Sunday, February 15, 2026
கணினி வலையமைப்பை ஊடுருவி தாக்குவதன் (Hack) மூலம் ஒரு தனி நபரின் வாழ்வை மட்டுமின்றி ஒட்டு மொத்த தொழில்துறை, போக்குவரத்து ஒழுங்கமைப்பு, மின் விநியோக அமைப்பு (Power Grid), மின்னுற்பத்தி நிலையங்கள் என அனைத்தையும் முடக்க முடியும்.
கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?
விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம்.
பெற்றோர்களே! உழைக்கும் மக்களே ! வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோட கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம் !
தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்டனர்.
போபால் விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது.
'நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது' என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்டனர் தோழர்கள்.
இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நெருப்புக்குத் தப்பியவனை இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!
'சமூக நீதி'யின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.
அரசு - தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள்.
"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."
சமீபகாலமாக சென்னை கல்லூரி மாணவரிடையே நடக்கும் மோதல்களை நிறுத்தக் கோரி மாணவர்களிடையே புமாஇமு விநியோகித்து வரும் துண்டுப் பிரசுரம்.
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்...தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்... தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை?

அண்மை பதிவுகள்