Monday, May 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 623

மோடியின் துடைப்பக் கட்டை மறைக்கும் கார்ப்பரேட் கழிவுகள்

6
Clean-India-Mission
பொருளாதாரத்தை கிளீன் பண்ணி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் சதி!
Clean-India-Mission
பொருளாதாரத்தை கிளீன் பண்ணி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் சதி!

மொத்த இந்தியாவும் துடைப்பக் கட்டையும் கையுமாக தெருவில் இறங்கி விட்டதாக நம்மை நம்பச் சொல்கின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். காந்தி ஜெயந்தி அன்று தில்லியில் உரையாற்றிய மோடி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் (அதாவது 2019 காந்தி ஜெயந்தி நாளுக்குள்) இந்தியாவை மொத்தமாக துடைத்து சுத்தமாக்கி விடுவதே லட்சியம் என்று முழங்கியிருக்கிறார்.

மோடி வழக்கமான பிரதமர் இல்லை என்பதால், இந்த வேலையை வித்தியாசமான கோணத்திலிருந்து யோசித்திருக்கிறார். அதாவது, உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் பாரதமாதவுக்கு பொட்டு வைத்து பூவைத்து சிங்காரிக்கும் வேலையை தான் மட்டும் செய்தால் பத்தாது என்று சிந்தித்திருக்கிறார். இது அவரது கிச்சன் கேபினட் எழுதிக் கொடுத்த விளம்பரப் படம் என்றாலும் அவரது லட்சியத்தில் அதாவது விளம்பர படத்தில் மொத்த நாடும் பங்கேற்க வேண்டும் என்று வேறு விரும்பியிருக்கிறார். எப்படி பங்கேற்க வைப்பது?

தீவிர விளம்பர சிந்தனை காரணமாக இந்த லட்சியத்தை ’வைரல்’ ஆக்கும் யோசனை அவருக்குத் தோன்றியிருக்க கூடும். அதன்படி சச்சின் தெண்டுல்கர், அனில் அம்பானி, சஷி தரூர், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் தங்கள் துடைப்பக்கட்டை கடைமையை ஆற்றிவிட்டு தங்கள் நட்புப் பட்டியலில் உள்ள வேறு ஒன்பது பேருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது தான் சுத்தப்படுத்தும் தொடர் விளையாட்டின் விதி. மல்டிலெவல் மார்க்கெட்டில் அடிபட்ட வர்க்கம் அடியை மறந்திருந்தாலும் இந்த சங்கிலி தொடர்பை மறந்திருக்காது.

modi-broom
பூனைப்படை பாதுகாப்புடன் புதுத்தணி கலையாமல் போஸ்!

போகட்டும். தனது காந்தி ஜெயந்தி உரையை முடித்த கையோடு விளக்குமாறோடு நேராக தில்லி ராஜபாதையை அடுத்த வால்மீகி காலனி என்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் சேரிக்கு திக்விஜயம் செய்த மோடி, அங்கே தெருப்பெருக்குவது போல் புகைப்படம் எடுத்து தனது வலைத்தளத்தில் வெளியிட்டுக் கொண்டார். அசுத்தம் என்றாலே அது தலித்துகளின் சேரியில்தான் இருந்தாக வேண்டும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

இது ஒரு பக்கம் இருக்க, தனது தூய்மை இயக்கத்திற்கு முதல் கட்டமாக மோடி தெரிவு செய்த முகரைகளின் யோக்கியதையை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். விளையாட்டை கார்ப்பரேட்மயமாகவும், விளம்பரக்காடாகவும் விளையாட்டு வீரனின் உடலையே ப்ளெக்ஸ் பேனராகவும் மாற்றி விளையாட்டை மாசுபடுத்திய சச்சின் தெண்டுல்கர், சுற்றுச் சூழல் சீர்கேடுகள் விளைவித்தது தொடர்பாக சுமார் 77 வழக்குகளை சந்திக்கும் தரகு முதலாளியான அனில் அம்பானி, காங்கிபசின் மேட்டுக்குடி மைனர் சசிதரூர், பாக்கின் ஐஎஸ்ஐயை எதிர்த்து போராடும் புதிய இந்திய ஜேம்ஸ்பாண்டு கமல், பாலிவுட் பொறுக்கி சல்மான் கான், மக்களின் மூளையை மாசுபடுத்தும் பாபா ராம்தேவ் போன்ற கலங்’கறை’ விளக்குகள் தான் மோடியோடு சேர்ந்து நாட்டை சுத்தம் செய்யப் போகிறார்களாம்.

“அட எப்பம் பார்த்தாலும் உங்களுக்கு அந்தாளோட ஒரண்டை இழுக்கறதே பொழப்பா போச்சி.. வேணும்னா நீங்களே சொல்லுங்களேன் அவர் எங்கே போயி எதைத் தான் சுத்தம் செய்யட்டும்?” என்று அப்துல் கலாம், அண்ணா ஹசாரே வகையறாக்கள் சலித்துக் கொள்ளக் கூடும். அது அத்தனை நியாயமான சலிப்பு அல்ல.

smriti3
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி குப்பையில்லாத இடத்தில் பெருக்கி அவதிப்படுகிறார்!

ஏனெனில், ஒருவேளை மோடி வண்டியைக் கொஞ்சம் நேராக விட்டிருந்தால் அவர் தில்லியில் உள்ள சீலம்பூருக்குச் சென்றிருக்கக் கூடும். யோக்கியனாக இருந்தால் அங்கே தான் சென்றிருக்க வேண்டும் – ஆனால், அவர் செல்ல மாட்டார். ஏன் என்பதை பின்னர் பார்ப்போம். அதற்கு முன், ”சேரின்னாலே சுத்த கப்பு பாஸ். முதல்ல அங்க சுத்தம் பண்ணனும் இல்லேண்ணாக்க அவங்களை காலி பண்ணனும் பாஸ்” என்று சடைந்து கொள்வோர் சீலம்பூரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வடகிழக்கு தில்லியில் அமைந்துள்ள சீலம்பூரில் தான் மாபெரும் மின்னணுக் குப்பைத் தொட்டிகள் அமைந்துள்ளன. இந்தியாவெங்கும் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் கனிணிகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தில்லியை வந்தடைகின்றன. தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய கள ஆய்வு ஒன்றின் படி, 2007-ம் ஆண்டு வாக்கில் தில்லியில் மட்டும் சுமார் 11594 டன் அளவாக இருந்த மின்னணுக் கழிவுகளின் அளவு, தற்போது 30,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் நாடெங்கிலும் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் சேர்வதாகவும் இவையனைத்தும் தில்லிக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அசோசெம்மின் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் தெரிவிக்கிறது என்.டி.டிவி. இது தவிர உலகெங்கும் இருந்து மின்னணுக் கழிவுகள் தில்லிக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறன.

மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பிரம்மாண்டமான இந்த தொழில் ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறதே – அதாவது, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இதில் பங்கு கிடைக்கவில்லையே என்கிற கவலையில் இருந்து தான் அசோசெம் மேற்படி அறிக்கையை முன்வைத்துள்ளது என்பது இந்த பதிவுக்குத் தொடர்பில்லாத, ஆனால் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய உபதகவல்.

uma bharathi
உமா பாரதி மேடையில் மட்டுமல்ல, தெருவிலும் சண்டை போடுவார்!

இவ்வாறாக சீலம்பூர் வந்து சேரும் மின்னணுக் கழிவுகளை தரம் பிரித்து, உடைத்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்தியவற்றைத் தவிர எஞ்சிய கழிவுகள் அப்படியே எரிக்கப்படுகின்றன. இந்தப் பணியில் சுமார் 25,000 பேர் ஈடுபட்டுள்ளனர் – இதில் சுமார் 6,000 பேர் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் என்கிறது டாக்ஸிக் லிங்க் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு ஒன்று. இத்தனை கழிவுகளையும் போட்டு குப்பைக் காடுகளை உருவாக்குவது சாட்சாத் சேரிகளுக்கு முகம் சுளிக்கும் அதே மேட்டுக்குடி வர்க்க இந்தியர்கள் தான்.

மின்னணுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் பாதரசம், காட்மியம், ஈயம், போன்ற ஆபத்தான இராசாயனங்களால் பணியாளர்கள் மட்டுமின்றி சீலம்பூர் பகுதியே பாதிக்கப்பட்டுள்ளது. சீலம்பூர் பகுதியை அடுத்த ப்ரேம் நகரில் மட்டும் கணினிகளில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் இருந்து ஈயத்தைப் பிரித்து எடுக்கும் குடிசைத் தொழில்கள்  சுமார் 110 இடங்களில் நடப்பதாக டாக்ஸிக் லிங்க் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பேட்டரிகளை அப்படியே நெருப்பில் பொசுக்கி அதில் உருகும் ஈயத்தை பிரிக்கும் ஆபத்தான வேலைகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருவதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

plateform
சுத்தப்படுத்துவதாக போஸ் கொடுக்கும் மோடி அன் கோ, ரயில்வே நிலைய திடக்கழிவுகளை எடுக்க செல்லாதது ஏன்?

மோடி ஏன் சீலம்பூர் செல்ல மாட்டார்? அவருக்கு சீலம்பூரோடு வாய்க்கா வரப்புத் தகராறு ஏதும் இல்லை, அதற்கு வேறு அடிப்படை இருக்கிறது.

இந்தியாவில் குவியும் மின்னணுக் கழிவுகள் ஆகப் பெரும்பான்மையாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைங்கரியம் தான். இங்கே செயல்பட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் மின்னணுப் பொருட்களை கழித்துக் கட்டுவதற்கு உருப்படியான வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏதும் கிடையாது. ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில், மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதற்கென்றே சிறப்பான சட்டங்கள் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக கணிசமான தொகையைச் செலவிட்டு வருகின்றன. அதாவது அந்த கழிவுகளை ஒரே அடியாக ஏழை நாடுகளில் கொட்டுவதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படும் கழிவுகளை துண்டேந்தி மேற்கத்திய எஜமான்களுக்கு முகம் துடைக்கும் வேலையை ‘தேசபக்தர்’ மோடி போன்ற உள்ளூர் ஆண்டைகள் முகம் சுளிக்காமல் செய்கிறார்கள்.

மேலும் திறந்த மடமான இந்தியாவில் அவ்வாறான வலுவான சட்டங்கள் ஏதும் இல்லை. மோடி சீலம்பூர் சென்று மின்னணுக் கழிவுகளை அகற்ற அவருக்கு ஜே.சி.பி இயந்திரங்களை இயக்கும் அறிவு இல்லாதது காரணமல்ல – கார்ப்பரேட் நிறுவனங்களின் டார்லிங்காக உருவகிக்கப்படும் அவர் தனது எஜமானர்களின் லாபத்தில் கைவைக்க விரும்ப மாட்டார். நமது வீடுகளில் கக்கூசு கட்டாமல் வயல்வரப்புகளில் ஆய் போவதால் தான் எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்கள் உருவாவதாக பூச்சி காட்டும் சுகாதாரத் துறையும், சுற்றுச் சூழல் துறையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பாரத மாதாவின் மூஞ்சில் ஆய் போவதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் இருப்பதன் அடிப்படை இதுதான்.

e waste
தலைநகரத்தில் மின்னணு கழிவு மலை! மோடி கண்டுகொள்ளாமல் ஓடுவது ஏன்?

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக இந்தியாவை தொழில்களுக்கு உகந்த இலக்காக மாற்றும் பொருட்டு தொடர்ந்து பெயரளவிலாவது இருந்து வரும் சுற்றுசூழல் சட்டம், மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டம் போன்றவற்றின் முதுகெலும்பை உடைத்தே வந்தனர் – இதில் பாரதிய ஜனதாவும் காங்கிரசும் எந்தக் கொள்கை வேறுபாடும் இன்றி கைகோர்த்துக் கொண்டனர்.

தற்போது மோடியின் வருகைக்குப் பின் பாரத மாதாவைப் அலேக்காக பிடித்து மலத்தொட்டிக்குள் அமிழ்த்தும் இந்த ”தொழில் முன்னேற்ற” நடவடிக்கைகள் வெறிகொண்ட வேகத்தில் பாய்ந்து முன்செல்கிறது.

சுற்றுப்புறச் சூழல் என்பதைக் காட்டி எந்தவொரு பெருந்தொழில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைத்திருக்கிறது, மோடி அரசு. வன விலங்கு சரணாலயங்களிலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அந்த வரம்பை ஐந்து கிலோமீட்டர் எனச் சட்டப்படியே மாற்றிவிட்டது, மோடி அரசு.

இது தவிர,

1) காடுகளை தாயகமாக கொண்ட பழங்குடிகள், தமது நிலங்களை ஆக்கிரமித்து தொழில் துவங்குவதை எதிர்ப்பதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வனவாசி கிராம சபைகளின் கருத்துக்கள் கேட்கப்பட தேவையில்லை என்பதை வன உரிமைச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் சாதிக்க உத்தேசித்துள்ளது மோடி அரசு

2) மலைகள் மற்றும் வனப் பிரதேசங்களில் பெருந்தொழில் நிறுவனங்கள் துவங்க தடைகள் இல்லாதவாறு வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

3) நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்க கட்டுப்பாடுகள் தளர்த்துவது

4) தொழிற்சாலைகளால் மாசடைந்த தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகள் துவங்க இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தடைகளை அகற்றுவது

5) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நீர்த்துப் போகச் செய்வது

மேலும், அவ்வப்போது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் புதிது புதிதாக எழும் தேவைகளை ஒட்டி சட்டத்தை நெம்பி வளைக்கவும், அடித்து திருத்தவும் ஆவன செய்வதற்கான நிரந்தர கமிட்டி ஒன்றை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. (Modi government has launched a silent war on the environment)

child labour
புது தில்லி குப்பை அகற்றும் சிறாரை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை காப்பாற்றுவது எப்படி?

தென் தமிழகத்தின் கிரானைட் மலைகளை விழுங்கிய பி.ஆர்.பி மற்றும் மணல் திருடன் வைகுண்டராஜனை நாம் அறிந்திருப்போம். ஆனால், இவர்களையெல்லாம் விட அளவிலும், பரிமாணத்திலும் பிரம்மாண்டமான திருடர்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளாகவும், தேசங்கடந்த தொழிற் கழகங்களாகவும் இந்தியாவெங்கும் கால்பதித்து நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் இயற்கையை வல்லுறவு கொண்டு அடிக்கும் லாப வேட்டைக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று மொத்த இந்திய ஆளும் வர்க்கமும் பாதுகாப்பாக விளக்குப் பிடித்து நிற்கிறது.

தண்டகாரண்யா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு இடையூறாக இருப்பதால் அவர்களை துடைத்தொழிக்க காங்கிரசின் காலத்தில் பச்சை வேட்டை என்கிற பெயரில் இராணுவத்தையே இறக்கினர். அதே காலத்தில் குஜராத் என்கிற எலி வளைக்குள் பதுங்கிக் கிடந்த சுண்டெலியான மோடி, தனது வரம்பிற்கு உட்பட்டு தனது மாநிலத்தை கார்ப்பரேட் நிறுவன்ங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மோடின் ஆளுகைக்கு உட்பட்ட குஜராத்தின் அஹமதாபாத் நகரின் கியாஸ்பூரில் தொழிற்சாலைகளின் திடக் கழிவுகள் பெரும் மலைச் சிகரத்தைப் போல் எழுந்து நின்றது. குஜராத்தின் வாபி நகரம் தொழிற்சாலைக் கழிவுகளுக்குள் அமிழ்த்தப்பட்டு வாழத் தகுதியற்ற நகரம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது. குஜராத்தின் வாபி நகரத்தைப் போல் இந்தியாவெங்கும் சுமார் 88 தொழிற்பேட்டைகள் சுற்றுச் சூழலை நாசக்கேடாக்குவதாக கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மோடி பிரதமராக பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம் இந்த தடைகளை நீக்கியதே ஆகும்.

மேற்குலக நாடுகளில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதன் விளைவாக கடுமையான சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிருப்பதாலும், மனித உழைப்பின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் அந்நாடுகளில் உற்பத்திச் செலவுகள் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும் தங்களது உற்பத்தி அலகுகளை அங்கிருந்து இந்தியா போன்ற கீழ்த்திசை மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயர்த்துள்ளன.

இன்னொரு புறம் மேற்கில் சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாக உலகப் பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி 2008-ம் ஆண்டு துவங்கி இன்றைய தேதி வரை அமுக்குப் பேய் போல் முதலாளித்துவ நாடுகளைப் போட்டு அமுக்கி வருகிறது. தங்களது மூலதனத்தின் சுழற்சிக்கு புதிய சந்தைகளைத் தேடுவது, மேலும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது – கட்டுப்படுத்துவது என்ற நோக்கத்திற்காக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளை நோக்கி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுக்கின்றன.

இந்தப் படையெடுப்பில் அவர்கள் இரும்பாக, வெள்ளியாக, தங்கமாக, நிலக்கரியாக, பெட்ரோலிய பொருட்களாக, வன வளங்களாக, மனித வளங்களாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிச் செல்லும் தேட்டை மதிப்பின் அளவு தான் இந்தியப் பொருளாதாரக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி என்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். அவ்வாறு அவர்கள் அள்ளிச் செல்ல உதவும் இந்தியர்களுக்கு அவன் போடும் எலும்புத் துண்டுகளைத் தான் புதிய வேலைவாய்ப்புகள் என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்களின் வாந்தியைத் தின்று பிழைக்கும் உள்ளூர் அறிஞர் பெருமக்கள். மேற்குலகத்தின் உள்ளூர் எடுபிடியாக  தரகுத்தனத்தில் திளைத்துக் கிடப்பதே தொழில் வளர்ச்சி என்கின்றனர் தரகு முதலாளிகள்  – இந்த மொத்த மனித குல விரோதிகளின் டார்லிங்கு டம்பக்கு தான் நரேந்திர மோடி.

எனவே தான் துடைப்பக் கட்டையை நமது கையில் கொடுத்து விட்டு பூவைக் காதில் சொருகிச் செல்கிறார். பாரதமாதாவை நம்மை விட்டு அலங்கரிக்கச் செய்த கையோடு வாயில் தாம்பூலத்தோடும் கக்கத்தில் லெதர் பேகோடும் ‘கஸ்டமரை’ வரவேற்கச் செல்கிறார் மோடி – இதைத் தொழில் வளர்ச்சி என்று விதந்தோதுகின்றனர் தினமணி வைத்தி வகையறாக்கள்.

பித்தளைச் செம்பை புளி போட்டு விளக்கி நீங்கள் கொடுப்பீர்கள் – அதில் அமெரிக்க பண்ணையார் வந்து புளிச் புளிச்சென்று துப்பிச் செல்வான். இதற்குப் பெயர் தான் சுவஷ் பாரத்.

இந்த மோ(ச)டிக்கு நீங்களும் உடந்தையாகப் போகிறீர்களா என்ன?

–    தமிழரசன்

மேலும் படிக்க:

Children at risk in e-waste sites

Independence Day speech: Modi’s art of doublespeak

India: Mr. Modi Preaches a Clean India, But His Record on Waste management and Pollution in Gujarat is Dirty

66 cases filed against Anil Ambani’s Company

 

விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?

0

சிறையிடப்பட்டுள்ள ஒரு விசாரணைக் கைதி, அவர் செய்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு சட்டப் புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தில் பாதியளவுக் காலத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அத்தகையோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும் சிறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையிடப்பட்டுள்ள ஏறத்தாழ 3,000 விசாரணைக் கைதிகள் உள்ளிட்டு, நாடெங்கும் ஒரு இலட்சத்துக்கும் மேலான விசாரணைக் கைதிகள் அக்டோபருக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இது இந்திய நீதித்துறை ஓசையின்றி செய்துள்ள புரட்சி என்றும் ஊடகங்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.

விசாரணைக் கைதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் சட்டப் புத்தகங்களின்படி குற்றவாளிகள் அல்லர்; குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதாவது, குற்றம் புரிந்ததாக அளிக்கப்படும் புகார் அல்லது தகவலின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள்.

trial-prisoners-1

ஏறத்தாழ 3.23 இலட்சம் பேரை அடைத்துவைக்குமளவுக்குத்தான் நாட்டிலுள்ள 1382 சிறைச்சாலைகளில் இடவசதி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தற்போது இச்சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமாக – ஏறத்தாழ 3.81 இலட்சம் பேர் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றவியல் ஆணையம் கூறுகிறது. இவர்களில் 2.54 இலட்சம் பேர் – அதாவது, சிறைக்கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் விசாரணைக் கைதிகளாவர். இந்த அளவுக்கு விசாரணைக் கைதிகளால் இந்தியச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்குக் காரணம் என்ன?

இன்றைய அரசியலமைப்பு முறையில் போலீசார் எந்தவொரு குடிமகனையும் பிடித்து பொய்வழக்கைச் சோடித்து சிறையிலடைக்க முடியும். குற்றவியல் சட்டப்படி போலீசுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டாலும், யாரையும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை விரைந்து தடுப்பதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் போலீசார் பல்வேறு சிறு குற்ற வழக்குகளில் அப்பாவிகளைப் பிடித்து வருவதென்பதும், தங்களது பதவி உயர்வுக்காகவும், சம்பளம்-சலுகைகளுக்காகவும், மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவும் இப்படி பல பொய்வழக்குகளைச் சோடிப்பதென்பதும் போலீசாரின் வாடிக்கையாகவே உள்ளது. இவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாத இரகசியமல்ல.

உதாரணமாக, ஒரு சிறு திருட்டுக் குற்றத்திற்கு அதிகபட்சத் தண்டனையாக மூன்றாண்டு சிறை என சட்டம் பரிந்துரைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பல நேரங்களில் ஒரு விசாரணைக் கைதியின் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதாகக் கூறிக் கொண்டு போலீசார் இழுத்தடிப்பதாலும், நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் தள்ளிப்போட்டு அலட்சியப்படுத்துவதாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைக் காலத்துக்கும் மேலாக – நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்குச் சிறையில் வதைபடுகின்றனர். அதேசமயம், அரசியல் பலமும் சாதிய பலமும் குண்டர் பலமும் கொண்ட மேட்டுக்குடியினரும் தொழில்முறை கிரிமினல்களும், சமூகத் தொடர்புள்ளவர்களும் விரைவில் பிணையில் வெளியேவர முடிகிறது. அல்லது சிறையிலேயே அவர்கள் அனைத்து வசதிகளோடு பாதுகாப்பாக ஓய்வெடுக்கின்றனர். இத்தகைய பலம் ஏதுமில்லாத சாமானிய மக்கள்தான் பிணை கிடைக்காமல் தொடர்ந்து விசாரணைக் கைதிகளாகச் சிறையில் வதைபடுவதோடு, சட்டவிரோதமாக நீதிபதிகள் வீடுகளில் எடுபிடி வேலைகளைச் செய்யுமாறு பயன்படுத்தப்படுகிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் இந்த வழக்கைச் சீர்குலைப்பார், சாட்சிகளைக் கலைப்பார் என்ற நியாயமான அச்சம் நீதிபதிக்கு ஏற்பட்டால், அவர் ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்றக் காவலில் வைக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இப்படி எந்த அச்சத்தையும் தெரிவிக்காமல், போலீசார் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு, ஒரு விசாரணைக் கைதியை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உடனடியாக உத்தரவிடுகின்றனர். தாங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று ஒருவர் நீதிமன்றத்தில் கதறியழுதாலும், அது நீதிபதிகளின் காதுகளில் விழுவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், போலீசு நிலையத்தின் விரிவாக்கப்பட்ட நிலையமாகவே கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

trial-prisoners-2

இப்படி இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப்படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். பலரது வாழ்க்கையும், பல குடும்பங்களும் நாசமாக்கப்பட்டதற்கு இந்நீதிபதிகள்தான் காரணம். குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டவர் மீது 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல், அந்த விசாரணைக் கைதியை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க வேண்டுமென சட்டம் கூறினாலும், ஆண்டுக்கணக்கில் சிறையில் விசாரணைக் கைதிகள் வதைபடுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான்.

கடந்த மார்ச் 24 அன்று புழல் சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள், போலீசார் தங்கள் மீது போட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும், நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கோடைவிடுமுறையைக் கழிக்க குடும்பத்தோடு உல்லாசமாகக் கிளம்பும் நீதிபதிகள், இக்காலத்தில் தேவையில்லாமல் அப்பாவிகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக வதைபடுவது அவர்களை உறுத்தவில்லையா? அல்லது போலீசார் சோடித்திருப்பது பொய்வழக்கு என்பது அவர்களுக்குத் தெரியாதா? இந்த அநீதியைத் தெரிந்தே செயல்படுத்திய முதன்மைக் குற்றவாளிகளான இந்நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? பொய்வழக்கு போட்டு சாமானியர்களை வதைக்கும் போலீசுக்கு என்ன தண்டனை? மாதமொருமுறை கீழமை நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்களுடன் சிறைச்சாலைக்கு நேரில் வந்து சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தி, நிலைமைகளைப் பரிசீலித்து அறிக்கை தரவேண்டுமென விதிகள் இருந்தபோதிலும், அவற்றை அவர்கள் தெரிந்தே புறக்கணித்து அலட்சியப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?

ஒருவரைப் பொய்வழக்கில் போலீசு பிடித்துச் செல்வதும், பின்னர் கைதானவரை விடுவிக்க அவரது உறவினர்களும் நண்பர்களும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்வதும், அதன் பிறகு நீதிபதிகள் விசாரணை நாடகமாடி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து அந்த நிரபராதியை பிணையில் விடுவிப்பதும்தான் போலீசு மற்றும் நீதித்துறையின் அன்றாட நடைமுறையாக இருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட போலீசு ஆட்சேபிக்காவிட்டால்தான் ஒருவருக்குப் பிணை வழங்கிறார்கள். ஒரே நாளில் பல வழக்குகளில் பொய்சாட்சி கூறுவதற்காகவே சிலரை போலீசார் உருவாக்கி வைத்திருப்பதை தங்கள் கண்ணெதிரே கண்ட போதிலும், நீதிபதிகள் இதை எதிர்த்து வாய்திறப்பதில்லை. இது நீதித்துறைக்கும் போலீசுத்துறைக்குமிடையிலான எழுதப்படாத உடன்பாடாக நீடிக்கிறது. பொய்வழக்கு போடுவதைத் தங்களது உரிமையாக போலீசு செயல்படுத்தி வருவதை கண்டுகொள்ளாமல், அதனை அங்கீகரிப்பது நீதிபதிகள்தான்.

இப்படி நிரபராதிகளான ஏழைகளை வதைத்துக் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன. இந்தத்தொழில்தான் அவர்களை வாழ வைக்கிறது. இந்த கூட்டுக் களவாணிகளின் வலைப்பின்னல்தான் சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்தப் பொவழக்கிலாவது தங்களைப் போலீசார் சிக்கவைத்து விடுவார்களோ என்று நாளும் அச்சத்துடன்தான் சாமானிய மக்கள் வாழவேண்டியிருக்கிறது.

இந்தியச் சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பி வழிவதையும், அதனால் அடிப்படை வசதிகளின்றி நோய்வாய்ப்பட்டு கைதிகள் மரணமடைவதையும் பற்றி 1979-ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர். கன்னா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, அப்போதைய சட்ட அமைச்சரிடம் அறிக்கையும் பரிந்துரைகளும் அளிக்கப்பட்டன. ஆனாலும் அவை கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1996-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, விசாரணைக் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய 9 கட்டளைகளைப் பிறப்பித்தார்கள். அதன்பின்னர், 2005-ல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிணை வழங்கும் பகுதியில் 436-ஏ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ள ஒரு விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்கான சிறைத் தண்டனையில் பாதிக் காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை சொந்தப் பிணையில் விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படாமல் நீதிபதிகளாலேயே புறக்கணிக்கப்பட்டது. இப்போது மீண்டும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்து பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாலேயே, இந்தச் சட்டப்பிரிவை நினைவுபடுத்தி விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை அவசரமாகப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இறுதியில், விசாரணைக் கைதிகளான நிரபராதிகள் குற்றவாளிகளாகிவிட்டார்கள்! நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் அயோக்கியத்தனத்தைச் செய்யும் முதன்மைக் குற்றவாளிகளான நீதிபதிகள் கருணாமூர்த்திகளாகிவிட்டார்கள்! இதுதான் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் நீதித்துறையின் புரட்சி!

– குமார்.
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை

2

bangalore-dalit-boy-temple-entry-1

படம் : ஓவியர் முகிலன்

பெங்களூரு நகரத்தில் உள்ள நெலமங்களா பகுதியில் ருத்ரேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. அருகாமையில் சந்தோஸ் எனும் எட்டு வயது தலித் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோவிலின் பார்ப்பனப் பூசாரி பிரசாதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார். அதை வாங்க விரும்பிய சிறுவன் பூசாரியைப் பின் தொடர்ந்து கோவிலின் கருவறைக்குள் நுழைந்து விட்டான்.

பார்ப்பன பூசாரிகள் அல்லாதோர் கருவறைக்குள் நுழைவதற்கு பார்ப்பனியத்தின் ஆகமவிதி மற்றும் அரசியல் சட்டப்படியே தடை உள்ளது. அத்துடன் இங்கே ஒரு தலித் சிறுவனே நுழைந்து விட்டபடியால் கோவில் மற்றும் மூல விக்ரகங்களின் புனிதம் எவ்வளவு ‘கெட்டுப்’ போயிருக்கும் என்பதை ஒரு பார்ப்பனராக இருந்து பார்த்தால்தான் புரியும்.

மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்
மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்.
படம் நன்றி: The Hindu

நம்மவா ஆட்சி நடக்கும் போதே இப்படி இந்து தர்மத்திற்கு சோதனையா என்று எகிறிய அந்த பார்ப்பனப் பூசாரி சிறுவனை கடுமையாக தாக்கியிருக்கிறார். குறிப்பாக கோவில் தூணில் அவன் தலையை மோதவைத்திருக்கிறார். ரத்தம் வழிய வீடு திரும்பினான் சந்தோஷ்.

செருப்பு தைக்கும் தொழிலாளிகளான அவனது பெற்றோர் உடன் கோவில் சென்று பார்ப்பன பூசாரிகளிடம் பேசியிருக்கிறார்கள்.  பூசாரிகளோ அதை மறந்து விடுமாறு கோரியதோடு வெற்று தாளில் கைநாட்டு கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன விளக்கப்படி சிறுவனை திருடன் என நினைத்து தாக்கிவிட்டார்களாம். தீண்டாமை கொடுமைகள் அனைத்தோடும் இத்தகைய திருட்டு பட்டம் கூடவே திணிக்கப்படும். எனினும் சிறுவன் என்ன திருடினான் அல்லது எதை திருட முயன்றான் என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை. திரைக்கதையில் ஏதோ குழப்பம் போல.

பிறகு உள்ளூர் தலித் இயக்கங்கள் மூலம் இந்த பிரச்சினை செய்தியாக ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. தாக்கிய பார்ப்பனர்கள் இதை மறக்கச் சொல்கிறார்கள். நாமோ இதை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் கூடாது.

ஆவின் பால் விலை உயர்வு : மக்கள் மீது விழுந்தது இடி!

8

ஆவின் பால் விலை உயர்வு : ஏழை, நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஆவின்

“தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்க” என மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவுக்கு பெயர் பெற்றது ஆவின் பால். இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. பல லட்சம் குழந்தைகளின் தாய்ப்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின் பாலில்தான் விசத்தைபோல் தண்ணீரைக் கலந்து கொள்ளையடித்தனர் அ.தி.மு.க கிரிமினல்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீளும் முன்பே, இதோ ஆவின் பால் விலையை திடீரென 10 ரூபாய் உயர்த்தி பச்சிளம் குழந்தைகளைப் பட்டினி போட்டு கொல்லத் துடிக்கிறது அ.தி.மு.க அரசு.

இதை வெறும் பால்விலை உயர்வு என்று மட்டும் பார்க்க முடியுமா? முடியாது. இதோடு சேர்ந்து ஆவின் பாலில் இருந்து தயாரித்து விற்பனை செய்யப்படும் நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம் பவுடர், மோர், லஸ்ஸி என 17 வகையான பொருட்களுக்கும் நிச்சயம் விலை ஏறும். மிக முக்கியமாக கூலித் தொழிலாளிகளின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாத டீ, காபி விலையும் கடுமையாக உயர்ந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏன் இந்த விலை உயர்வு?

’ பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதால்தான் வாங்குவோர்க்கு 10 ரூபாய் விலை ஏறுகிறது என ஆவின்பால் விலை ஏற்றத்திற்கு நியாயம் கற்பிக்கிறது தமிழக அரசு.

உழைக்கும் மக்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். மாட்டுத் தீவனமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை. அவற்றை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணமான இந்த அரசுதான் இன்று விவசாயிகளுடைய நலனுக்காகத்தான் பால் விலையேற்றம் என்று அபாண்டமாக புளுகுகிறது.


[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்]

உண்மை என்ன தெரியுமா?

தனியார் பால் நிறுவனக் கொள்ளைக்கு வழி வகுக்கவும், ஆவினை அடியோடு ஒழிக்கவும் தான், இந்த விலை ஏற்றம். இன்று வரை ஆவின் பாலுக்கும் – தனியார் பாலுக்கும் உள்ள வித்தியாசம் லிட்டருக்கு 13 ரூபாய். ஆவின் விலை ஏற்றத்திற்குப் பிறகு இது வெறும் 3 ரூபாயாகத்தான் இருக்கும். இதனால் ஆவின் வாங்கியவர்கள் தனியார் பால் வாங்கும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். அடுத்து, ஆவின் விலையே ஏறும் போது எங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று கூறி தனியார்கள் 50 ரூபாய் வரை விலை ஏற்றுவார்கள். இது கற்பனையல்ல, கடந்த கால உண்மை. 2012-ம் ஆண்டில் ஆவின் விலை ஏறிய பிறகு 2, 3 முறை தனியார் நிறுவனங்கள் விலையை ஏற்றி கொளையடித்து வருகின்றன. இன்றும் அதுதான் நடக்கப்போகிறது.

எப்படியிருந்தாலும் ஆவின்பால் விலை குறைவுதான், மக்கள் அதைத்தானே வாங்குவார்கள் என நீங்கள் நினைக்கலாம். மளிகைக்கடைக்காரரிடம் கேட்டு பாருங்கள் அவர் உண்மையை போட்டு உடைப்பார். “முதலில் தினமும் 20 பாக்கெட் ஆவின் வரும், பிறகு 15, 10, 8 எனக் குறைத்து விட்டார்கள். மக்களே விரும்பிக் கேட்டாலும் ஆவின் பால் கிடைக்கவில்லை, வேறு வழியே இல்லாமல் தனியார் பாலைத் தான் தருகிறோம்’’ என்கிறார் ஒரு மளிகைக் கடைக்காரர். இப்போது தெரிகிறதா எப்படி இருந்தாலும் தனியார் பால் நிறுவனங்களுக்குத்தான் கொள்ளை லாபம்.

புமாஇமு சுவரொட்டி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒட்டிய சுவரொட்டி

இன்னொரு பக்கம் தினந்தோறும் 2 லட்சம் லிட்டர் ஆவின் பாலைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டு, அதே அளவு கெமிக்கல் தண்ணீரைக் கலந்து 12 வருடமாக, ஆண்டுக்கு 150 கோடிக்கு மேல் சுருட்டி, சுமார் 2000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க எனும் கொள்ளை கூட்டத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியும், வைத்தியநாதனும். அதிகாரிகள் துணையோடு அடித்த இந்தக் கொள்ளையை ஈடுகட்ட இன்று நம் தலையில் விலையேற்றத்தை திணிக்கிறார்கள். இது தான் ஆவின்பால் விலை உயர்வின் பின்னணி.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு – ஆவினுக்கு வேட்டு

மக்களுக்கு, தரமாகவும் மலிவாகவும் பால் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1981-ம் வருடம் தொடங்கப்பட்டதுதான் ஆவின் நிறுவனம். 12000-க்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள், 20 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் என குறுகிய காலத்தில் ஆலமரம் போல் வளர்ந்தது. கறந்தது கறந்தபடி, சொட்டுத் தண்ணீர் கூடக் கலக்காமல் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு பாலைக் கொண்டு வந்தார்கள் விவசாயிகள். அந்தப் பாலை அதே தூய்மை – தரத்துடன், வீடுவரை கொண்டு வந்து சேர்த்தனர். இப்படித்தான் தாய்ப்பாலுக்கு நிகரான மதிப்பைப் பெற்றது ஆவின் பால்.

1991-ல் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உருவான தனியார் பால் நிறுவனங்கள் ஆவினோடு போட்டி போட முடியாமல் விழி பிதுங்கின. லாப வெறிகொண்டு அலையும் தனியார் பால் நிறுவன முதலாளிகள் விடுவார்களா? அவர்களுக்கு சேவை செய்யும் அரசுதான் விட்டுவிடுமா?

முதலில் விவசாயிகளுக்கு வழங்கிய மலிவு விலை தீவனம், பருத்திக் கொட்டை ஆகியவற்றை நிறுத்தினார்கள். பாலுக்குரிய பணத்தை மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்து விவசாயிகளை நோகடித்தார்கள். தொடர்ந்து நட்டமடைந்து வந்த விவசாயிகள் வேறுவழியின்றி தனியார் பால் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்படித்தான் ஆரோக்கியா, திருமலா, ஹெரிடேஜ், கெவின்ஸ் போன்ற தனியார் கொள்ளையர்கள் அரசின் துணையோடு வளர்ந்தார்கள். இன்று ஆவினுக்கு மூடு விழா நடத்த முயன்றும் வருகிறார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ரயில் பிரச்சாரம்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படி ஆவின் நிறுவனம் சீரழிக்கப்படுவதற்கெதிராக, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கெதிராகத்தான் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கையின்படி விலை ஏற்றப்படுவதாகக் கூறி ஒவ்வொரு முறையும் போராடும் விவசாயிகளை வில்லன்களைப் போல சித்தரிக்கும் சதி வேலையை செய்து வருகிறது இந்த அரசு. இதை எதிர்த்துப் போராடி மக்கள் சொத்தான ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டியதும், ஆவின் விலை ஏற்றத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை.

ஏற்கனவே காய்கறி முதல் மளிகை வரை விலைவாசி விசம்போல் ஏறி வருகிறது;. பொட்ரோல் – டீசல் விலை திடீர் திடீரென உயர்த்தப்படுகிறது; மாத பட்ஜெட்டில் குடிக்கும் தண்ணீருக்கும் சுமார் 2000 ஆயிரம் வரை ஒதுக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்; வெளியில் சென்றால் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போகும் கக்கூசுக்கும் விலை ஏற்றம்; கல்வி – மருத்துவம் காசு இல்லாமல் இல்லை என்பதால் அது நமக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது; இதோ ஆவினை அடுத்து மின்கட்டண உயர்வு எனும் ஏவுகணை நம்மை தாக்குவதற்கு தயாராகி வருகிறது.

வருமானம் உயரவில்லை, வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம். இனி பால் பயன்படுத்தும் அளவைக் குறைக்கலாம் என்று கருதுவதோ, அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப கூடுதலாக உழைக்கலாம் என நினைப்பதோ, இதெல்லாம் நம் தலைவிதி எதுவும் செய்யமுடியாது என சகித்துக்கொண்டு அமைதியாக வாழ்வதோ, நாம் என்ன செய்யமுடியும் என புலம்புவதோ, மனுகொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் – அதிகாரிகளிடம் மன்றாடுவதோ உண்மையில் தீர்வைத் தராது. ஆவின் பால் விலையை சகித்துக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

ஆவின் நட்டத்தை ஈடுகட்டி விவசாயிகளுக்கு வாழ்வுதர ஆவின் பாலில் ஊழல் செய்த அ.தி.மு.க கிரிமினல்கள் – அதிகாரிகளின் சொத்துக்களை மொத்தமாகப் பறிமுதல் செய்யப் வேண்டும். அதற்கு பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம் அணிதிரண்டு வாரீர்.

aavin-price-hike-banner

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.
வெளியிட்ட பிரசுரம்.

விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை

25
mohan-bhagwat
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்: மாட்டுக்கறி பிரியாணியை மறுக்கும் பார்ப்பனியத்தின் ரவுடி!

தெருவில் சினிமா போஸ்டரை மேய்ந்து கொண்டும், எப்போதடா பிரியாணியாகும் பாக்கியம் தனக்கு வாய்க்கும் என்று வயதான காலத்தில் ஏக்கத்தோடு சாவை எதிர்பார்த்தும், திரிந்து கொண்டிருக்கும் கோமாதாவை வம்படியாக பிடித்து சித்திரவதை செய்கிறது சங்கப்பரிவார கும்பல்.

மாடு புனிதம், மாடு பேண்ட சாணி புனிதம், மாடு மோண்ட மூத்திரம் புனிதம் என்று ”இந்து புனிதங்களுக்கு” விதவிதமான விளக்கங்களை காவி கும்பல் வழங்கி வந்த நிலையில் தற்போது புதிய விளக்கங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். அதாவது மாடு மட்டுமல்ல, மாட்டை ஒத்த எருமை, ஆடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளும் புனிதம் என்கிறார்கள்.

2014-ம் ஆண்டு விஜயதசமியன்று உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், மாடுகள் ’கடத்தப்படுவது’ உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்றும் கூறியிருந்தார். மோகன் பாகவத்தின் உரைக்கு பொழிப்புரை எழுத வந்த பிரதமரின் ஆலோசகரும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசரின் முன்னால் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, பசு மட்டுமின்றி ஒட்டு மொத்த கோ வம்சத்தையும் இறைச்சிக்காக கொல்வது தடை செய்யப்பட வேண்டும் என்று பாகவத் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14-ம் தேதி ஜெய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேனகா காந்தி, இறைச்சி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் பணமெல்லாம் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதில் முடிகிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை என்னவோ மேனகா காந்தி சொல்வதில் இருந்து நேர்மாறானதாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களும் ‘இந்துக்களுக்கே’ சொந்தமானதாக இருக்கிறது. இல்லை இந்தியாவில் உள்ள பயங்கரவாதங்களுக்கு இந்த ‘இந்துக்களே’ காரணமென்று ஆகிறது.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் புரவலர்கள் பனியாக்கள் என்பதால் மேனகா காந்தியின் கூற்று உணமையாக இருப்பதற்கான சாத்தியங்களையும் நாம் மறுத்து விட முடியாது என்பது வேறு விசயம்.

பார்ப்பனிய கலாச்சாரத்தையே பொதுவான ‘இந்துக்கள்’ கலாச்சாரமாக சித்தரிப்பது, அதனடிப்படையில் சமூகத்தை மதவாத அடிப்படையில் குறுக்கு நெடுக்காக பிளப்பது என்கிற தமது செயல் தந்திரத்தை காவி கும்பலின் உயர்மட்டம் தெளிவாக முன்னெடுக்கத் துவங்கியுள்ளது. கூடவே அதை அமல்படுத்தும் வண்ணம் வன்முறை வெறியாட்டத்தையும் துவங்கியுள்ளது.

இந்தாண்டு ஈத் பண்டிகையின் போது குஜராத்தின் அகமதாபாத் நகரெங்கும் சிறிதும் பெரிதுமான கலவரங்கள் நடந்துள்ளன. குஜராத்தின் பல இடங்களில் இசுலாமியர்கள் குர்பானிக்காக கொண்டு சென்ற ஆடுகளை போலீசின் துணையோடு பஜ்ரங் தள் குண்டர் படைதடுத்து நிறுத்தியுள்ளது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், கோலிகள் மற்றும் சித்திகள் உள்ளிட்டு சுமார் 60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.

menka
கறி வியாபார காசுதான் பயங்கரவாதிகளுக்கு வசூலாம்.- மேனகா காந்தி. அசுர குல நாட்டில் தேவர் குல அடக்குமுறை!

சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட தில்லி புறநகர் பகுதியான பாவனாவில் 70 சதவீதமானோர் இசுலாமியர்கள் ஆவர். சுமார் 200 குண்டர்களோடு அப்பகுதியில் ஊடுருவிய இந்துத்துவ குண்டர்கள் அங்கே மூன்று பசுக்களை கடத்தி ஒளித்து வைக்கப்பட்டிருப்பதால், அதை மீட்கப் போவதாகவும் போலீசின் உதவியோடு வெறியாட்டம் போட்டுள்ளனர். கடைசியில் அவர்களால் ஒரே ஒரு பசுவைத்தான் கண்டு பிடிக்க முடிந்துள்ளது, அதுவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து பால்காரர் ஒருவருக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வசுந்தரா ராஜேவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவ உணவுப் பழக்கமே மேலானது என்றும் அதுவே ’இந்து’ அடையாளம் என்பதாகவும் நிலைநாட்டத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். என்றாலும், இதைக் கீழ்மட்டத்திலிருந்து மக்களின் ஆதரவோடு நிலைநாட்டுவதிலும் சிக்கல் உள்ளது. தம்மை ’இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வோரில் பார்ப்பனர்கள் மற்றும் பட்டேல்கள், ஜெயின்கள் உள்ளிட்ட ஒருசில ஆதிக்க சாதியினர் தவிர பெரும்பான்மையானோர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

பெங்காலி பார்ப்பனர்களோ சூத்திரர்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் மீன் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களின் ”சத்திரிய” சாதியினரிடையே தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு எருதையும் எருமையையும் பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவிர தெற்கே தமது வளர்ச்சிக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ் இனங்கண்டுள்ள கேரளத்தில் நம்பூதிரி தவிர்த்த அனைத்து ‘இந்துக்களும்’ மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களே. தமிழகத்திலும் இதுவே நிலைமை.

ஆக, கீழ்மட்டத்தில் சைவ உணவுக்கு ஆதரவான அணிதிரட்டலோ கலவரங்களோ முழுமையான அளவில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ், மேலிருந்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலமும் கலாச்சார ரீதியில் அசைவத்தை இழிந்த உணவாக நிலைநாட்டுவதன் மூலமும் தனது நோக்கங்களை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்துமதவெறியின் கோட்டையான இந்தி பேசும் மாநிலங்களில் அதை அமல்படுத்த துவங்கியிருக்கிறது. இது குறித்து ‘கருவாடு’ ஆவணப்படத்தில் விரிவாக பேசுகிறது.

முதலில் பசுவை தெய்வம் என்பது, பின்னர் பசுவதையை தடுக்க கோருவது, அடுத்த கட்டமாக பசு மாமிசம் உண்பது இசுலாமியர்கள் மட்டும் தானென்பதை நிலைநாட்டுவது, அடுத்த கட்டமாக எல்லா மாமிச உணவையும் மாட்டிறைச்சியோடு தொடர்புபடுத்துவது என்கிற பாதையை தெரிவு செய்துள்ளது.

Hyderabadi biryani
பிரியாணிக்கு எதிரான பார்ப்பனியத்திற்கு பாடை கட்டுவது எப்போது?

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12 சதவீத பங்கு வகிக்கும் இறைச்சி ஏற்றுமதியின் மொத்த மதிப்பு சுமார் 500 கோடி டாலராகும் (சுமார் ரூ 30,000 கோடி). இதில் சுமார் 440 கோடி டாலர் (சுமார் ரூ 26,400 கோடி) எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது. மாட்டிறைச்சி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் உள்நாட்டு நுகர்வும் அதிகமாகவே இருக்கிறது.

பெரும்பான்மையான ஏழை மக்களின் புரதம் மற்றும் ஊட்டச்சத்து தேவையை மாட்டிறைச்சியே பூர்த்தி செய்து வருகிறது. முன்பு பாரதிய ஜனதா பசுவதைத் தடைச்சட்டத்தை தனிநபர் மசோதாவாக கொண்டு வர முயன்ற போது அதை எதிர்த்துப் பேசிய பி.ஏ சங்மா, ஒரு வேளை பசுவதை தடை சட்டப்பூர்வமானதாக ஆகும் பட்சத்தில் வடகிழக்கு மாநில மக்கள் பெரியஅளவில் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இசுலாமியர்களின் வேலையே மாட்டைக் கொன்று தின்பது தான் என்கிற ரீதியில் இந்துத்துவ கும்பல் அடித்து விடுவது முதலில் அடிப்படையற்றதாகும். மாட்டிறைச்சி என்பது மலிவாக (கிலோ 140 ரூ) கிடைக்கக் கூடிய அசைவ உணவாக இருப்பதால், சமூகத்தின் கீழ் அடுக்கில் உள்ள தலித்துகள், பழங்குடியினரின் மற்றும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் இதர பிரிவு உழைக்கும் மக்களின் உணவாகவே எதார்த்தத்தில் உள்ளது. வசதியான இசுலாமியர்கள் மாட்டிறைச்சியை விட மென்மையான ஆட்டிறைச்சியையே விரும்புவர். தவிர வடகிழக்கு மாநில மக்களிடையேயும் மாட்டிறைச்சி உண்பது கலாச்சார ரீதியில் சகஜமானதாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ள இந்தியாவை சைவ நாடாக மாற்றுவதன் மூலம் பெரும்பான்மை மக்களை கொன்று போடத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். இது ஆர்.எஸ்.எஸ் – இசுலாமியர்கள் பிரச்சினையல்ல; பெரும்பான்மை உழைக்கும் மக்களை கேவலப்படுத்தும் நேரடியான உணவுத் தீண்டாமை. பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்தை கொச்சைப் படுத்துவதன் பின்னிருக்கும் பார்ப்பனியத் திமிரை நாம் இனங்கண்டு கொள்வதோடு நேரிட்டு மோதி ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியம்.

மானமும் சொரணையும் உள்ளவர்கள் செய்யக்கூடிய காரியமும் அதுதான்.

–    தமிழரசன்

தமிழக அம்மாவுக்கு கம்பெனி கொடுக்கும் ஜப்பான் அம்மா

5
யுகோ ஒபுச்சி - மூன்று வருடங்களாக கட்சிக்காரர்களுக்கு இலவச சினிமா காட்டினார், . அதிமுகவில் ரிக்கார்டு டான்ஸ் - ஜப்பானில் மல்டிபிளக்ஸ் சினிமா!

ழல் என்றால் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தான் இருக்கும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பே இல்லை என முதலாளித்துவ அறிஞர்கள் வாய்ப்பந்தல் போடுவார்கள். அவர்களது முகத்தில் மீண்டுமொரு முறை கரி பூசியிருக்கிறது ஜப்பானில் சமீபத்தில் வெளியான தேர்தல் நிதி முறைகேட்டு ஊழல். இது தொடர்பாக இரு ஜப்பானிய பெண் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

யுகோ ஒபுச்சி - மூன்று வருடங்களாக கட்சிக்காரர்களுக்கு இலவச சினிமா காட்டினார், . அதிமுகவில் ரிக்கார்டு டான்ஸ் - ஜப்பானில் மல்டிபிளக்ஸ் சினிமா!
யுகோ ஒபுச்சி – மூன்று வருடங்களாக கட்சிக்காரர்களுக்கு இலவச சினிமா காட்டினார், . அதிமுகவில் ரிக்கார்டு டான்ஸ் – ஜப்பானில் மல்டிபிளக்ஸ் சினிமா!

சொர்க்கம் என்பது அமெரிக்காவில் நிலவுவதாக நம்புவது போல உழைப்பு, சுறுசுறுப்பு, சட்டப்படி நடப்பது, வேலை நடத்தம் நடக்காத நாடு என ஜப்பானை காட்டுவார்கள். ஒரு வகையான அடிமைத்தனத்தையே இது சுட்டுகிறது என்றாலும் ஜப்பானை எல்லாவற்றுக்குமான சிட்டுக்குருவி லேகியமாக அதியமான் தொட்டு இறையன்பு ஐஏஎஸ் வரையிலான முதலாளித்துவ வகையறாக்கள் ஓதுவதும் வழக்கம்தான். இந்த நம்பிக்கைகளில் பல யாரும் கேட்டோ பார்த்தும் இராத கர்ண பரம்பரைக் கதைகள்தான்.

நம் ஊரில் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை பெரிய ஊழலாகவும், ஏதோ உலகத்திலேயே இந்தியாவில் தான் அரசியல் கட்சி மோசடிகள் நடப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. இதை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஜப்பான் எனும் முன்னேறிய நாடே மறுத்திருக்கிறது.

பதவி விலகியிருக்கும் வர்த்தக மற்றும் நிதித்துறை அமைச்சர் யுகோ ஒபுச்சியின் வங்கிக் கணக்கில் 2012 தேர்தலுக்கு முன், 4,24,000 டாலர்கள் வித்தியாசம் இருந்தது. என்ன என்று விசாரித்த எதிர்க்கட்சிகள் அவரது ஆதரவாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு திரையரங்குகளுக்கு சென்று வர இலவச டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கொடுத்திருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். இதுபோக 35,000 டாலர் பெறுமான பொருட்களை அவரது சகோதரியின் கணவரது கடையில் இருந்தும் கொடுத்திருக்கிறார்.

இதெல்லாம் கடந்த வாரம் வெளியான உடன் அதுவரை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வர வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட இவர் கண்ணீர் மல்க தன் மீது எந்த குற்றமும் இல்லை என்றும், ஆனால் தன் ஆதரவாளர்கள் செலவழித்த காரணத்தால் பதவி விலகுவதாக குறிப்பிட்டார். வளர்ப்பு மகன் திருமணத்திற்கு தான் செலவு செய்யவில்லை, மற்றவர்கள்தான் என ஜெயா சொன்னது போன்ற அதே வாக்குமூலம்.

மட்சுஷிமா
மட்சுஷிமா – வாக்காளர்களுக்கு இலவச கூப்பன் – இதுதானே அழகிரி ஃபார்முலா?

முன்னாள் பிரதமர் கெய்சோ ஒபுச்சி (1998-2000) இளைய மகளான இவர் தான் புகுசிமா அணுஉலை விபத்தின் மீட்பு பணிகளுக்கான பொறுப்பிலும் இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் பெண்கள் வேலைக்கு செல்வது கணிசமாக குறைந்து வருவதால் அதனை ஊக்குவிக்கும் பொருட்டு அபே அபேனாமிக்ஸ் என்ற தனது கொள்கையின் ஒரு பகுதியாக ஐந்து பெண் அமைச்சர்களை நியமித்தார். இதனை உமனாமிக்ஸ் என்றும் பெயரிட்டு அழைக்கின்றன ஊடகங்கள். அதில் திறமையாக செயல்படுவதாக கூறிதான் இவரை கடந்த மாதம் காபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருந்தார்.

பெண்கள் தங்களது திறமையை காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னால் ஒளிர முடியவில்லை என கண்ணீர் மல்க டிவிக்கு பேட்டி கொடுத்து விட்டு பதவி விலகியிருக்கிறார் ஒபுச்சி. ஜெயாவும் கூட தமிழக மக்களுக்கு சேவை செய்வதையே தன் மீதான வழக்கில் கூறியிருக்கிறார்.

இவரை அடுத்து நீதித்துறை அமைச்சர் மிடோரி மிட்சூஷிமா பதவி விலகினார். வசந்த கால விழாவின் போது தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இலவசமாக விசிறிகள், அழகு சாதன பொருட்களை விநியோகித்திருக்கிறார் இந்த சீமாட்டி. கூடுதலாக இவர் முன்னாள் பத்திரிகையாளர் வேறு.

இப்போது யுகோ ஒபுச்சியின் பொறுப்பை ஏற்றுள்ள புதிய யோய்ச்சி மியாசவாவும் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 2010-ல் பாலியல் தொழில் நடக்கும் கிளப்பில் செலவு செய்த தொகையை அவரது அலுவலக அதிகாரி நிர்வாக கணக்கில் இருந்து கொடுத்திருக்கிறார். இவரும் பழைய பிரதமர் ஒருவரின் மருமகன் தான். ஹார்வேர்டில் படித்த பட்டதாரி வேறு. 2012க்கு முந்தைய அபேவின் ஆட்சியில் பல ஊழல் புகார்கள் வெளியாகின. ஒரு அமைச்சர் தற்கொலையே செய்து கொண்டார்.

இன்னும் இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சிக்குவார்கள் என்கிறார் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த யூகியோ இடானோ. யுகோ ஒபுச்சி காலத்தில் எப்படியாவது மூடிக் கிடக்கும் 38 அணு உலைகளையும் இயங்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள். பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி பலத்த எதிர்ப்பு ஏற்கெனவே அங்கு இருந்து வந்தது. நாட்டின் 25 சதவீத மின்னுற்பத்திக்கும் மேல் இதன் மூலமாகத்தான் முன்னர் கிடைத்து வந்த்து.

யூகோ ஓபுச்சியின் தந்தை பிரதமராக இருந்த போது தான் ஜப்பான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. அவர் அப்போது மக்களை சம்பளத்திற்கு பதிலாக கூப்பன்களை பெற கட்டாயமாக்கினார். அதன் மூலம் நுகர்வு கலாச்சாரத்தை சட்டபூர்வமாக நிரந்தரமாக்கினார். கடன் அட்டைகள் அதிகரித்தன. இன்னமும் அந்த நெருக்கடியில் இருந்து ஜப்பான் மீளவில்லை. இப்போது ஓபுச்சியை வைத்து வைத்து நுகரும் பொருட்களின் மீதான வரியை 2% லிருந்து 10% ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதற்குள் ஊழலில் சிக்கிக் கொண்டார். இப்போதைக்கு ஜப்பானிய மக்களின் கழுத்துக்கருகில் தொங்கும் கத்தியை எந்த ஆடு வெட்டி வந்து வெட்ட துவங்குவது என்பது தான் பிரச்சினை போல ஆகி விட்டது.

யாய்சி மியாஸ்வா - அலுவலக கணலிருந்து பாலியல் கிளப் செலவு !
யாய்சி மியாஸ்வா – அலுவலக கணலிருந்து பாலியல் கிளப் செலவு !

இதுபோக பாதுகாப்பு துறை அமைச்சர் அகினோரி ஈடோவின் தேர்தல் நிதி குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். விற்பனை வரியும் கடந்த ஏப்ரலில் 8% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த ஆண்டு அக்டோபரில் அதனை பத்தாக உயர்த்த முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் எல்லாம் 2009 பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளாது என்கிறார்கள். குறிப்பாக மூன்றில் இரண்டு பங்கினர் இரண்டாவது உயர்வை எதிர்த்து வருகின்றனர்.

இதற்கு எதிராக போராடுவதற்கு அங்குள்ள தொழிலாளி வர்க்கம் கூட தயாராக இல்லை. ஆனால் சூழல் அவர்களை அப்படி தள்ளிவிடக் கூடாது என்பதற்காக தேசிய வெறியை கிளப்பும் போர் ஆதரவு கட்சிகளின் கூட்டங்களில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தலைவர்களும், உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டு கொரியா மற்றும் சீனாவுக்கு எதிராக மக்களை கொம்பு சீவி விடுகின்றனர்.

முதலாளித்துவ பொருளாதாரம் ஜப்பானில் ஒரு புரட்சியின் மூலமாக வரவில்லை. அமைதியான வழிகள் மூலமாகவே வந்ததால் சமூகத்தில் நிலவுடமை சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் பல்வேறு அளவுகளில் நிலவுகின்றன. ரஜினி படங்கள் கூட அங்கே ரசிக்கப்படுவதற்கு இப்படி ஒரு அடிப்படை இருக்கிறது. தொழிற்சங்கமோ, வேலைநிறுத்தமோ அங்கே நடைபெறாததற்கும் இதுவே காரணம். முத்து போன்ற பண்ணையார் வகை படங்கள் மொழியே தெரியாமல் தமிழ்நாட்டை விட நன்றாக அங்கு ஓடியதற்கும் அதே நிலபிரபுத்துவ பண்பாட்டு பின்னணிதான் காரணம். இப்போது சிக்கியிருப்பவர்களும் அத்தகைய உயர் குடும்ப பின்னணி கொண்ட நபர்கள் தான். அவர்கள் தான் இரண்டு கட்சியிலும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

போபர்ஸ் ஊழல் வெளி வந்தபோது எப்பேர்ப்பட்ட ராஜகுடும்பம், அவங்களாவது ஊழலாவது என்று கேட்டார்கள். எங்க அம்மாவுக்கு மைசூர் மகாராஜா கொடுத்த தங்க ஒட்டியானம் என்று விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவுக்கு விளக்கம் சொன்னார் புரட்சித் தலைவி. நான் தப்பு செய்யவில்லை, என் ஆதரவாளர்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன் என்று விடைபெறுகிறார் ஒபுச்சி. அரங்கம்தான் வேறே தவிர, லைட்டும் மாறவில்லை, செட்டும் மாறவில்லை. நாடகத்தின் கதை மட்டும் எப்படி மாறும்?

– கௌதமன்.

மேலும் படிக்க:

Japan minister resigns over misusing govt funds on make-up

2 Japanese Ministers Resign On The Same Day

Japan minister hit by sex club expenses scandal

என்கவுண்டர் எமன்கள் ! – கேலிச்சித்திரம்

2

மக்கள் எதிரி காவல்துறைபடம் : ஓவியர் முகிலன்

பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!

3

னது குற்றங்களை அம்பலப்படுத்திய மற்றொரு பார்ப்பனனைக் கோரமாகப் படுகொலை செய்துவிட்டு எந்தத் தண்டனையுமில்லாமல் விடுவிக்கப்பட்டு, தனது பஞ்சமாபாதகங்களைத் தொடரும் காஞ்சி சங்கராச்சாரி, தன்னை ஒரு “லோக குரு” என்று சொல்லிக் கொண்டு நாடு முழுவதும் சுற்றித்திரிகிறார்.

நாடறிந்த அரசியல் தரகனாகவும், அரசியல் விபச்சாரியாகவும், அந்நிய நாடுகளின் உளவாளி – கைக்கூலியாகவும் ஊழியம் செய்து பிழைக்கும் பார்ப்பன அரசியல் சதிகாரன் சுப்பிரமணிய சுவாமி, “நான் ஒரு பார்ப்பனன்; யாரிடம் வேண்டுமானாலும் உஞ்ச விருத்தி கேட்டு, யாசகம் பெற்று எப்படியும் ஜீவிப்பேன்” என்று நரித்தனமாகப் பேசுகிறார்.

“ஆம், நான் ஒரு பாப்பாத்திதான். என்னை யாரும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என்று சட்டப்பேரவையில் பகிரங்கமாகவே அறிவித்தார், ஜெயலலிதா. இதே திமிர்த்தனத்தோடு பல்வேறு கிரிமினல் குற்றங்கள் செய்துவிட்டு, கையுங்களவுமாகப் பிடிபட்ட பின்னரும், 18 ஆண்டுகள் ஜாரினியாகவும் ரஸ்புதீனுமாகவும் அரசபோகத்தில் மூழ்கித் திழைத்தார்கள், ஜெயலலிதாவும் சசிகலாவும். கடைசியில் அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டார், ஜெயா-சசி கும்பலின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நடுவர் ஜான் மைக்கேல் குன்ஹா. “நீதித்துறையில் ஒரு மாவீரன்” என்று நேர்மையான சட்ட நிபுணர்கள் போற்றும் வகையில், பார்ப்பன அதிகாரப் பரிவாரங்களின் குறுக்கீடுகள், நிர்பந்தங்களையும் மீறி, ஜெயா – சசி கும்பலின் மிக மோசமான சீண்டல்கள், குரூரமான ஆத்திரமூட்டல்களைச் சகித்துக்கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் கடுமையாக உழைத்து, குற்றவாளிகள் தப்பிவிடமுடியாதவாறு சட்டநுட்பங்களை ஆய்ந்து, இதுவரையிலான எல்லா சட்ட-நீதிகளிலும் விதிவிலக்கான ஒரு தீர்ப்பை, ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கி இருக்கிறார்.

brahma-sree-criminals

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆட்சியும் மாநிலத்தில் பொறுக்கி-கழிசடை அரசியல் மூலமாக ஜெயா-சசி கும்பலின் ஏகபோக ஆதிக்கமும் நிலைநாட்டப்பட்டு, இனித் தம்மை யாரும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என்று பார்ப்பன – பாசிச சக்திகள் ஆணவமாகப் பேசியும் எழுதியும் வந்தார்கள். அந்த நிலையில் ஜெயா-சசி கும்பலை அரசியல் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது, நடுவர் ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு. அந்த பார்ப்பன – பாசிச சக்திகள் என்ன சொல்லிக்கொண்டார்கள்? “பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது.” இப்படிப் பீற்றிக்கொள்ளும் பார்ப்பன சமூகம் தனது பிரதிநிதிகளாக சுப்பிரமணிய சுவாமி, காஞ்சி சங்கராச்சாரி ஜெயலலிதா போன்றவர்களைத்தான் முன்நிறுத்தியிருக்கிறது. இவர்களுக்கு மாறாக ‘திறமையும் தகுதியும் இல்லாத’ சமூகமாக, பார்ப்பனியத்தால் தள்ளிவைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜான் மைக்கேல் குன்ஹா, சகாயம், உமாசங்கர் போன்றவர்கள்தாம் திறமையும் தகுதியும் மட்டுமல்ல, நேர்மையும் உறுதியும் வாய்ந்தவர்கள்.

ஜெயா-சசி கும்பலுக்குத் தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டதோடு நின்றுவிட முடியாது. அக்கும்பல் 1996 வரையில் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிக்காகத்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறது. 1996- க்குப்பிறகு அது யோக்கியமானதாக மாறிவிட்டதா? அப்போதும் அதன் பிறகும் அடித்த கொள்ளையையும் செய்த கிரிமினல் குற்றங்களையும் கணக்கில் கொண்டுவந்து தண்டிக்க வேண்டியதில்லையா? இந்தத் தீர்ப்பை ஏற்று ஜெயா-சசி கும்பல் திருந்திவிட்டதா? இன்னும் தன்னை நிரபராதி என்று சொல்லிக்கொள்ளும் அக்கும்பல், தான் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்-கருப்புப்பணத்தைக் கொண்டு இந்தத் தண்டனையிலிருந்தும் விடுபடவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தானே எத்தனிக்கும்? எனவே, ஜெயா-சசி கும்பல் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்-கருப்புப் பணத்தையும் முழுவதுமாகப் பறிமுதல் செய்யவேண்டும். அப்போதுதான் அதன் கிரிமினல் குற்றங்கள் தொடர்வது தடுக்கப்படும். அதற்காகத் தமிழ் மக்கள் போராடவேண்டும். தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள் மீது அநீதியிழைக்கப்பட்ட நிரபராதியைப் போன்ற அனுதாபம் தோற்றுவிக்கப்படுவதையும் முறியடிக்கவேண்டும்.

அரசுப் பேருந்து எரிப்பு
காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க காலிகளால் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து

ஜெயா-சசி கும்பலின் முகத்தில் அறைந்தாற்போன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பார்ப்பனப் பரிவாரங்களும், ஜெயா-சசி கும்பல் வீசியெறிந்த எலும்புத் துண்டுகளைக் கவ்விக்கொண்டுள்ள எடுபிடிகளும் விசுவாசிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே, ஜெயா-சசி கும்பல் தன் மீதான வேறு பல கிரிமினல் குற்றவழக்குகளில் இருந்து ஏதேதோ தில்லுமுல்லுகள் செய்து, விடுதலையாகி வந்து, மீண்டும் முதலமைச்சரானதைப்போல நடந்துவிடும் என்று தமிழக மக்களை நம்பவைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இதுவொன்றும் ஜெயா-சசி கும்பலும் அதன் பார்ப்பன பாசிசப் பங்காளிகளும் சாதிக்கவே முடியாத நம்பிக்கையல்ல என்பதுதான் உண்மை.

இந்த உண்மையை, ஜெயா-சசி கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைப் பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்து, தண்டனையில் இருந்து தப்பித்துக்கொண்டு வந்தது, அதற்காக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்களையும் விலைக்கு வாங்கியது உட்பட அக்கும்பலின் சட்டத்துக்குப் புறம்பான எல்லாக் கிரிமினல் தனங்களையும் நினைவில் வைத்துள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஜெயா-சசி கும்பல் அ.இ.அ.தி.மு.க.வுக்குள் புகுந்து அதன் தலைமையையும் ஆட்சியையும் கைப்பற்றியதில் இருந்து, கடந்த மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் தனது சகபாடிகளான பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகளுக்கும் “அல்வா” கொடுத்தது வரை 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசியலில் மோசடிகள், பச்சைப் புளுகு – பித்தலாட்டங்கள் பலவும் செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை, பகற்கொள்ளை புரிந்துள்ளது. இவற்றோடு கட்சியின் அடிமட்ட எடுபிடிகள் முதற்கொண்டு உயர்ந்த மட்டத்திலுள்ள ஜெயா-சசி கும்பல் வரை இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளையும், (கறி-சாராய விருந்து, கள்ளவோட்டு-போலி அடையாள அட்டை, பணப்பட்டுவாடாவில் நிபுணத்துவம் என்று) கைதேர்ந்த தேர்தல் தில்லுமுல்லுகளையும் செய்து நாட்டிலேயே ஒரு பெரும் கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் குற்றக் கும்பலாகவே அ.இ.அ.தி.மு.க. உள்ளது.

அதோடு முக்கியமாக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லா தேசிய, பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், நிழல் மனிதர்கள், கருப்புப்பண-கள்ளச்சந்தை முதலைகள், கிரானைட் பி.ஆர்.பி., மணற்கொள்ளை வைகுண்டராஜன், சாராய முதலாளிகள் கர்நாடக மல்லையா மற்றும் ஆந்திர சுப்பாரெட்டி, ஏகபோக கரும்பு ஆலை அதிபர் சரத்பவார், உச்ச நீதிமன்ற நீதியரசர்களாகவும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளாகவும் உள்ள டெல்லி பார்ப்பனப் புள்ளிகள் ஆகியவர்களோடு “தனிப்பட்ட நட்பு” வைத்துக்கொண்டு சட்டத்துக்குப் புறம்பான அதிகாரமையமாக ஜெயா-சசி கும்பல் இவ்வளவு காலமும் தலைவிரித்தாடுகிறது.

இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளுக்காக இவ்வளவு காலத்துக்குப் பிறகாவது சட்டப்படி தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவை எதிர்த்தரப்பின் சூழ்ச்சி காரணமாக, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட பொய் வழக்குதானென்றும் கோயபல்சுத் தனமாகப் புளுகுப் பிரச்சாரம் செய்வதும், அவர் விடுதலையாகி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்று மக்களிடையே நம்பிக்கையூட்டுவதும் அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்களை “பிளாக் மெயில்” செய்யும் வகையில் ஒரு குற்றக்கும்பல் அராஜகமான “போராட்டங்கள்” நடத்துவதும் நாட்டில் பரவிவரும் கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் கலாச்சாரத்தை மேலும் வலுவாக்குவதுதான். கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரமுகர்கள் எல்லோருமே “தனக்கு எதிரான சூழ்ச்சி-சதி” என்று சொல்லித்தான் தப்பித்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.

நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னரே அறிவித்து “பந்த்-கடையடைப்புகள்,” வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதை எதிர்த்து ஆத்திரமடையும் நீதியரசர்களும் அரசு நிர்வாகமும் “பயங்கரவாதம், துப்பாக்கிக் கலாச்சாரம்” என்றெல்லாம் பீதிகிளப்பும் பார்ப்பனிய நியாயவான்களும், அறிவுஜீவிகளும், ஊடகங்களும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஜெயா-சசி கும்பலின் தலைமையிலான கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் படைக்கு உடந்தையான செயலாகவே உள்ளது.

இவற்றைத் தனித்துப் பார்க்கக்கூடாது. இப்போது நாட்டின் அனைத்து சமூக,பொருளாதார, அரசுக் கட்டுமானங்களும் ஒட்டுமொத்தக் கட்டமைப்புமே கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் தேர்தல் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தேர்தல் அரசியல் கட்டுமானங்களும் சீரழிந்து போயுள்ளதையும் காணவேண்டும். ஏற்கெனவே உள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் ஆளமுடியாமல் போனதையும், ஆளும் நியாயவுரிமையை இழந்துவிட்டதையும், ஆளத்தகுதியிழந்து போயுள்ளதையும் வலியுறுத்த வேண்டும்.
__________________________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014தலையங்கம்
__________________________________________________

இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

1

‘கோயம்பேடு சந்தையில் விதிமுறைகளை மீறி கருவாடு விற்கப்படுகிறது, அது அங்கு காய்கறி வாங்கப் போகும்  சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 19-ம் தேதி, கோயம்பேடு சந்தையில் விதிமீறி விற்கப்பட்டுக் கொண்டிருந்த ரூ 20,000 மதிப்புள்ள கருவாடு பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர், இந்து செய்தி எதிரொலி என்று வெற்றி அறிவிப்பு வெளியிட்டது அந்நாளிதழ்.

இந்துவின் அசைவ உணவு மீதான வன்மம் தொடர்பான இந்த பார்ப்பன ஆதிக்கத் திமிரைக் கண்டித்து வினவில் வெளியான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. வினவிலும் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இந்துவைக் கண்டித்து பேஸ்புக்கில் பலர் ஸ்டேட்டஸ் போட்டனர்.

பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த  எதிர்வினைகளை தொகுத்து வினவில் பதிவுகளாக வெளியிட்டோம், அவை வாசகர்களிடையே மேலும் விவாதத்தை கிளப்பின.

இந்த விவாதங்களில் வெளியான கருத்துக்கள், கேள்விகளை பொதுவாக பார்ப்பனர்கள் முன்வைக்கும் அசைவ உணவு மீதான தீண்டாமை கருத்துக்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக கோயம்பேடு வியாபாரிகள், அங்கு கருவாடு சப்ளை செய்யும் வணிகர்கள், அங்கிருந்து கருவாடு வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், காய்கறிக் கடைக்காரர்கள், தரைக்கடை வணிகர்கள் ஆகியோரிடம் பேசினோம்.

இந்தப் பதிவுகளை ஒரு ஆவணப்படமாக தொகுத்திருக்கிறோம்.

இதன் டிவிடி விற்பனை, திரையிடலைத் தொடர்ந்து தற்போது இணையத்தில் முழுமையாக வெளியிடுகிறோம். நண்பர்கள் பாருங்கள், பரப்புங்கள், கருத்து தெரிவியுங்கள்….

ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும்  பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.

நன்கொடை அனுப்ப வேண்டிய விபரங்களை அறிய இந்த சுட்டியில் பார்க்கவும்.

முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

135
ஹீரின் பேகம்
2. ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”

மற்ற மதத்தவர்களை விட முசுலீம்கள் மட்டும் தமது மதத்தை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள் என்ற கருத்து பொதுவில் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்துமதவெறியர்களது மூலதனமாகவும் செயலாற்றுகிறது. இசுலாமிய கடுங்கோட்பாட்டு அடிப்படைவாத இயக்கங்களும் இத்தகைய கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே செயல்படுபகின்றன. மற்றவரது பண்பாடு, வழிபாடு, பண்டிகைகளை முசுலீம்கள் வெறுக்கிறார்கள் என்பதாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்கிறது. 

இவை உண்மையல்ல என்பதை நடைமுறை மூலம் நிரூபிக்க விரும்பினோம். தீபாவளி அதற்கு பொருத்தமான நேரம். இதோ சென்னை வாழ் இசுலாமிய மக்கள் பேசுவதைப் பாருங்கள். இடையே ஓரிரு கிறித்தவ, ‘இந்து’க்களும் கூட உண்டு.  உழைக்கும் மக்களிடையே மதவெறிக்கும், மதவாதத்திற்கும் வேலை இல்லை என்பதை அவர்கள் வாயாலேயே கேளுங்கள்!

ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?

– வினவு

அலிப் உசேன்
அலிப் உசேன், வயது 14: “லச்சுமி பட்டாசு வெடிச்சேன். ஈஸ்வரி ஆண்டி ஜாங்கிரி, பொங்கல், பழமெல்லாம் கொடுத்தாங்க. அவங்க செஞ்சா நமக்கு, நம்ம செஞ்சா அவங்களுக்கு….”
சாதிக்
சாதிக், வயது 45, பூஜை பொருட்களை விற்பவர்: “பிரண்ட்ஷிப்தான் சார் முக்கியம். மனசு தான் காரணம். மத்தபடி தீபாவளி பலகாரம் சாப்டறதுல பிரச்சினையில்லை. இந்த தொழில் செய்றதுல என்ன தப்பு சார்? நான் திருடுறனா இல்ல பொய் சொல்றனா? இந்த தொழில்ல முதலீடு கம்மி. ஜமாத்துல கூட கற்பூரம், குங்குமம், திருஷ்டிக் கயிறு விற்க கூடாதுங்குறாங்க. வெறுமன தேங்காயும், வெத்தலையும் வித்தா யாரு வருவாங்க? பக்கத்துல பூஜை கடை வைச்சிருக்குறவரும் டிஎன்டிஜேவுல இருக்குறவரோட தம்பிதான். போரூருக்கு பக்கத்துல அந்த டிஎன்டிஜே பாயும் இதே மாதிரி கடை வெச்சிருக்கார். நமக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டம்.”

 

ரியாஸ்
ரியாஸ், வயது 34, ஆட்டோ டிரைவர்: “அண்ணன் தம்பியா பழகுறோம். அதனால தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வாங்குவோம் சார். தர்காவுக்கு நான் போக மாட்டேன், போறவங்கள தடுக்க மாட்டேன்.”
முஜீப்
முஜீப், வயது 32, அல் அமீன் மட்டன் ஸ்டால்: “நாங்க கொடுத்தா அவங்களும், அவங்க கொடுத்தா நாங்களும் சாப்பிடுறது காலங்காலமா நடக்குது. இது ஒரு சந்தோசமான நாள் சார். இப்பத்தான் பக்கத்து வீட்ல கறி வாங்கிட்டு போனாங்க. அங்க இருந்து எங்க வீட்டுக்கு பணியாரம் வந்திருக்கும். அத சாப்பிட்டா ஹரம்னு சொன்னா அதான் தப்பு. இப்போ நானே பிரியாணி தர்றேன். ருசியே இல்லாட்டி கூட பாய் நம்ம மதிச்சு தர்றாருனு வாங்கி சாப்பிடுவீங்க. இது பரஸ்பரம் இருக்கணும்.”

 

கலாவதி
ஆர். கலாவதி, வயது 45, வருமான வரித்துறையில் வேலை, இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர்: “மனசுதான் சார் காரணம். எல்லோருக்கு ரத்தம் செவப்புதானே? நான் இங்கயே பொறந்து வளந்தவ. வேண்டாம் வேண்டாம்னாலும் கூப்பிட்டு கொடுப்பாங்க. நாங்களும் கிறிஸ்துமசு அப்போ கேக்கும், பிரியாணியும் கொடுப்போம். சாமிக்கு படைக்கறதுக்கு முன்னாலயே தனியா எடுத்ததுன்னு சொல்லித் தருவாங்க. உறவுதான முக்கியம்?”
பார்த்திபன்
பார்த்திபன், வயது 25, ஏர்செல் மார்க்கெட்டிங் வேலை: “அப்பா இறந்துட்டாரு. ஆனா அவரோட பிரண்டு சுல்தான் டெய்லர் அண்ணனுக்கு காலைல ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்தேன். என்னோட பெஸ்டு பிரண்டு முகமது யாக்கோப். அவங்க வீட்டு கிச்சன் வரை போய் வருவேன். மாமா, மச்சானுதான் பேசிக்குவோம். அவனுக்கு நாங்க வச்சிருக்க பேரு கெளவி”
ஜாபர் நிசா
ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க இல்லியா”
ஜாஹீர் உசேன்
ஜாஹிர் உசேன், 21, மெக்கானிக்கல் டிப்ளமோ: “போன வருசம் தந்தாங்க. இந்த வருசம் வரல. ஏன்னா ஊருக்கு போயிட்டாங்க. போன வருசம் லட்டு, அதிரசம், சுண்டல் எல்லாம் வந்துச்சு. வெடியெல்லாம் சின்ன வயசுல போட்டேன். இப்போ இன்ட்ரஸ்டு இல்லை. எனக்கு திக் பிரண்டு சக்தி சரவணன், மாமா மச்சானுதான் கூப்பிட்டுக்குவோம். மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்.”
ஹீரின் பேகம்

ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”

 

 

 

 

 

முகமது இப்ராஹிம்
முகமது இப்ராஹிம், வயது 50, லிப்ட் டெக்னீசியன், ஹீரின் பேகத்தின் கணவர்: “சாப்பாட்டுல என்ன சார் இருக்கு? வந்தா விடக் கூடாது. அநியாயமா சம்பாதிக்கிறதுதான் தப்பு”

 

ஜீனத்
ஜீனத், வயது 40: “நாங்க முசுலீம்தான். என்னோட வூட்டல இருக்குற சரசாகிட்ட இருந்து அதிரசம், முறுக்கு வந்துச்சு. மதிங்கிற குடும்ப நண்பர் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாரு. பூசை பண்ணி சாப்பிட கூடாது தான். ஆனா எம்மதமும் சம்மதம்னு இருந்தா சாப்பிடலாம். நான் சாப்பிடுவேன். அப்பிடி பாத்தா என் வீட்ட இந்துக்களுக்கு வாடகைக்கே விடக் கூடாது. அதெல்லாம் முடியுமா. சின்ன விசயத்த பெரிசாக்குறாங்க. எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்.”

 

பஷீர் அகமது
பஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை  5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன். ஆனா முன்ன இந்து பிரன்ட்ஸ்ங்கக்கூட ஒரே கிளாஸுலதான் குடிப்பேன். நாகூர் தர்க்காவுக்கு முன்ன போனேன். இப்ப இல்ல. ஆனா என் பொண்ட்டாட்டி கூப்புட்டதால…. இப்ப போனேன். ஊர்ல்ல இருந்து தம்பிங்க வந்தா அவங்ககூட.. தர்க்காவுக்கு போவேன், இல்லனா அவங்க கோவிச்சுக்குவாங்க. தவ்ஹீத் ஜமாத்துல சேந்தாலும் நான் சூனியத்தை நம்புறேன். அவருக்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) யார்னா சூன்யம் வைச்சா..அப்ப.. தெரியும்! தவ்ஹீத் ஜமாத் ஐ நிர்வாகிங்க கூட வரதட்சணைக் கொடுத்துதான் கல்யாணம் பண்ணாங்க!

 

muslim woman

– புகைப்படங்கள், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்.

கோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்

9

“ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம்; ஆனால், நாம்தான் மேலும் ஐக்கியப்பட்டு விட்டோமே? G-7, G-5, G20 என்று வித விதமான G-க்களின் கீழ் இந்தியாவும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் நாம் ஏன் G-ALL என்பதன் கீழ் ஏன் நாம் ஒன்று சேரக் கூடாது”

மோடித்துவம்
மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன

இது மோடி சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. வளர்ந்த (Developed) நாடுகள், வளரும் நாடுகள் (Developing) என்றெல்லாம் இருப்பதற்கு பதில் ஒரேயடியாக எல்லா நாடுகளுக்குமான ஒரு தளம் வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோடி. தப்பில்லை. ஆனால், அது தான் ஐக்கிய நாடுகள் சபை என்கிற பேரில் ஏற்கனவே ஒரு கந்தாயம் இருக்கிறதே என்று மண்டையைச் சொரிந்திருக்கிறார்கள் பிற நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும்.

மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன. சில உதாரணங்களைப் பாருங்கள்:

”புவி வெப்பமயமாதல், அதனால் பருவநிலை மாற்றம்…. இப்படிச் சொல்வது சரிதானா? உண்மை என்னவென்றால், நம்ம கிராமத்தில் வயதானவர்கள் போகப் போக குளிர் அதிகம் என்கிறார்கள். உண்மையில், வயதாக ஆக அவர்களிடம்தான் குளிரைத் தாங்கிக் கொள்ளும் திறம் குறைந்திருக்கிறது. இது சூழல் மாற்றம் தானா, இல்லை நாம்தான் மாறியிருக்கிறோமா? என்கிற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்” – டோக்கியோவின் தூய இருதய பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர் 2-ம் தேதி ஆற்றிய உரையில் இருந்து.

”பருவநிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நதியை தாயாகவும், நிலாவை மாமாவாகவும், சூரியனை தாத்தாவாகவும் போற்றுவதை மறந்ததால்தான் பிரச்சனை” – செப்டெம்பர் 5-ம் தேதி குழந்தைகளோடு பேசும் போது தெறித்த தெறிப்பு இது.

மோடித்துவம்
“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி.

உலகெங்கும் வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் வரை சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது குறித்தும், அதையொட்டி உற்பத்தித் துறைத் தொழில்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது நமது ‘தல’ உலகத்தின் உச்சி மண்டையில் கடப்பாறையை சொருகுகிறார். ஒருபடி மேலே போய் யோகாசனம் செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உலகை காப்பாற்றலாம் என்று சமீபத்தில் சொல்லி விஞ்ஞானிகளை “ஙே” என்று விழிக்க விட்டுள்ளார்.

“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி. பூடானுக்குச் சென்றவர் அங்கே ஆற்றிய உரையில் அந்த நாட்டை நேபாள் என்று மூன்று முறை குறிப்பிட்டு புவியியல் விஞ்ஞானிகளை திகிலில் உறைய வைத்தார்.

கடந்தாண்டு அக்டோபரில் பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தக்‌ஷசீலம் பீகாரில் இருந்ததாகவும், போரஸ் கங்கைக் கரையில் நடந்த போரில் தோல்வியுற்றதாகவும், மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தரை குப்த வம்சத்தைச் சேர்ந்தவராகவும் பேசி ஒரே நேரத்தில் வரலாற்று அறிஞர்களையும் சமூக ஆய்வாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

புஷ்-இசம்
“கவலைப்படாதே அமெரிக்கா….” “மனிதர்களும் மீன்களும் அமைதியாக சேர்ந்து வாழ முடியும்னு எனக்குத் தெரியும்”

இவற்றை வெறுமனே விவரப் பிழைகள் அல்லது மறதி என்று கடந்து செல்ல முடியாது. ஜார்ஜ் புஷ்ஷை நாம் அறிந்திருப்போம். உலக வரலாறே கண்டிராத மாபெரும் கோமாளி! அவரது கோமாளித்தனங்கள் புஷ்ஷிசம் என்ற பெயரில் இணையத்தில் மிகப் பிரபலம். ஆனால், கோமாளி புஷ்ஷின் தனிப்பட்ட செயல்பாடுகள் நகைப்புக்குரியதாக இருந்த அதே சமயத்தில் அமெரிக்க அதிபர் எனும் வகையில் அவர் முன்னெடுத்த அரசியல் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களை சொல்லொணாத் துயருக்கு உள்ளாக்கின.

அன்று புஷ் துவங்கி வைத்த நிகழ்வுகளின் தொடர்ச்சி தான் இன்றும் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமேலாதிக்க திட்டத்தின் மிகக் கேந்திரமான செயல்பாடுகளைத் துவக்கி வைத்த பாசிஸ்ட் என்கிற கோணத்தில் அல்லாமல், உள்நாட்டு அமெரிக்கர்கள் அவரது கோமாளித்தனங்களை கேலி செய்வதில் திளைத்துக் கிடந்தனர். அவரது புவியியல் முட்டாள்தனம், பொருளாதார கோட்பாடுகள் குறித்த அறியாமை பற்றி அமெரிக்க முதலாளித்துவ ஊடகங்கள் கேலி கிண்டல்களை அவ்வப்போது வெளியிட, சாமானிய அமெரிக்கர்கள் இணையத்தில் அவற்றை மேலும் மெருகேற்றி பலவாறான நகைச்சுவைத் துணுக்குகளை உற்பத்தி செய்து திருப்திப்பட்டுக் கொண்டனர்.

மோடித்துவம்
மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை.

தற்போது மோடியின் தேர்தல் கால உத்திரவாதங்களும், அவர் மேல் மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளும் தகர்ந்து வரும் நேரம். மெல்ல முதலாளித்துவ ஊடகங்கள் அவரது உளறல்கள் மெல்லிய நகைச்சுவையாக முன்வைத்து கிச்சுகிச்சு மூட்டத் துவங்கியுள்ளன. இணையவாசிகள் மோடித்துவா என்ற பெயரில் கிண்டலடித்து சுயமகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியுள்ளனர்.

மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை. பாசிஸ்டுகள் எப்போதும் உள்ளுக்குள் கோழைகளாகவும் கோமாளிகளாகவுமே இருப்பார்கள் – விதிவிலக்கின்றி. எனினும் அவர்களது முட்டாள்தனங்களை பகடி செய்யும் அதே நேரம் அவர்களிடமிருந்து வெளிப்படும் கேனத்தனமான கருத்துக்களின் அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும், அதன் பொருளாதாய விளைவுகள் (Material effect) என்னவென்பதையும் புரிந்து கொள்ளவது அவசியம்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிவைக் குறித்து தனது ’கர்மயோகம்’ என்ற நூலில் இவ்வாறாகச் சொல்கிறார் மோடி –

moditva-8”நான் அவர்கள் தங்களது வருமானத்திற்காக இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை நம்பவில்லை. அப்படியிருந்தால் இது போன்ற வேலையை தலைமுறை தலைமுறையாக அவர்கள் செய்யமாட்டார்கள். ஏதோவொரு சந்தர்பத்தில் யாரோ ஒருவருக்கு அது (மலமள்ளுவது) ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும் கடவுளுக்காகவும் தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். இது கடவுளால் தமக்கு அளிக்கப்பட்ட வேலை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மலமள்ளும் வேலை என்பது உள்ளார்ந்த ஆன்மீக அனுபவம் என்பதை உணர்ந்தே அவர்கள் நூற்றாண்டுகளாக செய்து வருகிறார்கள். இது தலைமுறை தலைமுறையாக இவ்வாறே தொடர்ந்திருக்க வேண்டும்…”

இது வெறும் கோமாளித்தனமல்ல. சமூகத்தின் கீழ் அடுக்கில் அழுத்தப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இழிந்த காரியங்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தின் மேல் பார்ப்பனிய இந்துப் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் வன்மத்திலிருந்தே இப்படி ஒரு கருத்து உதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் கோரும் இந்து ஒற்றுமை என்பதன் திருத்தமான விளக்கம் இது – அந்தந்த வர்ணத்தவர்கள் தங்களுக்கு ‘விதிக்கப்பட்ட’ கடமைகளை ஆற்றுவதன் மூலம் வீடுபேறை அடைய முடியும் என்பதுதான் பார்ப்பன இந்துமதம் போதிக்கிறது. இந்த தத்துவத்தின் நடைமுறை அர்த்தம் பார்ப்பான் மணியாட்டுவதும் தலித்துகள் பீயள்ளுவதும் தான்.

காலமாற்றத்திற்கு உட்பட்டு பார்ப்பனியம் தனது படிநிலைச் சாதி ஒடுக்குமுறையை முன்பைப் போல் அதே விகாரமான வடிவத்தில் முன் தள்ளுவதில்லை. சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும் சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும் போட்டு சூத்திரனைக் கீழே உட்காரச் சொல்லாமல் சொல்லி “நாசூக்காக” நடந்து கொள்ளும் சங்கர மடத்தைப் போல பார்ப்பனிய மேலாதிக்கம் நாசூக்கான முறையில் தான் தற்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.

சு.சாமி - ஜெயேந்திரன்
சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும்

பொன்னார் - ஜெயேந்திரன்
சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும்

சங்கராச்சாரியே மௌனக் குசு விடும் காலத்தில் இத்தனைப் பட்டவர்த்தனமான வார்த்தைகளில் நாறடிக்கும் மோடியின் வார்த்தைகளை வெறும் கிறுக்குத்தனமான  உளரல்கள் என்று நாம் நகைக்க முடியுமா?

மோடித்துவம்
பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான்.

பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களது கோமாளித்தனத்தின் சமூகபாத்திரமல்ல; கொலைகாரத்தனத்தின் சமூகபாத்திரமே நமது அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. தற்போது மோடியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாயைகள் ஒவ்வொன்றாக அகலத் துவங்கியுள்ளன. இந்தத் தருணத்தில் அவரைச் சுற்றி அவ்வாறான மாயைகளைப் பின்ன கைக்கருவிகளாகச் செயல்பட்ட முதலாளித்துவ ஊடகங்கள் மெல்ல மெல்ல, மோடியின் உண்மையான முகத்தை நகைப்புக்குரிய ஒன்றாக சித்தரிக்க முயன்று வருகின்றன.

நாம் விழிப்போடிருந்து அந்த முகத்தின் உண்மையான பண்பான கொலைகாரத்துவத்தை இனங்கண்டு கொள்வதோடு அம்பலப்படுத்தவும், எதிர்த்து முறியடிக்கவும் முன்வர வேண்டும்.

–    தமிழரசன்.

அதிமுக-வை எதிர்த்தா என்கவுண்டர் – திருச்சி அம்மா போலீசின் திமிர்

17

ழல் குற்றவாளி பாசிச ஜெயா கைது நடவடிக்கைக்குப்பின் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் ஆட்டம் போட்டது தமிழக காவல்துறை!

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் அ.தி.மு.கவின் அடியாள் படையாகவே செயல்பட்டு அம்பலப்பட்டு போயுள்ளனர்.

திருச்சி மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்த முயலும் பா.ஜ.க அரசின் சதித்செயலை கண்டித்து அக்டோபர் 30.09.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி பெற்று இருந்தனர். இதற்கிடையே ஜெயாவை குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைத்தது பெங்களுரு நீதிமன்றம். கைதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தபோவதாகவும், எனவே, பு.ஜ.தொ.முவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்வதாகவும் கூறினார், அமைச்சர் கோகுல இந்திராவின் கொழுந்தனாரும் திருவெறும்பூர் ஆய்வாளருமான பாஸ்கர்.

எனவே, பு.ஜ.தொ.மு தோழர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் தண்டபாணி ஆகியோர் காவல் ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து, திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த தங்களுக்கு அனுமதியளிக்கவேண்டும், கொடுத்த அனுமதியை மறுப்பது ஜனநாயக விரோதமானது என எடுத்துக்கூறினர்.

அதிமுக ஆய்வாளர் பாஸ்கர், “என்னய்யா ரொம்ப அறிவாளித்தனமா பேசுற, உங்க தலைவர உள்ளபுடிச்சி போட்டா சும்மா இருப்பியா, அம்மா வெளியவரவரைக்கும் யாருக்கும் அனுமதி கிடையாது. அரசாங்கம், போலீசோட அனுசரிச்சு போங்கயா” என கூறினார்.

தோழர் தண்டபாணி, “மரியாதையா பேசுங்க, எங்கள் தலைவர்கள் மக்கள் சொத்த கொள்ளையடிக்கிற சமூகவிரோத செயல செய்யமாட்டாங்க! மக்களுக்கு பொறுப்பான அதிகாரி நீங்க, அத மறந்துட்டு பேசாதீங்க, கோடிக்கணக்கான தொழிலாளர் பிரச்சனைக்காக நாங்க மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளதை தடுப்பது நியாயமில்லை. தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிங்க” என்றார்.

ஆத்திரமான அந்த ஆய்வாளர், “நான்யார் தெரியுமுல்ல, என் படிப்பு, உத்யோகம், சர்வீஸ் தெரிஞ்சு பேசுடா, அமைச்சர் கோகுல இந்திரா கொழுந்தன்னா டிப்பார்ட்மென்ட்டே யோசிக்கும். இந்த சட்டையபோட்டுதான் சம்பாரிக்குனுமுன்னு அவசியமில்லடா. பெரிய மசுரு மாதிரி என்கிட்டயே பேசுர, கைய, கால ஒடைச்சி உள்ள தள்ளிடுவேன்” என எகிறினார்.

இவர் செயலை கண்டித்து திருச்சி நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி அம்பலப்படுத்தினர் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள். பதறிப்போன அந்த அதிகாரவர்க்க சூரப்புலி பாஸ்கர் எரிச்சலடைந்தார்.

ஆய்வாளரை கண்டித்து போஸ்டர்
ஆய்வாளரை கண்டித்து HRPC போஸ்டர்

அடுத்த நாள் காலையிலேயே போலீசை வீட்டுக்கனுப்பி தோழர் தண்டபாணியை கைது செய்து மாலை வரை திருவெறும்பூர் காவல்நிலையம் கொண்டுவராமல் உறவினர் வீடு, போலீசு வாகனம் என சட்டவிரோதமாக அடைத்து வைத்து…”ஏன்டா என்னோட பவரைபத்தி தெரியாம மோதுர, என் பேரு, என் குடும்பத்தையே போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கயா, யாரெல்லாம் சேர்ந்து எனக்கெதிரா போஸ்டர் ஒட்னீங்க… உன்னை போட்டுதள்ள ஒரு குண்டு போதும், எனக்கு ஒரு என்கொயரிதான்… மனித உரிமை, மயிறு உரிமைன்னு இனியும் பேசுனா கொன்னுடுவேன்” என மிரட்டினார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு பேசிய போதெல்லாம் தாங்கள் கைது செய்யவில்லையென்றும் இரவு ரோந்து சென்றதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூசாமல் பொய் பேசினார்.

இவரது சட்டவிரோத நடவடிக்கையை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து கண்டித்தனர் வழக்குரைஞர்கள். ‘ “ஆமாம் கைது செய்திருக்கிறார்கள், கோர்ட்டுக்கு கொண்டுவருவார், அங்கே பாருங்கள்” என நழுவிகொண்டார் திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர். இதைச் சொல்ல அவருக்கு பல மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

இறுதியாக, தனக்கெதிராக போஸ்டர் ஒட்டியது என்று வழக்கு போடாமல் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாக அ.தி.மு.கவை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக கொஞ்சமும் நேர்மையே இல்லாமல் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

pala tiruchi 1
இந்த சுவரொட்டிக்குத்தான் அதிமுக அடிமைகளை வைத்து புகார் பெற்றுக் கொண்டு வழக்கு போட்டார் அந்த அமைச்சர் கொழுந்தன்.
அதிமுக ரவுடிகளைக் கண்டித்து மகஇக போஸ்டர்
அதிமுக ரவுடிகளைக் கண்டித்து மகஇக போஸ்டர்

இதற்கேற்ப தனது கூட்டாளியும், கட்டப்பஞ்சாயத்து புதுபணக்கார ரவுடியுமான கிருஷ்ணா சமுத்திரம் அ.தி.மு.க பஞ்சாயத்துத் தலைவர் சிவாஜி என்பவரிடம் பொய் புகார் பெற்றுக்கொண்டார். இப்படி அ.தி.மு.க காலிகளும், திருவெறும்பூர் காவல் ஆய்வாளரும் யாருக்கு யார் எடுபிடி என்று தெரியாத வண்ணம் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து போயுள்ளனர். மேலும் தனது நண்பரான துவாக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், மற்றும் துவாக்குடி ஆய்வாளர் மூலமாக பொய்புகாரின் அடிப்படையில் பகுதி தோழர்கள் சாகுல் என்பவரை இதே பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தது. தாஸ் என்ற தோழரை கைது செய்ய தேடியபோது அவர் இல்லாததால் அவர் தம்பிகள் இருவரை கைது செய்து, ‘ தாஸை ஒப்படைச்சிட்டு இவன்களை கூட்டி போ ‘ என சட்டவிரோதமாக பிணை கைதி போல அடைத்து வைத்தார் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார். அப்பகுதி மக்களை திரட்டி தோழர்கள் ஆய்வாளரின் இச்செயலை கண்டித்த பின்பே அவர்களை விடுவித்தனர். மேலும் சிலரை நள்ளிரவில் வீடு புகுந்து தேடியுள்ளது. பெண்கள், குடும்பத்தினரை அவமானப்படுத்தி துன்புறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் சட்டவிரோதமாக கடத்தி, கொலை மிரட்டல் விடுத்த ஆய்வாளரின் அராஜகத்தை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்பினருடன் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் மாவட்ட கண்காணிப்பாளரை மறுநாள் சந்தித்து முறையிட்டனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை -:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்

“உங்கள் புகாரினை விசாரிக்கிறேன், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கிறேன். உங்கள் தோழர்களை பிணையில் விட எதிர்க்க மாட்டோம்” என உறுதியளித்த பின்பே தோழர்கள் கலைந்து சென்றனர். பத்திரிக்கை-ஊடகங்கள் மூலமாகவும் நமது தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டும் அரண்டுபோன அந்த சூரப்புலி அவசர அவசரமாக தானே செலவு செய்து திருவெறும்பூர், துவாக்குடி ஆய்வாளர்கள் மீது பொய் புகார் கொடுத்த ம.க.இ.கவினரை கண்டிக்கிறோம் என பொது மக்கள் பேரில் போஸ்டர் ஒட்டி மேலும் அம்பலப்பட்டுபோனார்.

போலீஸ் போஸ்டர்
போலீஸ் போஸ்டர்

மக்களோ… “ம.க.இ.க காரன் பேரு, போன் நம்பர் போட்டு தில்லா ஒட்டுவான், இந்த லஞ்சபேர்வழிக்கு எந்த பொதுமக்கள் போஸ்டர் ஒட்டுவான்” என காரி உமிழ்ந்தனர்.

சி.பி.எம், விடுதலைச் சிறுத்தைகள். த.மு.மு.க மற்றும் மாற்றுக் கட்சியினர் பலரும், “நாங்களும் இவனை எப்படி கண்டிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டுருந்தோம். வகையா ம.க.இ.க கிட்ட மாட்டிகிட்டான், விடாதீங்க” என தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அ.தி.மு.க ஆய்வாளர் பாஸ்கர், மட்டுமல்ல காவல்துறையே சமூகவிரோத கும்பலாக சீரழிந்து கிடப்பதையும், இதனை ஒழிக்காமல் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை என்பதை விளக்கியும் திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.

அம்மா போலீஸ்
அம்மா போலீஸ் – படம் : ஓவியர் முகிலன்

செய்தி
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திருச்சி.
தொலைபேசி: 9487515406

சிஆர்ஐ பம்ப்ஸ்… தொழிலாளிகளிடம் எடுபடாது உன் வம்பு !

5

cri-ndlf-union-stand-1

சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் உயர்ந்த செங்கொடி..!

கோயமுத்தூர் சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் ஒரு கிளை அமைந்துள்ளது. இதில் சுமார் 150 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேற்படி நிறுவனத்திற்கு சின்னவேடம்பட்டி உள்பட ஆறு கிளைகள் கோவையில் மட்டும் இவை போக சீனா வில் ஒரு கிளை என மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. கோவையில் பம்ப் உற்பத்தியில் தன்னிகரற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்த பிரமாண்டமான வளர்ச்சிக்கு சின்னவேடம்பட்டி கிளைத் தொழிலாளர்களே அடித்தளமாக உள்ளனர்.

டி‌வி விளம்பரங்களில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் “சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ்” எனப் பெருமிதமாக அறிவித்து கம்பீரம் காட்டுவார்கள். ஆனால் இத்துணை பெருமைகளையும் உணர்வோடு உழைத்து உயிரால் இழைத்து இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்த கொணர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான சீருடை இல்லை. பாதுகாப்பு காலணிகள் இல்லை, நியாயமான சம்பளம் இல்லை. 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் இல்லை. இதனால் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் கோபம் கொண்ட முதலாளி சௌந்திரராஜன் கம்பெனி பக்கமே கடந்த 2½ வருடங்களாக வருவதே இல்லை. சங்கத்தை அங்கீகரிக்கவும் இல்லை. கம்பெனியின் முன்னால் தொழிற் சங்க கொடி மரமும், பெயர்ப்பலகையும் வைப்பதற்கு சரவணம்பட்டி காவல்துறை மூலம் தடுத்து விட்டார். சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் என்பது ஒரே நிறுவனம். ஒரே பதிவு எண்ணில் செயல்படுகிறது. ஆனால் போனசை பொறுத்த மட்டில் இதர ஆறு கிளை நிறுவனங்களுக்கும் 30% போனஸ் வழங்கப்படும். உரிமை கேட்ட சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் நட்டக் கணக்கு காட்டி 8.33% போனஸ் கொடுப்பார்கள்.

நாம் தொழிலாளர் துறையில் சமரச அதிகாரி முன்பு தொடர்ந்து கம்பெனியின் வரவு செலவு அறிக்கை கேட்டோம். நிர்வாகத்தின் பிரதிநிதி வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் கையால் எழுதி இதுதான் பேலன்ஸ் ஷீட் என தாக்கல் செய்து நட்டக் கணக்கு காட்டினார். உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிற கார்ப்பரேட் நிறுவனம் குறைந்தபட்ச உரிமைகளான சீருடை காலணி கேட்டதற்கு வெள்ளைத்தாளில் தனது வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த செயல் குறித்து துளி கூட கேவலப்படவே இல்லை. உடனே சங்கத்தின் சார்பில் சி‌ஆர்‌ஐ நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட் விவரங்களை எடுத்து தாக்கல் செய்தோம். உடனே நிர்வாகம் எரிச்சல் அடைந்து மழுப்பியது. தங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது என அவர்கள் தணிக்கை அறிக்கையின் மூலமே நிறுவினோம். ஆனாலும் கூடுதல் போனஸ் தர முடியாது என்றனர்.இரண்டு முறை சமரச அதிகாரி முன்பு மீறிவு அறிக்கை பெறப்பட்டு சென்னைத் தீர்ப்பாயத்தின் முன் வழக்கு நிலுவையில் உள்ளது.

மூன்றாவது முறையாக இந்த வருடமும் 2013-2014 சின்ன வேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ் அறிவித்து இதர கிளைகளுக்கு 30% மேல் போனஸ் வழங்கினர். சங்கத்தை கலைத்து விட்டு வாருங்கள் மொத்தமாக எல்லா போனசையும் வழங்குகிறோம் என நிர்வாகம் தனது அல்லகைகள் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது.

மூன்றாவது முறையும் நிர்வாகம் குறைந்த போனசை வழங்கி தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்தமைக்கு பதிலடி கொடுக்க சங்கம் முடிவு செய்தது.

cri-ndlf-union-stand-4

கொடிக்கம்பம், அறிவிப்பு பலகை வைக்க தடையாக இருக்கும் மாநகராட்சி, சரவணம்பட்டி காவல்துறை, நிர்வாகம் என அனைவரையும் எதிர்த்து நிற்பது எனவும் மீறுவது எனவும் முடிவு செய்தோம்.

cri-ndlf-union-stand-3

21-10-2014 அன்று காலை 8 மணிக்கு கம்பெனி முன்பு புஜதொமு பெயற்பலகையும், அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியை ஏற்றி பறக்க விட்டு வயிற்றில் அடித்த முதலாளிக்கு நெற்றியில் அடித்து பதில் சொன்னோம்.

cri-ndlf-union-stand-6

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் இராஜன் பெயர்பலகை திறந்து வைத்தார். மாவட்டக் குழு தோழர்கள் கோபிநாத், சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். சி‌ஆர்‌ஐ கிளைச் செயலாளர் தோழர் குமாரவேல், கிளைத்தலைவர் தோழர் மூர்த்தி மற்றும் தோழர்கள் ரமேஷ், நாகராஜ் எனத் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

cri-ndlf-union-stand-2

22-10-2014 தினகரனில் வந்த செய்தி

news

கோவையின் SRI கிளையில் தமிழகத்திலேயே அதிகமான போனசாக 60% பெற்று கொடுத்து புஜதொமு வல்லமை பெற்று திகழும் அதே கோவையில் இன்னொரு நிறுவனமான் சி‌ஆர்‌ஐ கிளையில் மிகக் குறைந்த போனசை மூன்று வருடங்களாக பெற்று முதலாளித்துவத்தின் கொடுந்தாக்குதலுக்கு ஆட்பட்டும் ஒற்றுமை குலையாமல் உறுதியாக உயர்ந்து நிற்கிறது. முதலாளிகளின் லாப வெறிக்கு வரைமுறையோ எல்லைகளோ இல்லை. லாபம் சம்பாதிக்க லாபத்தின் அளவை அதிகர்க்கவும் எந்த ஒரு இழி செயலைச் செய்யவும் முதலாளிகள் தயங்குவதில்லை. சமூக மாற்றமெனும் உன்னத லட்சியத்தில் ஊன்றி நிற்கும் நம் சங்கம் முதலாளிகளை எதிர்த்த போராட்டங்களை அதன் முடிவு வரை நிச்சயம் கொண்டு செல்லும்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

புதுதில்லி – மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?

677

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளனர். மஹிசாசுரனை நாயகனாக சித்தரித்து வெளிவந்த “பார்வர்ட் பிரஸ்” ( Forward Press)  என்ற பத்திரிகை அலுவலகத்தை போலீசை கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.

மஹிசாசுர நாள்
மஹிசாசுர நாளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி கலவரம்.

ஆரிய பார்ப்பனர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை, பழங்குடிகளை இனப்படுகொலை செய்ததை கொண்டாடும் பல்வேறு பார்ப்பன பண்டிகைளில் ஒன்று துர்காபூஜை என்ற மஹிசாசுரன் படுகொலை கொண்டாட்டம். அதே சமயத்தில் மஹிசாசுரனை தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடி மக்களின் நாயகனாக முன்னிறுத்தும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இங்கு இருந்து வருகிறது.

அம்பேத்கர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் இது போன்ற விழாக்களை ஊக்குவித்துள்ளனர். தலித் மக்கள் ஆங்கிலேயர் படையில் சேர்ந்து, பார்ப்பன மன்னனை கொன்றோழித்த தினத்தை அம்பேதக்ர் கொண்டாட வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இராவண லீலா நிகழ்வுகளை திராவிட இயக்கம் நடத்தியிருக்கிறது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அசுர கானம் என்ற பெயரில் பாடல் ஒலிப்பேழை வெளியிட்டுள்ளது: தமிழ் மக்கள் இசை விழாவையும் பல ஆண்டுகளாக நடத்தியிருக்கிறது.

அந்த வகையில் பார்ப்பனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, “வீரமரணமடைந்த மஹிசாசுரனுக்கு நினைவேந்தல் நிகழ்வு” என்று ஒரு நிகழ்வை அக்டோபர் 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம். நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியின் காவேரி மெஸ்சில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு திரண்டு வந்த ஏ.பி.வி.பி குண்டர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் மற்றும் கலந்துகொண்ட மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். விடுதி உணவகத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தங்கள் வெறியை காட்டியுள்ளனர். தங்களின் வன்முறை மூலம் நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்துள்ளனர்.

மகிசாசுரன் நினைவு நாள்
மகிசாசுரன் நினைவு நாள்

இதே போல கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பியினரின் தூண்டுதலின் பேரில் பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது குறித்து ஏற்கனவே எழுதியிருந்தோம்.

ஏபிவிபி யின் இந்த அடாவடி செயலை செயலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது.

நிகழ்வில் கல்ந்துகொண்ட ஒரு மாணவர் இது குறித்து கூறும்போது “ஏபிவிபி யினரும் இதே காவேரி மெஸ்சில் தான் தங்களின் துர்கா பூஜைக்கான சிலைகளை வைத்து வழிபட்டனர்.அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை ஆனால் இன்று தலித்துகள் தங்களின் நாயகன் மஹிசாசுரன் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் போது ஏபிவிபியினர், அந்தப் பகுதி குண்டர்களின் துணையுடன் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நேரு பல்கலைகழக மாணவர் தேர்தலின் அனைத்து பதவிகளிலும்  சி.பி.எம்.எல் (லிபரேசன்)-ன் மாணவர் அமைப்பான AISA-விடம் படுதோல்வியடைந்த ஏ.பி.வி.பி தனது கோபத்தை இந்த வன்முறை மூலம் தீர்த்துக் கொண்டுள்ளது. AISA-வின் வெற்றியைவிட “நக்சல்பாரி ஜிந்தாபாத்” “லால் சலாம்” போன்ற முழக்கங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகங்களில் எதிரொலிப்பது ஆளும்வர்க்க எடுபிடிகளான ஏபிவிபி-யினருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.

பார்வர்ட் பிரஸ்
“மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து, இந்துத்துவவாதிகளின் தூண்டுதலில் பேரில் அதே நாள் இரவில் “மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ் பத்திரிகை அலுவலகம் டெல்லி போலீசாரால் சூறையாடப்பட்டது. அதன் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடில்லாமல் அதன் நான்கு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்வர்ட் பிரஸ் பத்திரிகை “நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எந்த ஆணையும் இல்லாமல் போலீசார் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஊழியர்களை கைதுசெய்ததோடில்லாமல் நகரின் பல இடங்களிலிருந்தும் எங்கள் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றி வருகிறார்கள்.  பகுஜன் – சிரமன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அக்டோபர் மாத இதழில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் அறிவுஜீவிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் மஹிசாசுரன்-துர்கா கதையை பிற்படுத்தப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்து கட்டுரைகள், படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

யாரையும் புண்படுத்துவது நோக்கம் எங்களுக்கு இல்லை. பகுஜன் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளங்களை கண்டுபிடிப்பதும், அதை  மீட்டுருவாக்கம் செய்வதும் தான் எங்கள் நோக்கம். சொல்லப்படும் புனித நூல்களை பகுஜன் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்யும் மரபு நீண்ட நெடியது. எங்களுக்கு முன்பே அது ஜோதிராவ் பூலேவிலிருந்து ஆரம்பித்து அம்பேத்கர், பெரியார் என்று நீள்கிறது.

இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல். பார்பனிய பா.ஜ.க சக்திகளின் உத்தரவின் பேரில்தான் இது நிகழ்த்தப்பட்டுள்ளது.  தலித்-பிற்படுத்தப்பட்ட-பழங்குடி மக்களின் இதழான எங்களை இந்த பார்ப்பன சக்திகள் எப்போது அருவெறுப்பகத்தான் பார்த்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பல முறை எங்களை தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதல்கள் எங்களை மேலும் பலமாக்கியிருக்கிறதே ஒழிய வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த பிரச்சனையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதோடு பிரேம்குமார் மணி என்பவரது கட்டுரையின் சில பகுதிகளையும் தங்கள் கண்டன அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். அவை முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை.

“பழங்குடிகளின் நாயகர்களான அசுரர்கள் கொல்லப்பட்டது எப்படி கொண்டாடத்தக்க விழாவானது? கொலையை கொண்டாடும் இந்த மனநிலை எதைக் குறிக்கிறது? இதே போன்று குஜராத் படுகொலைகளையோ இல்லை பீகாரின் தலித் படுகொலைகளையோ கொண்டாடினால் அதை நாம் எப்படி பார்ப்போம். ஆம் அசுரர்கள் தோற்றுவிட்டார்கள்தான். அதற்காக ஆண்டுதோறும் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதைக் கொண்டாடுவதன் மூலம் நீங்கள் தான் மக்களை அவமதிக்கிறீர்கள்” என்று பார்ப்பன கொண்டாட்டங்களை கேள்விக்குள்ளாக்குகிறது அந்த கண்டன அறிக்கை.

மகிசாசுரனின் வாரிசுகள்
“என்னைப் பாருங்கள். மகத்தான மகிசாசுரனின் வாரிசு நான்”

மாறாக, “மஹிசாசுரன் வீரமரணமடைந்த நாளை நினைவுகூறுவதன் மூலம் நாங்கள் யாரையும் புணபடுத்தவில்லை. நாம் ஏன் தோற்றோம் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். கடந்த காலத்தை கற்றுக்கொள்வதன் மூலம் தான் நிகழ்காலத்தில் எங்களை உயர்த்திக்கொள்ள முடியும். எங்களின் எல்லா சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. கிடைக்கும் சில தரவுகளின் மூலம் தான் எங்கள் ஏகலைவன் அர்ஜூனனைவிட திறமையாளன் என்பதை அறியமுடிகிறது. ஆனால் அரசு, திறமை குறைந்த அர்ஜுனன் பெயரில்தான் விருதுகள் தருகிறது. வரலாற்றிலிருந்து எங்கள் நாயகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எங்கள் குறியீடுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாயகர்களின் கட்டைவிரல்கள், தலைகளை வெட்டிய மரபை நாங்ள் கேள்வி கேட்க விரும்புகிறோம். அவர்களின் அவமானம் எங்களின் அவமானம்.” என்று பார்ப்பன கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கும் தமது நடவடிக்கைகளின் நோக்கத்தை விளக்குகின்றனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த ஆர்.எஸ்.எஸ் காரனும் தயாராக இல்லை. அவர்களின் ஒரே பதில் வன்முறை. அரச அதிகாரம் மூலம் கேள்வி கேட்பவனின் குரல்வளையை நெறிப்பது. இதைதான் நந்தன் காலம் முதல் இன்று வரை செய்து வருகிறார்கள்.

இத்தகைய பாசிஸ்டுகள் தங்களை ஜனநாயகவாதிகள் போல காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்துத்துவம என்பது அனைத்து வழிபாடுகளையும் அங்கீகரிக்கரிப்பது, அதில் நாத்திகம் உள்ளிட்டு ‘பாரத’ கலாச்சாரத்தின் அனைத்தும் அடக்கம் என்று சில கபடதாரிகள் பசப்புகிறார்கள்.

இது உண்மை எனில், ‘மாபெரும் பாரத கலாச்சாரத்தின்’ சில புதல்வர்கள் அதே பாரதத்தின் கொல்லப்பட்ட புதல்வரான மகிசாசுரனுக்கு நினைவுநாள் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு பதற்றத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்குவது ஏன்? மஹிசாசுரன் என்ன ஐரோப்பிய மையவாத சிந்தனை கொண்டவரா? இல்லை பாபருக்கு பக்கத் துணையாக வந்தவரா? இல்லையே பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னரே ‘பாரதத்தில்’ இருந்தவர்கள் தானே. பின்னே ஏன் நடுக்கம் பதற்றம் எல்லாம்.

உண்மையில் இந்து மதம் என்றழைக்கப்படும் பார்ப்பனியம் சற்றும் சகிப்புத் தன்மை அற்றது. அதை எதிர் கொண்டு தமது உரிமைகளை நிலைநாட்டியது இங்கேயிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டமே அன்றி அது இந்து மதத்தின் பொறுமை அல்ல. மாறாக பார்ப்பனியத்தின் வேரே, ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத கலாச்சார மேலாதிக்கம்தான்.

குமரித்தாய் வழிபாட்டிற்கு கத்தோலிக்கம் தடை விதிப்பதாகவும், இந்துத்துவம் தான் பன்முகத்தன்மை கொண்டது என்றும் நாமெல்லாம் மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்கள் என்றும் கூறி குமரித்தாயின் ஜனநாயக உரிமைக்கு போர்க்கொடிதூக்கும் ஜோ.டி.குரூஸ் போன்றவரகள் அதே மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்களான அசுரர்களுக்கு நினைவேந்தலை தடை செய்யும் இந்த்துத்துவம் பற்றி என்ன கருதுகிறார்கள்? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பிறகு இம்சைதானே நீதி?

இந்துத்துவத்தின் சாதிய வர்ணாசிரம ஜீன்களிலேயே பன்முகத்தன்மைக்கோ  சமத்துவத்திற்கோ இடமில்லை. ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத மொழி வழி கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் தான் இந்த்துவம். அதில் அசுர-திராவிட-தேசிய இன மொழிவழிபட்ட கலாச்சாரத்திற்கு என்றைக்குமே இடமில்லை. அதை இழிவுபடுத்துவது தான் இந்துத்துவம். மாற்று கருத்துக்களை இடமளிக்காத பாசிஸ்டுகள்தான் பார்ப்பன இந்துத்துவவாதிகள் எனபதை மீண்டும் ஒரு முறை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளனர்.

அடுத்தாக ஐரோப்பிய பார்வையில் இந்திய வரலாறு எழுதப்பட்டிருப்பதாகவும் அதை இந்தியப் பார்வையில் மாற்றி எழுத வேண்டும் என்று சமீப காலமாக கதைத்து வருகிறார்கள் இந்த்துவவாதிகள். அதே இந்துத்துவவாதிகள் தான் சூத்திர இந்தியனின் பார்வையில் வேத, புராண வரலாறை மறுவாசிப்பு செய்தால் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனில் இவர்கள் கூறும் இந்தியப் பார்வை என்பது என்ன? அது ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத பார்வை மட்டுமே என்பது தெளிவாகிறது. ஆக இவர்கள் கூறும் தேசியம் என்பது பார்ப்பன தேசியம்.

நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!

–    ரவி

மோடியின் தீபாவளி பரிசு – பிரீமியம் ரயில் கொள்ளை

4

ண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்களை இதுவரை தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டுமே கொள்ளையடித்து வந்தன. கடந்த அக்டோபர் 1 முதல் மத்திய அரசின் ரயில்வே துறையும் சிறப்பு அதிவேக ரயில்கள் (ப்ரீமியர் ரயில்) என்ற பெயரில் அந்த கொள்ளையை சட்டபூர்வமாக செய்ய ஆரம்பித்து விட்டன. அவ்வப்போது மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) என்ற பெயரில் பயணிகளின் தலையை தடவும் இந்த வேலையானது சாமான்ய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மலிவு விலை பயணமாக இருந்த ரயில் பயணத்தை அவர்களிடமிருந்து பிரிக்க ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

தேவைக்கேற்ப அவ்வப்போது மாறும் கட்டண முறை.
தேவைக்கேற்ப அவ்வப்போது மாறும் கட்டண முறை.

மோடி அரசு வந்த பிறகு புல்லட் ரயில், சதாப்தி என ரயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டன. ரயில் கட்டணமும் சரக்கு கட்டணமும் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மெட்ரோ ரயில்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. சீசன் டிக்கெட்டின் விலையும் உயர்த்தப்பட்டது. சில ரயில்பெட்டி தயாரிப்பு நிலையங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இனி தயாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதுடன், சில ரயில்களில் இரண்டாம் வகுப்பினை ரத்து செய்யவும் ஆரம்பித்தார்கள். அதற்கு பதிலாக குளிர்சாதனப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள்.

கேட்டதற்கு அருண் ஜேட்லி ‘நமக்கு உலகத் தரத்தில் ரயில் பயணம் வேண்டாமா?’ என்று கோபமாக கேட்டார். ஆக மோடியின் வளர்ச்சி அல்லது உலகத் தரம் என்பது ஏழைகளை விரட்டியடிப்பது, வாழ்வின் கடைக்கோடிக்கு தள்ளுவது என்பது தெளிவான பிறகும் இன்னமும் குஜராத் மாதிரி வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களை என்ன சொல்வது?

அக்டோபர் 1 முதல் இந்தியா முழுவதும் மொத்தமாக ப்ரீமியம் ரயில்கள் 808 அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில் இதன் எண்ணிக்கை 133. முதலில் மும்பைக்கும் புனேவுக்கும் இடையில் சோதனை முறையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை ரயில்கள் எல்லா ரயில் நிறுத்தங்களிலும் நிற்காது. உதாரணமாக பொதிகை சிறப்பு வண்டியானது திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை போன்ற இடங்களில் மாத்திரம் நிற்கும்.

மேலும் இதற்கான முன்பதிவை கணினி மூலமாக மாத்திரம்தான் செய்ய இயலும். எனவே இணையதள மையங்களை மக்கள் மொய்க்கிறார்கள். ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கணினி முகவரி மூலமாக இரண்டு பயணச்சீட்டுக்களை மட்டுமே பெற முடியும் என்பதால் பெரும்பாலும் சொந்தமாக இணையம், கணிணி வைத்திருப்பவர்களால்தான் எளிதில் பயணச்சீட்டைப் பெற முடியும். இதில் முதியோர்களுக்கு எந்த கட்டண சலுகையும் கிடையாது. பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் எதுவும் திரும்ப தரப்பட மாட்டாது.

மாறும் கட்டணம்
குளிர்சாதன பெட்டிகளின் ப்ரீமியர் ரயில் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் விட முக்கியமானது அதன் அவ்வப்போது மாறும் கட்டண முறைதான். சாதாரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தத்கல் முறையில் பயணச்சீட்டை வாங்கினால் ரூ 385 தான் ஆகும். இது முதல் 50 சதவீத இடங்களுக்கு பொருந்தும். அடுத்து எடுக்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு முதல் பத்து சதவீதம் சீட்டுகள் பத்து சதவீத கட்டண உயர்வோடும், அடுத்த பத்து சதவீதம் இருபது சதவீத கட்டண உயர்வோடும், அடுத்த பத்து சதவீதம் நாற்பது சதவீத கட்டண உயர்வோடும், அடுத்து எண்பது சதவீதம் என்றும் கட்டணம் கூடிக் கொண்டே போகும். விமான பயணங்களுக்கு பின்பற்றப்படும் இதே முறை இப்போது சாமான்ய நடுத்தர மக்கள் பயணிக்கும் ரயிலுக்கும் வந்து விட்டது. தற்போது இரண்டாம் வகுப்பில் தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ 2000 வரை வந்துள்ளது. இது ஆம்னி பேருந்தின் கொள்ளையை விட அதிகம் என்கிறார்கள் பயணிகள்.

கோவைக்கு ஏசி மூன்றடுக்கு கட்டணம் தத்கல் முறையில் ரூ 1065. ப்ரீமியம் முறையில் ரூ 3010. சில இடங்களில் கட்டணம் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது.  இதுபோக இணையதள மையங்களின் சேவைக் கட்டணமாக ரூ 100 வரை வசூலிக்கப்படுகிறது. ஏலம் விடுவது போல நடக்கும் இந்த கட்டண கொள்ளையால் யாரால் அதிகம் பணம் கொடுத்து பயணிக்க சாத்தியமோ அவர்கள் மட்டும் தான் இனி ரயிலை பயன்படுத்த முடியும் என்று ஆகி விட்டது.

குளிர்சாதன பெட்டிகளின் ப்ரீமியர் ரயில் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் செல்ல 50 நிமிடங்கள்தான், கட்டணம் ரூ 4,000 தான். ஆனால் 7 மணி நேரம் பயணிக்கும் ப்ரீமியர் ரயிலில் (கோரமண்டல் எக்ஸ்பிரஸ்) குளிர்சாதன பெட்டியில் ரூ 4,170 கட்டணம். தூத்துக்குடிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் ரூ 3,500 க்கு விமான பயணம் சாத்தியம். இப்போது ப்ரீமியர் ரயிலில் குளிர்சாதன முதல் வகுப்பில் கட்டணம் ரூ 4,800 ஐ தாண்டி விட்டது.

மோடியின் வளர்ச்சி
மோடியின் வளர்ச்சி என்பது வாழ்க்கையை மக்களிடமிருந்து பறிப்பது.

இனி இதனைக் காட்டியே விமான கட்டண உயர்வு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் பெட்ரோல், மின்சாரம், கேஸ் போன்றவற்றின் விலை எல்லாம் இனி டைனமிக் முறையில் இருக்கும் என்றும், இதனை தீர்மானிக்க தனி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதன் மூலம் ஏற்கெனவே காங்கிரசு வழிபோட்டுக் கொடுத்த தனியார்மய வழிமுறையைத்தான் மோடியும் பின்பற்றுகிறார். மன்மோகனுக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டதை மோடி பத்து மாதம் கூட இடம் தராமல் செய்து முடிக்கிறார். அந்த வகையில் கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளைகளில் முதலிடத்தில் நிற்கிறார்.

ஏப்ரல் முதல் தெற்கு ரயில்வேயில் ப்ரீமியம் ரயிலாக இயக்கப்பட்ட 46 வழித்தடம் மூலமாக மாத்திரம் ரூ 4.5 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது நிர்வாகம். இதன்மூலம் மானியமாக தரப்படும் ரூ 26 ஆயிரம் கோடியை ஈடுகட்டி விடுவோம் என்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா. ஆனாலும் ஆசியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான இந்திய ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீட்டை நூறு சதவீதமாக உயர்த்த இன்னொரு புறம் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மோடியின் வளர்ச்சி என்பது வாழ்க்கையை மக்களிடமிருந்து பறிப்பது என்பது தான் இதன்மூலம் தெரிய வருகிறது. அதனால் தான் தற்போது தென்மாவட்டங்களுக்கு போகும் ப்ரீமியர் ரயிலில் பதிவு முழுவதும் கடைசி நாள் வரை நிரம்பாமல் இருக்கிறது. மக்கள் தனியார் ஆம்னி கொள்ளைக்காரனிடம் சிக்குவதா, அரசு ப்ரீமியம் ரயில் கொள்ளைக்காரனிடம் சிக்குவதா என்ற கணக்கில் எது தங்களுக்கு சரிப்பட்டு வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் ஒற்றைக்காலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்க தயாரிக்க தயாராகி விட்டார்கள். ரங்கநாதன் தெருவிலும், பட்சண கடைகளிலும் கொட்டிய பணத்தால் கையிருப்பு தீர்ந்து போனவர்களோ தீபாவளியை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னையிலேயே தங்கி விட்டார்கள்.

மோடியின் இந்தியா இந்த தீபாவளிக்கு ஊருக்கு போவதற்கு அளித்திருக்கும் போனஸ்தான் இந்த பகல் கொள்ளை!

–    கௌதமன்.