திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பே, அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று தெரிவித்தது. ஆனால் 4 மாதங்களில்  ஆலை மூடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது திமுக.

கடந்த ஜூலை 7-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜன் தயாரிக்க இன்னும் ஆறு மாதங்கள் காலநீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததை பற்றி திமுக அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று (ஜூலை 8) செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், “ஸ்டெர்லைட்டை மூட தற்போது என்ன அவசரம்?” என்று கேட்கிறார்.

சிறைத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவர் விடுதலையை சாத்தியப்படுத்த அத்தனை வழிமுறையும் இருக்கும்போது, அது குறித்து மவுனம் சாதிக்கிறது  திமுக அரசு. எழுவர் விடுதலை விவகாரத்தில் ஸ்டாலின் சிக்கிக் கொள்ள மாட்டார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இரண்டு நாட்களுக்கு முன் வெளிப்படையாக அறிவிக்கிறார்.

பெட்ரோல் டீசல் மீதான மாநில வரிகளை குறைக்க சொல்லும் போது கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லும் திமுக அரசு புதிய பூங்காக்களை rஊ. 2500 கோடி செலவில் அமைத்து சென்னையை அழகுபடுத்தத் திட்டமிடுகிறது.

மக்கள் பிரச்சினை ஆயிரம் இருக்க, ஊடகங்களும், இணைய திமுகவினரும் ஸ்டாலின் சைக்கிளில் போவதையும் ஜிம்முக்குப் போவதையும் பற்றிப் பேசி நம்மை புளகாங்கிதமடையச் சொல்கிறார்கள்.

ஸ்டெர்லைட் திறப்பு – விண்ணை முட்டும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு – கிடப்பில் போடப்பட்டிருக்கும் எழுவர் விடுதலை

இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, ஊடகங்களில் தனிமனிதப் புகழ் பாடியே எவ்வளவு நாள் வண்டி ஓட்ட முடியும் ?


கருத்துப்படம் : மு. துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க