Thursday, July 30, 2026
குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்‌. சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம், நேற்று தர்மேந்திர பிரதானின் பதவி விலகலையடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாசிச மோடி அரசு மாணவர்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அதனையெல்லாம் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டே மாணவர்கள் இவ்வெற்றியைச் சாதித்துள்ளனர்....
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல். மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! பாசிச மோடியே, போராடிய மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மன்னிப்புக் கேள்! மாணவர்கள் மீது பதிந்த வழக்குகளை இரத்து செய்! நீட் தேர்வை இரத்து செய்! தேசிய தேர்வு முகமையை கலைத்திடு! *** Union Education Minister Dharmendra Pradhan resigned! A victory for student - youth protest! Fascist...
மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன.
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்தும், நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட பாசிச அடக்குமுறைகள் குறித்தும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான கேலிச்சித்திரங்களை இங்கு வெளியிடுகிறோம்.
நாங்கள் மண்டியிட மாட்டோம்! நாங்கள் சரணடைய மாட்டோம்! நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல நாங்கள் அழியவும் மாட்டோம்!
இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
காஷ்மீர், காசா போன்ற இடங்களில் மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கியைக் கொண்டு டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
டெல்லி மாணவர் போராட்டம்: உனக்கான அரசியல் பேசு ம.க.இ.க. “சிவப்பு அலை” கலைக்குழுவின் புரட்சிகர பாடல் மறுபதிப்பு https://youtu.be/slsnpnUMG30 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
“ஆண்ட பரம்பரை” என்ற வீண் ‘பெருமை’யை பலவாறு பேசி சாதிவெறியை ஊட்டும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களும், அதன் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுமே இத்தகைய ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் | நந்திதா, சி.ஜே.பி. https://youtu.be/ErGX1JIl4TI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

அண்மை பதிவுகள்