கஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி

கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா... தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்...

ஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் கடற்புறத்தை ஒட்டி அமைந்துள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறக்கரை. நாட்டுப்படகில் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் இவர்கள். கடற்கரைப் பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்த வாய்ப்பில்லாத நில அமைப்பின் காரணமாக, கடற்கரையையொட்டி வாய்க்கால் அமைத்துக் கொடுத்திருக்கிறது, அரசு.

இந்த வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் நெடுந்தொலைவுக்கு அப்பால் தலைக்குப்புற தூக்கி வீசியெறியப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வலைகள் சேற்றில் புதைந்து சிதைந்திருக்கின்றன. படகுகள் உடைந்து சேதாரமாகியிருப்பதோடு, படகில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின் முழுதும் சேறு அப்பிக்கிடக்கிறது.

மீனவர் குமாரசாமி.

“1952 ல இதேமாதிரி புயல் வந்துச்சி. அதுமாதிரிதான் இப்பவும் அழிவு வந்துருக்கு. கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா, நான் கடலுக்கு வந்து 50 வருசத்துக்கு மேல ஆகுது. அன்றாடம் கடல் அலையோடதான் வாழ்ந்துட்டுருக்கோம். தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்.’’ என்கிறார், 76 வயதான மீனவர் குமாரசாமி.

கஜா புயலால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்குகிறார், இப்பகுதி மீனவர் சங்கர். ‘’மூனாவது நாள்தான் மறியலே பண்ணுனோம். அதுக்கப்புறம்தான் மீடியாவே உள்ள வந்துச்சி. அரசாங்கத்துக்கும் பாதிப்பு தெரிஞ்சிச்சி. அங்க ஒக்காந்துகிட்டு எல்லாம் பாத்துட்டோம் செஞ்சிட்டோம்னு பேசிட்டிருக்காங்க. மீன்வளத்துறை அமைச்சர் எந்த மீனவக் கிராமத்துல போயி பாதிப்பக் கேட்டாரு? சொல்லுங்க பார்ப்போம். எல்லாமே மேலோட்டமா பேசிட்டிருக்காங்க.

மீனவர் சங்கர்.

அதிகம் போனா, இன்னும் ஒருவாரத்துக்கு மத்தவங்க கொடுக்கிறத சாப்டுட்டு இருக்கலாம். அதுக்கு அப்புறம்? இன்னைய நெலமையில எந்த மீனவனும் தொழிலுக்கு போக முடியாது. படகு சேதாரமாயிருக்கு. என்ஜின் பழுதாயிடுத்து. வலை மொத்தமும் அழிஞ்சிருச்சி. இதெல்லாம் சரிபண்ணனும்னா கொறஞ்சது ரெண்டு மாசம் ஆகும். ஒன்னுலேர்ந்து ரெண்டு லெட்சம் செலவு பிடிக்கும். எங்கப் போறது? அரசாங்கம் பார்த்து ஏதாவது செஞ்சாதான் நாங்க மீண்டு வரமுடியும்.

எங்க வாழ்க்கயே கடல்ல அன்னாடம் காய்ச்சியாக மாறி இருக்கு. இதெல்லாம் சரி செஞ்சி தொழிலுக்கு போகறதுக்கு கொறஞ்சது ரெண்டுமாசம் ஆயிடும். இப்ப ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.’’

முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

***

ஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாத அரசுக்கு எதிராக, அம்மாபேட்டை பேரூராட்சி, 8வது வார்டு, புத்தூர் பகுதி மக்கள் கடந்த நவ-23 அன்று தஞ்சை – நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் நடத்திய சாலைமறியல் போராட்டம்.

‘’நாலு பக்கமும் வீட்ல மரம் வளர்த்தா வீட்ல விழாம எங்க விழும்னு கேட்கிறாரு கிராம உதவியாளர். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் எங்க கிராமத்துக்குள்ள வந்து என்னன்னு பார்க்கவே இல்லை.’’ கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொந்தளிக்கின்றனர், கிராம மக்கள்.

முழுமையான காணொளியைக் காண!

பாருங்கள்! பகிருங்கள்!!

படிக்க:
சத்துணவு சமைக்கும் அங்கன்வாடி ஊழியர்களை பட்டினி போடும் மோடி அரசு !
தேர்தல் 2019 : சங்க பரிவாரத்தின் அடுத்த தூண்டில் – ராமர் கோவில் !