மோடி ஆட்சியில் எல்லாம் அதானிமயம்!

டந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். இதை வரலாற்று நிகழ்வு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என ஊடகங்கள் போற்றிப் பாடின.

ஆனால் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் அதானிக்கு கரசேவை செய்யத்தான் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரான “அதானி” முதலீடு செய்ய, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸிடம் மோடி ஆர்வம் காட்டி பேசியதாக கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்திற்காகவும் இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காகவும் அதானியின் ஏஜெண்டாக செயல்பட்ட மோடி, தற்போது மீண்டும் கிரீஸ் நாட்டின் துறைமுகங்களுக்காக அதானியின் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.

100 நாட்களுக்கு மேலாகியும் மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத பாசிச மோடி, அதானியின் சொத்து மதிப்பை அதிகரிப்பதற்காக கிரீஸ் நாட்டிற்குச் சென்று தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க