“மருந்து மாத்திரை தேவையில்லை; ஓம் நமோ நாராயணாய நமோ என்று 108 முறை சொல்லுங்கோ, கொரோனா தானாக ஓடிடும்” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜீயர் சடகோபன்.

இவர் சொன்ன மறுகணமே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நிரூபணமாகியிருக்கிறது. 108 தடவை தங்கள் மந்திரத்தை உச்சரித்தார்களோ இல்லையோ, 108 ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.

இவர்கள்தான் வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள்; சிலர் குடிக்கவும் செய்து, பரலோகமும் சென்றுவிட்டார்கள்.

மந்திரத்தின் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று சொன்ன சடகோபனுக்கு என்ன தண்டனை?

கேலிச்சித்திரம் : மு. துரை