கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 13
”சிறுபான்மையினரைப் பற்றி மட்டும் கவலைப்படும் ஒரு சார்பாக சிறுபான்மையினர் கமிசனைக் கலைத்து விட்டு, அனைத்து மக்களும் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணும் மனித உரிமைக் கமிசன் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் எவருக்கு எந்தக் குறையிருந்தாலும் அது களையப்பட ஒரு அமைப்பும் உருவாகும்.”
– ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?”இந்து முன்னணி வெளியீடு, பக் -29.
பெரும்பான்மை இந்துக்களுக்குக் கிடைக்காத மாபெரும் உரிமைகள் சிறுபான்மையினர் கமிசனுக்கு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்தக் கோரிக்கை. தேசிய சிறுபான்மையினர் கமிசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கமிசன், தேசிய மகளிர் கமிசன் போன்றவை பார்ப்பனியத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்த மக்கள் போராட்டத்தினால் உருவானவை. இவை அந்தந்தப் பிரிவு மக்களின் குறிப்பான பிரச்சினைகள், பாதிப்புகளை அரசிற்கும், வெளி உலகிற்கும் ‘தெரிவிக்க’ மட்டுமே அதிகாரம் படைத்தவை. மற்றபடி இவற்றுக்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது.
இந்தக் கமிசன்கள் விசாரிக்கச் செல்லும் பிரச்சினைகளில், சாதி, மத, இன, ஆணாதிக்கத்தின் உறைவிடமான இந்து மதவெறியர்களே எதிர்த்தரப்பாக இருக்கின்றனர். எனவேதான் இந்தச் ‘சிறுபான்மை’ கமிசன்களைக் கலைத்துவிட்டு, மனித உரிமைக் கமிசனை ஏற்படுத்துமாறு கேட்கிறார்கள். அவர்கள் கேட்காமலேயே இப்போதே ‘மனித உரிமைக் கமிசன்’ ஒன்று செயல்படுகிறது.
கோவையில் காவலர் செல்வராசு கொலையைச் சாக்கிட்டு முசுலீம்களை எதிர்த்து நடந்த கலவரத்தை விசாரிக்க ‘மனித உரிமைக் கமிசன்’ வந்தது. வந்தவர்கள் உள்ளூர் போலீசு உருவாக்கிய அறிக்கையைக் கேட்டு வாங்கி, ‘இதுதான் தாங்கள் விசாரித்துக் கண்டறிந்தது’ என வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு வந்த சிறுபான்மையினர் கமிசன் இந்த ‘மனித உரிமை’ மோசடியை அம்பலப்படுத்தியது.
இப்படித் தங்கள் கலவரங்கள், கொலைகள் மற்றும் ஆதிக்கத்தை எவ்வித இடையூறுமின்றி தொடர்வதற்கே மனித உரிமை பற்றிப் பேசுகிறது ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணிக் கும்பல்.
_________________________இதுவரை …………………………………………..
- பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
- பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
- பாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
- பாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!
- பாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
- பாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
- பாகம் 7 – ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?
- பாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!
- பாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!
- பாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?
- பாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு?
- பாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
வினவுடன் இணையுங்கள்