அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்
தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
ஆந்திரா: எஸ்.இ.ஐ.எல். அனல் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
மே 22 தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் பத்து நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை நிர்வாகம் இப்போராட்டம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீதான தாக்குதல்: காண்ட்ராக்ட்மயத்தை ஒழிக்காமல் தீர்வில்லை
தொழிலாளர்களை மிகக் கடுமையான முறையில் சுரண்டும் காண்ட்ராக்ட்மயத்தை - தனியார்மயத்தை ஒழிப்பதே இதற்கான தீர்வாகும். மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!
வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.
சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருக!
சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!
பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசன்ட் நிறுவனம்!
காக்னிசன்ட் நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வேலையில் வெளியேற்ற இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ஒரு கணக்கீடு செய்து இந்தியாவில் 12,000 முதல் 15,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் என்று ஐ.டி. துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வரலாறு இன்னும் முற்றுப் பெறவில்லை! | கவிதை
கூனிக் கிடந்த
தொழிலாளி வர்க்கம்
முதுகெலும்பின் கூர்முனையால்,
முதலாளித்துவத்தின் மார்பில்
செங்குருதி கொண்டு செதுக்கிய
மாபெரும் விடுதலை வரலாறு,
இன்னும் முற்றுப் பெறவில்லை!
இரத்தத்தை,
வியர்வையை
காலங்காலமாய் உறிஞ்சிக் கொழுத்து, கார்ப்பரேட் காட்டேறியாய் வளர்ந்து,
முழு உலகும் போதாதென
பாசிச வெறியேறிச் சுற்றித் திரிகிறது,
முதலாளித்துவம்!
பறிக்கப்பட்ட
நம் உரிமைகளைப்
பச்சை மாமிசமென மென்று...
டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!
“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியா: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போனஸ்க்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும், லாபத்தில் 15 சதவீத பங்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
46° செல்சியஸ் வெப்ப அலை வீச்சினால் கருகும் ‘கிக்’ தொழிலாளர்கள்
உலக வங்கியின் ஒரு மதிப்பீட்டின்படி இந்தியாவில் 75 சதவிகிதம் உழைப்பாளிகள் சற்றேறக்குறைய 38 கோடி பேர் கூரை இல்லாத திறந்த வெளியில் வெப்ப அலையில், ஆரஞ்சு-சிவப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் வேலை செய்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் என்ற போதும் இந்திய அரசோ மாநில அரசுகளோ இத்தொழிலாளர் நலனைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
ஐ.ஓ.சி.எல், என்.டி.பி.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத மிகக்குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், எந்த உரிமைகளும் இல்லாத அழுத்தம் மிகுந்த கடுமையான வேலை நிலைமைகள் என துயரம் மிகுந்த வாழ்க்கை நிலையினால் ஏற்பட்ட பெருங்கோபத்தின் விளைவாய் ஒன்றிணைந்து உருவானது இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம்.
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு | மீள்பதிவு
உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும்.
மே தின சிறப்புக் கதை: சிலந்தியும் ஈயும்! | மீள்பதிவு
“சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.
























