Sunday, October 26, 2025
பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படமும் நீல சிவப்புக் கட்சி கொடியும் ஒட்டியிருப்பதைப் பார்த்து அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, இது யாரு வண்டி என்று கேட்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.
இலங்கையின் நடுக்கும் குளிரில், நடுநிசியின் பசி தின்னும் பொழுதில், எம் வயிற்றின் பசிக்காகவும், உம் நாக்கின் ருசிக்காகவும், மீன் கவ்விய வாடையுடன், கரையோரம் வலைகளைப் பின்னி பழகிய கரங்கள் இப்போது, வலியின் சொற்களை, இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன், சிறைக் கம்பிகளுக்குள் இருந்து பின்னி அனுப்பும் தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது இது! பெருங்கடலின் கர்ஜிக்கும் அலைகளில் மிதக்கும் கச்சத்தீவு எல்லைக் கோட்டில் சுருக்குக் கயிற்றில் தொங்கியபடி நூறு நூறு மீனவர்கள், பிணங்களாய்! எல்லையை அச்சுறுத்தும் பயங்கரக் குறியீடாய்! அலையின் ஓசை அவ்வப்போது அழுகையின்...
திருமணமான நாள் முதலிருந்தே ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 12-ந் தேதி பால் கறவைக்காக ராமசந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை சாதிவெறியன் சந்திரன் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.
தேதி: 14.10.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம்.
ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.
புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தது புதுச்சேரி போலீசு.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!
நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.
கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும்.
தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.
இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜினாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.

அண்மை பதிவுகள்