Thursday, August 13, 2026
“சாதியிலிருந்து வெளியேறு; அதே நேரத்தில் உன் சமூகநீதி உரிமையையும் விட்டுவிட்டு வெளியேறு!” என்பதுதான் இந்தச் சட்டமும், தீர்ப்பும் நிலைநாட்டும் மனுநீதி! இதை அனுமதித்தால் சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீது பாசிச கும்பல் நடத்திவரும்  தாக்குதல்களுக்கு அது மேலும் வலுசேர்க்கும்.
சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் திரண்டு, சாதி வெறியாட்டம் போட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, சிறையில் இருக்கும் யுவராஜால் தொடங்கப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்தவர்களின் அத்துமீறல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
கடந்த 2025-26 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் அனுமதித்திருந்த எண்ணிக்கையை விட கூடுதலாக 36 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் முறைகேடாக சேர்த்துள்ளது. இதனால், கடந்த மே மாதம் நடைபெற்ற பருவத்தேர்வில் (Semester) கூடுதலாக சேர்க்கப்பட்ட 36 மாணவிகளுக்கு பதிவெண் வழங்கப்படாததால் அம்மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்த வேண்டும்; ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
தூத்துக்குடி துளசி மகளிர் சட்டக்கல்லூரி முறைகேடு: மாணவிகள் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் https://youtu.be/EB8CV66L1P8 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உ.பி-யை சேர்ந்த முகமது ஜுனைத் டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு இறுதி வரை உணவும் குடிநீரும் வழங்கும் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். டெல்லி போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்தில் வைத்து, கண்களைக் கட்டி உணவு வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காலையில் உத்தராகண்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
ராமரின் வீட்டிற்கு வந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரகு என்பவர் அவர்களது குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி ராமரையும் பிரசாந்தையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 5 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்தார். உடன் சென்ற பிரசாந்த் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! மக்கள் அதிகாரக் கழகம் பிரச்சாரப் பயணம் - கருத்தரங்கம் ஜூலை - ஆகஸ்ட் 2026 கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீசால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். ஆகாஷ் டெலிசனை படுகொலை செய்த 16 போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி...
“ஜனவரி 2021 முதல் இன்று வரை கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளில் 593 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 332 மரணங்கள் மட்டுமே நடந்துள்ளதாக அறிக்கையாக அளித்துள்ளது. இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாது.” - சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்
கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஜூலை 24 அன்று, பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த ‌பள்ளி மாணவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதை ம.அ.க. கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கண்டிக்கிறது; அவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
“வேண்டாம் நீட் தேர்வு! வேண்டும் ஜனநாயகம்!, ஒன்றிய அரசே! கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலக்கு!” என்ற முழக்கங்களை முன்வைத்து, மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பகுதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கவின் குடும்பத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்‌. சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

அண்மை பதிவுகள்