டுப்பூசிக் கொள்கையின் சாரம் என்பதுவியாபார ஆபத்துகளை சமூகமயமாக்கு, லாபங்களை தனியார்மயமாக்குஎன்பதுதான். பெரிய மருந்து நிறுவனங்கள் எப்போதும் சொல்வது, “நாங்கள் பல கோடிக்கணக்கான பணத்தை ஆராய்ச்சிகளுக்கு செலவளித்திருக்கிறோம், அதனால் காப்புரிமையை நீக்குவது எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக அமையும்என்பதுதான்.

பெருந்தொற்று போன்ற பொது சுகாதாரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்படும் போது, பெரிய மருந்து நிறுவனங்கள் சந்தையில் லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்குபோது மட்டும்தான் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருந்து கண்டுபிடிப்பதற்கான செலவீனங்களையும், சந்தையில் ஏற்படும் நஷ்டத்தையும் ஈடுசெய்யும் வகையில் இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் மானியங்களாக வழக்கப்படும்.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”

ஆனால், அந்த மருந்து விற்பனை மூலம் கிடைக்கும் கொள்ளை லாபங்கள் இந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும். இதைத்தான், “வியாபார ஆபத்துகளை சமூகமயமாக்குவது, லாபங்களை தனியார்மயமாக்குவதுஎன்று சொல்கிறோம்.

Moderna நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து இரண்டு பில்லியன் டாலர்கள் மானியம் பெற்றிருக்கிறது. BioNtech நிறுவனம் ஜெர்மனி அரசாங்கத்திடமிருந்து அரை பில்லியன் யூரோ பெற்றிருக்கிறது. Oxford நிறுவனம் இங்லாந்து அரசாங்கத்திடமிருந்து உதவி பெற்றிருக்கிறது. தகிர் அமின் 2018ஆம் ஆண்டிலே சுட்டிக்காட்டியது போல், “புறக்கணிக்கப்பட்ட நோய்கள் (Neglected Diseases) பற்றிய உலகளவிலான அடிப்படை ஆராய்ச்சிகளுக்கும், மருந்து கண்டுபிடிப்புக்கும் செலவிடப்பட்டது வெறும் நான்கு பில்லியன் டாலர்கள்தான். இந்தத் தொகையில் 17 சதவீதம். அதாவது வெறும் 650 மில்லியன் மட்டுமே தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கிறது. இது அவர்களின் வருவாய் கடலில் ஒரு துளி மட்டுமே.

உலக வர்த்தகக் கழகம், இந்த மருந்து நிறுவனங்களுக்கு நிறைய தள்ளுபடிகள் கொடுத்திருப்பினும் இவர்கள் மலையளவில் லாபம் பார்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி மூலமான வருவாய்க்காக Pfizer நிறுவனம் 15 பில்லியன் டாலர்களும், Moderna நிறுவனம் 18.4 பில்லியன் டாலர்களும் இலக்கு வைத்திருக்கின்றனர். ஆனால், அடிப்படை ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்பு, அந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வருவது என அனைத்து வகையிலும் கணிசமான நிதியுதவி வெளிப்படையாக அரசாங்கங்களால் வழங்கப்பட்ட போதிலும் இந்த மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் சேர்ப்பதில் எந்த விதத்திலும் சளைத்துப் போகவில்லை.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவது மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தொற்றுக்கு பெரிதும் ஆட்படும் ஆபத்தில் இருக்கக் கூடிய முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தனர். பிறகு, இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. பின்னர், மூன்றாம் கட்டமாக மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பெருமையடித்துக் கொண்டது மோடி ரசு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட 60 வயது கடந்தோர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் சமயத்தில் இந்த மூன்றாம் கட்ட அறிவிப்பு வெளியானது. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் சரியாக வழங்கப்படாததால், “நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிலையில் இல்லைஎன்று மாநில அரசுகள் தங்கள் இயலாமையை ஒப்புக் கொண்டது. இப்படியொரு நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்பை மோடி வெளியிட்டதற்கு பின்னால் மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரம் மட்டுமே இருந்தது.

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாதது, ஆக்சிஜன் இல்லாதது, போதிய வெண்டிலேட்டர் இல்லாமை, ஆம்புலன்ஸ் வசதி போதிய அளவில் இல்லாதது, பிணத்தை எரிக்க இடுகாட்டில் இடம் இல்லாமல் மக்கள் தங்கள் உறவினர்களின் இறந்த உடல்களுடன் வரிசையில் நிற்கும் இந்த நிலையில் இந்த தெளிவில்லாத தடுப்பூசிக் கொள்கையால் பயனற்ற ஊகங்களும், கள்ளச் சந்தையும், முறைக்கேடுகளும் தான் அதிகரிக்கும். இந்த சூழலை, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை சம்பாதிக்க பயன்படுத்திக் கொள்வார்கள்.

பெருந்தொற்றால் மக்கள் தினம் தினம் இறந்துக் கொண்டிருக்கும் இந்த நிலைமையில், “தடுப்பூசியின் விலையை, அதன் கொள்முதலை, அதை தகுதியுள்ளவர்களுக்கு செலுத்துவதை வெளிப்படையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையாகவும் ஆக்கப்படும்என்கிறது இந்திய அரசு. அதாவது, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களே அதன் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிறது இந்திய அரசு.

Serum Institute of India-வின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா சொல்வது போல் மத்திய அரசிடம் விற்கப்படும் 200 ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி தனியாரிடம் ரூபாய் 1000-த்திற்கு விற்கப்படும். அதாவது, ஒரே தடுப்பூசியை மத்திய அரசிடம் ஒரு விலைக்கு, மாநில அரசுகளிடம் மற்றொரு விலைக்கும், தனியாரிடம் வேறொரு விலைக்கும் விற்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதியளிக்கும் வகையில் அமைந்துள்ளது மோடி அரசின் தடுப்பூசிக் கொள்கை. ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலைகள்!

இதற்கிடையில் தடுப்பூசி திருவிழா என்ற ஒன்றை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை அறிவித்தார் மோடி. ஆனால், அன்றைய தினங்களில் அதற்கு முந்தைய நாட்களில் செலுத்தப்பட்டதை விட குறைவான தடுப்பூசியே செலுத்தப்பட்டது. உண்மையான மதிப்பீட்டின் படி, இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி செலுத்தும் வேகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால், தேவைப்படும் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதுதான் நிதர்சனம். பெருந்தொற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பிரதமர் தனது இருப்பை காட்டிக் கொள்ள மீண்டும் மீண்டும் சாத்தியமில்லாத வெற்றுத் திட்டங்களை அறிவிப்பது இந்த சூழலில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

கொரோணா இரண்டாம் அலையில், இளைஞர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்தின் மற்றவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொரோணா நோய்க்கானப் பரிசோதனைக்காக, மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்காக, ரெம்டெசிவிர் மருந்துக்காக, ஆக்சிஜன் சிலிண்டருக்காக, இறுதியாக இறந்தவர்கள் உடலை தகணம் செய்வதற்கு என அனைத்திற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கள்ளச் சந்தையில் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை என்பதுகோவில் தரிசனம்போல்தான் இருக்கிறது. ஒருவரால் ரூபாய் 1,000 கொடுக்க முடிந்தால் அவருக்கு தனிச்சிறப்பான வரிசை. ரூபாய் 500 மட்டுமே கொடுக்க முடிந்தால் அவருக்கு வேறொரு வரிசை. காசில்லாதவர்களுக்கு மற்றொரு வரிசை என மக்களின் உயிர்களை காசை வைத்து தரம் பிரிந்து வைக்கும் அவலம் இங்கே நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி நிறுவனங்களின் வருவாய் இந்த காலத்தின் இரண்டு மடங்கிற்கும் மேலே செல்லும் என்று முன்னாள் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் சொல்கிறார்.

மத்திய அரசு ஒரு தடுப்பூசியை, அதை தயாரிக்கும் நிறுவனத்திற்கான லாபத்தையும் சேர்த்து ரூபாய் 150-க்கு மொத்தமாக கொள்முதல் செய்தால், இதற்காக செலவு ரூபாய் 19,500 கோடி மட்டுமே. ஆனால், இந்த சந்தை துண்டு துண்டாக்கப்பட்டு மாநிலங்களை தனித்தனியாக தடுப்பூசி ஒன்றை ரூபாய் 430 வீதம் கொள்முதல் செய்ய சொல்லும் போது அதற்கான செலவு ரூபாய் 42,000 கோடி ஆகிறது. ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 200 இருக்கும்போதே, சர்வதேச அளவிலான கொள்முதலில் அதுவே விலை யர்ந்த கொள்முதலாக இருக்கும். இந்த ரூபாய் 200 விலையிலான தடுப்பூசி மூலமாகவே தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான லாப ஈட்ட முடியும். மேலே குறிப்பிட்ட ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 430 என்பது மாநிலங்களின் கொள்முதல் விலையை ஊகித்து மட்டுமே. இந்த தடுப்பூசிக் கொள்கையின் படி தனியாருக்கு விற்கப்படும் விலை ரூபாய் 1000 முதல் 1200 வரை இருக்கலாம். மேலும், இந்த தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு அளவை 60 மில்லியன் டோஸில் இருந்து 100 மில்லியனாக உயர்த்த இந்திய அரசாங்கமும் GAVI அமைப்பும் இணைந்து Serum Institute of India-விற்கு ரூபாய் 4200 கோடி நிதியுதவி அளித்துள்ளது. Bharat Biotech நிறுவனத்தின் தயாரிப்பு அளவை 10 மில்லியனில் இருந்து 700 மில்லியனாக உயர்த்த ரூபாய் 1500 கோடி நிதியுதவி அளித்துள்ளது இந்திய அரசாங்கம். மோடியின் தடுப்பூசிக் கொள்கை தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதாக இருக்கிறது என்பது இங்கே அப்பட்டமாக வெளிப்படுகிறது.

Serum Institute of India தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா, ஒரு பேட்டியில் கூறுகையில், “ ஒரு தடுப்பூசியை ரூபாய் 150க்கு விற்பனை செய்தாலே லாபம் ஈட்ட முடியும். ஆனால், அதீத லாபம் (Super Profit) ஈட்டுவதுதான் எங்கள் லட்சியம். நடப்பில் ஈட்டப்படும்சாதாரணலாபத்தால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் திருப்தி அடைய முடியும். அந்த அதீத லாபத்தை ஒரு சில மாதங்கள் கழித்து பின்நாட்களில் நாங்கள் ஈட்டுவோம்என்றார். ஆனால், அந்த நாட்கள் வரை மோடி அவரை காத்திருக்க வைக்க விரும்பவில்லை போலும். உடனே தடுப்பூசிக் கொள்கையை தனியார் லாபவெறிக்கு ஏற்போல் திறந்து விட்டார்.

சில காலம் சென்ற பின்பு Business Standard-க்கு பேட்டி அளித்த அடர் பூனவாலா, “சிறப்பு விலையில் ஒரு தடுப்பூசி டோஸ் ரூபாய் 200 என்பது அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் முதல் 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கு மட்டுமே. இப்போது எங்களிடம் 50 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பு இருக்கிறது. அதை சிறப்பு உரிமத்தின் அடிப்படையில் அரசாங்கத்திடம் மட்டுமே கொடுப்போம். அதை சந்தையிலோ அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ மாட்டோம்என்றார். ஆனால், Serum Institute of India ஏற்றுமதி செய்தது என்பதே உண்மை. ஒருகட்டத்தில், உள்நாட்டு விற்பனையை விட ஏற்றுமதி அதிகரித்தது. Serum Institute of India தனது உற்பத்தி திறனை மாதத்திற்கு 110 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் விதமாக உயர்த்த ரூபாய் 3000 கோடி தேவைப்படுவதாக கூறியது. ஆனால், அதற்கு ரூபாய் 4200 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இதேபோல் Bharat Biotech நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கிருஷ்ணா எல்லா கூறுகையில், ”அந்த நிறுவனம் தடுப்பூசியை கண்டுபிடிக்க, மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் வரை ரூபாய் 350 கோடி செலவு செய்திருப்பதாககூறுகிறார். ஆனால், இந்த நிறுவனத்தின் உற்பத்தி திறனை தற்போதைய நிலையான ஆண்டுக்கு 60 மில்லியனில் ருந்து 700 மில்லியன் வரை தடுப்பூசிகள் தயாரிக்கும் வண்ணம் உயர்த்த ரூபாய் 1500 கோடி அரசாங்கம் அளித்துள்ளது.

இந்த கொள்கையின் விளைவாக தனியார் துறை தடுப்பூசி வழங்கும் முக்கிய புள்ளியாக வளர வாய்ப்பிருக்கிறது. மாநில அரசுகளின் பங்கை இது வெகுவாக குறைக்கும். இதனால், பெரும்பான்மையான மக்கள் ரூபாய் 1000-க்கு மேல் செலவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசி கண்டுபிடிப்பிற்காக செலவு செய்ததற்கு சம்பந்தமில்லாமல் விலையை நிர்ணய செய்யும் நிலையை உண்டாக்குகிறது. உதாரணமாக, Serum Institute of India தயாரிக்கும் Covishield தடுப்பூசியை Oxford பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca என்னும் நிறுவனமும் இணைந்துதான் கண்டுபிடித்தது. இதனால், Serum Institute of India மருந்து மேம்படுத்தும் (Product Development) கட்டத்தில் குறைவாகவே செலவு செய்திருக்கும். ஆனால், இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் விலையை நிர்ணயிக்க இந்த கொள்கை அனுமதிக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்யும் தடுப்பூசிக் கொள்முதல் மக்கள் வரிப் பணத்தின் மூலமாகவே சாத்தியமாகிறது. ஆனால், இந்த தடுப்பூசிக் கொள்கை மத்திய அரசையும் மாநில அரசுகளையும் வெவ்வேறு நிலைகளில் வைத்து அணுகுகிறது. இது தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

தடுப்பூசியின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துவிடும் என்பதை அறிஞர்கள் ஏற்பதில்லை. அனைவருக்கும் பொது மருத்துவம், மலிவான விலையில் மருந்துகள், தட்டுப்பாடுகள் இன்றி மருத்துமனைப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை அனைத்தையும் உறுதி செய்யாமல் கொரோனா தொற்றை வெல்ல முடியாது என்பதே நிதர்சனம். அதனால், தடுப்பூசியின் அளவான பயன்பாட்டை பற்றி பேச வேண்டியிருக்கிறது. தற்போதைய நிலையில் கிடைக்கும் தடுப்பூசிகள் கொரோனா தொற்றாமல் முழுவதுமாக தடுக்காது.

தடுப்பூசியால் தொற்றை குணப்படுத்தவும் முடியாது. கொரோனா தடுப்பூசி என்பது தொற்றின் தீவரத்தை குறைத்து, இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும். தடுப்பூசியின் காப்புத்தன்மை எப்போது செயலாற்றத் தொடங்கும் என்பது தெரியாது. எவ்வளவு நாட்கள் இந்த காப்புத்தன்மை நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. நடப்பில் இருக்கும் எல்லா கொரோனா தடுப்பூசிகளும் நெருக்கடி நிலையை கணக்கில் கொண்டு அவசர காலத்தில் அனுமதியளிக்கப்பட்டது. அதனால் அவற்றின் செயல்திறன் பற்றிய முக்கிய தகவல்கள் இன்னும் கண்டறிப்படவில்லை.

படிக்க :
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

ஆனாலும், தடுப்பூசிகள் விலையை தங்கள் ஈட்ட நினைக்கும் அதீத லாபத்திற்கு ஏற்றாப்போல் தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பார்கள். இதற்காக மக்களின் பொது சுகாதாரத்தை பலி கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் இடையூறுகளையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் கணக்கு எல்லாம்அதீத லாபம் (Super Profit)” மட்டுமே.

இந்த கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஆனால் இந்த நிலைமையிலும் தடுப்பூசி விசயத்தில் தனியார் ஏகபோகத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு கொள்கையை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது. மக்கள் உயிர்களை பழிகொடுத்து கார்ப்பரேட்களை கொள்ளையடிக்க அனுமதிக்கும் இந்த அவல நிலை மோடி அரசு கார்ப்பரேட் விசுவாசத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.


ராஜேஷ்
மூலக்கட்டுரை : countercurrents 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க