பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்

மகளே, தங்கையே, ஆணையும் படைக்கும் பெண்ணே உமக்குத்தான் அந்த வலி புரியும். அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும். தண்டிக்க வழி தெரியும்.

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசும் அதிகார வர்க்கமும் மானம் வெட்கம் பாராமல் அரணாக நின்று பாதுகாத்து வருவதை தமிழகமே காறி உமிழ்கிறது.

கிரிமினல் குற்றக்கும்பலின் ஆட்சியான அதிமுக அரசும் அதிகார வர்க்கமும் குற்றவாளிகளுக்குத் தண்டனையை ஒரு போதும் பெற்றுத்தராது. அரசை நம்பிப் பயணில்லை மக்கள் நாமே தண்டனை வழங்குவோம் என்ற அறைகூவல் விடுக்கும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மகஇக மையக் கலைக்குழுத் தோழர்கள்.

பாடல் வரிகள்:

விட்டுடுங்கண்ணா…
அண்ணா விட்டுடுங்கண்ணா…
நானே கழட்டிடுறேன் விட்டுடுங்கண்ணா…

ஒரு தங்கையின் கதறல்…
ஒரு மகளின் கதறல்…
பெண் இனத்தின் கதறல்…
ஏழு வருடம் இருநூறு அவலம்…
கேட்குது கேட்குது நீதி கேட்குது…
யார் கொடுப்பது தண்டனை?

ஆசிஃபாவின் குற்றவாளிக்கு காவி
கொடுத்தது வரவேற்பு…
அரியலூரில் நந்தினியை
சிதைத்தவனுக்குசாதிவெறி பாதுகாப்பு…
இந்தப் பொள்ளாச்சிக் கூட்டத்துக்கு
போர்வை அரசு.

யார் கொடுப்பது தண்டனை?
அரசா? போலீசா? கோர்ட்டா?
இல்ல ஆளுங்கட்சியா?

மகளே, தங்கையே,
ஆணையும் படைக்கும் பெண்ணே
உமக்குத்தான் அந்த வலி புரியும்.
அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும்.
தண்டிக்க வழி தெரியும்.

முழுப் பாடலை கேட்க காணொளியைப் பாருங்கள்!

பகிருங்கள்!!


படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?