Thursday, July 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 668

ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை

3

சிய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து போராடியவர்களுக்கு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று  சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. 2012 மே மாதம், புதின் மீண்டும் ரசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நடந்த பேரணியில், போலீசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

போலோத்னயா குற்றம் சாட்டப்பட்டவர்கள்
போலோத்னயா குற்றம் சாட்டப்பட்டவர்கள்

2000-2008 வரை இருமுறை ரசிய அதிபராக இருந்த புதின் 2012-ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அதிபர் தேர்தலில் புதின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி நாடு முழுவதும் புதினுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. “புதின் இல்லாத ரசியா” என்ற முழக்க பதாகைகளை ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்ற போராட்டங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவிற்கு சவால் விடும் ஆயுத பலம் உள்ள ரசியாவை வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் அம்பலப்படுத்தும் விதமாக மேற்குலக பத்திரிகைகளும் அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தின. இதே மேற்குலகம்தான் ரசியாவில் புதினை தேர்ந்தெடுத்த முதலாளித்துவ ஜனநாயகத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் இருவரும் கூட்டாளிகள்தான். அதனாலேயே புதினின் ஒடுக்குமுறைகள் நியாயமாகி விடாது.

2011 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற (டூமா)  தேர்தலிலும் புதினின் ஐக்கிய ரசிய கட்சி முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதின் எதிர்ப்பு போராட்டம்
புதின் அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாளன்று, ”புதின் ஒரு திருடன்” என்ற முழக்கமிட்டபடிய இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி மாஸ்கோவில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு மே 6-ம் தேதி, அதாவது புதின் அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாளன்று, ”புதின் ஒரு திருடன்” என்ற முழக்கமிட்டபடிய இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி மாஸ்கோவில் நடத்தப்பட்டது. பேரணி போலோத்னயா சதுக்கத்தை நோக்கி முன்னேறிய நிலையில் போலீசார் தடுத்தனர். போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து இருதரப்புக்கும் கைலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 250 போராட்டக்காரர்கள் கைது செய்யப்படடனர்.

இதில் ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் அலெஸ்சி நவல்னி, முன்னாள் துணை பிரதமர் போரிஸ் நெஸ்டோவ் ஆகியோரும் அடக்கம். இதில் மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளாக பன்னிரெண்டு பேர் மீது வழக்கு நடத்தப்பட்டது. இவர்கள் மீது போலீசாரை தாக்கியதாகவும், கலவரத்தை தூண்டியதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ரசியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சமயத்தில் தன் மீதான மக்களின் எதிர்ப்பை குறைக்கும் வகையிலும், ‘அடக்குமுறை அரசு’ என்ற முத்திரையை தவிர்க்கவும் மேற்கண்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பொதுமன்னிப்பு அளித்தது ரஷ்ய அரசு.

போராட்டக்காரர்கள் கைது
தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், செர்ஜி கிரிவோவ், அலெசான்டிரா நவ்மோவா,  பார்பவோவ், போலிக்சோவிச்,  சேவியோல்வ், சிம்மின், லுட்க்ஸ்விச், பிலோவ்சோவ் ஆகிய எட்டு பேர் மீது விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு தண்டனை வழங்குவதை  சோச்சியில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 24-ம் தேதி வரை ஒத்தி வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

24-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  பிலோவ்சோவ் என்பவர் போலீசார் மீது ‘பேரழிவு’ ஆயுதமான எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்த ‘கொடுங்குற்ற’த்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

“நீதிமன்றம் சுதந்திரமாக இருந்திருந்தால் இந்த வழக்கே தூக்கி எறியப்பட்டிருக்கும் ஆனால் இங்கு அனைத்து அரசியல் வழக்குகளும் ரசிய அரசின் வழிகாட்டல்படியே தான் நடக்கின்றன. இந்த வ்ழக்கு புதினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதால் அவர் தான் இதன் தீர்ப்பை வழங்குவார்” என்று வழக்கு விசாரணைக்கு வரும் போதே போராட்டக்காரரகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 21வயது டென்னிஸ் லுட்ஸ்க்விச் என்பவரின் தாயார் ஸ்டெல்லா அன்டன் “இந்த வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை, மக்களை அச்சுறுத்தும் முயற்சி” என்று விமர்சித்துள்ளார். சட்டையில்லாமல் இரத்தக்கறையுடன் போராட்டக் களத்திலிருந்து இழுத்து செல்லப்பட்ட லுட்ஸ்க்விச் தான் போலீசை தாக்கவில்லை என்றும் அவர்கள் தான் தன்னை தாக்கியதாக் கூறி தன் மீதான் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ரஷ்யா - போராட்டங்கள்
ரஷ்யா முழுவதும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.

தற்போது உக்ரைனில் நிலவும் பிரச்சனை காரணமாக சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்ககூட இல்லை என்றும் போலீசுக்கு எதிரான வன்முறையை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கவே அரசு விரும்பும் என்றும் இந்த தீர்ப்பின் பின்னால் உள்ள அரசியலை அம்பலப்படுத்துகிறார் ஸ்டெல்லா அன்டன்.

“இந்த தீர்ப்பு அரசியல் ரீதியிலானது. கிரெம்ளின் மாளிகையின் உத்தரவை ஏற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்டோவ் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர். சர்வதேச மன்னிப்பு சபை இந்த தீர்ப்பு அநீதியானது என்று கண்டித்துள்ளதோடு வழக்கு விசாரணையை நாடகம் என்று வர்ணித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த போராட்டம் மட்டுமல்ல ரசியா முழுவதும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. 2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோக ரசியாவில் போராட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைப்பதை குதிரை கொம்பாக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதின் முகமூடி
புதின் முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்

இதையும் மீறி நடக்கும் அரசு எதிர்ப்பு போராட்டங்களும் போலீசை கொண்டு ஒடுக்கப்படுகின்றன. பெரிய அளவிலான போராட்டங்கள் என்றில்லை தனிநபர் போராட்டம் கூட அனுமதிக்கப்படுவதில்லை. 2012 நவம்பர் மாதம் ஒரு பல்கலைக்கழகத்திற்கு எதிரில் தனிநபர் போராட்டம் நடத்திய இருவரை அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி  காவல்துறை கைது செய்திருக்கிறது. போராட்டம்  மட்டுமல்லாமல் அரசை எதிர்க்கும் எந்த நிகழ்வும் அனுமதிக்கப்படுவதில்லை. புதினை கேலியாக் சித்தரிக்கும் படம் வைத்ததற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருங்காட்சியகத்திற்கு பத்துநாட்களுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் அந்த படங்களை போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

சோசலிசத்தின் சாதனைகளை ரசியாவின் சாதனைகளாக காட்டுவது, உக்ரைன் பிரச்சனையை தொடர்ந்து கீரிமீயா இணைப்பு, மேற்குலக்கு அடிபணியாமை என்று ரசிய தேசிய பெருமிதத்தை வளர்த்து அதன் போர்வையில் தனக்கு எதிரான போராட்டங்களை நசுக்கி வருகிறார் விளாடிமிர் புதின். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான  மோதல் போக்குகள் முதலில் காவு கேட்பது மக்களின் ஜனநாயக உரிமைகளைத்தான். தற்போது கீரிமியா இணைப்பு காரணமாக புதினின் செல்வாக்கு முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பதாக ஊடக கணிப்புகள் கூறுகின்றன. இதன்படி புதினின் எதிர்ப்பாளர்களுக்கு எந்த உரிமையும் நீதியும் இனி கிடைக்காது.

கம்யூனிச சோவியத்தை வீழ்த்திவிட்டோம் என்று மார்தட்டிய முதலாளித்துவம் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை கூட மக்களிடமிருந்து பறித்து வருகிறது. சோவியத் யூனியனில் அடக்குமுறை இருந்தது என்று புளுகிய மேற்குலகம், தான் கொண்டு வந்த ஜனநாயகத்தை தானே அம்பலப்படுத்தும்படி வரலாறு பழிவாங்கி விட்டது.

நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

2

1. விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து மத்திய பாதுகாப்பு படை நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்.
  • மத்திய படை மற்றும் தமிழக போலீசார் தொழிலாளிகள், பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நீதிவிசாரணை நடத்த வேண்டும்.

என்பதை வலியுறுத்தி 19-3-14 அன்று காலை 11-00 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • என்.எல்.சி ராஜா கொலை - போஸ்டர்தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க வைத்திருக்கும் மத்திய பாதுகாப்பு படையை நெய்வேலியிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். அதுவரை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது.
  • நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  • நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டி தானமாக தாக்குதல் நடத்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
  • தமிழக போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சு, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது, நள்ளிரவில் வீடு புகுந்து அப்பாவி மக்களை கைது செய்தது ஆகிய சம்பவங்களுக்கு நீதி விசாரணை நடத்த உத்திரவிட வேண்டும்.
  • மணல் லாரியில் அடிப்பட்டால் கூட நீதிமன்றம் 20 லட்சத்திற்கு மேல் இழப்பீடு வழங்குகிறது ஆனால் NLC நிர்வாகம் 5 லட்சம் வழங்கி இருப்பது அநீதியானது மத்திய பாதுகாப்பு படை கொடூரமாக சுட்டு கொன்ற சம்பவத்திற்கு 50 லட்சம் அபராதமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள் தொழிலாளிகள் தாக்கப்படுகிறார்கள் என்றால், பாதுகாப்பு படை, போலீஸ் அத்துமீறல் என்பதை எதிர்த்து போராடுவதை காட்டிலும் தொழிலாளிகளின் உரிமைக்காக முழுமையாக நிற்காமல், நிர்வாகத்தின் தரப்பினராகவும், தொழிலாளிகளின் பிரதிநிதியாகவும் இருக்கின்றன தொழிற்சங்கங்கள்.

இதை தொழிலாளர்கள் வர்க்கமாக உணர்ந்து தேர்தல் அரசியல் கட்சிகளை புறக்கணித்து சங்கமாக திரளவேண்டும் என வலியுறுத்தியதோடு காவல்துறை, மத்திய பாதுகாப்பு படையின் அத்துமீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பேசினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 9360061121

2. சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

nlc-raja-notice-front19.3.2014 அன்று மாலை 4.30 மணியளவில் , சென்னை, ஈ.வே.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள NLC அலுவலகமான ‘நெய்வேலி பவன்’ முன்பாக,

  • நெய்வேலி NLC-யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வெறியனால் தொழிலாளி ராஜா சுட்டுக் கொலை!
  • கண்டித்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி!

என்கிற தலைப்பில் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. – சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் அ.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

தொழிலாளி ராஜாவை வம்புக்கிழுத்து, தலையில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக்கொன்றது அரச பயங்கரவாதம் என விளக்கியும், அதைக் கண்டித்துக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும், தமிழகக் காவல்துறையினரும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கொடூரமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டித்தும் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

  • கொலைவெறியன் நூமென்-ஐ கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்யப் போராடுவோம்!
  • கொலையைக் கண்டித்த தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு அதிகாரியைக் கைது செய்யப் போராடுவோம்!
  • நாடெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கிவரும் CISF படையைக் கலைக்கப் போராடுவோம்!

என்று தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் போராட அறைகூவல் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைக் கைதுசெய்த போலீசு பின்னர் அவர்களை விடுவித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை.

3. ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை!
  • மத்திய பாதுகாப்புப்படையை சேர்ந்த கொலையாளி நோமென்னை கைது செய்து தூக்கிலிடு!
  • கொலைகார மத்திய பாதுகாப்புப்படையை உடனே திரும்பப்பெறு!

டந்த 17.03.2014 அன்று மதியம் 12.30 மணியளவில் நெய்வேலி அனல்மின் நிலைய இரண்டாவது சுரங்க நுழைவுவாயிலில் ராஜ்குமார் என்கின்ற ஒப்பந்த தொழிலாளியை நோமென் என்ற மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவன் துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டதில் மூளைசிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனைக் கேள்விபட்டு அங்கே நீதிக் கேட்டு திரண்டிருந்த தொழிலாளர்கள்மீது மத்திய பாதுகாப்புப்படையினரும், தமிழகப் போலீசும் சேர்ந்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியது.

இதனைக் கண்டித்து ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற புரட்சிகர தொழிலாளர் அமைப்பின் சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ராம்நகர் அண்ணாசிலை அருகே 20.03.2014 மாலை 5.00 மணியளவில் எழுச்சியோடு நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா லிட் கிளைச் சங்கத்தின் செயலாளர் தோழர் வேல்முருகன் முன்மொழிய மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத் தாங்கி உரையாற்றினார்.

அவரது உரையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்நிலையம் சென்றபோது காவல்நிலைய அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விமேல் கேள்வி கேட்டு அனுமதி மறுப்பதிலேயே குறியாக இருந்த அலட்சியப் போக்கை கண்டித்தும் தொழிலாளி இராஜ்குமார் மீது ஏவிவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதலை கண்டிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

அடுத்து இவ்வமைப்பின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.

தோழர் ரவிச்சந்திரன் தனது கண்டன உரையை தெலுங்கில் பேசினார் அவர் பேசுகையில் தொழிலாளி, “ராஜ்குமார் அதேநிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி. அவரது சகோதரன் பாலகுமார் என்பவரும் ஒப்பந்ததொழிலாளியாக பணியாற்றிவருகிறார். கடந்த 6- மாதத்திற்குமுன் இதே நிறுவனத்தில் பணிபுரிந்த தனது இன்னொரு சகோதரர் சுரேஸ்குமார் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கான இழப்பீடு தொகையை கேட்கதானே அவர் அங்கே சென்றுள்ளார். இதற்கு அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடச் செய்து தனது அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதால் அதனை பொறுக்காமல் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான் இந்த நேமென் என்ற அடியாள்! இதனைக்கேள்விப்பட்டு திரண்ட தொழிலாளர்கள்மீது தடியடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது தமிழக காவல்துறை. வெள்ளைக்கார காலனியாட்சியில்கூட கொஞ்சம் கூச்சம் இருந்துள்ளது. ஆனால் இங்கே மறுகாலனியாதிக்க காலத்தில் அதுகூட இன்றி நிர்வாணமாக உள்ளது. இது ஜனநாயக நாடு இல்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? மறுகாலனியாக்கத்தை வீழ்த்தி புதிய ஜனநாயக அரசமைப்பதில் வேகமாக செயல்படுவோம்” என்று அறைகூவி அழைத்துப் பேசினார்.

தோழர் பரசுராமன் தனது உரையில், “அடியாள் நோமெனின் துப்பாக்கிக்குண்டு பணக்காரனையோ அல்லது முதலாளியையோ நோக்கி பாயுமா? அங்கே துப்பாக்கி என்பது முதுகு சொறிவதற்கு மட்டுமே பயன்படுத்துவான்! ஏழைகள் அதிலும் தனது உழைப்பை விற்று உயிர் வாழும் தொழிலாளி என்றால் இவன்களுக்கு கிள்ளுக்கீரைகள்தான். நாம் கிள்ளுக்கீரைகள் இல்லை என்பதை நிரூபிக்க முதலாளித்துவ பயங்கரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களை கட்டியமைப்போம்” என்று அறைகூவல் விடுத்துப் பேசினார்.

பாதுகாப்பு என்ற பெயரில் அடியாள் வேலை செய்யும் நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், பாதுகாப்பு என்ற பெயரில் கொலைவெறியாட்டம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அங்குள்ள தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும்  தொடர்ந்துப்போராடவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

இறுதியாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தோழர்களும் தொழிலாளர்களும் திரளாக கலந்துக்கொண்டு எழுச்சிகரமாக தொழிலாளிவர்க்க உணர்வோடு விண்ணதிர முழக்கமிட்டனர். திரளான மக்கள் ஆதரித்துச் சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஒசூர்

4. திருச்சி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி NLC யில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (CISF) வெறியனால் தொழிலாளி ராஜ்குமார் சுட்டுக் கொலை!
  • கண்டித்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி!

என்ற தலைப்பின் கீழ் அம்பலப்படுத்தி

  • கொலைவெறியன் நோமனை கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய போராடுவோம்!
  • கொலையை கண்டித்து தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு அதிகாரியை கைது செய்யப் போராடுவோம்!
  • நாடெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கிவரும் CISF படையை கலைக்கப் போராடுவோம்!

என்ற கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 19.03.2014 மாலை 6.30 மணிக்கு திருவரம்பூர் நவல்பட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர்.ராமசாமி தலைமை வகித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர் மணலிதாஸ் கண்டன உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் சிறப்புரையாற்றினார். இவர் பேசுகையில், “தொழிலாளி ராஜ்குமாரின் படுகொலைக்கு காரணமான நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்ய வேண்டும், போராடிய மக்கள் மீது தடியடி நடத்த உத்திரவிட்ட போலீசு அதிகாரியை கைது செய்ய வேண்டும்” எனவும் “இப்படி குருவியைபோல சுட்டுக் கொள்ள நோமனுக்கு எப்படி தைரியம் வந்தது. அதிகாரவர்க்க திமிர்தான் இப்படிப்பட்ட திமிரும், ஆணவமும்தான் தொழிலாளியின் நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்து சுடுவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இதனை தடுக்க வேண்டாமா? தனியாக நின்றால் தடுக்க முடியுமா? முடியாது. ஏனெனில் முதலாளித்துவ லாபவெறி நாடுமுழுவதும் தலைவிரித்தாடுகின்றது. அதனால்தான் ஆங்காங்கே படுகொலைகள் நடக்கின்றது. இன்று நாடு முழுவதும் முதலாளிகளின் லாபவெறியால் பணிபாதுகாப்பு எதையும் செய்து கொடுக்காமல் தொழிலாளிகளை படுகொலை செய்யும் பயங்கரவாதத்தையும், படுகொலைக்கு காரணமான எந்த முதலாளியையும் தண்டிக்கப்படுவதில்லை, மாறாக பாதுகாக்கப் படுகின்றனர். பொதுச் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்து தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் அபாயத்தையும், விதவிதமான பெயர்களில் சுரண்டுபவரையும், இப்படி அன்றாடம் நடக்கும் ஆலைச்சாவுகளையும் நீர்வளம், கடல்வளம், மலைவளம் என அனைத்தும் தனியாரிடம் விற்க்கப்படுகிறது. இதற்காக மலைக்காடுகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்களின் வீடுகளை தீக்கிறையாக்கி அகதிகளாக அடைத்து வைப்பது அல்லது நாடோடிகளாக விரட்டிவிடுவதும் நடக்கிறது. இதனை எவரேனும் எதிர்த்தால் அவர்களை நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகின்றது, ஒடுக்குவதற்கு பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவத்தை ஏவிவிடுகின்றனர்.”

மதுரையில் கிரானைட் கொள்ளைக்காக பல மலைக்காடுகளும், பொது கண்மாய்களும், சமுதாயக் கூடங்களும், ஏரிகளும், குட்டைகளும் பொறம்போக்கு நிலங்களும் பட்டாபோட்டு எடுத்துக் கொடுக்கப்பட்டதையும், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர தாதுமணல்களை கொள்ளையடிக்க வைகுண்டராஜன் போன்ற மாஃபியாக்களின் கையில் வளங்களை ஒப்படைத்து கொள்ளையை பாதுகாப்பதையும் உணர்வுபூர்வமாக விளக்கி பேசினார்.

துவாக்குடி, திருவரம்பூர் பகுதிகளில் நடக்கும் ஆலைச்சாவுகளையும் அதற்கு காரணமான பணிபாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும் விளக்கி பேசினார். BHEL-ல் ஆரோக்கியசாமி, பெல்நகரில் உள்ள ஜோதி மாலியபுல்ஸ் கம்பெனியில் S.ஜெதீஸ்வரன், வாழவந்தான் கோட்டை S.குமார் என 3 பேர் கம்பெனியில் பணிபாதுகாப்பற்ற சூழலில் கடந்த 6 மாதங்களில் அதிகாரி மற்றும் முதலாளிகளால் வேலை செய்ய நிர்பந்தப்பட்டதால் வேலை செய்த இடத்திலேயே பலியாகினர்.

BHEL -ல் ஆரோக்கியசாமியின் படுகொலைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தும், பணியிட மாற்றம் செய்ததைக் கண்டும், அடுத்து யார் மீது நடவடிக்கை என பயப்பீதியை நிர்வாகம் கிளப்பிவிட்டபோது பயந்துபோய் V.பரமேஸ்வரன் என்ற தொழிலாளி பணியிடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து நான்கு நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் ஜவுளி மில்லில் வேலை பார்த்த தொழிலாளி சாயக்கழிவை அகற்ற சென்றபோது விசவாயு தாக்கி ஏழு பேர் படுகொலையானதுக்கும் முதலாளித்துவ லாபவெறிதான் காரணம் என்றார்.

இதனை முறியடிக்காமல் உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு இல்லை, இத்தகைய கொடூர கொலைகளை தடுக்க தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை எதிர்த்து போராட வேண்டும் . பெரும்பான்மை உழைக்கும் மக்களை பாதுகாக்க துப்பில்லாத இந்த அரசமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மாற்று அரசமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைய வேண்டும் என தனது உரையை முடித்தார்.

இடை இடையே பாடப்பட்ட ம.க.இ.கவின் மையக் கலைக்குழு தோழர்களின் பாடல் கூடிநின்ற மக்களுக்கு புரட்சிகர உணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர். சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கம்

நெய்வேலி NLC யில்
நண்பனை பார்க்க சென்ற
காண்ட்ராக்ட் தொழிலாளி ராஜ்குமாரை
CISF படைவெறியன்
குருவியப்போல சுட்டுக்கொன்றான்

கொலைகாரன் நோமனை
கொலைவழக்கில் கைது செய்ய

போராடிய தொழிலாளர்கள் மீது
போலீசின் தடியடி !

கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!
படுகொலையான தொழிலாளிக்கு
நியாயம் கேட்ட மக்கள் மீது
தடியடி நடத்த உத்தரவிட்ட
போலீசு அதிகாரியை
கைது செய்ய போராடுவோம்!

கொலைகாரன் நோமன் மீது
கொலை வழக்கு பதிவு செய்ய
கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!

தொடருது பார்! தொடருது பார்!
உழைக்கும் வர்க்கம் தொழிலாளர்கள் மீது
உழைப்பை உறிஞ்சும் முதலாளிகளின்
பயங்கரவாதம் தொடருதுபார்!
வேலைக்கு போன தொழிலாளர்கள்
வீடு திரும்ப உத்தரவாதமில்லை

ஈரோடு மாவட்டம்
பெருந்துறை சிப்க்காட்டிலே
ஜவுளி முதலாளி லாபத்தாலே
சாயக்கழிவை அகற்றச் சென்ற
ஏழு இளம் தொழிலாளர்களை
விசவாயு தாக்கியதாலே
படுகொலையான பயங்கரவாதம்!
முதலாளித்துவ பயங்கரவாதம்!

துவாக்குடி பெல் நகரில்
ஜோதிமாலியபுல்ஸ் கம்பெனியில்
மெயிண்டனன்ஸ் வேலைபார்த்த
இளம் தொழிலாளி ஜெகதீஸ்வரன்
எந்திரம் வந்து அடித்ததாலே
இறந்து போன கொடுமை பாரீர்!

வாளவந்தான் கோட்டையிலே
S.குமார் கம்பெனியில்
வேலை செய்த தொழிலாளி மீது
கிரேன் விழுந்து உடல்நசுங்கி
இறந்துபோன கொடுமை பாரீர்!

BHEL தொழிற்சாலையில்
பாதுகாப்பற்ற சூழலில்
வேலை செய்ய நிர்ப்பந்தம்
எலக்ட்ரானிக் பிரசிங் எந்திரத்தில்
வேலைபார்த்த தொழிலாளி மீது
வெட்ஜ் பீஸ் அடித்ததாலே
சிதறி செத்தார் ஆரோக்கியசாமி

பணி பாதுகாப்பற்ற சூழ்நிலையால்
அன்றாடம் ஆலைச்சாவுகள்
முதலாளி கொடுக்கும் நெருக்கடியாலே
நாளும் நடக்குது தற்கொலைகள்.

உயருது பார்! உயருது பார்!!
முதலாளித்துவ லாபவெறியால்
நவீன கால கொத்தடிமைகளின்
எண்ணிக்கை உயருது பார்!

காரணம் யாரு? காரணம் யாரு?
இத்தனைக்கும் காரணம் யாரு?
முதலாளித்துவ லாபவெறிதான்
இதற்கு பின்னே ஒழிஞ்சிருக்கு
தனியார்மயம் – தாராளமயம்
உலகமயம் என்ற பெயரில்
நடக்கும் இந்த படுகொலையை
தடுத்து நிறுத்துவோம்! தடுத்து நிறுத்துவோம்!

முறியடிப்போம் ! முறியடிப்போம்!
மனிதகுலத்துக்கும், விலங்குகளுக்கும்
இயற்கைக்கும் எதிரான
முதலாளித்துவ பயங்கரவாத்ததை
முறியடிப்போம் ! முறியடிப்போம்!

நாடெங்கும் உரிமைக்காகப்
போராடும் மக்களை
ஒடுக்கிவரும் CISF படைகளைக்
கலைக்கப்போராடுவோம்!

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (இணைப்பு)
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
திருச்சி.

தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

34

ரம்பம் முதல், போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி. தமிழக கிளைமாக்சில் வீரம் காட்டும் போலீசு போல அப்போதாவது சொரணையுடன் கொதிப்பார்கள் என்று பார்த்தால், ‘அம்மா, நீங்கப் போய் இப்படி செஞ்சுட்டீங்களே’ என்று பயபக்தியுடன் மன்றாடுகின்றனர் போலிகள்.

ஜெயாவும் போலி கம்யூனிஸ்டுகளும்
போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி.

இதுகுறித்து கருத்து சொன்ன சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன், “ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்” என்று சொன்னார். இந்தக் கருத்து குறித்துதான் நாம் இங்கே பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் இக்கருத்தை இதற்கு முன்னரும் பலரும் பல சந்தர்ப்பங்களில் கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தினமலர் பத்திரிகை, ‘சோவியத் யூனியன் ஆகிறதா தமிழ்நாடு?’ என்று ஒரு தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இலவசப் பொருட்களை நிறைய வழங்குவதாலும், அரசாங்கமே நிறைய தொழில்களை நடத்த ஆரம்பித்துவிட்டதாலும் தமிழ்நாட்டை சோவியத்துடன் ஒப்பிட்டு எழுதி ‘அபாயம் எச்சரிக்கை’என்றது தினமலர். அதன் இறுதியில், ‘இதற்கு எல்லாம் காரணம் ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்துவதுதான்’ என்று முடித்திருந்தனர். அதே போல அம்மா விசுவாசத்தில் முதல் இடத்தில் இருக்கும் தினமணியும் தனது தலையங்கங்களில் ஜெயா ஆட்சியில் செய்யப்படும் தவறுகளெல்லாம் யாரோ தவறாக வழிநடத்தியவை என்றே பயபக்தியுடன் குறிப்பிடும்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு கடைசி நேரத்தில் கடும் தொந்தரவு தந்தார் ஜெயலலிதா. விழாவை நிறுத்தப் பார்த்தார். பிரபாகரன் படங்கள் வைக்க தடை விதித்தார். விழா முடிந்த உடனேயே முற்றத்தின் சுற்றுச்சுவரை காவல்துறையை ஏவி தடாலடியாக இடித்துத் தள்ளினார்.

நியாயமாகப் பார்த்தால் தமிழ்த் தேசியவாதிகள் இதற்காக வெகுண்டு எழுந்து ஜெயலலிதா அரசை உண்டு, இல்லை என்று செய்திருக்க வேண்டும். ஆனால் மாவீரன் நெடுமாறனோ, “இந்த கொடுஞ்செயலை ஈழத் தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது” என்று ஆவி எழுப்புதல் கூட்டத்தில் பேசுவதைப் போல பேசினார். இடிப்பதற்கு துணை போன ஜேசிபி எந்திரங்களை ஆசை தீருமட்டும் கண்டித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சீமானோ, ‘இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்று ஒரே அடியாக போட்டார். நெடுமாறனும் பிறகு இதேக் கருத்தை கூறினார். அதாவது முற்றத்தை இடித்தது மத்திய உளவுத்துறையின் சதி வேலையாம். அந்த சதிக்கு ஜெயலலிதா இரையாகி விட்டாராம். மொத்தத்தில் முற்றம் இடிப்பில் ஜெயலலிதாவை, மத்திய உளவுத்துறை தவறாக வழிநடத்திவிட்டது என்கிறார்கள் இவர்கள்.

சோ-ஜெயா
‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’

இவர்கள் மட்டுமா… ‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’ என்று சசிகலா நடராஜனும், ‘மன்னார்குடி மாஃபியா கும்பல் அ.தி.மு.க.வை ஆக்கிரமித்து ஜெயலலிதாவை தவறாக வழிநடத்துகின்றனர்’ என்று சோ கும்பலும் சொல்லி வருகின்றனர். இந்த அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதே பாட்டைப் பாடுகின்றன.

ஒரு சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் கூட ஊடகங்கள் மீது சகட்டுமேனிக்கு அவதூறு வழக்காக போட்டுத் தாக்கினார். டி.வி.யில் செய்தி வாசித்த பெண் மீது எல்லாம் வழக்கு. ரிமோட்டை கையில் வைத்து அந்த டி.வி. செய்தியைப் பார்த்தற்காக பொதுமக்கள் மீது வழக்குப் போடாததுதான் பாக்கி. ஆனால் அதற்குக் கூட ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. ’முதல்வரை சில சக்திகள் தவறாக வழிநடத்துகிறார்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் ‘தப்பா வழிநடத்துறாங்க… தப்பா வழிநடத்துறாங்க’ என்று கூக்குரலிடுகிறார்களே… அவ்வளவு டம்மிபீஸா ஜெயலலிதா? மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையா? ஜெயலலிதாவுக்கு என்று சொந்தப் புத்தி இல்லையா? ஒரு அப்பாவிப் பெண்ணை, படித்த பெண்ணை அதிகார வர்க்கமும், கிச்சன் கேபினட்டும் வழி நடத்தித்தான் ஜெயாவின் பாசிச நடவடிக்கைகள் வெளிப்பட்டனவா?

நேற்றைக்கு அரசியலில் காலடி எடுத்து வைத்த கத்துக் குட்டிகள் கூட இதைக் கேட்டு சிரிப்பார்கள். ஒருமுறை முடிவு செய்துவிட்டால் யார் பேச்சையும் கேட்க மாட்டார் இந்த அம்மையார். இதனால்தான் ஜெயாவை ஆதரிக்கும் தீவிர பார்ப்பனியவாதிகளோடு கூட அவருக்கு சில நேரங்களில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. சு சாமி, குரு மூர்த்தி, தினமலர், சோ என்று ஜெயாவின் முழு அரசியல் வாழ்க்கையிலும் அதை பார்க்கலாம்.

ஜெயா - தான்தோன்றித்தனம்
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது.

யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது. அமைச்சர்களை தூக்கி கடாசுவது முதல், கூட்டணிக் கட்சிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுப்பது வரையும் எதிலும் மற்றவர்களின் கருத்தை கேட்கக் கூட மாட்டார். நிலைமை இப்படி இருக்க ஜெயலலிதாவை ஏதோ ஓ.பி.எஸ். ரேஞ்சுக்கு இறக்கி வைத்து, ‘கேட்பார் பேச்சுக் கேட்டு நடப்பதாக’ சொல்வது கேட்பதற்கே அயோக்கியத்தனமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஒரு திணிக்கப்பட்ட தலைவர். சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் திடீரென எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் இழுத்து வரப்பட்டவர். கட்சியின் அணிகளிடையே பணியாற்றி கிளைக்கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம், மாநிலக் கழகம் என கீழிருந்து மேலாக வந்தவர் அல்ல. நேராக மேலே திணிக்கப்பட்டவர். ஓட்டரசியல் அதிகாரத்தை சுவைப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கூட ஜெயலலிதாவுக்கு தெரியாது. கருணாநிதிக்கு இப்போது கூட தமிழ்நாட்டின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களின் பெயர் தெரியும்; அவர்கள் குறித்த வரலாறு தெரியும். ஆனால் ஜெயலலிதாவுக்கோ, தமிழ்நாட்டின் வட்டார நிலைமைகள், பகுதி வாரியான பிரச்னைகள் கூட தெரியாது. தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் பெயராவது தெரியுமா என்பது கூட சந்தேகமே.

இத்தகைய சூழலில்தான் ஜெயா தனது ஆட்சியை அதிகார வர்க்கம், பார்ப்பன சாணக்கியர்கள், உளவுத் துறை, கார்ப்பரேட் முதலாளிகள் முதலிய குழுக்களை வைத்து நடத்துகிறார். இதனால் இவர்கள் ஜெயாவை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று பொருளல்ல. இத்தகைய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கும் ஜெயாவின் நலனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு வேளை நடைமுறை சிக்கல்கள் என்ற அளவில் வேண்டுமானால் அவர்கள் ஆலோசனையை ஜெயா ஏற்கலாம்.

கட்சி அணிகளை வைத்து சமூகத்தோடு தொடர்பு கொள்ள முடியாத ஜெயா அதிகார வர்க்கத்தை வைத்து மட்டும் தொடர்பு கொள்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி பகிரங்கமாக நடக்கிறது. ஒரு வகையில் உலகின் எல்லா பாசிஸ்டுகளின் ஆட்சியும் இப்படித்தான் இருந்திருக்கிறது. துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்து கொண்டு குண்டுகளை வைத்திருக்கும் திமிரில்தான் பாசிஸ்டுகளின் வீரம் அடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா : இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்து சாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன?

அடிப்படையில் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டுதான் ஜெயா இன்றும் செயல்படுகிறார். அதற்கு நேற்றைய ஆடு கோழி பலி தடைச் சட்டம் முதல் இன்றைய சிதம்பரம் கோவிலை தீட்சிதருக்கு கொடுத்தது வரை சான்றுகள் இருக்கின்றன. கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன? தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வர் என்று ஜெயாவை இன்றும் இராம கோபாலன் போற்றுவதற்கும் என்ன காரணம்?

இது போக கருணாநிதி மற்றும் திமுக மேல் உள்ள தனிப்பட்ட பகையால்தான் அவர் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார். அண்ணா நூலகத்தை மாற்ற முனைந்தார். சமச்சீர் கல்வியை எதிர்த்த வழக்கை நள்ளிரவில் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். இதிலிருந்து தெரிவது என்ன? ஜெயாவைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட ஆசை விருப்புகள் மட்டுமே வழி நடத்துகின்றன. அவை ஆளும் வர்க்கத்தின் நலனோடு ஒத்திசைவதால் அதிகார வர்க்கம், பார்ப்பன ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜெயாவை ஆதரிக்கின்றன.

அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஆணைகள் பிறப்பிப்பது மட்டுமே. புகழ் வெளிச்சம், அதிகாரம், மேட்டுக்குடிப் பின்னணி எல்லாம் இணைந்து, துவக்கத்தில் இருந்தே கட்டளைகள் பிறப்பிக்கும் நபராக ஜெயலலிதா இருந்தார். யாருக்கும் கீழ்படிந்து அவருக்கு பழக்கம் இல்லை. தான் சொல்வதை ஏற்காதவர், காலில் விழுந்து வணங்காதோர், சுயமரியாதை உள்ளோர் அனைவரையும் கட்சியை விட்டு, பதவியை விட்டு தூக்கினார். தன் சொல்லை மறுப் பேச்சுக் கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். இவை அனைத்தும் ஒரு சர்வாதிகரிக்குரிய பண்புகள். ஆனால் இவற்றைதான் ஜெயலலிதாவின் தைரியம் என்று வர்ணிக்கிறார்கள், ஊடக மற்றும் அறிஞர் சொம்புகள்.

வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிறகு வாபஸ் வாங்குவது, வாரம் ஒருமுறை மாவட்டச் செயலாளரையும், மாதம் ஒரு முறை மந்திரியையும் மாற்றுவது, ஒரு துளி மையில் கையெழுத்திட்டு 8 லட்சம் அரசுப் பணியாளர்களை வேலையை விட்டுத்தூக்குவது… போன்றவை தைரியமான செயல்களாம். என்றால், இப்போது இடதுசாரிகளை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதையும் கூட நாம் தைரியப் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அரசியலில் இருப்போருக்கு அவர்கள் ஓட்டுக்கட்சியே ஆனாலும் குறைந்தபட்சமாவது மக்களிடம் பயம் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் பயம் இல்லாதவர்தான் ஜெயா. இல்லையேல் எட்டு இலட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காரியத்தை குலோப் ஜாமூன் சாப்பிடுவது போல செய்ய முடியுமா?

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி
இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்?

இருப்பினும் இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்? ஜெயலலிதா 91-96ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தபோது பேயாட்டம் போட்டாரே… அதை ஒரு எடுத்துக்காட்டாக சிலர் சொல்லக்கூடும். அதாவது அப்போது சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை சூழ்ந்துகொண்டு தவறாக வழிநடத்திவிட்டனர்’ என்று சோ, குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லவும் செய்தார்கள்; இப்போதும் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதற்கு காரணம், ‘இதுபோன்ற சூத்திரக் கூட்டத்தை கூட வைத்திருப்பதால்தான் கெட்டப்பெயர். நம்மவாளை உடன் வைத்துக்கொண்டால் எல்லா மொள்ளமாரித்தனத்தையும் நாசூக்காக செய்யலாம்’ என்பது அவர்களது அக்கறையின் பின் மறைந்திருக்கும் சேதி.

மேலும் விபத்தால் முதல்வரான ஜெயா அதற்கு வழியேற்படுத்திய அதிமுக கட்சியை சசிகலா கும்பலின் சாதிய செல்வாக்கை வைத்தே ஒரு அடியாட் படை போல உருவாக்க முடிந்தது. கட்சியை நடத்த ஊழல் பணமும், அரசியல் செல்வாக்கிற்கு இந்த அடியாட்படையும் அவருக்கு தேவையாக இருந்தன. இவையெல்லாம் சசிகலா அவரை தவறாக வழிநடத்தியதன் விளைவுதான் என்று சொல்வது அபாண்டம். அது உண்மையெனில் ஜெயா அரசியலுக்கே வந்திருக்க முடியாது. முதலமைச்சர் எனும் அதிகாரத்தை சுவைக்கும் வாய்ப்பை விரும்பும் நபர் அதை தக்கவைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது விதி. அதிலும் அதிமுக எனும் அடிமைகள் கட்சியை புரட்சித் தலைவரிடமிருந்து சீதனாமாகப் பெற்றவருக்கு அது கூடுதல் நிபந்தனையும் கூட.

இதை விடுத்துப் பார்த்தாலும் நிஜமாகவே அப்போது மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை ஆட்டுவித்தது என்று தீர்மானகரமாக சொல்ல முடியாது. ஏனெனில் எப்போதுமே ஒரு சர்வாதிகரிக்கு அருகில் இருப்பவர்கள், அவர்களது மனமறிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். ஜெயலலிதாவின் மனதில் என்ன இருக்கிறது என்று படித்து அதற்கு இசைவாகவே சுற்றியிருப்பவர்கள் கருத்துச் சொல்வார்கள். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒருபோதும் இவர்கள் ஒரு வார்த்தையும் பேச மாட்டார்கள். இது  சசிகலா கும்பலுக்கும் பொருந்தும், சோ கும்பலுக்கும் பொருந்தும். ஆகவே சுற்றியிருப்பவர்கள் தவறாக வழி நடத்தினார்கள் என்பதை எப்போதும் ஏற்க முடியாது. மேலும் இந்த வழிநடத்துதலும், ஜெயாவின் மனக் கிடக்கையும், ஆளும் வர்க்கத்தின் நலனும் எந்த வேறுபாடின்றியும் ஒன்று சேர்ந்திருந்தன. ஒரு வேளை இவற்றில் ஏதாவது சிறு முரண்பாடு வந்தால் இறுதி முடிவை ஜெயாதான் எடுப்பார்.

இப்படி இருக்க திரும்பத் திரும்ப ’ஜெயலலிதா தவறாக வழிநடத்தப்படுவதாக’ சொல்வதன் காரணம்தான் என்ன? ஏனெனில், ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுகின்றனர். இது ஜெயாவை ஆதரிப்போர், எதிர்ப்போர் இருவருக்கும் பொருந்தும். உண்மையைச் சொன்னால் உள்ளே போக வேண்டியிருக்கும் அல்லது அம்மாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அதனால் ஜெயலலிதா மூக்கிலேயே குத்தினாலும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு ’தவறாக வழிநடத்தியவரை’ தேடுகின்றனர். ’அப்படி ஒரு கேரக்டரே கிடையாது. என்னைத் தூண்டிவிட்டதும் நான் தான், மூக்கில் குத்தியதும் நான் தான்’ என்று பலமுறை அந்தம்மாவும் நிரூபித்துவிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளும், தமிழினவாதிகளும் மறுபடியும், மறுபடியும் அந்த அரூப பாத்திரத்தை நோக்கி அம்புவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஜெயா நல்லகண்ணு
‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததை மறந்துவிடக்கூடாது.

இந்த ஊடகங்களோ விஜயகாந்த் கிடைத்தால் மட்டும் நோண்டி நொங்கெடுக்கிறார்கள். அவர் அதிகம் படிக்காதவர். சுலபத்தில் டென்ஷன் ஆக்கலாம். என்ன கேட்டாலும் எதையோ ஒரு பதிலை அடித்துவிடுவார். ஜெயலலிதாவிடம் இப்படி கண்டதையும் கேட்டால் அவர் ‘அடித்து’விடுவார். அதனால் விஜயகாந்த்தை துரத்திப்பிடித்துக் கேட்பவர்கள்; கருணாநிதியிடம் எதையும் தயக்கமின்றி கேட்பவர்கள், மம்மியிடம் மட்டும் பம்முகிறார்கள். ஜெயலலிதாவின் பிரஸ்மீட்டில் மட்டும் பத்திரிகையாளர்களின் குரல்வளை வயிற்றுக்கும் கீழே போய்விடுகிறது. அவர்களின் மூளையே விமர்சனக் கேள்விகளை சுயதணிக்கை செய்துவிடுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது மட்டும்தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம். அவர் முதல்வராக இல்லாத நிலையிலும் கூட அவரிடம் எதிர்மறை கேள்விகளை கேட்டுவிட முடியாது. ஆக, ஜெயலலிதா தெளிவான, தீர்மானமான கருத்துக்களை கொண்டுள்ளார். அவர் பார்ப்பன பாசிசத்தை தனது சித்தாந்தமாக வரித்திருக்கிறார். அதை உடைத்துப் பேச வக்கற்றவர்கள் யாருக்கும் பிரச்சினை இன்றி காற்றில் கத்தி வீசுகின்றனர்.

இதில் வினோதம் என்னவெனில், சொந்த சரக்கு இல்லாத கிளிப்பிள்ளை என ஜெயலலிதாவை குறிப்பிடும் இவர்கள்தான் ‘அம்முதான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும்’ என்பதில் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள். ‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததையும், ‘தமிழ் பிரதமர்’ என்று குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குவதையும் மறந்துவிடக்கூடாது. எனில் இவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது.

ஜெயாவை யாரோ சிலர் தவறாக வழி நடத்துவது இருக்கட்டும். முதலில் ஜெயாவை விமரிசிக்க நினைத்தாலே உங்களுக்கு சிறுநீர் கழியும் உண்மையைச் சொல்வீர்களா?

–    வழுதி

பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !

0

“இன்னும் ஒண்ணா” என்று நொந்து கொள்ளாதீர்கள். ஆமாம், ஒரு நிதி மோசடி நிறுவனம் மக்களுக்கு நாமம் போட்டுக் கொண்டிருந்த செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் சகாரா, மேற்கு வங்கத்தில் சாரதா, அதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஈமு கோழிப் பண்ணை, பாசி பாரெஸ்ட் டிரேடிங், கொஞ்சம் இன்னும் தள்ளி யோசித்தால் 1990-களின் தேக்குமரப் பண்ணைகளை காட்டி மோசடி செய்த அனுபவ் பிளான்டேஷன்ஸ், சிட் பண்ட் நிறுவனங்கள் என்று மக்களை மொட்டை போடும் நிதி நிறுவனங்களின் வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது பேர்ல் (pearl) குழுமம்.

 நிர்மல் சிங் பாங்கூ
நிர்மல் சிங் பாங்கூ

நமது உளவுத் துறை ‘புலி’களுக்கு தெரியாமலும், ஒழுங்கு முறை ஆணையங்களின் ‘கழுகு’ப் பார்வையில் படாமலும், நீதிமன்றங்களின் ‘கவன’த்தை ஈர்க்காமலும், புலனாய்வு பத்திரிகையாளர்களின் பொறிகளில் சிக்காமலும் இது போன்று எத்தனை மோசடி நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கணக்கு யாரிடமும் இல்லை.

ரிலையன்ஸ், அல்லது சகாரா என்று பிரபலமான நிறுவனங்கள் தமது பெயரோடு பல சொற்களை ஒட்டியும் வெட்டியும் புதுப் புது கம்பெனிகளை படைப்பது இந்திய தரகு முதலாளிகளின் அடிப்படை வணிக நடைமுறை. அதாவது ஒன்றில் பெற்ற பெயரை வைத்து மற்றதில் நாமம் போடலாம். பிரபலமான பெயரைப் பார்க்கும் மக்கள் அந்த பெயர் அறிமுகம் இல்லாத தொழிலில் ஈடுபட்டிருப்பது குறித்து கவலைப்படுவதில்லை.

அந்த வகையில் பஞ்சாபைச் சேர்ந்த நிர்மல் சிங் பாங்கூ 1983-ல் பேர்ல்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார். 1996-ல் ஜெய்ப்பூரில் பதிவு செய்யப்பட்ட பேர்ல் கோல்டன் ஃபாரஸ்ட் – பி.ஜி.எஃப் என்ற நிறுவனத்தின் பெயரிலும் தொடர்ந்து பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் – பி.ஏ.சி.எல் என்ற பெயரிலும் மக்களிடமிருந்து பணம் திரட்டியிருக்கிறார்கள். இப்படி பேர்ல் என்ற பெயர் கொண்ட தாய் நிறுவனம் பல லெட்டர் பேடு கம்பெனிகளை காளான்கள் போல ஆரம்பித்தது.

இந்நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ 45,000 கோடி நிதி திரட்டியிருக்கிறது. வாடிக்கையாளர்களை கொண்டு வரும் முகவர்களுக்கு முதலீட்டுத் தொகையில் 12% வரை கமிஷன் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் அப்படி சிலருக்கும் கொடுக்கவும் செய்தது. இது மீனை பிடிக்கும் தூண்டில் புழு என்பது பல மோசடி நிறுவனங்களின் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அப்படி பணம் போடுபவர்கள், தாமும் இதே அடிப்படையில் புது வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்து 12% கமிஷன் சம்பாதிக்கலாம் என்று லட்சக்கணக்கானவர்களை செயின் திட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கிறது. இதைப் பார்த்து ஏமாந்து பல ஆயிரம் மக்கள் தமது சேமிப்பு பணத்தை போட்டார்கள்.

பேர்ல் குழுமம் தனது தொழில் ரியல் எஸ்டேட் என்று சொல்லிக் கொண்டது. ஆனால், வாடிக்கையாளர்களிடம், ‘நீங்கள் போட்ட பணம் 6 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி விடும்’ என்று வாக்குறுதி அளித்து வைப்புத் தொகை வாங்கியிருக்கிறார்கள். ‘பணத்தை போட்டவர்களின் பெயரில் நிலம் வாங்கி வைத்து, ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை விற்று 2 மடங்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதாக’ கூறியிருக்கின்றனர். மறுகாலனியாக்க கால கட்டத்தில் பொன் விளையும் பூமி போல ரியல் எஸ்டேட் தொழில் பூதாகரமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இது போதாதா, மக்கள் நம்புவதற்கு?

இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக நிறுவன விவகாரத் துறையில் பதிவு செய்திருக்கிறது பி.ஏ.சி.எல். மேலும் நிறுவனத்தின் இணைய தளத்தில் கைவசம் 15 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனுபவ் முதலீட்டாளர்கள்
அனுபவ் தேக்குப் பண்ணை திட்டத்தில் பணம் இழந்தவர்கள்.

நோய்டா, டெல்லி, ஜிர்காபூர், மொகாலி, பதிண்டா, மும்பை, பூனே, வடோதரா (குஜராத்), மதுரை போன்ற இடங்களில் வீடு கட்டி வருவதாகவும் வட இந்தியாவில் கோதுமை, நெல், பேபி கார்ன், காய்கறிகள் பயிர்கள் விளைவிப்பதாகவும், தென்னிந்தியாவில் மாம்பழம், மாதுளை, சப்போட்டா, நெல்லிக்காய், முந்திரி விளைவிப்பதாகவும் கூறுகிறது அதன் இணையதளம். இப்படித்தான் 90-களில் அனுபவ் நிறுவனம் மல்டி கலர் ஆர்ட் பேப்பரில் தேக்கு மர படங்களை வைத்து மாத சம்பள பார்த்தசாரதிகளுக்கு முப்பரிமாண நாமம் போட்டது. இணைய தளத்தை வைத்து உயர்நீதிமன்றத்திலேயே வேலை வாய்ப்பு என்று ஏமாற்றிய காலத்தில் பழம், காய், தோட்டங்களை ஃபோட்டோஷாப்பில் காட்டி ஏமாற்றுவது ஒன்றும் சிரமமில்லை.

‘தேக்கு மரம் வளர்த்தால் நல்ல மதிப்பு இருக்கிறது, 20 ஆண்டுகளில் இத்தனை சதுர அடி மரம் கிடைக்கும், அதன் விலை இத்தனை லட்சமாக இருக்கும்’ என்று கணக்கு போட்டு ஏமாந்ததைப் போல ‘நிலத்தின் சந்தை விலை எப்படியும் ஏறிக் கொண்டோ போவதால், ஐந்தரை ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகி விடும். அப்படியே ஏதாவது பிரச்சனை என்றாலும் கையில் நிலத்துக்கான ஆவணம் இருக்கிறது’ என்று மக்கள் ஏமாந்திருக்கின்றனர்.

ஆனால் பி.ஏ.சி.எல் வாங்குவதாகச் சொன்ன நிலத்தில் ஒரு சிறுபகுதி கூட கைவசம் இல்லை. விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களை மட்டுமே ஆங்காங்கே ஒரு சில ஏக்கர் வாங்கி போட்டிருக்கிறது. நிலம் வாங்கி வீடு கட்டுவதாக சொன்ன இடங்களில் ஒன்று மதுரை. அங்கு பேர்ல் சிட்டி என்ற பெயரில் பணம் கொடுத்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், இப்போது அந்நிலத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் மட்டும் கட்டியிருக்கிறார்கள். காம்பவுண்டு வாலை வைத்தே நடுத்தர வர்க்க வாலாக்களை வளைக்கலாம் என்றால், வாணம் விட்டே இந்தியா ஏன் வல்லரசு ஆக முடியாது?

பேர்ல் குழுமம் தனது நிதி திரட்டும் திட்டங்களை விதிமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று செபி நிறுவனம் 2002-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து முறையீடு செய்த பேர்ல் குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து செபியின் உத்தரவை தள்ளுபடி செய்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். அதை ஏற்றுக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்துக்கு  மேல்முறையீடு செய்து விட்டு வேறு வேலைகளில் மும்முரமாகி விட்டிருந்தது செபி. உச்சநீதிமன்றமும் ஊழல் குற்றவாளிகளுக்கும், செக்ஸ் சாமியார்களுக்கும் பிணை வழங்குவது போன்ற பல முக்கியமான வழக்குகளில் பிசியாகி விட பேர்ல் குழுமத்தின் மீதான வழக்கு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

மேற்கு வங்கம் ஏமாற்றப்பட்டவர்கள்
மேற்கு வங்கத்தில் சிட் பண்ட் மோசடியில் பணத்தை இழந்த மக்கள்.

மீண்டும் 2013-ல் செபி தாக்கல் செய்த நினைவூட்டலைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இப்போது பேர்ல் குழும நிறுவனங்களைப் பற்றி புலனாய்வு செய்யும்படி சி.பி.ஐ-க்கும் வருமான வரித் துறைக்கும் ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த தாமதம் பேர்ல் நிறுவனம் ஏற்பாடு செய்த பேரங்கள் காரணமாக மட்டும் இருந்திருக்க வேண்டும்.

இந்த உத்தரவின் படி பேர்ல் குழுமத்தின் டெல்லி, ஜெய்ப்பூர், சண்டிகர், மொகாலி, ரோபார் ஆகிய இடங்களில் உள்ள அலுவலங்களில் சி.பி.ஐ  ரெய்டு நடத்தியதாம். அப்போது கூட விவகாரம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லையாம். ஒரு சில மடிக்கணினிகளை திறந்து பார்த்த போதுதான் மோசடியின் முழுப் பரிமாணம் புரிய வந்ததாம். உத்தர பிரதேசத்தில் 1.3 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 51 லட்சம் பேரிடமும், மகாராஷ்டிராவில் 61 லட்சம் பேரிடமும், ராஜஸ்தானில் 45 லட்சம் பேரிடமும், ஹரியானாவில் 25 லட்சம் பேரிடமும் பேர்ல் குழுமம் பணம் திரட்டியதாக விபரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஏமாறுவதில் ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கும், தமிழ்நாடு, ஹரியானா போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கும் வேறுபாடு இல்லை. அந்த வகையில் மோசடிக்கும், ஏமாற்றப்படுதலுக்கும் இந்தியாவில் ஒரு சமத்துவம் இருக்கிறது. இதில் தமிழனின் தனித்துவம் ராஜஸ்தான் சேட்டோடு கரைந்திருப்பது குறித்து தமிழினவாதிகள் என்ன சொல்வார்களோ?

பங்குகள் கை மாறுவதன் மூலமாகவே தம் மதிப்பை ஏற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை மோசடி வர்த்தகத்தை போலவே ‘சும்மா கிடக்கும் நிலத்தின் மதிப்பு நான்கு பேர் கை மாறுவதன் மூலமாகவே ஏற்றி விடப்படும்’ என்ற ரியல் எஸ்டேட் சந்தையை பயன்படுத்தி கொண்டுதான் சத்யம் ராஜூ முதல் சகாரா சுப்ரதா ராய் மற்றும் பல நூற்றுக் கணக்கான பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் பெரிய அளவில் செய்பவர்கள் தரகு முதலாளிகளாகவும், சிறிய அளவில் செய்பவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களாகவும் இருக்கின்றனர்.

சி.பி.ஐ
புலனாய்வு புலி சி.பி.ஐ

இந்த நிதி மோசடி பேர்வழிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருட்டில் வீட்டை உடைத்து திருடும் பீரோ திருடர்கள் அல்ல. பட்டப் பகலில் அலுவலகம் திறந்து வைத்து, ஆண்டு தோறும் நிறுவன விவகாரங்கள் துறையில் அறிக்கை பதிவு செய்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்து 17 ஆண்டுகளாக தொழில் செய்து கொண்டிருந்தன பேர்ல் குழும நிறுவனங்கள். இக்குழும நிறுவனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 35 வங்கிகளில் 1,000 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.

ஆனால் இது எல்லாம் நடப்பது தெரிந்தும் நிதிச் சந்தையை ஒழுங்கு படுத்தும் ரிசர்வ் வங்கியும், பங்குச்சந்தை, முதலீட்டுச் சந்தைகளை ஒழுங்கு படுத்தும் செபியும், உளவுத் துறையின் பொருளாதாரப் பிரிவும், வருமான வரித்துறையும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அலட்சியமாகவே இருந்திருக்கின்றன. ஊழல்களில் ஒரிரண்டு மட்டுமே நமது பார்வைக்கு வரும் என்பதே இதன் நீதி! பார்வைக்கு வராமல் இருப்பதற்கு திரை மறைவு ஏற்பாடுகளும், சட்ட பூர்வ ஆதாயங்களும் காரணமாக இருக்கின்றன.

மேலும் இந்நிறுவனம் ஐ.எஸ்.ஓ 9001 என்ற சேவைக்கான தரச் சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ 14001 என்ற சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான சான்றிதழ் இரண்டையும் பெற்றிருக்கிறது. மக்களின் தாலியறுத்து கொள்ளை அடிப்பதையும் தரமாக  செய்கிறார்கள் என்று சான்றிதழ் கொடுப்பதுதான் இத்தகைய சான்றிதழ் நிறுவனங்களின் யோக்கியதை. அதன்படி இனி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறும் நிறுவனங்கள் மோசடியிலும் நம்பர் ஒன் தரத்தோடு இருக்கும் என்பதறிக.

போதாக் குறைக்கு, பேர்ல் குழும முதலாளி பாங்கூ ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டியை’ தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார். அது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.

ஷெரட்டன் மிராஜ்
இந்திய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து பாங்கூ வாங்கிப் போட்ட ஷெரட்டன் மிராஜ், கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா.

2012-ம் ஆண்டில் கேரளாவில் கொல்லம், ஆலப்புழை போன்ற இடங்களில் படகுப் போட்டி நடத்த பணம் கொடுத்திருக்கிறார் பாங்கூ. கேரளாவின் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் பி.ஏ.சி.எல்லின் செலவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் போட்டியில் நிறுவனத்தின் இயக்குனர்கள் கலந்து கொள்ளவில்லை. பணம் போட ஆள் பிடித்துக் கொடுக்கும் முகவர்கள் மட்டும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். 2013-ம் ஆண்டு கேரள மக்களிடம் திரட்டிய நிதியோடு காசரகோடு, திரிச்சூர், கண்ணனூர் அலுவலங்களை இழுத்து மூடிக் கொண்டது பி.ஏ.சி.எல். அதிகம் படித்த சேட்டன்களது மாநிலத்திலேயே ஸ்வாகா என்றால் பாமரர்களது மாநிலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

பஞ்சாப் மாநிலத்தில் துணை முதல்வர், முதல்வரின் மகன் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் நடந்த அகில உலக கபடிப் போட்டிகள் நடத்துவதற்கு ரூ 35 கோடி கொடுத்திருக்கிறார் பாங்கூ. அப்படி கொடுத்ததாக பி.ஏ.சி.எல் கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அதை வாங்கியதாக போட்டியை நடத்தியவர்களின் கணக்கில் காட்டப்படவில்லை. இடையில் யார் பையிலோ அது தங்கிப் போயிருக்கிறது. யார் என்று சுக்பீர் சிங்கையை, பாங்கூவையோ கருப்புத் துணியால் முகத்தை மூடி கைது செய்து லாக்-அப்பில் அடித்து உதைத்து சி.பி.ஐ விசாரிக்கப் போவதில்லை. தமது விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் மட்டும் இயக்குனர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறது சி.பி.ஐ. இந்த உலக கபடிப் போட்டியின் நிகழ்வுகளை ஆரவாரத்துடன் வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் இதன் புரவலரது யோக்கியதையை உச்சி மோந்தே வந்திருக்கின்றன.

பாங்கூ தன்னுடைய சமூக சேவையை இந்திய எல்லைக்குள் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் என்ற இடத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த ஷெரட்டன் மிராஜ் ரிசார்ட்ஸ் என்ற சுற்றுலா சொகுசு ஹோட்டலை சுமார் ரூ 300 கோடி கொடுத்து 2009-ல் வாங்கியிருக்கிறார். அதனால், ‘கோல்ட் கோஸ்ட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்க வந்த தேவதூதர்’ என்று அம்மாநில முதல்வர் உருகி கண்ணீர் வடித்திருக்கிறார். அந்த சொகுசு ஹோட்டலை புதுப்பிப்பதற்கு கூடுதலாக் ரூ 100 கோடி அள்ளிக் கொடுத்திருக்கிறார் பாங்கூ. பி.ஏ.சி.எல் குழுமத்தின் பெயரை பிரபலப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீயையும் பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார். ஒரு பிளேடு பக்கிரிக்கு பிரெட் லீ தூதர், ஆஸ்திரேலியாவில மாளிகை என்றால் பாவம் நம்மூர் பிக்பாக்கெட்டுகள்.

நாணயம் விகடன்வணிக மற்றும் முதலீட்டு பத்திரிகைகளும் இந்த மோசடியை வரும் கவரின் வெயிட்டில் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் இந்த பத்திரிகைகள் நேற்று வரை இத்தகைய திட்டங்களையே கவர்ச்சிகரமானது முதலீடு செய்யலாம் என்று அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். தற்போது தாம் போற்றிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் மோசடி நாளை வெளியானதும், முதலீட்டாளர்கள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று பம்மாத்து செய்வார்கள்.

பேர்ல் குழும அலுவலகங்களில் சி.பி.ஐ ரெய்டு பற்றி நாணயம் விகடன் பத்திரிகையின் ஷேர்லக் ஹோம்ஸ் (ஜூ.வி கழுகார் போல நா.வி-யின் ஷேர்லக்) மார்ச் 9 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தாராம். அதைத் தொடர்ந்து பல வாசகர்கள் தொலைபேசி கேட்கவே இது தொடர்பான தகவல்களை திரட்டி அடுத்த இதழில் அட்டைப் பட சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வாசகர்களில் ஒருவர் கூட இதற்கு முன்னர் நாணயம் விகடனிடம் ஆலோசனை கேட்கவில்லை என்பதும், நாணயம் விகடன் நிருபர்களின் கண்ணிலும் இது தொடர்பான விபரங்கள் சிக்கவில்லை என்பதும் ஆச்சரியத்துக்குரியவை. இவ்வளவுக்கும் ஈரோட்டைச் சுற்றிய கிராமங்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்நிறுவனத்தால் திரட்டப்பட்டிருப்பதாக கூறுகிறது நாணயம் விகடன்.

சமீபகாலமாக பேர்ல் குழும நிறுவனங்களில் பணம் போட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் கொடுப்பது தாமதமாகியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டும் பணம் தரப்படும் என்று காலையில் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்க வைத்திருக்கின்றனர். அதன்படி கொடுத்த காசோலைகளும் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.

நிதி மோசடி நிறுவனங்கள் இது போன்று நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் போது பழைய சினிமாக்களில் இறுதிக் காட்சியில் வந்து நிற்கும் போலீஸ் போல போலீசும், சி.பி.ஐயும் களத்தில் குதித்து மோசடி முதலாளிகளை கைது செய்து பத்திரமாக சிறையில் அடைத்து விடுகிறார்கள். இதன்படி முதலாளிகளது மோசடி பணம் பத்திரமாக இருக்கும். ஏமாந்த மக்களும் எதிர்த்துக் கேட்க முடியாத படி சிறை, வழக்கு எல்லாம் பேருக்கு நடக்கும். இறுதியில்? இன்றும் சென்னை தி.நகர் பூங்காவில் 90-களில் சிட் பண்டு கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்தோர் வாரந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம்தான் வந்தபாடில்லை.

இப்படித்தான் மக்களும் வேறு வழியின்றி ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு ஏமாந்த பிறகும் அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடுவது போல அடுத்தடுத்து இது போன்ற மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாற்றப்பட்டுகின்றனர்.

1990-களில் அனுபவ் குழுமம் செய்த மோசடி தொகை ரூ 400 கோடி. பேர்ல் குழுமத்தின் மோசடி தொகை ரூ 45,000 கோடி. 1990-களுக்குப் பிறகு நாடு முன்னேறியிருக்கிறதோ இல்லையோ, மோசடி நிறுவனங்களின் மோசடி மதிப்பு சில நூறு கோடிகளிலிருந்து சில பத்தாயிரம் கோடிகளாக வளர்ந்திருப்பது மட்டும் நிதர்சனம். இத்தனை ஆண்டுகளில் இந்தியா உருவாக்கியிருக்கும் சாதனைதான் இம்மாதிரியான மோசடிகள்.

இம்மோசடிகளை வைத்தே நீங்கள் பார்க்கும் கிரிக்கெட்டோ, கபடியோ, சமூக சேவையோ, சிஎஸ்ஆரோ நடக்கின்றன. ஒரு சிக்சரில், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்தது மறந்து போகிறது, என்ன செய்ய?

–    பண்பரசு

மேலும் படிக்க

தேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி – நேரடி ஆய்வு

0

குடிநீரில் சாக்கடை ! விஷக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி !
2 மாதமாகியும் உரியநடவடிக்கை இல்லை ! தொடரும் காய்ச்சல் !

குடிநீர் அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் கிராமங்கள் !
தேர்தலில் தீவிரம் காட்டும் ஓட்டுக்களவாணிகள்
ஒட்டுண்ணி அதிகார வர்க்கம் !

ந்திய ஆளும் வர்க்கங்கள் நம் மக்கள் மீது திணித்துவரும் உலக மயமாக்கக் கொள்கை கிராமப்புறங்களை அநாதைகளைப் போலாக்கி விட்டது. பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகளை, “விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் ! மாற்றுத் தொழில்களைத் தேடுங்கள்” என்று சொல்லிவிட்டார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து விவசாயமின்றி தரிசாகக் கிடக்கும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்து வருகிறார். கிராமப்புற ஏழை, நடுத்தர விவசாயிகள் கூலி வேலைகளைத் தேடி நகரங்களுக்கு அலைகிறார்கள். ஏதுமற்றவர்கள் நகரங்களின் சந்து பொந்துகள் தெருவோரங்களில் வாழ்வதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் கூட குடிநீர், சாக்கடை, சாலைப் போக்கு வரத்து, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றன. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட சூழலில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஏராளமான கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன. நீர்வளம் இருக்கும் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 1000 அடிக்கும் மேல் ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி நீரை உறிஞ்சி அந்த கிராமங்களுக்கே விற்கின்றன. காசுள்ளவர்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. மற்றவர்கள் வேறுவழியில்லாமல் பாதுகாப்பற்ற குடி நீரைக் குடித்து நோய்க்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுகிறது.

மதுரை – திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது சடையம்பட்டி கிராமம். மட்டப்பாறை ஊராட்சியைச் சேர்ந்த இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு. ஆனால் தற்போது இரண்டுமே சுருங்கிவிட்டது. 300 குடும்பங்கள், 1000 பேருக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக விஷக்காய்ச்சல் பரவி 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். இன்று வரை காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இது என்ன வகையான காய்ச்சல்? ஏன் வந்தது? எதனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்து கொள்வதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை கிளையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு சடையம்பட்டி ஊருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அங்கே முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினை சந்தித்துக் கேட்டபோது “குடிதண்ணீரில் சாக்கடை (Fecal Matters) கலந்து இருப்பதனால் தான் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். மேலும்,”இந்த ஊரில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. அதனுடைய கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை. அதுவும் தண்ணீரில் கலந்துள்ளதாகத் தெரிகிறது” என்று கூறியதோடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தண்ணீரை சோதனை செய்து பெறப்பட்ட சான்றிதழைக் காட்டினார்கள். அதில் “குடிப்பதற்கு உகந்த தண்ணீர். ஆனால் கழிவுகள் கலந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. (pH 7.73, Potassium K 30, Fecal Coliform 40 / 100 ml).

மருத்துவர்களிடம் மக்கள் கேட்ட கேள்வி : “ஏராளமான கால்நடைகள் இருந்த காலத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை இப்போது பாதியாக குறைந்துவிட்டபோது மட்டும் எப்படி வரும் ?”

இதற்கு மருத்துவக் குழுவினர் “பதில்சொல்ல முடியாது” என்றனர்.

“என்ன வகையான காய்ச்சல்” என்று கேட்டபோது

“இங்கே 7 வகையான காய்ச்சல் இருக்கிறது” என்று கூறினார் மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் அப்துல்பாரி. “டெங்கு, சிக்குன் குனியா, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) டைபாய்டு, மலேரியா மற்றும் இனம் தெரியாத வைரஸ் காய்ச்சல். பலரிடம் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் ஆய்வு முடிவு வரவில்லை” என்று சொன்னார்.

“என்ன மருந்து கொடுக்கிறீர்கள்?”

“ஆன்டி பயாட்டிக் மற்றும் பாராசிட்டமால் மருந்துகள் தான் கொடுக்கிறோம். காய்ச்சல் அதிகமானால் வாடிப்பட்டி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம்.”

“குடி தண்ணீரில் சாக்கடை கலந்துள்ளதே அதைத் தடுக்க என்ன செய்துள்ளனர்.”

“அது எங்களுடைய வேலை அல்ல. மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லி கழன்று கொண்டனர் மருத்துவர்கள்.

தண்ணீரில் ஏராளமான பிளீச்சிங் (குளோரின்) பவுடரைப் போட்டு எங்குபோனாலும் குளோரின் நாற்றம். பகல் நேரத்தில் கொசுவை விரட்ட புகை அடித்துக் கொண்டிருந்தார்கள். (தீவிர நடவடிக்கையாம் !)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

8.3.14 அன்று காய்ச்சலில் காட்டுராஜா என்ற 32 வயது இளைஞர் இறந்து விட்டார். அவரது உடலை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய அதிகாரிகள் போலீசு துணையுடன் எரித்து விட்டனர். அவருக்கு அளித்த சிகிச்சை பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கவில்லை. இறப்புச் சான்றிதழில் பழைய காசநோய் (old TB) என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்ததாகவும் முகாம் மருத்துவர்கள் கூறினர்.

காட்டுராஜாவின் வீட்டில் போய் விசாரித்த போது, “அவருக்கு எந்த நோயும் இல்லை, காய்ச்சல் தான் இருந்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே நர்ஸ் 2 ஊசி போட்டார். ஊசிபோட்ட கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் பொக்களம் பொக்களாமக ஏற்பட்டது. அவருக்கு அம்மை நோய் வந்து இருப்பதாகக் கூறி வீட்டுக்கு டாக்டர் அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்தபின் மீண்டும் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவன் இறந்து விட்டான்” என்று அவரது அண்ணன் அலெக்சாண்டர் தெரிவித்தார். காட்டுராஜாவுக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாகவம் உள்ளார். இனி அவர்களுக்கு யார் துணை?

காட்டுராஜா
காட்டுராஜா

பென்சிலின் மருந்து முதலில் சிறிதளவு செலுத்தி சோதித்துப் பார்த்து, உடல் ஏற்றுக் கொண்டால்தான் முழுவதும் செலுத்த வேண்டும் என்பது ஆங்கில மருத்துவத்தில் அரிச்சுவடி. அவ்வாறு செய்யாமல் “இரண்டு ஊசி” போட்டதால் அவர் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கிறார். இந்த உண்மையை மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட மக்கள் விரோதக் கூட்டம் ஒரே குரலில் மூடி மறைக்கிறது. ஏழை என்றால் கிள்ளு கீரை அவர்களுக்கு.

திங்கள் கிழமை 10.3.14 அன்று சடையம்பட்டி கிராமமக்கள் 150 பேர் ஆண் பெண் குழந்தைகள் உட்பட 50 கி.மீ. கொதிக்கும் வெயிலில் சரக்கு லாரியில் போய் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தை சந்தித்த போது அவர் எடுத்த எடுப்பிலேயே, “100 பேர் கூட சாகுங்க. எனக்கென்ன? என்ன வருதுன்னு அப்புறம் பாப்போம்” என்று திமிராகப் பேசி மிரட்டி விட்டு அப்புறம் அ.தி.முக. கொ.ப.செ மாதிரி “அம்மா அத்தனை கோடி கொடுத்துச்சு ; இத்தனை கோடி கொடுத்துச்சு ; என்ன கேக்குறோமோ அதெல்லாம் கொடுக்குது” என்று சொல்லி, அம்மா புராணம் பாடினார்.

“சடையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஒரு பெண். அவர்தான் இவற்றுக்கெல்லாம் காரணம். நீண்ட காலமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது என்று நாங்கள் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவர் மீது கொடுத்த புகாரை அரசு அதிகாரிகள் குப்பையில் போட்டு விட்டனர்” என்று மக்கள் சொன்னபோது,

“ஊராட்சி தலைவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதற்கெல்லாம் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது” என்று சொன்னார் அந்த அம்மா விசுவாசி ஆட்சித் தலைவர்.

கைபேசியில் யாரிடமோ சொல்லும் போது காட்டுராஜா எலிக்காய்சலில் இறந்து விட்டதாக சொன்னார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் பற்றி சொல்லும் போது அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசினார் அந்த அண்ணா திமுக கலெக்டர். அமைச்சர்களை டம்மியாக்கிவிட்டு அதிகாரவர்க்கத்தை இப்படிதான் ஊட்டி வளர்க்கிறார் அம்மா.

பாண்டியம்மாள்
பாண்டியம்மாள்

அதற்குப் பிறகு 14.3.14 அன்று 60 வயதான பாண்டியம்மாள் என்பவர் இந்தக் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை பிணக் கூற்றாய்வு செய்து சாவுக்கு என்ன காரணம் என்பதை சொன்னால் தான் உடலை வாங்குவோம் என்று போராட்டம் நடத்தினோம். இறந்தவர்களுக்கு தலா ரூ 5 லட்சம் இழப்பீடு, தரமான சிகிச்சை, தரமான குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், உடனடியாக காய்சலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கெல்லாம் போஸ்ட் மார்ட்டம் முடித்து விட்டு, உடலை வாங்கச் சொல்லி நெருக்குதல் கொடுத்தது அதிகார வர்க்கம். மக்கள் விடாப்பிடியாகப் போராடியதால் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர் ஆகியோர் வந்தனர்.

“மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி கோட்டாட்சியர் போன்ற பொறுப்பானவர் வந்து பதில் சொல்ல வேண்டும்” என்று போராடினோம்.

“எல்லோரும் தேர்தல் பணியில் உள்ளனர். உடனடியாக வரமுடியாது” என்றார் டி.எஸ்.பி. கருப்பையா.

“மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 1½ மதத்துக்குப்பின் வரும் தேர்தலுக்கு இப்போதே என்ன அவசரம்” என்று கேட்டபின் வருவாய் கோட்டாட்சியர், இறந்த பாண்டியம்மாளின் மகன் ஜெயபாண்டியிடம் செல்போனில் பேசினார். இழப்பீடு உள்பட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறேன் என்று சொன்னதோடு அதிகாரிகளையும் உடன் அனுப்பி பணிகளைத் துரிதப் படுத்துவதாகச் சொன்னார். அதன் பின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு சடையம்பட்டியில் எரியூட்டப்பட்டது. அதிகாரவர்க்கம் மக்களுக்கு பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்தை சந்திக்கும் போதெல்லாம் கூடியவரை பொய்யான நம்பிக்கைகளை நைச்சியமாக ஏற்படுத்தி போராடுகிறவர்களில் பலவீனமானவர்களைக் குறிவைத்து தனிமைப்படுத்தி அப்போதைக்கு காரியத்தை சாதித்துக் கொள்கிறது. அதற்கு இந்த சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு.

இன்னமும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பெண்கள் பெரியவர் என்று 60க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். எந்த நிமிடம் யாருக்கு என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஊர்மக்களின் பெரும்பான்மை ஒன்றிணைந்து போராடியும் பெரியவிளைவுகள் ஏற்படவில்லை. பஞ்சாயத்து தலைவி அதே ஊரில் தான் இருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனையில் யாரையும் வந்து பார்க்கவில்லை. இறந்தவர்களின் வீடுகளில் துக்கமும் விசாரிக்கவில்லை. பகலில் ஊரைவிட்டு வெளியேறுகிறவர் இரவில் ரகசியமாக வருகிறார்.

சடையம்பட்டி ஊரில் காங்கிரஸ்காரர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊர் பெரியவர்கள், முன்பு அமைச்சர் கக்கனுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். தற்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஊராட்சி தலைவர் சாந்தா வெற்றி பெற்று பதவியிலுள்ளார். அவர் தான் இத்தனைக்கும் காரணம். அவரைக்கைது செய்யவேண்டும் என்று காவல் துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர் அதிமுக மந்திரி நத்தம் விஸ்வநாதனை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து விட்டதாக (காட்டுராஜா இறந்த அன்று) மக்கள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை தனித்தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் வேட்பாளர் ராமசாமி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஓட்டுப் போட்டுவிட்டு இன்று செத்துப்பிழைத்துக் கொண்டிருக்கும் தன் மக்களை அவர் இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட எந்த ஓட்டுக்களவாணியும் வரவில்லை. இப்படிபட்டவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இளைஞர்கள் தயாராகின்றனர்.

18 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் வேகமதி என்ற மருந்து கம்பெனி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதித்தது. மக்கள் கடுமையாகப் போராடி அந்த கம்பேனியை விரட்டியடித்தனர். ஊருக்கு அருகாமையிலேயே வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. அதிலிருந்து தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் தரும்படி வெகுகாலமாக மக்கள் கேட்டு வருகின்றனர். அல்லது வைகையாற்றுப் படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கும்படியும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது. மக்கள் சாக்கடை நீரை குடிப்பது பற்றி எந்தக் கோமானுக்கும் கவலையில்லை.

பாண்டியம்மாள் உடல் எரியூட்டப்பட்டபோது மயானத்தில் இரங்கல் கூட்டம் நடத்தி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மஉபா மைய மதுரை மாவட்ட செயலாளர் இரங்கல் உரையாற்றிய போது, “கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஒரே வழி மக்கள் ஓட்டுக்கட்சிகளை நம்பாமல் மக்களுக்காகப் போராடும் இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும். போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார். இளைஞர்கள் பலர் மஉபா மையத்தோடு இணைந்து போராட முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக, இழப்பீடு, முறையான சிகிச்சை, அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் மாற்று குடிநீர் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட்மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் கிராமத்தில் ஆய்வு செய்து காய்ச்சல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளது.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை

மேலும் படிக்க

பகத்சிங் நினைவு நாளில் புஜதொமு பொதுக்கூட்டம்

1

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு நாளில் பொதுக்கூட்டம்

ndlf-meetநாள் : 23.3.2014
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : அம்பத்தூர் O.T பேருந்து நிலையம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை
தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு – தமிழ்நாடு

வரவேற்புரை
தோழர் மு. முகிலன், செயலாளர், பு.ஜ.தொ.மு – ஆவடி அம்பத்தூர் பகுதிக்குழு

உரையாற்றுவோர்

  • தோழர் சுப. தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு – தமிழ்நாடு
  • தோழர் சு. பரசுராமன், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு – கிருஷ்ணகிரி
  • தோழர் விளவை. இராமசாமி, மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – கோவை
  • தோழர் இரா. லோகநாதன், பு.ஜ.தொ.மு. – புதுச்சேரி
  • தோழர் நாகராஜன், மாவட்ட அமைப்பாளர், பு.ஜ.தொ.மு – சிவகங்கை
  • தோழர் சொ. செல்வகுமார், மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – திருவள்ளூர்
  • தோழர் ஆ.கா. சிவா, மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – காஞ்சிபுரம்

நன்றியுரை
தோழர் ம. சரவணன்,
தலைவர் பு.ஜ.தொ.மு – ஆவடி – அம்பத்தூர் பகுதிக்குழு

ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

______________________________

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

தங்களது மூலதனப் பெருக்கத்துக்காக இலாபவெறியோடு தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள், இயற்கைச் செல்வங்களையும் சூறையாடுகின்றனர். இதனால் இயற்கையின் பேரழிவுக்கும், மனித குலத்தின் நாசத்துக்கும் முதலாளி வர்க்கம் காரணமாக இருக்கிறது.

எத்தனை கோடி மனிதர்களது பிணத்தின் மீது முதலாளித்துவம் கட்டப்பட்டதோ, அதைவிட பன்மடங்கு மரங்களையும், ஏனைய உயிர்களையும் அழித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு இல்லை என்றால் முதலாளித்துவத்தின் ஏற்றம் இல்லை. அதேபோல் இயற்கைச் செல்வங்களின் அழிவில்தான் முதலாளி வர்க்கத்தின் செல்வச் செழிப்பு கொட்டிக் கிடக்கிறது.

இரும்பைத் தேட மலைகளைக் குடைந்த முதலாளித்துவம், மலைகளைக் குடையவும், இரும்பை உருக்கவும் தொழிலாளி வர்க்கத்தை கடைந்து பிழிந்தது. நிலக்கரியைத் தோண்ட மண்ணைப் பிளந்த முதலாளி வர்க்கம் கரியோடு கரியாக தொழிலாளி வர்க்கத்தை எரித்துதான் போக்குவரத்தையும், மின்சாரத்தையும் உருவாக்கிக் கொண்டது. பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிய முதலாளித்துவம் அதனது அடித்தளத்தில் தொழிலாளி வர்க்கத்தையும், அது பிளந்த மலைகளையும்தான் தூண்களாக நிறுத்திக் கொண்டுள்ளது. ஆலைகளுக்காக காடுகளையும், பலகோடி மரங்களையும் காவு கொடுத்த முதலாளி வர்க்கம், மழை வளத்தையும் பலியிட்டு விட்டது. இவர்களது பேராசையால் அள்ள அள்ளக் குறையாத மீன்வளம் வறண்டு போனதுடன், கடல் தாயும் சுனாமியாய் சீற்றம் கொண்டாள்.

தொழில்மயமாக்கம் என்கிற பெயரில் முதலாளி வர்க்கம் ஏற்படுத்திய பேரழிவுகள் இன்னும் பல தலைமுறைக்கு பிடித்தாட்டப் போகிறது. பொருளாதாரச் சுரண்டலை விட பலமடங்கு கொடூரமான விளைவுகளை சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் ஏற்படுத்தி வருகின்றன. உணவுப் பஞ்சம், குடிநீர்ப் பஞ்சம், பட்டினிச் சாவுகள், அடுத்தடுத்து வறட்சி – பெருமழை, கொள்ளை நோய்கள், கிரிமினல் குற்றங்கள், சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் முதலாளித்துவமே காரணம்.

நவீன விவசாயம் என்கிற பெயரில் இரசாயன உரங்களைக் கொட்டி மண்ணை நஞ்சாக்கியது, முதலாளி வர்க்கம். பின்னர், பணப்பயிர் உற்பத்தியைத் திணித்து விவசாயியை போண்டியாக்கி விவசாயத்தை விட்டே விரட்டி வருகிறது. தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் என்றெல்லாம் கதைவிட்டு விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கியது. ஒரு வருடம் பெருவெள்ளமும், அடுத்த வருடம் பருவமழை பொய்த்ததால் வறட்சியும் வந்து எஞ்சிய விவசாயிகளை படுகுழிக்குத் தள்ளிவிட்டது. உணவு உற்பத்தியை நாசப்படுத்திய முதலாளித்துவம், இயற்கைக்கு மாறான உணவுப் பழக்கத்தையும், டப்பா உணவையும் திணித்து மனிதகுலத்தை நோயாளியாக்கி விட்டது. தங்களது நாட்டு விவசாய நிலங்களை நாசமாக்கிவிட்டு ஆப்பிரிக்க நாட்டில் நிலங்களை வாங்கிக் குவித்து விவசாயம் செய்கின்றன, பன்னாட்டு வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்களும், சவூதி அரேபியா, சீனா போன்ற நாடுகளும். கார், டிவி போல உணவுப் பொருளும் உலகம் சுற்றத் தொடங்கி விட்டது.

ஆலைகள் கக்குகின்ற புகைகள், பிரம்மாண்ட ஏ.சி எந்திரங்கள் துப்புகின்ற நச்சுவாயுக்கள், இடைவிடாது ஓடும் வாகனங்கள் உமிழ்கின்ற கரிப்புகை இவையனைத்தும் முழு வான்மண்டலத்தையே விசமாக்கி விட்டது. சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கியதுடன் இந்த பூமியைக் காத்து வந்த ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கி விட்டது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்துள்ளது. சுனாமிகளைக் கொண்டுவந்த புண்ணியவான்கள் முதலாளிகளே! கடந்த சூன் மாதத்தில் இமயத்தில் பெருமழை பெய்து, ‘இமயத்து சுனாமி’யை ஏற்படுத்தி, பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டதற்கும் முதலாளிகளே காரணம்.

ரகரகமான புற்றுநோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் பிரச்சனைகள், விதவிதமான தோல் நோய்கள், பன்றி – பறவை காய்ச்சல்கள், சுவாச நோய்கள் ஆகிய அனைத்தும் சுற்றுச் சூழல் நாசமானதால் வந்தவைதான். இதன் காரணகர்த்தாக்களே முதலாளிகள்தான். இந்த பேரழிவுகளை பணமாக்குவர்களும் முதலாளிகள்தான். இது மட்டுமின்றி, இதன் தொடர்ச்சியாய் நடக்கின்ற விலைவாசி உயர்விலும் லாபம் குவிப்பவர்கள் முதலாளிகள்தான். உழைக்கும் மக்களோ தனியாரிடம் மருத்துவம் பார்த்தே கடனாளியாகி செத்து மடிகின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 11 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ செலவுக்காக 4 கோடி பேர் கடனாளியாகின்றனர். இந்த கடனிலும் லாபம் பார்ப்பது, முதலாளிகள்தான்.

திடீர் திடீரென வனவிலங்குகள் மனிதக் குடியிருப்பில் புகுந்து மனிதர்களை கொல்லுகின்றன. விளைபயிர்களை நாசமாக்குகின்றன. இதற்கு என்ன காரணம்? நாம் சிறுவயதில் பார்த்து ரசித்த சிட்டுக் குருவியும், மைனாவும் ஏனைய பல நூறு சிற்றுயிரினங்களும் காணாமல் போய்விட்டனவே! இதற்கு யார் காரணம்? காடு அழிப்பினால் வனவிலங்குகள், மனிதர்களது எதிரியானதற்கும், பல சிற்றினங்கள் அழிந்து போனதற்கும் முதலாளித்துவம்தான் காரணம்.

இந்த பேரழிவு கும்பலோ தங்களது திறமையால்தான் லாபம் கொட்டுவதாக பித்தலாட்டம் செய்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை அற்ப கூலி கொடுத்தும், வேலை நிரந்தரம் மறுத்தும் சுரண்டுகின்ற இந்த படுபாவிகள், ஆண்டொன்றுக்கு பல கோடிகளை சம்பளமாக திருடிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, சன் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் என்கிற பெயரில் கலாநிதி மாறனும், அவரது மனைவியும் ஆண்டொன்றுக்கு தலா 56.2 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டனர். ஜிண்டால் குழுமத்தின் தலைமை நிர்வாகிக்கு ரூ 54.98 கோடிகளும், பிர்லா குழுமத்தின் குமாரமங்கலம் பிர்லாவுக்கு ரூ 40.62 கோடிகளும் வருடாந்திர ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஏனைய செலவுகளும், ஊக்கத் தொகையும் தனியே தரப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியில் உருவாக்கிய மதிப்பில் அற்ப பங்கை மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும்தான் 90% தொகையை சுருட்டிகின்றனர். உற்பத்தியின் எல்லா பிரிவுகளையும் அவுட்சோர்சிங் என்கிற வடிவத்தில் வெளியாட்களுக்குப் பிரித்துக் கொடுத்தும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டியும் லாபத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்கின்றனர்.

நமது பூமிக்கே பாரமாக இருக்கின்ற முதலாளிகளுக்கு இந்த அரசுதான் வரிச்சலுகைகள், மானியங்கள், வட்டியில்லாக் கடன்கள் போன்ற எண்ணற்ற பொருளாதார உதவிகளோடு, போலீசு மூலம் முதலாளிகளுக்கு அடியாள் வேலையும் பார்க்கிறது. உளவு காமிராக்கள், உளவுத்துறை போலீசு, வாடகைக்கு குடியிருப்போர் போலீசில் கட்டாயமாக பதிவு செய்வது, ஆதார் அடையாள அட்டை போன்ற வழிகளில் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்கிறது, அரசு. ஏனென்றால் இது முதலாளிகளுக்கான அரசு! நம்மை ஒடுக்குவதற்கான அரசு.

தொழிலாளி வர்க்கமோ நிரந்தர தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி – பயிற்சித் தொழிலாளி என்று பிளவுபட்டுள்ளது. அவுட்-சோர்சிங் என்கிற நவீன கொத்தடிமை முறையில், தான் யாருக்காக உழைக்கிறோம் என்பதை அறியாமலேயே எந்திரம்போல உழைக்கிறான், தொழிலாளி. வெந்த சோற்றைத் தின்றுவிட்டு, விதி வந்தால் சாவதா தொழிலாளி வர்க்கத்தின் பெருமை? நம்முடைய எதிரிதான் இந்த புவிப்பரப்புக்கே எதிரி என்பதை உணர்வோம். இயற்கைக்கும், மனித குலத்துக்கும் நாசம் விளைவிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள். அதற்கு ஓரணியாய், ஓர் அமைப்பாய் திரள்வோம்!

தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2-வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 24
போன் நம்பர்: 9444834519

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

ஸ்பின்னிங் போரிஸ்: தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி ?

2

லகம் முழுவதும் சென்று தீவிரவாதிகளை ஒழிப்பது யார்? காட்டுமிராண்டி மக்களுக்கு கலாச்சாரத்தை கற்றுத் தர போராடுவது யார்? சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி ஜனநாயகம் தழைக்க உதவுவது யார்? சந்தேகமின்றி அவர்கள்தான் ஹாலிவுட் ஹீரோக்கள். மேலும் பூமியையும் தாண்டி அண்ட சராசரங்களில் உள்ள வேற்று கிரகவாசிகள், விண்கற்கள் முதல் சாத்தான் வரை பல ஆபத்துகளில் இருந்து அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலக மக்களையும் காப்பாற்றுவது என்ற அரும்பணிகளை, உலக அழகிகளின் சேவையுடனும், 3டி மற்றும் கிராபிக்ஸ் இன்னபிற நவீன தொழில் நுட்ப புரட்சியின் திறமையுடன் செய்து கொண்டிருக்கிறார்கள், இந்த ஹீரோக்கள்.

ஸ்பின்னிங் போரிஸ்
தமது சக ரசிய கூட்டாளிகளுக்கு ‘ஜனநாயகத்தை’ சரியாக நிர்வாகம் செய்ய சொல்லித் தருவதற்கு, அமெரிக்காவில் ‘ஜனநாயக’த்தை கலையாக சொல்லித் தரும், ‘ஸ்பின்னிங் டாக்டர்’ –களை பரிந்துரைக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

அமெரிக்காவின் ஜனநாயக ஏற்றுமதி போலவே, ஹாலிவுட் ஹீரோக்களின் உலக நாயகன் பிம்பமும் மோசடியானது. இரண்டின் நோக்கமும் “அமெரிக்கா இன்றி அமையாது இவ்வுலகு” என்பதை உலக மக்களின் மூளையில் அறுவை சிகிச்சை செய்தாவது நிறுவுவதே. அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு போலவே ஹாலிவுட்டின் கலாச்சார ஆக்கிரமிப்பும் அபாயகரமானது. எனினும் இரண்டையும் தொலைக்காட்சிகளின் ஹை டெபனிஷன் சேனலில் பார்த்து மயங்கும் பலரும் புரிந்து கொள்வதில்லை.

இந்த வரிசையில் வந்த ஹாலிவுட் படம் தான் ஸ்பாட்சிவுட் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்பின்னிங் போரிஸ்’ (Spinning Boris) எனும் திரைப்படம். ரசியாவில் 1996-ம் ஆண்டு முதன் முதலாக நடந்த அமெரிக்க பாணி ‘ஜனநாயக’ தேர்தலில் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சினை வெற்றி பெறச் செய்யும் பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க  நிபுணர்களது அனுபவங்களின் அடிப்படையிலான கதை தான் இந்தப் படம்.

1991-ம் ஆண்டு ரசியாவில் போலி-கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின்னர் சமூக ஏகாதிபத்தியமாக இருந்த சோவியத் யூனியன் தகர்ந்து போகிறது. அதிபர் போரிஸ் எல்ட்சின் ஆட்சியின் கீழ் ஜனநாயகத்தை இழுத்துக் கொண்டு வருவதற்காக முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. முதலாளித்துவ பாதை அமலுக்கு வந்த ஐந்து வருடங்களிலேயே அதன் சாதனைகள் வேதனையாக பல்லிளிக்க ஆரம்பித்திருந்தன. மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் தகர்க்கப்பட்டு பெரும்பான்மை மக்கள் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டார்கள்.

போலி கம்யூனிச ஆட்சியில் இருந்த குறைந்த பட்ச தேவைகளைக் கொண்ட வாழ்க்கையும், பாதுகாப்பும் கூட இங்கே காணாமல் போயிருந்தது. அந்த ஆட்சியில் அதிகார வர்க்க முதலாளிகளாக இருந்த பலரும் முதலாளித்துவம் வந்த பின்னர் ஒரே ராத்திரியில் பெரும் முதலாளிகளாக மாறிப் போனார்கள். இத்தகைய திடீர் பணக்காரர்களும், முதலாளிகளும், மாஃபியா ரவுடிகளும் நாட்டின் பொருளாதாரத்தை கைப்பற்றியிருந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் என்று முழு ரசியாவும் முதாளித்துவத்தின் விஷத்தாக்குதலில் அடி வாங்கியிருந்தது. எனவே இயல்பாக போரிஸ் எல்ட்சின் மேல், ரசிய மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்கள்.

கென்னடி ஜுகானோவ்
ஜுகானோவும், ஆட்சியிழந்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிதான்

இந்நிலையில் 1996-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதாவது ரசியாவின் முதல் ‘ஜனநாயக’ தேர்தலில் அதிபர் போரிஸ் எல்ட்சின் போட்டி இடுகிறார். இந்த தேர்தலில் எல்ட்சின் தோல்வி அடைந்து எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜுகானோவ் வெற்றி பெற்றால் தமது வணிக/குற்ற சாம்ராஜ்யத்தை இழக்க வேண்டி வரும்; எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்; வெளிநாட்டுக் கடன், மற்றும் முதலீடுகள் வராமல் போகும் என்று எல்ட்சின் பதவி இழப்பதை தடுக்க என்ன வழி என்று யோசிக்கிறார்கள், ரசிய முதலாளிகள்.

எனினும் இந்த ஜுகானோவும், ஆட்சியிழந்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிதான். இந்தக் கட்சியின் ஆட்சியில்தான் இப்போது இருக்கும் முதலாளிகள் தந்திரமாக மறைந்திருந்தார்கள். இவர் ஆட்சிக்கு மீண்டு வந்தாலும் அது கம்யூனிசக் கட்சி ஆளும் முதலாளித்துவ ரசியா எனும் யதார்த்தத்தை மாற்றி விடாது. ஆகவே எல்சினை எதிர்ப்போரும், ஆதரிப்போரும் இரு பிரிவு முதலாளிகள்தான். இதில் எல்சின் ஆதரவு முதலாளிகள் வேகமாக முதலாளித்துவ சுரண்டல்களை அடைய நினைத்தார்கள் என்பது மட்டுமே இங்கே உள்ள வேறுபாடு.

இந்த திரைப்படம் இந்த உண்மையினைக் கூறாமல் ஜுகானோவை ஏதோ ஒரிஜினல் கம்யூனிஸ்டு போல கருதிக் கொண்டு எல்சினை காட்டுகிறது. அதன்படி இந்த தேர்தலை கம்யூனிசத்திற்கும் ‘ஜனநாயகத்திற்கும்’ நடக்கும் போட்டியாகவும் சித்தரிக்கிறது. ஜனநாயகம் என்றாலே அது முதலாளிகளுக்கான ஜனநாயகம் என்பது பலருக்கும் புரிபடாத விசயம் என்பதால் இந்த தவறான பார்வை எடுபடத்தான் செய்கிறது.

ஸ்பின் டாக்டர்கள்
‘ஜனநாயகம்’ அல்லது ஸ்பின் டாகடர் என்பது ரசியாவிற்கு புதிது. ஆனால் அமெரிக்காவில் அது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்பேற்பட்ட ஜனநாயகத்தின் பலனை ரசியா இதுவரை அறிந்திருக்கவில்லை என்பதால் ரசிய முதலாளிகள் எல்சினின் தேர்தல் வெற்றிக்காக தமது பங்காளிகளான அமெரிக்க முதலாளிகளை நாடுகிறார்கள். தமது சக ரசிய கூட்டாளிகளுக்கு ‘ஜனநாயகத்தை’ சரியாக நிர்வாகம் செய்ய சொல்லித் தருவதற்கு, அமெரிக்காவில் ‘ஜனநாயக’த்தை கலையாக சொல்லித் தரும், ‘ஸ்பின்னிங் டாக்டர்’ –களை பரிந்துரைக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

‘ஜனநாயகம்’ அல்லது ஸ்பின் டாகடர் என்பது ரசியாவிற்கு புதிது. ஆனால் அமெரிக்காவில் அது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களின் பணி என்ன வென்றால்…

அதிபர் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஒருவரை வாடிக்கையாளராக வென்றெடுத்து தமக்கு தர வேண்டிய கட்டணத்தை பேரம் பேசி முடிவு செய்து ஒப்புதல் வாங்கியதிலிருந்து அவர்களது வேலை தொடங்குகிறது. தமது வாடிக்கையாளரான அதிபர் வேட்பாளர் என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிரச்சாரத்தின் போது குழந்தைகளை வாங்கி எப்படி கொஞ்ச வேண்டும் என்பது முதல் அந்த அதிபர் வேட்பாளருக்கான சொற்பொழிவுகள், கூட்டங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் ஏற்பாடு செய்வது வரை,  தங்களின் வாடிக்கையாளர் பற்றி நல்ல செய்திகள், நல்ல கட்டுரைகள் வர ஊடகங்களுக்கு கையூட்டு வழங்குவது, செயற்கையாக ‘வாழ்க’ போடும் கூட்டத்தை போகும் இடமெல்லாம் அனுப்புவது என்றும் திட்டமிட்டு அந்த வேட்பாளரை ரட்சகனாக காட்டி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக சந்தைப்படுத்த வேண்டும். இது தான் ஸ்பின்னிங் டாக்டர்களின் பணி. சுருக்கமாக அனைத்து நவீன மேலாண்மை தகிடுதத்தங்களையும் செய்து வேட்பாளரை வாக்காளர்களிடம் விற்க வேண்டும்.

ஜார்ஜ் புஷ்
ஜூனியர் புஷ் எனும் கோழி மாக்கான், எல்கேஜி குழந்தைகளுக்கு இருக்கும் பொது அறிவு கூட இல்லாத முட்டாளெல்லாம் அமெரிக்க அதிபராக உலா வந்ததன் காரணம் என்ன?

முதலாளித்துவ நாடுகளில் ஒரு சோப்பை எப்படி சந்தைப்படுத்துகிறார்களோ அதற்கும் அதிபர்களை வெற்றி பெறவைப்பதற்கும் பாரிய வேறுபாடு கிடையாது. சோப்பின் மணம் – அதிபரின் சிரிப்பு, சோப்பு உறையின் வண்ணம் – அதிபர் உடையின் நேர்த்தி, சோப்பின் விளம்பர வடிவமைப்பு – அதிபரின் புகைப்பட, செய்தி வடிவமைப்பு, சோப்பு குறித்த நுகர்வோரின் சாட்சியங்கள் – அதிபரின் வாழ்நாள் சாதனைகளை ஒப்பிக்கும் நபர்கள் என்று அப்படியே இது ஒரு சோப்புக் கம்பெனி விளம்பரம்தான்.

இதிலிருந்தே ஜனநாயகம் என்பது மக்களது உரிமைகள் குறித்து பேசப்படும் ஒன்றல்ல, மக்களை மயக்கும் முதலாளிகளின் மகுடி வித்தை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜூனியர் புஷ் எனும் கோழி மாக்கான், எல்கேஜி குழந்தைகளுக்கு இருக்கும் பொது அறிவு கூட இல்லாத முட்டாளெல்லாம் அமெரிக்க அதிபர்களாக உலா வந்தது இப்படித்தான்.

அமெரிக்காவில் தமது போட்டி நிறுவனத்திடம் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரை இழந்து சோர்ந்து போயிருக்கும் ஜார்ஜ் கார்ட்டன், டிக் டிரெஸ்னர், ஜோ ஷூமே என்ற மூன்று ‘ஜனநாயக’ நிபுணர்களுக்கு “எல்ட்சினை வெற்றி பெற வைக்க வேண்டும், அதற்கு எவ்வளவு பணத்தையும் செலவு செய்ய முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள்” என்று அழைப்பு வருகிறது. 2.5லட்சம் டாலர் பணம் வாங்கிக் கொண்டு ஹீரோக்கள் ரசியாவில் வந்து இறங்குகிறார்கள்.

ஸ்பின் டாக்டர்கள்
எல்சினுக்காக ஒரு மாஃபியா தலைவர் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களை வேலை வாங்குகிறார்.

பொதுவில் அமெரிக்க திரைப்படங்களில் ரசியாவைக் காண்பித்தால் ஒரு பழைய பஞ்சாங்கமாகவும், போலிசு, இராணுவத்தின் நிழலில் வாழும் நாடு போலவும்தான் சித்தரிப்பார்கள். ரசியாவிற்கு ஜனநாயகம் தெரியாது என்பதை விளக்க புறப்பட்டிருக்கும் இப்படத்தில் இத்தகைய நுட்பமான காட்சிகளும், வசனங்களும் நிறைய இருக்கின்றன. ரசிக்க தெரிந்தவர்கள் படத்தை பார்த்து கண்டுபிடிக்க முயலலாம்.

ரசியாவில் முதலாளித்துவத்தின் சந்தேகத்துக்கிடமில்லாத ஆட்சியை ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் சுற்றும் மாஃபியா தலைவர், ஸ்பின் டாக்டர்களுக்கு விளக்குகிறார். அமெரிக்காவின் அதிபர் ஆட்சியை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தாலும், இராணுவம் சிஐஏ எல்லாம் நிலை பெற்றுவிட்டதால் மாஃபியா குழுக்களுக்கு முதலாளிகளை பாதுகாக்கும் வேலையோ தேவையோ இல்லை. ரசியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலர் முதலாளிகளாக  மாறியிருப்பதால் இத்தகைய மாஃபியா குழுக்களும் அவற்றின் தலைவர்களும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். இப்படித்தான் இங்கே எல்சினுக்காக ஒரு மாஃபியா தலைவர் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களை வேலை வாங்குகிறார்.

அதிபர் எல்சின் இத்தகைய குறுக்கு வழிகளை விரும்பாத ‘ஜென்டில்மேன்’ என்பதால், ஸ்பின்னிங் டாகடர்களுக்கும் எல்ட்சினுக்கும் இடையே தொடர்பாளராகவும், அவர்களின் திட்டத்தை செயல்வடிவம் கொடுக்க உதவியாகவும் செயல்பட எல்ட்சினின் மகள் ஒத்துக் கொள்கிறார்.

டாட்டியானா
திரைப்படத்தில் எல்ட்சின் மகள் டாட்டியானா

இவர்கள் பணியை தொடங்கும் போது போரிஸ் எல்ட்சினின் வெற்றி வாய்ப்பு 6 சதவீதமாகவும், எதிர்க்கட்சியான போலி-கம்யுனிஸ்ட் வேட்பாளர் ஜுகானோவின் வெற்றி வாய்ப்பு 30 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றி எல்ட்சினை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியை அந்த அமெரிக்கர்கள் சோப்புக் கம்பெனி தொழில்முறை பாணியுடன் மேற்கொள்கிறார்கள். ஆனால், ‘பாவப்பட்ட ரசிய மக்களுக்கு ஜனநாயகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் தமது புனிதப் பணி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள். ஆனால் அந்தப் புனிதப்பணிக்கு ஊடகங்களையும், போட்டோக்களையும் மட்டும் சார்ந்திருக்கிறார்கள். என்னதான் புனிதமென்றாலும் அதை கடை விரிப்பது முக்கியமில்லையா?

இதற்காக பல்வேறு உத்திகளை செய்ய விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் முதல் சினிமாவில் நடிப்பதற்கு கூச்சப்படும் நாயகி போல அவற்றை செய்ய மறுக்கும், போரிஸ் எல்ட்சினை அவரது மகள் மூலம் படிப்படியாக தம் வழிக்கு திருப்பி, உண்மையான ‘ஜனநாயக’ தலைவராக வடித்தெடுக்கிறார்கள்.

போரில் எல்ட்சின்
போரில் எல்ட்சின்: குடித்து விட்டு ஆடுவதில் எல்ட்சின் பல நூறு விஜயகாந்துகளுக்கு சமம்.

குடித்து விட்டு ஆடுவதில் எல்ட்சின் பல நூறு விஜயகாந்துகளுக்கு சமம். இதனால் வரும் இமேஜை துடைக்க அவர் குடிப்பதற்கு முன் காலை வேளைகளில் பொது மக்களை சந்திக்கச் சொல்கிறார்கள். நள்ளிரவு வரை குடித்து விட்டு அடுத்த நாள் பகலில் தாமதமாக எழுந்திருக்கும் எல்சின் ஆரம்பத்தில் இந்த அதிகாலை நாடகத்திற்கு மறுக்கிறார். பின்னர் ரசியாவில் ஜனநாயகத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று இந்த தியாகத்திற்கு உடன்படுகிறார்.

இதே போல கடுகடு எல்ட்சினை சிரிக்கச் சொல்கிறார்கள். குழந்தைகளை வாங்கிக் கொஞ்சச் சொல்கிறார்கள், நடனமாட வைக்கிறார்கள். எல்ட்சினை பாரட்டி மக்கள் கூறுவதாக செயற்கை விளம்பரங்களை தொலைக்காட்சிகள் முதல் அனைத்து ஊடகங்களிலும் வெளி வரச் செய்கிறார்கள். எல்ட்சின் அடுத்த அதிபராக வந்தால் தான் ரசியா வளர்ச்சி அடையும் என மக்கள் கருதுவதாக செய்திகளை வெளியிட வைக்கிறார்கள். முதலில் இத்தகைய செட்டப் வேலைகளை எல்சின் எதிர்ப்பர் என்று மகள் கூறுகிறார். காரணம் அப்பாவிற்கு இத்தகைய நேர்மையற்ற, குறுக்கு வழிகள் பிடிக்காது என்கிறார். ஆனால் போரிஸ் எல்சின் என்பவர் ஜூனியர் புஷ்ஷுக்கு சமமான அறிவுடைய மகான் என்பதை இதே மேற்கத்திய உடகங்கள் புஷ்ஷை தவிர்த்து விட்டு எழுதியிருக்கின்றன. இங்கே படத்தில் கம்யூனிச அபாயத்திற்காக போரிசை ஒழுக்கவானாக காட்டுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது.

ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் ரசிய மக்கள் மத்தியில் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தாததை கவனிக்கிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளரை தாக்கி, எதிர்மறை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். ‘கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றால்….’ என்ற பயமுறுத்தும் தொலைக்காட்சி விளம்பரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ‘பாபா (அப்பா எல்ட்சின்), அறத்தை கடைப்பிடிப்பவர்’ என்று சொல்லும் எல்ட்சினின் மகள் அதை நிராகரித்து விடுகிறாள்.

எல்ட்சின்-கோர்பசேவ்
கோர்பச்சேவ் காலத்தில் எல்ட்சினும் போலிக் கம்யூனிசக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராகவே இருந்தார்.

யார் இந்த எல்ட்சின்  என்ற கேள்வி இந்த அறப்பிரச்சினைக்கு விடையளிக்கும். கோர்பச்சேவ் காலத்தில் எல்ட்சினும் போலிக் கம்யூனிசக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராகவே இருந்தார். போலிக் கம்யூனிசக் கட்சி என்பதால் ரசியாவே ஆனாலும் அங்கே நமது காங்கிரசுக் கட்சிகளை விட கோஷ்டிகள் அதிகம். இங்கே இருக்கும் ஓட்டுக் கட்சிகளின் நாய்ச் சண்டைகள் உள்ளிட்ட இன்னபிற கலாச்சாரங்கள் அங்கேயும் உண்டு. என்ன அங்கே ஆளும் கட்சி, அதிகார வர்க்க கட்சி என்பதால் இங்கே இருப்பது போல அதிகம் வெளியே தெரியாது.

இப்படித்தான் கம்யூனிசக் கட்சியில் ஒரு கோஷ்டி தலைவராக இருந்த எல்ட்சின், போலி கம்யூனிசக் கட்சியின் அனைத்து தீமைகளையும் ஒருங்கே பெற்ற ஆளுமையான எல்ட்சின் ஒரு விபத்தின் மூலம் அதிபராகவும் பின்னர் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுகிறார். ரசியாவின் புதுத் திருட்டு முதலளிகள் இவரை தேர்ந்தெடுத்திலிருந்தே இவரது அறம் என்ன என்பதறியலாம். இப்போது எல்ட்சின் மகள் தனது அப்பாவின் அறம் பற்றி சீறுவது உங்களுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.

ரசிய தேர்தலில் எல்ட்சினின் செல்வாக்கு சரிவடைந்திருக்கிறது என்ற செய்தி அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பங்குச் சந்தையில் ரசியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான லூகோவின் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைகிறது. தங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எல்ட்சின் வெற்றி பெற்றால் லூகோ நிறுவன பங்கின் விலை மும்மடங்காகும் என கணிக்கிறார்கள் ஸ்பின்னிங் டாக்டர்கள். உடனடியாக, அதில் தங்கள் சேமிப்பை கணிசமான அளவு முதலீடு செய்கிறார்கள். அதாவது ரசியாவில் எல்ட்சின் வெற்றி பெற்று அமெரிக்க சந்தையில் லூகோவின் பங்குகள் அதிக விலை விற்றால் அதை வைத்திருக்கும் இந்த அமெரிக்க ஸ்பின்னிங் டாக்டர்கள் மில்லியனராகி விடுவார்கள். இப்போது எல்ட்சினின் வெற்றி ஸ்பின்னிங் டாக்டர்கள் லாட்டரி சீட்டில் வெற்றி பெறுவதற்கான காரணத்தை பெற்று விடுகிறது. இறுதியில் அமெரிக்க ஜனநாயகம் பங்கு சந்தை வளர்ச்சியில் மண்டியிடுகிறது என ஒரு கவித்துவ குறியீடாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

எல்ட்சின் - கிளின்டன்
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் போரிஸ் எல்ட்சினுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் சாதகமாக இருக்கும் – படத்துக்கு வெளியே சிஐஏ எழுதிய உண்மைக் கதை

ரசியாவின் ஜனநாயக வெற்றியில் தமது முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது என்பதால் ஸ்பின் டாக்டர்கள் தீயாய் வேலை செய்கிறார்கள். மூளையை கசக்கி பிழிந்து பொருளாதார சலுகைகளை பிரச்சாரமாக முன் வைக்கிறார்கள். ”உங்களின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக எல்ட்சினுக்கு ஓட்டு போடுங்கள்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் போரிஸ் எல்ட்சினுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் சாதகமாக இருக்கும் என வெள்ளை மாளிகையில் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் மூலம், கிளிண்டனை இவர்கள் எழுதிக் கொடுக்கும் உரையை வார்த்தை மாறாமல் படிக்க வைக்கிறார்கள். கிளிண்டன் எல்ட்சினின் புகழ் பாடுகிறார். ரசியாவின் வளர்ச்சி எல்ட்சினிடமும், மக்களிடமும் தான் இருக்கிறது என புகழுரைக்கிறார். கருத்துக் கணிப்பில் ஆதரவு வீதத்தில் எல்ட்சின் எதிர்க்கட்சி வேட்பாளரை எட்டிப் பிடிக்கிறார். இதெல்லாம் மூன்று ஸ்பின் டாக்டர்களின் தனிப்பட்ட திறமை என்று அவர்களும் படத்தை பார்ப்பவர்களும் நம்பினாலும் கூட சிஐஏ இதன் திரைக்கதையை எழுதி படம் எடுத்து விலைக்கும் விற்று விட்டதே வரலாறு. எனவே தற்போது எல்ட்சினின் வெற்றியில் அமெரிக்கா அரசின் நலனும் இருக்கிறது என்பதை படம் மறைமுகமாக சொல்கிறது.

போலிக் கம்யூனிசத்தை வீழ்த்துவதற்கே அமெரிக்கா இப்படி மெனக்கெட்டிருக்குமானால் உண்மையான கம்யூனிசத்தை வீழ்த்த என்னவெல்லாம் செய்திருக்கும்  என்பதை அமெரிக்க சொர்க்கத்திற்கு ஏங்கும் அடிமைகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

மாஃபியா
ரசிய தேர்தல் வெற்றி அமரிக்க பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க உதவுகிறது.

அமெரிக்க ‘ஜனநாயக’ நிபுணர்களின் உத்திகள் மக்கள் மத்தியில் எல்ட்சின் புகழை பரப்பினாலும், ஒரு வேளை வெற்றி பெறா விட்டால் என்ன நடக்கும் என்று ரசிய ஆளும் வர்க்கம் யோசிக்கிறது. அதன்படி தேர்தலை நிறுத்தி விடலாம் என மாஃபியா தலைவர்கள் மற்றும் முதலாளிகள் திட்டமிடுகிறார்கள். தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்று எல்ட்சினுக்கு புரிய வைத்து அதை நிறுத்துவதுதான் ஸ்பின்னிங் டாக்டர்களின் பணி என்பதை தெளிவுபடுத்துகிறார்கள்.

இதில் ஸ்பின்னிங் டாக்டர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களது சேமிப்பு பணம் அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடாக போடப்பட்டிருக்கிறது. தேர்தல் நடக்காவிட்டால் அது வீணாகும். ரசிய முதலாளிகளுக்கோ எல்ட்சின் வெற்றி பெறவில்லை என்றால் இருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கு குந்தகம் வரும். இப்படி அமெரிக்க முதலாளிகளும், ரசிய முதலாளிகளும் தத்தமது தரப்பில் யோசிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகத்தின் திண்டாட்டம்.

இந்நிலையில் எல்ட்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நிலையற்ற சூழல் ரசியாவை சூழ்கிறது. இறுதியில் தங்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும், ரசியாவின் ‘ஜனநாயகத்துக்கும்’ வந்த பேராபத்துகளை உறுதியாக நின்று முறியடிக்கிறார்கள் அமெரிக்க ஹீரோக்கள்.

டைம் மேகசின்
தேர்தலில் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களின் வேலையைப் பற்றிய டைம் மேகசின் கட்டுரை.

எல்ட்சின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை, அது ஜிகொனோவிற்கு ஓட்டாக மாறலாம். ‘கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைப் பிடித்தால், அவர்கள் பணக்காரர்களை தாக்கி சொத்துக்களை பிடுங்கி மக்களுக்கு வினியோகிப்பார்கள். பணக்காரர்கள் அதை எதிர்த்து ஆயுதம் தூக்குவார்கள்’ என்று விவசாயிகள் நினைப்பதாக ஸ்பின் டாக்டர்கள் ஏற்பாடு செய்யும் கிராமப் புற மக்கள் குழு விவாதத்தில் தெரிய வருகிறது. ஆனாலும் இந்த உண்மையை பொய்களால் மாற்ற நினைக்கிறது அமெரிக்க நிபுணர் படை.

எல்ட்சின் மீதான வெறுப்பை விட எதிர்க் கட்சி வேட்பாளர் மீதான பயம் அதிகமானால் மக்களை எல்ட்சினுக்கு ஆதரவாக திருப்பலாம் என்று வெற்றிகரமாக கணிக்கிறார்கள். இதிலும் அமெரிக்கர்கள் கொட்டை போட்டவர்கள். அப்போது கம்யூனிஸ்டுகள், இப்போது முசுலீம்கள் என பயத்தை வைத்தே அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகம் தனது படையெடுப்புகளையும் ஹாலிவுட் தயாரிப்புகளையும் நியாயப்படுத்துகிறது. மைக்கேல் மூரின் பவுலிங் ஃபார் கொலம்பன் எனும் ஆவணப்படம் இதை விரிவாகவும், ஆழமாகவும் சித்தரிக்கிறது, பாருங்கள்.

ஒரு வழியாக ‘கம்யூனிஸ்டுகள் கொலைகாரர்கள், ரத்த வெறி பிடித்தவர்கள், போர் வெறியர்கள் அவர்கள் மீண்டும் வந்தால் போர் வெடிக்கும்’ என அவதூறு பிரச்சாரத்தை விளம்பரங்களாக ஒளிபரப்ப எல்ட்சினின் ஒப்புதல் கிடைக்கிறது. இதே கட்சியில்தான் எல்ட்சினும் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார் என்ற செய்தியையெல்லாம் இந்த விளம்பரம் மாற்றிவிடுமென்றால் விளம்பரங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் அளிக்கும் செய்திகளை மட்டும் தெரிந்து வாழும் அமெரிக்க மக்களின் கதியை யோசித்து பாருங்கள்.

தேர்தல் நாளில் எல்ட்சின் வெற்றி பெறுகிறார். ஸ்பின் டாக்டர்கள் ரசியாவில் ஜனநாயகத்தை மலர வைத்த திருப்தியுடனும் கணிசமான சொந்த ஆதாயத்துடனும் விடை பெறுகிறார்கள்.

இந்தப்படம் நமக்கு சில விடயங்களை உறுதியாக காட்டுகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவை தீர்மானிப்பது லாபியிஸ்டுகளின் திறமையும், முதலாளிகள் அளிக்கும் நிதியும்தான். உலகின் மூத்த ஜனநாயகமான அமெரிக்காவிலிருந்து இந்த ஸ்பின் டாக்டர்கள் ரசியா போன்ற நாடுகளில் மட்டுமின்றி, உலக மயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவிலும் தமது சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஊதி பெருக்கப்படும் பலூன் நரேந்திர மோடியின் ஹை-டெசிபல் பிரச்சாரங்களுக்கு பின்னால் அமெரிக்க சந்தைப்படுத்தும் நிறுவனமான ஆப்கோ வேர்ல்ட் வைட் உள்ளது என்ற வகையில் இந்தப் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது.

டாட்டியானா - எல்ட்சின்
எல்ட்சின் மகள் டாட்டியானாவுடன்

அமெரிக்கர்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கருத்து சுதந்திரம் மிக்கது, முன்னேறியது என பிரச்சாரம் செய்கிறார்கள். படத்தின் நடுவே, ‘ரசியாவில் தேர்தல் ரத்து கூட செய்யப்படலாம்’ என்பதை கேலி செய்கிறார்கள். ‘இது ஜனநாயகம் இல்லை, ரசிய மக்கள் அமெரிக்காவைப் போல உண்மையான ஜனநாயகத்தை ருசிக்க வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் அந்த உண்மையான ஜனநாயகத்தின் யோக்கியதையை படமெடுக்க இப்போது கம்யூனிச முகாம் எதுவும் உலகில் இல்லை.

படத்தின் துணை தலைப்பு, “ரசியாவின் அதிபர் தேர்தல், அமெரிக்க வழியில்” என கூறுகிறது. உண்மையாகவே பெரும் பகுதி படம் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களின் தேர்தல் பரப்புரை முறைகளை நகைச்சுவையாகத் தான் சித்திரிக்கிறது. அதே நேரம் அந்த நகைச்சுவை தனிப்பட்ட தலைவர்கள், ஆளுமைகளின் முரண்பாடுகளை காட்டிய அளவுக்கு அமைப்பு என்ற முறையில் முதலாளித்துவத்தை சித்தரிக்கவில்லை. ஒரு அதிபர் வேட்பாளர் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்கள் தரும் பட்டியல் நம்மை மலைக்க வைக்கிறது. மோடிக்காக பாஜக செய்யும் வேலைகளை அது நினைவு கூரவும் வைக்கிறது.

ஸ்பின்னிங் போரிஸ்
ஸ்பின்னிங் போரிஸ் படம் திரையில் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது மோடியின் தயவில் 24 மணிநேரமும் ஓடிகொண்டிருக்கிறது.

படத்தில், அமெரிக்க அதிபரோ அல்லது ரசியாவின் அதிபர் வேட்பாளரோ கூட்டத்தில் பேசுவதாகக் காட்டப்படும் தொலைக்காட்சி காட்சிகளை காட்டும் போதும், அதை கவனித்து ஆய்வு செய்யும் ஸ்பின் டாக்டர்களுள் ஒருவரான டிக் டிரெஸ்னர் வசனத்தை முன் கூட்டியே சொல்லி, தாங்கள் எழுதி கொடுத்த வசனம் தான் அது என கூட இருப்பவர்களிடம் தனது திறமையைக் காட்டி அசத்துவார். முதலாளித்துவ அரசியலில் பேசப்படும் எல்லாமும் நாடகம்தான் என்பதை இப்படத்தின் மூலம் மட்டுமல்ல, மோடியின் சிரிப்பை வரவழைக்கும் வரலாற்று காமடிகளிலிருந்தும் நாம் அறியலாம்.

நரேந்திர மோடி பேசும் வீர வசனங்கள் முதல், அவரை புகழும் கட்டுரைகள் செய்திகள், போஸ்டர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்தும் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களால் திட்டமிட்டு பரப்பப்படுபவையே. காங்கிரஸ் கட்சியோ இதை ராஜீவ் காந்தி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது.

ஸ்பின்னிங் போரிஸ் படம் திரையில் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது மோடியின் தயவில் 24 மணிநேரமும் ஓடிகொண்டிருக்கிறது. மக்களிடம் அபிமானம் இழந்து போன காங்கிரசின் இடத்தை நிரப்ப ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஜூனியர் புஷ்ஷைப் போன்ற நபர்தான் மோடி. இந்த மோடி வெற்றி பெற முதலாளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அறிய விரும்பும் நண்பர்கள் இப்படத்தை பாருங்கள்! மோடியோ எல்சினோ புஷ்ஷோ பெயர்கள் வேறுபட்டாலும் முதலாளித்துவ பரம்பொருள் எனும் ஒளியில் ஒரே பொருள்தானே!

–    ஆதவன்

25,090 மாணவர்கள் – 157 குடிநீர் குழாய்கள் !

0

25 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு வெறும் 157 குடிநீர் குழாய்கள்; மாநகராட்சிப் பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோலால் மாற்றமுடியாது!

புமாஇமு – மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் ஆய்வறிக்கை பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்!

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியப் பெருமக்களே,

மாநகராட்சிப் பள்ளி
படம் : நன்றி timesofindia

“கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்று அவ்வைப்பாட்டியும், ”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் ” என்று வள்ளுவனும் அனைவரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஆனால், இன்று அரசோ அத்தகைய கல்வியை நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களுக்கு மறுத்து வருவதை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை பார்க்கும் எவராலும் மறுக்க முடியாது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, வாத்தியார், தரமான ஆய்வுக்கூடம், நூலகம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து, தரம் உயர்த்த வேண்டுமென கடந்த ஓராண்டுக்கும் மேலாக  புமாஇமு பெற்றோர்கள் மாணவர்களைத் திரட்டி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகே மாநகராட்சி கல்வி அதிகாரிகளுடன் எமது பிரதிநிதிகளும் இணைந்து பள்ளிகளை ஆய்வுசெய்ய மேயரின் அனுமதியைப் பெற்றோம். ஜனவரி 17, 18, 20 தேதிகளில் 10 மண்டலங்களில் 57 பள்ளிகளில் ஆய்வில் இறங்கினோம். பள்ளிகளின் உண்மை நிலையைப் பற்றி கண்ட காட்சிகளையும், ஆசிரியர், மாணவர்களின் உள்ளக் குமுறல்களையும் விரிவான அறிக்கையாக 24 பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

புள்ளிவிபரம்
படம் : நன்றி timesofindia

ஏழை கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தரமானக் கல்வியை கொடுக்க போதிய நிதியை ஒதுக்கி, காலதாமதமின்றி உடனுக்குடன் திட்டமிட்டு நிறைவேற்றத்தான் உள்ளூராட்சி நிர்வாகமான மாநகராட்சி பள்ளிகளை நடத்துவது அவசியமாகிறது. ஆனால், ’சிங்காரச்’ சென்னையிலோ மாநகராட்சிப் பள்ளிகள் ’தீண்டத்தகாத சேரிகளாகவே’ நடத்தப்படுகின்றன. மாணவர் எண்ணிக்கை குறைவதைக் காரணம் காட்டி இரண்டு பள்ளிகளை ஒன்றாக இணைப்பது, பள்ளிகளை இழுத்து மூடி வணிக வளாகமாக்குவது, அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் என தனியாரிடம் ஒப்படைப்பது இவையெல்லாம் எப்படி என திட்டம் தீட்டுவதில்தான் தீவிரம் காட்டி வருகிறது மாநகராட்சி.

  • ஆண்டு தோறும் மாநகராட்சியில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் போவது எங்கே?.
  • கல்விக்காக மட்டும் செலவிட அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் 2% செஸ் வரியில், கடந்த 8 ஆண்டுகளில் செலவிடப்படாமல் மாநகராட்சியில் வைத்திருக்கும் தொகை ரூபாய் 175 கோடி. மாநகராட்சியின் 284 பள்ளிகளுக்கு கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க இந்தப் பணத்தை ஏன் பயன்படுத்தவில்லை?
  • 20 மாணவர்களுக்கு ஒரு குடி நீர் குழாய் இருக்க வேண்டும் என்கிறது அரசு விதி (பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் : 270). ஆனால் 25 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு வெறும் 157 குடிநீர் குழாய்கள்தான் உள்ளனவே ஏன்?
  • சுமார் 8 மணிநேரம் பள்ளிக்கூடத்தில் அடைந்துகிடக்கும் மாணவர்கள் தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் எப்படி கல்வி கற்க முடியும்?

இந்த கேள்விகளை கேட்க பெற்றோர்கள், மாணவர்கள் யாரும் முன் வருவதில்லை என்ற காரணத்தால்தான் மாநகராட்சிப் பள்ளிகளின் அவலம் ஒழியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் கல்வி தரமாக கிடைக்கவில்லை.

எங்கள் மதிப்புக்குறிய பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகள் நம் பள்ளிகள். அதை பாதுகாப்பதும், தரம் உயர்த்தப் போராடுவதும் நம் கடமை. கடந்தாண்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சியின் 32 மேனிலைப் பள்ளிகளில் 12 பள்ளிகள் 100% தேர்ச்சியை காட்டி சாதித்துள்ளன. அடிப்படை வசதிகளே இல்லாத மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் பெருமக்களின் கடுமையான உழைப்பினால் பெற்ற இந்த வெற்றி நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய மிகப்பெரிய சாதனை இல்லையா?

தமிழகத்திலுள்ள சுமார் 11,000 தனியார் பள்ளிகளில் பல ஆயிரங்களை பிடுங்கிக் கொண்டு, ஸ்பெசல் கிளாஸ், சுமார்ட் கிளாஸ் என கதையளந்துவிட்டாலும் ஓரிரு பள்ளிகள்தானே 100% தேர்ச்சியை பெறுகின்றன. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாநகராட்சிப்பள்ளிகளுக்கு என்ன குறைச்சல்? ஏன் இந்த பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார்பள்ளிகளில் பல ஆயிரங்களை கொட்டியழ வேண்டும்?

தனியார் பள்ளிகளில் கேட்கும் பணத்திற்காக ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்து ஓடாய் தேய்வதை நிறுத்துவோம். நாம் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைத்து கொடுத்த வரிப்பணத்தில் இயங்கும் மாநகராட்சிப் பள்ளிகளை ஒழுங்குபடுத்த சற்று கவனம் செலுத்துவோம். மாநகராட்சிப் பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோளால் மாற்றமுடியாது; நம்முடைய போராட்டம்தான் நம் பிள்ளைகளின் தரமானக் கல்விக்கு கலங்கரை விளக்கமாகும்.

ஆம், உங்கள் ஆதரவோடு போராடினோம். மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கையை மாநகராட்சியிடம் கொடுத்திருக்கிறோம். மேயரும், ஆணையரும், உதவி ஆணையரும் (கல்வி) பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள். அதை கண்காணிப்பதும், அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்தப் போராடுவதும் நம் அனைவரின் கடமையாகும்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மனித வாழ்க்கைக்கு அவசியமென்றால், அந்த மனிதன் அன்பு, கருணை, இரக்கம், நீதிநெறி ஒழுக்கங்கள் எனும் மனித மாண்புமிக்கவனாக, எதையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவனாக சமூகத்தோடு இணைந்து வாழும் முழு மனிதனாவதற்கு அவசியமானது கல்வி. விலங்கிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுவது கல்விதான். அது வியாபாரப் பண்டமல்ல. ஒரு உன்னதமான சேவை. எனவே, அரசே தன் சொந்த செலவில் அனைவருக்கும் இலவசமாக, தரமாக கல்வியை வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனியார்மயமாக்குவது, நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு சமம். எனவே, எந்தக் காரணத்தைச் சொல்லியும் மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயன்றால் அதை முறியடிப்போம். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்.

பத்திரிகை செய்திகள்

rsyf-schools-toi

செய்தி :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

கர சேவை கெட்டப்பில் வைகோ – கார்ட்டூன்

11

VAIKO-cartoon

ஓவியம் : ஓவியர் முகிலன்

ராஜ்குமாருக்கு நீதி கேட்டு புதுச்சேரி அரசு அலுவலகம் முற்றுகை !

2

என்.எல்.சி. தொழிலாளி ராஜ்குமாரை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எஃப் ன் கொலை வெறியாட்டத்தைக் கண்டித்து மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை புதுச்சேரி புஜதொமு முற்றுகை – ஆர்ப்பாட்டம்:

நேற்று (17.04.2014) சுரங்கம் 1-ல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளி ராஜா என்ற ராஜ்குமாரை சுட்டுக் கொன்ற மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நோமன் ராஜ்குமாரின் தலையில் மூன்று முறை சுட்டதில், அந்தத் தொழிலாளி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

ஒப்பந்தத் தொழிலாளியாக சுரங்கம் 1-ல் வேலை பார்த்து வந்த ராஜ்குமாரின் தம்பி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது தம்பியின் நட்டஈடு கேட்பதற்காக சுரங்கம் 1-ல் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்காக வந்த ராஜ்குமாருக்கு உள்ளே போக அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. தானும் சுரங்கம் 2-ல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளி என்பதற்கான அடையாள அட்டையைக் காண்பித்த பிறகும் அனுமதி மறுக்கப் படவே அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையை சேர்ந்த நோமனுக்கும் ராஜ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது அதிகாரம் கேள்விக்குள்ளாவதைப் பொறுக்க முடியாமல் தனது துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்துள்ளான் நோமன்.

பாதுகாப்பு என்ற பெயரில் அடியாள் வேலை செய்யும் நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், பாதுகாப்பு என்ற பெயரில் கொலைவெறியாட்டம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அங்குள்ள தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் எங்களது புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டார்கள். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தோழர்கள், அலுவலகம் அமைந்துள்ள பகுதியான, புதுச்சேரி ரெட்டியார்பளையத்தில் ஊர்வலமாக சென்று மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய நோமனைக் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், ரவுடித்தனம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை கண்டித்தும், என்.எல்.சி. நிறுவனம் தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடுகின்ற தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை ஒடுக்கியும், தொழிற்சங்க உரிமையை நசுக்கியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றும் வரை ஒன்றிணைந்து போராட அறை கூவி அழைக்கும் விதமாகவும் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளேயே சென்று அமர்ந்தும் உள்ளேயேயும் முழக்கங்களைத் தொடர்ந்தனர்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பின், அலுவலகத்தின் உள்ளே வந்த காவல்துறை, தனது வழக்கமான முறையில் தோழர்களை சமாதானப் படுத்தி வெளியே அனுப்ப முற்பட்டனர். ஆனால், தோழர்கள் மறுத்து, தனது போராட்டத்தைத் தொடர்ந்தனர். மேலும், “அரசு அலுவலகத்தின் உள்ளே வந்து முழக்கமிடுவது சட்ட விரோதமானது” என்றும், “உங்களது கோரிக்கை நியாமானது தான் என்றாலும், அதை சொல்வதற்கான இடம் இது இல்லை” என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசிடம், “ஒரு தொழிலாளியைச் சுட்டுக் கொன்றது மட்டும் சட்டபூர்வமானதா?” என்றும், “என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இங்கு தான் நடக்கும். அது பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகள் இங்கு தான் உள்ளனர். அதனால், நாங்கள் சரியான இடத்தில் தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்குள்ள அதிகாரியிடம் சொல்லி மத்திய தொழில் பாதுகாப்புப் படையை வெளியேற்றச் சொல்லுங்கள்” என்று பேசியவுடன் போலிசு அதைப் பற்றி பேச முடியாமல் அமைதியாகி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து, “நாங்கள் எங்களது மேலதிகாரிகளிடம் தகவல் கூறியுள்ளோம் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று போலிஸ் கெஞ்சியும் தோழர்கள் மசியவில்லை. பிறகு முழக்கமிட்டுக் கொண்டே அலுவலகத்திற்கு வெளியே வந்தும் ஆர்ப்பாட்டமும் முழக்கமும் தொடர்ந்தது.

சிறிது நேரத்திலேயே, “உங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டீர்கள். அதனால், கலைந்து செல்லுங்கள் மீறிப் போராடினால், கைது செய்யப்படுவீர்கள்” என்று போலிசு கூறத் தொடங்கியது.

“எங்கள் போராட்டம் அடையாளப் போராட்டம் அல்ல. நாங்கள் என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை வெளியேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம். நாங்கள் கைதாகமாட்டோம்” என்று சொன்னோம்.

“நீங்கள் கைதாகவில்லை என்று சொன்னால், நாங்களே கைது செய்வோம்” என்று கூறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு வலுகட்டாயமாக கைது செய்தது போலிசு. ஆனால், கைது செய்த இரண்டு மணிநேரத்தில் விடுவித்தது.

நெய்வேலியில் தொழிலாளி கொல்லப்பட்டதைக் கண்டித்து நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாகப் போராடிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு அடித்துத் துவைத்துள்ளது CISF மற்றும் போலிஸ் வெறிநாய் கூட்டம்.

இதில், ஒரு விசயத்தை மக்கள் தீரமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதே தவிர, சிறு துளி கூட குறையவில்லை. இதற்கான காரணம், உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தை நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என்றும், வன்னியர், தலித், முதலியார், ரெட்டியார், கவுண்டர், தேவர், நாடார், முசுலீம், கிறித்தவர் என சாதிரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தி, இவற்றை ஏற்றுக் கொண்ட கட்சிகள் மூலம்தான் உரிமைகளைப் பெற முடியும் என்றும் பிழைப்புவாத கட்சிகள், சங்கங்கள் உழைக்கும் மக்களை ஏமாற்றி தங்களது பொது எதிரியை அடையாளம் தெரிந்துகொள்ளாத வகையில் திசை திருப்பி வருகிறார்கள். இதையொட்டித்தான் நடக்கவிருக்கும் தேர்தல் பிரச்சாரமும் வீச்சாக செய்து வருகிறார்கள். வேட்பாளர்களும் அதையொட்டியே நிறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், ராஜ்குமார் மரணத்தை தொடர்ந்து தொழிலாளர்கள், மற்றும் பொது மக்களை கொலைவெறித்தனமாக தாக்கிய போலிசு நாய்கள் சாதி பார்த்து, மதம் பார்த்து நிரந்தரத் தொழிலாளியா? ஒப்பந்தத் தொழிலாளியா? என்று பார்த்து தாக்கவில்லை.

பொதுவாகவே, “அரசு என்பது மக்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்குமான கருவி என்பது” கம்யூனிச ஆசான்கள் கூறுவதைப் போல மக்களை தங்களது அடிமைகளாத்தான் அரசு பார்க்கிறது. இதைத்தான் நெய்வேலியில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா முழுவதும் இதுதான் நடந்து வருகிறது.

குர்கான் மானேசர் தொழிற்பேட்டையில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் சங்கம் ஆரம்பித்ததற்காகவே ஒரு ஆண்டுக்கு மேலாக பிணை வழங்காமல் 147 தொழிலாளர்கள் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், 3500 தொழிலாளர்கள் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கும் தொழிலாளர்கள் எந்த சாதி, மதம் என்ற வேற்றுமையை இந்த அரசும் முதலாளிகளும் பார்க்கவில்லை. ஒரு கிரிமினல் குற்றத்தை விட மோசமான குற்றமாக சங்கம் ஆரம்பித்ததைப் பார்க்கிறது அரசு.

எனவே, அரசு என்பது, உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதும், உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் கட்சிகள், சங்கங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள், தொழிலாளர் வர்க்கத்தின் குடலை அறுப்பவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க பிறகு எதற்கு நமக்குள் சாதி மத வேற்றுமை? ஒப்பந்தத் தொழிலாளி, நிரந்தரத் தொழிலாளி என்ற வேற்றுமை?

தொழிலாளர் வர்க்கமே! உழைக்கும் வர்க்கமே!

  • சாதி மத தொழிலாளர் வேற்றுமையைக் கடந்து, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, மக்களை ஏமாற்றும் சட்டமன்ற பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை புறந்தள்ளி புதிய ஜனநாயக மக்கள் அரசை நிறுவ அணிதிரண்டு போராட அறைகூவி அழைக்கிறோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

எங்க ஊரு காதலுக்கு சாந்தியக்காதான் தலப்புதாரி

6

ன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அரையாண்டு தேர்வுல, மூணு பாடத்துல முதல் மார்க்குன்னு வாத்தியார் சொன்னதும் கூடவே “அடுத்தவருசம்  பொதுத் தேர்வுலயும் பள்ளியிலேயே முதல் மார்க் எடுப்பே”ன்னு பாராட்டுனதும் எனக்கு சந்தோசத்துல தலகால் புரியல.

கிராமத்துப் பெண்
ஓவியம் : நன்றி S.Ilayaraja

“சனி ஞாயிறுதானே இன்னைக்கி மட்டும் மாட்ட ஓட்டிப் போய் மேச்சுகிட்டு வா, நான் வயலுக்கு மருந்து வாங்க டவுனு வரைக்கும் போய்ட்டு வாரேன்னு” அப்பா சொன்னாலும், “ரேசனுக்கு போ, அப்பாவுக்கு கொல்லையில சோறு கொண்டுட்டு போ, அம்மாச்சி வீட்டுக்கு இதக் கொண்டக் குடு, அதக் கொண்டக் குடு”ன்னு அம்மா சொன்னாலும் எதயும் காதுல வாங்கக் கூடாது. கவனம் பூராவும் பத்தாவதுல முதல் மார்க் வாங்கறதுலதான் இருக்கணும்னு, வீடு வர்ர வரைக்கும் படிப்ப பத்துன சிந்தனையோடயே வந்து சேந்தேன்.

கிராமத்துல பொண்ணா பொறந்தவுளுக்கு படிப்பும், அது தர்ற சந்தோஷமும் எப்படி இருக்கும்ணு சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம். அடிமைங்களுக்கு விடுதலை இல்லேன்னாலும், அது என்னண்ணு புரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க, அது மாதிரிதான் நானும்.

வெளஞ்ச வெள்ளாம வீடு வராம வட்டிக்காரனுக்கு படியளந்ததுப் போல, இடிஞ்சுப் போயி உக்காந்திருந்த அம்மாவ பாத்தா வழக்கத்த விட அப்பா சண்ட பெரிசா போட்ருப்பாரு போலத் தெரிஞ்சது. பள்ளிக்கூடத்துல வாத்தியார் பாராட்டுனத சொல்லி நெலமையா சீராக்கிரலாம்னு “அப்பா நான் எத்தனாவது மார்க்குன்னு பாரு”ன்னு பேப்பர எடுத்து ஆசையா கொடுத்தேன்.

கையில பேப்பர வாங்குன வேகத்துல சுக்கு நூறா கிழிச்சிட்டு “நாளையிலேர்ந்து பள்ளிக்கூடம் போக்கூடாது, படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் வீட்டுல உள்ள வேலையப் பாரு”ன்னு சொல்லிட்டு பட்டுன்னு எழுந்து போய்ட்டே இருந்தாரு. வாத்தியாரு பாராட்டு, முதல் மார்க்கு, பொதுத் தேர்வுன்னு மனசுல புதுவெள்ளமா வந்த படிப்ப பத்துன உற்சாகம், திடீர்னு வடிஞ்சு வறண்டுப் போய் நின்னுட்டேன்.

அம்மா காரணம் சொல்ல ஆரம்பித்தாள். “படிப்பு படிப்புன்னு மினிக்கிக்கிட்டு போனாளே வட கொண்டார் வீட்டு சாந்தி, சொல்லவே நாக்கூசுது – தேவூரு சின்னசாதி பயலோட ஓடிட்டாளாம். நம்ம குடும்பத்துல நடந்தா நாண்டுகிட்டுதான் சாவனும். அப்பா சொல்றத கேட்டு அடக்கமா நடந்துக்க”ன்னு அன்னைக்கே படிப்ப கழுவி கவுத்துட்டாங்க.

பசியோட இருக்குறவனுக்கு அன்னத்த காட்டி அடிச்சு விறட்டுனா எப்படி இருக்கும்ங்கிறதை அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன்.

இது நடந்து 21 வருசமாச்சு ஒரு தடவக்கூட சாந்தியக்காவ பாத்தது கெடையாது. காலப்போக்குல குடும்பம் கொழந்தன்னு என்னோட வாழ்க்கை நகரத்துக்கு மாறிப் போச்சு. ஊருக்குப் போகும் போது சாந்தியக்கா எப்படிருக்கான்னு அவங்க கிராமத்த சேந்தவங்கக்கிட்ட விசாரிப்பேன். ஒருத்தரும் சரியா சொல்ல மாட்டாங்க. ஆனா அவள நெனைக்காத நாளே கெடையாது.

வாழ்க்கை பிரச்சனைங்களோட வாழுற பொண்ணுங்களுக்கு, வேலைக்கு போற, படிச்ச பொண்ணுங்களப் பாத்தா ஒரு ஏக்கம் வரும். அவங்களுக்கு வேற பிரச்சினைங்க இருக்கிறது தெரிஞ்சாலும், நாம எதையோ இழந்துட்டமோண்ணு வலிக்கும். அப்படி படிப்பு போச்சேங்கற வருத்தம் வரும் போது கூடவே சாந்தியக்கா நெனப்பும் வரும். பின்னாடி வெவரம் வந்த பிறவுதான் நம்ம படிப்பு போனாலும், அக்கா செஞ்சது நம்ம சுத்துப்பட்டு ஊருகள்ல எந்த பொண்ணும் நினைச்சுப் பாக்காததுன்னு தெரிஞ்சது.

மகளிர் தினத்துக்கு நானும் ஒரு பெண்ணப் பத்தின பதிவு எழுதனுன்னு நெனச்சப்ப சாந்தியக்கா ஞாபகம் தான் வந்தது. எப்படியாவது அவளோட நம்பர் வாங்கி பேசி அத மகளிர் தின கட்டுரையா எழுதனுங்கற முடிவோட ஒரு மாசமா பலருட்ட துப்பு கேட்டு நம்பரை வாங்கி சாந்தியக்காட்ட பேசினேன்.

இத்தன வருசம் கழிச்சு பேசுரோமே என்ன நெனப்பாளோங்கற தயக்கத்தோட “சாந்தியக்கா, நான்தான் பேசுரேன், ஞாபகம் இருக்காக்கா”ன்னு  ஆரம்பிச்சேன். பல வருஷத்துக்கு முந்தி பாத்த அதே சாந்தியக்காவோட அன்பான பேச்சு மாறவே இல்ல.

“என்னடா அப்புடி கேட்டுபுட்ட நம்ம புள்ளடா நீ, எத்தன வருசமாச்சு சின்னப்புள்ளையில பாத்தது. நல்லாருக்கியா, அம்மா அப்பாவெல்லாம் நல்லாருக்காங்களா! தம்பி தங்கச்சியெல்லாம் என்ன செய்றாங்க ஒனக்கு கல்யாணம் ஆயி ரொம்ப வருசமா பிள்ள இல்லன்னு கேள்விப் பட்டேன் கொழந்த இருக்காடா, ஊருக்கெல்லாம் வருவியா, இத்தன வருசம் கடந்து நீ பேசற சந்தோசத்துல என்ன கேக்குறது ஏது கேக்குறதுன்னே தெரியல போ…” சாந்தியக்கா மூச்சுவிடாம கேட்டக் கேள்வியில தொண்டக் கதிர் நெல்லு வெளியே தள்ளுற மாதிரி பாசமும் ஏக்கமும் மடை தொறந்து கொட்டுச்சு.

ரொம்ப நாளைக்கு பெறவு பேசுறதால அக்காவ நீ வான்னு பேசவா, இல்லை நீங்க வாங்கன்னு பேசறதான்னு பேச்சுல தடுமாற்றம் இருந்திச்சு. ஆனா அக்காவோட நெருக்கமான பேச்சு பழைய நீ வாவையே கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருச்சு.

“நான் சந்தோசமா இருக்கேங்கா, உன்னோட பிள்ளைங்கள்ளாம் என்ன பண்ணுறாங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்துல வேலப் பாத்தாரு, பெரியாரு கட்சியில இருந்தாரு, இப்ப என்ன செய்றாரு, எப்புடி இருக்காரு?”

“பொண்ணு வெளியூருல காலேஜு படிக்கிறா, பய ஊருக்குல்லேயே பதினொன்னாவது படிக்கிறான். அவருக்கு பள்ளிக்கூடம், டியூஷன்னு வேலையே சரியாப் போவுது. முன்னமாரி கட்சியில இல்ல, ஆனா மாநாடு பொதுக்கூட்டம்னா போவாரு. குடும்பம், பிள்ளைங்க படிப்புன்னு வேலதான் கழுத்து வரைக்கும் இருக்கு, அப்பறம் எங்க கட்சி வேல செய்றது”.

“அந்த ஊருல உள்ளவங்க உன்ன எப்படி பாப்பாங்க, எப்படிக்கா நடத்துவாங்க?”

“தங்க தட்டுல வச்சு தாங்குவாங்கடி. ஒரு வேல சொன்னா ஓடி வந்து கேப்பாங்க. அதெல்லாம் மரியாதையா நடத்துவாங்க. எந்த கொறையும் இல்லடா. ஆனாலும் மத்தமத்த பிள்ளைங்கள்ளாம் தாத்தா, பாட்டி, பெரியம்மா, சின்னம்மான்னு சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போகயில நம்ம பிள்ள மட்டும் அனாதையப் போல வீட்லேயே அடஞ்சு கெடக்குதுங்களேன்னு நெனைக்கிம் போது கவலையா இருக்கும்டா. ஆனா பிள்ளைங்க அதையெல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு தைரியம் சொல்லும்”

“உன்னோட அம்மா உயிரோட இருந்தப்ப ஒரு தடவ கூட வந்து உன்னய பாக்கலையாக்கா”

“ஏதாவது செஞ்சுறுவாங்களோன்னு பயந்துகிட்டுதான் கல்யாணம் ஆயி, நாலு மாசம் வர இருக்குற எடம் தெரியாம இருந்தோம். வேற யாராச்சும் இருந்துருந்தா வெட்டிருப்பாய்ங்க. அவரு கட்சி அரசியல்னு இருக்காரு, அவர சுத்தி இவ்வளவு கூட்டம் இருக்கு, நெருங்க முடியாதுன்னு ஒதுங்கி இருக்காய்ங்கன்னு தெரிஞ்சப் பெறகுதான் இந்த ஊருக்குள்ள வந்தோம்.”

இதப் பேசுறப்போ சாந்தியக்கா பழைய காலத்துக்கு போய்ட்ட மாறி தெரிஞ்சிது.

“பாப்பா வயித்துல மூனு மாசமா இருந்துச்சு. எங்க அம்மா வந்து கருவ கலைச்சுரலாம், வீட்டுல கோச்சுகிட்டு போனதா ஊருல சொல்லிறலாம், மாமா கட்டிக்கிறேங்குறான் வந்துருன்னு பத்து தடவைக்கி மேல வந்து கூப்புட்டாங்க. அந்த பேச்ச பேசிகிட்டு இந்த வாசப்படி மிதிக்காதேன்னு திட்டி அனுப்பிச்சேன். அப்புறம் பிள்ளைங்கள்ளாம் பொறந்த பிறகு உங்களையெல்லாம் பாக்கணும் போல இருக்கு, ஆனா ஊருல அசிங்கமா பேசுவாங்களோன்னு பயந்துகிட்டே ஏழட்டுத்தடவ ராத்திரில வந்துட்டு பாத்துட்டு போனாங்க. அப்பறொம் வர்றதே கெடையாது.”

“ஒங்க அம்மா அப்பா சாவுக்குக்கூட நீ வரலையாமே ஏங்கா?”

“இத்தன வருசத்துல ஒரு தடவக் கூட நம்ம ஊருக்கு நான் வந்தது கெடையாது. அதுக்கு காரணம் பயம் கெடையாது. எதுக்கு நம்பளால ஒரு பிரச்சனன்னுதான். அப்பா செத்தது நாலு நாளைக்கப்பறந்தான் தெரியும், அம்மா செத்தது ரெண்டு மாசம் கழிச்சுதான் தெரியும். செத்தது தெரிஞ்சு வந்துறப் போறேன்னு அவசர அவசரமா அடக்கம் பன்னியிருக்கானுவொ. எங்க சித்தப்பங்காறன் வீட்டுலதான், சொத்து மொத்தத்தையும் அடைச்சு பட சாத்திக்கிற (படல்-முள்வேலி) எண்ணத்துல எங்க குடும்பத்த சின்னாபின்னமாக்கி சீறழிச்சுப்புட்டானுவொ.”

“பங்காளிப் பயல்ல பாதிப் பய பானைய தொடாம பருப்பள்ளுற பயலுக, போறெடம் வாரெடத்துல ஏம்புருசன்கிட்ட பேசுவானுவொ. ஆனா சாவ சொல்ல ஒருத்தனுக்கும் மனசில்ல. பணம் பதவின்னு இருக்கோமே எக்குத்தப்பா எங்கெனயாவது மாட்டிகிட்டா கட்சிக்காரன், வாவுவழி தெரிஞ்சு காப்பாத்துவான்னு கணக்குப்பண்ணி பாத்த எடத்துல பேசிவய்க்கிறாய்ங்க வேறோன்னுமில்ல.”

“உங்க தங்கச்சிய கட்டிக் குடுத்து வயுத்துல புள்ள இருக்கும் போதே ஒரு வருசத்துலேயே வீட்டுக்காரு எறந்துட்டாரு பாவம். ஊருல நீதான் காரணம்னு சொல்லுவாங்க, இப்ப அவ எப்புடி இருக்கான்னு தெரியுமா, நீ பாத்தியாக்கா?”

“எல்லாம் எங்க சித்தப்பந்தான் பண்ணுனது. நானு வீட்ட விட்டு ஓடிட்டா நல்ல மாப்புளையே கெடைக்காதா என்ன? சட்டிய பானையாக்குறதுதான் அவன் எண்ணம். ரெண்டு வேலி நெலத்த நாலு வேலியா ஒண்ணு சேத்துக்கிட்டான். சொத்த அமுக்கிகிட்டு செய்யறத செய்யலாம்ன்னு அவசர அவசரமா ஒரு சீக்காளி மாப்பிளைக்கி கட்டி குடுத்து என் தங்கச்சி வாழ்க்கைய கெடுத்துட்டானுவொ. இன்னைக்கி பெத்த பிள்ள எங்கருக்குன்னு சொல்லத் தெரியாம கூட பைத்தியமா அலையிறா. ஊருலேருந்து கந்த துணிய போட்டுகிட்டு வாரா, பாக்க சகிக்கல. இதுக்கெல்லாம் காரணம் அவைங்கெதான். எங்க வதையெல்லாம் அவங்கெளும் அணுபவிச்சு சாவுவாய்ங்கெ”

“சொத்துக்காக சாதிய காரணம் காட்டி உங்கள ஒதுக்கி வச்சுருக்காணுவொ, சுயநலத்துக்காக மறைமுகமா ஒறவு வச்சுக்குறானுவொ, தங்கச்சிக்கு 16 வயசுல உருப்படாத கல்யாணத்த பண்ணி வச்சு ஒரு வாழ்க்கைய அழிச்சிருக்கானுவொ, எல்லாம் புரிஞ்சுருந்தும் எதுக்கு ஒதுங்கி வாழ்ற, நீ எதுத்து கேக்க வேண்டியதுதானே?”

“என்னோட கையெழுத்து இல்லாம சொத்து வாங்கிருக்கானுவொ. இன்னைக்கி நெனச்சாலும் கேஸு போட்டு சொத்தெடுக்கலாம். ஆனா சொத்துக்காதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னு அவரையும் ஊரு நெனைக்கும். சொத்துக்காக எங்க குடும்பத்தையே அட்ரஸ் இல்லாம பண்ணிட்டாய்ங்க. அடுத்தவங்க குடிய கெடுத்து அவன் மட்டும் வாழவா போறான்?”

“அதுவும் தவிர நானு ஒழிஞ்சல்லாம் வாழளடா. நம்ப ஊர்லேர்ந்து பழகுனவங்க, படிச்சவங்கன்னு நெறையப் பேரு கல்யாணப் பத்திரிக்கை குடுப்பாங்க. அவரு மட்டும் போவாரு. படிப்பு பதவின்னு அவர மரியாதையா நடத்துவாங்க. அது ஒரு மாதிரி போயிரும். நான் போனா ஒருத்தரில்ல ஒருத்தரு சுருக்குன்னு ஒரு வார்த்த சொல்லிட்டா என்ன செய்றது? பின்னாடி புள்ளைங்க மனசொடிஞ்சு போயிரும். அத தாங்கிக்க முடியாது. அதுங்களுக்கு ஒரு பாதிப்பு வரக்கூடாதுன்னு தான் எம்.பி.சி.-ன்னு போடாம பி.சி.-ன்னு பதிவு பண்ணி சர்ட்டிபிகெட் வாங்கிருக்கேன். பிள்ளைங்கதானடா முக்கியம்.”

“சாதிய மீறி, தாலிய மறுத்து தைரியமா கல்யாணம் பண்ணீங்க. எதுக்கு சாதிய அடையாளப் படுத்தி சான்றிதழ் வாங்குனிங்க? இதுக்கு ஒங்க வீட்டுக்காரரு ஒன்னும் சொல்லலையா?”

“அவரு என்னத்த சொல்றது. சாதி போடாம சர்ட்டிபிகேட் வாங்க முடியாது, அப்படி வாங்குனா செல்லாதுன்னு சொல்லிகிட்டாங்க, வெவரம் தெரியலையடா!” என்று எதார்த்தமான மனநிலையோடு பேசினாள்.

“சரிக்கா, நீ போனப்புறம்தான் என் செட்டு பொண்ணுங்க படிப்பை நிறுத்திட்டாங்களே, அது தெரியுமாக்கா?”

“ஆமாண்டி, நான் போவலேன்னாலும் உன்ன என்ன கலெக்டருக்கா படிக்க வைக்க போறாய்ங்கெ? சமைஞ்சு வீட்டுல உக்காந்த எந்த பொண்ணுடி பள்ளிக் கூடம் போகுது? எல்லாம் நம்ம காலத்தோட ஒழியட்டும், உன் பொண்ணையும், என் பொண்ணையும் தலைய அடகு வைச்சாவது படிக்க வைப்போம்”

“நீங்க வீட்டவிட்டு போனதை பற்றி ஊரில் பலமாதிரி பேசுனாங்க. அன்னைக்கி இரவு என்னதாக்கா நடந்தது எப்புடி போனிங்க?

“ஏய்… யப்பா, எப்ப நடந்தத இப்ப கேக்குற. வந்த வழித்தடமே புல்லு மண்டி போச்சுப் போ… வேறெதாச்சும் பேசுவோம்டா.” என்றாள், இனிமே பேசி என்னாகப் போகுது என்ற ஆயசத்துடன்.

“எம் பொண்ணுகிட்ட உங்க கதைய முழுமையா சொல்லி தைரியமா வளக்கணும்க்கா, சொல்லுங்க”

“ஒம் பொண்ணக் கூட்டிக்கிட்டு எங்க ஊருக்கு வா, நான்தாண்டி அந்த பெரியம்மா, இதுதாண்டி என்னோட கதையின்னு நேர்லேயே சொல்றேன்” என்று வெக்கப்பட்டு சிரித்தாள்.

_______________________

இதுவரை சாந்தியக்காவிடம் பேசியதுல சொந்தபந்தம்னு இல்லாம போச்சேன்னு வருந்தப்பட்டாளே தவிர ஒரு இடத்துல கூட மனம் தளர்ந்து போய் புலம்பல. பாத்துப் பழகுற தூரத்துல ‘சின்ன’ சாதியைச் சேர்ந்த ஒருவர கல்யாணம் பண்ணிகிட்டு, சொந்த பந்தங்கள பாக்க முடியாம பழகமுடியாம, அம்மா அப்பாவ இழந்து, சொத்த பறிகொடுத்து, கண்ணுக்கு நேரா தங்கச்சி வாழ்க்க நாசமா போயி எத்தன நெருக்கடி!

சரி, ஊரை விட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளைங்ளோட சாந்தியாக்கா இருந்தாலும் அவளோட சாதிய மட்டும் இன்னும் விட முடியல. படிப்பு, வேலைக்கு மட்டுமில்லாம ஊருல ஒரு கவுரவத்தோட வாழணும்னாலே, சாதி கட்டாயம் வேணும்னு எல்லாரும் பேசுனா சாந்தியக்கா தனியா நின்னு என்ன செய்ய முடியும்? ஆனா சாதிப் பேரு எதுன்னு முடிவு பண்ற நேரம் வந்த போது அக்கா தன்னோட ‘பெரிய’ சாதியத்தான் தேர்ந்தெடுத்தாள். இதுலயும் அவளோட பெரியார் கட்சி வீட்டுக்காரருக்கும் பெரிய குறையில்லைங்கிறது அநியாயம்.

இதுக்கு அவர மட்டும் கொறை சொல்லி பிரயோஜனமில்ல. காலேஜ் நடத்துறதலயும், சீட்டு கம்பனி நிர்வகிக்கிறதலயும் மேதைங்களாயிட்ட பிறகு சாதி மறுப்பு கல்யாணம்,போராட்டமெல்லாம் அவரோட கட்சிகிட்ட எதிர்பார்க்கிறது தப்புதான். ஆனாலும் இவங்க என்ன முடிவு எடுத்தாலும் ஊர் உலகம் இவங்கள சாதி மாறி கல்யாணம் பண்ணுனாங்கன்னு எளக்காரமத்தான் பாக்குது. அதுதான் இன்னைக்கும் கூட அக்கா தன்னோட சொந்த ஊருக்கு போக்குவரத்து இல்லாம இருக்கா. என்ன இருந்தாலும் ஒரு கிராமத்துல இது மாதிரி ஊர வீட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி வாழ்றது சாதாரண விசயம் இல்ல.

எங்க ஊருல வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு படிப்புங்கறது அரிதா இருந்த காலம்தான் அது. வயசுக்கு வந்த பொண்ணு அடுத்த வீடு போகக் கூடாது. மாமா, மச்சான்னு மொறக்கார ஆம்பள வந்தா எதுக்க வந்து நின்னு பேசக் கூடாது, மறைஞ்சுதாங் இருக்கணும். வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும்.

இப்படி கட்டுப்பெட்டியான ஒரு ஊருக்குள்ள இருந்து ‘கீழ்’ சாதிய சேந்த ஒருத்தரோட, வீட்ட விட்டு ஓடிப்போயி காதல் கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் வாழ்ந்து காண்பிச்ச சாந்தியக்கா துணிச்சல்காரிதான்.

எங்கூர் பக்கத்துல சாதி பிரச்சனைக்கு அருவா தூக்கமாட்டாங்க, கலவரம் நடக்காது. ஆனா ஒரு பொண்ணு, காதல் கல்யாணமுன்னு சாதி மாறி போச்சுன்னா எப்படியாவது திரும்ப கூட்டிட்டு வர முயற்சி செய்வாங்க. அப்படி கூட்டிட்டு வந்தா அந்த பொண்ணுக்கு வெளிய தெரியாம மருந்த குடுத்து கொன்னுபுட்டு கமுக்கமா கவுரவத்த காப்பாத்திடுவானுங்க. இல்லன்னா ஊருல ஒருத்தனும் மதிக்காம, சின்னாபின்னப்பட்டு சாந்தியக்கா குடும்பம் போல சீரழிஞ்சு போணும், இதுதான் நீதி.

அப்பேற்பட்ட ஊருல அந்த நீதிய முத முதல்ல தூக்கி எரிஞ்சவ சாந்தியக்கா தான். நாம் வீட்ட விட்டு போனா என்ன நடக்கும்னு தெரிஞ்சுருந்தும் எதுக்கும் கலங்காத தைரியம் அவளுக்கு. அந்த வகையில காதலுக்காக சாதிக் கட்டுப்பாட்ட மீறுன சாந்தியக்காதான் எங்களுக்கு தலப்புதாரி (முதல் ஆள்).

–    சரசம்மா
( உண்மைச் சம்பவம் – பெயர்கள் கற்பனை )

வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்

12

பா.ஜ.க கூட்டணியை உருவாக்கிய புரோக்கர் தமிழருவி மணியனே தனக்கு தொகுதி கிடைக்காததால் மனம் புண்பட்டு அரசியலை வேணாம் என்று புலம்பி வருகிறார். பா.ஜ.க கூட்டணி இருந்தால்தான் ஒன்று இரண்டு தேத்த முடியும் என்று சின்னய்யாவும், அது தேவையில்ல நாம ‘சமூகநீதி’ கட்சிகளோட பார்த்துக்கலாம்னு அய்யாவும் இன்னமும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவில்லை. அதனால்தான், தாமரை கூட்டணியிலிருந்து மாம்பழம் விழுமா, ஓடுமா என்று பத்திரிகைகள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், நடிகன் நாடாளக் கூடாது என்று சொன்ன ராமதாஸ் இந்த நிமிடம் வரை  கூட்டணியில் கேப்டனுக்கு சியர்ஸ் சொல்லுகிறார்.

ramadoss2ஓவியம் : ஓவியர் முகிலன்

டியூப் புராடக்ட்ஸ் : திமுக, சிபிஎம்மை தோற்கடித்த புஜதொமு

8

சென்னை ஆவடியில் உள்ள டியூப் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் பிரபல முருகப்பா குழுமத்தைச் சேர்ந்ததாகும். இந்நிறுவனத்தில் செயல்பட்டு வரும் பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த மே’2013-ல் நடந்தது. அந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு அணித் தோழர்கள் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க சார்புடைய அணியினரை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றனர். பு.ஜ.தொ.மு அணியின் தலைமையை ஆலை நிர்வாகம் அரைகுறை மனதுடனே அங்கீகரித்தது. நமது தலைமையை ஏற்ற தொழிலாளர்களுக்கு ’பாடம்’ புகட்ட வேண்டும் என்பதற்காக, தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகளை வெட்டி வந்தது. மாற்று அணி தொழிலாளர்களை நமக்கு எதிராக உசுப்பேற்றியும் வந்தது. எனினும், சமரசமற்ற நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் மத்தியில் நமது அரசியலை நிலைநாட்டி வந்தோம்.

ஆவடி டியூப் புராடக்ட்ஸ் இந்தியா
ஆவடி டியூப் புராடக்ட்ஸ் இந்தியா (படம் : நன்றி http://www.tiindia.com/article/events/360)

இந்நிலையில் மேற்படி நிறுவனத்தின் சேமநல நிதி டிரஸ்டுக்கான தேர்தல் இன்று (15.3.2014) நடைபெற்றது. 3 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க அணிகளுடன் நமது அணியும் போட்டியிட்டது. பு.ஜ.தொ.மு அணியால் ஏற்கனவே நிர்வாகம் பல சலுகைகளை பறித்து விட்டதாகவும், அடுத்து வரும் தொழிற்சங்கத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பி..எஃப் தேர்தலை கருத வேண்டும் எனவும், நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க பு.ஜ.தொ.மு அணியைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க அணியினர் பிரச்சாரம் செய்தனர்.

இந்தப் பிரச்சாரத்திலிருந்தே இவர்களது தொழிலாளர் துரோகம் தெரிகிறது. புஜதொமு சமரசமில்லாமல் போராடுகிறது. அதனால் நிர்வாகம் பயந்து கொண்டு உரிமைகளை பறிப்பதாக அச்சுறுத்துகிறது. ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் போராடுவதால் புஜதொமுவை தொழிலாளர்கள் வரவேற்கின்றனர். இதில் புஜதொமு போல நாம் போராடக்கூடாது, நிர்வாகத்தை அண்டிப்பிழைத்து காலத்தை ஓட்டலாம் என்பதையே தொழிற்சங்க உரிமையாக முன்வைக்கின்றன, திமுக மற்றும் சிபிஎம்மின் தொழிற்சங்கங்கள். தேர்தல் அரசியல் முதல் தொழிற்சங்க தேர்தல் வரை இந்தக் கட்சிகளின் யோக்கியதை இதுதான்.

நிர்வாகத்தின் மறைமுக அச்சுறுத்தல் மற்றும் சமரசவாத சங்கங்களின் அவதூறு ஆகியவற்றை டி.பி.ஐ தொழிலாளர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு பு.ஜ.தொ.மு தலைமையை ஏற்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது அணி சார்பில் போட்டியிட்ட 3 தோழர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பு.ஜ.தொ.மு அணி
புவனேந்திரன் 237
சிறீதரன் 233
பாலமுருகன் 199

சி.ஐ.டி.யு அணி
ஜெயபால் 178
மேகவர்மன் 144
முருகன் 134

தொ.மு.ச
தனசேகரன் 107
ஸ்டீபன் 175
தணிகைவேல் 147

முருகப்பா குழுமத்தில் ஏற்கனவே டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் செங்கொடி ஆழமாக ஊன்றி விட்ட நிலையில் தற்போது டி.பி.ஐ நிறுவனத்தில் தொழிலாளர்களது நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். ஒட்டு மொத்த முருகப்பா குழுமத்திலும் பு.ஜ.தொ.மு-வின் செங்கொடி பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டக் குழு

ஒசூர் வெக் ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

0

ஒசூர் வெக் இந்தியா ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

வெக் இந்தியா
வெக் இந்தியா

னரக மோட்டார்ஸ்களை பெருமளவில் உற்பத்தி செய்துவரும் பிரேசில் நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் ஒசூர் சிப்காட்-2 பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் பல நூற்றுக்கணக்கில் இந்தியாவில் தொடங்கப்பட்டு உற்பத்தியை குவித்து கொள்ளை லாபமீட்டுகின்றன. இந்தக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு பட்டுக்கம்பளம் விரித்து அழைத்து அனைத்து சலுகைகளையும் செய்து தருகிறது. ஆளும்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள ஓட்டுக்கட்சிகள் அனைத்துமே இந்த சேவைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வருவதோடு மட்டுமின்றி இந்த வேதனைகளையே சாதனைகளாக சொல்லி பீற்றிக் கொள்கின்றன.

‘பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்’ என சவடால் அடிக்கின்றனர். உண்மையில் அப்படி அழைத்துவரப்படுகின்ற கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காகதான் வருகின்றனவா? அவர்கள் தொழிலாளர்களது உரிமைகளையோ, அல்லது இந்த நாட்டின் சட்டதிட்டங்களையோ மயிரளவுகூட மதித்து நடந்துக்கொள்வதில்லை என்பதையே பல அனுபவங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களும் ரத்த சாட்சியங்களாக நாட்டுமக்களுக்கு உணர்த்திவருகின்றன. இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனஙகளில் தொழிற்சங்கம் அமைத்து நிலைநிறுத்துவது என்பதே சவாலான பணியாக உள்ளது.

1WEG India நிறுவன தொழிலாளி விஜயசந்திரன்
1WEG India நிறுவன தொழிலாளி விஜயசந்திரன்

இதற்கு மற்றுமொரு உதாரணம்தான் ஒசூர் சிப்காட் 2 பகுதியில் செயல்பட்டுவரும் பிரேசில நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா லிமிடெட்.

இந்த நிறுவனத்தில் பெயிண்டிங் பிரிவில் பெயின்டராக வேலைசெய்துவருபவர்தான் விஐயசந்திரன் எனும் தொழிலாளி. இவருக்கு அண்மையில் இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்ட நிலையில்கூட அவருக்கு மருத்துவ வசதிகளை செய்துதர மறுத்து வருகிறது அந்த ஈவிரக்கமற்ற லாபவெறி பிடித்த ஆலை நிர்வாகம். இதனை அந்த ஆலையில் இருக்கின்ற சங்கமும் வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில் ஒசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகர அமைப்பு சார்பாக இந்த ஆலைநிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்து ஒசூர் முழுவதும் பிரச்சாரம் செய்திருந்தனர். இதனை கண்ட அந்த ஆலையில் வேலைசெய்துவரும் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து தங்கள் ஆலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச்சங்கத்தை ஏற்படுத்திப் போராடி தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க துணிந்தனர். அதனடிப்படையில் கடந்த 07.02.2014 அன்று சங்க தொடக்க விழா அறிவித்தனர். உடனே ஒசூர் போலீசு ஓடோடிவந்து இங்கே 32 ஆக்ட் இருப்பதை காரணம்காட்டி அனுமதியை மறுத்து 12.02.2014 அன்று நடத்திக் கொள்ளுங்கள் என நைச்சியமாக மிரட்டியது. தற்போதுதான் தொடக்கம் என்பதால் தொழிலாளர்களின் உணர்வுமட்டம் ஆகியவற்றை கணக்கில்கொண்டு பின்வாங்கி 12.02.2014 அன்று போலீசு அனுமதியுடன் தொடக்கவிழா நடத்தப்பட்டது.

இந்த புதிய புரட்சிகர தொழிற்சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் இணைந்துக்கொண்டனர். இந்த தொழிற்சங்கத்திடம் விஜய சந்திரன் எனும் தொழிலாளியின் மருத்துவம் மற்றும் ஊதிய உயர்வுப்பிரச்சினை, ஆலையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவிடன் காதில் விழுந்த சங்காக இருந்ததனால, இதனை மக்கள் மத்தியிலும் மாவட்ட நிர்வாகத்தின் மத்தியிலும் கொண்டுச் செல்லும் வகையில் அவ்வாலைத் தொழிலாளர்களை திரட்டி ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பே மாபெறும கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக திட்டமிட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அதனடிப்படையில் கடந்த 14.03.2014 அன்று மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவ்வமைப்புக்கேயுரிய எழுச்சியோடு நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வாலையின் கிளைச்சங்க செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமைத் தாங்கினார்.

கண்டன உரையாக

  1. தோழர் ராஜேஸ்வரன், கிளை இணைச்செயலாளர்
  2. செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
  3. தோழர் பரசுராமன், மாவட்டத்தலைவர்

ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக சாதுசுந்தர்சிங் நன்றியுரையாற்றினார்.

அவர்கள் பிரச்சாரம் செய்த துண்டறிக்கையில் உள்ள செய்திகளை அப்படியே இங்கே தருகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

——————————————————–

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் மறுத்து, அற்பக்கூலிக்கு இரத்தம் சுண்ட சுண்ட வேலைவாங்கும் நவீன அடிமைகளின் நகரமாக மாறிவிட்ட ஒசூரில், சிப்காட் 2-ல் இயங்கிவரும் ‘செங்கல்சூளை’தான் பன்னாட்டு நிறுவனமான வெக் இந்தியா எனும் கனரக மோட்டார் தொழிற்சாலை!

இந்த ஆலையில் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், நவீன கொத்தடிமைத்தனங்களுக்கு சில உதாரணங்கள்!

  • வெல்டிங், கிரைன்டிங்க், பெயின்டிங்,பிட்டிங் போன்ற அதிக வெப்பத்தையும் நச்சுப் புகை, தூசி, வெளிச்சத்தை உருவாக்கும் வேலைகளை, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அருகருகே அமைந்து பணிச்செய்யும் சூழல்.
  • உற்பத்தித் தளத்தைவிட உற்பத்திச் செய்யப்படும் மோட்டார்களின் அளவு மிகப்பெரியவை. இது உற்பத்திக்கு பொருத்தமில்லாத தளம். இதனால், மிகப்பெரும் இன்னல்களைத் தொழிலாளர்கள் அனுபவிக்கின்றனர்.
  • 8 மணிநேர வேலைநேரத்தில் ஒரு நிமிடம் கூட சும்மா நிற்கக்கூடாது என்று தொழிலாளர்களை வேலைவாங்கும் இலாப வெறிபிடித்த அதிகாரிகள்.
  • அருகில் உள்ள தொழிலாளியைப் பார்த்து பேசக் கூடாது, உட்கார்ந்து டீ குடிக்கக் கூடாது, தரமற்ற கேண்டீன் உணவு பற்றி பேசக் கூடாது, மீறி கேட்டால் பொய் குற்றம் சட்டப்படும் அபாயம், இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளுக்கு கூட செல்வதற்கு அனுமதி இல்லை என ஒரு பண்ணையடிமைவிட கேவலமாக வேலை வாங்கப்படும் நிலைமை உள்ளது.

வெக் இந்தியாவின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முதல் தாக்குதல், தொழிலாளி விஜயசந்திரன்!

மேற்கண்ட முதலாளித்துவ பயங்கரவாத பணிச்சூழலில் வேலை செய்தவர்தான் தொழிலாளி விஜயசந்திரன் (வயது 32). ரூ 9000 என்ற அற்பக்கூலிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கமர்த்தப்பட்டார். வேலையில் சேர்ப்பதற்கு முன்பாக, முறையாக மருத்துவப் பரிசோதனை செய்துதான் எடுத்துக்கொண்டது வெக் இந்தியா ஆலை நிர்வாகம். இவர் டூல் மேக்கர் என்ற பணிக்கு தான் இவ்வாலை மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டார் . ஆனால், இவருக்கு சிறிதும் அனுபவமற்ற பெயின்டிங் வேலை கட்டாயமாக இவ்வாலை நிர்வாகத்தால் திணிக்கப்பட்டது.

முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தராமல் செயல்பட்டதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து உடல்நிலை பற்றி தொழிலாளர்க்கு விவரம் தெரிவிக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக மருத்துவ அறிக்கை விவரம் மறைக்கப்பட்டு வருகிறது. வெக் நிர்வாகத்தால் இவருக்குரிய மருத்துவ அறிக்கை விவரம் சொல்லப்படவில்லை. கடந்தாண்டு சிறுநீரகம் பழுதடைவது ஆரம்ப நிலையில் இருந்ததை தெரிந்தும், விஜயசந்திரனுக்கு இந்த விசயத்தை தெரிவிக்காமல் மறைத்து, தனது சட்டவிரோத பணிச்சூழலில் தொடந்து வேலையில் ஈடுபடுத்தியது. இதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் முழுமையான பரிசோதனை செய்து, இவருக்கு விடுப்பு கொடுத்து முறைப்படுத்தாமல் ஆலை மருத்துவரை கொண்டு வேலையில் ஈடுபடுத்துவதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்தது. உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியது, நிர்வாகம்.

இந்த வகையான ஆலைநிர்வாகத்தின் அடக்குமுறையால் விஜயசந்திரனின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. இதனால், இவர் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் உள்ளார். இதற்கு ஆலை நிர்வாகம் இதுவரை எந்த உதவியும் செய்யாமல் இவர் மரணம் அடையவேண்டும் என காத்திருக்கிறது. விஜயசந்திரன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரத்த சுத்திகரிப்பு (டையலிஸிஸ்) செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். மாதம் ரூ 45,000 செலவு செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார். மிகவும் வறிய அவரது குடும்பத்தினர் தங்களது நகை, வாகனம் மற்றும் உடைமைகளை விற்று அவரது உயிரை காத்து வருகின்றனர். கைக்குழந்தையுடன் அவரது மனைவி அன்றாடம் உணவுக்கே திண்டாடி வருகிறார்.

இவர் மட்டுமல்ல, வெல்டிங், பெயின்டிங், ஹீட் ட்ரீட்மெண்ட், ஸ்பாட்வெல்டிங் போன்ற பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலரும் முறையான பாதுகாப்பு இல்லாததால் பலவித நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ ஆய்வறிக்கையையும் ஆலை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் உள்ளே இருக்கும் டாக்டர் (பரதேசி படத்தில்வரும் டாக்டரைப் போன்ற நிர்வாகத்தின் எடுபிடி மருத்துவர்) அனுமதி கொடுத்தால் தான் வெளியே வரமுடியும் என்ற அவலநிலை உள்ளது. ஆனால், அந்த மருத்துவரும் அனுமதி கொடுப்பதில்லை.

எனவே, விஜயசந்திரனுக்கு மரணத்திற்கு சமமான ஒரு துன்பத்தை ஏற்படுத்தியதாலும், கடந்த 2013–ஏப்ரல் மாதத்திலேயே கிட்னி செயலிழந்துவிட்டதை தெரிந்தும் அவருக்கு அதனை மறைத்ததற்காகவும், தனது இலாபவெறிக்காக உரிய மருத்துவம் செய்யாததற்காகவும், தொடர்ந்து அபாயகரமான உற்பத்தியில் ஈடுபத்தியதற்காகவும், தற்போது கூடிய விரைவில் கிட்னி மாற்றவில்லையெனில், விஜயசந்திரன் இறந்துவிடுவார் என்று தெரிந்தும் அவரது உயிரைக் காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது மரணத்திற்காக காத்திருப்பதாலும் (கொலை முயற்சி), ஆலையை பாதுகாப்பு இல்லாமல் நடத்துவதால் விஜயசந்திரனைப் போலவே தொழிலாளர்களுக்கு பாதிப்பு விளையும் என்று தெரிந்தும் தொடர்ந்து இதே பாதுகாப்பற்ற பணிச்சூழலில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவதாலும் ஆலை நிர்வாகத்தையும், இந்த பணிச்சூழலில் வேலை செய்ய வைக்கும் மேனேஜர்கள், அடிமை மருத்துவர் ஆகியோரை கொலை முயற்சிக் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும்.

தொழிலாளியின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரகசிய பேரம் பேசும் ஆட்காட்டி ஏ.ஐ.டி.யூ.சி.!

இவ்வாலையில் நிர்வாக அதிகாரிகளால் மற்றும் அவர்களது வெளி நண்பர்களால் தொழிலாளர்களில் சிலரை ஏமாற்றி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏ.ஐ.டி.யூ.சி. என்ற சங்கம்.

இந்த சங்கத்தின் யோக்கியதை என்ன?…

  • இச்சங்கம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாத சங்கம். சில கட்ட பஞ்சாயத்து நபர்களால் நடத்தப்படுகின்ற சங்கம்.
  • சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் வெளியாட்களைக் கொண்டுள்ளதே, இது கட்டபஞ்சாயத்து சங்கம் என்பதற்கு ஆதாரம்.
  • இந்த சங்கம் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா? ஆலையில் தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்காக ஒரு சங்கம் கட்ட முயன்ற போதுதான் ஆலை நிர்வாகத்தால் இச்சங்கம் தொடங்கப்பட்டது.
  • இதுவரை தொழிலாளர்களுக்காக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி தொழிலாளர்களையும் ஏ.ஐ.டி.யூ.சி. முன்னணியாளர்களையும் ஏமாற்றி வருகிறது
  • நடக்காத ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைக் காரணம் காட்டி, இவ்வாலை நிர்வாகத்தால் பொய் காரணங்கள் கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்காக இந்த சங்கம் பேசவில்லை. விஜயசந்திரன் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி பேச முடியாது என்றது.
  • சட்டபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி ஏமாற்றி வந்த இச்சங்கம், இதுவரை தொழிலாளர் துறையில் எந்த வழக்கு பதிவு ஏதுமில்லை என கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • இச்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆலையில் உள்ள இச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பேச்சுவார்த்தையை சங்க நிர்வாகிகளை கூட வைத்துக் கொள்ளாமல் ரகசியமாக நடத்தி வருகின்றனர். இதற்கு பெயர் கட்டைபஞ்சாயத்து! லோக்கல் மொழியில் சொன்னால், அன்டர் டீலிங்!
  • இதனால்தான் இவ்வாலையில் இவர்கள் நடத்துவதாக கூறிக்கொள்ளும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எந்த அடிப்படையில் நடத்துகின்றனர் என்பதையோ, என்ன வகையில் கோரிக்கைகள் வைத்துள்ளனர் என்பதையோ, பிற விசயங்கள் எதையும் தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.

இதுபோன்று இச்சங்கத்தின் சட்டவிரோத, தொழிலாளர் விரோத செயல்பாடுகள் பல. சுருக்கமாக சொன்னால், இது சங்கமல்ல. ஆலைநிர்வாகமே உருவாக்கியுள்ள ஒரு கைப்பாவை அமைப்பு. மற்ற ஆலைகளில் துரோக சங்கத்தில் அவ்வாலை தொழிலாளர்கள் இருப்பர். இங்கு ஒருபடி மேலே எல்லாமே வெளியாட்கள்! இவர்கள் இதற்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் என்ற ஆலையில் சட்டவிரோத ஒப்பந்தம் போட முயற்சித்து அவ்வாலை தொழிலாளர்களால் அம்பலப்பட்டு போனவர்கள் என்பது ஒரு உதாரணம்.

தொடங்கியது பு.ஜ.தொ.மு.வின் புரட்சிகர சங்கம்!

ஏ.ஐ.டி.யூ.சி.யின் இந்த ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொண்டுதான் பு.ஜ.தொ.மு. தொடங்கப்பட்டது. சங்கம் தொடங்கிய முதல் இவ்வாலையில் நடந்து வரும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக முறையாக குரல் கொடுத்து வருகிறோம். சட்டபூர்வமாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பெரும்பான்மை சங்கமாக பு.ஜ.தொ.மு.விடம் இவ்வாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்ந்து தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஜயசந்திரன் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி பு.ஜ.தொ.மு. சுவரொட்டி இயக்கம், மக்கள் மத்தியில் பிரச்சாரம், சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், ஆலை நிர்வாகம், இந்த வெளியாட்களுடன் ஒப்பந்தத்தை போட்டு தொழிலாளர்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது. இந்த சதியின் மூலம் அடுத்து பல ஆண்டுகளுக்கு தொழிலாளர்களை நாயைவிட கேடாகக் கொடுமைப்படுத்த முடியும். இதுபோன்ற துரோக ஒப்பந்தங்கள் போடப்பட்ட பல ஆலைகளில் (அசோக் லேலாண்டு, கார்போரண்டம்) தொழிலாளர்களை நிரந்தரமாக பிளவுப்படுத்தி குளிர்காய்ந்து வருகின்றன, அவ்வாலை நிர்வாகங்கள். இதேபோல, வெக் இந்தியா தொழிலாளர்களையும் ஒரு கட்டபஞ்சாயத்து கும்பலை வைத்து துரோக ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது வெக் இந்தியா நிர்வாகம்.

ஆனால், இதனை பு.ஜ.தொ.மு. அப்படியே விட்டுவிடாது. தொழிலாளர்களும் ஏமாந்து இருந்துவிடமாட்டார்கள். இது போன்று ஏற்கனவே குளோபல் ஃபார்மாடெக் ஆலையில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த, துரோக ஒப்பந்தம் போட எத்தனித்த நிர்வாக அதிகாரி ஏகாம்பரம் சிறைக்கு சென்று, களி தின்று, ஓசூரில் செல்லாக்காசாகி போன வரலாறு உள்ளது. ஆகையால், வெக் இந்தியா ஆலைநிர்வாகம் ஜனநாயகமான முறையில் எங்களது கருத்துக்களை எடுத்துக்கொண்டு சட்டபூர்வமான சங்கமான பு.ஜ.தொ.மு.வுடன் பொதுகோரிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். உடனடியாக, விஜயசந்திரனின் உயிரைக்காப்பாற்ற சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு நிதி ஒதுக்க வேண்டும். அவரது குடும்பத்தை பசி, பட்டினியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளர்களை பலியிடுவது என்பது அசோக்லேலாண்டில் சாந்தகுமார் என்ற தொழிலாளி முதல் நோக்கியாவில் அம்பிகா என்ற தொழிலாளி வரை நாடெங்கும் பரவி உள்ளது. ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களை மட்டுமல்ல, பல ஆயிரம் உழைக்கும் மக்களைக் காவு கொண்ட போபால் விசவாயு போன்ற படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன. இருப்பினும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. ஆகையால், ஒசூர் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் வெக் இந்தியா ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் மீது தொடுத்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் நாளை நம்மையும் தாக்கும் என்பதை உணர வேண்டும். அதேசமயம், ஓட்டு சீட்டு தொழிற்சங்கங்களும், ஆலை நிர்வாகத்தின் கைப்பாவை தொழிற்சங்கங்களும் எந்த காலத்திலும் தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடியதில்லை. நாடாளுமன்றத்தில் தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டிற்குள் தொழில் தொடங்க அழைத்துவரும் இந்த ஓட்டுக்கட்சிகள், இந்த கம்பெனிகள் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்ப்பார்கள் என்று கருதுவது முட்டாள்தனம்!

ஆகையால், மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளுக்காக பு.ஜ.தொ.மு. சங்கம் போராடி வருகிறது. ஒசூரில் உள்ள பிற ஆலை தொழிலாளர்களே, நீங்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுங்கள். ஒசூரில் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு குரல் கொடுத்துவரும் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள வெக் இந்தியா தொழிலாளர்களாகிய நாங்களும் பிற ஆலை தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்! ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழியில் தள்ளுவோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வெக் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிட்டெட் கிளைச் சங்கம்
தொடர்புக்கு: 97880 11784 – ஒசூர்

வடிவேலு பேக்கரி VS தா.பா. பேக்கரி

13

“மகிழ்ச்சியாக இணைந்தோம். மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று சொன்னாராம் ஓ.பன்னீர் செல்வம். ”சேர்ந்திருப்பதாக அவர்கள்தான் சொன்னார்கள், அதுபோல பிரிவையும் அவர்களே அறிவிக்கட்டும். அதுவரை நாங்கள் அவர்களுடன்தான் இருப்போம்” என்கிறார் தா.பா (தா.பாண்டியன்). இதில் சம்மந்தப்பட்ட பெயர்களை நீக்கினால் இது ஏதோ கைவிடப்பட்ட காதலிக்கும் ஏமாற்றிய காதலனுக்கும் இடையேயான உரையாடலைப் போல இருக்கும். போதும் போதாததற்கு ”அவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார்” என வாழ்வு கொடுக்கும் பாத்திரத்தை ஏற்றிருந்தார் கருணாநிதி. நாம் பன்னெடுங்காலமாக புராணத்திலும், நாடகத்திலும், சினிமாவிலும் பார்த்து வந்த கற்புநெறி தவறா காதலிகளின் கதையை நினைவுபடுத்துகிறது இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் நிலை.

ஓ. பன்னீர் செல்வம்
கற்பு நெறி தவறாத காதலர்களாய் கம்யூனிஸ்டுகள் இருப்பதால் “மகிழ்ச்சியாக இணைந்தோம். மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று சொன்னாராம் ஓ.பன்னீர் செல்வம்.

அதனை இன்னும் உறுதி செய்யும் விதமாக, ஏமாற்றப்பட்டாலும் தனித்து வாழ்வோமேயன்றி இன்னொருவனை ஏற்கமாட்டோம் எனும் பதிவிரதா தர்மத்தை கடைபிடித்திருக்கின்றன இரண்டு ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளும். இவர்களது இந்த விரக்தியைக் கண்டு கட்சியைக் கலைத்து விடும் தற்கொலை முடிவை எடுத்து விடுவார்களோ என அஞ்சினேன். நல்வாய்ப்பாக அந்த ‘துன்பியல்’ சம்பவம் நிகழவில்லை. இந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று மட்டும் கவனமாக கருத்து சொல்லியிருக்கிறார் தா.பா. துணைவர் மனம் திருந்தி என்னை ஏற்றுக் கொள்வார் எனும் நம்பிக்கை அவ்வாசகங்களில் தென்படுகிறது.

துரோகம் வென்றதாக வரலாறில்லை என மொட்டையாக முகநூலில் சாபம் விடுகிறார் எம்.எல்.ஏ பாலபாரதி. ஆளுக்கு ஒன்பது சீட் போட்டியிடுவது (அம்மாவின் தற்போதைய ராசி எண் ஒன்பதா, ஆறா?) என்ற முடிவை அறிவித்த டி.ராஜா, கால சூழ்நிலைகளால் இப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக, மரண அறிவிப்புக்குரிய வாய்ஸ் மாடுலேசனுடன் அறிவிக்கிறார்.

ஹிட்லரின் இந்திய வெர்ஷன் மோடியையே பயப்படாமல் விமர்சனம் செய்யும் இடதுசாரி பேச்சாளர்களில் யாராவது ஒருவர், ஒரு ஆளில்லா சுடுகாட்டில் தனித்து நின்று, ஜெயலலிதாவை எதிர்த்து முழங்க மாட்டாரா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்தேன். ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் முகாரி தான் முழங்கியது.

வாஜ்பாய் ஆட்சிக்கு பதின்மூன்றாவது மாதத்தில் மங்களம் பாடிய பிறகு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காமல் சுப்பிரமணிய சாமியை பபுள்கம்மைப் போல துப்பி விட்டுப் போனார் ஜெயா. இத்தனைக்கும் அவர் வசம் பூணூல் எனும் கவச குண்டலம் இருந்தது. அப்போது சூனா சாமி காட்டிய எதிர்வினையைக்கூட இன்றைக்கு இடதுசாரிகள் காட்டவில்லை. அட, அவர்களின் பிராமணர் பிரிவு தலைவர் டி.கே.ரங்கராஜன் (பாராளுமன்ற மேலவை உறுப்பினர், சிபிஎம்) ஏதாவது சொல்வார் என பார்த்தால் அவரோ அரசியலில் தர்மசங்கடம் என்பதெல்லாம் கிடையாது என சுருக்கமாக துடைத்துக் கொண்டு போகிறார.

கிரி - வடிவேலு
கணபதி அய்யர் அக்காவை கேட்பதெல்லாம் ஒரு பிரச்சனையா… பேக்கரியைத் தருகிறாரா என்பதுதானே முக்கியம். ”எவன் இருந்தாலும் செத்தாலும் உனக்கு ராஜ்யசபா சீட் கிடைச்சுடுது, அப்புறம் நீ எதுக்கு சங்கடப்படப் போற” எனும் டி.கே.ஆர் பற்றிய தா.பாவின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

அதுசரி கணபதி அய்யர் அக்காவை கேட்பதெல்லாம் ஒரு பிரச்சனையா… பேக்கரியைத் தருகிறாரா என்பதுதானே முக்கியம்.  ”எவன் இருந்தாலும் செத்தாலும் உனக்கு ராஜ்யசபா சீட் கிடைச்சுடுது, அப்புறம் நீ எதுக்கு சங்கடப்படப் போற” எனும் டி.கே.ஆர் பற்றிய தா.பாவின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

இந்த சூழல் இடதுசாரிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே கூட்டணிப் பங்கீட்டுக்கு முன்னால் தன்னிச்சையாக தமது வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயா. அப்போது அடைக்கலம் தேட இவர்களுக்கு ஒரு கருத்த, கண்கள் சிவந்த எம்ஜியார் இருந்தார். ஆனால் இன்றைய நிலைமையில் அவரை அணுகுவது என்பது ஒரிஜினல் கம்யூனிஸ்டாக மாறுவதைக் காட்டிலும் சிரமமான காரியம்.

ஆகவே அவர்கள் வசமுள்ள ஒரே வாய்ப்பு, ஒரு நாய்க்குட்டியைப்போல கண்மூடித்தனமான விசுவாசத்தை அம்மாவிடம் காட்டுவது மட்டுமே. அதற்கும் இல்லையில்லை, அதற்கு மேலேயும் தா.பா தயாராகத்தான் இருந்தார். துரதிருஷ்டவசமாக அம்மா இப்போது நாயைக் கொஞ்சும் மூடில் இல்லை என்பதால் அவர் கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் விடைபெற வேண்டியதாயிற்று. அதற்காக நீங்கள் ஜெயாவைக் கோபிக்க முடியாது. தோழர்கள் இன்றைக்கு சுயமரியாதையோடு தேர்தல் களத்தில் நிற்பதென்பது சுயமாய் விளைந்த முடிவல்ல. மம்மி கழுத்தைப் பிடித்து தள்ளியிருக்காவிட்டால் இந்த காட்சியை நீங்களும் நானும் எந்த நாளும் பார்த்திருக்க முடியாது.

ஏகாதிபத்திய நாடுகளும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளும் கம்யூனிசம் எனும் வார்த்தையையே இல்லாதொழிக்க விரும்புகிறார்கள். அது போலியாக இருந்தாலும்கூட அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் பல்லவன் போக்குவரத்துக் கழகத்துக்கு உலக வங்கி கடன்கொடுக்க முன்வந்தபோது சொன்ன நிபந்தனைகளில் ஒன்று, பேருந்துகளில் உள்ள சிகப்பு நிறத்தை அகற்ற வேண்டும் என்பது. கார்பரேட்டுக்களின் கனவை நிறைவேற்றும் கடமையை ஜெயா ஏற்றிருக்கிறார் (தகரத்தைக் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டு பிடித்தவர்கள் என கம்யூனிஸ்ட்டுக்களை கலாய்த்த  தலைவர் அம்மா). அந்த அவதாரத்துக்கு உதவ வந்த வீடணர்களாக தாபாவும் ஜிராவும் இருக்கிறார்கள்.

அன்பே சிவம்
அன்பே சிவம்: கமல், மக்களைத் திரட்டியா தொழிலாளர் உரிமையை பெற்றுத்தந்தார்? காதலை விட்டுக்கொடுத்துதான் அய்யா கம்யூனிசத்தைக் காப்பாற்றினார். பிரகாஷ் காரத், டி.ராஜா, ஜி.ரா என எல்லா தலைகளுக்கும் ஏகத்துக்கும் வயதாகிவிட்டது. இனிமேல் இவர்கள் கமல்ஹாசனின் வழியில் போயா கம்யூனிசத்தைக் காப்பாற்ற முடியும்?

அப்படியானால் இது ‘கம்யூனிஸ்’டுகளின் இன்றைய தலைமையின் குற்றம் என நீங்கள் கருதினால் அதைவிட பஞ்சமா பாதகம் வேறொன்றில்லை. நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் புறந்தள்ளிவிட்டு நீங்கள் இயற்பியல் படித்துவிட முடியுமா? ஆனால் இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ தலைவர்களது (தொண்டர்களும்தான்) தலைவிதியானது மார்க்சியத்தை நிராகரித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதாக அல்லவா இருக்கிறது? திருட்டை ஒரு வேலையாக செய்யும் குழுவில் நியாயம் என்பது திருடர்களுக்கிடையேயான நேர்மை மட்டுமே. முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு பொதுஉடைமை சிந்தனையையும் செயல்படுத்துவதென்பது சாத்தியமில்லாத செயல். இரண்டு எதிரெதிர் துருவமான சிந்தனைகளை ஏற்று செயல்படுத்த வேண்டுமானால் அது இருவருக்கும் பைபோலார் டிஸ்ஆர்டர் வந்த பிறகுதான் சாத்தியம்.

இடதுசாரிகளால் வியந்து போற்றப்பட்ட அன்பே சிவம் படத்து கிளைமாக்சில் சகலகலா வல்லவன் கமல், மக்களைத் திரட்டியா தொழிலாளர் உரிமையை பெற்றுத்தந்தார்? காதலை விட்டுக்கொடுத்துதான் அய்யா கம்யூனிசத்தைக் காப்பாற்றினார். பிரகாஷ் காரத், டி.ராஜா, ஜி.ரா என எல்லா தலைகளுக்கும் ஏகத்துக்கும் வயதாகிவிட்டது. இனிமேல் இவர்கள் கமல்ஹாசனின் வழியில் போயா கம்யூனிசத்தைக் காப்பாற்ற முடியும்? கம்யூனிசத்தை கைவிட்டாயிற்று, கமலஹாசன் காட்டிய வழியிலும் போக முடியாது… பிறகு சரணாகதியடைவதுதானே கடைசி வாய்ப்பு??

நான் ஏதோ ‘கம்யூ’ தலைவர்களை கிண்டலடிப்பதாக புரிந்து கொண்ட ரங்கராஜ தாசர்கள் யாரேனும் எனக்கு கருடபுரணத்தின்படி கும்பிபாக தண்டனை கொடுத்து குப்புற படுக்க வைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே  சில பத்திகளாவது அவர்களது செயல்பாடுகளில் உள்ள கம்யூனிச ‘நெறி’களைப் பற்றி பேசிவிடுகிறேன்.

சோசலிச ரஷ்யாவில் ஒரு தொழிலாளிக்கும் அறுநூறு ரூபிள்தான் சம்பளம், அதிகாரிக்கும் அறுநூறு ரூபிள்தான் சம்பளம். இவ்வளவு ஏன் தேசத்தின் தலைவர் லெனினுக்கும் அதே அறுநூறு ரூபிள்தான் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. சோசலிசத்தின் அடிநாதமே எல்லோரும் சமம் எனும் கோட்பாடுதான். சோசலிச ரசியா அளவுக்கு இல்லாவிட்டாலும் அதனை தமிழக இடதுசாரிக் கட்சிகள் முடிந்தவரை பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இடது,வலது கட்சிகள்
விஜயகாந்த் கட்சியையும் வலியப்போய் ஆதரித்தார்கள். நாளையே பரோட்டா சூரியும், இனா தானா விஜயும் கட்சி ஆரம்பித்தால், முதல் வாழ்த்தும் கூட்டணியும் இவர்களுடையதுதான்.

சில காலம் திமுகவை ஆதரித்தார்கள். எம்ஜியார் தனிக் கட்சி அமைத்தவுடன் அவரை ஆதரித்தார்கள், பிறகு வைகோ கட்சி ஆரம்பித்தபோது அவரையும் ஆதரித்தார்கள். விஜயகாந்த் கட்சியையும் வலியப்போய் ஆதரித்தார்கள். ஆகவே அவர்களுக்கு எந்த பாரபட்சமும் இல்லை. அப்படியானால் சமக சரத்குமாரை அவர்கள் ஏன் ஆதரிக்கவில்லை எனும் குதர்க்கமான கேள்வி உங்களுக்கு எழக்கூடும். அம்மாவையே நேரடியாக ஆதரிப்பவர்கள், அம்மாவின் அடிப்பொடியான சரத்குமாரை தனியாக ஒரு முறை எப்படி ஆதரிக்க முடியும்? ஆனால் ஒன்று, இனாதானா விஜய் கட்சி ஆரம்பித்தாலோ அல்லது நடிகர் சூரி கட்சி ஆரம்பித்தாலோ இடதுசாரிகளின் ஆதரவு அவர்களுக்கு கட்டாயம் உண்டு என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.

கம்யூனிஸ்ட்களின் இன்னொரு பண்பு தியாகம். இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் மகன் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்படுகிறார். செய்தியறிந்த ஜெர்மானிய அரசு, ரஷ்யா வசம் கைதியாக உள்ள சில ஜெர்மன் ராணுவத் தளபதிகளை விடுவித்தால் ஸ்டாலின் மகன் விடுவிக்கப்படுவார் என பேரம் பேசுகிறது. பல வீரர்களை போரில் இழந்து கைது செய்த தளபதிகளை ஒரு வீரனுக்காக விடுவிக்க முடியாது என்றார் ஸ்டாலின். அதன் பிறகு அவர் மகன் ஜெர்மன் அரசால் கொல்லப்பட்டார்.

சொந்த மகனை நாட்டுக்காக இழந்த ஸ்டாலின் செய்தது தியாகம் என்றால் இரண்டு எம்பி சீட்டுக்காக தங்கள் தன்மானத்தையே இழந்து ஜெயா விரட்டியடிக்கும்வரை போயஸ் தோட்டத்து வாயிலில் காத்திருந்த இடதுசாரி தலைவர்கள் செய்திருப்பது அந்த தியாகத்தைக் காட்டிலும் மேம்பட்டதில்லையா? தன்மானத்துக்காக சொந்த உறவைக்கூட இழக்கத் தயாராக இருப்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட். அந்த தன்மானத்தையே கட்சிக்காக தியாகம் செய்பவன் கம்யூனிஸ்டைக் காட்டிலும் உயர்ந்தவனாகத்தானே இருக்க முடியும்? இந்த கோணத்தில் யோசியுங்கள் லாஜிக் கொஞ்சம்கூட இடிக்காது.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் கைமேல் பலனை எதிர்பார்த்து வேலை செய்பவன் அல்ல. 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன் பலனை உலகம் கண்டது 1917-ல்தான். இடைப்பட்ட அந்த 70 ஆண்டு காலத்தில் கம்யூனிசப் புரட்சிக்காக உழைத்தவர்களில் பலர் அந்த உழைப்பிற்கான எந்த விளைவையும் தம் வாழ்நாளில் கண்டதில்லை, மார்க்ஸ் ஏங்கல்ஸ் உட்பட. தன் வாழ்நாளில் சாத்தியமில்லை என தெரிந்துதான் அவர்கள் தங்களது லட்சியத்துக்காக உழைத்தார்கள். ஒரு விதத்தில் நமது இடதுசாரி தலைவர்களும் அப்படியே.

மம்மியை இந்துமதவெறி எதிர்ப்பாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது இந்த இடதுசாரிகளின் வாழ்நாள் இலட்சியம். ஆனால் மம்மியோ பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் காங்கிரசை மட்டுமே பொளக்கிறார். தமிழக காங்கிரஸ்காரர்களே தேர்தல் வேலையை விட்டுவிட்டு சொந்த வேலை பார்க்க கிளம்பி விட்டார்கள். சத்தியமூர்த்திபவன் காத்து வாங்குவதால் அங்கே டீ விற்பவர் கூட இரண்டு மாத விடுப்பில் சென்றுவிட்டதாக தகவல். இந்த தேர்தலில் தமிழக காங். ஒரு செத்த பாம்பு, அதையே இந்த அடி அடிக்கும் ஜெயா, பாஜக பற்றி மூச்சுகூட விடவில்லை. மதவாதத்துக்கு எதிராக ஜெயா செயல்படுவதை பார்க்கும் வாய்ப்பு நம் யாருடைய வாழ்நாளிலும் சாத்தியமில்லை. ஆயினும் ஜெயலலிதாவை மதவாதத்துக்கு எதிரான சக்தியாக்கிப் பார்க்கும் லட்சிய வேட்கை இவர்களிடம் குறையவில்லை. பலமுறை நாய்க்கடி பட்ட பிறகும், அதன் வாலை நிமிர்த்தியே தீருவோம் என்று விடாமல் பின்தொடர்கிறார்களே, அந்த இடத்தில்தான் நிற்கிறார்கள் நம்ம வலது இடதுகள்.

ஜெயா - சோ
மம்மியை இந்துமதவெறி எதிர்ப்பாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது இந்த இடதுசாரிகளின் வாழ்நாள் இலட்சியம்.

ஒரு காலத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சியிலும் சேரவேண்டுமானால் சில விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிடவேண்டும். இப்போது அங்கே உறுப்பினராவது சிம்கார்டு வாங்குவதைவிட சுலபம். தொழிற்சங்கத்துக்காக உயிரைக்கூட கொடுத்த தியாகிகள் அங்கே இருந்தார்கள். இப்போது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் முடிந்துவிட்டது என ஒரு டி.வி பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் டி.கே ரங்கராஜன். கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்கள் கூலி வேலை பார்த்து சாப்பிட்ட காலம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புகூட தமிழகத்தில் இருந்தது  ஆனால் இப்போது தளி ராமச்சந்திரனைப் போன்ற ரவுடிகளும் பெருமுதலாளிகளும் கட்சியில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கட்சியின் செல்வாக்கு மட்டுமல்ல, அதன் மீதிருந்த நன்மதிப்பும் மிகவேகமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஆகப்பெரும்பாலான அரசு நிறுவனத் தொழிற்சங்கங்கள் ஊழியர்களது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி வைக்கும் தரகுவேலையைத்தான் செய்கின்றன (“எனக்கு கும்பகோணத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொடுத்த சங்கத் தலைவர்களுக்கு நன்றி” என ஒரு பெரிய பேனரை தஞ்சை ரயிலடியில் பார்த்தேன்). தனியார் நிறுவனங்களிலோ முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலைபார்க்கும் ஒரு நிறுவனப் பிரிவாகவே பல தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளைக் காட்டிலும் நாங்கள் மேம்பட்டவர்கள் என நிரூபிக்கும் ஆதாரமாக இடதுசாரிகள் வசம் அவர்கள் வரலாறு மட்டுமே இன்றைக்கு இருக்கிறது. எந்த ஒரு போலிப் பொருளும் தோற்றத்தில் அசலைப் போல இருக்கவேண்டும் என்பது எல்லா சந்தையிலும் இருக்கிற விதி. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நல்இயல்புகள், கம்யூனிஸ்டுகளின் ஒழுக்கம் என்பவையெல்லாம் அசலைப்போன்ற ஒரு தோற்றத்தை இதுநாள்வரை நமக்கு காட்டி வந்தன. அப்படியான ஒரு தோற்றமும் இனி அவசியமில்லை எனும் முடிவிற்கு இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இன்றைய காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.

பொதுவுடமை சித்தாந்தங்களை இவர்கள் எப்போதோ கைகழுவிவிட்டார்கள், கம்யூனிஸ்ட் போல தோன்றுவதையும்கூட இவர்கள் இப்போது விரும்புவதில்லை. கம்யூனிஸ்ட் எனும் பெயரைத் துறக்கும் பட்சத்தில் ஒரு சீட் கூடுதலாக கிடைக்குமென்றால் அதையும் இவர்கள் துறந்துவிடுவார்கள். அந்த நன்னாளுக்காகவே நான் காத்திருக்கிறேன். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கும் நல்லது கம்யூனிசத்துக்கும் நல்லது.

வில்லவன்