கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு மணல் சட்டவிரோதமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுரங்கத்துறை, காவல்துறை என அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும், உள்ளூர் முக்கியஸ்தர்களும் பல இலட்சங்கள் கொடுத்து வாயடைக்கப்பட்டது. எதிர்ப்பவர்களுக்கு சில ஆயிரங்கள் அல்லது காவல்துறையின் மிரட்டல்.
இச்சூழலில் கடந்த 2-12-2014 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையமும், வெள்ளாற்றுப் பகுதி கிராம மக்களும் இணைந்து மணல் குவாரியை மூடாமல் வீட்டுக்குச் செல்ல மாட்டோம் என உறுதியாக நின்று போராடியதால், மாவட்ட நிர்வாகம் பணிந்தது. வருவாய்க் கோட்டாட்சியர் விதிமுறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு கார்மாங்குடி மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.
அதுபோல் மணிமுத்தாறு பரவளூர் குவாரிக்கு சிவில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு உள்ள நிலையிலும் மணல் கொள்ளையர்கள் பல இலட்சங்களை சிலருக்கு இலஞ்சமாக கொடுத்து குவாரியை திறக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். பரவளூர் கிராம மக்களின் உறுதியான போராட்டத்தால் தற்காலிகமாக இயங்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய் முடங்கியுள்ளது.
நமது போராட்டத்தால் மணல் கொள்ளையர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் உச்சபட்ச ஆத்திரமடைந்துள்ளனர் என்பதை காவல்துறையின் செயல்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஆற்றில் கிடந்த கரும்புச் செத்தை எரிந்ததற்காக போராட்டத்தில் முன்னணியில் இருந்த கார்மாங்குடி இளைஞர் அறிவரசன் மீது பொய்புகார் பெறப்பட்டு அன்றைய மதியமே கைது செய்ய முயற்சித்தது காவல்துறை. மேலும், கரையில் இருந்த பாழடைந்த கொட்டகை எரிந்ததற்காக பள்ளிக்கே சென்று மாணவர்களை கைது செய்தது காவல்துறை. இதன் மூலம் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக போராடும் மக்களை அச்சுறுத்த நினைக்கிறது. கைது நடவடிக்கையை மனித உரிமை பாதுகாப்பு மையம் தலையிட்டு தடுத்து நிறுத்தியது.
மணல் குவாரியை சேர்ந்தவர்கள், முன்னணியாக போராடுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். பல இலட்சங்கள் தருகிறோம், ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க சாதிப்பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி என தெரிகிறது. ஆற்றுமணல் கொள்ளையன் யார் என்பது வெளியே தெரிய விடாமல் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு அனைத்து ஓட்டுக்கட்சி அரசியல் கட்சிகளும் உடந்தையாக உள்ளன. “கார்மாங்குடியோ, பரவளூரோ புதுக்கோட்டைக்காரர் குவாரி மேனேஜர் கார்த்திக்தான் அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்கிறார். காவல்துறையில் கார்த்திக் சொன்னால் உடனே நடக்கும்” எனச் சொல்கிறார்கள் மக்கள்.
“ஆற்றுமணலை அளவுக்கு அதிகமாக கொள்ளையடித்தால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்ட பூமியாகும். எதிர்கால சந்ததியினர் குடிநீருக்கு எங்கே செல்வார்கள்” என்று மக்களைப் பற்றி இந்த மண்ணைப் பற்றி கடுகளவும் கவலைப்படாமல் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகார வர்க்கத்தினரையும், அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடும் போதுதான் நம் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.
ஆற்று மணல் மட்டுமல்ல, அனைத்து கொள்ளைகளையும் ஒழித்துக் கட்ட மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுக்கூட்டத்தில் பலரும் விரிவாக பேச இருக்கின்றார்கள். இது வரை கண்டிராத புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது சமயம் தாங்கள் அனைவரும் குடும்பத்தோடு பொதுக்கூட்டத்திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தொடர்ந்து போராடுவதால் பணத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தங்களால் இயன்ற போராட்ட நிதியும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?
பொதுக்கூட்டம்
நேரம் : 15-12-2014 திங்கள், மாலை 4.30 மணி, இடம் : கருவேப்பிலங்குறிச்சி
தமிழக அரசே!
- வெள்ளாற்று கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு!
- போராடும் மக்களுக்கு எதிராக மணிமுத்தாறு பரவளூர் மணல் குவாரியைத் திறக்காதே!
- மக்களுக்கு சித்ரவதையாக உள்ள தேவங்குடி சாலையை சரி செய்யாத அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடு!
- கார்மாங்குடி மணல் குவாரியில் ரூ 100 கோடி மோசடி – காரணமான அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடு!
தலைமை
வழக்கறிஞர் R. புஷ்பதேவன், மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், விருதை
உரையாற்றுவோர்
S.R.ராஜவன்னியன், சி.கீரனூர் | M.G.P. பஞ்சமூர்த்தி, மருங்கூர் | K.S. செந்தில்குமார், சி.கீரனூர் |
L சசிக்குமார், மேலப்பானையூர் | முனைவர் க. சிவப்பிரகாசம், கார்மாங்குடி | P. ராஜகோபால், ஆசிரியர் ஓய்வு |
Er. A. அறிவரசன், கார்மாங்குடி | T.T. மாறன், தொழூர் | G. ஜெயவீரன், மேலப்பாளையூர் |
முனைவர் M. பன்னீர்செல்வம், கார்மாங்குடி | S.K.சிவக்குமார், சக்கரைமங்கலம் | T. இளங்கோவன், த.ஆசிரியர் ஓய்வு, கருவேப்பிலங்குறிச்சி |
N.A. முருகன், வல்லியம் | K.சுப்பிரமணியன், நேமம் | P.M.J. சதீஷ்குமார், தே பவழங்குடி |
K. சத்தியமூர்த்தி, காவனூர் | K.கண்ணன், பரவளூர் | J. நாகராஜன், பரவளூர் |
வழக்கறிஞர் S. வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம், மதுரை | வழக்கறிஞர் S.ஜிம்ராஜ் மில்டன், உயர்நீதிமன்றம், சென்னை | தோழர் லோகநாதன், மாநில து.செயலாளர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி |
வழக்கறிஞர் S.P. இராமச்சந்திரன், மா.செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி | வழக்கறிஞர் வே. பாலு, ஒருங்கிணைப்பாளர், பாலாற்று பாதுகாவலர் ஒருங்கிணைப்புக் குழு, வேலூர் | வழக்கறிஞர் S. செந்தில்குமார், மா.இணைச் செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் |
வழக்கறிஞர் S.செந்தில், மனித உரிமை பாதுகாப்பு மையம், மா.துணைச்செயலாளர், சிதம்பரம். | வழக்கறிஞர் G. அரசர் கண்டராதித்த சோழன், மருங்கூர் |
சிறப்புரை
தோழர். மருதையன்,பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம் |
வழக்கறிஞர் சி.ராஜூ,மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம் |
மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
நன்றியுரை : K செல்வக் குமார், செ.கு.உறுப்பினர், ம.உ.பா. மையம், விருதை
தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், – தமிழ்நாடு
கடலூர் 9842396929 சிதம்பரம் 98423 41583, விருதை 9360061121