மாநில அந்தஸ்து கோரும் லடாக் மக்கள் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க
லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை
பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.
உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.
ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு
| இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
https://youtu.be/4ZWTG2oFhJc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஐ.ஐ.எம். உதய்பூரில் இஸ்லாமிய மாணவன் மர்ம மரணம்
“அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.
மோடி அரசின் E20 திட்டம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு
தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’
166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!
மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.
உதய்பூர் ஃபைல்ஸ்: இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படம்!
இதுபோன்ற படங்களின் மூலம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது மிகத் தீவிரமான உளவியல் போரைத் தொடுத்து வருகிறது பாசிச கும்பல்.
ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!
மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!
செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.
கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?
ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.

























