டந்த வாரம் உலகெங்கும் நிகழ்ந்த தொழிலாளர் தொடர்பான செய்திகளின் தொகுப்பு இது…

♠ ♠ ♠ 

மூத்தூட் நிதிநிறுவன ஊழியர்கள் போராட்டம் :

கஸ்டு 20 முதல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் வங்கி சாரா மற்றும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் கூட்டமைப்பு (Non-Banking and Private Finance Employees Association -NPFEA) முன்நின்று நடத்திய இந்தப் போராட்டத்தில் 220 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். போராட்டம் காரணமாக 611 நிதி நிறுவன கிளைகளில் 300 கிளைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

Muthoot-Fincorpஊதிய உயர்வு, முறையாக படிகள் வழங்கப்படாதது, ஊக்கத்தொகை முறையாக வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிட்டும் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட NPFEA சங்கத்தை முத்தூட் நிறுவனம் அங்கீகரிக்காததும் போராட்டத்துக்கான காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

“ரூ. 2000 கோடி லாபமீட்டும் ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கவில்லை என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோலிதா. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிளையில் மேலாளராக பணியாற்றுகிறார் இவர்.

மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சிபிஎம்-ன் ஊழியர் சங்கமான சி.ஐ.டி.யூ தூண்டுதலின் பேரில் அரசியல் நோக்கத்துக்காக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக சிலரால் குற்றம்சாட்டப்பட்டாலும், அதை ஊழியர்கள் மறுக்கின்றனர். தாங்களாகவே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அதன்பின்னே சிஐடியூ, தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தை முடக்கும்வகையில் அனைத்து கிளைகளையும் மூடிவிடப்போவதாக முத்தூட் நிதி நிறுவனம் மிரட்டி வருகிறது.

படிக்க:
ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

♠ ♠ ♠ 

அதானி குழுமத்துக்கு விமான நிலையங்களை தாரைவார்க்கும் முடிவை எதிர்த்து விமானநிலைய ஊழியர்கள் போராட முடிவு:

ந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவரிடம் ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு அளிக்கும் முடிவு குறித்து விமான நிலைய ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டது.

Adaniலக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரித்து இயக்கும் பொறுப்பை ஏலத்தின் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் வென்றது. அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இந்நிறுவனம் விமான நிலையங்களை நிர்வகிக்கும்.

விமான நிலைய ஆணையருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இத்தகைய அவசர முடிவு எடுக்கப்படுவதற்கு முன் தங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இந்த முடிவு தன்னிச்சையானது, ஒருதலைப்பட்சமானது என்று விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் எதிர்காலமும் விமான சேவையை பெறும் பயனாளர்களும் விமான நிலையங்கள் தனியார்மயமாவதால் பாதிக்கப்படுவார்கள் என கவலை தெரிவித்துள்ள அவர்கள், தங்களுடைய கவலைகளை கருத்தில் கொள்ளவில்லை என்றால் இந்த மாதம் கருப்புப் பட்டைகள் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மேலும் 20-25 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவில் இருப்பதாக விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா கூறுகிறார். இது மேலும் ஊழியர்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

♠ ♠ ♠ 

வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டம்

10 லட்சத்துக்கு அதிகமான வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம், 10 அரசு வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் முடிவை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இன் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கமும் இவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.

“கடுமையான வேலைநிறுத்தம் இருக்கும். அரசாங்கத்துடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபட இருக்கிறோம்” என்கிறார் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம்.

Bank Employees
வங்கி இணைப்பை கண்டித்து கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் போராட்டம்.

“செயல்படாத சொத்துக்களை (NPAs) மறைக்கவே 10 அரசு வங்கிகளின் இணைப்பு உதவும். இதனால் பெரிய இருப்பு நிலைகளை உருவாக்க மட்டுமே முடியும். செயல்படாத சொத்துக்களை மீட்டெடுப்பது என்கிற முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் வேலையன்றி வேறில்லை. வங்கிகள் இணைப்பு மூலம் இருப்பு நிலைகளை தீர்க்கவோ அல்லது சுத்தம் செய்யவோ முடியாது என்பது பொது அறிவுள்ளவர்களுக்கும் தெரியும்” என்கிறார் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு.

“மோடி அரசாங்கம் இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, வங்கிகள் இணைப்பின் நன்மைகளை உணர பல ஆண்டுகள் ஆகும்” என ஆண்டி முகர்ஜி எழுதியுள்ளார்.

♠ ♠ ♠ 

பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட புனே ஐடி துறை ஊழியர்கள்:

புனேயில் உள்ள தொழிலாளர் ஆணைய அதிகாரியிடம் பல மாதங்களாக ஊதியம் தரப்படாதது குறித்து ஐடி ஊழியர்கள் புகார் தெரிவித்து வருவதாக நியூஸ் க்ளிக் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“புனே போன்ற மெட்ரோ நகரங்களில் ஊதியம் இல்லாமல் வாழ்வது மன உளைச்சலைத் தருவதோடு, சவாலானதும்கூட” என ஐடி ஊழியர்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

படிக்க:
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

முன்னணி தகவல் தொழிற்நுட்ப பயிற்சி நிறுவனமான SEED இன்போடெக் தனது ஊழியர்களுக்கு சம்பள நிலுவை வைத்துள்ளதாக பல ஊழியர்கள், தொழிலாளர் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் ஐடி ஊழியர்கள் மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக ஒரு வருட காலமாக ஊதியத்தை அளிக்க முடியவில்லை என கூறியுள்ளது.

பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஐடி நிறுவனங்களை பாதித்துள்ளதாகவும் சிறிய, நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்துவருவதாகவும் நியூஸ் க்ளிக் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

சர்வதேச செய்திகள் : பெண் வேளாண் தொழிலாளர்களை பாதுகாக்க பாகிஸ்தானின் புதிய சட்டம்

சிந்து பெண் வேளாண் தொழிலாளர் சட்டம் 2019 சிந்து மாகாண அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெண் வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு, மீறல்களை நிறுத்த இது முக்கியமான நகர்த்தலாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

Pakistan Working womenபெண் வேளாண் தொழிலாளர்கள் சங்கமாக திரள்வதற்கு பாகிஸ்தான் அளித்திருக்கும் முதல் அங்கீகாராம் இது. இந்த சட்டத்தின்படி, “ஒரு பெண் தொழிலாளி கோரினால் எழுத்துப்பூர்வமாக வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற முடியும். மேலும் இந்த புதிய சட்டம் கூட்டு பேரம் பேசுதல், குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, பொருளாதார லாபம் மற்றும் பொதுவிநியோக பொருட்கள் மற்றும் சேவையை பெறுதல் உள்ளிட்ட சமூக நல உரிமைகளை உள்ளடக்கியது” என பாகிஸ்தான் ஊடகமான டான் எழுதியுள்ளது.

♠ ♠ ♠ 

வங்கதேசத்தில் ஈத் விடுமுறையிலிருந்து திரும்பிய 700 ஆடை தொழிலாளர்கள் பணிநீக்கம்:

கஸ்டு 18-ம் தேதி ஈத் விடுமுறையை முடித்து பணிக்குத் திரும்பிய 700 தொழிலாளர்களை பணிவாய்ப்பு குறைந்துள்ளதாகக் கூறி பணிநீக்கம் செய்துள்ளது எஸ்.எஃப் டெனிம் அப்பாரல் என்ற நிறுவனம். சமீப ஆண்டுகளில் வங்க தேச ஆடை தொழிற்சாலைகளில் நடந்த பெரிய அளவிலான பணிநீக்கம் இதுவென இண்டஸ்ரியல் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தின் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்தப் பணிநீக்கத்தை நியாயப்படுத்தி, கடந்த ஆறு மாதங்களாக போதிய ஆர்டர்கள் இல்லாத காரணத்தால் இந்தத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

– அனிதா

தொழிலாளர் தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க :

♦ The Life of Labour: Bank Unions Protest Against Merger, Airport Workers Threaten Strike

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க