Monday, May 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 621

எபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !

2

ப்பிரிக்க நாடுகளை ஏகாதிபத்திய சுரண்டலும், அதன் காரணமாக வறுமையும், உள்நாட்டு போர்களும் ஒரு புறம் வதைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் கொடிய ஆட்கொல்லி நோய்கள் கொத்துக் கொத்தாக மக்களை கொன்றழித்துக் கொண்டிருக்கின்றன.

எபோலா என்னும் கொடிய உயிர்க்கொல்லி இரத்த ஒழுக்கு தொற்று நோய் டிசம்பர் 2013 முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி கினியா, சியரா லியோன், லைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இன்று வரை சுமார் 12,008 பேர் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லைபீரியா - புதைக்கும் குழு
லைபீரிய அரசின் சுகாதரத்துறை குழு ஒன்று எபோலாவால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிக்கும் காட்சி (ஆகஸ்ட் 22, 2014)

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்களை கொண்டிருந்த நாடுகளில் சுகாதார ஊழியர்களும் கூட எபோலா, லஸ்ஸா போன்ற வைரஸ்களால் கொல்லப்படுவதன் மூலம், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.

எபோலா மட்டுமின்றி லஸ்ஸா, லுஜோ, மஞ்சள் காய்ச்சல், ஹண்டா போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ரத்த ஒழுக்கு நோயை உருவாக்குகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவைப் போலவே லஸ்ஸா வைரசும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேற்காப்பிரிக்காவில் ஏழை நாடான சியரா லியோனில் லஸ்ஸா வைரசினால் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் கொல்லப்படுகின்றனர். 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 150-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அதாவது 40,000 பேருக்கு 1 மருத்துவர். சீனாவில் 500 பேருக்கு 1 மருத்துவர், இந்தியாவில் 1,500 பேருக்கு 1 மருத்துவர், அமெரிக்காவில் 350 பேருக்கு 1 மருத்துவர் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். லஸ்ஸா போன்ற வைரஸ், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோயாளிகளிடமிருந்து தொற்றும் அபாயத்தால் அங்கு சுகாதாரத்துறையில் வேலை செய்ய பலர் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷேக் உமர் கான் என்ற டாக்டர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றி வருகிறார். மகேரா கிராமத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தில் பத்து குழந்தைகளில் ஒருவராக பிறந்த கான் சிறுவயது முதலே டாக்டராக விரும்பியிருக்கிறார். படித்து பட்டம் பெற்ற பின் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெனெமாவின் அரசு மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார்.

டாக்டர் ஷேக் உமர் கான்
டாக்டர் ஷேக் உமர் கான்

எபோலா நோய் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, டாக்டர் கான் எபோலா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்துள்ளார். லஸ்ஸா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சையளித்து வந்த அனுபவமும் நோயாளிகள் மீதான அவருடைய அக்கறையும் சில நோயாளிகள் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப உதவியிருக்கின்றன. சியரா லியோன் அரசு அவரை தேசத்தின் நாயகனாக அறிவித்தது.

கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருப்பதால், உலகெங்கும் எபோலா நோய் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உலக அளவிலான மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து நோய் தொற்று மேற்கத்திய நாடுகளுக்கு பரவி விடக்கூடாது என்பது இதன் முதன்மையான நோக்கங்களில் ஒன்று. என்ன இருந்தாலும் மேற்குலகின் உயிர் ‘மகத்தானதல்லவா’! ஆனால் கிழக்கின் உயிரை வதைக்கும் மேற்குலகின் பொருளாதார ஆக்கிரமிப்பு வைரசை தடுத்து நிறுத்த இப்போது சோசலிச முகாம் ஏதும் இல்லை.

இக்கொடிய தொற்று நோய்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க (Quarantine) அங்கே போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சியரா லியோன் மட்டுமின்றி லிபீரியாவில் அதிக பட்சமாக 2,704 பேர் இந்நோய் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். கினியாவில் 981 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபீரியாவின் தலைநகரிலேயே கூட பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 42 லட்சம் பேருக்கு 52 மருத்துவர்கள் (80,000 பேருக்கு 1 மருத்துவர்) மட்டுமே உள்ளனர் என்பதையும் கொண்டு அந்நாட்டின் சுகாதாரத்துறையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

எபோலா தமது நாடுகளுக்கு பரவக்கூடாது என்ற அளவில் மட்டுமே பிற உலக நாடுகள் இப்பிரச்சனையைப் பார்க்கின்றன. பெயரளவில் மட்டுமே எபோலாவை எதிர்த்து போராடுவதற்காக மருத்துவ குழுக்களையும், உதவியையும் அனுப்பி வருகின்றன.

எபோலா போன்ற வைரஸ்களை உயிரியல் ஆயுதங்களாக பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா உயிரியல் ஆயுத முறியடிப்பு என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினையை பார்க்கிறது. ஏற்கனவே சியரா லியோனில் லஸ்ஸா வைரசைக் கொண்டு அமெரிக்க இராணுவமும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. எழவு வீட்டிலும் ஆதாயம் இல்லாமல் இல்லை!

எபோலா வைரஸ்
எபோலா வைரஸ் (மாதிரிப்படம்) – நன்றி : http://conorhearn.com/

எபோலா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஆகும். 1976-ல் முதன்முதலில் ஆப்பிரிக்காவின் காங்கோவில் எபோலா நதிக் கரையில் இருந்து பரவிய ரத்த ஒழுக்கு நோயின் காரணியாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால் எபோலா என்று பெயர் சூட்டப்பட்டது. எபோலா வைரசில் ஐந்து வகைகள் இருக்கின்றன. இன்று வரை கிட்டத்தட்ட 42 முறை இந்நோய் பரவி பலரை பலிகொண்டுள்ளது.

பாக்டீரியா முதல் மனிதன் ஈறாக அனைத்து உயிர்களும் செல்களால் ஆனவை. ஒரு செல் என்பது, தன்னை நகலெடுத்து பல்கிப் பெருகுவதற்கும், பாரம்பரிய பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துவதற்கும், அதாவது தன்னிசையாக இயங்குவதற்கு தேவையான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு முழுமையான அமைப்பாகும். முதலில் ஒரு செல் உயிரி தோன்றி அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு உயிர்களாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

செல்கள் உருவாவதற்கு முன்னர், முதலில் புரோட்டின்களும் நியூக்ளியோ அமில மூலக்கூறுகளும் இணைந்து உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவற்றிற்கும் இடைப்பட்ட ஒரு அமைப்பு உருவானதாக என நவீன அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கின்றனர். இவ்வமைப்பை கொண்டவை தான் வைரஸ் எனப்படுவன.

வைரஸ்கள் என்பவை மரபுப் பண்புகளை கொண்ட ஒரே ஒரு டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை சுற்றி புரோட்டின் உறை சுற்றப்பட்ட எளிய அமைப்பாகும். இவை தனித்து இயங்க முடியாது, இவை பாக்டீரியாக்கள், தாவரங்கள், விலங்குகள் போனற பிற உயிர்களின் செல்களில் உட்புகுவதன் மூலம் மட்டுமே இயங்க முடியும். நமது மனித செல்லை விடவும், ஒரு செல் உயிரியான பாக்டீரியாவை விடவும் 100 மடங்கிற்கும் மேல் சிறியவையாக இருக்கும் வைரஸ்களை உயிருள்ளனவையாக தான் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். மரபியலின் படி ஆர்.என்.ஏ-வை மட்டும் கொண்டவை ஆர்.என்.ஏ வைரஸ், டி.என்.ஏ- வை மட்டும் கொண்டவை டி.என்.ஏ வைரஸ் என வகைப்படுத்தப்படுகின்றன.

மற்ற உயிரணுக்களுடன் தொடர்பு ஏற்படும் போது வைரஸ்கள் தமது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை அந்த செல்லின் உட்செலுத்தி மரபணுவை மாற்றுகின்றன. பின்னர் அந்த செல்லில் இருக்கும் என்சைம்கள், அமினோ அமிலங்களையும், பிற மூலக்கூறுகளையும் பயன்படுத்திக் கொண்டு வைரசின் மரபணுக்கள் தம்மை பிரதியெடுத்துக்கொள்கின்றன. இதற்கான காலம் அடைகாக்கும் காலம் (Incubation Period) எனப்படுகிறது. இவ்வாறு பல்கிப்பெருகிய பிறகு அந்த செல்லை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மற்ற செல்களை தாக்குகின்றன. இவ்வகையில் உடல் முழுவதும் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது.

எபோலா வைரஸ் உள்ளமைப்பு
எபோலா வைரஸ் உள்ளமைப்பு (நன்றி : http://conorhearn.com/)

ஒவ்வொரு வைரசும் ஒரு குறிப்பிட்ட வகையிலான செல்களில் குடியேறி பல்கிப் பெருகுகின்றது. உதாரணமாக போலியோ வைரஸ் நரம்பு செல்களையும், எயிட்ஸ் (HIV) வைரஸ் நோயெதிர்ப்பு உயிரணுக்களான ரத்த வெள்ளை அணுக்களையும் தாக்குகின்றன.

நமது நோய் எதிர்ப்பு அமைப்பானது இரு அம்சங்களை, கட்டங்களைக் கொண்டது. முதலாவது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு (Innate Immune System). இது வெளியிலிருந்து வரும் பொதுவான நோய்க்கிருமிகள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத வெளி மூலக்கூறுகள் எதுவாயினும் அவற்றை தாக்கி அழிக்கின்றன. இரண்டாவது தகவமைத்துக் கொள்ளும் நோயெதிர்ப்பு (Adoptive Immune System). இது குறிப்பிட்ட நோய்க்கிருமிகள், வெளி மூலக்கூறுகளின் பண்புகளையும், அவற்றை எதிர்த்து போராடும் வழிமுறைகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொண்டு மேம்படுத்திக் கொள்ளும். ஆயினும் வைரஸ்களின் மரபணுக்கள் பிறழ்வு (Mutate) மூலம் தொடர்ந்து தம்மை தகவமைத்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியையும் மீறி நமக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறது.

ஒன்றோடொன்று ஊடாடி இணைந்து செயலாற்றும் நோயெதிர்ப்பு அமைப்பின் முக்கிய முன்னணிப் படையணியாக இரத்தத்தில் உள்ள ஏழு வகையான இரத்த வெள்ளை அணுக்கள் செயலாற்றுகின்றன. இந்நோய்யெதிர்ப்பு செயல்பாடானது ஒரு மூலக்கூறு உடலுக்கு சொந்தமானதா (Self Molecule) அல்லது வெளியிலிருந்து வந்துள்ளதா என்பதை தீர்மானிப்பதிலிருந்து துவங்குகிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா நமது உடலை தாக்கும் போது அவற்றின் மேலுள்ள புரோட்டின்களை கொண்டு அது வெளியிலிருந்து வந்த தாக்குதல் என வகைபிரித்து இரத்த வெள்ளை அணுக்களுக்கு செய்தி அனுப்பப்படும். உடனடியாக அவை அந்த பாக்டீரியாவை அல்லது வைரஸ் தாக்குண்ட செல்களை கொன்றழிக்கும் வேலையை துவங்கி விடுகின்றன. நோயெதிர்ப்பு அமைப்பின் செல்கள், நோய்க் கிருமிகளையும், அவற்றால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் சீர்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கும்போது அப்பகுதியில் அழற்சி ஏற்படும், உடல் வெப்பநிலை உயரும். இதைத் தான் நாம் காய்ச்சலாக உணர்கிறோம்.

மத மூடநம்பிக்கைகளால் பரவும் எபோலா
மத மூடநம்பிக்கைகளால் பரவும் எபோலா

எபோலா வைரஸ் உடலில் நுழைந்த உடன் முதலில் உடலில் நோய்க்கிருமிகளின் ஊடுறுவலுக்கு எதிரான படை அணியில் முதல் வரிசையில் இருக்கும் பலவகையான நோயெதிர்ப்பு உயிரணுக்களை குறிவைக்கிறது. பின்னர் இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பை செயலிழக்க வைத்த பின் இரத்த நாளங்களை உள்ளிருந்தே அரித்து தின்கிறது. இதனால் இரத்த நாளங்களுக்குள் கட்டிகள் உருவாகின்றன. மேலும், அட்ரினலின் சுரப்பியையும் இந்த வைரஸ் தாக்குவதால் உடலின் ரத்த அழுத்தமும் பாதிக்கபடுகிறது.

அதன் பின் முதலில் சாதாரணக் காய்ச்சல் போல் ஆரம்பிக்கும் இந்நோய் படிப்படியாக தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி மற்றும் ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு வியர்வை நாளங்களில் இருந்து உடலின் அனைத்து துளைகளின் வழியாகவும், உடலினுள்ளும் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

எபோலா வைரஸ் உடலில் நுழைந்த இரண்டு முதல் 10 நாட்களுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு 21 நாட்கள் வரைகூட அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். பல்லடுக்கு இரத்த சோதனைகளின் மூலம் மட்டுமே இந்நோயை கண்டறிய முடியும். அதற்குள் இந்த வைரஸ் உடல்முழுவதும் பரவி அபாயகட்டத்தை எட்டியிருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, உமிழ்நீர், சளி, இரத்தம் போன்ற உடல் திரவங்களின் மூலம் பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடமிருந்து சுமார் 7 வாரங்கள் வரை எபோலா மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் இந்த நோயை கண்டறிவதும், கட்டுப்படுத்துவதும் கடினமாயிருக்கிறது. குறிப்பாக இதை சாத்தியப்படுத்தும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், குறைந்தபட்ச விழிப்புணர்வும் ஏழைகளின் கண்டமான ஆப்பிரிக்காவில் இல்லை.

டாக்டர் கான்
டாக்டர் ஷேக் உமர் கான்

நம்மூர் போல ஆப்பிரிக்காவிலும், இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டும் வழக்கம் இருப்பதால், எபோலாவினால் இறந்தவர்களின் உடலில் இருந்தும் எபோலா பரவியுள்ளது. மட்டுமின்றி மக்களின் அறியாமை மற்றும் வேறு வழியில்லை எனும் நிலைமை காரணமாக பாரம்பரிய நாட்டுப்புற மருத்தவர்களிடம் – நம்மூர் சிவராஜ் வைத்தியர் போல – சென்று மருத்துவம் பார்க்கின்றனர். இதுவும் எபோலா பரவுவதற்கு ஒரு காரணம்.

மற்ற வைரஸ்களைப் போலவே எபோலா வைரசும் பல்கி பெருகும் போது தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது. சியரா லியோனில் 200-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்படைந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து எபோலா வைரசின் ஆர்.என்.ஏ-வை படியெடுக்கும்  பணி நடத்தப்பட்டது. எபோலா குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக மாற்றமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விலும் டாக்டர் கான் முக்கிய பங்காற்றியுள்ளார்.

டாக்டர் கான் சிகிச்சையளித்து வந்த கெனெமா மருத்துவமனையில் மனிதர்களை கொன்று தின்பதாக புரளி கிளம்பியதையடுத்து அம்மருத்துவமனை தாக்குதலுக்குள்ளானது. கானுடன் வேலை செய்த சுகாதார ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளானதையடுத்து யாரும் அவ்வேலைக்கு வராததால் அம்மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய்ப் பிரிவையே மூடிவிடும் நிலைக்குள்ளானது.

இத்தனை இடர்ப்பாடுகளுக்கும் மத்தியில் பின்னரும் கான் தனது வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இத்தனைக்கும் அவர் வறட்டுக் கோட்பாட்டுவாதியல்ல, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிரம்பிய கான் தனது வாழ்க்கை பணியை மிகவும் நேசிப்பதாக கூறியிருந்தார். எபோலா போன்ற நோய்கள் தம்மையும் தாக்கக் கூடும் என்று அவருக்கு நிச்சயம் தெரியும். அவரே அதை கூறியிமிருக்கிறார். ஆனால் தான் இந்த வேலையை விட்டு சென்றால் வேறு யார் வந்து இதை செய்வார்கள் என்று மருத்துவராக தொடர்ந்து தனது கடமையை செய்து வந்திருக்கிறார்.

யாரும் செய்யத் தயங்கும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வந்த டாக்டர் கானுக்கும் எபோலா தொற்று ஏற்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம், தனது 39-வது வயதில் மரணமடைந்தார். கான் மட்டுமின்றி செவிலியர், ஆய்வக உதவியாளர் என இந்த ஆய்வில் பணியாற்றிய ஐவர் எபோலாவினால் உயிரிழந்துள்ளனர்.

எபோலாவை எதிர்த்து போரிடும் சுகாதரத்துறை ஊழியர்கள்
எபோலாவை எதிர்த்து போரிடும் மருத்துவப் பணியாளர்கள்

எபோலா பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சராசரியாக 70%. இன்று வரை எபோலா போன்ற இரத்த ஒழுக்கு ஆட்கொல்லி நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் Zmapp என்ற பரிசோதனை மருந்தை எபோலாவை குணப்படுத்த பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தது. ஆனால், இந்த மருந்து டாக்டர் கானுக்கு கொடுக்கப்படவில்லை. பரிசோதனை மருந்து டாக்டர் கானுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாததால் அவருக்கு அதை கொடுக்கவில்லை என அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அவரது குடும்பத்தினர் இது குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மனிதகுலத்தின் இயற்கை பற்றிய அறிவு பல மடங்கு அதிகரித்தாலும், மிக எளிய அடிப்படையான எபோலா போன்ற நோய்களிலிருந்து கூட ஆப்பிரிக்க மக்களை பாதுகாப்பதைக் செய்ய முடியவில்லை. முதலாளித்துவ லாப வேட்டை தீர்மானிக்கும் திசையில் விஞ்ஞான பணிகள் திசை திருப்பி விடப்படுவதே எபோலாவின் கொலை வேட்டை ஆரம்பித்ததற்கும், தொடர்ந்து பரவுவதற்கும் காரணம்.

நமது சகமனிதர்கள் அடிப்படையான மருத்தவ வசதிகளும், வாழ்க்கை வசதிகளும் இல்லாமல் வாழும் போது நுகர்வுக் கலாச்சாரத்தின் மூலம் எண்ணிறந்த வசதிகள் அத்தியாவசியமானதாக கொட்டப்படுகின்றன. ஒரு ஹாலிவுட் படத்திற்கும், வீடியோ விளையாட்டிற்கும் செய்யப்படும் கிராபிக்ஸ் செலவுகளை வைத்து பல ஊர்களுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியும். இதுவே அமெரிக்காவின் போர்த் தளவாடங்களின் மதிப்பீட்டில் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கே வாழ்வளிக்க முடியும்.

சரியாகச் சொன்னால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்கள்தான், மேற்குலகின் பளபளப்பிற்கும், அடாவடிக்கும் காரணம்.

–    மார்ட்டின்.

மாட்டுக்கறி விருந்துடன் தமிழக நவம்பர் புரட்சி தின விழாக்கள்

10

1. அதிராமபட்டினம்

விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாள் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தம்பிக்கோட்டை, மழவேனிற்காடு, அண்ணாநகர், அதிராம்பட்டினம் ஆகிய கிளை பகுதிகளில் திரளான தோழர்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை அடைய அர்ப்பணித்து பாடுபடவும் உறுதியேற்று நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Created with Nokia Smart Cam

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை

2. தருமபுரி

ஏழை மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உன்னத நாள்
உழைக்கும் மக்களின் பொன்நாள்

நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க

வம்பர் 7 ரசிய புரட்சி நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் இயங்கி வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வி.வி.மு செயல்படும் எட்டு பகுதிகளில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும், கிராமங்களில் பேரணியாக சென்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக இளைஞர்களுக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மூன்று கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக K அக்ரகாரம் கிளை பகுதியில் மையப்படுத்தி பொதுக்கூட்டம் போல மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு தோழர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தோழர் சிவா, வட்டாரக் குழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.

தோழர் சக்திவேல், பு.மா.இ.மு “புதியதோர் உலகைப் படைக்க புரட்சிப் பாதை வேண்டும்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

தோழர் பாலன், பு.மா.இ.மு,  “பகத்சிங் கனவை நினைவாக்குவோம்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

தோழர் அற்புதம், பு.மா.இ.மு “நாங்க சும்மா இருந்தாலும் நாடு எங்களை விடுவதில்லை” என்ற துரை சண்முகம் எழுதிய கவிதை வாசித்தார்.

எட்வின், இலக்கியா போன்ற சிறுவர்கள் புரட்சிகர பாடல் பாடினார்கள்.

இறுதியாக நவம்பர் 7 சிறப்பையும் புதிய ஜனநாயகப் புரட்சியின் தேவையையும் பற்றி தோழர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். விளையாட்டு பரிசு பொருட்கள் கொடுத்தும், பொதுமக்கள் மற்றும் தோழர்களுக்கு உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம் வட்டம்
9943312467

3. கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பாக 97-வது ரசியப் புரட்சி நாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சி துவக்கமாக வாகனபிரிவு சார்பாக தோழர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தி அனைவருக்கும் இனிப்பும் தேநீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்புரை நிகழ்த்தி அனவைருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தோழர் ஆனந்த் ராஜ் தலைமையேற்க தோழர் விஜயன் சிறப்புரையாற்றினார்.

பகல் 12 மணிக்கு அனைத்துப் பகுதி தோழர்களையும் ஒன்றிணைத்து அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது. தோழர் ஆனந்தராஜ் முன்னிலையில் தோழர் யுவன் சிறப்புரையாற்றினார். தோழர்களும் தோழரின் குழந்தைகளும் எழுச்சிமிகு புரட்சிகர பாடல்களை பாடி அனைவருக்கும் உணர்வூட்டினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். தோழர்கள் தத்தமது குடும்பத்துடன் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. மேலும், இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் புதிய தோழர்களாக கலந்து கொண்டார்கள். புரட்சிகர பாடலும் உரைகளும் இவர்களை அமைப்பாக உயர்த்த உதவும் வகையில் அமைந்தன.

இறுதியாக, அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

பார்ப்பன பண்பாட்டு பண்டிகைகளுக்கு மத்தியில் நவம்பர் புரட்சிநாள் விழா என்பது பாட்டாளி வர்க்க திருவிழா பண்பாட்டு நிகழ்ச்சியாக, தனியார்மயம், தாராளமயம், ஒழிப்பு, மேலாதிக்க அமெரிக்க பார்ப்பன பாசிசத்தை ஒழிக்க பாட்டாளிகள் ஒன்றிணைவதின் அவசியத்தை அனைவருக்கும் இந்நிகழ்ச்சி உணர்த்தியது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்,
பாலன்

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்

4. கோவை – நவம்பர் புரட்சி தின விழா

கோவை சின்னவேடம்பட்டி CRI கம்பெனி அருகில் உள்ள தனியார் இடத்தில் நவம்பர் புரட்சி தின விழா கொண்டாட முடிவு செய்தோம். கோவையின் விசேச காவல்துறை அராஜகம் காரணமாக சரவணம்பட்டி காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். வழக்கம் போல் அனுமதி மறுத்தார்கள்.

“என்ன காரணம்..?” எனக் கேட்டால், “கமிஷனர் உத்தரவு. அதற்கு மேல் எங்களிடம் எதுவும் கேட்க வேண்டாம்” என காவல் நிலையத்தில் கறாராக கூறிவிட்டார்கள்.

CRI முதலாளியின் நிர்ப்பந்தம் காவல் துறையின் மேலிடத்தில் மிகவும் பலமாக உள்ளது என்பதை அறிந்தோம்

“ஒலிபெருக்கி இல்லாமல் தனியார் இடத்தில் நடத்துவோம்” என்றோம்.

உடனே காவல் துறை, “சின்னவேடம்பட்டி ஊருக்குள் வேண்டுமானால் தண்ணீர் டேங்க் மைதானத்தில் நடத்துங்கள்” என்று ஜனநாயகமாக (!?) சொன்னார்கள்.

எப்படியும் இவர்கள் CRI கம்பெனி அருகில்தான் நடத்துவார்கள்; ஊருக்குள் போக மாட்டார்கள் என்று சரவணம்பட்டி காவல் துறை சாதுர்யம் காட்டியது.

“நாம் உடனே ஊருக்குள் நடத்துகிறோம்” என்று எழுதிக் கொடுத்தோம். உடனே காவல் துறை திடுக்கிட்டு மேலே கேட்டுச் சொல்கிறோம் என பின்வாங்கினார்கள். பின்னர் வேறு வழி இல்லாமல் 5-ம் தேதி இரவு அனுமதி வழங்கினார்கள். ஒரு நாளில் நோட்டீஸ் போஸ்டர் அடிப்பதிலிருந்து அணிதிரட்டல் வரை எல்லா ஏற்பாடும் செய்து 7-ம் தேதி மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.

மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் திலீப் தலைமை தாங்க சின்னவேடம்பட்டி மக்கள் ஆங்காங்கே இருந்தவாறே கவனிக்க தெருமுனை நிகழ்ச்சியாக ஆரம்பித்து பொதுக்கூட்டமாக மாறியது.

டுகெதர் கம்பெனி துணைத் தலைவர் தனது அனுபவங்களை, முதலாளித்துவ பயங்கரவாதத்தை விளக்கினார்.

ஃபெரோலிங்க்ஸ் செயலாளர் தோழர் நித்தியானந்தன் முதலாளியின் வீட்டை முற்றுகையிட்ட அனுபவத்தை சொல்ல கூட்டம் களை கட்டியது.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்க முருகன் மில் தலைவர் தோழர் ரங்கசாமியும் இணைச் செயலர் ஜெகநாதனும் பாட்டாளி வர்க்கத்தின் கம்பீரத்துடன் பேசினார்கள்.

கம்போடியா மில் கிளைச் செயலாளர் தோழர் மோகன்ராஜ் நவம்பர் புரட்சியின் சிறப்பு, யூனியன் கார்பைடு அராஜகம், மோடியின் தொழிலாளர் விரோத போக்கு என சகல அம்சங்களையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினார்.

CRI கிளைச் செயலர் தோழர் குமாரவேல் “புஜதொமு சங்கத்தின் அரசியல் எங்களை வளர்த்தது, எங்களுக்கு சுய மரியாதையை கற்றுக் கொடுத்தது, நவம்பர் 7 நிகழ்ச்சியை எங்கள் பகுதியில் நடத்தியது பொருத்தமான முடிவு” என்றார்.

இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி பேசுகையில்,

கோவையில் நடந்த புஜதொமு சங்கத்தின் வீரமிக்க போராட்டத்தை இணைத்துச் சொல்லி, 1917 நவம்பர் புரட்சி தொழிலாளர்களுக்கு என்ன செய்தது அதன் சாதனை என்ன? கோவையில் நவம்பர் 7 ஐ எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும், காவல்துறை இராணுவம் போன்றவற்றை எப்படி பாட்டாளி வர்க்கம் கையாள வேண்டும் என்றும், நமது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் நம்பிக்கையூட்டும் படி ஒரு மணி இருபது நிமிடங்கள் பேசினார். நவம்பர் புரட்சியின் எழுச்சி பகுதி முழுவதும் பரவும்படி பேசினார். பகுதி மக்களின் ஆதரவு, CRI முதலாளியின் பித்தலாட்டதை தோலுரித்தது. இவையெல்லாவற்றையும் CRI முதலாளியை தனிமைப்படுத்தும் இலக்கில் பேசி நிறைவு செய்தார்.

பின்னர் கோவை மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் நடந்த புரட்சிகர கலை நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி மக்களை நமது அமைப்பின் பக்கம் திருப்பும் வகையில் அமைந்தது.

பின்னர் அனைவருக்கும் இனிப்பு காரம் தேநீர் வழங்கப்பட்டது. சி‌ஆர்‌ஐ கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி நன்றி சொல்ல நவம்பர் புரட்சி தின விழா கம்பீரமாக நிறைவடைந்தது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

5. மதுரை – நவம்பர் புரட்சிதின விழா

துரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் நவம்பர் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா அரங்கக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

விழாவிற்கு புஜதொமு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கி நடத்தினார். தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியுடன் காலையில் துவங்கிய விழா முதலில் கத்தி திரைப்படம் விவாதிக்கப்பட்டது. விவாதத்தை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனிராஜ் தலைமை தாங்கி ஒருங்கிணைத்தார்.

கத்தி திரைப்படம் போலியான கார்ப்பரேட் எதிர்ப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை அரசே அனுமதித்து சொந்த நாட்டு மக்களை கொள்ளையிட அனுமதித்து வருகிறது. ஆனால் படமோ மிகவும் செயற்கையாக விஜயின் கதாநாயக பிம்பத்துக்காக கார்ப்பரேட் எதிர்ப்பை வைத்து பின்னப்பட்டுள்ளது. நிஜத்தில் விஜய் கோக்கின் தூதராக இருந்து கொண்டு படத்தில் மட்டும் கோலா கம்பெனியை எதிர்த்து போராடுவது போல் நடிப்பதை மிகப்பெரிய மோசடி என்று பல்வேறு தோழர்கள் தம் கருத்தை கூறினார்கள் . இதே கருத்தை விவாதத்தை ஒருகிணைத்த தோழர் லயோனல் அந்தோனிராஜ் அவர்களும் விவரித்து உரையாற்றினார்கள்.

திரைப்பட கலந்துரையாடல் முடிந்தவுடன் மதியம் மாட்டுகறி விருந்து நடைபெற்றது. மதிய நிகழ்வாக மதுரை புமாஇமு தோழர் அன்பழகன் “விளையாட்டும் அரசியலும்” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். விளையாட்டில் ஏழை மற்றும் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதை உதாரணங்களோடு அம்பலப்படுத்தி, சோசலிசத்தில் மட்டுமே திறமையான வீரர்கள் ஜொலிக்க முடியும் என்பதை விளக்கி பேசினார்.

உசிலம்பட்டியை சேர்ந்த விவிமு தோழர் கயல்விழி “இன்றைய சமூக நிலையில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை”யை பற்றி பேசினார். பெண்கள் வீட்டில் ஓய்வின்றி வேலை பார்ப்பது பற்றியும், அவர்களின் மீதான மத, சாதி வன்முறைகள் பற்றியும், உசிலை வட்டாரத்தில் கொளரவ கொலைக்கு பலியான விமலா தேவியை உதாரணமாக காட்டியும் பேசினார்.

மதுரை பெவிமு தோழர் ராணி, அவர் எப்படி அமைப்புக்குள் வந்தார் என்ற அனுபவத்தை பற்றி பேசினார். தோழர்களின் அர்பணிப்பான போராட்டமும் மக்களை நேசிக்கும் தன்மையையும் பார்த்து, தானும் அமைப்புக்குள் செயல்பட வேண்டும் என்று முடிவுக்கு வர ஈர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய பகுதியில் டாஸ்மாக்கிற்கு எதிராக பெவிமு சார்பாக சுவரொட்டி ஒட்டியதால் காவல் துறை வழக்கு பதிந்து தேடிய போது முதலில் தாம் பதட்டப்பட்டதையும் அதற்கு தோழர்கள் தைரியத்தையும் ஆதரவும் நம்பிக்கையும் தந்து போராட ஊக்கமளித்ததை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார்.

விவிமு வின் உசிலை வட்டாரச் செயலர் தோழர் குருசாமி “இந்து பாசிசத்தின் இளைய பங்காளியான சாதியவாதிகள்” என்ற தலைப்பில் பேசினார். பார்ப்பனவாதிகளை எதிர்ப்பது போல இடைநிலை சாதிகளை எதிர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இடைநிலை சாதிகளை எதிர்ப்பது என்பது நம்கண் முன்னால் நம் அருகில் இருப்பவர்களை எதிர்ப்பது. இது மிகப் பெரிய போராட்டம். அதில் தோழர்களின் சமரசங்களை விமர்சனத்துக்குள்ளாக்கினார். மேலும் சாதியவாதிகள் எவ்வளவு அபாயகரமாக‌ வளர்ந்து வருகிறார்கள் என்பதை எச்சரிக்கை செய்தும் அதை முறியடிப்பது புரட்சிக்கு எவ்வளவு அவசியமானது என்ற அவசியத்தை விளக்கி பேசினார்.

ம.உ.பா. மையத்தின் மதுரை மாவட்ட இணைசெயலாளர் வாஞ்சிநாதன் தோழர்கள் அரசியல் வேலை செய்வதில் நம்முடைய மனத்தடைகள் என்ன? என்பதை சுட்டிக்காட்டி பேசினார். அதில் இன்று பாசிசம், கார்ப்பரேட் பயங்கரவாதமும் பரவி வருகின்ற சூழலில் தோழர்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக, உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்கின்ற உணர்வு இல்லாமல் இருப்பது பற்றியும், குடும்பத்தில் தோழர்கள் செய்து கொள்ளும் சமரசங்களையும் விமர்ச்சித்து சுட்டிக்காட்டியும், எதிரிகள் எவ்வளவு தீவிரமாக வேலை செய்கிறார்களோ அதை விட தீவிரமாகவும் அறிவுபூர்வமாகவும் செயலாற்றினால்தான் வெற்றி சாத்தியம் என்று எச்சரிக்கை செய்து பேசினார்.

இறுதியாக மகஇக வின் மாநில் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் “கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டும் மறுகாலனியாக்க சூழலில் நவம்பர் புரட்சியின் இன்றைய தேவையும் ” என்ற தலைப்பில் பேசினார்.

முதலாம் அகிலம் உருவாகியதில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் பாரிஸ் கம்யூன் எழுச்சியை மார்க்ஸ்ம் ஏங்கல்ஸ்ம் ஆதரித்ததையும் மேலும் 2-வது அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் ஏகாதிபத்திய விசுவாசிகள் ஆனதை தோழர் லெனின் எவ்வாறு அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தினார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்.

மேலும் இன்று நாடு மீண்டும் காலனியாகி வருகின்ற சூழலில் நவம்பர் புரட்சி எவ்வாறு நமக்கு உத்வேகமளித்து நம்முடைய நாட்டிலும் அத்தகைய தொரு புரட்சி தேவை என்பதை நமக்கு முன் உள்ள சூழல்களையும் சவால்களையும் ஒப்பிட்டு விளக்கி பேசினார்.

உரைகளுக்கிடையே தோழர்கள் ஆசை, திருமுருகன், கலைசெல்வி ஆகியோர் புரட்சி தினம் மற்றும் சமூக அவலங்களை பற்றியும் தாம் எழுதியிருந்த கவிதகைளையும், மேலும் சிலர் புரட்சிகர பாடல்களையும் பாடினார்கள். பெவிமு தோழர்கள் “சாதி வெறியர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த வீராங்கனை விமலா தேவி”யின் போராட்டத்தை சிறு நாடகமாக நடத்தி காட்டினார்கள்.

இறுதியில் சர்வதேச கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

6. தஞ்சை – மனித குல வரலாற்றில் மகத்தான நாள் நவம்பர் ஏழு!

“மனித குல அறிவாற்றலை அறிவுச் சொத்துடமை என்ற பெயரில் தனி உடமையாக்கி கொள்ளையடித்து வளர்ச்சியை தடுக்கிறது முதலாளித்துவ சமூகம். அதற்கு நேர் எதிராக மனித குல அறிவு வளர்ச்சியின் தொடர்ச்சியை, தனது அறிவியல் அனுபவத்தை, ஆற்றலை உலகெங்கும் பரவலாக்கி மனித குலம் முழுமையும் வளர்த்தது சோசலிச சமூகம்” என்றார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன்.

மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சியின் 97-ம் ஆண்டுவிழா தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. காலையில் தஞ்சை கீழ வாசலில் ம.க.இ.க தஞ்சை மாநகர பொருனர் தோழர்.அருள் தலைமையில் ம.க.இ.க செயற்குழு உறுப்பினர்கள் தேவன் இராசேந்திரன், தமிழ்ச்செல்வன் முன்னிலையில் ம.க.இ.க கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாலையில் இரயிலடியில் ம.க.இ.க மாநகரச் செயலர் தோழர்.இராவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தோழர்.காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

மனித குல வரலாற்றில் மகத்தான நாள் நவம்பர் ஏழு. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களால் இழிவு படுத்தப்பட்ட ரஷ்ய நாட்டின் பாட்டாளி வர்கமும், விவசாயிகளும் இணைந்து, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர் தோழர்.லெனின் தலைமையில் மனித குலம் கண்டிராத சமத்துவ சமுதாயத்தை படைத்தனர். உலகிற்கே வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசாக சோவியத் ரஷ்யா விளங்கியது. ஏகாதிபத்திய காலனிய சுரண்டலிலிருந்து விடுபட காலனிய நாடுகளுக்கு உதவியது. சீனா, கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பாட்டாளி வர்க்க அரசுகள் அமைய துணை நின்றது.

ரஷ்ய மக்களின் உழைப்பும், பாட்டாளி வர்க்க சர்வதேச கண்ணோட்டமும், இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதார, அறிவியல் வளச்சி பெற பேருதவி புரிந்ததை யாரும் மறுக்க முடியாது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பொக்காரோ பிலாய் இரும்பு ஆலை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.

உலகமயம் என்ற போர்வையில் மேல்நிலை வல்லரசுகள் இந்திய வளங்களை கொள்ளையடிக்கும் இன்றைய மறு காலனியாக்கச் சூழலை ஒப்பிட்டால் சோவியத் ரஷ்யாவின் உதவி எவ்வளவு மகத்தானது என்பது விளங்கும்

இரண்டு கோடி ரஷ்ய மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பாசிச ஹிட்லரின் கோரத் தாக்குலிலிருந்து உலக மக்களை காப்பாற்றினார்.

முதலாளித்துவவாதிகள், அற்ப அறிவு ஜீவிகள் கம்யூனிசம் தோற்றுவிட்டது, அது பிறந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்று கதைத்தாலும் கை கொட்டி மகிழ்ந்தாலும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை ஒழிக்கப்படும் வரை மார்க்சிய – லெனினியத்திற்கு மரணமில்லை முதலாளித்துவம் ஒழிக என்றும் முழக்கம் அமெரிக்க தெருக்களிலேயே ஒலிக்கத் தொடங்கி இருப்பதே இதற்கு சாட்சி.

தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்று பெருங்கூச்சலோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் மறு காலனியாக்க சூழலின் மார்க்சிய – லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடித்து புரட்சிகர போராட்டத்திற்கு அணி திரள்வது மட்டுமே இன்று நம் கண் முன்னே உள்ள ஒரே ஒரு தீர்வு என்று கூறி புரட்சிகர அமைப்புகளில் அணி திரள அறை கூவல் விடுத்தார்.

ம.க.இ.க தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்தோடு மக்கள் அணி திரண்டு ஆதரவளித்தனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்

7. வேலூர்- 97 -ம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா!

ருஷ்யாவில் மாமேதை லெனின் அவர்கள் தலைமையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோசலிசப் புரட்சியின் 97 -ம் ஆண்டு விழா வேலூர் தோட்டப்பாளையத்தில் நவம்பர் 7, 2014 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர் கிளையின் சார்பாக தெருமுனைக் கூட்டமாக பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

விழாவை தலைமை ஏற்று நடத்திய ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தனது தலைமை உரையில், இன்றைய மோடி அரசு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து அவர்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைச் சாடினார்.

தோழர்.வாணி விழாவில் சிறப்புரையாற்றினார். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அதிகரித்து வரும் காய்கறி- மளிகை ஆகிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சாமான்யர்கள் படும் அவதிகளை எடுத்துரைத்தார். ஒரு பக்கம் கல்வி – சுகாதாரம் – மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு புறக்கணிப்பதும், மறுபக்கம் தனியார் முதலாளிகள் இத்துறைகளில் கொள்ளையடிக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் இவை யாவும் மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதற்கான காரணம் தாராளமயத்தின விளைவுதான் என்பதை தனது உரையில் முன்வைத்தார்.

அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வந்தால் பன்னாட்டுக் கம்பெனிகள் பல்கிப் பெருகும்; வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள்; அவ்வாறு வந்த நோக்கியா நிறுவனம் 24,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடித்த பிறகு திடீரென கம்பெனியை இழுத்து மூடியதால் முப்பதாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத் தெருவில் நிற்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம் என்பதை தனது உரையில் நிறுவினார்.

மரத்தடியில் சரகுகளை மட்டுமே கூட்டித் திரியும் மோடியும் – தமிழிசை சௌந்தரராஜனும் நாறிக் கிடக்கும் நகராட்சிக் கால்வாய்களையும், பேருந்து நிலைய கக்கூசுகளில் குவிந்து கிடக்கும் மலக்குவியல்களையும் கூட்ட முன்வரவேண்டியதுதானே என கேள்வி எழுப்பி மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மோசடியை எள்ளி நகையாடினார்.

சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினால் மட்டுமே சாராயத்தினால் ஏற்படும் கேடுகளை ஒழிக்க முடியும் என்பதை எழுச்சியோடு தனது உரையில் எடுத்து இயம்பினார். மேலும் பெருகி வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சாதி மறுப்புத் திருமணங்களில் நடைபெறும் கௌரவக் கொலைகள், சிறு வயதிலேயே நடைபெறும் கட்டாய குழந்தைத் திருமணங்கள் போன்ற பல்வேறு சமூகப் கொடுமைகளைச் சாடிய அவர் 97 ஆண்டுகளுக்கு முன்பு ருசியாவில் நடைபெற்ற புரட்சியைப் போன்று இந்தியாவில் புரட்சி ஒன்றை நடத்தாமல் மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து மக்கள் விடுபட முடியாது; எனவே அத்தகையதொரு புரட்சிக்காகப் போராடும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற புரட்சிகர அழைப்புகளில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

விலைவாசி உயர்வைச் சாடி ”உப்பு வெலக் கூடிப் போச்சண்ணே“ என்கிற பாடலையும், மோடியின் முன்னேற்றத்தைச் சாடி ”நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு” என்கிற பாடலையும் விழா மேடையில் தோழர்கள் பாடினர்.

விழாவில் தோழர். துரை.சண்முகம் அவர்களின் ”ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!” என்கிற கவிதையை தோழர்.முத்துராமன் வாசித்தார்.

இறுதியில் தோழர்.அகிலன் நன்றி உரை கூறி விழாவை முடித்து வைத்தார். அதன் பிறகு அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பும் காரமும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

விழாவையொட்டி மக்களிடையே பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது ஒரு புதிய நல்லதொரு புரட்சி விழாவாக இருந்ததாகவும், நாலு விசயங்களை தெரிந்து கொள்கிற விழாவாகவும் இருந்ததாக விழாவில் கலந்து கொண்டு மக்கள் குறிப்பாக பெண்கள் கருத்து தெரிவித்தனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

8. தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட்த்தில் கோவிபட்டியில் உள்ள முடுக்கலான்குளத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 7 ஐ எளிமையாக கொண்டாடினர்.

காலை 8.00 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பங்கேற்க, சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும், நம் நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிட்டும் விளக்கவுரையாற்றப்பட்டது. உடனே வண்டியை எடுக்காமல் சுமார் 15 நிமிடம் காத்திருந்து நமக்காக ஒத்துழைத்த பேருந்து ஓட்டுனர் உள்பட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அன்று மாலையில் 10 பேர் பங்கேற்ற அறைக்கூட்டமும் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக மாலை 5.00 மணியளவில் தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 12 பேர் கலந்துகொண்ட அறைக்கூட்டத்தில் “ஸ்டாலின் சகாப்த்தம்” குறுந்தகடு காண்பிக்கப்பட்டு, நம் நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிட்டு விளக்கப்பட்டது. கலந்துரையாடல் பாணியில் கேள்வி பதிலாக பேசப்பட்ட இக்கூட்டம் 2.30 மணி நேரம் நடந்தது. இங்கு நடத்தப்படும் முதல் நவ. 7 நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

அதே போல் நெல்லையிலும் 20 மாணவர்களுக்கு இரண்டு அறைக் கூட்டங்களாக எடுக்கப்பட்டது.

9. ஒசூர்

லகின் முதல் சோசலிச குடியரசு நாளான நவம்பர் 7 ஐ ஓசூரில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் சேர்ந்து டி.வி.எஸ் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான கொத்தகொண்டப்பள்ளியில் உழைக்கும் மக்களோடு இரண்டறகலந்து அவர்களுடன் ஐக்கியப்பட்டு எழுச்சிகரமாக கொண்டாடின. உழைக்கும் மக்கள் தன்னார்வத்துடன் பேதமின்றி கலந்துக்கொண்டு தங்களின் பங்களிப்பை செலுத்தினர். 07.11.2014 மாலை 5 மணியளவில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கூடியிருந்த மக்களிடையே ஒரு பொதுக்கூட்டம் போல முறையாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ரசியாவில் புரட்சிக்கு முன் இருந்த சுரண்டல் அவல நிலைமைகளை பட்டியலிட்டு எடுத்துரைத்து அதனை அடியோடு ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களை அரியனையில் அமர்த்தி பூவுலக சொர்க்கமாக நிகழ்த்திக்காட்டிய வரலாற்றை தொகுத்து கூட்டத்தில் எளிமையாக உரையாற்றப்பட்டது. அந்த நாளை நாம் நமது நாட்டில் ஒரு திருவிழாவை போல கொண்டாடி மகிழ்வதோடு நில்லாமல் அவ்வாறு இங்கும் ஒரு புரட்சியை சாதித்துக்காட்டவேண்டும் என்ற உறுதிமொழியோடு களத்தில் போராட அழைப்புவிடுவதாகவும் இக்கூட்டம் அமைந்திருந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 02.11.2014 அன்று காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடத்தப்பட்ட சிறுவர், பெரியவர், பெண்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கோபால் நன்றியுரையாற்றினார்.

இரவு உணவாக மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின் இறுதிவரை கலந்து கொண்ட ஒரு தொழிலாளி இதுதான் உண்மையான மகிழ்வான விழா. நான் இனி இதுமாதிரியான விழாவினில் தவறாமல் வருடம்தோறும் எங்கிருந்தாலும் வந்து கலந்துக்கொள்வேன் என்றும் வழமையான தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை புறக்கணிப்பேன் என்றும் அறிவித்துச் சென்றதே இந்த நவம்பர் தின விழா நிகழ்சியின் வெற்றியை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர்.
தொடர்புக்கு-9788011784

பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி !

18

தி என்ற சொல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அவர் தன்னை எம்.ஜி.ஆரின் உடன்கட்டை (சதி) என்று அறிவித்துக் கொண்டவர். தற்போது குன்ஹாவின் தீர்ப்புப்படி, அவர் கூடிச் சதி செய்து கொள்ளையடித்த குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது இ.பி.கோ 120 – பி பிரிவின் படியான சதி. அ.தி.மு.க. அடிமைகளின் கூற்றுப்படி அம்மாவுக்கு எதிரான இத்தீர்ப்பு ராஜபக்சே அரங்கேற்றியிருக்கும் சர்வதேசச் சதி.

பாசிஸ்ட் ஜெயா
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.

இவை ஒருபுறமிருக்க, நாம் இங்கே கூறவிரும்பும் சதி என்பது தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பனச் சதி! இந்தச் சதியின் நாயகி – ஜெயலலிதா.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஜெ. வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்தீர்களா? பொது வாழ்வு என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானது என்பது அரசியலில் நுழைந்த காலம் முதல் அவருக்குத் தெரியுமாம். நினைவு தெரிந்த நாள் முதல் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி வந்திருக்கிறாராம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக எந்த தியாகத்தையும் செய்வாராம்!

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு திருடன், தான் நிரபராதி என்று கூறிக் கண்ணீர் விடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னைத் தியாகி என்று பிரகடனம் செய்து கொள்வதும், தான் கொள்ளையடித்த சமுதாயத்தையே தனக்காகக் கண்ணீர் விடுமாறு மிரட்டுவதும் எங்காவது நடக்குமா? தமிழகத்தில் நடக்கிறது. அது மட்டுமல்ல, உண்ணாவிரதத்துக்கு 200 ரூபாய், மனிதச் சங்கிலிக்கு 300, பால்குடத்துக்கு 500, மொட்டைக்கு 3000, மரணத்துக்கு 3 லட்சம் – என்று தமிழக மக்களின் மானமும் உயிரும் விலை பேசப்படுகிறது. தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் முன்னால் மண்டியிடுமாறு தமிழகமே நிர்ப்பந்திக்கப்படுகிறது.

வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பாத்திரத்தை விளக்கப் புகுந்த ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளக்கானவ், “தனி நபரின் முக்கியத்துவம் என்பது ஒரு மன்னன் பெண்பித்தனாக இருப்பதற்கும், அவனது குதிரை லாயக்காரன் பெண்பித்தனாக இருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. முன்னதற்கு அரசியல் விளைவு உண்டு, பின்னதற்கு அரசியல் விளைவு கிடையாது” என்பார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் என்ற பாசிசக் கோமாளியின் பெண்பித்து தோற்றுவித்த “அரசியல் விளைவை” நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சூடு சொரணையும் சுயமரியாதையும் இல்லாத நிலையை நோக்கித் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமண ஊர்வலத்தில்… “நடந்து வந்ததொரு நகைக்கட, அதை நிறுக்க தேவையொரு லாரி எட!”

ஒருபுறம் ஜெயலலிதாவின் குற்றங்களை இருட்டடிப்பு செய்யும் வட இந்திய, பார்ப்பன ஊடகங்கள், இன்னொருபுறம் கூலிக்கு மாரடிக்கும் அ.தி.மு.க. கூட்டத்தின் மீது வெளிச்சத்தைப் பாச்சி, இவையனைத்தும் தமிழ்ச் சமூகத்துக்கே உரிய இழிவுகள் என்பதாகவும், திராவிட இயக்க அரசியலின் விளைவு என்பதாகவும் கேலி செய்கின்றன. பொறுக்கி அரசியலின் “அம்மா”வான பாப்பாத்தியை குற்றத்திலிருந்து விடுதலை செய்து விட்டு, திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கூண்டில் ஏற்றுகிறது இந்தத் தந்திரம்.

தமிழ்நாட்டைப் பீடித்த அரசியல் சீக்கு!

“வேறு எந்த ஆட்சியிலும் தமிழகம் இவ்வளவு தாழ்ந்து போனது கிடையாது. ஊழல் மூலம் நடக்கும் பகல்கொள்ளையிலும் சரி, அரசின் ஆசியுடன் நடக்கும் அராஜகங்களிலும் சரி, சுய விளம்பர விவகாரத்திலும் சரி, ஆளும் கட்சியின் தொண்டர்படையாக போலீசு துறை மாறியிருப்பதிலும் சரி, எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பாளர்களும் காலிக் கூட்டங்களால் தாக்கப்படுவதிலும் சரி, கூசாமல் பொய ்கூறுவதிலும் சரி, இந்த ஆட்சியின் கேவலத்துக்கு நிகரான ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை. இவர் நீக்கப்படவேண்டிய முதல்வர், இது போய்த்தொலைய வேண்டிய ஆட்சி” – ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தைப் பற்றி ஜூன் 1995 – இல் துக்ளக் சோ எழுதிய வரிகள் இவை.

சோ வழங்கியிருக்கும் மேற்கண்ட தீர்ப்பில், “ஊழல் மூலம் நடக்கும் பகற்கொள்ளை” என்ற நான்கு சொற்களை மட்டும்தான் குன்ஹா தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார். ஜெயாவின் மற்ற குற்றங்களெல்லாம் தண்டிக்கப்படுவதற்குக் காத்திருக்கின்றன. ஆனால், இதுவே சோ-வுக்குப் பொறுக்கவில்லை. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் குன்ஹாவின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்.

இன்று ஜெயாவுக்கு வக்காலத்து வாங்கும் பிராமணோத்தமர்கள் அன்று ஜெயலலிதாவை எதிர்ப்பவர்களோடு சேர்ந்து “கோயிந்தா” போடக் காரணம் இருந்தது. 1996-ல் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற அம்மாவின் அமைச்சர்களும், எம்.எல்.ஏ. க்களும் மக்களால் அடித்தே விரட்டப்பட்டனர். தோல்வி உறுதி என்ற நிலையில், எதிர்த்தரப்புடன் சேர்ந்து கொள்வதன் மூலம் யோக்கியர் வேடமும் போடலாம், எதிர்ப்பின் வீரியத்தையும் குறைக்கலாம் என்பதுதான் அன்று அவாள் காட்டிய எதிர்ப்பின் உட்பொருள்.

சிறுதாவூர் பங்களா
தாழ்த்தப்பட்டோர் நிலங்களை அபகரித்துக் கட்டப்பட்ட சிறுதாவூர் பங்களா (பட உதவி : நக்கீரன்)

எம்.ஜி.ஆரின் சாவுக்குப்பின் ஜெயலலிதா தமிழக அரசியலில் தலையெடுக்கத் தொடங்கிய காலத்திலேயே, “இது தமிழ்நாட்டின் அரசியல் சீக்கு” என்று புதிய ஜனநாயகத்தில் குறிப்பிட்டோம். ஆம். இது திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தி வளர்ந்த பார்ப்பனச் சீக்கு. சோ, சு.சாமி, ஆர்.வி., சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் சேர்ந்து இந்த அரசியல் சீக்கைத் திட்டமிட்டேதான் தமிழக மக்களின் தலையில் கட்டினர். அவர்களுடைய திட்டம் அ.தி.மு.க. வின் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது.

கொள்கை, மக்கள் நலம் என்று தொடங்கி, பின்னர் நாடாளுமன்ற அரசியலில் ஊறி, மெல்ல மெல்லப் பிழைப்புவாதக் கட்சிகளாக சீரழிந்த வேறெந்தக் கட்சியோடும் அ.தி.மு.க.வை ஒப்பிட முடியாது. எம்.ஜி. ஆரால் துவக்கப்படும்போதே அது ஒரு அடிமைகள் கூட்டம். அ.தி.மு.க. என்பது ராமாவரம் தோட்டத்தில் சோறு தின்றதையும், எம்.ஜி.ஆர். கையால் அடிவாங்கியதையும் பெருமையாகக் கருதும் விசுவாச அடிமைகளை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி. “எம்.ஜி.ஆர். வள்ளல், தமிழகம் அவர் சொத்து, பதவி அவர் போடும் பிச்சை, விசுவாசமே கட்சியின் கொள்கை, பிழைப்புவாதமே அரசியல்” எனத் தேர்ந்து தெளிந்த கூட்டம் அது. ஜனநாயகம் என்ற சொல்லுக்கும் பாசிசக் கோமாளியான எம்.ஜி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

சக்களத்தி சண்டை – சதிகாரத் தலைவி!

எம்.ஜி.ஆரின் சாவுக்குப் பின்னர் புரட்சித் தலைவரின் புரட்சிச் செல்வி என்ற முறையிலும், எம்.ஜி.ஆர். ரசிகர்களால் “அண்ணி” என்று அங்கீகரிக்கப்பட்டிருந்த உரிமையின் அடிப்படையிலும், அ.தி.மு.க. கட்சியும் இரட்டை இலை சின்னமும் தன் பெயருக்குத்தான் எழுதி வைக்கப்பட வேண்டும் என்பதே அன்று ஜெயலலிதாவின் கோரிக்கையாக இருந்தது. எம்.ஜி.ஆர். அவ்வாறு உயில் எழுதவில்லை. விளைவு – சக்களத்தி சண்டை தமிழக மக்கள் முடிவு செய்யவேண்டிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. எம்.ஜி.ஆர். என்ற கிழட்டுப் போக்கிரியிடம் தான் பட்ட துன்பங்களுக்கான விலையை, ஜெயலலிதா தமிழ் மக்களிடமிருந்து வசூலிக்க நேர்ந்த கொடுமை இப்படித்தான் தொடங்கியது.

“ஜானகி மோரில் விசம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றார்” என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும், எம்.ஜி.ஆரின் சவ வண்டியில் இடம் பிடிப்பதற்கு அவர் நடத்திய தெருக்கூத்தும், உச்சகட்டமாக அவரது உடன்கட்டை பிரகடனமும், நடைபெற்றது சக்களத்தி சண்டைதான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள். அது மட்டுமல்ல, இவையனைத்தும் சர்ச் பார்க் கான்வென்டில் படித்த “பாப்பாத்தி” வெளிப்படுத்திய உயர்ந்த பண்பாட்டுத் தரத்துக்கான முதல்நிலை ஆதாரங்களும் கூட.

பிறகு ஜெ. சட்டமன்றத்தில் கருணாநிதி கையிலிருந்து பட்ஜெட் அறிக்கையைப் பிடுங்கி தி.மு.க.வினரின் ஆத்திரத்தை தூண்டினார். பெண் என்றும் பாராமல் என்னை முந்தானையைப் பிடித்து இழுத்தார்கள் என்று ஒப்பாரி வைத்தார். “என்னை லாரி ஏற்றிக் கொல்ல கருணாநிதி சதி செய்தார், கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தார்” என்று கலர் கலராகக் குற்றம் சாட்டினார். இறுதியாக, ராஜீவின் கொலைக்கு தி.மு.க. மீது பொய்ப்பழி போட்டு, ராஜீவின் பிணத்தைக் காட்டியே 1991-ல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். எம்.ஜி.ஆரின் பிணவண்டியின் மீதும் பின்னர் ராஜீவின் பிணத்தின் மீதும் ஏறி அரியணையில் அமர்ந்த அம்மாவின் “அரசியல் வரலாறு” இது.

“என்னைக் கொல்ல சதி” என்பதையே கொள்கை முழக்கமாக வைத்து, அதிகார நாற்காலியைக் கைப்பற்றிய கும்பல், இன்று அதே “கொள்கை” வழியில் குன்ஹாவின் தீர்ப்பையும் “கர்நாடகா, ராஜபக்சே, கருணாநிதி கூட்டு சதி” என்கிறது. சாட்சியங்களை மிரட்டிப் பல்டியடிக்க வைத்து, அம்பலப்பட்டு, அதன் காரணமாக விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்று உச்சநீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்டு, பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை அங்கே இழுத்தடித்து, நீதிபதிகளையும் அரசு வழக்குரைஞர்களையும் துன்புறுத்தி விரட்டி, இறுதியில் தன் கைப்பாவையாக ஒரு அரசு வழக்குரைஞரை நியமிக்க வைத்து, அப்புறமும் தப்பிக்க முடியாமல் தண்டிக்கப்பட்டுவிட்டார் ஜெயலலிதா. இத்தனையும் நாடறிந்த உண்மைகள். இருந்தபோதிலும், இதனைச் சதி என்று சித்தரிக்கும் பிரச்சாரத் தந்திரம் அவர்களது “சதிகார”த் தலைவியின் மூளையில் அல்லாமல் வேறு எங்கே பிறந்திருக்க முடியும்?

திருட்டு மட்டுமா குற்றம்?

சண்முகசுந்தரம்
அ.தி.மு.க ஏவிவிட்ட ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்குரைஞர் சண்முகசுந்தரம். (கோப்புப் படம்) (பட உதவி : நக்கீரன்)

ஏற்கெனவே டான்சி, பிளசன்ட் ஸ்டே வழக்குகளில் சந்தி சிரித்து, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் தோழிகளின் பித்தலாட்டங்கள் அனைத்தையும் குன்ஹா பிரித்து மேந்து காறி உமிழ்ந்த பின்னரும், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், “சட்டையை மாற்றிக் கொண்டு அடுத்த பஞ்சாயத்துக்குக் கிளம்பும் வடிவேலுவைப் போல”, கம்பீரமாக சிறை வாசலிலிருந்து சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்து வருகிறார் ஜெயலலிதா என்றால், தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். 1991-96 காலத்தில் இந்தக் கும்பல் ஆடிய ஆட்டம் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

வளர்ப்பு மகன் திருமணப் புகைப்படங்களையும், அதில் தோழிகளின் அலங்காரத்தையும், அவர்களின் தோரணையையும் பாருங்கள். அவற்றில் கவனிக்கத்தக்கவை புடவை, நகைகளின் மதிப்பு அல்ல. மொத்த தமிழ் சமுதாயத்தையே எள்ளி நகையாடுகின்ற அவர்களது பார்ப்பனக் கொழுப்பும் அதிகாரத்திமிரும்தான். மொத்த நாட்டையுமே தமது பரம்பரை சொத்தாகக் கருதி, செருக்குடன் வீதியுலா வந்த மன்னர்களின் திமிரை ஜெயலலிதாவின் முகத்தில் நீங்கள் பார்க்க முடியும்.

“பொதுச்சொத்தைத் திருடினார்கள்” என்று மட்டும் கூறுவது ஜெ. – சசி கும்பலின் குற்றத்தைப் பெரிதும் குறைத்துச் சித்தரிப்பதாக இருக்கும். பயந்து எச்சரிக்கையாகத் திருடும் பிக்-பாக்கெட்டுகளுக்கும் கழுத்தில் கத்தி வைத்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளையர்களுக்கும் வேறுபாடிருக்கிறது அல்லவா? எப்படித் திருடினார்கள் என்பதில்தான் இருக்கிறது அவர்களது குற்றத்தின் தன்மை.

ஆசிட் வீசப்பட்ட நிலையில் சந்திரலேகா
ஆசிட் வீசப்பட்ட நிலையில் சந்திரலேகா (கோப்புப் படம்) (பட உதவி : நக்கீரன்)

கண்ணைக் கவர்ந்த பெண்களையெல்லாம் அந்தப்புரத்துக்குத் தூக்கி வரச்சொன்ன மன்னர்களைப் போல, கண்ணில்பட்ட நிலங்கள், வீடுகளையெல்லாம் தம் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஆணவம், துணைப்பதிவாளரை வீட்டுக்கே வரவழைத்து, விரும்பிய இடங்களையெல்லாம், விற்பவர் – வாங்குபவர் பெயர்களையே குறிப்பிடாமல் நடத்திக் கொண்ட பத்திரப் பதிவுகள், கட்டுக்கட்டாக இலஞ்சப்பணத்தை மஞ்சள் பையில் வைத்து வங்கிக்குக் கொடுத்தனுப்பிய “சாமர்த்தியம்”, பணத்தைப் போடுவதற்காகவே அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்ட உப்புமாக் கம்பெனிகள் – என்று குன்ஹாவின் தீர்ப்பு பட்டியலிடும் ஆதாரங்களைப் பார்க்கும்போது, அவையெல்லாம் இந்த திருட்டுக் கும்பல் அவசரத்தில் விட்டுச் சென்ற தடயங்களாகத் தெரியவில்லை. விடிவதற்குள் – ஐந்தே ஆண்டுகளில் – முடிந்தவரை சுருட்ட முயலும் திருடனின் அவசரம் இந்த தடயங்களில் தெரிகிறது. “இனி விடியவே போவதில்லை, நாமே நிரந்தர முதல்வர்” என்கிற அகம்பாவம் தந்த அலட்சியமும் அவற்றில் தெரிகிறது.

ஜெயாவின் நிர்வாகத்திறன் – வரலாற்றுச் சான்றுகள்

ஜெயலலிதாவின் திருட்டு அம்பலமாகியிருக்கும் இந்த தருணத்தில், என்ன இருந்தாலும் அவரது “நிர்வாகத்திறன்” என்று புனைகதை எழுதுகின்றன ஊடகங்கள். இந்த அரசின் நிர்வாகத்திறனுக்கு சான்று கூற, மின்வெட்டு பிரச்சினை குறித்து மூன்றாண்டுகளாக ஜெயலலிதா அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளே போதுமானவை.

வாரிசுரிமையாக சிறிது காலம் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஜானகியை ஆர்.எம்.வீரப்பன் பின்னாலிருந்து இயக்கினார்; ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் கணவன் நடராசன். இருந்தும் அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில், “வருங்கால முதல்வரே” என்று நடராசன் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டதும், ஆத்திரமடைந்த ஜெயலலிதா, போலீசை விட்டு வெடிகுண்டுப் புரளி கிளப்பி நடராசன் நடத்திய கூட்டத்தைக் கலைத்ததும், பிறகு முதல்வர் பதவியைக் கைப்பற்ற நடராசனும், பிரதமர் பதவியைப் பிடிக்க சு.சாமியும் சதி செயவதாகப் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்ததும் அம்மாவின் நிர்வாகத் திறமையைப் பறைசாற்றும் வரலாற்று சான்றுகள்.

எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகள்
பிளஸெண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதற்கு விலையாக அ.தி.மு.க காலிகளால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகள் (இடமிருந்து) கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)

பிறகு உயிர்த்தோழி சசியை வூட்டுக்காரன் நடராசன் போயஸ் தோட்டத்திலிருந்து இழுத்துக் கொண்டு போனதும், பிரிவாற்றாமை தோற்றுவித்த காப்பிய சோகத்தால் அம்மா ராஜினாமா கடிதம் கொடுத்து, பின்னர் அதனை திரும்பப் பெற்றதும், ஊடல் முடிந்து சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்தில் குடியேறியதும் அம்மாவின் அரசியல் வரலாறு. இவற்றைப் போன்ற அழிக்க முடியாத அசிங்கமான பக்கங்கள் ஆயிரம் இருக்கின்றன.

பழைய தமிழ் சினிமாக்களின் ஜமீன்தார் பங்களாக்களில் கக்கத்தில் துண்டுடன் அணிவகுத்து நிற்கும் வேலைக்காரர்களைப் போல, போயஸ் தோட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரிசையா நிற்க, காலில் விழுந்து எழுந்த பின்னரும் முதுகு நிமிராத கூன்பாண்டி அமைச்சர்கள் வாயிற்புறத்தில் காத்திருக்க, மலையாள மாந்திரீகர்களும், பில்லி சூனியக்காரர்களும், ஜோசியர்களும்தான் போயஸ் தோட்டத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்தார்கள், இன்றும் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். நேர்மை, சுய சிந்தனை, சுய மரியாதை உள்ள அதிகாரி தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றும் திறன்தான் அம்மாவின் நிர்வாகத்திறன். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அடிக்கடிப் பந்தாடுவதன் மூலம் கறாரான நிர்வாகியைப் போலக் காட்டிக் கொள்வதென்பது, பாசிசக் கோமாளி எம்.ஜி. ஆரிடமிருந்து அம்மா கற்றுக்கொண்ட நிர்வாக அரசியல் பாடம்.

அழகிரிகளுக்கெல்லாம் அம்மா!

செரீனா
தான் சந்தேகப்படுபவர்கள் மீதெல்லாம் கஞ்சா கேசு போடுவது ஜெயாவின் “நிர்வாகத் திறன்” – அப்படிப்பட்ட அதிகார முறைகேடுகளுக்குப் பலியான செரீனா

கலகம் செய்யும் அ.தி.மு.க. காலிகள் அம்மாவின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதத்தில் கட்டுப்பாடாக நடந்து கொள்ளவேண்டும் என்று தலையங்கம் எழுதுகின்றன பார்ப்பன ஊடகங்கள். எப்பாடுபட்டாலும் காலித்தனத்தில் அம்மா எட்டியிருக்கும் சிகரத்தை தொண்டர்களால் தொடவியலாது என்பதே உண்மை.

கிரிமினல்களையும் போலீசையும் தனது தனிப்பட்ட கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்வதில் அழகிரிகளுக்கெல்லாம் அம்மா ஜெயலலிதா. ஸ்பிக் பங்கு விற்பனையில் தனது ஊழலுக்கு உடன்பட மறுத்த குற்றத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர் மீதான தாக்குதல்கள், வழக்குரைஞர் சண்முக சுந்தரத்தை ரவுடிகளை வைத்து தாக்கியது மட்டுமல்ல, குற்றுயிராக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைச் சாகடிப்பதற்காகவே மருத்துவமனையின் மின்சாரத்தைத் துண்டித்தது – என்று இந்தக் குற்றப் பட்டியல் வெகு நீளமானது.

தனது ஆட்சியில் உளவுத்துறைக்கு அம்மா வழங்கிய வேலையை மிகவும் கவுரவமான சொற்களில் குறிப்பிட வேண்டுமானால், அதனை மாமா வேலை என்று சொல்லலாம். அமைச்சர்களின் கள்ளத்தொடர்புகளை வேவு பார்ப்பது, தோழி சசிகலாவின் கணவருடைய இரவு நேர நடமாட்டத்தைக் கண்காணிப்பது, சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்டு ஒப்படைப்பது போன்றவை அவற்றில் சில. இப்போதும் கூட குன்ஹாவின் தீர்ப்பை முன்னரே மோப்பம் பிடித்துக் கூறத் தவறிய காரணத்தினால் கடமை தவறிய உளவுத்துறை மீது அம்மா கோபம் கொண்டிருப்பதாக மிகவும் இயல்பாக எழுதுகின்றன ஊடகங்கள். கிரிமினலுக்கும் – போலீசுக்கும், கடவுளுக்கும் – புரோக்கருக்கும், ஜோசியனுக்கும் – உளவுத்துறைக்கும் இடையிலான வேறுபாட்டை ஒழித்ததுதான் இவ்விசயத்தில் அம்மாவின் சாதனை எனக் கூறலாம்.

ஆடிட்டர் பாஸ்கரன்
ஜெயா கும்பலின் ஆடிட்டராக இருந்து வந்த பாஸ்கரன்

அம்மாவின் அதிருப்திக்கு ஆளாகிறவர்கள் பதவி போனாலும், அடி வாங்கினாலும் அமைதி காக்க வேண்டும். வளர்ப்பு மகனாக தங்கத்தில் குளிப்பாட்டப்பட்ட சுதாகரன், திடீரென்று செருப்படி வாங்கி கஞ்சா கேசில் உள்ளே தள்ளப்பட்டதும், அப்புறம் அக்யூஸ்டு எண்: 4 என்று அங்காளி பங்காளியாக பெங்களூரு நீதிமன்றத்தில் தனது முன்னாள் வளர்ப்புத்தாயுடன் அமர வேண்டியிருந்ததும் ஒரு உதாரணம். நில ஆக்கிரமிப்பு முதல் கொலை மிரட்டல் வரையிலான பல வழக்குகளில் உள்ளேபோன நடராசன், ராவணன் உள்ளிட்ட சசி குடும்பத்தினர், நடராசனின் ஆசை நாயகி என்று சசிகலாவால் சந்தேகிக்கப்பட்ட காரணத்தினால் கஞ்சா வழக்கில் சிறை வைக்கப்பட்ட செரினா – என இப்பட்டியல் வெகு நீளமானது.

இலஞ்சப் பணத்தை மறைப்பதற்கு சரியான முறையில் வழிகாட்டாமல், வருமானவரி வழக்கில் தங்களைச் சிக்கவைத்து விட்டதாக ஆத்திரம் கொண்ட தோழிகள், ஆடிட்டர் ராஜசேகரை போயஸ் தோட்டத்துக்குள் வைத்துக் கட்டையாலும், செருப்பாலும் அடித்தனர். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக துப்பாக்கி வைத்தும் அவர் மிரட்டப்பட்டார். இது பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகிவிடாமல் தடுப்பதற்காக சட்டமன்றத்தில் தாமரைக்கனியை விட்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் குத்தச் சொல்லி, அதனைத் தலைப்புச் செதியாக்கிய கிரிமினல்தான் ஜெயலலிதா. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இத்தகைய குற்றங்களையெல்லாம் விசாரித்து தண்டனை விதிக்கும் பட்சத்தில் அவற்றுக்கான ஆயுள் தண்டனைகளை அனுபவிப்பதற்கே, அம்மா மேலும் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

நீதிபதிக்கு கஞ்சா கேஸ், சட்டமன்றத்துக்குப் பூட்டு!

இன்று குன்ஹாவின் கொடும்பாவி எரிப்பு, கழுதை என்றும் முண்டமென்றும் அவரை வசைபாடும் சுவரொட்டிகள், தீர்ப்புக்கு எதிராக நகராட்சிகள் நிறைவேற்றும் கண்டனத் தீர்மானங்கள் போன்ற “நீதிமன்ற அவமதிப்பு”களைக் கண்டு சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்கள் சிலர் தமது அதிர்ச்சியைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், நீதிபதிகளுக்கு தலைவியின் வரலாறு தெரியுமாதலால் அவர்கள் யாரும் அதிர்ச்சி காட்டவில்லை. சுப்பிரமணியசாமிக்கு எதிராக உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீசு பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மகளிர் அணியின் நிர்வாண நடனம், நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லட்சுமணனின் மருமகன் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கு, சீனிவாசன் என்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீட்டுக்கு மின்சாரம், குடிநீரைத் துண்டித்து மிரட்டியது, சொத்துக்குவிப்பு வழக்கின் நீதிபதிகளையும், அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவையும் துன்புறுத்தி விரட்டியது, நீதித்துறையையே எள்ளி நகையாடும் விதத்தில் சக்கர நாற்காலியிலும், ஸ்டிரெச்சரிலும் தோழிகள் நடத்திய நீதிமன்ற விஜயங்கள் ஆகியவற்றை ஒப்பிடும்போது, இன்று ரத்தத்தின் ரத்தங்கள் காட்டும் நீதிமன்ற அவமதிப்பு பொருட்படுத்தத்தக்கதே அல்ல.

fascist-jaya-1அம்மா ஆட்சியில் சட்டமன்றத்தின் நிலை பற்றி விளக்கவே தேவையில்லை. அண்ணாமலை நகர் பத்மினி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியபோது, சட்டமன்றத்தையே வெளிப்புறமாகப் பூட்டி, மின்சப்ளையையும் தண்ணீரையும் துண்டித்து வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சு.சாமிக்கு ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி கொடுக்கவிருக்கிறார் என்று தெரிந்தவுடனே “கவர்னர் என்னை கையைப் பிடித்து இழுத்தார்” என்று சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டி சென்னா ரெட்டியை கதிகலங்கடித்தார்.

2001-ல் டான்சி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெ. தேர்தலில் போட்டியிடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன், வேண்டுமென்றே 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, அதன் காரணமாகத்தான் வேட்புமனு மறுக்கப்பட்டதைப் போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். எம்.எல்.ஏ. வாக இல்லாத நிலையிலும் கவர்னர் பாத்திமா பீவியை விலைபேசி, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வேறு வழியின்றி ராஜினாமா செய்து பன்னீரை முதல்வராக்கினார். பன்னீர் முதல்வராக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட சட்டமன்றக் கூட்டம் நடக்காமல் பார்த்துக் கொண்டார்.

அற்பத்தனத்தின் அம்மா!

தரம் தாழ்ந்த அற்பத்தனத்தில் ஜெயலலிதாவை விஞ்சக்கூடியவர்கள் இல்லை. தமிழகத்தில் நெடுஞ்சாலைக் கொள்ளைகள் அதிகம் நடப்பதாக காங்கிரசு குற்றம் சாட்டியவுடன், “மத்திய அரசுதான் திருடர்களை அனுப்பி என் அரசின் பெயரைக் கெடுக்கிறது” என்று சட்டமன்றத்திலேயே பதிலளித்தார். பிறகு “நான் ஆட்சிக்கு வந்தவுடனேயே திருடர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்” என்றார். போயஸ் தோட்ட வட்டாரத்தில் நடமாடிய நரிக்குறவர்களைக் கைதுசெய்து, தன்னைக் கொல்வதற்குப் புலிகள் தற்கொலைப்படையை அனுப்பியிருப்பதாக செய்தி வெளியிட்டார்.

அவ்வளவு ஏன், மூன்று முறை முதலமைச்சராகி, செல்வியிலிருந்து அம்மாவாக பதவி உயர்வு பெற்ற பின்னரும், தனது இளமைக்கால சினிமா குத்தாட்டக் காட்சிகளை ஜெயா டிவியில் வெளியிட்டுத் தனது இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார் ஜெயலலிதா; எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றிய தரங்கெட்ட விமரிசனங்களை ரசித்துச் சிரிப்பது மட்டுமல்ல, தனது சொந்தக் கட்சிக்காரர்களையே இழிவுபடுத்துவதிலும் இன்பம் காணுகிறார். கட்சியிலிருந்து விலகியவர்களை “தனது உதிர்ந்த உரோமங்கள்” என்று கூறிய ஒரு நபரின் பண்பாட்டுத் தரத்தை என்னவென்று கூறுவது? அம்மாவின் கோபத்துக்கும் ஆசிட் வீச்சுக்கும் இலக்கான கே.கே.எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தோடு போயஸ் தோட்டத்துக்குச் சென்று காலில் விழுந்தார். அதை அப்படியே புகைப்படம் எடுத்து மறுநாள் ஊடகங்களில் வெளியிட்டு அவரை அவமானப்படுத்தினார் ஜெயலலிதா.

போலீசின் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட இருளர் பெண்ணை, காசுக்காக பொய் சொல்கிறார் என்றும்; பட்டினிச்சாவுக்குள்ளான சிறுவனின் வயிற்றில் சோற்றுப்பருக்கைகள் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுவதால், அது பட்டினிச் சாவல்ல என்றும் பேச முடிந்த ஒரு ஜந்துவைத்தான் “அம்மா” என்று அழைக்கிறார்கள் அ.தி.மு.க. அடிமைகள். பார்வையற்றோர் போராட்டத்தின் மீதான தாக்குதலாக இருக்கட்டும், சாலைப்பணியாளர்கள் – மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலையாகட்டும் இவையெதுவும் ஜெயலலிதாவிடம் கடுகளவு இரக்கத்தையும் தோற்றுவித்ததில்லை. ஏனென்றால், நடிப்புக்காகக் கூட கருணையை வரவழைக்க முடியாத முகம் அது.

ஜெ. கைதுக்காக பேருந்தில் எரித்துக் கொல்லப்பட்ட 3 அப்பாவி மாணவிகளுக்காக தமிழகம் பதறியது. ஆனால் ஜெயலலிதா மனம் இரங்கவில்லை. அந்த வழக்கின் எல்லா சாட்சிகளையும் பல்டியடிக்க வைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகிவிடுவார்கள் என்ற நிலையில் பிள்ளையைப் பறி கொடுத்த பெற்றோர், மனுச் செய்ததன் பேரில் உயர்நீதி மன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஜெ. ஆட்சியில் இருந்தவரை அந்த வழக்கை நடத்தவிடவில்லை. இப்போதும் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் வைத்து வாதாடுகிறார் ஜெ.

ஜெ. வின் காலடியில் கையாலாகாத் தமிழர்களா?

ஜெயா ஊர்வலம்
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயா பிணையில் விடுதலையானதையடுத்து, அவர் உற்சவ மூர்த்தி போலக் கொண்டாட்டமாக அழைத்து வரப்படும் காட்சி : தமிழகத்தின் அவமானச் சின்னம்.

யார் பாதிக்கப்பட்டவர்கள் என்பது ஜெயலலிதாவின் அக்கறையல்ல, யார் தனது அடிமைகள் என்பதே அம்மாவின் கவனத்துக்குரியது. ஜெயலலிதாவின் கருத்துப்படி, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர் கடப்பாடுடையவர் அல்ல, தமிழக மக்கள்தான் அவருடைய தியாகத்துக்குக் கடன்பட்டிருக்கின்றனர். தற்போது தமிழர்களின் கடன் பாக்கியில் இந்த 21 நாள் தியாகமும் சேர்ந்து விட்டது. மூவர் தூக்கு முதல் முதியோர் உதவித்தொகை வரை, நதிநீர் பிரச்சினை முதல் சமஸ்கிருத வார எதிர்ப்பு வரை அனைத்துமே, கையாலாகாத தமிழர்களுக்கு, தனியொருத்தியாக தான் பெற்றுத்தந்த வெற்றியாகவோ, அல்லது தமிழர்களுக்குத் தான் அளிக்கும் பிச்சையாகவோ இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்து கொள்கிறார்.

தனது உள்ளுணர்வின்படியே அவர் ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்ற காரணத்தினால், பா.ஜ.க. வைப் போல “கொள்கை” என்ற சுமை அவருக்கு தேவைப்படுவதில்லை. ஈழம், கூடங்குளம் முதல் இலவச அரிசி வரையில் திராவிட, தமிழின, கவர்ச்சிவாதக் கொள்கைகளை அவர் தனது தேவைக்கேற்றபடி திருடிக் கொள்கிறார். தேவைப்படாத போது, அவற்றை பீ துடைத்த துணியைப் போலத் தூக்கியெறியவும் அவர் அஞ்சுவதில்லை. இந்த “யூஸ் அண்டு த்ரோ” அணுகுமுறையில் அமைச்சர்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையில் அவர் அதிக வேறுபாடு பார்ப்பதில்லை. அம்மாவின் இந்த அசாத்திய துணிச்சலையும் போர்க்குணத்தையும் கண்டு சிற்பி முதலான “அறிஞர்களும்”, சீமான், நெடுமாறன், வேல்முருகன், தா.பா போன்ற “போராளி”களும் புல்லரித்து நிற்க, சோ ராமஸ்வாமி அயரோ, சுயமரியாதை முதல் தமிழின உணர்வு வரையிலான அனைத்து பிராம்மண விரோதக் கொள்கைகளையும் கட்சிகளையும் மதிப்பிழக்கச் செய்யும் ஜெயாவின் சாமர்த்தியத்தை மெச்சி ரசிக்கிறார்.

அடையாளம் காண்போம் அடிமைச் சதியை!

சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஒரு சதிகாரியின் பிடியில் சிக்கியிருக்கிறது தமிழகம். ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, ரியல் எஸ்டேட் என்று இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் கிரிமினல் கும்பல்கள், அதிகார வர்க்க கிரிமினல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தரகுக் கும்பல்கள் தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருக்கின்றன. பிழைப்புவாத அடிமைகளின் கும்பலாகத் தோன்றிய அ.தி.மு.க. என்ற கட்சியோ, மேற்சோன்ன தொழில்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கும் தொழில்முறை கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது.

கள்ளச்சாராயம், விபச்சாரம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிரிமினல்கள், தமக்கென ஒரு சமூக ஆதரவுத்தளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு அன்னதானம், திருமணத்துக்கு மொய் எழுதுவது, இழவுச் செலவுக்குப் பணம் தருவது என்பன போன்ற உத்திகளைக் கையாள்வதைப் போலவே, ஒரு ரூபாய் இட்டிலி, இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் இறக்கப்படுகின்றன. கள்ளச் சாராயத்தை விற்பவன் கிரிமினல், டாஸ்மாக் சாராயத்தை விற்பது அரசு என்பது மட்டுமே வேறுபாடாக எஞ்சியிருக்கிறது.

இலவசத் திட்டங்களுக்கான வருவாயைத் திரட்டும் பொருட்டுத்தான் டாஸ்மாக் என்பது பொய். டாஸ்மாக் என்பது அரசின் பண்பாட்டுக் கொள்கை. சீன மக்களை அடிமை கொள்ள கஞ்சாவைப் பரப்பியதைப் போலவே, தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயக் கடைகளை பரப்புகிறது அரசு. கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனர்கள் மீது போர் தொடுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் போலவே, டாஸ்மாக் கடைகளை எதிர்க்கும் பெண்கள் மீது போர் தொடுக்கிறது அம்மாவின் போலீசு. நெடுஞ்சாலைகள், பள்ளிகள், வழிபாட்டிடங்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும், கேரளத்தில் மது விற்பனை குறைக்கப்படுவதால் கேரள எல்லையோரத்திலும் சாராயம் ஆறாய் ஓடுகிறது. போதை அடிமைத்தனம் பரப்பப்படுகிறது.

முதியோர் உதவித்தொகை, மடிக்கணினி போன்ற அரசின் அதிகாரபூர்வ நலத்திட்டங்களும், ஓட்டுக்குப் பணம், கறி விருந்து போன்ற ஊழல் முறைகேடுகளும், மொட்டைக்கு 3000, பால்குடத்துக்கு 500 என்ற கழிசடை அரசியலும், மக்களின் ஜனநாயக உணர்வற்ற மனோபாவம் என்ற ஒரு புள்ளியில் சந்திப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அடிமைத்தனம் பரப்பப்படுகிறது.

ஜெயலலிதாவின் கைதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாம் கண்ட பிழைப்புவாதிகளின் “போராட்டங்களும்”, கூலிக்கு மாரடிப்போரின் கூச்சலும், போலீசும் காலிகளும் இணைந்து நடத்திய வன்முறைகளும், மக்களிடம் பரப்பப்பட்ட அச்சமும், உச்சநீதி மன்றத் தீர்ப்பின் கயமையும் இந்த அரசியல் கட்டமைப்பின் சீரழிவையும் தோல்வியையும் துல்லியமாகப் பிரகடனம் செதிருக்கின்றன.

தமிழ்ச் சமுதாயமோ ஒரு நூற்றாண்டுக்கு முன் பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டியிருந்த அடிமைத்தனத்தைக் காட்டிலும் கொடிய அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக்கிறது. அன்று தோளில் துண்டு அணியும் உரிமை இல்லாத போதிலும், தமிழ்ச் சமுதாயத்தின் இடுப்பில் வேட்டி இருந்தது. இன்றோ தமிழ்ச் சமுதாயம் வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் வீதியில் கிடக்கிறது. நாம் எதிர்கொண்டிருப்பது முன்னிலும் சிக்கலானதொரு சூழல். தேவைப்படுபவை அதற்குப் பொருத்தமானதொரு போராட்டங்கள்.

– சூரியன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?

2

ற்றுமணல், தண்ணீர், இயற்கை வளங்கள் அனைத்தையும் யாரும் உருவாக்க முடியாது. இயற்கைத் தாய் மனித குலத்திற்கு வழங்கிய கொடை மட்டுமல்ல; ஆடு, மாடு, மரம், செடி, கொடி, மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது.

அரசு இத்தகைய வளங்களை பாதுகாக்க வேண்டும். மாறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறது மத்திய அரசு.

ஆற்றுமணல் கொள்ளையில் உள்ளூர் கவுன்சிலர் தொடங்கி வட்டம், ஒன்றியம், மாவட்டம், மாநிலம் வரை, கட்சி பொறுப்புக்கு தக்கவாறு கமிசன் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும் தலையாரி முதல், வி.ஏ.ஓ, தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மந்திரி, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தலைமை நிலையச் செயலாளர் வரை அதிகார மட்டத்தில் கமிசன் போகிறது. hrpc-vdm-manal-04

  • பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்து போராடினால் அவர்களை போலீசை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது.
  • மேலும் சாதி பாகுபாட்டை உருவாக்கி மக்களை மோதவிட்டு பிளவுபடுத்துகிறது.
  • எதிர்ப்புணர்வை மழுங்கடிக்க குடும்ப அட்டை மூலம் மக்களுக்கு பணம் வழங்குவது, ஊர் கோவிலுக்கு நன்கொடை, மணல் லாரி ஒன்றுக்கு பஞ்சாயத்துக்கு 100 தருகிறேன் என கமிசன் பேசுவது என கிராம மக்களை தங்கள் ஊர் நலனுக்கு எதிராக தாமே செயல்படும் அவல நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய இரண்டு ஆறுகள் கடலூர் மாவட்டம் முழுவதும் குடிநீருக்கும், விவசாயத்திற்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றன. தற்போது வெள்ளாறு முழுவதும் கருவேப்பிலங்குறிச்சியில் தொடங்கி நேமம், கார்மாங்குடி, மேலப்பாலையூர், கீழப்பாலையூர், சி.கீரனூர், மருங்கூர், தொழூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி வரை, வெள்ளாறு வறண்ட பாலைவனமாக, முட்புதர் முளைக்கும் களிமண் தரையாக மிகக் கொடூரமாக காட்சியளிக்கிறது.

hrpc-vdm-manal-22

இப்பகுதியில் விவசாய பம்ப் செட்டுகள் தண்ணீர் எடுக்க முடியாமல் உதறுகிறது; சுற்று வட்டாரத்தில் குடியிருப்பு பகுதியில் வீட்டு போர்கள் தண்ணீர் இல்லாமல் மீண்டும் பல லட்சம் செலவு செய்து போர் போட வேண்டிய நிலை. மணல் கொள்ளைக்கு ஆதரவு அளித்து விட்டு அவன் பணம் வாங்கி விட்டான், இவன் பணம் வாங்கி விட்டான் என ஒதுங்கி நின்று அதனால் நாமும் ஏதாவது வாங்கினால் என்ன? என்ற காரியவாதமாக சிந்திக்கலாமா? நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?

காடு, மலை, குடிநீர், கிரானைட், தாதுமணல், பாக்சைட், இரும்பு சுரங்கம், மருத்துவம், கல்வி, மின்சாரம், என அனைத்தும் சட்டப்படிதான் கொள்ளையடிக்க தனியாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கொள்கையை ஆதரிக்கின்றன. பாதிக்கப்படும் மக்கள் தனியாக நிற்கிறார்கள். ஆற்று மணலை சுரண்டி நிலத்தடி நீரை அழித்து விட்டு மழைநீரை சேகரிக்க நமக்கு அறிவுரை சொல்கிறது அரசு.

hrpc-vdm-manal-47

ஆற்று மணல்தான் பஞ்சு போல தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது, மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆற்றுமணல் முழுவதும் சுரண்டப்படுவதால் ஆறு சாகடிக்கப்படுகிறது.

கொள்ளையனுக்கு மணல் அனைத்தும் பணமாக, லாபமாக தெரிகிறது. நிலத்தடி நீர் வற்றி விடும்; பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாழாகும்; எதிர்கால சந்ததியினர் குடிநீருக்காக பல மைல் காலி குடத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படுமே. ஆடு மாடுகள் செடி கொடிகள் என்ன ஆகும் என்ற கவலை, பொறுப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இல்லை. ஆனால், அங்கேயே தலைமுறையாக வாழும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கலாமா?

மூன்று அடிதான் மணல் அள்ள வேண்டும் என்ற சட்டம் சொல்கிறது. வெள்ளாற்றில் 30 அடிக்கு மேல் அள்ளப்பட்டு ஆறு முழுவதும் கட்டாந்தரையாக்கப்பட்டுள்ளது. ஏன், மணற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை இல்லை. மாட்டுவண்டியை மடக்கிப் பிடிக்கும் காவல்துறை, தாசில்தார் மணல் லாரியை மடக்கி பிடிக்காத மர்மம் என்ன?

hrpc-vdm-manal-39

தாமிரபரணி, காவிரி, பாலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் பாசன விவசாயிகள், சங்கம் அமைத்து மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் மத்தியில் போராடுவதுடன், உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதி மன்றத்திலும்  100-க்கு மேற்பட்ட வழக்கு தாக்கல் செய்து போராடி வருகின்றனர். இதன் விளைவாக வரைமுறையின்றி மணல் அள்ளுவதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. ஆனால், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு ஆற்று மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுவதுடன் விவசாயிகளை எதிர்த்து வழக்கு நடத்துகிறது.

  • காலை 7 முதல் மாலை 5 மணி வரை தான் மணல் எடுக்க வேண்டும்.
  • தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.
  • நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
  • மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு மீட்டர் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.
  • கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.
  • இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

இதை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் சிறப்புக் குழு என இருக்கிறது. ஆனால்,  மணற்கொள்ளை மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சட்டத்தை, விதிமுறைகளை அதிகாரிகள் மதிக்காத போது பாதிக்கப்படும் மக்கள் மட்டும் ஏன் மதித்து நடக்க வேண்டும்.

hrpc-vdm-manal-13

மணல் குவாரிகளை அரசுதான் நடத்துகிறது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதில் சொல்கிறார்கள்; யார் எதிர்த்தாலும் ஆயிரம், லட்சம் என பணம் கொடுக்கிறார்கள்; மணல் கொள்ளையால் ஆதாயம் பெறும் பினாமி யார் என்ற சொல்ல மறுக்கிறார்கள். கள்ளக் கடத்தல் போல நடக்கிறது மணல் தொழில். புகார் மனு கொடுத்தவரை மிரட்டுவது, நடவடிக்கை எடுத்தால் தாசில்தாரை லாரி ஏற்றிக் கொல்வது, அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல் எதிர்த்தால் கூலிப்படை வைத்து கொலை செய்வது என செயல்படுகிறார்கள் மணல் மாஃபியாக்கள். தனிநபராக கொள்ளையர்களை எதிர்க்க முடியாது. ஆனால், அமைப்பாக, பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கமாக திரண்டால் எவனையும் எதிர்க்க முடியும் என்பதை நாம் புரிந்து கொண்டு போராடினால் வெல்லமுடியும்.

தமிழகம் முழுவதும் கனிம வளக் கொள்ளையை விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இன்றுவரை அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. நிலத்தடி நீரை எடுத்து விட்டு ஓடி விடுவான் மினரல் வாட்டர் கம்பெனி. மணலை அள்ளிவிட்டு ஓடிவிடுவான் மணல் கொள்ளையன். அங்கே நிரந்தரமாக வாழும் நாம் பிள்ளை குட்டிகளை ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக எங்கே ஓடுவது? தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்? கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்திருக்கிறார்கள்.

hrpc-vdm-manal-46

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதி ஏடு, கட்சி பாகுபாடு ஏடு அனைவரும் ஆற்று மணலை பாதுகாப்போம் என களம் இறங்கினால் எத்தகைய அநீதிகளையும் தடுக்க முடியும். மணிமுத்தாறிலும் மணல் கொள்ளை தொடங்கியது. சூழ்ச்சிகளை முறியடித்து பரவளூர் கிராம மக்கள் சாதி கடந்து ஒன்றிணைந்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

manal-kollai-demo-post

நமது வாழ்வாதாரங்களை பாதுகாக்காமல் நமக்கான அரசை உருவாக்காமல் எவ்வளவு உழைத்தாலும் பலன் இல்லை. மணல் கொள்ளை மட்டுமல்ல எல்லா அநீதிகளுக்கும் எதிராகவும் தயங்காமல் சமரசமின்றி போராட வேண்டும். அப்போதுதான் உண்மையான எதிரிகளையும், அவர்களுக்கு உதவும் துரோகிகளையும் இனம் கண்டு விரட்டியடிக்க முடியும். ஆற்றுமணலை மட்டுமல்ல அனைத்து வளங்களையும், வாழ்வாதாரங்களையும் காக்க போராடுவோம் வாரீர்!

தமிழக அரசே

  • அனைத்து மணல் குவாரிகளையும் மூடு!
  • வெள்ளைற்றை கட்டாந்தரையாக்கிய மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?
  • கனிமவளக் கொள்ளையை விசாரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு முழு ஒத்துழைப்பு வழங்கு!

உழைக்கும் மக்களே

  • மானம் இழந்து வாழ்க்கையா? மணல் கொள்ளைக்குப் பணமா?
  • வாங்கிய பணத்தை வீசி எறியுங்கள், மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட வாருங்கள்
  • மணல் கொள்ளைக்கு லஞ்சமா? நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா?

ஆர்ப்பாட்டம்

நாள்: 10-11-14 திங்கள்
நேரம் : மாலை 4 மணி
இடம்: கருவேப்பிலங்குறிச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு – 9360051121, 9003631324

குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்

16

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 3

டுத்து இராமனை ஒரு மன்னன் எனும் நிலையில் வைத்து ஆராய்வோம். அறநெறி பிறழாத இலட்சிய மன்னன் என இராமன் கருதப்படுகிறான். ஆனால் இந்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை என்னவெனில் இராமன் மன்னனாயிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில்தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறார். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான்.

இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை.

நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

சம்பூகன்
சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்றவாளியைப் பிடித்து தண்டித்து செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான்.

அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது” என்றும் நாரதன் சொன்னான். “தரும (புனித) சட்டங்களின்படி, பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை” என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்த தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்கு செல்ல தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

அதே நொடியில் எங்கோ தொலை தூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன்தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். ‘’அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான்’’ என்று அவர்கள் இராமனுக்கு சொல்லி விட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்துக்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்கு பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்தியை அடைந்தான். இத்தகையவனே இராமன்.

(தொடரும்…)

(டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 3)
(பகுதி 4 முதல் கிருஷ்ணனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம்)

முந்தைய பகுதிகள்

  1. நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
  2. சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்

 

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

5

puthiya-jananayagam-october-2014

புதிய ஜனநாயகம் நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா குண்டர் சட்டத்தில் கைது : பன்னாட்டு முதலாளிகளுக்கு வாலாட்டும் தமிழக போலீசு!

2. செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும் – தலையங்கம்

3.  பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்கும் சதிகாரி!
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.

4. குற்றவாளி ஜெயாவிற்கு “விரைவு” பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சட்டம், நீதிமன்ற நெறிமுறைகளைக் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா – சசி கும்பலுக்குச் சிறப்புச் சலுகைகளோடு பிணை வழங்கியுள்ளது, உச்சநீதி மன்றம்.

5. உச்சநீதி மன்றம் : ஜெயாவின் தலையாட்டி பொம்மை!

6. ஜெயா நிரபராதி ! – ஊடகஙகள் எழுதிய விநோத தீர்ப்பு!
பார்ப்பன ஜெயாவிற்கு நெருக்கமான ஊடகங்கள் குன்ஹாவின் தீர்ப்பைக் குதர்க்கமாக மறுதலித்து ஜெயாவை விடுவிக்கின்றன.

7. அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் : மோடி அலை என்ற வெங்காயம் !

8. தூய்மை இந்தியா : துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!

9. மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை “ரீ மிக்ஸ்” செய்து விற்கிறார் மோடி.

10. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.

11. தீவிரமடையும் வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
தனியார்மயம் – தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.

12. சையது முகமது கொலை : துப்பாக்கியின் ஆட்சி!

13 மோ(ச)டி!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 1.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

12

ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!

விளக்கவே தேவையில்லை
கண்ணைத் திறந்து
வெளி உலகைப் பார்த்தாலே
விளங்கிவிடும் உண்மை,
காண்பவைகள்
சமூக அநீதி மட்டுமல்ல
இந்த சமூக அமைப்பே அநீதி!

ரசியப் புரட்சியின் போது லெனின்
ரசியப் புரட்சியின் போது லெனின்

‘வளர்ச்சியை’ நம்பி
வாழ்க்கையை ஒப்படைத்த
நோக்கியா தொழிலாளிகள்
தெருவில்,

வரி ஏய்ப்பு செய்து
கொள்ளையடித்து
தொழிலாளரின் செல்லையே சிதைத்த
பன்னாட்டு முதலாளி பாதுகாப்பாக
திமிரில்.

ஒரே இரவில்
போபால் மக்களை
அறுத்துக் கொன்றது
அமெரிக்க மூலதனத்தின் நஞ்சு.

காரணமான,
யூனியன் கார்பைடு ஆண்டர்சனுக்கு
அரசாங்க செலவில் விருந்து,
பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டு
அவன் பங்குகள் விற்க அனுமதிக்கப்பட்டு
கடைசி வரை தண்டிக்கப்படாமலேயே
அமெரிக்காவில் (அவன்) இயற்கை மரணம்.

பாதிக்கப்பட்ட இந்தியனுக்கோ
கருக்குலைந்து, முகம் பிதுங்கி
புற்று வைத்து… இன்று வரை தண்டனை,
அன்றாடம் நடை பிணம்!

ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்
ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்

அரசு அன்றே கொல்லும்
நிதி மூலதனம்
நின்று கொல்லும்,
இரண்டையும் பார்க்கையில்,
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு அனுபவமும்
இந்தக் கட்டமைப்பையே
நொறுக்கச் சொல்லும்!

முதலாளித்துவ தேள்களின் கொடுக்குக்கு
முழுநீள வாலாக சட்டங்கள்,
சுரண்டலுக்கு தட்டிக் கொடுக்க
நீதிமன்றச் சுத்தியல்கள்.

நீதி தேவதையின்
கண் கட்டை அவிழ்த்தால்
அங்கே
கார்ப்பரேட்டுகளின் திருட்டு முழிகள்!

ராமனுக்கு கோயில் கட்ட
சூலங்கள்!
அந்நிய மூலதனத்துக்கு
தேசத்தையே வாரிக் கொட்ட
துடைப்பங்கள்!
நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு
நாடகமாடும் தர்ப்பைகள்!

குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்
குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்

இழந்த நீர்ப்பெருக்கின்
உலர்ந்த நம்பிக்கையில்
இன்னும் மிச்சமிருக்கும்
அந்த ஆற்றின் அடிமனம் கேட்டுப்பார்
சுரண்டலுக்கு எதிராக
ஒரு புரட்சி வாராதா
எனுமதன் ஏக்கத்தை
கருமணல் விரித்துக் காட்டும்!

வெடிவைத்து பிளக்கப்படும்
பாறையின் இதயத்தில் பொருந்து,
“இந்தப் பாவிகளை நொறுக்க
ஒரு புரட்சி வாராதா”
என எழும்பும் ஒலி
உனக்கும் கேட்கும்!

பன்னெடுங்காலமாய்
மண் கரு சேர்த்த தாதுக்களை
தனி ஒரு முதலாளி சுரண்டிக் கொழுக்க
தாய்மடி கிழிக்கும் குரூரத்தில்
“இந்தத் தனியார்மயக் கொடுமைக்கெதிராக
ஒரு புரட்சி வாராதா?”
என ஏங்கும் இயற்கையின்
எதிர்பார்ப்பு குரல்
இன்னுமா நீ கேட்கவில்லை…

ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நாளில்
ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நினைவு நாளில்

முற்றிலும்
முதலாளிகளை காப்பாற்றுவதற்காக மட்டுமே
திணிக்கப்படும் இந்த அரசமைப்பை
ஏற்க எந்த நியாயமும் இல்லை!

எது வளர்ச்சி?
எங்கள் ஊருக்கு தேவை
விவசாயம்,
தண்ணீர், மின்சாரம், இடுபொருள் வசதி
செய்ய வேண்டியது அவசியம்.
இதுக்கில்லாமல் எதுக்கு அரசு?

கார் கம்பெனிகளுக்கு சகல வசதி
கழனியில் பாடுபடும் விவசாயிக்கு
சமாதி!

உலகுக்கே உணவூட்ட
வேளாண்மை இருக்க
எதுக்கு மீத்தேன் திட்டம்?

எங்களுக்கு கடமையாற்றத்தான்
மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும்
எதிரி பன்னாட்டுக் கம்பெனிக்கு அடியாளானால்
களைகளோடு சேர்த்து
கலெக்டரையும் புடுங்கி எறி!

எது முன்னேற்றம்?
இயற்கை வழங்கும் தண்ணீருக்கு
எதுக்கு காசு,
குடிக்க தண்ணிகூட தரமுடியாத
நகராட்சிக்கு எதுக்கு ஆபீசு!

LENINஎங்கள் ஊருக்கு
பொதுக்குழாய் தேவை,
எங்கள் மக்களுக்கு
மருத்துவமனை தேவை,
எங்கள் தெருவுக்கு
சாலை வசதி தேவை,

மொத்தத்தையும்
முதலாளிகளுக்கு காசாக்கிவிட்ட
இந்த அரசை புதைக்க
உடனே ஒரு சுடுகாடு தேவை!

எங்கள் பிள்ளைகளுக்குத் தேவை
அரசு பள்ளிக்கூடம்.
டாஸ்மாக் நடத்த ஐ.ஏ.எஸ். உண்டு
பாஸ் மார்க் போட ஆசிரியரில்லையா?
எதுக்கு தனியார் பள்ளிக்கூடம்
இழுத்து மூடு!
எல்லோர்க்கும் தாய்மொழியில்
கல்வி கொடு!
மக்களுக்கான அரசு இல்லையேல்
தூக்கி குப்பையில் போடு!

மனித குலத்தையே
மூலதன அடிமையாக
மரபணு மாற்றம் செய்வதா வளர்ச்சி?
இழி முதலாளித்துவத்தை அழித்தொழித்து
மனித மாண்பை மண்ணில் வளர்க்க
இப்படியெல்லாம் சிந்திப்பதும், செயலாற்றுவதும் தான்
நவம்பர் ஏழு ரசியப் புரட்சி!

– துரை.சண்முகம்

_______________________________________

அனைவருக்கும் 97-வது நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

காரல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கெல்சும் ஆரம்பித்த கம்யூனிஸ்டு அகிலத்தின் 150-வது ஆண்டு இது. 19-வது நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்படுத்தவும், பொதுவுடமை தத்துவத்தை உலகெங்கும் பரப்பவும், தத்துவத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகளை ஈட்டவும் இந்த அகிலம் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா பிரிவினைகளையும் கடந்து தொழிலாளி வர்க்கம் உலகெங்கும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் எனும் உன்னத நோக்கமும் இந்த அகிலத்தின் நோக்கங்களில் ஒன்று.

உலகெங்கும் பொதுவுடமைத் தத்துவம் பரவி சில வெற்றிகளையும், சில பின்னடைவுகளையும்  கண்டிருந்தாலும் பாரிய படிப்பினைகளையும் கம்யூனிச இயக்கம் கற்றிருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளிலேயே முதலாளித்துவ கட்டுமானங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்காலம் தொடங்கி வருங்கால வரலாறு வரையிலும் பொதுவுடைமை இயக்கமே மனித குலத்தை மீட்டெடுக்கும். அதை முதலில் சாதித்து, இது கனவல்ல, நிஜம் என்று உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திய நாள் நவம்பர் 7! ரசியாவில் 1917-ல் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைதான் இந்த உலகிலேயே மிக முக்கியமான நாள்!

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை அறிவதும், ஏற்பதும், பரப்புவதும் நமது கடமை!

மீண்டும் வாழ்த்துக்கள்!

– வினவு

டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்

0

கிழக்கு டில்லியின் திரிலோக்புரியில் வன்முறை தாண்டவமாடி நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களை ஊரிலிருந்து ஓடி ஒளிய வைத்து வெற்றி கண்ட இந்து மதவெறியர்கள் வடமேற்கு டில்லியின் பவானா பகுதியிலும் ஒரு வன்முறையை மொஹரம் தினத்திற்கு திட்டமிட்டனர். இதற்காக ஒரு மகா பஞ்சாயத்தை பவானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ குகன் சிங் ரங்கா ஏற்பாடு செய்தார். ரங்காவுக்கு பக்கபலமாக நின்றவர் இந்து மதவெறி அரசியலில் பாஜகவிற்கு ஜூனியர் பார்ட்னரான காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் தேவேந்திர குமார். பவானா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 700 பேர் – பெரும்பான்மையானவர்கள் ஜாட்கள் – நவம்பர் 2-ம் தேதியன்று நடந்த மகா பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஜெ.ஜெ காலனி முஸ்லிம்களின் தஸியா ஊர்வலம் பவானாவுக்குள் நுழையக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

மகாபஞ்சாயத்துக்கு போகும் வழி
மகாபஞ்சாயத்துக்கு போகும் வழி

மகா பஞ்சாயத்து கூட்டப்படுவதற்கு முன்னரே இந்து மதவெறியர்கள் போலீஸிடம் பவனாவுக்குள் மொஹரம் ஊர்வலம் வரக்கூடாது என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் ஜெ.ஜெ காலனி முஸ்லிம் மக்கள் தங்கள் ஊர்வலம் பவானா செல்லாது என்று அக்டோபர் 28-ம் தேதியன்று போலீஸ் முன்னிலையில் உறுதிமொழி வழங்கினர். இந்த சூழ்நிலையில் மகா பஞ்சாயத்துக்கான அவசியமே இல்லை என்று கருதுகிறார்கள் முஸ்லிம்கள். ஆனால், மகா பஞ்சாயத்தின் நோக்கம் வேறானது. அங்கு மிகத் தெளிவாக வன்முறைக்கு வழிகாட்டப்பட்டது. அங்கு குழுமிய அனைவரிடமிருந்தும் ஒரு டைரியில் மொபைல் தொலைபேசி எண் வாங்கப்பட்டது. என்ன செய்ய வேண்டும் என்பது அவர்கள் வழங்கிய தொலைபேசி எண்ணில் 4-ம் தேதி காலையில் சொல்லப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான வீடியோ ஆதாரம் ஊடகங்களிடம் இருக்கிறது.

மொஹரம் ஊர்வலத்தை முஸ்லிம்கள் தங்கள் பலத்தை காண்பிக்க நடத்துகிறார்கள் என்றும் இந்த ஊர்வலம் செல்லும் பவானா சந்தையில் இந்துக்களின் வணிகம் அன்று பாதிக்கப்படும் என்று வெளியில் காரணம் கூறினர், இந்து மதவெறியர்கள். மேலும், மொஹரம் அன்று முஸ்லிம்கள் ஏந்தி வரும் ஆயுதங்களால் தாங்கள் அச்சமடைவதாகவும் கூறுகிறார்கள்.

எங்கள் பகுதி வழியாக தஸியா ஊர்வலம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது குறித்து நிர்வாகத்துக்கு ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். ஊர்வலம் நடந்தால், வன்முறை வெடிக்கும். அதற்கு போலீஸ்தான் பொறுப்பு” என்று வெளிப்படையாக மிரட்டியிருக்கிறார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிங்.

ஜே ஜே காலனியில் ஒரு மொஹரம் ஊர்வலம்
ஜே ஜே காலனியில் ஒரு மொஹரம் ஊர்வலம்

மொஹரம் இசுலாமிய நாள்காட்டியின் முதல் மாதம். மொஹரம் (தஸியா) ஊர்வலம் என்பது முஸ்லிம்களின் தொன்மக் கதையில் வரும் முகமது நபியின் பேரன் ஹுசைன் அலி ஈராக்கில் ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜாகித்தின் கெடுபிடிகளுக்கு எதிராக கர்பாலா என்னுமிடத்தில் போரிட்டு மடிந்ததை நினைவுகூரும் ஒரு துக்க ஊர்வலம். தஸியா என்பது ஹுசைனின் சமாதி மாதிரியை ஏந்தி செல்லும் மதச் சடங்கு. உலகம் முழுவதும் ஷியா முஸ்லிம்கள் இதனை பின்பற்றுகிறார்கள். தங்களை தாங்களே அடித்துக் கொள்ளும் சுயவதைக்கு தான் ஆயுதங்களையும், சாட்டையையும் மொஹரம் தினத்தில் ஷியாக்கள் பயன்படுத்துகிறார்கள்.

சன்னி முஸ்லிம்கள் மொஹரம் தினத்தை மோசஸ் எகிப்திய நாட்டின் கொடுங்கோலரசன் பார்வோனை வெற்றி கண்ட நாளாக கருதுகிறார்கள். மொஹரம் ஷியாக்களுக்கு துக்க நாளாகவும், சன்னி முஸ்லிம்களுக்கு கொண்டாட்ட நாளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த சன்னி முஸ்லிம்கள் ஷியாக்கள் போன்று வெளியே வருவதில்லை. எனவே ஒரு துக்க நாளை நினைவுகூறும் சடங்கிற்கு இந்து மதவெறியர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டது. இந்துக்களின் வணிகம் பாதிக்கப்படுகிறது என்று இந்து மதவெறியர்கள் கூக்குரலிடுவதிலும் உண்மையில்லை. மொஹரம் தினத்தை ஒட்டி வாங்கப்படும் பொருள்களுக்காக வணிகம் உயர்கிறது. உணவு வகைகள், இனிப்புகள் தயாரிப்பது என்ற வகைகளில் அனைத்து தரப்பு வணிகர்களின் வியாபாரமும் மொஹரத்தை ஒட்டி அதிகரித்து இருப்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறது.

மொஹரம் தினமான 04.11.2014அன்று மக்கள் தங்களின் இயல்பான கூட்டுணர்வாலும், மதநல்லிணக்க உணர்வாலும் ஆர்.எஸ்.எஸ்– பா.ஜ.க.வின் கலவர சதியை முறியடித்தனர். கடுமையான போலீஸ் கண்காணிப்புக்கு உட்பட்டு மொஹரம் ஊர்வலம் திரிலோக்புரி மற்றும் பவானாவில் அமைதியாக நடந்துள்ளது. தங்கள் உடலை புண்ணாக்கி நடந்து வந்த முஸ்லிம்களுக்கு இளைப்பாற சிற்றுண்டி கடைகள் அமைத்து தங்கள் இணக்கத்தை வெளிப்படுத்தினர் இந்துக்கள். தண்ணீர் பந்தல்கள் அமைத்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். உழைக்கும் இந்து மக்களான திரிலோக்புரி மக்கள் முஸ்லிம்களுடன் சில தூரங்களுக்கு நடக்கவும் செய்தனர்.

போலீஸ் காவல்
போலீஸ் காவல்

திரிலோக்புரியை அடுத்து உடனடியாக பவானாவை திட்டமிட்டதால் சில ஊடகங்களும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் விழிப்பாக இருந்து இந்து மதவெறியர்களின் சதித்திட்டம் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளிக்கொணர்ந்து இந்து மதவெறியர்களை பின்வாங்க செய்தனர். எனினும் இந்து மதவெறியர்களால் இந்த சமூகத்துக்கு ஏற்படும் ஆபத்து என்பது தலை மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருப்பதை மறுக்கவியலாது. பத்தாண்டுகளுக்கு மேலாக பவானாவின் சந்தை பகுதிக்குள் ஊர்வலம் சென்று வந்துள்ளார்கள், ஷியா முஸ்லிம்கள். அப்போதெல்லாம் ஏற்படாத அச்சம் இப்போது எப்படி திடீரென வருகிறது என்று கேட்டதற்கு, ‘முன்பு எங்கள் உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் இருந்தது; இப்போது அப்படியில்லை’ என்றுள்ளார்கள். இதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று மோடியை காட்டிக் கொடுக்க தயங்கவில்லை மோடியின் செல்லக் குட்டிகள்.

என்.டி.டி.வி விவாதத்தில் மகா பஞ்சாயத்தில் வெளிப்படையாக ஒரு மதவெறி கலவரத்துக்கு அழைப்பு விடுத்ததை உடனிருந்து கவனித்த போலீஸ்காரர்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று வினவியதற்கு போலீஸ் துறையில் இணை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல் பெரைரா இவ்வாறு குறிப்பிட்டார். ”ஒரு டிராஃபிக்கில் வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபரை எட்டிப் பிடிக்க முடியாது. வாகன எண்ணை தான் குறித்துக் கொள்ள முடியும். மகா பஞ்சாயத்தில் பேசியவர்களின் வன்முறை பேச்சை கேட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் நிலையும் அது தான்” என்றார். தனது அருவருப்பு மிகுந்த பேருருவால் தன்னை உற்று நோக்கும் அனைவரிடமும் இயலாமையை தோற்றுவித்து அனைத்து அரசு நிறுவனங்களையும் கீழ்ப்படியச் செய்துள்ளது இந்துத்துவம். நம்மை அசுரர்களாக நிரூபித்து எழுந்து நிற்பதன் மூலமே இந்த கொலைகாரர்களை வீழ்த்த முடியும்.

– சம்புகன்.

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு – HRPC ஆர்ப்பாட்டம்

1

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு !

ராஜபக்சே, மோடி, சு.சாமியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

HRPC- thamilaka-meenavarkal

மிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்ததைக் கண்டித்து 3.11.2014 மாலை 4.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு HRPC-யின் துணைத் தலைவர் வழக்குரைஞர் தோழர் நடராஜன் தலைமை தாங்க, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சமநீதி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ராஜேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

தமிழர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதில் இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றமும் அரசும் கூட்டு சேர்ந்து சதி செய்துள்ளதாக சந்தேகிக்கிறேன். இதே தூக்குத் தண்டனையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. 600 மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அந்த அநியாயத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது வழக்கு. இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு உள்ளது. அனைவரும் சேர்ந்து போராடா விட்டால் தீர்வு கிடைக்காது.

தோழர் குருசாமி, வி.வி.மு. உசிலை

5 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கிறது. போதை மருந்து கடத்தியதாகக் கூறுவது பொய். மீனவர்களை கடலுக்குள் நுழைய விடாமல் தடுக்க இப்படிப்பட்ட பொய்வழக்குகளை கையில் எடுத்துள்ளது, அரசு. மீனவர்களைக் கடலிலிருந்து அப்புறப்படுத்துவதில் இரண்டு அரசுகளும் குறியாகவே இருக்கின்றன. மீன் பிடிப்பதை தடுப்பது, ஆயுதம் கொண்டு தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, படுகொலை செய்வது, பொய்வழக்கு போடுவது என்று இலங்கை அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு உறுதுணையாகவே இருக்கிறது. சு.சாமியின் செயல்பாடுகள் அதைத் தான் சொல்கிறது. இதில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்ட தமிழக மீனவர்களைப் பலியிடுகிறது இந்திய அரசு.

வழக்குரைஞர் வாஞ்சிநாதன், உதவிச் செயலர், HRPC

மீனவர்கள் பிரச்சனை என்பது கடந்த 35 ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மைத் தன்மை பற்றி பேச எந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லை. வாக்கு வாங்கி அரசியல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு என்பதே ஒரு பொய் வழக்கு. அதை மறைத்து விட்டு, இதற்கு எதிராகப் போராடினால் தவறு என்று சு.சாமி சொல்கிறார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், மீனவர்களை அச்சுறுத்தப் பார்க்கின்றனர். கடலிலிருந்து அப்புறப்படுத்தப் பார்க்கின்றனர். முன்பு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித் தாக்கினர். இன்று மீனவர்களது நிலையைக் காட்டித் தாக்குகின்றனர். ஆனால் இந்தியாவின் நிலையோ வேறாக இருக்கிறது. செங்கல்பட்டிலுள்ள அகதிகளில் ஒரு சிலரைப் பிடித்து, புலிகள் எனக் கூறி பொய் வழக்குப் போட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டிக்கின்றனர்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டிய குற்றவாளிகள் போல் சித்தரித்து துன்புறுத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்க தேச மீனவர்கள் எல்லையைத் தாண்டினாலும் நாமும் விடுதலை செய்கிறோம். அவர்களும் இந்திய மீனவர்களை விடுதலை செய்கின்றனர். இலங்கை மட்டும் பொய் வழக்குப் போட்டு தூக்குத் தண்டனை கொடுக்கிறது. இதை ஏன் இந்திய அரசு கேள்வி கேட்பதில்லை.

அதே நேரத்தில் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் ஆராகத் தேவையில்லை என்று இந்திய நீதிமன்றம் கூறுகிறது. போபால் விஷவாயுப்படு கொலையின் நாயகன் ஆன்டர்சன்னுக்கும் இப்படியே கூறியது. இங்கே மீனவர்களுக்குப் பதிலாக பார்ப்பனர்கள் கொல்லப்பட்டிருந்தால் இந்த அரசு சும்மா இருந்திருக்குமா? மீனவர்கள் ஏழைகள். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், எனவேதான் அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் உரிமைகளைக் காக்க நாமே ஒரு போராட்டக் குழு அமைத்துப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கதிரவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மீனவர்கள் போர்க்குணமிக்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். போராட்டத்தின் ஊடே அவர்கள் தமிழக முதல்வர் ஓ.பன்னீரைப் பார்க்கின்றனர். தங்களது கோரிக்கைகளைச் சொல்கின்றனர். ஓ.பி.எஸ் ஒரு சிறைக்கைதி. இவர் எப்படி இவர்களது பிரச்சனையைத் தீர்ப்பார். வேண்டுமானால் கருணாநிதி, ஜெயலலிதா போல கடிதம் எழுதுவார். எல்லாக் கடிதங்களும் குப்பைக் கூடைக்குள் போனது போல இதுவும் போகும். அவ்வளவு தான். வைகோ முழங்குகிறார் “மோடி அரசே, நீங்கள் மீனவர் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால் நீங்கள் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்”. என்ன எதிர் விளைவு. கூட்டணியில் சேரமாட்டேன். அவ்வளவு தானே?

கனவுகளில் சஞ்சரிக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஓட்டுப் பொறுக்குவதில் தான் குறியாக இருக்கிறது. அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை. பா.ஜ.க வின் கொள்கையே அகண்ட பாரதம் தான். அந்த அகண்ட பாரதத்திற்குள் இலங்கையும் வருகிறது. எனவே தான் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கச் சொல்கிறார் சு.சாமி. மோடியும் ராஜபக்சேயும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவருமே பாசிஸ்ட்கள். மீனவர்களின் படகுகளை விடாதே என்று சொல்லும் சு.சாமியைக் கண்டிக்காத தமிழிசை தூக்குத் தண்டனைக்கு எதிராக இலங்கையில் சிறந்த வக்கீலை நியமிக்கப் போவதாகச் சொல்கிறார். மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை என்பது தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட மறைமுக யுத்தம் என்பது அவருக்குப் புரியவில்லையா? ஓட்டுப் பொறுக்கிகள் பேசுவார்கள், ஆனால் எதுவும் நடக்காது, நாம் தான் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

லயனல், மாவட்ட செயலர் HRPC

இலங்கையின் சட்டப்படி போதை மருந்து கடத்தலுக்குத் தூக்கு கிடையாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொய் வழக்குப் போட்டதோடு, சட்டத்தை மீறி தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மௌனத்திற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவின் மூலதன விரிவாக்கத்திற்கு இலங்கையைப் பயன்படுத்த இந்தியா நினைக்கிறது. சீனாவுக்கு எதிராகத் தெற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் அமெரிக்காவின் அடியாளாக மோடி அரசு செயல்படுகிறது. இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதே மோடி அரசின் முதற் பணி ! எனவே இலங்கை என்ன செய்தாலும் இந்தியா கண்டு கொள்ளாமல் தனது மூலதனத்தை விரிவாக்கம் செய்வதிலேயே கவனமாக இருக்கிறது.

இந்த வழித் தடத்திலிருந்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் விலகிச் சொல்லாது. தூக்குத் தண்டனையைப் பொறுத்த அளவில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று ராஜபக்சே கூறுகிறார். மோடியும் அதைத்தான் சொல்கிறார். நாளை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதிச் செய்யப்பட்டால் அப்பொழுது சட்டம் தன் கடமையைச் செய்தது என்று தான் சொல்வார்கள். இந்தக் கூட்டுச் சதியில் சட்டம் என்ன செய்யும். தமிழிசையையும், பொன்னாரையும், எச்சி ராஜாவையும் பார்த்துப் பசுவதால் என்னபயன் விளையப்போகிறது? எல்லாத் துயரங்களுக்கும், பா.ஜ.கவும் காங்கிரசும் தான் காரணம் என்று இவர்களுக்குத் தெரியாதா?

சு.சாமி என்கிற ஒரு சர்வதேச அரசியல் தரகனை அருகில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்து விடுவேன் என்று தமிழிசை பேசுவது நகைப்புக்குரியது. இது ஒரு அப்பட்டமான ஓட்டுப் பொறுக்கி அரசியல். சு.சாமியும், ராஜபக்சேயும் கை கோர்த்துக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்கிற பா.ஜ.க. மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்து விடுமா?

இலங்கையின் தர்மபாலாவின் 150வது பிறந்த தினத்தன்று, இந்தியா தபால் தலை வெளியிடுகிறது. தர்மபாலா யார்? தமிழர்களை ஒழித்துக்கட்டு என்று போதித்தவர். புத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. சிங்கள இனத்தைத் தவிர வேறு இனம் இலங்கையில் இருக்கக்கூடாது என்று கூறிய மதவெறி பிடித்தவர். அந்த மத வெறியருக்குத் தபால்தலை.

தர்மபாலாவை போற்றுகிற இவர்களுக்கு தமிழர்கள் என்றால் கசக்கிறது. ஏன் ஏனென்றால் தமிழ் மரபு என்பது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு. ஜெயலலிதா ஊழல் குற்றச் சாட்டில் ஜெயிலுக்குப் போனவுடன், ஆயிரக் கணக்கான அடிமைகள் மொட்டை போட்டனர், மண்சோறு சாப்பிட்டனர், உருண்டனர், புரண்டனர், கோயில்களில் எல்லாம் யாகங்கள் நடத்தினர். தமிழ்நாட்டையே சட்டவிரோதப் போராட்டங்களால் காவல்துறை உதவியுடன் ஸ்தம்பிக்கச் செய்தனர், இந்த அரசியல் பொறுக்கிகள். இப்போது அந்தத் தமிழர்கள் எங்கே போனார்கள். தூக்குத் தண்டனைக்கு எதிராக ஏன் போராட வரவில்லை. இந்த வாக்கு வங்கி அரசியல் எந்தத் தீர்வையும் கொண்டுவராது. தமிழர்களாகிய நாம் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடுவதின் மூலம் மட்டுமே விடியலைக் கொண்டு வர முடியும்.

நடராஜன் து.தலைவர் HRPC

சர்வதேச அரங்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்த பல நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால் ராஜபக்சே என்ற இந்த ரத்தக்காட்டேரி தமிழர்களின் ரத்தம் குடிக்கத் துடிக்கிறது. வீரவசனம் பேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் இன்று அடக்கி வாசிக்கின்றனர். தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை அரசு சுட்டுக் கொன்ற பின்பும் ஏன் இந்த மௌனம். பாட்டாளி வர்க்கச் சிந்தனையை உயர்த்திப் பிடித்துப் போராடுவதின் மூலமே மோடிக்கும் சு.சாமிக்கும் பாடம் கற்றுத் தர முடியும்.

தினகரன் செய்தி
தினகரன் செய்தி

ஆர்ப்பாட்டம் ! ஆர்ப்பாட்டம் !
அப்பாவி மீனவர்களுக்கு
அநீதியாக விதிக்கப்பட்ட
தூக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
HRPC ஆர்ப்பாட்டம் !

பொய் வழக்கு ! பொய் வழக்கு !
அப்பாவி மீனவர்கள் மீது
போதைப் பொருள் கடத்தியதாக
பொய் வழக்கு ! பொய் வழக்கு !

பதில் சொல்! பதில் சொல்!
மீனவர் பிரச்சனையை
உடனே தீர்ப்பேன்னென்ற
மோடி அரசே பதில் சொல்!
மக்களுக்கு பதில் சொல் !

தி இந்து செய்திசுட்டுக் கொலை ! சுட்டுக் கொலை !
அறுநூறு மீனவர்கள்
இதுவரை சுட்டுக் கொலை !
சின்ன நாடு இலங்கைக்கு
‘வல்லரசாகும்’ பெரிய நாடு
இந்திய மீனவர்களை
சுட்டுக் கொல்லும் தைரியம்
வந்ததெப்படி? வந்ததெப்படி?

தைரியம் எப்படியென்றால்
ராஜபட்சே அரசுக்கு
இந்திய அரசே துணை நிற்குது!

காங்கிரஸ் அரசோ ! பிஜேபி அரசோ
எல்லாமே ஒன்றுதான் !
தமிழ் மக்கள் விரோதிதான் !

ராஜபட்சேவுக்கு பாரத ரத்னா
கேட்குறார் சு.சாமி
பிஜேபியின் மூத்த தலைவர்
நடிக்குது ! நடிக்குது !
தமிழ் நாடு பிஜேபி
நடிக்குது ! நடிக்குது !

தேர்தலுக்கு முன்னால்
வாய் பிளக்கப் பேசுனாரு
பிரதமர் நரேந்திர மோடி !
ஆனா இப்பப் பேசல !
5 பேர் தூக்கிற்கு வாயே தெறக்கல !
வாயில் என்ன புற்று நோயா !
ஆரிய சிங்கள இனப்பற்றா !

பதில் சொல் ! பதில் சொல் !
மோடியே பதில் சொல் !
பிஜேபியே பதில் சொல் !

குஜராத் முதலாளிக்கு
சோமாலியா கடலிலே
பிரச்சனை வந்தபோது
கடற்படையை அனுப்பின !

ஆஸ்திரேலியா நாட்டிலே
பணக்கார மாணவர்களுக்கு
பிரச்சனை வந்தபோதுமத்திய அரசே துடித்தது !
சுப்ரீம் கோர்ட்டு பதறியது !

ஆனா இப்பப் பேசல !
மத்திய அரசு பேசல !
சுப்ரீம் கோர்ட்டும் பேசல !
மீனவர்கள் ஏழை என்பதால்
எவனுமே பேசல !

தைரியம் இருக்கா?
மோடிக்கு தைரியம் இருக்கா?
இலங்கை உடனான
தூதரக உறவுகளை
துண்டிக்கத் தைரியம் இருக்கா?

பொருளாதாரத் தடை விதிக்க
பிஜேபிக்குத் தைரியம் இருக்கா?
பிஜேபிக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
வைகோவே – ராமதாசே
விஜயகாந்தே பதில் சொல் !

துணை நிற்போம்! துணை நிற்போம் !
ஏழை மீனவர்களுக்கு
தமிழக மக்கள் துணை நிற்போம் !
நம்ப மாட்டோம் ! நம்ப மாட்டோம் !
ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை
நம்ப மாட்டோம் ! நம்ப மாட்டோம் !
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !
மீனவர்களுக்கு ஆதரவாக
மக்களே போராட்டத்தை
கட்டியமைப்போம் !

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

பால் முதலாளிகளுக்கு ஜெயாவின் நன்றிக்கடன் – கோவை ஆர்ப்பாட்டம்

0

பால் விலை உயர்வைக் கண்டித்து கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தோழர்கள் பெண்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

ndlf-protest-against-milk-price-hike-kovai-01

கோவை மண்டல சங்கத்தின் முருகன் மில் கிளைத் தலைவர் P.இரங்கசாமி முன்னிலை வகித்து முழக்கமெழுப்பினார். ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் தனது தலைமையுரையில் பால் விலையேற்றத்தின் பின்னணி குறித்தும் மக்கள் படும் வேதனைகளையும், அணி திரள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமாகப் பேசினார். பின்னர் இடையர்பாளையம் நான்கு வீதிகளும் சிலிர்க்கும்படி தோழர்கள் சிறப்பான முழக்கங்களை எழுப்பினார்கள்.

இறுதியில் கண்டன உரையாற்றிய தோழர் விளவை இராமசாமி, பால் விலையேற்றத்தின் பின்னணியில் சதிகாரி ஜெயலலலிதாவின் சொத்து வழக்கு உள்ளது. ஜாமீன் பெறுவதற்கு பல கோடிக்கணக்கான் ரூபாய் கைமாறி உள்ளது. ராம் ஜெத்மலானி, நாரிமன் என ஏராளமானோர் இதில் உள்ளடங்கி உள்ளனர். இவர்களை உரிய முறையில் உபசரித்தது யார் என்றால் தனியார் பால் நிறுவன முதலாளிகளான் திருமலா, டோட்லா, ஹேரிட்டேஜ், ஜெர்சி போன்றோர். இவர்களுக்கு நன்றி கடன் செலுத்தவே பால் விலை பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அது போல சர்க்கரை விலை 3 ரூபாய் ஏற்றத்தின் பின்னாலும் பாசிச ஜெயாவின் நண்பர்களான ஆந்திர கர்நாடக சர்க்கரை ஆலை முதலாளிகள் உள்ளனர். எனவே இதனை முறியடிக்க வேண்டுமானால் மக்கள் ஓட்டுப்போடுவதால் ஒன்றும் செய்ய முடியாது, கருணாநிதி சொல்வது போல புரட்சி செய்ய வேண்டும். ஆனால் அப்புரட்சி கருணாநிதி உள்பட சகல ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கும் ஒட்டு மொத்தமாக பால் ஊற்றுவதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு புரட்சிக்கு வரலாறு காத்திருக்கிறது. அதனை நாம் தோள் கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என அறைகூவல் கொடுத்து கண்டன உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கோவை
9629730399
8220840468

நவம்பர் 7 – இந்த மண்ணில் ஒரு சொர்க்கம் சாத்தியமா ?

1

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே,

மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைக்கு முடிவு கட்டி சாதாரண உழைக்கும் மக்களும் ஆட்சி அதிகாரத்தைப் பெறமுடியும் என்பதை உலகுக்கு முதன்முதலில் நிரூபித்துக் காட்டியது ரசியப் புரட்சி. அந்த நாள்தான் நவம்பர் 7, 1917. அந்த புரட்சிநாள் தான் உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் பண்பாட்டு விழாவுமாகும்.

ரசியாவில் சோசலிச அரசு அமைக்கப்படுவதற்கு முன் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடினார்கள். மாணவர்களுக்கு கல்வியறிவு கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலையில்லை. தொழிலாளர்களும், விவசாயிகளும் உரிமைகள் ஏதுமின்றி நசுக்கப்பட்டனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கீழ் ரசிய நாடே சூறையாடப்பட்டுக் கிடந்தது.

ரசிய புரட்சிக்குப்பின் அமைக்கப்பட்ட சோசலிச அரசு தங்கள் குடிமக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது. வறுமையை ஒழித்தது; அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை அடிப்படை உரிமையாக்கியது; விளையாட்டுத்துறையை மேம்படுத்தி உலகளவில் பல சாதனைகளை படைத்தது; பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தது; சாதாரண பால்காரம்மாவை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டியது; விவசாயம், தொழில்துறையை உலகமே வியக்கும் வகையில் வளர்த்தெடுத்தது. மொத்தத்தில் இம்மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைத்துக் காட்டியது.

நம் நாட்டிலும் இப்படி ஒரு சொர்க்கத்தை படைக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு எழுகிறதா? அதற்கு நம் நாட்டின் இழிநிலையை மாற்றியமைக்க வேண்டும்.

நம் அனைவருக்கும் அரசே இலவசமாக வழங்கவேண்டிய சேவைகளான கல்வியும், மருத்துவமும் தனியார் முதலாளிகள் கையில். இயற்கை நமக்குத் தந்த கொடையான தண்ணீரும் காசு இல்லாமல் கிடைக்காது. நமது வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு மட்டும் நாள்தோறும் வாட்டி வதைக்கிறது.

இதோ ஆவின்பால் விலை உயர்வு நம் தலையில் இடியைப் போல் இறக்கப்பட்டுள்ளது. அடுத்து மின்கட்டணம் நம்மை சுட்டெரிக்கத் தயாராகி வருகிறது.

இதுமட்டுமா, நாட்டு மக்கள் தொகையில் சரிபாதியினரான இளைஞர்களுக்கோ வேலை இல்லை; வேலை தர வக்கற்ற இந்த அரசு இளைஞர்கள் மீது டாஸ்மாக் சாராயத்தையும், நுகர்வுவெறி மோகத்தையும், பாலியல் வக்கிரங்களை பரப்பும் இண்டர்நெட்டையும், மெமெரி கார்டையும் அன்றாடம் திணித்து சீரழிவில் தள்ளி வருகிறது.

வேலை வாய்ப்பை வாரி வழங்கப் போவதாக சொல்லி வந்த நோக்கியா கம்பெனி இழுத்து மூடப்பட்டு விட்டது. வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. விவசாய நிலங்களும், மலைகளும், காடுகளும், ஏரி, குளம், ஆறுகளும், கனிம வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக அன்றாடம் சூறையாடப்படுகின்றன.

இப்போது சொல்லுங்கள் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா?

இல்லையே என்கிறீர்களா?

அப்படியென்றால் இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் யார் காரணம்? இதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

1991 -க்குப் பின் நம் நாட்டில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான்.

காங்கிரசு, பா.ஜ.க, அதிமுக, திமுக எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் நம்மை ஆண்டாளும் இந்த நாசகாரக் கொள்கைகளைத்தான் அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். நம் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். இது நமக்கான அரசா? இல்லை. இல்லவே இல்லை என்பது இப்போது புரிகிறதா? கார்ப்பரேட் முதலாளிகள் நலன் கொண்ட அரசு இது.

சட்டம், போலீசு, நீதிமன்றம், அதிகாரிகள், அரசின் துறைகள் என அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் சட்டைப் பாக்கெட்டில். இவைகள் அனைத்தும் லஞ்ச – ஊழலில் மலிந்துகிடக்கின்றன. இவர்கள் போடும் சட்டங்களை இவர்களே மதிப்பதில்லை. இவர்கள் சொல்லும் நீதி, நியாயம், ஒழுக்கம் அனைத்தையும் இவர்களே காலில்போட்டு மிதிக்கிறார்கள். ஒட்டுமொத்த அரசே அழுகி நாறிக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மத்தியில் ஆளும் மோடி அரசாகட்டும், தமிழ்நாட்டு கிரிமினல் லேடி ஜெயா வின் பொம்மை அரசாகட்டும் இவைகளின் செயல்பாடுகளைப் பாருங்கள். கிரிமினல்மயமான ஒரு மாஃபியா கும்பலைப் போல் செயல்படுவது தெரியும். மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள், அதையே நியாயம் என்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை போலீசை ஏவி ஒடுக்குகிறார்கள். ’ஜெயில்’ லலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கும், ஜெயிலும்,பெயிலும், அதிமுக ரவுடிகளின் வன்முறையும் இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.

சற்று சிந்தித்துப் பாருங்கள் உழைக்கும் மக்களாகிய நமக்கு இங்கு உரிமைகள் ஏதாவது இருக்கிறதா. துளியளவும் இல்லையே. இப்படிப்பட்ட அரசமைப்புக்குள் நமது பிரச்சனைகளை எப்படி தீர்த்துக்கொள்ள முடியும்.

அப்படி தீர்த்துக்கொள்ள முடியாத, நமக்கு எந்த வகையிலும் பயன்படாத, அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்பை இன்னும் ஏன் நாம் கட்டிக்கொண்டு அழவேண்டும். தூக்கியெறிவோம் இந்த அரசமைப்பு முறையை.

நம் கையில் அதிகாரம் இருக்கும் வகையில் மாற்று அதிகார அமைப்புகளுக்கான போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம்.

அதற்கு உழைக்கும் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்,

இம் மண்ணிலும் ஒரு சொர்க்கத்தைப் படைப்போம்.

நவம்பர் – 7

ரசியப்புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
நவம்பர் – 2 ல் பு.மா.இ.மு நடத்திய விளையாட்டு விழா!

சென்னையில்  செயல்பட்டு வருகின்ற புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல் / டாக்டர். சந்தோஷ் நகர்,எழும்பூர் ஆகிய இடங்களில் நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சிநாள் விழாவினை, நமது பண்பாட்டு விழாவினை, உழைக்கும் மக்களாகிய குடும்ப விழாவினை சிறப்பாகக் கொண்டாடியது.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

குரோம்பேட்டை பு.மா.இ.மு கிளையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம் மற்றும் லெமன் ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் என சிறார்களை ஈர்க்கும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டன.

கிளைச் செயலர் தோழர் தம்புராஜ் தொடக்கவுரை நிகழ்த்தி விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். கலந்து கொண்ட மாணவர்கள் நவம்பர் 7 விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தி சென்றுள்ளனர்.


[புகைப்படங்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 9445112675

படேல் சிலை – மோடியின் நார்சிசமும், பாசிசமும் !

8

2014 பாராளுமன்ற தேர்தல் வரை மோடியின் அடையாளமாக காட்டப்பட்டது என்னவென்று நினைவிருக்கிறதா? வளர்ச்சியைத் தவிர்த்த வேறு எந்த சிந்தனையும் இல்லாதவர் அவர் என்பதாகவே மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அடிப்படைவாதத்தால் வளைக்க முடியாத மக்கள் கூட்டத்திடம் மோடியின் வளர்ச்சி முகத்துக்காக எங்கள் மற்ற பாவங்களை மன்னியுங்கள் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

மோடியின் படேல் சிலை
படேலுக்கு சிலை வைக்கப் போகும் மோடி

ஆனால் இந்த திட்டத்தில் கொஞ்சமும் இணைக்க முடியாத ஒரு செயலாக அவரது படேல் பாசம் இருந்தது. உலகிலேயே பெரிய சிலையை படேலுக்கு வைக்கப்போகிறேன் என்றார், அதற்காக இரும்பு திரட்டப்போகிறேன் என்றார், படேலுக்காக எல்லோரும் மராத்தான் ஓடுங்கள் என்றார். இந்த ஒரு நடவடிக்கை மட்டும் அவரது அமெரிக்க பாணி பிரமோஷனுக்கு சற்றும் தொடர்பற்றதாக இருந்ததை அன்றைக்கு ஓங்கி ஒலித்த விளம்பர ஒலியில் நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். இன்றைக்கு ஒரு தீவிர ஆர்எஸ்எஸ்காரரான மோடி காங்கிரஸ் தலைவரான படேலை ஆராதிப்பதற்கான வரலாற்றுக் காரணங்களை முதலில் பரிசீலனை செய்யலாம்.

நாதுராம் கோட்சே தான் யாரையெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக கருதுகிறேன் என்பதை தனது வாக்குமூலத்தில் இப்படி பட்டியலிடுகிறார். “ திலகர், என்.சி.கேல்கர், சி.ஆர்.தாஸ், மதிப்பிற்குரிய சர்தார் படேலின் சகோதரர் விதல்பாய் படேல், பண்டிட் மாளவியா, பாய் பரமானந்த் மற்றும் கடந்த பத்தாண்டுகளாக முக்கிய இந்துசபா தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியினருக்கே அதற்கான பெருமை போய்ச்சேர வேண்டும்.” (1993ல் கோபால் கோட்சே வெளியிட்ட நாதுராம் கோட்சேயின் வாக்குமூலமான – நான் ஏன் மகாத்மா காந்தியை கொலை செய்தேன் நூலில் இருந்து). படேலை அவர் குறிப்பிடும் விதத்தை கவனியுங்கள் “மதிப்பிற்குரிய சர்தார் படேல்” ஏனைய நாடறிந்த பெயர் எதையும் அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. சரி, ஆர்.எஸ்.எஸ்சின் படேல் பாசத்தைப் பார்த்தாயிற்று.

சர்தாரின் ஆர்.எஸ்.எஸ் காதலை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

1947 டிசம்பர் 29-ம் தேதி பிரதமர் நேரு உள்துறை அமைச்சர் படேலுக்கு எழுதுகிறார் “ அஜ்மீரில் இருந்த 50 ஆயிரம் முஸ்லீம்களில் பத்தாயிரம் பேர் வெளியேறிவிட்டதாகவும் வெளியேற்றம் இன்னமும் தொடர்வதாகவும் அறிகிறேன். அங்கும் இதர பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் தாக்கும் மனோபாவத்தில் உள்ளது. அவர்கள் விடுக்கும் மிரட்டல்கள் பலரையும் பயமுறுத்துகிறது”. இந்த கடிதத்துக்கு படேலிடமிருந்து முறையான பதிலில்லை. ஆகவே நேரு பஞ்சாயத்திற்காக காந்தியிடம் செல்கிறார். 1948 ஜனவரி 6-ம் தேதி காந்திக்கு அவர் குறிப்பொன்றை அனுப்புகிறார், நகல் படேலுக்கும் செல்கிறது. உள்ளடக்கம் இதுதான் “எனக்கும் சர்தாருக்கும் மனோபாவங்களில் வேறுபாடு உள்ளது என்பது மட்டுமல்ல, பொருளாதார மற்றும் மதவெறி விஷயங்களை எப்படி அணுகுவது என்பதிலும் வேறுபாடு உள்ளது.”

இதற்கான படேலில் பதில், ஆமா அதுக்கு என்ன இப்போ எனும் தோரணையில் இருந்தது. ஜனவரி 12-ம் தேதி அவரது பதில் குறிப்பு இப்படியிருந்தது ”மனோபாவம், பொருளாதார விஷயங்கள் மற்றும் இந்து முஸ்லீம் உறவுகளை பாதிக்கும் விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது என்பதில் மறுப்பு ஏதுமில்லை”.

நாதுராம் கோட்சேவுக்கு பத்திரிகை நடத்த ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தவர் சாவர்க்கர். ஜனவரி 20, 1948-ம் தேதி காந்தியைக் கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்ட மதன்லால் பாவா இரண்டு முக்கியமான தகவல்களை சொல்கிறார். இந்த கொலை முயற்சிக்கு முன்பு தான் சாவர்க்கர் சதனில் சாவர்க்கரை சந்திதத்தாகவும், தன்னுடன் ஆறுபேர் கொண்ட கோஷ்டியும் இச்சதியில் பங்கேற்றதாகவும் அதில் ஒருவர் ராஷ்ட்ரீய அல்லது அக்ரானி மராட்டா எனும் பெயர் கொண்ட மராத்தி பத்திரிக்கையின் ஆசிரியர் எனவும் குறிப்பிடுகிறார். அந்த ஆசிரியர்தான் ஜனவரி 30, 1948-ம் தேதி காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே.

பிப்ரவரி 20ல் (1948) நேரு படேலுக்கு மிக முக்கியமான கடிதமொன்றை எழுதுகிறார். கேரா எனும் அதிகாரியின் குறிப்பை மேற்கோள் காட்டும் அக்கடிதம் இப்படி இருக்கிறது “ ஜனவரி 20-ம் தேதி நடக்காமல் போனதை போலீசின் அலட்சியத்தை பயன்படுத்தி இப்போது நிறைவேற்றிக்கொண்டார்கள். அவர்கள் பற்றிய விவரங்களும் அவர்களது கூட்டாளிகளது பெயர்களும் போலீஸ் வசம் இருந்தன. அவர்கள் 20ம் தேதி மும்பை திரும்பி மீண்டும் 28 அல்லது 29ல் டெல்லி வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண சோதனையில்கூட அவர்களை கண்டு பிடித்திருக்க முடியும். இது அலட்சியமல்ல, அரசு அதிகாரத்தைப் பராமரிப்பதில் மோசமான விருப்பமின்மையோடு இருந்திருக்கிறது”.

இதனை இன்னும் தீவிரமான அலட்சியத்தோடு அணுகுகிறார் படேல். இது தீவிர உணர்ச்சி தந்த அழுத்தத்தில் எழுதப்பட்ட குறிப்பு என பதிலளித்து விசயத்தை 21 பிப்ரவரியிலேயே முடிக்கிறார் படேல். காந்தி கொலைச்சதியை தீவிரமாக விசாரிப்பதாக பாவனை செய்யக்கூட அவர் தயாராக இல்லை என்பது படேலின் பதிலில் தெளிவாக வெளிப்படுகிறது.

இவ்விடயத்தை இன்னும் ஒருமுறை படேலுக்கு அதே பிப்ரவரி 26 அன்று நினைவூட்டுகிறார் நேரு. “பாபுவின் படுகொலை குறித்த விசாரணையில் உண்மையை கண்டுபிடிப்பதில் உண்மையான முயற்சி இல்லாததாகப் படுகிறது. இக்கொலை ஒரு தனிப்பட்ட வேலையல்ல, மாறாக பிரதானமாக ஆர்.எஸ்.எஸ் ஆல் நடத்தப்பட்ட ஒரு விரிவான இயக்கத்தின் ஒரு பகுதி என்றே நான் மேலும் மேலும் கருதுகிறேன். டில்லி போலீசாரில் பலர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருப்பது மேலும் ஆபத்தானதாக உள்ளது.”

மோடி - படேல் பாசம்
உலகிலேயே பெரிய சிலையை படேலுக்கு வைக்கப்போகிறேன் என்றார், அதற்காக இரும்பு திரட்டப்போகிறேன் என்றார்

இத்தனை தீவிரமான நினைவூட்டலுக்குப் பிறகும் படேலின் காவி மூளை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உடனடி ஊழியம் செய்கிறது. மறுநாளே படேல் இப்படி தீர்ப்பளிக்கிறார் “குற்றவாளிகள் வாக்குமூலத்தில் இருந்து இதில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்கவில்லை என தெரிகிறது. பலரும் நினைப்பதுபோல இதன் பின்னால் பெரிய சதி ஏதுமில்லை (27.02.1948 கடிதம்)”.

ஆனால் இவ்வழக்கின் தீர்ப்புக்கு பெரிய ஆதாரமாக கொள்ளப்பட்ட திகம்பர் பட்கே எனும் ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுத வினியோகஸ்தரின் வாக்குமூலம் கோட்சே சம்பவத்திற்கு முன்பு சாவர்கரிடம் ஆசி பெற்றதாக சொல்கிறது (1948 ஜனவரி 14 மற்றும் 17 தேதிகளில்). இரண்டாம் சந்திப்பில் வெற்றியோடு திரும்பிவாருங்கள் என அவர்கள் தோளில் கைபோட்டுக்கொண்டு ஆசீர்வதித்ததாக குறிப்பிடுகிறார் பட்கே. சாதாரண தையற்காரரான கோட்சேவுக்கு எப்படி ஆயுதம் வாங்கவும் பம்பாய்க்கும் டெல்லிக்கும் விமானத்தில் பறக்கவும் பணம் வந்த்து என்பது பற்றி விசாரணை செய்யப்படவில்லை.

சாவர்கரை தப்பிக்க வைக்க கோட்சே இச்சதியை தான் மட்டுமே செய்ததாக ஒப்புக்கொள்கிறார். மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, பட்கேயின் வாக்குமூலத்தைக்கொண்டு மட்டும் சாவர்கரை தண்டிக்க முடியாது என சொல்லி அவரை மட்டும் விடுவிக்கிறார் நீதிபதி ஆத்மாசரண். அப்போது நீதிமன்றத்திலேயே சாவர்க்கர் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள் மற்ற குற்றவாளிகள். சதியில் பங்கேற்காதவர் காலில் சதிகாரர்கள் விழுந்திருக்கிறார்கள்.. இந்து தர்மம்தான் எத்தனை மகத்தானது!!! தேசத்தலைவர் என சொல்லப்பட்டவரின் கொலைவழக்கில் பிரதான குற்றவாளியொருவர் விடுவிக்கப்பட்ட பிறகு அரசு அப்பீலுக்கு போகவில்லை. மேலோட்டமான பார்வையிலேயே இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கை நம்மால் தெரிந்துகொள்ள முடியும், அதனை மறைப்பதில் படேலுக்கு இருந்த அக்கறையையும் நம்மால் உணர இயலும். படேலின் காவி பாசத்தை இன்னும் நெருக்கமாக பார்க்கவும் ஆதாரமிருக்கிறது.

அவ்வமைப்பை படேல் தடை செய்தார் என்பது உண்மையென்றாலும், அது அதன் தலைவர்களை சிறைவைத்து பாதுகாக்கவே என கருத எல்லா நியாயங்களும் இருக்கிறது. அப்போது மக்கள் இந்து அடிப்படைவாதிகள் மீது கடும்கோபத்தில் இருந்திருக்கிறார்கள். காந்தி கொல்லப்பட்ட அன்று சாவர்கர் வீட்டை தாக்கியவர்கள் 500 பேர். அப்போது படுக்கையறையில் ஒடுங்கி ஒளிந்துகொண்டிருந்தார் ”வீர” சாவர்க்கர். வாய்ப்பிருந்தும் கோட்சேயை முன்பே கைது செய்யாத காவல்துறை இப்போது மட்டும் சரியான நேரத்தில் சாவர்கரை காப்பாற்றியது.

ஆர்.எஸ்.எஸ்சின் மீதான தடையை விலக்கிக்கொள்ளச் சொல்லி கோல்வால்கர் நேருவுக்கு கடிதம் அனுப்புகிறார். கம்யூனிச எதிர்ப்பில் அரசுக்கு உதவுவதாக ஆஃபரும் கொடுக்கிறார். அவர்களை தேசவிரோத அமைப்பென குறிப்பிட்ட நேரு, இதுபற்றி முடிவெடுக்க வேண்டியது படேலின் உள்துறைதான் என பதிலளிக்கிறார். வேண்டுகோள் கடிதம் படேலுக்கு போகிறது. இரும்பு மனிதர் கருணையோடு பதிலளிக்கிறார் “ காங்கிரசில் சேருவதன் மூலம் நீங்கள் உங்களது தேசபக்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் (11.09.1948 தேதியிட்ட கடிதம்)”. பிறகு இன்னொரு ஆலோசனை வழங்குகிறார், ஆர்.எஸ்.எஸ் தமக்கென ஒரு அமைப்புச்சட்டத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே அது. அந்த கட்டளையை 1949 ஜூனில் நிறைவேற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். அதையே காரணமாக வைத்து அவர்கள் மீதான தடையை விலக்கிக்கொள்கிறார் படேல்.

இந்து மகாசபையின் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி மே 4 1948ல் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ”அவரது (சாவர்க்கர்) அரசியல் கோட்பாடுகளுக்காகவே அவர் விசாரிக்கப்பட்டார் என்று பின்னாளில் பேச்சு எழும்படி எதுவும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”.

இதற்கு மே 6 ல் பதிலளிக்கிறார் படேல் “சாவர்க்கரை குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பதைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் நீதிமுறைமை எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கவேண்டுமேயொழிய அரசியல் காரணங்களை இதில் இழுக்கக்கூடாது என அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன்”.

வல்லபாய் படேலுக்கு இருந்த காவிப்பற்றையும் காவி காலிகள் படேலுக்கு எத்தனை தூரம் நன்றிக்கடன்பட்டவர்கள் என்பதையும் அறிய இருக்கும் எண்ணற்ற ஆதாரங்களில் மிகச்சிறு பாகம்தான் நாம் இதுவரை விவாதித்தது. காவிகளின் இன்றைய அசுர வளர்ச்சிக்காக படேல் ஆற்றிய சேவை அளப்பரியது. அதற்காவே பாஜக அவரைக் கொண்டாடுகிறது.

ஆனால்…

மோடி படேல் சிலையாக
இன்னமும் எம்ஜிஆராக வேடமிடும் சிலரைப்போல.

ஒப்பிட முடியாத ஒரு விளம்பர மோகியான மோடிக்கு படேல் மீது இத்தனை நன்றியுணர்ச்சி வர வாய்ப்பேயில்லை. ஏனெனில் நார்சிசம் என்பது நன்றியுணர்வின் பரம விரோதி. ஆகவே மோடியின் இந்த படேல் பாசத்திற்கு வேறொரு காரணம் இருந்தே ஆகவேண்டும்.

தான் கவனிக்கப்படவேண்டும் எனும் தேவைக்கும் தனது பாத்திரம் என்ன என்பதில் இருக்கும் குழப்பத்துக்கும் இடையேயான முரண்பாடுதான் வளர் இளம்பருவத்தவரின் மனோநிலை என்கிறார்கள் உளவியில் அறிஞர்கள். எப்படியேனும் அடுத்தவர் கவனத்தை பெறவேண்டும் எனும் தணியாத தாகம் இளையோருக்கு இருக்கும். ஆனால் எப்படி அதனை செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது. தங்களது சரியான பாத்திரம் இச்சமூகத்தில் எது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தன்னை வசீகரித்த ஒரு ஆளுமையின் நகலாக தன்னை காட்டிக்கொள்வதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அதனால்தான் ரசிகர் மன்றங்கள் பெரும்பாலும் விடலைப் பையன்களால் நிரம்பியிருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு இந்த சிக்கல் சில காலத்தில் சரியாகிவிடும், ஆனால் சிலருக்கு இது ஆயுளுக்கும் தொடரலாம். இன்னமும் எம்ஜிஆராக வேடமிடும் சிலரைப்போல.

எனினும் இதை ஒரு சமூகவியல் பார்வையிலும் பார்க்க வேண்டியுள்ளது. தனக்கு கீழ் அதிகாரம் செல்லுபடியாகும் சமூக அடிப்படையையும், சித்தாந்தத்தையும் கொண்டிருப்போருக்கு இது சற்று வேறு தளத்திலும் செயல்படுகிறது. குறிப்பிட்ட அதிகாரம் தரும் போதையிலும், திளைப்பிலும் மூழ்கியிருப்போர் தன்னைப் பற்றிய சுய மதிப்பீட்டை மிகையாகவும் செய்து கொள்கிறார்கள். அதன்படி இந்த உலகை உய்விக்க வந்த அதீத மனிதர்களாகவும் கருதிக் கொள்கிறார்கள். இதில் அகநிலை, புறநிலை என்று பிரிக்கமுடியாத படி அவர்களது சமூக அதிகாரத்திற்கான இருப்பு பங்காற்றுகிறது.

மோடிக்கு இருப்பதும் இதையொத்த பிரச்சனைதான். அவருக்கு தான் எப்போது கவனிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. இந்த நார்சிச பண்புடன் மோடியை மீட்பராக முன்னிறுத்தும்ஆளும் வர்க்கத்தின் விளம்பர நடவடிக்கைகளும் கணிசமாக கூட்டிவிடுகின்றது. ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் அடியாள் தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டாலும் அந்த வர்க்கத்திற்கு கவலை இல்லை. வேலை நடந்தால் சரி என்பதால் அவர்கள் இதை பெரிது படுத்த மாட்டார்கள்.

ஆகவே தன்னைத்தானே மீட்பராக கருதிக் கொள்ளும் மோடியிடம் இவை தொடர்பான சில குழப்பங்கள் இருக்கவே செய்யும். முக்கியமாக அவர் அப்படி குழப்பம் என்று உணர வேண்டியதில்லை. இதை மோடியின் பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக அறியலாம். அவர் அம்மா இன்னமும் ஆட்டோவில் பயணிக்கிறார், இதன்மூலம் அவர் எளிமையானவராகவும் அரசுப் பண விசயத்தில் கறாரானவராகவும் காட்டிக்கொள்ள முற்படுகிறார். ஆனால் ஒரு எளிமையை விரும்புபவன் கனவிலும் செய்யத் தயங்குகிற ஆடைஅலங்காரங்களையும் ஒப்பனையையும் அரசுப்பணத்தில் செய்துகொள்பவராக அவர் இருக்கிறார் (அவரது ஆடைகள், கடிகாரம் ஆகியவை லட்சங்களை விழுங்கியவை. பேனாகூட ஆயிரங்களில் விலை கொண்டது)

ஒரு பட்டிக்காட்டு பெண்ணை மனைவியாக அறிவிக்க மறுக்கும் மோடியின் பற்றற்ற துறவி முகம் அதே போன்ற பட்டிக்காட்டு பெண்மணியான அவரது அம்மாவிடம் பணிவு காட்டும் வீட்டுக்கடங்கிய பையனாக தோற்றம் காட்டுகிறது. ஒரு மேட்டுக்குடி தலைவர் தாயை நிலவுடமை பண்பின் அடிப்படையில் அணுகும் போது தாரத்தை முதலாளித்துவ நோக்கில் அணுகுவார் என்பது இந்தியாவுக்கு உள்ள விசேடமான பண்பு.

வானுக்கு கீழ் உள்ள எல்லா விவகாரத்திற்கும் கருத்து சொல்லும் அறிவாளியாக அவர் தன்னை காட்டிக்கொள்ள மெனக்கெடுகிறார். அதற்காக இருநூறுபேர் கொண்ட குழுவும் அவர் வசம் இருந்தது. குப்பை வாருவது முதல் குளோபல் வார்மிங்வரை சகலத்தையும் மேடையில் பேசுகிறார். ஆனால் தனது பேச்சாற்றலை நிரூபிக்க இன்னொரு வழியான பிரஸ்மீட்டை அறவே ஒதுக்குகிறார்.

பிற நாட்டு தலைவர்களுடன்கூட இந்தியில்தான் பேசுவேன் என அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில் இஸ்ரோ நிகழ்ச்சியொன்றில் இருபது நிமிடம் ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து பேசுகிறார். தனது ஆஃப்பாயில் ஆங்கில ஞானம் பற்றிய தாழ்வு மனோபாவம் ஹிந்தி பற்றாக காட்டப்பட்டது. எப்படியேனும் ஆங்கிலம் பேசிவிடவேண்டுமெனும் ஆர்வம் இஸ்ரோவில் வெளிப்படுகிறது.

படேல் சிலைக்காக மோடி
ஒவ்வொரு விளம்பரப் பிரியனுக்கும் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கான காரணங்களை உருவாக்கும் கடமையிருக்கிறது.

தனது அடையாளம் பற்றிய விருப்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான பாரிய வேறுபாடு அவரை அலைகழிக்கிறது. இதை நிரப்ப ஆளும் வர்க்க ஊடகங்கள் எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் ஒரு கோமாளி பாசிஸ்ட்டின் முகத்தை அப்படி எளிதாக மறைத்து விட முடியாது. அதனால் வெளியில் பார்க்கும் பார்வைகளும் விமரிசனங்களும் மோடியை கிண்டல் செய்வது தெரியாமல் போகாது.

ஆகவே வசீகரமான இன்னொரு ஆளுமையோடு தன்னைப் பொருத்திக் கொள்வதன் வாயிலாக தமக்கொரு நிரந்த அடையாளத்தை உருவாக்கிவிடமுடியும் என அவர் கருதுகிறார். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பிரபலங்களோடு அவரைப் பொருத்திக்கொள்ள இயலாது. கருத்து முரண்பாடு ஒருபக்கமென்றாலும் அவர்களுடனான ஒப்பீடு கொஞ்சமும் அடிப்படையற்றது என்பது அரைநாளுக்குள் அம்பலப்பட்டுவிடும். சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களின் வழித்தோன்றலாக காட்டிக்கொள்ளலாம், அவர்களை பெரும்பாலான பாஜக உறுப்பினர்களுக்குகூட யாரென்று தெரியாது.

இந்த தரவுகளோடு ஒப்பிடுகையில் மோடி தன்னை படேலோடு அடையாளப்படுத்திக்கொள்வது கொஞ்சம் செல்லுபடியாகக்கூடிய உத்தியாக இருக்கிறது. படேலை பெரும்பாலானவர்களுக்கு தெரியும், ஆனால் பெரிதாக எதுவும் தெரியாது. ஆகவே அம்பலப்படுவோமென்ற ஆபத்து இல்லை. இருவருக்கும் கொள்கை வேறுபாடு எதுவுமில்லை. எதற்கென்றே தெரியாமல் அவருக்கு அளிக்கப்பட்ட இரும்பு மனிதர் எனும் பட்டம் மோடியை பெரிதும் வசீகரிக்கிறது, மோடி தன்னைப்பற்றி கட்டமைக்க விரும்புகிற பிம்பத்துக்கு அந்த அடைமொழி மிக நெருக்கமானதாக இருக்கிறது.. மூவாயிரம் கோடியை செலவு செய்வதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை இல்லையா??

ஒரு உண்மைச் சம்பவம் இதனை புரிந்துகொள்ள உதவலாம். தங்கள் தேவாலயத்துக்கு சேவை செய்ய வந்திருந்த சகோதரிகளின் வழியனுப்பு நிகழ்வில் அந்த ஆலயத்தின் பாதிரியார் இப்படி பேசுகிறார் “கடந்த இருவார காலமாக இந்த சகோதரிகள் ஆற்றிய பணிகள் சிறப்பானது. அவர்கள் பொறுப்புணர்வும் அன்பும் நம் மனதைவிட்டு என்றைக்கும் அகலாது. எனது தனிப்பட்ட முயற்சியின் காரணமாகவே இவர்கள் இங்கே சேவையாற்ற வந்திருக்கிறார்கள். ஆகவே சகோதர சகோதரிகளே நாம் நன்றி சொல்வோம், பிரார்த்திப்போம்…” இதில் நன்றியும் பிரார்த்தனையும் யாருக்கு என உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

மோடி சுதந்திர தேவி சிலை
ஒருவரைப் பற்றிய மிகையான துதிபாடல்களும் மதிப்பீடுகளும் அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில் அவருடைய உண்மையான தகுதிகளையும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

இதே கதைதான் படேல் சிலை விவகாரத்திலும் நடக்கிறது. இதுவரை யாரும் படேலை கண்டுகொள்ளவில்லை எனும் மோடியின் செய்தியில் அந்த பெருமைக்கு சொந்தக்காரன் நான் என்னும் சுயபுராணம் இருக்கிறது. படேலுக்கு மூவாயிரம் கோடியில் சிலைவைக்கும் மோடி எனும் பெருமைதான் பேசப்படுமே ஒழிய அங்கே படேலின் பெயர் ஒரு கருவிதான். ஒவ்வொரு விளம்பரப் பிரியனுக்கும் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கான காரணங்களை உருவாக்கும் கடமையிருக்கிறது. ஊரான் வீட்டு காசென்றால் அதற்கான பட்ஜெட் மூவாயிரம் கோடியானால் என்ன முன்னூறானால் என்ன??

மோடிக்கு இப்போதிருக்கும் பிரபல்யம் போதாதா? இன்னும் அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள என்ன தேவையிருக்கிறது என அப்பாவிகள் சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இந்த தகவலை சொல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் ஆளுமையை தீர்மானிப்பது நீங்கள் எப்படிப்பட்டவர் எனும் யதார்த்தமல்ல, உங்களை நீங்கள் யாராக உணர்கிறீர்கள் என்பதும், நீங்கள் யாராக உணர வேண்டும் என உங்களை இயக்கும் சமூகச் சூழல் என்னவாக விரும்புகிறது – இரண்டும் சேர்ந்த சிந்தனைதான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது. ஒருவரைப் பற்றிய மிகையான துதிபாடல்களும் மதிப்பீடுகளும் அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில் அவருடைய உண்மையான தகுதிகளையும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

இத்தகைய முரண்பாட்டிற்குள் சிக்கிக்கொள்ளாத ஒரு பாராட்டை அல்லது அடையாளத்தைப் பெறும் வெறி அவர்களை செலுத்திக் கொண்டே இருக்கும். உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லருக்கு தான் ஒரு சைவ உணவுக்காரன் எனும் பெருமிதம் மிக அதீதமாக இருந்தது. காரணம் அது ஒன்றுதான் அவர் முழுமையாக சொந்தம் கொண்டாட முடிந்த தனித்தன்மை. பொருளியல் உலகிலிருந்து வரும் பேட்டரி ரீசார்ஜ்ஜோடு இத்தகைய ஆன்மீக ரீசார்ஜ்ஜுகளும் பாசிஸ்டுகளுக்கு தேவைப்படுகிறது.

அப்படித்தான் மோடி தனது தனித்தன்மையே தேடுகிறார். அதில் அவரது சொந்த விருப்பம் என்ன, சொல்லிக் கொடுக்கப்பட்ட யோசனைகள் என்ன என்று பிரித்து பார்க்க வேண்டியதில்லை. சமயத்தில் இரண்டும் வேறு வேறு தேவைகளைக் கொண்டிருந்தாலும் விளைவு சமூகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பயன்படும் என்பதே. இப்படித்தான் மோடி தனது பிம்பத்தை சேதாரமில்லாமல் உப்ப வைக்க முனைகிறார். அதில் ஒன்றுதான் படேல் சிலை. இதில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக நிறுவிக் கொள்ளும் முயற்சியோடு படேலின் இந்துத்துவ சார்பையும் சங்க பரிவாரங்கள் பயன்படுத்திக் கொள்ளும். மோடிக்கு உலகில் மிக உயர்ந்த ‘சிலை’ நிறுவிய தலைவர் எனும் புகழ். அதற்கு நமது பணம் மூவாயிரம் கோடியை எடுத்துக் கொள்கிறார்கள்.  இறுதியில் மோடியின் நோக்கமும், மோடியை முன்னிறுத்திய முதலாளிகளின் நோக்கமும் இதுதானே?

– இசையவன்

நீங்க 10 பெண்கள் டாஸ்மாக்கை மூட முடியுமா ?

7

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்துமூடு பெண்கள் விடுதலை முன்னணியின் தொடர் பிரச்சார இயக்கம்

  • குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும்
  • லட்சக்கணக்கான மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்
  • எதிர்கால சந்ததிகள் குடிவெறிக்கு பலியாவதை தடுக்க வேண்டும்

என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 மாதமாக பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி நகரம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. வேன் பிரச்சாரம், வீதி நாடகம், ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரசுரம் வழங்குதல், கடைவீதி, பேருந்து, குடியிருப்பு, பெண்கள் பணி புரியும் இடங்கள் என பல்வேறு பகுதியிலும் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

கையெழுத்து இயக்கம்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் கூடும் பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிகள், கல்லூரிகள், ஆட்டோ நிறுத்தங்கள் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் சீர்கேட்டை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தரப்பிலான மக்களை சந்திக்க முடிந்தது. பெண்கள், ஆண்கள் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கையெழுத்திட்டனர்.

சிலர் விவாதமும் செய்தனர்.

“ஏம்மா நீங்க 10 பேர் சேர்ந்து அரசாங்கத்தை முறியடிக்க முடியுமா? இது ஆகிற கதையா? வேறு ஏதாவது வேலையை பாருங்க” என சலித்து கொண்டனர்.

“வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்க வேண்டும் என அரசு முடிவு செய்து IAS , IPS ஆகிய மேதாவிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறது. இதனை முறியடிக்க ஊருக்கு 10 நபராவது சேர்ந்து தட்டி கேட்க வேண்டாமா? நமக்கு ஏன் வம்பு, நம்மால் முடியுமா என ஒவ்வொருவரும் விலகி சென்றால் இந்த கொடுமையை யார் தான்” கேட்பது என பதிலளித்ததும் பலரும் கையெழுத்திட்டனர்.

“இந்த சாராய கடையை மூடிட்டா அப்புறம் கஞ்சா, கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும். அப்ப என்ன செய்வீங்க” என்றார் இன்னொரு நபர். (அவர் பாக்கெட்டில் அம்மா படம் பல் இளித்துக் கொண்டிருந்து)

“அடுத்தவன் குடி கெடுப்பான் என தெரிந்தும் அதனை முறியடிக்க முயற்சிக்காமல் தன் குடியை தானே கெடுக்க நினைப்பது புத்திசாலித்தனமாகுமா?” என வினவியதும் பதிலாளிக்காமல் அவசரமாக பேருந்தை பிடிக்க ஓடினார்.

அரசு பேருந்து நடத்துனர் “ஐயோ, டாஸ்மாக் எங்க குலதெய்வம், இதனை மூட நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார்.

“வருங்கால சந்ததிகளும் இந்த சாராயத்தால அழியணுமா?” என்றதும் “கூடாதம்மா, பிள்ளைங்க குடிக்க கூடாது” என கையெழுத்திட்டார்.

“எங்களையே குடிமகன்கள் என்று விளம்பரம் செய்து விட்டு, எங்களிடமே கையெழுத்து கேட்கிறீங்களா” என ஆவேசப்பட்டார் ஒரு குடிமகன்.

“இல்ல சார், நாம எல்லாருமே இந்த நாட்டின் குடிமக்கள் தான், நமது குடியை கெடுக்கும் இந்த அரசுக்கு எதிராக தான் போராடுகிறோம்” என்றதும் அவரும் சிரித்தபடியே கையெழுத்திட்டார்.

மக்களிடம் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளது. தனது குடும்பம் சீரழிவதும், தமிழகம் முழுவதும் தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை பார்க்கும் போதும் வேதனைக்குள்ளாகின்றனர். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த அரசு உள்ளதே என ஆதங்கப்படுகின்றனர்.

செவிடன் காதில் சங்கு ஊதினால் மட்டும் போதாது தேவைப்பட்டால் அரசின் செவுள் கிழியும் வரை அறைய வேண்டும் என உணரும் போது இந்த அரசை பணிய வைக்க முடியும் என்பதை மக்களிடம் உணர்த்துவது நம்முடைய முக்கிய பணியாக உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மாவட்ட ஆட்சியரிடம், மக்களிடம் பெற்ற 2000 கையெழுத்து அடங்கிய மனு பண்டல்களை கொடுப்பது என முடிவு செய்து 27.10.14 அன்று பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி நடத்தப்பட்டது. அலுவலக வாயிலை அடைந்ததுமே பாதுகாப்பிற்க்கு நின்றிருந்த போலீசார் “குடிகெடுக்கும் அரசுக்கு எதிராக போராடுவோம்!, டாஸ்மாக்கை இழுத்து முடுவோம்! என முழக்கம் போடுறாங்க சார், ஒரு 30 பெண்கள் இருக்காங்க, குழந்தைகளும், சிறுவர்களும் கோசம் போடுறாங்க, என்ன சார் பண்றது?” என செல்போனில் தனது மேலதிகாரிகளுக்கு ரன்னிங் கமன்ட்ரியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்.

மேலதிகாரிகளிடம் பெற்ற ஆலோசனையின் பேரில் நம்மிடம் “பேனரை மறைங்க , முழக்கம் போடாதீங்க , ஊர்வலமாக வராதீங்க” என உத்தரவுகள் போட ஆரம்பித்தனர். நீண்ட நேர பேச்சுவார்தைக்கு பின் 5 தோழர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு பண்டல்களை ஒப்படைக்க முயன்றபோது அருகில் இருந்த டாஸ்மாக் அதிகாரி, “உங்கள் கோரிக்கை திருச்சியில் மட்டுமா?” என்றார். “தமிழகம் முழுக்க டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும்” என்றோம்.

“இத்தோடு உங்கள் போராட்டம் முடிந்ததா?” என்றார் ஆட்சியர்.

“நீங்கள் எடுக்கிற நடவடிக்கையை பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்” என்றோம்.

“அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” என மனுக்களை பெற்று கொண்டார்.

இது முடிவல்ல என்பது நமக்கு தெரியும். மக்கள் வீதியில் இறங்கி போராடும் போது தான் டாஸ்மாக்கை ஒழிப்பது சாத்தியம் என்பதும் நமக்கு புரியும். மக்களிடம் இத்தகைய பிரச்சாரத்தை கொண்டு செல்வது, அரசினை எதிர்த்து போராடுவது, போராட்டத்தின் மூலம் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவது என்ற அடிப்படையில் தான் நாம் இந்த இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த இயக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக மரத்தடியில் அமர்ந்து ஆலோசிக்கப்பட்டது. வர கூடிய காலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளை திட்டமிட்டு வருகிறோம்.

குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரைதான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும் நமது குடிகெடுப்பதே இந்த அரசு என்பதை உணரும் போது உன் வாழ்க்கை வசப்படும்! என்ற நமது டாஸ்மாக் எதிர்ப்பு இயக்க முழக்கமானது மக்கள் முழக்கமாக மாறும் போது இந்த டாஸ்மாக்கை மட்டுமல்ல குடிகெடுக்கும் அரசையும் வீழ்த்த முடியும்.

செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி,திருச்சி.
தொடர்புக்கு: 9750374810.

அம்மா மாதாவை பெரியாரோடு ஒப்பிடுவது தர்மமா இந்துவே ?

5

மிழக மக்களின் கண்ணீர் உச்சநீதிமன்றத்தால் துடைக்கப்பட்டு ஆண்டவனின் ஆனந்தக்கண்ணீர் மழையாக பொழிந்த ஒரு நாளில் அந்தக் கட்டுரை இந்து தமிழில் (தி இந்து – ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?) வெளியானது. காய்கறிகளோடு கருவாடு விற்பதைக்கூட சகித்துக்கொள்ளாத இந்துவா இப்படி செய்தது? தன் அலுவலகத்தில் சைவம் சாப்பிடுவோர் அசைவம் சாப்பிடுவோரைக் கண்டு மனம் கோணக்கூடாது (அல்லது மனம் மாறிவிடக்கூடாது) என தர்மத்தின் வழி நின்று சிந்தித்த இந்துவா இது? தங்கள் கம்பெனி ஓனரையும் அதிகாரிகளையும் விரட்டி விரட்டி கைது செய்ய முயன்றவர் என்றாலும் ஜெயாவை அம்பலப்படுத்தாமல் அமைதிகாத்த இந்துவா இது என தேசபக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?
மனின் தலையில் பிறந்தோரால் நடத்தப்படும் இந்துவா இப்படி செய்வது? ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என சொல்ல இவர்களுக்கு எப்படி மனது வந்தது?

நீசர்கள் கூடித்திரியும் பேஸ்புக்கில் இது எழுதப்பட்டிருந்தால்கூட சகித்துக்கொள்ளலாம். பிரம்மனின் தலையில் பிறந்தோரால் நடத்தப்படும் இந்துவா இப்படி செய்வது? ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என சொல்ல இவர்களுக்கு எப்படி மனது வந்தது? சாம்பலை கௌரவிக்க வேண்டுமானால் அதை விபூதி என்று சொல்லித்தான்தான் புனிதப்படுத்த வேண்டும், அதைவிட்டுவிட்டு ஆன்டிபயாடிக் என்று சொன்னால் விவரமானவன் யாராவது அதை சாம்பல் என்று நிரூபித்துவிடமாட்டானா? ஜெயலலிதாவை ஆதரிக்கவும் பெரியாரை அவமானப்படுத்தவும்தான் தினமலர் எனும் பத்திரிகையே செயல்படுகிறது. அவர்கள் இப்படியா நடந்துகொள்கிறார்கள்!!!

வாஸ்து, ஜோதிட, ஜாதக, பெயர்மாற்ற நிபுணர்களை கௌரவித்து வாழ்வளித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் அவர் சுற்றத்தாரும் எங்கே, வேறு வேலையே தெரியாத இந்த அப்பாவி நிபுணர்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளை பரப்பிய பெரியார் எங்கே… இந்த இருவரையுமா ஒப்பிடுவது??

தனக்காக ”செத்தவர்கள்” இருநூற்று சொச்சம்பேருக்கு தலா 3 லட்சம் கொடுத்த வள்ளல் ஜெயலலிதாவை ஒவ்வொரு காசுக்கும் கணக்கு பார்த்து வெட்டித்தனமாக கல்லூரிகள் கட்டிய கருமி பெரியாரோடா ஒப்பிடுவது?

தன் அரசியல் விரோதிகளை சட்டசபையிலேயே தரம் தாழ்ந்து விமர்சிக்கவைக்கும் ஜெயாவின் வீரத்தில் கால்பாகமேனும் பெரியாருக்கு இருந்திருக்குமா? பத்து வயது பையனைக்கூட வா போ என ஒருமையில் கூப்பிடும் தைரியமற்றவரல்லவா பெரியார்!!

பத்து நிமிடம் தன்னைப் பற்றிய துதிபாடலை கேட்கும் பொறுமை இருந்திருக்கிறதா பெரியாருக்கு? ஆனால் பக்கம் பக்கமாக தன்னை புகழ்ந்துரைத்தாலும் அதனை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளும் பொறுமையும் பக்குவமும் ஜெயலலிதாவுக்குத்தானே உண்டு?

ஊரே பஞ்சத்தில் இருந்தாலும் சர்வ அலங்காரத்தோடு காட்சி தந்தவர்கள் நம் இந்து தெய்வங்கள். திரண்ட சொத்துக்கள் இருந்தபோதிலும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணித்த பாமரர் பெரியார். ஒரு கல்யாணம் காதுகுத்துக்குக்கூட தனி விமானத்தில் வந்துபோகும் ஜெயலலிதாவை கடவுளோடு ஒப்பிடாமல் கடவுள் இல்லையென சொன்ன பெரியாரோடு ஒப்பிட்டது நியாயமா.. பதில் சொல் இந்து பதில்சொல்!!!

ஜெயா அமைச்சர்கள்
காலில் விழுவதும் கால்மேல் கால் போடாமல் இருப்பதுமே இந்துப் பண்பாட்டின் பிரதான விதிகள்

செலவு செய்ய வக்கில்லாவிட்டாலும் ஆடம்பரமாக கல்யாணம் செய்துகொள்ள விரும்பிய பெருமாளுக்கு காசை அள்ளி இறைத்தவன் குபேரன். வாழ்நாளில் வேலையென்று ஒன்றை செய்திராத சுதாகரனின் ஆடம்பரத் திருமண ஆசையை நிறைவேற்றிவைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயாவை குபேரனோடு ஒப்பிடாமல் தாலிகூட இல்லாமல் கஞ்சத்தனமாக கல்யாணம் பண்ணிக்கொள்ள சொன்ன பெரியாரோடு ஒப்பிடுவது என்ன நியாயம் இந்துவே?

எதிர்த்துப் பேசிய நக்கீரனுக்கு குஷ்டம் வரவைத்தான் சிவன். வழியை மறித்தான் என்பதற்காக மனைவியின் மகனான பிள்ளையாரின் தலையை வெட்டினான் சிவன். அந்த அதிகார மனம்தான் அவன் பக்தர்களை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தன்னுடைய பத்திரிகையிலேயே தனக்கு ஏற்பில்லாத கருத்துக்களை அனுமதித்த தலைமைப் பண்பில்லாதவர் பெரியார். தன்னைக் கேள்வி கேட்கும் பக்தன் ஒருவன்கூட இல்லாத கூட்டத்தின் தலைவர் ஜெயா. அந்தவகையில் சிவனைவிட மேலானவர் ஜெயலலிதா. அவரையா மானிடனான பெரியாரோடு ஒப்பிடுவது?

நாட்டு மக்களிடம் வரிமேல் வரிபோட்டு சுரண்டினாலும், தன்னை துதிபாடி வயிறு வளர்க்கும் புலவர் பெருமக்களுக்கு வாரி வாரி வழங்கியவர்கள் இந்தியாவின் பேரரசர்கள். நம்பிய கோடானுகோடி மக்களை நாதியற்றுப்போகவிட்டாலும்கூட தன் கோயிலில் மணியாட்டியவனையும் தன்னை புகழ்ந்து போற்றியவர்களையும் கௌரவிக்கத் தவறாதவர்கள் நம் தெய்வங்கள். பெரியாரோ துதிபாடுதல் எனும் கலையையே ஒழித்துக்கட்டப் பார்த்தவர். தன் துதிபாடிகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொள்ளும் ஜெயலலிதாவை பெரியாரோடு ஒப்பிட கல்நெஞ்சக்காரனாலும் இயலாதே??

காலில் விழுவதும் கால்மேல் கால் போடாமல் இருப்பதுமே இந்துப் பண்பாட்டின் பிரதான விதிகள். அந்த விதிகளை மீட்டெடுத்து காத்தருள்பவர் ஜெயா. பெரியாரோ இத்தகைய ஹிந்துப் பண்பாட்டினை முழுமூச்சோடு எதிர்த்தவர். ஒரு பண்பாட்டுக் காவலரை கலாச்சார விரோதியோடு ஒப்பிடுவது பண்புள்ளவர்கள் செய்யும் காரியமா?

ஜெயா ஸ்ரீரங்கத்தில்
“விதிகளை காற்புள்ளி அரைப் புள்ளிகூட மாறாமல் பின்பற்றும் ஜெயாவை இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத பெரியாரோடு ஒப்பிட்டு எங்கள் மனங்களை புண்படுத்தாதே இந்துவே”

கிருஷ்ண பரமாத்மா பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டபோது சேலை மட்டும்தான் கொடுத்தான். அந்த சம்பவத்தை தடுக்கவும் இல்லை, தடுக்கும் ஆற்றலை சபையோர் யாருக்கும் அருளவும் இல்லை. அந்த தெய்வாம்சத்தின் நீட்சிதான் அம்மா. இருளர் இனப்பெண்கள் போலீசாரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டபோது அவர் 5 லட்சத்தை அள்ளி வழங்கினார், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் விதிக்கிணங்கி அந்த போலீஸ்காரர்களை கைதுகூட செய்யவில்லை. இன்றைக்கு ஷிபான் சேலை மீட்டர் முப்பது ரூபாய்க்குகூட கிடைக்கிறது. ஆகவே இன்றைக்கு யார் நினைத்தாலும் கிருஷ்ண பரமாத்மாவாகிவிட முடியும். ஆனால் யார் நினைத்தாலும் 5 லட்சம் கொடுக்கும் அம்மாவாகிவிடமுடியாது. ஆகவே ஜெயலலிதாவோடு ஒப்பிடும் தகுதியை கிருஷ்ணனுக்கு வேண்டுமானால் கொடுக்கலாமேயன்றி பெரியாருக்கு ஒருக்காலும் தரமுடியாது.

ஊர் மக்களில் பெரும்பாலானவர்கள் குடிசையில் இருந்தாலும் சகல சௌகர்யத்தோடு பெருங்கோயில்களில் வசிப்பதே இந்துக் கடவுள்களின் லட்சணம். பல்லக்கில்லாமல் அவர்கள் எப்போதும் பயணிப்பதில்லை. அவர்கள் யாரை தண்டிப்பார்கள் யாருக்கு பதவி கொடுப்பார்கள் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. எல்லோரும் என் காலடியில் வீழ்ந்துகிடந்து வாய்ப்புக்காக மன்றாடியபடி இருங்கள் என்பதே அவர்களது தர்மம். அவர்கள் எப்போதும் சாமானிய மக்களை தங்களிடமிருந்து தள்ளியே வைத்திருப்பார்கள்.

அவர்கள் பூஜையை விரும்புபவர்கள், விவாதத்தை அல்ல. அவர்கள் நியாயத்தைப் பேசுபவர்கள் அல்லர், மாறாக அவர்கள் பேசுவதே நியாயமென கொள்ளப்படும். தனக்காக அடுத்தவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதையும், ஊனமாக்கிக் கொள்வதையும், மொட்டையடிப்பதையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள் கடவுளர்கள்தான். இந்த விதிகளை காற்புள்ளி அரைப் புள்ளிகூட மாறாமல் பின்பற்றும் ஜெயாவை இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத பெரியாரோடு ஒப்பிட்டு எங்கள் மனங்களை புண்படுத்தாதே இந்துவே என கடுமையாக எச்சரிக்கிறோம்.

இங்ஙனம்,

நாமக்காரவா அசோசியேஷன்.
அசைவ துவேஷ பஜனா மண்டலி.
லெட்டர் டு எடிட்டர் சேவா சங்.
தராதரப் பிரச்சார சபா.
பிரம்ம ஜீவ தர்ம சன்சாத் டிரஸ்ட்.
மீடியா பார்ட்னர் : மேன்மக்கள்மேன்மக்களே.நெட்

– இசையவன்

மீரட் லவ் ஜிகாத் சதி – ஆர்.எஸ்.எஸ்-இன் அண்டப்புளுகு !

3

டந்த ஆகஸ்ட் 3-ம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் நகருக்குட்பட்ட சாராவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகார் ஒன்று மாபெரும் சூறாவளியை துவக்கியது. இதை அந்தப் பெண்ணே எதிர்பார்த்திருக்க மாட்டார். இருபது வயதே நிரம்பிய இளங்கலை மாணவியான அவர், தற்காலிக பணியாக தனது கிராமத்திலிருந்த மதரசாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

லவ் ஜிகாத்ஜூலை 23-ம் தேதி திடீரென்று தனது வீட்டை விட்டு வெளியேறி மாயமான அந்தப் பெண் நான்கு நாட்கள் கழித்து வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அடையாளத்துடன் வீடு திரும்பினார். இது  குறித்து வீட்டார் விசாரித்த போது, தான் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா சென்றதாகவும், சென்ற இடத்தில் வயிற்று வலி ஏற்பட்டு அப்பெண்டிசைடிஸ் (குடல்வால்) பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஜூலை 29-ம் தேதி அந்தப் பெண் ‘மாயமான’தாகச் சொல்லும் அவளது குடும்பத்தார், ஆகஸ்ட் 3-ம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார்கள். அதில் அந்த பெண்ணே, தான் சாராவா கிராம மதரஸாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததாகவும், முசுலீம்கள் சிலர் தன்னைக் கடத்தி கூட்டு வல்லுறவு செய்ததாகவும், கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டு வல்லுறவால் தான் கருவுற்றதாகவும், அந்தக் கருவைக் கலைப்பதற்கே அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வடநாட்டு ஊடகங்களால் “மீரட் பெண்” என்று குறிப்பிடப்படும் அந்தப் பெண் காவல் துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சொல்லி வைத்தாற் போல் இந்து இயக்கங்கள் ‘கொந்தளித்து’ எழுந்தன. இசுலாமியர்கள் இந்துப் பெண்களின் மேல் தொடுத்துள்ள ’லவ் ஜிஹாத்’ போரின் ஒரு அங்கமாக இந்த சம்பவத்தை சித்தரித்த காவி கும்பல், உடனடியாக இந்த விவகாரத்தை முன்வைத்து மாநில அளவில் பல போராட்டங்களைத் துவக்கியது.

நடந்து முடிந்த உத்திரபிரதேச இடைத்தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதாவின் மாநில பொறுப்பாளர் யோகி ஆதித்யநாத், “இசுலாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு இந்துப் பெண்ணுக்கும் பதிலாக நூறு இசுலாமிய பெண்களைத் தூக்கி வந்து இந்துக்களாக மதம் மாற்ற வேண்டும்” என்று மதவெறியைக் கக்கியுள்ளார்.

இதற்காகவே காத்திருந்ததைப் போல் ஆர்.எஸ்.எஸ் சார்பில் “இந்து சகோதரிகள், மகள்கள் பாதுகாப்பு இயக்கம்” (Hindu Behen Betti bachao Andholan) “மீரட் பாதுகாப்பு இயக்கம்” (Meerut Bachao Manch) போன்ற புதிய பரிவார திடீர் அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. இந்த அமைப்புகளின் சார்பில் இந்து பெண்களை முசுலீம் காம கொடூரர்களிடம் இருந்து காப்பாற்றக் கோரி துண்டுப் பிரசுரங்கள் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பாஜக மகிளா மோர்ச்சா
‘லவ் ஜிகாத்’ – பாஜக மகிளா மோர்ச்சா ஆர்ப்பாட்டம்

சர்வதேசிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் இந்துப் பெண்களை முசுலீம் இளைஞர்களைக் கொண்டு மயக்கி காதலித்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இந்துத்துவ கும்பல் வட இந்தியா முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்து பார்ப்பன பெண்ணை காதலித்து மயக்க இரண்டு லட்ச ரூபாய்களும், இந்து ரஜபுத்திர அல்லது சத்ரிய பெண்களை காதலித்து மயக்க ஒரு லட்ச ருபாய்களும் இசுலாமிய இளைஞர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் சம்பளமாக கொடுப்பதாக காவிக் கும்பல் குற்றம்சாட்டியது. அதிலும் தலித்துக்களுக்கு இடமில்லை போலும். தலித்துக்கள் இந்துக்கள் இல்லை என்று இந்துமதவெறியர்கள் நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

வட இந்திய ஊடகங்கள் தங்கள் பங்குக்கு ’மீரட் கூட்டு வல்லுறவு” தாக்குதல் பற்றிய தங்களது புலனாய்வு முடிவுகளை வெளியிடத்துவங்கின. மீரட் பெண்ணின் சிறுநீரகத்தை மதரஸாவில் வைத்து அறுத்து எடுத்து விற்று விட்டனர் என்பதில் துவங்கி, எத்தனை முசுலீம்கள் எத்தனை முறை எத்தனை நாட்கள் வல்லுறவு செய்தனர் என்பது வரை விதவிதமான கட்டுரைகளை எழுதி திரைக்கதையில் பல்வேறு “திகிலூட்டும்” திருப்பங்களைச் சேர்த்து வந்தனர்.

காவி கும்பல் போட்ட பிரச்சாரக் கூச்சல் ஒரு பக்கமும் ஊடகங்களின் ‘புலனாய்வுகள்’ இன்னொரு பக்கமும் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் போதே இவ்விவகாரத்தின் உண்மை மெல்ல மெல்ல வெளியாகத் துவங்கியது. மீரட் பெண்ணின் சார்பாக அவளது குடும்பத்தார் அளித்த புகாரில் ஜூலை மாதம் 23-ம் தேதி தங்கள் பெண் இசுலாமியர்களால் கடத்தப்பட்டதாகவும் அதே நாளில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் புகாரைப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு நடந்த போது அவள் ஒன்றரை மாத கர்ப்பவதியாக இருந்தது தெரியவந்தது. உடனே புகாரை மாற்றிக் கொண்ட பெண்ணின் குடும்பத்தார், அவள் ஜூன் 29-ம் தேதி வல்லுறவு செய்யப்பட்டாள் என்பதாக திருத்திக் கொண்டனர்.

மௌல்வி அமீருதீன்
சாரவா கிராமத்தின் மதரசா சுல்தானியாவில் – மௌல்வி அமீருதீன்

மேலும் முதலில் அளித்த புகாரில் வல்லுறவு செய்த கும்பலைச் சேர்ந்தவர்களாக சாராவா கிராமத் தலைவர் (சர்பன்ச்) நவாப், மற்றும் உள்ளூர் மதபோதகர் சனாவுல்லா ( விவசாயியான இவருக்கும் மதபோதனைக்கும் சம்பந்தமேயில்லை என்பது காவல்துறையின் விசாரணையில் பின்னர் தெரியவந்தது) மற்றும் இவர்களோடு பெயர் தெரியாத நான்கு பேர்களையும் தங்கள் புகாரில் அப்பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர். இதனடிப்படையில் நவாப் மற்றும் சனாவுல்லா ஆகிய இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஒன்பது பேரும் படிப்படியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே மீரட் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்தபடி முசாஃபர் நகர மருத்துவமனையில் கருக்கலைப்பு நடைபெறவில்லை என்பதையும் மீரட் நகர அரசு மருத்துவமனையில் நடந்துள்ளதையும் போலீசு விசாரணை உறுதிப்படுத்தியது. மேலும், மீரட் பெண்ணின் குடுமபத்தார் அளித்த புகாரில் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு இளைஞர்கள் (ஒரு முசுலீம் மற்றும் ஒரு இந்து) துணையோடு அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்ததையும், அவளுடன் சென்ற கலீம் என்கிற முசுலீம் இளைஞன் அப்பெண்ணின் கணவனாக மருத்துவமனைப் பதிவேடுகளில் பதிவு செய்திருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க அதன் விளைவாக ’மீரட் பெண்ணின்’ குடும்பத்தார் அளித்த புகாரில் இருந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் விசாரணைகளின் முடிவுகள் பற்றி அலட்டிக் கொள்ளாத இந்துத்துவ குண்டர்படை, முசுலீம்கள் இந்துப் பெண்களைக் கடத்திச் செல்வதற்கு முலாயமின் போலீசு உதவி செய்வதாக இடைத்தேர்தலை முன்வைத்து மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சூழலில் முதல் தகவலறிக்கையை பதிவு செய்யும் போலீசு அதில் கலீமின் பெயரையும் இணைத்து அவரையும் கைது செய்தது.

மாநில இடைத்தேர்தல் காலத்தில் காவி கும்பல் செயற்கையாக ”லவ் ஜிஹாத்” விவகாரத்தை கொளுத்திப் போட்டு குளிர் காயத் துவங்கியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக இந்துப் பெண்களுக்கு ராக்கி கட்டி ‘இசுலாமிய ஆணழகர்களிடம் மயங்கிவிடாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளும் கேலிக்கூத்தான இயக்கம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. சூழலின் இறுக்கம் மீரட் பெண்ணின் உயிருக்கு ஆபத்து எதையும் விளைவித்து விடக்கூடாது என்பதால் அவரது வீடு கடுமையான போலீசு கண்காணிப்பிற்கும் காவலுக்கும் உட்படுத்தப்படுகிறது.

இந்த சூழலில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் காவி கும்பல் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான முடிவுகள் வெளியாகி – மொத்தமாக கவிழ்த்துப் போட்டது. அக்டோபர் மாத துவக்கத்தில் மீரட் பெண்ணின் குடும்பத்தார் தங்களுக்கு போலீசு காவல் தேவையில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் காவல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

லவ் ஜிகாத் பாதிக்கப்பட்டவர்
காவி கும்பலின் பொய் பிரச்சாரத்தால் கைது செய்யப்பட்ட சாரவா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளில் ஒருவரின் தந்தை

இந்தச் சூழலில் அக்டோபர் 12-ம் தேதி தனது வீட்டிலிருந்து தப்பும் மீரட் பெண் மாஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் ஒன்றை அளிக்கிறார். முன்பு கொடுத்த புகாரின் படி யாரும் தன்னை வல்லுறவு செய்யவில்லை என்றும், தன்னை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார் மீரட் பெண். மேலும், தான் கலீம் என்கிற முசுலீம் இளைஞரை காதலித்ததாகவும், அவர் மூலமாகவே கருவுற்றதாகவும், தாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த சூழலில் கர்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டதாலேயே அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜூலை மாத இறுதியில் இருந்து தனது குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்ததாகவும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அகர்வால் என்பவர் தனது குடும்பத்திற்கு சுமார் 25,000 ரூபாய் கொடுத்ததன் பேரிலேயே அவர்கள் தனது காதலை எதிர்த்ததோடு தன் பெயரில் பொய் புகாரை அளித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தின் பிடியில் இருந்த சமயத்தில் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்ததால் தன்னை கவுரவக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாகவும் அதற்காகவே போலீசு காவலை நீக்கிக் கொள்ள கோரியதாகவும், தனது பாதுகாப்பின் பொருட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீரட் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட மாஜிஸ்டிரேட், அந்தப் பெண்ணின் கோரிக்கையின் பேரில் அரசு பெண்கள் காப்பகம் ஒன்றில் தற்போது தங்கவைத்துள்ளது.

காவி கும்பலின் திரைக்கதை ஒட்டு மொத்தமாக நொறுங்கி விழுந்துள்ள நிலையில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக தற்போது தாம் பணம் கொடுத்ததை மறுக்க முடியாத நிலையில் அக்குடும்பத்திற்கு ”நல்லெண்ணத்தின் பேரில், ஒரு உதவியாகவே” அந்தப் பணத்தைக் கொடுத்ததாக அசடு வழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே அல்ஜசீரா நிருபர் நேகா தீக்சித் அப்பெண்ணைச் சந்தித்துள்ளார்.

மீரட் லவ் ஜிகாத்”பாருங்க என்னோட வாழ்க்கை முடிந்து விட்டது. இனி நான் எங்கே வாழ்ந்தாலும் இந்த மொத்த சம்பவங்களும் என்னைத் துரத்தும். அவர்கள் எனது உடலும் கருப்பையும் அசுத்தமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நான் கலீமோடு பேச வேண்டும், அவனுக்கு என்ன விருப்பமென்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்க யாரோடயாவது காதலில் இருந்தால் உங்களுக்கும் பாதி பொறுப்பு இருக்கு தானே? நாங்கள் தப்பு செய்திருந்தால் நாங்கள் இரண்டு பேருமே தண்டிக்கப் பட வேண்டும். ஒன்றுமில்லாத விசயத்திற்காக அவன் மட்டும் வாழ்க்கை முழுவதும் துன்பப் பட நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?” என்று தெரிவித்த மீரட் பெண், ”நான் வீட்டை விட்டு வெளியேறி போலீசிடம் போகாதிருந்தால் அவர்கள் என்னைக் கொன்றிருப்பார்கள்” என்று வீட்டாரின் கவுரவக் கொலைத் திட்டத்தை அம்பலப்படுத்துகிறாள்.

மேலும் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் தனது முடிவிலும் அவள் உறுதியாகவே இருக்கிறாள் “ஆமாம் நான் அவனைத் திருமணம் செய்து கொள்வேன். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அவனுக்கு நான் கல்யாணத்திற்குப் பின் இந்துவாக தொடர்வதிலோ கோவிலுக்குப் போவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. யாருடைய மதம் தப்பு? யாருடையதும் இல்லை. நாம் தான் மக்களை இந்துக்கள் என்றும் முசுலீம்கள் என்றும் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் நாம் எல்லோருமே ஒன்று தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த இருபது வயது பெண்ணின் எளிமையான வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாய் அமைந்தது தற்செயலானதல்ல. எளிய உழைக்கும் மக்கள் சில சமயங்களில் இந்துத்துவ பிரச்சாரங்களில் மயங்கினாலும், இறுதியில் அவர்களின் மனித தன்மையே வெல்கிறது. அவர்கள் தம்மியல்பில் இந்து மதவெறி பயங்கரவாத கும்பலின் நோக்கங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

ஆனால், படித்த அதிகாரவர்க்கம்?

மூத்த காவல்துறை அதிகாரிகளின் இந்துத்துவ சாய்வு
மூத்த காவல்துறை அதிகாரிகளின் இந்துத்துவ சாய்வு (படம் : நன்றி thehindu.com)

யாகூ இணையதளத்தின் விவாதக் குழுமம் ஒன்றான டாப்காப் (TopCop) என்பது பணியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் இணைய விவாதக் குழு. மீரட் பெண் விவகாரத்தை தொடர்ந்து ”லவ் ஜிஹாத்” குறித்து நடந்த விவாதங்களில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலில் இந்து பயங்கரவாத வன்மத்தைக் கக்கி இருக்கிறார்கள்.

“ஒரு போக்கு என்கிற வகையில் லவ் ஜிஹாத் என்பது உண்மை தான். அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் குற்றம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் 2003-ம் ஆண்டுத் வகுப்பைச் சேர்ந்த அதிகாரி . வேறு ஒரு அதிகாரி லவ் ஜிஹாத் என்பதைக் கடந்து “செக்ஸ் ஜிஹாத்” என்பதைக் குறித்து பேசியிருக்கிறார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இசுலாமிய இளைஞர்கள் தீய உள்நோக்கத்தோடு இசுலாமல்லாதவர்களை காதலித்து மதம் மாற்ற யோசிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் அப்படி செய்தால் சொர்க்கத்தில் இடம் உண்டு என்பதை நம்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகார வர்க்க அடுக்கின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ அடிப்படைகளின் மீதே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு எதார்த்தம். அப்படியிருக்க, நச்சுப் பாம்பின் பல்லில் இருந்து பால் வடிவதற்கு வாய்ப்பில்லை. அதிகார வர்க்கம் தம் இயல்பிலேயே இந்துத்துவ பாசிசத்தின் நெருக்கமான பங்காளி என்பதை “சுதந்திர” இந்தியாவின் வரலாற்றில் பதிவாகியிருக்கும் எண்ணற்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தவே செய்கின்றன.

பார்ப்பனியச் சாதி அடுக்கை உத்திரவாதப்படுத்தும் மனுநீதி தான் இந்து-இந்தியாவின் இணைப்புக் கயிறு. இந்த விஷ விருட்சத்திலிருந்து நல்ல கனிகளை எதிர்பார்ப்பதே பேதமை. இயல்பாகவே சாதி மேலாதிக்க சிந்தனையும், இந்து பார்ப்பனிய மதவாத சிந்தனையும் கொண்டவர்களால் நிரம்பி வழியும் அதிகார பீடங்களுக்கு வந்து சேரும் சூத்திர பஞ்சமர்களும் கூட அங்கே நிலவும் பொது நீதிக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். விதிவிலக்குகள் ஓரிரண்டு இருக்கலாம், எனினும் விதிகள் வேறு! எனவே தான் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட திவ்யா இளவரசன் தம்பதியினர் சட்ட விரோதமாகவும் அறமற்ற முறையிலும் சாதி வெறியர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்டு திவ்யா அவளது பெற்றோருடன் செல்லும் படி நிர்பந்திக்கப்படுகிறாள் – அவ்வாறு செய்யப்படுவது தான் எதார்த்தமானதென்று இந்துப் பொதுப்புத்திக்குச் சென்று சேர்கிறது.

ஒரு குற்ற விசாரணை அமைப்பில் பணிபுரிகிறோம், எனவே பாரபட்சமற்ற முறையில் சம்பவங்களை அணுக வேண்டும் என்கிற தொழில் முறை கடப்பாட்டுக்கு உட்பட்ட அதிகார வர்க்கம் எந்த கூச்ச நாச்சமும் இன்றி பட்டவர்த்தனமாக இணைய விவாதங்களில் வன்மத்தைக் கக்குகிறது என்றால் காக்கி பேண்டுகளுக்கு உள்ளே இரகசியமாக ஒளிந்திருக்கும் காக்கி டவுசர்களின் உண்மையான எண்ணிக்கை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான இரகசிய காவிக் கோவணங்கள் தகுந்த சமயத்தில் வெளிப்படக் காத்துக் கிடக்கின்றன. அது திவ்யா இளவரசன் தம்பதியினரைப் போல் பார்ப்பன விதிமுறைகளுக்கு அடங்க மறுப்பவர்கள் ஆபத்துக் காலத்தில் காவல் நிலையத்தை நம்பிக்கையோடு நாடிச் செல்லும் சமயமாக கூட இருக்கலாம்.

பாஜக பெருந்தலைகள்
பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் காவி பெருந்தலைகள் – ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக

அதிகார வர்க்கத்தின் கூட்டு தமக்குச் சாதகமாக இருக்கும் திமிரில் தற்போது அம்பலப்பட்ட நிலையிலும் “லவ் ஜிஹாத்” என்கிற கற்பனையான குற்றச்சாட்டோடு வட இந்தியாவின் இந்தி பெல்ட் எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் காவிப் பொறுக்கிகள். வட மாநில இடைத்தேர்தலில் இந்தப் பிரச்சாரம் எடுபடாத காரணத்தால் தங்கள் முயற்சிகளை அவர்கள் கைவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை; ஏனெனில், சமூகம் மத அடிப்படையில் பிளவுபட்டுப் போவதிலேயே அவர்களது பாசிச அரசியலின் இருப்பும் எதிர்காலமும் தொக்கி நிற்பதால் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயல் வெறுமனே மத அடிப்படையிலான பயங்கரவாதம் மட்டுமில்லை. அது பெண்களின் அடிப்படை ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி.

’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பாபரி மசூதிக்கு மட்டுமல்ல, ஏமாந்தால் கருவறைக்கும் சொந்தம் கொண்டாடத் தயங்காதவர்கள் என்பதோடு தமது கோரிக்கையை நிலைநாட்ட எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயங்காத கொலை பாதகர்கள் என்பதை ‘இந்து’ப் பெண்கள் உணர வேண்டும். இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு என்பது எத்தகைய சதிகளோடும், மோசடிகளோடும் அரங்கேற்றப்படுகிறது என்பதை பொதுவான வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இந்த பொதுப்புத்திதான் ஆழ்மனதில் முசுலீம் மக்களை கட்டோடு வெறுப்பதை சாத்தியமாக்குகிறது.

இந்துக்களின் பாரம்பரியத்தை காப்பவர்கள் இந்து ஸ்த்ரீகளே என்று தேனொழுக பேசும் அதே ஆர்.எஸ்.எஸ் காவி பொறுக்கிகள் தான் பாரத மாதாவுக்கு சூடம் கொளுத்தி பூஜை செய்த கையோடு அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுத்த மாமாப் பயல்கள் என்கிற உண்மையை தம்மை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர் புரிந்து கொண்டு சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.

– தமிழரசன்.

மேலும் படிக்க