Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 679

பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்

2

“நாம், கலைத்துறையில் இருக்கும் தொழிலாளர்கள்; பாடகர்களாக, நடிகர்களாக, பல்துறைக் கலைஞர்களாக இருக்கும் நாம், மக்களிடமிருந்து வந்தவர்கள் என்பதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். நமது முழுத்திறனும் மக்களிடமிருந்து கிடைத்தது என்பதால் மக்களுக்கு சேவையாற்றுவது நமது கண்டிப்பான கடமையாகும். அதன் வழி அவர்களுடன் இரண்டறக் கலந்திருக்க வேண்டும்.’’ – பால்ராப்சன்.

பால் ராப்சன்
பால் ராப்சன்

அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் இப்படி முழக்கமிட்டான். எந்த அமெரிக்கா? நாம் கலைத்துறையில் இருக்கும் பன்னாட்டு முதலாளிகள்; மைக்கேல் ஜாக்சனாக, ஸ்பில்பெர்க்காக, ஆர்னால்டாக இருக்கும் நாம், மூலதனத்திலிருந்து வந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது. சுரண்டலின் மூலம் பெற்ற ஆற்றலை, மக்களை மழுக்குருண்டையாக மாற்றுவதற்கு பயன்படுத்துவது நமது கடமை. அதன் வழி பன்னாட்டு முதலாளிய தேவர்களுடன் கலந்திருக்க வேண்டும். நாம் கண்ட அமெரிக்கா இதுதான். ஆனால் நமக்கு மறைக்கப்பட்ட அமெரிக்காவையும் வரலாறு பதிந்திருக்கிறது.

‘புரட்சியின் நாதம் உங்களுக்கு கேட்க வில்லையா,’ ‘என் ஆன்மாவை ஒரு வெள்ளையனிடம் விற்க மாட்டேன்’ என்று நமது இதயங்களைத் தடையின்றித் தொட்டுப் பேசும் இன்றைய டிரேசி சாப்மென், வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்து வீதிதோறும் இசையால் முழங்கிய நேற்றைய ஜோன் பெய்ஸ், போன்ற மக்கள் பாடகர்கள்தான், அப்படி மறைக்கப்பட்டவர்கள். இப்படி ஒரு மரபை அமெரிக்காவில் தொடங்கி வைத்தவர் பால்ராப்சன். ‘அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ, ஒரு கலைஞன் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்’ எனும் ராப்சன் ஒரு பாடகராக மட்டுமல்ல, அரசியல் போராளியாகவும வாழ்ந்தார் என்பதுதான் இன்றும் அவர் மறைக்கப்படுவதற்கு காரணம்.

டீப் ரிவர் – பால் ராப்சன் (வேல்ஸ் நிலக்கரி சுரங்க கதை 1940)

நியூ ஜெர்சி மாநிலத்தில் 1898-ஆம் ஆண்டு ராப்சன் பிறந்தார். அவரது தந்தை வர்ஜீனிய மாநிலத்தில் அடிமையாக இருந்து சுதந்திர மாநிலங்களுக்குத் தப்பி ஓடியவர். ஒரு கறுப்பின அடிமையின் அவலங்களையும், போராட்ட குணத்தையும் தந்தையிடமிருந்தே மகன் அறிகிறார். ராப்சனின் குடும்பம் அமெரிக்காவின் மிகப் பழைய கருப்பின குடும்பங்களில் ஒன்று என்பதும் அவரது போராட்ட ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகித்தது.

பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற உயர் மதிப்பெண்கள் மூலம் ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர உதவித் தொகை கிடைக்கிறது. நிறவெறியின் களத்திலும் 15 வித விளையாட்டுக்களில் முதலிடம் வகித்தார். சிறந்த கால்பந்து வீரரான ராப்சன், ரட்கர்ஸ் பல்கலையிலிருந்து இருமுறை தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் கருப்பர் என்பதால் கல்லூரி அணியில் இடம் கிடைக்கவில்லை. அவரது கல்லூரியை வேறு ஒரு கல்லூரி 10 கோல் போட்டு தோற்கடித்த பின் தான், ராப்சனுக்கு அணியில் சேர முடிந்தது. தனது கல்வி நிறுவனத்துக்கு விளையாட்டுத் துறையில் மூலம் பல பெருமைகளை வாங்கிக் கொடுத்தாலும், ராப்சனின் பெயர் அவர் இறந்து 19 ஆண்டுகள் கழித்து 1995-ஆம் ஆண்டில்தான் கல்லூரி அணியில் விளையாடியவர் என அங்கீகாரம் பெற்றது.

கருப்பர்கள் விளையாட முடியாது என்ற அளவுக்கு நிறவெறி கோலோச்சிய காலத்தில் ராப்சனை ஒரு வீரனாக அங்கீகரிக்க மறுத்தார்கள். கல்லூரி அணி தோல்வியுற்ற பின் ஒரு வீரனென்று இல்லாமல் ஒரு அடியாளைப் போல் அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். இறுதியில் பட்டியலில் இடம் பெற 1995-ஆம் ஆண்டில்தான் முடிந்தது என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் யோக்கியதையைக் காட்டுகிறது.

பால் ராப்சன்
கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து மூர் கப்பல் தள தொழிலாளர்களுடன் பாடும் பால் ராப்சன் (செப்டம்பர் 1942)

பின்னர் சட்டம் பயின்று, நியூயார்க்கில் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்தார். ராப்சனுக்குக் கீழே பணியாற்றும் வெள்ளையன் ஒருவன் ஒரு கருப்பனுக்குக் கீழே வேலை செய்ய முடியாது என மறுத்ததன் மூலம் அவரது சட்டத்துறை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தான். 1921-இல் எஸ்லானடா என்ற மனித இயல் ஆய்வாளரைத் திருமணம் செய்தார். மனைவியின் தூண்டுதலினால் நாடகங்களில் நுழைந்தார் ராப்சன். மிகச் சிறந்த நடிகரானதும், சில திரைப்படங்களிலும் நடித்தார். இரண்டிலும் கறுப்பர் மற்றும் தொழிலாளர்கள், பற்றிய பிரச்சினைகளே அதிகம். அதனால் பெரும் நிறுவனங்கள் அவரைத் துண்டித்துக் கொண்டன.

1925-முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினார். சிறுவயதில் சர்ச் இசையை மட்டும் கேட்டிருந்த ராப்சன், இசைக் கல்வி எதுவும் பெற்றிருக்க வில்லை. ஆனால் கறுப்பின மக்கள் மரபிசையை முதன்முதலில் பயன்படுத்திய ராப்சன் பின் சீனா, ரசியா, வேல்ஸ், யூதம் என பலவித நாட்டுப்புற இசைகளைக் கற்றுக் கொண்டு பாட ஆரம்பித்தார். பல நாடுகளிலிருக்கும் மொழியியல், அழகியல், மனித ஒருமைப்பாடு மூன்றையும் தனது இசையால் விளக்கி நிகழ்த்தினார்.

ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர். 1927-இல் குடும்பத்துடன் லண்டனில் தங்கி ஒரு கலைஞராகவும், மொழியியல் அறிஞராகவும் வாழ ஆரம்பித்தார்.

பால்ராப்சன்
பால்ராப்சன்

அடிமை உலகிலிருந்து வந்த ராப்சன் இங்கிலாந்தின் வரவேற்பிலும், வசதியிலும் மூழ்கவில்லை. லண்டன் வருடங்களில் சோசலிச அரசியலைக் கற்றுக் கொண்டார். வேல்ஸில் இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து இரண்டறக் கலந்தார். நிறவெறியில்லாமல் வெள்ளையினத் தொழிலாளர்கள், கறுப்பர்களுடன் சேர்ந்து வாழ்வதையும், போராடுவதையும் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு அவரது விடுதலை வேட்கை கறுப்பின மக்களோடு நில்லாமல், தொழிலாளர்கள், பாசிசத்திற்கு எதிராகப்போராடும் மக்கள், தேசங்கள் என விரிந்து சென்றது.

1934-ல் சோவியத் நாட்டில் ராப்சன் மேற்கொண்ட பயணம் சோசலிசத்தின் நடைமுறையை அவருக்குக் காட்டியது. “முதன்முறையாக தன்னை ஒரு நீக்ரோவாக இல்லாமல், மனிதனாக நடத்தியது சோசலிச பூமிதான்”, என்று குறிப்பிட்ட ராப்சன் சோவியத் மக்களுடன் கொண்ட நட்பு அவர் இறப்பு வரை நீடித்தது. ஜெர்மனியிலும், ஸ்பெயினிலும் எழுந்த பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியை, விடுதலை விரும்பும் அனைத்து மக்களும் உருவாக்க வேண்டும் என்பதைப் பிரச்சாரம் செய்தார். பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து ஸ்பெயின் மக்கள் போராடிய காலத்தில் 1938-ஆம் ஆண்டு மாட்ரிட் சென்று மக்களின் போர்க்காலப் பாடல்களை பாடினார்.

அடுத்த ஆண்டில், பாசிசத்திற்கு எதிரான உலகப்போரில் அமெரிக்காவை ஈடுபட வைப்பதையும், தன் இன மக்களின் சம உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பினார். புகழின் உச்சியிலிருந்த ராப்சனை விடுவதற்கு இங்கிலாந்தின் தொழிலாளர்களும், கலைஞர்களும் விரும்பிவில்லை என்றாலும், அவர் கற்றுக் கொண்ட அரசியல், அதன் கடமையை நிறைவேற்ற விரும்பியது. ‘கம்யூனிஸ்ட் ஆதரவாளர்’ என குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளைச் சந்தித்த சார்லி சாப்ளின் அமெரிக்காவை விட்டு லண்டன் வந்த காலத்தில் ராப்சன் அமெரிக்கா திரும்பினார்.

உலகப்போர் முடிந்து, கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகள் அங்கே கொடிகட்டிப் பறந்த காலம். ஏற்கனவே அமெரிக்காவில் முற்போக்கு தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக இருந்த ராப்சன், மீண்டும் அவர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார். கலை உலகில் கறுப்பரென்பதால் புறக்கணிக்கப்படும் கலைஞர்களுக்காகவும் போராட ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சிப் போக்கில் 1948-ஆம் ஆண்டில் ராப்சன் நடவடிக்கைகளை முடக்கும் அரசு பயங்கரவாத இயக்கம் ஆரம்பித்தது.

கம்யூனிசக் கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் – நடவடிக்கைகள் அனைத்தும் வெளிநாட்டின் கைக்கூலிகள் என முத்திரை குத்தி ஒடுக்கப்பட்டன. ‘அமெரிக்க எதிர்ப்பு’ நடவடிக்கைகளை விசாரிக்கும் கமிட்டியும் சட்டமும் முழுவீச்சில் இயங்க ஆரம்பித்தன. ஜனநாயக,முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டிருந்த முற்போக்கு கட்சிக்காக ராப்சன் பிரச்சாரம் செய்து வந்தார். இறுதியில் ‘கம்யூனிஸ்ட்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, செனட் பிரதிநிதிகள் கமிட்டி முன்பு நிறுத்தி விசாரிக்கப்பட்டார். நீ ஒரு கம்யூனிஸ்ட்டா என்ற கேள்விக்கு ஆம் என்றோ, இல்லையென்றோ பதிலளிக்க மறுத்தார். தனது அரசியல் தெரிவைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், சோவியத் நாட்டை எதிர்க்கும் அமெரிக்கப் போரை ஆதரிக்க முடியாது என்றும் முழங்கினார். இத்தகைய பேச்சுக்களை அன்றும் இன்றும் அமெரிக்காவில் கேட்க முடியாது. ராப்சனின் முடிவு அவரது நண்பர்களையே வியக்க வைத்தது. கு-கிளக்ஸ்- கிளான் என்ற வெள்ளை நிறவெறி பயங்கரவாத அமைப்பும் ராப்சனைக் கொல்லப் போவதாக மிரட்டி வந்தது.

தொடர்ச்சியாக 1949-இல் பாரிசில் நடந்த உலக அமைதி மாநாட்டில் “தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படும் அமெரிக்க கருப்பர்கள், தம்மை ஒடுக்கும் சக்திகளுக்காக, ஒரு தலைமுறைக்குள் நமது மக்களுக்கு சமத்துவத்தை வழங்கிய சோசலிச நாட்டை எதிர்த்து போரிடுவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்று ராப்சன் பேசிய பேச்சு ஒரு திருப்புமுனை. கேவலம் ஒரு வாஜ்பாய், அத்வானி, பால்தாக்கரேவை கண்டிக்க வக்கற்றுப் போன நமது கலைஞர்களுடன் பால் ராப்சனை இணைத்துப் பாருங்கள். உலக ரவுடியை அதன் குகையிலிருந்தே எதிர்ப்பது, எவ்வளவு பிரமாண்டமானது, வீரமானது என்பது புரிய வரும்.

ராப்சனது பேச்சை, ஊதிப்பெருக்கி திரித்து அமெரிக்க அரசும், செய்தி நிறுவனங்களும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. கருப்பின மக்களின் ‘மதிப்பு வாய்ந்த’ ஏனைய தலைவர்களும் ராப்சனைக் கண்டிக்க ஆரம்பித்தனர். கருப்பின மக்களின் நலனை ராப்சனது பேச்சு புறக்கணித்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இன்றும் அமெரிக்காவில் கருப்பின உரிமைக்காகப் போராடும் இயக்கங்கள், அரசின் வெளியுறவு ஆதிக்கக் கொள்கையை விமர்சிக்கமாட்டார்கள். அந்த அளவுதான் அவர்கள் போராடுவதற்கான எல்லை, அந்தத் தலைவர்களும் அதை நெஞ்சார ஏற்றுக் கொண்டவர்கள் தான். ஆனால் ராப்சன் ஏற்கவில்லை.

பால் ராப்சன் – நேர்முகம்

மோதலும் முற்றியது. ராப்சன் நாடு திரும்பிய போது 11 கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவரது நண்பர்கள், கலைஞர்கள் பலர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்த அடக்கு முறை பயங்கரவாதத்தின் தொடர்ச்சியில் பலர் வீழ்ந்தனர். வீழாத சிலரில் ராப்சன் முன்னணியிலிருந்தார். அவரது சொந்த ஊருக்குப் போவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிற் சங்கங்களுக்காக, நியூயார்க்கில் பீக்ஸ்கில்லில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி வெள்ளை நிற வெறியர்களால் அரசு உதவியுடன் தாக்கப்பட்டது. ‘எங்கெல்லாம் என் பாட்டை மக்கள் விரும்புகிறார்களோ, அங்கு நிச்சயம் செல்வேன்’ என்று இடியாய் முழங்கினார் ராப்சன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ராப்சன் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு அதிகப்படுத்தியது.

தொலைக் காட்சிகளும், வானொலிகளும் அவரைப் பேட்டியெடுக்க மறுத்தன. செய்தி நிறுவனங்கள் ராப்சனது செய்திகளைத் தணிக்கையிட ஆரம்பித்தன. அவரது இசை நிகழ்ச்சிக்கான அரங்குகள் தருவதற்கு யாரும் தயாரில்லை. கடைகளிலிருந்து அவரது ஒலிப்பேழைகள் திடீரென மாயமாய் மறைந்து போயின.

“நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை” என கையெழுத்திட மறுத்த ராப்சனது, பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. அனைத்து வருமானங்களையும் இழந்த ராப்சன், தனது சொந்த வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருந்தும் தனது கொள்கையை விற்க மறுத்த ராப்சன், “இவை என் உறுதியில் ஆயிரத்திலொரு பங்கைக் கூட குறைக்க முடியாது” என எட்டுத் திக்கும் நிமிர்ந்து அறைக்கூவினார். ‘அமெரிக்க நலனுக்கெதிரான’ நடவடிக்கைகளை விசாரிக்கும் கமிட்டி முன் ‘பொய்யான அமெரிக்கர்களான நீங்கள், உங்களுக்காக வெட்கப்பட வேண்டும்’ எனக் காறி உமிழ்ந்தார். ராப்சனை அடக்க நினைத்த அரசு தனது பயங்கரவாதத்தை எப்.பி.ஐ மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகள் செயல்படுத்தி வந்தது.

பால் ராப்சன் பட்டம்
1919 ரட்கர் வகுப்பில் பட்டம் பெற்ற பால் ராப்சன் (இடது புறம் முதலில்)

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா 4 கண்டங்களிலிருந்தும் பல்வேறு அமைப்புக்கள், கட்சிகள் சார்பாக கண்டனக் குரல்கள் எழுந்தன. ராப்சனை அச்சுறுத்தும் அமெரிக்க அரசை எதிர்த்து உலக இயக்கம் தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மெக்கார்தி யுகம் (கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகள்) முடியும் தறுவாயில், உலக நிர்ப்பந்தம் காரணமாக 1958-இல் ராப்சன் பாஸ்போர்ட் திரும்ப தரப்பட்டது.

மீண்டும் அந்தக் கருப்புக் குயில் தனது விடுதலை இசையை உலகெங்கும் பரப்ப பயணமானது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட காலத்திலும், தனது இசையை ஒலிப்பேழைகள், தொலை பேசி மூலமாக உலகத்தொழிலாளர் இயக்கங்களுக்கும், முற்போக்கு அமைப்புக்களுக்கும் அனுப்பி வந்தார். 1952-இல் கனடாவில் தொழிலாளர் அமைப்பு அவரை அழைத்தது. அமெரிக்க அரசு தடை செய்தது. மீறினால் 5 வருடம் சிறை எனத் தெரிந்தும், ராப்சன் கனடாவை நோக்கிப் பயணமானார். எல்லையில் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டார். அங்கேயே இருநாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் எல்லையிலேயே இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

தடைக்கு முன்னும், பின்னும் அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் வருமானங்கள் அனைத்தும் அகதிகள், தொழிலாளர் அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டன. ஒரு மக்கள் கலைஞனுக்கு இவையெல்லாம் சாதாரண விசயம்தான். இருப்பினும் தடையால் தன் வருமானங்களை இழந்தபோதும் பணம் ஈட்டும் பொருட்டு இசை நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பது அவர் ஒரு மகத்தான மக்கள் கலைஞன் என்பதை உணர்த்தும்.

விடுதலைக்காகப் போராடும் தொழிலாளர்கள், கறுப்பர்கள், காலனிய நாடுகள், கம்யூனிஸ்டுகள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த இசைக் குயில் தனது கடைசி உலக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது. நோய்வாய்ப்பட்ட உடல்நிலையில் 1976-ஆம் ஆண்டு முதல் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இறப்பதற்கு முன் “என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எதுவும் வீணில்லை” எனப் படுக்கையிலும் உறுதியுடன் இருந்த அந்தப் போராளி 1976-இல் மறைந்தார்.

விளையாட்டு வீரராக, வழக்கறிஞராக, நடிகராக, பாடகராக என ஒவ்வொரு துறைக்கும் ராப்சன் மாற நேர்ந்தது. அவருடைய விருப்பத்தினால் அல்ல. எந்தத் துறையிலும் இடம் கொடுக்க விரும்பாத நிறவெறிதான் அவரைப் பல துறைகளுக்குப் பந்தாடியது. இருப்பினும் அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, இறுதியில் ஒரு அரசியல் போராளியாக மாறினார். அவர் நினைத்திருந்தால், ஏதோ ஒரு துறையில் சமரசம் செய்து கொண்டு பொருளீட்டியிருக்கலாம்.

குத்துச் சண்டை முகமது அலி, கூடைப்பந்து ஜோர்டன், ஹாலிவுட்டின் எடி மர்பி, பாப்பிசையின் மைக்கேல் ஜாக்சன் போன்ற கறுப்பர்கள் தத்தம் துறையில் பிரபலமாகி கோடீஸ்வரர்களாகத் திகழ்பவர்கள். ராப்சனும் அப்படி வாழ்ந்திருக்க முடியும். அல்லது ‘மார்டின் லூதர் கிங்’ போல கறுப்பின உரிமைக்குப் போராடுவதோடு நின்றிருக்க முடியும். மாறாக ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், கம்யூனிசத்தையும் நாடிய ராப்சன் தனது வாழ்க்கை இதற்காக மட்டும்தான் என முடிவு செய்தார். அதன் படி அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்தார்.

20 மொழிகள் அறிந்த ராப்சன் அவற்றை ஒரு மொழியியல் அறிஞர் என்பதனால் கற்கவில்லை. பல நாட்டு மக்களுடன் பழகி அவர்கள் பாடல்களை அவர்களது மொழியிலேயே பாட விரும்பி, கற்றுக் கொண்டார். கனடா, பனாமா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் போராட்டங்கள் விழாக்கள், வேலை நிறுத்தங்கள், துப்பாக்கிச் சூடுகள் எதுவாக இருந்தாலும் சென்று கலப்பார்; பாடுவார். பிரெக்ட், பாப்லோநெருடா, ஐசன்ஸ்டின், நசீம் இக்மத் போன்ற சமகால மக்கள் கலைஞர்களுடன் உறவும் நட்பும் கொண்டவர். சோவியத் நாடு மக்களுடன் அவர் கொண்டிருந்த அன்பும், நேசமும் தான் மிகவும் குறிப்பிடத்தக்கது.

ராப்சன் அமெரிக்காவில் உரையாற்றிய மற்றும் இசை நிகழ்ச்சிகளின் ஒளிப்படங்கள் தற்போது அழிக்கப்பட்டு விட்டன. இருக்கும் படங்களிலும் ஒலி அழிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ராப்சனது தபால் தலையை வெளியிட கிளிண்டன் அரசு மறுத்து வருகிறது.

இளம் சோவியத் நாட்டிற்கு ஆதரவாகவும், பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு எதிராகவும், நிறவெறியை ஒழிக்கவும் – சபதம் பூண்டு, தன் வாழ்க்கை முழுவதும் போராடிய அந்த மக்கள் கலைஞனை உலக உழைக்கும் மக்கள் தமது நெஞ்சங்களில் நிறைத்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவால் அழிக்க முடியாது.

________________________________________________________________

பெட்டிச் செய்தி 1

ராப்சன் பேசுகிறார்…

வேல்ஸ் தொழிலாளர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அது வெறும் அழைப்பு மட்டுமல்ல, அதற்கு மேலும் அர்த்தமுண்டு. உங்களுக்குத் தெரியும், இங்கிலாந்தின் அங்கமாயிருக்கும் வேல்சில்தான் கறுப்பு, வெள்ளை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட முடியும் என்பதை முதலில் உணர்ந்து கொண்டேன். அங்கிருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு தொழிலாளர்களுடன் செல்வேன். அவர்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அதையே ‘ப்ரவுட் வேலி’ (PROUD VALLEY) என்ற படத்தில் நடித்துமிருக்கிறேன்…

‘நான் ஒரு அமெரிக்கன். கடல் கடந்து, பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் வீரர்களுடன் கைகுலுக்கிய தாமஸ் ஜெபர்சனைப் போல, கண்டம் விட்டு வாழும் அற்புதமான சோவியத் மக்களுடன் கைகோர்க்கிறேன். இது என் உரிமை, ஒரு அமெரிக்கன் என்பதால்….’’

“மலையின் உச்சியிலிருந்து உலகைப் பார்க்கிறேன். ஆப்பிரிக்கா, கனடா, அனைத்து உலகிலும் என் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் ஏனெனில் மனித இனம் ஒன்றே ஒன்றுதான். நிறம், இனம், பண்பாடு என அடிப்படையான வேறுபாடுகள் எதுவும் கிடையாது. மனித இனம் முழுமையும் அன்புடனும், நேசத்துடனும் வாழ முடியும். என் அனுபவத்தில் அதை உணர்ந்திருக்கிறேன். அப்படி மக்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் மொழியைக் கற்றிருக்கிறேன். அவர்கள் பாடலையும் பாடுகிறேன். மனித ஒருமைப்பாடு ஒரு எளிய விசயம்தான். அதேசமயம் நமது எதிரிகள் அதை விரும்பவில்லை, என்பதையும் அறிவோம். ஏற்கெனவே சொன்னதைப் போல, என் வாழ்க்கையை, அன்றாடம் போராடும் அத்தகைய மக்கள் திரளினருக்குத்தான் கொடுப்பேன். அவர்கள் போராட்டங்களுக்கு உதவி செய்வேன். அதற்காக ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். போராட்டத்தைத் தொடருவேன். அதையே உண்மை எனக் காண்கிறேன்.

ஆகஸ்ட் 16, 1953 –வாஷிங்டன் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசியது.

பால் ராப்சன்
பால் ராப்சன் சோவியத் யூனியனில்

உலக மக்களிடையே அமைதியைப் பிரச்சாரம் செய்தமைக்காக, சர்வதேச ஸ்டாலின் அமைதி விருது கிடைத்தது பற்றி நண்பர்கள் கேட்கிறார்கள்: ‘உங்கள் உணர்வு எப்படி இருந்தது?’ ஏனைய விருது பெற்றவர்களைப் போல, ‘இது மிகப்பெரும் மரியாதை’ என்று வழக்கமாகச் சொல்லலாம். ஆனால் அப்படியில்லை. இந்த விருது வெறும் நன்றி தெரிவிப்பதைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. ஏற்கனவே விளையாட்டு, கலை கறுப்பின மக்களின் சம உரிமைக்கான போராட்டம், தொழிலாளர் உரிமைகள், அமைதிக்கான போராட்டம் போன்றவற்றில் என் பங்கு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது… இந்தப் பரிசு உண்மையிலேயே ஒரு உலக விருது. மிகவும் முக்கியமானது, இந்தப் பரிசை ஒரு தனி நபராக நான் பெற்றுக் கொள்ள வில்லை…

விடுதலை இதழ் ஜனவரி 1953, ஸ்டாலின் அமைதிப் பரிசு பெற்றது குறித்து

“நான் வளர்ந்து பெரியவனாகிய பிறகு, முதன் முதலில் ஒரு மனிதனாக இங்கேதான் உணருகிறேன். நான் ஒரு நீக்ரோ அல்ல: ஒரு மனிதன். இங்கே வரும் முன்னால் இப்படிக் கூட ஒரு விசயம் இருக்கும் என்பதை நம்பவில்லை. என் வாழ்வில் முதன் முறையாக கவுரவத்தோடு நடத்தப்படுகிறேன். ஒரு நீக்ரோ இதை எப்படி உணருவான் என்பதை உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.”

1934 சோவியத் பயண அனுபவத்தை, ரசிய திரைப்பட இயக்குநர் ஐசன்ஸ்டினிடம் – ராப்சன் தெரிவித்தவை.

பெட்டிச் செய்தி 2

நியுயார்க் அருகிலுள்ள பீக்ஸ்கில் பூங்கா. அங்கே கருப்பின மக்களும், யூத தொழிற் சங்கத்தினரும், சமாதானம் விரும்பும் சங்கத்தினரும் 1949 ஆகஸ்ட் 27 அன்று ராப்சன் இசை நிகழ்ச்சியை நடத்த முடிவுசெய்கின்றனர். கூ-கிளக்ஸ்- கிளான் என்ற வெள்ளை நிறவெறி அமைப்பும் அமெரிக்க ‘லீஜியன்’ என்ற ‘முன்னாள் இராணுவவீரர் சங்கமும்’ சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்த விடாமல் கலவரம் செய்கிறார்கள்; தாக்குகிறார்கள். அன்றைய நிகழ்ச்சி ரத்தானது.

‘நானும், எனது மக்களும் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பணிய மாட்டோம்,’ என்று ராப்சன் பதிலடி கொடுத்தார். அடுத்தவாரம் நியூயார்க் மற்றும் பல இடங்களிலிருந்து சுமார் 25,000 மக்கள் ராப்சனுடன் பீக்ஸ்கில் சென்றனர். 2,500 தொழிலாளர்கள் பூங்காவைச் சுற்றி மனிதச் சங்கிலியாகப் பாதுகாப்பு கொடுக்க, இசை நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடந்தேறியது. வெளியே வெள்ளை நிறவெறியர்கள் நிகழ்ச்சி முடிந்து திரும்பியவர்கள் தாக்கினார்கள். நூற்றுக்கணாக்கான மக்கள் படுகாயமடைந்தனர். அரசன் போலீசும், நிர்வாகமும் வேடிக்கை பார்த்தது. வெள்ளைப் பத்திரிகைகளும் இத்தாக்குதல்களை மறைத்தன. உலக முற்போக்கு அமைப்புக்களும், கலைஞர்களும் இத்தாக்குதலைக் கண்டித்தனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அமெரிக்கத் தொழிலாளர்கள் வரலாற்றில் பீக்ஸ்கில் நிகழ்ச்சி, ஒரு ரத்த சாட்சியாகப் பதிந்து விட்டது.

பெட்டிச் செய்தி 3

ஜோ ஹில்லுக்கு நினைவஞ்சலி

வெள்ளையரினத்தில் பிறந்த ஜோஹில், ஒரு தாமிரச் சுரங்கத் தொழிலாளி; அமெரிக்காவின் உட்டா வட்டாரத்தில், சுரங்க முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளிகளைத் திரட்டிப் போராடிய ஒரு தலைவன். அவன் மீது கொலைப்பழி சுமத்திய முதாலாளிகள் தூக்கிலேற்றிக் கொன்றார்கள். அந்த வீரனைப் பற்றி ராப்சன் பாடும் நினைவஞ்சலிப் பாடல்:

நேற்றிரவு,
என் கனவில்
ஜோவைக் கண்டேன்
’நீ இறந்து10 வருடமாயிற்றே’
ஜோவிடம் கேட்டேன்.

இல்லை,
எப்போதும்
எனக்கு மரணமில்லை என்றான்.
தாமிர முதலாளிகள்
உன்னைக் கொன்றார்களே!,
சுட்டு விட்டார்களே,
பதட்டத்துடன் கேட்டேன்.

ஒரு மனிதனைக் கொல்ல
எத்தனை துப்பாக்கிகள்
வேண்டுமானாலும் எடுக்கட்டும்
நான் இறக்க மாட்டேன்
ஒரு போதும் மறைய மாட்டேன்
என்றான் ஜோ.

உயிர் போல் முழுதாய் நின்று
கண்கள் சிரிக்க
பேசினான் ஜோ,

அவர்கள் கொல்ல மறந்தது
எதுவோ,
அது சென்றது

மக்களை அணிதிரட்ட.
சான்டிகோ முதல்
மையின் வரை
ஒவ்வொரு ஆலையிலும்,
தங்கள் உரிமைக்காக
போராடும் தொழிலாளிகள்
இருக்கும் இடங்களிலெல்லாம்
ஜோ ஹில் இருப்பதை
நீங்கள் கண்டுபிடிக்கலாம்
நீங்கள் காணலாம்.

நேற்றிரவு,
என் கனவில்
ஜோவைக் கண்டேன்.

–  வேல்ராசன்

(பால்ராப்சன் நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை.)
____________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 1999
____________________________________________

ஜோ ஹில்லுக்கு நினைவஞ்சலி – யூ டியூப் வீடியோ

எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா

509

ங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ?

வாணக்காரையா
உண்மைப் படமல்ல, மாதிரிக்காக இணையத்தில் எடுக்கப்பட்டது.

இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.

வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.

“ஐயனார்  கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.

“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்க. ஐயனார நான் கும்பிட்டா ஒண்ணும் தப்பில்ல”ன்னு சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.

ஊருகள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.

Ayyanar temple
அய்யனார் கோவில், மாதிரிப் படம்

எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.

எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.

தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.

வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.

வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. மதம் வேறயா இருந்தாலும், “என்னையும் சேத்துத் தானே உங்க சாமி பாத்துக்குது அதுக்கு எதுன்னா நான் செய்யணு”முன்னு முன்வருவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.

வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.

வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.

இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.

“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.

fireworksதுக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.

“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.

வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.

அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.

பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.

சரசம்மா

(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)

ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் !

6

ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம் ! ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆவடியில் உள்ள வேல் டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்துக்கு முடிவு கட்டும் வகையில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் ஆவடி பேருந்து நிலையம் அருகில் 28.12.2013 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கல்லூரியில் மாணவர்களைப் போலவே பேராசிரியர்களும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதையும்  மேலும் கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக வேலையை விட்டு நிற்கும் உரிமை இல்லாமல் அவர்களின் சான்றிதழ்களையும் பறித்துக் கொள்ளும் கிரிமினல் தனத்திற்கும் எதிராகவும் புமாஇமு தொடர்ந்து சுவரொட்டி இயக்கத்தினை மேற்கொண்டது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் புமாஇமுவை தொடர்பு கொண்டு வேல்டெக் என்ற கொள்ளைக் கூட்டத்தின் அயோக்கியத்தனங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதை துணிவோடு வெளி உலகிற்கு கூற வந்தனர். அதன் ஒரு சிறு துளியே இந்த ஆர்ப்பாட்டம்.

முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பு.மா.இ.மு.வின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். நெடுஞ்செழியன் “தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும்  கல் குவாரிகளைப் போல இயங்குகின்றன. அங்கு உள்ள கொத்தடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் இல்லாமல் அடக்கி ஒடுக்கப்பட்டு உள்ளார்களோ அதை விட இன்று பேராசிரியர்களும் மாணாவர்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். அதன் அயோக்கியத்தனத்தின் ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த வேல் டெக் பொறியியல் கல்லூரி. எப்போது கல்வியை கொடுக்க வேண்டிய அரசு தன் கடமையில் இருந்து விலகியதோ, அப்போது கல்வியை ஜேப்பியார், சாராய உடையார் போன்ற சாராய வியாபாரிகளும் பொறூக்கிகளும்  கல்வியை விற்க ஆரம்பித்தனர். அங்கு எப்படி உரிமைகள் கிடைக்கும். இதற்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இப்போது தவறினால் இனி எப்போதும் அதை பேச முடியாது என்ற நிலையும் ஏற்படும்” என்று கூ றினார்.

அடுத்தாக கண்டன உரையாற்றியற்றிய புஜ.தொ.முவின் மாநில இணைச்செயலர் சுதேஷ் குமார் “தனியார் கல்லூரிகளின் முதலாளிகள் தஙகளை எந்த சட்டமும் எதுவுமே செய்யமுடியாது என்ற திமிரில் தொழிலாளர்களை, பேராசிரியர்களை கொத்தடிமை போல பிழிந்து  சக்கையாக்கி பின்னர் தூக்கியெறிகின்றனர். 2008-ல் வேல்டெக் கல்லூரியில் பணியாற்றிய பேருந்து ஓட்டுனர்கள்131 பேர் சங்கம் அமைத்ததற்காக, தங்கள் உரிமைக்காக போராடியதற்காக இக்கல்லுரியின் நிர்வாக இயக்குனரால் வாய்மொழியாக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக உயர் நீதிமன்றம் வரை புஜதொமு சென்று தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த உத்தரவினை  பெற்ற போதும், தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தாமல் அந்த உத்தரவினை தனது கழிப்பறை காகிதமாக பயன்படுத்தும் இந்த நிர்வாக இயக்குனரையும்  நிர்வாகத்தையும்  அதன் அயோக்கியத்தனத்தையும் தொழிலாளி வர்க்கம் கண்டிப்பாக முறியடிக்கும். அப்போது  போலீசு வைத்திருக்கும் தடைகள் எல்லாம் தூள்தூளாகும்” என்று கூறினார்.

இறுதியாக புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர். கணேசன் ” வேல் டெக் என்பது பொறியியல் கல்லூரியா? இல்லை சிறையா?” என்று தனது உரையை தொடங்கி, “சிறையில் எவ்வாறு சாதாரண மனிதன் அவமானத்திற்கும் சித்திரவதைக்கும் உள்ளாகிறானோ அதை விட பல மடங்கு அவமானமும் சித்திரவதையும்தான் வேல்டெக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கிறது. பெயருக்கும் வேடெக், வேல் மல்டி டெக் என்று பல பெயர்களில் சீன் போட்டுக்கொண்டு திரிந்தாலும் அதன் உண்மை நிலையைப் பார்த்தால் அது கல்லூரிக்கூடம் அல்ல, அது பேராசிரியர்களில் உழைப்பினை தினமும் சுரண்டும் கொத்தடிமைக்கூடம், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் வழிப்பறிக்கூடம், பேராசிரியர்களின் சான்றிதழ்களை திருடி வைத்து இருக்கும் கொள்ளைக்கூடமே” என்று வேல்டெக்கின் உண்மை முகத்தை தோலுரித்தார்.

“எவ்வித உள் கட்டுமான வசதியும் செய்யாமல் NAB,NACC,AICTE போன்ற நிறுவனங்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அந்த நிறுவன அதிகாரிகளுக்கு சாராயம் முதல் பெண்களை கூட்டிக் கொடுப்பது வரை அத்தனை அயோக்கியத்தனமான வேலைகளை செய்து வரும் இக்கல்லூரியின்  முதலாளி ரங்கராஜன், நிர்வாக இயக்குனர் கிசோர் குமார், முதல்வர் ஆகியோர் இன்று பேராசிரியர்களை குற்றம் கூற என்ன உரிமை இருக்கிறது?

மாணவர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களை காலை எட்டு மணி முதல் இரவு 7 மணி வரை  அலுவலக வேலையை  செய்ய வைப்பதும் அரசுக்கு பொய்யாக அறிக்கை கொடுக்க பேராசிரியர்களை கட்டாயப்படுத்தியதையும் எடுத்துக்கூறி இதை இழிவென கருதி வேலையை விட்டு நிற்க நினைத்த  சாந்தி, ஜெனீபர், தீபிகா ஆகிய மூன்று பேராசிரியர்களை கல்லூரியிலிருந்து நீக்கியதையும்  இதற்கு எதிராகப் பேசிய சாந்தி என்ற பேராசிரியரைப் பற்றி அவதூறாக  “ஒழுக்கம் சரியிலாதவர் ” என்று அண்ணா பல்கலை கழகத்திற்கு கூறியதையும் அம்பலப்படுத்தினார்

“லட்சக்கணக்கில் பணத்தை கடன் வாங்கி கல்லூரிக்கு அனுப்பினால் அங்கு நம் பிள்ளை எப்படி அறிவாளியாக வரமுடியும்?  பணம் பறிப்பது மட்டுமே இக்கல்லூரியின் வேலை . நம் பிள்ளைகளை மக்குப்பிள்ளைகளாக மாற்றி அனுப்பும் இந்த கல்லூரியை, பேராசிரியர்களை, தொழிலாளிகளை சித்திரவதை செய்யும் இக்கல்லூரியை , இப்பகுதியில் இப்படி உள்ள இந்த கொள்ளைக் கூடாரத்தை துடைத்தெறிவது மக்களின் கடமை. இது போன்ற கல்லூரிகளை அரசுடமையாக்குவதுதான் ஒரே தீர்வு. அதற்கு மாணவர்களும் மக்களும் தனியார் கல்விக்கொள்ளைக்கு ஆதரவாக உள்ள இந்த அரசின் கல்வி தனியார்மயத்துக்கு எதிராகப் போராடும் போதுதான் அது சாத்தியம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

மாணவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்டெக் கல்லூரியால் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக சுயமரியாதையுடன் போராடிவரும் பேராசிரியை சாந்தி கலந்து கொண்டார். அக்கல்லூரியை சேர்ந்த பல மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளிகள் , சிறுவியாபாரிகள் , மக்கள் என  அருகில் நின்ற படி கேட்டுக் கொண்டு இருந்தனர். ஊடகங்களிடம் பேசிய பேராசிரியர் சாந்தி “இக்கல்லூரியில் வேலை செய்த ஒரு பெண் பேராசிரியர் மகப்பேறு காலத்தில் கட்டாயமாக வேலை வாங்கப் பட்டதால் அவரின் குழந்தை இரு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த  கொடுமையையும் பெண் ஆசிரியர்களின் கழிவறை வாயிலில் கூட கேமரா வைத்து கண்காணிப்பதையும்” கூறினார்.

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய  பேராசிரியர் சாந்தியை ” பொம்பளை என்று பார்க்கிறேன், இல்லைன்னா நடக்குறதே வேற” என்றானாம் வேல்டெக் கல்லூரியின் நிர்வாக இயக்குனரான கிசோர். அவன் நடத்திக் காட்டினானோ இல்லையோ சாந்தி தன் சுயமரியாதையை இதோ  தெருவில் நிரூபித்துவிட்டார் புமாஇமு, புஜதொமுவின் துணையோடு. தனியார் கல்லூரிகளில் தன்மானத்தை இழந்து அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருக்கும் மாணவர்களே, பேராசிரியர்களே, தொழிலாளர்களே நமக்கு பாதுகப்பு என்பது அடங்கி கிடப்பது அல்ல, நாம் என்ன செய்யப்போகிறோம்?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!

1

வென்றது தொழிலாளர் போராட்டம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!

தொழிலாளர்களின் உரிமையும் உயிரும் மயிருக்கு சமம்; கொள்ளை லாபம் ஒன்றே நோக்கம் என கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இயங்கி வருகிறது டால்மியா லேமினேட்டர்ஸ் (M.L.டால்மியா குரூப்ஸ்) என்னும் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம்! கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 50 பேரிலும் 30 பேர் மட்டுமே நிரந்தத் தொழிலாளிகள். மீதமுள்ள 20 பேருடன் வடமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் சேர்த்து 470பேரை, காண்டிராக்ட் வைத்துக் கொள்ள லைசென்ஸ் கூட வாங்காமலேயே காண்டிராக்ட் என்ற பெயரில் ஒட்டச்சுரண்டி வருகிறான் டால்மியா நிர்வாகம். இவர்களின் சம்பளமோ ரூ 5,000 – 6,500 வரைதான். அனைவரும் கட்டாயமாக தினந்தோறும் 4 மணி நேரம் ஓவர்டைம் பார்த்தாக வேண்டும். யார் அடிபட்டாலும், செத்தே போனாலும் ஆலை இயங்கிக் கொண்டேதான் இருக்கும். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 20 வயது கூட நிரம்பாத வடமாநிலத் தொழிலாளி மெஷினில் நசுங்கி செத்த போதும் மற்றவர்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டனர். இதற்குப் பெயர் கொத்தடிமைக் கூடாரம் இல்லாமல் வேறென்னவாம்….

‘தென்னிந்தியாவிலேயே சாக்குப்பை தயாரிக்கும் மிகப்பெரிய கம்பெனிகளில் தானும் ஒருவன், அருமையான பணிச்சூழல் நிலவுகிறது, தொழிலாளிகளை விழுந்து விழுந்து கவனிக்கிறோம்’ என தனது வலைத்தளத்தில் பீற்றிக்கொள்ளும் இவன், நடைமுறையில் அனைத்து வகையிலும் சட்டவிரோதமாக செயல்படும் கொடுங்கோல் பண்ணையார் போலவே இருக்கிறான்.

8 மணிநேர வேலை, ESI, PF, சீருடை, காலணி, அடையாள அட்டை, பாதுகாப்பு சாதனங்கள், குறைந்தபட்ச ஊதியம் என எந்த உரிமையும் இல்லாமல் பெரும்பான்மைத் தொழிலாளிகள் வாடி வதங்கிய போது, 30 நிரந்தரத் தொழிலாளிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டு செயல்பட்ட தி.மு.க.வின் தொ.மு.ச. சங்கம் நிர்வாகத்திற்குத் துணையாக நின்றது. மீதமிருந்த 20 தமிழகத் தொழிலாளிகளைக் கூட சேர்த்துக் கொள்ள மறுத்த தொ.மு.ச நிர்வாகிகள், சங்கத்தின் பேரால் இஷ்டம் போலக் கூத்தடித்து வந்தனர். நேர்மை என்பதே இவர்களுக்கு அறவே பிடிக்காத விசயம், அது சக நிர்வாகியாக இருந்தாலும் சரி.

தொழிலாளர் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய தொழிற்சங்கமே தொழிலாளர்களுக்குத் துரோகியாக மாறியதைக் கண்ட தொழிலாளிகள் சிலர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடினர். பு.ஜ.தொ.மு நேர்மையாக இருப்பதற்கு அடிப்படையான அதன் நோக்கத்தையும், அரசியலையும் விளக்கியபோது, அதை ஏற்றுக் கொண்டு உறுப்பினராகினர். படிப்படியாக மற்றத் தொழிலாளிகளையும், தொ.மு.ச.வின் மீது அதிருப்தியாக இருந்தவர்களையும் உறுப்பினராக்கினர்.

நிரந்தரம், காண்டிராக்ட், வடமாநிலத் தொழிலாளி என்ற பேதமில்லாமல் அனைவரையும் சங்கத்தில் சேர்க்கத் தொடங்கினோம். இதை மோப்பம் பிடித்த நிர்வாகம் சங்க உறுப்பினர்களாக இருந்த பெண் தொழிலாளிகளை ஒவ்வொருவராக, ஏதாவது ஒரு பொய்க் காரணம் சொல்லி வேலையிலிருந்து விரட்டும் முயற்சியில் இறங்கவே, இனியும் காலதாமதம் செய்தால் அனைவரையும் வெளியேற்றி விடுவான் என்பதால் உடனடியாக சங்கத்தை அறிவித்து, நிர்வாகத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பினோம்.. சங்கத்தை மதிக்காமல், தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து தனது தொழிலாளார் விரோத நிலைப்பாட்டை அறிவித்தான் நிர்வாகம்.

மேலும் தொ.மு.ச. கைக்கூலிகள், சட்டவிரோதக் காண்டிராக்ட் முதலாளி போன்ற கழிசடைகள் மூலம் மிரட்டலும் விடுத்தான். வடமாநிலத் தொழிலாளிகள் மத்தியில் நமக்கு தொடர்பாக இருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசில் புகார் செய்த மறுநாளே அவர்களை மிரட்டி வேலைக்கு வரவிடாமலும், நம்மோடு தொடர்பு கொள்ள விடாமலும் தடுத்து அறைகளுக்குள் அடைத்து வைத்தனர். அவர்கள் இங்கிருந்தால் மற்ற தொழிலாளிகள் அனைவரையும் சங்கமாக்கி விடுவார்கள் என நடுங்கிய கோழைகள், தனியாக ஒருவனை நியமித்து, 8 தொழிலாளிகளை அவர்களின் சொந்த ஊருக்கே இழுத்துச் சென்று விட்டுவிட்டு வந்தனர்.

இவ்வாறாக சங்க உறுப்பினர்களை வேலைநீக்கம் செய்வது, ஊரை விட்டே விரட்டுவது என பெரும்பான்மை பலத்தைக் குறைக்க முயற்சி செய்தது நிர்வாகம். இந்நிலையில் ACL முன்னிலையில் 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டது. சங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அனுப்பிய கடிதத்தை வாங்காமலேயே திருப்பி அனுப்பினான்; மேலும், இனி எந்த கடிதமும் கொண்டு வரக் கூடாது, வந்தாலும் வாங்க மாட்டோமென தபால்காரரையும் மிரட்டியிருக்கிறான் நிர்வாகம். ரவுடிகளை வைத்து மிரட்டியதற்கெதிராகவும், தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவனது தில்லுமுல்லுகள், சட்டவிரோதப் போக்குகளை தோலுரித்து, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலைகள் தொடர்பான பிற அனைத்துத் துறைகளுக்கும் புகார்கள் அனுப்பப்பட்டது. அனைத்தையும் பணத்தாலடித்து வாய்மூடச் செய்தான்.

“சங்கம் வைத்ததால் வேலை நீக்கம் செய்து பழிவாங்கக் கூடாது” என நீதிமன்றத்தில் நாம் பெற்ற தடையுத்தரவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் காண்டிராக்ட் என்ற பெயரில் வேலைக்கு வைத்திருந்த 14 பேரை வேலையை விட்டே விரட்டி விட்டான். இதற்கிடையில் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வேலை செய்தவர்களைப் போலியான காண்டிராக்ட் முதலாளி ஒருவன் கீழ் கொண்டு வந்த திருட்டு வேலையையும் நிர்வாகம் மேற்கொண்டான்.

தொ.மு.ச.வின் மாவட்டத்தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ வேணுவுக்குக் கார்க் கதவைத் திறந்து விடுவது, எச்சில் டப்பா தூக்குவது என நாயைவிடக் கேவலமாக நடந்து கொள்ளும் கம்பெனி V.P, வேணுவின் துணையுடன் தனது வீரத்தை நாளெல்லாம் உழைக்கும் தொழிலாளிகளிடம் காட்டினான். இவன் கொட்டத்தை இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் ஒருமுறை ஆலை நுழைவுப் போராட்டம் ஒன்றை நடத்தினோம். செக்யூரிட்டிகளை வைத்து நம்மை வெளியேற்றி கதவடைத்தான். நமது சங்க உறுப்பினர்களைத் திரட்டி, அடுத்தகட்டமாக 26-ம் தேதி மீண்டும் ஆலைக்குள் நுழைந்தோம். அன்று முழுவதும் நமது தோழர்கள் அனைவரும் வேலை செய்துவிட்டு வந்தனர்.

அடுத்த நாளும் அனைவரும் ஆலையின் முன் கூடினோம். பு.ஜ.தொ.மு.மாவட்ட நிர்வாகக் குழுத்தோழர்கள் உடனிருந்து வழிகாட்ட, டால்மியா கிளைத் தோழர்கள் 20 பேர் மட்டுமே உறுதியோடு நின்று ஆலைக்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். நிர்வாகமோ வீம்புத்தனமாக, ஏற்கனவே 12 மணிநேரம் வேலை செய்து களைத்த தொழிலாளிகளை வைத்து தொடர்ந்து உற்பத்தியை நடத்த முயற்சி செய்தான். காலை உணவுகூட கொடுக்காமல் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்ட அந்தத் தொழிலாளர்களையும் வேலை செய்ய விடாமல், உள்ளே இருந்த தோழர்கள் மூலம் தடுத்தி நிறுத்தியவுடன் உற்பத்தி முழுவதும் முடங்கியது. முதலாளிகளின் உயிர்நாடியான உற்பத்தியில் கைவைத்தவுடன்தான் நிர்வாகத்திற்கு வலிக்க ஆரம்பித்தது; பேச்சு வார்த்தைக்கும் முன்வந்தான்.

இதற்கிடையில், ஆலைக்குள் வரவிடாமல் தொழிலாளிகளைத் தடுக்கிறார்கள் என காவல்நிலையத்தில் நிர்வாகம் புகார் செய்துள்ளான். 21-ம் தேதி நடந்த பேரணி, கும்மிடிபூண்டி காவல்நிலையம் டால்மியா நிர்வாகத்திற்கு துணை போவது பற்றி எஸ்.பி.க்கு புகார் அனுப்பியது ஆகியவற்றின் விளைவாக, இன்ஸ்பெக்டர் பெரிதாக ஆர்வம் காட்டாமல், “NDLF-னா வில்லங்கம் பிடிச்சவங்கப்பா, சரிசரி அத்துமீறி நடந்துக்கறாங்கனு ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி கொடுத்துட்டு போ” என அனுப்பி விட்டார்.

‘போலீசில் புகார் சொல்லி விட்டோம், பெரிய படையே வந்து அனைவரையும் இழுத்து சென்று விடும்’ என நம்பி ஷிப்டுக்கு வரவேண்டிய எல்லா தொழிலாளிகளையும் வேலைக்கு வரச்சொல்லி இன்சார்ஜ் மூலம் தகவல் அனுப்பினான் நிர்வாகம். ஆனால், பெரும்படைக்கு பதிலாக ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே வந்து தலையைக் காட்டிவிட்டு போகவே, அதுவரை இறுமாப்புடன் இருந்த நிர்வாகம் வேறுவழியில்லாமல் பணிந்தான். மாவட்ட நிர்வாகக் குழுத்தோழர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தான்.

இவன் நம்மைப்பற்றி விசாரித்த அடிப்படையில், ‘இவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள். லெனின் மூலம் ரஷ்யாவில் உருவாகி அங்கு கம்பெனிகளே இல்லாமல் செய்தவர்கள்’ என்றெல்லாம் யாரோ ஓதிவிட, அந்த பயத்திலேயே மிரண்டுபோய், வெடியோசைக்கு மிரண்டு ஓடும் மாட்டைப்போல தாறுமாறாகப் பாய்ந்திருக்கிறான். கடைசியாக போராட்டத்தைக் கைவிடும்படியும், ஜனவரி 5 – ம் தேதி பேச்சுவார்த்தை நடத்திப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுத்தான்.

இத்தனை நாளாக அடங்க மறுத்து திமிராக நடந்த நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டு கடிதம் கொடுத்ததும், ஒரு பெண் தோழர், தான் ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்திருந்த கேசரியை அனைவருக்கும் வழங்க, வெற்றி முழக்கமிட்டனர் சங்கத் தோழர்கள். பேச்சுவார்த்தைக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீராவிட்டால், அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் ஒட்டுமொத்தத் தொழிலாளிகளையும் திரட்டவும் தயாராகி வருகிறது பு.ஜ.தொ.மு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பு.ஜ.தொ.மு.,
திருவள்ளூர் மாவட்டம்.

ஹேக்கர்களை முறியடிக்க முடியுமா ? – வீடியோ

2

BBC Horizon – Defeating the Hackers

ன்றைக்கு அணு ஆயுதங்கள், பேரழிவு ஆயுதங்களுக்கு நிகராக தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான ஆயுதமாக கணினியின் விசைப் பலகை மாறியுள்ளது. கணினி வலையமைப்பை ஊடுருவி தாக்குவதன் (Hack) மூலம் ஒரு தனி நபரின் வாழ்வை மட்டுமின்றி ஒட்டு மொத்த தொழில்துறை, போக்குவரத்து ஒழுங்கமைப்பு, மின் விநியோக அமைப்பு (Power Grid), மின்னுற்பத்தி நிலையங்கள் என அனைத்தையும் முடக்கி ஒரு நாட்டையே ஸ்தம்பிக்க செய்ய முடியும். மேலும், பேரழிவு ஆயுதங்களுக்கு நிகரான விபத்துக்களை ஏற்படுத்த முடியும். இத்தகைய ஊடுருவி தாக்கும் தனி நபர்கள் மற்றும் அரசுகளின், தாக்குதல் நுட்பங்களையும், அவற்றை முறியடிக்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நுட்பங்களையும் பற்றிய பிபிசி-யின் ஆவணப்படம் Defeating the Hackers.

குவாண்டம் கணினி
உலகின் மிக முன்னேறிய குவாண்டம் நுட்ப கணினி.

இன்றைய உலகத்தின் வணிக நடைமுறைகளும், பல்வகை பயன்பாடுகளும் மின்னணு தொழில் நுட்பத்தையும் (Digital Technology), அதற்கான தகவல் தொடர்பு சாதனங்களையும் சார்ந்திருக்கின்றன. சாதாரண கைபேசி, ஸ்மார்ட் போன் தொடங்கி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள், வங்கிக் கணக்குகள், மின்வணிக வலையமைப்புகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகள் மட்டுமின்றி போக்குவரத்து ஒழுங்கமைப்பு, மின் விநியோக அமைப்பு (Power Grid), மின்னுற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள், அணுமின் நிலையங்கள், யுரேனியம் செறிவூட்டும் நிலையங்கள், பெரும் தொழிலகங்களின் தானியங்கி செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் கணினிகளாலும், மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களாலும், அவற்றை உள்ளடக்கிய வலை அமைப்புகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

ஒரு துறை எந்த அளவுக்கு இத்தொழில்நுட்பத்தை சார்ந்திருந்து அதனால் பயனடைகிறதோ அதே அளவு பாதிப்படையக் கூடிய சாத்தியங்களை இத்தொழில்நுட்பம் தன்னுள் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்களும், ஆய்வாளர்களும், குவாண்டம் இயற்பியல் விஞ்ஞானிகளும் உலகின் மிகத் திறன் வாய்ந்த அதிவேகமான கணினியை உருவாக்கியிருக்கும் இந்த காலத்தில் அனைவரும் ஒரு பொதுவான எதிரியை – ஹேக்கர்களை (ஊடுருவலர்களை) – எதிர்கொண்டுள்ளனர்.

கணினி முடக்கப்பட்டது
ஐ-போன், தொடுகணினி, மடிக்கணினி, மின்னஞ்சல், வங்கி கணக்கு, இணைய வணிக வலைத்தளம், அமேசானில் அவருடைய கணக்கு உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் அனைத்தும் ஊடுருவப்பட்டு முடக்கப்பட்டன

உதாரணமாக, வயர்ட் (wired.com) இணைய இதழில் பணியாற்றும் மாட் ஹானான் சென்ற ஆண்டு ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்கானார். அவருடைய ஐ-போன், தொடுகணினி, மடிக்கணினி, மின்னஞ்சல், வங்கி கணக்கு, இணைய வணிக வலைத்தளம், அமேசானில் அவருடைய கணக்கு உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் அனைத்தும் ஊடுருவப்பட்டு முடக்கப்பட்டன. இவற்றில் எதையும் அவரால் பயன்படுத்த இயலவில்லை. அவருடைய எல்லா பயன்பாடுகளையும் முடக்க ஊடுருவலர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 45 நிமிடம் தான். மாட் ஹானானுடைய மின்னணு சாதன வாழ்வை (Digital Life) முடக்கிய ஊடுருவலர்கள் பதின்பருவ இளைஞர்கள். எளிமையான தந்திரங்கள் மூலம் சில அடிப்படை தகவல்களை பெற்று, இணைய சேவைகளில் காணக் கிடைக்கும் பல பாதுகாப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

ஐ-ஓ ஆக்டிவ் நிறுவனத்தை சேர்ந்த ஹேக்கரான பர்னபி ஜாக் (Barnaby Jack) தானியங்கி பணப்பட்டுவாடா (ATM) இயந்திரங்களை வேறொரு இடத்திலிருந்து (remote place) இணையத்தின் மூலம் ஹேக் செய்து வங்கிக் கணக்கு இல்லாமலேயே பணத்தை வெளியிட வைப்பதை செய்து காட்டியுள்ளார். கெட்ட நோக்கம் கொண்ட ஊடுருவலர்களால் கணினி வலையமைப்பின் பாதுகாப்பரண்கள் உடைக்கப்படும் சாத்தியப்பாடுகளை கண்டறிந்து அறிவித்தல், சரிசெய்தல் இவருடைய பணியாகும். அவருடைய அறிவுறுத்தலின் படி வங்கி ஏடிஎம் இயந்திரங்களின் மென்பெருட்கள் யாரும் ஊடுருவ இயலாதவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஊடுருவலர்கள் நம் பணத்தை, அடையாளங்களை, இரகசியங்களை திட்டமிட்ட வழிகளில் திருட முயல்கின்றனர். இதில் கிரிமினல் வேலைகளில், தனிப்பட்ட ஊடுருவலர்கள் மட்டும் ஈடுபடவில்லை. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் பிற உலக நாட்டு அரசு தலைவர்களையும் மக்கள் அனைவரையும், ஒட்டு மொத்த இணையத்தையும் பாரிய அளவில் ஒட்டுக் கேட்பது குறித்த விபரங்கள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது நினைவிருக்கலாம். இது மட்டுமின்றி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு ஆயுதங்கள், பேரழிவு ஆயுதங்களை விடவும் மிக அபாயகரமான மின்னணு தாக்குதல் ஆயுதங்களை மேற்கத்திய அரசுகள் உருவாக்கி வருகின்றன. இன்றைக்கு மிக அபாயகரமான ஆயுதமாக கணினியின் விசைப்பலகை உருவெடுத்து வருகிறது.

பணப்பட்டுவாடா எந்திரம்
தானியங்கி பணப்பட்டுவாடா (ATM) இயந்திரங்களை இணையத்தின் மூலம் ஹேக் செய்து பணத்தை வெளியிட வைக்க முடியும்.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி கழகத்தின் மிரட்டல்கள், அமெரிக்க அரசின் தொடர்ந்த அச்சுறுத்தல்கள் எதற்கும் செவி சாய்க்காத ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் 2010ல் திடீரென பெரும் பாதிப்புக்குள்ளாயின. இதற்கான காரணம் பின்னர் கண்டறிப்பட்டது. ஸ்டக்ஸ்நெட் (Stuxnet) என்ற வைரஸ் ஈரானின் அணுமின் நிலையங்களையும், யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளையும் இலக்காகக் கொண்டு பரப்பி விடப்பட்டு அவை அந்நிலையங்களிலுள்ள தானியங்கி இயந்திரங்களை இயக்கி நிர்வகிக்கும் கணினி அமைப்புகளை தாக்கி இயந்திரங்களை தவறான செயற்பாட்டுக்கு கொண்டு சென்றிருக்கின்றன.

அணு உலை மற்றும் எரிபொருள் செறிவூட்டல் நிலையங்களிலுள்ள இயந்திர அமைப்புகளின் தவறான செயற்பாடுகள் மிக மோசமான அணுவிபத்துக்களைக் கூட விளைவிக்கக் கூடியன என்பதால் ஈரானின் செறிவூட்டல் நிலையங்களின் செயல்பாடுகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னடவை சந்தித்தன.

மற்ற கணினி வைரஸ்களிலிருந்து இந்த ஸ்டக்ஸ்நெட் மாறுபட்டது என்று சிமண்டெக் (Symantec) நச்சுநிரற்கொல்லி (Anti-Virus) நிறுவனத்தின் பாதுகாப்பு நிபுணர்களான எரிக் சியன் (Eric Chien) லியம் முர்சு (Liam O’Murchu) தெரிவிக்கின்றனர். ஸ்டக்ஸ்நெட் எல்லா கணினிகள் வழியாகவும் பரவினாலும் தாக்குதல் இலக்கை அடையும்போது மட்டும் அதன் நாச வேலையை துவக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

பிற வைரஸ்கள் கணினியின் பாதுகாப்பரண்களை ஏமாற்ற போலி குறியீட்டெண்களை பயன்படுத்தி தன்னை அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளாக காட்டி கணினியில் உட்புகுந்து தன்னை நிறுவிக்கொள்கின்றன அல்லது கணினி மென்பொருட்களின் பூஜ்ஜிய நாள் (Zero Day) எனப்படும் யாருக்கும் இது வரை தெரியாத ஓட்டைகளை பயன்படுத்தி உட்புகுகின்றன.

எந்திரங்களை நிர்வகிக்கும் சிறு கணினிகளும், அதன் மென்பொருள் அமைப்புகளும் ஸ்டக்ஸ்நெட் வைரஸின் குறிப்பான தாக்குதல் இலக்குகளாகும். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவதற்காக ஆலை நிர்வாகம் இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதாலும், பாதுகாப்பு சென்சார்களை செயலிழக்க வைப்பதாலும் ஏற்படும் விபத்துக்களால் ஏராளமான தொழிலாளர்கள் உயிரையும், உறுப்புகளையும் இழப்பதை நாமறிவோம். இந்த ஸ்டக்ஸ்நெட் வைரஸின் மூலம் தொலைதூரத்திலிருந்தே இயந்திரங்களை கட்டுப்படுத்தும் கணினிகளை ஹேக்கர்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாரிய சேதங்களை உண்டாக்க முடியும்.

ஒரு நாட்டின் போக்குவரத்து ஒழுங்கமைப்பு, மின் விநியோக அமைப்பு (Power Grid), மின்னுற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், அணுமின் நிலையங்கள், யுரேனியம் செறிவூட்டும் நிலையங்கள், பெரும் தொழிலகங்களின் தானியங்கி செயல்பாடுகள், வங்கிச்சேவை வலையமைப்பு என அனைத்தையும் முடக்கிவிட, தவறாக செயல்பட வைத்து ஸ்தம்பிக்க வைப்பதை நினைத்துப்பாருங்கள்.

எரிக் சியன், லியன் முர்ஸ்
எரிக் சியன், லியம் முர்ஸ்

இந்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் அமெரிக்க-இஸ்ரேல் உளவு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்தக் குற்றச்சாட்டை இவ்விரு நாடுகளும் இதுவரை ஏற்கவோ, மறுக்கவோ செய்யவில்லை என்றாலும், இவ்வளவு திறன் வாய்ந்த தெளிவான நோக்கம் கொண்ட சோதித்து உறுதி செய்யப்பட்ட வைரசை சாதாரண ஹேக்கர்களால் உருவாக்கியிருக்க முடியாது என்கின்றனர் எரிக் சியனும், லியம் முர்சும்.

மின்னணு தொழில்நுட்பத்தில் நடைமுறையிலுள்ள சாதனங்களில் தகவல்களை சேமிக்கவும் செயலாக்கவும் பிட் எனப்படும் இரும எண்முறை (Binary number) பயன்படுத்தப்படுகிறது. ஒரு பிட் (bit) ஒரு நேரத்தில் 0 அல்லது 1 ஆக மட்டுமே இருக்கும்.  இச்சாதனங்கள் நாம் சேமிக்கும், பரிமாறிக்கொள்ளும், செயலாக்கும் ஒவ்வொரு எழுத்தையும், எண்ணையும் அதற்கொத்த 32 அல்லது 64 இலக்கங்களை கொண்ட 0, 1-களாக மாற்றிய பின்னரே செயலாற்றுகின்றன.

இன்றைய இணைய தொழில்நுட்பத்தில் ரகசிய தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போது அவை முதலில் தகவல்கள் சங்கேத குறியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. பொது திறவுகோல் வழிமுறையை (Public-Key Algorithm) பயன்படுத்தி குறியீட்டெண்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த தகவலை பெறும் மறுமுனையிலுள்ள கணினி அல்லது சாதனம் அதே குறியீட்டெண்ணை பயன்படுத்தி குறிநீக்கம் செய்தால் தான் உண்மையான தகவலை பெறமுடியும். உதாரணமாக இரண்டு பகா எண்களின் (Prime Numbers) பெருக்கல் தொகையை கொண்டு குறியீட்டெண்ணை அமைப்பது இன்று பயன்படுத்தப்படும் சங்கேத குறியீட்டு முறையாகும். பகா எண்களின் பெருக்குத் தொகையிலிருந்து அதை உருவாக்கிய இரண்டு பகா எண்களையும் கண்டறிவது முன் கூட்டியே அந்த எண்களை தெரியாதவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கக் கூடிய கணித செயல்பாடாகும். எண்களின் இலக்கங்கள் அதிகமாக அதிகமாக அவற்றை கண்டுபிடித்து உடைக்கத் தேவைப்படும் காலமும் பல லட்சம் ஆண்டுகளாக அதிகரிக்கிறது. இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் கணினிகளால் இந்த குறியீட்டெண்களை கண்டுபிடித்து உடைக்க இயலாது.

பகா எண்
மிகப்பெரிய பகா எண் அச்சில்.

ஆனால், பகா எண்களின் பெருக்குத் தொகை அடிப்படையிலான சங்கேத குறியீட்டை வேகமாக உடைப்பதற்கு குவாண்டம் கணினி என்ற புதிய தொழில்நுட்பம் வழி செய்கிறது. குவாண்டம் இயற்பியல் அடிப்படை விதிகளின் படி எலக்ட்ரான், போட்டான் (Photon) போன்ற அடிப்படை பொருட்துகள்கள் ஒரே நேரத்தில் சாத்தியமான அனைத்து நிலைகளிலும் இருக்கும். அதாவது ஒளியின் துகளான போட்டான் ஒரே நேரத்தில் அதன் இரு சாத்திய நிலைகளான அலையாகவும், துகளாவும் இருக்கும். அடிப்படை துகள்களின் இப்பண்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் குவாண்டம் கணினியில் ஒரு பிட் என்பது ஒரே நேரத்தில் 0 அல்லது 1 ஆகவோ அல்லது இரண்டுக்கும் நடுவிலுள்ள எந்த ஒரு மதிப்பிலுமாகவோ இருக்கும். இது குபிட் (qbit) எனப்படுகிறது.

இக்குவாண்டம் கணினிகளில் குபிட் 0, 1 இரண்டுமாக இருக்கும் பண்பு ஒரே நேரத்தில் பல கணக்கீடுகளை சாத்தியமாக்குவதால், குறியீட்டு எண்களை உடைப்பதற்கான கணக்கீடுகளை பல மடங்கு துரிதமாக்கி குறியீட்டு வழிமுறையை உடைக்க வல்லவை.

ஆனால் குவாண்டம் குறியீட்டு வழிமுறை இதற்கு தீர்வை வழங்குகிறது. குவாண்டம் விதிகளின் படி ஒரு துகளை பார்வையாளர் பார்க்கும் போது அதன் இயல்புகள் மாற்றமடைகின்றன. எனவே வேறு எவரேனும் தகவலை இடைமறித்து பார்த்தால் அதை அனுப்புநரும் பெறுநரும் அறிந்து கொள்ளவும் முடியும்.

இவ்வளவு உறுதியான சங்கேத கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் மற்றைய எல்லா குறியிடும் வழிமுறைகளை போலவே இதிலும் ஒரு அபாயமிருக்கிறது. பயனாளரை ஏமாற்றி அவரது கடவுச் சொல்லை அறிந்து கொள்ள முடிவது எல்லா ரகசிய அமைப்புகளிலும் உள்ள பலவீனம்.

குவாண்டம்
குவாண்டம் ஆய்வாளர்கள்

ஒரு ஊடுருவலர் தன்னை பெறுநராக போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு பெறுநரின் ரகசிய அடையாளங்களை பெற்றுவிட முடியும். கைரேகை, கருவிழி போன்ற ஒருவரது பிரத்யோகமான அடையாளங்களையும் ஸ்கேனர்களை ஊடுருவுதல் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு தீர்வாக பிறரால் திருட இயலாத ஆழ்மன பதிவுகளை கொண்டு கடவுச்சொல்லை (Password), குறியீட்டெண்களை உருவாக்கி பயன்படுத்தும் புதிய குறியிடும் வழிமுறையை ஸ்டான்போர்டு ஆய்வு நிறுவனத்தை (SRI International) சேர்ந்த ஆய்வாளர் பாட்ரிக் லிங்கன் (Patrick Lincoln) முன் வைக்கிறார். இத்துறையில் ஆய்வு செய்து வரும் அவர் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் சில தானியக்க செயற்பாடுகள் பிரத்யோகமான வரிசை முறையில் (Pattern) சேமிக்கப்படுகின்றன என்கிறார். உதாரணமாக மிதிவண்டி ஓட்டுவது, நீந்துவது போன்றவற்றை நாம் கற்றிருந்தாலும், அதை எப்படி செய்கிறோம் என்று நம் வெளி மனதுக்கு தெரிவதில்லை. இந்த ஆழ்மன பதிவுகளை கொண்டு குறியிடும் வழிமுறையை பயன்படுத்தும் போது அவற்றை ஊடுருவி போலியாக அடையாளப்படுத்தி பயனுற முடியாது.

பொதுவாக தானியங்கி இயந்திரங்களை நிர்வகிக்கும் கணினி அமைப்புகள் பாதுகாப்பு கருதி தனிப்பட்ட வலையமைப்புடனே (Intranet) இணைக்கப்பட்டிருக்கும். பொது வலையமைப்பான இணையத்தில் இணைக்கப்பட்டிருக்காது. உதாரணமாக உயர்பாதுகாப்பான அணு உலை, எரிபொருள் செறிவூட்டல் நிலைய கணினிகள் வெளியுலக தொடர்பில்லா வலையமைப்புடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஆயினும், சி.டி, பேனா நினைவகம் (Pen Drive) போன்ற கருவிகளின் மூலமும் இந்த வைரஸ் பரவுமென்பதால் அவற்றின் மூலம் எளிதாக தனது இலக்கை சென்றடைகிறது.

ஸ்டக்ஸ்நெட் ஈரானில் அழிப்பட்டிருக்கலாம், ஆனால் அது உலகின் கோடிக்கணக்கான கணினிகளில் பரவியிருக்கிறது. அவற்றைக் கொண்டு எப்போது வேண்டுமானாலும், எந்த இலக்கையும் குறி வைத்து அதை உருவாக்கிய ஹேக்கர்கள் தங்களது தாக்குதல்களை நடத்தலாம்.

21ம் நூற்றாண்டின் நவீன போர்க்கருவிகள் இந்த சைபர்- ஆயுதங்களாகும். ஒருபுறம் தொழில்நுட்ப வல்லுநர்களும், ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் இவற்றை எதிர்கொண்டு பாதுகாப்பை வலுப்படுத்த செயலாற்றி வருகின்றனர். ஆயினும் முதலாளித்துவ சமூகம் தன்னுடைய அழிவுக்கு தானே குழிபறித்துக் கொள்வது போல இந்த தொழில் நுட்ப புரட்சியிலும் முதலாளிகளுக்கெதிரான போராட்டமாக ஹேக்கர்களும் எதிர்காலத்தில் காத்திரமாக பங்களிப்பு செய்வர். சமூகத்தில் நடக்கும் திருட்டு, கொள்ளை போல இணையத்திலும் நடக்கும் நடவடிக்கைகள் தனி ரகம். இந்த ரக ஹேக்கர்களை விட அரசியல் ரீதியான அதுவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் போராளி ஹேக்கர்கள்தான் வருங்காலத்தில் இவர்கள் அஞ்சும் வகையில் இருப்பார்கள். முதாளிகளுக்கிடையேயான போட்டி கூட இந்த ஹேக்கர் தடுப்புமுறைகளில் பிரச்சினை ஏற்படுத்தும்.

  மார்ட்டின்

வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை

8

06-scavenging-1கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் “மங்கள்யான்” விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில். இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பீகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளூராட்சி நிர்வாகம் தொடங்கி ரெயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மைய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாக”க் குறிப்பிடுகிறது. “இந்தப் புள்ளிவிவரம் ரெயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்படவில்லை” எனக் குற்றஞ்சுமத்தும் அரசுசாரா அமைப்புகள், அத்தொழிலாளர்களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன.

சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சோல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரா, வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குள் இறங்கி அடைப்பை நீக்கும் ‘பொறுப்பை’த் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது சுமத்தியிருக்கும் இந்தியச் சாதி சமூக அமைப்பு, மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது சுமத்தியிருக்கிறது.

06-scavenging-6தெருவில் சாக்கடைத் தண்ணீர் வழிந்தோடினால், அதில் கால்படாமல் லாவகமாகத் தாண்டிச் செல்லுகிறோம். வீட்டிற்குள் குழந்தைகள் மலம் போய் விட்டால், அதைத் தூக்கிப் போடுவதற்குக் கூட அருவெறுப்பு அடைகிறோம். அப்படியிருக்கையில் நம்மைப் போன்ற சகமனிதன் மலமும் கழிவு நீரும் பொங்கி வழியும் சாக்கடைக்குள் இறங்குவதையும், யாருடைய மலத்தையோ கையால் வழித்துக் கூடைக்குள் போட்டுக் கொண்டு அதைத் தலை மேல் வைத்து எடுத்துச் செல்வதையும் கண்டு அதிர்ந்திருக்கிறோமா? இந்தத் தொழிலை சாதிக் கட்டுப்பாடு-கட்டாயத்தின் கீழ் செய்துவரும் அந்தத் தாழ்த்தப்பட்டோரின் மனோநிலையை அறிந்து வைத்திருக்கிறோமா?

“என்னுடைய உடம்பின் ஒவ்வொரு அங்கமும் நாறுகிறது; பலமுறை குளித்த பிறகும் நாறுகிறது. என்னால் சோற்றில் கை வைக்க முடியவில்லை; எனக்கு வேறு எந்த வேலையாவது கொடுங்கள். தயவு செய்து இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள்” என்கிறார், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மலம் அள்ளும் தொழிலாளி சரசுவதி. அவர் மலத்தை அள்ளிக் கொண்டு வரும்பொழுது ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்கள், “இன்று நீ நடிகை கார்தீனா கைஃப் போல இருக்கிறா” எனக் கேலி பேசுவார்கள். “அதைக் கேட்டும் கேட்காதது போல நான் நடந்து செல்வேன்” என்று அன்றாடம் தனது மனது படும் வலியை விவரிக்கிறார், சரசுவதி.

இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் மோடி, “வால்மீகி சாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர்” எனச் சாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். நம்முள் பலர் இந்தளவிற்கு வெளிப்படையாகக் கேவலமாக நடந்து கொள்வதில்லை என்றாலும், அவர்கள் நம்மை நெருங்கிவிடாதபடி தள்ளித்தான் வைத்திருக்கிறோம். அவர்களின் நிலை குறித்து அக்கறையற்று, சோரணையற்று நடந்து வருகிறோம்.

***

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (துப்புரவு தொழிலாளர் இயக்கம்) எனும் அமைப்பு கையால் மலம் அள்ளும் தொழிலை முற்றிலுமாகத் தடை செயக் கோரும் போராட்டங்களை 1980-களின் தொடக்கத்தில் எடுத்தது. இப்போராட்டங்கள் தொடங்கி 13 ஆண்டுகள் கழித்து, 1993-இல்தான் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது, மைய அரசு. இச்சட்டத்தைப் பற்றி ஒரே வரியில் சொன்னால், பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக் கூடாது என்பதுதான் மைய அரசின் நோக்கமாக இருந்தது.

பாதாளச் சாக்கடை
தமிழகத்தில் கடந்த 30 மாதங்களில், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிய பொழுது விஷவாயு தாக்கி இறந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை முப்பதைத் தொட்டு விட்டது.

கையால் மலம் அள்ளுபவரைப் பணிக்கு அமர்த்துபவருக்கு ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என இச்சட்டம் பூச்சாண்டி காட்டினாலும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு துறையும் பொறுப்பாக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதாக எந்தவொரு அதிகாரி மீதும் குற்றஞ்சுமத்தவும் முடியாது; தண்டிக்கவும் முடியாது. இப்படிப்பட்ட பல்வேறு ஓட்டைகளுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதால், பெரும்பாலான மாநிலங்களும், மைய அரசின் ரயில்வே துறை, பாதுகாப்புத் துறையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இத்தகைய மோசடித்தனங்களின் விளைவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உலர் கழிப்பறைகள் இருந்து வருவது தடை செயப்படவுமில்லை; கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியதாக ஒருவர் கூடத் தண்டிக்கப்படவுமில்லை.

இச்சட்டம் அதன் இயல்பிலேயே அக்கறையற்றும் அலட்சியமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியும், அச்சட்டத்தைத் திருத்தம் செய்யக் கோரியும் துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன் உச்சநீதி மன்றத்தில் 2003-ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடுத்தார். மைய அரசு கடந்த பத்தாண்டுகளாக வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்தேயொழிய, சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய முன்வரவில்லை.

இதனிடையே சென்னையைச் சேர்ந்த “பாடம்” பத்திரிகையின் ஆசிரியர் நாராயணன், கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செயக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” என எச்சரித்தது. இதே போல குஜராத் உயர்நீதி மன்றமும் மைய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துத் தீர்ப்பளித்தது.

இப்பிரச்சினையில் அடுத்தடுத்து வழக்குகளையும், நீதிமன்றக் கண்டனங்களையும் சந்தித்த மைய அரசு, இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடும், துப்புரவுப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டிருப்பதன் பின்னணியிலிருந்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. பழைய கள்ளு புதிய மொந்தை என்பதைத் தாண்டி இப்புதிய சட்டமும் இந்த இழிந்த தொழிலை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, அதனை மலினமான வழிகளில் நவீனப்படுத்தி, 21-ஆம் நூற்றாண்டிலும் தொடருவதை உத்தரவாதப்படுத்துகிறது.

ரயில்வே துப்புரவு தொழிலாளர்
ரயில்வே துறையில் நவீனமான கருவிகளைப் பயன்படுத்திக் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதாகத் துணிந்து பொய் சொல்கிறது மைய அரசு.

உலர் கழிவறையை நவீனப்படுத்தி விட்டால் அது பூஜை அறையாகி விடுமா? ஆனால், அரசோ கையால் மலம் அள்ளும் தொழிலாளியிடம் ஒரு கருவியைக் கொடுப்பதன் மூலம் அத்தொழிலின் இழிவைத் துடைத்துப் போட்டு விட்டதாகச் சாதிக்க முயலுகிறது. துப்புரவுப் பணிகளை காண்டிராக்டு எடுத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களுக்கு ஒரு கையுறையையும், கோட்டு ஒன்றையும் மாட்டி விடத் தவறுவதில்லை. அது போல சட்டமும் கையுறையைப் போட்டுக் கொண்டு மலத்தை அள்ளும் யோசனையை முன் வைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு அரிசன் என்ற நாமகரணம் சூட்டி காந்தி ஏய்த்ததற்கும் இதற்கும் எந்த வேறுபாடு கிடையாது. இந்தப் பாதுகாப்பு கவசத்தை மாட்டிக் கொண்டு உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளியைக் கையால் மலம் அள்ளும் தொழிலாளியாக வரையறுக்க முடியாது எனக் கூறுகிறது, இப்புதிய சட்டம்.

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திவரும் மிகப் பெரிய குற்றவாளி மைய அரசின் ரெயில்வே துறைதான். ஆனால், அத்துறை இந்த வேலையை அயல்பணி ஒப்படைப்பின் மூலம் காண்டிராக்டு தொழிலாளர்களைக் கொண்டு நடத்தி வருவதால், எத்துணைத் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரத்தைத் திரட்டுவது கூடக் கடினமாகி விட்டது என்கிறார், துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன். இதற்கேற்ப புதிய சட்டமும் ரெயில்வே துறையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பல்வேறு நவீன சாதனங்களைக் கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதால் அவர்களைக் கையால் மலம் அள்ளுபவர்களாகக் கருத முடியாது எனச் சாதிக்கிறது.

விஷவாயு
திருச்சி நகரில் பாதாளச் சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி இறந்து போன ராஜூ, பாஸ்கர் என்ற இரு தொழிலாளர்களின் சடலங்கள். (கோப்புப் படம்)

ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளை நவீனமான உயிரிக் கழிப்பறைகளாக (Bio-toilets) மாற்றுவதற்கு எந்தக் காலக்கெடுவும் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. அதனை ரெயில்வே துறை முடிவு செய்து கொள்ளலாம் எனப் பொறுப்பைக் குற்றவாளியிடமே ஒப்படைக்கிறது. அனைத்திற்கும் மேலாக, மைய அரசு விரும்பினால் இச்சட்டத்தைக் குறிப்பிட்ட பகுதியிலோ துறையிலோ நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கலாம் என்ற விதியைச் செருகி, இந்த இழிதொழிலை ஒழிக்கும் நோக்கமெல்லாம் தனக்குக் கிடையாது எனப் பறைசாற்றி விட்டது.

செப்டிக் டாங்குகளுக்குள்ளும், பாதாளச் சாக்கடைகளுக்குள்ளும் இறங்கி அடைப்புகளை நீக்குவதென்பது கையால் மலம் அள்ளுவதை விட அருவெறுக்கத்தக்கது, அபாயகரமானது. தற்சமயம் பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சுத்தம் செய்வதற்கு இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டுதான் தொழிலாளர்கள் அதற்குள் இறங்குகிறார்கள். குழிக்குள் மீத்தேன் வாயு உள்ளதா எனப் பரிசோதிப்பதற்கு தீக்குச்சியைக் கொளுத்திப் பார்ப்பதைத் தாண்டி, வேறெந்த விதமான நவீன முறைகளும் கையாளப்படுவதில்லை. பல இடங்களில் இந்தத் தீக்குச்சி கொளுத்தும் சோதனைகூட நடைபெறுவதில்லை. அதிகார வர்க்கத்தையும் இந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் காண்டிராக்டர்களையும் கேட்டால், இவர்களுக்குச் சாராயம்தான் ஒரே பாதுகாப்புக் கவசம் என எகத்தளமாகப் பதில் அளிக்கிறார்கள்.

பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்கள் ஒன்று விஷவாயுவிற்குப் பலியாகும் அபாயத்தைச் சந்திக்கிறார்கள்; அல்லது நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கும் தொழிலாளர்களோ பல்வேறு சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், வயிற்றுப் புற்று நோயால் தாக்கப்பட்டுச் சிறுகச்சிறுக இறக்கிறார்கள். புதிய சட்டமோ அபாயகரமான இந்தத் தொழிலை இயந்திரமயமாக்குவது பற்றியோ, தற்சமயம் அத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது பற்றியோ, அவர்களுக்குத் தொடர் மருத்துவ உதவிகள், நிவாரண உதவிகள் வழங்குவது பற்றியோ பேச மறுக்கிறது. மாறாக, சட்டத்தால் வரையறுக்கப்படும் பாதுகாப்புச் சாதனங்களை வழங்க வேண்டும் என மொட்டையான விதியை மட்டும் முன்வைக்கிறது.

கண்டன ஆர்ப்பாட்டம்
கையால் மலம் அள்ளும் இழிவை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி, “மலக்கூடையைக் கொளுத்துவோம்” என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

கடந்த முப்பது மாதங்களில் தமிழகத்தில் மட்டும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் பொழுது விஷவாயு தாக்கி இறந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை முப்பதைத் தொட்டுள்ளது. இத்தொழிலாளர்களுள் பெரும்பாலோர் எந்த விதமான பயிற்சியும் அளிக்கப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்கள். அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்கு, ஒப்பந்த நிறுவனங்களின் இலாபவெறிக்குப் பலியான இத்தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதற்காக எந்தவொரு அதிகாரியும் ஒப்பந்ததாரரும் தண்டிக்கப்படவில்லை என்பதும் கண்கூடு. தனியார்மயம் துப்புரவுப் பணியில் எந்தவொரு நவீனமயத்தையும் கொண்டு வரவில்லை என்பதோடு, அப்பணியாளர்களைப் பலிகிடாக்களை விடக் கேவலமான நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது என்பதே உண்மை.

சாவுக்குத் தப்படிக்க மறுக்கும் தாழ்த்தப்பட்டோரை, செத்த மாடுகளை அகற்றும் இழிதொழிலைச் செய்ய மறுக்கும் தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவது, கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற அச்சுறுத்தல்கள் மூலம் அவர்களை அந்த இழிதொழில்களைச் செய்ய வைக்க ஆதிக்க சாதி வெறியர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். மைய அரசோ கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கக் கோரும் தாழ்த்தப்பட்டோரை விடுவிப்பதற்குப் பதிலாக, நளினமான, நுண்ணியமான வழிகளில் அந்தத் தொழிலைத் தொடரும்படி நிர்பந்திக்கிறது. தீண்டாமையைப் பச்சையாகக் கடைப்பிடிப்பதற்கும், நளினமாக, நுண்ணியமான வழிகளில் கடைப்பிடிப்பதற்கும் இடையில் ஏதாவது வேறுபாடு இருக்க முடியுமா? கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.

– திப்பு
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

அசோக் லேலாண்டில் தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம் !

21

தொழிலாளி செத்தால், அதிகாரியின் குடும்பம் பாதிக்குமா?

ஒசூர்- அசோக் லேலாண்டில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலைக் கண்டித்த தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம். இது லேலாண்டின் சட்டவிரோத லேஆப்பை திசைத் திருப்பும் சதித்திட்டம்!

சூரில் உள்ள அசோக் லேலாண்டு ஆலை 2 ல் தொடர்ந்து உற்பத்தி முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏ.எல்.டி.எஸ். என்ற நிமிட உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 480 நிமிடங்கள், ஒரு நிமிடத்தில் தொழிலாளி எல்லா நொடிகளிலும் இயந்திரத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முறையில் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியும் நவீன ஒடுக்குமுறையாக இந்த ஏ.எல்.டி.எஸ். உற்பத்தி முறை கொண்டுவரப்பட்டது அதன் பின்னர் தொழிலாளர்கள் சிறுநீர் கழிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த அடக்குமுறைக்கு பின்னர் பல தொழிலாளர்கள் பலவிதமான உடல், மன பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

தொழிலாளர் விவாதம்
இச்சம்பவத்தின் போது கூடிநின்று வாக்குவாதத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்

லேலாண்டு நிர்வாகம் இவ்வாலையில் பெயின்ட் பிரிவில் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் இயந்திரத்திற்கு அருகில் 6 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளத்தை தோண்டி இருந்தது. இதனை மூட வேண்டும் என அப்பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் கோரி ஆலை நிர்வாகமும் அதனை மூட ஏற்றுக் கொண்டது. ஆனால், அதனை மூடுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் இறங்கவில்லை.

சென்ற 23-12-2013 அன்றுவரை இந்த பள்ளம் மூடப்படாமல் இருந்தது. இப்பிரிவில் பணிபுரியும் தோழர்.பரசுராமன், (மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு.) இப்பள்ளத்தில் விழ இருந்தார். ஆனால், சுதாரித்துக் கொண்டதால் இது தவிர்க்கப்பட்டது. அடுத்து 10.20 மணிக்கு அங்கு வேலை செய்து கொண்டிருந்த பயிற்சி தொழிலாளி தினேஷ் அப்பள்ளத்தில் தலைகுப்பற விழுந்தார். விழுந்தவர் உடனடியாக மயக்கமடைந்தார். உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி சென்று அந்த தொழிலாளியை பள்ளத்தில் இருந்து தூக்கி மேலே எடுத்து அவருக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, அப்பிரிவின் மேலாளர் ஜெயகாந்தன் என்பவர், நிலைமையை புரிந்து கொண்டு “இங்கு என்ன கூட்டம். உடனே எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க. நான் பார்த்துக்கறேன்” என்று தொழிலாளர்களை விரட்டத் தொடங்கினார். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தோழர்.பரசுராமன், ஜெயகாந்தனின் இந்த செயலைக் கண்டித்தார்.

“எல்லாரையும் போ, போனு விரட்டுற நீ வந்து தொழிலாளியை காப்பாத்துவியா? இந்தக் குழிய மூடச் சொல்லி எத்தன நாளாவது. இன்னைக்கு வரைக்கும் மூடுனியா? பிறகு இப்ப வந்து தொழிலாளி கீழ கெடக்குறாரு, நான் பாத்துக்குறனு நீ சொல்றீயே, என்னத்த பாத்துக்கப் போற?” என்று கேட்டார்.

“இதைப்பத்தியெல்லாம் நீ பேசாதே” என்று திமிரடியாக பதிலளித்துள்ளான் ஜெயகாந்தன்.

அத்திரமுற்ற தோழர், “கொஞ்சம் தவறிப் போயி இந்த தொழிலாளி இறந்திருந்தா, இவங்க குடும்பத்துல இருக்குறவங்க கதி என்ன? தொழிலாளி செத்தா அவரும் அவங்க குடும்பமும் தான் பாதிக்குது, அவர் மனைவிதான் தாலியறுத்து அவமானப்படுத்தப்படுறா? அவங்க குழந்தைங்கதான் வீதியில நிற்குது? நீயா பாதிக்கப்பட போற? உங்க குடும்பமா பாதிக்கப்பட போவுது? ” என்று ஆவேசமாக அந்த அதிகாரியிடம் பேசினார்.

பிரச்சனையை திசைதிருப்ப, “என் குடும்பத்தை பத்தி பேசாதே” என்றான் அந்த அதிகாரி.

“உன் குடும்பத்தை பத்தி எவன் பேசுனான். நீ காசு சம்பாதிக்க, புரமோசன் வாங்க, நீ செத்தா பரவாயில்லை. உன் குடும்பம் பாதிச்சா பரவாயில்லை. தொழிலாளி ஏன் சாகணும். தொழிலாளி குடும்பம் ஏன் பாதிக்கப்படனும்” என அந்த அதிகாரிக்கு எதிராக கேள்வி எழுப்ப, சக தொழிலாளர்களும் சேர்ந்து அந்த அதிகாரியை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மூடப்பட்ட பள்ளம்
இப்பிரச்சனைக்குப் பின்னர் தொழிலாளி விழுந்த குழியையும் அருகில் உள்ள பிற குழிகளையும் கிரில் மற்றும் இரும்பு தகடுகள் கொண்டு மூடியுள்ளனர்.

ஏ.எல்.டி.எஸ். உற்பத்தி முறை திணிக்கப்பட்ட பின்னர்,ஒரு நிமிடம் கூட உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என்ற வெறியில் ஆலை நிர்வாகம் செயல்படுகிறது. அதற்கு ஆதரவாக, ஜெயகாந்தன் போன்ற அதிகாரிகள் விசுவாசமாக செயல்படுகின்றனர். தங்களது பதவி உயர்வுக்காகவும் சுயநலனிற்காகவும் தொழிலாளர்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். இதனை அங்கேயே அம்பலப்படுத்தி பேசினார். “தொழிலாளி செத்தாலும் பரவாயில்லை, இங்க உற்பத்தி நடக்கணும், அப்போதுதான் அதிகாரிக்கு புரமோசன் வரும். சுயநலத்திற்காக, காசுக்காக ஏன் பேயா அலையிறீங்க” என்று அந்த அதிகாரியின் நோக்கத்தை அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், அன்று மாலை 4.20 மணியளவில், ஜெயகாந்தன் மனம் புண்படும் படி அவரது குடும்பத்தை பற்றி தவறாக பரசுராமன் பேசியதாகவும் இதனால் பரசுராமனுக்கு விளக்கம் கோருதல் மற்றும் இடைநீக்கம் செய்வதாகவும் குறிப்பிட்டு அதிகாரிகள் சிலர் ஒரு கடிதத்தை பரசுராமனிடம் கொடுத்தனர். இதில் அதிகாரிக்கு கீழ்படிய மறுத்தது, உற்பத்தி நேரத்தில் இடத்தை விட்டு நகர்ந்தது, சூப்பர்வைசர் அனுமதி பெறாமல் சென்றது, ஆலைக்குள் ஒழுங்கு கெடும் வகையில் கலவர மனப்பான்மையுடன் நடந்து கொண்டது, ஆகிய குற்றங்களுக்காக இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை வாங்கிக்கொள் என்றும் தோழர்.பரசுராமனிடம் கேட்டபோது, இதனை வாங்க மறுத்தார்.

“தாங்கள் உயர் அதிகாரி என்ற முறையில் நேரடியாக இப்பிரிவுக்கு வந்து ஜெயகாந்தன் மேலதிகாரிகளுக்கு தெரிவித்த புகார்கள், குற்றச்சாட்டுகள் உண்மைதானா என பரசுராமனையும் அப்பிரிவில் பணிபுரியும் பிற தொழிலாளர்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும். குற்றச்சாட்டு உண்மை என ஆலை நிர்வாகம் கருதும் பட்சத்தில், சங்கத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். அதன் பின்னர் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இவை எதனையும் பின்பற்றாமல் நேரடியாக இடைநீக்கம் அறிவிப்பது என்பது உள்நோக்கமுடையது” என்ற வகையில் இதனைக் கண்டித்தார். “இவ்வாலையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் உள்ளது. உற்பத்தி உயர்வு, போனஸ், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது. சங்கத்தின் கவனத்திற்கு செல்லாமல் நிர்வாகமே முடிவு செய்வது ஏற்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

தோழர்.பரசுராமனுக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு:

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் சட்டப்படி தொழிற்சாலைக்குள் எந்த வித சிறு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொழிற்சாலை ஆய்வாளரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்த சட்டத்தையும் லேலாண்டு நிர்வாகம் மதிப்பதில்லை. தொழிற்சாலை ஆய்வாளர் லேலாண்டு நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியாகவே செயல்படுகிறார். அந்த வகையில், தொழிலாளர் ஆய்வாளரின் அனுமதி இல்லாமல் உற்பத்தி செய்யும் இடத்தில் குழியைத் தோண்டியது சட்டப்படி குற்ற நடவடிக்கை. இதற்காக லேலாண்டு நிர்வாகத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் கிரிமினல் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லேஆப்பை திசைத்திருப்பும் சதித்திட்டம்!

இடைநீக்கத்தை இவ்வளவு விரைவாக செய்வதற்கு அடிப்படையான காரணம், தோழர்.பரசுராமன் மீது ஆலை நிர்வாகம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அல்ல. முக்கியமாக, சில ஆண்டுகளாக லேலாண்டு நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது. 4 ஆண்டுக்கு முன் இங்குள்ள லேலாண்டு ஆலை 1-ல் இருந்து 354 தொழிலாளர்களை இடமாற்றம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 599 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மேலும், அடுத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் ஆலை 1-ஐ மூடிவிடுவதற்காக சதித்திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. இதற்காக 700-க்கும் அதிகமான தொழிலாளர்களை விரட்டியடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆலை 2-ல் நவீனக் கொத்தடிமை முறைகளைப் புகுத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி வருகிறது. சென்ற 10 ஆண்டுகளில் ஊதிய உயர்வு காலங்களில் எல்லாம் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்து, அற்ப தொகையை ஊதிய உயர்வாக வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அரியர் தொகையில் ஒரு சிறுபகுதியை மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.

இதுமட்டுமின்றி இந்த ஆண்டுக்கான போனசை இன்றுவரை வழங்காமல் உள்ளது. மற்றொருபுறம், தொடர்ந்து லேஆப் விடுத்து வருகிறது. ஆனால், ஆலையில் உற்பத்தியோ மின்னல் வேகத்தில் செய்ய தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகிறது. போனசு வழங்காமல் இழுத்தடிப்பது மட்டுமன்றி அடுத்த ஆண்டில் 180 நாட்கள் லேஆப் விடுவதற்காக தொழிற்சங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த ஒப்பந்தத்தை சென்னை – எண்ணூர் ஆலைச் சங்கம் ஏற்றுக் கொண்டு விட்டது. ஒசூர் ஆலை – 1-ல் உள்ள சங்கமும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆலை 2-ல் உள்ள சங்கம் மட்டும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை ஏற்றுக் கொள்ள வைக்க சங்கத்தை மிரட்ட பகடைக்காயாக தோழர்.பரசுராமனை இடைநீக்கம் செய்துள்ளது ஆலை நிர்வாகம்.

ஆலைநிர்வாகம் தான் விரும்பும் லே-ஆப், உற்பத்தி திணித்தல் உள்ளிட்ட அடக்குமுறைகளை தொழிலாளர்கள் மீது செலுத்துவதற்காக இதற்கு முன்னர் பல முறை இது போன்ற இடைநீக்கங்களை செய்து தொழிலாளர்களைப் பணிய வைத்துள்ளது. சென்ற சில மாதங்களில், இது போல 18-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் நிரந்தர பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு குளோபல் ஃபார்மாடெக் ஆலையில் இதே போல ஆட்டம் போட்டஏகாம்ப்ரம் என்ற எச்.ஆர். அதிகாரி பு..தொ.மு.வை விரட்டியடிப்பேன் என்று சபதமிட்டு செயல்பட்டான். அவனை கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகம் தனது ஆலையில் எச்.ஆர். அதிகாரியாக நியமித்தது. இன்று ஏகாம்பரம் ஒசூர் தொழிற்பேட்டையிலேயே இல்லை. மேலும், தனது கிரிமினல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்ற ஒரே எச்.ஆர். அதிகாரியாக ஏகாம்பரம் மட்டுமே உள்ளான். இவனைப் போன்று பல அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே சாத்தியம்!

இடைநீக்கத்திற்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டம்!

இப்பிரச்சனையில் ஆலைச் சங்கம் தற்போது ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வியாழன் (26-12-2013) அன்று மாலை வரை சங்கம் ஆலை நிர்வாகத்திற்கு கெடுவிதித்துள்ளது. அதன் பின்னர், இதில் போராட்டத்தில் இறங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், சங்கம் கேட்டுக்கொண்ட வகையில் இச்சம்பவம் குறித்து பு.ஜ.தொ.மு. சார்பாக சுவரொட்டி, பிரசுரங்கள் போட்டு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படவில்லை.

சங்கத்தின் ஒப்புதலுடன் 24-12-2013 அன்று மாலை இவ்வாலை வாயிலில் பு.ஜ.தொ.மு. சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.அசோக் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். தோழர்.பரசுராமன், மாவட்டத் தலைவர், தோழர்.இ.கோ.வெங்கடேசன், தோழர்.செந்தில் குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர்.ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

பரசுராமனின் இடைநீக்கத்திற்கு வருத்தம் தெரிவித்தோ, அல்லது இந்த ஆலை நிர்வாகத்திடம் இறைஞ்சியோ, கோரிக்கை வைத்தோ இந்த ஆர்ப்பாட்ட வாயில் கூட்டத்தை நடத்தவில்லை. இந்த இடைநீக்கத்தை ஆலை நிர்வாகம் ஒரு பகடைக்காயாக வைத்து, லே ஆப்பை ஏற்க கோரினால் அதற்கு தொழிலாளர்களும் சங்கமும் உடன்பட வேண்டாம். இறுதி வரை உறுதி இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் என்று தோழர்கள் அறிவித்தனர். அடுத்தடுத்து பு.ஜ.தொ.மு. மேற்கொள்ள இருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனமான லேலாண்டின் தொழிலாளர்களின் போராட்ட முறைகள் என்பது அடையாள உண்ணாவிரதம் என்ற அளவிற்கு சுருங்கிப் போன நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் முழக்கமிட்டது, லேலாண்டு தொழிலாளர்களிடையே உள்ள அடக்குமுறைக்கு எதிரான உரிமைக் குரலின் அடையாளமாக உள்ளது!

முதலாளித்துவ பயங்கரவாதிகள்! (Captalist Terrorists!)

லேலாண்டு நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை செலுத்துவதற்கு சமூகத்தில் சுற்றித் திரியும் ரவுடிகளையும் கொலைகாரர்களையும் மேலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் நியமிப்பது வழக்கமாகி வருகிறது. காட்டுமிராண்டிகளைப் போல இருக்கும் இந்த அதிகாரிகள் தான் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்தக் கவலையும் இன்றி தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். குறிப்பாக, ஜெயகாந்தன் என்ற இந்த அதிகாரியின் கொலைவெறி செயல்களில் முக்கியமாக இரண்டை இங்கு விளக்குகிறோம்.

  • சென்ற 4 ஆண்டுக்கு முன், இவ்வாலையில் சேசிஸ் (VTS – முழுமையாக ஓடும் தன்மை கொண்ட வண்டியின் அடிப்படை பகுதி. இதனை லாரியாகவோ, பேருந்தாகவோ வடிவமைத்துக் கொள்ளலாம் – பாடி கட்டப்படாத வண்டி) சோதனைப் பிரிவில் இந்த அதிகாரி பணிபுரிந்து வந்தான். அங்கு சேசிசை கடைசியாக சரி பார்க்கப்படும். ஒரு நாளைக்கு இத்தனை என்ற இலக்குடன் வேகமாக நகர்த்துவது இவனது வேலை. இதில் சோதனையில் ஈடுபடும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாற்றாக ஒப்பந்தத் தொழிலாளர்களை கும்பலாக, ஒரே நேரத்தில் பலரை பல வேலைகள் செய்ய வைப்பது. இது கட்டாயம் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அப்போது புதிதாக அவ்வாலையில் சேர்ந்து ஒரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரை (ஒப்பந்தத் தொழிலாளி) சக்கரத்தின் கீழே உள்ள பகுதிகளை சரி பார்க்க உத்தரவிட்டு விட்டு, வண்டியை ஓட்டி சோதிக்கின்ற தொழிலாளி வண்டியை விரைவாக எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் (ஒப்பந்தத் தொழிலாளிகளை இப்பிரிவில் பயன்படுத்துவது சட்டவிரோதம்).இதனால், சக்கரத்தின் கீழ் படுத்து சரி செய்து கொண்டிருந்த அந்த வடமாநிலத் தொழிலாளி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரழந்தார். இது ஒரு பச்சைப் படுகொலை. இது குறித்து உடனடியாக விவரம் சேகரிக்க அரசு மருத்துவமனைக்கு தோழர்கள் செல்வதற்குள், இதனை ஒரு சாலை விபத்து என்று சோடித்து, கொலையை மூடிமறைத்து உடனடியாக அந்தத் தொழிலாளியின் உடலை அவரது ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைத்தது லேலாண்டு நிர்வாகம்.
  • பெயிண்ட் சாப் பிரிவில் இந்த அதிகாரி பணி புரியும் போது, தொழிலாளர்கள் மேனுவல் பிரிவில் செய்யும் வேலைகளையும் ரோபோட் மூலம் செய்யும் வேலைகளையும் ஒரே கன்வேயரில் அவுட்புட் செய்வது என்ற அடக்குமுறையை புகுத்தினான். இதனை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கட்டாயமாக அமுல்படுத்தினான். இதனால் இரு வண்டிகளுக்கு இடையில் ஒரு சி.எல். தொழிலாளி சிக்கிவிட்டார். அவரது கையின் உள்ள சதை, நரம்புகள் எல்லாம் பிய்த்தெறியப்பட்டது. இரத்தம் 15 அடி தூரத்திற்கு சிதறியது.
  • ஜெயகாந்தன் மட்டுமல்ல. ஆலை 1-ல் சாந்த குமார் என்ற ஒப்பந்த தொழிலாளிக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் கொடுக்காமல் ஆலை மேற்கூரையை பழுதுபார்க்க அனுப்பினான் மற்றொரு அதிகாரி. கால் தவறி மேலிருந்து கீழே விழுந்த சாந்த குமார் என்ற அந்த ஒப்பந்தத் தொழிலாளி கீழே விழுந்து மூளை சிதறி கோரமாக உயிரிழந்தார்.
  • சி.பி.பி.எஸ். என்று கூறப்படும் லேலாண்டின் ஆலை 3-ல் தினந்தோறும் தொழிலாளர்களுக்கு விபத்து நடக்கிறது. அது ஒரு நவீனக் கொலை கூடாரமாக விளங்குகிறது.

மொத்தத்தில், லேலாண்டு என்பது உற்பத்தி செய்வதற்கான இடமாக இல்லாமல் தொழிலாளர்களின் உயிரைப் பற்றி சிறிதும் கவலையற்ற கொலைக் கூடாமாக உள்ளது. இதற்கேற்ப ஆலையில் உள்ள அதிகாரிகள் சுயநலப் பிராணிகளாகவும், கொலை காரர்களையும் ரவுடிகளையும் கொண்டுவந்து இயக்குகிறது. குறிப்பாக, தோஸ்த் வண்டியின் உற்பத்திக்காக எந்தவித கொடூரத்தை இழைக்கவும் லேலாண்டு தயாராக உள்ளது. தோஸ்த் என்பது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் முகமாகவும் லாபவெறியின் அடையாளமாகவும் உள்ளது. ஒரு பக்கம் சந்தையில் தனது வண்டிகள் விற்கவில்லை என்று ஒப்பாரி வைக்கும் லேலாண்டு நிர்வாகம், மற்றொருபுறம் ஆண்டுக்கு 1,10,000 வண்டிகளை உற்பத்தி செய்து குவிக்கிறது. மேலும், ஆட்குறைப்பு, லேஆப் போன்றவற்றை செய்து கொண்டே விண்ணை முட்டும் அளவிற்கு உற்பத்தியை உயர்த்தியுள்ளதே அதன் அடக்குமுறைகள் எந்த அளவிற்கு கொடூரமானதாக இருக்கும் என்பதற்கான நிரூபணங்கள்!

தோஸ்த் உற்பத்தியின் மூலம் லேலாண்டு நிறுவனம் செலுத்திவரும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. கொண்டுவந்துள்ள சிறு வெளியீடின் முன் அட்டை.

hosur-ndlf-noice

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஒசூர்
செல் – 97880 11784

சம்பீசி ஆறு – இயற்கையின் அற்புதம் – வீடியோ

9

Natural World – Zambezi – BBC Documentary

ம்பீசி ஆறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் 1,600 மைல் தூரம் ஓடி இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. சாம்பியாவின் மலைப் பகுதிகளில் உருவாகும் நீரூற்றுகள் மேற்கிலிருந்து ஆறு நாடுகள் வழியாக ஓடி 5 லட்சம் சதுர மைல் நிலப்பரப்பை செழிக்க வைத்து கிழக்கில் மொசாம்பிக் கடற்கரையில் கடலில் சேருகின்றன. சம்பீசி ஆறு தனது ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளையும், எதிர்பாராத ஆச்சரியங்களையும் உருவாக்குகிறது. சமயங்களில் சம்பீசியின் ஆற்றல் தாங்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது, இன்னும் சில சமயங்களில் தண்ணீர் வடிந்து வறண்டு போகும் போது கரைவாழ் உயிரினங்களின் வாழ்க்கை வேறு வகையில் போராட்டமாகிறது. இந்தப் பகுதியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும், ஆண்டு முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும் மகத்தான சம்பீசி ஆற்றின் போக்கை சார்ந்தே உள்ளது.

zambezi-snap-20சம்பீசி ஆறின் பாதையை வைத்து இங்கு ஒரு அற்புதமான உலகம் இயங்குகிறது. விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து  வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம். ஆறு உற்சாகத்துடன் நீர் கொண்டு வந்த போதும், வறண்டு தூங்கிய போதும் இந்த புதல்வர்கள் அதற்கேற்ற வகையில் தமது வாழ்க்கையை கட்டியமைத்திருக்கின்றனர்.

ஆற்றின் பாதையின் மையப் பகுதியில் இருக்கும் விக்டோரியா அருவியில் ஏப்ரல் மாதம் ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் டன் நீர் கொட்டுகிறது. சில மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதம் அருவி முற்றிலும் நீர் வறண்டு போகிறது. தென் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி உயிர் கொடுக்கும் தண்ணீர் இன்றி வறண்டு போகிறது.

வறட்சிக் காலத்தில் சூரியன் சுட்டு எரிக்கிறது. யானைகளும், காட்டு எருமைகளும் சுருங்கிக் கொண்டிருக்கும் ஆற்றுக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு உணவைத் தேடி கரையில் வெகு தூரம் போக ஆரம்பிக்கின்றன. ஆற்றோர மரங்களில் பசுமை இல்லாமல் போய் விட மேலும் மேலும் அதிக தூரம் போய்தான் உணவு தேட வேண்டியிருக்கிறது.

யானைகள் 2-3 நாட்களுக்குத் போதுமான தண்ணீர் குடித்து விட்டு இரை தேட போய் விடுகின்றன, காட்டு எருமைகளுக்கோ காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் யானைகள் பகல் முழுவதும் தண்ணீரிலேயே மூழ்கி இருக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் வடிந்து தேங்கியிருக்கும் நீர்ப் பரப்பு சுருங்கச் சுருங்க பெரும் எண்ணிக்கையிலான நீர் யானைகள் நெருக்கியடித்துக் கொண்டு மிதக்கின்றன. இரவில் வெப்பநிலை குறையும் போது கரையில் உலாவி இரை தேடி விட்டு விடியற்காலையில் ஆற்றுக்குத் திரும்பி விடுகின்றன.

அவற்றின் தடித்த ரப்பர் போன்ற தோல் தண்ணீருக்கு வெளியில் தாக்குப் பிடிக்க முடியாது. அவற்றின் உடலில் வியர்வை சுரப்பிகளே இல்லாததால் சூட்டை தாங்க முடியாது. தண்ணீரில் மூழ்கித் திளைத்திருப்பதுதான் ஒரே வழி.

zambezi-snap-16ஆற்றுக்குத் திரும்பி வரும் ஒரு நீர்யானை கழுதைப் புலிகளின் படை ஒன்றின் மத்தியில் சிக்கிக் கொள்கிறது. பொதுவாக நீர்யானை போன்ற பெரிய விலங்குகளை எதிர் கொள்ளும் அபாயத்தை தவிர்க்கும் கழுதைப் புலிகளுக்கு காய்ந்து போன சூழலில் கிடைப்பதை அடிக்கும் தேவை ஏற்படுகிறது. நீர்யானை தப்பித்து ஓடி ஒரு வழியாக தண்ணீரின்றி உயர்ந்து நிற்கும் ஆற்றங்கரையைத் தாண்டி நீருக்குள் போய் சேருகிறது. ஆழமான நீர் பகுதியில்தான் நீர் யானைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. ஆனால், ஆயிரக் கணக்கான நீர் யானைகள் நெருக்கியடிக்கும் சூழலில் சண்டைகள் மூள்கின்றன. அவற்றில் உயிரிழப்பும் நிகழ்கிறது.

கொல்லப்பட்டு நீரில் மிதக்கும் நீர்யானையின் பெரிய உடலை உண்டு செரிக்க முதலைகளின் கூட்டம் ஒன்று சூழ்ந்து கொள்கிறது. சில மணி நேரத்துக்குள்ளாகவே 100-க்கும் அதிகமான முதலைகள் நீர் யானையில் உடலை சூழ்ந்து கொள்கின்றன. குட்டி முதலைகள் பின் தங்கி பெரிய ஆட்களை முதலில் சாப்பிட விடுகின்றன. பெரிய ஆட்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீர் யானையின் உடலை கடித்துக் குதறுகின்றன. அடுத்த சாப்பாடு கிடைப்பதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம் என்ற நிலையில் முடிந்த மட்டும் வயிற்றை நிரப்பிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

முதலைகளுக்கு நீர்யானையின் சதையில்தான் வயிறு நிறைகிறது என்றால் மாட்டுக் கொத்திகள் நீர் யானைகள் மற்றும் காட்டு எருமைகளின் மேல் உட்கார்ந்து அவற்றின் தோலின் மீதுள்ள செத்த செல்கள், உண்ணிகள், காய்ந்து போன உமிழ்நீர் படிமங்கள், காது அழுக்கைக் கூட கொத்தி வயிற்றை நிறைத்துக்கொள்கின்றன.

zambezi-snap-126 மாதங்களுக்கு முன்பு நீரால் மூழ்கடிக்கப்பட்டு இப்போது நீர் மட்டம் தாழ்ந்த பிறகு வெளிப்பட்டிருக்கும் உயர்ந்த கரைகளின் சுவர்களில் சென்ற பருவத்தில் ஏற்படுத்தியிருந்த துளைகளை மீண்டும் ஆழமாக்கி கார்மைன் தேனீ உண்ணிகள் (சிறு பறவைகள்) குடியேறியிருக்கின்றன. நூற்றுக்கணகான இணைகள் இந்த வறண்ட பருவத்தில் இங்கு வாழ்க்கை நடத்துகின்றன. ஒன்றாக கூடியிருப்பதில் பாதுகாப்பு உள்ளது. ஆனால், அவற்றில் ஒப்பீட்டளவில் பெரியவற்றுக்கு வானத்தில் இருந்தும் அபாயம் வருகிறது. ஆப்பிரிக்க மீன் கழுகு ஒன்று, மீன்கள் அருகிப் போன இந்த பருவத்தில் பறவைகளை சாப்பிடுவதில் ருசி கண்டிருக்கிறது. கம்பீரமாக பறந்து வரும் கழுகு, சிறகடித்துக் கொண்டிருக்கும் தேனீ உண்ணி ஒன்றை இரண்டு கால் விரல்களுக்கிடையே பற்றிக் கொண்டு பறப்பை தொடர்கிறது.

வறண்டு போன இந்த பருவத்தில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டால்தான் உயிர் பிழைத்து இருக்க முடியும் என்பதை உணர்ந்த சம்பீசி வாழ் உயிரினங்களில் இன்னும் ஒன்று இந்த ஆப்பிரிக்க மீன் கழுகு.

அக்டோபர் மாதத்தில் நீர் மட்டம் தரையை தொட்டு விட்டது. குளங்களின் சேற்றில் மீன்கள் துள்ளிக் கொண்டிருக்கின்றன. சிறு மீன்கள், சேற்றுக்குள் புதைந்து கொள்ளவோ, தரையில் துள்ளித் துள்ளி அடுத்த நீர் குட்டைக்குப் போய் விடவோ செய்கின்றன. ஆனால், பெரிய மீன்களின் கதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. குறு அலகு கொக்குகளின் கொத்தலில் சிக்கி உயிரை விடுகின்றன.

zambezi-snap-17இங்கிருந்து 100 மைல்கள் தொலைவில், மேல் மடைப் பகுதியில் சம்பீசியை சூழ்ந்த நிலப்பகுதியில் நிலைமை மிகவும் பரிதாபகரமாக ஆகியிருக்கிறது. தரை காய்ந்து புழுதி மண்டலமாக மாறி விட்டிருக்கிறது. புல் வெளிகள் காய்ந்து சருகாக மாறியிருக்கின்றன. குரங்குக் கூட்டங்களும், மான்களும், யானைகளும் இரை தேடி அமைதியின்றி அலைகின்றன.

வேட்டை நாய்களின் ஒரு படை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அவை, தங்களைக் கடந்து போகும் வான்கோழிகளை சலனமின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பசிக்கு இந்தக் கோழிகள் போதாது, பெரிய இரை ஒன்று வேண்டும்.

அந்தி சாயும் போது நாய்களின் படை எழுந்து நின்று ஒன்றை ஒன்று உரசி வேட்டைக்கு தயாரித்துக் கொள்கின்றன. வேட்டைக்குப் போகும் கூட்டத்தை இரண்டு பெரிய தலைகள் முன் நின்று வழி நடத்துகின்றன. மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடும் அவை காற்றில் மிதப்பது போல பறக்கின்றன. இரையை சூழ்ந்து, தந்திரமாக பிடிப்பதற்கு இருவேறு  குழுக்களாக பிரிந்து போகின்றன.

மேய்ந்து கொண்டிருக்கும் இம்பாலா மான் கூட்டத்தை மெதுவாக, ஓசை இன்றி அணுகுகின்றன. வேட்டை நாய்கள் வெகு நேரம் ஓடக் கூடியவை, தந்திரமாக வேட்டையாடக் கூடியவை. ஒரு மான் மாட்டிக் கொள்கிறது. அதைக் கொன்று தமது இரையை பங்கு போட்டுக் கொள்கின்றன. இந்த எண்ணிக்கையிலான வேட்டை நாய்ப் படை ஒவ்வொரு நாளும் ஒரு விலங்கை கொல்ல வேண்டியிருக்கிறது.

zambezi-snap-04ஆற்றங்கரையிலிருந்து விலகிப் போகப் போக தரை வறண்டு போயிருக்கிறது. யானைகளின் நிலைமையோ மோசமாகிக் கொண்டிருக்கிறது. குட்டிகளும், பெண் யானைகளுமாக யானைக் கூட்டம் இரை தேடி வறண்ட காட்டுக்குள் பயணிக்கின்றது. காய்ந்து போன மரத்தின் கிளைகளையும், சுள்ளிகளையும் கூட சாப்பிடலாம் என்று குட்டி யானைகள் முதல் முறையாக கற்றுக் கொள்கின்றன. காய்ந்து போன கம்புகளுக்குள்ளும் சிறிதளவு ஈரப் பதம் கிடைக்கிறது. ஒரு வளர்ந்த யானைக்கு ஒரு நாளைக்கு 200 கிலோ வரை உணவு தேவைப்படுகிறது. அதை செரிப்பதற்கு கணிசமான அளவுக்கு தண்ணீரும் தேவை. அதனால், அடிக்கடி ஆற்றுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.

தண்ணீர் குடிக்காமல் 3-4 நாட்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும். யானைக் கூட்டம் தண்ணீர் குட்டைக்குள் குதித்துக் கொண்டு, ஆடிக் கொண்டு வந்து சேருகிறது. நிலைமைகளை புரிந்து கொண்டு நகர்வதுதான் உயிர் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி, பல தலைமுறைகளாகக் கற்றுக் கொண்ட அனுபவங்களை கூட்டத்தின் தலைவி உள் வாங்கியிருக்கிறது. குட்டி யானைகள் இந்தப் பாடங்களை புதிதாக கற்றுக் கொள்கின்றன.

வயது வந்த யானை ஒரு முறையில் 100 லிட்டர் வரை தண்ணீரை குடித்து விட முடிகிறது. ஆனால், நீண்ட நேரம் இங்கு தாமதிக்க  முடியாது, உடனே பயணத்தைத் தொடர்ந்தால்தான் அடுத்த வேளை உணவை தேடி முடிக்கலாம். இருந்தாலும், சில யானைகளுக்கு தண்ணீரின் குளிர்ச்சியை விட்டுப் போக மனமில்லை.

இப்போது சிறிது சிறிதாக கால நிலையின் போக்கு மாறுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள வடக்கு சாம்பியாவில் உள்ள கலீனி மலையில் பருவக் காற்றால் கொண்டு வரப்பட்ட மேகத் திரள்கள் இடியாக இடிக்கின்றன. அவைதான் சம்பீசிக்கு புத்துயிர் கொடுக்கும் பசுமைத் தொட்டில்கள். புயல் மழை பெய்யத் தொடங்குகிறது. துளித் துளியாய் விழும் மழை நீர் நீரோடைகளாக பெருக்கெடுக்கின்றது. சம்பீசி ஆற்றின் மறுபிறப்பு தொடங்குகிறது.

zambezi-snap-01பல நீரோடைகள் ஒன்று சேர்ந்து நீர் ஓட்டம் விரிவடைந்து மேற்கு நோக்கி அங்கோலாவுக்குள் பாய்கிறது சம்பீசி. இந்தப் பகுதியில் சேபிள் கலைமான்கள் வசிக்கின்றன. கருப்பு நிற ஆண் மான்கள் 1.5 மீட்டர் வரை வளரக் கூடிய பெரிய வளைந்த கொம்புகளை கொண்டிருக்கின்றன. இல்லாமல் அழிந்து போன இனமாக 30 ஆண்டுகள் கருதப்பட்ட இந்த கலைமான்களின் கூட்டம் 2005-ம் ஆண்டு இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டது. நூற்றுக் கணக்கான மான்களைக் கொண்ட இந்த மந்தைக்கு சம்பீசியின் கரையோரம் இயற்கை காப்பிடமாக விளங்குகிறது.

இந்த பகுதிக்குப் பிறகு ஆறு கிழக்கு நோக்கித் திரும்பி சாம்பியாவுக்குள் மீண்டும் நுழைகிறது. காட்டை விட்டு வெளியில் வந்து பரட்சீ சமவெளியில் தனது பயணத்தைத் தொடர்கிறது. வறண்டு போன குளங்களை நிரப்புகிறது. தண்ணீருக்கான தேவையும், உணவு தேடலுக்கான ஓட்டமும் என்று பல மாதங்களாக அலைக்கழிந்து கொண்டிருந்த எருமைகளின் வாழ்க்கை இலகுவாகிறது. காய்ந்து போயிருந்த தாவரங்கள் பசுமையடைகின்றன. இந்தப் பருவத்தில் எருமைகளின் முக்கிய வேலை சாப்பிடுவதுதான். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாப்பிடுகின்றன.

லோசீ இனத்தைச் சேர்ந்த மக்கள் சம்பீசியின் நதிக் கரையில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஆற்றின் பல போக்குகளுக்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். தண்ணீர் மட்டம் உயர ஆரம்பிப்பதற்குள் கெண்டை மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றனர், சேற்றில் மாட்டிக் கொண்டிருக்கும் பெரிய மீன்களை ஈட்டியால் குத்தி கரையில் போடுகின்றனர். லோசீ மக்களும் சீக்கிரமே ஆற்று வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிக்க நகர வேண்டியிருக்கும்.

zambezi-snap-21ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அங்கோலாவின் காடுகளிலிருந்து 200 மைல்கள் தெற்கு நோக்கி பயணித்து இங்கு வந்து சேரும் நீல காட்டு ஆடுகளின் இடம் பெயர்தல் நடக்கிறது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய, பெரிதும் அறியப்படாத இந்த இடப்பெயர்ச்சியின் உச்ச கட்டத்தில் சுமார் 30,000 ஆடுகள் இங்கே கூடுகின்றன. இங்கு வளர்ந்திருக்கும் பசும் புல்லை மேய்வதற்கும் குட்டி போடுவதற்கும் அவை இங்கு வருகின்றன. குட்டிகள் அனைத்தும் 3 வார கால கட்டத்திற்குள் பிறக்கின்றன. இந்தப் புல்வெளி பிரதேசம் புதிய உயிர்த் துடிப்பில் பரபரக்கிறது.

ஆனால், அபாயமும் அருகிலேயே இருக்கிறது. ஒரு கழுதைப் புலி கூட்டம் மந்தையை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றின் வேட்டையாடும் உத்தி எளிதானது. கூட்டத்தை கலைத்து ஓட விட்டு ஓடுவதில் பலவீனமானதை வீழ்த்துவதுதான் அது. வரிக்குதிரைகளும், காட்டு ஆடுகளும், மான்களுமாக அந்த இடமே ஓட்டப்  பந்தய மைதானமாகிறது. துரத்தி வரும் கழுதைப் புலிகளிடமிருந்து தப்பித்து மந்தையின் பாதுகாப்பை அடைந்து விடுகிறது ஆட்டுக் குட்டி ஒன்று. ஆனால் அதன் அம்மாவுக்கு நேரம் அவ்வளவு நன்றாக இல்லை. கழுதைப் புலிகளால் வீழ்த்தப்பட்டு அவற்றுக்கு இரையாகி விடுகிறது. கடித்துக் குதறி உணவை முடித்து விட்டு முதுகெலும்பை ஒரு பக்கமும், தோலை இன்னொரு பக்கமும் கவ்விச் செல்வது வரை தின்று தீர்க்கின்றன.

சனவரி மாதம் புயல் மழை அடர்த்தியாக பெய்ய ஆரம்பிக்கிறது. ஆற்றின் கரைகளைத் தாண்டி சுற்றியிருக்கும் நிலப்பரப்பில் வெள்ளக் காடு பரவுகிறது. பல மாதங்களாக சிறிதளவு தண்ணீரையே பார்த்து வந்த பராக்சீ வாசிகள் இப்போது சம்பீசியின் இன்னொரு முகத்தை பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான சதுர மைல்களுக்கு வெள்ளக்காடாக நிரம்பி ஒரு ஆழமற்ற உள்நாட்டு கடலாக அந்த புல் வெளி பகுதி மாறி விடுகிறது.

zambezi-snap-23இப்போது இன்னும் பல இடம் பெயர் விருந்தினர்கள் வந்து சேருகிறார்கள். ஆயிரக் கணக்கான நீர்ப் பறவைகள் பூச்சிகள், தவளைகள், மீன்களை பிடித்து வயிறு நிறைக்க வந்து சேருகின்றன. தட்டை அலகு கொக்குகள், கரண்டி அலகு கொக்குகள் நத்தைகளையும், மஞ்சள் அலகு கொக்குகள் பெரிய மீன்களையும் கபளீகரம் செய்கின்றன.

புதியவர்கள் தண்ணீரில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பகுதியின் மற்ற குடிமக்களுக்கு இடம் மாறும் நேரம் வந்து விட்டிருக்கிறது. இப்போது தண்ணீரிலிருந்து தப்பிப்பதற்கான இடம் நகர்வு. எருமை மந்தைகள் தண்ணீரை முரட்டுத் தனமாக  கிழித்துக் கொண்டு நகர்கின்றன. நீல காட்டு ஆடுகள் அங்கோலாவின் காடுகளை நோக்கிய தமது 5 மாத பயணத்தை ஆரம்பிக்கின்றன. அனைவரும் பெருகி வரும் நீர் மட்டத்துடன் போட்டி போட்டுக் கொண்டு நகர வேண்டியிருக்கிறது. கலைமான்கள் உயர்ந்து வரும் வெள்ளத்தில் குதியாட்ட நீச்சல் போட்டுக் கொண்டு நகர்கின்றன. தொடர்ந்து உயர்ந்து வரும் சம்பீசி வேட்டைக்கார மிருகங்களையும், வேட்டையாடப்படும் மிருகங்களையும் அனைவரையும் வேறு இடம் பார்த்து போக வைக்கிறது.

ஏப்ரல் மாதம் நீர் மட்டம் உச்ச கட்டத்தை அடைகிறது. ஆறு 20 மைல் அகலத்துக்கு வெள்ளக் காடாக நகர்கிறது. இந்த வெள்ளப் பெருக்கு ஒரு இடத்தைக் கடந்து செல்ல வாரக் கணக்கில் நேரம் பிடிக்கிறது. லோசீ மக்களின் கிராமங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பிக்கிறது. பின்னர், வீடுகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்கின்றன. ஆனால், இடம் பெயர்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை. அதற்கு லோசீ மன்னரின் உத்தரவு வர வேண்டும்.

zambezi-snap-25இதோ வந்து விட்டது, தூரத்தில் ஒலிக்கும் முரசு ஒலிதான் இடம் பெயருவதற்கான உத்தரவு. குவோம்போகா என்று அழைக்கப்படும், அதாவது தண்ணீரை விட்டு வெளியேறும் இந்த பெயர்ச்சி கொண்டாட்டமாக, பெரிய படகுகளில் நூற்றுக் கணக்கான பேர் துடுப்பு போட நடைபெறுகிறது. ஆடலும், பாடலுமாக படகுகள் தண்ணீரில் மிதக்கின்றன. மன்னரின் படகில் ஒரு பிரம்மாண்டமான யானை பொம்மை நிறுத்தப்பட்டிருக்கிறது, ராணியின் படகில் ஒரு கொக்கின் பொம்மை. ராஜ படகு ஒவ்வொன்றையும் நூற்றுக் கணக்கான பேர் துடுப்பு போடுகின்றனர். தண்ணீர் ததும்பி நிற்கும் புல்வெளியைத் தாண்டி பல மணி நேர பயணத்துக்குப் பிறகு தமது கோடைக் கால கிராமத்தை சென்றடைவார்கள் இந்த மக்கள். 6 மாதங்கள் அங்கு கழித்த பிறகு திரும்பும் இந்த சிரமத்துக்கு உற்ற பலன் கிடைக்கத்தான் செய்கிறது.

வெள்ளம் வடியும் போது, தான் அடித்து வந்த வண்டல் மண்ணை நிலத்தில் விட்டுச் செல்கிறது. வீடு திரும்பும் கிராம மக்கள் பயிரிடவும், கால்நடைகளை வளர்க்கவும் இந்த வண்டல் நிலத்தை செழிப்பாக்குகிறது. மற்ற எல்லா உயிரினங்களையும் போலவே இந்த மக்களின் வாழ்க்கையையும் ஆற்று வெள்ளத்தின் ஏற்றமும் இறக்கமும்தான் தீர்மானிக்கின்றன.

லோசீ மக்கள் விட்டுச் சென்ற கிராமத்திலோ நிலைமை முற்றிலும் அமைதியாக இல்லை. நூற்றுக் கணக்கான மீன்கள் நீரில் மூழ்கியிருக்கும் குடிசைகளுக்குள்ளும், முற்றங்களிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வீட்டுச் சுவர்களில் முட்டையிடுகின்றன, இடுக்குகளில் பதுங்கிக் கொள்கின்றன. ஆனால், இந்த மீன்களை வேட்டை ஆடும் புலிமுக மீன்களும் மோப்பம் பிடித்து வந்து விடுகின்றன.

zambezi-snap-03தண்ணீர் ஆழத்தின் பாதுகாப்பிலிருந்து மேல் மட்டத்துக்கு வந்தால் இன்னும் ஒரு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு இரை மிதக்கும் பகுதியில் மீன் பிடிக்கும் ராஜ மீன்கொத்தி இறங்குகிறது. மனதை கொள்ளை கொள்ளும் அழகான லாவகத்துடன் நீண்ட குறுகிய அலகை முன் வைத்து நீரினுள் மூழ்குகிறது மீன்கொத்தி. வெளியில் வரும் போது கொழுத்த மீன் ஒன்றை கவ்விக் கொண்டுள்ளது.

இப்போது நாம் பார்ப்பது சமவெளியின் தெற்கு முனையை அடைந்து விட்ட சம்பீசி ஆற்றை. தோன்றிய இடத்திலிருந்து 700 மைல் தூரத்தை தாண்டி வந்திருக்கிறது. இங்கு நதி கிழக்கு நோக்கித் திரும்பி டாங்கோ பீடபூமியின் பாறைகளை வெட்டிக் கொண்டு பாய்கிறது. தூரத்தில் ஏதோ மேக மூட்டம் போல தெரிகிறதே, என்னவாக இருக்கும்? 20 மைல் தூரத்திலிருந்து கூட மேகம் போல தெரியும் இது என்ன?

அதுதான் மோசி ஒவடூனியா (முழங்கும் புகை) எனப்படும் அருவி. விக்டோரியா நீர்வீழ்ச்சி என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. வெள்ளம் முழு வீச்சில் பாயும் போது இதுதான் உலகத்திலேயே மிக அகலமான அருவி, ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் கனமீட்டர் தண்ணீர் வீழ்கிறது. அதாவது, இந்தப் பருவத்தில் இந்த அருவியிலிருந்து விழும் நீரை 5 நிமிடங்களுக்கு மட்டும் பிடித்தால் அது சென்னையில் அனைவருக்கும் ஒரு நாள் முழுவதற்கும் தாராளமான பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும். இந்த பருவத்தில் அருவியின் அகலம் 1 மைல் தூரம் வரை உள்ளது.

இந்த அருவியின் முகத்தில், சிதறும் நீர்த்துளிகளால் தனிச்சிறப்பான மழைக்காடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது பெரு வெள்ளம் வடிய ஆரம்பித்திருக்கிறது, அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்திருக்கிறது. அருவியின் மலை முகட்டில் தண்ணீருக்கு நடுவே நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகளில் நின்று கொண்டு மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர் உள்ளூர் மீனவர்கள். கொஞ்சம் கால் தவறினாலும், 100 மீட்டர் ஆழத்திற்கு விழுந்து கீழே உள்ள பாறைகளில் எலும்புகளை நொறுக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

zambezi-snap-07இதற்குப் பிறகு, ஆறு சமவெளிப் பகுதியை தாண்டி புதிய உலகத்துக்குள் நுழைந்துள்ளது. பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக தண்ணீரின் ஓட்டத்தால் ஒவ்வொரு செனடிமீட்டராக வெட்டப்பட்டு உருவாக்கப்பட்ட பாறைகளுக்கு நடுவிலான பள்ளத்தாக்கில் 100 மீட்டர் அகலக் கால்வாயாக குறுக்கப்படுகிறது. சுமார் 1,600 மீட்டர் அகலத்திலிருந்து 100 மீட்டராக குறுகும் இந்த இடத்தில் நீரோட்டத்தின் வலு அதிகமாக உள்ளது.

இங்கிருந்து கடலில் போய் கலக்கும் கிழக்கு நோக்கிய தனது அடுத்த 100 மைல் தூர பயணத்தில் சம்பீசி வளைந்து நெளிந்து நகர்கிறது.

இந்த பள்ளத்தாக்குகளில் இருந்து வெளியேறும் இடத்தில் வேகம் மட்டுப்பட்டு 180 மைல் நீளமான கரீபா ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மலை உச்சிகளாக இருந்த பகுதிகள் இப்போது தீவுத் திட்டுகளாக தண்ணீருக்கு மத்தியில் எட்டிப் பார்க்கின்றன. இந்த ஏரி, சம்பீசி ஆற்றில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்ட கரீபா அணைத் திட்டத்துக்குப் பிறகு உருவானது. இந்த அணையில் அறுவடை செய்யப்படும் நீரின் இயக்க ஆற்றல் சாம்பியா, சிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படுகிறது. 1959-ல் இந்த அணை கட்டப்பட்ட பிறகு கரீபா ஏரி நிறைவதற்கு 4 ஆண்டுகள் பிடித்தது.

60 ஆண்டுகளுக்கு முன்பு கரீபா ஏரி செயற்கையாக நிரப்பப்படும் போது அந்தப் பகுதியில் இருந்த காட்டு விலங்குகளை மீட்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெருகி வரும் தண்ணீரைக் கண்டு திகைத்து ஓடும் விலங்குகளை பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக வன விலங்கு ஆர்வலர்களும் நிபுணர்களுக் களமிறங்கினார்கள். யானைகள், காண்டாமிருகம் போன்ற பெரிய விலங்குகள் மயக்க ஊசி போடப்பட்டு படகுகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. சிறு விலங்குகள் வலைகளில் பிடிக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டன. ஆப்பரேஷன் நோவா என்று அழைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 6,000 விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த அணை ஆற்றின் போக்கை முற்றிலுமாக மாற்றி விட்டது. கீழ் மடை பகுதிகளில் இது வரை இயற்கையாக பெருகிக் கொண்டிருந்த பருவ கால வெள்ளப் போக்கை, இப்போது அணையின் பொறியாளர்கள் கட்டுப்படுத்தி வெளியிடுகிறார்கள். ஆற்றில் நீரோட்டத்தை தொடர்ந்து பராமரித்து சிறு குட்டைகளில் நீர் நிரம்பும் படியும் ஆற்றோட்டத்தை பராமரிக்கிறார்கள். மழைக் காலங்களில் ஆற்று வெள்ளம் கரைகளைத் தாண்டி நீர் நிலைகளை உருவாக்குகிறது. இந்த குளங்களை விலங்குகள் மொய்க்கின்றன. காய்ந்து போயிருந்த நிலத்தில் இப்போது பசுமை கொழிக்கிறது.

zambezi-snap-10இந்த நீர் நிலைகளில் ஆகாயத் தாமரை களைச் செடியாக பரவியுள்ளது. 19-ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவின் அமேசான் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த களைச் செடிகள் தண்ணீருக்குள் வெளிச்சமும் ஆக்சிஜன் புகுவதை தடுத்து உயிராற்றலை முடக்குகின்றன. ஆனால் நீர்யானைகளும், யானைகளும் அவற்றை சுவைத்து தாக்குகின்றன.

பபூன் குரங்குகளுக்கு தண்ணீரைக் கண்டாலே வெறுப்புதான். ஆனாலும், இந்த நீரில் கிடைக்கும் நத்தைகளை விருந்தாக சுவைப்பதற்கு தண்ணீரில் இறங்கியிருக்கின்றன.

தண்ணீர் வடிந்திருந்த போது தேனீ உண்ணும் பறவைகளை பிடித்து உயிர் வாழ்ந்திருந்த மீன் கழுகுகள் இப்போது மீன் பிடித்தலை ஆரம்பித்து விட்டன. அவற்றின் மீன் பிடித் திறன், மீன்களில் பயங்கரமான புலி மீன்களைக் கூட தன் கால்களில் கவ்விக் கொண்டு போக உதவுகிறது.

இந்த நீர் நிறைந்த நீர்நிலைகள் அனைத்து வகை விலங்குகளையும் காந்தம் போல இழுக்கின்றன. குரங்குகள், வரிக் குதிரைகள், மான்கள் கூடுகின்றன. புத்திசாலி வேட்டை மிருகங்கள் கரையோரம் காத்திருக்கின்றன, இந்த சிங்கத்தைப் போல. தண்ணீர் குடிக்க வந்த எருமைகளுக்கு ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு உணர்த்துகிறது. மந்தையை திரட்டிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடுகின்றன. சிங்கம் தன் இரையை துரத்த ஆரம்பிக்கிறது.

zambezi-snap-13கரையில் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்ட எருமை மந்தை ஒன்றாகக் கூடி எருமைக் கன்றுகளை தமக்கு நடுவில் நிறுத்திக் கொள்கின்றது. எருமைகள் ஒரு சிங்கத்தைக் கூட கிழித்து சின்னாபின்னமாக்கி விடக் கூடியவை. ஆனால், இந்த முறை சிங்கம் இரையை கொல்ல முடியாத அவமானத்தோடு தப்பித்து விடுகிறது.

பல மாதங்கள் பெய்த மழைக்குப் பிறகு சம்பீசியின் குணம் மீண்டும் மாறுகிறது. இப்போது பெய்யும் கடைசி மழையில் அவ்வளவு பலம் இல்லை. சம்பீசியின் தாராள குணம் தீர்ந்து போய் கஞ்சத் தனம் திரும்புகிறது. யானைகள் மீண்டும் சிரமமான காலங்களுக்கு தயாராகிக் கொள்கின்றன.

இந்த முதிய ஃபிக் மரத்தைப் பாருங்கள். இந்த மரங்கள் ஆண்டின் எந்த பருவத்திலும் பூத்து காய்க்கக் கூடியவை. இந்த வறட்சி காலத்தில் காய்த்திருக்கின்றன. பறவைக் கூட்டங்களும், பபூன் குரங்கு குழுக்களும், மரத்தை மொய்க்கின்றன. கீழே விழும் பழங்களை சுவைக்க மான்கள் கூடியிருக்கின்றன.

வெப்ப நிலை அதிகமாகும் போது வாகை மரங்கள் தமது விதைப் பொதிகளை உதிர்க்கின்றன. அது யானைகளுக்கு மறுக்க முடியாத உணவாக மாறுகிறது. ஒரு பருவத்தில் ஒரு மரம் 300 கிலோ வரை காய் காய்க்கிறது. விலங்குகளுக்கு தன் பழத்தை உண்ணக் கொடுப்பதன் மூலம் விதைகளை பரவுவதற்கு மரத்தின் மிகச் சிறந்த உத்தி இது.

இந்தப் பருவத்தில் கிடைக்கும் பசுமையை வயிற்றில் அடைத்து பற்றாக்குறை காலத்தில் தாக்குப்பிடிப்பதற்காக தயாரித்துக் கொள்கின்றன. இந்த யானையைப் பாருங்கள், ஒட்டகச் சிவிங்கிகள் வசிக்காத இந்தப் பகுதியில் உயரத்தில் உள்ள மர இலைகளை மேய்வதற்கு சர்க்கஸ் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. மண் திட்டுகளின் மீது ஏறி நின்று, பின்னங்காலில் நின்று முன்னங்காலை உயர்த்தி எட்டும் வரை கபளீகரம் செய்கிறது. ஆண் யானைகளின் எடை 5,000 கிலோ வரை இருக்கிறது. அந்த எடையை வைத்துக் கொண்டு செய்யும் சர்க்கஸ் வேலைகள் யானைகளின் முதுகெலும்பையும் கால்களையும் அழுத்துகின்றன. ஆனால், வறட்சி காலத்தில் தாக்குப் பிடிப்பதற்கு கடைசி பச்சையை காலி செய்வது அவசியமானது.

zambezi-snap-09குளங்கள் நிரம்பிய இந்தப் பகுதியைத் தாண்டி சம்பீசி ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து மொசாம்பிக் நோக்கி நகர்கிறது. கடலுக்கு இன்னும் சில நூறு மைல் தொலைவே உள்ளது. ஆனால், இங்கு ஆற்றின் நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கிறது. பெரிய நீர்யானைகள் ஆழமான பகுதிகளிலும் குட்டி நீர் யானைகள் அவற்றிலிருந்து விலகி கரைப் பகுதிகளிலும் காலத்தை கழிக்கின்றன. குட்டி நீர் யானைகள் கரையோர முதலைகளை சீண்டிப் பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்ளப் பார்க்கின்றன.

அதே நேரம் ஆழமான பகுதியில் பெரிய நீர் யானைகளுக்கிடையே போர் மேகம் சூழ்கிறது.  கூட்டத்தின் தாதா மற்ற ஆண் நீர்யானைகள் தனக்கு பணிந்து நடந்து கொள்வது வரை அவற்றை சகித்துக் கொள்கிறது. ஆனால், குறைந்த தண்ணீரின் நெருக்கடியில் டென்ஷன் அதிகமாகிறது. யாராவது திமிற ஆரம்பிக்க, இடித்து இடித்து அடுத்தடுத்தவர்களை தள்ளி சமநிலை சரி செய்யப்படுகிறது. இருந்தாலும் யார் பெருந்தலை என்று முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. தலை நீர்யானைக்கும் அதற்கு சவால் விடுக்கும் நீர்யானைக்கும் சண்டை தொடங்குகிறது. சண்டே பல மணி நேரம் கூட தொடரலாம். வெற்றி பெறுகிறவர் ஆற்றின் இந்தப் பகுதியின் ஆதிக்க சக்தியாக தொடருவார். பெண் நீர்யானைகளை ஏகபோகமாக சொந்தமாக்கிக் கொள்வார். சண்டை இருவரில் ஒருவர் உயிர் விடுவது வரை தொடர்கிறது.

zambezi-snap-18இன்னும் கொஞ்ச நாளைக்கு யானைகளுக்கு ஆற்றங்கரையோரத்திலேயே போதுமான உணவு கிடைக்கிறது. அதனால் ஆற்று நீரில் ஆட்டம் போடவும் நேரம் கிடைக்கிறது. சேற்றைப் பூசி வெயிலில் காயலாம். குட்டி யானைக்கு சேற்றில் இறங்கி பழக்கமில்லை. கால் புதைந்து சிக்கிக் கொண்ட குட்டியை அம்மா யானை துதிக்கையால் இழுத்து மேலே ஏற்றி விடுகிறது.

யானைகள் நீருக்குள் மூழ்கி நீண்ட துதிக்கையை மேலே நீட்டுவதன் மூலம் சுவாசித்துக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றன. யானைகள் நீருக்குள்ளே நகரும் போது ஆனந்த நடனம் புரிகின்றன. குளிரந்த நீரில் ஆடும் வரை ஆடிக் கொள்ள வேண்டியதுதான், சீக்கிரமே தண்ணீர் வற்றிப் போய் உணவுக்காக நாய் போல அலையும் வாழ்க்கை ஆரம்பித்து விடும்.

சம்பீசி ஆற்றின் 1,600 மைல் பயணத்தின் இறுதிக் கட்டம் வந்து விட்டது. மொசாம்பிக் நாட்டின் சமவெளிப் பகுதியில் சிறு சிறு கால்வாய்களாக இடைப்பட்ட நிலப்பரப்பில் வளமான வண்டல் மண்ணை பரப்புகிறது சம்பீசி. 60 ஆண்டுகளுக்கு முன்பு 8,000 சதுர மைல் ஆக  இருந்த இந்த டெல்டா பகுதி கரீபா அணையில் நீர் பிடிக்கப்பட்டு தேக்கப்படுவதைத் தொடர்ந்து 4,000 சதுர மைல் ஆக குறைந்துள்ளது. இருப்பினும், சம்பீசி ஆறு பெரும் அளவிலான நன்னீரை இந்தியப் பெருங்கடலுக்குள் கொண்டு கொட்டுகிறது.

ஆற்றின் பயணம் முடிந்து விட்டது என்றா சொன்னோம், இல்லை, இல்லை. தகிக்கும் சூரிய வெப்பம் கடலின் நீர்ப் பரப்பிலிருந்து நீர்த் துளிகளை உறிஞ்சி மேகமாக திரட்டுகிறது. இந்த மேகங்கள் பருவக் காற்றுகளால் மேற்கு நோக்கி உள் நாட்டுக்கு அடித்துச் செல்லப்படுகின்றன. 1,600 மைல் தூரத்தில் சாம்பியாவின் மலைப் பகுதிகளில் தாம் சுமந்து சென்ற நீர் சுமையை மழையாக பொழிகின்றன. இந்த முடிவற்ற நீர் சுழற்சியும், அதைச் சார்ந்த ஆயிரக் கணக்கான உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியும் தொடர்ந்து முன் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழாக்கம் : பண்பரசு

பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

8

பேராசிரியர்களின் சான்றிதழ்கள் பறிப்பு – வேலைநீக்கம்!
வேல்டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

வேல்டெக்தமிழக அரசே!

  • வேலை நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களின் சான்றிதழ்களையும்,
    உரிய இழப்பீட்டையும் உடனே வழங்க நடவடிக்கை எடு!
  • பல்கலைக் கழக மானியக்குழுவின்(UGC) விதிமுறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு
    பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தரச்சான்றிதழ் ஆகியவற்றில்
    முறைகேடு செய்யும் வேல்டெக் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
  • நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்!
  • வேல்டெக் நிர்வாகத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

அண்ணா பல்கலைக்கழகமே!

  • எம்.இ, பி.எச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர்களை வகுப்புக்கு அனுப்பாமல்
    முழு நேர அலுவலக ஊழியர்களாக்கி கசக்கிப் பிழிகின்ற,
    வேல்டெக் போன்ற கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!

பேராசிரியர்களே!

  • எதிர்கால மாணவ சமுதாயத்தை உருவாக்கும் பேராசிரியர்களை
    கொத்தடிமை போல் நடத்துவதைப் பொறுத்துக் கொள்வது அவமானம்!
  • நிரந்தரமான வேலை, பணி பாதுகாப்பு, கௌரவமான பணிச்சூழல்
    ஆகியவற்றை நிலைநாட்ட துணிச்சலுடன் போராடுவதே தன்மானம்!

பொறியியல் கல்லூரி மாணவர்களே!

  • எதிர்கால வாழ்க்கை பாழாகிவிடும் என்று தனியார் கல்லூரிகளின்
    சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்வதை நிறுத்துவோம்!
  • தனியார் கல்விக் கொள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராக
    பேராசிரியர்களோடு ஒன்றிணைந்து போராடுவோம்!

பெற்றோர்களே! உழைக்கும் மக்களே!

  • வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோடு
    கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம்!
  • தரமான கல்வி, உத்தரவாதமான வேலைக்கு வேட்டு வைக்கும்
    கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

வேல்டெக் பொறியியல் கல்லூரியின்
அராஜகத்தை முறியடிப்போம்!

பேராசிரியர்களின் சான்றிதழ் பறிப்பு – சட்டவிரோத வேலை நீக்கம்!
சான்றிதழ்களையும், உரிய இழப்பீட்டையும் உடனே வழங்கு!

கண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை : தோழர் நெடுஞ்செழியன், மாநில அமைப்புக் குழு உறுப்பினர், பு.மா.இ.மு தமிழ்நாடு

கண்டன உரை :

தோழர் கணேசன், மாநில அமைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணை செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

நேரம் : 28.12.2013, மாலை.4 மணி அண்ணா சிலை,ஆவடி.

இடம்  : பேருந்து நிலையம் அருகில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 9445112675 – 9444834519

எதிர்கொள்வோம் ! – 6

9

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை என்ற கேள்வி சமரன் குழு சீடர்களால் எழுப்பப்பட்டது. ஆனால், அந்த விமர்சனங்களுக்கான பதில்களை வேறெங்கும் தேடத் தேவையில்லை. சமரன் குழு முந்தைய காலங்களில் எழுதி, அக்குழுவின் அரசியல் பாமரத் தனம், சுயமுரண்பாடு, சந்தர்ப்பவாதம் காரணமாக இந்நூலிலும் இடம் பெற்றுள்ள கருத்துக்களிலேயே காணலாம். இந்த வகையிலான எமது பதிலை மூன்று பகுதிகளாக புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருந்தோம்.

இந்தியா அமைதிப் படை
விடுதலைப் புலிகளுடனான போரில் தோற்றுப் போய், சென்னை – துறைமுகத்தில் வந்திறங்கும் இந்திய அமைதிப்படை. (உள்படம்) அப்படையின் தலைமைத் தளபதி ஏ.எஸ்.கல்கத்.

அவற்றின் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளைப் பற்றி முந்தைய காலங்களில் சமரன் குழு எழுதி, தற்போது பரிசீலனையில் உள்ள அதன் நூலில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களை, கருத்துக்கள் – மதிப்பீடுகளை ஆதாரத்துடன் 2013, அக்டோபர் புதிய ஜனநாயகம் இதழில் தொகுத்துக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாரம் பின்வருமாறு:

‘விடுதலைப் புலிகள் மாற்றுப் போராளிக் குழுக்களிடம் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளையும் பாசிச முறைகளையும் கடைப்பிடித்தார்கள், தடைசெய்தார்கள்; ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போருக்கும் மற்றும் பிற ஜனநாயக சக்திகளுக்கும் கூட அவர்கள் ஜனநாயக உரிமைகளை மறுத்தார்கள்; தங்கள் செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு ஜனநாயக ஆட்சிக்கு மாறாகப் பழைய ஆளும் வர்க்க சக்திகளைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக, ஒரு இராணுவ அதிகார வர்க்க ஆட்சி முறையைச் செயல்படுத்தினர்; ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிசக் கொள்கையைப் பின்பற்றினார்கள்; புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்ப்பதற்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்’ என்று முன்பு தானே எழுதிய இந்தக் கருத்துகளை சமரன் குழு இன்னும் விலக்கிக் கொள்ளவும் இல்லை, மறுத்துச் சொல்லவும் இல்லை. பரிசீலனையிலுள்ள தனது நூலிலும் அவற்றைப் பதிப்பித்து, அந்தக் கருத்துகளை அக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

11-eelam-2இப்படி விடுதலைப் புலிகளைப் பற்றித் தானே எழுதியவற்றை மூடிமறைத்துக் கொண்டு அல்லது அவற்றுக்கு மாறாக, பின்வருமாறும் சமரன் குழு எழுதியுள்ளது : “விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடுவதை அங்கீகரித்து, ஜனநாயகத்திற்காக அதனுடன் போராடுவது என்ற – ஐக்கியம், போராட்டம் என்ற – அணுகுமுறையைக் கடைப்பிடிக்காதது போன்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆழ்ந்த தவறும் (விடுதலைப் போரில் அதன் தோல்விக்கு) ஒரு காரணமாகும். அதற்காக ஈழ விடுதலைப் போர் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகமானது. வரலாற்றிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பும், பிற புரட்சிகர ஜனநாயக சக்திகளும், ஒரு சரியான பாடத்தைக் கற்கவேண்டும்” என்கிறது, சமரன் குழு.

இது என்ன நியாயம்! இது இரட்டை நிலை இல்லையா? தன்னைத் தவிர வேறு யாரும் எந்த அமைப்பும் ஈழத்தில் இருக்கவும் கூடாது, இயங்கவும் கூடாது என்று தடை விதித்து, கொன்று குவித்த புலிகளிடம் ஐக்கியம், போராட்டம் என்ற அணுகுமுறையை எப்படிக் கடைப்பிடிக்க முடியும்! (மனிதக் கறி உண்ணும் புலிகளுடன் எப்படி ஒரே கூண்டில் நட்புடன் வாழ்வது என்று சமரன் குழு அறிந்த ‘அஹிம்சை உபாய’த்தை காந்தி கூட போதிக்கவில்லையே!) அப்படிக் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஈழத்தின் துரோகிகள் என்று இப்போதும் புலிகளும் புலி அபிமானிகளும் சாதிக்கின்றனர்.

இல்லை, இது பிரபாகரனின் இரத்தத்திலேயே ஊறியதுதான் என்பதற்கும் எம்மிடம் ஆதாரம் உண்டு! 1986 ஜூன் மாதம் பிரபல ஆங்கில மாதமிருமுறை ஏடான ‘இந்தியா டுடே’ பிரபாகரனை பேட்டி கண்டது. அதிலுள்ள ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.

கேள்வி: தமிழீழத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும். மேலும், மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி மட்டும் அங்கிருக்கும். நான் பல கட்சி ஜனநாயகத்துக்கு எதிரானவன். அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தைத் துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப் பீர்களா?

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகம் இருக்கும்.

கேள்வி: ‘டெலோ’ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதி களிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ் இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும். எனது கருத்தின்படி போராட்டத்துக்குத் தலைமையேற்க ஒரே ஒரு தீவிரவாதக் குழு மட்டுமே இருக்க வேண்டும். மேலும், சிறீலங்கா இராணுவத் தாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிறீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலி இயக்கம் இருக்கிறது

கேள்வி: ஆனால், பேச்சு வார்த்தையின் மூலம் உங்களால் அய்க்கியத்தைச் சாதிக்க முடியாதா?

பிரபாகரன்: அவர்களுக்குள்ளாகவே மிக மோசமாகப் பிளவுபட்டிருக்கும் போது பிற குழுக்களோடு நாங்கள் எப்படி எதையும் விவாதிக்க முடியும்.

கேள்வி: பிற குழுக்களை ஒழிப்பதுதான் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறைக்கான ஒரே வழியா?

பிரபாகரன் : எந்த இயக்கத்தையும், நாங்கள் ஒழித்து விடவில்லை, ‘டெலோ’வுக்கு ஒரு பாடம் மட்டுமே புகட்டினோம். ‘டெலோ’வினர் எங்கள் புலிகள் தலைவர்களைக் கொன்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலடி தராமலிருந்தால் புலி இயக்கமே சிறுகச்சிறுக இல்லாமல் போயிருக்கும். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு பிரச்சனைகள் இருந்தபோதும் நாங்கள் பொறுமையோடு இருந்தோம் என்பதை நீங்களே பாராட்டுவீர்கள். ‘டெலோ’ விவகாரத்தில் கூட கிட்டத்தட்ட 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டாலும் 400 ‘டெலோ’ போராளிகளைக் கைது செய்து, ஆயுதங்களையும், கருவிகளையும் கைப்பற்றவே செய்தோம். உண்மையான எதிரிக்கு எதிராகப் போராட முடியாத இவர்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டியதில்லை என்பதுதான் ஒரே கொள்கை. எங்கள் அணிகள் இலங்கை இராணுவத்தைச் சிதறடித்துக் கொண்டிருக்கையில், இந்தப் பிற குழுக்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். விடுதலை இயக்கத்தின் முழுக்கட்டுப் பாட்டையும் எடுத்துக் கொள்வது எங்களுக்கு நல்லது என்று யாழ்ப்பாண மக்கள் சொன்னார்கள்.”

இந்தப் பகுதி இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987, பிப்ரவரி புதிய ஜனநாயம் இதழிலேயே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆக, இதிலிருந்து தெரிவதென்ன? மாற்றுப் போராளி அமைப்புகள் துரோகிகளாகிவிட்டதால் புலிகள் அவர்களை அழித்தார்கள் என்பது உண்மையல்ல; ஈழத்தில் தமது/தனது ஒரே ஏகபோக அதிகார ஆதிக்கம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது பிரபாகரனுடைய ஆரம்ப காலத்திலேயே இலட்சியமாக, கொள்கையாக இருந்தது என்பதுதான் உண்மை!

***

ழப் போரின் பின்னடைவுகளுக்கான காரணங்களை 2009 மே மாதமே நாம் எழுதியவற்றையே நான்காண்டுகளுக்குப் பிறகு காப்பி அடித்துப் பின்வருமாறு சமரன் குழு எழுதுகிறது.

“விடுதலைப் புலிகள் இயக்கம், அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும் கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் தோல்விக்கும், தலைமையின் அழிவிற்கும் காரணமாகி விட்டது.” (சமரன் குழுவின் நூல், பக்.xviii)

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அரசியல் நிலைப்பாடு ஏகாதிபத்தியம் பற்றிய மாயைகளுக்கு அடித்தளமாக இருந்தது. அதுவே விடுதலைப் போரில் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணமாகிவிட்டது.” (சமரன் குழுவின் நூல், பக். xx)

ஈழ விடுதலைப் போரின் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் சமரன் குழுவே அந்நூலில் கூறும் காரணங்களையும் தொகுத்துக் கொடுத்த நாம், “புலிகளைப் பற்றி இவ்வாறு சமரன் கூறுவதற்கும் ம.க.இ.க. கூறி வருவதற்கும் என்ன வேறுபாடு என்பதைச் சமரன் குழுவின் தோழர்கள்தாம் விளக்கவேண்டும் !”என்றும் கேட்டிருந்தோம்.

ஆன்டன் பாலசிங்கம், பிரேமதாசா
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஆண்டன் பாலசிங்கம் (இடது) மற்றும் அதிபர் பிரேமதாசா (கோப்புப் படம்).

ஆனால், தவிடு தின்னும் அரசனுக்கு முறம் பிடிக்கும் அமைச்சரைப் போல சமரன் குழுத் தலைமைக்குத் தாம் மிகவும் தகுதியான சீடர்கள் தாம் என்று அக்குழுவின் தோழர்கள் காட்டிவருகிறார்கள். ஈழப்போரின் தோல்விக்கான காரணங்களாக மேற்படி கருத்துக்களை கூறும் அதேவேளையில், சமரன் குழுவினர் ஈழவிடுதலைப்போரில் இறுதிவரை சமரசமின்றிப் புலிகள் போராடியதாகப் பழைய ஒப்பாரியையே திரும்பத் திரும்பப் பாடுகின்றனர். அதையே அவர்களின் சீடர்களும் கோரசாகப் பாடுகின்றனர்.

“ஈழ விடுதலைப்போர் இறுதியில்” எப்படி முடிந்தது? ஈழ விடுதலைப் போரின் இறுதியில், சிங்களப் பாசிச இராணுவத்தால் பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த ஒரு பாதியைத்தான் தமிழினவாதிகளும் சமரன் குழு உட்பட புலி விசுவாசிகளும் பேசுகிறார்கள். பிரபாகரனும் அவர் தலைமையிலான புலிகளும் இறுதிவரை சமரசமின்றிப் போரிட்டுக் கொல்லப்பட்டார்களா; (அப்படி நடந்திருந்தால் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டலாம்.) இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாக்குறுதிகளை நம்பி சிங்களப் பாசிச இராணுவத்திடம் சரணடைந்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்களா என்ற மீதியை இவர்கள் பேச மறுக்கிறார்கள்! பிரபாகரனும் அவர் தலைமையிலான புலிகளும் இறுதிவரை சமரசமின்றிப் போரிட்டு, போர்க்களத்தில் இருந்து தப்பித் தலைமறைவாயிருக்கின்றார்கள், ஒருநாள் திடீரென்று தோன்றி மீண்டும் ஈழப் போரைத் தொடருவார்கள் என்று தமிழினவாதிகளும் புலி விசுவாசிகளும் கூறுவதைச் சமரன் குழுவினரும் நம்புகிறார்களா? அதனால்தான், ஈழ விடுதலைப்போரில் இறுதிவரை சமரசமின்றிப் புலிகள் போராடியதாகப் பழைய ஒப்பாரியையே திரும்பத் திரும்ப பாடுகின்றனரோ!

திறனாய்வுக்கு எடுத்துக் கொண்ட சமரன் குழுவினரின் நூலிலேயே உள்ள அரசியல் பாமரத்தனமான, தர்க்க நியாயமற்ற, சுயமுரண்பாடான வாதங்களைக் காண மறுக்கும் சமரன் குழுவின் சீடர்களும் “கல்லானாலும் மண்ணாலும் மரமானாலும் தங்களையே நம்புவோம்” என்னும் பக்தர்களைப்போல, “ஈழ விடுதலைப் போரில் இறுதிவரை சமரசமின்றிப் புலிகள் போராடி”யதாகப் பழைய ஒப்பாரியையே பாடுகின்றனர். அவர்களிடம் மீண்டும் கேட்கிறோம். இந்திய உளவுப் படை “ரா” விடமும், எம்.ஜி.ஆரிடமும் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்தும், “புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்” என்ற முழக்கத்தைக் கைவிட்டு, “தன்னுரிமைக்கே சுயாட்சி” என்ற பொழிப்புரை கொடுத்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாக்குறுதிகளை நம்பி சிங்களப் பாசிச இராணுவத்திடம் சரணடைந்தும் – இப்படித்தானே ஈழ விடுதலைக்காகப் புலிகள் இறுதிவரை சமரசமின்றிப் போராடினார்கள்! இதைத்தான் சமரன் குழுவினரும் அதன் சீடர்களும் போற்றுகிறார்கள். இவ்வாறே ம.க.இ.க. வினரும் அதன் தோழர்களும் செய்யவில்லை என்று தூற்றுகின்றனர்!

ஈழ விடுதலைக்காகப் புலிகளைப் பற்றிய ம.க.இ.க. வினர் கூறும் ஆதாரங்களையும் கருத்துக்கள்-மதிப்பீடுகளையும் எடுத்தாண்டு கொண்டே, ம.க.இ.க. வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, ம.க.இ.க. வினர் மீது சமரன் குழு அவதூறும் செய்கின்றனர்.

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிராக விடுதலைப் புலிகள் இராணுவ வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜே.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசும் இராணுவமும் பெற்றுள்ள வெற்றி, விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்குப் பலமளிப்பதாக உள்ளது. இந்நிலையில் புலிகளை நிராயுதபாணியாக்காமலேயே, அதன் ஆயுதத்தை அங்கீகரித்தே ஈழத்துக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன்வரலாம். இதை ஏற்பது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது.” ( புதிய ஜனநாயகம், ஜனவரி 16-31, 1990)

இந்த மேற்கோளை எடுத்துக் காட்டி, அதன் சொற்றொடர்களைப் பிரித்து எழுதியுள்ளது; பிறகு பின்வருமாறு சமரன் குழு தனது சொந்தப் பொழிப்புரையையும் அவதூறையும் எழுதுகிறது:

“இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதால், இலங்கை அரசு தனது இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டு ஜே.வி.பி. அமைப்பை அடக்குவதில் வெற்றிபெற முடிந்தது. அல்லது, இதை மிகவும் வெளிப்படையாகவும் கொச்சையாகவும் சொன்னால், ஜே.வி.பி.யைக் காட்டிக் கொடுத்து விட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசி, போர் நிறுத்த ஒப்பத்தம் செய்துகொண்டார்கள்.

“இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததற்குக் கூறும் குற்றச்சாட்டுகளை விட, பு.ஜ., விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது சுமத்தும் இக்குற்றச்சாட்டுகள் கடுமையானதும் கேவலமானதும் ஆகும். எனவே, அழுத்தம் திருத்தமாக மறுத்துரைக்க வேண்டியவையாகும், கண்டனத்துக்குரியதாகும்.” (சமரன் குழுவின் நூல், பக். 229)

சமரன் குழுவின் நம்பிக்கைக்குரிய அபிமானிகளே, உங்கள் மனச்சாட்சிப்படி இப்போது சொல்லுங்கள்! கேடுகெட்ட இட்லரின் கோயபல்ஸ்-கோயரிங்க் கும்பல் கூட இப்படி ஒரு பொய்யைச் சொல்லத் துணியுமா? மேலே சமரன் குழு மேற்கோளிட்டுக் காட்டிய பு.ஜ. வின் வாசகத்துக்கு சமரன் குழு அளிக்கும் பொருள் நேர்மையானதுதானா? எந்தக் கேடுகெட்ட முட்டாளாவது இப்படியொரு பொருள் கூறுவானா, சமரன் தலைமையைத் தவிர?

ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்.
“அமைதிப் படை” என்ற பெயரிலான இந்தியாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஜே.வி.பி இயக்கத்தினர், புத்தபிட்சுக்களை இணைத்துக் கொண்டு தென்னிலங்கையில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

பித்தலாட்டக்காரர்களா! “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிராக விடுதலைப் புலிகள் இராணுவ வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜே.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசும் இராணுவமும் பெற்றுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்குப் பலமளிப்பதாக உள்ளது” என்றுதானே பு.ஜ. எழுதியுள்ளது. இதற்கு, “இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதால், இலங்கை அரசு தனது இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டு ஜே.வி.பி. அமைப்பை அடக்குவதில் வெற்றிபெற முடிந்தது” என்றா பொருள்? (இதை எழுதியவருக்குத் தாய்மொழி தமிழ்தானா?)

இதற்கு, “…..இதை மிகவும் வெளிப்படையாகவும் கொச்சையாகவும் சொன்னால் ஜே.வி.பி.யைக் காட்டிக் கொடுத்துவிட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசி, போர் நிறுத்த ஒப்பத்தம் செய்துகொண்டார்கள்” என்று பொருள் கொள்ளமுடியுமா? (இதை எழுதியவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல என்பது உறுதியாகிறது!)

சமரன் குழு தனது மேற்படி சொந்தப் பொழிப்புரையையும் அவதூறையும் நியாயப்படுத்துவற்காக அடுக்கடுக்காகப் பின்வரும் வரலாற்றுப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: “இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் மீது விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேறியது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பு.ஜ. மேலே எடுத்துக்காட்டப்பட்டது போல விமர்சனம் செய்கிறது. பல நேரங்களில் விடுதலைப் புலிகள் பற்றிப் பு.ஜ. வெளியிடும் கருத்துகளும் சோ, ‘ரா’ வெளியிடும் கருத்துகளும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.” (சமரன் குழுவின் நூல், பக். 230) ( விடுதலைப் புலிகள் பற்றிய சமரன் குழுவின் கருத்துகளும்தான் மேலே நாம் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியபடி பு.ஜ. கருத்துகளைப் போல ஒரே மாதிரி இருக்கின்றன. அதிலிருந்து சமரன் குழு வெளியிடும் கருத்துகளும் சோ, ‘ரா’ வெளியிடும் கருத்துகளும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூற முடியுமா!)

உண்மையில் அப்போது நடந்தது என்ன? இந்திய இராணுவத்தின் ஈழ ஆக்கிரமிப்பையும் பாசிச ஜெயவர்த்தனேயின் அரசையும் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, ஜே.வி.பி.யும் கூடக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், இந்திய இராணுவத்தின் ஈழ ஆக்கிரமிப்புக்கு ஈழத் தமிழர்களின் இனப் போராட்டமும் எல்லா ஈழப் போராளிக் குழுக்களும் காரணம் என்று பழி போட்டும், ஜெயவர்த்தனே அரசின் துரோகத்தால் வடக்கு-கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுத்திடம் ஜெயவர்த்தனே அரசு பறிகொடுத்து விட்டதாகவும் பிரச்சாரம் செய்து சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வெற்றியும் பெற்றது. இதோடு, இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்துப் பல போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, அதேசமயம் தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது. இவற்றின் வளர்ச்சிப் போக்கில் நகர்ப்புற ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறியும் அளவுக்கும் தயாரானது.

ஜே.வி.பி. தென்னிலங்கையிலும், இந்திய ஆக்கிரமிப்பு இராணுத்துக்கு எதிரான போரில் பல வெற்றிகளை ஈட்டிய விடுதலைப் புலிகள் வடக்கிலும் இலங்கை அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துவிட்ட நிலையில், “கலந்தாலோசனை, பொதுக்கருத்தை உருவாக்குவது, சமரசம் காண்பது ஆகிய மூன்றின் மூலம் நாட்டில் அமைதியை நிலை நாட்டுவது” என்ற முழக்கங்களை முன்வைத்துத்தான் 1988 டிசம்பரில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் பிரேமதாசா போட்டியிட்டார். இருந்தாலும் 50.43 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று சொற்ப வித்தியாசத்தில் பிரேமதாசா வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் ஜே.வி.பி.யோ மூன்றாவது இடத்தைப் பிடித்து.

1989 ஜனவரி இரண்டாம் நாள், கண்டியில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே ஜே.வி.பி., புலிகள் ஆகிய இரு அமைப்புகளையும் அமைதி வழிக்கும் பேச்சுவார்த்தைக்கும் வரும்படி பிரேமதாசா அழைப்பு விட்டார். நாடு முழுவதும் இருந்த அவசரநிலையை 1989 ஜனவரி பன்னிரண்டாம் நாள் விலக்கிக் கொண்டார்; 1800 ஜே.வி.பி. யினரை விடுதலை செய்தார். சிறிது கால அமைதிக்குப் பிறகு ஜே.வி.பி. தனது அரசியல் பிரிவான டி.ஜே.வி. மூலம் பொதுக் கடையடைப்பு, பொதுத் தொழில் வேலைநிறுத்தம், பொது அரசியல் வேலை நிறுத்தங்களை நடத்தியது.

சிங்கள, தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் பன்னிரண்டாம் நாள், பிரேமதாசா நாடு முழுவதுமாக இலங்கை இராணுவத்தின் தற்காலிகப் போர் நிறுத்தம் ஒன்றைத் தன்னிச்சையாக அறிவித்தார். அதேசமயம், பிரேமதாசா நிர்ப்பந்தத்தின் பேரில் இந்திய இராணுவமும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகளோ, இந்தியா ஆக்கிரமிப்புப் படையை விலக்கிக் கொள்ளாதவரை போர்நிறுத்தத்தை ஏற்க முடியாது என்று பகைமை நிறைந்த ஒரு திறந்த கடிதம் வெளிட்டனர்.

இருந்ததாலும், இலங்கையின் இராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தனே புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை விட்டார். 1989 ஏப்ரல் பதினைந்தாம் நாள், புலிகள் தமது இலண்டன் தலைமையகத்தில் இருந்து, பிரேமதாசாவின் அழைப்பை ஏற்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் படியும் ஒப்புதல் செய்தியை அனுப்பினர்.

1989 ஏப்ரல் மாதம், கொழும்பு புறநகர் கோவில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரேமதாசா, இந்திய இராணுவத்தை மறுப்பின்றி மூன்று மாதங்களுக்குள் விலக்கிக் கொள்ளும்படி கோரினார்; தொடர்ந்து, அதை விரைவுபடுத்தும்படி இந்தியத் தூதர் மூலம் இராஜீவுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார். இதைச் சாதகமான நடவடிக்கையாகப் புலிகள் பார்த்தனர்.

சில நாட்களிலேயே இலங்கை விமானம் மூலம் ஆண்டன் பாலசிங்கமும் அவரது மனைவி அட்லியும் கொழும்புவுக்கும், அடுத்து பிரபாகரனைச் சந்திக்க வன்னிக் காடுகளுக்கும் பயணித்தனர். அதேபோல பிரபாகரனின் மனைவி-மக்கள் புலிகளின் வன்னித் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1989 மே முதல் வாரம், கொழும்பின் பிற விடுதிகளை மூடிவிட்டு, ஹில்டன் ஐந்து நட்சத்திர விடுதியில் புலிகளின் மெய்க்காப்பாளர்களுடன் பாலசிங்கம், யோகி, லாரன்ஸ், அட்லி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு தங்கியது. மே நான்காம் நாள், பிரேமதாசாவின் சொந்த வீடான சுசரிதாவில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அரசுத் தரப்பில் ஹமீதும் பிரேமதாசாவும் ரஞ்சன் விஜயரத்தனேவும் கலந்து கொண்டனர்.

11-eelam-5இந்திய இராணுவத்தை முற்றிலும் வெளியேற்றுவது; அது உருவாக்கிய வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபையையும் அமைச்சரவையையும் கலைத்து, புதிய தேர்தல்களை நடத்தி, புலிகளின் ஆதரவு பெற்ற நிர்வாக அமைப்பை உருவாக்குவது; இந்திய இராணுவமும் ஈழத் துரோகிகளும் அமைத்துள்ள தமிழ்த் தேசிய இராணுத்தை ஒழிப்பது; அதற்காகப் புலிகளுக்கு பிரேமதாசா அரசு நிதியும் நவீன ஆயுதங்களும் வழங்குவது; இலங்கை இராணுவம் தனது முகாம்களுக்குள்ளேயே முடங்கி இருப்பது ஆகிய கோரிக்கைகளைப் புலிகள் முன்வைக்க, பிரேமதாசா அரசும் ஏற்றுக்கொண்டது.

முறைப்படியான ஒப்புதல் பெறுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்களும் நடந்தன. புலிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று பிரேமதாசா வலியுறுத்தியதன் பேரில், முக்கியமாக “தமிழ் ஈழம்” என்ற பொருளைக் குறிக்கும் சொல் எதுவும் இடம் பெறாத வகையில் “விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி” என்ற பதிவு பெற்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து 14 மாதங்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நபர்கள் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அவற்றினூடாக புலிகளின் தமிழீழத் தனியரசு அல்லது ஈழத் தமிழர்களின் தன்னுரிமை அல்லது திம்புப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் புலிகள் முன்வைக்கவில்லை. ஆனாலும், இரண்டு கோரிக்கைகளில் இணக்கங்காண முடியாமற்போயின. அவை:

1) இலங்கை அரசியல் சட்டத்திற்கு ஜெயவர்த்தனே அரசு செய்த ஆறாவது திருத்தம் நீக்கப்பட வேண்டும்.

(அதாவது, இலங்கை நாட்டுக்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னொரு தனி அரசமைப்பதை பிரச்சாரம் செய்யும், நிதியளிப்பது அல்லது ஊக்குவிக்கும், அதற்காக வாதாடும் நபர்களின் குடியுரிமை, சொத்துரிமை, நாடாளுமன்றப் பங்கேற்பு உரிமை போன்றவை பறிக்கப்படும்.)

2) வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபையையும் அமைச்சரவையையும் கலைத்து, புதிய தேர்தல்களில் விடுதலைப் புலிகள் அல்லது “விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி” போட்டியிடவும், நிர்வாக அமைப்பில் பங்கேற்கவும் அனுமதிப்பது.

புலிகளின் இவ்விரு கோரிக்கைகளையும் ஆரம்பத்தில் பிரேமதாசா ஒப்புக்கொண்டாலும், இவற்றை நிறைவேற்றுவது இருவருக்குமே பாதகமானதாகவும் சிக்கலானதாகவும் இருந்தன.

முதலாவதாக, இலங்கை அரசியல் சட்டத்திற்கான ஆறாவது திருத்தத்தை நீக்குவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலம் பிரேமதாசாவின் கட்சிக்கு இல்லை; மேலும் அதற்கு அவரது கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பிருந்தது. இரண்டாவதாக, அடிப்படையில் அவரே ஒரு சிங்களப் பேரினவாதி. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் மூலம் ஜே.வி.பி.யிடமிருந்து கைப்பற்றியிருந்த தனது சிங்கள ஆதரவை இழந்து விடும் பயம் அவருக்கு இருந்தது

வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபையை இலங்கை அரசு கலைப்பதில் புலிகள் அதிக அழுத்தம் கொடுத்தாலும், மைய அரசு அவ்வாறு செய்வது இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் 13-வது அரசியல் சட்டப்பிரிவின்படியான அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது; அதாவது, தகுந்த காரணமின்றி மாகாண நிர்வாக சபையைக் கலைக்கவும் முடியாது அல்லது அதிகாரப் பகிர்வுக்கு எதிராக13-வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அவ்வாறு செய்து வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபைக்குப் புதிய தேர்தல்கள் மூலம் புலிகளோ, அவர்களின் ஆதரவாளர்களா ஆட்சிக்கு வந்தால் இதையே மைய அரசு பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைப் பறித்துக் கொள்ள முடியும்.

ஆனாலும், இந்திய இராணுவம் கட்டிக் கொடுத்த ஈழத் துரோகப் போராளி அமைப்புகள் தலைமையிலான தமிழ்த்தேசிய இராணுவத்தை அழித்தொழித்து ஆயுதங்களைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் பல தளங்களை அமைத்துக் கொண்டனர். இராணுவ பலத்தையும் பெருக்கிக் கொண்டனர்.

இதற்கிடையே, தென்னிலங்கையிலும் அரசியல் நிலைமைகள் வேகமாக மாறின. பிரேமதாசாவின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்தது. அது அரசை வீழ்த்தி, அதிகாரத்தைக் கைப்பற்றும் ‘புரட்சியை’த் தொடுக்கப்போவதை அறிந்த பிரேமதாசா அரசு, ஜே.வி.பி.மீது எதிர்ப்புரட்சித் தாக்குதலை ஏவி, தலைமையைக் கொன்றொழித்தது. எல்லாம் சதித்தனமாகவே நடந்தன.

11-eelam-6இந்த நிலையில், அதாவது பிரேமதாசா அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மேற்சொன்ன ஒரு சிக்கலான நிலையை எட்டின. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் யார் அதிகாரத்தைக் கையிலெடுப்பது என்ற உடனடிப் பிரச்சினை முன்னுக்கு வந்த போது, முன்சொன்ன காரணங்களால் இரண்டு தரப்புமே பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்திச் செல்லாமல் பிசு பிசுத்துப் போக விட்டனர். ஈழத் தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமையை ஏற்பதற்கு மாறாக, மீண்டும் ஈழத்தின் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பிரேமதாசா அரசு போர்தொடுத்தது. (இந்த வரலாற்றுத் தொகுப்புக்கான ஆதாரங்கள்: தமிழ் நேசன், தமிழ்வீக் முதலிய இணையத்தளங்கள்)

ஈழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில், ஜே.வி.பி.யை பிரேமதாசா அரசு அடக்கி ஒடுக்கி விட்ட நிலையில், அன்றைய அரசியல் போக்குகள் குறித்து பு. ஜ. எழுதியது; அதிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்துத் திரித்து, பு. ஜ. மீது அவதூறு செய்வதற்காகவே முன்பு சொன்னவாறு தனது சொந்த வியாக்கியானங்களை சமரன் குழு எழுதியிருக்கிறது.

இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தையும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பையும் ஆரம்பம் முதலே எதிர்த்த பிரேமதாசா, இந்திய இராணுவ வெளியேற்றம், புலிகள் மற்றும் ஜே.வி.பி. யுடன் போர் நிறுத்தம் ஆகிய வாக்குறுதிகளை 1988 டிசம்பரில் நடந்த அதிபர் தேர்தலிலேயே முன்வைத்தார். தேர்தலில் வென்று பதவியேற்ற 2 வாரங்களிலேயே தன்னிச்சையாக அவற்றைச் செயல்படுத்துவதிலும் இறங்கினார். புலிகள் – பிரேமதாசா பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கான கெடுவைத்தார். புலிகள், ஜே.வி.பி. யுடன் போர் நிறுத்தம் அறிவித்து, இந்திய இராணுவமும் போர் நிறுத்தம் செய்ய வைத்தார், பிரேமதாசா.

ஆனால் புலிகளோ, பிரேமதாசாவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை முதலில் ஏற்கமறுத்து, பகைமையான ஒரு திறந்த மடலை வெளியிட்டனர். பிறகுதான் அந்த அழைப்பையே புலிகள் ஏற்றனர். அதன் பிறகு நடந்த புலிகள் – பிரேமதாசா பேச்சுவார்த்தையிலும் கூட ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. இராஜீவுடன்தான் ஒரு படைவிலக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், சமரன் குழுவோ புலிகளின் புத்திசாலித்தனத்தால் ஒரு உடன்பாட்டு ஒப்பந்தம் ஏற்பட்டு, அதன் விளைவாக இந்திய இராணுவம் வெளியேறியதாகவும் அந்த ஒப்பந்தத்தை பு.ஜ. விமர்சித்து ஒரு செயல்தந்திரம் வைத்ததாகவும் அந்தச் சமயத்தில் சமரன் குழு அந்த ஒப்பந்தத்தை வரவேற்று வேறொரு செயல்தந்திரம் வைத்ததாகவும் – இப்படி அடுக்கடுக்காகப் புளுகிக்கொண்டே போகிறது.

‘பு.ஜ. அந்த ஒப்பந்தத்தை ஒரு துரோகச் செயல் என்று நேரடியாகக் குற்றஞ்சாட்ட முடியாததால், புலிகள் சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுத்து மாகாண சுயாட்சித் தீர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பதாய் ஒரு கற்பனைக் காரணம் கற்பித்து ஆரூடம் கூறுகிறது, பேரம்,பேரம் என்று புலம்புகிறது; மேலும் பிரேமதாசா அரசு தொடுத்த யுத்தத்துக்கு எதிராகப் புலிகள் யுத்தம் தொடுத்ததன் மூலம் பு.ஜ.வின் பொய்யையும் புனைசுருட்டையும் புலிகள் தூள்தூளாக்கி விட்டார்கள்’ என்கிறது சமரன் குழு. (சமரன் குழுவின் நூல், பக்.231)

சரி, அப்படியே இருக்கட்டும்! ஆனால், பிரேமதாசா அரசுக்கு எதிராகப் புலிகள் போர் தொடங்கிய பிறகு சமரன் குழு என்ன எழுதியது? அதையும் இதேநூலில் காணலாம்:

“இந்த யுத்தத்தில் பிரேமதாசா அரசை எதிர்த்துப் புலிகள் அமைப்பு போரிட்டாலும் மீண்டும் அது இந்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு, அதைத் தலையிடக் கோருமா அல்லது பிரேமதாசா அரசுடன் சமரசம் செய்துகொண்டு ஈழத் தமிழகத்தின் ஆளும் வர்க்கமாக மாறிச் சீரழிந்துவிடுமா என்ற ஐயம் தோன்றுகிறது.

ஏனெனில், சமரசத்திற்கான சமூக வேர்கள் உள்ளன. இந்தவேர்கள் உள்ளவரை இப்பிரச்சினை எழவே செய்யும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசு, ஈழத்தமிழ் தேசிய இன விடுதலை இயக்கம் மற்றும் சர்வதேசிய நிலைமை ஆகியவற்றைப் பரிசீலனை செய்வோமானால் இதை அறியலாம்.” (பக்.172)

புலிகள், இந்திய-இலங்கை அரசுகளுடன் சமரசம் செய்து கொண்டு ஈழத்தின் ஆளும் வர்க்கமாகச் சீரழிந்து விடும் என்ற ஐயம் தோன்றுவதாகக் கூறிவிட்டு அதற்கான சில “சமூக வேர்களைக் கண்டுபிடித்து”க் கூறுகிறது. அவை, இந்திய, இலங்கை நிலைமைகள் சமரசத்திற்கான தூண்டுதல்களைக் கொண்டிருக்கின்றன. ஈழப்போரில் புலிகள் தனித்துப் போரிடுவது சாதகமானது என்றாலும், புலிகளின் ஜனநாயக மறுப்பு, எதேச்சதிகாரம், பாசிசக்கொள்கை காரணமாக அப்போரில் பங்கேற்க வேண்டிய பிற புரட்சிகர சக்திகளும் ஜனநாயக சக்திகளும் பார்வையாளர்களாக ஒதுங்கி நிற்கிறார்கள். குறும் தேசியவாதம் காரணமாக அனைத்து ஜனநாயக சக்திகள்,மலையக மக்கள், மற்றும் சிங்கள உழைக்கும் மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளத் தவறியது. இவற்றோடு ஏதாவது ஒரு வழியில் உதவியைப் பெறுதல் அல்லது இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை எப்படியாவது பயன்படுத்திக் கொள்வது என்ற கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய, தமிழ் மாநில அரசாங்கங்களுடனும் அரசியல் கட்சிகளுடனும்விடுதலைப் புலிகள் அமைப்பு உறவுகொள்ளும் கொள்கையும் ஈழத் தமிழினம் விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குத் தடையையும் எதிரிகளுடன் சமரசம் செய்துகொண்டு பணிந்துபோனதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது.” (பக்.177)

“ஆக,இந்த யுத்தத்தில் பிரேமதாசா அரசை எதிர்த்துப் புலிகள் அமைப்பு போரிட்டாலும் மீண்டும் அது இந்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு, அதைத் தலையிடக்கோருமா அல்லது பிரேமதாசா அரசுடன் சமரசம் செய்துகொண்டு ஈழத் தமிழகத்தின் ஆளும் வர்க்கமாக மாறிச் சீரழிந்துவிடுமா என்ற ஐயம் தோன்றுகிறது” என்று சமரன்குழு எழுதினால் அது புரட்சிகரமான அரசியல் மதிப்பீடு!

ஆனால், “இந்நிலையில் புலிகளை நிராயுதபாணியாக்காமலேயே, அதன் ஆயுதத்தை அங்கீகரித்தே, ஈழத்துக்கு மாகாணச் சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன்வரலாம். இதைஏற்பது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது.” என்று பு. ஜ. சொன்னால் அது “கடுமையானதும் கேவலமானதும் ஆகும். எனவே அழுத்தம் திருத்தமாக மறுத்துரைக்க வேண்டியவையாகும், கண்டனத்துக்குரியதாகும்,” “ஆரூடமாகும்” என்கிறது, சமரன் குழு.

சமரன் குழுவின் சீடர்களே சிந்தியுங்கள்! கல்லானாலும் மண்ணாலும் மரமானாலும் தங்களையே நம்புவோம்” என்னும் பக்தர்களைப்போல இருக்காதீர்கள்!
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

புதிய ஜனநாயகம் 29-ம் ஆண்டு சிறப்பு வாசகர் வட்டம் – திருச்சி.

1

திருச்சி சந்தன மகாலில் 15-12-13 அன்று மாலை 6 மணிக்கு வாசகர் வட்டம் புதிய ஜனநாயக விற்பனைக் குழுவின் தோழர். சேகர் தலைமையில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர். மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக்குழுத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பாடல் பாடி வாசகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

தலைமை உரையாற்றிய தோழர்.சேகர் பத்திரிகை எப்படி வரவேண்டும் என்பது பற்றி தோழர்.லெனின் சுட்டிக் காட்டிய வழிமுறைகளை விளக்கிப் பேசினார். பத்திரிகை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதாக இருக்க வேண்டுமேயொழிய, அதை விடுத்து சாலை விபத்துக்கள்,கள்ளக் காதல், நடிக நடிகையரைப் பற்றிய கிசுகிசுச் செய்திகளையும், 2G ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, தாதுமணல் கொள்ளை போன்ற மெகா ஊழல்களைப் பற்றிய பரபரப்புச் செய்திகளையும் வெளியிடுகின்றனர். இதனால் வாசகர்களுக்கு என்ன பயன்?

ஆனால் புதிய ஜனநாயகம் பத்திரிகை செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் ஊழலுக்கு தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் என்ற மைய அரசின் கொள்கையே காரணமாக இருக்கிறதென்றும், தனியார்மய கொள்கைகளை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அதற்க்கான தீர்வுகளையும் வெளியிடுகிறது. இதனால் வாசகர்கள் பயனடைகிறார்கள் என தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

வாசகர்வட்டக் கூட்டத்தில் பின்வரும் கருத்துக்களை வாசகர்கள் தெரிவித்தனர்.

  • ஒரு பத்திரிகை ஆசிரியர், புதிய ஜனநாயகம் இதழை படிக்க வாய்ப்பு கிடைத்தது. புதிய ஜனநாயகம் இந்த சமூகத்தை மாற்றியமைக்க ஆர்வமாக இருப்பதாக அறிகிறேன். இந்த ஊழல் மலிந்த சமுதாயத்தை மாற்றியமைக்க புதிய ஜனநாயகத்தால் முடியுமென நம்புவதாகவும் தெரிவித்தார்.
  • இந்த பத்திரிகை தேர்தல் பாதையை திருடர் பாதை என்று தேர்தலை புறக்கணிக்கச் சொல்லக்கூடியது. நான் ஒரு தேர்தலில் போட்டியிடும் கட்சியில் இருந்து கொண்டே புதிய ஜனநாயகம் 5 ரூபாய் விலையில் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வாசகராக இருக்கிறேன். எந்தப் பிரச்சனையானாலும் பத்திரிகையில் வெளிவரும் கருத்துக்களை தன்னுடைய கருத்தாக மாற்றி பல இடங்களில் பேசி வருகிறேன். புதிய ஜனநாயகம் மாதமிருமுறை இதழாக வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
  • அடுத்த வாசகர் பு.ஜ-வில் தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனைப்பற்றி கட்டுரை படித்தேன். அதே போல இங்குள்ள தொழிற்சாலைகளும் ஊரையே மாசுபடுத்தி வருகின்றன அதை பற்றிய செய்திகளும் வெளியிட வேண்டும் என்றார்.
  • 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழப்பிரச்சனை பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அன்றே பு.ஜ கூறிய கருத்துபடிதான் இன்றைக்கு ஈழப்பிரச்சனை முடிந்துள்ளது என்று வாசகர் ஒருவர் குறிப்பிட்டார்.
  • என்னிடம் ஒவ்வொரு மாதமும் பு.ஜ கொடுக்கிறார்கள் முடிந்த அளவுக்கு படிக்கிறேன். நல்ல கருத்துக்களையும் அரசு அடக்கு முறைக்கு எதிரான கருத்துக்களையும் பத்திரிக்கையில் எழுதுகின்றனர். நான் பு.ஜ.வை கையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்தேன். அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் அதை பார்த்தவுடன் பு.ஜ குழுவினர் நீதி, நியாயத்துக்காகவும் போராடக் கூடியவர்கள் என்று சொன்னார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்த்து என்றார்.
  • நாங்கள் பல்வேறு இடங்களுக்கு பு.ஜ இதழ் கொண்டு சென்று இருக்கிறோம். கடந்த மாதப் பத்திரிக்கையில் மன்மோகன்சிங் கார்ட்டூன் படத்தோடு “ஆடி அதிரடி விற்பனை” என்ற தலைப்பிட்ட அட்டைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த இதழில் வந்த தாதுமணல் கொள்ளை குறித்த வைகுண்டராஜனின் அட்டைப்படம் அவ்வாறு எடுபடவில்லை. வைகுண்டராஜனையே கார்டூனாக போட்டிருக்கலாம் என்று கூறினார்.
  • அடுத்ததாக பேசிய பெண் தோழர் ஒரு நாள் இரயிலில் பிரயாணம் செய்யும்போது கால்முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வயிற்று பிழைப்புக்காக இரயிலில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார். அதோடு சேர்த்து பு.ஜ இதழ்கள் விற்பதை பார்த்த தோழருக்கு ஆச்சர்யம். உடனே அவரிடம் விசாரித்ததில் அவர் பு.ஜ. வாசகர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரது உணர்வை மதித்து மற்றவர்களும் அதிகளவில் பு.ஜ.இதழை விற்போம் என உறுதியளித்தார்.
  • ஒரு வழக்குரைஞர் எனக்கு பு.ஜ.வில் வெளிவரும் செய்திகளெல்லாம் உண்மைதானா? என்ற சந்தேகம் ரொம்ப நாளாக இருந்தது. நான் கூடங்குளம் போராட்டத்தில் மக்களுடன் களத்தில் நின்று போராடினேன். அப்போது எனக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் அப்படியே அடுத்த பு.ஜ.இதழில் வெளிவந்தது. அதிலிருந்துதான் உண்மையைத் தவிர வேறு எதையும் அவர்கள் எழுதுவதில்லை என உணர்ந்தேன் என்றார்.
  • பு.ஜ.கட்டுரைகள் படிப்பதால் அரசின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. எல்லா துறையும் சார்ந்த அதிகாரிகள் மத்தியிலும் நம்மை ஐக்கியப்பட வைக்கிறது. நமக்கு எதிராக உள்ள அரசியல்வாதிகள், சாதி தலைவர்களையும் பு.ஜ.வாங்கி படிக்க வைக்கிறது.
  • ஆரம்பத்தில் 5 இதழ்கள் மட்டுமே விற்பனையான இடத்தில் இன்று 50 இதழ்கள் விற்பனையாகிறது. மக்கள்படும் கஷ்டங்கள், துன்ப துயரங்கள் பற்றி எழுதுகிறார்கள். தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. பு.ஜ.மட்டுமே வெளியிட்டது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெருகிறது என்றார்.
  • நான் கடந்த 2மாதமாகத்தான் இந்த இதழை படித்து வருகின்றேன். இயல்பிலேயே நான் கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் இந்த மேடை ஏறி பத்திரிகை பற்றி கருத்து கூறும் அளவிற்க்கு தைரியம் கொடுத்தது பு.ஜ.தான் என்றார்.

அடுத்ததாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் “சங்கராச்சாரி விடுதலை….பார்ப்பன கும்பல் கும்மாளம்! தில்லை சிதம்பர நடராஜர் கோவிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் சதி உச்சிக்குடுமி மன்றத்தில் நடப்பது என்ன?” என்ற தலைப்பில் விளக்கவுரை ஆற்றினார்.

“காஞ்சிபுரம் கோவில் மேலாளர் சங்கரராமனை கடந்த 2004ல் சங்கராச்சாரியே ஆளை வைத்து கோவிலின் உள்ளேயே வெட்டி படுகொலை செய்தார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தும் சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறிவிட்டார்கள். (கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல) போலீசு சரிவர குற்றத்தை நிரூபிக்கவில்லை என்று சங்கராச்சாரி உள்ளிட்ட கொலை கும்பலை விடுதலை செய்து விட்டார் நீதிபதி. பார்ப்பனக் கும்பல் கொண்டாட்டத்தில் திளைக்கிறது.

தில்லை கோவில் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் 1890-ல் நீதிபதி முத்துசாமி ஜயர் என்பவர் தீட்சிதர்களுக்கு சொந்தம் கொண்டாட எந்த உரிமையில்லை என தீர்ப்பளித்து விட்டார். மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களும், புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் தீட்சிதர்களிடம் இருந்த இந்த கோவிலை போராடி இந்து அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வைத்தனர். அந்த கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்றும் தமிழ் நீசபாசை, வேசி மக்கள் பேசும் மொழி என்றும் தீட்சிதர்கள் தடுக்கின்றனர். கோவில் எங்களுக்கு சொந்தம் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடுகின்றனர். உச்சநீதி மன்றமும் தீட்சிதர்கள் கருத்துக்களைதான் கேட்கிறது. நமது கருத்தை கேட்க மறுக்கிறது. ஆக மொத்தத்தில் நீதி மன்றத்தில் கூட பார்ப்பன கும்பலின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது”

என்று அவர் தனது உரையில் கூறினார்.

இறுதியாக பு.ஜ விற்பனைக்குழு தோழர்.ஜோசப் நன்றி கூறி வாசகர் வட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
பு.ஜ. செய்தியாளர், திருச்சி.

தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !

8

அடிபணிதல் கலாச்சாரங்களும், தேவயானி-சங்கீதா பிரச்சனையும் : நிசிம் மன்னத்துக்காரன்

பெரிய பண்ணையார் கடந்து போகும் போது புத்திசாலி விவசாயி குனிந்து வணங்கி, குசுவை அடக்கி விடுவான்  (எத்தியோப்பிய பழமொழி)

அமெரிக்க தூதரக விசா வரிசை
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம்.

ர்ணாப் கோஸ்வாமியுடன் முற்போக்கு அரசியல் ஒத்துப் போகிறது என்றால் அது அபாய மணிகள் ஒலிக்க வேண்டிய நேரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். சென்ற வாரம் அரங்கேற்றப்பட்ட காட்சிகளை அட்டகாசமானவை என்றுதான் வர்ணிக்க வேண்டும். தேவயானி கோப்ரகடே பிரச்சனையில், தவறிழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஒரு மூன்றாம் உலக நாடு, ஏகாதிபத்திய சைத்தானை ஒரு வழியாக எதிர்த்து நின்றது. வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பிடிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான். அதன் பின்னே புதைந்திருக்கும் தீவிரமான காரணிகள் மட்டும் இல்லாதிருந்தால் அது சிரித்து ரசிக்க வேண்டிய நாடகமாக இருந்திருக்கும்.

அமெரிக்க உலகப் பார்வையுடன் முழுதும் ஒத்துப் போகும் (அமெரிக்காவை நேசிக்கும் தேசங்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது), அமெரிக்காதான் ஜனநாயகத்தின் சிறந்த முன்மாதிரி என்று கருதும் (ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் வேறு எந்த நாட்டையும் விட அதிக இந்தியர்கள் அமெரிக்கா ஒற்றைத் துருவ அரசு இல்லை, பன்முகத் தன்மை கொண்ட அரசு என்று கருதுவதாக தெரிய வந்தது) மேட்டுக் குடியினரையும் நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்ட தேசம் இது. அமெரிக்கக் கனவில் வாழும் மாணவர்களும், இளைஞர்களும் (அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம்) நிறைந்த நாடு இது. அமெரிக்க ஆளும் அமைப்புடன் நிரந்தர நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் கனவில் புளகாங்கிதம் அடையும் ஆட்சியாளர்கள் (இந்திய-அமெரிக்க நீண்டகால ஒப்பந்தம், 21-வது நூற்றாண்டின் திருப்புமுனை உறவு என்று அழைக்கப்படுகிறது) வாய்த்த நாடு இது.

போபால் விஷவாயுக் கசிவு
போபால் விஷ வாயுக் கசிவில் உயிரிழந்த 5,295 பேருக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத தேசம் இது.

‘நாம் அமெரிக்காவை ஆராதிக்கும் அளவுக்கு அமெரிக்கர்கள் நம்மை நேசிக்கவில்லை’ என்ற நிதர்சனத்தை சென்ற வாரம் இவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால்தான் ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்டு விரக்தியடைந்த காதலனைப் போல எதிர்வினைகள் பொங்கி வழிந்தன.

அவ்வாறு பெருகி ஓடிய கோபங்கள் நமது கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான, மோசமான ஒன்றை வெளிப்படுத்துகின்றன. நமது சுயமரியாதை மற்றும் அவமானத்தின் அளவுகோல்களை அது அம்பலப்படுத்தியது.

உலகிலேயே மிக மோசமான தொழில் துறை விபத்தான போபால் விஷ வாயுக் கசிவில் உயிரிழந்த 5,295 பேருக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத தேசம் இது. அந்த கோர விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க, அமெரிக்க தூதரகத்தின் முன்பு பாதுகாப்பு தடைகளை மட்டுமல்ல, தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது. இவர்கள்தான் ஒரு பெண் தூதரக அதிகாரி சோதனையிடப்பட்ட அவமானத்தையும், தனது குழந்தைகளின் முன்பு கைது செய்யப்படக் கூடாது என்ற அவரது உரிமை மீறப்பட்டதையும் கண்டு பொங்கி எழுந்தார்கள்.

(ஒரு வேளை, லல்லு பிரசாத் யாதவ், சஞ்சய் தத் போன்ற கைதிகளையும், கேரளாவில் சிறையிலிருந்தே பேஸ்புக் நிலைத் தகவல் போடும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரின் கொலையாளியையும் நாம் நடத்துவது போல அமெரிக்க நீதித் துறை தனது விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை மரியாதையுடன் நடத்துவது இல்லை என்று இவர்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம்!)

சாவனூர் போராட்டம்
சாவனூரில் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை தமது உடலில் பூசி போராட்டம்.

நமது குடிமக்களில் பெரும்பான்மையினர் இதை விட படு மோசமான இழிவுகளை தினமும் சந்திக்கின்றனர் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சோனி சோரியின் துவாரங்களில் போலீஸ் கற்களை திணித்து வலுவந்தம் செய்த போது இந்த மேட்டுக் குடியினரின் கோபம் எங்கே போயிருந்தது? 2010-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் சாவனூரில் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை தமது உடலில் பூசி போராடிய போது இவர்களது புண்படக் கூடிய இதயங்களும், அவமானப்படும் சுயமரியாதைகளும் எங்கு போயிருந்தன? அவர்களைப் பொறுத்த வரை, தம் சக இந்தியர்களின் மலத்தை சுமக்கும் அந்த பாங்கி சாதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை ஒன்று இருந்தால்தானே, இழப்பதற்கு!

ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த கோடிக் கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் கொத்தடிமை சூழல்களில் உழைத்துக் கொண்டிருப்பது பற்றி நமது தூதுவர்களும், தூதரகங்களும் என்ன செய்கிறார்கள்? அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்வதில் மும்முரமாக இருந்த இந்த அரசு முசாஃபர் நகர் நிவாரண முகாம்களின் மனிதர் வாழ தகுதியற்ற சூழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 50,000 பேருக்கு, போர்த்திக் கொள்ள கம்பளிகள் இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் அவர்களது குழந்தைகளுக்கு என்ன செய்கிறது என்று இந்த தேசம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? இவர்களது சுயமரியாதையின் வரையறைதான் என்ன?

அமெரிக்க வியர்வைக் கூடங்கள்
அமெரிக்க வியர்வைக் கூடங்கள்

இந்தத் தருணத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பும் போது, “உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாடுகளில் ஏகாதிபத்தியம்” என்ற கொள்கையை மிக நேர்த்தியாக, மிகத் திறமையாக கடைப்பிடிக்கும், “தனக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு வேறு சட்டம்” என்று வைத்திருக்கும் உலகின் மகத்தான ஜனநாயகத்தின் இரட்டை முகங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த வழக்கை தீர்த்துக் கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியாது என்பது இந்திய அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையேயான இந்த சச்சரவு தொடர்பான ஒரு முக்கிய விபரம். ஏனென்றால் அமெரிக்கா அந்த நீதிமன்றத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் இதைப் பற்றி பேசுவதால், அமெரிக்காவில் குறைந்த பட்ச கூலியை விட குறைவான ஊதியத்துக்கு, எந்த வித சட்ட பாதுகாப்பும் இல்லாமல் உழைக்கும் ஆயிரக் கணக்கான சட்ட விரோத குடியேறிகள் இல்லை என்று ஆகி விடாது. தெற்கு கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட 1,500 சோதனைகளில் 93 சதவீதம் சட்ட மீறல் இருப்பதாக தெரிய வந்த வியர்வை உழைப்புக் கூடங்கள் இல்லை என்று ஆகி விடாது.

அவர்களது உள்நாட்டு நிலைமை இந்த அளவு மோசமாக இருந்த போதிலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித்துவ சமூகங்கள் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அடிமைத் தனம் இதை விட கொடூரமானது. தமது குப்பைகளை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவது போல, உழைப்பாளர்கள் மீதான அவமானங்களையும், மனிதச் சுரண்டலையும் வேறு இடங்களுக்கு அனுப்பி விடுவதன் மூலம் ‘முன்னேறிய’ நாடுகள் தமது தெருக்களையும், மனசாட்சியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது, தமது குடிமக்களுக்கு குறைந்த பட்ச சம்பள சட்டத்தை செயல்படுத்த முடிகிறது.

வங்க தேச படுகொலை
இவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம் கிறிஸ்துமசுக்கும், பாக்சிங் டேக்கும் அமெரிக்கர்களுக்கு மலிவான விலைகளில் ஆடைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது

இவ்வாறாக மற்றவர்களின் வலியை பார்க்காமல் தவிர்த்துக் கொள்கிறது அமெரிக்கா. வால்மார்ட் உட்பட மேற்குலகின் முக்கியமான ஆடை நிறுவனங்களுக்கு ஆயத்த ஆடைகளை செய்து அனுப்பும் வங்கதேசத்தின் ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்த இடிபாடுகளில் பிரிக்க முடியாத இறுதி அணைப்பில் புதைந்து கிடந்த தம்பதியினரின் அச்சுறுத்தும் முகங்களை எதிர் கொள்வதை அது தவிர்த்துக் கொள்கிறது.

அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடன் புதைக்கப்பட்ட 1,129 தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட மாத ஊதியம் $38.5. அதுதான் அவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம். கிறிஸ்துமசுக்கும், பாக்சிங் டேக்கும் அமெரிக்கர்களுக்கு மலிவான விலைகளில் ஆடைகள் கிடைப்பதை இந்த ஊதியம்தான் உறுதிப்படுத்துகிறது. சராசரி கார்ப்பரேட் தலைமை அலுவலரின் சம்பளம் சராசரி தொழிலாளியின் சம்பளத்தை விட 273 மடங்காக இருக்கும் (சில பத்தாண்டுகளுக்கு முன்பு 10-20 மடங்காக இருந்ததிலிருந்து அதிர்ச்சியளிக்கும் அதிகரிப்பு) அமெரிக்கா இந்த குறைந்த பட்ச சம்பளத்தின் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முடியுமா, என்ன?

அமெரிக்காவும் மற்ற வளர்ந்த சமூகங்களும் தமது பெட்டிகளுக்குள் பல பிணங்களை மறைத்து வைத்திருந்தாலும், நமது அடிமை கலாச்சார அவமானத்தை மறைத்துக் கொள்ளும் மரவுரியாக அவற்றை பயன்படுத்த விடக் கூடாது. இந்த தூதரக அதிகாரியின் பிரச்சனை அப்படித்தான் மாற்றப்பட்டிருக்கிறது.

அர்ணாப் கோஸ்வாமி
அர்ணாப் கோஸ்வாமியின் கட்டப் பஞ்சாயத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக, தேவயானிக்கு ஆதரவாக யார் சாட்சி சொன்னார்கள் என்று தெரியுமா?

இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நீதிமன்றங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதோ, தூதரக அதிகாரியை வில்லனாக சித்தரிப்பதோ தேவையில்லாத ஒன்று. பார்க்கப் போனால், தேவயானி குறைந்த பட்ச ஊதியம் வழங்கவில்லை என்ற சட்ட மீறல் அவரால் மட்டும் செய்யப்படுவது இல்லை. இது சில காலமாகவே இருந்து வரும் கட்டமைக்கப்பட்ட பிரச்சனையின் ஒரு பகுதி. இந்திய, அமெரிக்க அரசுகள் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தன.

ஆனால், இந்த நிகழ்வுக்கான எதிர்வினைகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தன என்பதை சொல்வதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. தேவயானியின் ‘புனிதத் தன்மை’யையும், ‘எவ்வளவு கருணையான எஜமானி அவர்’ என்பது பற்றியும் ஊடகங்களில் பல விபரங்கள் வெளியாகின. அர்ணாப் கோஸ்வாமியின் கட்டப் பஞ்சாயத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக, தேவயானிக்கு ஆதரவாக  யார் சாட்சி சொன்னார்கள் என்று தெரியுமா? (நிகழ்ச்சியில் தோன்றி வாயைத் திறக்க விடாமல் உட்கார்ந்திருப்பதற்கு சம்மதித்த அந்த அமெரிக்கர்கள் யார் என்று ஆச்சரியமாக இருக்கிறது). அந்த சாட்சி தேவயானியின் தந்தைதான். அவரது சாட்சியத்தின் அடிப்படையில் தேவயானி மீதான குற்றச்சாட்டுகளில் எந்த நியாயமும் இல்லை என்று கோஸ்வாமி தீர்ப்பு சொன்னார். சங்கீதா ரிச்சர்டின் சார்பாக பேசுவதற்கு அவர் யாரையும் அழைக்கவில்லை என்பதை சொல்லவும் தேவையில்லை.

சங்கீதாவைப் பற்றி நாம் பல விபரங்களை கேள்விப் படுகிறோம்; அவர் வளர்ச்சிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தவர்; அவருக்கு சொந்தமாக ஐ-பேட் இருந்தது (ஒரு ‘வேலைக்காரி’க்கு ஐ-பேட் சொந்தமாக இருக்க முடியுமா, சரிதானே?); அவருக்கு  செல்வாக்கு மிகுந்த தொடர்புகள் இருந்தன (அவரது உறவினர்கள் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்கிறார்கள்); அவர் ‘நன்கு உடையணியும்’, ‘நன்கு படித்த’ நபர்.

பிரபு தயாள்
வீட்டு வேலை செய்யும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நியூயார்க்கில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தூதர் பிரபு தயாள்.

தேவயானியை போலவே வீட்டு வேலை செய்யும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நியூயார்க்கில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தூதர் பிரபு தயாள், ” ‘அமெரிக்கக் கனவுகளை துரத்தும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்’ வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அமெரிக்காவில் பணி புரியும் இந்திய தூதரக அதிகாரிகள் வாழ்கிறார்கள்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரைப் பொறுத்த வரை இந்திய அதிகார வர்க்கத்தின் மிக உயர்ந்த மேட்டுக் குடியினரான வெளியுறவு அதிகாரிகள், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். “கடந்த பல ஆண்டுகளில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற பல வீட்டு வேலை செய்யும் பணியாளர்களும், பாதுகாவலர்களும் தலைமறைவாகி விட்டார்கள்” என்று அவர் விளக்குகிறார். இந்தியாவில் பாலும், தேனும் ஓடிக் கொண்டிருந்தால், தயாள் சொல்வது போல இந்தியர்கள், “அமெரிக்காவுக்குப் போய் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்தாவது அங்கு தங்கி விட முயற்சிப்பது” ஏன்? (இந்திய அதிகாரிகளில் சிலர் தம் தாய் நாட்டுக்குத் திரும்பி வராமல் தலைமறைவான நிகழ்வுகளைப் பற்றிச் சொல்ல அவர் மறந்து விடுகிறார்).

இந்த வழக்கின் எதிர்தரப்பான, வேலை செய்யும் பெண்ணின் நியாயங்கள் முழுக்க முழுக்க இருட்டடிக்கப்படுவது நாம் எப்படிப்பட்ட சமூகம் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.  உணர்வு ரீதியாகவோ, உணர்வு ரீதியாக அல்லாமலோ பொருளாதார வழிகளிலும் கலாச்சார கட்டுத் திட்டங்களாலும் உழைக்கும் வர்க்கத்தை அடிபணிய வைத்து இழிவு படுத்துவதில் திளைக்கும் நமது கூட்டு மனசாட்சியை அது அம்பலப்படுத்துகிறது. இந்த உழைக்கும் மக்களில் பெரும் எண்ணிக்கையிலான ஆயாக்களும், வீட்டு வேலை செய்பவர்களும் அடங்குவார்கள். இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு) மட்டுமே வீட்டுப் பணியாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளன.

தேவயானி, சங்கீதா
வெளியுறவுத் துறை அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அவரது தந்தைக்கும் எதிராக ஒரு பணிப்பெண் இந்திய நீதி அமைப்பில் என்ன செய்து விட முடியும்?

வீட்டுப் பணியாளர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தலித் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினரை சேர்ந்தவர்கள். தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பொறுத்த வரையில் பொருளாதாரச் சுரண்டலுடன் சாதி அடிப்படையிலான அவமானங்களால் சேர்ந்து சுரண்டலை கடுமையாக்குகின்றன.

இத்தகைய கட்டமைப்பில், சுரண்டல் கலாச்சாரத்தில், வெளியுறவுத் துறை அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அவரது தந்தைக்கும் எதிராக ஒரு பணிப்பெண் இந்திய நீதி அமைப்பில் என்ன செய்து விட முடியும்? (இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் சங்கீதாவின் குற்றத்தையும், பிழையையும் பலர் முன் முடிவு செய்கின்றனர். ஆனால் கோப்ரகடேக்கள் இந்திய நீதிமனங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க முடிந்த வேகமே அவர்களுக்கும் சங்கீதாவுக்கும் இடையேயான அதிகார ஏற்றத் தாழ்வை காட்டவில்லையா?). அமெரிக்க நீதி அமைப்பில் அதற்கேயுரிய சமத்துவமின்மைகளுடனும் குறைபாடுகளுடனும் சங்கீதாவுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குக் காரணம் அமெரிக்கா புனிதர்களின் நாடு என்பதில்லை. மாறாக, கடந்த கால வரலாற்றில் உழைக்கும் வர்க்கங்கள் போராடிப் பெற்ற வெற்றிகளின் மூலம் அமெரிக்காவின்உழைக்கும் மக்களும், ஒடுக்கப்பட்டவர்களும் (குடிமக்களுக்கும், சட்டபூர்வமான குடியேறிகளுக்கும் மட்டுமாவது) பல மடங்கு மேம்பட்ட பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள்.

டொமினிக் ஸ்ட்ராஸ் கான்
நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் பணிப் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்ட டொமினிக் ஸ்ட்ராஸ் கான்.

ஐ.எம்.எஃப் அமைப்பின் தலைவராக இருந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த, உலகிலேயே மிக சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான டொமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் பணிப் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்டார். குற்றவியல் வழக்கு தொடரப்படா விட்டாலும், நீதிமன்றத்துக்கு வெளியே $6 மில்லியன் நிவாரணம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டி வந்தது. 1985-ம் ஆண்டு போபால் விஷ வாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான மக்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு ஒதுக்கிய மொத்த இடைக்கால நிவாரணத் தொகையில் பாதி இது.

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்தான், ஏழைகள் மீதும், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதும் ஒரே மாதிரியான பார்வையையும், உலகிலேயே மிக மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கொண்டவைதான். இருப்பினும் வரலாற்று மற்றும் சமகால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி காரணங்களினால் இரு நாடுகளின் கலாச்சாரமும், அடிமைத்தனமும் வேறுபட்டிருக்கின்றன. அமெரிக்கா அடிமைக் கலாச்சாரத்தை வெளி இடங்களுக்கு அனுப்பி விட்டு உள்நாட்டில் அறிவுபூர்வமான சட்ட ஒழுங்கையும், ஜனநாயகம் போன்ற தோற்றத்தையும் பராமரிக்க முடிகிறது. மாறாக, இந்தியாவின் அடிமைக் கலாச்சாரம் அதன் எல்லைகளுக்குள்ளாகவே குடி கொண்டிருக்கிறது.

இந்த வழக்கை தேவயானி-சங்கீதா என்ற இரண்டு தனி நபர்களுக்கிடையேயான பிரச்சனையாக குறுக்கி விடாமல் (அவர்களில் யார் தவறு செய்தார்கள் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை) அல்லது இரண்டு தேசங்களுக்கு இடையேயான பிரச்சனையில் ஒரு தேசத்தின் பெருமை காயப்படுத்தப்பட்டதாக குறுக்கி விடாமல், நமது அடிமைக் கலாச்சாரத்தின் சுரண்டல் மற்றும் வன்முறை கட்டமைப்பு குறித்த பொது விவாதத்தை தொடங்க வேண்டும். நமது பரந்து பட்ட சமூகத்தில் காணப்படும் இந்த கலாச்சாரம்தான் நமது அதிகார அமைப்பிலும், அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

கதவு திறந்து விடுபவர்
இந்த கலாச்சாரம்தான், தொழிலாளர்களும், பணியாளர்களும் நமக்காக கதவைத் திறந்து விடக் கோருகிறது.

இந்தக் கலாச்சாரம்தான், தொழிலாளர்களும், பணியாளர்களும் நமக்காக கதவைத் திறந்து விடக் கோருகிறது. நாம் போகச் சொல்வது வரை அவர்களை நமக்கு சேவை செய்ய காத்திருக்க வைக்கிறது. இந்த கலாச்சாரம்தான், இப்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கும் விவாதத்தில் பார்ப்பது போல, யாரையும் நியாயமான சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தும் சுதந்திரத்தை தொழிலாளர்களையும், பணியாளர்களையும் கொடுமையாக சுரண்டுவதற்கான நமது உரிமையாக மாற்றுகிறது.

அதனால்தான் பிரபு தயாளும் மற்ற தூதரக அதிகாரிகளும் முன் வைக்கும் தீர்வுகளில் எல்லா தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக சட்ட விலக்கு அளிப்பது மட்டும் பேசப்படுகிறது. தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியாவிலிருந்து இந்தியப் பணியாளர்களை அழைத்துச் செல்வதைப் பற்றியும், தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் இந்தியாவில் இல்லாத நிலையில் தமது எஜமானர்களுடன் வசிக்கும் அவர்கள் எதிர் கொள்ளும் அடக்குமுறை சாத்தியங்கள் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை.

600 முதல் 700 அதிகாரிகளை மட்டுமே கொண்ட நமது வெளியுறவுத் துறை அமைப்பின் அதிகாரிகள் (நியூசிலாந்து, மலேசியா போன்ற சிறு நாடுகளின் வெளியுறவுத் துறைகளில் கூட இத்தனை அதிகாரிகள் உள்ளனர்), மற்ற துறையினரை அனுமதித்து இந்த மேட்டுக் குடி கிளப்பை விரிவாக்குவதை கடுமையாக எதிர்க்கின்றனர். வளர்ந்து வரும் இந்தியாவுக்கு தூதரக அதிகாரிகளின் பற்றாக்குறை இருந்த போதும் இந்த நிலைமை (சீனாவில் இதைப் போன்ற ஏழு மடங்கு அதிகாரிகள் உள்ளனர்) பராமரிக்கப்படுகிறது. இத்தகைய தூதரக அதிகாரிகளும், ஆட்சிப் பணி அதிகாரிகளும் தமது மேட்டுக்குடி சலுகைகளை விட்டுக் கொடுக்க எப்படி சம்மதிப்பார்கள்?  அவர்களுக்கு வழங்கப்படும் மேட்டுக்குடி சலுகைகள் பற்றிய விவாதம் எப்படி நடக்கும்?

போபால் பேரழிவு
அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்கு டொமினிக் ஸ்டராஸ் கான் கொடுத்த நிவாரணம் போபால் விஷ வாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான மக்களுக்குக் கிடைத்த நிவாரணத் தொகையில் பாதி.

கேரளா குறித்த எனது ஆய்வு தொடர்பாக அரசு அதிகாரிகளாக இருக்கும் நண்பர்களுடன் பேசிய போது, ‘அதிகாரிகளுக்கு மரியாதை காட்டாத’ கேரள அதிகார அமைப்பின் ‘அடிபணிய விரும்பாத’, ‘ஆணவம் மிக்க’ ஊழியர்கள் சில வெளி மாநில அதிகாரிகளுக்கு ‘கொடுங் கனவா’க இருக்கிறார்கள் என்பது தொடர்பான சில நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு ஐ,.ஏ.எஸ் அதிகாரிக்கு உட்கார இடம் கொடுக்காத ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், சரியாக மாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்ட ஓட்டுனரால் தானே காரை ஓட்டிக் கொண்டு வீடு போக நேர்ந்த பெண் அதிகாரி, ‘மலையாளிகள் தமது எஜமானர்களை மதிக்காமல் நடந்து கொள்வது போலத்தாம் தன்  தாய், தந்தையிடமும் நடந்து கொள்வார்களா’ என அதிர்ச்சியடைந்த ஒரு மூத்த அதிகாரி போன்றவை இதில் அடங்கும்.

பரந்து பட்ட அடிமைக் கலாச்சாரத்தின் சிறு துணுக்குகள்தான் இவை. கேரளா போன்ற மாநிலங்களின் தொழிலாளர்களும், பணியாளர்களும் இந்த அடிமைக் கலாச்சாரத்தை வளைத்து சில உரிமைகளை பெறவும், சிறிதளவு சுயமரியாதையை பேணவும் முடிந்திருக்கிறது. இருப்பினும், இங்கும் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுபவர்களில் பெரும் பகுதியினர் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள்தான். இந்த பகுதிகளிலும் அடிமைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படாமல் அமெரிக்காவில் இருப்பதைப் போன்று புதிய, மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளாகத் தொடர்கின்றன.

இப்போதைய விவாதங்களின் இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சமாக, ஒரு முன்னேறிய தலித் பெண்ணாக ‘வெளி உலகுக்கு நமது பெருமையை பிரதிநிதித்துவப்படுத்தும்’ தேவயானியின் பெயரால் சங்கீதாவின் பெயரை இழிவுபடுத்துவதாகவும், பணிப்பெண்களின் குரலையும் உரிமைகளையும் முடக்குவதாகவும் நடக்கும் பொதுவிவாதத்தில் முற்போக்கு தலித் இயக்கத்தின் ஒரு பகுதியினர் பங்கேற்பது அதிர்ச்சியூட்டுகிறது. சங்கீதா என்ன சாதி என்று நமக்கு இன்னும் தெரியாது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ‘முன்னேறிய பெண்ணாகவோ, நமது பெருமையை வெளி உலகுக்கு பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ’ இல்லை. அதனால்தான், அவரது போராட்டம் (சங்கீதா, தான் சுரண்டப்படுவதாக சொல்வது இந்த வழக்கில் பொய்யாக போனாலும், வீட்டுப் பணியாளர்கள் அனைவரின் போராட்டம்) சாதி உட்பட அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

மாயாவதி - தலித் அரசியல் மகாராணி
தேவயானி மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான விமர்சனங்களும் வைக்கப்படக் கூடாது என்பதுதான் தலித் முற்போக்கு அரசியலா? (மாயாவதி – தலித் அரசியல்)

தேவயானி தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் (அமெரிக்க அமைப்பின்படி குறை கூலி கொடுத்தது தொடர்பான குறுகிய வரையறையில் மட்டுமின்றி, அவரும் சங்கீதாவும் ஏற்றுக் கொண்ட ஷரத்துகளின் அடிப்படையிலும், இந்தியாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும்) அவர் ஆதிக்க சாதியினரால் இயக்கப்படும் இந்த சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாகவும் பங்கு பெறுபவராகவும் மட்டுமே இருப்பதால் அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான விமர்சனங்களும் வைக்கப்படக் கூடாது என்பதுதான் தலித் முற்போக்கு அரசியலா? இதே சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்தப் போக்குகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தலித் அதிகாரிகளுக்கு அது என்ன மதிப்பைத் தரும்.

அடிமைக் கலாச்சாரத்தை தேசிய அடையாளம் அல்லது சாதி அடையாளத்தின் மூலம் மட்டும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முடியாது. இந்த எல்லைகளைத் தாண்டிய ஒடுக்குமுறைகளும் நிலவுகின்றன. தேவயானி மேட்டுக்குடி அதிகார வர்க்க அமைப்பில் இருந்தாலும், அவர் இன்னொரு மட்டத்தில் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் அடக்குமுறைகளை சந்திக்கலாம். அமெரிக்காவில் அவர் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்ததேசமும் தேவயானிக்காக நிற்கிறது, சங்கீதாவுக்காக யாரும் நிற்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் சங்கீதாவுக்காக வாதிடுவதற்கு அமெரிக்கர்களைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லை.

ஒரு பெண்ணுக்கு எதிராக இன்னொரு பெண்ணை நிறுத்துவது இங்கு பிரச்சனை இல்லை. (இறுதியில் இருவரில் ஒருவரது குற்றச்சாட்டுதான் உண்மையாக இருக்க முடியும்), ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எஜமானர்களையும், சேவகர்களையும் உருவாக்கும் சுரண்டலின் அமைப்பையும் வடிவத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இதைப் பயன்படுத்தி அனைத்து விதமான தொழிலாளர்களையும் பணியாளர்களையும் பாதுகாப்பது குறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்குவது பற்றியும், சிறுபான்மை எண்ணிக்கையிலான தூதரக அதிகாரிகளும் மேட்டுக் குடியினரும் அனுபவிக்கும் அளவுக்கதிகமான மேட்டுக் குடி ஆடம்பரங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் இந்த சுரண்டல் அடுக்குகளிலும் சங்கிலியிலும் நாம் பங்கெடுப்பது பற்றி விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது அளவில் அனுபவிக்கும் மேட்டுக் குடி உரிமைகளை புரிந்து கொள்வது குறித்தும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு நாம் அடிமையாக இருப்பது பற்றியும் விவாதிக்க வேண்டும்.

நிசிம் மன்னத்துக்காரன் கனடாவின் டல்ஹௌசி பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார்.

நன்றி: kafila
தமிழாக்கம்: அப்துல்

விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !

2

அடிக்கரும்பு முதலாளிகளுக்கு – திருடனுக்கு கடன் சலுகை
நுனிக்கரும்பு விவசாயிகளுக்கு – பறிகொடுத்தவனுக்குப் பட்டை நாமம்.
சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலையின் மோசடியும்  கரும்பு விவசாயிகளின் கசப்பான நிலையும்.

நா மகாலிங்கம், ப சிதம்பரம்
ப.சிதம்பரத்துடன் நெருக்கமான உறவில் உள்ளவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்தான் சக்தி குழுமத்தின் உரிமையாளர்.

சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளில் பெரும்பாலோனரை ஆலைக்கரும்பு விவசாயத்திற்கு மாற்றியது படமாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சக்தி சர்க்கரை ஆலை. ப.சிதம்பரத்துடன் நெருக்கமான உறவில் உள்ளவரும் பொய், ஃப்ராடு, பித்தலாட்டம், சட்டவிரோதம், மக்கள்விரோதம், வெளிவேஷம், ஆகியவற்றின் நவீன கால இந்தியத் திருடர்களின் பிரதிநிதியான அம்பானிக்கு இணையான தமிழகப் பிரதிநிதி பொள்ளாச்சி நா. மகாலிங்கம்தான் இந்த சக்தி குழுமத்தின் உரிமையாளர். பொருட்செல்வம் சேர்ந்ததால் அருட்செல்வரான இந்த ஆன்மீகச் செம்மலின் ஆலை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமை சொல்லில் அடங்காதது.

சரியான நேரத்தில் கரும்புக் கருனைகளை முழுமையாக வழங்காதது; கட்டிங் ஆர்டர் எனப்படும் வெட்டாணையை கரும்பு விளைச்சலுக்குப் பொருத்தமான நேரத்தில் வழங்காமல் ஆலையின் உற்பத்தி வசதிக்கேற்ப வழங்குவது; இதெல்லாம் போக, தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையில் கரும்பை எடைபோடும் மிஷினில் தில்லுமுல்லு செய்து அளவையைக் குறைத்துக் காண்பிக்கும் மகா மோசடி; விவசாயிகளை வஞ்சித்தே கொழுத்துப்போன இந்த ஆலை இப்போது அடிக்கும் கொள்ளை தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் பாணியில் அடிப்பதுதான்.

கரும்பு விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. விளைவிக்கப்பட்ட கரும்புகளை வெட்டி ஆலைக்குக் கொண்டு வரும் விவசாயிகளுக்காக ஆலை கொடுக்க வேண்டிய பணத்தில் வங்கிக் கடனுக்கான பணத்தை பிடித்தம் செய்து கொள்கிறது. பின்னர் அதை வங்கியில் கட்டி விடுகிறது. விவசாயிகளின் மீது நம்பிக்கையில்லாமல் கடன்தொகையை வசூலிப்பதற்காக விவசாயிகளை இழிவுபடுத்தும் இப்படி ஒரு ஏற்பாட்டை வங்கிகளும் ஆலையும் சேர்ந்து ஆரம்பத்திலிருந்தே நடத்திக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையினை ஆலையானது வங்கியில் செலுத்தவில்லை. விவசாயிகளை நம்பாமல் ஆலையை நம்பிய வங்கிக்கு இப்போது ஆலை நாமம் சாத்தி வருகின்றது. விவசாயிகளும் தொடர்ச்சியாக இது குறித்து அரசிடம் முறையிட்டுக் கொண்டே வருகிறார்கள். அரசும் ஆலையோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே வருகின்றது. இந்த வருடம் வரை ஆலையானது வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 60 கோடி. வெறும் 6,000 ரூபாய் பாக்கிக்காக விவசாயிகளின் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் சக்தியிடம் 60 கோடியை வசூலிக்க முடியாமல் வெறும் வாயை மெல்லுகின்றன. ஆலையோ வங்கிகளின் நாக்கில் சர்க்கரையைத் தடவுகிறது.

சக்தி சர்க்கரை ஆலை
சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் எனும் மெகா சீரியல் நாடகத்தில் இப்பிரச்சினையை விவசாயிகள் எழுப்ப முடிவு செய்த போது, கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சினையை இப்போது எழுப்ப வேண்டாம், அவர்கள் கடனைக் கட்டுவதாக உறுதி கூறியுள்ளதாகச் சொல்லித் தடுத்திருக்கிறார். இவர் மாவட்டக் கலெக்டரா? சக்தி சுகர்ஸ் மேனஜரா? காங்கிரஸ், சி.பி.ஐ. சி.பி.எம், சில உதிரிகள், மற்றும் ஆலையே சில அல்லக்கைகளை வைத்து நடத்தி வருகின்ற விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகள் இந்த ஏமாற்று வேலைக்குத் துணை போயுள்ளனர்.

நீதி, போலீசு, வருவாய், வேளாண்மை பள்ளிக் கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சிவகங்கைக்கு வரும் போதெல்லாம் ஆலையின் விருந்தினர் இல்லத்திற்குத்தான் வந்து ஓய்வெடுக்கிறார்கள். அங்கே சகலவிதமான சேவைகளும் அவர்களுக்கு செய்யப்படுகின்றன. எனவே எந்த அதிகாரியும் சக்திக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. அவர்கள் வாயைத் திறந்து சொல்வதென்னவோ, வாழ்க வளமுடன் மட்டும்தான்.

இந்த நான்கு ஆண்டுகளில் இப்பகுதியின் கரும்பு உற்பத்தி 8 லட்சம் டன்னிலிருந்து 3 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. விவசாயிகள் தங்களது கரும்புகளை மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அரசு ஆலைக்கு அனுப்ப முடிவு செய்து கலெக்டரிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைக் கொடுப்பதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடனாக ரூபாய் 7,500 கோடியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியிருக்கிறார்.

இதுதான் அரசின் முதலாளித்துவ விசுவாசம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எதையும் செய்யாதது மட்டுமல்லாமல் இந்த ஆண்டிற்கான கரும்பின் கொள்முதல் விலையையும் குறைத்துள்ள அரசு விவசாயிகளின் பணத்தில் மஞ்சக்குளிக்கும் ஆலைகளுக்கோ வட்டியில்லாக் கடன் வழங்குகிறது, அதுவும் 7,500 கோடி ரூபாய்.

இப்போது விவசாயிகளுக்குத் தேவை ஒரு சரியான சங்கம்தான். ஓட்டுக் கட்சிகள் கட்சிகளாக தங்களுக்குள் எவ்வளவோ முரண்பாடு இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் சங்கம் என்று வருகையில் கூட்டுப்பங்கு போடுவதுதான் அவைகளுக்குக் குறியாக உள்ளது. அதுவும் விவசாயிகளைப் பொறுத்த வரையில் போலிக்கம்யூனிஸ்டுகளின் சங்க ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் முன்னொரு காலத்திய சங்க நினைவுகளில் மூழ்கி அவர்களின் பின்னால் விவசாயிகள் நிற்கிறார்கள். இதனால்தான் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் கேட்க நாதியற்றுப் போகின்றன. சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலைக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளின் நிலையும் இதேதான். புதிய சங்கம் ஒன்றை விவசாயிகள் தேர்ந்தெடுக்காத வரையிலும் அவர்களின் கதியும் இதேதான்.

ஆலையையும், அதற்கு வாலாட்டும் போலிச்சங்கவாதிகளையும், அரசையும் அம்பலப்படுத்த புரட்சிகர சக்திகள் தயாராகி வருகின்றன. விரைவில் அவைகள் இப்பகுதியில் ஒரு போராட்டத்தைத் தொடங்கும். அதுவரை மட்டுமானால், ஆலையின் அருட்செல்வர் வாழ்க வளமுடன் என்று புலம்பிக் கொள்ளலாம்!

–    புஜ செய்தியாளர், சிவகங்கை.

தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !

3

“டிசம்பர் 25-வெண்மணித் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் 25-12-2013 அன்று “சிதம்பரம் நடராசர் கோயிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” என்ற கிளர்ச்சிப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை திட்டமிடப்பட்டிருந்தது.

காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்தால், முற்றுகைக்கு அனுமதி தரமாட்டோம், மீறி நீங்கள் முற்றுகை நடத்துவோம் என்று பிரசாரம் செய்தால், ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி தர மாட்டோம். இதை மீறி நீங்கள் கூட்டம் நடத்தினாலே கைதுசெய்வோம்.” என்று டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ. கதிரவன் அடங்கிய அதிகார வர்க்க கும்பல் நமது தோழர்களை மிரட்டிக் கொண்டிருந்தது.

இந்த சூழலில், காலை ஒன்பது மணிக்கெல்லாம் சிதம்பரம நடராசர் கோயிலின் நான்கு வீதிகளிலும் திரண்டிருந்த எமது தோழர்கள் எங்கு வருவார்கள் என்று காத்திருந்த காவல் துறையின் கண்காணிப்புகளை மீறி, தெற்கு வாயில் எதிரில் நூறடி தூரத்தில் பேனர், கொடிகள், முழக்கத் தட்டிகள் சகிதமாக ஒன்று கூடினர். உடனே ஓடி வந்த காவல் துறை, தோழர்களை தெற்கு வாயிலை நோக்கி முன்னேற விடாமல், அருகில் உள்ள மண்டபத்திற்குள் திணிக்க முயன்றது. ஒரு நிமிடம் கூட ஆர்ப்பாட்டமோ முற்றுகையோ நடத்தாமல், அனைவரையும் கைது செய்து விடலாம் என்று மனப்பால் குடித்தது. உடனடியாக நமது செயல்திட்டத்தை மாற்றி, காதி வஸ்த்ராலயம், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, கீழ வீதி அரச மரத்தடி, சீனிவாசா மருந்தகம் என்று வெவ்வேறு முனைகளைத் தெரிவு செய்து, பு.மா.இ.மு. கடலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கருணாமூர்த்தி, பு.ஜ.தொ.மு. புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் பழனிசாமி, வி.வி.மு. தி.வெ. நல்லூர் செயலாளர் தோழர் ஹரிகிரிட்டிணன் ஆகிய தோழர்களின் தலைமையில் அலையலையாக தெற்கு வாயிலை நோக்கி முற்றுகையிட தோழர்கள் முன்னேறினர்.

காலை பத்து மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணிவரை முற்றுகைப் போராட்டமும் கைதுகளும் நீடித்தன. பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். அடையாள போராட்டங்கள், போலீசிடம் முன்னரே அறிவித்து விட்டு பெயருக்காக புகைப்படத்திற்குப போஸ் கொடுத்துக் கைதாவது போன்ற ‘அசாத்தியமான’ போராட்டங்களையே கண்டிருந்த போலீசுக்கு, புரட்சியாளர்களின் போர்க் குணம் மிக்க, சமரசங்களுக்கு அடிபணியாத போராட்ட முறை மிரட்சியை ஏற்படுத்தியது. காலை எட்டுமணி வரை ஈயாடிக் கொண்டிருந்த சிதம்பரம் நகர வீதிகள், செஞ்சட்டைகளின் அணிவகுப்பால் நிரம்பின. சிதம்பரம் நகரத்தில் ஏதோ நிகழப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் கூடுதல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி., பல காவல் நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட துணை ஆய்வாளர்களும், பத்துக்கும் மேற்பட்ட போலீசு வாகனங்களும் தெற்கு வீதி முழுவதும் ஆக்கிரமித்திருந்தன.

பொது மக்களும் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த விவசாயிகள் சிலர் தாங்களாகவே ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் கலந்து கொண்டு தோழர்களுடன் கைதாகினர். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் சிலர் கூட சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் முற்றுகையில் கலந்து கொண்டது நமது போராட்டத்தின் வீச்சைப் பறைசாற்றுவதாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் முடலூர், கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு சிறுகடை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களும் தமது ஆதரவினைப பல்வேறு வழிகளில் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மாவட்ட இணைச் செயலாளர் செந்தில் குமார் தலைமையில் திரண்டு ஆரம்பம் முதலே போராட்டக் களத்தில் நின்று கொண்டிருப்பதை தமது முரட்டுத் தனமான ஒடுக்குமுறைகளை ஏவுவதற்கு பெரும் இடையூறாகக் கருதினர் போலீஸ் அதிகாரிகள். கைது செய்த பிறகும் கூட மண்டபத்தின் உட்புறம் செல்லாமல் நுழைவாயில் அருகிலேயே அமர்ந்து கொண்டு தோழர்கள் ஆர்பாட்டம் நடத்தியது, சாலையில் சென்ற ஆயிரக் கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. காவல்துறை தோழர்களை மண்டபத்திற்குள் செல்லுமாறு தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தது. அனைத்துத் தோழர்களும் கைது செய்யப் பட்ட பிறகே மண்டபத்திற்குள் தோழர்கள் சென்றனர்.

மண்டபத்திற்குள் தோழர்களின் எழுச்சியூட்டும் உரைகள், கல்லூரி மாணவர்களின் நந்தனார் பற்றிய நாடகம், புரட்சிகரப் பாடல்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நிகழ்த்திய “தெற்கு வாயில் தீண்டாமைச் சுவர் தகர்த்தெறியப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவதன் அவசியம்” குறித்த விளக்க உரைகள் என பல்வேறு புரட்சிகர நிகழ்வுகளோடும் முழக்கங்களோடும் தொடர்ந்து போராட்ட உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தன.

நமது போராட்டத்தை ஆதரித்து மண்டபத்தில் கைதாகியிருந்த தோழர்களிடையே பேசிய நந்தனார் ஆய்வு மையத்தின் அமைப்பாளர் காவியச் செல்வன், “வெண்மணித் தியாகிகளின் நினைவுதினத்தில் நடந்துள்ள இந்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார்.

உண்மைதான்! ‘நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது’ என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்ட தோழர்கள் தடுத்துக் கைது செய்யப்பட்ட போது இடையில்இருந்த தூரம் வெறும் நூறடிதான். சிதம்பரம் நடராசர் கோவிலில் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக களம் கண்டு அதன் மையப் பகுதியான சிற்றம்பல மேடை வரை முன்னேறிய எமது தோழர்களுக்கு இந்த நூறடி என்பது பெருந்தொலைவு இல்லை என்பதே வரலாற்று உண்மை.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

போடா அந்த பக்கம் – வருவது தொழிலாளி வர்க்கம் !

0

1. கும்மிடிப்பூண்டி

சிவந்த கும்மிடிப்பூண்டியை பார்த்து கலங்கிய போலீசு.

வேலைப்பறிப்பு – தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்ற மைய முழக்கத்தின் கீழ் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்த இயக்கத்தின் அடுத்த கட்டமான பேரணி, ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் அலுவலகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வழியாக கடந்து ‘பாண்டியன் ஹோட்டல்’ அருகில் நிறைவுற்றது.

பேரணியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் கே. எம். விகேந்தர் தலைமை உரையாற்றினார். தொழிலாளர்களின் உயிரை கிள்ளுக்கீரையாக மதிக்கும் முதலாளிகளுக்கு சவுக்கடி கொடுக்க தொழிலாளி வர்க்கமாய் நாம் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் துவக்கி வைத்த பேரணி, செங்கொடிகளும் சிவப்பு பதாகைகளும், ஆசான்களின் படங்களும், தோழர்களின் ஆவேச முழக்கமும் காவல் துறையினரை கலக்கமடைய வைத்தது. “எங்கே எந்த வழியாக செல்கிறீர்கள், என்ன திட்டம் என தொடர்ச்சியாக மாவட்ட செயலாளரை அழைத்துக் கேட்டுக் கொண்டே இருந்தது போலீசு” பேரணி செல்கின்ற வழியை தெளிவாக தோழர் கூறிய பின்னும் கலக்கம் தெளியாத போலீசு பய பீதியுடனே பேரணி முழுக்க நம்முடனே வந்தது.

ஒரு 50 பேர்தான் வருவார்கள் என்று நினைத்து, எந்த ஏற்பாடும் செய்யாமல் வெறும் 5 போலீசு மட்டும் வந்திருந்தனர். பேரணி துவங்கி சாலைக்கு வந்ததும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பேரணியின் முன்னரும் பக்கவாட்டிலும் பிரசுரம் விநியோகித்த தோழர்களிடம், “தம்பி, வேண்டாம்பா, ட்ராபிக் அதிகமாகுது, சமாளிக்க முடியல” என்று கெஞ்சியது போலீசு. ஆனால், 4 அடியில் சிவப்பு தடியுடன், செஞ்சட்டையணிந்த தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே நிகழ்ச்சி முழுதும் நடப்பதைக் கண்ட போலீசு ஓரமாக நின்று பேரணியை பார்த்துக் கொண்டிருந்தது.

பேரணி தொடங்குவதற்கு முன்னரே வந்த சிப்காட்டை சேர்ந்த முதலாளி ஒருவன் வேவு பார்க்கத் தொடங்கினான். முதலாளிகளைப் போல வேடமணிந்து, முதலாளிகளை இழிவுபடுத்தியதையும், தனக்கு ஆப்பறையவிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் கட்டுக்கோப்பையும், முழக்கங்களையும் கண்டும் காணாதவன் போல பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தான்.

பேரணியின் முதல் வரிசையில் பிரச்சாரக் குழு தோழர்களின் நடனத்துடன் கூடிய பறை முழக்கமும், தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேனர், பு.ஜ.தொ.மு கொடி, பின்னர் கொள்ளையடிக்கும் முதலாளிகளை இழிவுபடுத்தும் மாறுவேடம் என அரை கிலோமீட்டர் தூரத்துக்கு பேரணி நீண்டது. வழி நெடுக நின்ற உழைக்கும் மக்கள் மற்றும் கடைவீதியில் இருந்த தொழிலாளர்கள், பயணிகள் என அனைவரும் பேரணியை வரவேற்றனர்.

2 கிலோமீட்டரை கடந்த பேரணி இறுதியாக பாண்டியன் ஹோட்டல் அருகே நிறைவுற்றது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால், அருகில் இருந்த கடைகளில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் இடத்திற்கு வந்தனர். இதனால் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மிகவும் இடையூறானது. போலீசு சமாளிக்க முடியாமல் திணறியதால், தொண்டர் படையைக் கொண்டு போக்குவரத்தை சீராக்கினோம்.

ஆவேச முழக்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம. சி சுதேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். தனது எழுச்சியுரையில், பகுதியில் நடந்த ஆலைச் சாவுகளைப் பட்டியலிட்டு, அதற்கு காரணமான முதலாளிகளைத் தண்டிக்க வேண்டிய போலீசு, அதை ஒரு வழக்காகக் கூட பதிவு செய்யாமல் முதலாளிகளின் ஏவல் நாயாக செயல்படுகிறது என்றும், சுதந்திர தினம் என்று சொல்லப்படுகின்றன ஆகஸ்டு 15 அன்று கூட ஒரு தொழிலாளி ஆலைக்குள்ளே இறந்துள்ளார்.அ தையும் கூட பதிவு செய்ய துப்பில்லாத இந்த போலீசு யாருக்காக எனக் கேள்வி எழுப்பினார். அரசின் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளினால், நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்தகையதொரு போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் நின்று தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் உங்களை இணைத்துக் கொண்டு போராட்டத்துக்கு அணி திரளுங்கள் என்று அறைகூவி தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சதீஷ் நன்றியுரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம் – 9445389536

2. திருப்பெரும்புதூர்

”வேலை பறிப்பு-தற்கொலைகள் ஆலைச்சாவுகளை தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து தொழிலாளி வர்க்கத்தை விழிப்புறச்செய்வது, உரிமை பறிப்புக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வது என்ற நோக்கத்துடன் கடந்த 2 மாதங்களாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்-ஆவடி அம்பத்தூர் பகுதி குழு தத்தம் பகுதிகளில் ஆலைவாயில் பிரச்சாரம், பகுதி பிரச்சாரம், பேருந்து-இரயில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கும் கருத்தினை தொழிலாளி வர்க்கத்திடம் கொண்டு செல்லப்பட்டது.

இருங்காட்டுக் கோட்டை சிப்காட், ஒரகடம் சிப்காட், திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பிரசித்திப்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 21/12/2013 அன்று மாலை 4.30 மணிக்கு திருப்பெரும்புதூர் தேரடி பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி துவங்கி திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முடிவுற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்பேரணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், தோழர் சிவா தலைமையேற்று ’’பகுதியிலும், நாடு முழுதிலும் இன்று தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் தாக்குதலை அம்பலப்படுத்தி இதற்கெதிராக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி” துவங்கிவைத்தார். பிறகு பேரணியானது திருப்பெரும்புதூர் பிரதான சாலையின் வழியாக செல்கையில் சாலையின் இருபுறமும் இருந்த கடைகள், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள்,வாடிக்கையாளர்கள் பலரையும் பேரணியும், முதலாளித்துவத்திற்கு எதிரான முழக்கங்களும் ஈர்த்தது. பேருந்து நிலையம் அருகே முடிவுற்ற பேரணி ஆர்ப்பாட்டமாக துவங்கியது. தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டது பகுதி மக்களையும், தொழிலாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சி.வெற்றிவேல் செழியன் அவர்கள் கண்டன உரையாற்றினார். தனது உரையில் “பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வேலை கொடுக்க வந்தவை, நாட்டை முன்னேற்ற வந்தவை என்று எல்லா ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாலும், ஆளும் வர்க்கங்களாலும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை நிலைமையில் இந்நிறுவனங்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலையையும் பறித்து வெறியாட்டம் போடுகின்றது. இக்கொடுமைகளுக்கு முடிவுக் கட்ட வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்பதுடன் – புதிய ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டியது தேவை” என்று அறைகூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

சிவா.
(பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்)
தொடர்புக்கு – 8807532859

3. திருச்சி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக வேலைபறிப்பு, தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் கடந்த 3 மாதமாக பிரசார இயக்கம் மேற்கொண்டிருந்தனர்.

இம்மாதம் 21-ம் தேதி திருச்சி திருவரம்புரில் இதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு திருச்சி பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் தோழர்.சுந்தர்ராசு தலைமை தாங்கினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர். சுப.தங்கராசு

“மக்களின் அடிப்படை தேவைக்கு ரூ 3 லட்சம் கோடிதான் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. கடந்த வருடம் வரை வங்கிகளின் வாரா கடன் ரூ 1,55,000 கோடியாக உள்ளது. சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இந்த மொத்த வாராக் கடனில் பெரும் பகுதி 30 நிறுவனங்களிடம் தேங்கியுள்ளது என்று கூறுகிறார். இந்த சூழலில் தான் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மானத்திற்கு அஞ்சி 2 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றியதில் தி.மு.கவின் T.R.பாலுவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அடக்கம். பெருநிறுவனங்கள் வங்கிக் கடனை ஏமாற்றியது மட்டுமல்லாமல் வரிகளையும் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். அதன் விளைவு தான் இந்த விலைவாசி உயர்வு. தக்காளி முதல் வெங்காயம் வரை அனைத்திற்கும் சாதாரண உழைக்கும் மக்கள் வரி கட்டுகின்றனர், ஆனால் இந்நிறுவனங்கள் வரி கட்டுவதில்லை. இவர்களை வரி மற்றும் வாராக்கடனை கட்டும் படி நிற்பந்தித்தால் அவர்களின் ஊக்கம் குறைந்துவிடும் என்று நிதி அமைச்சர் பேசுகிறார். இது எப்படி உள்ளது என்றால் ஒரு திருடன் பல வீட்டில் பொருட்களை திருடி ரோட்டோரமாக போட்டு மலிவு விலையில் விற்கிறான் என்று வைத்துக் கொள்வோம். காவல்துறை அவனை கைது செய்ய வந்தால், ‘இவரை ஏன் கைது செய்கிறீர்கள் இவர் மலிவாக பொருட்களை விற்கிறார். நீங்கள் அவரது ஊக்கத்தை கெடுக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள்’ என்று கூறுவது எத்தனை அயோக்கியத்தனமானதோ அத்தனை அயோக்கியதனமானது நிதி அமைச்சரின் பேச்சு.

மேலும், நமது விளை நிலங்களையும் பறித்து இத்தகைய நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் வாரி வழங்குகின்றனர். இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவின் எந்த சட்டத்திற்க்கும் கட்டுப்படாமல் குட்டி சமஸ்தானமாக செயல்பட்டு வருகின்றன. நமது நாட்டு தொழிற்சங்க சட்டங்கள் எதுவும் இங்கு செல்லுபடியாகாது. 8 மணி நேரம்தான் வேலை என்பது மீறப்படுகிறது. பாதுகாப்பு கருவிகளுக்கு செலவு செய்ய மறுக்கின்றனர். இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அதற்கும் முறையான இழப்பீடு கிடையாது. குறைந்த பட்ச ஊதியம் கிடையாது. இது சிறப்பு பொருளாதார மட்டும் அல்லாது மற்ற நிறுவனங்களிலும் இதேயே நடைமுறைப்படுத்துகின்றனர். நோக்கியாவில் ஆயிரக்கனக்கான தொழிலாளிகளை எப்படி திடீரென விரட்டினானோ அதே போன்றே திருச்சி சித்தார் வெசல்சிலும் விரட்டினான். இந்தியாவில் 46 தொழிற்சங்க சட்டம் உள்ளது. இதை எந்த முதலாளிகளும் முழுமையாக கடைபிடிப்பதில்லை. இந்த சட்ட மீறல்களை நாளுக்கு நாள் மூர்க்கமாக மீறுகிறான்.

மார்க்ஸ் காலத்தில் ஒரு தொழிலாளியின் 8 மணி நேர உழைப்பில் 4 மணி நேர உழைப்பின் ஊதியம்தான் அவனுக்கு போய்ச் சேர்கிறது. மீதி 4மணி நேர உழைப்பு முதலாளியால் திருடப்படுகிறது என்றார். ஆனால் இன்றோ 1மணி நேர உழைப்புதான் தொழிலாளிக்கு வழங்கப்படுகிறது. மீதி 7மணி நேர அவனது உழைப்பு முதலாளியால் கொடூரமாகத் திருடப்படுகிறது. இப்படி கிரிமினல்தனமாக செயல்படும் எந்த ஒரு முதலாளியும் கூட இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தண்டிக்கப்பட்டதில்லை. இந்த முதலாளிகளைத்தான் நாங்கள் பயங்கரவாதிகள் என்கின்றோம் . இவர்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாத்தைதான் முதலாளித்துவ பயங்கர வாதம் என்கின்றோம். ஆனால் இந்த முதலாளிகளோ தங்களது சங்கத்தின் மூலமாக, ‘புதிய ஜனநாயகத் தொழிளாளர் முன்னணி ஒரு தீவிரவாத சங்கம் இதை தடை செய்ய வேண்டும்’ என்று முதலமைச்சரிடம் மனு கொடுத்தனர்.

உடனடியாக பு.ஜ.தொ.மு மீது எதுவும் கிரிமினல் வழக்குகள் உள்ளதா எனத்தேடிப்பார்த்தனர். ‘ஒரு வழக்குகூட எங்கள் மீது இல்லை. ஆனால் நாங்கள் இந்த முதலாளிகள் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளோம். அந்த வழக்குகள்தான் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் மட்டும் தீர்க்க முடியாது. இதை மக்கள் மன்றத்தின் மூலமாக ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே தீர்க்க முடியும். இவர்களின் இந்த சுரண்டலுக்கெல்லாம் அடிப்படையாக உள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதார கொள்கையையும் அதன் மூலமாகவே முறியடிக்க முடியும். அத்தகைய புரட்சிகரப் பாதையில் இங்குள்ள உழைக்கும் மக்களும் தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்து போராட எங்கள் அமைப்பில் இணைய வேண்டும்”

என்று சிறப்புரை ஆற்றினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைகுழுவினர் பாடிய புரட்சிகர பாடல்கள் தொழிலாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. அவர்கள் பாடிய “மூஞ்சப்பாரு! மூஞ்சப்பாரு! முதலாளி வர்க்கம்” என்ற பாடலை அங்கு நின்றிருந்த தொழிலாளிகள் உற்ச்சாகமாக கைதட்டி ரசித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை பார்த்த தொழிலாளி ஒருவர், “நீங்கள் ஒருவர் மட்டும்தான் எங்களுக்காக போராடுகிறிர்கள்” என்றார். “அதை மற்றவர்களுக்கும் கேட்க்கும்படி சற்று உரக்க கூறுங்கள்” என்று தோழர்கள் கேட்டவுடன், “நான் நிச்சயமாக மற்ற தொழிலாளிகளிடம் இது பற்றி பேசுவேன்” என்று கூறினார்.

திருச்சி பகுதி பல தொழிற்சங்க போராட்டதிற்க்கு பெயர் பெற்ற பகுதி. பொன்மலை தொழிலாளர் போராட்டம், சிம்கோ மீட்டர் போராட்டம் என பல உதாரணங்கள் கூறலாம். பல ஆண்டுகளாக இந்த போராட்ட குணம் மழுங்கடிக்கப்பட்டு கிடந்ததை பு.ஜ.தொ.மு தோழர்கள் தங்களது வேர்வையை சிந்தி மீண்டும் சிவக்கச் செய்ய போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் பொழுது கூட திடீர் என மேடை ஏற்பாடு செய்து நடத்தலாம் என முடிவு செய்தவுடன் சில மணி துளிகளில் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து மேடையாக மாற்றி காட்டினர். தொழிலாளித் தோழர்கள் தங்களது மெய்வருத்தி கைவண்ணத்தை காட்டினர்.

தங்களது கை வண்ணத்தில் புதிய உலகத்தை படைப்போம் என்ற உற்சாகத்துடன்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
பு.ஜ.தொ.மு., திருச்சி

4. கோத்தகிரி

கோத்தகிரி பகுதி – நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி – மார்க்கெட் ஜீப் நிலையத்தில் 21-12-2013 அன்று காலை 10.00 மணிக்கு “வேலை பறிப்பு – தற்கொலைகள் – ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! “ என்ற முழக்கத்தின் அடிப்படையில் முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும் அதனை முறியடிக்க அறைகூவல் விடுத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தோழர் ஆனந்தராஜ் தலைமையேற்றார். தோழர் பாலன் உரையாற்றினார். தோழர் ராஜா நன்றியுரை கூறினார்.

முன்னதாக சுவரொட்டி மூலமும் கைபிரதி கொடுத்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

ராஜா
தி.அ.தொ. சங்கம்
கோத்தகிரி பகுதி

5. கோவை

21.12.2013 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “வேலைப் பறிப்பு-தற்கொலைகள் ,ஆளைச்சாவுகளை தீவிரமாகும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் “ என்ற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில்​ ​V.K.K ​மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி பேரணி புறப்பட்டது . எழுர்ச்சி மிகு முழக்கங்களுடன் புறப்பட்ட பேரணியை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போலீசுடனான நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு காவல் துறை போராளியாக புறப்பட்ட எமது தோழர்களை கைது செய்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. சிவகங்கை

“வேலை பறிப்பு – தற்கொலைகள், ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” எனும் தலைப்பில் தமிழகம் – புதுச்சேரி தழுவிய பிரச்சார இயக்கத்தின் நிறைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக சிவகங்கையில் 27/12/2013 அன்று மாலை 4 மணிக்கு அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இப்பகுதியில் திகழ்கின்ற பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சக்தி சர்க்கரை ஆலை மற்றும் முருகப்பா குழும ஈ.ஐ.டி பாரிக்குச் சொந்தமான சாராய ஆலையை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு தோழர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

சிறப்புரையாற்றிய சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன், இந்தியா முழுவதும் முதலாளிகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கும் கொடூரங்களையும் சக்தி சர்க்கரை ஆலை முதலாளி பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் அப்பா கஞ்சா விற்று பணம் சம்பாதித்த கதையையும், மாவட்ட நிர்வாகமும் போலி விவசாய சங்கத் தலைவர்களும் நடத்தும் பித்தலாட்டத்தையும் தோலுரித்துக்காட்டியதோடு, சிவகங்கை மாவட்ட தொழிற்சாலைகள் ஆய்வாளரிடம் தகவல் கேட்டால், தட்டச்சர் இல்லை என்று பதில் கொடுத்த கேவலத்தையும் அம்பலப்படுத்தினார்.

கேப்டன் டி.வி செய்தியாளர் சுரேஷ் அனுப்பியதாகக் கூறி ஒருவர் முழு நிகழ்ச்சியையும் வீடியோ எடுத்தார். இடையில் வெளியே சென்ற அவர் ஒரு ஸ்டில் கேமராவைக் கொண்டுவந்து சில படங்களை எடுத்து பின்னர் அந்தக் கேமராவைக் கொண்டுபோய் இன்னொருவரிடம் கொடுத்தார். கேமராவை வாங்கிய அந்த நபர் உடனடியாக அருகிலிருந்த கம்ப்யூட்டர் சென்டரில் போய் படங்களை மெயில் செய்துவிட்டு வெளியேறி விட்டார். இந்த முருகப்பா குழும வேலைகளை உடனே அம்பலப்படுத்திப் பேசினார், அடுத்ததாகப் பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், மேலும் சென்னையில் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் கொடுக்காமல் பிடிவாதம் பிடித்த முருகப்பா குழுமத்தின் வீம்பை ஒடுக்கிய பு.ஜ.தொ.முவின் போராட்டத்தை விளக்கியதோடு, முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் நாயாக அரசு அதிகாரிகள் செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சாராய ஆலைப்பகுதிலிருந்து வந்திருந்த சில விவசாயிகள் தோழர்களைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை