Saturday, December 20, 2025

மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.

எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.

பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்

நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!

நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் வலைத்தளம்: நெல்லையில் ம.அ.க., ஜனநாயக சக்திகள் மனு!

தமிழ்நாட்டை இலக்கு வைத்திருக்கும் பாசிசக் கும்பலின் வெறியாட்டம் தொடரும் என்பதற்குச் சாட்சிதான் “ரிக்லைம் டெம்பிள்ஸ்” வலைத்தளத்தின் வாயிலாகப் பல நூறு வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்திருப்பதென்பது.

ஒடிசா: விவசாயத் தலைவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை

0
உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன.

சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்

0
15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

நீதிபதி செம்மல் மீதான இடைநீக்க நடவடிக்கை இயற்கை நியதிக்கும் அறத்திற்கும் எதிரானது!

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக போலீசு செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதற்காகவே ஒரு நீதிபதி பழிவாங்கப்படுகிறார் என்பது இன்றைய அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பதற்கான சான்றாகும்.

சாதி மறுப்பு புரட்சிகர மண விழா தொடர்பான ஓர் முக்கிய அறிவிப்பு!

சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கத்துடன் வெண்மணி ஈகியர் நாளில் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண விழா டிசம்பர் 25-க்கு பதில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி வைக்கப்படுகிறது.

பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

1
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம்: நீதிமன்றமே பி.ஜே.பி-யின் கிளையாக மாறியுள்ளது | தோழர் வெற்றிவேல் செழியன்

திருப்பரங்குன்றம்: நீதிமன்றமே பி.ஜே.பி-யின் கிளையாக மாறியுள்ளது | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/FpJw9OqRQ1s காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பீகார்: இஸ்லாமிய வெறுப்பால் நிகழ்த்தப்பட்ட கும்பல் படுகொலை!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மக்கள் மத்தியில் எவ்வளவு குரூரமான மனநிலையையும் இஸ்லாமிய வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஹூசைனின் படுகொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. கை, கால்கள் உடைக்கப்பட்டு, காது மற்றும் விரல் நுனிகள் வெட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு

முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.

பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்!

பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/qoJG32KeWi8 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இ ஃபைலிங் முறைக்கு எதிரான தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க

அதிவேக இணைய வசதி, மின் வசதி, ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே இனி வழக்கறிஞராக நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து பல தலைமுறைகளாக வழக்கறிஞராக இருப்பவர்கள், பெரும் பணக்கார கும்பல் மட்டுமே நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும்.

அண்மை பதிவுகள்