேபித்ததால் ஜிண்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அதை ஏற்று பாதிக்கப்படும் பகுதியை ஆராய்ந்துவர பி.வி.ஜெயகிருஷ்ணா என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த குழு 2.20 லட்சம் மரங்கள் வெட்டப்படும் நிலை உள்ளது என அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

சுரங்கம் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது, என பகுதி மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் உச்ச நீதிமன்றம் வெட்டப்படும் மரங்களை பார்த்ததேயொழிய பாதிக்கப்படும் மனிதர்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

அதனால்தான் ஜிண்டால் நரித்தனமாக முன்பு ஒதுக்கப்பட்ட 325 ஹெக்டேருக்கு பதில் வெறும் 32.5 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் வெட்ட அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளான். இடத்தை பிடித்து மடத்தை வளைக்கும் பாமர மக்களுக்கும் தெரிந்த இந்த நயவஞ்சக திட்டம் உச்ச நீதிபதிகளுக்கு தெரியாததல்ல. ஜிண்டாலுக்கு கவுத்தி-வேடியப்பன் மலைகளையும் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க ஒப்புதல் கொடுக்க தயாராகி விட்டனர் என்பதுதான் அர்த்தம். அதனால்தான் ஜிண்டாலின் மனுவை ஏற்று 32.5 ஹெக்டேரில் சுரங்கம் வெட்டுவதால் பாதிப்பு வருமா என ஆராய்ந்துவர மீண்டும் ஜெயகிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது.

நிச்சயம் ஜிண்டால் வரப்போவது உறுதியாகி விட்டது.ஒரு பேரழிவை எதிர்கொள்ள அப்பகுதி மக்கள் தயாராக வேண்டும். எப்போதும் போல ஓட்டுப்பொறுக்கி கட்சிகள், வாக்குறுதிகளை அள்ளி வீசும், ஏகாதிபத்தியங்களிடம் பணத்தை பெற்று மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் ஊடுருவும், சாதிக் கலவரங்களை எழுப்பி மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள், திட்டத்தை நடைமுறைபடுத்தும் மாவட்ட ஆட்சியரிடமே நீதி கேட்டு மனு கொடுக்கச் சொல்லுவார்கள்.

ஜிண்டால் என்ற தனி நபருக்காக மூன்று மாவட்டங்களை அழிக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, விழுப்புரம்-கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள், “இந்த திட்டத்திற்கு ஆதரவாக மத்திய வனத்துறை, சுற்றுசூழல் துறை, மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றம், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் செயல்படுகின்றனர்” என்பதை விளக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

உலக பாட்டாளி வர்க்க நாளான மே-1 அன்று இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் வனத்துறை அலுவலத்தை முற்றுகையிட வேண்டும் என்று “உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!” “கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாடவரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர அமைப்புகள் மூன்று மாவட்டங்களிலும், கவுத்தி வேடியப்பன் மலைகளை சுற்றியுள்ள கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தனர்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளை சார்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர். மக்களிடமே தங்கி, அவர்களிடம் உணவு பெற்று வீடுகள், வயல்களில் வேலை செய்யும் இடங்கள், 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் இடங்கள், ஊர் பிரமுகர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கட்சிக்கார்ர்கள் என ஒருவர்கூட விடாமல் பிரச்சாரம் செய்யப்பட்டது. “சுட்டெரிக்கும் வெய்யிலில் எங்களுக்காக பிரச்சாரம் செய்கிறீகள், மே 1 கூட்டத்தில் உங்களோடு இணைந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வருகிறோம்” என பலர் கூறினார்கள்.

கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர், பாலியப்பட்டு கிராம மக்களை திரட்டி நம்மை விளக்கி பேச அழைத்தார்.

நகர பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தபோது “ஜிண்டால் சுரங்கம் வெட்டுவதால் பாதிப்பு கிராம மக்களுக்கு மட்டும்தான் ஏற்படும் என்று நினைத்தோம், நீங்கள் விளக்கியபிறகுதான் எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்போகிறதுஎன்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்றனர்.

பேருந்து பிரச்சாரத்தின்போது பாதிப்பிற்குள்ளாகும் கிராமத்தை சேர்ந்த பயணிகள் நம்மிட்டம் “நாங்களும் இரண்டு மாதமாக பார்க்கிறோம், எங்கிருந்தோ வந்து எங்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறீகள், உங்கள் மாதிரி நாங்கள் கஷடப்படவில்லையே என்று உங்களை பார்க்கும்போது எங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் “ என்று கூறினர்.

மே-1 அன்று விழுப்புரம், கடலூர் மாவட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், நகர இளைஞர்கள், பாதிக்கப்படும் கிராமங்களான பாலியப்பட்டு, சின்னபாலியப்பட்டு, இனாம் காரியாந்தல், சின்ன புனல்காடு, வடமாத்தூர், ஆடையூர் பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கலந்துகொண்டனர்.

ஊர்வலத்திற்கு வி.வி.மு.தோழர். ஏழுமலை தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜு, வி.வி.மு.மாவட்ட அமைப்பாளர் தோழர். அம்பேத்கார், பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர்.செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றியபின் தோழர்களின் விண்ணதிரும் முழக்கங்களோடு ஊர்வலம் நகரின் மையபகுதி வழியாக வனத்துறை அலுவலகத்தை அடைந்தது.

ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகியோர் மக்களுக்கு எதிராக செயல்படுவது, இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கி எழுப்பிய கோஷங்களை செல்லும் வழியில் உள்ள மக்கள் அனைவரும் நின்று கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும்போது போலிசு  தடுத்து நிறுத்தி கைது செய்தது. அப்போது தோழர்கள் ராஜு, அம்பேத்கார், செல்வகுமார் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர்.

பின்னர் போலிசு அனைத்து தோழர்களையும் ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். மண்டபத்தில் தோழர்களின் கலைக்குழு பாடல்கள், பேச்சுக்கள் புதிதாக வந்த மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்தனர். கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்க தலைவர் திரு. பாலகிருஷ்ணன் பேசும்போது, “வனத்துறை, வருவாய்த்துறை ஜிண்டாலுக்கு ஆதரவாக இருக்கிறது, காட்டில் ஒரு மான் அடிபட்டால் அப்பாவிகளிடம் வனத்துறையினர் ரூ.1000/- லஞ்சம் வாங்குகின்றனர்.ஜிண்டாலுக்காக 10,000-க்கும் மேற்பட்ட விலங்குகளை கொள்ளப்போகிறார்கள், இது எந்த சட்டத்தில் உள்ளது” என கேள்வி எழுப்பினார்.

பாலியப்பட்டை சேர்ந்த பச்சையப்பன் பேசும்போது “50 கிராமம் பாதிக்கும் என்பது பொய் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இரும்பு எடுக்கும்போது வரும் கழிவு கெட்ட நீரால் துர் நாற்றம் வீசும், இந்த மலை பாட்டன், பாட்டி சம்பாதித்த சொத்து, உயிரை விட்டாலும் விடலாமே தவிர மலையை விட தயாராக இல்லை” என்றார்.

அப்பகுதியில் செயல்படும் திரு அண்ணாமலை பேசும்போது பகுதியில் இருந்து பெரும்பான்மை மக்களை திரட்டி வராததற்கு வருத்தம் தெரிவித்தார். கழிவுகளால் துரிஞ்சல் ஆறு பாதிக்கப்படுவதை விளக்கி பேசினார்.

புனல்காடு பகுதியை சேர்ந்த திரு முத்துகிரிட்டிணன் பேசும் போது “ இரண்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறோம். நீங்க வந்திருக்கீங்க சந்தோசம், நாங்க 100 போராட்டம் நடத்தியிருப்போம் யாரும் இந்த மாதிரி நடத்தவில்லை. சந்தோசமாக இருக்கிறது” என்றார்.

அம்சா என்ற பெண்மணி பேசும்போது “ எங்க வேடியப்பன் சாமி, மலையை பாதுகாக்க நீங்க வந்திருக்கீங்க, இனி நாங்க உங்களுக்காக வருவோம்” என்று கூறினார்.

திருவண்ணாமலை மனித உரிமை பதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் கண்ணன் பேசும் போது “ 1998-ல் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டபோது பிரச்சாரம், கணடன ஆர்ப்பாட்டம் செய்தோம். தற்போது புரட்சிகர அமைப்புகள் முதன் முறையாக திருவண்ணாமலையில் குவிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு திருவண்ணாமலை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தோழர்கள் அம்பேத்கார் மற்றும் சில தோழர்கள் பேசும் போது பிரச்சாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் பகுதியில் அதிகாரவர்க்கம் மக்களை சாதிரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறான். மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டங்களை மட்டுப்படுத்த உள்ளே நுழைந்திருப்பதன் அபாயத்தை எச்சரித்து பேசினார்கள்.

இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசும்போது “அதிகார வர்க்கங்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படும்” என்றும், தொண்டு நிறுவனங்களால் திசைமாறிய போராட்டங்களை உதாரணங்களோடு எடுத்துக்காட்டி பேசினார்.

தற்போது கிராமப்பகுதியில் போராடும் இயக்கங்கள் எப்படி தங்களை மேம்படுதிக்கொள்ள வேண்டும் என்றும், தற்போது அதிகாரவர்க்கம் கூறும் ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படிப்பட்ட உரிமை இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகவும், நையாண்டியாகவும் விளக்கி பேசியதை கூர்ந்து கவனித்தனர். மாலையில் தோழர்களை போலிசு விடுவித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்த மே-1 பிரச்சாரத்தின் மூலம் பேருந்துகளில் கடந்த இரண்டுமாதங்களாக சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட மக்களிடமும், திருவண்ணாமலை நகர மக்கள் சுமார் 10,000-க்கு மேற்பட்டவர்களிடமும், பாதிக்கப்படும் கிராம மக்களிடமும், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய நகரங்கள், கிராமங்கள் என பிரச்சாரம் செய்து ஊர்வலத்திலும், கைதிலும் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதை அறிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்கள் மகிழ்ச்சியுடனும், உத்வேகத்துடனும் விடைபெற்றனர்.

பகுதி மக்கள் நம்மிடம் காட்டிய ஆதரவு ஜிண்டால் மட்டுமல்ல, எந்த கொம்பனும் நெருங்க முடியாது என்பதை உணர்த்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவண்ணாமலை

பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !

2

ன்னாட்டு மருந்து கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நடத்தும் நெறிமுறைகளும், இரக்கமும் அற்ற மருத்துவ சோதனைகளால் ஏழை எளிய மக்கள் கொல்லப்படுவது இன்றும் நிற்கவில்லை.

கருப்பை வாய் புற்றுநோய்
ஆண்டுக்கு 5 லட்சம் பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய்

கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.

உலக அளவில் ஆண்டுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் அதில் 85% பேர் மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்களென்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 இலட்சம் பெண்கள் புதிதாக இந்நோய் தாக்குதலுக்குள்ளாவதாகவும் அப்புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கருப்பை வாய் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதிக செலவாகும் பழைய முறைகளுக்கு மாற்றாக குறைவான செலவிலான சோதனை முறை உருவாக்கினால் இதன் சந்தை அதிகரிக்கும் என பல்வேறு மருத்துவ கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் மக்கள் மீது பல சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்தியாவிலும் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முறையை அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகமும், உலகப்புகழ் மென்பொருள் நிறுவன மைக்ரோ சாஃப்டின் பில் கேட்சும் அவரது மனைவியும் மூன்றாம் “உலக மக்களின் மீது கருணை கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே” நடத்தி வரும் மெலிண்டா – பில் கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து தமிழகத்தின் திண்டுக்கல், மகாராஷ்டிரத்தின் மும்பை குடிசைப் பகுதிகள், உஸ்மானாபாத் ஆகிய இடங்களில் ஏழை பெண்களிடம் கடந்த 15 ஆண்டுகளாக சோதித்து வருகின்றன.

இத்தகைய சோதனைகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடத்தப்படுவதன் நோக்கம் நோயினால் பாதிப்படையும் பெண்கள் மீதான அக்கறையோ அல்லது சேவை மனப்பான்மையோ, உண்மையான மருத்துவ நோக்கமோ இல்லை.

மேற்கத்திய நாடுகளில் ஒரு நோய்க்கான புதிய மருந்தோ, மருத்துவ முறையோ அல்லது புதிய சோதனை முறையோ சந்தைப்படுத்தும் முன் அவை நோயாளிகள் மீதான சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்து பார்க்கப்பட்டு முறையான அங்கீகாரம் பெற்றப்பட்டிருக்க வேண்டும்.

மருந்துகள் மனிதர்களின் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன் ஆய்வகங்களில் விலங்கு, மனித செல்களில் பரிசோதிக்கப் பட்ட பிறகு எலிகள், குரங்குகள் போன்ற விலங்குகளின் மீது சோதித்தறியப்படுகின்றன.

பின்னர் மூன்று கட்டமாக அவை மனிதர்களின் மீது பரிசோதிக்கப் படுகின்றன. முதல் கட்டத்தில் 8 முதல் 10 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்தும், இரண்டாவது கட்டத்தில் சுமார் 20 முதல் 100 நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்தும் பரிசோதித்து பார்க்கப்படுகின்றன. மூன்றாவது கட்டமாக பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றன. பின்னர், மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்த பிறகு நோயாளிகளை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகளும் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் மருந்துச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஆய்வு நிறுவனங்கள் பெரும் தொகையை தரவேண்டியுள்ளது. மட்டுமின்றி அந்நாடுகளில் நோயாளிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் மீது மருத்துவ சோதனைகளை நடத்த முடியாது. மேலும், அம்மருந்துகள் பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தினால், அங்கே பல இலட்சம் டாலர் இழப்பீடு தரவேண்டியிருக்கும்.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலோ ஏழைகள், நடைபாதைவாசிகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோரிடம், “ரத்த மாதிரி எடுக்கிறோம், நோய் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம், இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்கிறோம்” என பொய்களை கூறி மக்களை ஏமாற்றி என்ன மருந்து, என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் மீது மருத்துவ பரிசோதனைகளை நடத்திக்கொள்ள முடிகிறது. இங்கு இழப்பீடு பிரச்சினையும் இல்லை.

மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமென்பதால் இந்நாடுகளில் அவர்களுடைய சோதனைக்கான மாதிரிகள் (Samples) எளிதாக கிடைப்பர். அதனால் தான் மருந்து கம்பெனிகள் இந்நாடுகளின் ஏழை பெண்களின் மீது இச்சோதனைகளை நடத்துகின்றன.

மருந்தக சோதனைகளின் களம்
பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சோதனை எலிகளாக இந்திய மக்கள்.

இலவச மருத்துவ சோதனை, சிகிச்சை என்று மக்களை ஏமாற்றி வஞ்சிக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாத் (PATH) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏழை மக்களை வஞ்சித்து மருத்துவ சோதனையை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் 2005-ம் ஆண்டு பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்தத்தினால், மருந்து சோதனைகளை நடத்துவதற்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால் ஏழை அடித்தட்டு மக்களை பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சோதனை எலிகளாக்கும் ஒப்பந்த ஆய்வு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன.

இவற்றுக்கு போர்டு பவுண்டேசன், கேட்ஸ் பவுண்டேசன் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் அறக்கட்டளைகள் நிதியளிக்கின்றன.

மென்பொருள் துறையில் ஏகபோகத்தை பயன்படுத்தி பல பில்லியன்கள் சம்பாதித்த மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் கம்பெனி முதலாளி பில் கேட்ஸ் 2006-ம் ஆண்டு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை அமைத்து முழுநேர “தர்மகர்த்தாவாக” மாறினார். பங்குச் சந்தை, பிற ஊக வணிக சந்தைகளில் சூதாட்டங்களின் மூலம் பல பில்லியன் டாலர் சொத்து சேர்த்திருக்கும் வாரன் பஃப்பெட் தனது சொத்தில் கணிசமான தொகையை கேட்ஸ் அறக்கட்டளைக்கு கொடையளித்திருக்கிறார்.

உலக அளவில் விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் $33.5 பில்லியன் (சுமார் ரூ 1.66 லட்சம் கோடி) மதிப்பிலான தரும காரியங்களை நடத்தி வரும் கேட்ஸ் அறக்கட்டளை விவசாயம் தொடர்பான கொடைக்கு மான்சான்டோ, தடுப்பூசிகள் கொடைக்கு கிளாக்சோ ஸ்மித்கிளைன், கல்வி கொடைக்கு பியர்சன் எஜூகேஷன் என்று ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான கார்ப்பரேட் கூட்டாளியை சேர்த்துக் கொண்டு செயல்படுகிறது.

இத்தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதுமான நிதியின்றி இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் சில வசதிகளைச் செய்து தந்து, தங்கள் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தை இணங்கச் செய்வதன் மூலமும் மருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களை சுலபமாக சோதனைக்குட்படுத்துகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் மக்களும் கூட இத்தகைய மருந்துச் சோதனைகளிலிருந்து தப்புவதில்லை. மருந்து நிறுவனங்கள் பணமும், புகழும் தருவதாகச் சொல்லி மருத்துவர்களை சோதனையின் வலைப்பின்னலில் இழுத்துப் போடுகின்றன. மருத்துவர்கள் ஒரு புதிய மருந்து வந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்தினால் நோய் குணமாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி நோயாளிகளை இணங்கச் செய்கின்றனர் அல்லது நோயாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.

clinical-trialsஇப்பின்னணியில் நமது நாடு பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் ஆய்வுக் கூடமாக்கப்பட்டு நம் மக்கள் சோதனைச்சாலை எலிகளாக்கப் பட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மூலம் உருவாக்கப்படும் மருந்துகளும், மருத்துவ முறைகளும் பல லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன்கள் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு மறுக்கப்படுகின்றன.

உதாரணமாக மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்  அபாயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் மரபணு சோதனை முறைக்கு மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் வடிவுரிமை வாங்கி வைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அந்த மருத்துவப் பரிசோதனையை செய்து கொண்டதில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் 87 சதவிகிதம் இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, உடனடியாக மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் முடிவுக்கு வந்தார்.

ஆனால் ஏஞ்சலினாவுக்கு கிடைத்த வாய்ப்பு அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் மரபணு சோதனையை செய்து கொள்ள அந்நிறுவனம் ஒருவருக்கு 3,500 டாலர் (சுமார் ரூ. 2 லட்சம்) கட்டணமும் அச்சோதனையில் இருந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதை பிற்சேர்க்கை சோதனையாக்கி அதற்கு தனியாக 700 டாலர் (ரூ. 42 ஆயிரம்) கட்டணமும் வசூலிக்கிறது.

இந்த இரண்டாம் கட்ட சோதனை கட்டணத்தை உள்ளடக்கியிராத மருத்துவக் காப்பீட்டை வைத்திருந்த பெண்களுக்கு இச்சோதனைகளை செய்து கொள்ளும் வாய்ப்பை மறுத்துள்ளது மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம். அமெரிக்காவிலேயே ஏழைகளுக்கு அச்சோதனை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

“பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கடும் உழைப்பால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வருகின்றன. அதற்கு அறிவு, திறமை இவற்றோடு பெரும் தொகையையும் செலவழிக்கின்றன. அப்படியிருக்கையில் அவர்களுடைய உழைப்பை குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்?” என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

அவர்களுடைய கடும் உழைப்பின் இலட்சணம் என்ன? மருத்துவம் பார்க்க இயலாத வாழ்நிலையிலுள்ள மக்களின் மீது சோதனை நடத்தி அவர்களை பலியிடுவதன் மூலம் தான் தமது மருந்துகளை சந்தைப்படுத்தும் அங்கீகாரத்தை மருந்து நிறுவனங்கள் பெறுகின்றன. அவற்றை முதலில் மேற்கத்திய நாடுகளில் பணக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ஏழைகளுக்கோ சோதனையில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளும் கடமையை தவிர பலனை பெறும் உரிமை இல்லை.

clinical-trials-3மருத்துவ சோதனைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது குறித்த அறம், நெறிமுறைகள் சார்ந்த கேள்வி எழுப்பப்படும் போது அம்மக்களின் மருத்துவம் பார்க்க இயலாத வாழ்நிலையை காட்டி நியாயப்படுத்தவும் நிறுவனங்கள் தயங்குவதில்லை. சிலஇடங்களில் சிலருக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச மருந்துகளை கொடுத்து தமது கைகளிலிருக்கும் ரத்தக்கறையை கழுவிக்கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தரவேண்டிய பொறுப்பிலிருந்தும் வஞ்சகமாக தப்பித்துக் கொள்கின்றன.

இந்த பாசிச முறையைத் தான் சுதந்திர சந்தைப் பொருளாதாரம் சாதித்திருக்கிறது. இதற்கு சேவை செய்வதற்காக தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளனவே அன்றி மக்கள் சேவைக்காக அல்ல.

கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் புதிய முறையை சோதிப்பதற்காக மொத்தம் 2.24 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 1.38 லட்சம் பெண்களுக்கு எவ்வித நோய் சோதனையும் நடத்தாமல் வெறுமனே கண்காணித்து வைத்திருந்ததால், நோய் கண்டறியப்படாமல் முற்றி 254 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். அதாவது முன்கூட்டியே நோயைக் கண்டறியாமல் விட்டு வைப்பதால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தை கணக்கிடுவதற்காக 254 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எளிய சோதனைகளை செய்யாமல் வைத்திருந்து 1.38 லட்சம் பெண்களில் எத்தனை பேர் சாகிறார்கள் என்று பார்த்திருக்கின்றனர். இந்தியாவில் இத்தகைய சோதனைகள் பரவலாக நடைமுறையில் இல்லை எனினும், தெரிந்தே லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் இறப்பை கண்காணித்து வந்த இந்த நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களின் வக்கிரத்துக்கு அவர்களது லாப வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இச்சோதனையை மேற்கத்திய நாடுகளில் நடத்தியிருந்தால் இதில் பங்குபெறுபவர்களுக்கு தலா 100 டாலர் வீதம் கொடுப்பதாக இருந்தாலும் ரூ 144 கோடி கட்டணமாக செலுத்த வேண்டியிருந்திருக்கும். அது மட்டுமின்றி உயிரிழப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 1 இலட்சம் டாலர்கள் இழப்பீடு தருவதாக கொண்டாலும், 254 பேர் உயிரிழந்ததற்கு ரூ 152 கோடிக்கும் மேல் இழப்பீடு செலுத்த வேண்டியிருந்திருக்கும். ஆக இச்சோதனையை இந்தியாவில் நடத்தியதின் மூலம் சுமார் ரூ 296 கோடிக்கும் மேல் மிச்சம் பிடித்திருக்கிறது அமெரிக்க புற்றுநோய்க் கழகம்.

பன்னாட்டு கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழை மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து பலி கொடுப்பது இதுவே முதல் முறை அல்ல.

2009-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையின் 3.6 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் பாத் (PATH) தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்தில் கார்டாசில் என்ற கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை சோதிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது.

24,777 சிறுமிகளிடம் அவர்களுடைய பெற்றோர்களுடைய முறையான அனுமதியைப் பெறாமல், சோதனை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவிக்காமல் ஏமாற்றி நடத்தப்பட்ட சோதனையில் 7 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தின் பழங்குடி மாணவிகளுக்கான உறைவிடப் பள்ளியில் மட்டும் மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.

பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் நலன்களை உறுதி செய்ய கொஞ்சம் பணத்தை வீசி எறிந்து உயிரையே உறிஞ்சுவது தான் கேட்ஸ் அறக்கட்டளையின் பின்னே உள்ள அறம்.

டெல்லி எய்ம்ஸ் (AIMS) மருத்துவமனையில் 4,142 குழந்தைகளிடம்  ரத்த அழுத்த நோய் மருந்து உள்ளிட்ட 42 வகை மருந்துகளை செலுத்தி சோதனைளை நடத்தியதில் 49 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

2005 முதல் 2012 வரை மருத்துவ சோதனைகளால் 3,458 பேர் கொல்லப்பட்டு 14,320 க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்படைந்துள்ளனர்.

அதை அடுத்து மருத்துவ சோதனைகள் தொடர்பாக ஸ்வாஸ்த்ய அதிகார் மன்ச் என்ற தன்னார்வ அமைப்பு 2012-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் அக்டோபர் 2013-ல் மருத்துவ ஆராய்ச்சி விதிமுறைகளையும் ஹெல்சின்கி வழிமுறைகளையும் பின்பற்றாத 160-க்கும் மேற்பட்ட மருத்துவ சோதனைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் மருத்துவ சோதனைகளில் உயிரிழந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு வழங்காத பிரச்சனையில், ஆனந்த் ராய் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிலளிக்குமாறு நோட்டீசு அனுப்பியது. அவை வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கின்றன.

புதிய மருந்து ஆலோசனை குழுக்கள் (NDAC), தொழில்நுட்ப குழுக்கள், மற்றும் மேல் கமிட்டிகள் அதற்கும் மேல் உச்ச நீதிமன்றம் என இத்தனை கண்காணிப்புகள் இருந்தும் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட மருத்துவ சோதனைகள் சட்ட விரோதமாக தொடர்ந்து கொண்டிருக்க, படுகொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் குற்றவாளிகள் யாரென்பது அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றாகவே தெரிந்திருந்தும் அவற்றை தொடரும் நிறுவனங்களின் மேல் எந்த பெயரளவிலான விசாரணை கூட மேற்கொள்ளப் படவில்லை.

பில்கேட்சின் கருணை இப்படித்தான் இந்தியாவின் ஏழை பெண்களை பலிவாங்குகிறது. இருப்பினும் இவருக்கும், இவரது நிறுவனத்திற்கும் இந்தியாவில் படித்த ரசிகர்கள் பலர் உண்டு என்பதால் கேட்ஸ் பவுண்டேசன் தனது படுகொலையை தொடர்ந்து செய்து வரும். எப்போது நிறுத்தப் போகிறோம்?

– மார்ட்டின்

மேலும் படிக்க

புதிய ஜனநாயகம் – மே 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

puthiya-jananayagam-may-2014

புதிய ஜனநாயகம் மே 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. புரட்சிக அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கம்.

2. தேவை : மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி !

3. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் : ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள்!

4. ஒளிரும் குஜராத் : இராம ஜென்மபூமி பாகம் 2

5. புதுவை பல்கலைக்கழகம் : பார்ப்பனக் கொட்டத்தை அடக்கிய மாணவர் போராட்டம்!

6. உண்மை சுடுகிறது! பா.ஜ.க அலறுகிறது!!

7. “தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது! மக்கள் போராட்டமே தீர்வு !! – கூடங்குளத்தில் நடத்தப்பட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்

8. ஆம் ஆத்மி : சிறப்பு இரகசியம்!

9. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் : இந்தியா மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!

10. வெனிசுலா : அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

11. கொத்தடிமைத்தனம், விபச்சாரம் : தனியார்மயம் தீவிரப்படுத்தும் பேரபாயங்கள்!

12. ‘வளர்ச்சி’ : கொழுத்தது யார்? தெருவில் நிற்பது யார்?

புதிய ஜனநாயகம் மே 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

எல்லா கேஸையும் ஊத்தி மூடணும், செய்வீர்களா – கார்ட்டூன்கள்

2

jj-cartoon-1

jj-cartoon-2

[புதிய ஜனநாயகம் மே 2014 இதழின் அட்டைப் படம்]

படங்கள் : ஓவியர் முகிலன்

கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்

0

1. கோவையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • விசைத்தறி , கைத்தறி உட்பட சிறுதொழில், சிறு வணிகர்களை விழுங்கவரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடிப்போம்!

என்கிற அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் 2 மாதங்களுக்கு மேலாக கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.

விசைத்தறி உரிமையாளர்கள் 1993-லிருந்தே தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வந்தபிறகு விசைத்தறி பிரச்சனை தீவிரமடைந்து வந்திருக்கின்றது.

தற்சமயம் விசைத்தறி உரிமையாளர்களாக உள்ளவர்களெல்லாம் யார்? இவர்களெல்லாம் முன்னாள் விவசாயிகள். விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டமுடியாது என்ற காரணத்தினாலேயே தங்களிடமிருந்த விவசாய நிலங்களையும் நகைகளையும் விற்றும் மற்றும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுமே இந்த தறியை அமைத்தவர்கள். எப்படியாவது அரசு பார்த்து 5% , 10% கூலி உயர்வுக்கு வழிசெய்து கொடுத்து தங்களை கரையேற்றும் என நம்புகிறார்கள். ஆனால் இந்த அரசுதான் நம்மை அப்போது விவசாயத்திடமிருந்தும் தற்போது விசைத்தறியிடமிருந்தும் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

நமது நாட்டில் விளையும் தரமான பஞ்சை அடிமாட்டு விலைக்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பற்றாக்குறையை உருவாக்குகிறது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையை ஒன்றும் இல்லாததாக்கி விட்டது . கோவையில் இருக்கக்கூடிய 5 தேசிய பஞ்சாலைகளையும் சில வருடங்களுக்குள் மூடி விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டிருகிறது. இதற்காகவா நாம் இவர்களையெல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்?

பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்த போது கட்டியிருந்த கோவணம் பறிபோன கதையாக நாம் கூலி உயர்வு பற்றி பேசிகொண்டிருக்கும் போதே விசைத்தறி அழிக்கப்படும் அபாயம் நெருங்கி வருகிறது. அதிக வேகத்துடன் நெய்யக்ககூடிய பவர்லூம் , சுல்ஜர் தறி, ஜெட் தறி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முதலாளிகள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதே இதற்கு சான்று.

தற்சமயம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வந்த பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்ந்து வருகின்றது. 2014-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 110% மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்கின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியும் உயர்த்தி தராத பட்சத்தில் அரசாங்கத்தின் மின்கட்டண உயர்வு என்பது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது தானே?

கடந்த மார்ச் மாதத்தில் விசைத்தறி பிரச்சனை தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் 12 (3) ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சோமனூர் பகுதிகளுக்கு 30% கூலி உயர்வும், பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நெய்யப்படும் ரகங்களுக்கு 27% கூலிஉயர்வும் கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவை ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் அங்கீகரிக்கவில்லை. விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது சங்கங்களை கலைத்தனர். ஜவுளித்துறையினர் இந்த ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது என அடாவடித்தனம் செய்து வந்தனர். விளைவு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தறிகள் ஓடவில்லை. பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழவழியின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கஞ்சித் தொட்டி திறந்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு , மின்வெட்டு , மின்கட்டணம் உயர்வு , உதிரிபாகங்கள் விலையேற்றம், தங்களிடம் வேலைசெயும் தொழிலாளர்களுக்கு கூலிஉயர்த்தி கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாகவே விசைத்தறி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்களை சிறிதேனும் போக்க ஜவுளி உற்பதியாளர்களிடம் கூலிஉயர்வு கேட்டனர். கூலிஉயர்வில் உடன்பாடு ஏற்படாததின் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்சமயம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகள் ஓடவில்லை. பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ வழியில்லை. ஓட்டு பொறுக்கிகள் போட்ட தேர்தல் கூச்சலில் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் நம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தையே வில்லாக வளைப்போம்’ என சவடால் அடித்து தேர்தல் வாக்குறுதிகளையும் பணத்தையும் அள்ளி வீசிய எந்த கட்சியும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனையை கண்டு கொள்ளவே இல்லை தேர்தல் புறக்கணிப்பு, கஞ்சித்தொட்டி திறப்பு என பாதிக்கப்பட்டோர் எவ்வளவு தீவிரமான நிலை எடுத்த போதிலும் அரசும் மசிந்து கொடுக்கவில்லை . மாறாக தேர்தலில் ஓட்டு போடவில்லை என்றால் எந்த சலுகையும் கிடையாது என மிரட்டவே செய்தது.

“விரும்பிய கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது கண்டிப்பாக நல்லது நடக்கும்” என நீங்கள் நம்பிகொண்டிருக்கலாம் . ஆனால் மோடியோ-லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. தீவிரமடையத்தான் போகின்றன என்பதைதான் தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.

நம் கண் எதிரிலேயே விவசாயம் ,கைத்தறி , விசைத்தறி, சிறு குறு தொழில்கள், மீனவர்கள் மற்றும் சிறுவணிகர்களின் வாழ்வாதார உடமைகள் பறிக்கப்படுகின்றன. உழைப்பாளர்களிடமிருந்து உற்பத்தி கருவிகளை பிடுங்கிக் கொண்டு அவர்களை உடைமை ஏதுமற்றவர்களாக , வாழவழியற்றவர்களாக நகரங்களில் விசிறியடித்து வருகிறது முதலாளித்துவம். அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.

பெருநகரங்களில் உழைக்கும் மக்கள் குவிவது அதிகமாகி வருகிறது. நகரங்களில் கூலி வேலை செய்பவரை விசாரித்து பாருங்கள். அவர் முன்னாள் விவசாயியாக , ஒரு சிறு தொழில் முனைவராக இருப்பார்கள், இப்படி நமது தொழில்களை அழித்த இந்த முதலாளிக்குதான் அரசு வரிச்சலுகைகள், மானியங்கள், வட்டியிலா கடன்கள், இலவச மின்சாரம் குறைந்த விலையில் நிலம், தண்ணீர் போன்ற பொருளாதார உதவிகளோடு அடியாளாக போலீசையும் அனுப்பி வைக்கிறது. நாம் நமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடினால் தடியடி, சிறை, சித்ரவதை, கொட்டடி கொலை என வெறியாட்டம் போடுகிறது.

ஆகவே ஆட்சியாளர்களை நம்பி பயனில்லை, அரசை நம்பி பயனில்லை. ஏனெனில், இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. விசைத்தறி உள்ளிட்ட சிறு தொழில்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டது இந்த அரசு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவையே , அதாவது சிறு தொழில்களை அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளை அமைப்பதையே நடைமுறைப்படுத்துவார்கள்.

இந்த புரிதலுடன் விசைத்தறி உரிமையாளர்கள் புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்துபோரட முன்வர வேண்டும். இல்லையெனில் நாம் பெறுவது எல்லாம் தற்காலிக வெற்றிதான். அடுத்து வரும் மாதங்களில் இந்த வெற்றியெல்லாம் தட்டிப் பறிக்கப்படும். எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி அழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடது. கிராமந்தோறும் ஊர் கமிட்டிகளை அமைத்து கோரிக்கைகள் நிறைவேறும்வரை உறுதியாக விடப்பிடியாகப் போராட முன்வரவேண்டும்.

சாதி , மத பேதங்களை கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்று சேரவேண்டும் என இந்த மே நாளில் உறுதி எடுத்துகொள்ளவேண்டும்.

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் விடுதலைக்காக நக்சல்பாரி அமைப்பு களத்தில் நிற்கிறது . உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை வென்றெடுக்க மே நாள் பேரணியில் திரளாக கலந்து கொண்டு வர்க்க உணர்வுபெற, உரிமைகளை வென்றெடுக்க உங்களை அறைகூவி அழைக்கின்றோம்.

தமிழக அரசே!

  • கூலிக்கு நெசவு செயும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று!
  • விசைத்தறிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கு !
  • விசைத்தறி உள்ளிட்ட சிறு தொழில்களை அழித்து வரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அனுமதிக்காதே!

என்கிற முழக்கங்களோடு பல்லடம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மே தினத்தில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று ம.க.இ.க – பு.மா.இ.மு-பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் கோவை-திருப்பூர்-ஈரோடு- கரூர்-நாமக்கல் மாவட்டங்களுடன் இணைந்து திட்டமிட்டன.

மே தினத்துக்கு முன்னால் 5 நாட்களாக பல்லடம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சரம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த காவல்துறை, “நக்சல் பரி அமைப்புகள் விசைத்தறி பிரச்சனை கையில் எடுத்துவிட்டார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்” என்று பதறியது.

“தேர்தல் முடிவு வெளியாகும்  மே 16-ம் தேதிக்கு மேல் கூலி உயர்வு குறித்து பேசலாம்” என்றும் சொல்லியிருந்தனர் திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள். ஆனால்,  மே -1 தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் 28.04.2014 தேதியன்று இருதரப்பினரையும் அழைத்து பேசி சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 27% கூலி உயர்வு பேசி முடித்து உள்ளார்கள்.

பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் கூறி விட்டது. “தடையை மீறி செய்வோம்” என்று கூறிய பிறகு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

பல்லடம் , கோவை , ஈரோடு , காங்கயம் , கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் வீச்சான பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்கள் பெருத்த ஆதரவும் , நிதியுதவும் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற காவல் நிலையத்தில் கேட்டகப்பட்டது. நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு பேரணி கூடாது, ஒலிப்பெருக்கி கூடாது, புண்படுத்தக் கூடாது. இப்படி பல கூடாதுக்கு பிறகு பல்லடம் காவல் துறை அனுமதி வழங்கியது. இதை மீறி ஒலிபெருக்கி வைத்து கைதாவது என முடிவு செய்து ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது.

தோழர் புஸ்பராஜ் சிவகிரி

ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தேர்தலின் போது அனல் பறக்கும் பிரச்சாரம் என்று வாய்ச்சவடால் அடித்தனர். இன்று தேர்தல் முடிந்த பின்பு அம்மா கொடநாட்டிலும் , விஜயகாந்த் டாஸ்மாக்கிலும் என ஆளுக்கொரு மூலை பறந்து விட்டனர் . மக்கள் அனாதையாய் விடப்பட்டனர் என ஓட்டு கட்சிகளை அம்பலப்படுத்தினார். மேலும் ஈரோடு பகுதிகளில் நாலணா கூலிக்காக எத்தனை போராட்டம் நடத்த வேண்டி இருந்தது என்பதை சுட்டி காட்டினார்.

விளவை ராமசாமி

புரட்சிகர அமைப்புகள் பல்லடத்தில் கால் வைத்து விடுவோம் என்று போலீசுக்கும் , முதலாளிகளுக்கும் பெரும் அச்சம் எனவே காவல் துறையினர் அனுமதி தருவதற்கு இழுத்தடித்தனர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் முடிவுக்கு பிறகுதான்  நடத்துவதாக இழுத்தடித்து வந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தையை புரட்சிகர அமைப்புகள் களமிறங்கியதும் அவசர அவரசமாக விசைத்தறியாளர்களையும், ஜவுளி உற்பத்தியாளர்களையும் ஆட்சியர் அலுவலகத்தில் அழைத்து, “இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே இதை சமரசமாக முடித்துக் கொள்ளுங்கள்” என அவசரகதியில் கூலி கொடுக்கப்பட்டதை விளக்கி பேசினார்.

இந்த கூலி உயர்வு தற்காலிகமானது என்பதையும் , விசைத்தறி முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்க காத்திருப்பதையும் அம்பலப்படுத்தி பேசினார். அனைத்து தேசிய தொழில்களையும் இயற்கை வளங்களையும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்திலிருந்து இந்த மனிதகுலம் முழுவதையும் காக்கும் பொறுப்பு கம்யுனிஸ்டுகளின் தோள் மீது விழுந்திருக்கிறது என்பதை விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
கோவை பகுதி பு.ஜ.தொ.மு.

2. தருமபுரி பென்னாகரம்

ருமபுரி, பென்னாகரம் வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மேதின பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மே-தின பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது காவல்துறை. பலமுறை முயற்சித்தும் பேரணிக்கு தடை விதித்தது.

இதனை பொருட்படுத்தாமல் மக்களை திரட்டும் வேலையில் பரவலாக ஈடுபட்டு பென்னாகரம் பி.டி.ஓ அலுவலகம் அருகில் 500-க்கும் மேற்பட்ட மக்கள், தோழர்கள் திரளாக கூடினார்கள். உடனே தடையை மீறி அமைதி பேரணியாக மாலை 4.30 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கியது. மக்கள் கூட்டத்தை சற்றும் எதிர்பார்க்காத போலீசு செய்வதறியாமல் திகைத்து நின்றது. காவல்துறை கேமிராவை கொண்டு வந்து படம் பிடித்தது.

மே தினத்தை விழாவாக அனைத்து கட்சிகளும் கடைப் பிடிக்கும் பொழுது நாம் போராட்டமாக செய்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த 4-5 பேர் கடமைக்காக கொடியேற்றியிருந்தனர். நமது கூட்டத்தை பார்த்து முகத்தில் களை இழந்து கூட்டத்தை கவனித்தனர்.

  • உண்மையான ஜனநாயகத்தின் மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவோம்,
  • விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்

என்ற கோரிக்கைகளை விளக்கி பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பு.மா.இ.முவைச் சேர்ந்த தோழர் அன்பு உரையாற்றினார். தோழர் கோபிநாத், வட்டார செயலாளர் தோழர் முத்துகுமார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரை ஆற்றினர், தோழர் குபேந்திரன் நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி

மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

1

‘’தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச் சொத்து ஒழிக்கப்பட்டு விட்டது; ஒரு சிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம், இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்… ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம். ‘’

– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பிரபலமான மேற்கோள் ஒன்று.

‘’ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும், ஜார் ஆரசனும்… ஜெர்மன் உளவாளிகளும், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.’’

கம்யூனிஸ்ட் அறிக்கை – என்று துவங்குகிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. 1848 பிப்ரவரியில் லண்டனில் உள்ள ஒரு சிறிய அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட இந்தச் சிறிய வெளியீடு, ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகத்தையே பிடித்து ஆட்டத் தொடங்கியது.

அறிக்கை வெளிவந்து இன்று 150 (தற்போது 166) ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் உலகைப் பிடித்து ஆட்டிக் கொண்டுதானிருக்கிறது.

இத்தகையதோர் வரலாற்று ஆவணம் உருவான 19-ம் நூற்றாண்டு ஒரு கொந்தளிப்பான காலம். 1831 நவம்பரில் பிரான்சின் நெசவாளர்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கினர். அவர்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டனர். எனினும் பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்குமிடையிலான இந்த மோதல் ஐரோப்பா முழுவதிலுமிருந்த மன்னர்களையும் முதலாளிகளையும் நடுங்கச் செய்தது.

நெசவாளர்களின் ஆயுத எழுச்சியை நேரில் கண்ட ஒரு ஆளும் வர்க்க சித்தாந்தவாதி கீழ்க்கண்டவாறு அபாயச்சங்கு ஊதினார்:

‘’செல்வந்தர்களின் ஆதாயத்திற்காக மட்டுமே நீங்கள் வியர்வை சிந்துகிறீர்கள். ஆலை முதலாளிகள்தான் உங்கள் இயற்கையான எதிரிகள்.. ஆனால் நீங்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் பெரியவர்கள்; மிக வலிமையானவர்கள். ஒன்று சேருங்கள்! என்று தொழிலாளர்களை நோக்கிச் சொல்பவர்கள் தோன்றுவார்கள்.’’

ஆம்! ஆனால் அவர்கள் ஏற்கெனவே தோன்றியிருந்தார்கள். அவர்கள் தேவ தூதர்கள் அல்ல; வரலாறு ஈன்றெடுத்த பிள்ளைகள். அவர்கள் தங்கள் வசனத்துக்கு மரியாதை சேர்க்க எந்தத் தேவனையும் துணைக்கு அழைக்கவில்லை.

‘’முந்தைய உலகக் கண்ணோட்டம் மற்றும் முந்தைய வரலாற்றின் தர்க்க ரீதியான, வரலாற்று ரீதியான, அவசியமான தொடர்ச்சி என்ற வகையில் நமது கோட்பாடுகளை வளர்த்து ஒரு சில படைப்புகளில் வடிக்காத வரை உண்மையான தெளிவு மக்களுக்கு இருக்காது. பெரும்பான்மையினர் இருளில் குழம்பித் திரிவார்கள்’’ – என்று 1844 அக்டோபரில் எங்கெல்சிற்குக் கடிதம் எழுதினார் மார்க்ஸ்.

ஆம்! பலர் குழம்பித்தான் திரிந்தார்கள். டஜன் கணக்கிலான சோசலிசக் கோட்பாடுகள் தோன்றின. ‘’எல்லோரையும் பேரரசர்களாகவும் போப்பாண்டவர்களாகவும் மாற்ற விழையும்’’ இந்தப் போக்குகளை ஏளனம் செய்து சாடினர் மார்க்சும் எங்கெல்சும்.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

மன்னர்களையும், முதலாளிகளையும் அவர்களுடைய கொள்ளையையும் இரட்டை வேடத்தையும் தனது குத்தீட்டி போன்ற சொற்களால் மார்க்ஸ் கிழித்துக் காட்டியவுடன் ‘’உன்னுடைய தொழிலாளி வர்க்கம் மட்டுமென்ன, கலப்பற்ற சொக்கத் தங்கமோ?’’ என்ற கேள்வியை எழுப்பினார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். ‘’சாதி, மதம், சுயநலம், குடி, சூது, ஆடம்பர மோகம் – என்று இவை அனைத்திலும் ஊறிக்கிடக்கும் உன்னுடைய தொழிலாளிகளா புரட்சி செய்யப் போகிறார்கள்?’’ என்பதுதானே புரட்சியாளர்களை நோக்கி மார்க்சிய எதிர்ப்பாளர்கள் அனைவரும் எழுப்பும் கேள்வி.

‘’தூக்கியெறியும் (பாட்டாளி) வர்க்கத்தால் புரட்சியின் போது மட்டுமே தன்னிடமிருந்து பழைய ஆபாசம் முழுவதையும் விட்டொழித்து சமுதாயத்தின் புதிய அடிப்படையை தோற்றுவிக்க வல்லதாக மாற முடியும்’’…

‘’உழைக்கும் வர்க்கங்கள் இயற்கையை வென்று விட்டன. இனி அவர்கள் மனிதர்களை வெல்ல வேண்டும். இந்த முயற்சியில் வெற்றி காண அவர்களுக்கு வலிமை தேவையில்லை. ஆனால் அவர்களது பொதுவான வலிமையை ஸ்தாபனப்படுத்துவதுதான் தேவைப்படுகிறது’’ என விடையளித்தார் மார்க்ஸ்.

பிரெடரிக் எங்கெல்ஸ்
பிரெடரிக் ஏங்கெல்ஸ்

தொழிலாளி வர்க்கத்தை அமைப்பாக்கும் வேலையை மார்க்சும், எங்கெல்சும் முன் நின்று செய்தார்கள். அனைத்துலகக் கம்யூனிஸ்டு கழகத்தை ஏற்படுத்தினார்கள். பல்வேறு விதமான கற்பனைச் சோசலிசப் போக்குகளுக்கு எதிராகத் தங்களது விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகளை முன் வைத்து அக்கழகத்தின் இரண்டாவது காங்கிரசில் வாதாடினார்கள். அறிக்கை எழுதும் பொறுப்பை கழகம் அவர்களிடம் ஒப்படைத்தது. பிறகு அறிக்கை அக்கழகத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

“இந்தச் சிறு பிரசுரம் மிகப் பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது’’ என்று பின்னாளில் குறிப்பிட்டார் லெனின். மார்க்சியத்தின் அரசியல் பொருளாதார, தத்துவ ஆயுதமாக விளங்கிய கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளி வந்தவுடனே விற்றுத் தீர்ந்து விடவும் இல்லை. உலகைக் கவர்ந்து விடவும் இல்லை. ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் வெற்றியையும் பின்னடைவையும் ஒட்டி அறிக்கை மீதான ஆர்வம் கூடிக் கொண்டும் குறைந்து கொண்டும் இருந்தது.

அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் 1887-இல் எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:

‘’ஒரு உலகப் போரைத் தவிர, அதுவும் இதுவரை கனவு கண்டிராத விரிவும் வன்முறையும் கொண்ட ஒரு உலகப் போரைத் தவிர வேறெந்தப் போரும் முடிவில் ஜெர்மனிக்குச் சாத்தியமில்லை… இளவரசர்களே, ராஜதந்திரிகளே உங்களுடைய ஞானத்தால் இன்று நீங்கள் ஐரோப்பாவை இங்குதான் கொண்டு வந்துள்ளீர்கள்… போர் தற்போதைக்கு எங்களைப் பின்னணிக்குத் தள்ளலாம். நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள சில சாதகங்களை அது எங்களிடமிருந்து பறித்துக் கொள்ளலாம். ஆனால் உங்களால் மீண்டும் என்றுமே கட்டுப்படுத்த முடியாத சக்திகளை நீங்கள் கட்டவிழ்த்து விடும்போது, நிகழ்ச்சிகள் அவற்றின் போக்கிலேயே நடைபெறட்டும். இந்த யுத்தத்தின் முடிவில் நீங்கள் நாசமாக்கப்படுவீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி அடையப்படிருக்கும் அல்லது தவிர்க்க முடியாததாகியிருக்கும்.’’

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்
காரல் மார்க்ஸ் – பிரெடரிக் எங்கெல்ஸ்

உண்மைதான்! பாட்டளி வர்க்கத்தின் வெற்றி அடையப்பட்டு விட்டது ரசியாவில். முதல் உலகப் போரின் முடிவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்பட்டது. மார்க்சியமும், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையும் எட்டுத் திக்கும் பரவத் தொடங்கின.

சமூக உறவுகளின் இயக்கத்தைப் பற்றியும் அதன் உள் உறவுகளைப் பற்றியும் துல்லியமாகப் புரிந்து கொண்டு விட்டால் நிலவுகின்ற சமூக அமைப்புதான் நீடித்திருக்க முடியும் என்ற மாயை அகன்று விடும் என்றார் மார்க்ஸ். அத்தகைய புரிதல் இருந்தால் இயற்கை விஞ்ஞானத்தையொத்த துல்லியத்தை சமூக விஞ்ஞானமும் பெற முடியும் என்றார் எங்கெல்ஸ்.

தொழிலாளி வர்க்கம் அவ்வாறு புரிந்து கொள்வதன் அபாயத்தை பாரிஸ் கம்யூனிலும், ரசியப் புரட்சியிலும் முதலாளி வர்க்கம் பட்டுத் தெரிந்து கொண்டது. தத்துவத் துறையில் விஞ்ஞானத்தைத் திட்டமிட்டே புறக்கணிக்கத் தொடங்கியது. அறியொணாவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது; ‘’வல்லாண்மைக்கான விருப்புறுதி’’ எனக் கூறி காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தியது.

கீனிசியப் பொருளாதாரமும் போலி சோசலிசமும் வீழ்ச்சியடைந்ததை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகச் சித்தரித்தது. தான் உருவாக்கிய, தனது சொந்த மதிப்பீடுகளைத் தானே நொறுக்க நேர்ந்த போது, தன்னுடைய முடிவு நெருங்கும் போது, ஏகாதிபத்தியம் இன்று அதை ‘சித்தாந்தத்தின் முடிவு’ என்று பிரகடனம் செய்கிறது.

லட்சிய வீடு, லட்சியக் கார், லட்சிய வேலை, லட்சியத் தொலைக்காட்சி… எல்லாவற்றையும் அடைய முடியும். லட்சிய சமூகம் ஒன்றை மட்டும் அடைய முடியாது என்கிறார்கள் ஏகாதிபத்தியத்தின் தத்துவ ஞானிகள். ‘’கம்யூனிசம் பற்றிக் கனவு காண்பவர்கள் இன்றைய சமூக சூழ்நிலையை உணராதவர்கள்’’ என்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள்.

‘’நாம் உயிர்வாழும் வாயு மண்டலம் நம் ஒவ்வொருவர் மீதும் 20,000 பவுண்டு சக்தியுடன் அழுத்திய போதிலும் நீங்கள் அதை உணர்கிறீர்களா என்ன? அது போலவே ஐரோப்பிய சமூகம் தன்னைச் சூழ்ந்து எல்லாப் பக்கங்களிலும் அழுத்திக் கொண்டிருந்த புரட்சிகர வாயு மண்டலத்தை 1848-க்கு முன் உணரவில்லை’’ என்று கூறினார் மார்க்ஸ்.

1998-லும் (தற்போது 2014-லிலும்) அப்படித்தான். தனது நலனுக்காக உலகப் பொருளாதாரத்தை ஒன்று சேர்க்கும் வல்லரசுகள், உலகத் தொழிலாளி வர்க்கம் மட்டும் ஒன்று சேரக் கூடாது என விரும்புகின்றன. ஆனால் விருப்பங்கள் மட்டும் வரலாற்றை இயக்கிச் செல்வதில்லை.

கம்யூனிசம் எனும் பூதம் மீண்டும் உலகை ஆட்டத் தொடங்கும். தனது உதடுகள் உச்சரித்த ‘’உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’’ என்ற முழக்கம் செயல் வடிவம் பெற்றதைக் காண அந்த ஆசான்கள் இல்லையே எனத் தொழிலாளி வர்க்கம் கண் கலங்கும்.

– சூரியன்
______________________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 1998
______________________________________

புதுச்சேரியைக் குலுக்கிய மே நாள் பேரணி – படங்கள்

0

மே நாள்! எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் சமூக பயன்பாடு, எட்டு மணி நேரம் உறக்கம் என்று மனித குலத்துக்கே வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த அரசியல் போராட்ட நாள்! இந்நாளில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டும் வகையில், புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தங்களது இணைப்புச் சங்கங்களில் கொடியேற்றி வாயில் கூட்டங்கள் நடத்தியது. மேலும், இன்று நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஏதோ இந்தியாவையே புரட்டிப் போட்டுவிடப் போவதற்கான மாற்றுத்திட்டம் வரப்போவதாக போலிகள் உள்ளிட்ட அனைத்து ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும் ஊளையிடுகின்றன. ஆனால், இந்தப் போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் போடுவதால் நமது நிலைமைகள் மாறப்போவதில்லை.

மோடியோ, லேடியோ அல்லது வேறெந்த கேடியோ ஜெயித்து வந்தாலும் மக்களின் அவலங்கள் மாறப்போவதில்லை. ஏனெனில், யார் வந்தாலும் ஆட்சியாளர்கள் அமுல்படுத்தப் போவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற நாட்டை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கூறுபோடும் மறுகாலனியாக்கக் கொள்கைகளே. அதனால், மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீவிரமடையப் போகின்றன.

ஒருபுறம் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமுல்படுத்தப்படும் அதே வேளையில், மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இந்துமதவெறி பாசிசம் இந்தக் கொள்கைகளுக்கு சேவைசெய்யும் விதமாக மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,

இந்த போலி ஜனநாயக சட்டமன்ற நாடாளுமன்ற பாதையைப் புறக்கணித்து உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! என்று மே நாளில் சூளுரைப்போம்

என்ற மைய முழக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்ட போது, போலீசு அதிகாரி,

“ஏற்கனவே, இவர்களுக்கும், அதிமுக-விற்கும் இடையே பிரச்சினை உள்ளது. தற்போது அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று கூறி அனுமதி தர மறுத்தார்.

தோழர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா புதுச்சேரி வந்து பேச, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தபோது, “எங்களுக்கும் அதிமுக விற்கும் பிரச்சினை இருப்பது உங்களுக்கு மறந்துவிட்டதா?” என்றும், “ஜெயலலிதா பிறந்த நாளின் போது, ஒரு ரோட்டையே மறித்து, ஓம் சக்தி சேகர் கூட்டம் நடத்தியபோது பிரச்சினை மறந்துவிட்டதா? நாங்கள் அனுமதி கேட்டால் மட்டும் பிரச்சினை ஞாபகத்திற்கு வருகிறதா?” என்று கேட்டபோது,

போலீசு அதிகாரி “அதில்லப்பா, பிரச்சினை வந்திடக் கூடாதுன்னு பாக்குறேன்.” என்றார்.

தோழர்கள், “பிரச்சினை வரக்கூடாதுன்னா நீங்க பேரணிக்கு பாதுகாப்பு கொடுங்க.” எனக் கூறினர். எனினும், போலீசு அதிகாரி, அனுமதி தரத் தயங்கினார்.

தோழர்கள், “நீங்கள் அனுமதி கேட்ட எங்களது கடிதத்தில் உங்கள் கருத்தை எழுதிக் கொடுங்கள். நாங்கள் மேலதிகாரியிடம் பேசிக் கொள்கிறோம் எனக் கூறி எழுதி வாங்கிச் சென்று மேலதிகாரியிடம் மேற்சொன்ன விசயங்களைப் பேசிய போது வேறு வழியின்றி அனுமதி அளித்தார்.

ஆயினும், ½ அங்குலம் விட்டம், 2 அடி நீளம் என கொடி பிடிக்கும் குச்சியின் அளவு முதல் கொடியின் அளவு, சுவரொட்டி ஒட்டுவது, இந்திய அரசை விமர்சிக்கும் வகையில் எந்த விசயமும் கேலிச் சித்திரம் உட்பட எந்த வடிவத்திலும் விமர்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 14 வகையான கட்டுப்பாட்டுகளை விதித்து கொடுத்த அனுமதியைப் பெற்று பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணியை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். பழனிசாமி தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமையுரையில், “தொழிலாளி வர்க்கம், ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் கசக்கிப் பிழியப்பட்டனர். தங்கள் மீதான இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்த்து உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள் போராடிப் பெற்றது தான் 8 மணி நேர வேலை நேரம் என்பது. அந்தத் தியாகத் தோழர்களின் ரத்தத்தில் நனைந்தது தான் இந்த செங்கொடி. ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் போராடி உயிர் நீத்த நாளில், ஓட்டுக் கட்சி சங்கங்கள் அதைக் கொண்டாட்ட நாளாக கொடியேற்றி, மிட்டாய் வழங்கி கொண்டாடி வருவதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியாக்க சூழலில் எல்லா ஓட்டுக் கட்சிகளும், போலிசும் – நீதிமன்றங்களும் தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருக்கிறது என்பதை விளக்கியும், எனவே மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைப்பதும், அதற்கு சேவை செய்யும் பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவதும், அதற்கு உழைக்கும் வர்க்கமாய் அணி திரளவேண்டும்” என்பதை விளக்கிப்பேசி பேரணியைத் துவக்கிவைத்தார்.

பேரணி, நமது தோழர்களைத் தாக்கிய அதிமுக ரவுடி ஓம் சக்தி சேகர் வீடு அமைந்துள்ள அருகாமைப்பகுதியான லெனின் வீதி வழியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் கம்பீரமாகச் சென்றது. அதிமுகவின் அடிப்பொடிகள் வெளியில் வந்து வெறிக்கப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சிலர் அந்த வீதியில் அமைந்துள்ள அதிமுக அலுவலக வளாகத்தின் மாடியில் ஏறி நின்று பேரணியை வீடியோவில் பதிவு செய்தனர். ஆயினும், இதைப் பற்றி எல்லாம் சட்டை செய்யாமல், பேரணி தனது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முன்னேறிக் கொண்டிருந்தது. பேரணி திட்டமிட்டபடி, சுதேசி மில் அருகில் முடிவடைந்தது.

அங்கு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணை செயலாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், புஜதொமு – வின் அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் தோழர் கலை அவர்களும் உரையாற்றினர்.

தோழர் லோகநாதன் தனது உரையில், தொழிலாளர் வர்க்கம் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும், அதை இன்றைய அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் என அனைவரும் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார். தங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் வக்கற்றவர்கள் என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்த புதுச்சேரி பகுதியில் உள்ள வீராம்பட்டினம் மக்கள் இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அரசியல் ரீதியாக நாம் விளக்கிப் பிரச்சாரம் செய்வதை தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர். எனவே, இன்றைய தேவை இந்த மக்கள் விரோத அரசு அல்ல. மாற்று அரசியல் என்பதை விளக்கிப் பேசினார்.

தோழர் கலை தனது உரையில், “இன்றைய அரசு, முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு என்பதை மீத்தேன் எடுப்புத் திட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். புதுச்சேரியின் பாகூர் தொடங்கி திருவாரூர் வரையில் உள்ள பகுதியில் வசிக்கும் 50 லட்சம் மக்களை வெளியேற்றித் தான் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறது. அதில் எடுக்கப்படும் வாயு நமது மக்களுக்குப் பயன்படப் போவதில்லை. முதலாளிகளின் லாப வெறிக்குத்தான் பயன்படப் போகிறது. இதை நாட்டின் வளர்ச்சி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்பதையும், “இதே போல் திருவண்ணாமலையில் உள்ள மலைகளைக் கொள்ளையிட ஜிண்டால் நிறுவனம் தயாராகிறது.” இதே போல் அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கிப் பேசினார். “இன்றைய மன்மோகனுக்கு மாற்று மோடி என்பதெல்லாம் ஏமாற்று. பிஜேபி ஆண்ட போது அவர்களும் இதே கொள்கைகளைத்தான் நடைமுறைப் படுத்தினர். அதை அம்பலப்படுத்தியும், இதற்கு மாற்று என்பது தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் ஒழித்து, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக அரசை நிறுவதே. அதற்கு மக்கள் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டும்” என அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு

2

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

8 மணி நேர வேலை
1856-ல் ஆஸ்திரேலிய தொழிலாளரின் 8 மணி நேரம வேலை கோரிக்கை

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன். 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.

வங்க தேசம் 2013
2013-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மே தினப் பேரணியில் பெண் தொழிலாளர்கள்

தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866-ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்க போராட்டங்களினால் எட்டு மணி நேர குழுக்கள் ஏற்பட்டன. மேலும் இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலை நாளை அமுல்படுத்தின. 1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திர தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த எட்டு மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படியில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாத தலைவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் தேசிய தோழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இன்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1967-ல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869-ல் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேஸிலில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செயதது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த ‘வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்’ பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்க தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. ”பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்” என்றது அஞ்சலி தீர்மானம். சில்விஸின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்

1866-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் என்ற முடிவை தேசிய தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இன்டர்நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

மார்க்ஸ் இன்டர்நேஷனல்
இன்டர்நேஷனல் கூட்டத்தில் மார்க்ஸ்

”வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன் மொழிகிறது.”  தேசிய தொழிற்சங்கத்தின் இந்த எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இன்டர்நேஷ்னல் காங்கிரசும் ஒரே சமயத்தில் எட்டு மணி நேர வேலை நாளை முன் மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலை நாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. ”வட அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன் வைக்கிறது.”

அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

முதல் இன்டர்நேஷனல் 1872-ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876-ல் இது அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க்குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7-ம் நாள் சிக்காகோவில் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

பெலாருஸ் மே தினம்
2013-ம் ஆண்டு பெலாருஸில் நடந்த மே தின பேரணி

”1886 மே முதல் நாள் முதல் சட்டபூர்வமான வேலைநாள் என்பது எட்டு மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000-க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் எட்டு மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தின் போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ்வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூட்டமைப்பானது தற்போது உள்ள அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவைகளைக் கட்டுப்படுத்தும்.

மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்

1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.

இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்க தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட்டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.

ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875-ம் ஆண்டு சுரங்க தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.

அமெரிக்க தொழிற்துறை மற்றும் உள்நாட்டு சந்தை 1880-90-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873-ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லா திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியை தந்தது.

கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. நைட்ஸ் ஆப் லேபர் என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களை திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலை நாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தை கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. அனைத்து தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனை பெற முடியும் என்று கூட்டமைப்பு உண்ரந்திருந்தது.

பால்டிமோர் தொழிலாளர் மறியல்
பால்டிமோரில் மறியல் செய்த தொழிலாளர் மீது கொடூரத் தாக்குதல்

1885-ல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினார். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரி’ன் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பும் உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பெளடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். எட்டு மணி நேர வேலை நாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக் கொண்டது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்து கொண்டிருந்தது.

தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. முந்திய ஆண்டைக் காட்டிலும் 1886 மே முதல் நாளுக்கான வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-84-ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலை நிறுத்ததில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000. ஆனால் 1885-ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது. 1886-ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1,572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். 1885-ல் 2,467-ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886-ல் 11,562-ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலை இருந்த போதிலும் 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் என கணக்கிடப்படுகிறது.

இவ்வேலை நிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்கு தான் வேலை நிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டிட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலை நிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவிலிருந்தது. இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள். மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவியிருந்த அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் தின வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றிகண்டதாக சொல்லப்படுகிறது. மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலை நாளை அடைய முடியாவிட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.

சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்

சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்ததிற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது கூட்டமைப்பு, ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

ஹே மார்க்கெட் சம்பவம் குறித்த ஓவியம்
ஹே மார்க்கெட் சம்பவம் குறித்த ஓவியம்

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. நாடெங்கிலுமுள்ள முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.

1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது. இதன் மூலம் வேலை நிறுத்த இயக்கத்தின் போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தனர்.

சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888-ல் செயின்டி லூயிஸில் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது). அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க தீர்மானித்தது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி நேர இயக்கத்தை துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள். 1889-ம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றிகண்டது. வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மே தினம் உலக தினமாக மாறியது

சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்து கூறுகிறார். எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தை பரவலாக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்து. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.”கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்த வாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்து போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவை பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.

1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

1886 மே 4 : ஹே மார்க்கெட் கூட்டத்திற்கான சுவரொட்டி
1886 மே 4 : ஹே மார்க்கெட் கூட்டத்திற்கான சுவரொட்டி

‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’

1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலை தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலை நாளுக்காக பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்த போதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்கு முறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயாக்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தது. ஆயிரக்கணக்கானவர் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.

1891-ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலை நாள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும் நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலை நாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையொ ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்து கொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டியது.

உலக மே தினம் குறித்து எங்கெல்ஸ்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1 -ம் தேதி எங்கெல்ஸ் முகவுரை எழுதுகிறார். அதில் உலக பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் போது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ‘’நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காகத் திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியைப் பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்…’’

தொழிலாளர் பேரணி 1882
தொழிலாளர் பேரணி 1882

உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

1893 அகிலத்தின் மாநாடு ஜுரிச்சில் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். அப்போது நிறைவேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

‘’உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’.

மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மே தினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஜூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது. இந்த தீர்மானம் இந்த தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில் அகிலத்தின் முடிவுகள் தாங்களை கட்டுப்படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களை பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலைநகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப் போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப்படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின் இந்த சீர்திருத்தவாத தலைவர்களின் சோஷலிஸமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப் பட்டது. 1914-ல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய சீர்திருத்தவாத தலைவர்கள் இதனுள்ளே இருந்து வந்தார்கள்.

1900-ம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில், மே முதல் நாள் வேலை நிறுத்தம் மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மே தின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தன. ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வரக்கூடிய மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.

மே தினம் குறித்து லெனின்

மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்த போது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. “பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

மே நாள் போராட்டம்‘’பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள். இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’

ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட ‘கார்கோவில் மே தினம்’ என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார். ‘’இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். “வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்துது வைக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.

மே தின அரசியல் முழக்கங்கள்

உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். உலகத்தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை; போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.

ஜகார்தா மே தின ஆர்ப்பாட்டம்
2013-ம் ஆண்டு ஜகார்தாவில் மே தின ஆர்ப்பாட்டம்

1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில்தான் பழைய அகிலம் மே தினத்தைப் பற்றி கடைசியாக பேசியது. ஆர்ப்பாட்டத்தின் போது முழங்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை விமர்சனம் செய்த பின்பு ஒரு முக்கியமான உண்மை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சில நாடுகளில் மே தினம் மே முதல் நாளுக்கு பதிலாக ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது என்பதுதான் அந்த உண்மை. அந்த தீர்மானம் பின்வருமாறு முடிகிறது.

“ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் இந்த சர்வதேச சோசலிஸ்டு மாநாடு அமைத்து சமூக ஜனநாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிற்சங்கங்களையும் மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலைநாளை சட்டமாக்கவும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக் கொள்கிறது.

மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலை நிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளிவர்க்க ஸ்தாபனங்களுக்கும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாக சொல்கிறது.

1912 ஏப்ரல் சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்க வயல் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பாட்டாளி வர்க்க வெகுஜன புரட்சிகர நடவடிக்கை என்பது மீண்டும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு மே தினத்தின் போது ஆயிரக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வீதிக்கு இறங்கி ஜாராட்சிக்கு எதிராக சவால் விட்டனர். 1905 நிகழ்ந்த புரட்சியின் தோல்விக்குப் பின் நடந்த இந்த மே தினம் பற்றி லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

“ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங்களும், அதையொட்டிய பெருந்திரளான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமும், புரட்சிகர பிரகடனங்களும், பேச்சுகளும் ரஷ்யா மீண்டும் வளந்து வரும் ஒரு புதிய புரட்சிகர சூழ்நிலைக்கு சென்று விட்டதை தெளிவாக காட்டுகிறது”.

முதல் உலகப்போரின் போது மே தினம்

போரின் போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915-ம் ஆண்டு மே தினத்தின் போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்து கொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாகயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வதேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், ல்கஸம்பர்க், லீப்ஹனெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதை காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்ததின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு: ஆர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.

ஜிம்மர்வால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பதற்கு ஆதரவாக சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப் ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிச இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரபூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.

1917-ம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்பு தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக் கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1919 மே முதல் நாள் கிலிவலேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும் படியான போர்க்குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டு கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

கம்போடியா
2013-ம் ஆண்டு கம்போடியாவில் ஆயத்த ஆடை மே தின தொழிலாளர்களின் பேரணி

அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர் அத்தோடு சேர்ந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

1917-ம் ஆண்டு மே தினமும், ஜுலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890-ம் ஆண்டு மே தினத்தின் போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலை நாளுக்காக போராடும் இதே நேரத்தில் தமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்”. இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.

இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்ய தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917-ம் ஆண்டின் போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890-ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்ய புரட்சியினால் அமெரிக்க தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்த தலைவர்கள் விரும்பவில்லை.

1923ம் ஆண்டு மே தினத்தின் போது ‘தொழிலாளி’ என்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின் வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெரிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்”.

அதே ‘தொழிலாளி’ பத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்”

மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாக கொண்டாடுவதாக அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885-ல் உள்ளூர் அளவில் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹூவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928-ம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக்குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.

“கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகளை தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலை நிறுத்த தினமாகவோ அறியப்படமாட்டாது.”

1929-ல் ஏற்பட்ட நெருக்கடி

முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையை பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏகபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலை நிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுப்படுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930-களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935-ம் ஆண்டு சி.ஐ.ஓ. துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப் பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தை தந்தது. அமெரிக்க தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.

ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவைகள் பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு காரணமாய் இருந்த ஏகாதிபத்திய போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாக போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக் கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினை தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோக வாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்தாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப் போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.

பாசிசத்திற்கு எதிரான யுத்தம்

1933-லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டு வர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்ந்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனித குல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியை தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளை திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுவதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவை தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.

பிரான்ஸ் மே தின பேரணி
2013-ம் ஆண்டு பிரான்சில் மே தின பேரணி

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால் பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தை பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளை திரட்டும், போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

சுதந்திரம் ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியன், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலை நிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களை தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945-ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின் போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன. அந்த ஆர்ப்பாட்டங்களின் போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தை பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒழுங்கு முறையும் அற்ற சோஷலிச உலகை நிர்மாணிக்க பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.

மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.

– அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு (தமிழில் எம். சிவகுமார்)
நன்றி: சவுத் விஷன் பதிப்பகம், சென்னை.

அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !

2

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

may-day-poster-3ஓட்டுப் போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது. ஏதாவது நல்லது நடக்கப்போகிறது என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், மோடியோ, லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நம்முடைய பிரச்சினைகள் தீரப்போவதில்லை; மாறாக, தீவிரமடையத்தான் போகின்றன.

ஆட்சி மாறலாம், அவலங்கள் மாறாது!

யார் ஆட்சிக்கு வந்தாலும் கல்வி தனியார்மயம் ஒழியாது;
கல்விக்கட்டணங்கள் உயரும்;
மருத்துவச்செலவு அதிகரிக்கும்;
விலைவாசி இன்னும் உயரும்;
டாஸ்மாக் சாராயக்கடைகளால் தாலியறுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயமாகும்;
மின்வெட்டு நீடிக்கும்;
அப்படியே மின்வெட்டு நீக்கப்பட்டாலும் மின்கட்டணம் மூன்று, நான்கு மடங்கு உயரும்; மீதேன் எடுப்பு;
ஜிண்டால் இரும்புத்தாது எடுப்பு திட்டங்கள், ஆபத்தான அணு உலைகள் தொடரும்;
தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை வரைமுறையற்று நடக்கும்;
இதனால் எல்லா இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு நிலம், நீர், வான்வெளி என அனைத்தும் நஞ்சாகி பாழாகும்;
காடுகள் அழிக்கப்படும்;
குடிதண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.

விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு தொழிலதிபர்கள், மீனவர்கள், வணிகர்கள் ஆகியோரின் வாழ்வாதார உடைமைகள் பறிக்கப்பட்டு ஏதுமற்றவர்களாக விசிறியடிக்கப்படுவதும் அதிகமாகும். மிச்சமீதி இருகின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் பறிக்கப்பட்டு, நிரந்தரத் தொழிலாளர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டு ஒப்பந்த தினக்கூலித் தொழிலாளர்களாக எல்லோரும் மாற்றப்படுவார்கள். 12 மணி நேர சிப்ட் முறையில் இன்னும் கடுமையாக ஒட்டச் சுரண்டப்படுவார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளும் மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.

பட்டப் பகலில் கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை கலாச்சாரம், நுகர்வுவெறி கலாச்சாரம், ஆபாச சீரழிவுகள், வக்கிரங்கள், போலீசின் அராஜகம் பெருகும். இலஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் சிவில், ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒரு பாசிச காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு எல்லா பிரிவு மக்களின் நியாயமான போராட்டங்களும் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படும். சாதி, மதவெறியர்களின் கட்சிகளும் சங்கங்களும் போலீசு துணையோடு வெறியாட்டம் போடும்.

மேற்சொன்ன எல்லாக் கொடுமைகளும் சுரண்டல்களும் ஏற்பட்டதற்கு அடிப்படை 1990-களின் தொடக்கத்திலிருந்து புகுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள் தான். அன்றிலிருந்து இன்று வரை எல்லா மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் (எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆண்ட போதும்) இந்த கொள்கைகளையே போட்டி போட்டுக் கொண்டு அமுல்படுத்தி வந்துள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கூட்டணியாவது அல்லது கட்சியாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளை அமுல்படுத்த மாட்டோம் எனச் சொல்லவில்லை. மாறாக, அவற்றை தீவிரமாக அமுல்படுத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பை பெருக்கி நமது வாழ்க்கையை உண்னதமாக்கப் போவதாகத் தான் சவடால் அடிக்கின்றன. எனவே தான், தனியார்மய-தாராளமய- உலகமயக் கொள்கைகளால் ஏற்கெனவே உருவான கொடுமைகளும் சீரழிவுகளும் தீவிரமாகும் என்று அடித்துச்சொல்கிறோம்.

பகட்டாகிறது வாழ்க்கை! படுகுழியில் பண்பாடு!

தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால் பல்வேறு வசதிகள் வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன, முதலாளித்துவ ஊடகங்கள். செல்போனும், இன்டெர்நெட்டும், அடுக்கு மாடிக்கட்டிடங்களும் வசதிகளின் அடையாளமாம்! இந்த வசதிகள் வந்த அதே வழியில் தான் விவசாயிகள் தற்கொலையும், வேலை பறிப்பும், கிட்னி விற்பனையும் வந்திருக்கின்றன. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான பாலியன் வன்முறைகளும், கிரிமினல் குற்றங்களும், போதைப் பழக்கங்களும், பல்வேறு புதிய நோய்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இதுமட்டுமின்றி, மனித மாண்புகளையும், இயற்கையை நேசித்து பாதுகாக்கும் உயரிய பண்புகளையும் காவு கொடுத்து தான் இந்த ‘வசதிகளை’ பெற்றிருக்கிறோம்!

நீர், நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி தாய்ப்பாலையும் நஞ்சாக்கியிருப்பது இந்த உலகமயமாக்கல் கொள்கை தான். நிதிப்பற்றாக்குறையை குறைப்பது என்கிற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டியதும், தொழில் வளத்தை அதிகரிப்பது என்கிற பெயரில் 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளில் 31,11,000 கோடி ரூபாய்களை முதலாளிகளுக்கு சலுகையாக வாரி இறைத்ததும் உலகமயக் கொள்கை தான். 3.5 லட்சம் விவசாயிகளின் சாம்பலிலிருந்து தான் இந்த வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் ஒரு டம்மி! ஆணையங்கள் போடுது கும்மி!

இந்த ஆட்சி அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்.பி, எம்.எல்.ஏ) சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நிரந்தரமாக இருக்கும் அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதிபதிகள் ஆகியோரிடம் உள்ளது. இவர்கள் தான் நமக்கு எதிரிகளாகவும் நமக்கு மேலே நின்று அதிகாரம் செலுத்தும் – அடக்கி ஒடுக்கும் வன்முறைக் கருவிகளாகவும் உள்ளனர். இவர்கள் யாரும் எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பி.களுக்கும் அமைச்சர்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிரந்தரமாக இவர்களின் சர்வாதிகாரமே நடக்கிறது. டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் கூட, எவ்வித பிரச்சினையும் இன்றி ஆட்சி நடப்பதே இதற்கு எடுத்துக்காட்டு!

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் தலைமை அதைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கோடீஸ்வர-கிரிமினல்-சாதிவெறி-மதவெறி கும்பல் தான் பன்னாட்டு கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் கொள்ளைக்கு வசதியாக எல்லாகொள்கை முடிவுகளையும் எடுக்கின்றது. இதற்கேற்ப முதலாளிகளிடமிருந்து சன்மானங்களையும் காண்ட்ராக்ட்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

சட்டத்தை இயற்ற மட்டுமே அதிகாரத்தைக் கொண்டுள்ள பாராளுமன்ற அமைப்பை மேலும் டம்மியாக்கி வருகிறது மறுகாலனியாக்கக் கொள்கைகள். தனியார்மயத்தின் விளைவாக மிண்கட்டணம், பெட்ரோல் விலை, சாலைகள் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளை ஆட்சி செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டு ஆணையங்கள், தீர்ப்பாயங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பிரதிநிதிகள் தான் இந்த ஆணையங்கள், தீர்ப்பாயங்களை நடத்துபவர்கள். இந்த ஆணையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ கிடையாது. அவை எடுக்கும் முடிவுகளை எதிர்த்து உயர் நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ போவதற்கும் உரிமை இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுடன் அரசு போட்டுக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளும் உரிமை கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது.

பாராளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மேலே சூப்பர் அதிகார அமைப்புகளாகவே இந்த ஆணையங்களும் தீர்ப்பாயங்களும் செயல்படுகின்றன.

எல்லாக் கட்சி ஆட்சிகளிலும் இதுதான் நிலைமை. இதை தான் குஜராத் மாடல் என்று, மோடி ஏதோ தான் கண்டுபிடித்தது போல சொல்கிறார். மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி இறைப்பதில் மற்ற முதல்வர்களை விட முன்னணியில் இருக்கிறார் என்பதே மோடியின் ‘சாதனை’.

நீதித்துறையும் மறுகாலனியாக்கத்துக்கு பக்க மேளம் வாசித்து, நாட்டு வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவும், தொழிலாளர் நலங்களை காவுகொடுத்திடவும் தீர்ப்புகளை எழுதுகிறது. அதே நேரத்தில் பார்ப்பன பயங்கரவாதத்தின் முதுகை வருடிக் கொடுத்து வருகிறது. சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களுக்கு கட்டமொய்யாக எழுதியது முதல் அயோத்தி தீர்ப்பு வரை இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பார்ப்பன ஜெயாவுக்காக சட்டத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் நுழைந்து நீதியை வளைத்து வருகிறது உச்சநீதி மன்றம்.

மொத்தத்தில், இந்த பன்னாட்டு கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை நம் மீது செலுத்திக்கொண்டே, ஜனநாயகத்தின் பெயரால் எல்லா மக்கள் விரோதச் செயல்களையும் திட்டங்களையும் திணிக்கின்றனர். அதை எதிர்த்தால் தடியையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி நம்மை ஒடுக்குகின்றனர். ‘வாக்குரிமை’ ஒன்றை மட்டும் நம்மிடம் கொடுத்துவிட்டு ‘ஜனநாயகம்’ நம் கைகளில் இருப்பதாக மாய்மாலம் செய்கின்றனர்.

அதிகாரத்தை கையில் எடு! அநீதிகளுக்கு முடிவு கட்டு!

இனியும் இந்த மாய்மாலத்திற்கு மசியாமல் உண்மையான ஜனநாயகத்தை, மாற்று அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

  • பன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி-டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவோம்.
  • பகற்கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப் பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்.
  • கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும் தனியார்மயத்தை ஒழித்து பொதுவுடைமையாக்குவோம்.
  • வளர்ச்சி எனும் பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்.
  • தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நில முதலைகள், கல்வி, மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின் சொத்துரிமை, வாக்குரிமையை பறிப்போம்.
  • உழைப்போருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரத்தை படைப்போம்.
  •  அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.
  • சட்டம் இயற்றவும், அதை அமுல்படுத்தவும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்கே. தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே.
  • போராட்டங்கள், எழுச்சிகள் மூலம் அவற்றை உண்மையான மக்கள் ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளாக வளர்த்தெடுப்போம்.

ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆளும் வர்க்கங்களே, அவர்களின் சித்தாந்தவாதிகளே சொன்ன விழுமியங்கள், நடத்தை விதிகள், விதிமுறைகள், ஒழுக்கங்கள், தார்மீக நெறிகள் ஆகியவைகள் எல்லாம் இந்த கட்சிகள் அமைச்சர்களாலேயே தூக்கியெறியப்பட்டு, பித்தலாட்டங்களும், ஏமாற்றுகளும் கொண்டதாக மாறிவிட்டன. அவற்றை சரி செய்ய முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று அவர்களே புலம்புகின்றனர். அரசின் பிற அங்கங்களான போலீசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதித்துறையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை, விளையாட்டு, பண்பாடு, குடும்ப உறவுகள், மதம், மனித உறவுகள் அனைத்தும் இதே போல் சீரழிந்து, கேவலப்பட்டு, திவாலாகி, தோல்வியடைந்துவிட்டன என ஒப்பாரி வைக்கின்றனர். இவ்வாறு இந்தக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது என அவர்களே ஒப்புகொண்ட பின், இன்னும் தயக்கம் எதற்கு?

வாருங்கள், இதைத் தட்டித் தகர்த்தெறிவோம்! நமக்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்.

மே நாளில் சூளுரைப்போம்!

  • பன்னாட்டு கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

மே நாள் தமிழகமெங்கும் பேரணி ஆர்ப்பாட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு

கார்போரண்டம் யூனிவர்சல் – மே நாளில் புஜதொமு சாதனை !

1

ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் மற்றுமோர் திருப்புமுனை

கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைப்பு விழா!

கார்போரண்டம் யூனிவர்சல்
தொழிலாளர் உழைப்பால் உயிரூட்டப்பட்ட கார்போரண்டம் யூனிவர்சல்

——————————————————————

அன்பார்ந்த தோழர்களே!

சூர் சிப்காட் 1-ல் கார்போரண்டம் யூனிவர்சல் தொழிற்சாலை 1981-ல் தொடங்கப்பட்டது. இவ்வாலை தமிழகத்தின் முன்னணி குழும நிறுவனங்களின் ஒன்றாகவும் ஆண்டுக்கு 40,000 கோடியில் வர்த்தகம் செய்தும் வருகின்ற ஏறக்குறைய 30,000 தொழிலாளர்களைக் கொண்ட முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இவ்வாலையில் சாணைக்கற்கள் (இரும்புகளை கிரைண்-டிங் செய்யும் சாணைகற்கள்) உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆரம்பத்தில் சில 10 தொழிலாளர்களைக் கொண்டு மாதம் 30 இலட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்த இவ்வாலையில் தற்போது மாதம் 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 1998-ல் 200 நிரந்தரத் தொழிலாளர்கள் இவ்வாலையில் பணி புரிந்தனர். தற்போது இவ்வாலை 144 நிரந்தரத் தொழிலாளர்களையும் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களையும் 90 பயிற்சி தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது. இவர்கள் மட்டுமல்ல, சி.சி.எஸ்.டி. என்ற பெயரில் மாணவர்களையும் சட்டவிரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்தி வருகிறது.

முருகப்பா நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாத நடவடிக்கைகள்!

பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இவ்வாலையில் உற்பத்தி நிலைமை அடிப்படையில் 500-க்கும் அதிகமான நிரந்தரத் தொழிலாளர்களை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இன்று நிலைமையோ அவ்வாறில்லை. இது மட்டுமல்ல, ஆலைக்குள் தொழிலாளர்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ கேமரா முன்பாக நின்றுதான் டீ குடிக்க வேண்டும் என்று கூறி டீ குடிக்கும் நேரத்தைக் கூட குறைத்து தொழிலாளர்களைக் கைதிகள் போல் நடத்துவது போன்ற பலவேறு அடக்குமுறைகளை செலுத்தி நவீனக் கொத்தடிமைகளின் கூடாரமாக கார்போராண்டம் யூனிவர்சல் ஆலை நிலவுகிறது.

இவ்வாலையில் செய்யப்படும் சாணைக் கற்கள் உற்பத்தியானது உயர்ந்த ஒருவகை மணலும் ஒருவகை வேதியியல் பசையும் கலந்து உருவாக்கப்படுவது. இதில் மிகவும் ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்துகின்றன. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி துன்பப்படும் நிலையில், தொழிலாளர்கள் மீது பலவேறு சட்டவிரோத தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது.

ரவுடித்தனம், பண்ணையார்த்தனம், குரூர புத்தி – இவற்றின் மொத்த உருவம் கார்போரண்டம் ஆலை நிர்வாகம்!

கார்போரண்டம் யூனிவர்சல்
கார்போரண்டம் யூனிவர்சல்

இவ்வாலை தொடங்கப்பட்ட காலத்தில், சங்கம் கட்டி போராடுவதற்கு வாய்ப்பில்லாமல் தொடர்ந்து நிர்வாகத்தின் பேச்சை நம்பி உழைத்து வந்தோம். அப்போது 30, 40 ரூபாய்தான் ஊதிய உயர்வாக இவ்வாலை கொடுத்தது. இதனை எதிர்த்துக் கேட்க முடியாமல் வாய் மூடியிருந்த தொழிலாளர்களை அமைப்பாக்கி, 1982-ல் இவ்வாலையில் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அடக்குமுறையோ, சுரண்டலோ முடிவுக்கு வரவில்லை. இதனால், 1994-ல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தீவிரமான போராட்டங்களில் இறங்கினோம். நிர்வாகமோ நயவஞ்சமாக செயல்பட்டு 1996-ல் சங்கத்தை இரண்டாக உடைத்தது. இதன் மூலம் தொழிலாளர்கள் மீது கேள்விக்கிடமற்ற அடக்குமுறைகளை செலுத்தத் தொடங்கியது. இதன் பின்னர், புதிய நிரந்தரத் தொழிலாளர்கள் நியமனம் என்பதே இல்லை. இருக்கும் தொழிலாளர்களை வீதியில் வீசியெறியும் வேலைகளைத் தொடங்கியது.

இன்றுவரை இவ்வாலையில் ஊதிய உயர்வு கோரிக்கையானது உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்ட வரலாறில்லை. தற்போது கூட 18 மாதங்கள் 35 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. இறுதியில் நொந்து, நோகடித்து, மனம் வெதும்ப வைத்து, ஏதாவது ஒரு நெருக்கடிக்குத் தள்ளி, அற்ப தொகையைத்தான் ஊதிய உயர்வாகக் கொடுத்துள்ளது.

இது மட்டுமல்ல, சட்டவிரோத தனது நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்து தொழிலாளர்களையும் சங்கத்தையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது. தற்போதும் இந்த நிலை நீடிக்கிறது. குறிப்பாக, சட்டபூர்வமான தொழிற்தகராறு சட்டம் பிரிவு – 12 (3) கீழான ஒப்பந்ததை போடுவதில்லை. கட்டைப் பஞ்சாயத்து செய்துதான் ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது.

தொடரும் அடக்குமுறைகளும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான தாக்குதலும்!

நியாயம் கேட்கும் தன்மானமுள்ள தொழிலாளர்களை தொடர்ந்து பழி வாங்குவதே எங்களது ஆலை முக்கியமான நடவடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, 2008-ம் ஆண்டு ஆலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் சட்டபூர்வமாக மனுதாக்கல் செய்தோம். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறைப்படுத்தும் மற்றும் ஒழிப்புக் குழுவிடம் ஆலையை ஆய்வு செய்யும் படி ஆணையிட்டது. சில ஆண்டு களுக்குப் பின்னர் தற்போதுதான் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. அரசு மிகவும் மெத்தனமாகத்தான் செயல்பட் டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த மெத்தனமான நடவடிக்கையைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் சங்க நிர்வாகிகளை ஒழித்துக் கட்டும் வேலையில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக, உறுதியாகப் போராடி வருகின்ற நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் உட்பட நான்கு சங்க நிர்வாகிகள் பொய்யான காரணங்களைக் காட்டி இடைநீக்கம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோரை வடமாநிலங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்த சங்கத்தையே செயல்பட முடியாமல் தடுத்துள்ளது. சட்டபூர்வமாக சங்கம் வைக்கும் உரிமை இருந்தும், சங்கமாக செயல்படும் நமது முயற்சியைத் தடுத்துள்ளது. இதுமட்டுமல்ல, தொழிற்தகராறு நிலுவையில் இருக்கும் போது இடைநீக்கம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதம் என தெரிந்தும் இதனை செய்துள்ளது.

இதுதான் ஆலை நிர்வாகம் நடத்திவரும் 35 சுற்று பேச்சுவார்த்தையின் இலட்சணம்!

கார்போரண்டத்தின் கோரப் பசிக்கு இரண்டு தொழிலாளர்கள் பலி!

ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராடும் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளுக்கு அளவே இல்லை. குறிப்பாக, ஆலையில் ஆபத்து நிறைந்த பகுதியில் சுழற்சி முறையில் செய்து வந்த வேலையை மாற்றியமைத்து சங்கத்தில் உறுதியாக செயல்படும் தொழிலாளர்களை மட்டும் தொடர்ந்து அங்கு வேலைக்கு வைப்பது, ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவது என்ற நடவடிக்கையை இவ்வாலை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும் செய்கிறது. தொழிலாளர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளக் கூடாது என ஆலைக்குள்ளேயே 144 தடையுத்தரவு போட்டுவைத்துள்ளது. இதனை மீறும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களது தன்மான உணர்வை நசுக்கி வருகிறது. ஆலையின் மேற்கண்ட நடவடிக்கைகளால், தொழிலாளர்கள் பலரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இவ்வாலையில் இத்தாக்குதலுக்கு இரண்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

2011ம் ஆண்டு இவ்வாலையில் பணி புரிந்த தொழிலாளி இராஜேந்திரன் மீது அற்பக் காரணங்களைக் கூறி விளக்கம் கோரும் கடிதத்தைக் கொடுத்தது. இதற்கு முன்பு இதே போல அற்ப சொற்ப காரணங்களுக்காக விளக்கம் கோருவது எனத் தொடங்கிய ஆலை நிர்வாகம், ஏற்கனவே 22 தொழிலாளர்களை இடைநீக்கம், டிரான்ஸ்ஃபர், வேலைநீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் தனக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்த இராஜேந்திரன், மன உளைச்சலுக்கு ஆளாகி ஆலைக்குள்ளேயே மரணமடைந்தார். இவரது மரணம் ஆலைக்கு வெளியே நடந்ததுபோல போலி ஆவணங்களை தயாரித்து ஆலையில் நடக்கும் அடக்கு முறைகளை மூடி மறைத்தது. தொழிலாளி இராஜேந்திரனின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் இவ்வாலை அதிகாரிகளே.

2009-ம் ஆண்டு, ஊதிய உயர்வு உரிய காலத்தில் கிடைக்காமல் தொழிலாளி மூர்த்தியின் குடும்பத்தினர் வாடிய நிலையில், அவரை தொடர்ந்து கடினமான உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்ற வேலையில் ஈடுபடுத்தியதை அடுத்து, முகத்துக்கு நேரே புகைப்படம் எடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது ஆலை நிர்வாகம். இதனால், ஆலைக்குள்ளேயே மாரடைப்பு ஏற்பட்டு தொழிலாளி மூர்த்தி மரணமடைந்தார். இந்த மரணத்தையும் ஆலைக்கு வெளியே நடந்தது போல மாற்றி பிரச்சனையை மூடிமறைத்தது.

எங்களது தற்போதைய கோரிக்கைகள்!

நீண்டகாலமாக முடிக்கப்படாமல் இருக்கும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். எங்களது சங்க நிர்வாகிகள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் வாபஸ் பெற வேண்டும். நமது சங்கத்தினர் மீதும் தொழிலாளர்கள் மீது செலுத்திவரும் அற்பத்தனமான நடவடிக்கைகளை (கேமரா முன்னால் நின்று டீ குடிக்க வேண்டும் என்பது, தொழிலாளியைப் படம்பிடிப்பது, சுழற்சிமுறையை ரத்து செய்து நமது சங்க உறுப்பினர்களை மட்டும் வேலை வாங்குவது…) உடனடியாக ஆலை நிர்வாகம் நிறுத்த வேண்டும். தொழிலாளர்களைப் பிளவுப்படுத்தி குளிர்காயும் போக்கை ஆலை நிர்வாகம் கைவிட வேண்டும்.

உறுதியான போராட்டத்தின் அடுத்தக் கட்டம்… பு.ஜ.தொ.மு.வுடன் இணைப்பு!

இன்று பல ‘பெரிய’ தலைவர்கள் தலைமை தாங்கும் சங்கங்கள் கூட சட்டபூர்வமாக நடத்தாமல் கட்டைபஞ்சாயத்து முறையில்தான் சங்கம் நடத்தி வருகின்றனர். ஆலை நிர்வாகத்துடன் சமரசம், தொழிலாளர்களைக் காட்டிக் கொடுப்பது, ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு துணைபோவது என்ற நிலைமை இன்று நிலவுகிறது. ஒசூரிலும் இதைக் காண்கிறோம்.

நமது கார்போரண்டம் யூனிவர்சல் தொழிலாளர்களின் தொழிலாளர்கள் சங்கம் (டி.ஆர்.பி.119) என்பது இந்த 32 ஆண்டுகளாக ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடி வந்துள்ளது. தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்த்து சட்டபூர்வமாக நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இதனால், எங்களது சங்க நிர்வாகிகள் பலர் இடைநீக்கம், இடமாற்றம், வேலைநீக்கம் போன்ற அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நமது சங்கம் உறுதியாக செயல்பட்டு வருகிறது. சட்டமும் நீதியும் முதலாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த 32 ஆண்டுகால அனுபவமாக உணர்ந்துள்ளோம்.

ஆலைக்குள் நிர்வாகத்துடன் சட்டபூர்வமாக தாங்கள் நடத்திய போராட்டங்கள் எதுவும் ஆலை நிர்வாகத்தை அசைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது ஆலை நிர்வாகம் தொடுக்கும் அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளது. பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தார் என்பதற்காக எங்களது சங்க நிர்வாகி வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை வைத்து பாருங்கள். அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து தொழிலாளர் துறையில் வழக்கு, வாய்தா, ஆலை அதிகாரிகள் வர மறுப்பு, தொழிலாளர் துறை அதிகாரிகளும் ஆலை அதிகாரிகளும் கொஞ்சுவது, குலாவுது, தூ! தூ! மானங்கெட்ட பொழப்பு என்று மனம் வெதும்புகிறது. ஆகையால், இனியும் இந்த சட்டத்தை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற நிலையில்தான் வீதியில் இறங்கிப் போராட முடிவு செய்துள்ளோம்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உறுதியாக, இடையறாது, தன்னலம் கருதாது, வர்க்க உணர்வுடன், நாட்டுப்பற்றுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போராடி வருகிறது. ஒசூர் தொழிலாளர்களுக்காக பல முன்னுதாரணமிக்கப் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆகையால், எங்களையும் இணைத்துக் கொண்டு போராடுவதுதான் தீர்வு என்பதை உணர்ந்து பு.ஜ.தொ.மு.வில் எமது சங்கத்தை இணைத்துள்ளோம்.

எங்களைப் போல ஒசூரில் உள்ள பிற ஆலை தொழிலாளர் சங்கங்களும், தொழிலாளர்களும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கவும் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! பு.ஜ.தொ.மு. தலைமையில் நாங்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுங்கள்!

நிகழ்ச்சி நிரல்

நாள் : 01.05.2014, வியாழக் கிழமை,
நேரம் : காலை 11 மணி
இடம் : கார்போரண்டம் யுனிவர்சல் ஆலை வாயில் முன்பு.

தலைமை:
தோழர் மதிவாணன், தலைவர்,
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்

வரவேற்புரை:
தோழர் காளியண்ணன், செயலாளர்
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்

கொடியேற்றி சிறப்புரையாற்றுபவர்:
தோழர் பரசுராமன், மாவட்டத்தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

வாழ்த்துரை வழங்குபவர்கள்:
தோழர் சங்கர், மாவட்ட செயலாளர்,
பு.ஜ.தொ.மு

தோழர் செந்தில்குமார், தலைவர்,
பு.ஜ.தொ.மு கமாஸ்வெக்ட்ரா கிளைச் சங்கம்

தோழர் வேல்முருகன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு வெக் இந்தியா கிளைச் சங்கம்

தோழர் கோபால்,
ஹரிதா ரப்பர்

தோழர் இ.கோ.வெங்கடேசன்,
அசோக்லேலாண்டு

தோழர் சிவலிங்கம், இணைச் செயலாளர்,
கார்போரண்டம் ஐ.சி. எம்ப்ளாயிஸ் யூனியன்

நன்றியுரை :
தோழர் சுந்தரேசன் இணைச் செயலாளர்,
கா.யூ.தொ.தொ. சங்கம்.

இவண்
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (பதிவு எண்-110 DRP)
இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பதிவு எண்-24 KRI)
(கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்)