டந்த வாரத்தில் தொழிலாளர் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகளின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது…

♠ ♠ ♠ 

பணிபுரியும் பெண்களும் மாதவிடாயும்

பிபிசி-யில் வந்த இரண்டு கட்டுரைகள் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாதவிடாய் குறித்து பேசியுள்ளன. முதல் கட்டுரை மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக மாதவிடாய் வருவதை தவிர்க்கும் பொருட்டு, தங்களுடைய கர்ப்பப்பையை அகற்றிக் கொள்வது குறித்து பேசுகிறது.

மாதத்தின் இரண்டு, மூன்று நாட்கள் மாதவிடாய் காரணமாக பணிக்கு வரும் பெண்கள் விடுப்பு எடுத்து கொள்வதால் ஒப்பந்ததாரர்கள் அவர்களை பணிக்கு அமர்த்துவதில்லை என்கிற காரணத்தால், இப்படி வலுக்கட்டாயமாக பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறது அந்தக் கட்டுரை.

மற்றொரு கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு உரிமம் பெறாத மருந்துகளை நிர்வாகம் தருவதாக கூறுகிறது.

இந்தக் கட்டுரைகளில் இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் பணிபுரியும் பெண்களுக்குள்ள உரிமையாக மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு தருவது அரசுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசுக்கு அத்தகைய கரிசனங்கள் எதுவும் இல்லை.

தனி நபர் மசோதாவாக இது நிறைவேற்றப்பட்டால் மிகுந்த பயனளிக்கும் என நிதி ஆயோக் பரிந்துரைத்தது. ஆனால், அத்தகைய மசோதாக்கள் எப்போதாவது நிறைவேற்றப்படுவதால், இதுபோன்ற கொள்கையை சட்டமாக இயற்றுவதற்கு இன்னும் காலம் பிடிக்கலாம். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா போன்ற தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சினை குறித்து பல ஆண்டுகளாக பேசி வருகின்றன.

♠ ♠ ♠ 

வேலைவாய்ப்பின்மை வளர்கிறது !

தி இந்து -வில் வெளியான தொழிலாளர் குறித்த பருவ கணக்கெடுப்பு குறித்த கட்டுரையில் தொழிலாளர் பங்கேற்பு குறைந்து கொண்டே வருவதும் வேலைவாய்ப்பின்மையும்; தகுதிக்கு குறைவான பணியைச் செய்வதும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

2012 முதல் 2018 வரை தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.2 மில்லியனாக சரிவைக் கண்டுள்ளது. இதில் ஊதியம் இல்லாத குடும்பத் தொழிலாளர்களும் சுயதொழில் புரிவோரும் அடக்கம்.

அதுபோல, பாலின வேறுபாடும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. “பெண்களின் தொழிலாளர் ஆற்றல் பங்கேற்பு விகிதம்” கடுமையான சரிவைக் கண்டுள்ளது. வேலைவாய்ப்பை அணுக இயலாத காரணத்தாலும், தொழிலாளர் பங்கேற்பிலிருந்து விலக்கப்படுவதாலும் அவர்கள் கடுமையான இழப்புக்கு ஆளாகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது பல்வேறு ஆய்வுகளில் பட்டவர்த்தனமாக தெரிந்த விசயம்தான் எனிலும், பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடியது என்பதால் தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்த போதிய தொலைநோக்கு திட்டங்கள் இல்லாதவரை, இந்தப் பிரச்சினை பேரழிவாகவே அமையும். அல்லது ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்.

♠ ♠ ♠ 

இந்தியாவின் முறைசாரா தொழிலாளர் நிலை…

ல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு கொடுத்த வெவ்வேறு அறிக்கைகளில் முறைசாரா தொழிலாளர்களின் நிலையை கண்டறிய முடியாத நிலையில் அரசு உள்ளதை பிஸினஸ் டுடே கட்டுரை அலசியிருக்கிறது. சில அறிக்கைகளில் 85% என்றும் சில அறிக்கைகளில் 90% மேல் எனவும் முரண்பாடான விவரங்கள் அளிக்கப்படுவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

கல்லூரிகளின் எண்ணிக்கை அல்லது துறைமுகங்களை எண்ணுவதைக் காட்டிலும், முறைசாரா தொழிலாளர்களை எண்ணுவது சற்று குறைவான சவாலானது என்றபோதிலும் துல்லியமான தரவுகளை சேகரிக்காததை ஒரு முறையாகவே செய்து வருகிறது அரசு.

“அவர்களுக்கு விடுப்பு கிடையாது. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. மருத்துவ வசதியோ சமூக பாதுகாப்பு உதவியோ இல்லை. அவர்களுடைய வேலை நேரத்திற்கு வரம்பு இல்லை. சம்பளமும் மிகக் குறைவு. முறைசாரா பணியாளர்களின் சமூக பாதுகாப்பு சட்டம் 2008 -இல் கொண்டு வந்த பிறகும் கூட வெறும் 5-6% பேர் மட்டுமே சமூக பாதுகாப்பு உதவிகளைப் பெறுகின்றனர்” என்கிறார் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் சி.கே. சஜிநாராயணன். பாஜக-வின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் இதற்காக மோடி அரசாங்கத்தைத்தான் எதிர்த்துப் போராட வேண்டும். மற்றபடி இவர்களின் தொழிலாளர் நலன் வெறும் உதட்டளவில் மட்டும்தான்.

♠ ♠ ♠ 

இராஜஸ்தானில் தொழிலாளர் திட்டங்களில் உள்ள முறைகேடுகள்..

ராஜஸ்தானில் நலத்திட்டங்கள் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்த நிலையில் உச்சநீதிமன்றம் சமூக தணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து தி இந்து -வில் வெளியான செய்தி, “33% கட்டட தொழிலாளர்களுக்கான நலத்திட்டத்தின் பயனாளிகளில், அந்தத் துறையில் பணியாற்றியவர்கள் எவரும் இல்லை” என்கிறது. இ-மித்ரா மையங்களில் இந்தப் பதிவுகள் நடந்தன. இதில் தொடர்புடைய சில மையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு தொழிலாளர் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதுபோல, கட்டுமான திட்டங்களின் மூலம் மாநில அரசு வசூலிக்க வேண்டிய செஸ் வரியும் வசூலிக்கப்படவில்லை. இந்த வரி கட்டட தொழிலாளர்கள் உதவி திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடியது.

படிக்க:
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

♠ ♠ ♠ 

தெலுங்கானாவின் பருத்தி வேளாண் துறையில் குழந்தை தொழிலாளர்கள் !

தெலுங்கானா மாநில அரசும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து பருத்தி விநியோகம் – தேவை குறித்து நடத்திய இரண்டாண்டு கால ஆய்வில், பல்வேறு மாவாட்டங்களில் பருத்தி வேளாண் தொழிலில் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடு கண்டறியப்பட்டதாக லைவ் மிண்ட் – இல் வெளியான செய்தி கூறுகிறது.

தொழிலாளர் இணை ஆணையரின் மேற்கோளின்படி, பருத்தி வேளாண் தொழில் 50% தொழிலாளர்கள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

♠ ♠ ♠ 

காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்பு !

காஞ்சிபுரத்தில் மரம் வெட்டும் ஆலையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய இருபதுக்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையில் உரிமையாளரிடம் இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்காக இவர்கள் கொத்தடிமைகளாக அங்கே பணியாற்றியுள்ளனர்.

தமிழக அரசின் வருவாய் துறையும் கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பும் இந்த மீட்புப் பணியைச் செய்துள்ள நிலையில், ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது அடியாட்களிடமிருந்து தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

ரூ. 375 குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு பதிலாக அரசு 2 ரூபாய் உயர்த்த உள்ளது !

தொழிலாளர் அமைச்சக குழு பரிந்துரைத்த ரூ. 375 குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு பதிலாக, மத்திய அமைச்சரவை தற்போதைய குறைந்த பட்ச ஊதியத்திலிருந்து 2 ரூபாயை உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கிறது. இனி நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 178 கிடைக்கும்.

“நாகாலாந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முன்மொழியப்பட்ட தொகையைவிட குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், இந்த அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் உதவாது” என லைவ் மிண்ட்- க்கு அளித்த பேட்டியில் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான ஊதிய தளம் இந்தியாவில் சமத்துவமின்மையையும் ஏழ்மையையும் குறைக்கும் என பொருளாதார ஆய்வு 2018 கூறியிருந்த நிலையில், 2 ரூபாயை உயர்த்தி ஏழ்மையை ஒழிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

♠ ♠ ♠ 

‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகம் தழுவிய வேலைநிறுத்தம் !

ங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிபிசி செய்தியின்படி, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த அமேசான் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள ஜெர்மனியில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் தொழிலாளர் ஆறு மணி நேர வேலை நிறுத்தத்துக்கு திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தில், வாரம் முழுமைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். தங்களுடைய போராட்டத்துக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கோரியுள்ள தொழிலாளர்கள். அதன் ஒரு பகுதியாக அமேசானை புறக்கணிக்கும்படி கோரியுள்ளனர்.

அமேசான் நிறுவனம் சமீபத்தில் விலைக்கு வாங்கிய Whole Foods என்ற மளிகை விற்பனை சங்கிலியில் பணியாற்றும் தொழிலாளர்கள், அமேசானின் வருகைக்குப் பிறகு தங்களுடைய நிலைமை மோசமாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். கார்டியனின் வெளியான செய்தியின்படி, அமேசான் தொடர்பான மாற்றங்களில் ஒன்றாக ஆட்குறைப்பு வழக்கமாகிவிட்டதாக Whole Foods தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 15 டாலர் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தியதை அடுத்து, முழுநேர தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 40 மணியிலிருந்து 35 முதல் 37 மணி நேரமாகக் குறைந்துள்ளனர். இதனால் சம்பள உயர்வு ஏறக்குறைய இல்லாததாக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

கலைமதி

மேலும் வாசிக்க :

♦ The Life of Labour: Amazon Workers Strike on ‘Prime Day’; Irregularities in Rajasthan’s Schemes 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க