நாகாலாந்து மாநிலத்தில் சுரங்கத் தொழிலாளர்களையும் கிராம மக்களையும் துணை இராணுவம் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் மோன் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டம் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடிங் பகுதியில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாலையில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களை துணை இராணுவப்படை சுட்டுக்கொன்றுள்ளது.
அந்தப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சுரங்கத் தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக துணை இராணுவப்படை தரப்பு தெரிவிக்கிறது.
சுரங்கத் தொழிலாளர்கள் அனைத்து வார நாட்களிலும் சுரங்கத்தில் தங்கி வேலைசெய்துவிட்டு சனிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு தங்களது ஊருக்குள்வந்து குடும்பத்துடன் செலவிட்டு விட்டு மீண்டும் சுரங்க வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அவ்வகையில் சனிக்கிழமை மாலை தமது சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்களைத் தான் சுட்டுக் கொன்றுள்ளது கொலைகார துணை இராணுவப் படை.
படிக்க :
♦ பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
♦ ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
“துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிக்-அப் டிரக்கில் இருந்த உடல்களை எடுத்து செல்லும் நோக்கி மற்றொரு பிக்-அப் டிரக்கில் அவர்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். அங்கிருந்து தப்பித்துச் சென்ற துணை இராணுவப்படை, மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அப்போது அசாம் பக்கம் சிலர் ஓடிச்சென்றபோது, அவர்களை துரத்திச் சென்ற இராணுவத்தினர் வழியில் இருந்த நிலக்கரிச் சுரங்க குடிசைகளின் மீது கூட கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று போலீசு தரப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், மோன் மாவட்ட பாஜக தலைவர் நியாவாங் கொன்யாக், ஓட்டிங் – திரு சாலையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகவும், கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்துவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 4 சம்பவம் நடந்த இடத்தை நோக்கிச் சென்றுள்ளார்.
அங்கு விசாரிக்கச் சென்ற அவர் மற்றும் உடன் வந்தவர்கள் மீதும் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், அவருடன் வந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். கொன்யாக் அந்த இடத்தை அடைந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு பற்றி கேள்விப்பட்ட பல கிராம மக்களும் அங்கு வந்தனர். அவர்கள்மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், குறைந்தது ஏழுபேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.” என்றும் அறிக்கை கூறுகிறது.
Security Forces gunned down 13 civilians in an "ambush" at #Oting,
in #Mon district #Nagaland 'mistaking them to be militants'.
Meanwhile,6 Naga tribes under ENPO has decided to withdraw from the ongoing #HornbillFestival2021 in protest against the killings of civilians by SF pic.twitter.com/q90dCaxJ7r— miZO zEITGEIST (@mizozeitgeist) December 5, 2021