டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !
இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையை அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை!
“மூடு டாஸ்மாக்கை” பிரச்சார இயக்க அனுபவம் – உரையாடல் வீடியோ
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்குபெறும் கலந்துரையாடல்.
பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் போலீசு பயங்கரவாதிகள் !
மாணவர்களின் போராட்டத்தை தூண்டியவரை கைது செய்யவேண்டுமெனில் போயஸ் தோட்டத்திற்கல்லவா போலீசு போயிருக்க வேண்டும்; மாறாக, மதுரவாயலில் பு.மா.இ.மு. தோழர்களைத் தேடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனம்!
அரசின் அடக்குமுறையை முறியடிப்போம் – மக்கள் அதிகாரம் அறிக்கை
மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைத் தனிமைப்படுத்தும், கொச்சைப்படுத்தும், போலீசின் சதிகளை கடுமையாகக் கண்டிக்கின்றோம். ஊடகங்கள் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டாம். மக்களது நியாயமான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.
டாஸ்மாக்கை மூடு – தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் !
திருச்சி, குடந்தை, வேதாரண்யம், உடுமலை பகுதி கல்லூரி, பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டச் செய்திகள். தமிழகமெங்கும் டாஸ்மாக்கை மூடுமாறு மாணவரிடையே போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !
மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.
டாஸ்மாக்கை மூடு… தமிழகமெங்கும் தொடரும் போராட்டங்கள் !
டாஸ்மாக்கை மூடு, பச்சையப்பா மாணவர்களை விடுதலை செய்! - கரூர், கோத்தகிரி, காங்கயம், கடலூர் பகுதிகளில் நடந்த போராட்டச் செய்திகள் - படங்கள்!!
நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்
நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
டாஸ்மாக்கை மூடு ! நெல்லை – நாகர்கோவில் போராட்டங்கள்
அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா?
பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.
சிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்
கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.
கோவை – மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை
சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை.
பச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி – வீடியோ
அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!























