ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அன்று அகிலா ஹாதியாவாக மாறவும் இல்லை. அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கூற ஒரு உயர் நீதிமன்றமும் இல்லை.

ந்திய துணைக்கண்டத்தின் கணிசமான மக்கள் எப்படி இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்ற கேள்வியை சங்க பரிவாரத்தின் வரலாற்று ஆசிரியர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். உடனே பளிச் என்று பதில் வரும். மத்தியகாலத்தைச் சேர்ந்த முசுலிம் மன்னர்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்பார்கள். எளிமையான பதில். இல்லையா?

மத்திய காலத்திலோ அல்லது பாக் பிரிவினைக்கு முந்தைய காலத்திலோ புவியியல் ரீதியாக இந்தியாவின் எந்தப் பகுதியில் முசுலிம்கள் அதிகம் இருந்தார்கள் என்பதை பரிசீலித்துப் பாருங்கள். மேற்கே இன்றைய பாகிஸ்தான், கிழக்கே வங்கதேசம், வடக்கே காஷ்மீர், தெற்கே கேரளா ஆகிய பகுதிகள்தான் அவை. இப்பகுதிகள் முகலாய சாம்ராச்சியத்தின் மையப்பகுதிகள் அல்ல. விளிம்புப் பகுதிகள்.

இப்பகுதிகள் தொடர்ச்சியாக முகலாய சாம்ராச்சியத்தின் கீழ் இல்லை என்பதுடன், அவ்வாறு இருந்த காலங்களிலும், இப்பகுதிளின் மீது முகலாய அரசின் அதிகாரம் மிகவும் பலவீனமாகவே இருந்தது. கேரளத்தை பொருத்தவரை அது முகலாய அரசின் கீழ் என்றுமே இருந்ததில்லை. எனவே இந்தப்பகுதிகளில்தான் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக கூறுவது அபத்தமானது.

இன்றைய கிழக்கு பஞ்சாப், டெல்லி, உ.பி., பிகார் ஆகியவைதான் முகலாய அரசின் இதயப்பகுதிகள். இப்பகுதிகளில் மக்கட்தொகையில் 12 முதல் 15 விழுக்காடுதான் முசுலிம்கள். அதாவது முகலாய அரசு அதிகாரத்தின் மையப்பகுதியில், அதன் விளிம்புப் பகுதியைக் காட்டிலும் முசுலிம் மக்கட்தொகை குறைவாக இருக்கிறது.

1830 இல் இந்தியாவுக்கு வந்த பிஷப் ஹீபர், இந்தியாவில் ஆறில் ஒருவர் முசுலிம் என்கிறார். 1941 மக்கட்தொகை கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கட்தொகையில் முசுலிம்கள் 24.7% என்று கூறுகிறது. இந்த கணக்கின்படி, இந்த இடைப்பட்ட 110 ஆண்டுகளில் அவர்களுடைய மக்கட்தொகை 50% அதிகரித்திருக்கிறது எனலாம்.

எனவே முசுலிம்களின் எண்ணிக்கைக்கு மதமாற்றம்தான் காரணம் என்று கூறுவதும், அது ஒரு சில தடவைகளில் பெரும் எண்ணிக்கையில் முகலாய அரசால் வாள்முனையில் நடத்தப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இது பல நூற்றாண்டுகளில் நடந்த நீண்டதொரு நிகழ்வு. அரசு உள்ளிட்டு இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முகலாயர் ஆட்சி என்றாலே கோயில் இடிப்பு, மதமாற்றம் என்றுதான் சிலர் நம்புகிறார்கள். இதற்கு நேரெதிரான நிகழ்வுகளும் நடந்துள்ளன. முகலாயர் ஆட்சிக்காலத்தில் மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முசுலிம்கள் இந்துக்களாகவும் மதம் மாறியிருக்கிறார்கள். இது குறித்து சங்கபரிவாரம் உவகை கொள்ளலாம்.

1540 இல் ஹுமாயூனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஷெர்ஷா சில இந்து ஜமீன்தார்களை தண்டிக்க விரும்புகிறான். யார் அவர்கள்? அந்த ஜமீன்தார்கள் மசூதிகளை இடித்து அங்கே கோயில்களைக் கட்டியவர்கள் என்று கூறுகிறான் ஷெர்ஷா. இதே காலகட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த காம்பே எனும் துறைமுக நகரில் பார்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் ஒரு மசூதிக்குத் தீ வைத்து, 80 முசுலிம்களைக் கொல்கிறார்கள். இதனை விசாரித்து உண்மைகளை அறிந்த அந்தப் பகுதியின் இந்து மன்னன், மீண்டும் மசூதியைக் கட்ட உத்தரவிடுகிறான்.

மசூதிகளை இடித்து அந்த இடத்தில் இந்துக்கள் கோயில்களைக் கட்டிக் கொள்கிறார்கள் என்று ஷேக் அகமது ஷிர்ஹிந்தி என்ற முசுலிம் மதகுரு அக்பர் காலத்தில் புகார் செய்கிறார். பஞ்சாபில் 7 மசூதிகளை சட்டவிரோதமாகவும் வன்முறையாகவும் கைப்பற்றிக் கொண்டவர்களிடமிருந்து அவற்றை ஷாஜகான் மீட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

அவுரங்கசீபின் அரசவையில் அதி உயர் அதிகாரத்தில் இருந்த ராஜபுத்திர பிரபுவான ஜோத்பூரின் ஜஸ்வந்த் சிங் , மசூதிகளை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டியதை 1658 – 59 இல் அவுரங்கசீபே குறிப்பிடுகிறார். ஆனால் அதற்குப் பின் 20 ஆண்டுகள், அதாவது ஜஸ்வந்த் சிங் இறக்கும் வரை அவர் அவுரங்கசீபின் அரசவையில் பதவியில்தான் இருக்கிறார்.

அதே போல முகலாயர் ஆட்சிக்காலத்தின் முசுலிம்கள் இந்துக்களாக மதம் மாறிய நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன. இது பெரிய அளவில் நடந்து விடவில்லை. என்ற போதிலும் ஒருவேளை முகலாயப்பேரரசு என்பது ஒரு மதவாத அரசாக இருந்திருப்பின் இது நடந்திருக்குமா என்பதுதான் நாம் விடை காணவேண்டிய கேள்வி.

முகமது பின் அமிர் அலி பால்கி, என்ற மத்திய ஆசியப் பயணி ஜகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா வருகிறார். பனாரஸ் நகரில் இந்துப் பெண்களைக் காதலித்த 23 முசுலிம்கள், இஸ்லாத்திலிருந்து விலகி இந்துக்களாக மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

‘‘சிறிது நேரம் நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். ஏன் இப்படி வழி தவறிப் போனீர்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் வானத்தை நோக்கி கையைக் காட்டிவிட்டு, பிறகு நெற்றியில் தமது விரல்களை வைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது விதி என்று அவர்கள் சொல்வதாக நான் புரிந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் அலி பால்கி.

முகலாய சாம்ராச்சியம் உதிப்பதற்கு முன்னரே காஷ்மீரை ஆண்ட ஜெயின் அல் அபிதீன் என்ற மன்னன், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாறுவதற்கு அனுமதித்தார். பின்னாளின் அக்பர் இதற்கென ஒரு சட்டமே இயற்றினார். ஒரு இந்து தனது விருப்பத்துக்கு விரோதமாக எந்த வயதில் மதமாற்றம் செய்யபட்டிருந்தாலும், அவர் தன்னுடைய முன்னோர்களின் மதத்திற்குத் திரும்பலாம் என்றது அக்பரின் சட்டம். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரும், கவுடியா வைணவம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவருமான சைதன்ய மகாபிரபு, ஒரிசாவின் முகலாய கவர்னரை கர் வாப்ஸி செய்து வைணவராக்கினார்.

அதுமட்டுமல்ல, முன் எப்போதுமே இந்துவாக இருந்திராத பத்தான் முஸ்லீம்கள் பலரையும் மதம் மாற்றினார். இவர்கள் பட்டாணி வைணவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தபிஸ்தான் – இ – மசாஹிப் என்ற 17 ஆம் நூற்றாண்டின் பாரசீக நூல் சமூகத்தின் மேல் மட்டத்தில் பலர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியதைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக ஷாஜகானின் அரசவையில் இருந்த மிர்சா சாலி, மிர்சா ஹைதர் என்ற இரண்டு பிரபுக்கள் முதலில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி, பின்னர் இஸ்லாத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இவர்கள் யாரும் எவ்வகையிலும் தண்டிக்கப்படவில்லை.

சமூகத்தின் கீழ் மட்டமும் இதற்கு விலக்கில்லை. காஷ்மீரின் பிம்பார் பகுதியில் முசுலிம் இளைஞர்கள் இந்து பெண்களை மணப்பதும், பிறகு அந்த இளைஞர்கள் இந்துவாக மதம் மாறுவதும் சகஜமாக நடப்பதை அறிந்த ஷாஜகான் அதைத் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனுடைய உத்தரவு எதுவும் வேலை செய்யவில்லை.
இது மட்டுமல்ல.

மதம் மாறாமல் அவரவர் மதத்தில் இருந்தபடியே இந்து – முஸ்லீம் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்வதும், சுமார் 5000 தம்பதிகள் அவ்வாறு மதம் மாறாமலேயே கணவன் மனைவியாக வாழ்வதும் ஷாஜகானுக்குத் தெரியவருகிறது. மனைவி மரிக்கும் பட்சத்தில், அவள் கணவனின் மதம் எதுவோ அந்த முறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ பட்டிருக்கிறாள். இதை தடுப்பதற்கு ஷாஜகான் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

அதே போல சீக்கிய மதகுருவான, குரு ஹர்கோவிந்த் ஏராளமான பேரை இஸ்லாத்திலிருந்து மதம் மாற்றியிருக்கிறார். பஞ்சாபின் கிராத்பூர் மலைகளுக்கும் திபெத்துக்கும் இடையில் ஒரு முசுலிம் கூட மிச்சமில்லை என்று இந்த மதமாற்றத்தை மிகைப்படுத்தி விவரிக்கிறது தபிஸ்தான் என்ற பாரசீக நூல்.

ஆகவே, வரலாறு என்பதை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளக்கூடாது – எப்போதுமே.

– பேரா. ஹர்பன்ஸ் முக்யா, ஜே.என்.யு. வில் பணியாற்றும் வரலாற்றாசிரியர்.

ஜூலை, 28, 2018, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

7 மறுமொழிகள்

  1. ஆரம்ப கால மத மாற்றங்கள் அன்றைய சமூகத்தின் முன்னேறிய மக்கள் பிறிவினர்கள் ஆவர்.

    இன்று மதம் மறியவர்கள் தாங்கள் யார் என்றும் எந்த மதம் என்றும் அறிந்திராத பின்தங்கிய தாழ்த்தப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஆவர்.

    பார்பன மனு நீதிபடி நான்கு வருணம் பிரமன் தலையில் பிறந்தவன் பிராமனன் தோலில் பிறந்தவன் சத்திரியன் துடையில் பிறந்தவன் வைசியன் பாதத்தில் பறந்தவன் சூத்திரன்

    இந்த நான்க வர்ணத்துக்குல் ஏற்பட்ட கலப்பால் இழிவாக பிறந்த வேசி மக்கள் என இதுநாள் வரை இழிவுபடுத்தி அவன் உழைப்பைச் சுரண்டி ஏய்த்த கூட்டம் தனது அடிமை மதம் மாறி கல்வி வேலைவாய்ப்பு என தனக்கு நிகராக வளர்வதை பொறுக்க முடியாத ஈனக் கூட்டம் மத மாற்றம் குறித்து கூப்பாடு போடுகிறார்கள் .

    அது தன் மதத்தை காக்க அல்ல தாங்கள் ஏய்த்துப் பிழைக்க அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே

  2. 1932 ல் வெள்ளைக்காரன் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் பெரும் பகுதி உழைக்கும் சூதிதிர பஞ்சம சாதி மக்கள் தங்கள் விவரங்களில் எந்தமதமும்
    குறிப்பிடவில்லை .

    காந்தியின் கோரிக்கைப் படி எதிலும் இல்லாத மக்களை இந்து என்ற மதத்திற்குல் அடைத்தார்கள் இதை அன்றைய சங்கராச்சாரி சந்திரசேகரன் இந்த மக்களை இந்து மதத்தில் சேர்த்து நல்ல வேலையாக வெள்ளைக்காரன் இந்துமத்தை பெரிய மதமக்கி தங்கள் மதத்தை காப்பாற்றியதாக நனது நூலில் எழுதியுள்ளார.இது அடிமைகள் தப்பவில்லை என்ற புலகாங்கிதமே!
    .
    யார் இந்து ?

    யாரெல்லாம் கிருத்துவர் இல்லையோ , முசுலீம் இல்லையோ , பார்சி இல்லையோ , சீக்கியர் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என நாத்திகனையும் இந்து என்ற வரையறைக்குல் அடைத்துள்ளனர்

    அப்போது நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தாழ்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான டாக்டர். அம்பெத்கர், ஐயா .இரட்டைமலை.சீனிவாசன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாறாளுமன்றத்தில் இரட்டை வாக்குறிமை
    கோறியதோடு இவர்களை இந்து என்ற வரையறையிலிருந்து விடுவித்து புரட்டஸ்டண்ட் இந்தக்கள்(புரட்சிகர இந்துக்கள்) , என மாற்று அடையாளததையும் கோரினார்கள் இதையும் காந்தி எதிர்த்தார் அவர் இருந்த உண்ணா விறதம் இதையும் உள்ளடக்கியது தான் . முதல் வட்ட மேசை மாநாட்டை புறக்கனித்த காந்தி இதைத்தடுக்கவே இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார் என்பதே வரலாறு.

  3. கிருத்துவனுக்கு ஏசு கடவுலின் மைந்தன் அவர் இந்த உலக மக்களின் பாவங்களிலிருந்து மீட்கவந்தவராக கூறப்படுகிறது இந்த மதத்தை தழுவும் மக்களுக்கு வழிபாட்டுமுறை உள்ளது. ஒவ்வொரு மனிதனின் பிறப்புமுதல் இறப்புவரை அவர்களின் வாழ்க்கை கண்காணிக்கப்படுகிறது.

    முசுலீம்களுக்கு அல்லா கடவுல் அவர் உருவமற்றவர் நபிகள் அவரின் தூதுவர் இவர்களுக்கென ஒரு வழிபாட்டு முறை உள்ளது. கிருத்தவமதத்தைப்போலவே இவரகளின் வாழ்க்கையும் வாழ்நாள் முடியம் வரை கண்காணிக்கப்படுகிறது.

    இவை இரண்டிலும் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அடிபபடை அதுதான்

    இந்து என்பவர்களுக்கு இதுபோன்ற ஒருகுறிப்பிட்ட மத ஒழுங்கு என எதுவும் இல்லை.பார்ப்பனர் களுக்கும் நம்பூதிரிகளுக்கும் மேன்ன்களுக்கும் பாசு,சர்மா, சிந்தி, அகர்வால் மார்வாரி பனியாக்களுக்கும்
    இவை உண்டு.
    மற்ற ஆகப்பெரும் பான்மை உழைககும் மக்கலான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவைஎதுவும் கிடையாது என்பதுடன் இந்த வழக்கங்கள் பற்றியும் தெரியாது.

    அவர்களைப்பொறுத்தமட்டில் அவரவர் வீடுகளில் ஒருபழக்க வழக்கம் இருக்கும்
    இது ஒரே ஊரில் உள்ள ஒரே சாதிக்குள்ளும் மாறுபடும்.

    இவர்கள் இந்து என்ற வரையறை கிருத்துவ முசுலீம்களையும் போல தங்களுக்கான ஒரு அடையாளமாக பழக்கப்படுத்தப்பட்டார்கள்

    ஒவ்வொரு ஊர்களிலும் நிலம் நீர் சொத்துபத்துள்ளவர்கள் தங்களின் ஆதிக்கத்திற்காக இதை ஆதரித்து ஆலுமை செலுத்திவந்தார்கள்

    பொதுவாக மக்களினங்களில் உருவாகி உள்ள சாமி கடவுள் நம்பிக்கை அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு தனது முன்னோர்களால் கூறப்பட்ட சாமி கலோடு பார்ப்பன சாமிகளும் நுழைக்கப்பட்டு
    அதையம் அவர்கள் வணங்கசெய்ததோடு தங்கள் சாமி உயர்ந்ததென்றும் மற்ற கிருத்துவ முசுலீம் சாமி நமது எதிரி என்ற ஒரு பொதுவான பற்று தலை உருவாக்கி அதை பிறகு வெறித்தனமாக மாற்றி மோதவிட்டார்கள் பார்ப்பன ஆர. எஸ் .எஸ் பனியாக்கள்.

    இதற்கு உள்ளூர் ஆளும் வர்க்கம் தனது ஜம்பத்துக்காக தங்களிடம் உழைத்து வாழும் மக்களை அதன் அடியாட்கலாக உசுப்பேற்றி மோதவிடுகிறார்கள்.இதன் விலைவே ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பனியா பா.ஜ.க வின் மதக்கலவரங்களுக்கு வழிவகுத்து உழைக்கும்மக்களை மோதவிட்டு தங்கள் கொள்ளையை தடையின்றி நடத்துகிறார்கள். இதற்காக இந்து மசுலீம் கலவரம் சாதி மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

    • மதம் மாருபவர்கள் மீது இந்த பார்ப்பன கும்பலுக்கு ஏன் கோபம் வருகிறது ?

      தங்கள்மத்தை விட்டு போகிறார்களே என்ற அக்கரையில் அல்ல தனது
      உழைக்காமல் ஏய்ச்சி பிழைக்கும் புரோகித வாழ்க்கை போய்விடுமே என்ற எண்ணம் தான் காரணம்

      உழக்கும் மக்தளிள் படிக்காத பாமர மக்கள் இவர்களின் சடங்கு சம்பர தாயத்தை நம்பி ஏமாந்து போவதோடு கல்லு மன்ன வெட்டி சுமந்து வேர்வை சிந்தி ஜீவனம் செய்கிறார்கள்

      ஒரு பாப்பான் படிக்காத தற்குறியாக இருந்தால் நமக்கு சாமி, அர்ச்சகர் என நம்வாழ்க்கையில் பூந்து கொள்ளையடிப்பதின் மூலம் நல்ல வருமானம் பார்த்து வாழ்கிறார்கள்

      இந்த வருமானம் பாதித்தால் தர்க்குறி பாப்பான் எல்லாம் உடல் உழைத்து வாழ வேண்டி வரும் இதை தவிற்கவே இவ்வலவு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த காலத்திலும் நம்மை மூடத்தனத்தில் ஆழ்த்தி வைக்க தொடர்ந்து பார்ப்பன கும்பல் முயற்சிக்கிறது.

      அதற்காகவே ஆர.எஸ்.எஸ்
      .பா.ஜ.க என்ற பெயரில் கலவரத்தை உண்டாக்குகிறார்கள் இதன் விலைவுதான் சாதிமாறும் காதலர்கள் கொல்லப்படுவது இதை உழைக்கும் மக்கள் உணரச் செய்யாமல் விடிவு இல்லை.

  4. இந்தியா என்று இப்போது உள்ள ஆசிய கண்ட பகுதியில் ஆலுமைக்கு வந்தவர்கள் தொழிலடிப்படையில் உருவாக்கியிருந்த சாதி யமைப்பில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரிய பார்ப்பனக்கூட்டம் தங்கள் மேளான்மையை நிலைநிருத்த மனுநீதியையும் பிரம்மா என்ற படைபபாளியை யும் உருவாக்கி சாதியில் இணக்கங்கான முடியாத பகைமையையும் வேத புரான இதிகாச புலுகுகளையும் உருவாக்கினார்கள்.

    மனிதன் வாழத் தகுதியிழந்த தூந்திரப் பிரதேசமாக மாரிய மத்திய ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்த ஆரியர்கள் இங்கு வந்தது போலவே ஐரோப்ப கண்டத்தின் ஜெரமனுக்கும் இத்தாலிக்கும் புலம்பெயர்ந்தார்கள் இத்தாலியில் முசோலினி மூலமம் ஜெர்மனியில் இட்லர் மூலமும் ஆதிக்கம் செய்ய சொந்த நாட்டுமக்களைக் கொன்று குவித்து உலகை ஒரேகுடையின் ஆலப்பறந்தது ஆரிய இணம் என கொக்கரித்தார்கள்.
    இவர்களுக்கு வாதாடுவதற்காக அவர்களால் வஞசிக்கப்பட்டு கொல்லப்பட்ட யூதர்களை கொடியவர்கலாக்க வேண்டிய தேவை இந்த இடத்திற்கு பொறுத்தமற்றது.

  5. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற வழிமுறை இங்குண்டு. மன்னன் சமண மதத்தை சார்ந்தவனாய் இருந்தால் மக்களும் சமண மதம் தழுவ அல்லது கட்டாயப்படுத்தப்படுவார்கள், அதுபோலவே சைவமதம். தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த நிகழ்வு நடந்ததுண்டு. முகலாயர்கள் ஆட்சியிலும் இது போன்றதொரு நிகழ்வு நடந்திருக்கலாம். மதமாற்றம் நடக்கவில்லை என அடித்துச் சொல்ல முடியாது. தில்லி, மதுரா… போன்ற நகரங்களில் அதன் எச்சங்களை இன்றும் காணலாம். எது எப்படியிருப்பினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்துபோன ஓர் சம்பவத்துக்கு இப்போது அடித்திக்கொள்வது நியாயமில்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களில் இதுவும் ஒன்று. மக்கள் மக்களாக வாழ சிந்திக்க வேண்டும். அதுவே நல்லது.

Leave a Reply to தமிழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க