ருவழியாக வாசந்தியின் ‘ஜெயலலிதா’ புத்தகத்தைப் படித்துவிட்டேன். முன்பே சொன்னதுபோல் ‘தமிழில் இவ்வளவு மோசமான மொழிநடை கொண்ட புத்தகத்தை இதுவரை படித்ததில்லை’ என்ற எண்ணம் மறுபடி உறுதிப்பட்டது.

ஜெயலலிதா தன் இறுதிக்காலத்தில் தன் உடல்நலத்தைப் பேணவில்லை. சர்க்கரை வியாதி இருந்தாலும் இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அவர் உடல்நிலை மோசமானதற்கான காரணங்கள் இவை. இதைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதை வாசந்தி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?

‘மற்றவர்களை அடக்கமுடிந்த அவர், தன் உடம்பின் வக்கிரங்களை அடக்கவில்லை’.

நல்லவேளையாக, இந்தப் புத்தகம் வருவதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆங்கிலப் புத்தகத்துக்காவது வழக்குத்தான் போட்டார். இந்தப் புத்தகம் மட்டும் கண்ணில் பட்டிருந்தால், ஜெயலலிதா சுபாவத்துக்கு நடப்பதே வேறு. அ.தி.மு.க.-வினருக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் பிரச்னையில்லை,

கேவலமான மொழிநடை, தப்புத்தப்பான தகவல்கள், ஜெயலலிதாவை எதிர்த்தவர்களை எல்லாம் ‘ஆணாதிக்கவாதிகள்’, ‘பிராமணத் துவேஷிகள்’ என்று சித்திரிக்கும் பார்ப்பனச் சார்பு ஆகியவை நிரம்பிய புத்தகம் இது. உலகத்தில் பெண்ணியம் எது எதற்கோ பயன்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அது ஜெயலலிதாவின் ஆணவத்தையும் பாசிச மனநிலையையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

‘வாக்காளர்களுக்குப் பணமும் பிரியாணியும் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தவர் ஜானகி ராமச்சந்திரன்’ என்கிறார் வாசந்தி. ‘கனிமொழியின் அரசியல் வருகைக்குப் பிறகுதான் தி.மு.க.வுக்கு அறிவுஜீவிகளிடம் ஓரளவு ஏற்பு கிடைத்தது’ என்று சலபதி எழுதியிருக்கிறாராம். இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்காக காலச்சுவடுக்கு இந்த ஆண்டாவது அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும்.

அடுத்து வாசந்தி எழுதும் கலைஞர் புத்தகத்தைப் படித்துவிட்டு, இரு புத்தகங்கள் குறித்து நிச்சயம் விரிவாக எழுதுவேன்.

நன்றி : சுகுணா திவாகர்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க