Thursday, June 18, 2026
கவின் ஆணவப் படுகொலை: குற்றவாளிக்கு ஆதரவாகப் போராடிய சாதிவெறியன் இசக்கி ராஜாவை கைது செய்! https://youtu.be/j8LcsxuCH2M காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
அன்று பெரும்பத்து.. இன்று ஆலங்குளம் சாதிய தாக்குதல் ஆதிக்கச்சாதி சங்கங்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். https://youtu.be/HbhgdqHrapc காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியைச் சேர்ந்த 6 பேர் மீது அதே ஊரைச் சேர்ந்த மறவர் சாதி கும்பல் சாதிவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவோராக உள்ளனர்.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாயகத்தின் மடி கிழித்து, மலைகளின் மார்பு பிளந்து, கனிமங்களின் பச்சை உதிரம் குடித்து உண்டு கொழுக்கும் கார்ப்பரேட் பிணந்தின்னிகளுக்காக, அதிகாரத்தில் அமர்ந்து காவிப் படைகள் பாதை விரிக்க, எஜமானனின் சொல் தட்டாது தலையாட்டும் நீதியின் மேசைகள் தீக்கிரையாக்கும் தீர்ப்பொன்றைக் கீறிவிட, ஆயிரமாயிரம் கூரைகளின் சாம்பல் மேடைகளில் நிர்வாணமாய் நெருப்பில் வெந்து அலறுகிறாள் - ஏழு சகோதரிகளில் ஒருத்தி! அவள் மேனியெங்கும் ஒலித்த எம் பாட்டன் பூட்டனின் பழங்குடியினப் பாடலின் பல்லவிகள் பற்றி எரிந்து, மலைமுகடுகளெங்கும் இன்று ஒலிக்கின்றன மரணத்தின் ஒப்பாரி ஓலங்கள்! அதிகாரத் துருப்பிடித்த சட்டப் புத்தகங்கள் அடிமைத்தனத்தின்...
அதிகாலை நான்கு மணிக்கு போதையிலிருந்த கும்பல், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடும் இடமான மாநகராட்சி பூங்காவில் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
மோசடி கும்பல் தேர்வு மையத்திற்குள் ப்ராக்ஸி சர்வர்களை நிறுவி, திரை பகிர்வு மென்பொருள் மூலம் பணம் கொடுத்த மாணவர்களின் கணினித் திரைகளைத் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்குப் பகிர்ந்துள்ளது. அவர்கள் கணினியை இயக்கி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதன் மூலமே முறைகேடாக தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.
தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா https://youtu.be/f6E1J-HN49c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.

அண்மை பதிவுகள்