பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய ஒருத்தனையும் தப்ப விடக்கூடாது; நேர்மையான நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்தி உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

பரவலாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில்  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உடுமலை GVG கல்லூரி மாணவிகளும், வேலூர் ஊரிஸ் கல்லூரி மாணவிகளும் ஆயிரக்கணக்கில் திரண்டதோடு உணர்வுப் பூர்வமான பங்கேற்புடன் சாலை மறியல் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றனர்.

சமூகவலைத் தளங்களில் போராட்ட செய்திகள் உடனுக்குடன் பகிரப்படுவதோடு, தமிழகமெங்கும் தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம்!!

உடுமலை  GVG மகளிர் கல்லூரி :

பொறுப்பில்லாத ஆட்சி! பொள்ளாச்சியே சாட்சி!! – உடுமலை GVG கல்லூரி மாணவிகள் முழக்கம்! உடுமலை – பொள்ளாச்சி சாலையை மறித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

வேலூர் ஊரிசு கல்லூரி :

வேலூர் ஊரிசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு சட்டக்கல்லூரி :

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி :

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புமாஇமு தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரி :

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்திருந்தது.

ஈரோடு CNC கல்லூரி :

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஈரோடு CNC கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் – அண்ணாமலை பல்கலை :

அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

சென்னையில் பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் :

அதிமுக கிரிமினல் குற்ற கும்பலை கைது செய்து சிறையிலடை! தூக்கில்போடு! என்ற முழக்கங்களுடன், சென்னை மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தம் அருகே பு.மா.இ.மு. – வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொள்ளாச்சி பாலியல் வன்முறை – வெறியாட்டம் ! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! அதிகாரத்தை மக்கள் கையில் எடுப்போம்! பாலியல் வெறியர்களைத் தண்டிப்போம்! என்ற அறைகூவலோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

“அ.தி.மு.க. நாகராஜ், துணை சபாநாயகர் மகன்கள் பிரவீன், முகுந்தனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏன் கைது செய்யவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பும் இவ்வமைப்பினர், “பாலியல் வக்கிரங்களை உற்பத்தி செய்யும் ஆணாதிக்க பாலியல் நுகர்வு வெறி, ஆபாச இணையதளங்களை தடுக்கமுடியாத அரசே குற்றவாளி!’’ எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

திருச்சி – மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகில் மார்ச் – 14 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு நுற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி மக்கள் அதிகாரம் :

புதுச்சேரியில், மார்ச் -13 அன்று மாலை பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிந்தனையாளர் இயக்கம்; மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்; திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பென்னாகரம் – மக்கள் அதிகாரம் :

பென்னாகரம் – பேருந்து நிலையம் அருகே மார்ச் – 14 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் :

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கோவை எஸ்.பி பாண்டியராஜனை கண்டித்து மார்ச் – 14 அன்று காலை தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பு:


படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க