ஆக்சில்ஸ் இந்தியா - பாடி பிரிவு
ட்டோமொபைல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் டி.வி.எஸ் நிறுவனம், அதன் துவக்க காலம் முதலாகவே தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத போக்கோடு நடந்து கொண்டிருப்பதை அறியாதவர்கள் இருக்க முடியாது. தொழிற்சங்கம் அமைத்தே தீருவோம் என்கிற முடிவை டி.வி.எஸ் தொழிலாளர்கள் எடுத்தபோது நிர்வாகம் முந்திக்கொண்டது. ஆளும் வர்க்கத்தின் அடியாள்படையாக இருந்த காங்கிரஸ் கட்சி சார்புடைய ஐ.என்.டி.யு.சி சங்கத்தை டி.வி.எஸ் குழுமம் முழுவதும் நிர்வாகமே திணித்தது.
ஐ.என்.டி.யு.சி க்கு ஏகபோக அங்கீகரித்ததோடு, வேறு சங்கங்கள் கட்டப்பட்டால், அந்த மாற்று சங்கத்தின் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதோடு, முன்னணியாளர்களது வேலைபறிப்பும் சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. தொழிலாளர்களும் வேறுவழியின்றி ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்களாக சகிப்போடு நீடித்து வந்தனர்.
டி.வி.எஸ் குழுமத்தின் ஒரு பிரிவான ஆக்சில்ஸ் தயாரிக்கும் ஆலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இயங்கி வந்தது. இங்கும் வழக்கம் போல ஐ.என்.டி.யு.சி தான் நிர்வாகத்தின் அடியாள்படையாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 2010-ல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆக்சில்ஸ் இந்தியா லிமிடெட் கிளைச்சங்கம் துவங்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் முதலாளியை விட அதிகமாக ஆவேசப்பட்டது, ஐ.என்.டி.யு.சி தலைமைதான்.
படிக்க :
இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
இந்த துரோகிகள் துணையோடு வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு காரணங்களைச் சொல்லி 20- க்கும் மேற்பட்ட சங்க முன்னணியாளர்கள் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். வேலைநீக்கத்துக்கு எதிராக தீரமாகவும், ஊசலாட்டமும் இல்லாமல் போராடியதன் விளைவாக தோழர்கள் ஏழுமலையான், பர்கத் அலி ஆகிய இருவரும் 01.7.2021 முதல் ( 11 ஆண்டுகளுக்குப் பிறகு ) பணியில் சேர்ந்தார்கள். இது முன்னுதாரணமிக்க வெற்றியாக இருக்கிறது. இது வேலைநீக்கத்தில் இருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கிறது. ஐ.என்.டி.யு.சி சங்க உறுப்பினர்களே மனமுவந்து இந்த வெற்றிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சங்க வேறுபாடு கடந்து ஒத்த சிந்தனை கொண்டவர்களாக தொழிலாளர்கள் பக்குவப்படும்போது டி.வி.எஸ் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட நிர்வாகமும், ஐ.என்.டி.யு.சி போன்ற அடிவருடிக் கும்பலும் சும்மா இருப்பார்களா? உடனடியாக தங்கள் சதி வேலைகளை துவங்கிவிட்டனர்.
ஆக்சில்ஸ் இந்தியா – பாடி பிரிவு
கனரக வாகனங்களுக்கான ஆக்சில்ஸ் தயாரிக்கும் இந்த ஆலையின் இன்னொரு பிரிவு திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. வழக்கம் போல இங்கும் ஐ.என்.டி.யு.சி தான் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக ஆட்டம்போட்டு வருகிறது. செய்யாறு, திருபெரும்புதூர் ஆகிய இரண்டிலும் ஆக்சில்ஸ் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனாலும், செய்யாறில் உள்ள ஆலையில் பு.ஜ.தொ.மு கிளை எத்தனை இழப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்து வருகிறது.
ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்களில் பலரும் பு.ஜ.தொ.மு- வை வெளிப்படையாகவும், மனம் திறந்தும் பாராட்டுகின்றனர்; ஒன்றாகக் கலக்கும் தருணத்தை நோக்கிச் செல்கின்றனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து அனுமதித்தால் டி.வி.எஸ் நிறுவன தொழிற்சங்கம்  முழுமைக்கும் பு.ஜ.தொ.மு தலைமை தாங்கும் சூழல் வந்துவிடும் என்கிற அச்சத்தில் நரித்தனத்தில் இறங்கியுள்ளது.
செய்யாறு ஆலைக்கு உற்பத்தி ஆர்டர்கள் குறைந்து விட்டதால், 2009-க்குப் பிறகு வேலையில் சேர்ந்தவர்களை திருப்பெரும்புதூர் ஆலைக்கு பணியிட மாற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களில் 90% பேர் ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்கள் தான். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்களில் கணிசமானவர்களை கட்டாயமாக, கொத்துக்கொத்தான எண்ணிக்கையில் இடமாற்றம் செய்வது தீய உள்நோக்கம் கொண்டது.
இந்த 2009 பேட்ச் தொழிலாளர்களை 5 ஆண்டுகள் பணி நிறைவடையும் தருணத்தில் வேலைநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்த போது, அங்கீகரிக்கப்பட்ட சங்கமான INTUC கைகழுவி விட்டது. அவர்களுக்காக பு.ஜ.தொ.மு போராடி, வேலையை பாதுகாத்தது. வேலைப்பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களை நிர்வாகமே INTUC சங்கத்தில் சேர்த்துவிட்டது. இவ்வாறாக, தொழிலாளர்களது உரிமைக்காக பு.ஜ.தொ.மு போராடுவதும், அதை முடக்க INTUC கும்பலை நிர்வாகம் கோடாரியாக பயன்படுத்தி வந்ததும் தான் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனாலும், பு.ஜ.தொ.மு சோர்ந்து விடவில்லை.

படிக்க :
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

இந்த சூழலில் தான் நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கட்டாய பணியிட மாற்றத்தை திணித்துள்ளது. பு.ஜ.தொ.மு செல்வாக்கு வளர்ந்துவிடக் கூடாது. இதுவரை ஐ.என்.டி.யு.சி தலைமைக்கு அடங்கிக் கிடந்த கணிசமான தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். இவ்வாறு வெளிப்படையாக பு.ஜ.தொ.மு -வுக்கு ஆதரவு பெருகி வந்தாலும் ஐ.என்.டி.யு.சி தலைமையால் இனிமேல் உருட்டல்- மிரட்டல் வேலைகளை செய்ய முடியாது. தொழிலாளர்கள் ஒன்றுபட்ட இயக்கமாக திரள்வதற்குள் அவர்களை பிளவுபடுத்தியாக வேண்டும். வழக்கம் போல கூடுதல் சலுகை கொடுத்து ஐ.என்.டி.யு.உறுப்பினர்களது வாயை அடைப்பது இனிமேல் சாத்தியமில்லை.
இந்த சூழலில் , தானே செல்லப்பிள்ளைகளாக வளர்த்து வந்த ஐ.என்.டி.யு.சி தொழிலாளர்களை திருப்பெரும்புதூருக்கு கட்டாய இடமாற்றம் செய்வதால் அங்கிருக்கும்.ஐ.என்.டி.யு.சி -யை நிர்வாகத்தின் விருப்பத்துக்கேற்ப ஆட்டிப்படைப்பதோடு பு.ஜ.தொ.மு செல்வாக்கை செய்யாறு மட்டத்திலேயே நசுக்கிவிட முடியும். காலப்போக்கில் ஐ.என்.டி.யு.சி சங்கத்தை செல்லாக்காசாக்கி விடலாம். ( இதற்கான வேலைகளை திருப்பெரும்புதூர் ஆலையில் இப்போதே துவங்கியுள்ளனர் )
இந்த தீயநோக்கத்துடன் டி.வி.எஸ் ஆக்சில்ஸ் நிர்வாகம் தொழிலாளர்களை ஆளுக்கொரு திசையில் வீசியெறிந்துள்ளது. தானே உருவாக்கி உரமிட்டு வளர்த்த ஐ.என்.டி.யு.சி சங்கம் கூட இனி தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க உரிமை பற்றியோ, தொழிலார்களை நிர்வாகம் பந்தாடுவது பற்றியோ கருங்காலி தொழிற்சங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் இத்தகைய குள்ளநரித்தனத்தை அனுமதிக்காது என்பதை முதலாளி வர்க்கத்துக்கு உணர்த்துவோம்.

பிடிஎஃப் கோப்பாக இந்த பிரசுரத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்கள்
(மாநில ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைக்கப்பட்டது)
தொடர்புக்கு : 94448 31578

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க