Saturday, July 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 667

தேர்தலை விடுத்து புரட்சியை நடத்து !

42

தேர்தலை விடுத்து
புரட்சியை நடத்து!

பல வருசம் ஆச்சு
ஆத்துல தண்ணிய பாத்து,

பல வருசம் ஆச்சு
வயல்ல பச்சையப் பாத்து,

இந்தியா விவசாயம் - நாடாளுமன்றம்பல வருசம் ஆச்சு
மரத்துல காய்ப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
வீட்ல மாடு கத்தி

பல வருசம் ஆச்சு
வண்ணத்துப் பூச்சி வீட சுத்தி,

பல வருசம் ஆச்சு
தறியில நூலப் பாத்து

பல வருசம் ஆச்சு
வலையில மீனப் பாத்து

பல வருசம் ஆச்சு
பணமில்லாம மருத்துவம் பாத்து,

பல வருசம் ஆச்சு
காசில்லாம கல்வியப் பாத்து,

பல வருசம் ஆச்சு
பெட்டிக்கடை அக்காவிடம் சிரிப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
எட்டு மணிநேர வேலை என்ற பேச்சை கேட்டு

பல வருசம் ஆச்சு
தெருக்குழாயில் தண்ணி பாத்து

பல வருசம் ஆச்சு
தெருவோட கவுன்சிலரப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனு கொடுத்த கலெக்ட்டர பாத்து

பல வருசம் ஆச்சு
மாமூல் வாங்காத போலீசைப் பாத்து

பல வருசம் ஆச்சு
யோக்கியனா நீதி பதியைப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனிதனை மனிதனாய் பாத்து

பல வருசம் ஓட்டுபோட்டு
பாராளுமன்றமே உளுத்துப்போச்சு

மாத்தி மாத்தி ஓட்டு போட்டு
ஊரும் நாடும் பாழாப் போச்சு

செத்த பொணத்த காப்பாத்துமா
தேர்தல் சென்ட்டு பூச்சு!

மொத்த சமூகத்தையும் நாறடிக்கும்
இந்த போலி ஜனநாயகத்தை

புதைப்பதுதான் ஒரே மூச்சு!

– துரை.சண்முகம்

காட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் – விவிமு போராட்டம்

7

காட்டு யானைகளை விரட்டக் கோரி, அதிகாரவர்க்க மதம் பிடித்த அரசை நிர்பந்தித்து போராட அழைப்பு விடுத்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மேற்கொண்ட பிரச்சார இயக்கம்

மார்ச் -2014 பிரச்சார இயக்கம் ஒசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வி.வி.மு. பிரச்சாரம்

காட்டு யானைகள் விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்து வருவது அனைவரும் அறிந்ததே. கர்நாடக வனப்பகுதியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதியில் நுழைந்த 120-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் கிராம மக்களை தாக்கி வருகிறது. இதுவரை சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதுவரை யானைகள் காட்டிற்குள் விரட்டியடிக்கப்படவில்லை. தொடரும் இந்த துயரங்களை தீர்க்கஎன்ன வழி என்று திக்கித்தவித்த மக்களுக்கு இப்பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக விரிவான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் துண்டு பிரசுர வினியோகம், தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சாரம் மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்று தந்துள்ளன. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு அரசும், முதலாளித்துவ கொள்கைகளும் தான் காரணம் என்ற பிரச்சாரம் மக்கள் புதிய விசயமாகப் பார்த்து வரவேற்பு கொடுக்கின்றனர். தொடர்ந்து சங்கமாக சேர்ந்து போராடினால்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து பலரும் அமைப்பில் இணைய ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இம்மாதம் முழுவதும் இப்பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சாரத்தின் போது யானைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், யானைகளால் காயமுற்றவர்கள், பயிர்கள் நாசமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் என பலரையும் சந்தித்து பிரச்சரம் செய்து வருகிறோம்.

பிரசுரத்தின் உள்ளடக்கம்:

  • காட்டு யானைகளின் அட்டூழியம், விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கிறது!
    தமிழக அரசின் அட்டூழியம், யானைகளை விரட்டக் கோரும் மக்களை ஒடுக்குகிறது!
  • சுற்றுச்சூழலை அழிக்கும் காட்டுவளங்களைக் கொள்ளையிடும்
    தனியார்மயம், தாராளமயத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
    உழைக்கும் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் மக்கள் கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சில மாதங்களுக்கு முன் போடுர் பள்ளம் வழியாக 120-க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று பிரிவுகளாக தமிழக எல்லைக்குள் நுழைந்தன. இவை தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. காட்டுயானைகள் ஊருக்குள் வந்து ராகி, வாழை, நெல் போன்ற விவசாயப் பயிர்களை நாசம் செய்வதும் நாம் அனுபவித்து வருகின்ற கொடுமையாக உள்ளது. முன்பெல்லாம் இரவில் ஊருக்குள் வந்து தாக்கும் யானைகள் இப்போது பகலிலேயே மக்களை தாக்குகின்றன. சாலைகளை கூட்டமாக வந்து மறித்துக் கொள்கின்றன. பாத்தகோட்டா, ஜவளகிரி, சானமாவு, காமன்தொட்டி போன்ற கிராமங்கள் பெரிதும் பாதித்து வருகின்றன. காட்டை ஒட்டியுள்ள கம்பெனிகளையும் இந்த யானைகள் விட்டுவைக்கவில்லை.

மழையின்றி விவசாயம் பொய்த்துப் போயுள்ள இன்றைய காலங்களில், விவசாயம் செய்ய இயலாமல் அரசின் மூலம் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வருகிறோம். கோமாரி நோய் தாக்கி பெருமளவு பசுமாடுகளை இழந்து நட்டமடைந்துள்ளோம். இந்நிலையில், இந்த காட்டுயானைகள் நாள்தோறும் வளர்ந்து வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

வனத்துறை, மாவட்ட ஆட்சியர் கூட்டம், காட்டுயானைகள் கூட்டம்: ஒருநாள் ஐ.பீ.எல். போட்டி!

காட்டுயானைகளை விரட்டுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, மற்றும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் என்ன தெரியுமா? சில வனத்துறை ஊழியர்களை கொண்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதுதான். உண்மையில், இது கோமாளித்தனமானது! முட்டாள்தனமானது! வனத்துறை ஊழியர்கள் காட்டுயானைகளை விரட்டுவதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிகள், ஐ.பீ.எல். போட்டி போல மக்களை ரசிக்கவைத்து, காட்டுயானை கூட்டம் மக்களை கொல்வதையும் துன்புறுத்துவதையும் மறக்கடிக்கிறன. மக்களை ஏமாற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், வனத்துறை ஊழியர்களின் உயிரைப் பலிகொடுப்பதில்தான் போய் முடியும். அவ்வாறுதான் நடந்தும் வருகிறது.

வனத்துறையின் அறிவிப்பு– விவசாயிகள் தலையில் இடி!

விவசாயிகளுக்கு காட்டுயானைகளால் தொல்லை என்ற உடன், இதற்காக மகழிச்சியடைந்தவர்கள் இருக்கிறார்களா? ஆம், இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த அரசும் வனத்துறையும் கார்ப்பரேட் முதலாளிகளும்தான். இதனை எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதோ, வனத்துறையின் அறிவிப்புகள்!

  • காட்டிற்குள் கால்நடை மேய்ப்பதை தவிர்க்கவும்
  • வனப்பகுதியில் தீமூட்டாதீர்கள்
  • யானை தாண்டா அகழிகளில் கல் மற்றும் மண்ணைக் கொட்டி தடைகள் ஏற்படுத்தாதீர்கள்
  • வனப்பகுதிகளில் நடமாட வேண்டாம்
  • வனப்பகுதியை ஒட்டி கரும்பு, நெல், வாழை, ராகி போன்ற பயிர்களை செய்ய வேண்டாம்

என அறிவித்துள்ளது. காட்டையே நம்பி வாழுகின்ற மேய்ச்சல் தொழிலை பிரதானமாக செய்கின்ற விவசாயிகளுக்கு மேற்கண்ட வனத்துறையின் அறிவிப்புகள் அதிர்ச்சியளப்பவையாக உள்ளன.

யாரைப் பாதுக்காக்க இந்த அறிவிப்பு!

யானைகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கத்தான் இந்த அறிவிப்பு என்று சொல்கிறது வனத்துறை. இது சுத்தப்பொய்! ஏனென்றால்,

  • காட்டிற்குள் கால்நடை மேய்ப்பதை தவிர்க்க வேண்டுமாம்! வனப்பகுதியில் நடமாட வேண்டாமாம்! இது அயோக்கியத்தனமான அறிவிப்பல்லவா? காட்டிற்குள் கால்நடை மேய்த்தவர்கள் அரிதும் அரிதாகவே யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் யானைகள் ஊருக்குள் வந்ததால்தான் பயிர்கள் நாசம் செய்வது, விவசாயிகளைத் தாக்கியதும் நடந்துள்ளது. இந்த உண்மை வனத்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாதா?
  • வனப்பகுதியில் தீமூட்டுவது காலங்காலமாக நடக்கிறது. அதனால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறது என்பது உண்மையல்ல, பொய்!
  • * வனத்துறை வெளியிட்டுள்ள பிரசுரத்தில், மாடுகள் காட்டில் மேய்ப்பதால் யானைகளுக்கு தேவையான தீவனங்கள் குறைந்துவிடுகிறதாம்! அதனால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறதாம்! – இதுவும் சுத்தப் பொய்! ஏனென்றால், வறட்சியினால் மாடுகளே காட்டில் உள்ள காய்ந்த சருகுகளைத்தான் மேய்கின்றன. யானைகள் சருகுகளை மேய்வதில்லை!

இந்த அறிவிப்பின் மோசடிகள்!

  • முதலில் இந்த அறிவிப்பு விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல என்பதை மேலே எழுப்பியுள்ள கேள்வியிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள்.
  • இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள பெயர் – யானைகளைப் பாதுகாக்கக் புதிய திட்டம் (பார்க்க தினமணி 29 மார்ச் 2013)
  • இத்திட்டத்தின் படி காட்டில் 117 லட்சம் தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, 180 லட்சம் ரூபாயில் வனத்தில் பயிர்சாகுபடி செய்து யானைகளுக்கு உணவு வழங்குவது!
  • * 150 கிலோ மீட்டார் தொலைவிற்கு யானைகள் தடுப்புப் பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் அறிவிப்புகளாக உள்ளன.

யானைகள் ஊருக்குள் வருவதற்கு யார் காரணம்?

இரயிலில் அடிபட்டு இறந்த யானைகள்! – [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

காட்டு வளங்களை அழித்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் காட்டை தாரா வர்க்கிறது இந்திய அரசு. இவர்கள்…

  • காட்டில் உள்ள கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொள்ளையடிக்கவும்
  • யானை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி அவற்றிலிருந்து தந்தம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கவும்
  • சந்தனம், தேக்கு, அகில் போன்ற உயர்ந்த வகை மரங்களை வெட்டி காடுகளை கொள்ளையடிக்கவும்
  • காட்டையழித்து காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் எஸ்டேட்கள் அமைப்பதாலும்
  • முக்கியத்திலும் முக்கியமாக, யானைகளில் வழித்தடங்களில் சுற்றுலா என்ற பெயரில், யோகா என்ற பெயரில் காட்டை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்புவதாலும் (ஒகேனக்கல் சுற்றுலா தளம், பன்னார்கட்டா சுற்றுலா தளம்)

மேற்கண்ட இக்காரணங்களால் தான் காட்டிலிருந்து யானைகள் ஊருக்குள் வருகின்றன. மக்களுக்கு நாட்டிற்குள் ஜனநாயகமில்லை. யானைகளுக்கு காட்டில் வாழ்வுரிமை இல்லை!

வேறு காரணங்கள் உள்ளனவா?

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் விளைவாக சுற்றுசூழல் கெட்டுப்போயுள்ளது. அதாவது, தொடர்ந்து அதிகரித்துவரும் கார்கள், நகரமயமாக்கம், ஏரி குளங்களை ஆக்கிரமித்து பஸ்ஸ்டாண்டு, கட்டிடங்கள் எழுப்புவது, நீர் நிலைகளை நஞ்சாக்குவது, பேப்பர் உற்பத்திக்காக நாள் தோறும் பல லட்சம் மரங்களை வெட்டுவது போன்ற காரணங்களே முக்கியமானவையாக உள்ளன. இதனால் பூமி வெப்பமடைந்துள்ளது. மழைப் பொய்த்துப் போயுள்ளது. காடுகள் அழிந்து வருகின்றன. வன விலங்குகள் ஊருக்குள் வந்து மக்களைத் தாக்குகின்றன.

ஆகையால், விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்! காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் காட்டை அழிக்கின்றனர். இந்த உண்மையை மக்கள் உணரவேண்டும்.

யானைகள் மக்களை துன்புறுத்துகின்றன! அரசோ மக்களை ஒடுக்குகிறது!

தடியடி
யானையை விரட்டக் கோரிய கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டும் போலீசு

ஊருக்குள் யானை வந்து காமன்தொட்டியிலும் சானமாவிலும் விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், யானைகளை காட்டிற்குள் விரட்டுவதற்கு தமிழக அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமுற்ற சானமாவு, பீர்ஜேப்பள்ளி கிராமம் மக்கள் ஊருக்குள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவெடுத்தனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் இந்த ஜனநாயக பூர்வமான எதிர்ப்பை கூட தமிழக அரசு விட்டுவைக்கவில்லை. போலீசைக் கொண்டு மக்களை தாக்கியது. ஊருக்குள் ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை ஒடுக்கியது. உழைக்கும் மக்கள் தங்களது ஜனநாயக பூர்வ உரிமைகளை கூட கேட்காமல் யானைகளுக்கு அடிப்பட்டு சாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். இதற்கு காரணம், இந்த ஜனநாயகம் என்பதெல்லாம் போலி ஜனநாயகம்! முதலாளிகளுக்கு ஜனநாயகம்! உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம்!

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

  • உடனடியாக, தற்போது படையெடுத்து வந்துள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும். காட்டில் சந்தனமர கடத்தல் வீரப்பனை விரட்டுவதற்காக அதிரடிப்படையை கொண்டுவந்து இறக்கியது தமிழக அரசு. அதுபோல, இந்த யானைகளை அதிரடிப்படை கொண்டுவந்து விரட்டியடிக்க வேண்டும். அடுத்து, போடுர் பள்ளம் பகுதியிலிருந்து கரநாடக வனப்பகுதியில் உள்ள யானைகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
  • காடுகளை ஆக்கிரமித்துள்ள சுற்றுலா தளங்களை (ஒகேனக்கல், பன்னார்கட்டா) இழுத்து மூட வேண்டும். அங்கு கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
  • காடுகளில் யானைகள் வாழ்வதற்கு தேவையான தீவனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு யானைகளுக்கு தேவையான நீர்நிலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே உடனடியாக காடுகளில் இருந்து யானைகள் கிராமங்களை நோக்கி வருவதை தடுக்க முடியும்.
  • காட்டுயானைகளால் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகளால் சேதமடைந்த விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.20,000 ஏக்கருக்கு நட்டஈடு வழங்க வேண்டும். தக்காளி, கோஷ், வாழை போன்ற பணப்பயிர் விவசாயிகளுக்கு கூடுதலாக, அவர்கள் போட்ட முழு தொகையையும் திருப்பி தரவேண்டும்.
  • வனப்பாதுகாப்புச் சட்டம், யானைகள் சரணாலயம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் காடுகளை ஆக்கிரமிக்க செய்துதரும் மக்கள்விரோத ஒப்பந்தங்கள், திட்டங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.

மேற்கண்ட தீர்வுகளை வலியுறுத்தி அரசை நிர்பந்தித்துப் போராட வேண்டும். இதற்கு விவசாயிகள் சங்கமாக திரள வேண்டும். ஓட்டுக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., வி.சி., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க. போன்றவைதான் முதலாளிகளின் நலனிற்காக மக்களை கொல்கின்றனர். அதனால், இவர்களை நம்பி இருப்பது வீண்வேலை. மற்றொருபுறம், இவர்களுடன் எப்பொழுதும் கூட்டணி வைத்து நக்கி பிழைத்துகாலம் கடத்தும் சி.பி.ஐ., சி.பி.எம்., யு.சி.பி.ஐ. போன்ற போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் எப்பஐ வேண்டிமானாலும் மாற்றி பேசுபவர்கள்தான். ஆகையால், நமக்கான ஒரு சங்கம் அமைத்து போராட வேண்டும். விவசாயிகளின் ஜனநாயகம், அதிகாரத்திற்காக போராடும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் கிளை ஒவ்வொரு கிராமத்திலும் கட்டியமைப்பதுதான் இன்று நம்முன் உள்ள ஒரே கடமை.

நிரந்தரத் தீர்வு என்ன?

காடு அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமை. காலங்காலமாக வனமும் கிராமங்களும் வேறுபாடின்றி ஒன்றுகலந்திருந்தன. பழங்குடி மக்கள் காட்டின் ஒரு அங்கமாக இருந்தனர். காடும் விலங்குகளும் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நமது நாட்டை அடிமையாக்கிய ஆங்கிலேயர் வந்த பின்னர், வனச் சட்டத்தைக் கொண்டுவந்து காட்டில் மக்கள் சுந்திரமாக நடமாடுவதற்குத் தடைவிதித்தனர். இன்றைய போலிசுந்திர அரசோ வனப்பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் காட்டுப் பகுதியில் வாழும் மக்களையே ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி காட்டைவிட்டு விரட்டியடிக்கிறது. இன்று பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது நாடு மறுகாலனியாக்கத்திற்குள் தள்ளப்படுகிறது. யானைகள் பாதுகாப்பு என்ற பெயரிலும் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இதன் ஒருபகுதியே.

மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காட்டை ஆக்கிரமிக்க வரும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளை மக்கள் போராடி விராட்டியடித்துள்ளனர். ஒசூரில் ஜி.எம்.ஆர். கம்பெனியின் மூலம் அமைக்க வந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து எமது தோழமை அமைப்புகள் விரட்டியடித்தன. அதுபோல, யானைப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை விரட்டியடிக்கும் சதித்திட்டத்தை நாமும் சங்கமாக சேர்ந்து முறியடிக்கமுடியும்!

இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்க வந்தா பிரச்சனை தீர்ந்துவிடும்’ என எல்லா ஓட்டுக்கட்சிகளும் உங்களிடம் வந்து ஓட்டுக்கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால், தேர்தல் முடிந்து விட்டால் இவர்கள் நமது பிரச்சனையை கண்டு கொள்ளமாட்டார்கள். தொகுதி பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். காட்டுவளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க புதிய திட்டங்களைத்தான் தீட்டிக்கொடுப்பார்கள்! ஆகையால், தேர்தலில் ஓட்டுப் போடுவதால் நமக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. அதுமட்டுமல்ல, புதிய தாக்குதல்கள்தான் வரப்போகின்றன.

இன்றுள்ள இந்த போலிஜனநாயக அரசு இருக்கும் வரை விவசாயிகளுக்கு இது போன்ற புதிய புதிய தாக்குதல்கள் வந்து கொண்டுதான் இருக்கும். சுற்றுச்சூழல் நாசமடைவதைத் தடுக்க முடியாது. ஆகையால், இந்த போலி ஜனநாயக அரசை தகர்த்தெறிந்து மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் வழங்கும் புதிய ஜனநாயகக் குடியரசமைக்க அணிதிரள்வோம்! ஊர்தோறும் மக்கள் கமிட்டி அமைத்து அதிகாரங்கள் அனைத்தையும் விவசாயிகள் கையிலெடுப்போம்!

தமிழக அரசே!

  • காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடி! போடூர் பள்ளத்தில் தமிழக எல்லையை மூடு!
  • காட்டிற்குள் யானைகள் நிரந்தமாக தங்கும் வகையில் நீர் நிலைகளை உருவாக்கு! யானைகளுக்கு தேவையான தீவனங்களைப் பயிரிடு!
  • காட்டில் ஆடு, மாடு மேய்ப்பதற்கும் மக்கள் காட்டிற்குள் சென்றுவருவதற்கும் தடைவிதிக்காதே! விவசாயிகளின் வாழ் உரிமையைப் பறிக்காதே!
  • யானைகளால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கு!
  • காட்டுயானைகளால் நாசமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கு! பணப்பயிர்களுக்கு விவசாயிகள் செய்த மொத்த தொகையையும் திருப்பிக்கொடு! பயிர்களுக்கு அரசின் மூலம் பயிர் காப்பீடு செய்துகொடு!

உழைக்கும் மக்களே! விவசாயிகளே!

  • காடு என்பது நமது உரிமை! காட்டிற்குள் நடமாடுவதைக் கட்டுப்படுத்துவதை எதிர்த்து முறியடிப்போம்!
  • யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது விவசாயிகளை காட்டிவிட்டு விரட்டியடிக்கும் சதித்திட்டம்! இதனை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!
  • சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும், காட்டு வளத்தை சுரண்டும் தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! விவசாயிகள் கையில் அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயகக் குடியரசமைக்க ஒன்றிணைவோம்!

காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு எமது அஞ்சலி!

கடந்த 2012–13 ஆண்டுகளில் மரணமடைந்த விவசாயிகளில் சிலரின் பெயரை இங்கு குறிப்பிடுகிறோம்.

மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த அப்பண்ணா, பன்னப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ், பீர்ஜேப்பள்ளிச் சேர்ந்த விவசாயி திருமைய்யா, கெலமங்கலம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா, பாத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி, சூளகிரி சின்னசிகரலப்பள்ளியைச் சேர்ந்த சாலம்மா, தளி தேவர்பட்டாவைச் சேர்ந்த புட்டண்ணா, தே.கோட்டை மலசோனியைச் சேர்ந்த ராஜநாயக், தே.கோட்டை காடுகல்லச் சந்திரத்தைச் சேர்ந்த லட்சும்மையா, கெலமங்கலம் அருகே யூ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா.

விவசாயிகள் விடுதலை முன்னணி
அஞ்செட்டி ஒன்றியம் & ஒசூர் ஒன்றியம்
தொடர்புக்கு :
தோழர்.சரவணன் 97513 78495
தோழர்.ஜெயராம், 89039 092472

பிரசுரங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !

0

ந்தியாவில் இன்னோவா கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் சுமார் 4,200 தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டொயோட்டா
டொயோட்டா லாக்அவுட்

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகிலுள்ள பிடதியில் சுமார் 432 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் டொயோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் ஒற்றுமையை பிரிக்கும் நோக்கத்துடனும் குறைந்த கூலியில் வேலை வாங்கும் நோக்கத்துடனும் 4,200 நிரந்தரத் தொழிலாளர்களுடன் 1,500 ஒப்பந்த தொழிலாளர்கள், 800 பயிற்சியாளர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிற்சங்கமாக திரண்டிருக்கிறார்கள்.

டொயோட்டாவின் நிரந்தரத் தொழிலாளிகளுக்கு அடிப்படை ஊதியமாக ரூ 16,000-ம், சராசரி மாத ஊதியமாக ரூ 25,500-ம் வழங்கும் நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சொற்ப கூலியாக ரூ 8000-ம், பயிற்சியாளர்களுக்கு ரூ 6000-ம் மட்டும் தந்து சுரண்டுகிறது. இந்த அடிப்படையில் டொயோட்டா நிறுவனத்தின் மொத்த ஊதியச் செலவு மாத விற்பனை வருவாயில் 2%-ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மார்ச் மாதம் வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வாக இவ்வாண்டு மாத சம்பளத்தை சராசரி ரூ 8,500 உயர்த்த வேண்டுமென சென்ற ஆண்டு மார்ச் மாதமே தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. ரூ 2,400 மட்டுமே தர முடியுமென நிர்வாகம் கூறியது. கடந்த 11 மாதங்களாக நிர்வாகத்துடன் 48 முறைக்கும் மேல் – 8 முறைக்கும் மேல் தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் – நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை சராசரி ரூ 4,000 உயர்வு என குறைத்துக் கொண்டனர். ஆனால், ரூ 3,050 மட்டுமே ஊதிய உயர்வு தருவதாக பிடிவாதம் பிடித்தது நிர்வாகம். சென்ற நிதியாண்டில் கொடுக்கப்பட்ட அதே ஊதிய உயர்வையே தாங்கள் கோருவதாகவும், இச்சராசரி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட 4,200 தொழிலாளர்களில் 20% பேர் மட்டுமே அதிகபட்சமான ரூ 3,050 ஐ பெறுவார்கள் எனவும், 80% பேர் வரை பணி அனுபவத்தின் அடிப்படையில் குறைவான உயர்வையே பெறுவார்கள் என்பதால், சென்ற ஆண்டின் உயர்வான ரூ 4,000-ஐ இவ்வாண்டுக்கும் வழங்கும்படி தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.

கார்கள்
டொயோட்டா பிடதி ஆலை உற்பத்தி செய்து குவிக்கும் கார்கள்

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சாலையின் உற்பத்தியை 1.6 லட்சம் கார்களிலிருந்து 2.1 லட்சமாக (33% அதிகரிப்பு) உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மிக மோசமான பணியிடச்சூழல் நிலவுவதாகவும், அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக சில தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், சிலர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து தனது விற்பனை வருவாயையும், லாபத்தையும் மேலும் மேலும் பெருக்கி வருகிறது டொயோட்டா. ஆனால்,  பணவீக்க வீத அளவுக்கு கூட ஊதிய உயர்வு கொடுக்காமல் தொழிலாளர்களின் உண்மையான சம்பளத்தை மேலும் குறைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10, 28 ஆகிய நாட்களில் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியது. இதையடுத்து தொழிலாளர் ஆணையருக்கும், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்திற்கும் முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற சட்டபூர்வமான விதிமுறைகளை மதிக்காமல், மார்ச் 16 முதல் தொழிற்சங்கத்தில் இருக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் லாக்அவுட் அறிவித்து உற்பத்தியை நிறுத்தியது நிர்வாகம். ஆனால், 1,600 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், 800 பயிற்சியாளர்களுக்கும் லாக் அவுட் அறிவிக்காமல் அவர்களை சட்ட விரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்த முயற்சித்ததை தொழிலாளர்கள் அம்பலப்படுத்தினர்.

25 நாட்களில் தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கைகளால் 2,000 கார்கள் வரை உற்பத்தி குறைந்ததால் இழப்பு ஏற்பட்டதாகவும், மாருதி தொழிற்சாலையைப் போல் நிர்வாக ஊழியர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புலம்பியது. அதாவது தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தி இல்லை என்பதுதான் நிதர்சனம் என்றாலும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.

டொயோட்டா
தொழிலாளர்களை சுரண்டும் டொயோட்டா

இப்பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்து பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து கர்நாடக மாநில தொழிலாளர் துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக சொல்லி  தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கப் போவதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பும் முன்னர் மன்னிப்பு கடிதமும், இனி இம்மாதிரியான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி கடிதமும் தரவேண்டுமென பிடிவாதம் பிடித்தது.

சட்ட விதி முறைகளை துளியும் மதிக்காத நிர்வாகம், தொழிலாளிகளை வன்முறையாளர்களாக முத்திரை குத்தி உற்பத்தியை நிறுத்தியதுடன், அவ்வுற்பத்தி நிறுத்ததிற்கும் தொழிலாளர்களையே பொறுப்பாக்குகிறது. மேலும் தொழிற்சங்கத்தை சேர்ந்த முன்னணியாளர்கள் 17 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தது. நிர்வாகத்தின் முதன்மையான நோக்கம் தொழிற்சங்கத்தை முடக்கி, தொழிலாளர்களின் போராட்ட உணர்வை முறியடிப்பதே.

தொழிலாளிகள் மன்னிப்பு கடிதம் எழுதித்தர முடியாதெனவும், அனைவரையும் நிபந்தனையற்ற முறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் போராடி வருகின்றனர். ஆனால், தற்போது புதிதாக வேலைக்கு அமர்த்திய சுமார் 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் சட்டவிரோதமாக ஈடுபடுத்தி பகுதியளவில் உற்பத்தியை தொடங்கியுள்ளது டொயோட்டா.

பேச்சுவார்த்தையின் போது, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக (அதாவது, ஜப்பானுக்கு அள்ளிச் செல்லும் லாப வீதம் முன்பை விட சிறிது குறைந்திருக்கலாம்), சம்பள விகிதத்தை உயர்த்த முடியாதென கூறிய நிர்வாகத்திடம்  நிறுவனத்தின் வரவு-செலவு ஆண்டறிக்கையை தொழிற்சங்கம் கேட்டதற்கு, “தனியார் பங்கு நிறுவனம் (பிரைவேட்-லிமிட்டெட் கம்பெனி)” என்பதால் ஆண்டறிக்கையை தரமுடியாது என திமிர்த்தனமாக பதிலளித்துள்ளது.

டொயோட்டா பிடதி ஆலை
டொயோட்டா பிடதி ஆலை

1997-ல் தொடங்கப்பட்ட டொயோட்டா கிர்லோஸ்கர் கார் உற்பத்தி நிறுவனத்தில் ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 89% பங்குகளும், இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனம் 11% பங்குகளும் கொண்டுள்ளன. டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தனது விற்பனைக்கான கார்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்காக இந்தியாவிலும் பிற மூன்றாம் உலக நாடுகளிலும் தொழிற்சாலைகளை தொடங்கி பெரும் லாபத்தை குவிக்கின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் கூட கொடுக்க மறுத்து, வேலை நிறுத்தம், லாக் அவுட், வேலை நீக்கம் என்று அவர்களது உரிமைகளை பறித்து அடாவடிகள் செய்கின்றன.

டொயோட்டா மட்டுமின்றி மாருதி சுசுகி, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சங்கமாக திரளும் உரிமை உட்பட எந்த அடிப்படை உரிமையையும் அங்கீகரிப்பதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இந்நிறுவனங்களில் மோசமான பணியிடச்சூழல், அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக விபத்துக்கள் பலமடங்கு அதிகரித்துள்ளதுடன், தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.  உழைப்பிற்கும், உற்பத்திக்கும் இலக்கணமாக ஜப்பானிய வழிமுறை (Japanese way) என்று பீற்றிக்கொள்ளப்படுவதற்கு பின்னால் இம்மாதிரியான தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறை தான் உள்ளது.

முன்னதாக 2006-லும் டொயோட்டா இதே போல் 15 நாட்களுக்கும் மேல் கம்பெனியை மூடி தொழிலாளர்களை நெருக்குதலுக்குள்ளாக்கியது. அதற்காக இன்று வரை நிர்வாகத்தின் மீது எந்த வித நடவடிக்கையையும் எடுக்காத அரசு மற்றும் தொழிலாளர் துறை ஒரு புறமும், தீர்வை எட்டாத கையறு நிலை மறுபுறமும், சட்டவாத நடவடிக்கைகளிலும், ஓட்டுக் கட்சிகளிடமும் இதற்கான தீர்வு இல்லை என்பதை தொழிலாளர்கள் தமது சொந்த அனுபவத்தினூடாக உணரச் செய்துள்ளன.

டொயோட்டா தொழிற்சங்கத்தினர் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதோடு, நாட்டின் பிற பகுதிகளின் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவதுதான் தமது உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள ஒரே வழி. வடக்கே மாருதி நிறுவனத்தில் துவங்கிய போராட்டம் இப்போது தெற்கே பெங்களூருவை எட்டியிருக்கிறது. மறுகாலனியாக்க சுரண்டலுக்கு எதிரான இப்போராட்டம் மற்ற பிரிவு தொழிலாளிகளையும் கவரும் போது முதலாளிகளின் திமிர் முறியடிக்கப்படும். கூடவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடி பிடிக்கும் அரசும் அதனுடைய நிர்வாக-நீதி அமைப்புகளும் கேள்வி கேட்கப்படும். தொழிலாளிகளை சுரண்டுவது இனி பகற்கனவு என்பதையே டொயோட்டா தொழிலாளர்களின் போராட்டம் உணர்த்துகிறது.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

 

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

58

ஜெமினியில் விக்ரம் “ஓ” போடச் சொல்லி பாடுவதற்கு முன்பேயே தமிழக வாக்குச் சாவடிகளில் ‘ஓ’ போடப் சொல்லி காலம் எல்லாம் இசைத்தவர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன். அவரது ‘கோரிக்கையை ஏற்று’ தேர்தல் ஆணையமும் “நோட்டா” பொத்தானை இந்த தேர்தலில் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இன்று நோட்டாவுக்கு ஓ போடச் சொல்லும் நிலையில் ஞாநி இல்லை.

ஞாநி
ஓ போடச் சொன்ன ஞாநியை மாற்றியது அமெரிக்க ஆத்மியின் ‘யானம்’ !

ஆம். அவர் தேர்தல் அரசியலில் போட்டியிடும் ஞானத்தை பெற்று விட்டார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போட்டியிடப் போகிறார். இதைத் தொடர்ந்து அவரை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர். அதில் முக்கியமானது, ஆம் ஆத்மி கட்சி மீதான விமரிசனங்களை ஞாநி எப்படி எதிர்க்கொள்கிறார் என்பது. இந்த எதிர்கொள்ளலிலிருந்தே அவரது ஆம் ஆத்மி ஞானத்தை உண்மையில் யானத்தை (24-ம் புலிகேசியின் ஞானம்) அறியலாம்.

“ஏதோ நம்மாலான தானம்” என்று கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்களுக்கு தர்மமளிக்கும் ‘வள்ளல்கள்’ போல “ஏதோ நம்மாலான தொண்டு அரசியல்” என்று மட்டும் ஞாநியின் ஆம் ஆத்மி ஞானத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் தமிழகத்தில் ஞாநியோ இல்லை ஒட்டுமொத்த ஆம்ஆத்மியையோ கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்யுமளவு அவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் சாதிக்காத போதே இவர்களது சந்தர்ப்பவாதம் எப்படி விசுவரூபமெடுக்கிறது என்பதை முக்கியத்துவம் கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்.

ஒருவகையில் நடுத்தரவர்க்கத்தை தலைமை தாங்கும் கருத்துக்களாக இவை இருப்பதால் நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கத்தை அந்த போதையில் இருந்து மீட்பது அவசியம்.

ஆம் ஆத்மி கட்சி, தனது தேர்தல் செலவுக்கான நிதி சேகரிக்கும் வழிகளில் ஒன்றாக அரவிந்த் கேஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட கட்டணம் வசூலிக்கிறது. ‘டின்னர் வித் கேஜ்ரிவால்’ என்று இதை விளம்பரப்படுத்தி ஒரு நபருக்கு 20 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை வசூலிக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் மிகவும் பிரபலமான, இந்த பணக்காரர்களிடம் நிதி திரட்டும் முறையை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதிலிருந்தே இந்த கட்சியின் இயக்கம் பாமரர்களை சார்ந்து அல்ல, மேட்டுக்குடியை சார்ந்தது என புரிந்து கொள்ளலாம். தேர்தலை பண வசூலும், அந்த வசூலை இது போன்ற மேட்டுக்குடியிடம் திரட்டுவதுமே தீர்மானிக்குமென்றால், இந்தக் கட்சி காங்கிரஸ், பாஜகவின் புதுப் பங்காளி என்று காட்டி விடுகிறது.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த இணைய விவாதம் ஒன்றில் ஞாநியும் பங்கேற்றார். அப்போது அவரிடம், அர்விந்த் கேஜ்ரிவாலின் என்.ஜி.ஓ. அல்லது அரசு சாரா நிறுவனத் தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ஞாநி என்ன பதில் அளித்தார் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு கேஜ்ரிவாலின் அரசு சாரா நிறுவன தொடர்பு குறித்து பார்த்து விடுவோம்.

கேஜ்ரிவால் நடத்தும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று, Public Cause Research Foundation. சுருக்கமாக பி.சி.ஆர்.எஃப். 2006-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட மகசேசே விருதுடன் கொடுக்கப்பட்ட பணப்பரிசை முதலீடாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கினார் கேஜ்ரிவால். இவருடன் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோரும் இணைந்திருந்தனர். அண்ணா ஹசாரேவின் செட்டப் எழுச்சிக்குப் பிறகு நாடு முழுவதும் படித்த மேல்தட்டுப் பிரிவினர் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஊழலே இந்தியாவின் தலையாய பிரச்சினையாக சீற்றம் கொள்கின்றனர். அதற்கு தோதாக மாபெரும் ஊழல்கள் இந்தியாவில் அணிவகுக்க ஆரம்பித்தன.

அரவிந்த் கேஜ்ரிவால்
தேர்தல் மேளா கங்கையில் குளித்து காவி கெட்டப்பில் கேஜ்ரிவால். கும்பமேளா கங்கையில் குளித்த ஜெயமோகனது இந்துஞானமரபு அமெரிக்க ஆத்மியை ஆதரிப்பதில் வியப்பென்ன?

ஹசாரேவுடன் கேஜ்ரிவாலும் இணைந்து கொள்கிறார். அப்போது இவர்கள் எல்லோரும் இணைந்து ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption -IAC) என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர். பிறகு கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சித் துவங்கி அரசியல் அதிகாரத்தில் மேலே வந்த பிறகு அண்ணா ஹசாரே உறவு முடிந்தது. இவர்களுக்கிடையே இருந்த கோஷ்டி மோதல் முதலில் மறைவாகவும் விரைவிலேயே பகிரங்கமாகவும் வெளிவரத் துவங்கியது. அச்சமயத்தில் ஹசாரேவும், சுவாமி அக்னிவேஷ் போன்றோரும் கேஜ்ரிவால் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்கள்.

‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் நிதி சுமார் 70 லட்சம் ரூபாயை, அர்விந்த் கேஜ்ரிவால், தன் சொந்த தொண்டு நிறுவனத்திற்கு திருப்பி விட்டுள்ளார். இந்தப் பணம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்புக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை. அதை இப்படி திருப்பிவிட்டது முறைகேடானது’’ என்றார்கள். இதற்கு பதில் அளித்த கேஜ்ரிவால் குற்றச்சாட்டு பொய் என்றோ, பணத்தை திருப்பி விடவில்லை என்றோ கூறவில்லை மாறாக, ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா என்பது ஓர் இயக்கமாக இருந்ததே ஒழிய, நிறுவனமாக இருக்கவில்லை. பி.சி.ஆர்.எஃப். (அவரது தொண்டு நிறுவனம்) என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம் போல செயல்பட்டது’’ என்று சொன்னார்.

அதாவது ஊழலுக்கு எதிரான இந்தியாவின் இயக்க செயல்பாடு மற்றும் நிதி செயல்பாடு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவரது தொண்டு நிறுவனம் இயக்கியிருக்கிறது. இந்த பணத்தை தமது சொந்த நிறுவனத்தின் செலவிற்காக பயன்படுத்தவில்லை என்பதைத் தவிர கேஜ்ரிவால் வேறு எதையும் மறுக்கவில்லை. இதெல்லாம் தெரிந்துதான் அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அண்ணாவை ஆதரித்தது. எனில் அந்த தொண்டு நிறுவனம் இதை இலவச சேவையாக செய்ததா, அதன் நோக்கம் என்ன? அதன் நிதி வள மூலம் என்ன?

அடுத்தது, கேஜ்ரிவால் காபிர் (Kabir) என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையப்படுத்தி இயங்கும் இந்த நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து இரண்டு முறை நிதிபெற்றுள்ளது. ‘‘2005-ம் ஆண்டு 1,72,000 டாலர் நிதியும், 2008-ம் ஆண்டு 1,97,000 டாலர் நிதியும் ‘காபிர்’ நிறுவனத்திற்க்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியா பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். இதை கேஜ்ரிவாலும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘‘நாங்கள் நிதி பெற்றது உண்மைதான். ஆனால் அவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. பழையனவற்றை இப்போது கிளறுவது அண்ணா ஹசாரே அணியினரின் வேலை’’ என்கிறார் அவர்.

ஸ்டீவன் சோல்னிக்
கேஜ்ரிவாலுக்கு படியளந்த அமெரிக்க பகவானின் இந்திய பிரதிநிதி : ஸ்டீவன் சோல்னிக்

ஆனால் இது குறித்து அண்ணா ஹசாரே மட்டுமின்றி பிற ஜனநாயக சக்திகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.  ‘‘ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து சுமார் 4 லட்சம் டாலர் அளவுக்கு கேஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம் நிதியுதவி பெற்றுள்ளது’’ என்று தனது கட்டுரை ஒன்றில் அருந்ததி ராய் குறிப்பிட்டார்.

மாசுமருவற்ற மகானாக கேஜ்ரிவால் சித்தரிக்கப்பட்ட சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘இன்டெலக்சுவல்’ மற்றும் தொண்டு நிறுவன கையாளான ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்ற விஷயம் திரும்பத் திரும்ப அவரைச் சுற்றி வரத் தொடங்கியது. கடுப்பான கேஜ்ரிவால், ‘‘இந்தக் கேள்வி தொடர்ந்து என்னிடம் எழுப்பப்படுகிறது. ஃபோர்டு பவுன்டேஷன் தவறானது என்றால், முதலில் அதைத் தடை செய்யுங்கள். இந்திய சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பிடம் இருந்து நிதிபெறுவதில் என்ன தவறு?’’ என்று கேட்டார். உண்மையில் இது நெத்தியடி கேள்விதான்.

ஏனெனில் இன்றைக்கு ஆம் ஆத்மியை தொண்டு நிறுவனங்களின் சதி என்று பிலாக்கணம் வைக்கும் பாஜக வீரர்கள் எவரும் தமது வீராதி வீரனான மோடியை வைத்து ஃபோர்டு பவுண்டேஷன் உள்ளிட்ட அன்னிய சேவை நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று பேசவைக்க முடியுமா? காங்கிரசும், பாஜகவும் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தையே பாராளுமன்றத்திற்கு தெரியாமல் நிறைவேற்றி அழகு பார்த்தவர்கள், பவுண்டேஷனுக்கு மட்டும் சவுண்டு விட முடியுமா? அதனாலேயே கேஜ்ரிவாலின் சவால் அப்படியே இருக்கிறது. ஆனால் பாஜக போன்ற மதவெறியர்கள் மற்றும் அமெரிக்க அடிமைகள் வேண்டுமானால் இதை கேட்பதற்கு அருகதை இல்லாதவர்களாக இருக்கலாம். நாம் கேட்போம்.

மகசேசே விருது கமிட்டிக்கும், ஃபோர்டு பவுன்டேஷனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு அதைப்பற்றி தனக்குத் தெரியாது என்று சொன்னார் கேஜ்ரிவால். இந்தியாவில் எப்படி கிராம சுயராஜ்ஜியம் கொண்டு வரவேண்டும் என்று ஆய்வு செய்தவருக்கு இந்த உலகறிந்த விசயம் கூடத் தெரியாதாம். சந்தர்ப்பவாதத்திற்காக அறியாமை அடித்து பிடித்து தேடி வருகிறது.

இந்தப் பின்னணியில் நாம் ஞாநியிடம் திரும்ப வருவோம். அவரிடம், ‘இப்படி உங்கள் கட்சித் தலைவர் ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதிபெற்றிருக்கிறாரே?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘‘கேஜ்ரிவால், தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிதிபெறுவதை நிறுத்தி விட்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் ஃபோர்டு பவுன்டேஷன் நாடு முழுக்க பல கலை அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது; செய்தும் வருகிறது. ‘கூத்துப்பட்டறை’ கூட ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்றுள்ளது. (என்னுடைய ‘பரீக்‌சா’ நாடகக் குழுவுக்கு ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி பெறும் சாத்தியம் இருந்தும் நாங்கள் மறுத்துவிட்டோம்). தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஃபோர்டு பவுன்டேஷனின் நிதியுதவி குறிப்பிடத்தகுந்தது’’ என்று ஞாநி சொல்கிறார்.

தலித் ஆதார மையம்
மதுரை அரசரடி இறையியல் மையத்தில் இருக்கும் தலித் ஆதார மையம். தமிழகத்தில் தோற்றுவிக்கப்படும் தன்னார்வக் குழுக்களின் மெக்கா.

அவரது இந்த எட்டு வரி விளக்கமே எண்ணிலடங்கா கேள்விகளையும், விமரிசனங்களையும் கேட்க வைக்கின்றன. முதலில் கேஜ்ரிவால் ‘முன்னாடி வாங்கினேன். இப்போது வாங்கவில்லை’ என்றுதான் சொல்கிறார். ‘அப்போது வாங்கியது தவறு’ என்று சொல்லவில்லை. மேலும் இந்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்திடமிருந்து காசு வாங்குவதில் என்ன தவறு என்று ஏற்கனவே கேட்டிருக்கிறார். அப்படி தவறு என்றால் தடை செய்யுங்கள் என்றும் சவால் விட்டிருக்கிறார். அதாவது, ‘குடுக்குறான், வாங்குறேன். தப்புன்னா முதலில் அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்’ என்று மணிரத்தினத்தின் குரலில் சொல்கிறார்.

இந்நிலையில், ‘அது போன மாசம்’ என்று கைப்புள்ள கணக்காக கேஜ்ரிவாலும், அவரை அடியொற்றி ஞாநியும் கூறும் விளக்கம் எந்த வகையிலும் ஏற்கத் தக்கது இல்லை. அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன, 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன… ஒரு குற்றத்தின் தன்மை அது செய்யப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதில் இருந்து தீர்மானிக்கப்படுவது இல்லை. அதன் தன்மையில் இருந்துதான் அதை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஃபோர்டு பவுன்டேஷன் என்ற அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பிடம், அமெரிக்க மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் கொண்டு வர கலை, சேவை, இலக்கிய, அறிவுஜீவித் துறைகளில் செயல்படும் ஒரு சதிகார நிறுவனத்திடம் நிதி பெற்றது சரியா, தவறா என்பதுதான் இங்கு பேச வேண்டிய விஷயம். அதற்கு ஒரு பதிலை கூறாமல் கடந்து செல்வது ஞாநியின் அயோக்கியத்தனம்.

ஒரு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்வதன் நோக்கம் செய்த தவறுக்கு மனம் வருந்துவதும், எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளை செய்யாமல் இருப்பதும்தான். இத்தகைய குறைந்தபட்ச நாணயம் கூட இல்லாத ஆம் ஆத்மி கும்பல்தான் முழு இந்தியாவிற்கும் நேர்மைன்னா என்னவென்று சொல்லித் தரப்போகிறதாம். இதை நம்புங்கள் என்று நம்மையும் சித்திரவதை செய்கிறார் ஞாநி.

இங்கு கேஜ்ரிவாலிடம் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றது குறித்த வருத்தம் இல்லை என்பதோடு பெருமையும் இருக்கிறது. எதிர்காலத்தில் வாங்கமாட்டோம் என்றும் உத்தரவாதம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் 2014-ம் ஆண்டும் அவரது ‘காபிர்’ தொண்டு நிறுவனம், ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி கோரியிருக்கிறது. ‘‘2014-ம் ஆண்டுக்கு நிதியுதவி கோரி கேஜ்ரிவாலின் ‘காபிர்’ என்.ஜி.ஓ. விண்ணப்பித்துள்ளது. நாங்களும் நிதி தர இசைந்துள்ளோம்’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியப் பிரிவின் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். ஆக இப்போது வரை கேஜ்ரிவால் நிதி பெறுவதில் முனைப்போடு இருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனில் ஞாநியின் விளக்கத்தில் அறிவு நாணயம் ஏதும் இருக்கிறதா?

கூத்துப்பட்டறையின் நா. முத்துசாமி
ஃபோர்டு பவுண்டேசனிடம் கூத்துப்பட்டறையை விற்ற நா. முத்துசாமி

ஞாநி தனது முகநூல் விவாதத்தில், ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து கூத்துப்பட்டறை நிதிபெற்றது என்பதை சொல்கிறார். இது உலகறிந்த விசயம்தான். ஆனால் ஞாநியின் கோணத்தில் இந்த நிதி பெறுவதில் தவறில்லை என்றால், ஏன் அவர் தனது ‘பரீக்சா’வுக்கு வாங்க மறுக்க வேண்டும்? நீங்களும் நிதி வாங்க வேண்டியதுதானே.. நிதியை மறுத்ததை இப்போது பெருமையாக அறிவித்துக்கொள்கிறார் என்றால் நிதிபெற்றதை அவர் சிறுமையாக கருதுகிறாரா? எனில் அந்த சிறுமையை இப்போது வரை செய்து கொண்டிருப்பவரை எப்படி அவர் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்?

கூத்துப்பட்டறை ஆரம்பத்தில் நாடகம் குறித்து அறிந்து கொண்டு வளர விரும்பிய எளிய அமைப்பாகத்தான் இருந்தது. பின்னர் நா.முத்துச்சாமி அதைக் கைப்பற்றி ஃபோர்டு பவுண்டேசனிடம் விற்று விட்டார். கூத்துப் பட்டறை மட்டுமல்ல, பல்வேறு இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஃபோர்டு பவுண்டேசன் நிதிபெறுவதை 80-களின் ஆரம்பத்திலேயே மகஇக மட்டுமே அம்பலப்படுத்தி போராடியிருக்கிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியும் வருகிறது. அப்போதே ஞாநி இத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களது நிகழ்ச்சிகளுக்கு செல்வது, பேசுவது, அவர்களுக்கு தேவையான ஆவணப்படங்கள் எடுத்துக் கொடுப்பது போன்றவற்றை செய்திருக்கிறார். இன்றைக்கும் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் இதைத்தான் செய்கிறார்கள். அதைப்பட்டியலிட்டால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்றே நம்புகிறோம்.

பத்திரிகையாளராக தனது பணியை நடத்திக் கொண்டு பகுதி நேரமாக பரிக்-ஷா போன்ற நாடக முயற்சிகளை செய்ததால் அவருக்கு தொழில் முறையில் இயங்கும் கூத்துப்பட்டறைக்கு அவசியமாக இருந்த நிதி தேவைப்படவில்லை. மற்றபடி அவர் கொள்கை காரணமாக ஃபோர்டு பவுண்டேசனிடமிருந்து பணம் வாங்கவில்லை என்பதை இங்கே ஓங்கிச் சொல்கிறோம்.

மல்லிகா சாராபாய்
ஆம் ஆத்மியின் மல்லிகா சாராபாய் : அமெரிக்க டாலர் வாங்கிக் கொண்டு இந்திய நடனம் ஆடுவதில் வல்லவர்..

ஆகவே ஆம் ஆத்மியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொடர்பு குறித்து நமக்கு ஏற்படும் கோபமும், விமரிசனமும் ஞாநிக்கு ஏற்படாது. மாறாக அவரது போன மாசம், இந்த மாசம் உளறலுக்கு காரணம் பொதுவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே அம்பலப்பட்டு போயிருப்பதுதான்.

கேஜ்ரிவாலும், ஞாநியும் மட்டுமே இந்த வளையத்திற்குள் இல்லை. ஆம் ஆத்மி என்ற கட்சியே என்.ஜி.ஓ.க்களின் கூடாரமாக இருக்கிறது. குறிப்பாக ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுபவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி என்ற சரடின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கான தேசிய குழு உறுப்பினராக மீரா சன்யால் என்பவர் இருக்கிறார். ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இவர் இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு மும்பை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டார். இப்போது இவர்தான் ஆம் ஆத்மியின் மும்பை தெற்குத் தொகுதி வேட்பாளர். இவரது ‘பிரதான்’ தொண்டு நிறுவனத்திற்க்கு ஃபோர்டு பவுண்டேசன் பெருமளவு நிதி அளிக்கிறது.

மல்லிகா சாராபாய் என்கிற பிரபல நாட்டியக் கலைஞரும் ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியுள்ளார். இவரது ‘தர்பனா’ (Darpana)  என்ற தொண்டு நிறுவனமும் ஃபோர்டு பவுண்டேசனிடம் நிதி பெறுகிறது. தேர்தல் கணிப்பாளராக புகழ்பெற்றிருந்த யோகேந்திர யாதவ் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அமைப்பிடம் இருந்து நிதிபெறுகிறார். இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்வது ஃபோர்டு பவுன்டேசன்.

கவிதா ராமதாஸ்
கப்பற்படை தளபதி ராமதாஸின் மகள் கவிதா ஃபோர்டு பவுண்டேசனின் இந்தியத் தலைவர். இந்திய ராணுவமே சி.ஐ.ஏ கையில் இருக்கும் போது ஆம் ஆத்மி இருப்பதில் வியப்பென்ன?

இப்போது கேஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆலோசகராக இருப்பவர், இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் (இவரும் மகசேசே விருது பெற்றவர்). இவரது மகள் கவிதாதான் டெல்லியில் உள்ள ஃபோர்டு பவுன்டேஷன் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஃபோர்டு பவுன்டேசன் வழங்கும் நிதியை அனுமதிப்பதும், ஒழுங்குப்படுத்துவதும் இவர்தான். அது மட்டுமின்றி மகசேசே விருதை வழங்கும் ‘ராக்பெல்லர் பவுன்டேசனின்’ நிதியளிக்கும் அமைப்பான ‘ராக்பெல்லர் பிரதர்ஸ் ஃபண்ட்’டின் தலைமை உறுப்பினராகவும் உள்ளார். இந்த கவிதாவின் கணவரும் லேசுபட்டவர் இல்லை… பாகிஸ்தானைச் சேர்ந்த சுல்பிகர் அஹமத் என்ற அவர், ‘பெர்க்லீஸ் நாட்டிலஸ் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பின் தெற்காசிய பகுதி பொறுப்பாளர். தெற்காசியப் பகுதிகளின் அணு உலைகளில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதும், அமெரிக்க சார்பை உறுதிபடுத்துவதும்தான் இந்த அமைப்பின் முக்கியமான பணி.

இப்படி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ள பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்.ஜி.ஓ.க்களாகவே உள்ளனர் என்று நாகரீகமாக சொல்லலாம். சரியாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்க கைக்கூலிகள். கேஜ்ரிவாலே, ‘பரிவர்த்தன்’ என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அருணா ராய், கோபால் ராய், மேதா பட்கர் என ஆம் ஆத்மியில் உள்ள மற்றவர்களும் நேரடியான என்.ஜி.ஓ. தொடர்பிலும் அந்த பாணி அரசியலும் உள்ளவர்களே.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிறிஸ்டினா சாமி, கரூரைச் சேர்ந்தவர். இவரும் இவரது கணவர் ஆரோக்கியசாமி என்பவரும் சேர்ந்து கரூரில் அரெட்ஸ் (AREDS -Association of Rural Education and Development Services), ஸ்வாதி (SWATE – Society for Women in Action for Total Empowerment) ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் கடந்த காலங்களில் உலகின் பல நிதி உதவியளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நிதி வந்துள்ளது. முக்கியமாக Catholic Committee against Hunger and for Development (CCFD-France)  World Solidarity, an organisation of Christian Workers Movement in Belgium (WSM) ஆகிய இரண்டும் கிறிஸ்டினா சாமியின் முக்கியமான நிதி மூலங்கள். கிறிஸ்டினாவுக்கு கிறிஸ்துகள் காசு கொடுக்கிறார்கள்.

கிறிஸ்டினா சாமி
ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் கிறிஸ்டினாவுக்கு படியளப்பது ஏகாதிபத்தியங்களின் அறக்கட்டளைகள். பதிலுக்கு கிறிஸ்டினா தாலியறுப்பது எதை?

இதைப் பற்றி எல்லாம் ‘ஜெயமோகனின் ஆசிபெற்ற வேட்பாளரான’ ஞாநி தவறாக கருத மாட்டார். ஜெயமோகனுக்கும் அப்படியே. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. ஞாநி ஒரு பத்திரிகையாளர் என்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதெல்லாம் தவறல்ல என்று எளிமையாக சொல்கிறார். ஜெயமோகனோ மெகா சைஸ் புக் போடும் எழுத்தாளர் என்பதால் அதை சுற்றி வளைத்து சொல்லும் இழுப்பு தேவையாக இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்டு பவுண்டேசன் தொடர்பாக எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும், ஜெயமோகனுக்கும் நடந்த இணைய விவாதம் ஒன்றில் ‘‘இத்தகைய நிதிகள் எப்போதுமே முதல்பார்வைக்கு ‘சரியான’ பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு நேர்மையான தோற்றமுள்ள பண்பாட்டு அமைப்புகள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. அவற்றின் உள்நிபந்தனைகள் பெறுபவர்களுக்கும் தெரியும்… நிதிபெற்றவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் நிதி பெற்றவர்களின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அந்த நிதியையும் கணக்கில் கொண்டே யோசிக்கவேண்டும் என்கிறேன். அந்த நிதியும் நம் பண்பாட்டுச் சூழலில் பேசப்பட்டாக வேண்டும் என்கிறேன்’’ என்று கூறியிருந்தார் ஜெயமோகன்.

அதாவது ஃபோர்டு பவுண்டேசனது நிதியை வாங்கிக் கொண்டு ஜெயமோகனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினால் பகவான் மன்னிப்பார். எதிரான கருத்துக்களை கூறினால் பகவான் கொஞ்சம் பதட்டப்படுவார்.

ஜெயமோகன்
ஃபோர்டு பவுண்டேசனிடம் காசு வாங்குபவர்கள் கருத்தளவில் ஜெயமோகனை எதிர்க்காமல் இருந்தால் அன்னாரது அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஜெயமோகனுக்கு இன்னும் அமெரிக்க என்ஜிஓக்களின் அருள் நமக்குத் தெரிந்து கிடைக்க வில்லை என்றாலும் அவரது ஆஸ்திரேலிய, மலேசிய, பயணங்களின் யோக்கியதை குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இவையெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பாவக்கணக்கில்தான் வரும். பகல்கொள்ளைக்காரர் பச்சமுத்து, திமுக அமைச்சர் தம்பி எஸ்கேபி கருணா, இந்துதேசியத்தின் ஆகாசவாணி மணிரத்தினம்- கமல்ஹாசன், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோருக்கு மட்டுமல்ல, மூப்பனாருக்கும் காவடி தூக்கியவர்தான் ஜெயமோகன். என்ஜிவோக்களில் கூட உள்நாடு வெளிநாடு, இந்துஞான மரபு, மேலைத்தேய கிறித்தவம் என்று பாகுபாடு பார்க்கிறார் ஜெயமோகன். அவ்வளவுதான் அவரது வேறுபாடு.

மேலும் ‘அஞ்ஞாடி’ நாவல் எழுத எழுத்தாளர் பூமணி, ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றிருப்பது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். கவனியுங்கள், கண்டிக்கவில்லை, ஏமாற்றம்தான். ஜெயமோகனுக்கு பிடித்தவர்கள் பவுண்டேசனிடம் நிதி பெற்றால் ஏமாற்றம், பிடிக்காதவர்கள் வாங்கினால் அவர்களை மட்டும் எதிர்த்து விட்டு பவுண்டேசனிடம் நிதி வாங்கி வேலை செய்வது தவறில்லை என்று சமாளிப்பது – இதுதான் இவரது அறம்.

ஜெயமோகனோடு நடந்த விவாதத்தில் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுவதில் தமிழ்நாட்டில் முன்னோடியான எம்.டி.முத்துகுமாரசாமி, ‘‘என்.சி.இ.ஆர்.டி., நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற நிறுவனங்கள் ஃபோர்டின் நிதியுதவியுடன்தான் நிறுவப்பட்டன. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘தற்கால தமிழ் அகராதி’ கூட போர்டு பவுன்டேஷன் ஃபண்டிங்தான். அதற்காக இதை எல்லாம் தவறு என்று சொல்வீர்களா?’’ என்று பல ஆதாரங்களை வெளியே எடுத்துவிட்டார். மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது ஃபோர்டு பவுன்டேசன் மொத்த அறிவுலகத்தையும் தத்து எடுத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.

எம்.டி.முத்துக்குமாரசாமி
சைவப்பிள்ளை எம்.டி.முத்துக்குமாரசாமி மலேசியாவுக்கும் போவார், மங்காத்தாவைப் பற்றி ஆய்வும் செய்வார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையில் வேலை பார்த்து விட்டு வெளியே பருப்பு வடையும், டிகிரி காபியும் குடித்து வந்த முத்துக்குமாரசாமி பின்னொரு நாளில் ஃபோர்டு பவுண்டேசனின் ஆசிய நிர்வாகிகளில் ஒருவராக பரிணமிப்போம் என்று கருதியிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நமது மக்கள் நாளைக்கு கால்வயிற்று கஞ்சி கிடைக்குமா என்று அஞ்சிய அந்தக் காலத்து நாட்களில் திருநெல்வேலி சைவப்பிள்ளை கூட்டம் எதிர்காலத்தில் நாம் எங்கே என்ன செய்து கொண்டிருப்போம் என்று குறிப்பான ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கற்பனை செய்து கொண்டது. பார்ப்பனர்களுக்கு சற்றும் குன்றாத இந்த சாதியின் நீதியை எம் டி எம் நன்றாகவே பராமரிக்கிறார்.

அமெரிக்கா ரிட்டர்ன் என்.ஆர்.ஐ அம்பியான பத்ரி சேஷாத்ரி ஞாநியின் தேர்தல் செலவுக்கு எளிய நிதி உதவி அளிப்பதை பெருமையுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த உதவி ஞாநியின் மூலம் ஆம் ஆத்மியிடம் சென்று அமெரிக்காவுக்கு சேவை செய்கிறது. ஆனால், அதே அமெரிக்காவில்தான் பத்ரி சம்பாதித்தார் என்பதால் இது ஒரு பெரிய ‘குற்றம்’ இல்லை.

மானுடவியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், இயற்கை விவசாயம், மருத்துவம், இயற்கை வளம் என்று ஒன்று விடாமல் எல்லா துறைகளையும் குறித்து உலகம் முழுவதும் உள்ள அறிவு தேடல் மற்றும் ஆய்வுகளை அமெரிக்காதான் பிரதானமாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கூத்தோ இல்லை கோலாட்டமோ, இருட்டு கடை அல்வாவோ அந்த அல்வாவின் சுவைக்கு காரணமான, தாமிரபரணி தண்ணீரோ இன்னபிற விவரங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் கையில். இதனால் என்ன ஆதாயம்? பிளாச்சிமடாவில் உள்ள சுவை நீர், கங்கைகொண்டானில் உள்ள தாமிரபரணியின் இனிமை நீர் இரண்டிலும் அமெரிக்க கோக் நிறுவனம் வந்து ஆலை திறந்து உறிஞ்சுவது இத்தகைய ஆதாயங்களுக்கு ஒரு சான்று.

மேலும் அரசியல், பொருளாதாரம், மதம், சாதி, தொன்மம், பால் என்று ஏராளமான துறைகளில் பயன்படத்தக்க இந்த விவரங்களை ஏகாதிபத்தியங்கள் சேகரித்துக் கொள்கின்றன. நேரம் மற்றும் தேவை வரும் போது அதை எடுத்து விடும். பயன்படுத்திக் கொள்ளும். மேலும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் வர்க்க போராட்டம் மற்றும் புரட்சிகர அரசியலுக்கு சென்று விடக்கூடாது என்பதோடு அவர்களை சிந்தனை மற்றும் வாழ்வியல் ரீதியாக ஊழல்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காகவும், இப்படி காசு கொடுத்து ஆய்வு வேலைகளை கொடுத்தும் வருகின்றன ஏகாதிபத்தியங்கள்.

ஆனால் இந்த சதிகார அரசியலை விடுத்து, நாங்கள் அகராதி போட்டோம், ஆமை வடை கண்டுபிடித்தோம், மகாபாரதம் ஆராய்ச்சி செய்தோம், விளிம்பு நிலை ஆய்வு செய்தோம் என்று இந்த சோரம் போன அறிவாளிகள் வியாக்கியானம் செய்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் ஞாநிக்கு கருத்து வேறுபாடு இல்லை.

கேஜ்ரிவால்-அஷூதோஸ் குப்தா
கேஜ்ரிவாலுடன் ஐ.பி.என்&7&ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா : அமெரிக்க ஆத்மியில் அணிவகுக்கும் ஆங்கில பத்திரிகையாளர்கள்.

இந்தியா முழுவதுமே ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜீ செய்தியின் முன்னாள் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, சி.என்.என்.-ஐ.பி.என்.னில் தேர்தல் நிகழ்ச்சி நடத்திய யோகேந்திர யாதவ், ஐ.பி.என்7-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா, முன்னாள் பத்திரிகையாளர் சேஸ்யா இல்மி, பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் என பட்டியல் நீள்கிறது (பட்டியலில் உள்ளவர்களை முழுமையாக ஆய்வு செய்தால் இந்த எண்ணிக்கை கூடலாம்). பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல… அறிவுஜீவிகள் என்று தங்களை கருதிக்கொள்வோர் பலர் ஆம் ஆத்மியுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். வாராது வந்த மாமணி போல ஆம் ஆத்மியை சித்தரிக்கும் இவர்கள், இதுநாள் வரை இந்த தேவதூதனின் வருகைக்காகத்தான் காத்திருந்ததைப் போல கதையளக்கிறார்கள்.

காங்கிரஸின் ஊழல், பா.ஜ.க.வின் இந்துமத வெறி இரண்டுக்கும் மாற்றுபோல ‘ஆம் ஆத்மி’யை முன்னகர்த்தும் இந்த அறிவுஜீவிகள் உண்மையில் யாருக்காக உழைக்கிறார்கள் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா? ஏனெனில் அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மோகத்துக்குரிய கட்சியாக, அவர்களின் கனவுக் கட்சியாக ஆம் ஆத்மியை ஊடகங்களில் சித்தரிக்கப் போவது இந்த அறிவுஜீவிகள்தான். செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த போலி ஜனநாயகத்திற்கு செயற்கை சுவாசம் வழங்குபவர்கள் இவர்கள்தான்.

முக்கியமாக இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இயக்கும் அமெரிக்கா இப்போது நேரடி அரசியலிலும் தனது கிளையை துவங்கிவிட்டதன் அடையாளம்தான் ஆம் ஆத்மி. ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற பல்வேறு கட்சிகளுக்கு விருந்து கொடுத்து உத்தரவு போட்ட அமெரிக்கத் தூதர் வாழும் தில்லியில் இனி அந்த தேவை இல்லை. அமெரிக்காவிற்கு பல்வேறு கட்சிகளில் தூதர்கள், புரோக்கர்கள் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளே முழு அடிமைகளாக இருந்தாலும் போதவில்லை. புரட்சிகர முழக்கங்களுடன், புத்திசாலித்தனத்துடனும் ஒரு புதிய கட்சி அதுவும் சொந்தமாக இருந்தால் என்ன என்று யோசித்ததன் விளைவுதான் ஆம் ஆத்மி.

ஆம் இது அமெரிக்காவின் ஆத்மி.

மேலும் படிக்க

செம்படையில் பெண்கள் – திரைப்படம்

0

சீனாவில் பல நூறு ஆண்டுகளாக மத பிற்போக்குத்தனங்களில் கட்டுண்டு, நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் விலங்குகளை போல அடிமைப்பட்டு இருந்தார்கள், பெண்கள். அப்படிப்பட்ட சீனாவில், புரட்சியில் இணைத்துக் கொண்டு, தங்கள் அடிமைத்தளைகளை உடைத்து, சீனாவின் முதல் புரட்சிகர பெண்கள் செம்படையை கட்டியமைத்த வரலாற்றை பற்றிய திரைப்படம் தான் “தெ ரெட் டிடாச்மென்ட் ஆஃப் விமென் – பெண்களின் செம்படைப் பிரிவு”.

திரைப்படம் – பாலே வடிவத்தில்

யூடியூபில் திரைப்படம் – சுட்டிகள்

1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு படைப்பு இந்த திரைப்படம். படத்தின் கதை சற்றே விரிவாக:

பெண்களின் செம்படைப் பிரிவு1930-ம் ஆண்டு சீனாவின் தென்கோடியில் உள்ள ஹைனான் தீவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படையின் விரிவாக்கமாக பெண்கள் ராணுவப் பிரிவு ஒன்று அந்தப் பகுதி பெண்களால் உருவாக்கப்படுகிறது. பெண்கள் செம்படைப் பிரிவு பற்றிய செய்திகள் மக்கள் மத்தியில் பரவுகின்றன.

வூ சிங்-குவா, விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். ஹைனான் தீவின் மிகப் பெரும் நிலப்பிரபுவான நான்-பா-தியன், சிங்-குவாவின் தந்தையை கொலை செய்து சிங்-குவாவை அடிமையாக கட்டி வைக்கிறான். அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சிங்-குவாவை பிடித்து கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது, முட்டி அளவு நீர் நிரப்பப்பட்ட அறையில் அடைத்து வைப்பது என்று துன்புறுத்தப் படுகிறாள்.

சிங்-குவா இந்த சிறையில் இருந்து தப்பித்து சென்று செம்படை பெண்கள் பிரிவில் இணைந்து நான்-பா-தியானை பழி வாங்க வேண்டும் என்று சிந்திக்கிறாள். ஆனால், சிறையில் இருந்து தப்பிக்கும் அவளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.

ஹைனான் தீவிற்கு வரும் திருவாளர் ஹோங் எனும் பணக்காரரை சந்தேகப்பட்டு கைது செய்கிறார்கள் நான்-பா-தியனின் அடியாட்கள். அவரை சிறைக்கு அழைத்து செல்லும் போது, அங்கு சிங்-குவாவை பார்க்கிறார் திருவாளர் ஹோங். திருவாளர் ஹோங்கின் பெட்டிகளை சோதனையிடும் நான்-பா-தியனிற்கு அவர் ஒரு பெரிய பணக்காரர் என்ற விடயம் தெரிய வருகிறது. அவரின் பண உதவியுடன் நிறைய ஆயுதங்கள் வாங்கினால், அந்த தீவில் செம்படையின் ஆதிக்கத்தை அடக்கவும், அதே நேரம் சீனாவின் வெள்ளை படையினரை தனக்காக போரிட அழைக்கவும் உதவியாக இருக்கும் என திட்டமிடுகிறார். திருவாளர் ஹோங்-ற்கு ஒரு ஆடம்பரமான விருந்தை ஏற்பாடு செய்து அதில் தன் திட்டத்தை பற்றி கூறி அவரை பணம் தர சம்மதிக்க வைக்கிறார்.

திருவாளர் ஹோங்  விடை பெறும் போது, தனக்கு உதவி புரிய ஒரு ‘அடிமைப் பெண்’ வேண்டும் என்று கேட்கிறார். குறிப்பாக சிங்-குவாவை கொடுக்குமாறு கேட்கிறார். முதலில் தயங்கும் நான்-பா-தியன் அவள் வெறிப்பிடித்தவள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு சிங்-குவாவை அவருடன் அனுப்புகிறான்.

உண்மையில் திருவாளர் ஹோங் பணக்காரர் இல்லை, அங்கு புதிதாக உருவாகி உள்ள பெண்கள் செம்படை பிரிவின் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர். பெண்கள் படைக்கு சேர்ந்த நிதி வசூலை கொண்டு செல்ல அவர் சாமர்த்தியமாக இப்படி மாறுவேடத்தில் வருகிறார். அதே நேரம் நான்-பா-தியனிடம் நெருங்கிப் பழகியதில் அவன் திட்டத்தையும் தெரிந்து கொள்கிறார்.

சிங்-குவாவை பாதி வழியில் விடுவிக்கும் ஹோங் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல், அவள் ஆசைப்படி செம்படையில் சேர புறப்படுமாறு கூறுகிறார். வழியில் அவள் உணவு செலவுக்கு 4 வெள்ளி காசுகளை கொடுக்கிறார்.

பெண்களின் செம்படைப் பிரிவுசெம்படையினரை தேடி செல்லும் வழியில் ஒரு இரவு நேரம் குடிசையில் நுழைகிறாள் சிங்-குவா. அங்கு லியான் எனும் பெண்ணை சந்திக்கிறாள். இருவரும் நட்பாகிறார்கள். அந்த பெண் சீன கிராமப்புற வழக்கப்படி புத்தருக்கு மணம் முடிக்கப்பட்டவள். நம் ஊரில் கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட பெண்ணை போன்றவாள். அந்த சமூகத்தையும் பிற்போக்குத் தனத்தையும் வெறுக்கும் அவள் சிங்-குவா உடன் செம்படையில் சேர அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள்.

இருவரும் செம்படை பெண்கள் பிரிவு பயிற்சி நிலையத்தை அடைகிறார்கள். செம்படையில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். ஏன் செம்படையில் சேர வேண்டும்? என்ற கேள்விக்கு, சிங்-குவா தன் உடலில் உள்ள தழும்புகளை காட்டி இதற்கு காரணமான நிலப்பிரபுவை பழி வாங்கத் தான் என்று கூறுகிறாள். செம்படை பிரிவில் இருவரும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.

ஒரு நாள் நான்-பா-தியானை உளவு பார்க்க சிங்-குவாவும், லியானும் அனுப்பப்படுகிறார்கள். பழி வாங்கும் வெறியில் இருக்கும் சிங்-குவா தன் வேலையை மறந்து நான்-பா-தியானை கொல்ல முனைகிறாள். இருவரும் நான் படைகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். இதற்காக சிங்-குவா தனிமையில் தன் தவறைக் குறித்து சிந்திக்கும்படி தண்டிக்கப்படுகிறாள்.

தண்டனையை ஏற்கும் சிங்-குவா தன் தவறை உணருகிறாள், தனது சிறு தவறு செம்படைக்கு பெரிய ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறாள். அதே நேரம் செம்படை நான் –பா-தியானை தாக்கி அந்த கிராமத்தை விடுவிக்கத் திட்டமிடுகிறது.

நான்–பா-தியானின் கிராமம் வெற்றிகரமாக விடுவிக்கப்படுகிறது. ஆனால் ‘நான்’ தந்திரமாக தப்பித்து விடுகிறான். பின்பு வெள்ளை படையினரால் காப்பாற்றி அழைத்து செல்லப்படுகிறான். நான்-பா-தியனை துரத்தி செல்லும் சிங்-குவா துப்பாக்கிச் சூட்டில் காயமடைகிறாள்.

ஆனால், சில மாதங்களுக்கு பின் வெள்ளை ராணுவத்தின் பெரும் படையுடன் வரும் நான்-பா-தியன், ஹைனான் தீவை சுற்றி வளைத்து தாக்குவதின் மூலம், கம்யூனிச படையை ஒழித்துவிடலாம் என திட்டமிடுகிறான்.

பெண்களின் செம்படைப் பிரிவுஆனால் செம்படை வேறு போர் தந்திரத்தை வகுக்கிறது. படையை மூன்றாக பிரித்து மூன்று இடங்களில் தாக்குதல் நடத்துமாறும், அதில் முக்கிய படையான நான் படையை சிறிது நேரம் ஆட்டம் காட்ட பெண்கள் செம்படை பிரிவு கட்சி பொறுப்பாளரால் தலைமை தாங்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறது.

நான் மற்றும் இதர தலைமை கமாண்டர்கள் பெண்கள் செம்படைப் பிரிவை முக்கிய படை என கருதி தவறான வியூகத்தை வகுக்கிறார்கள். இதனால் நானின் படை வெற்றிகரமாக எதிர் கொள்ளப்படுவதுடன், அழித்தொழிக்கவும் படுகிறது.

சீன பெண்கள் செம்படை பிரிவு இந்த முதல் வெற்றியுடன் தன் புரட்சிகர பயணத்தை துவக்குகிறது.

ல ஆயிரம் வருட பாரம்பரியம், வரலாறு கொண்ட சீனாவில் பெண்களின் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. அவர்கள் சீன சமூகத்தின்  பிற்போக்குத்தனங்களால் கட்டுண்டு கிடந்தார்கள். பின்பு சீனாவை நோக்கி வந்த ஏகாதிபத்திய நாடுகளும் இந்த நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை.

ஒரு பக்கம் கிராமத்தில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்ட சீனப் பெண்கள், பிற்போக்குத் தனமான தந்தை வழி குடும்ப அமைப்பிலும் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தனர். மறுபுறம் நகரங்களில் தொழிற்சாலைகளில் பல்வேறு அடக்கு முறைகளாலும் சமமான கூலி வழங்கப்படாமல், உடலை வருத்தும் சூழ்நிலையில் சக்கையாக பிழியப்பட்டனர்.

சீனாவில் நிகழ்ந்த உழைக்கும் வர்க்க எழுச்சியும், அதனைத் தொடர்ந்த புரட்சிகர போராட்டங்களும் சீனப் பெண்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டன. நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக்கான திட்டத்தின்படி, அதன் போரட்டங்களில் பங்கெடுப்பதின் ஊடே பெண்கள் பிற்போக்குத் தனங்களுக்கும் தங்கள் அடிமை வாழ்க்கைக்கும் எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றார்கள்.

அதன் நடைமுறை உதாரணம் தான் பெண்கள் செம்படைப் பிரிவு. புரட்சிக்கு வேலை செய்வதில் ஆணுக்கு நிகர் பெண்கள், பெண்கள் விடுதலை பெறுவதற்கு இந்த பிற்போக்கு சமுகத்தை அழிக்க அவர்கள் ஒரு பெரும் சக்தியாக ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம். அதன் ஒரு பகுதியாக ஆயுதம் தாங்கியப் பெண்கள் செம்படை கட்டப்படுகிறது.

பெண்களின் செம்படைப் பிரிவுஇதுதான் இந்த படத்திற்கான பின்புலம். ஆனால் செம்படையில் சேர்ந்து விடுவதாலேயே ஒருவர் முழு பாட்டாளியாக உருவாகி விடுவதில்லை, அவர் அந்த போராட்டத்தின் ஊடே கற்பதின் மூலம் தான் பாட்டாளியாக உருவாகிறார்.

சிங்-குவா இயல்பில் ஒரு விவசாயப் பின்னணியை கொண்ட ஏழைப் பெண் தான். ஆனால் அவளிடம் பழி வாங்கும் குணம் இயல்பிலேயே இருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் அவசரப்படுகிறாள். தனக்கு மட்டும் ஏதோ தனியாக  குற்றம் நிகழ்ந்து விட்டதை போல பாவிக்கிறாள். ஆனால் செம்படையில் பயிற்சியின் போது அவள் பழகும் பலரிடமும் நிலப்பிரபுக்களின் கொடுமைகளை பற்றிய கதைகள் உள்ளது. அவர்கள் அனைவருமே நிலப்பிரபுக்களால் துன்புறுத்தப்பட்டவர்கள் தான். சமூகமே நிலப்பிரபுக்களாலும், ஏகாதிபத்திய முதலாளிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறது. இதை மெல்ல கற்கும் அவள், ஒரு நான்-பா-தியனை பழி வாங்குவது மட்டும் இலக்கு அல்ல, அதன் மூலம் தனது விடுதலையை சாதிக்க முடியாது, அதை சாதிக்க ஒட்டு மொத்த சீன சமூகத்தையும்  விடுவிக்க வேண்டும், அதற்கு உழைக்கும் மக்கள் அனைவரின் ஒற்றுமை அவசியம் என்பதை உணருகிறாள்.

செம்படைப் பிரிவின் கட்சிப் பொறுப்பாளர் சாங்-சிங் கட்சியில் இணைந்து இரண்டே வருடத்தில் மிக குறிப்பான வளர்ச்சியை அடைந்திருப்பதை பற்றி சிங்-குவாவும், லியனும் விவாதிக்கும் காட்சி மிக முக்கியமானது. இது கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பை துல்லியமாக விளக்கும் காட்சி.

இருவரும் சாங்-சிங்கை பார்த்து பொறாமைப் படவில்லை, அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ அவரை பார்க்கவில்லை. எப்படி இரண்டே வருடத்தில் அவர் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பதை பற்றி விவாதிக்கிறார்கள். பின்பு தாங்களும் மிக வேகமாக தங்களை வளர்த்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.

இறுதிப் போரின் போது ராணுவப் படையில் பெண்களை பார்க்கும் நான்-பா-தியன் அதை வெறும் தந்திரம் என புறந்தள்ளுகிறான், அவன் மதிப்பீடு அவனையும் அவன் படையையும் முழுவதுமாகவே அழிக்கிறது. சரி தான், சமூகத்தில் பெண்கள் குறைத்து மதிப்பிடப்படுவது அழிவை நோக்கி தான் அழைத்து செல்லும்.

சீன நிலைமைக்கு இந்திய நிலைமை சற்றும் குறைந்ததல்ல, ஒரு புறம் சாதி, மத சடங்குகளின் பிடியிலும், மறுபுறம், நுகர்வு கலாச்சார கவர்ச்சி பொம்மைகளாகவும், பெண்கள் வாழ்வை கசக்கி பிழிந்து துப்பிக் கொண்டிருக்கிறது இந்திய சமூகம். இதை எதிர்த்து போராடி சமூக அமைப்பையே மாற்றி அமைப்பதன் மூலம்தான் பெண்கள் விடுதலை பெற முடியுமே தவிர இந்த சமூகத்தின் உள்ளேயே செய்யப்படும் சில சீர்த்திருத்தங்களால் அல்ல. அதற்கு இந்தப் படம் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

–    ஆதவன்.

கழிப்பறைத் தொழிலாளியை கழுவிலேற்றும் சமூகம் !

5

சென்னையின் சுறுசுறுப்பான பேருந்து பணிமனைகளில் ஒன்று. பெரிய பள்ளம் பறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலில் விழுந்து எழுந்து உள்ளே நுழையும் பேருந்து ஒன்று உயரமான ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு கீழ் பயணிகளை உதிர்க்கிறது. சோகையான வெயில் கொஞ்சம் காட்டமாகவே அடிக்கிறது. ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நேரப் பதிவு செய்து விட்டு கிடைக்கும் ஒரு சில நிமிட இடைவேளையில் டீ குடிக்கவோ, புகை பிடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ இடம் தேடி ஓடுகிறார்கள். பக்கத்து பேருந்து முதலில் புறப்பட்டு விடுமோ என்ற குழப்பத்துடன் கூடிய பதற்றத்துடன் பேருந்துகளின் உள்ளே பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து சிறிது தள்ளி இருக்கும் பணிமனையிலிருந்து மெதுவாக நடந்து வரும் காக்கி உடை உடுத்த ஒருவர் தயங்கி தயங்கி அணுகினார்.

“செக்யூரிட்டிட்ட வந்து பேசிட்டு போனது நீங்கதானே …”. போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களின் வாழ்க்கை போராட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்திருந்த எங்களிடம் விரக்தியுடன் அறிமுகம் செய்து கொண்டார்.  அவர் சொன்ன விவரங்கள் அந்த விரக்தியின் நியாயத்தை அங்கீகரித்தன.

“ஆமா, சொல்லுங்க, நீங்களும் இங்கதான் வேலை பார்க்கிறீங்களா? மெக்கானிக்கா இருக்கீங்களா”

“இல்லைங்க கிளீனிங் வேலை செய்றேன்”

“அப்படியா, பஸ் எல்லாம் கிளீன் செய்வீங்களா?”. ஒவ்வொரு நாள் இரவும் டெப்போவில் கொண்டு விடப்படும் பேருந்துகளின் உள், வெளிப்புறங்களை பெருக்கி, தூசி தட்டி கழுவி விடும் வேலை செய்கிறாரோ என்று கேட்டோம்.

“முன்ன அதைத்தான் செஞ்சிட்டு இருந்தேன். 15 வருஷமா அந்த வேலை செஞ்சு, தூசி எல்லாம் உள்ள போயி பிரச்சனை ஆயிருச்சி. இங்க பாருங்க” என்று சட்டையைத் தூக்கி வயிற்றைக் காட்டுகிறார். சுமார் 10 இஞ்ச் நீளத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை தழும்பு நெஞ்சிலிருந்து வயிற்றை நோக்கியபடி அழுத்தமாக இருந்தது. 15 ஆண்டுகள் மாநகர பேருந்து கழகத்துக்கு உழைத்து தனது நுரையீரலை கரைத்து விட்டிருக்கிறார்.

“மூச்சுப் பிரச்சனைன்னு சொல்லி ஜி.எச்லதான் ஆப்பரேசன் செஞ்சாங்க. இனிமேலும் தூசி, கெமிக்கல்ஸ்ல வேல செஞ்சா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அப்புறமா இந்த காண்டிராக்டர போய் பார்த்து அவரு டாய்லெட் கழுவுற வேலை செய்யச் சொன்னாரு”. அவரை அப்படி நட்டாற்றில் விட்டு விடாமல் வேலை வாய்ப்பு கொடுத்த காண்டிராக்டரின் ‘கருணை’யை பற்றி கேட்க நினைத்து, மேல் விவரங்களை விசாரித்தோம்.

“அப்பிடியா, எத்தன டாய்லெட் கிளீன் பண்ணணும்”

“அஞ்சு, பதினைஞ்சு,…” கணக்கு போடுகிறார். “ஆபீசருங்களுக்குன்னு இங்க இருக்குற 20 டாய்லெட்டுங்களை கழுவணும்.”. 20 கழிவறைகளை பராமரிக்க ஒரே தொழிலாளியை வைத்திருக்கிறார் அந்த தொழில் முனைவு மிக்க காண்டிராக்டர்.

இந்தியா - நிலப்பிரபுத்துவம்
மாதிரிப் படம் : இணையத்திலிருந்து

“எவ்வளவு சம்பளம் கெடைக்குது”

“மாசம் 4,000 ரூபா சம்பளம். ஏதாவது ஒரு நாள் லீவு போட்டா கூட சம்பளத்துல  பிடிச்சிருவாங்க. அதனால லீவே எடுக்காம தினமும் வந்துருவேன்.”

“எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?”

“காலையில 6 மணிக்கு வரணும். லேட்டா வந்தா செக்யூரிட்டி சம்பளத்த கட் பண்ண சொல்லிருவான்.”

“6 மணிக்கு வரணும்னா எத்தனை மணிக்கு புறப்படுவீங்க. வீடு எங்க இருக்கு”

“வீடு ஆவடில இருக்கு. காலையில 4 மணிக்கு எந்திரிச்சி, குளிச்சி, பழையது சாப்பிட்டுட்டு வந்துருவேன். டிரெயின் பாஸ் எடுத்து வெச்சிருக்கேன். இறங்கி, ஷேர் ஆட்டோ பிடிச்சு வருவேன். தெனமும் ஷேர் ஆட்டோ செலவு 10-15 ரூபா ஆகும்.”

“ஏங்க நீங்க வேலை செய்றது எம்.டி.சி டெப்போல, பஸ்ல வரலாமில்லையா?”

“எங்கங்க, பஸ் டிக்கெட்டு காசு அதிகம், கட்டுப்பிடியாகாது.”

“டெப்போல வேலை பார்க்கிற நீங்க டிக்கெட் எடுக்கணுமா என்ன?”

“எங்க? ஒரு 50 பைசா கொறைஞ்சாலே கண்டக்டருங்க எறக்கி விட்டுருவாங்க, டிக்கெட் இல்லாமலா வர முடியும்? ஐடி கார்டு இருந்தாத்தான் டிக்கெட் எடுக்காம வர விடுவாங்க”

“உங்ககிட்ட ஐ.டி. கார்டு இல்லையா?”

“கார்டு தரச் சொல்லிக் கேட்டா, ‘நீதான சம்பளம் வாங்கற, பஸ்சுக்கு காசு கொடுத்துதான் வரணும். நீ என்ன, எம்.டி.சி-யில வேலை பார்க்கிறியா என்ன? கூலிதான’-ன்னு கத்துவாங்க”. டெப்போவில் வேலை செய்யும் தொழிலாளியை காண்டிராக்டர் பொறுப்பில் விட்டு போக்குவரத்துக்குக் கூட வசதி தராமல் சுரண்டுகிறது மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகார வர்க்கம்.

“ஏங்க இவ்வளவு தூரம் அலையிறீங்க. உங்க வீட்டு பக்கத்திலே ஆவடிலேயே பஸ் டெப்போ இருக்கே, அங்க வேலை தரச் சொல்லி காண்டிராக்டர் கிட்ட கேக்க வேண்டியதுதானே?”

“அவர்கிட்ட போயி அப்படி எல்லாம் கேக்க முடியாதுங்க… ‘உனக்கு பெரிய ஆளுன்னு நினைப்பா, இஷடம் இருந்த வேலை செய்யி, இல்லன்னா விட்டுட்டு போயிடு, இந்த வேலைக்கு நூறு பேரு காத்துகிட்டு இருக்கானுங்க’ன்னு திட்டி தொரத்திருவாரு.”

“கேட்டா கூட அவ்வளவு திட்டுவாரா என்ன?”

“ஆமாங்க, ஒரு தடவ பி.எம். (டெப்போ கிளை மேலாளர்) கேட்டப்போ பினாயில் தீர்ந்திருச்சின்னு சொல்லிட்டேன். அடுத்த மாசம் சம்பளம் வாங்கப் போனா, ‘நீ பி.எம். கிட்ட பினாயில் இல்லன்னு சொன்னேல்ல, அவர்கிட்டயே போய் சம்பளம் வாங்கிக்கோ. உனக்கு என்ன கெவர்ன்மென்ட் ஸ்டாஃபுன்னு திமிரா’ன்னு சம்பளம் தராம வெரட்டிட்டாரு. வழக்கமாவே 10-ம் தேதிக்குள்ள சம்பளம் தர மாட்டாங்க, 15 தேதி வரை ஆகிடும். அந்த மாசம் பல தடவ இழுத்தடிச்சி 23-ம் தேதிதான் சம்பளப் பணம் கொடுத்தாரு”. வேலை கொடுத்து சுரண்டுவதையே பெரிய கருணை என்று நினைக்கும் இந்த பண முதலைகள், கடைநிலை தொழிலாளிகள் தம்மிடம் பேசுவதை கூட தமது அதிகாரத்துக்கு இழுக்காக கருதுகின்றனர்.

“வேலை நிறைய இருக்குமா?”

“காலையில 6 மணிக்கு வந்ததும் 20 டாய்லெட்டையும் ஆசிட் ஊத்தி கழுவி, பினாயில் தெளிச்சி சுத்தமா வைச்சிருக்கணும். ஆஃபிசருங்கல்லாம் வர்றதுக்குள்ள முடிக்க, 11 மணி ஆகிடும். மதியம் 2 மணிக்கு இன்னொரு தடவை தண்ணீ அடிச்சி விடணும். சாயங்காலம் போறதுக்கு முன்னால ஒரு தடவ. 5 மணிக்கு கையெழுத்து போட்டுட்டு புறப்படுவேன். வீட்டுக்குப் போய்ச் சேரும் போது ஆறரை, ஏழு ஆகிடும்.”

“மதியம் டெப்போல இருக்குற கேன்டீன்ல சாப்பிடுவீங்களா?”. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்காக மானிய விலையில் மதிய உணவு வழங்கும் உணவகம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். ரூ 1 விலையில் கூப்பன் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

“கேன்டீன்ல நாமெல்லாம் சாப்பிட முடியாது. ஸ்டாஃபுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க.”

“நீங்களும் இங்கதானே வேலை செய்றீங்க. யூனியன் இருக்கே. அவங்ககிட்ட போய் உங்களுக்கும் கேன்டீன்ல சாப்பிடறதுக்கு வசதி வாங்கித் தரச்சொல்லி கேட்க வேண்டியதுதானே.”

“ஒரு தடவ கேட்டிருக்கேன். ‘இன்னைக்கு நான் சொல்லிர்றேன், போய் சாப்பிட்டுக்கோ’-னு சொன்னாங்க. அதே போல தெனமும் போய் கேக்க முடியுமா? நமக்கு கூப்பன் தர மாட்டாங்க. ‘அதெல்லாம் ஸ்டாஃபுக்குத்தான் நீ இப்படி கேக்குறது தப்பு’ன்னுட்டாங்க. பகல்ல கடையில ஒரு டீ குடிச்சிட்டு சமாளிச்சிடுவேன். சாயங்காலம் வீட்டில போயி சாப்பிடுவேன்”.

சங்க உறுப்பினர்களாக இருக்கும் ஓட்டுனர், நடத்துனர்களிடமே ஒவ்வொரு விஷயத்துக்கு லஞ்சம் வாங்கி கொழுக்கும் ஆளும் கட்சி யூனியன் ஒட்டுண்ணிகளுக்கு இவரைப் போன்ற ஒப்பந்தத் தொழிலாளி பட்டினியாக இருந்தால் என்ன, பரதேசம் போனால் என்ன?

“வீட்டிலிருந்து கொண்டு வரலாம். இல்லைன்னா, வெளியில சாப்பிடலாம் இல்லையா?”

எம்.டி.சி பேருந்து
எம்.டி.சியில் பணி புரியும் தொழிலாளி போக முடியாத மாநகரப் பேருந்து.

“அதுக்கெல்லாம் கட்டுப்படியாகாதுங்க. வீட்டு வாடகையே மூவாயிரத்தைந்நூறு ரூவா ஆயிடுது. அது போக கரண்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ஆறு ரூபா வச்சு வாங்கறாங்க. மக எட்டாங் கிளாசு முடிச்ச உடனேயே டெய்லர் வேலைக்கு போகச் சொல்லிட்டேன். மக சம்பளத்த வாங்கி வாடகை கொடுத்துட்டு என் சம்பளத்தில மத்த செலவுகளை பார்த்துப்போம். நானும், வீட்டுக்காரம்மாவும், ரெண்டு மகள்களும்தான் இங்க இருக்கோம். பையனுங்க ரெண்டு பேரையும் ஊர்ல இருக்கற தாத்தா, பாட்டி கூட அனுப்பியிருக்கேன்”. நவீன உழைப்புச் சுரண்டல், குடும்பத்தை அரைப்பட்டினியாக உழைக்க வைத்து, ஒரு பகுதியை சிதறடித்து, படிப்பை நிறுத்தி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

“நீங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வருவீங்களா”

“எங்க ஊருக்கு போக கடப்பாலேர்ந்து (ஆந்திரா) 60 ரூபா டிக்கெட் எடுக்கணும். ஊருக்குப் போறதுக்கு லீவு போட்டா நமக்கு பணம் செலவாகுதுல்ல. அதனால, நான் ஊருக்கே போறதில்ல, பையனுங்க மட்டும் இங்க வந்துட்டு போறதுக்கு காசு கொடுப்பேன்.”

“நீங்க ஊர்லேர்ந்து எப்போ சென்னைக்கு வந்தீங்க”

“அது ஆச்சுங்க 20 வருஷத்துக்கு மேல. ஊர்ல ரெட்டிங்கதான் பெரிய ஆளுங்க. நான் எட்டாங் கிளாஸ் படிக்கும் போது, ‘ஏண்டா, நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல, படிப்பை நிறுத்திட்டு ரெட்டி வீட்டுல வேலைக்குப் போ’ன்னு சொல்லிட்டாரு.

ரெட்டி வீட்டில தினமும் போய் வேலை செய்யணும். மாடு மேய்க்கறது, தொழுவத்தை சுத்தம் பண்றது, வயல் வேலைன்னு அவங்க சொல்றத செய்யணும். நாள் முழுக்க வேலை செஞ்சா, சாயங்காலம் சோறு போடுவாங்க. மத்தபடி, ஏதாவது உடம்பு சரியில்ல, கஷ்டம்னு போய் சொன்னா நாலைஞ்சு கிலோ கேழ்வரகு கொடுப்பாங்க.”

“ஏங்க, அப்படில்லாம் கூலி இல்லாம வேலை பார்த்தீங்க. போக மாட்டேன்னு சொல்லலையா?”

“அது எப்படிங்க, முடியாதுன்னு சொல்ல முடியும். நம்ம அப்பா எல்லாம் அப்படித்தான் வேலை பார்த்தாரு. நாம வேலை செய்ய மாட்டோம்னு சொல்ல முடியுமா. அப்புறம்தான் மெட்ராசுக்கு கிளம்பி வந்தேன்”. நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை ஊறிப் போன மண்ணிலிருந்து வந்திருக்கும் அவர் பின்னணி, காண்டிராக்டரையும், டெப்போ நிர்வாகத்தையும் எதிர்த்து ஒரு சொல் கூட கேட்காத காரணத்தை உணர்த்தியது.

“உங்க ஊர்ல வேலை கெடைக்காதா.”

“இது மாதிரி கெடைக்காது சார். அதுவும் ரெட்டி எங்களையெல்லாம் கோயிலுக்குள்ள விட மாட்டான் சார். நான் கல்யாணம் ஆன பொறகு கிறிஸ்டியனா மாறிட்டேன்.

“அப்படியா, ஞாயித்துக்கிழமை தோறும் சர்ச் போவீங்களா”

“ஞாயித்துக் கெளம லீவு எடுத்தா சம்பளம் கட்டாயிரும். தெனமும் வேலை செஞ்சாத்தான 4,000 ரூபா வரும். அதனால எப்பவாவதுதான் போவேன்”. கிராமத்து கொடுமையிலிருந்து விடுபட நகரத்துக்கு வந்தவருக்கு அரை வயிற்றில் வாரத்துக்கு 7 நாள் வேலை செய்யும் ‘விடுதலை’யை வழங்கியிருக்கிறது, நவீன இந்தியாவின் வளர்ச்சி.

“சர்ச்சில உங்களுக்கு எதாவது உதவி பண்ணுவாங்களா”

“சர்ச்சில பார்த்த ஒருத்தரு மாசம் 1,000 ரூபா பென்ஷன் வர்ற மாதிரி ஏற்பாடு செய்றேன், ஒரு 10,000 ரூபா செலவாகும்னாரு. ஊர்லே அப்பா அம்மாகிட்ட 5,000 கடன் வாங்கி அனுப்பச் சொல்லி, சம்பளப் பணத்தையும் போட்டு கொடுத்தேன். பணத்தை வாங்கிட்டு போன அந்த ஆளு அப்படியே மாயமாயிட்டான், கண்லயே படல.” ஏழைகளைச் சுரண்டுவதில் கர்த்தருடைய ஆலயமும் விதிவிலகல்ல.

“சம்பளம் இவ்வளவு குறைவா இருக்கே, வீட்டில பால், தண்ணி செலவுக்கே கஷ்டமா இருக்குமே?”

“பால் தினசரி வாங்க முடியுமா சார். என்னா வெலை விக்கிது. அப்புறம் சம்பளம் அதுக்குத்தான் சரியா இருக்கும். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதடவை 12 ரூபாய்க்கு ஒரு கப் டீ வாங்கி நாலு பேரும் குடிச்சிப்போம்.” காலையில் ஃபில்டர் காஃபி குடிக்கா விட்டால் தலைவலி வந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு டீ குடிக்கக் கூட இவ்வளவு கணக்கு போட வேண்டியிருக்கிறது.

“ஏதாவது அவசரத் தேவைன்னா கடன் எல்லாம் வாங்குவீங்களா”

“நம்ம நம்பி யார்ங்க கடன் கொடுப்பாங்க. அப்படியே கொடுத்தாலும் வாங்க மாட்டேன். கட்ட முடியலைன்னா வீட்டுக்கு முன்ன நின்னு சத்தம் போடுவான். அதனால, காசு இருந்தா சாப்பிடுவோம், இல்லைன்னா பட்டினியா கெடப்போம்னு முடிவு பண்ணிட்டேன்”.

“வேற எப்படித்தான் சமாளிப்பீங்க”

“எங்க வீட்டம்மா நாலைஞ்சு வீடுகள்ல வேலை செய்ய போய்கிட்டு இருந்தாங்க, இப்ப அவங்களுக்கு முடியாம போயிடுச்சி. ரெத்த அழுத்தமாம். அதனால அவங்க வேலைக்கு போறதில்ல.”

“ரேசன் கார்டு எல்லாம் வச்சிருக்கீங்களா?”

“அதெல்லாம் பக்காவா இருக்குங்க, ரேசன்ல  பச்சரிசி 5 கிலோ, புழுங்கலரிசி 5 கிலோ கொடுப்பாங்க. இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கூட கொடுத்திருக்காங்க”

“தேர்தல்ல ஓட்டு போடுவீங்களா?

“ஆமா, கண்டிப்பா போட்டுருவேன். நம்ம தெருவுல ஒரு கவுன்சிலர் இருக்கான். அவன்தான் ஒவ்வொரு தேர்தல்லையும் யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்லுவான். உள்ளதை சொல்லணும், போன எலக்சனுக்கு 100 ரூபா வீட்டுக்கே வந்து கொடுத்துட்டான்”. நடுத்தர வர்க்கம் மெச்சிக் கொள்ளும் ‘ஜனநாயகம்’ கொடுத்த ஓட்டுரிமை இவருக்கு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, சில நூறு ரூபாய் கொடுத்து அந்த ஒரு நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட வழி செய்கிறது.

“கறி, மீன் எல்லாம் எப்பவாவது வாங்குவீங்களா?”

“சம்பளம் வாங்குன அண்ணைக்கு மட்டும் கொஞ்சம் மாட்டுக்கறி வாங்கி சமைப்போம். அவ்வளவுதான்”.

“உங்க பொண்ணுக்கு ஊர்ல போய் கல்யாணம் செய்து வைப்பீங்களா? சென்னையிலா?”

“சாப்பாட்டுக்கே வழியில்லாத நெலமைல, பொண்ணுக்கு கல்யாணம் செய்யறத பத்தியெல்லாம் யோசிக்கவே இல்ல சார்”.

ஆளும் கட்சி யூனியன் ஆட்கள் ஜெயா பிறந்த நாளுக்காக பேனர் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவரிடம் அது பற்றி கேட்டோம்.

“அம்மா பொறந்த நாள்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி எல்லாரையும் ரத்தம் கொடுக்க . கூட்டிட்டு போனாங்க. நானும் போனேன். ஆனா, என் ரத்தத்தில சத்து இல்லைன்னு ரத்தம் எடுக்கல.”

தூரத்தில் செக்யூரிட்டி வருவதைப் பார்த்ததும் “என்னடா பேசிக்கிட்டு இருக்கேன்னு மிரட்டுவான் சார்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து போய் விட்டார்.
____________
ஆந்திராவில் ரெட்டிகளின் கொடுங்கோன்மை. தப்பி பிழைக்க வந்த சென்னையில் அரசு – அதிகார வர்க்கம் – தனியார் ஒப்பந்ததாரர்களின் ஒடுக்குமுறை. பேருந்து கழுவும் வேலையில் நுரையீரலுக்கு அறுவை சிகிச்சை. பிறகு 20 கழிப்பறைகள். 4000 ரூபாய் சம்பளம். கால் வயிற்றுக் கஞ்சி. தொழுவதற்கு என்றைக்காவது அருள் கொடுக்கும் கர்த்தர். ஊரிலும் வீட்டிலும் பிரிந்து கிடக்கும் குடும்பம். எங்கும் எப்போதும் பேச முடியாத அடிமை வாழ்வு. இன்னும் எத்தனை நாள் இவரை அந்த உடம்பு சுமந்து செல்லும்?

ஊழலிலும், ஒடுக்குமுறையிலும் வயிறு வளர்க்கும் அதிகார வர்க்கம் தனது சிறுநீரை கழித்து விட்டு அதனை கழுவுவதற்கு வைத்திருக்கும் ஒரு அடிமையின் கதை இது. அவருடைய கதை மட்டுமல்ல. நாடெங்கும் நாடோடிகளாய் சுற்றிவரும் உழைக்கும் மக்களின் கதைகளும் ஏறக்குறைய இதுதான். இந்தியாவும் அதனுடைய ஜனநாயகமும் அருளியிருக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

20/20 கிரிக்கெட்டிலும், பேஸ்புக் லைக்கிலும், தேர்தல் அரட்டையிலும் இன்பகரமாக பொழுதை கழிப்பவர்கள் இந்த இத்துப்போன ஒரு கழிப்பறைத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?

–    வினவு செய்தியாளர்கள்

[பெயரும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன]

வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து

0

தேர்தல் திருவிழா முன்பு போல களைகட்ட வாய்ப்பில்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் ‘கட்ட’ ஆரம்பித்து விட்டது. இந்தக் களையில் குறையிருந்தாலும் ஜனநாயக ‘தீவிரவாதிகளின்’ கடமை உணர்ச்சிக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஆரம்பித்து,  கருப்புப் பண சினிமா நட்சத்திரங்கள் வரை ஓட்டளிப்பதன் அவசியம்  குறித்து மக்களுக்கு ‘ஜனநாயக’ வகுப்பெடுக்கிறார்கள். அப்பேற்பட்ட இந்த ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய கோயம்பேடு கிளம்பினோம்.

கோயம்பேடுமுதலில் இனிப்பிலிருந்து ஆரம்பிக்கலாமென்று பழங்கள் பிரிவிலுள்ள திராட்சை மொத்த விற்பனைக் கடையின் இரு தொழிலாளிகளிடம் பேச்சு கொடுத்தோம்.

அறிமுகப்படுத்திக் கொண்டு, தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு என்றதும் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்கள்.

“தேர்தலில் ஓட்டு போடுறது பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“அதுவா அது நம்ம கடம! போட்டுதான ஆவனும்.”

“எதுக்காகண்ணே கடமைனு சொல்றீங்க? என்ன காரணம்?”

“(யோசிக்கிறார்) இல்லப்பா, கடமனா…………………………… அது கடம தான்.”

“இல்லண்ணே இப்போ நம்ம அப்பா அம்மா இருக்காங்க; நம்மள பெத்து வளத்து கவனிச்சிருக்காங்க, வயசான காலத்துல அவங்கள பாத்துக்கணும்; அது நம்ம கடமை. இது மாதிரி கடமைனா ஏதாவது காரணம் இருக்கணும்ல?”

” ம்ம்ம்……………  ஓட்டு போடலனா…..(இழுக்கிறார்)  நாம ஏதும் பேசமுடியாது. ரோடு கீடு போடல, தண்ணி வரலனு நாம போயி சொன்னா என்ன கேப்பான்? நீ ஓட்டு போட்டியானுதான கேப்பான்?”

“ஆமா… சரிதான்”

“வோட்டு போட்டாதான நாம கேள்வியே கேக்க முடியும். அதுக்கு தான் வோட்டு போடனும்.”

“ம்.. சரிண்ணே இதுவரைக்கு எத்தனை முறை உங்க எம்.பிக்கிட்ட கேள்வி கேட்டிருக்கீங்க?”

“அது எதுவும் கேட்டதில்லப்பா”

“ஏண்ணே?”

“அது எப்படிப்பா நாம கேக்க முடியும். ஓட்டு கேக்க வந்ததோட சரி அதுக்கப்புறம் எட்டி கூட பாக்க மாட்டாங்களே.”

“நீங்க உங்க எம்.பி வீடு அல்லது வேறு எங்கேயாவது மீட்டிங்ல பார்த்த இடத்தில் போய்,  ‘ஏம்பா நீ சொன்ன எதயுமே பண்ணலயே’ அப்படினு கேக்க வேண்டியது தானே?

“(அதிர்ச்சியுற்று)  வீட்டுக்கா.  இதெல்லாம ஆகுற காரியமா? . அப்படி போயி கேட்டுட்டு திரும்பி வர முடியுமா?”

“நீங்க தான சொன்னீங்க ஓட்டு போட்டாதான் கேள்வி கேக்க முடியும், அதுனால தான் ஓட்டு போடுறேனு. ஆனால் இப்போ கேக்கவே முடியாதுனு சொல்றீங்க. அப்புறம ஏன் ஓட்டு போடுறீங்க.”

“(சிரித்துக் கொண்டே) நம்மெல்லாம் எப்படிப்பா கேக்க முடியும்.”

கோயம்பேடு“இது ஜனநாயக நாடு. தேர்தல் நடக்குது, எழுத்துரிமை, பேச்சுரிமை, கேள்வி கேட்கும் உரிமை எல்லாம் இருக்குனு ‘படிச்சவங்க’ சொல்றாங்களே?”

“அப்படிலாம் எதுவும் இங்க இல்ல.”

“அப்போ ஜனநாயகமே இல்லனு சொல்ல வாரிங்களா? அப்புறம் எதுக்கு ஓட்டு போட்டுகிட்டு?”

“யாராச்சும் நல்லவங்க வருவாங்கனு தான் ஓட்டு போடுறோம். போன தடவ ரெட்ட இலைக்கு போட்டேன், இப்ப விஜயகாந்துக்கு போடலாம்னு இருக்கேன். “

“சரி சரி… ஆமா,  உங்களை மாதிரி கடைகளுக்கு, ரிலையன்ஸ் கடைகள் வந்ததால பிரச்சனைனு சொல்றாங்களே. இப்போ கூட ஏதோ வெளிநாட்டு கம்பெனி,  வால்மார்ட் ஏதோ வருதுனு போராட்டமெல்லாம் நடந்துச்சே. போராட்டம் என்னணே ஆச்சி? “

“அது இன்னும் அப்படித்தான் இருக்கு. எதையும் மாத்தல.”

“நீங்க ஓட்டு போடுற கட்சி ஆட்சிக்கு வந்தா அத மாத்திருவாங்களா?”

“அதெப்படி மாத்துவான். முதல்ல எங்களுக்குள்ளேயே ஒத்தும இல்ல, அதுதான பிரச்சனையே. கோயம்பேட்ல இருக்குறவங்க எல்லாரும் சேந்து போராட்டம் பண்ணா எப்படி இருக்கும்? அப்படி இல்லைல. அப்படி பண்ணா தான கவர்மெண்டு கேக்கும்”

“சரி தான். ஆனா எதுக்கு போராடணும். நீங்க தான் ஓட்டு போடுறீங்கல்லையா? அப்புறம் ஏன் தண்ணி வரலைனாலும் போராட்டம் நடத்துறீங்க, ரிலையன்சுக்கு எதிரா போராட்டம்னு பன்றீங்க.  போராட்டம் பண்ணி தான் மாத்த முடியும்னா எதுக்கு ஓட்டு போடனும்?”

“ (சற்று நேரம் யோசித்தவர்) ஆமா ஏன் ஓட்டு போடுறோம்?”

“நீங்க தான் சொல்லணும்?”

“கேள்விக்குறி தான்.  நீங்க என்ன தான் சொல்ல வர்ரீங்க?  போடனும்னுறீங்களா? போடவேணாம்னுறீங்களா?”

“நான் எதுவும் சொல்ல வரல. நீங்க என்ன காரணத்துக்காக ஓட்டு போடுறீங்கனு கேக்குறேன் அவ்வளவுதான். நீங்கதான் ஓட்டு போடுறீங்க நீங்கதான் சொல்லனும்.”

யோசித்துவிட்டு “இப்போ……………… ஊருல கோயில் திருவிழானா போறம்ல. ஏன் போறோம்? ஏன், எதுக்குனு கேட்டுகிட்டா இருப்போம். அதுமாதிரிதான். எல்லாரும் ஓட்டு  போடுறாங்க நாமளும் போடனும். “

“எல்லாரும் தெவசம் குடுக்குறாங்க நாமும் கொடுக்குறோம். தெவசம் மாதிரினும் சொல்லலாம் அப்படிதான? ”

கோயம்பேடுஆமோதிப்பது போல சிரித்தார்கள்.

“கடைசியா ஒரு சந்தேகம்ணே. இப்போ உங்க ஊரு கவுன்சிலரு, எம்.எல்.ஏ, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் இவங்கள்ள யாருக்குனே பவர் அதிகம்.”

“ஜட்ஜ்க்குத்தான். அரசியல்வாதி என்ன பண்ணாலும் அவரு தீர்ப்பு குடுத்து மாத்திரலாம். இவங்களையே ஜெயில்ல போடுற அதிகாரம் ஜட்ஜ்க்குதான இருக்கு.”

“அப்படினா பவர் இல்லாத ஆளதான் நாம தேர்ந்தெடுக்கிறோமா. நியாயப்படி பவர் அதிகமான ஜட்ஜதான நாம தேர்ந்தெடுக்கனும். நம்ம ஓட்டே வேஸ்டா அப்போ?”

“ஆமா…. குழப்பமா இருக்கு…..”

“சரிண்ணே யோசிங்க” என்றபடியே கிளம்பினோம்.

டுத்து, சற்று தூரத்தில் வாழப்பழ மண்டியில் ஒரு இளைஞர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.  அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“நீங்க இந்த தடவை ஓட்டு போடுவீங்களா?”

“கண்டிப்பா போடணும், போடலைனா ரேசன் கார்டை தூக்கிருவாங்க.” உறுதியாக சொன்னார்.

“என்னது தூக்கிருவாங்களா? யாரு இப்படி சொன்னாங்க?”

“எங்க ஊருல தான். .  ஊருல இது பேராவே (பேச்சாகவே) இருக்கு. போடலைனா ரேசன் கார்டை தூக்கிருவாங்க“

“நமக்கு எந்த் ஊர்ண்ணே?”

“திருவாரூரு, கருணாநிதி இருக்காருல அவரு ஊரு தான். திருகொவள. ரேசன்கார்ட் இல்லைனா மண்ணெண்ணெய், அரிசி எதுவும் கெடைக்காது, அதுதான் நமக்கு ஒரு அடையாளம். எல்லா எடத்துலேயும் அந்த கார்டதான கேக்கான்……………”

“நீங்க போடலைனு எப்படி தெரியும்”

“ஊர் பஞ்சாயத்துல லிஸ்ட் வெச்சிருப்பான். அத பாத்துட்டு வந்து ஏன் போடலைனு கேப்பான்?”

கோயம்பேடு“யாரு கேப்பாங்க? அதிகாரிகளா? கட்சிக்காரங்களா?”

“அதிகாரிக்கெல்லாம் எங்கூர்ல வேலையில்ல. அடிச்சுபுடுவாங்க. கட்சிகாரன்தான் கேப்பான்.“

“ஏன் எங்க கட்சிக்கு ஓட்டு போடலைனு கேப்பாங்களா?”

“தெரிஞ்சா அதுவும் கேப்பான். இப்ப பாருங்க எங்க ஊரு திமுக தொகுதி. எந்த ஒரு இதுவுமே இருக்காது…..”

“எப்பயுமே திமுக தானா என்ன?”

“இல்ல இல்ல இந்தவாட்டி தான். நம்மாளு (கருணாநிதி)ன்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டாரு. கடைசி தேர்தல் ஓட்டுபோட்டிருங்கன்னாரு. எல்லாரும் போட்டாங்க. இப்ப ஒன்னுமில்ல. ரோடு கீடுக்கும் மண்ணு ஜல்லி எல்லாம் அடிச்சாங்க. மறுபடி அத நிப்பாட்டிடாங்க.”

“இப்படி இருக்கே ஏன் ஓட்டு போடுறீங்க. “

“அதான் சொன்னேன்ல, போடலைனா ரேசன்கார்ட துக்கிருவாங்க.”

“அப்படினா எந்த வேட்பாளரையும் பிடிக்கலனாலும், காசு செலவுபண்ணி ஊருக்கு போய் ஓட்டு போடனுமா?”

“ஆமா ஆமா. வயசான கெழவிகூட வந்து  ஓட்டு போடனும். இல்லனா கார்ட் கெடைக்காது.”

“இப்படி கட்டாயப்படுத்தி ஓட்டு போட சொல்றாங்களே இது தான் ஜனநாயகமா?”

“ஜனநாயகம்லாம் இல்ல. அராஜகம். முன்னாடி ஜனநாயகம் இருந்திச்சு, இப்ப இல்ல. அரசியல்வாதி எவனுமே நல்லவன் கிடையாது. எலெக்சனப்ப வருவாங்க, திட்டம் அறிவிப்பாங்க. அப்புறம் எங்கன்னே தெரியாது. இப்பனு இல்ல எப்பயுமே அப்படிதான். எதுத்து கேட்டா எதுவும் பண்ணிருவாங்க. நாமவுண்டு நம்மா சோலியுண்டுனு தனியா ஒதுங்கியிருக்க வேண்டியதுதான்.”

“எதயும் பண்ணவும் மாட்டான், கட்டாயப்படுத்தி ஓட்டும் போட சொல்லுவான்னா எப்படி? “

“என்ன பன்றது. இளைஞர் சக்தி தான் எதாவது பண்ணனும், டெல்லில ஆம் ஆத்மி…. அந்த கெஜ்ரிவால் அது மாதிரி பண்ணனும்.”

“அவரே இப்போ ஆட்சியில இல்லயே? அவரும் மோசம்னு சிலர் சொல்றாங்களே?”

கோயம்பேடு“ஆமா. பக்கத்துல இருக்க ஆளுங்க அதையும் இதையும் சொல்லி கெடுத்திருவாங்க. பணம் தான எல்லாம். பணம்னா பொணமும் வாய பொளக்கும்.”

“யாரா இருந்தாலும் பணத்தை கொடுத்து மாத்திருவாங்கனா அப்போ என்ன தான் தீர்வு?”

“என்ன தீர்வுன்னா? பழைய மொறைக்கே போயிற வேண்டியதுதான். மாலைய தூக்கி போட்டு, யாரு மேல விழுதுனு பாத்து ஆள எடுத்தா,  நாட்டுக்கும் எந்த செலவும் இருக்காது. இந்த தேர்தல்னால எவ்வளவு செலவு தெரியுமா உங்களுக்கு?”

“எவ்வளவு?”

“எவ்வளவு ஊழல் தெரியுமா? எவ்வளவு டிஸ்டபன்ஸ் தெரியுமா?”

“நீங்க சொல்ற முறை சரியாதான் இருக்கு. ஆனா ஊழல் பண்றவங்க மேல மாலை விழுந்துட்டா என்ன பண்றது?”

“(சற்று யோசித்தவர்) கெஜ்ரிவால் மாதிரி பத்து பேர தனியா நிக்கவெச்சி அவங்க மேல வீசுற மாதிரி பண்ணிறனும்.”

“சரி. இப்போ மாலைய வீசுறது யாரு?. நான் தான் வீசுவேன்னு எல்லாரும் சண்ட போடுவாங்களே?.”

“ஆமா…… அதுக்கு மக்கள் கிட்ட கருத்துக்கணிப்பு வெச்சி எடுக்கனும்.”

“அததான் இப்போ தேர்தல்னு சொல்லி உங்கள ஓட்டு போட கட்டாயபடுத்துறாங்க?.”

“சற்று யோசித்தவர், என்ன கேட்டா தேர்தலே வேண்டாங்குறேன் ஏகப்பட்ட செலவு. யாரோட காசு? நம்மோட வரிப்பணம். அவங்க எடுத்து செலவு பண்றாங்க.”

“சரி உங்களுக்கு ஆம் ஆத்மி தெரிஞ்சதால கேக்குறேன். இப்போ டில்லில முதலமைச்சரே இல்ல. ஆனாலும் பஸ் ஓடுது, ரோடு போடுறாங்க எல்லா  வேலையும் சரியா நடக்குதே எப்படி?”

“அதுவா…. இப்போ இந்த கடைனா அதுக்கு சொந்தமா ஆளு இருப்பாங்கள்ள அதுமாதிரி அரசாங்கத்திலயும் அது அதுக்கு ஆளு இருக்காங்க.  அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தகாரன் மாதிரி அங்கேயா தான் இருக்கணும்கிற கட்டாயம்”.

“இந்த முறைல, அரசியல்வாதி அஞ்சி வருசம் தான் கொள்ளையடிக்கிறான் ஆனால் அதிகாரி காலமுழுக்க கொள்ளையடிப்பானே? “

“ஆமா. வி.ஓ க்கு கீழ ஒருத்தன் இருக்கானே அவங்கிட்ட ஒரு கையெழுத்துக்கு போனா ஐநூறு ரூபாய் கேக்குறான்.”

“அப்போ நீங்க சொல்றமாதிரி அரசியல்வாதி விருந்து சாப்பிட்டுட்டு கிளம்பிறான், ஆனா இந்த அதிகாரிகள் தினமும் நடுவீட்ல உக்காந்து சாப்பிடுறானே. அவன மாத்த மக்களுக்கு அதிகாரம் இல்லையே.”

“அதுக்காக தெனம் ஒரு அதிகாரிய மாத்தவா முடியும். அதிகாரிய மாத்துற அதிகாரம் எந்த நாட்லயும் மக்களுக்கு கிடையாது தெரியுமா?”

“அதுதான் ஏன் மக்களுக்கு அதிகாரம் கொடுக்க மாட்டுறாங்க?”

கோயம்பேடு“கொடுத்தால் பிரச்சனை.”

“யாருக்கு?”

“யாருக்கா அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு, மக்களுக்கு எல்லாருக்குமே பிரச்சனை தன்.”

“மக்களுக்கு என்ன பிரச்சனை? உங்ககிட்ட கேட்டமாதிரி லஞ்சம் கேட்டா மக்கள் அவனை மாத்திட்டு இன்னொரு வி.ஓவை போட போறாங்க. இதுல மக்களுக்கு என்ன பிரச்சணை?”

“ஆமா. இது நல்லா தான் இருக்கு.ஆனா இங்க அப்படி இல்ல. அதிகாரியோட சர்வாதிகாரமா தான் இருக்கு.”

தன் சொந்த அனுபவத்திலிருந்து இது போலிஜனநாயகம், ஆளும்வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை உழைக்கும் மக்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் வாழையடி வாழையாக இதுதான் மாற்ற முடியாத யதார்த்தம் என்று ஒரு மத-கடவுள் நம்பிக்கை போல நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை தர்க்கப்படி உடைத்துப் பார்த்தால் அதில் நியாயமான காரணம் என்று ஒன்றுமே இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் இது வெறும் நம்பிக்கை.

“சரிண்ணே பாக்கலாம்” என்றபடி கிளம்பினோம்..

ற்று தூரத்தில் லோடு ஆட்டோவில் ஒருவர் அமர்ந்திருந்தார் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“தேர்தலில் ஓட்டு போடுறதை சிலர் கடமைனு சொல்றாங்க சிலர் உரிமைனு சொல்றாங்க? நீங்க சரியா சொல்லுங்கண்ணே ஓட்டு போடுறது கடமையா, உரிமையா?”

“ரெண்டும்தான்.”

“நீங்க எதுக்குனே ஓட்டு போடுறீங்க?”

கோயம்பேடு தொழிலாளர்கள்“போனவாட்டி ரெட்டை இலைக்கு போட்டேன். இப்போ விஜயகாந்துக்கு போடலாம்னிட்டு இருக்கேன்.”

“அதகேக்கலைனே.. என்ன காரணத்துக்காக ஓட்டு போடுறீங்க?”

“மக்களுக்கு எதாவது நல்லது பண்ணுவாங்கனுட்டு தான். “

“இதுவரைக்கும் என்ன நல்லது பண்ணிருக்காங்க?”

“என்ன பண்ணிருக்காங்க. இந்தா இந்த வண்டி தான் ஓட்டுறேன். தெனம் டீசல் வெல கூடுது. முன்னாடியாச்சி எப்பயாது கூடும்.இப்போலாம் அடிக்கடி கூடுது. பழ லோட எடுத்துட்டு போய் கடைகள்ல போடனும், அதுல கெடைக்குறதுதான். டீசல் வெல கூடுனா வெலவாசியும் கூடிரும். இதுல வீட்ட பாத்துக்கனும், புள்ளைகள படிக்க வெக்கனும். இதெல்லாம் அரசியல்வாதி எங்க யோசிக்குறான்.”

“ஆனாலும் ஓட்டு போடுறீங்களே அதுதான் ஏன்னு கேக்குறேன்”

“வேற என்ன பண்றது. ஜனநாயக உரிமைல”

“நீங்க டிரைவரா இருக்கிறீங்க,  சொல்லுங்க. டிராஃபிக் போலீஸ்கிட்டயோ இல்ல போலீஸ் ஸ்டேசன்லயோ போய் ஜனநாயக உரிமைனு  பேசமுடியுமா?”

“அங்க நமக்கெல்லாம் ஏது மரியாதை. போலீஸ்காரனுக்கே தெரியும் நம்ம பக்கம் தான் நியாயம் இருக்குனு. ஆனா யாருகிட்ட பணம, காசு இருக்கோ அவனுக்கு ஆதரவாதான் பேசுவான். அது தான் நீதி”

“அப்போ ஜனநாயக உரிமையே இல்லைனு சொல்ல வாரீங்களா?

“எங்க இருக்கு, எதுவும் இல்ல.”

“அப்புறம் ஏன் ஓட்டு போடுறீங்க”

“இப்படி ஏன் எதுக்குனு யோசிச்சி பாத்தா ஓட்டே போடக்கூடாது. அதுனாலதான் யோசிக்குறதே இல்ல. யோசிச்சி மட்டும் என்ன ஆயிட போவுது. போடாம விட்டுறவா? நீங்களே சொல்லுங்க (ஓட்டு போடுவதற்காக நாம் விழிப்புணர்வு செய்வதாக நினைத்துக் கொண்டார்)” விரக்தியாக பேசினார்.

“அது போடுங்க, போடாம இருங்க. ஆனா யோசிச்சி பாத்தாதான் என்ன?”

“என்னைக்காவது ஒரு நாள் சாவு வரதான் போறோம். அதுக்காக அதையே நெனச்சிகிட்டு ஒன்னும் பண்ணாம இருக்கமுடியுமா? அதுமாதிரிதான். யாரையாவது நம்புறோம் ஏமாத்திறான். திருந்திட்டேனு சொல்றான் சரினு போட்டா, மறுபடியும் ஏமாத்துறான். நாம என்ன பண்ணமுடியும். நம்பிக்கைதனே வாழ்க்கை. நம்புறோம் ஏமாத்திருதான்”

“இப்படி அம்பது அறுபது வருசமாக ஏமாந்துட்டே இருந்தா நாம முட்டாளுனுதான அர்த்தம்.”

சட்டென்று கோபமாகிவிட்டார். சற்றே குரலை உயர்த்தி

“நான் முட்டாள் எல்லாம் கிடையாது. அவங்கதான் என்ன ஏமாத்துறாங்க” என்றார்.

கோயம்பேடுருவர் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களிடம் கேட்ட கேள்விகளையே கேட்டோம்.

“ஜனநாயகமெல்லாம் இருக்கு. ஆனா மக்களுக்குதான் எப்படி பயன்படுத்துறதுனு தெரியல. இப்போ இங்க ஒரு 50 முதலாளி இருக்கானு வெச்சிக்குவோம். ஏதாவது கட்சியில இருப்பாங்க. தேர்தல் அன்னைக்கு வேல பாக்குறவங்க கிட்ட நூறோ இருநூறோ குடுத்து அவங்க அவங்க கட்சிக்கு ஓட்டு போட சொல்றாங்க. இவங்களும் மாத்தி போடுறதில்ல.

அன்னைக்கு தேவய தான் பாக்குறான். விழிப்புணர்வு இல்ல.”

“அவங்க வாழ்நிலைமை அப்படி இருக்கு அதுனால வாங்குறாங்க?”

“சரி வாங்கிட்டு மாத்தி போடலாம்ல”

“யாருக்கு போடுறது. எல்லாரும் அயோக்கியனால இருக்கான்.”

“நல்லவங்க இருப்பாங்க. நாம தான் தேடனும். நான் அப்படி தேடிதான் என் தலைவனை கண்டுபிடிச்சேன்.”

“உங்க தலைவரு வந்தா எல்லாம் மாறிருமா?”

“கண்டிப்பா மாறிரும். ஒரு குடும்பத்துல குடும்ப தலைவன் ஸ்டிராங்கா இருந்தாதான் குடும்பம் நடக்கும். அதுமாதிரி என் தலைவன் வந்தா எல்லாம் மாறும்.”

“என்ன மாறும்?”

“இப்போ பாருங்க விவசாயம் பண்றவன் யாரோ ஒருத்தன். அந்த விவசாயிகிட்ட ஐந்து ரூபாய்க்கு வாங்கி, அத இன்னொருத்தன்கிட்ட அதிகவிலைக்கு விக்குறான். அப்படி கைமாறி கைமாறி கடைசில இங்க வரும்போது பல மடங்கு வெல அதிகமாயிருது. அரசாங்கமே எடுத்து நடத்தனும். அப்போ விலை கம்மியா இருக்கும்.”

“சரி. உங்க தலைவர் வந்தா இத பண்ணுவாரா?”

“கண்டிப்பா பண்ணுவார்”

“உங்க தலைவர் யாருண்ணு தெரியல… ஆனாலும் ஒன்னு கேக்குறேன். நீங்க நியாயமா சொல்லணும். உங்க கட்சியில இருக்குற மாவட்டம் வட்டம் இப்படி பெரிய தலைகள் இப்படி தனியார் தொழில்தான பண்றாங்க. ?”

“ஆமா. ”

“அப்போ எப்படி உங்க தலைவர் வந்தா மட்டும் எப்படி எல்லாம் மாத்துவார்?”

“ம்ம்ம்ம்ம். அப்போ இப்ப இருக்குற மாதிரி இருக்காது. கொஞ்சமா அடிப்பாங்க.”

மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா என்று கேட்டதற்கு அரசு அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அவமானங்களை விளக்கினார்.

“நீங்க தான் ஜனநாயகம் இருக்குனு சொன்னீங்க. எதுத்து கேக்க வேண்டியதுதான?”

“ஜனநாயகம் இருக்கு. ஆனா கம்மியா இருக்கு”

“சரி உங்க தலைவரு யாருன்னு சொல்லவேயில்லயே?”

“நான் கம்யூனிஸ்டு கட்சி”

“அப்போ தா.பாண்டியனா?”

“இல்ல சி.பி,எம்.“

“ஜி.ராமகிருஷ்ணனா?”

“ஆமா.”

“உங்கள தான் ஜெயலலிதா அடிச்சி ஓட ஓட வெரட்டிட்டாங்களே?”

“அப்படிலாம் இல்ல. நாஙக பிரிஞ்சிட்டோம். அவங்க தான் கூட்டணின்னு சொன்னாங்க இப்போ இல்லைனு சொல்றாங்க.”

தலைவன் தலைவன் என்று கம்யூனிஸ்டு கட்சியில் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்ததால் கூட இருந்த தோழரிடம் “இவர் சி.பி,எம் ஆக இருக்க முடியாது, பொய் சொல்றாரு” என்றேன்.

“இல்ல தோழர் இவர் 100%  சி.பி,எம் தான்”

“எப்படி சொல்றீங்க”

“கடைசியா பார்த்த தொழிலாளியிடம் முட்டாளா என்று கேட்டதும் அவருக்கு வந்த கோபத்த பாத்தீங்களா? அது உழைக்கும் மக்களோட சுயமரியாதை குணம். இவர் கட்சிய பத்தி நாம் இவ்வளவு சொல்லியும் ஏதாவது கோவம் வந்திச்சா? இவர் வேற கட்சிகாரரா இருக்குறது கஷ்டம். கண்டிப்பா சி.பி,எம் இல்ல சிபிஐ தான்.”

தேர்தல் ஜனநாயகத்தை மலை போல நம்பி பருவந்தோறும் தவறாமல் விரதமிருந்து மாலை போட்டு யாத்திரை செல்லும் சிபிஎம் உருவாக்கியிருக்கும் ஜனநாயக விழிப்புணர்ச்சியே இதுதான் என்றால் மற்றவர்களை பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை.

கோயம்பேட்டில் நாம் சந்தித்த பெரும்பாலான தொழிலாளிகள் ஏறக்குறைய இப்படித்தான் பேசினார்கள். அதாவது வாக்களிப்பது  காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சடங்கு. அந்த சடங்கு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச உரிமைகள், அங்கீகாரம் முதலியவை போய்விடும். இந்த பயத்தைத் தாண்டி இந்த ஜனநாயகத்தின் மேல் அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த ஜனநாயகத்தின் மூலம் ஆதாயம் அடைபவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தெய்வீக கடமையாக சித்தரிப்பதும், பலனேதும் அற்ற பெரும்பான்மை மக்கள் அதை சலிப்புடனான சடங்காக கருதுவதுமான விசித்திரமான முரண்பாட்டிற்கு பதில் தெரிந்தால் நீங்கள் வாக்களிக்கமாட்டீர்கள். மாற்று வழிகளைத் தேடுவீர்கள். வாருங்கள் காட்டுகிறோம்.

–    வினவு செய்தியாளர்கள்.

படங்கள் : இணையத்திலிருந்து

கேடி மோடியே, கயவாளி காங்கிரசே பதில் சொல் !

6

காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விவசாயி - அதிகாரி
ஒட்டிப் போன விவசாயிகளின் துயரத்தை ஆய்வு செய்ய வந்திருக்கும் கொழுத்துப் போன மத்திய அரசு அதிகாரிகள். (படம் : நன்றி The Hindu)

34 வயதான, முதுகலை பட்டதாரியான ராஜேந்திர லோம்தே என்ற விவசாயி மார்ச் 12-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு மார்ச் 18-ம் தேதி உயிரிழந்தார். அவரது 12 ஏக்கர் நிலத்தில் இருந்த மாமரங்கள் சூறாவளியில் சேதமடைந்து ரூ 5 லட்சம் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடன் தொல்லையை எதிர் கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

அலானி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான அனில் குல்கர்னி என்ற விவசாயி மார்ச் 15-ம் தேதி லேவாதேவி கடன்காரர்களின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதே வாரத்தில் நாசிக் மாவட்டத்தின் சதானா வட்டத்தில் 62 வயதான பாபு ராமச்சந்திர பவார் அவரது மாதுளை பண்ணை சேதமடைந்ததை தொடர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

மார்ச் 19-ம் தேதி 49 வயதான உதவ் நானாபாவ் தாண்ட்லே என்ற விவசாயி கடன் பணத்தை திருப்பிக் கட்ட முடியாத கவலையில் அம்பில் வாத்கான் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொணாடார்.

பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவின் 28 மாவட்டங்களை தாக்கிய ஆலங்கட்டி சூறாவளியில் 17 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த ரூ 42,000 கோடி மதிப்பிலான தானிய, பழப் பயிர்கள் அழிக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட பஞ்சத்தினாலும், தொழிற்சாலைகளுக்கும், மேட்டுக்குடி நீச்சல் குளங்களுக்கும் தண்ணீர் திருப்பி விடப்பட்டதாலும் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்த ஆண்டாவது நிலைமை சீரடையும் என்று விவசாயிகள் நம்பியிருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு மழை பெய்தாலும், அடித்த ஆலங்கட்டி சூறாவளி விவசாயிகளின் கடைசி நம்பிக்கையையும் பொய்த்துப் போகச் செய்து தமது உயிரை எடுத்துக் கொள்ளும் பரிதாப முடிவுக்கு அவர்களை தள்ளியிருக்கிறது.

பவார் - சவான்
விவசாயிகள் தற்கொலைகளுக்கு மத்தியில் விதர்பா பகுதிக்கு விஜயம் செய்த மகாராஷ்டிராவின் ‘சுல்தான்கள்’ சரத் பவார் மற்றும் பிருத்விராஜ் சவான்.

மேற்குப் பகுதியில் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும் போது கிழக்குப் பகுதியில் நடக்கும்  டி-20 உலகக் கோப்பை போட்டிகளை நடுத்தர வர்க்கம் கண்டு களித்துக் கொண்டிருக்கிறது. ‘ஜனநாயக’ இந்தியாவை ஆளும் கார்ப்பரேட், பணமூட்டை வர்க்கங்கள் நாடாளுமன்ற தேர்தல் உபந்நியாசம் நடத்துவதில் மும்முரமாக இருக்கின்றன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான். இந்திய ஜனநாயகம் கொடுக்கும் ஓட்டுப் போடும் ‘உரிமை’ எல்லா நம்பிக்கைகளையும் இழந்த விவசாயிகளின் உயிரை பாதுகாக்கவில்லை.

தற்கொலை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியான பிறகு பெயரளவுக்கு நிவாரணத் தொகை அறிவித்த மகாராஷ்டிர மாநில அரசு, தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்த பிறகு அதை விவசாயிகளுக்கு வழங்கவிருப்பதாக கூறியது. விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறிக்கும் கும்பலின் பிரதிநிதியான மத்திய விவசாய அமைச்சரும், கார்ப்பரேட் தொழிலதிபரும், மகாராஷ்டிர மாநில சர்க்கரை ஆலை முதலாளியுமான சரத்பவார் “இறுதி முடிவை எடுத்து விட வேண்டாம்” என்று  ஆறுதல்கூறியிருக்கிறார். இவர்தான் இந்தியாவின் கிரிக்கெட்டை மல்டி பில்லியன் டாலரில் வடிவமைத்த சிற்பியில் ஒருவர்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை அடகு வைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசோ தனது முன்னணி அடியாள்படையான விவசாய அமைச்சர் சரத் பவார், நிதி அமைச்சர் ப சிதம்பரம், உள்துறை அமைச்சர் சுசீல் குமார் ஷிண்டே, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இந்தக் குழுவினர் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கும், இந்திய மக்களுக்கும் இறுதிச் சடங்குகளை செய்யும் வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நரேந்திர மோடி
விவசாயிகளின் மரணத்தையும் தனது வோட்டுப் பொறுக்கும் வாய்ப்புக்காக பயன்படுத்த முயற்சிக்கும் பிணந்தின்னி மோடி.

காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாடு தழுவிய, உலகம் தழுவிய தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி. ஹெலிகாப்டரில் பறந்து தனி விமானங்களில் நாடு முழுவதும் இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பேசி, இன்னும் தேர்தலுக்கு முன்பு 185 கூட்டங்களில் பேச இருப்பதாக சாதனை நடத்திக் கொண்டிருக்கும் அந்த பிணந்தின்னி, விவசாயிகளின் மரணத்தையும் தனது வோட்டுப் பொறுக்கும் வாய்ப்புக்காக பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்ட  விவசாயிகளுடன் “சாய் பே சர்ச்சா” என்று நாடகம் நடத்தியிருக்கிறார். விசம் குடித்து சாகும் விவசாயிகளோடு சாயா குடித்து ஆறுதல் சொல்லும் வக்கிரம் மோடிக்கு மட்டும்தான் தோன்றும்.

விவசாயிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்கு காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகள்தான் காரணம் என்று சவடால் அடித்து விட்டு இது தேசிய வலி என்று உருகிய மோடி ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில், அரசு பதிவுகளின் படியே கடந்த 5 ஆண்டுகளில் 135 விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் குஜராத்தில் விவசாயிகளின் தற்கொலைகளை பதிவு செய்யக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவையும் மீறி பதிவாகியிருக்கும் இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு தற்கொலைகள் நடந்திருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு கடன் கொடுப்போம் என்ற உறுதிமொழியை இப்போது மீறுவதால்தான் விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களிடம் சிக்கி துன்புறுகிறார்கள் என்று கூறும் மோடி, வங்கிகள் விவசாயக் கடன் கொடுப்பதிலும், வசூலிப்பதிலும் கந்து வட்டிக் காரனை விட கேவலமாக நடந்து கொள்வதை மறைக்கிறார். அவரது புரவலர்களான கார்ப்பரேட்டுகள், வங்கிக் கடனை கொள்ளை அடித்துப் போவதை எதிர்த்து சுண்டு விரலைக் கூட உயர்த்தாத அந்த கார்ப்பரேட் தரகர் இப்போது வெற்றுச் சவடால் அடித்திருக்கிறார்.

தோலரா - மோடி
தோலரா சிறப்பு முதலீட்டு மண்டலத்துக்கு விஜயம் செய்யும் கார்ப்பரேட் புரோக்கர் நரேந்திர மோடி

தான் ஆட்சிக்கு வந்தால் இந்திய விவசாயத்துக்கு புத்துயிர் அளிக்கப் போவதாக சொல்லும் மோடியின் ஆட்சியில்தான் குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை 3.5 லட்சம் குறைந்து, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 17 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

சமீபத்திய உதாரணமாக, குஜராத்தின் செழிப்பான விவசாய பகுதியான தோலராவில் 920 சதுர கிலோமீட்டர் நிலத்தை சிறப்பு முதலீட்டு மண்டலமாக மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதீத சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் இந்தத் திட்டத்துக்கான சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி, எல்லைகளை வரையறுத்து நிலப்பறிப்புக்கு தயார் செய்திருக்கிறார் மோடி. ஏற்கனவே பல கார்ப்பரேட்டுகள் நிலம் வாங்க ஆர்வம் காட்டியிருக்கின்றன. இந்த சிறப்பு முதலீட்டு மண்டலத்தால் நர்மதா பாசன வசதி பெறும் 22 கிராமங்கள் அழிக்கப்படும்; 9,225 ஹெக்டேர் வளமான நிலம் கையகப்படுத்தப்படும்

இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்த முயற்சிக்கும் பேரணி அல்லது ஆர்ப்பாட்டம் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. விவசாயிகள் காந்திநகருக்குள் பேரணி நடத்த திட்டமிட்டது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

விவசாயிகளை கொடூரமாக வதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்ப்பதை குஜராத்தில் மிகச் சிறந்த முறையில் கொள்கையாக செய்து வரும் மோடிதான் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை ரட்சிக்கப் போகிறாராம்.

தேசிய குற்றப் பதிவு அலுவலகத்தின் பதிவுகளின் படி 1995-க்கும் 2011-க்கும் இடையே நாடு முழுவதும் 2.7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தமது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு உயிரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது வரையில் விவசாயிகள் கடன் நெருக்கடியில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க ஆளும் வர்க்கங்கள் அறிவித்த நிவாரணங்கள் எதுவும் அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவில்லை. மாறாக நிவாரணங்களும் வங்கிக் கடன்களும், பணக்கார அரசியல்வாதிகளாலும், தனியார் பண முதலைகளாலும் ஒதுக்கிக் கொள்ளப்படுவதுதான் நடந்திருக்கிறது.

இதற்கிடையில் ஊடகங்களில் விவசாயிகள் தற்கொலை செய்திகள் பரவலாக வெளியான பிறகும் எந்த நிவாரணமும் கிடைக்காத விரக்தியில் அக்புரி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான ஜனார்தன் ரவுட் என்ற விவசாயி யவத்மால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அவர் இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் பெரும்பான்மை விவசாய மக்களுக்கு எதிரான பன்னாட்டு கார்ப்பரேட் நலனுக்கான மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்தி விவசாயத்தை கொடூரமாக அழித்து வரும் காங்கிரஸ், பாஜக முதலான கட்சிகளையும், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் பிராந்திய கட்சிகளையும், அதே கொள்கைகளை ‘முறை’யாக அமல்படுத்தப் போவதாக கூறும் ஆம் ஆத்மி கட்சியையும் நம்பி வாக்களிப்பதுதான் ஜனநாயகம் என்று இன்னமும் நம்புகிறீர்களா?

–    அப்துல்.

மேலும் படிக்க

அழகிரி மட்டுமா குற்றவாளி ?

22

திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட அழகிரி இப்போது நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். திமுகவின் இயக்க விசையை தீர்மானிப்பது கொள்கையோ, மக்கள் நலனோ இல்லை என்பது அழகிரி விவகாரத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி - அழகிரி
கருணாநிதியின் மகன், தென் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத இளவரசர் எனும் பதவியை வைத்து தேர்தலுக்குரிய பணத்தையும், வழிகளையும் உருவாக்குவதில் என்ன சாமர்த்தியம் தேவைப்படுகிறது?

அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட பிறகே அவரை அடாவடி என்று எழுதி வந்த ஊடகங்கள் அனைத்தும் அவரை போராளியாக சித்தரித்து அட்டைப்படக் கட்டுரைகளை வெளியிட்டன. பொதுவில் ஓட்டுக்கட்சி அரசியலின் கவர்ச்சியே இத்தகைய குழாயடிச் சண்டைகளை கிசுகிசுவாக வெளியிடுவதுதான். கூடுதலாக இது கல்லா கட்டும் மலிவான ஊடக தர்மமும் கூட. அடுத்து அழகிரியை கவனப்படுத்துவதின் மூலம் திமுகவின் செல்வாக்கை குறைக்கலாம். இது ‘அம்மாவுக்கு’ மகிழ்ச்சி தரும் என்பதால் அதிமுக அடிமை பத்திரிகைகள், இயல்பாகவே அழகிரிக்கு அதிக பக்கங்களை ஒதுக்கின.

ஏற்கனவே அஞ்சா நெஞ்சனென்று ஜால்ராக்களால் உசுப்பி விடப்பட்டு, அதை உண்மையென நம்பி, தற்போதைய ஊடக கவரேஜையும் அப்படி நம்பியிருக்கிறார் அழகிரி. அதாவது இவருக்கென திமுகவில் தனி செல்வாக்கு இருப்பது போலவும் அதை முழு தமிழ்நாடும் நம்புவதாகவும் அவர் கருதினார். இந்த உற்சாகத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது சந்திப்புகளில் மன்மோகன் சிங், ராஜ்நாத் சிங், வைகோ மற்றும் மற்றைய கட்சி தலைவர்கள், ரஜினி போன்றவர்களை சந்தித்து முடித்தார். இதனால் திமுக அலறும் என்பது அவரது எதிர்பார்ப்பு. அப்படி அலறவில்லை என்றாலும் ஒரு பயமாவது இருக்கும் என்பது அழகிரியின் நம்பிக்கை.

இப்படி பொறுக்க முடியாத அளவு போய்விட்ட பிறகு, தேர்தல் காலங்களில் தமது பெயர் காமடியாகவும், கண்றாவியாகவும் மாறிவிடும் என்று பயந்து திமுக தலைமை அழகிரியை நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. அழகிரியோ இதை எதிர்த்து நீதிமன்றம் போவதாகவும், கட்சி முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த வகையில் அழகிரி புராணம் ஊடகங்களில் தேர்தல் வரையிலும் வரத்தான் செய்யும். அதன்பிறகு அஞ்சா நெஞ்சன் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டாலும்  எந்த பத்திரிகையும் கண்டு கொள்ளப் போவதில்லை.

அழகிரிக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி ஏன் தரப்பட்டது? திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு அவர் கடுமையாக உழைத்ததுதான் என்கிறார்கள் திமுக கட்சிக்காரர்கள். எனில் இந்த உழைப்பை பல்வேறு தேர்தல்களில் பல்வேறு திமுக நபர்கள் காட்டியிருக்கும் போது அவர்களுக்கெல்லாம் இத்தகைய பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறதா என்ன?

வம்சம்
திமுகவின் பிரச்சினைகள் அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதே உண்மை

திருமங்கலம் ஃபார்முலாவின் படி பணத்தை வாக்காளர்களுக்கு நேரடியாக அள்ளி விட்டதே ஒரு திருப்புமுனை. அதற்கு அழகிரியின் செல்வாக்கு பயன்பட்டிருக்கிறது. கருணாநிதியின் மகன், தென் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத இளவரசர் எனும் பதவியை வைத்து தேர்தலுக்குரிய பணத்தையும், வழிகளையும் உருவாக்குவதில் என்ன சாமர்த்தியம் தேவைப்படுகிறது?

கடைசி பத்தாண்டுகளில் திமுகவின் பிரச்சினைகள் அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதே உண்மை. அழகிரி – ஸ்டாலின் போட்டி, தயாளு அம்மாள் வாரிசுகளுக்கு இருக்கும் செல்வாக்கை சொல்லி ராஜாத்தி அம்மாள் கனிமொழிக்கு பெற்ற பதவி, பொறுப்புகள், தமது பணபலம் – ஊடக பலத்தை வைத்து மிரட்டியும், பேசியும் ஆதாயம் பெறும் மாறன் சகோதரர்கள், அவர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட கலைஞர் டிவி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு தரப்பட்ட கட்டிங் என்று இவைதான் கருணாநிதியையும், அறிவாலயத்தையும் சமீப ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன.

இந்த சூழலில்தான் அழகிரி எனும் போக்கிரி திமுக தலைவர்களில் ஒருவராக திணிக்கப்பட்டார். எல்லா மாவட்டங்களிலும் உள்ள திமுக பிரபலங்கள் அனைத்தும் அழகிரி, ஸ்டாலின் இரண்டு பேருக்கும் மரியாதை செய்வதையே முக்கிய கட்சிப் பணியாக கொண்டிருந்தனர். பின்னர் கொஞ்ச காலம் கனிமொழிக்கும் செய்ய வேண்டியிருந்தது. தினகரன் ஊழியர்கள் கொலை, தாகி கொலை, பொட்டு சுரேஷ் கொலை என அழகிரியின் ஆட்சி மண்டலத்துக்குள் நடந்த ‘சாதனைகளை’ உலகமே கண்டித்த போது திமுக தலைமை கண்டு கொள்ளாமல் இருந்தது.

அடாவடி அரசியலும், ரவுடி கும்பலும் இல்லாமல் கட்சி இல்லை என்பது திமுகவுக்கும் பொருந்தும் என்பதால் அழகிரி அங்கே அனாவசியமாக வளர்ந்தும் வளர வைக்கப்பட்டும் இருந்தார். இதற்காக திமுகவின் ஆட்சிக்காலங்கள் மற்றும் அதிகார உறவுகளை வைத்து அவரும், அவரது பினாமிகளும் ஏராளம் சொத்துக்கள், தொழில்களை உருவாக்கி விட்டனர். தற்போது அழகிரியின் ஆதரவாளர்கள் குறைந்து போனாலும் அவரது சொத்து சாம்ராஜ்ஜியத்திற்கு எந்த கேடும் இல்லை. மேலும் இன்று அவரை விட்டு போனவர்கள் யாரும் கொள்கைக்காக போகவில்லை என்பது உண்மையென்றால் அவர்கள் நாளையே திரும்பி வரக்கூடாது என்பதும் ஒரு கொள்கையாக இருக்க முடியாது. இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் பட்சத்தில் இந்த மறுசுழற்சி கொஞ்ச காலத்திற்கு நடக்கலாம்.

அழகிரி போஸ்டர்
இன்று அழகிரியை விட்டு போனவர்கள் யாரும் கொள்கைக்காக போகவில்லை என்பது உண்மையென்றால் அவர்கள் நாளையே திரும்பி வரக்கூடாது என்பதும் ஒரு கொள்கையாக இருக்க முடியாது

அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அஞ்சா நெஞ்சனின் வீரம், அஞ்சி ஓடும் கோழைத்தனம் என்பது நிரூபணமாகிவிட்டது. அதனால்தான் இன்று திமுகவை ‘வீரம்’ செறிந்து எதிர்த்து வருகிறார் அவர். இப்படி திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் உருவாக்கிய அழகிரி, கருணாநிதியின் குடும்ப அரசியல் தோற்றுவித்திருக்கும் நோய் என்பதால் இதற்கு மருந்து இல்லை.

ரித்தீஷ் மற்றும் பிற திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை அருகில் வைத்துக் கொண்டே திமுக பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து விட்டது என்கிறார் அழகிரி. மோடி, காங்கிரஸ், வைகோ அனைவரையும் புகழ்ந்து தள்ளுகிறார். அழகிரியின் மூடு அறிந்து தாங்களும் ஆதரவு கேட்கப் போவதாக காங்கிரசின் ஞானதேசிகனே அறிவித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் திமுவின் அரசியலுக்கு எதிரானது என்று பேசப்பட்டாலும் உண்மையில் அப்படி இல்லை. இந்தக் கட்சிகள் அனைத்தும் திமுகவோடு இருந்தவைதான் என்று அழகிரி திருப்பிக் கேட்கிறார்.

இரண்டு சந்தர்ப்பவாதங்கள் சந்தர்ப்பவாதமாக சண்டையிடும் போது அதில் கொள்கைக்கு என்ன வேலை இருக்க முடியும்? தற்போது அழகிரியின் நீக்கம், தேர்தல் குறித்த தேவையை ஒட்டித்தான் திமுகவிற்கு பயன்படும். இந்த தேர்தலிலும் அடுத்த தேர்தலிலும் வரும் வெற்றி தோல்வியை ஒட்டி இந்த தேவை மாற்றத்திற்குள்ளாகும். அதைத்தான் அழகிரி நம்பியிருக்கிறார். அதற்காகவே மற்றவர்களை சந்தித்து ஆதரவு தருகிறார்.

ஆகவே திமுகவில் ஜனநாயகமோ இல்லை கொள்கையோ, மக்கள் நலனோ இல்லை என்பது உண்மையென்றால் அழகிரியின் நீக்கம் கட்சிக்கட்டுபாட்டிற்காக அல்ல என்பதும் உண்மை. இல்லை இது கட்சிக்கட்டுப்பாட்டிற்காகத்தான் என்றால் கட்சி யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி வருகிறது. திமுகவின் மாவட்ட பகுதிகளில் உள்ளூர் குறுநில மன்னர்களும் அவர்களது வாரிசுகளும் கட்டுப்படுத்துவது போல மாநிலத் தலைமையை கருணாநிதியின் வாரிசுகள் கட்டுப்படுத்துகின்றனர். இதில் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். அழகிரியோ, மாறன் சகோதரர்களோ, கனிமொழியோ அடுத்த படிகளில் இருக்கிறார்கள்.

அழகிரி
அழகிரியை நிரந்தர நீக்கம் என்று திமுக தலைமை தண்டித்திருக்கலாம். ஆனால் அந்த தண்டனை கருணாநிதிக்கு கிடையாதா?

தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் பிரச்சினைகளை விட குடும்ப பிரச்சினையே கருணாநிதியின் அன்றாட நேரத்தை அரிக்கும் அமிலமாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் கட்சியை தமது சுயநலத்திற்காகவாவது கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும் என்பதைத் தாண்டி திமுகவில் வேறு கட்டுப்பாடுகள் இல்லை. இதுதான் ஸ்டாலினுக்கு உள்ள பலம். ஆனாலும் இந்த பலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்களின் கட்சி அமைப்பு தருகின்ற பலம் இல்லை என்பது அவருக்குள்ள பலவீனம்.

ஆகவே சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள். அதனாலேயே வில்லன் நிலையிலிருந்த அழகிரியை இன்று கோபக்கார கதாநாயகன் நிலைக்கு உயர்த்திருக்கிறார்கள். விரைவிலேயே அது காமடி டிராக்காக மாற்றப்படும் என்றாலும் அழகிரி அதையும் ஒரு விளம்பரமாக எடுத்துக் கொள்வார். காரணம் அவரது அஞ்சா நெஞ்சம் அத்தனை அறிவு வறட்சியை உடையது.

கோவை செம்மொழி மாநாட்டின் முதல் வரிசைகளில் கருணாநிதியின் குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்த போது கருணாநிதியின் மனதில் ராஜ கம்பீரம் கொடிகட்டிப் பறந்திருக்கும். இந்தக் கொடிக்கு திமுகவின் அமைப்பு விதிகளோ இல்லை கட்சி தொண்டர்களோ எந்த விதியின் கீழ் இடமளித்திருந்தார்கள்?

ஆகவே அழகிரியை நிரந்தர நீக்கம் என்று திமுக தலைமை தண்டித்திருக்கலாம். ஆனால் அந்த தண்டனை கருணாநிதிக்கு கிடையாதா? அழகிரியாவது தனது வாரிசுகளை இன்னமும்  தென் தமிழக திமுகவின் இளவரசர்களாக அறிவிக்கவில்லை. ஆனால் கருணாநிதி?

ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்

4

தார் பல வகையிலும் முழுமை பெறாத ஒரு திட்டம். அதன் சாத்தியப்பாடு மற்றும் லாபக்கணக்கு குறித்த ஆய்வு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. தனித்துவ அடையாள எண் வைத்துள்ள ஒருவரின் கணக்கு தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அடையாள மோசடி செய்யப்படுவது மற்றும் ஒருவரின் அடையாள விவரம் தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த திட்டத்தோடு தொடர்புடைய எந்த நிறுவனமும் தயாரில்லை என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.

ஆதார்ஆதார் மூலம் திரட்டப்படும் தகவல்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் எதுவுமில்லை. இப்போது தனித்தனி தகவல் தளங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மைப் பற்றிய பலவகை விபரங்களை ஒரே ‘பொறியமைவுக்குள்’ கொண்டு வந்து தொகுக்கும் ‘தனித்துவ அடையாள ஆணையத்தின்’ (UIDAI) முயற்சி மக்கள் மீதான கண்காணிப்புகளையும், சமூகக் கட்டுப்பாட்டையும் சாத்தியமாக்குகிறது. ஒரு நபரை குறி வைத்து, அவரைப் பற்றிய தரவுகளை தொடர்ந்து கண்காணிப்பதையும், அவருக்கு முத்திரை குத்துவதையும் தடுப்பதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மக்களின் சொந்த வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளில் குறுக்கிடுவதற்காக புலனாய்வு அமைப்புகள் கடந்த 3-4 வருடங்களில் உருவாக்கி வைத்திருக்கும் கருவிகள்தான் NATGRID, CCTNS, NCTC, PII மற்றும் MAC போன்ற குறிச்சொற்கள்.

இந்த நிலையில் நவம்பர் 21-ம் தேதி ஆந்திர உயர்நீதிமன்ற அமர்வு ஒன்று வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீர்ப்பில் ஆதாரை காரணம் காட்டி மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு ஒருவருக்கு மறுக்கப்படக் கூடாது என்று நீதிபதி கூறியிருக்கிறார். அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆதார் அட்டை கேட்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமர்வு மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.

ஆதார் தேவை என்று சட்ட ரீதியாக எந்த கட்டாயத்தையும் விதிக்கவில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தது. இதே உறுதிமொழிப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்திலும் பெட்ரோலிய அமைச்சகம் சமர்ப்பித்தது.

குடிமக்கள் பற்றிய தகவல்களை உயிர்அளவை (Biometric) முறையில் சேகரிப்பது உயிர் வாழும் அடிப்படை உரிமையின் கீழ் வருகின்ற அந்தரங்க உரிமையை பறிப்பதற்கு இணையானது என்று அந்த புகார்தாரர் வாதிட்டார். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அனுபவிக்க ஆதார் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டமோ, ஆணையோ இயற்றப்படவில்லை என்பதும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

தகவல் திரட்டல்அமர்வின் சார்பாக தீர்ப்பு எழுதிய ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்த குறிப்பாணையோ, அங்கீகரிக்கப்பட்ட சட்டமோ இல்லாத நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க ஆதார் அட்டை இருந்தே தீர வேண்டும் என்று கோருவதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மார்ச் 2, 2013 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரியின் தலைமையிலான அமர்வு தனித்துவ அடையாள (UID) எண் பெற்றிருத்தல் அவசியம் என்ற சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுற்றறிக்கையின் சட்டப் பொருத்தப்பாடு தொடர்பாக நீதிமன்றம் சில கேள்விகள் எழுப்பிய உடனேயே மத்திய அரசு சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவு தனித்துவ அடையாள ஆணையம் என்பது சட்டபூர்வமாக எதிர்க்கப்படக் கூடியதும், பாதுகாக்க இயலாததுமாகும் என்ற அடிப்படை உண்மையை உறுதிப்படுத்தியது.

ஆதார் அட்டையை வற்புறுத்தி கேட்பதை தடை செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ஓய்வு பெற்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர், பேராசிரியர் ரொமிலா தப்பார், எஸ்.ஆர்.சங்கரன், நீதியரசர் ஏ.பி. ஷா, கே.ஜி. கண்ணபிரான், பெஸ்வாடா வில்சன், அருணா ராய் மற்றும் உபேந்திர பக்சி ஆகியோரை உள்ளடக்கிய 17 சிறந்த குடிமகன்கள் வெளியிட்ட செப்டம்பர் 28, 2010 தேதியிட்ட அறிக்கையையும், நிதித் துறைக்கான பாரளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. ‘உயிரியல் அளவை முறைக்கான துணைநிலை சட்டம் சட்டவிரோதமானதும் சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும்’ என்றும் ‘தனித்துவ அடையாள எண் திட்டத்துக்கு எதிரான அரசியலமைப்பு ரீதியான, சட்ட ரீதியான, வரலாற்று ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான மறுப்புகளை’ பட்டியலிட்டும் தரப்பட்ட 18/03/2013 தேதியிட்ட புகாரை மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி. கருணாகரன் தலைமையிலான துணைநிலை சட்டத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது

ஆதார் ஆணையம்
சட்ட விரோத ஆதார் ஆணையம்

இப்பிரச்சினை ஆதார் எண் கட்டாயமானதா, அல்லது விருப்பபூர்வமானதா என்பது சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல என்று மேற்கு வங்க சட்ட வல்லுநர்கள் மாநில முதலமைச்சரிடம் சொல்லத் தவறியது வருத்தத்துக்குரியது. மேற்குவங்க சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் அதைத்தான் பேசுகிறது. மாறாக, இது சட்ட நெறிமுறைகளுக்கு முரணாகவும், நீதிமுறைமைக்கு எதிராகவும் இந்த உயிரியல் அளவை எண் முறை ஏற்படுத்தக் கூடிய, ஏற்கனவே வலுவாக ஆவணப்படுத்தப்பட்ட தீவிர சிக்கல்களை பற்றிய பிரச்சினை.

கேரள எதிர்க்கட்சித் தலைவரான சி.பி.எம்.மின் வி.எஸ் அச்சுதானந்தன் 26 ஆகஸ்ட் 2011-ல் ஆதார் திட்டத்தை கைவிடுமாறு கேரள அரசை கேட்டுக் கொண்டார். ஆதாருக்கு எதிரான ஆய்வாளர்களும் பிரச்சாரகர்களும் இதனை வரவேற்றார்கள். காலந்தாழ்ந்ததாக இருப்பினும் அச்சுதானந்தனின் அறிக்கை மக்களின் விரல் தடயங்களைக் கொண்டு எடுக்கப்படும் உயிரியல் அளவை தகவல்கள் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகியவற்றை மீறுகிறது என்றது. பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து ஆதார் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்துகேரள அரசு பின்வாங்கியுள்ளது.

பிப்ரவரி 24, 2011-ல் அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்த போது தான் கேரளாவில் தனித்துவ அடையாள எண் (UID) திட்டமான ஆதார் கொண்டு வரப்பட்டது. அதன் தொடக்க விழாவில் பேசிய அச்சுதானந்தன் மக்களிடம் ஆதார் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். ‘இத்திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்’ என்றார். ஆனால், அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னரே திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு அச்சுதானந்தன் திட்டத்தை எதிர்க்கிறார். என்ன செய்வது, எதிர்க்கட்சியில் இருக்கும் போதுதான் அரசியல்வாதிகளுக்கு ஞானம் வருகிறது!

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காருக்கும் இத்தகைய காலங்கடந்த ஞானம் வருவதற்கு அவர் எதிர்க்கட்சி வரிசைக்கு போவது வரை காத்திருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் முதல் மாநிலமாகவும், இந்திய அளவில் 8-வது மாநிலமாகவும் திரிபுராவில் 2010 டிசம்பர் 2-ம் தேதி ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் திரிபுரா முதலிடம் வகிக்கிறது. ஆனால், திரிபுராவின் ஆதார் வெற்றியில் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்ப்ட்ட முறைகேடு கறையாக படிந்திருக்கிறது. 15 கோடி ரூபாய் வரை நிதி முறைகேடுகள் நடந்த்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நெருக்கடியை சமாளிக்க 2012 மார்ச் மாதம் மாநில முதல்வர் சி.பி.ஐ விசாரணை கோரப் போவதாக அறிவித்தார்.

ஆனால், மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சவுத்திரி காங்கிரசின் மத்திய அரசு ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முன்னணியில் இருந்ததற்காக கவுரவித்து விருது வழங்கியதை சட்டமன்றத்தில் தெரிவித்தார். சி.பி.ஐ விசாரணை கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

சிபிஎம் மோசடி
சிபிஎம்முக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிடமிருந்து இந்த விருதை பெற்ற சி.பி.எம் 25 செப்டம்பர் 2013-ல் ‘சட்டவிரோத ஆதார்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆதாருக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தது. அரசு பண விநியோகத் திட்டத்திற்கும், சமூகநலத் திட்டத்திற்கும் ஏழைகளைக் கண்டறியும் முறைக்கும் ஆதார் அடையாளத்தை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என்று மத்திய அரசை விமர்சித்து. சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (SUCI) மார்ச் 14, 2012-ல் ஆதார்/UID திட்டத்துக்கு எதிராக 3.57 கோடி கையொப்பங்களைத் திரட்டி பிரதமரிடம் அளித்தது. இத்திட்டம் ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் வருணித்தது. நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு டிசம்பர் 13, 2011-ல் தாக்கல் செய்த அறிக்கையில் தனித்துவ அடையாள ஆணையத்துக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அது இத்திட்டத்தை தெளிவற்றது, நோக்கமற்றது மற்றும் குழப்பம் மிகுந்தது என்று கருத்து தெரிவித்தது. மேலும் இத்திட்டம் பாராளுமன்ற முன்னுரிமைகளுக்கும், அடிப்படை அறநெறிகளுக்கும் எதிரானது என்றது.

பாராளுமன்றத்தில் சட்டமாகும் முன்னரே உயிரியல் அளவை மற்றும் தனித்தகவல்களை சிறப்பு அடையாள எண் மூலம் பெறும் முடிவுக்கு எந்த சட்ட அனுமதியும் இல்லை. ஏப்ரல் 2013 SUCI கட்சியின் ‘ப்ராலட்டேரியன் எரா’ ஆதார் திட்டம் குறித்த பல கேள்விகளை எழுப்பி அதன் பின்னுள்ள உண்மைகளை திரைகிழித்தது. இந்த திட்டம் சட்டத்துக்கும், அரசமைப்பு விதிகளுக்கும் எதிரானது என்று உரைத்தது. இத்திட்டத்தை கொண்டுவர இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகேனிக்கு வரம்பற்ற அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அக்கட்சி மேற்கொண்ட ஆய்வின் படி ஆதார் சமூக அமைப்பை இடைத்தரகர்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் என்று கதையளப்பது மோசடியாகும். மேலும், தகவல்களை சேகரிக்கும் சில நிறுவனங்கள் வகுப்புவாத மற்றும் மத அடிப்படைவாத சக்திகளுடன் இணைந்து நிற்பதையும் அவற்றின் தீய நோக்கத்தையும் சுட்டிக்காட்டி கட்சி எச்சரித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகள் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டுள்ளன. கண்காணிப்புக்கு புகழ்பெற்ற அமெரிக்கா கூட்டுத் தாயக பாதுகாப்புத் துறையிடம் மாகாணங்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு தகவல்களை ஒன்று திரட்ட அனுமதி பெற முயற்சித்து தோல்வியைக் கண்டது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தேசிய உயிரியல் அளவை எண் மூலமாக எடுக்கப்படும் கணக்கீடு தனிநபர் உரிமை மற்றும் அந்தரங்கத்தன்மையை பாதிப்பதை எடுத்துச் சொன்னது. மக்கள் அனைவரின் கைரேகை, உயிரணுக்களின் மாதிரி மற்றும் சந்தேகத்திற்குள்ளான ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாதவர்களின் டி.என்.ஏ பதிவுகளை திரட்டுவது மிக ஆபத்தானது என்பது நீதிபதிகளின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

நந்தன் நிலகேணி
ஆதார் எண்ணை குடிமக்கள் உடம்பில் பச்சை குத்த விரும்புகிறார் நீலகேணி.

அதிகார முறைகேடு, அரசியல் எதிரிகளை கண்காணித்தல், அடிப்படை மனித உரிமைகளை மிதிப்பது, ஜனநாயக மக்கள் இயக்கங்களின் செயல்பாட்டாளர்களை துன்புறுத்துவது, திட்டமிட்ட ரீதியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்களை கொடுமைப்படுத்துவது ஆகியவை தினம்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கும் நமது நாட்டில் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அமைப்பிடம் குவிப்பது எதேச்சதிகாரத்தை உருவாக்கும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கவனத்தை உறுதியாக ஈர்க்கும் வகையில் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

1984 மற்றும் 2002 குஜராத் படுகொலையில் அரசு எந்திரத்தின் முழு பங்கேற்பு இருந்தது என்பது ரகசியமல்ல. அரசு நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் நடக்கும் என்கவுண்டர் படுகொலைகள், விசாரணை கைதிகள் சாவு, போலீஸ் – ராணுவம் மூலம் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டுதல் போன்றவை எதார்த்தமாக இருக்கும் சூழலில் இது தொடர்பாக எழுகின்ற அச்சத்தை புறந்தள்ள முடியாது. அரசியல் எதிரிகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்காணித்து வரும் முதலாளித்துவ அரசுக்கு ஆதார் வசதியும் அமைந்து விட்டால் கேட்கவா வேண்டும். ரயில் முன்பதிவு, ATM-லிருந்து பணம் பெறுதல் முதற்கொண்டு உணவு மானியத் தொகை வங்கியில் செலுத்தப்படும் கணக்கு வரை ஒரு ஒருங்கிணைந்த கண்காணிப்பு வளையத்துக்குள் நாம் நுழைவோம்.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது எதேச்சதிகார, பாசிச சக்திகள் சமூகத்தில் மோசமான கண்காணிப்பு முறைகளை ஏற்படுத்தி இத்தகைய தொழில்நுட்பங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஜெர்மானிய ஆட்சியாளர்கள் 1933-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது IBM ஹாலரித் D II அட்டை வகைப்படுத்தும் கருவியை பயன்படுத்தினர். அதில் இருந்த இனம் பற்றிய வகைப்பாடு, IBM-ஐ பயன்படுத்தி யூதர்களை நாஜிக்கள் கொன்றழிக்க உதவியது.

எனவே சாதிய, மதவாத, இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதார் தகவல் அடிப்படையை தமது ஜனநாயக விரோத, சட்ட மற்றும் நெறிமுறையற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.

தவறானவர்கள் கையில் ஆதார் தகவல்கள் சேர்வதையோ மற்றும் தவறான நோக்கங்களுக்கு ஆதாரை பயன்படுத்துவதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன வழி என்று நந்தன் நிலகேனியிடம் கேட்ட போது அவர் அளித்த பதிலில் அதன் குரூரம் ஒளிந்துள்ளது. ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இப்பிரச்சினையில் நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத உண்மை என்னவென்றால் ஆதார் தொடர்பான நிலைப்பாட்டில் திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சி.பி.எம்மிற்கு நடுவே பெரிய பேதங்கள் எதுவும் இல்லை என்பதே. சட்டவிரோதமாக குடியேறுபவர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை தவிர சி.பி.எம். பா.ஜ.கவிடமிருந்து வேறுபடவில்லை.

நன்றி : Frontierweekly

AADHAR—Extra Legal Coercion – Usha Ramanathan

[கொல்கத்தவின் எர்த்கேர் புத்தக நிலையத்தில் 2013-ம் ஆண்டு நவம்பர் 21 அன்று உஷா ராமநாதன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்]

ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு : சுகதேவ்

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

3

மார்ச் 23 : பகத்சிங் நினைவுநாள் – முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம்

1. சென்னை

“இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 23.03.2014 அன்று மாலை 6 மணிக்கு அம்பத்தூர் முருகன் கோயில் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் பல்வேறு நிறுவனங்களில் தினமும் நடைபெறும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், தன் லாப வெறிக்காக இயற்கையையே சீரழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்காமல் தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவில்லை என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

தலைமையுரைக்கு முன்னதாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அடுத்ததாக உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அதன் மூலம் கொள்ளையடிக்கும் முதலாளிகளையும், சமீபத்தில் வரி ஏய்ப்பு செய்து அம்பலப்பட்டுப் போன நோக்கிய நிறுவனத்தையும் அம்பலப்படுத்தினார்.

அடுத்ததாக பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் சொ.செல்வகுமார் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி வாழ முடியாமல் பல்வேறு வர்க்கங்களை சார்ந்தவர்களும் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது சுட்டிக் காட்டினார். மக்கள் எழுச்சிக்கு பயந்து பகத்சிங்கை முந்தைய நாளே தூக்கிலிட்ட ஆங்கிலேயர்களைப் போல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சியைக் கண்டு முதலாளிகள் அஞ்சி நடுங்குவதை எடுத்துரைத்தார்.

ஒரு புரட்சிகர பாடலுக்குப் பின் தன் உரையை துவக்கிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜன் தங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஆலைகள் குறித்தும், தண்ணீர் தனியார்மயமானதின் விளைவாகவும் உழைக்கும் மக்கள் வாழ வழியற்ற மாவட்டமாக மாறி வருவதையும் இதை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாது சுரண்டி சுரண்டி செல்வம் சேர்க்கும் முதலாளித்துவத்தினை ஜலசமாதி செய்திட வேண்டுமென கூறி முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி தோழர் இரா.லோகநாதன் சிக்கனம் செய்வதாகக் கூறி தொழிலாளிகளின் உயிரை மாய்க்கும் முதலாளித்துவ லாபவெறியை பல்வேறு உதாரணங்களின் மூலம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் தோழர் விளவை இராமசாமி தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற போர்வையில் தொழிலாளிகளை ஏய்க்கும், தொழிற்சங்கத்துக்கு துரோகமிழைக்கும் முதலாளிகளை அம்பலப்படுத்தினார். குறிப்பாக கோவை தேசிய பஞ்சாலைக் கழகத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் சூழ்ச்சியையும் அதை முறியடித்து புஜதொமு தேர்தலை நடத்தி வெற்றி பெற உள்ளதையும் விளக்கி துரோகிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தி வேண்டுமென தொழிலாளிகளுக்கு உரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் தோழர் சு.பரசுராமன், மக்கள் குடியிருப்புகளில் வன விலங்குகள் வருவதற்கு காரணம் முதலாளித்துவ பயங்கரவாதமே, வன விலங்குகள் வாழ்கின்ற இயற்கை சார்ந்த சூழலான காட்டை அழிப்பதன் மூலம் விலங்குகள் வாழ முடியாமல் மக்கள் வசிப்பிடங்களில் வந்து அச்சுறுத்துகின்றன. இப்படி ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் எதிரியான முதலாளித்துவத்தை வேரோடு வீழ்த்த தொழிலாளி வர்க்கத்தினால்தான் முடியும் எனக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு சமீபத்தில் கழிவுநீரை சுத்தம் செய்ய சென்று தொழிலாளிகள் மரணமடைந்த சம்பவத்தை திட்டமிட்ட படுகொலை என்று துவங்கி இப்படி நித்தம் நித்தம் படுகொலை செய்யும் முதலாளிக்கெதிராக ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டி முதலாளிக்கு ஆதரவாக ஆளும் வர்க்கம் நடந்து கொள்கிறதென கூறினார். ராமலிங்கம் என்ற ஐ.பி.எஸ்-ம், சென்னை மாவட்ட ஏடிஜிபியும் போராடும் தொழிலாளிகளுக்கு எதிராக போலீசு முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை அனைத்து துரோகிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை பல்வேறு உதாரணங்களுடன் பதிவு செய்தார். குட்ட குட்ட தொழிலாளிகள் குனிந்து கொண்டே இருக்க வேண்டும், நிமிர்ந்து நின்றால் பயங்கரவாதிகள் கொல்லும் என்று கோவை பிரிக்காலிலும், மானோசர் மாருதி சுசுகியிலும் நடந்த தொழிலாளர் போராட்டங்களை சித்தரிக்கும் முதலாளித்துவத்தின் குரூரத்தை விவரமாக பதிவு செய்தார்.

ஆலைகளில் மாசடைந்த நீரை சட்டவிரோதமாக ஆறுகளில் கொட்டுவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும், காசுகளை அழிப்பதும், குளிர்சாதனத்தை பயன்படுத்தி புவியை வெப்பமயமாக்குவதும் என மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமியை மாற்றும் முதலாளித்துவத்தினை ஒழிக்காமல் தொழிலாளி வர்க்கம் விடுதலையடைய சாத்தியமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தேர்தலை பற்றிய பாடல் இன்றும் கூட பொருந்துவதாக இருப்பதைக் கூறி, “கொள்ளை கூட்டணி ஒவ்வொன்னுக்கும் என்ன பின்னணி” என்ற பாடலில் தொடங்கி பல புரட்சிகரப் பாடல்களை இசைத்து மக்களை ஈர்த்த கலைக்குழுவினர் இறுதியாக பகத்சிங் பாடலுடன் நிறைவு செய்தனர்.

இணைப்பு சங்க, கிளைச்சங்க தொழிலாளிகள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் ஆவடி-அம்பத்தூர் பகுதித் தலைவர் தோழர் ம.சரவணன் நன்றியுரைக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

2. தருமபுரி

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளை முன்னிட்டு “ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் என்ற தலைப்பில் தருமபுரி புமாஇமு சார்பில் கல்லூரிகளிலும், பள்ளியிலும் பேருந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இயக்கத்தின் இறுதியாக பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூடியிருந்த மக்கள் மத்தியில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

march-23-dharmapuri

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி

3.  தூத்துக்குடி

மார்ச் 23 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடியில் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளிகள் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

march-23-tuticorin-poster

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தூத்துக்குடி

போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !

0

புல்டோசரை வைத்து தகர்த்ததைப் போல, கார்ப்பரேட் முதலாளிகள் தொடங்கப்போகும் பெரும் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் விதிக்கப்பட்டிருந்த பெயரளவிலான தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, தாராள அனுமதியளித்துள்ளார் மைய அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த டிசம்பரில் சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பதவி விலகிய பின்னர் அத்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி, பதவியேற்ற 20 நாட்களில் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான 73 பெரும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அடுத்தடுத்து ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரிசா மக்களின் கடும் எதிர்ப்பால் கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய முதலீட்டுத் திட்டமான போஸ்கோ இரும்பு-எஃகு ஆலைத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜெகத்சிங்பூர் ஆர்ப்பாட்டம்
தென்கொரிய அதிபரின் வருகையையொட்டி, அவசரமாக போஸ்கோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்ததை எதிர்த்து, “தென்கொரிய அதிபரே வெளியேறு!” என்ற முழக்கத்துடன் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட ஜெகத்சிங்பூர் மாவட்ட மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜனவரியில் தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை-யின் வருகையையொட்டி, அதற்கு முன்னதாகவே தென்கொரியாவின் போஸ்கோ திட்டத்துக்கு அவசரமாக ஒப்புதல் அளித்துள்ள அமைச்சரின் இந்த முடிவானது, கார்ப்பரேட் முதலாளிகளையே பிரமிக்க வைத்துள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு, இத்திட்டங்களால் வெளியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வுரிமையளித்தல் முதலான எதைப்பற்றியும் கவலைப்படாமல், கண்ணை மூடிக்கொண்டு அவசரஅவசரமாக அமைச்சர் வீரப்ப மொய்லி ஒப்புதல் அளித்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், வீரப்ப மொய்லியின் அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பு திடீரென உருவானதல்ல. மைய அரசின் சுற்றுச்சூழல் துறையும் பிரதமர் அலுவலகமும், கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ப ஏற்கெனவே நிலவி வந்த பெயரளவிலான சட்டங்களையும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் அடுத்தடுத்து நீர்த்துப்போகும் வகையில்தான் இயங்கி வந்துள்ளன. மேலும், அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கங்களை உடனுக்குடன் நிறைவேற்றும் விசுவாசி என்பதை பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி நிரூபித்துக் காட்டியுள்ளதாலேயே, அவரைச் சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகத்துக்கும் பொறுப்பேற்குமாறு மைய அரசு பணித்தது.

  • கடந்த டிசம்பர் 2012-இல் முதலீட்டுக்கான அமைச்சரவை கமிட்டியை பிரதமர் மன்மோகன் தலைமையில் மைய அரசு உருவாக்கியது. ரூ 1000 கோடிக்கும் மேலான முதலீட்டுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், இதற்குத் தடையாக உள்ள சட்டங்களை, குறிப்பாகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பாதுகாப்பு, குடிமக்களை இப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான சட்டங்களில் உள்ள விதிகளை அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கமிட்டியில் சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சரோ, பழங்குடியினர் நலத்துறை அமைச்சரோ சேர்க்கப்படாமல் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டனர். கடந்த மார்ச் 2013-ல் பல்வேறு பெரும் திட்டங்களுக்குப் பல அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் குறிப்பிட்ட மைய அமைச்சரவை, இவற்றை விரைந்து நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது.
  • ஜனவரி 2012-ல் கார்ப்பரேட் முதலாளிகளின் பெரும் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்னதாக இப்பகுதியிலுள்ள பழங்குடியின கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு, மாநில அரசின் ஒப்புதலும் வனத்துறையின் ஒப்புதலும் இருந்தால் போதும் என்று மாற்றப்பட்டது. ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கேற்பு என்பது அவசியமானது என்று ஏற்கப்பட்டாலும், போஸ்கோ விவகாரத்தில் அது வெளிப்படையாகவே முறியடிக்கப்பட்டது.
  • பிப்ரவரி 2013-ல் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், சிறிய திட்டங்களுக்கு – அதாவது, சாலை போடுதல், ரயில்பாதை அமைத்தல், மின்சாரக் கோபுரங்கள் அமைத்தல், மின்கம்பித் தடங்களை அமைத்தல் முதலானவற்றுக்குப் பழங்குடியின கிராமப் பஞ்சாயத்துகளின் ஒப்புதல் அவசியமில்லை என்று அறிவித்தது. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கிலுள்ள 82 மாவட்டங்களில் 13 வகையான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு வனத்துறையின் ஒப்புதல் அவசியமில்லை என்று அறிவித்தது. இதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • ஒரே அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும், வனத்துறையின் ஒப்புதலிலிருந்து சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தனியே பிரிக்கப்பட்டது. இதன் மூலம் வனத்துறையின் ஒப்புதல் கிடைக்காத போதிலும், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைக் கொண்டு தமது பெரும் திட்டங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த அநீதிக்குத் துணை நின்றது.
  • ஒரிசாவின் நியாம்கிரி மலையில் பாக்சைட் கனிமத்தைக் கொள்ளையிடத் துடித்த வேதாந்தா நிறுவனம், வன உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறிய போதிலும், பின்னர் நீதிமன்றத்தில் வாதிட்டபோது சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகம், பல்டியடித்தது. காடுகளைச் சார்ந்துள்ள மக்களின் உரிமை மதிக்கப்பட்ட போதிலும், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகளை அழிப்பது தவிர்க்க வியலாதது என்றும், தனிநபரின் உரிமையைவிட அரசின் சமுதாயத் தலைமைப் பாத்திரம் முக்கியமானது என்றும் வாதிட்டது. இதன் மூலம் காடுகளைச் சார்ந்துள்ள பழங்குடியின மக்களின் உரிமையை ‘வளர்ச்சி’யின் பெயரால் அரசே நசுக்கியது. இருப்பினும், வேதாந்தாவின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்களுக்கு ராகுல் காந்தி ஆதரவாக நிற்பதாக வேடம் போட்டுள்ளதால், தற்போதைக்கு கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டுமென்ற விதியை வலுயுறுத்தி அத்திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒத்திப் போட்டுள்ளது.
போஸ்கோ கட்டுமான அலுவலகம்
கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான உழைக்கும் மக்களின் போர் : தமது வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள போஸ்கோ நிறுவனத்தின் கட்டுமான அலுவலகச் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அதனைத் தீயிட்டு கொளுத்திய ஒரிசா மக்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 2012-ல் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராசன், “நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் எமது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் இருக்காது” என்று அறிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனது அமைச்சகம், 828 திட்டங்களில் 754-க்கு ஒப்புதல் அளித்துள்ளதையும், 18,200 ஹெக்டேர் காட்டுப்பகுதி நிலங்கள் கையளிக்கப்பட்டுள்ளதையும், இன்னும் 57,469 ஹெக்டேர் நிலங்களைக் கையளிப்பதற்கான பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.

தொழிற்துறை விரிவாக்கத்தால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக “உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடு’’-(EIA) என்பதை அடிப்படையாக வைத்து பரிசீலனையும் ஒப்புதல் அளிப்பதும், நிராகரிப்பதும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில், இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்க வேண்டிய காவலனாக இருக்க வேண்டிய சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சகம், கார்ப்பரேட் முதலாளிகளின் அப்பட்டமான தரகனாக மாறிவிட்டது.

ஒரிசாவில் போஸ்கோ அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை ஆண்டொன்றுக்கு 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் இத்திட்டம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வறிக்கையோ, ஆலையின் முதல்கட்ட உற்பத்தி இலக்கான 40 லட்சம் டன் இரும்பு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டது. அதாவது 1.2 கோடிடன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி ஆவு செய்யாமல், அதில் மூன்றிலொரு பங்கான 40 லட்சம் டன் இரும்பு உற்பத்தியால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே பரிசீலித்து அதன்படி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், போஸ்கோ அமைக்கவுள்ள இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராயாமல், அவற்றைத் தனித்தனி விவகாரமாகப் பிரித்து ஆய்வறிக்கையை அளித்தது.

போஸ்கோ ஆலை அமையவுள்ள பகுதியின் கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டுமென்ற போதிலும், ஒரிசா மாநில அரசு இப்பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்து வருவதையே மறைத்துள்ளதோடு, கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பதிலாக ஜெகத்சிங்பூர் மாவட்ட நீதிபதியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்று மோசடி செய்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்னமும் போஸ்கோவுக்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், அத்தீர்ப்பாயம் 2012-இல் அளித்த இடைக்காலத் தடையை இப்போது வீரப்ப மொய்லி நீக்கியுள்ளார். போஸ்கோவின் இரும்பு – எஃகு ஆலைத் திட்டம் என்பது வேறு, துறைமுகம் அமைக்கும் திட்டம் என்பது வேறு என்று இரண்டையும் வேறானதாகக் காட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

வீரப்ப மொய்லி
கார்ப்பரேட் முதலாளிகளின் நம்பகமான விசுவாசி : சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகத்துக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 14 அன்று வீரப்ப மொய்லியின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், தற்போதைய நிலக்கரிச் சுரங்கங்கள், மேலும் 50 சதவீத அளவுக்கு விரிவுபடுத்திக் கொள்வதற்கு தாராள அனுமதி அளித்துள்ளது. இத்தகைய விரிவாக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, கனிமவள இழப்பு, பொதுமக்களுக்குஏற்படும் பாதிப்பு பற்றிய எந்த மதிப்பீடும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மய – தாராளமய-உலகமயக் கொள்கைகளைத் திணித்தபோது, அரசுத்துறை நிறுவனங்களும் அவற்றின் அடிப்படைக் கட்டமைப்புகளும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் காடுகள், விளைநிலங்கள், கனிம வளங்கள், ஆறுகள் – நீர்நிலைகள், மின்சாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் தாரைவார்க்கப்பட்டன. இப்போது இன்னும் மூர்க்கமாகவும் திமிராகவும் அவரச அவசரமாகவும் கார்ப்பரேட் கொள்ளைக்குக் கதவுகள் அகலமாகத் திறந்துவிடப்படுகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு பிரிவினர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியை ஆதரிப்பதாலும், முதலீட்டாளர்களின் நண்பனாக பா.ஜ.க. தன்னைக் காட்டிக் கொள்வதாலும், கார்ப்பரேட் முதலாளிகளிடம் நம்பிக்கையைப் பெற்று வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடனேயே காங்கிரசு அரசு இத்தகைய அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது. மொத்தத்தில், நாட்டின் – மக்களின் பொதுச்ணொத்துக்களான நீரும் நிலமும் கனிம வளமும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்குத் திறந்து விடப்படுவதும், வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவதும்தான் இந்த அறிவிப்பின் சாரமாகும்.

வீரப்ப மொய்லியின் அறிவிப்பைத் தொடர்ந்து போஸ்கோ நிறுவனம் கட்டுமானப் பணிகளில் இறங்கத் தொடங்கியதும், ஒரிசாவின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தின் நுவாகோன், கோவிந்தபூர், தின்கியா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ கட்டுமான அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதோடு, அதன் 300 மீட்டர் நீள தடுப்புச் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளனர். போராடும் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்திய அம்மாநில போலீசு, அவர்கள் மீது பொய்வழக்குகளைச் சோடித்து சிறையிலடைத்துள்ளது. நாட்டில் பெயரளவுக்கு இருந்த சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் முதலான ஜனநாயகப் பம்மாத்துகள் அனைத்தும் கலைந்து, மூர்க்கமான கார்ப்பரேட் கொள்ளையும் அரசின் அப்பட்டமான பாசிசமும் அரங்கேற்றப்படுவதையே இவை நிரூபித்துக் காட்டுகின்றன.

– மனோகரன்
______________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
______________________________

ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார் !

0

ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார்!

  • தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் அதிகாரத் திமிரை ஒடுக்குவோம் !
  • தட்டிக்கேட்க ஆளில்லாமல், தட்டுக்கெட்டுத் திரியும் ஜிஎம்மிற்கு தக்க பாடம் புகட்டுவோம் !

ன்பார்ந்த காளீஸ்வரர் “பி” யூனிட் ஆலைத் தொழிலாளர்களே!

நமது ஆலையில் தற்போது பொதுமேலாளராகப் பணிபுரியும் வி. சிவசாம்ராஜின் சட்டவிரோதமான அட்டகாசங்களை நீங்கள் அறிவீர்கள். தனியார் ஆலையில் (கே.ஜி குரூப்) வேலை செய்து வந்த அவர் குறுக்கு வழியில் (20 எல்) ஆலைப் பொதுமேலாளராக வந்ததால், ஒரு முதலாளியைப் போல அவர் ஆடுகின்ற சட்டவிரோதமான ஆட்டங்கள் சகிக்க முடியாதது.

ஆனால், காளீஸ்வரர் ஆலை ஒன்றும் தனியார் ஆலையல்ல. இது காளையார்கோவில் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவே இந்திய அரசால் ஏற்று நடத்தப்பட்டு வருகிற பொதுத்துறை ஆலை. இங்கேயுள்ள பொதுமேலாளர் ஒன்றும் முதலாளியல்ல. அவர் தொழிலாளர்களின் உழைப்பினால் வரும் வருமானத்தில் சம்பளம் பெறுகிற ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால், இதை அவர் உணராமல் தொழிலாளரை அடிமைகளாகவே நினைக்கிறார்.

பொது வேலை நிறுத்தம் நடைபெற்றபோது வெளி ஆட்களைக் கொண்டுவந்து ஆலையை இயக்க முயற்சித்தார். தொழிலாளரை எப்போதுமே மதிப்பதில்லை. கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தியே பேசுவார். தான் ஒரு படிப்பாளி என்று சொல்லிக் கொள்ளும் அவரது நாகரீகமற்ற பேச்சுக்களை ஒரு குடிகாரனிடம்தான் நாம் எதிர்பார்க்க முடியும். அவரின் ஊழல்களையும், லீலைகளையும், திமிரையும் சட்டவிரோதப் போக்கையும் தட்டிகேட்கும் ஒரே சங்கமான புஜதொமு மற்றும் கோவை மண்டலச் சங்கத்தின் செயல்பாடுகளை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே சுவற்றில் எழுதினார் என்பதற்காக தொழிலாளி ராதாகிருஷ்ணனை மிரட்டி வி.ஆர்.எஸ்ஸில் போக வைத்தார். இப்போது சுமார் 13 ஆண்டுகளாக ஆலையில் வேலை செய்து வரும் தொழிலாளி தோழர் மருதுபாண்டியனை வேலைக்கு வரவிடாமல் தடுப்பதன் மூலம் சங்கத்தை வளரவிடாமல் தடுக்கலாம் நினைக்கிறார். காற்றைக் கையால் மறைக்க முயல்கிறார். அவரின் அடாவடிச் செயல்பாடுகளினால் குமுறிக்கொண்டு இருக்கும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட அவரது லீலைகளின் பட்டியல் இதோ;

1. மும்பையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு இவர் போனபோது கூடவே கட்டாயப்படுத்தி ஒரு பெண் பணியாளரையும் கூட்டிப் போனதால் அநதப் பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு ஆலைக்குள்ளும், வீட்டிலுமாக அவர் 2 தடவை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

2. பெண்களிடம் மிக இழிவாகவே பேசுவார், நாகரீகமே தெரியாத காட்டுமிராண்டியாகவே நடந்து கொள்வார்; வாலெண்டர்ஸ் தினத்தன்று அவரது அறையில் வெளிப்படையாக நடத்திய கூத்தும் கும்மாளமும் ஒரு கிரிமினல் குற்றம். நாகரீகம் கருதி அதை வெளிப்படையாகச் சொல்லாமல், இங்கு தவிர்க்கிறோம்.

3. இவர் தன்னை ஆன்மீகவாதி என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். இவரது ஆன்மீக நித்தியானந்தா லீலைகள் வீடியோ படம் பிடிக்கப்பட்டு, அந்த சி.டி யை வைத்து இவரை ஒரு கும்பல் மிரட்டுவதாகவும் அந்தக் கும்பலில் ஒருவர் வேலை செய்யாமலே ஆலையில் சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. யார் அந்த ஊழியர்?

இனி இந்த யோக்கியசிகாமணியின் ஊழல்கள்:

1. மூன்று டிரிப்புகளில் ஏற்றிச் செல்லவேண்டிய தொழிலாளரை ஒரே டிரிப்பில் அடைத்துக் கொண்டு ஏற்றிச் செல்ல வைத்து, ஆனால் 3 டிரிப் என கணக்கு எழுதி 2 டிரிப்பிற்கான பணத்தை ஆட்டையைப் போட்டு வருகிறார்.

2. பழைய பேருந்து ஓட்டுனர் சரவணனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையினை விபத்து நடந்ததற்கு என ஆட்டையைப் போடுவதற்காகவே தர மறுக்கிறார்.

3. கேண்டீனுக்கான தரமான பொருட்கள் எல்லாம் யாருக்கும் கமிசன் கொடுக்காத கடையான மதுரை கண்ணன் ஸ்டோரில்தான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக உள்ளூரில் வாங்குகிறார்.

4. கேண்டீனுக்கு அரசு இண்டேன் கேஸ்தான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக தனியார் மீனா கேஸ் வாங்குகிறார்.

5. ஆலைக்கான தரமான எந்திர உதிரிப்பொருட்கள் இதுவரையிலும் கோவை சாந்தி கேர் நிறுவனத்தில்தான் வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக இவரே நேரில் போய் பில் தயாரித்து தரமற்ற பொருட்களை வாங்கி வருகிறார்.

6. ஜெனரேட்டருக்காக இதுவரையிலும் தரமான சர்வோ ஆயில்தான் வாங்கப்பட்டது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக தரமற்ற ரிலையன்ஸ் ஆயில் வாங்குகிறார்.

7. அழுக்குப் பஞ்சுக் கழிவோடு வெள்ளைப் பஞ்சையும் கலந்து அதையும் விதி முறைப்படி டெண்டர் விடாமல் தன்னிச்சையாக விற்றுள்ளார்.

8. ஆலைவளாகத்தினில் இருந்த மரங்களையும் டெண்டர் விடாமல் தனியாக விற்றுள்ளார்.

9. சிமிண்ட் மூடைகள், கம்பிகள் ஆகியவை திருட்டுப்போனதாக இவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆலையின் பின்புறம் வசிப்பவர்கள் டாடா ஏசிஇ வண்டியில் அந்தப்பொருட்கள் பகிரங்கமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவே சொல்கிறார்கள்.

10. சில புகார்களை விசாரணை செய்யவந்த அதிகாரிகளிடம் குற்றங்களிலிருந்து தான் தப்பிப்பதற்காக ஆலையின் ஹெச். ஆர் மீது பழிபோட்டு மாட்டிவிட்டுள்ளார்.

11. பெண்களை இரவு 10 மணிக்கு மேல் வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.

12. புது ஆலையில் ரூ 100 கூலிக்கு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளார்.

13. பத்து மாதங்கள் ஆகியும் பயிற்சித்தொழிலாளருக்கு சி.எல்.ஆர் அட்டை தர மறுக்கிறார்.

14. சி.எல்.ஆர் தொழிலாளரை கொத்தடிமைகளைப் போல நடத்துகிறார்.

15. ஆர்.சி.எல்.ஆர்களுக்கு லே-ஆஃப்-க்கு சம்பளமும், சி.எல்லும் கொடுக்க மறுக்கிறார்.

16. ஒரு நாள் வேலைக்கு வராமல் ஆப்செண்ட் ஆனாலும், மறுநாள் அதையே காரணங்காட்டி வேலையில்லை என்று சொல்லி அலைக்கழிக்கிறார்.

17. மேஸ்திரிகளுக்கு அடிக்கடி பொய் நோட்டீஸ் கொடுக்கிறார்; வேலை முடிந்தாலும் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என சட்டமிட்டுள்ளார்.

18. சக ஊழியர்களை காட்டிக் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.

19. கைக்கூலிகளாக சில அல்லக்கைகளை வைத்துக்கொண்டு பலசலுகைகள் கொடுக்கிறார்.

20. வேலை ஒப்பந்தத்தையும் மீறி ஓவர் டைம் பார்க்கச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். மறுக்கும் தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கிறார்.

21. அலுவலக ஊழியர்களை வேலை செய்யவிடாமல் அடிக்கடி இடம் மாற்றுகிறார்.

22. இதுவரை ஆறு சூப்பர்வைசர்களை வெளியேற்றியிருக்கிறார்.

23. உடல்நலம் பாதிக்கப்பட்டு வி.ஆர்.எஸ் கேட்பவர்களையும்கூட, ராஜினாமா செய்யச் சொல்லிக் கடிதம் கேட்கிறார்.

24. கேண்டீனில் கொடுக்கப்பட்ட பன், டீயில் பன்னை நிறுத்தி விட்டார். உணவுகளின் எடையளவையும் குறைத்துவிட்டார்.

தோழர்களே!

இன்னும் நீங்கள் அறிந்த இதுபோன்ற சட்டவிரோத, கிரிமினல் செயல்களை உடனே எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதுவரை எந்த சங்கமும் தட்டிக்கேட்காததால்தான் இவர் இப்படி நடந்துகொண்டு வருகிறார்.

ஜி.எம்மிற்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால் அது பு.ஜ.தொ.மு போன்ற தொழிலாளி வர்க்கச் சங்கத்தினால்தான் முடியுமே தவிர பிழைப்புவாத ஓட்டுக்கட்சி சங்கங்களினால் முடியவே முடியாது. ஆகவே தொழிலாளர்களே நாம் ஒன்றிணைவோம்!

அதிகார வர்க்க சாம்ராஜ்யத்தைத் தகர்த்தெறிவோம்!

ஜி.எம் சிவசாம்ராஜை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தினூடாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்
இணைப்பு :  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு

தேர்தல் குறவஞ்சி !

6

வானரங்கள் கனி கொடுத்து
மோடியோடு கொஞ்சும்
மோடிசிந்தும் கனிகளுக்கு
தமிழ் நரிகள் கெஞ்சும்.

தேர்தல் குறவஞ்சி‘தமிழருவி’ திரையெழும்பி
தினமணியில் ஒழுகும்
தறு ‘தலைகள்’ பரிக்காலும்
நரிக்காலும் வழுகும்.

காவிகளோ விழியெறிந்து
ராஜ்நாத்தை அழைப்பர்
வடகுரங்கு வந்து வந்து
ராமதாஸ், விஜயகாந்தை வளைப்பர்!

சுக்ரீவனுக்கு தம்பியாகி
கேப்டன் குரங்கு நடக்கும்
காவிபோதை தலைக்கு ஏறி
கண்டபடி கடிக்கும்.

பார்ப்பனிய பேனெடுத்து
கொங்கு குரங்கு சாயும்
மோடிமுதுகை சொறிந்தபடி
பாரி குரங்கு பாயும்.

சாதிவெறி குரங்கெல்லாம்
பா.ஜ.க.வில் அலையும்
சனம் கூட்டி ஒதுக்கிய
குப்பைக்கெல்லாம்
ஆர்.எஸ்.எஸ் மலர் வளையம்.

விபீடணன் வேலை காட்டி
தாவும் மேடைதோறும்
வை.கோ. வாயைத் திறந்தாலே
திரிகூட மலைதாண்டி நாறும்.

அந்தர்பல்டி, தாண்டி குதிப்பு
ராமதாசின் பந்தடிப்பு
அனுமாரையே மிஞ்சும்
சேலத்து மாம்பழத்தை
செழுங்குரங்கு பிய்த்தெடுக்க
ஓலமிட்ட அன்புமணி
சிறுநரியின் பிச்சையிலே
அடங்கும்!

போயசிலே தாவி நின்று
அம்மாவே சரணமென்று
ஆடிநின்ற
செங்குரங்கு ரெண்டு,
போட்ட அடியில் தாவி வந்து
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு
இஞ்சி தின்ன குரங்காக இன்று!

இமயமலை என்னுடைய
தமயன் மலை என்று எண்ணி
காத்திருக்கும் பெண் குரங்கு இரண்டு,
எலக்சன் முடிந்தபின்பு கலெக்சனென்றால்
மம்தாவும், ஜெயாவும் சேர்ந்திடும்
பூணூல் கண்டு!

வேடுவர்கள் வினை விதைத்து
தேடுவார்கள் தெருக் கோடி…
தேர்தலென்று, ஓட்டென்று
திரும்பவும் நீ போய்விழுந்தால்
இனி தேடினாலும் கிடைக்காது
உன் ‘பாடி’.

– துரை.சண்முகம்