மீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா எனும் போட்டியாளர் தற்கொலை முயற்சி செய்ததாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகளை காணமுடிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் கேமராக்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்ததால் தற்கொலை பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தற்கொலை என்பது மிகவும் சாதாரணம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

♦ உலகில் தற்கொலை செய்து கொள்ளும் மூன்று பெண்களில் ஒருவர் இந்தியர்.
♦ தற்கொலை செய்து கொள்ளும் நான்கு ஆண்களுள் ஒருவர் இந்தியர்.
♦ வருடந்தோரும் 2.5 லட்சம் பேரை தற்கொலைக்கு இழக்கும் தேசம் இந்தியா.
♦ உலகில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சதவிகிதம் 7 தான் என்றால் நம் நாட்டில் அது 15 சதவிகிதம்.

திருமணமான பெண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். காரணம் – வரதட்சணைக் கொடுமை, பெண் பிள்ளை பெற்றால் கொடுமை, பிள்ளை பிறக்காவிட்டால் கொடுமை. விதவை பெண்கள், திருமணமாகாத பெண்களிடம் தற்கொலை விகிதம் குறைவாக இருக்கிறது

♦ ஆண்களில் அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்கள் – குடிகாரர்கள் தான்.

உங்களுக்கு தெரிந்து யாருக்கேனும் குடிப்பழக்கம் இருந்தால் அவரை அதில் இருந்து வெளிக்கொண்டு வாருங்கள். காரணம் குடி போதையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் அதிகம்.

படிக்க:
“தற்கொலை செய்து கொண்டவர்களை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு இல்லை !”
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !

♦ ஆண்களின் சராசரி தற்கொலை வயது 60 – 75

Senior Citizensமுதுமை தரும் தனிமை, மனத்தாழ்வு நிலை, யாரும் ஆதரவுக்கு இல்லாத நிலை போன்றவற்றால் தற்கொலை செய்கின்றனர்.

♦ பெண்களின் சராசரி தற்கொலை வயது 19 – 39

கடந்த பத்து வருடங்களில் மட்டும் 75,000 மாணவ – மாணவிகள் கல்வி காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தும் முறைகள் – பூச்சி மருந்து உண்பது, மாத்திரைகளை அதிகம் உண்பது மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்தல்.

இந்தியாவில் தற்கொலையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள்

  • திரிபுரா
  • பாண்டிசேரி
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
தற்கொலைகளை எப்படி தடுப்பது ?

♣ முதியவர்களை தனிமையில் விடுவது தவறு. அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் நாட்டில் முதியவர்கள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் தற்கொலைகளை கணிசமாக குறைக்க முடியும்.

suicide-main♣ பெண்களுக்கு எதிரான குற்றங்களை அது வரதட்சணை ஆகட்டும் , பணியிடங்களில் ஏற்படும் வன்முறைகளாகட்டும், பாலியல் சீண்டல்களாகட்டும் உடனுக்குடன் கண்டு களையும் நிர்வாக முறை இருக்க வேண்டும்

♣ படிப்பு, பரீட்சை அதில் வாங்கும் மதிப்பெண்கள் தான் வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கும் என்ற மாயையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். ஒரு பரீட்சையில் தோல்வி அடைந்தால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும்

♣ மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும். அரசும் மதுவை தடை செய்ய ஆவண செய்ய வேண்டும். நாட்டில் ஆண் தற்கொலைகள் பெரும்பான்மை மது தரும் போதை மற்றும் அச்சமற்ற நிலையால் தான் நடக்கின்றன.

♣ தேசிய தற்கொலை தடுப்புக்கொள்கை வரைவு செய்யப்பட வேண்டும்.
உடனே அது நடைமுறைக்கு வரவேண்டும். வயது வாரியாக பாலின வாரியாக தனித்தனியாக தற்கொலை தடுப்பு வழிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் தற்கொலை தடுப்பு கொள்கை இணைக்கப்பெற வேண்டும்.

♣ 2017-ம் ஆண்டு தேசிய மன நல சட்டம் மூலம் தற்கொலை முயற்சிகள் சட்டப்படி குற்றமாகாது என்று அறிவித்ததன் மூலம் பல மறைக்கப்படும் தற்கொலை முயற்சிகள் வெளியே வரும். நிச்சயம் இந்தியா வலுவான மனநல பற்றாக்குறையில் இருக்கிறது.

படிக்க:
மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !
♦ கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !

நம்மிடம் போதுமான மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் இல்லை. ஆனால் நாள்தோறும் மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள் அதிகமாகி வருகின்றனர்.

மனநலம் சார்ந்த முதுகலைப்படிப்பு இடங்களை அதிகமாக்க வேண்டும். மனநல ஆலோசகர்களுக்கான படிப்புகளை பலரும் படித்து மனநல ஆலோசகர்களாக வர வேண்டும்.

தற்கொலை தீர்வல்ல.
எதற்கும் முடிவும் அல்ல.
தற்கொலை வீரமும் அல்ல.
தற்கொலை இயற்கைக்கு எதிரானது.

வீட்டில் ஒருவரை தற்கொலைக்கு இழக்கும் முன் நாம் கண் விழிக்க வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க