பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா?
அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு சமுதாய நலனுக்காக தம்மை முழுவதுமாக ஒப்படைத்த நமது முன்னோர்களைப் பார்க்க முடிகிறது.
இந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று நல்லதங்காள் கதையைக் கேட்டு மூக்கைச் சிந்துபவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொடுங்கோன்மைக்கு எதிராக கீதா (கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்) சந்தித்தக் கொடுமைகள், எதிர்கொண்ட அவமானங்களை இப்புதினத்தில் பார்க்கும் யாரும் இன்றளவும் நீடிக்கின்ற இந்தப் பிற்போக்குச் சமுதாயத்தின் மீது கோபம் கொள்ளாமல் இருக்கமுடியாது.
நடைபாதையில் நின்று, போவோர் வருவோரிடம் கட்சிப் பத்திரிகை விற்றுக் கொண்டிருக்கிறாள் கீதா. காங்கிரஸ்காரனான ரவுடி பவாரியாவின் கண்கள் அவளுடைய மேனியை மேய்கின்றன. அவனுடன் நிற்கும் சுகில், பவரியாவைக் கிள்ளியபடியே கேட்கிறான். ”முதலாளி உருப்படி எப்படி?” இத்தகைய அருவெறுப்பான பார்வைகளைக் கீதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது. அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி நல்ல உடைகளையும், நகைகளையும் அணிவதைவிட மேலானது என்பதை அவள் உணர்ந்தாள்.’ (பக்.13). இப்படிப் பிற்போக்குத் தனங்களை உதறியவுடன் இலக்கில்லாமல் எதையும் எதிர்ப்பது என்று ”வாய்ப்புரட்சிக்கு” வம்பளக்க ஒதுங்கவில்லை. புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க உள்ள தடைகளைத் தகர்ப்பதற்கு எதையெல்லாம் பற்றியொழுகலாமோ அதுவே அவளுக்கும் ஒழுக்கமானது.
ஒழுக்கம் நாகரிகம் பற்றிய பொது வரையறையை கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை. அது வர்க்கத்திற்கு ஏற்றாற் போல வரையறுக்கப்படுகிறது என்பதை வாழ்க்கையிலிருந்து எடுத்துக் காட்டுகிறது ஒரு பகுதி:
“… எண்ணற்ற தெருக்கூட்டும் தொழிலாளி சகோதரிகளும், பூர்வகுடிப் பெண்களும் முழங்கால்கூட மறையாத ஆடைகளுடன் மார்பு தெரிய குப்பை கூட்டுகின்றனர். யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை. வெட்கித்தலை குனியவில்லை. ஒரு பூர்ஷ்வா, ஏன் படித்த வர்க்கத்து சின்ன எஜமானிகளின் சேலை அரை சாண் உயர்ந்துவிட்டால் பம்பாய் நகரம் பற்றி எரிகிறது…” (பக்.21).
இப்படி கீதாவை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு, போராட்டங்களைச் சொல்வதுடன் – பவாரியா என்ற காங்கிரஸ் அனுதாபியும், ஏரியா தாதாவுமான ஒரு ரெளடியை கம்யூனிஸ்ட் கட்சி – குறிப்பாக கீதா எவ்வாறு அரசியல் படுத்துகிறார் என்பதும், பவாரியாவின் சொந்த அனுபங்களின் மூலமாகவே காங்கிரஸின் ஏகாதிபத்திய சேவையை அம்பலப்படுத்துவதும் சிறப்பாகப் புதினத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
முத்தாய்ப்பாக கப்பற்படை எழுச்சியை கம்யூனிஸ்டுகள் ஆதரித்துப் போராடும் போது, ’இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று புகழப்படும் சர்தார் பட்டேலின் வேண்டுகோள் இது: ”மக்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் வேலை நிறுத்தம் போன்ற எதிலும் கலந்துகொள்ளாமல் அடக்கமாக இருக்க வேண்டும். மக்கள் எந்தவிதமான உதவியோ ஆதரவோ காட்டக்கூடாது” என்று எச்சரித்தார். (பக்.80).
வரலாற்று வழியில் காங்கிரஸ் இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அன்றைக்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை காங்கிரசை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்குப் பதில் அதன் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சதி என்று கருதி தவறிழைத்ததையும் பலகாட்சிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இன்றைய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்டு) பத்திரிகையான தீக்கதிரின் பொறுப்பாசிரியர் சு.பொ. அகத்திய லிங்கம் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையை வாசகர்கள் பின்னுரையாகப் படிப்பது நல்லது.
அன்று காங்கிரசின் அவதூறுகளுக்கு இரையான கம்யூனிஸ்டுகளின் அனுபவத்தைக் காட்டி, ”இப்போது இந்துமதவெறி பாசிச சக்திகளை உறுதியோடு எதிர்த்து நிற்பதால் இத்தகைய அவதூறு பிரச்சாரத்துக்கு கம்யூனிஸ்டுகள் ஆளாக்கப்படுகிறார்கள் அல்லவா?” என்று தங்களுடன் முடிச்சுப் போடுகிறார்.
கப்பற்படை எழுச்சிக்குத் தோள் கொடுத்த தோழர்கள், இன்று காங்கிரசு எழுச்சிக்குத் தோள் கொடுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு முன்னோடிகளா?
இந்த முன்னுரையின் தலைப்பு ”காம்ரேட் கீதாவுடன் ஒருமுறை கை குலுக்குங்கள்.” ஆனால் சுர்ஜித்தும் பாசுவும் அன்னை சோனியாவுடன் அல்லவா கைகுலுக்கச் சொல்கிறார்கள்!
– சித்தன். (புதிய கலாச்சராத்தில் வெளிவந்த நூலறிமுகம். அப்போது இந்நூலை அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. தற்போது பாரதி புத்தகலாயம் வெளியிட்டிருக்கிறது.)
சின்க் (sink)டெஸ்ட் என்று ஒரு பதம் எங்கள் துறையில் பேசப்படுகிறது. உங்களிடமிருந்து எடுக்கப்படும் மாதிரி பரிசோதனைக்கு செல்லாமல் கழிவுநீர் பகுதிக்கு செல்வதைதான் இப்படி அழைக்கிறார்கள்
தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”). நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் 78 மருத்துவர்களை சந்தித்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடத்தை குறித்து கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மருத்துவர்கள் அருன் கேத்ரே மற்றும் அபய் சுக்லா ஆகியோர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.
தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”).
குறிப்பாக 1990-களுக்கு பிறகு மருத்துவம் எந்த அறமுமில்லாத தொழிலாக சீரழிந்திருக்கிறது, எப்படி வணிகமாக மாறியிருக்கிறது என்பதை மருத்துவர்களின் தனிப்பட்ட அனுபவங்களினுடாக விவரிக்கிறார்கள்.
கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஆதிக்கம், மருந்து தயாரிப்பு (பார்மா) நிறுவனங்களின் ஆதிக்கம், தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகள் என பலவற்றை மருத்துவ துறையினுள்ளிருந்துவரும் மனசாட்சியின் குமுறலாக இக்குரல்கள் ஒலிக்கின்றன. ஒவ்வொரு மருத்துவர்களின் கருத்துகளாக தொகுக்காமல் பொருத்தமான தலைப்புகளில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்திருகிறார்கள். இவ்வடிவம் குறிப்பிட்ட பிரச்சனை முறைகேடு தொடர்பான தொகுப்பான கருத்துகளை எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது.
தனியார்மயம் போட்டியை உருவாக்கி குறைந்த செலவில் சிறப்பான சேவையை தரும் என்ற தனியார்மய ஆதரவாளர்களின் வாதங்கள் நடைமுறையில் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தனியார்மயம் மருத்துவம் என்ற துறையை மீளமுடியாத நிலைக்கு தள்ளியிருப்பதை இம்மருத்துவர்கள் வாயிலாக அறிய முடிகிறது. பொருத்தமான சட்டங்கள், அரசு தலையீடு மூலம் சரிசெய்துவிட முடியும் என புத்தக ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் அளித்துள்ள விவரங்கள், முறைகேடுகளை படித்தாலே இவ்வமைப்பு முறை மீள முடியாத அளவிற்கு சீழ் பிடித்திருப்பதை தெளிவாக காட்டுகிறது.
அப்புத்தகம் முன் வைக்கும் சில பிரச்சினைகளை பார்ப்போம்.
ஒரு கார்ப்பரேட் மருத்துனையில் புதிதாக சேர்ந்துள்ள இளம் மருத்துவர் இவ்வாறு கூறுகிறார். “ சார் ஒவ்வொரு மாதமும் எங்கள் மருத்துவனை சி.இ.ஓ உடன் ஆய்வு கூட்டம் நடக்கும். அவர் என்னிடம் புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களின் மாற்ற விகிதம் 10-15% ஆக இருக்கிறது. இது அனுமதிக்க முடியாது. இது மீண்டும் தொடர்ந்தால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரித்தார்”. “தொழில் முறையில் தன்னை தக்கவைத்துகொள்ள இம்மருத்துவர் இலக்கை அடைவதை தவிர வேறு வழியில்லை. மருத்தவர் எனும் மக்கள் தொண்டர் அறமா இல்லை கார்ப்பரேட் மருத்துவமன முதலாளியின் அடிமையா என்று வரும்போது இவரைப் போன்றவர்கள் பின்னதை ஏற்கின்றனர். எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் இப்படி இலக்கு நிர்ணயிக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க வழியில்லை” என்கிறார் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஒன்றின் மூத்த மருத்துவர்.
மூத்த இதய நிபுணர் மருத்துவர் கவுதம் மிஸ்டிரி தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார், “ கார்டியாலஜி முடித்த சில மாதங்களில் அரசு மருத்துவமனையில் வேலை செய்தேன். அங்கு காய்ச்சல், இருமலுக்கு மருத்துவம் பார்க்கவே அரசு என்னை பயன்படுத்தியது. அதனால் அங்கிருந்து வெளியேறி ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கோ மருத்துவனையில் லாபத்தை அதிகரிக்க தேவையில்லாத பரிசோதனைகள், தொடர் சிகிச்சை முறைகளுக்குள் நோயாளிகளை கொண்டு செல்வது, நோயாளிகளை தேவையான நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பது என முறைகேடான வேலைகளை செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். என் மனசாட்சி உறுத்தவே அங்கிருந்த்து வெளியேறிவிட்டேன்” என்கிறார்.
தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைப்பதன் மூலம் கொள்ளையடிப்பதை மருத்துவர்கள் விவரிக்கிறார்கள், “ உதாரணமாக டைபாய்டு காய்ச்சலை எடுத்துக் கொள்ளுங்கள், நோய்வாய்பட்ட ஐந்து நாட்களுக்குள் இரத்த பரிசோதனை செய்தால் உங்களால் எதையும் கண்டறிய முடியாது. ஆனால் ஒரு நாள்விட்டு ஒரு நாள் இப்பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை எந்தளவுக்கு செலவானதோ அந்தளவுக்கு அப்பரிசோதனை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. சின்க் (sink)டெஸ்ட் என்று ஒரு பதம் எங்கள் துறையில் பேசப்படுகிறது. உங்களிடமிருந்து எடுக்கப்படும் மாதிரி பரிசோதனைக்கு செல்லாமல் கழிவுநீர் பகுதிக்கு செல்வதைதான் இப்படி அழைக்கிறார்கள். பரிந்துரைக்கும் மருத்துவமனை/மருத்துவருக்கும் பரிசோதனை நிலையத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது நடக்கும். இருவருக்கும் பரஸ்பரம் லாபம்.”
புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
மக்கள் அறைகுறையாக விவரம் தெரிந்திருப்பதிலிருந்து தனியார் மருத்துவமனைகள் எப்படி காசு பார்க்கின்றன என்பதை விவரிக்கிறார் ஒரு மருத்துவர், “பிளேட்லெட் கவுண்ட் என்ற பதத்தை மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். சாதாரண வைரல் காய்ச்சலுக்கும் இதன் எண்ணிக்கை குறையும். இவர்களில் வெகு சிலருக்குதான் தீவிர சிகிச்சை தேவைப்படும். ஆனால் மருத்துவமனைகளோ நோயாளிகளிடம் இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை 2 லட்சத்திற்கு பதிலாக 1,50,000 ஆக குறைந்திருக்கிறது என்று பீதியூட்டுகிறார்கள். வசதியான நோயாளியாக இருந்தால் அப்படியே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து பல்லாயிரக்கணக்கில் வசூல் செய்துவிடுகிறார்கள்.
இது போலவே பிறக்கும் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த அளவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது இயல்பு. 14-16 மி.கி பிலிருபின் அளவை தாண்டும் போது தான் அது ஆபாத்தானதாகிறது. அதே சமயத்தில் விடலை பருவத்தினருக்கு 1மி.கி அளவை தாண்டினால் ஆபத்தானது. இதில் மருத்துவமனை என்ன செய்யும்மென்றால் விடலை பருவத்தினருக்கான சீட்டில் பிறந்த குழந்தையின் பரிசோதனை முடிவை எழுதி கொடுப்பார்கள். இதை பார்க்கும் குடும்பத்தினர் 1மி.கிக்கு குறைவாக இருப்பதற்கு பதில் குழந்தைக்கு இரண்டு இலக்கத்தில் இருக்கிறதே என அஞ்சி மருத்துவமனைக்கு எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராகிவிடுவார்கள். அதோடு தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தையை அசாத்யமாக காப்பாற்றிய மருத்துவமனையை போற்றி புகழுவார்கள்.”
தனியார் மருத்துவனை முறைகேடுகளை சொந்த அனுபவத்திலிருந்து அடுக்குகிறார்கள் மருத்துவரகள், “ஒருவருக்கு குடலிறக்கம் கண்டறியப்பட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சில தையல் மட்டுமே போட்டு அனுப்பினார்கள்”
“எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிருக்கிறது. உண்மையில் எந்த அறுவை சிகிச்சையும் செய்யாமல் மேலோட்டமான கீறல் மட்டும் செய்துவிட்டு முழு அறுவை சிகிச்சைக்கான பணம் வசூலிக்கப்பட்டது”
மருத்துவர்கள் அபய் சுக்லா மற்றும் அருண் கேத்ரே
“சாதாரண கன்ணாடி அணிந்தால் சரியாகும் பிரச்சணைக்கு கண்புறை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்கிறார்கள். 30,000-40,000 வரை பிடுங்கிக்கொள்கிறார்கள். வாரத்திற்கு இது போன்ற இரண்டு அல்லது மூன்று பேரை பார்க்கிறேன். காப்பீடு இருப்பவர்கள் இப்படியான வலையில் உடனடியாக விழுந்துவிடுகிறார்கள். கண்புறை அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்திவிட்டு யாரோ பரிந்துரைத்தார்கள் என்ற அடிப்படையில் என்னிடம் வருகிறார்கள். அவர்களை பரிசோதித்துவிட்டு கண்புறை இல்லை கண்ணாடியே போதும் என்று கூறினால் என்னை சந்தேகமாக பார்க்கிறார்கள்.அவர்களுக்கு யாரை நம்புவது என்று தெரியவில்லை. நான் சரியாக பரிசோதிக்கவில்லையோ என அஞ்சுகிறார்கள். அறுவைசிகிச்சை செய்யும்படி வற்புறுத்துகிறார்கள்.” என்கிறார் ஒரு மருத்துவர்.
“மருத்துவர்கள் மருத்துவ கட்டணத்தைவிட கமிசன் மூலமாகத்தான அதிகம் சம்பாதிக்கிறார்கள். அது தான் அவர்களது பிரதான வருமானமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் எக்ஸ்-ரே விற்கு 25%, எம்.ஆர்.ஐ சி.டி ஸ்கேனுக்கு 33% கமிசனாக எங்களுக்கு தருகிறாரகள்.”
பூனாவைச் சேர்ந்த மருத்துவர் பிரதிபா குல்கர்னி கூறுகிறார், “சமீப காலத்தில் மருத்துவ கட்டணம் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. வரும் காலங்களில் எங்களை போன்ற மருத்துவர்களே இதை தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.
“தடுப்பூசிகளின் விலை மிக அதிகமாக இருக்கிறது. யாருக்கு எதை பரிந்துரைப்பது என்று தெரியவில்லை. நாம் பரிந்துரைத்தால் நோயாளிகள் அதை கட்டாயம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அது அவர்களுக்கு மிக அதிக செலவை ஏற்படுத்தும். மருந்து தயாரிப்பிலிருந்து தனியார் நிறுவனங்களை விலக்கி வைக்கவேண்டும். அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.” என்கிறார் ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.
“ஒரு மருத்துவ மாணவர் மருத்துவராக வெளியே வரும்போதே மருந்து நிறுவனங்கள் அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொன்டு வந்துவிடுகின்றன. இந்நிறுனங்களின் பிரதிநிதிகள், தொழிமுறை மருத்துவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். “நாம் அம்மருத்துவர்களை கேட்பது ஒன்று தான், மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் உங்களுக்கு பாடமெடுப்பது வெட்கமாக இல்லையா?” என்கிறார் மருத்துவர் சஞ்சிப் முகோபாத்யா
தற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. மருந்தகம் மற்றும் ஆய்வகங்களுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும்.
“இன்று மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களை தங்கள் கைப்பாவையாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் வெறும் கைப்பாவைகள். மருந்து நிறுவனங்களில் தாளத்துக்கு ஆடும் கைப்பாவைகள்” என்கிறார் மருத்துவர் ராஜேந்திர மலோஸ்.
“கார்ப்பரேட் மருத்துவமனைகள் உங்களுக்கு அதிகமான சம்பளம் தரும். அதை திரும்பபெறுவதற்கான பொறுப்பை உங்கள் தலையில் சுமத்தும். மருத்துவரால் முடியவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார். ஒரு விமான நிறுவனத்தில் விமானம் பறக்காமல் எப்படி அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியாதோ அப்படி தான் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும். இங்கு மருத்துவமனையின் ஒவ்வொரு படுக்கையிலும் ஏதாவதொரு அறுவைசிகிச்சை அல்லது தொடர் சிகிச்சை இல்லாமல் இவர்களால் இயங்கமுடியாது.”
நாசிக்கை சேர்ந்த மருத்துவர் ஷ்யாம் அஷ்டேகர் கூறுகிறார், “தற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. மருந்துகம் மற்றும் ஆய்வகங்களுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும். பின்னர் இந்த மருந்தகம், ஆய்வகங்களுக்கு வளாகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விலை நிர்ணயம் செய்துகொள்வார்கள். தேவையற்ற மருத்துவ முறைகளுக்குள் நோயாளிகளை தள்ளுகிறார்கள். சாதாரண நோய்களுக்கு கூட அறுவை சிகிச்சை செய்யவைக்கப்படுகிறாரக்ள்”.
“ ஒரு சாதாரண வியாபாரத்தில் கூட அது நியாயமாக நடந்ததா இல்லை அநியாயமா என்று பகுத்துப்பார்க்க முடிகிறது. ஆனால் அது மருத்துவத்தில் முடிவதில்லை. நோயாளியிடம் வசூலிக்கும் கட்டணத்தைவிட கமிசன் மூலம் சம்பாதிப்பது அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவ துறையில் வெளிப்படை தன்மையில்லாதது கவலைக்குரியதாக இருக்கிறது. கார்ப்பரேட் மருத்துவனைகள் அதிகரிப்பதோடில்லாமல் வலுவாக காலூன்றிவிட்டார்கள். அரசின் பாராமுகம் காரணமாக அரசு மருத்துவம் வலுவிழந்துவிட்டது. கார்ப்பரேட்கள் வருகையுடன் மருத்துவதுறையின் முன்னுரிமையும் மாறிவிட்டது. தற்போது மருத்துவர்களின் முன்னுரிமை நோயாளிகளின் நலன் அல்ல; மாறாக மருத்துவமனை பங்குதாரர்களின் லாபம் தான் அவர்களது முன்னுரிமை” என்கிறார் சென்னை மருத்துவர் அர்ஜூன் ராஜகோபாலன்.
நோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் ஒரு மருத்துவர்
“தனியார் மருத்துவ தொழில் என்பது பணம் சம்பாதிப்பதை ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கிறது. தங்கள் மெர்சிடிஸ் கார்களுக்கு தவணை கட்டவும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் மேலும் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பது இது தான் தனியார் மருத்துவத்தின் குறிக்கோளாக இருக்கிறது. ஆரோக்கியம் என்ற அறிவியலை சுயநல அழிவுவின் அறிவியலாக மாற்றிவிட்டிருக்கிறது.” என்கிறார் ஒரு மருத்துவர்.
நோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் இம்மருத்துவர். “ஒரு மருத்துவர் மருத்துவமனையில் திருடுவதை உங்களால் நம்ப முடியுமா? எனக்கு தெரிந்த மருத்துவர் நோயாளிக்காக சலைன் பாட்டிலை திருடினார். ” நோயாளி ஆதரவில்லாமல் இருந்தார். அவருக்கு வேறு வழியில்லை. நீங்கள் புகழ் பெற்ற மருத்துவமனை என்பதால் விருப்பம்போல வசூலிப்பீர்களா? இது சரியில்லை” என்கிறார் மருத்துவர் சிரிஷ் பட்வர்தன்.
மருத்துவர் சஞ்சய் நகரால், “சமூகம் மருத்துவரை மதிப்பிடும் முறையும், மருத்துவர் தன்னை மதிப்புடும் முறையும் மாறியிருக்கிறது. பெரிய கார்களையும், அதிக பணம் கொண்டவர் தான் வெற்றிகரமான மருத்துவராக பார்க்கப்படுகிறார். தனியார் மருத்துவம் அறநெறிகளுக்கு இடமில்லாததாக இருக்கிறது. போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது. “ என்கிறார் .
ரத்தக் களறியான
அவனது காயத்தின் மீது
மீண்டும் மீண்டும் எட்டி உதை
தானாக அது ஆறிவிடும் – விடாதே
அவனது வலி – அது கிடக்கட்டும்
அவன் காயத்திலிருந்து
ரத்தம் பெருக வேண்டும்
சித்திரவதையின் நினைவு
அவன் அடிவயிற்றில்
தேங்கிக் கிடக்க வேண்டும்.
மீறிப் பறப்பேன் என பிதற்றுகிறானா.
நீ ஓர் குற்றவாளி என்று சொல்
அதை அவன் மறக்கக் கூடாது.
சேற்றை வாறி அவன் மூஞ்சியில் வீசு
அவனது சொல்லில் காட்டு மலர்கள்
பூத்து மனக்கிறதா,
மிதி – ரத்தக் கூழாகட்டும் அவன் கைகள்
பிணத்தின் கைகளைப் போல
வெளுத்துப் போகட்டும்
கிடக்கட்டும்
குப்பை போல
அவன் கீழே கிடக்கட்டும்
கவனமாயிரு
உள்ளே பூட்டிய இசையை
அவன் இதயம் ஒருக்காலும்
விடுதலை செய்யவே கூடாது
உன் சட்டம் வேறு
என் சட்டம் வேறு
ஒரு நதி சீறி எழுந்து
நிலவோடு பேகமானால்
மலைகளால் – நீரிலேயே
சுவர் எழுப்பு.
மார்கோஸ் ஆனா
ஒரு நட்சத்திரம்
தூரம் தவறிக் கீழே பாய்ந்து
அந்தச் சிறுவனின்
இளம் உதடுகளில் பளிச்சிடுமானால்
அதை நெறித்துச் சபித்து
எங்கோ ஒரு வானமூலையில்
விட்டெறி
ஒரு காட்டுமான்
சுதந்திரத்தையும்
காட்டுப்பச்சையையும்
ஒன்றுசேர அருந்துவதைப்
பார்க்கிறாயா,
நாயை அடிப்பது போல அடி
ஒரு மீன்
துளி நீருமில்லாமல்
வாழ்ந்துவிடும் எனில்
கரை, நிலத்திலிருந்து
மீனை விலக்கி வை.
கைகள் – அவனது கைகள்
காற்றை அனைத்து மகிழும்
கனவை ரசிக்குமானால்
அவற்றைக்
கறிவெட்டும் கட்டைமீது
கிடத்திக் கொத்து
ஒரு விடியல் – பளிச்சிடும்
கிளர்ச்சியோடு புலருமானால்
இருளின் கருப்பு நிற வானை
அதன் கண்களில் பாய்ச்சு.
அதோ? அவனைப் போல
ஒரு மனிதன் – அவனுக்கு
காற்றைப் போல ஒர் இதயம்
இருக்கக் கூடுமானால்
அவனது முழங்கால்களை
மார்போடு சேர்
பாறைகளைச் சேர்த்து
இறுகக்கட்டு
உலகின்
அடி ஆழத்துக்கு
அவனை அனுப்பி வை!
– மார்கோஸ் ஆனா
மார்கோஸ் ஆனா: பிறப்பு 1921 ஸ்பானியக் கவிஞர். ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் சோசலிச இளைஞர் கழகத்தில் இணைந்தார். அப்போரில் அவரது தந்தை கொல்லப்பட்டார். போரின் இறுதியில் அவர் (18-ஆவது வயதில்) கைது செய்யப்பட்டார். முதலில் துக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின் முப்பதாண்டு தீவிரச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. பின்னாளில், அவர் தனது 40-ஆவது வயதில் (1961 – இல்) 22 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைத் தாகமும் போராட்டத் துடிப்பும் ஒன்று சேரக் கேட்கும் பல கவிதைகளை எழுதியவர்.
ஆங்கிலம் வழியாகத் தமிழில்: புதுர் இராசவேல். புதிய கலாச்சாரம், ஜனவரி, 2001.
மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பிற்கு எதிரான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கண்டன ஆர்ப்பாட்டம்
1. சென்னை
சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக்குவது, சமஸ்கிருதப் பள்ளிகளைத் துவங்குவது, என்று இந்துத்துவ கருத்துகளை புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும், மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து 29-06-2016 அன்று காலை 11.30 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை மாநகர செயலாளர் தோழர் ராஜா, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் திரு. ஆர். சிவகுமார். வேல் டெக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சாந்தி, மதுரவாயல் அரசுப் பள்ளி மாணவர் ஆகாஷ், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த. கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர்களின் கண்டன முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது. முதலில் உரையாற்றிய பேராசிரியர் திரு. சிவகுமார், “1960 களில் இந்தியை திணிக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்த்துப் போராடி, இந்தித் திணிப்பை முறியடித்தனர். இன்று சமஸ்கிருத மொழியில் தான் அறிவியல் உள்ளது என்று சொல்லி பிள்ளையார் பிறந்த கதையையும், கெளரவர்கள் பிறந்த கதையும் கூறிவருகின்றனர். இப்படிப்பட்ட மொழியை தான் கண்டிப்பாக படித்தாகவேண்டும் என்று மோடி அரசு திணிக்கிறது. உண்மையில் இதைப் பார்த்து உலகில் உள்ள எல்லா அறிவியலாளர்களும், ஆய்வாளர்களும் மத்திய அரசைப் பார்த்து காறித் துப்புகின்றனர். இருந்தாலும் சமஸ்கிருத்த்தை திணித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும். மாணவர்கள் இளைஞர்களால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும்” என்றார்.
அடுத்தாக பேசிய, பேராசிரியர் சாந்தி, “சமஸ்கிருதம் ஆண்டாண்டு காலமாக பெண்களை இழிவுபடுத்துவதாக தான் உள்ளது. பெண்கள் என்றால் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு அடிமைகளாகத் தான் இருக்க வேண்டும், படிக்கக் கூடாது, வெளியுலக அறிவைப் பெறக் கூடாது என்று தான் இந்த சமஸ்கிருத பண்பாடு கூறுகிறது. புதிய கல்விக்கொள்கை சொல்ல வருவது, பெண்கள் இனி வீட்டுக்குள் இருந்து வீடியோ மூலமும் டி.டி.எச் மூலமும் படித்துக் கொள்ளலாம், என்று சொல்கிறது. இதன் அர்த்தம் பெண்கள் வெளியே வரக் கூடாது, வெளியுலக பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளக்கூடாது, புதிதாக கற்றுக் கொள்ளக்கூடாது, என்று பெண்களை மீண்டும் பிற்போக்கு அடிமைத்தனத்துக்குள் தள்ளுவதையே நோக்கமாக வைத்துள்ளது. மோடி அரசின் இந்த கயமைத் தனத்தை மாணவர்கள், இளைஞர்கள் எதிர்த்து முறியடிக்க வேண்டும்” என்று கூறினார்.
மதுரவாயல் அரசுப் பள்ளி மாணவர் ஆகாஷ், “மாணவர்களுக்கு சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி இருப்பது கூட தெரியவில்லை. கோவிலில் மணியாட்டும் பார்ப்பனியர்களுடைய பாஷை, என்றால் தான் தெரிகிறது. இந்த மொழி சொல்லும் பண்பாடு, ஒருவர் எத்தனை மனைவி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது போன்ற பல கேவலமான விசயங்களை தான் சொல்கிறது. நம்முடைய தாய் மொழியை அழித்து, இப்படிப்பட்ட இழிவான மொழியை நம்முடைய தாய் மொழியாக்க நினைத்தால் நாம் எப்படி சும்மா இருக்க முடியும். இந்தித் திணிப்பை எதிர்த்து எப்படி பள்ளி மாணவர்களும் கூட களமிறங்கி போராடி இந்தியை விரட்டி அடித்தனரோ அதைப் போன்று நாமும் போராட வேண்டும்” என்று கூறினார். இறுதியாக, “பார்ப்பனர்கள் ஆட்டுவது கோவில் மணி, அவர்களுக்கு அடிக்க வேண்டும் சாவு மணி” என்று பேசி முடித்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன், “இன்று இந்தி படித்தால் தான் வேலை, சமஸ்கிருதம் படித்தால் தான் வேலை என்று கூறுகின்றனர். ஆனால் வட மாநில தொழிலாளர்கள் பல பேர் இங்கு வருகின்றனர். அசாம், ஒரிசா, பீகார் இந்த மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழியை அழித்து அவர்கள் இந்தி படித்ததன் விளைவு அவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். எதார்த்தத்தில் இந்தி படித்தால் தான் வேலை என்பது உண்மை இல்லை. முதலில் சமஸ்கிருதத்தை அழித்த்தும் இந்த பார்ப்பனர்கள் தான். காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவது, பேசினால் நாக்கை அறுப்பது, வேதத்தைக் கண்ணால் பார்த்தால் கண்களைக் குருடாக்குவது என்று கொடூரமான முறையில் சமஸ்கிருத்த்தை அழித்தனர். இன்று வெறும் 15000 பேர் கூட பேசாத, வழக்கில் இல்லாத செத்த மொழியை தூக்கிவைக்க காரணம், அவனுடைய சாதிய பண்பாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே. எப்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பல்வேறு கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் போராடினார்களோ, அதே போல் இன்று உள்ள சூழலில், இந்த சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து நாம் தான் போராடியாக வேண்டும்” என்று பேசி முடித்தார்.
மழையையும் பொருட்படுத்தாமல், இறுதிவரை போராட்ட்த்தை நடத்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, இந்தி எதிர்ப்பு போராட்ட்த்தைப் போன்று மீண்டும் ஒரு போராட்ட்த்தை முன்னெடுக்க மாணவர்கள், இளைஞர்களை அறைகூவி அழைக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்தேசிய இனங்களின்
அடையாளங்களை அழிப்பதே
பார்ப்பன பாசிச மோடி அரசின்
சமஸ்கிருத திணிப்பு!
வேதகலாச்சார திணிப்பு!
செத்த மொழிக்கு மகுடமாம்!
ஆரிய மொழிக்கே அரியணையாம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி
பார்ப்பன பாசிச கும்பல்
கள்ளுக் குடித்த குரங்கைப் போல
அதிகார போதையில் ஆட்டம் போடுது!
மத்தியில் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே கல்வி – பண்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து மதவெறி கருத்துக்களை புகுத்துவது, சாதி – மதக்கலவரங்களை தூண்டிவிடுவது, கல்வி நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய பல்கலைக் கழகங்களின் முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமிப்பது, எதிர்க்கும் மாணவர்களை ஒடுக்கும் வகையில் போலீசை ஏவி தேசதுரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை போடுவது, தீன்நாத் பத்ரா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை வரலாற்றாசிரியர்களாக நியமித்து வரலாற்றை திரித்து புரட்டுவது என தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த கல்வியாண்டு (2016 – 17) முதல் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மூன்றாவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. தமிழ் உட்பட இந்தியா முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் பேசக்கூடிய 20-க்கும் மேற்பட்ட தேசிய மொழிகளை – தாய் மொழியை – படிப்படியாக அழித்து, சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையிலும், அரசின் தனியார்மய – தாராளமய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறான மக்கள் போராட்டங்களை திசை திருப்பும் வகையிலும் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்குகிறது மோடி அரசு. இதை எதிர்த்து தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளின் உரிமையை நிலைநாட்டும் வகையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையொட்டி, திருச்சியில் 28-06-2016 மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பறையிசையுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
தலைமையுரையாற்றிய பு.மா.இ.மு மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் செழியன், “மோடி ஆட்சிக்கு வந்தபின்பு ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமித்து வரலாற்றை திருத்தி எழுதுவது, நாட்டையே பார்ப்பனமயமாக்குவதன் ஒரு பகுதியாக தான் இன்று சமஸ்கிருத திணிப்பைக் கொண்டு வருகிறார்கள். மறுபக்கம், காட்ஸ் ஒப்பந்தம் என்ற பெயரில் கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து வியாபாரமாக்குவது, நாட்டின் இயற்கைவளங்கள் அனைத்தையும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அடகு வைக்க ஏதுவாக இந்துமதவெறிக் கலவரங்களை தூண்டிவிடுகிறது” என மோடி கும்பலை அம்பலப்படுத்தினார். “இந்தி திணிப்பிற்கு எதிராக போராடியது போல சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக போராட முன்வர வேண்டும்” எனக் கூறினார்.
கண்டன உரையாற்றிய திராவிடர் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தோழர் அஜிதன், பார்ப்பனியம் எவ்வாறு நம்மை சாதி ரீதியாக பிளவுபடுத்தியுள்ளது என்பதையும், அன்று பெரியார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது போல இன்று சமஸ்கிருதத்தை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்பதையும், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகள் இருக்கும் போது சமஸ்கிருதத்தை எதிர்க்க காரணம் நம்மை சூத்திரன் என்று இழிவுபடுத்தியது, பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியது சமஸ்கிருத மொழி. இது மொழித் திணிப்புமட்டுமல்ல பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என விளக்கிப் பேசினார்.
பு.மா.இ.மு-வின் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் குமார், “இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பேசக்கூடிய பல மொழிகள் இருக்கும் போது 3000 பார்ப்பனர்கள் பேசக் கூடிய மொழியை நம் மீது திணிக்கக் காரணம் ஆர்.எஸ்.எஸ்-ன் ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சார இந்து ராஷ்டிர கனவை நிறுவவே. சமஸ்கிருதம் கற்பிப்பது வஞ்சகத்தையும், துரோகத்தையும் மட்டுமே. நம்மை வேசி மகன் என்றும், நம் தாய் மொழியை வேசி மொழி என்றும் இழிவுபடுத்தியது ஆங்கிலமல்ல சமஸ்கிருதம் தான். எனவே தான் நாம் அதை தீவிரமாக எதிர்க்கிறோம். சமஸ்கிருதத் திணிப்புக்கெதிராக போராட அனைவரும் முன்வர வேண்டும்” எனக் கூறினார்.
சிறப்புரையாற்றிய ம.க.இ.க-வின் மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன், “அன்று மகாபாரதத்திலும், பகவத்கீதையிலும் நடந்த சூழ்ச்சியை இன்று பகிரங்கமாக அரங்கேற்றுகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் கும்பல். அன்று பார்ப்பன கும்பல் நம்மை சமஸ்கிருதத்தை படிக்கவிடாமல் தடுத்து அழித்துவிட்டு, இப்போது செத்த மொழியை தூக்கிநிறுத்த முனைவதையும், கல்வித்துறையைக் கைப்பற்றுவதன் மூலமும், ஆட்சியதிகாரத்தை தக்க வைக்க இந்து என்ற போலிமத உணர்ச்சியை, மதவெறியை அதனடிப்படையிலான தேசவெறியை, வல்லரசு மயக்கத்தை உருவாக்கி தன் இந்துராஷ்ட்ர கனவை நிறைவேற்றத் துடிப்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.
தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் இன்று பட்டப்பகலில் உடுமலை சங்கரை வெட்டியதை வேடிக்கை பார்த்த கொடூரத்தையும், ஓட்டை விலைக்கு விற்கும் தமிழனின் இழிநிலையையும் சுட்டிக்காட்டி சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக போராட முன்வர வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும், இந்த அரசுக்கட்டமைப்பே சீர்குலைந்து, தோற்றுப்போய், மக்களுக்கு எதிராக மாறிப்போனதை கூறி, மக்களின் விருப்பம் – அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் தான் அதிகாரிகள். சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக போராடும் அதே சமயம், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதிகார வெறிக்கு முடிவு கட்டும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இறுதியாக பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சியின் இடையிடையே பாடப்பட்ட ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பார்ப்பன எதிர்ப்பு பாடல்கள் பார்ப்பனியத்தை, ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலை அம்பலப்படுத்தும்படியும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மற்றும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களுக்கு உணர்வூட்டும்படி அமைந்தது.
தகவல், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, திருச்சி.
3. தருமபுரி
பல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு
திராவிட தமிழ் மொழிக்கும் தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே ஆரிய-சமஸ்கிருதமும் வேத கலாச்சாரமும்
தருமபுரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 28-06-2016 செவ்வாய் மாலை 4 மணிக்கு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு தலைமை தாங்கி பேசும் போது, “தனியார் பள்ளி கல்லூரியின் கட்டணக் கொள்ளைகளுக்கு ஏதுவாக இப்போது கொண்டு வரப்படுகின்றன புதிய கல்விக் கொள்கை, மோடியின் பார்ப்பன கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. அதை முறியடிக்க புரட்சிகர அமைப்பில் இணைந்து போராட வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறைகூவல் விடும் விதமாக பேசினார்.
கண்டன உரையாற்றிய தருமபுரி தி.க. முன்னாள் மாவட்ட தலைவர் தோழர் கிருஷ்ணன் “ஆரியர்களின் மொழியாக சமஸ்கிருதம் இன்றைக்கு பள்ளிகளில் அனுமதிக்கப்படுவது மூலமாக ஒரே பாடத்திட்டமாகவே நிலை நிறுத்திக் கொண்டு அதன் மூலமாக பார்ப்பன கனவுகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டு ராஜாஜி ஆட்சியில் இந்தித் திணிப்பையும் அதை எதிர்த்து மாணவர்கள் போராடியவுடன் அவர் பின்வாங்கியதும், பிற்காலங்களில் இந்தியை திணித்ததை தவறு என்று ஒப்புக் கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு இராமலிங்க அடிகளாருடம் சங்கராச்சாரியார் நடத்திய விவாதத்தில் சமஸ்கிருதம் தாய்மொழி என்று கூறியதற்கு ஒரு பெண் தனியாக எப்படி கருத்தரிக்க முடியாதோ அதைப் போல சமஸ்கிருதம் தனியாக இயங்க முடியாது. எனவே தந்தைமொழி தமிழ் என்று கூறியதையும் சுட்டிக் காட்டினார். இன்று சமஸ்கிருத எதிர்ப்பை மரபாக நிலைநிறுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
அடுத்து உரையாற்றிய தருமபுரியைச் சேர்ந்த தமிழ் பற்றாளர் முனி ஆறுமுகம், தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் வளர்ச்சியையும் குறித்து பேசினார். “கல்தோன்றி காலத்து மண் தோன்றிய மூத்த குடி தமிழ்” என்று கூறி இதுதான் இலக்கிய இலக்கணம் முதலில் உடைத்த மொழி. அது சமஸ்கிருதத்துக்கு கிடையாது. அது எழுத்து வடிவம் அற்றது. ஆகவே, ஒரு மாணவர் அவனது தாய்மொழியில் கல்வி கற்பதே அவனது அறிவை வளர்க்கும் என்று தனது கண்டன உரையில் தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய சமூக ஆர்வலர் பச்சையப்பன் சமஸ்கிருதத்தை நாம் ஏன் கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி அது செத்துப் போன மொழி என்பதோடு “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்ற வள்ளுவனுடைய குறளில் உள்ள தொன்மை சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? பார்ப்பனியத்தின் உருவான பி.ஜே.பியை அடித்து விரட்டுவோம் என்று சவால் விடுத்தார். 4 வகையான இந்தி மொழி இருக்கிறது, அதை முழுவதும் நீங்கள் கற்றிருக்கிறீர்களா? அத்துணை பார்ப்பனர்களும் அவற்றை சரளமாக பேசுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்த உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், “இன்றைய உலகைச் சுற்றும் வாலிபன் மோடியின் அதிகார போதையில் ஒட்டுமொத்த பாசிசத்தை நுழைத்து வருவதன் ஒரு பகுதியாகத்தான் இந்த கல்வியாண்டு (2016-17) முதல் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாகக் கொண்டு வந்தது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த உத்தரவு முற்றிலும் உழைக்கும் மக்களுக்கு கல்வியை கொடுக்கக் கூடாது என்ற இந்து கல்விக் கொள்கையை புகுத்துவதுதான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, அதனை பார்ப்பனர்கள் மட்டும்தான் கற்க வேண்டும். மற்றவர்கள் இதனைக் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் பேசினால் நாக்கை வெட்டி தண்டனை என்றும் கொடுத்தான்.
இன்று அதனை படிக்கக் கொடுப்பதும் பாசிஸ்டுகளின் தந்திரமே. இந்து மதவெறியர்கள் ஜனநாயகத்தின் எதிரிகள், தங்களை எதிர்த்தவர்கள் மீது அடக்குமுறைகளை தொடுப்பது அவர்களது வாடிக்கை. அதன் பகுதியாக ரோகித் வெமுலா, ஐ.ஐ.டி, ஜே.என்.யு மற்றும் பல எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள் என்ற இது தொடர்கிறது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பு.மா.இ.மு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது என்று கூறி அனைவரும் ஒன்றாக நின்று சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்போம்” என்று அறைகூவி அழைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டம், “சமஸ்கிருதத்தை எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற கேள்வியை மாணவர்கள் மத்தியில் பரவலாக எழுப்பியுள்ளது. மொழியை, கலாச்சாரத்தை அழிக்கும் சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்தது இந்த ஆர்ப்பாட்டம்.
இறுதியாக தோழர் சத்தியநாதன் நன்றியுரை ஆற்றினார்.
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தருமபுரி 8148055539
“வழக்கறிஞர்களின் ஜனநாயக குரலை நெறிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறு!”
என ஒரே குரலில் தமிழ்நாடு தழுவிய அளவில் கடந்த ஒருமாத காலமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை நடத்தியும், பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தேனியில் நடைபெற்ற ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு”
25-06-2016 அன்று தேனியில் நடைபெற்ற ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு” கீழ்க்கண்ட கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றியது!
• வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யப்படும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு
வருகிற 27 மற்றும் 28 தேதிகளில் தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து புதிய விதிகளின் பாதிப்பு குறித்து விளக்கி, போராட்டத்திற்கு ஆதரவு கோருதல். இந்திய தலைமை நீதிபதி, குடியரசு தலைவர் பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து, எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தப்படும் புதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்துதல்
வருகிற 29-ம் தேதி தமிழகம் மாவட்ட தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம்
ஜூலை 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் முன், புதிய சட்டத்திருத்தத்தின் நகலை எரித்து போராட்டம்
ஜூலை 3-ல் திருப்பூரில் ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழுவின் மாநில மாநாடு
ஜூலை 4-ல் மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய நிதீமன்றங்களில் உள்ளிருப்பு போராட்டம்
தேனியில் நடைபெற்ற ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு”
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (MHAA) சிறப்பு பொதுக்குழு 27-ம் தேதி துணைத்தலைவர் தலைமையில் கூடியது.
அதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உயர்நீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டதிருத்த34(1) விதிகளை எவ்வித நிபந்தனையின்றி முழுமையாக உடனே திரும்ப பெற வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
25-06-2016 அன்று தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுகுழுவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.
உயர்நீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டதிருத்த 34(1) விதிகளை எவ்வித நிபந்தனையின்றி முழுமையாக உடனே திரும்ப பெற வலியுறுத்தி பின்வரும் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
(i) திரும்ப பெறும் வரை 28-06-2016 முதல் காலவரையற்ற அனைத்து நீதிமன்ற புறக்கணிப்பு
(ii) 29-06-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல்.
(iii) 01-07-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆவின் பாலக நுழைவு வாயில் முன்பு கருப்புச் சட்டமான புதிய சட்டதிருத்ததின் நகல் எரிப்பு.
ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்கத்தை உடனே திரும்ப பெறுமாறு இந்திய பார் கவுன்சிலையும் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலையும் வலியுறுத்துகிறோம்.
S.அறிவழகன் செயலாளர்
K.கினி இம்மானுவேல் துணைத் தலைவர்
அறிவித்தபடி 29-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ரயில் மறியல் செய்து, பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கைதாகினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சென்னை
சென்னை
கடலூர்
தாராபுரம்
தருமபுரி
தேனி
திண்டுக்கல்
ஈரோடு
கோவை
மதுரை
நாகை
நாகர்கோவில்
நாகர்கோவில்
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
சேலம்
சங்கரன்கோவில்
சிவகங்கை
திருப்பூர்
திருவண்ணாமலை
திருச்சி
திருச்சி
திருநெல்வேலி
திருநெல்வேலி
தூத்துக்குடி
தூத்துக்குடி
வைகுண்டம்
வைகுண்டம்
வைகுண்டம்
விழுப்புரம்
விருதுநகர்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒலித்த முழக்கங்கள் :
உயர்நீதி மன்றத்தின்
புதிய விதிகள் சொல்வதென்ன?
நீதிபதிகள் ஊழல் செய்தால்
ஊழலைப் பற்றிப் பேசாதே!
ஊழல் செய்வதை பார்க்காதே!
ஊழல் செய்தியை கேட்காதே!
இது நீதியா? அநீதியா?
ஊழலைப் பற்றி கேள்வி கேட்டால்
உடனடியான சஸ்பென்டாம்
உரத்த குரலில் வாதிட்டால்
கேள்வி இல்லை டிஸ்மிஸ்ஸாம்
கேள்வி கேட்டால் தண்டனைகொடுக்க
நீதிபதிகள் மன்னர்களல்ல
மக்களின் பணியாளர்கள்
உயர்நீதிமன்றத்தின்
புதிய சட்ட விதிகள்
நீதிபதிகளின் ஊழலை
கேள்வியின்றி காக்கவே!
குடிகார வக்கீல்களை
தண்டிப்பதாய் கூறுகின்ற
தலைமை நீதிபதி கைக்குள்
இருப்பது யார்? இருப்பது யார்?
வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறு ! 43 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனே கைவிடு !
மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்களின் மீதான கருப்புச் சட்டத்தை நீக்கக் கோரி மக்களாகிய நாம் களத்தில் இறங்கிப் போராடுவோம் !
வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் எதேச்சாதிகாரமாகக் கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெறக்கோரியும், 43 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடக் கோரியும் நீதிமன்றத்தின் பாசிச அடக்குமுறையைக் கண்டித்தும் மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக மதுரை அண்ணாநகர் அம்பிகா தியோட்டர் அருகில் கடந்த 27-06-2016 திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள்,பேராசிரியர்கள், தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர், நடராசன் தலைமை உரையாற்றினார். “இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்பது போல நீதித்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே உடனே பணிநீக்கம், வழக்கு, வாய்தா மேல் வாய்தா போட்டு ஒடுக்குவது என்று சர்வாதிகாரமாக நீதிபதிகளும் நீதிமன்றமும் செயல்படுகின்றனர். தற்போது இவர்கள் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தால் 80,000 வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கெதிராக நடக்கும் வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம்” என்று கூறினார்.
அதன் பின் பேசிய சமநீதி வழக்கறிஞர் சங்க செயலாளர் கனகவேல் தன் உரையில், “கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்துப் போராடினால் வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்யும் இந்த நீதிபதிகள், ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த கூட்டம் போட்டுப் பேசுகிறார்கள். ஆனால் இங்கே தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டி அமைதியாகப் போராடினால் வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்கிறார்கள்” என நீதிபதிகளின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தினார். “நீதிபதியின் பெயரைச் சொல்லியே லஞ்சம் வாங்கும் நிலை பல கோர்ட்களில் உள்ளது, இதை எதிர்த்து இந்த நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார். “வழக்கறிஞர்கள் மேல் குற்றம் சொல்லும் இவர்கள் மேலான குற்றச்சாட்டுகளை முதலில் விசாரிக்க முன் வர மறுக்கிறார்கள்” என்றார்.
பின்னர் பேசிய மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன், “நீதி வழங்க வேண்டிய நீதித்துறை இன்று மொத்தமாக ஊழல்மயமாகி சீரழிந்துவிட்டது, இந்த வழ்க்கறிஞர்கள் மீதான அடக்குமுறை மக்களின் மீதான அடக்குமுறை, ஏனென்றால் கல்வியில், அரசு நிர்வாகத்தில் என்று எங்கும் நிறைந்து நிற்கும் ஊழல்களைத் தடுக்காத நீதித்துறைகூட தண்டிக்கப்பட வேண்டியதுதான். தாதுமணல் கொள்ளை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கல்விக்கொள்ளை, ஆகியவைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்தவர்கள் வழக்கறிஞர்கள்தான், அதற்காகத்தான் அவர்கள் மேல் இந்த அடக்குமுறை. 1863-ம் ஆண்டிலேயே மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்ற நீதிபதி தமிழில்தான் வாதடவேண்டும் என்றார், தமிழில் வாதாடுவதில் என்ன தவறு இருக்கிறது. எனவே மக்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்” என்று நிறைவு செய்தார்.
வழக்கறிஞர் ராஜேந்திரன் சமநீதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் :-
“தமிழ்நாடு முழுவதும் நீதிதுறை முடங்கிப்போய்க் கிடக்கிறது, இதை உச்சநீதிமன்றமும், நீதிபதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய பார்கவுன்சில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் நீதிபதிகள் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு பொது நல வழக்கில் கூட கட்டாய ஹெல்மெட் சட்டம், பொது இடத்தில் சிகரெட் பிடிக்கத் தடை எனத் தீர்ப்பு வழங்குகிறார்கள். இப்படிப்பட்ட நீதித்துறைக்கு எதிராகப் போராடத் திராணியுள்ளவர்களாக வழக்கறிஞர்கள்தான் உள்ளார்கள். அவர்களை முடக்கவே இந்த அடக்குமுறை சட்டம்”.
பேராசிரியர் விஜயகுமார் , இந்திய சமூக அறிவியல் கழகம் :
“உண்மையில் இன்று இந்தியா இருள் சூழ்ந்து இருக்கிறது. உரிமைக்காகப் போராடிய கண்ணையா குமாரும், ரோஹித் வெமுலாவும் பழிவாங்கப்பட்டார்கள். தமிழில் வாதாடும் உரிமை வேண்டி போராடிய வழக்கறிஞர்கள்தான் தண்டிக்கப்பட்டார்கள். நிலைமை இப்படி இருக்க ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மனுவுக்கு சிலை வைக்கிறார்கள். விட்டால் இவர்கள் மதுரையிலும் சிலை வைப்பார்கள் அதற்கு முன் இவர்களை முறியடிக்க வேண்டும், அதற்கு முதலில் வழக்கறிஞர்கள் மேல் போடப்பட்டுள்ள இந்த அடக்குமுறையை வெட்டியெறிய வேண்டும், அந்தப் போராட்டத்தில் நாமும் அவர்களுக்குத் துணை நிற்போம்.”
மதுரை வழக்கறிஞர் சங்கத் துணைத்தலைவர் நெடுஞ்செழியன் :
“தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்ட முதல் 13 வழக்கறிஞர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் நான் அதற்குப் பெருமைப்படுகிறேன். இந்திய பார் கவுன்சில் சட்டத்தை மீறி பழிவாங்கப்பட்டவர்கள்தான் நாங்கள்.
சம்பாதிப்பதற்காக மட்டும் மனிதன் பிறக்கவில்லை, போராடுவதற்கே பிறந்துள்ளான். நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்த பல வழக்கறிஞர்கள், அப்போதே விடாப்பிடியாகப் போராடியிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம் என்று குற்ற உணர்வோடு பேசுகிறார்கள். ஆதலால் இந்த அடக்குமுறையால் மக்களுக்கு என்ன பாதிப்பு என யோசித்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். இதைத் தடுக்கவில்லை என்றால் மீண்டும் இது அடிமை நாடாகும்”.
பேராசிரியர் முரளி: PUCL தேசிய நிர்வாகக் குழு :
“பணம் இருப்பவர்களுக்குத்தான் நீதிகிடைக்கும் என்கின்ற நிலை இருக்கிறது. இந்த நீதிபதிகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள்தான் மக்களுக்காகப் போராடக்கூடிய வழக்கறிகள் மேல் தாக்குதல் தொடுக்கிறார்கள். இப்படி நீதிக்காகப் போராடுபவர்கள் மேல் தாக்குதல் தொடுக்கும் போது நாம் வேடிக்கை பார்க்கக் கூடாது, எங்களுடைய ஆதரவும் இருக்கும்.”
தோழர் கதிரவன் , மக்கள் கலை இலக்கியக் கழகம் :
“தொடர்ச்சியாகப் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்கள்தான் போராடி மக்களுக்கான உரிமையைப் பெற்றுத்தருகிறார்கள். ஈழப்போராட்டத்திலிருந்து காவல் நிலைய பாலியல் வல்லுறவு ஆகியவைகளில் எல்லாம் எந்த நீதிபதிகள் போராடினார்கள், மக்களின் பிரதிநிதிகளாக நின்று வழக்கறிஞர்கள்தான் போராடினார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் நிலவ வேண்டுமானாலும் சரி மக்களுக்குத் தேவையான பிரச்சினைகளிலும் வழக்கறிஞர்கள்தான் உதவுவார்கள். நாம் இந்தப் போராட்டத்தை அணைய விடாமல் உதவவேண்டும்”.
தோழர் குருசாமி, மக்கள் அதிகாரம் :
“நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தி ஒரு சுவரொட்டி ஒட்டியிருந்தோம். மக்கள் பலரும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். ஆனால் உளவுத்துறை மட்டும் அழைக்கவில்லை. அந்த அளவில் மக்கள் பலரும் நீதிபதிகளைப் பற்றி நன்றாக உணர்ந்து உள்ளார்கள். இந்த நீதிபதிகளின் அடக்குமுறை காரணமாக வந்த பல மக்கள் பிரச்சினைகளில் இவர்கள்தான் தலையிட்டு உதவியிருக்கிறார்கள். இந்த நீதிபதிகள் யார், இவர்கள் தமிழ்நாட்டு சோத்தை தின்று வளர்ந்து தமிழ்நாட்டுக்காக எதையும் செய்வதில்லை. இன்று இவர்களாக ஒரு சட்டத்தைப் போட்டுக்கொண்டு வழக்கறிஞர்களை அடக்குகிறார்களே, உண்மையில் தைரியமிருந்தால் இதே போல இவர்களாக ஒரு சட்டத்தைப் போட்டுக்கொண்டு சட்டசபையைக் கலைத்துவிடு பார்ப்போம். நமக்கு இப்போது தேவையானது மக்கள் கையில் அதிகாரம். இந்த போராட்டத்தின் ஊடாக மக்கள் அதிகாரத்தை நோக்கி நம் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று நீதித்துறை பாசிசத்தை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டச்செயலாளர், லயனல் அந்தோணி ராஜ் “இப்போது கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டப்படி நீதிபதிகளைப் பார்த்து கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினால் கூட வழக்கறிஞர் மேல் நடவடிக்கைடுக்க இதில் இடமுண்டு.
வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்கவுன்சிலுக்குத்தான் வழக்கறிஞர்கள் மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என்பதை மாற்றி வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளுக்கு அதிகாரத்தை வழங்கி தலைமை நீதிபதி கவுல் இச்சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன் உள்நோக்கம் வழக்கறிஞர்கள் மக்களுக்காக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கக் கூடாது என்பதுதான்.
தமிழக அரசின் மேல் இரண்டாயிரம் கோர்ட் அவமதிப்பு வழக்கு இருக்கிறது, அதற்கு நீதிபதிகள் என்ன செய்தார்கள் ? சட்டம் ஒழுங்கு நாறிப்போய் இருக்கிறது அதற்கு நீதிபதிகள் என்ன செய்கிறார்கள் ? சும்மா வேடிக்கைதானே பார்க்கிறார்கள். ஆகவே இந்த நீதிபதிகள் எல்லாம் கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரர்கள்தான். எனவே இந்த நீதிமன்ற பாசிசத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் பரவ வேண்டும், இச்சட்டம் நீக்கப்பட வேண்டும்” என்று அறைகூவி பேசி முடித்தார்.
இறுதியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
மக்களிடையே உண்மையில் இது ஜனநாயக நாடுதானா என்கின்ற ஐயம் எழுகின்ற வகையில் இப்போராட்டம் அமைந்தது.
தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை 29-06-16
நாளை மறுநாள் சட்ட எரிப்பு நகல் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
சுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால். ஒரு வேட்டை நாயைப் போல பெண்களை துரத்தி பாடுபடுத்தி அடக்குவதே ஒரு இளைஞனின் நவீன மஞ்சு விரட்டு வீரம் என்பதாக சினிமா பயிற்றுவித்திருக்கிறது. தனக்கு அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு விலங்கு எப்படி மறுப்பு தெரிவிக்கலாம் என்பதே இவ்வெறியர்களின் நிலை. இதில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும் கூட ஒரு பெண்ணுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்பதை இக்கயவர்கள் விதியாக வைத்துள்ளார்கள்.
கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி
மேலும் சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம். காரணம் இந்தக் கொலை என்பது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் சமத்துவம் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற ஆணாதிக்க வெறியோடு தொடர்புடையது. அதை விடுத்து பார்க்கும் எந்த பார்வையும் தவறானது.
இந்நிலையில் சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள். அந்த விஷத்தில் திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள், தலித்துக்கள், இசுலாமியர்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ, அதற்கு மேலேயும் திட்டுகிறார்கள்.
சுவாதி எனும் பெண்ணை கொன்ற அந்த ஆணாதிக்க வெறியை இந்நாட்டில் கற்றுக் கொடுத்து மதமாக்கி, மனு தர்மமாக்கி, சங்கர மடமாக்கி. சட்டமாக்கி, தண்டனையாக்கி, கலையாக்கி, கவிதையாக்கி அமலில் வைத்திருப்பது பார்ப்பனிய இந்துமதம்தான். பார்ப்பனிய இந்துமதம் உருவாக்கிய பெண்களுக்கான கொத்தடிமை வாழ்க்கையில் பார்ப்பன பெண்களும் உண்டு. அதே போல பெண்களை அடிமைகளாக நடத்துவதில் தலித் ஆண்களும் உண்டு. முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்றுவித்திருக்கிறது.
சுவாதியைக் கொன்ற குற்றவாளி எப்படியும் பிடிபடுவான், தண்டிக்கப்படுவான். ஆனால் சங்கர மடம் தொட்டு, நுங்கம்பாக்கம் ஸ்டேசன் வரைக்கும் நாடெங்கும் பெண்களை வதைக்கும் பார்ப்பனிய இந்து மதத்தை கேள்வி கேட்காமல், அந்த விஷ விழுமியங்களை அனைத்திலும் செரித்துக் கொண்டு வாழும் ஆண்களை திருத்த முடியுமா என்பதே கேள்வி.
இறுதியாக சுவாதி கொடூரமாக கொலை செய்யப்ப்ட்டதை வைத்து ஏற்கனவே ஒடுக்குமுறையில் வாழும் முஸ்லீம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீது பார்ப்பன வெறியர்கள் உமிழும் நஞ்சு என்பது சுவாதியை வெட்டிய அந்த வெறியனது அரிவாளை விட கொடூரமானது. இவர்கள்தான் சுவாதியை இரண்டாவது முறையாக கொல்கிறார்கள்.
– வினவு
————————————————————————
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?
ஆணாதிக்க அரியணையில்
நீ வழங்கும்
தீர்ப்பும் தண்டனையும்
எப்போதும் ஒரு பெண்ணை
வதம் செய்கிறது.
என்ற போதிலும்
எப்போதாவது கொஞ்சம்
குற்ற உணர்வு அடைவதாய்
உன் தியாகி அவதாரத்தை
நீ துறப்பதில்லை.
குற்றமும் நீ
குதறுவதும் நீ
ஆகையினால்
அதே குற்றத்தை
மீண்டும் செய்யப்போகும்
குற்றவாளியே
குற்ற உணர்வு
அடைவது அநீதி, ஆபாசம்.
உன்னால் உன்னுள் ஊறிய
மிருகவெறியின் காரணத்தை
ஒரு பெண்ணின் மீது தள்ளிவிடாதே!
ஆதிக்கம் செய்வதும் நீ
அரிவாள் தூக்குவதும் நீ
– வினவு
மனித உரிமைக்கான சுவரொட்டி ஓவியம், நன்றி: Hanna Eriksson
———————————————————————–
சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
சுவாதி கொலை குறித்து பேசும் பார்ப்பனர்கள் சிலர் இறுதியில் பெண்ணினத்திற்கு எதிராகவும் இதர சமூக பிரிவு மக்களுக்கும் எதிராகவும் எப்படி வன்மத்தை கக்குகிறார்கள் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்று! போலீஸ் விசாரணையே இன்னும் முடியவில்ல என்றாலும் இவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் இந்த கொலையை எல்லா கட்சியினரும் கண்டித்தாலும் இவர்களது வன்மம் கட்டுக்கடங்காமல் அந்தக் கட்சிகள் மீது சாபமாக பாய்கிறது. குறிப்பாக இடதுசாரியினர், திராவிட இயக்கம், தலித் அமைப்பினர், முசுலீம்கள் குறித்து இவர்கள் எவ்வளவு ரத்திவெறி பிடித்து அலைகிறாரர்கள் என்பது அவர்கள் வசையிலேயே டன் டன்னாக உறைந்திருக்கிறது.
இந்த தொகுப்பில் சில வார்த்தைகளை எடிட் செய்து வெளியிடுகிறோம். சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்த பிறகு ஒய்ஜி மகேந்திரன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அந்த பதிவை தான் வெளியிடவில்லை என்றும் பகிரமட்டுமே செய்ததாக கூறுகிறார். ஆனல் அந்த பதிவின் பொருளில் உடன்படுவதாக திமிராக கூறுகிறார். குற்றவாளியின் பெயர் தெரிந்த ஒய்ஜி மகேந்திரன் அவரை போலிசில் ஏன் பிடித்துக் கொடுக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு தமிழக போலீசே நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழ் சினிமாவில் அனைத்து மக்களின் காசை வைத்து சொத்து சுருட்டி அதை பள்ளிக்கூடத்தின் மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் இந்தக் கழிசடையின் மனோபாவம்தான் காலம் தோறும் பின்தொடரும் பார்ப்பனிய ஆன்மா. இவர்கள்தான் இந்தியாவை பல நூறு ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறார்கள் என்பதற்கு நாம் புதைபொருள் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் அவர்கள் வடித்திருக்கும் அந்த வதை முகாம் எப்போதும் நம்மை பிடிப்பதற்கு காத்திருக்கிறது.
பார்ப்பனராக பிறந்த சிலர் இந்த பார்ப்பன வெறியர்களை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அந்த கண்டனம் வரலாற்று ரீதியில் இல்லாத வரை இவர்களை திருத்துவது கடினம். மேலும் அந்த வெறி பிடித்த பார்ப்பனர்கள் அனைவரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முகாமைச்சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. சங்க பரிவார பார்ப்பனர்களாக இருந்தாலும் இவர்கள் மோடி, இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்களை சீண்டுவதில்லை. தமிழைசை போன்ற கருப்பு பார்ப்பனர்களை அதிகார உரிமையுடன் வைகிறார்கள். பார்ப்பனரல்லாத சங்க பரிவார இந்துக்கள் இவர்களிடம் போய் சாதி உணர்வு வேண்டாம், இந்து உணர்வு கொள்வோம் என்று ஆரம்பித்து பிறகு முடியாது என்றான பிறகு அவர்களும் அதே வெறியில் கத்துகிறார்கள்.
இவர்கள் நிரம்பி வழியும் கட்சிதான் இன்று இந்தியாவை ஆள்கிறது என்பதால் நாம் அனைவரும் பார்ப்பன கொடுங்கோன்மை முகாமிற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகவே நம்மை மட்டுமல்ல சுவாதிகளைக் காப்பாற்றவும் நாம் இவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும்.
– வினவு
சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
பேரு சுவாதி, ஹிந்து- ஐயங்கார் பொண்ணு. நல்ல படிச்ச பொண்ணு. இன்போசிஸ்ல வேலை கிடைக்கணும்னா அறிவும், திறமையும் இருக்கணும். வாழ்க்கையை இன்னும் வாழ ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே அறுத்து வீசிட்டாங்க.
மக்கள் கொலையை பார்த்துட்டே தான் இருந்திருக்காங்க. யாரும் தடுக்கலை. அவனை பிடிக்கலை, குறைந்த பட்சம் அவனை போட்டோவாவது எடுத்திருக்கலாம். அருகே அவளின் தெறித்த பற்கள் கிடக்குதுன்னா எந்த அளவு ஆக்ரோஷத்தோடு தாக்கி இருப்பான் கொலைகாரன்.
ஏதோ முஸ்லிம் ஆணின் காதலால் வந்த வினைன்னு ஆரம்பகட்ட விசாரணையில் சொல்லுறாங்க.
பெண் உயர் ஜாதியாகவும், கொலையாளி சிறுபான்மையாகவும் இருப்பதால் அரசின் நிவாரண தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பரபரப்பான செய்திகள், டிவி விவாதங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்கள், மாணவர்களின் எழுச்சி கோஷங்கள் என எதுவும் இருக்காது.
போலிஸ் விசாரணை, நீதிபதி கொடுக்கும் தண்டனை கூட ஏனோதானோ என்றே இருக்கும்.
எல்லா சாவுக்கும் பிணம் தூக்க கருப்புக் கண்ணாடியோட அலையும் வைக்கோ பிரிட்டிஷ் பிரச்சனையைத் தீர்க்கப் போய்ட்டார் போல……!
கருணாவும், சுடாலினும், அட்ரஸ் இல்லாமல் தொலஞ்சுட்டாங்க….!
காணாமல் போனவர்கள் பட்டியலில் கம்மநாட்டீசும் குருமாவும் அடக்கம்…..!
ஜெயா பேகம் செத்தது முஸ்லிமா இருந்தா ஒரு 10 லட்சம், தலித்தா இருந்தா 5 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லி இருப்பாங்க……. ஆனால் பாவம் இவங்களோட போறாத காலம் செத்தது பிராமண பொண்ணு சாவடிச்சவன் ஒரு இஸ்லாமியன்…..!
அதனால் காலவரை அற்ற மௌன விரதம்….!
மைக்கைப் பார்த்தாலே பேசணுமாக்கும்னு ஓடிவர நம்ம தமிழ் அக்காவுக்குக் கூட ஏனோ இந்த விஷயம் சல்லிசா போச்சு. ஒரு வேளை திருட்டு விசிடிக்காக எங்கயாவது போராட்டம் பண்ண போயிருப்பாங்க…!
Balaje Venkatraman நுங்கம்பாக்கம் பிராமண இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து,
கொல்லப்பட்டது பிராமண பெண்….///////////////////////
பாரதிய ஜனதா கட்சி , ஹிந்து முன்னணி கூட கண்டனம் செய்யவில்லை ..
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பிராமண சங்கம் , சடங்கு சங்கமா ?
Guru Ji மற்றவர்களை கடிந்து பயனில்லை. பிராமணர்கள் ஒற்றுமையுடன் ஒரு கட்சிக்கு முதுகெலும்புடன் வாக்களித்து தங்கள் வாக்கு வங்கிக்கு ஒரு சக்தி இருப்பதை உணர்த்தினால் இது போன்ற அசாம்பாவிதங்கள் கண்டிப்பாக வரும்காலங்களில் நடைபெறாது. ஊ.பியில் மாயாவதி பிராமணர்களை ஓட்டுக்களை பெறுவதர்க்கு அரசியல் செய்கிறார். சமீபத்தில் ஒருவர் முகநூலில் பிராமணர்கள் பற்றி எழுதிய விமர்சனத்திற்கு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரச்சனை பிராமணர்கள் மீது தான்.
Gururajen Venkat Rao நம்ம சொத்த புடுங்கிகலாம்…நம்மை அடிக்கலாம்..வெட்டலாம்..குத்தலாம்..பூணூல அறுக்கலாம்..ஓட்டான்டியாக்கலாம்..நநம்ப பெண் குழந்தைகளை தூக்கலாம்..கொல்லலாம்..ஏன்னா நம்ம ஓட்டு போட்டு அரசாட்சி அமைய போவதில்ல..ஆனா நாம கழகத்துக்கு ஓட்டு போடனும்..நடுநிலை ஜனநயக நாடு..இது..பிராம்மணன வெச்சு செய்யறது நீதி..சில ஊர்ல ஒண்ணு ரெண்டு பிராமண குடும்பம்தான் இருக்கு..ஜனநாயகத்தில்..சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்று…எழுதியிருப்பது பார்ப்பானுக்கு,பாப்பாத்திக்கும் இட ஒதுக்கீடு போல..இந்தியாவுல சட்டம் இல்ல போலிருக்கு..போலிஸ் இல்ல போலிருக்கு..ஏன்னா அதுலயும் ரிசர்வேஷன் போலிருக்கு…
Venkatesh Thiru Narayanan why we FB friends basically brahmins and hindus hardcore can form a chain and raise our voice in PUBLIC for the well being slowly the same can become a movement. i am ready for the same.please let us consider very seriously.
Muralinathan Guru நாளைக்கு hindu பத்திரிகையில் 3 வது பக்கம் செய்தியில் ” மாற்று மதத்தை சேர்ந்த இளைஞர்” என்று பத்திரிகை தர்மத்தோடு வரும் பாருங்கள்.
அதுவும் பிராமணன் நடத்தும் பத்திரிகை தான்
Mannai Radha Krishnan பெயர் தான் இந்து….ராம் un official ஆக மதம் மாறியாச்சு…அயோக்யனின் பத்ரிகை
Sreedhar Sambasivan பிராமணர்கள் நடத்தும் பத்திரிக்கைகள், பிராமண (அரைவேக்காட்டு) அரசியல் வியாதிகள், ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். மீதி ஜாதியில் பெண்களுக்குதான் பாதுகாப்பில்லை. பிராமண ஜாதியில் எவருக்கும் பாதுகாப்பில்லை. வாழ்க சன(பிண) நாயகம்.
Thevaki Raathei நாட்டுக்கு சுதந்திம் வாங்க உயிரை தியாகம் செய்தவர்களடா இந்த பிராமண வர்க்கம் படித்துப்பார்கவும் வரலாறை அதே இனத்தில் ஒன்றுதான் கொடியவனால் கொலை செய்யப்பட்டுள்ளது மனசு பதறலையா,? பிராமணன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு
Sathish Satheesh S Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும் *** #அத கள்ள கடத்தல் பன்னிட்டு திறியுர(______எடிட்) நீங்க சொல்ல என்ன டா அருகதை இருக்கு?! #வரலாறு காலம் தொட்டு இன்றுவரை கொலை கொள்ளை தவிர என்ன டா உங்க தொழில்?! #கொள்ளையடிக்க வந்த (______எடிட்) இன்னமும் விரட்டி அடிக்காமல் சலுகை கொடுத்து உபசரிக்கும் கேடுகெட்ட அரசியல் நாதாரிகளை செருப்பால் அடிச்சா தாண்ட உன்ன மாதிரி ஆளுங்களோட திமிர் பேச்சு அடங்கும். #அடேய் இதே நிலையில் போய்டே இருங்க டா அப்போதான் சொரணை கெட்ட ஹிந்துகளுக்கு புத்தி வரும் #திருப்பி கொடுக்கும் காலம் விரைவில்!!
Sankar Sharma இஸ்லாத்தால் எங்கும் பிரச்சனை தான், இனி தமிழ்நாட்டிலும் துலுக்க திவிரவாதம் தெரிய வந்துள்ளது.
Karthik Srinivasan // அப்றம் ஏன் இங்க இருக்கீக //
.
நல்லா கேளுங்க Kamal பாய்.
இதையே நான் சொன்னா என்னைய அடிக்க வராங்க.
.
இந்த கொலை நியாயம்தான். அந்த பொண்ணு ஒரு மும்மீன் கூப்புட்ட உடனே போய் படுக்க வேண்டியதுதானே.. வரமாட்டேன், கிராமாட்டேன்னு பாப்பார திமிரை காட்டி இருக்கும். போட்டான் ஒரு போடு… இப்படிதான் ஒரு உண்மையான மும்மீன் இருக்கணும். அல்லா கூட அத் 126ல வசனம் இறக்கி இருக்காரு. ஒரு மும்மீனுக்கு போகத்தான் உலகம் மத்தவங்களுக்குனு. அந்த பொண்ணோட அப்பாவே ஒரு மும்மீன் ஆசைப்படுரானேனு கூட்டி கொடுத்திருந்தா உயிர் போயிருக்குமா? அதெல்லாம் யோசிக்கிறதில்லை இந்த லூசுங்க.
Karthik Srinivasan அப்பறம் Kamal பாய் …
ஹி ஹி ஹி
நான் கூட ஒரு உண்மையான மும்மீனா மாறலாம்னு இருக்கேன்.
கார்த்தி ங்கிற பேரை கலீல் னு மாத்திக்கப் போறேன். ஏன் தெரியமா ….
நாலு பொண்ணுங்களை கட்டிக்கலாம்ங்றது ஒன்னும் கணக்கு இல்லையாமே.
மேலே கட்டிக்கணும்னா நம்ம லோகல் தலைய கவனிச்சா பெர்மிசன் கொடுத்துடுவாராமே.
வாழ்க்கைய நல்லா அனுபிவக்கணும் பாய். நானும் மும்மீனா மாறப்போறேன்.
நா கூப்பிட்டு எந்த பொண்ணாவது முரண்டு பிடிச்சா ஒரே போடு…
.
சரி.. நா மும்மீனா மாற நீங்க ஏற்பாடு பன்னுவீங்கதானே.. நா உங்களை எங்க வந்து பாக்கட்டும் பாய்?
Sankar Sharma அவங்க (______எடிட்) அரேஞ் பண்னுவாங்க ஜி.
Ramakrishnan Subbarayan All the Brahmin communities should awaken atleast now. Amma is also Brahmin. Why she did not say anything ? She wants only Brahmin votes. Nothing else.
Govindarajan Vedanthadesikan இதே இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் எல்லா புறம்போக்கு டீ வீக்களும் விவாத மேடை வைத்து இந்துத்துவா நொந்துத்வா என்று கூடி கும்மாளம் அடித்து வை கோவும் திருமாவும் லூசு சீமானும் ஓடிப்போய் மலை போட்டு ஒப்பாரி வைத்து அந்த குடும்பத்த்திற்கு 500 கோடி இழப்பீடு தர சொல்லி அந்த தெருவில் உள்ள அத்தனை பேருக்கும் அரசில் உயர் பதவி தர சொல்லி நீலிக் கண்ணீர் வடித்து கீத்துக்கு நாலு மட்டையை புடுங்கிவிட்டு மறு வேலையை பார்ப்பார்கள். ஆனால் செத்தது ஒரு பாப்பார வீட்டு பொண்ணு தானே. ஜாதிகள் கூடாது என்று சொல்லி ஜாதி அரசியல் செய்யும் திராவிட மலம் தின்னும் நாய்களும் அரசியல் வேசிகளும் பண்பாட்டு காவலர் சமூக எஸ் ஐ, ஜாதி டி எஸ் பிக்களும் இப்போது கலைஞர் எனப்படும் கிழ பன்னியின் காலி நக்குகிறார்களா அல்லது பெண்ணின போராளி கனிமொழியின் பாவாடைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா அல்லது சமூக சமத்துவம் பேசி உடலுழைப்பு இல்லாமல் நக்கி பிழைக்கும் வீரமணி பேமானியும் சுப வீரபாண்டியன் என்னும் சொம்பு தூக்கியும் என்ன செய்கிறார்கள். 49 இஸ்லாமிய கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என்று சொல்லும் தேச துரோக முஸ்லிம் தலைவர்கள் என் வாயையும் சூ .. வையும் பொத்தி கொண்டு இருக்கிறார்கள்? நேர்பட பேசும் தொலைக்காட்சி எந்த வேசி பின்னால் போனது. இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு என்பதையும் கூடி நின்று எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்த கையாலாகாத கூட்டத்திற்கு எந்த புறநானூறு போதிப்பது? இதற்கு ஒரே வழி ஊழி ஏற்பட்டு அழிவது தான். திருந்து தமிழா? தவறை தட்டி கேள். இதே இழவு உன் வீட்டில் விழுவதற்கு முன். இல்லையேல் தெய்வம் நின்று கொல்லாது. அலற வைத்து கொல்லும்
Arasai Vadivel June 25 at 7:00pm ·
புனிதக் கொலை.
******** ***********
“ஹலால் ” முறையில் வெட்டப்பட்ட ஜீவன் ஒன்று கிடக்கிறது.
கறி யை விரும்பி உண்ணும் பகுத்தறிவு வாதிகளே!
கம்யூனிஸ கழிசடைகளே!,
மனித உரிமை பேசும் மடையர்களே!,
நடுநிலை வேடமிடும் நாய்களே!,
ஊடக வேசிகளே!
எங்கே தொலைந்தீர்கள்?.
வாய்மூடி கிடக்கும் உங்களுக்கும் ஒரு நாள் “ஹலால்” உண்டு என்பதை மறவாதீர்கள்.
Prakash Ramaswami June 25 at 8:56pm ·நிர்பயா விவகாரத்துல தில்லியே கொந்தளித்து போராட்டம் பண்ணியது. மீடியாவெல்லாம் தமிழ்நாட்டில் இது போல் நடந்தால், ஒண்ணும் கண்டுக்காதுன்னு சொன்ன பெரிய மனுஷங்க எல்லாரும், இன்னிக்கு டீவிய ஆன் பண்ணவே இல்லை போல. ஆங்கில சேனல்கள் அலறுகிறது. தமிழ் சேனல்கள் சிரிப்பொலிக்குள் மூழ்கி கிச்சு கிச்சு மூட்டுகிறது.
வடக்கில் இருப்பனை கேவலமாய் சித்தரிக்குமுன் நம்மை, கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும் நாம்.
புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 22/06/2016 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
நன்றி படம்: தி இந்து
இந்தியாவில் எங்கும் இல்லாத
கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா?
நீதித்துறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்திடுவோம்!
வழக்கறிஞர்கள் சமூகத்தை ஒடுக்கும் சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் நடந்த வழக்கறிஞர்கள் பேரணியில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
————————————————-
‘புதிய சட்டத்திருத்ததை முழுமையாக திரும்ப பெறு!’
வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் சட்ட திருத்தம் 34(1)ஐ திரும்ப பெறக்கோரி தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டம் 22 ஜூன் 2016 அன்று நடைபெற்றது!
தமிழகமெங்கும் நடைப்பெற்ற உண்ணாநிலை போராட்ட புகைப்படங்கள்
சென்னை
சென்னை
சென்னை
கோயம்புத்தூர்
கடலூர்
கன்னியாகுமரி
மதுரை
நாகர்கோயில்
நாமக்கல்
பழனி
பொள்ளாச்சி
திருநெல்வேலி
திருச்சி
விழுப்புரம்
வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்பான அறிவிப்புகள், கேலிச்சித்திரங்கள், புகைப்படங்கள்
வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள்
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
———————————————————————————
” வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு ”
– என்கிற தலைப்பில் தினத்தந்தியில் மே 28 அன்று வெளியான செய்தி
நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சட்டத்திருத்தம்
வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1), அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது.
வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வழக்கறிஞர் தொழில் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீfல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச்செயல் என்ன?
* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.
* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.
* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.
* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.
* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள். நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.
மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும்.
இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.
இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது.
அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்.
விளக்கம் கேட்கவேண்டும்
சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும்.
அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.
அமலுக்கு வந்தது
அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.
மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.
————————————————————————
17/06/2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் எடுத்த முடிவு என்பது ஒரு பக்க சார்பானது மற்றும் வெறும் கண் துடைப்பு என்பதை விளக்குகிறது மூத்த வழக்கறிஞர் NGR பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை!.
The amendment to the High Court Rules empowering the High Court to directly debar the Lawyers was passed without consulting the legal community. These amendments have got far reaching consequences and will affect the democratic spirit of legal profession. These amendments if enforced will silence the Lawyers. The Lawyers are also the guardians of the Judiciary. Before the amendments of rules was made under Sec. 34 of the Advocates Act, the High Court in all fairness should have widely published in the High Court website, causelist etc and called for open discussion. These amendments came as a surprise to many Lawyers. The District Bar Associations were unaware of these amendments.
The far reaching amendments were not put up for discussion in the Madras High Court Advocates Association, Madras Bar Association, Women Lawyers Association. This is an undeniable fact. At a recent meeting of MBA, many members wanted to put to vote the demand for total withdrawal of the amendment. Noticing that the vast majority of members were for withdrawal, the President of the Association very conveniently left the meeting without putting the resolution to vote. 200 lawyers signed a petition to the Chief Justice to withdraw the amendments. The MHAA is also of the same view. The various associations throughout Tamil Nadu are for total withdrawal of the amendments.
The very Senior Lawyer who was amicus in the R.K.Anand’s case openly said that the rules were intended to be framed in the context of the Contempt of Court Act. R.K.Anand case did not say that the High Court can frame rules and take action independently of the Contempt of Court Act. Therefore, these rules which empowers the High Court to debar Lawyers independent of the Contempt of Court Act will stand in the way of Lawyer practising fearlessly. The High Court under the guise of these amendments wants to take over the powers of Bar Council which is intended to protect the interest of Lawyers and the Judiciary.
Therefore, the recent resolution of the Full Court constituting a committee to consider only modifications and not total withdrawal of these amendments is going against the demands of the Lawyers. It is a one sided resolution and a total eyewash. We demand the withdrawal of the full court resolution and to constitute a committee with equal number judges and representatives from the Lawyers Association to hear for total withdrawal of these amendments.
At a time when judicial standards are failing its only but fair that the Lawyers are equally made part of the Committee to decide these amendments. The Supreme Court in Uppal’s case made it very clear that the Lawyers are an integral and important part of the judicial system and they are two parts of the same coin. The Supreme Court suggested in Uppal’s case to constitute a grievance committee consisting of lawyers as well to resolve the problems affecting the judicial system. These draconian amendments are only intended to protect the judges, silence and demoralise the Lawyers. This will be an end to the judicial system which is vibrant part of the democracy.
Therefore, we demand the full court resolution only for modification substituted by total withdrawal of these amendments and to constitute a Committee with equal numbers of Judges and Advocates Association representatives to consider the demand for total withdrawal.
—————————————————————————
திருச்சிராப்பள்ளியில் 18.06.2016 அன்று நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள்
1. மேலை நாடுகளில் இல்லாத நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இந்தியாவில் நீதிமன்றங்கள் மாண்பினையும், நீதிபதிகளையும், பாதுகாக்க இருக்கும் போது, வழக்கறிஞர்கள் சட்டம், பிரிவு 34-ன் கீழ் உயர்நீதிமன்றம், சட்டப்பிரிவு 35-ன் கீழ் பார்கவுன்சிலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரங்களை பறிக்கும் விதமாக விதிகளை இயற்ற கூடாது என இம்மாமன்றம் கோருகிறது.
2. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தேரின் இரு சக்கரங்கள் என்றும், வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு சட்டவிளக்கம் அளிப்பவர்கள் என்றும், வழக்கறிஞர்கள் தொழில் புனிதமானது என்று கூறிவிட்டு வழக்கறிஞர்களை கொச்சை படுத்தி மிரட்டும் தொணியில் சொற்களை பார் கவுன்சில் தலைவரும், உயர்நீதிமன்ற பதிவாளரும் உபயோகிப்பது அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு அழகல்ல.
3. வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம், வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமை, வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பின் போது வழக்கறிஞர்கள் தம் பணிகளுக்கு வராமைக்கு நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களை தண்டிப்பதாக எண்ணி வழக்கு நடத்தும், பொது மக்களுக்கு எதிராக செயல்படுவது வருந்தத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட வழக்காடிகளுக்கு உதவுவது எனவும் தீர்மானிக்கபட்டது.
4. வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34 (1)-ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் சட்டத்திற்கு புறம்பானதும், அரசியல் அமைப்பு சாசனத்தின் படி உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு ( Art-21 ) எதிரானது என்பதால் அவற்றினை நிபந்தனையின்றி ரத்து செய்யும் வரை நீதிமன்ற பணி புறக்கணிப்பு தொடரும் என ஏற்கனவே ஈரோடு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட படி நீதிமன்ற பணி புறக்கணிப்பை தொடர்வது என்றும் தீர்மானம் நிரைவேற்றபட்டது.
5. 11.06.2016-ம் தேதியில் ஈரோட்டில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பார் கவுன்சில் உறுப்பினர்கள் ராஜினாமா செய்யவில்லை குறைந்த பட்சம் பார் கவுன்சில் தலைவர் திரு.D.செல்வம் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையாவது அனைத்து பார்கவுன்சில் உறுப்பினர்களும் ஆதரிக்க கோரப்படுகிறது.
6. தமிழ்நாடு பார்கவுன்சில் உரிமை மாண்பு, கண்ணியம் காக்க, தற்போது பதவி வகிக்கும் பார் கவுன்சில் உறுப்பனர்களை அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கம் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
7. அகில இந்திய பார் கவுன்சில் தமிழக பிரதிநிதி திரு.பிரபாகரன், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து அகில இந்திய பார் கவுன்சிலை இல்லாத அதிகாரம் கொண்டு தமிழ் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிடுவதும், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் திரு.D.செல்வம் தன்னிச்சையாக R.K.ஆனந்த் உச்சநீதிமன்ற வழக்கின் வழிகாட்டுதலை மீறி நாடகமாடி நீதிமன்ற ஆசீர்வாதத்துடன் வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்வதையும் இந்த கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டிக்கிறது.
8. வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அசாதாரமான சூழ்நிலையில் தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல்படாத தலைவர் திரு பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவிகளை உடனே ராஜினாமா செய்ய இந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோருகிறது.
9. வரும் புதன் கிழமை 22.06.2016-ம் தேதியன்று காலை 10.30 மணியிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
10. வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் 25.06.2016-ம் தேதியன்று தேனியில் கூடி மேல் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
11. சென்னை, மதுரை உள்ளிட்ட 49 வழக்கறிஞர்கள் மீது உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு எடுத்த இடைநீக்கம் ( Interim Suspension) உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
12. தற்போதைய சட்டத்திருத்த போராட்டத்தின் போது தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள Show – Cause அறிவிப்பினை எந்தவித நிபந்தனையுமின்றி திரும்ப பெற வேண்டும்.
இவண்
வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு
வழக்கறிஞர்களின் சுதந்திரமான வழக்காடும் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறக்கோரி தமிழகம் தழுவிய அளவில் தொடர்ச்சியாக போராடிவரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்து, “மக்கள் அதிகாரம்” அமைப்பு தமிழகம் தழுவிய அளவில் மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரம் செய்துவருகிறது!
நெ.16, முல்லைநகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை83
27.06.2016
பத்திரிகை செய்தி
“படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்து
“படிப்படியான மதுவிலக்கு” என்று ஜெயலலிதா தேர்தல் பரப்புரையில் அறிவித்தவுடன் “அது போங்காட்டம்” என்று மக்கள் அதிகாரம் சொல்லி விட்டது. பல லட்சம் பேர் கேட்கும் வகையில் “அம்மா போங்கு! ஐயா போங்கு!”என்ற பாடல் குறுந்தகடும் போட்டுவிட்டது. “படிப்படியான மதுவிலக்கு” என்று ஜெயலலிதா அரசு அறிவித்துவிட்ட பிறகும், அவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 500 மதுபானக் கடைகளை மூடுவதாகவும் மதுபான விற்பனையை இரண்டு மணிநேரம் குறைப்பதாகவும் கையெழுத்துப் பாட்ட பிறகும் “மூடு டாஸ்மாக்” என்ற போராட்டத்தைத் தொடர்வதன் அவசியம் என்ன என்று ஊடகங்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பின. இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதாவின் அரசியலையும் ஆட்சியையும் கண்ட ஊடகத்தாருக்கு இது போங்காட்டம் என்று தெரியாதா என்ன!
இப்பாது 500 மதுபானக் கடைகளை மூடிவிட்டதாகவும் மதுபான விற்பனையை இரண்டு மணிநேரம் குறைத்து விட்டதாகவும் ஜெயலலிதா அரசு அறிவித்துள்ளது. இதிலுள்ள உண்மை நிலைபற்றி மற்றெவரையும் விட ஊடகத்தாருக்குத்தான் அதிகம் தெரியும்! இலாபகரமில்லாத மதுபானக் கடைகளோடு, உயிரைக் கொடுத்தும், கைகால் முறிபடவும் பலநாள் போராடி மூடச் சொல்லி மக்கள் போராடிய மதுக்கடைகள் சிலவும் எதிர்க் கட்சியினரின் பார் நடத்தும் இடங்களிலுள்ள மதுக்கடைகள் சிலவும் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட கடைகளுக்கு ஈடுகட்டும் அளவு வருமானம் தரும் புதிய கடைகளும் 24 மணிநேர பார்களிலும் கள்ளச் சந்தை வியாபாரமும் அதிகரிக்கப்பட்டிருக்ககின்றன; அரசு மதுபான வியாபாரமும் விற்பனை நேரமும் குறையவே இல்லை. கள நிலைமைகளும் ஊடகங்களும் இப்படித்தான் சொல்லுகின்றன.
டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)
“படிப்படியான மதுவிலக்கு” என்று அறிவித்த ஜெயலலிதா அரசு அது பற்றிய நடவடிக்கைகள் எதையும் வெளிப்படையாக மேற்கொள்ளவே இல்லை. சட்டமன்றத்தில் 101 விதியின் கீழ் அறிவிப்பு செய்வது போல, உளவுத்துறை போலீசையும் அதிகாரிகளையும் தனது விசுவாச ஊடகத்தாரையும் வைத்து வெற்றுப் பிரச்சாரத்தை மட்டும் செய்கிறது. மதுவிலக்கு தனது கொள்கை என்று அறிவிக்கும் ஜெயலலிதா அரசு அதற்காக என்ன செய்திருக்க வண்டும்? மதுவிலக்குக்காகப் போராடியவர்கள் மீதான வழக்குகளை விலக்கிக் கொண்டு, அவர்களையும் அதற்காக களஆய்வுகள் நடத்திய சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நிபுணர்கள், மருத்துவர்களையும் அழைத்து ஆலோசனைகள் கேட்டிருக்க வேண்டாமா? தனது புகழ் பாடும் விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் கொட்டும் ஜெயலலிதா அரசு மதுவின் கேடுகளை விளக்கி குடிநோயாளிகளை மீட்பதற்கு என்ன செய்தது? குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்கள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்தது? கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளையும் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகேயுள்ள மதுபானக் கடைகளையும் மூடியதா? அவற்றை மூடக்கோரி இன்றும் தொடர்ந்து மக்கள் மனு கொடுத்தும் போராடியும் கோரியும் அடாவடியாக மூட மறுக்கிறதே, ஏன்?
“முடியவே முடியாது! அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமலாக்கவே முடியாது! இங்கு அரசு சாராயக் கடைகளை மூடினால் குடிகாரர்கள் அங்கே போய்க் குடிப்பார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்” – நத்தம் விசுவநாதன்
“படிப்படியான மதுவிலக்கு” என்ற கொள்கை அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் “முடியவே முடியாது! அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமலாக்கவே முடியாது! இங்கு அரசு சாராயக் கடைகளை மூடினால் குடிகாரர்கள் அங்கே போய்க் குடிப்பார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்” என்று மதுவிலக்கு மந்திரி நத்தம் விசுவநாதனை ஜெயலலிதா உறுதிபடப் பேச வைத்தார். இப்பாது இந்த வக்கணைப் பேச்செல்லாம் என்ன ஆனது? 500 மதுபானக் கடைகளை மட்டும் மூடினால் அடுத்துள்ள கடைகளுக்குப் போய் குடிகாரர்கள் குடிக்க மாட்டார்களா? இப்போது என்ன கள்ளச்சாராய விற்பனை நடக்கவில்லையா? இல்லை, டாஸ்மாக் சாராயம் மட்டும் நல்ல சாராயம் என்று சோதனை செய்தார்களா? நேரக் குறைப்புதான் குடிகாரர்களை மீட்டு விடுமா? அது கள்ளச் சந்தையைத்தான் பெருக்கியிருக்கிறது. போலீசு அதிகாரிகளின் உடந்தையில்லாமல் கள்ளச் சாராயமோ, கள்ளச் சந்தையோ இருக்காது. மக்களிடம் நேரடி அதிகாரம் வந்தால்தான் கள்ளச் சாராயத்தைம், அதன் கள்ளச் சந்தையையும் ஒழிக்க முடியும். சில ஊர்களில் மக்கள கூடி அவற்றுக்குத் தடைவிதிக்கவில்லையா? ஏன், போலீசு நுழையவே தடைவிதித்துச் சோதிக்கவில்லையா? பீகாரில் கள்ளச்சாராய, கள்ளச் சந்தை வியாபாரிகளுக்குக் கடும் தண்டணை விதித்தும், அதற்கான அதிகாரத்தை மக்களிடம் கொடுத்து மதுவிலக்கை அமலாக்க முனையவில்லையா?
“படிப்படியான மதுவிலக்கு” என்பத ஒரு மோசடிக் கொள்கை! குடிப்பழக்கம் படிப்படியாக அதிகரிப்பதுதானே தவிர படிப்படியாகக் குறையக் கூடியதாக யாரும கூறவில்லை. ஜெயலலிதா போன்றவர்களின் மூளையில் மட்டும அப்படி ஒரு குறுக்குப் புத்தி தோன்றும். மதுவிலக்கினால் தனது சாராய சாம்ராஜ்ஜியத்தின் வருமானத்தில் சிறிதும் குறைந்துவிடக் கூடாது என்பதில் ஜெயலலிதா அரசு குறியாக இருக்கிறது. அதனால்தான் உண்ணாமலை சாராயக் கடையை மூடக்கோரிப் போராடி உயிர் துறந்த சசி பெருமாளுக்கு அங்கே நினைவுத்தூண் வைப்பதையும் மூர்க்கமாகத் தடுக்கிறது. மாநகரப் பருந்துகளில் பெயர் பலகையின் நிறத்தையும் பெயரையும் மாற்றிக் கொள்ளை, மின் கட்டணக் குறைப்பு இலவச மின்சாரம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே நிலைக் கட்டணம் எனக் கொள்ளை, ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை எனக் கூறிக் கொண்டே அவர்களைப் பரோலில் விடவும் மறுப்பதாடு, அவர்களின் விடுதலைக்கான உயர்நீதிமன்ற வழக்கில் எதிர்ப்பு, அதானிக்குக் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்துக் கொண்டே தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்கி விட்டதாக சவடால், தலைநகரிலேயே கூலிப் படைகளின் கொலைகளால் இரத்த ஆறு ஓடும்போது அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகப் புளுகு, இவை போலத்தான் அம்மாவின் “படிப்படியான மதுவிலக்கு” என்ற போங்காட்டம். இதனால், அரசு சாராய போதை காரணமாக நடக்கும் விபத்துச் சாவுகளும் கொலைகளும் தான் நாளும் அதிகரிக்கிறது.
டாஸ்மாக் வருமானத்தை மேலும் பல ஆயிரம் கோடி ரூபாயாக்குவது மட்டுமல்ல, தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களைக் குடிநோயாளியாக்கிவிட வேண்டும் என்பதையும் இலக்கு வைத்து இந்த அரசும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள். அப்போதுதான் அவர்கள் எதைச் சொன்னாலும் நம்புவோம்; எதைச் செய்தாலும் அடிமைகளைப் போல, உணர்ச்சியில்லாத சவங்களைப்போல வீழ்ந்து கிடப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மதுவிலக்குத்தான் தனது கொள்கை என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே அதற்காகப் போராடும் மக்களைக் கொடூரமாக ஒடுக்குவதன் மூலம் நமது நியாயமான தேவைகளையும் உரிமைகளையும் கூடப் போராடிப் பெறுவதை விட நத்திப் பெற்றுப் பிழைப்பதுதான் காரிய சாத்தியமானது என்று நம்பும்படியான பொதுக் கருத்தும் கோழைத்தனமும் அரசாலும் ஆட்சியாளர்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையையும் பலரிடமும் பரவிக் கிடக்கும் பிழைப்புவாதம் கோழைத்தனத்தையும் தகர்த்து “படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்தை முறியடிப்பாம்
இவண்
சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரம்
தமழ்நாடு.
கிருஷ்ணகிரி அருகில் உள்ள பெரியமுத்தூர் சிண்டிகேட் வங்கிக் கிளை (கிருஷ்ணகிரி அணை சாலையில் உள்ள) ஜூன் 8–ம் தேதி நகைக்கடன் வாங்கிய விவசாயிகள் கடனைத் திருப்பி செலுத்தாததால் அந்த நகைகளை ஏலம் விடுவதாக தினத்தந்தி நாளிதழின் சேலம் பதிப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. “தங்க நகை ஏல அறிவிப்பு” என்று வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “நகைக்கடன் மற்றும் வேறு கடன்களுடன் நகைக் கடனும் பெற்று நீண்ட நாட்களாகியும், தவணை தவறியும், பலமுறை நோட்டீசு அனுப்பியும், ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தும், நேரில் தெரிவித்தும் கடன் தொகையை முழுவதும் திருப்பி செலுத்தாததால் கீழ்க்கண்ட கணக்கில் உள்ள தங்க நகைகள் வரும் 16.06.2016 (வியாழக் கிழமை) பகல் 11 மணி அளவில் எங்களது வங்கிக் கிளையில் வைத்து கிளை மேலாளர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் விடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
வங்கியின் முகப்பு
கடன்தாரர்கள் பெயர் மற்றும் முகவரி என இந்த அறிவிப்பில் 247 பேருடைய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தக் கடன்தார்கள் சுமார் ரூ.18,000 முதல் 4 இலட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலட்சத்திற்கு குறைவாக கடன் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக் கிழமை நகை ஏலம் விடப்பட்டது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடர்பு கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர்.முருகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை வங்கியின் மேலாளர் கிஷோர் குமாரை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது நகை ஏலம் எடுக்க வந்த சில நகைக்கடை வியாபாரிகள், விவசாயிகள் மேலாளரிடம் ஏலம் விடுவதைப் பற்றி விவாதிப்பதைப் பார்த்தவுடன் அந்த இடத்தை காலி செய்துவிட்டு சென்று விட்டனர்.
“நகை ஏலம் விடுவதை முறையாக அறிவித்துதான் செய்கிறேன்” என்று முதலில் வாதாடினார் மேலாளர். “தமிழக அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், முழுமையான அரசாணை வருவதற்கு முன்னதாக நகை ஏலம் விடவேண்டிய அவசியமென்ன? விவசாயிகளுக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்” என்று தோழர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதிகாத்தார் வங்கி மேலாளர். தான் நிறுவன விதிகளின் பிரகாரம் நடந்து கொள்வதாக மீண்டும் தெரிவித்தார்.
“உங்களில் யாருக்கு இந்த வங்கியில் கணக்கு இருக்கிறது” என்று கேட்டு தோழர்களை பிரிக்க முயன்றார். முதலாளிகள். “வங்கிக் கடன் கட்டவில்லை என்றாலும் அவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கிறீர்கள், போலீசு பாதுகாப்பு கொடுக்கிறீர்கள், மல்லையாவுக்காக அவனது வக்கீல்தான் வாதாடுகிறான், அமைச்சர் அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல வருகிறார், இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா? அப்பாவி விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வந்தால், உனக்கு அக்கவுண்ட் இருக்கா என கேட்பீர்களா” என்று தோழர்கள் கேள்வி எழுப்பிய பின்னர் மேலாளர் அமைதியானார்.
வங்கி வெளியிட்ட நகை ஏல அறிவிப்பு செய்தித்தாள் விளம்பரம்
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]
மனுவை வங்கி மேலாளரிடம் கொடுத்தல்
“ஏலமெல்லாம் நேத்தே முடிஞ்சிடுச்சி, நீங்க வேணும்னா மேலிடத்துக்கு மனு கொடுங்க, அனுப்பி வைக்கிறோம்” என்றார்.
“உங்களோட மேலிடத்தோட பேருதான் நாறுதே, நாங்க ஏன் அவங்கக்கிட்ட மனு கொடுக்கனும்“ என்று தோழர்கள் திருப்பிக்கேட்டனர்.
“என்ன இவ்வளவு இன்டீசண்டா பேசுறீங்க, என்ன தெரியும் எங்க பேங்கப்பத்தி” என்றார் மேலாளர்.
“உங்களது மேலதிகாரி எஸ்.கே.ஜெயின், கார்ப்பரேட் முதலாளிகளோட கடன் உச்சவரம்பை சட்ட விரோதமா உயர்த்துனாரு, அதுக்காக அந்த முதலாளிகள் கிட்ட இலஞ்சம் வாங்கினாரு, இதுக்காக போலி கணக்கு தயார் செய்தாரு, இதுல ஹவாலா பாணியில இலஞ்சம் வாங்கினாரு, இதுக்காக அவர் கைது செய்யப்பட்டாரு, இது நாட்டுக்கே தெரியும், உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவு இணையதளத்தில் வந்த கட்டுரையின் செய்திகளை அள்ளி வீசிய பின்னர் அவர் வாயடைத்து நின்றார்.
“எனக்கு எஸ்.கே.ஜெயின் எல்லாம் யாருன்னு தெரியாது” என்று மழுப்பினார்.
நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி, மக்கள் அதிகாரம் தோழர்கள் வங்கியின் மண்டல மேலாளர் சிவகுருவிடம் விவாதம் செய்கின்றனர்
நாம் அங்கு வருவதற்கு முன்னதாக, சில விவசாயிகள் தனிப்பட்ட முறையில் இந்த மேலாளரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். தோழர்கள் மேலாளரை கிடுக்குப்பிடி போட்டுக் கேட்பதைப் பார்த்தவுடன், தோழர்களுடன் அவர்களும் இணைந்து கொண்டனர்.
“ஏலத்தை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அதனை விடுத்து, ஏலத்தை விட்டே தீருவேன் என்று அடம் பிடிக்காதீர்கள், ஏன் எங்கள் வயிற்றில் அடிக்கிறீர்கள்” என்று வந்திருந்த விவசாயிகளும் மேலாளரிடம்ஆதங்கத்துடன் கேட்டனர்.
“அது சரிங்க, ஏலம் எடுக்க டெபாசிட் தொகை அஞ்சி இலட்ச ரூபாய்னு போட்டிருக்கீங்க, யாரோட நகைய யாரு ஏலம் எடுக்கிறதுக்கு இப்படி அறிவிச்சிருக்கீங்க” என்று தோழர்கள் கேட்டதும் திகைத்துப் போனார்.
இதன் பின்னர் நீண்ட விவாதத்தின் இறுதியாக உடன்பாட்டுக்கு வந்தவர் போல, “ஒரு மனு கொடுங்கள் நான் ஏலத்தை நிறுத்தி வைக்கிறேன்” என்றார். தோழர்களும் விவசாயிகளும் மனுவைத் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர் டேம் போலீஸ் ஸ்டேசன் சென்று சப்–இன்ஸ்பெக்ட்ரை அழைத்து வந்தார்.
தோழர்.முருகேசன் வங்கி மேலாளருக்கு நன்றி தெரிவித்தல்
எஸ்.ஐ.யை பார்த்தவுடன் அங்கு வந்த விவசாயிகள் சிலர் சற்று தொலைவில் ஒதுங்கி நின்று கொண்டனர். “உங்களுக்கெல்லாம் இந்த பேங்குல அக்கவுண்ட் இருக்கா” என்று மொத்தமாக அதட்டலாகக் கேட்டார் எஸ்.ஐ. மீண்டும் அவருக்கு விளக்கப்பட்டது.
“இந்த வங்கியில அக்கவுண்ட் இருக்கா என்று நாங்கள் கேட்கவில்லை, நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம், எங்களது கருத்து தமிழக அரசின் விவசாயக் கடன் தொடர்பான முழு அறிவிப்பு வரும் வரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதில் அவசரம் காட்டுவதை ஏற்க முடியாது” என்று விளக்கப்பட்டது.
இதனால், எஸ்.ஐ.யும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். முறைப்படி மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவித்து, போலீசு பாதுகாப்பு பெற்றுதான் ஏலம் விடப்பட வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றாமல் ஏலம் விடுவதாக தெரிவித்தார் எஸ்.ஐ. மேலும், அவர் மேலாளரிடம் தனியாக சென்று பேசினார். இருவரும் விவாதித்த பின்னர், ஏலத்தை நிறுத்தி வைப்பதாக உடன்பாட்டுக்கு வந்தனர். அந்தவகையில், விவசாயிகள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டார். நகை ஏலம் நிறுத்தி வைப்பதாக உடனடியாக அறிவிப்புப் பலகையை மாட்டினார். இதனால், விவசாயிகளும் சற்று ஆறுதலடைந்தனர்.
ஏலத்தை தடுத்து நிறுத்திய பின்னர் தோழர்கள் மற்றும் விவசாயிகள்
ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட விவசாயி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவருக்கு கால அவகாசம் வழங்கும் நடைமுறை இருப்பதாகவும், அதனை பின்பற்றாமல் ஏமாற்றியிருப்பதாகவும் ஒரு மூத்த விவசாயி அப்போது தெரிவித்தார். மேலும், நகைக்கடை வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஏலம் விடுவதாகவும், அதனால்தான் அவசரம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்தை சுற்றியுள்ள விவசாயிகளும் தெரிவித்தனர். இவற்றையெல்லாம் முறையாக ஆய்வு செய்தால் பல மோசடிகள் வெளிவரக்கூடும்.
வங்கிக் கிளை மேலாளர் ஏலத்தை நிறுத்தியிருந்தாலும், விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்யவும், விவசாயிகள் அடகு வைத்த நகைகளை திருப்பி ஒப்படைக்கவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமையன்று (20-06-2016) மனு கொடுத்தனர். ஆட்சியர் வளாகத்திலோ குறை தூர்க்கும் நாளில் மனு கொடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் மீட்டிங்கில் இருப்பதாகவும் சொல்லி 11.30 மணிவரை காக்க வைத்தனர் அதிகாரிகள். அதன் பின்னர், மொத்தமாக எல்லோரையும் அழைத்து, திருப்பதி கோவிலில் தட்சணை வாங்கிக்கொண்டு ஜருகண்டி, ஜருகண்டி என்று விரட்டுவதைப் போல மக்களை விரட்டினர். மனுவை டி.ஆர்.ஓ.–விடம் கூட கொடுக்கவிடாமல் பணியாளர்கள் வாங்கி சீல்வைத்து சம்பந்தப்பட்ட துறைக்கு தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்தனர். இதனைப் பார்த்த விவசாயிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது.
போலீசு, வங்கி அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட மனுக்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆனால், அன்றைய தினமே, செவ்வாய்க் கிழமை நகை ஏலம் விடப்படும் என்றும் டெபாசிட் தொகை ரூ 50,000 என்றும் வங்கியின் வாயிலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டது. இது குறித்து வங்கிக் கிளை மேலாளரிடம் கேட்டபோது, “எனக்கு தெரியாது, என்னை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளனர்” என்றும், சேலம் மண்டல மேலாளர் நேரடியாக ஏலம் விட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. போலீசோ, விண்ணப்பத்தை வாங்க மறுத்தது. இருப்பினும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதைத் தெரிவித்துவிட்டு வந்தனர் விவசாயிகள்.
இப்படி வங்கி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், போலீசு என ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே பல வகையான நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குதான் இந்தனை படைகளும் பரிவாரங்களும் இருப்பது போல காட்டிக்கொண்டு ஏதோ தீவிரமாக வேலை செய்வது போலவும் நடித்துக் கொண்டுள்ளனர். இந்தக் கட்டமைப்பு கொடுத்த மாயையெல்லாம் நாளும் விவசாயிகளுக்கு விளங்கத் தொடங்கியது. எப்படியும் ஏலத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என மேலும் தீவிரம் காட்டினர்.
19-06-2016 அன்று ஒரு நாளில் மட்டும் வெளியான ஏல அறிவிப்பு விளம்பரங்கள் – இந்த விளம்பரங்களை வெளியிட்ட வங்கிகள் அனைத்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புற வங்கிகள் என்பதை கவனிக்கத்தக்கவை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
செவ்வாய்க் கிழமை (21-06-2016) காலை கூடுதலான விவசாயிகள், தோழர்கள் வங்கியின் முன்னே குவிந்தனர். அங்கு வந்திருந்த சேலம் மண்டல மேலாளர் சிவகுருவைச் சந்தித்தனர். அவரும் தன் பங்குக்கு ஆரம்பத்தில் இருந்து தொடங்கினார்.
“உங்களில் யாருக்கு இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது” என்று கேட்டார். “கடன் வாங்குனா கட்டனும், மூனு வருசமாச்சி, ஒரு பைசா கூட கட்டல, எல்லா வழிமுறைகளிலும் கேட்டுப்பார்த்து விட்டோம்” என்று அவர் முன்வைத்த அனைத்து வழக்கமான வாதங்களுக்கெல்லாம், அடிப்படையான கேள்விகளுக்கெல்லாம் தோழர்களும் விவசாயிகளும் விளக்கமளித்தனர். இந்த முறை விவசாயிகள் மேலாளரிடம் கூடுதலாக கேள்விகளை எழுப்பினர். அவர்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைத்தனர்.
ஏலம் நிறுத்தப்பட்டதாக வங்கி முன்பு தொடங்கவிடப்பட்ட பலகை
எஸ்.கே.ஜெயின், மல்லையா, வாராக்கடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நோக்கம் போன்ற விசயங்களை மண்டல மேலாளருக்கு விவாதத்தின் ஊடாக தோழர்கள் வகுப்பெடுத்த பின்னர், நகைகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைப்பதாக ஏற்றுக்கொண்டார்.
தற்காலிகமாக நகை ஏலம் விடுவது நிறுத்தப்பட்ட செய்தியைக் கேட்ட அங்குள்ள விவசாயிகள், பெண்கள் எல்லோரும் கைதட்டி ஆராவாரம் செய்தனர். எல்லோருடைய முகத்திலும் மலர்ச்சி தென்பட்டது. இதனை தங்களது ஃபோன் மூலம் எல்லா நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
ஏல அறிவிப்பு பேனரை வங்கியின் செக்யூரிட்டி அகற்றுதல்
நகை ஏலம் விடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய சூழ்நிலையில், குறிப்பாக, இந்தப் பகுதியில், விவசாயிகள் பெற்ற கடனை வங்கிகள் திருப்பி செலுத்துவது என்பது நியாயமாகத் தோன்றினாலும், எப்படி கட்டுவார்கள் என்ற கேள்விதான் முன்னிற்கிறது!
3 ஏக்கர் நிலம் வைத்துள்ள அனுமுத்து என்ற விவசாயி நெல் பயிரிட்டு வருகிறார். ஒரு ஏக்கருக்கு 20 மூட்டைகள் (ஒரு மூட்டைக்கு 75 கிலோ) விளைச்சல் என்று கணக்கிட்டால், ஆண்டுக்கு 60 மூட்டைகள், மூன்றாண்டுகளுக்கு 180 மூட்டைகள். மூட்டை ரூ 1000 – 1100 கொடுத்து கொள்முதல் செய்கின்றன ஏஜென்டுகள். அதாவது மூன்றாண்டுகளில் அந்த விவசாயியின் மொத்த வருவாய் சுமார் 2 இலட்சம். இவர் அடகுவைத்த நகை 11 பவுன். வாங்கிய கடன் சுமார் ரூ.1,35,000. கட்டவேண்டிய தொகை வட்டியுடன் சேர்த்து சுமார் இரண்டு இலட்சம். குடும்பச் செலவு சராசரியாக மாதம் ஒன்றுக்கு மிகக் குறைவாக ரூ 5000 எனக் கொண்டால் கூட மொத்த செலவு ரூ 1,80,000. இது தவிர அவசர அவசிய செலவுகள் தனி. இவர் வாங்கியக் கடனை திருப்பிக் கட்ட வேண்டும் என்பது சரி என்றாலும் எப்படி கட்டுவார் என்ற கேள்விக்கு இந்த அரசும், சமூகமும் பதிலளிப்பதில்லை. அனுமுத்தனைப் போன்றுதான் பிற விவசாயிகள் வாழ்கின்றனர்.
இந்த நிலையில், விவசாயி தவணைத் தொகையைக் கட்ட வேண்டும் என்றால், அவரது குடும்பத்தை அவர் எப்படி பராமரிப்பார்? மேலும், இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்றவை கானல் நீராகிவிட்ட இன்றைய சூழலில் விவசாயி எப்படி வாழ்கிறார் என்பதே கேள்விக்குரியதாக உள்ளது.
சுண்டப்பட்டி
ஆகையால், விவசாயிகளுக்கு முன் ஒரு தீர்வுதான் உள்ளது. விவசாயக் கமிட்டிகள்தான் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு சுதந்திரம், விவசாயிகளுக்கான அதிகாரம். அது தான் தீர்வு!
விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோருவது; விவசாயக் கொள்முதல் நிலையங்களை அமைப்பது; நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்ற விவசாயிகளின் தேவைகள், உரிமைகள் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகளாகவே உள்ளன. இவற்றில் சில அரைகுறையாக அமுல்படுத்தப்பட்டும் செயல்படாமல் உள்ளன. ஆனால், இன்று இந்தக் கோரிக்கைகளின் மீதே ஆர்வமற்ற ஒரு மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், விவசாயம் என்பது தற்கொலைக்கு நிகரானதாக உள்ளது. அதாவது, விவசாயம் வாழ்வளிக்கும் ஒரு தொழிலாக இல்லாமல் போனது மட்டுமின்றி, எதிர்நிலைக்கு சென்றுவிட்டது.
சுண்டப்பட்டி
விவசாயம் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து துறைகளும் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்த அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பே நெருக்கடியில் சிக்கியுள்ளது. சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து உரிமைகளையும் நியாயங்களையும் நிறைவேற்றும் நடுநிலையாளன் போல தன்னைக் காட்டிக்கொண்ட இந்த அரசுக் கட்டமைப்பு, கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடியாகவும் உழைக்கும் மக்களுக்கு எதிர் நிலை சக்தியாகவும் மாறிவிட்டது. அதனால், தனித்தனியான கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் மூலம் எந்த உரிமையை பெற முடியாது. ஆகையால், உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும். அந்த வகையிலான போராட்டத்திற்கு அணிதிரள்வோம்!
***
மீண்டும் ஏல அறிவிப்பு படம்
சிண்டிகேட் வங்கிக் கிளை போன்று மற்ற வங்கிகளிலும் இதுபோன்ற ஏல அறிவிப்புகள் நாள் தோறும் பத்திரிகைகளில் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த விளம்பரங்களை வெளியிடும் வங்கிக் கிளைகளின் பட்டியலில் கடன் தொகையை மட்டும் குறிப்பிடுவது, கடன் தொகையை குறிப்பிட்டு + வட்டி என்று குறிப்பிடுவது, மேலும் சில வங்கிக்கிளைகள் கடன் பெற்றுள்ள காலத்தையும் குறிப்பிடுவது, எவ்வளவு நகை (கிராம் கணக்கில்) என்பதைக் குறிப்பிடுவது, என்ன நகை என்றும் குறிப்பிடுவது என்று பல வகைகளில் வெளியிடுகின்றன. இந்த விளம்பரங்களைப் பார்க்கும் பொதுமக்களில் பெரும்பாலானோர் “கடன் கட்டவில்லை என்றால் ஏலம் விடத்தானே செய்வார்கள்” என்று கருதிக் கொள்கின்றனர். சிலர், “ஐயோ, பாவம்” என்று கடன் தாரர்ளுக்காக வருத்தப்பட்டாலும், “கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்றால் வங்கிகள்தான் என்ன செய்ய முடியும்” என்று கருதிக் கொள்கின்றனர்.
இந்த ஏல அறிவிப்புகளில் தெரிவித்துள்ள கூற்றுகள் உண்மையா, கடன் கட்டத் தவறியவர்கள் யார்? எதற்காக கடனை வாங்கினார்கள்? ஏன் திருப்பிக் கட்டவில்லை? கடன் கட்டாமல் போனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் வங்கிக் கிளைகளின் கருத்து உண்மையா? வங்கிக் கிளை ஏலத்தை அறிவித்த பின்னர் ஏலத்தை தடுக்க முடியாதா? தடுப்பதற்கான வழிவகைகள் உள்ளனவா? இதற்கு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பொறுப்புள்ளதா? அரசியல் பின்னணி உள்ளதா? நிறுவன விதி முறைகள்–சட்ட முறையிலான குற்றச் செயல்கள், விதிமீறல்கள் நடந்துள்ளனவா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதுமட்டுமல்ல, கடன் கட்டியவர்கள் யார்? அவர்கள் எப்படி கடனைக் கட்டினார்கள்? போன்ற பிரச்சனைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. வெறுமனே ஒரு அறிவிப்பாக சுருக்கிப் பார்த்து இந்தப் பிரச்சனையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடியாது. பெரியமுத்தூர் சிண்டிகேட் வங்கிக் கிளையின் ஏல அறிவிப்பையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ளது என்பதைத்தான் இந்த போராட்டம் நமக்கு உணர்த்துகிறது.
கிருஷ்ணகிரி டேம், சார்ந்த வயல்கள்
இப்பகுதியில் விவசாயிகளில் கடன் வாங்கியுள்ளவர்கள் கணிசமானவர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக தான் கடன்வாங்கியுள்ளனர். பல பெண்களின் காது, மூக்கு, கழுத்தில் இருப்பதெல்லாம் கவரிங் நகைகள் அல்லது வெறுமனே நகையணியாமல் உள்ளனர். பிள்ளைகளை அள்ளிச்சென்று கொள்ளையடிக்க ஊருக்கு நான்கு முதல் ஐந்து தனியார் பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக, கல்வி தனியார்மயமான பின்னர்தான் நகை கடன் எடுப்பது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
***
இதனிடையே வெள்ளிக் கிழமை (17-06-2016) மாலை ஏலம் நிறுத்திவைக்கப்பட்டதாக வங்கியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட பின்னர், இதனை அறிந்த பலரும் தோழர்களிடம் புலம்பினர். சில பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணத்திற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து நகையை மீட்டதாக தெரிவித்தனர். ஒரு நாள் முன்னமே நீங்கள் வந்திருக்கக் கூடாதா என்று தோழர்களை பார்த்து மனம் வெதும்பினர். ஏலம் அறிவித்த பின்னர் பல விவசாயிகள், 10 முதல் 15 நாட்களுக்கு 7% முதல் 10% வரை கந்துவட்டிக்கு கடன் வாங்கி வந்து நகையை மீட்டதாகத் தெரிவித்தனர். மேலாளரிடம் மனு கொடுத்துவிட்டு வரும் போது, ஒரு விவசாயி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதா, இப்பதான் கந்துவட்டிக்கு பணத்தை வாங்கி கடனக் கட்டுனேன்” கதறினார்.
பெரிய முத்தூர்
ஏலம் மீண்டும் விடப்படும் என்று வங்கியில் அறிவிப்புப் பலகை வைத்த பின்னர், பல விவசாயிகள் நம்மை பார்த்து விசாரித்தனர். மக்கள் அதிகாரம் தோழர்களை நாடி வந்த விவசாயிகளிடம் எப்படி ஏலத்தைத் தடுத்து நிறுத்தினீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டனர். தொடர்ந்து போராடி வருவதைக் கேட்டு உற்சாகமடைந்தனர். இதனை விடக்கூடாது என்று ஆவேசமாகப் பேசினர். ஆனால், மறு நாள் செவ்வாய்க் கிழமை வங்கியில் ஓரிரு விவசாயிகள் மட்டுமே கூடுதலாக வந்தனர். தங்களது உணர்வை பகிர்ந்து கொண்ட பலரும் வரவில்லை. ஏன் வரவில்லை?
நகை ஏலம் விடப்படுவது என்ற பிரச்சனையை விவசாயிகளில் அனைத்து பிரிவினரும் தன்மான பிரச்சனையாக பார்க்கின்றனர். நகை ஏலத்திற்கு விடப்படுவது தங்களது மானத்தை இழந்ததற்கு சமம் என்று பார்க்கின்றனர். இதனால், பலரும் கந்துவட்டிக்கு பணம் வாங்கி கடனை அடைத்துள்ளனர். கந்துவட்டிக்கு கடன் வாங்கி நகையை மீட்க முடியாத சிலர், வங்கியின் பக்கமே செல்லாமல் வேறு வழிகளில் செல்கின்றனர். இது, விவசாயிகள் தாங்கள் கொடுத்த வாக்கிற்கு நேர்மையாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தப்படும் அவர்களது நேர்மையைக் காட்டுகிறது. மற்றொருபுறம், பரம்பரை நகை பறி போகிறதே என்ற துக்கமும் அவர்களை வாட்டுகிறது.
செய்தித்தாளில் வெளிவந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல் பற்றிய செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இவ்வாறு கூனிகுறுகி வாழ்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது, இந்த வங்கியின் மூலம் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட ‘நெருக்கடிகள்’தான். இந்த வங்கியின் ஏல அறிவிப்பில் தெரிவித்துள்ள, தவணைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகளைத் தாண்டி பல ‘திருட்டு’ வழிமுறைகளை இந்த வங்கி கையாண்டுள்ளது. இதனை அங்குள்ள விவசாயிகளின் வீட்டுப் பெண்கள் நமது தோழர்களிடம் தெரிவித்தனர். “இந்த மேனேஜரு ரொம்ப மோசம். தவணை கட்டவில்லைங்கிறதுக்காக, நூறுநாள் வேலையில எங்களுக்கு வந்த பணத்தை எல்லாம் இந்த ஆளு எடுத்துக்கிட்டாரு. சுய உதவிக் குழுவில இருக்கிற சேமிப்பைக் கூட விட்டுவைக்கிறதில்லை” என்று புலம்பினர். “வெளியூர்ல படிக்கிற புள்ளைக்கு அக்கவுண்டுல பணத்தை போட்டாக்கூட அதையும் எடுத்துக்கிறாரு” என்று வருத்தப்பட்டார் ஒரு பெண்.
இதனை அந்தப் பெண்கள் சொல்லும் போது இதனைக் கேட்ட தோழர்களுக்கு கோபம் பீறிட்டு வந்தது. முகத்தில் பளார் பளார் என்று நாலு அறைவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துச் செல்லும் கந்துவட்டிக்காரனையும், பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, தான் திட்டமிட்டிருந்த அவசரமான தனது குடும்பத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாமல், கன்னத்தில் அறைந்து–பாக்கெட்டில் கையைவிட்டு வன்முறையாக பணத்தைப் பிடுங்குபவனை எதிர்த்துக் கேட்கவும் முடியாத அவமானத்தாலும் தவிக்கும் ஒரு விவசாயியையும் கண்முன்னே காட்டியது.
நூறுநாள் வேலைக்கு செல்லும் இந்தப் பெண்கள் யார்…? எங்கேயும் வேலை கிடைக்காமல், உழைக்காமல் சும்மா இருக்கவும் முடியாமல், குடும்ப செலவுக்கு வழி தெரியாமல், கூலி வேலை எதுவும் கிடைக்காமல் இருக்கும், விவசாயி என்ற ‘கௌரவ’த்தை விட்டுவிட்டு வேலைக்கு சென்று தங்களது குடும்ப சுமையைக் குறைக்க நினைக்கும் விவசாயிகளின் வீட்டுப் பெண்கள்!
அந்த வகையில் விவசாயிகளின் வீட்டில் உள்ள பணத்தைத் திருடி, அவர்கள் கணக்கில் வரவு வைக்கும் ஒரு திருட்டை, வங்கிகள் தவணைப் பணம் வசூலிக்கும் வழிமுறையாக, மதுரை உயர் ‘நீதி’மன்றக் கிளை சில நாட்களுக்கு முன்னதாக ஒரு வழக்கில் தீர்ப்பாக அங்கீகரித்துள்ளது. மொத்தத்தில், வங்கித்துறை கந்துவட்டிக் கொள்ளைக் கூடங்களாகவும் நீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து மன்றங்களாகவும் மாறிவிட்டன.
***
ஏலத்தை நிறுத்தி வைத்ததற்கு மக்கள் அதிகாரம் தோழர்களின் விடா முயற்சியே காரணம். ஆனால், இதற்காக பெருமைப்படவோ அல்லது மகிழ்ச்சிக் கொள்ளவோ முடியவில்லை. மீளமுடியாத அவலத்திலும் அழிந்துவருகின்ற மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கும் போது, அதில் அவர்கள் சந்தித்த ஒரு நெருக்கடியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் அவ்வளவே. மறுகாலனியாக்க நச்சுச் சுழலின் பிடியில் இடிந்துவிழும் இந்த சமூகக் கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, ஒரு பெரும் அழிவு என்ற புதைகுழியில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகள், அதிலிருந்து தங்களது பிற்போக்கு பண்பாடு, பழக்க வழக்கங்களால் மீளமுடியாமல் தவிக்கும் நிலையில், ஏலத்தை தடுத்து நிறுத்திய இந்தப் போராட்டம் என்பது ஒரு தொடக்கமாக அமையட்டும்! விவசாயிகள் நிரந்தர ஆறுதல் அடைவதற்கு அவர்களை அமைப்பாக திரட்டி அடுத்தக் கட்டமாக மாபெரும் போராட்டமாக முன்னேறி செல்லட்டும்!
***
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டிணம் என்பது தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிறு தொழில் நகரம். இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு காலத்தில் செங்கொடி இயக்கம் வலுவாக இருந்தது; பின்னர் நக்சல்பாரி இயக்கம் செல்வாக்காக இருந்தது.
இந்த கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றின் மூலமும் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையின் மூலமும் நீர்பாசன வசதி பெறுகின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் உள்ள சந்துப் பொந்துகளைக் கூட பண்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர் இங்குள்ள விவசாயிகள். பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு பயிரிடுகின்றனர். சிலர் அண்மை காலமாக மல்லி, சாமந்தி போன்ற பூ உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். கால்நடைத் தொழிலும் முக்கியமான தொழில். பல கிராமங்களில் பால்கோவா உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அந்த அளவிற்கு பால் உற்பத்தி இங்கு நடக்கிறது.
ஆம், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருகின்ற பகுதியென்றால், அது தென்பெண்ணையாற்றின் கரைகளை ஒட்டிய இந்தப் பகுதிதான். எங்கும் பச்சை பசேலென காட்சியிளிக்கும் நெல்வயல்கள், தென்னந்தோப்புகள்; வயல்களில் சுற்றிவரும் வெள்ளைநிறக் கொக்குகள், குருவிகள், காக்கைகள்; கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள், பெண்கள்; சற்றுத் தொலைவில் இருக்கும் மலைக்குன்றுகள், ஆங்காங்கே நீரோடைகள், நாணல்கள்… என அந்த காட்சிகள் மனதிற்கு இதமாக இருக்கும்.
கண்களுக்குத் தெரியும் இந்தக் காட்சியும் கண்களுக்குத் தெரியாத விவசாயிகளின் வாழ்க்கையும் முரண்பட்ட அம்சங்களாக ஒரே இடத்தில்தான் உள்ளன! இதனை நாம் உணரும் போது, இங்கே மறைந்துள்ள மற்றொரு காட்சியும் நமது கண்களுக்குத் தெரியத் தொடங்கிவிடும். அது தான் போராட்டம்! அந்தக் காட்சி வேகமாக வளரும், பற்றிப் படரும், வானும் மண்ணும் செவ்வண்ணமாக சிவக்கும்…!
விவசாயிகளின் போராட்டத்தால் நகை ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது!
விவசாயிகளிடம் தவணை வசூலிக்க அவர்களது கணக்கில் உள்ள சேமிப்புகளை வங்கிகள் திருடிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது – மல்லையாவுக்கு சுதந்திரம், விவசாயிகள் மீது அடக்குமுறை – இதுதான் சர்வாதிகாரம்!
கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை அனைத்தையும் ரத்து செய்யப் போராடுவோம்! விவசாயிகளின் அடமானப் பொருட்கள் அனைத்தையும் மீட்டெடுப்போம்!
விவசாய உள்ளீடு பொருட்கள், விளைப் பொருட்களில் கார்ப்பரேட் முதலாளிகள், ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்போம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெறுவோம்!
மக்கள் அதிகாரம் கிருஷ்ணகிரி பகுதி தொடர்புக்கு: 80152 69381
திருச்சி பெல் தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தேர்தல் சூழல்
திருச்சி BHEL – பெல் தொழிற்சாலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் திங்கட்கிழமை 27.06.2016 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலை பற்றிய செய்தி சேகரிப்பதற்காக வினவு செய்தியாளர்கள் பெல் தொழிற்சாலைக்கு சென்றிருந்தோம்.
வளாகம் முழுக்க தொழிற்சங்கங்களின் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகள், சங்கத்திற்கு வாக்களிப்பதற்கான எண் என முழுக்க முழுக்க அவ்வளாகம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல நிறைந்து காட்சியளித்தது. மற்ற தொழிற்சங்கங்களை விட ஐ.என்.டி.யூ.சி, தி.மு.க, அ.தி.மு.க-வினர் மிக அதிக பொருட் செலவில் போட்டி போட்டு பிளக்ஸ் வைத்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஆலைக்குள் உள்ளே நுழையும் போதும், உணவு இடைவேளையின் போதும், பணிமுடிந்து திரும்பும் போதும் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாயில்களில் ஏதாவதொரு சங்கத்தின் கூட்டம் நடந்துகொண்டேயிருக்கிறது. இக்காட்சிகள் தேர்தல் கமிசன் கட்டுப்பாடுகளில்லாத அந்தக் கால பொது தேர்தல் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தன. “ஓ.டி, சம்பள உயர்வு, தொழிலாளர் குடியிருப்புக்களை முறைப்படுத்துவது, மேம்பட்ட மருத்துவ வசதி, தனியார்மய எதிர்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு” என்ற வார்த்தைகள்தான் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஐ.டி துறையிலோ மற்ற பெரும்பான்மையான தொழிற்துறை வளாகங்களிலோ நினைத்துபார்க்க முடியாத சூழல் இது.
நாம் செல்வதற்கு முந்தைய நாள் தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர். மதியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவனும் தி.மு.க நேருவும் பிரச்சாரத்திற்கு வரவிருக்கிறார்கள் என்று சுவரொட்டிகள் அறிவித்தன. காலை உணவுக்காக தொழிலாளர் குடியிருப்பு வளாகத்திலிருக்கும் உணவு விடுதியில் நுழைந்தோம். விடுதி முழுக்க அ.தி.மு.க கரை வேட்டிகள் நிறைந்திருந்தனர். இது இத்தேர்தலை ஆளும் வர்க்கம் எவ்வளவு முக்கியமாக கருதுகிறது என்பதை அறியவைப்பதாக இருந்தது.
ஓட்டுக்குபணம்!
பொதுத்தேர்தல்களின் சீரழிவு தொழிற்சங்க தேர்தலையும் விட்டுவைக்கவில்லை. பிரியாணி, சாராயம் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் சாதாரணமாக புழங்குகின்றன. அ.தி.மு.க-வினர் “கன்டெய்னர் பார்முலா”வை இங்கும் அமல்படுத்துகின்றனர். ஓட்டுக்கு 2000 ரூபாய் வீடு வீடாக விநியோகித்திருக்கின்றனர். இத்தேர்தலுக்கு அணுவளவும் சம்பந்தமில்லாத அ.தி.மு.க கரைவேட்டிகளை வளாகத்தில் பரவலாக பார்க்க முடிந்தது. அதிமுக கொடிகளுடன் பார்ச்சூனர், இன்னோவா வண்டிகள் நிறைந்திருந்தன. தொழிலாளிகள் பற்றி எதுவும் தெரியாத இவர்களிடம் முக்கிய பிரச்சனையான நிலையானை 63 பற்றி கேள்வி கேட்டால் ஒரு காமெடி பேட்டி நிச்சயம் என்றாலும் வேலை பாதிக்கபடகூடும் என்பதால் தவிர்த்துவிட்டோம்.
இவர்களிடம் போட்டியிட முடியாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி சார்ந்த ஐ.என்.டி.யூ.சி சங்கத்தினர் தங்கள் உறுப்பினர்களுக்கு ஹெல்மெட்டையும், திமுக-வினர் அயர்ன் பாக்ஸ்-ம் வழங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் ஓட்டை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.
பொதுத்தேர்தலை போல ஓட்டுக்குக்கு பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்படுவது மறைமுகமாக, தெருவிளக்கை அணைத்துவிட்டு நடப்பதில்லை. பச்சையாக பகிரங்கமாக கொடுப்படுகின்றது.அதோடு அதை நியாயப்படுத்துவவும் செய்கிறார்கள்.
“எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆண்டாண்டு இது போன்று பரிசுப்பொருட்களை அளிப்பது வழக்கம். இதே போலத்தான் இவ்வாண்டும் அளிக்கிறோம்.” என்று இதை நியாயப்படுத்துகிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த வாயிற்கூட்டத்தில் அதிமுக பணம் கொடுப்பதை வறுத்தெடுத்துவிட்டு “உறுப்பினர்கள் நமது தொழிற்சங்க அலுவலகத்தில் அயன் பாக்ஸ் பெற்றுக்கொள்ளலாம்” என அறிவித்தார்கள். அங்கேயே தொ.மு.ச ஊழியர்கள் தங்கள் கையிலிருந்த பட்டியல்படி ஊழியர்களுக்கு சீட்டில் உறுப்பினர் எண்ணை எழுதி கொடுக்க அவர்கள் அலுவலகத்தில் அதை காட்டி அயன்பாக்ஸ் பெற்று சென்றார்கள்.
தொழிலாளிகளை பொருத்தவரை எவ்வித குற்றவுணர்வுமில்லாமல் பரிசுப்பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். “பரிசுப் பொருட்களுக்காக ஓட்டு போட்டால் தப்பு. ஆனால் அதை வாங்குவதை எப்படி தவறு சொல்ல முடியும்” என வாதாடுகிறார்கள். “ நாங்க சந்தா கொடுக்கிறோம். அவங்க இத தர்றாங்க” என்று திறமையாக சமாளிக்கிறார்கள்.
இதை பார்த்து விட்டு அங்கிருந்த தொழிலாளி ஒருவரிடம் இத்தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் என்ன வேறூபாடு என்று கேட்டோம். அதற்கு அத்தேர்தல்களில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ-க்களை மீண்டும் பார்க்க முடியாது.இங்கு பார்க்கலாம் வாக்குறுதி பற்றி கேட்கலாம். ஆனால் எதை கேட்டாலும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது பார்க்கலாம் என்ற ஒரே பதிலைத்தான் எப்போதும் சொல்வார்கள் என்றார்.
பரிசுப்பொருட்கள் வாங்காதவர்களை பொருத்தவரை பெரும்பாலும் கவுரவ குறைச்சல் என்ற வகையில் வாங்காமல் இருக்கிறார்கள். வாங்கும் தமது நண்பர்கள் தவறு செய்வதாக கருதவில்லை. “நாம எப்படி சரி தவறுனு சொல்ல முடியும். அது அவங்க விருப்பம். “ என்கிறார்கள்.
“சரி இவ்வளவு பணம் செலவு செய்கிறார்களே இதை திரும்ப எடுக்க என்ன செய்வார்கள்”
“குடியிருப்பு ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் ஊழியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொடுப்பாங்க. உள்ள நிறைய கமிட்டி இருக்கு அதுல ஏதாவது சம்பாதிப்பாங்க” என்று தாங்கள் புரிந்து வைத்திருக்கிற அளவில் கூறுகிறார்கள். உண்மையில் இதன் வீச்சு பெரியது. நிர்வாகத்தோடு கைகோர்த்துகொண்டு காண்டிராக்டுகளை தங்கள் விரும்பியவர்களுக்கு பெறுவது இவர்களின் முதன்மை முறைகேடாக இருக்கிறது. பல நிர்வாக கமிட்டிகள், பணியிடங்கள் நிரப்பபடும் போது நிர்வாகத்துடனான தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவது என பல வகைகளில் சம்பாதிக்கிறார்கள்.
பெல் வளாகத்தில் பாய்லர் பிளாண்ட் வோர்க்கர்ஸ் யூனியன் (BPWU) என்ற பெயரில் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் செயல்படுகிறது. 1992-லேயே BPWU /பு.ஜ.தொ.மு தோழர்கள் வெளிக்கொணர்ந்த கேண்டீன் ஊழல் ஒன்றின் அளவு சில கோடிகளை தாண்டும் என்று கூறுகிறார் BPWU தலைவர் தோழர் சுந்தரராசு. இதிலிருந்து ஓட்டுகட்சி தொழிற்சங்க தலைமைகள் இவ்வளவு செலவழிப்பதன் அடிப்படையை புரிந்துகொள்ள முடியும். ஆனால் தொழிலாளிகளை பொறுத்தவரை இது தவறு என்றோ அதை தடுக்கவேண்டும் என்றோ முனைப்பு காட்டவில்லை. இது குறித்து ஆவேசமான கருத்துக்களை அவர்களிடம் காண முடியவில்லை. தவறுதானே என்று கேட்டால் ஆமாம் என்றே கூறுகிறார்கள்.
ஆளும் கட்சியின் ‘கவுரவப்’ பிரச்சினை!
இதற்கு முந்தைய தேர்தலில் தி.மு.க-வின் தொ.மு.ச முதன்மை சங்கமாகவும், அதை தொடர்ந்து முறையே ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி யூனியன், அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்க பேரவையும் அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு பெற்றிருந்தன. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அ.தி.மு.க இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக பார்க்கிறது. அதாவது அம்மா ஆட்சியின் கீழ் பெல் தொழிற்சாலையும் வந்தே தீர வேண்டும். தோற்றுப் போன மந்திரிகள் தங்கள் பரிவாரங்களோடு இங்கே முகாம் அடித்திருப்பதைப் பார்த்தால் அவர்களின் ‘கவுரவப்’ பிரச்சினையின் அளவை புரிந்து கொள்ள முடியும்.
பெல் அண்ணா தொழிற்சங்க பேரவையின் கலைச்செல்வன் தான் இத்தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இத்தேர்தலில் தோல்வியடைவது என்பது கட்சியில் அவரது இடத்தை காலிசெய்வதற்கு சமம். மேலும் அ.தி.மு.க தொழிற்சங்க பிரிவு தலைவராக இருக்கும் சின்னையா, வளர்மதி போன்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்றிருக்கும் நிலையில் இங்கு அவர்கள் வெற்றி பெறுவது கட்சியில் அவர்களது எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. தொழிலாளர் பிரச்சனைக்கு அவர்கள் போராடவில்லை தங்கள் எதிர்காலத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இதில் வெற்றிபெறுவது தேவையாக இருக்கிறது.
தேர்தலில் பேசப்படும் பிரச்சினைகள் எவை?
மோடி அரசு தனியார்மயமாக்கத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்திவருகிறது. பாதுகாப்பு உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதோடல்லாமல் பொதுத்துறையின் பங்குகள் விற்கப்டுவதையும் தீவிரப்படுத்துகிறது. வரும் காலங்களில் அது இன்னும் தீவிரமாகும். பெல் நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தையும் கையில் வைத்திருக்கிறது. ஆழம் பார்க்கும் வகையில் அதை அவ்வப்போது அறிவித்தும் வருகிறது. அப்படி ஒரு நிலை வந்து தொழிலாளிகள் போராடினால் அவர்களை ஒடுக்கவும், தனியார்மய கொள்கைகளை பிரச்சனையில்லாமல் அமல்படுத்தவும் நிலையானை எண் 63 என்ற அடக்குமுறை ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறது நிர்வாகம். இந்த நிலையாணைப்படி கேள்வியில்லாம்ல் விசாரணையில்லாமல் நிர்வாகம் நினைத்தால் யாரையும் வேலைநீக்கம் செய்ய முடியும்.
இவ்விரண்டும் தான் தொழிலாளிகளின் கவலைக்குரிய விசயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தொழிலாளிகளிடம் பேசியதிலிருந்து அவர்கள் முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல் ஓவர் டைம் ஊதியம் குறைந்து வருவதைதான் கவலைக்குரிய விசயமாக பார்க்கிறார்கள். பெல் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த கால போராட்டங்களின் பலனாக ஊழியர்களின் சம்பளம் ஓப்பீட்டளவில் அதிகமாயிருக்கிறது. ஐந்து ஆண்டு அனுபவமுள்ள ஐ.டி.ஐ படித்த தொழிலாளி ஒருவர் 45,000சம்பளம் பெறுவதாக தெரிவித்தார். பணிப் பாதுகாப்பு, நல்ல சம்பளம், மலிவு விலை உணவு, இலவச மருத்துவம், தங்குமிட வசதி உள்ளிட்ட உரிமைகளை பெற்றிருக்கிறார்கள். தனியார்மய ஆபத்து வருவதை உணர்ந்திருந்தாலும் உடனடியாக வராது என்று கருதுகிறார்கள். அதனால் இப்போது அக்கறைப்பட தேவையில்லை என்பதே பெரும்பான்மையான தொழிலாளிகளின் கருத்தாக இருக்கிறது.
பெல் அதிகாரிகள் தங்கள் போட்டியாளர்களான தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் தங்களுக்குகிடைக்கக்கூடிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால் தான் தங்கள் ஓ.டி குறைவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் தொழிலாளிகள். இது முற்றிலும் உண்மையே. பல முன்னால் பெல் அதிகாரிகள் தாங்கள் ஓய்வு பெற்றதும் எல்.அண்ட்.டி போன்ற தனியார் நிறுவனங்களில் சேர்ந்துகொள்கிறார்கள். கனரக எந்திரங்களை தயாரிக்கும் வரைபடங்கள் உள்ளிட்ட அறிவாயுதங்களுடன் வெளியேறி சொந்த நிறுவனங்களை ஆரம்பித்துகொள்கிறார்கள். இதற்கு அதிகாரிகளின் சுயநலம் மட்டும்தான் காரணம் என நினைக்கிறார்கள் தொழிலாளிகள். ஆனால் இது பாதியளவு தான் உண்மை. தனியார்மயம் என்ற கொள்கை அமலில் இருப்பதால் தான் அதிகாரிகள் இம்முறைகேடுகளில் ஈடுபடமுடிகிறது. இந்த ஓவர் டைம் ஊதியத்தைக்கூட தனியார்மயத்தை வீழ்த்தாமல் பெற முடியாது என்பது தான் உண்மை. தொழிலாளிகள் புரிந்துகொண்டபடி அதிகாரிகளின் ஊழல் தான் ஓவர் டைம் ஊதியம் பறிபோவதற்கு காரணமென்று வைத்துகொண்டாலும் அதற்கு எதிராக நீங்கள் ஏன் போராடவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களாக இருக்கும் ஓட்டுகட்சி சங்கங்களின் துரோகங்களை தொழிலாளிகள் நினைவுகூர்கிறார்கள். குறிப்பாக ஆரோக்கியசாமி என்ற தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் சங்கங்கள் தங்களுக்கு உறுதுணையாக இல்லை என குற்றம் சாட்டினார்கள். இச்சம்பவத்தில் பாதுகாப்பில்லாத பணிச்சூழலில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்த அதிகாரி ஒரு தலித் என்பதால் சாதி அடிப்படையில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பேத்கர் எஸ்.சி/ எஸ்.டி தொழிற்சங்கம். சம்பந்தப்பட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற தொழிலாளிகளின் கோரிக்கையை இச்சங்கம் எதிர்த்தது. பிற ஓட்டுகட்சி சங்கங்கள் நிர்வாகத்துடன் இணைந்து துரோகமிழைத்துள்ளார்கள். இப்போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க தொழிற்சங்க ஊழியர்கள் அ.தி.மு.க தம்பிதுரையின் சிபாரிசில் வேலை பெற்றிருந்தாலும் ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் துரோகத்தை மறக்கவில்லை என்கிறார்கள். அதே சமயத்தில் அச்சங்கங்களிடமிருந்து பணம்/பரிசுப்பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள்.
“இவர்களை விட்டால் வேறு யாருக்கு ஆதரவளிப்பீர்கள்?” என்று கேட்டால்,
இந்தியக் கம்யூனிசக் கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யூ.சி யின் DTS, மற்றும் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-வின் BPWU சங்கங்களை தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான ஊழியர்களை பொருத்தவரை இவ்விரு சங்கங்களும் “ஃபிரெஷ்”ஷாக இருக்கிறார்கள்; கட்சி சார்பற்றவர்கள்; புதிதாக தேர்ந்தெடுப்போம் என்ற அரசியலற்ற கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஆயினும் சிலர் பு.ஜ.தொ.மு தனியாமயம், தொழிலாளர் நல சட்ட திருத்தம், டாஸ்மாக் மூடல் உள்ளிட்ட விசயங்களுக்கு போராடுகிறார்கள், அதனால் அவர்களை ஆதரிப்போம் என்றார்கள்.
ஒரு சரியான சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்ற கேள்விக்கு பெரும்பான்மையானவர்களின் கருத்தை பின்வரும் கருத்துக்களை கொண்டு விளக்கலாம்.
“ சார் சங்கம் தீவிரமா இருக்க கூடாது சார். சூழ்நிலையை பாத்து அதுக்கு ஏத்தாப்ல மூவ் பண்ணனும். சண்டைபோட்டு டிஸ்மிஸ் ஆக்கிறாம பெனிஃபிட் கிடைக்கிற மாதிரி இருக்கனும்”
“சார் ஓவரா தொழிலாளிகள்னு சொல்லாம மேனேஜ்மன்ட் ஒர்க்கஸ் ரெண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணி போகனும். கம்பெனி நல்ல இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். ரெண்டுமே முக்கியம்.”
சிலர் மட்டுமே உறுதியாக நின்று போராடுவது தான் ஒரு சிறந்த சங்கத்திற்கான இலக்கணமாக கூறினார்கள்.
டாஸ்மாக் உள்ளிட்ட ஜெயா அரசு மீது ஆயிரம் அதிருப்தி இருந்தாலும் சட்டமன்ற தேர்தலில் அவரது வெற்றிக்கு சீரழிந்த, ஊழல் படிந்த சமூக அடிப்படையும் ஒரு காரணமாக இருந்ததை அறிவோம். இங்கு நிலவும் தொழிலாளிகளின் சமூக அடிப்படையும் கிட்டதட்ட அதை ஒத்ததே. பெல் தொழிலாளிகளும் ஐ.டி ஊழியர்களைப் போல முதலாளித்துவ உலக கண்ணோட்டம், அதாவது கம்பெனியின் தலைமை நிர்வாகத்தை நம்பிக் கொண்டிருப்பதற்கு அவர்கள் சலுகை பெற்ற ஊழியர்களாக இருக்கும் சமூக நிலைமையும் ஒரு காரணம்.இந்த கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் பணியும் தனியார்மத்தை எதிர்க்கும் பணியும் வேறு வேறு அல்ல. அங்கீகரிக்கப்பட தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளை அரசியல்படுத்தாதன் விளைவே இது.
தொழிலாளிகள் பரிசீலிக்க வேண்டியது பரிசையா, அரசியலையா?
இது குறித்து பு.ஜ.தொ.மு-வின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் தோழர் சுந்தரராசுவிடம் பேசிய போது, “ நாங்கள் 90-களிலிருந்து செயல்பட்டு வருகிறோம். நிர்வாகம் மற்றும் ஓட்டு கட்சி தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாதத்தையும் ஊழல்களையும் அம்பலப்படுத்துவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேண்டீன் கமிட்டியில் தேர்வாகி அங்கு நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தினோம். இதனால் எப்படியாவது எங்களை வீழ்த்திவிட துடித்தார்கள். இப்பின்னணியில் போனஸ் பிரச்சனையில் முன்னணியில் நின்று போராடியபோது 5 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார்கள். இதை பிற தொழிற்சங்கங்கள் ஆதரித்தன. தொழிலாளிகளை பீதியூட்டி எங்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சித்தனர். போராடி மீண்டும் வேலை பெற்றோம். இப்போதும் கூட தொழிலாளிகளை பீதியூட்டும் வேலையை செய்துவருகிறார்கள்.
ஓட்டுகட்சி தொழிற்சங்கங்கள் பொருளாதாரவாதத்தை அதாவது ஒரு தொழிலாளியின் ஊதியம், போனஸ் போன்றவற்றை மட்டும் சுயநலத்தோடு ஊட்டி வளர்க்கிறார்கள். ஆனால் நாம் பெல் தொழிற்சாலையை மட்மல்ல, நாட்டின் பொதுத்துறைகளை காப்பாற்றவும், தனியார் மயத்தை ஒழிக்கவும் அரசியல் பேசும் போது தொழிலாளிகள் கவனிக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். அதனால் முன்னர் இருந்த நிலைமை மாறியிருக்கிறது. பி.எஃப்/கேண்டீன் கமிட்டி தேர்தல்களில் 1000 மேற்பட்ட ஓட்டுகளை பெற்றிருக்கிறோம். இத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” உறுதியுடன் கூறினார்.
ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்கம் எந்த அளவு அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறதோ அந்த அளவு சமூகத்தின் முன்னேற்றம் இருக்கும். அதே போன்று ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்கம் எந்த அளவு பின்தங்கி இருக்கிறதோ அந்த அளவு சமூகமும் சீரழிந்து போய் இருக்கும். பெல் தொழிற்சாலை வளாகத்தை சுற்றி வந்த போது நமது தொழிலாளி வர்க்கம் புடம் போடப்படவேண்டிய அவசியத்தை உணர முடிகிறது.
எட்டப்பன், தொண்டைமான், ஆற்காடு நவாப், சரபோஜி, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களையெல்லாம் துரோகிகள் என்று வரலாறு குறித்திருக்கிறது. ஆனால் அந்த துரோகிகள் அனைவரும் அவர்களது காலத்தில் சகல வசதிகளோடு வெள்ளையர்களது காலை நக்கி அடிமை ராஜாக்களாக வாழ்ந்து மடிந்தார்கள். ஆனால் கட்ட பொம்மனோ, மருது சகோதரர்களோ, திப்பு சுல்தானோ, பகத்சிங்கோ தம்முடைய இன்னுயிரை ஈந்து அடிமைத்தனத்தை எதிர்த்தார்கள்.
ஆகவே பெல் தொழிற்சாலைகளின் தொழிலாளிகள் பரிசுப் பொருட்கள், மந்திரி சிபாரிசு, ஆளும் கட்சி செல்வாக்கு, குடியிருப்பு வசதிகள், மற்றும் ஓட்டுக்கு பணம் போன்றவற்றுக்கு பலியாகப் போகிறார்களா இல்லை பெல்லை மட்டுமல்ல நாட்டையே காப்பாற்றப் போகும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அரசியலை ஆதரிக்கப் போகிறார்களா என்பதை அவர்களையே பரிசீலிக்குமாறு கோருகிறோம்.
சட்ட திருத்தத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பேரணி
தமிழனுக்கு ஒரு நீதி! டெல்லிக்கு…?
வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை ரத்து செய்
அன்பார்ந்த பெரியோர்களே!
சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)ல் பல்வேறு திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட/உயர்நீதி மன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யலாம். வழக்கறிஞர் தவறு செய்தால் நீதிபதிகள் தண்டிப்பது சரிதானே என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், அது சரியல்ல. வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், பட்டயக்கணக்கர்கள் (Auditor) போன்ற பதிவுபெற்று தொழில் செய்பவர்கள் (Professionals) மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களால் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுமங்களுக்கு மட்டுமே (Council) உண்டு. நீதிமன்ற விதிமுறைகளை மீறுகிறவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு (contempt of court) வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மட்டுமே நீதிபதிகளுக்கு உள்ளது.
வழக்கறிஞர்கள் அடிமைகள் அல்ல
சட்டப்படியான இந்த நடைமுறையைத்தான் சென்னை உயர்நீதி மன்றம் இப்போது மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகளாக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் (Bar Council) அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.
சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று கோரி கடந்த 2 வாரமாக தமிழக வழக்கறிஞர்கள் ஒட்டு மொத்தமாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உயர்நீதி மன்ற மதுரைக்கிளையும் ஆர்ப்பாட்டம், நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளது.
புதிய சட்ட திருத்தம் சொல்வது என்ன? நீதிபதியின் பெயரால் வழக்கறிஞர்கள் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டுவது, அவதூறு செய்வது, ஆதாரமற்ற புகார்களை தலைமை நீதிபதிக்கு அனுப்புவது, நீதிமன்ற ஆவணங்களைத் திருத்துவது, நீதிபதிகளை முற்றுகையிடுவது, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்துவது, நீதிமன்ற அறைக்குள் (Court Hall) முழக்க அட்டைகளைப் பிடிப்பது, மது அருந்தி நீதிமன்றத்துக்குள் வருவது, நீதிபதிகளை முறைத்துப் பார்ப்பது, குரலை உயிர்த்திப் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாமல் மாவட்ட தலைமை நீதிபதிகளும் இடைநீக்கம் செய்யலாம் என்கிறது இந்த சட்டத் திருத்தம். இதற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கனத்த குரலில் பேசிய ஒரு வழக்கறிஞர் மீது நீதிபதி தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு எதிராக 516 வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து வக்காலத்து தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிபதிகளால் பலவாறாக இப்போது மிரட்டப்படுகின்றனர்.
தென்மாவட்ட வழக்குரைஞர்கள் கடந்த செப்டம்பரில் மதுரையில் நடத்திய ஊர்வலம்
தமிழக வழக்கறிஞர்கள் மீது மட்டும் பாயும் இந்தச் சட்டத் திருத்தத்தை தலைமை நீதிபதி இப்போது கொண்டுவரக் காரணம்? கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி, லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையில் வழக்கறிஞர் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட முன்னணி வழக்கறிஞர்கள் 13 பேர் எவ்வித விசாரணையும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வசம் (ஆண்டுக்கு 30 கோடி நமது வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து) ஒப்படைத்தார் தலைமை நீதிபதி கவுல். மத்திய படை காவலர் ஒருவர், பெண் வழக்கறிஞர்களை அத்துமீறி வீடியோ எடுத்ததை தட்டிகேட்ட 7 வழக்கறிஞர்கள் தடாலடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் தாய்த்தமிழ் மொழியில் வழக்காட அனுமதிக்க வேண்டும் என்று கோரிய 10 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு, சிறை என தண்டிக்கப்பட்டனர். இவ்வாறாக 43 வழக்கறிஞர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு பெங்களூரு மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது.
தமிழக வழக்கறிஞர்கள் வரலாறு போராட்ட வரலாறு. ஈழத்தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசு துணை போனதைக் கண்டித்து விடாப்பிடியாகப் போராடிய வழக்கறிஞர்களை ஒடுக்க சென்னை உயர்நீதி மன்ற வளாகத்துக்குள் 19 பிப்ரவரி 2009-ல் காவல்துறை நடத்திய கொலை வெறித்தாக்குதல் நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாள். தாய்மொழிப்பற்று சுயமரியாதை, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, பாரப்பனீயத்தின் ஆதிக்கம், கனிமவளக்கொள்ளை, நதிநீர் உரிமை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் போராடியவர்கள் தமிழக வழக்கறிஞர்களே!
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
43 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின் வழக்கறிஞர்கள் அப்படியே அடங்கி ஒடுங்கிவிடுவார்கள் என்று கருதித்தான் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, இதனை விரட்டியடிக்காவிட்டால் நமது வாழ்வுரிமை பறிபோய்விடும் என்பதை உணர்ந்த தமிழக வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் மிரட்டலை துச்சமாக்கிவிட்டுப் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். நீதிமன்ற புறக்கணிப்பு செய்தால் சஸ்பெண்ட்! அப்படியானால் ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டு நீதிமன்றத்தை நடத்திக் கொள் என்று இப்போது நிமிர்ந்து விட்டது வழக்கறிஞர் சமூகம்.
இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட போவது யார்? சட்ட திருத்தத்தினால் வழக்கறிஞர்களை விட மக்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். நீதிமன்றங்கள் அநீதி மன்றங்களாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் சர்வ சாதாரணமாக நீதிபதிகள் ஈடுபடுகின்றனர். அதனைத் தட்டிகேட்கிற வழக்கறிஞர்களை ஒடுக்கிவிட்டால், மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுகின்ற வழக்கறிஞர்களைக் களையெடுத்துவிட்டால், சாதாரண மக்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, இதனால் மக்களுக்குத்தான் பெரும் பாதிப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆட்லி நார்ட்டன் என்பவருடைய உருவப்படம் ஒன்று உள்ளது. அதன் கீழ் “அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுபட்டு ஒருவர் சுதந்திரமாகக் கடமையாற்ற விரும்பினால் அவர் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நீதிமன்றம் இந்த சட்டதிருத்தத்தின் மூலம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. நீதிமன்றத்திலே கருத்து சுதந்திரம் இல்லை என்றால் அதற்காக எங்கே போய் போராடுவது. நீதிபதிகளும் வழக்கறிஞர்களே! நீதிபதிகள் ஆண்டைகள் அல்ல. வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல! நீதிமன்றத்தின் மாண்பினைக் காக்கவே (Decorum) வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என்பதாக நீதிபதிகளும் ஊடகங்களும் சித்தரிக்கின்றனர். நீதிபதிகள் ஊழல் செய்கின்றனர் என்பதற்கு எத்தனையோ சாட்சிகள், நிகழ்வுகள் அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கின்றது. பார் கவுன்சில் உறுப்பினர்கள் பலர் மற்றும் தரகு வேலை செய்யும் ஊழல் வழக்கறிஞர் சிலர் நீதியரசர்களின் நெருக்கத்தில் உள்ளனர். அவர்களை உடன் வைத்துக்கொண்டு நீதித்துறையை சுத்தப்படுத்துவேன் என்று கொக்கரிப்பது கேலிக்கூத்தாகும். நீதிபதிகளின் உயரிய மாண்புகளின் மூலமாகவே வழக்கறிஞர்கள் அவர்களை மதிப்பர். மாண்பொழிந்து போனவர்கள் மீது எப்படி மதிப்பு வரும்?!
சட்ட திருத்தத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பேரணி
சாமான்ய மக்களின் இறுதிப்புகலிடம் நீதிமன்றம் என்ற மாயை மக்களிடம் தகர்ந்து வருகிறது. கீழ்நிலை நீதிமன்றங்களின் படிக்கட்டுகள் தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உள் அறை வரை லஞ்சம், ஊழல், முறைகேடுகள், பாலியல் வக்கிரங்கள் பெருகியுள்ளன. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே இதற்கு சாட்சி. நீதிமன்றங்களின் இந்த ஈன நிலையைத் திருத்த முடியாத நீதிபதிகள் தங்களுக்கு ஆபத்து என்று முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஓலமிடுகின்றனர். எதிர்த்துப்போராடும் தமிழக வழக்கறிஞர்களைப் பழி தீர்க்கின்றனர். நீதிபதிகள் மகா யோக்கியர்கள் போலவும் வழக்கறிஞர்களை ரவுடிகளாகவும் சித்தரித்துப் பேசினார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து. ஊடகங்களும் வழக்கறிஞர்கள் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக்காட்டுகின்றன. நீதிபதிகளைப் புனிதர்கள் போல சித்தரிக்கின்றன.
வழக்கறிஞர்களை எளிதில் தண்டிக்க சட்டதிருத்தம் கொண்டு வரும் நீதிபதிகளை லேசில் தண்டிக்க முடியுமா? பல்வேறு விசாரணைக் கட்டங்களைத் தாண்டி இறுதியாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே பணி நீக்கம் செய்ய முடியும். இதுவரை யாரும் அப்படி பணிநீக்கம் செய்யப்படவுமில்லை. வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அரசாங்கம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களது தொழில் உரிமையைப் பறிக்க மட்டும் சட்டம் உள்ளது. நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆளும் கட்சியும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் சிலரும் நியமனங்களை கமுக்கமாகப் பகிர்ந்துகொள்கின்றனர். இதனை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் போராடுகின்றனர்.
பொதுப் பிரச்சினைக்காகப் போராடிய 43 வழக்கறிஞர்களை தலைமை நீதிபதி கவுல் கூட்டாளிகளின் தூண்டுதலின் பேரில் சஸ்பெண்ட் செய்த இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜேஎன்யு மாணவர் கன்னையன் குமாரையும், பேராசிரியர்களையும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கிய டெல்லி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார் மனன்குமார் .மேலும் நீதிமன்றத்துக்குள்ளே – பாரத் மாதா கி ஜெய்- என்று கோஷம் போட்ட வழக்கறிஞர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழன் என்றால் உடனே நடவடிக்கை பாய்கிறது. வடவன் என்றால் பம்முகிறது.
அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுபட்டு ஒருவர் சுதந்திரமாகக் கடமையாற்ற விரும்பினால் அவர் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும்
அண்மையில் ஆந்திராவுக்கு மாறுதலாகிப் போயுள்ள நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், – “நான் போராட்டக்களத்தை விட்டு ஒடிப்போய் விடவில்லை. குறிப்பிட்ட தொலைவில் என்னை நிலை நிறுத்தியுள்ளேன். தலைமை நீதிபதியுடன் எப்போதும் தொடர்பில் உள்ளேன். அங்கிருந்து கொண்டு உரிய நேரத்தில் எனது எதிரிகளை ஏவுகணை மூலம் தாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளேன்” என்று தனது பிரியா விடை நிகழ்ச்சியில் பேசினார். போராடும் வழக்கறிஞர்கள் மீது அவர் கொண்டுள்ள வன்மம் ஒரு பானைச் சோற்றுக்குப் பதம்.
எனவே இன்றைய நீதித்துறையின் கட்டமைப்பு அம்பலப்பட்டு திருத்த முடியாத நிலையில் சீரழிந்து நிற்கிறது. அதைச் சீர்திருத்த வக்கற்றுப்போன தலைமை நீதிபதி கவுல் கூட்டாளிகள் சட்டத் திருத்தம் என்று நீதிமன்றப் பாசித்தைக் கட்டவிழ்த்துள்ளனர். அம்பலப்பட்டு நாறிப்போயுள்ளவர்களின் இந்த ஆணவக் குரலுக்கு அஞ்சாமல் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்கிறது. மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்துப் போராடுகிற அவர்களுக்கு ஆதரவாக மக்களாகிய நாம் நமது ஆதரவைத் தந்து இணைந்து போராடுவோம்!
வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறு !
43 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனே ரத்துசெய்!
மக்களுக்காகப் போராடும் தமிழக வழக்கறிஞர்கள் மீது வன்மம் வைத்துப் பழி தீர்க்கும் தலைமை நீதிபதி கவுலை பணியிடமாற்றம் செய்!
இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா?
பார்கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே!
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே! மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து போராடுங்கள்!
உழைக்கும் மக்களே!
வழக்கறிஞர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அணி திரள்வோம்! போராடுவோம்!
ஆர்ப்பாட்டம்
நாள்: 27.06.2016 திங்கட்கிழமை காலை 10.30 மணி
இடம்: அண்ணா நகர் பேருந்து நிலையம் (அம்பிகா திரையரங்கு அருகில்) மதுரை.
தலைமை: வழக்கறிஞர் பா.நடராஜன் துணைத் தலைவர், ம.உ.பா.மையம், மதுரை.
கண்டன உரை:
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்
திரு. ம. லயனல் அந்தோணிராஜ் மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம்
தோழர் கதிரவன் ம.க.இ.க. தமிழ்நாடு.
தோழர் குருசாமி, தோழர் மோகன், மக்கள் அதிகாரம். அமைப்பாளர்கள்
பேரா.அ.சீனிவாசன் ம.கா.பல்கலை பாதுகாப்புக் குழு
பேரா.இரா.முரளி, துணைத் தலைவர் மக்கள் சிவில் உரிமைக் கழகம்
வழக்கறிஞர் கனகவேல் சமநீதி வழக்குரைஞர் சங்கம், மதுரை.
வழக்கறிஞர் ராஜேந்திரன் சமநீதி வழக்குரைஞர் சங்கம், மதுரை.
வழக்கறிஞர் நெடுஞ்செழியன் து. தலைவர் மதுரை வழக்கறிஞர் சங்கம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக்கிளை
150-இ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20.
தொடர்புக்கு 9443471003
ஏழை நாடுகளின் இறையான்மையை தமது தேசங்கடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கபளீகரம் செய்து அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன.
மோடி அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய இந்த உரையை கேட்டு மோடியின் இந்திய பக்தர்கள் புளகாகிதம் அடைந்து இருக்கலாம்.
மோடி, அமெரிக்க காங்கிரசில் பேசிய போது, “சுற்றுசூழல் பாதுகாப்பும், இந்த புவிக்கோளின் மீதான அக்கறையும் தாம் நமது (அமெரிக்கா மற்றும் இந்தியாவின்) பொதுவான பார்வையாகும். தாய் பூமியில் ஒற்றுமையோடு வாழ்வது என்பது எங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை தொன்மையான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.” என்றார்.
அமெரிக்காவின் சூழலிய அக்கறையை அங்கீகரிக்கும் மோடி கூடவே அந்தக்காலத்திலேயே நாங்களும் அப்படித்தான் என்று விடுகிறார். ஆனால் உலக சுகாதார நிறுவனம்(உ.சு.நி) அளித்துள்ள 2016 ஆண்டுக்கான உலகளாவிய நகர்ப்புற சுற்றுச்சூழல் (வளிமண்டல நுண்துகள்) மாசு அறிக்கை மோடியை அம்பலப்படுத்துகிறது. அந்த அறிக்கையின் படி உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த முதல் 20 பெரிய நகரங்களில் 1௦ நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
வளிமண்டலத்தில் உள்ள நுண்துகள் மாசுபாட்டை அளவீடு செய்ய PM2.5 மற்றும் PM10 ஆகிய இரு அளவீடுகளை உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்த இரு அளவீட்டுகளில் PM2.5 என்பது 2.5 மைக்ரான் மற்றும் அதற்கும் குறைவான அளவுள்ள நுண்துகள் மாசுகளை குறிப்பதாகும். PM10 என்பது 10 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான நுண்துகள் மாசுக்களை குறிப்பதாகும். அளவில் மிகவும் சிறியதான PM2.5 மாசுகள் தான் மிகவும் அபாயகரமான நுண்துகள்களாகும்.
2014 ஆண்டிற்க்கான உ.சு.நி சுற்றுசூழல் அறிக்கையின் படி டெல்லி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய அறிக்கையின்படி டெல்லி சற்று பின்னால் இருந்தாலும் 11 வது இடத்தை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 14 மில்லியனுக்கு மேல் மக்கள் வசிக்கும் மாநகரங்களில் டெல்லி தான் மிகவும் மோசமாக மாசடைந்து உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
2014 க்கான உ.சு.நி சுற்றுசூழல் அறிக்கையின் படி டெல்லி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய அறிக்கையின்படி டெல்லி சற்று பின்னால் இருந்தாலும் 11 வது இடத்தை உறுதி செய்துள்ளது.
கடந்த முறை ஆய்வின் போது 1600 நகரங்களை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்ட உலக சுகாதார நிறுவனம் தற்போது மேலும் 1400 நகரங்களை எடுத்துக் கொண்டுள்ளது. இருந்த போதிலும் காற்று நுண் துகள் மாசுபாட்டின் அளவில் பெரிய மாறுபாடு ஏதும் இல்லை என்பதையும் காற்று மாசுபாட்டின் அளவு மென்மேலும் அதிகரித்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கங்கை நதியின் சீர்கேட்டிற்கு அந்நதியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளும், பார்ப்பன இந்து மத சடங்கு கழிவுகளும் தான் என்ற உண்மையை மறைப்பதற்கு எச்சில் துப்புபவருக்கு அபராதம் என்று அரசு மடை மாற்றுகிறது.
குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வாழும் நகரங்களில் கிட்டத்தட்ட 98 விழுக்காட்டு நகரங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் காற்றின் தரத்தை பின்பற்றவில்லை என்றும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தின் தர நிர்ணயத்தை பின்பற்றாத பணக்கார நாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது. சுரண்டும் நாடுகளையும் சுரண்டப்படும் நாடுகளையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவதில் இருக்கும் முரண்பாடுகள் எவை?
உலகமயமாக்கலுக்கு முன்னர் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு சந்தைக்காக உலகம் முழுதும் சுற்றிய அந்த பணக்கார நாடுகள் தற்போது அந்த உற்பத்தியை குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும்ஏழை நாடுகளுக்கு மாற்றி விட்டன.
ஏழை நாடுகளின் இறையான்மையை தமது தேசங்கடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கபளீகரம் செய்து அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன.
ஏழை நாடுகளின் இறையாண்மையை தமது புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கபளீகரம் செய்து அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இது ஒருபுறம் ஏழை நாடுகளின் உழைப்புச் சக்தியை வீணடிப்பதுடன் இயற்கை வளங்களையும் நாசம் செய்கிறது. பாக்சைடுக்காக தண்டகாரண்யா காடுகள், தாது மணலுக்காக கன்னியகுமாரி கடற்கரை, இரும்பு தாதுக்காக கர்நாடகா என அனைத்து இடங்களில் சுற்றுசூழல் நாசம் செய்யப்படுகின்றது.
இதனால் பணக்கார நாடுகளில் சுற்றுசூழல் மாசுபாடு இல்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நுகர்வின் கழிவுகள் அந்நாடுகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டு தான் 2015 ல் அம்பலத்தில் ஏறிய வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் மாசு சோதனை மோசடி.
தமது அடிப்படைத் தேவைகளான உண்ணும் உணவு, உடுத்தும் ஆடை உள்ளிட்ட பெரும்பான்மையானவற்றை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தருவித்து கொள்வதால் நுகர்வின் அடிப்படையிலான சுற்றுசூழல் மாசுபாட்டில் பணக்கார நாடுகள் தான் முன்னணியில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக தனி நபர் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் மேற்கத்திய நாடுகளே முன்னணியில் உள்ளன.
நுகர்வையும் சுற்றுசூழல் மாசுபாட்டையும் பிரிக்க இயலாது. அதனால் நுகர்ச்சியின் சங்கிலியையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். தனி நபர் நுகர்வையே முதன்மையான கொண்டு முதலாளித்துவம் இயங்குகிறது. ஒரு விளம்பர காதிதத்திற்காக காட்டையே அழிப்பதும் ஒருவர் ஒரு முறை உடுத்தி விட்டு எறியும் “யூஸ் அண்ட் த்ரோ” துணிக்காக டாக்காவில் ஓராயிரம் ஆடைத் தொழிலாளர்கள் பலியானதும் தான் முதலாளித்துவத்தின் பிரணவ மந்திரமாகும்.
தனி நபர் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் மேற்கத்திய நாடுகளே முன்னணியில் உள்ளன
ஏகாதிபத்தியங்களின் உலக சந்தைக்கான உற்பத்தி பின்னிலமாக பரிணாமம் எடுத்திருக்கும் இந்திய பொருளாதாரம், இந்த சுற்றுசூழல் மாசுபாட்டிற்க்கான தரப்பட்டியலில் பெற்றிருக்கும் இடம் தான் அதற்காக பெற்றிருக்கும் வெகுமதி. சுற்றுசூழலில் இந்த நிலையானது இந்தியச் சமூக சூழலின் வெளிப்பாடாகும். பெரும்பாலான உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் இந்தியா அதன் நுகர்ச்சியிலோ ஆப்ரிக்கா ஏழை நாடுகளையும் விட பின்தங்கியே உள்ளது. அதாவது உற்பத்தி செய்த உணவுப் பொருட்களில் பெரும்பான்மையானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவு உற்பத்தியில் ஈடுபடும் ஏழை எளிய இந்திய மக்கள் தரத்திலும் அளவிலும் குறைவான உணவுப்பொருட்களையே நுகர்கின்றனர். இந்திய மக்களின் சமூகவாழ்க்கை முறையில் இருக்கும் இந்த முரண்பாடு அவர்களின் ஆயுட்கால சராசரியையும் அறிவு வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்தியக் குழந்தைகளில் 90 விழுக்காட்டினர் போதிய புரதத்தை தமது தினசரி உணவில் எடுத்து கொள்வதில்லை. வளரும் பருவத்தில் அறிவு வளர்ச்சியோடு ஆற்றலிலும் மேலை நாடுகளை விட நமது குழந்தைகள் குன்றி இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.
காற்று மாசுபாடு என்ற ஒற்றை விசயத்தில் மறைபொருளாக பல்வேறு விசயங்கள் மறைந்துள்ளன. உலக பணக்கார வர்க்கத்தின் நுகர்வு சந்தைக்காக இந்திய மக்களின் இயற்கை வளங்களையும், உழைப்பு சக்தியையும் வீணடிக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகள் அதற்கு வெகுமதியாக பெருமளவு கழிவுத் தொகையையும், பிரதமர் பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும், அமெரிக்கா செல்லும் நல்வாய்ப்பையும்(!) பெற்றுக் கொள்கின்றனர்.
யோகாவை கண்டு பிடித்து உலகமெங்கம் பரப்பி வரும் தேசத்தின் யோக்கியதை இதுதான். இன்னும் காலரா, மலேரியா, டெங்கு, அம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்களின் உலகளாவிய புள்ளிவிவரங்களிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆனால் ஸ்வச்ச பாரத், யோகா ஆரோக்கியம், அதற்கு விளம்பர திருவிழா என்று இந்த எழவுகளுக்கு மட்டும் குறைவில்லை.
10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ பாலியல் வன்முறை சம்பவத்தில் அ.தி.மு.க ரவுடிகளுக்கு துணை போகும் போலிசு – அதிகார வர்க்கம்
தொடரும் துயரம்
கடந்த மே மாதம் 5-ம் தேதி வாக்கில் கடலூர் மாவட்டம் தையல்குணாம்பட்டினம் கிராமத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ அ.தி.மு.க குண்டர்களால் பாலியல் சித்தரவதை செய்யப்பட்டதையும் இது தொடர்பாக வழக்கு தொடுத்த காரணத்திற்காக அச்சிறுமியின் வீட்டை கொளுத்தி தீக்கிரையாக்கியதையும் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். வினவில் வெளியான இந்தச் செய்தியை பல வாசகர்களும் பேஸ்புக், வாட்சப் வாயிலாக பரப்புரை செய்திருந்தனர்.
அதேவேளையில் இன்னொரு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டபோதும், வீடு எரிக்கப்பட்ட போதும், உள்ளூர் ஊடகங்கள் அனைவருக்கும் தகவல்கள் சொன்னோம். குறிப்பாக புதிய தலைமுறை, சன் டிவி, மெகா டிவி, பாலிமர் டிவி மற்றும் தினத்தந்தி, தினகரன், தமிழ், இந்து உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் சொன்னோம். ஒவ்வொருவருக்கும் 4 முறைக்கு மேல் போன் செய்தோம், ஒருவரும் வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னபதில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகியது. “பாலியல் பலாத்காரமே நடக்கலியாமே. போலிசு முதல் தகவல் அறிக்கையும் இல்லையே, இதை எப்படி செய்தியாக போட முடியும்? வீடு எரிக்கப்பட்டது தொடர்பான செய்தி எல்லாம் ஒரு செய்தியா எங்க நிறுவனத்துல ஏத்துக்க மாட்டாங்க” என்றனர்.
பின் நடந்த சம்பவத்தை விளக்கினோம். இதைக்கேட்ட நிருபர்கள் “கண்டிப்பாக வருகிறோம்” என்று சொல்லி விட்டு ஒருவர் கூடவரவில்லை.
அ.தி.மு.க மந்திரி சம்பத்தின் விழாவிற்கும், ஆட்சியர் சுரேஷ்குமாரின் அரசு விழாவிற்கும் சென்று செய்தி கவர் வாங்கும் இந்த ஊடகக் கயவர்களுக்கு தெரியுமா ஏழைகளின் வேதனை? கையில் கேமராவையும், சிந்தனையில் பிழைப்புவாதப் பொறுக்கித் தனத்தையும் ஆயுதமாக வைத்துள்ள இவர்களின் யோக்கியதையை புரிந்து கொண்ட மக்கள் அதிகாரம் சிறுமி மீதான கொடுமையை இவ்வட்டாரம் எங்கும் சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தியது. 3-ம்தேதி நள்ளிரவு குறிஞ்சிபாடியில் சுவரொட்டி ஒட்டிய இளைஞர்களை மிரட்டி, “இந்த போஸ்டர்லாம் ஒட்டக்கூடாது. உள்ள தள்ளிடுவேன்” என்று போஸ்டரை பறித்துச் சென்றனர். பின் மக்கள் அதிகாரம் தோழர்களும், வழக்கறிஞர்களும் போலிஸ் ஸ்டேசன் சென்று நீண்டப் போராட்டத்துக்கு பின்னரே போஸ்டர்களை திருப்பி கொடுத்தனர்.
இதன்பின் பெற்றோர்கள் கடலூர் எஸ்.பி. யைப் பார்த்து மனுகொடுத்தனர். அவர் நெய்வேலி டி.எஸ்.பி.-யைப் பார்க்க சொன்னார். டி.எஸ்.பி.யைப் பார்த்தபோது சிறுமியின் அப்பா ரவி-யைப் பார்த்து, “யோவ் நான்தான் கேஸ் போட்டு இருக்கேன்ல, என்ன நம்பமாட்டியா” என்று கேட்டார்.
“அய்யா அவனுகல இன்னும் போலிசு புடிக்கல, ஊர்லதான் திரியராங்க. எனக்கு பயமா இருக்கு” என்ற போது
“ஆமா இப்ப பயப்புடு புள்ளய ஒழுங்கா வளத்தியா” என்று கேட்டார் டி.எஸ்.பி.
“என் பொண்ணு ஒருதப்பும் பண்ணலை ஐயா? ஊருக்குள்ள என் பெண்ணை விசாரிச்சி பாருங்க, அபாண்டமா பழிபோடாதிங்க” என்றார்.
“நான் விசாரிச்சேன், உன் பொண்ணு வேற பக்கத்து ஊரு பையனோட பேசிக்கிட்டு இருந்து தாமே, அதை கண்டிச்சதலாதான் உன் பொண்ணே வீட்டுக்கு உள்தாப்பா போட்டுகின்னு தூக்கு மாட்டிக்க போச்சாமே” என்றார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்களும், மக்கள் அதிகார தோழர்களும், “நிறுத்துங்க. நீங்க சரியா விசாரிக்கல, யாரோ சொன்னதை வாந்தி எடுக்கிறீங்க. அந்த வீட்டுக்கு உள்தாப்பளே போட முடியாது. உங்க விசாரணையோட போக்கே சரியில்லை” என்று ஆத்திரப்பட்டனர்.
அதன்பின் ஜகா வாங்கிய டி.எஸ்.பி கலைச்செல்வன், குறிஞ்சிப்பாடி டி.எஸ்.பி தவமணிக்கு போன்செய்து, “உடனே மற்ற இருவரையும் கைது செய்யுங்க, உடனே கைது செய்யுங்க விடக் கூடாது” என்று சத்தம் போட்டார். ஆனால் இந்த அயோக்கியர்களுக்கு நாலே நாளில் பெயில் வாங்குவதற்கு போலிசே உதவியது பின்னர் தெரியவந்தது. குற்றவாளிகள் அ.தி.மு.க குற்றவாளிகள். போலிசு துறை அம்மா கையில் உள்ளது. கலெக்டர் ஒரு அ.தி.மு.க மாவட்ட செயலாளர், எஸ்.பி 2-வது மாவட்ட செயலாளராக பணிபுரிகின்றனர். இவர்களை முன்னாள் கள்ளச்சாராய வியாபாரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ வான சொரத்தூர் ராஜேந்திரன் வழி நடத்துகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவி இன்றுவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்முறை வெறியாட்டம் போட்ட அ.தி.மு.க வெறிநாய்கள் (மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து) திமிரோடு திரியும் போது மாணவியின் குடும்பமோ துயரத்திலும், அச்சத்திலும் உள்ளது. பயப்படாதிர்கள்! இது அம்மா ஆட்சி, இது ரவுடிகள் ஆட்சி, இது போலிசு ஆட்சி. இன்னும் எவ்வளவோ இருக்கு
இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் செய்தி அறிந்த பலரும் மதுரை, காட்டுமன்னார்கோவில், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சலவைத்தொழிலாளி சமூகத்தைச்சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார்கள். நீண்ட உறக்கத்திற்குபின் வந்தது, உள்ளளூர் மாதர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், சிபிஎம் கட்சியும்.
“எஸ்.பி, கலெக்டரை பார்க்கணும் நேரில் வாங்க” என்று போன் மூலம் சிறுமியின் அப்பா ரவியை அழைத்தார் மாதர் சங்க பொறுப்பாளர் மேரி. “ஏற்கனவே எஸ்.பி ஆபிஸில் மனு கொடுத்துள்ளேன். ஒன்னும் வேலை நடக்கல தினமும் யாராவது வந்து கூப்பிட்டுக் கிட்டு இருக்காங்க நான் தாசில்தாரை பார்க்க போய்க்கொண்டு இருக்கிறேன். எதுவா இருந்தாலும் நீங்க பார்த்து செய்யுங்க” என்று கிளம்பி விட்டார்.
ஒரு சாமானிய மனிதனான ரவியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை எதிர்கொள்ள பத்திரிக்கைகள், போலிசு, அரசு அதிகாரிகள், கட்சிகளின் உதவி எந்த இடத்திலும் வரவில்லை. இந்த மொத்த அமைப்பும், இச்சம்பவத்தில் ரவியின் குடும்பத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளன. ஒருபானைக்கு, ஒரு சோறு பதம் என்பது போல மொத்த சமூக அரசமைப்புமே ஒரு சாதாராண மனிதனின் பிரச்சனையை தீர்ப்பதற்கு வக்கில்லாமல் செத்து போய்விட்டது. சீக்கு பிடித்து நாறும் இந்த அரசமைப்பை சவகுழிக்குள் புதைப்பதை தவிர நம்மை பாதுகாத்து கொள்ள வேறுவழியில்லை.
நண்பர்களே
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துடன் மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 16-ம் தேதி அன்று தையல்குணாம்பட்டினம் அருகில் உள்ள குள்ளஞ்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு தரவில்லை. பின் குறிஞ்சிப்பாடியில் முயற்சித்து அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஆர்ப்பாட்ட தேதியன்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் 50-க்கு மேற்பட்ட போலிசை குவித்து மிரட்டியது. எஸ்.பியைப் பார்த்துப்பேசியும், பலனில்லை. நீதிமன்ற அனுமதிக்கான வேலையில் ஈடுபட்டுள்ளோம்.
புதுச்சேரி, ஜிப்மரில் இருக்கும் சிறுமி ஜெயஸ்ரீ-யின் குடும்பம் ஒரு சிறிய கூலித்தொழிலாளி குடும்பம். இதுநாள் வரையில் கடன் வாங்கியும், உறவினர்கள் உதவியாலும் செலவுகளைப் பார்த்து வந்தார். தற்போது கையில் இருந்த பணம் தீர்ந்து போயிவிட்டது. மருந்துக்கும், உணவுக்கும் போக்குவரத்துக்கும் சிரமமாக உள்ளது. எனவே நிதி உதவி தேவையாக உள்ளது. ஆதரவு தாருங்கள், கீழே ஜெயஸ்ரீயின் தந்தை வங்கிக் கணக்கு தரப்பட்டுள்ளது.
K.Ravi
Account No:002101000084468
Indian Overseas Bank,
OT, Cuddalore.
Cell:7373112694.
தகவலுக்கு: மக்கள் அதிகாரம், கடலூர் தொடர்பு எண்: 8110815963
இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன
பேசிக் இன்ஸ்டிங்ட் (Basic Instinct), சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களைக் கலக்குக் கலக்கிய ஒரு ஹாலிவுட் திரைப்படம். ஆயினும் இதற்குத் திரைக்கதை எழுதிய ஜோ எஸ்தெராஸ் (Joe Eszterhas) இப்படத்தின் தவறான மதிப்பீடுகள் குறித்து தற்போது சுயவிமரிசனம் செய்திருக்கிறார். ஹாலிவுட் என்றாலே ஏகாதிபத்தியச் சீரழிவு என்று மதிப்பிடுவோருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். முற்போக்கு, பிற்போக்கு, கலகம், கேளிக்கை, ஒழுக்கம் எனப் பலவிதப் பரிமாணங்கள் கொண்டதாக ஹாலிவுட்டைப் பார்க்கும் பின் நவீனத்துவவாதிகளுக்கோ இது ஒரு மகிழ்ச்சி. ஒரு வகையில் இது உண்மைதானோ என்று ஐயங்கொள்ளும் வகையில் உள்ளன பின்வரும் செய்திகள்.
மனிதனின் இயல்பான பாலுணர்வை, ஆவேச வெறியாகப் புனையப் பழக்கியது இத்தகைய படங்கள்தானே?
இரகசியமாக இந்தியா வந்து இராஜஸ்தான் கிழத்திடம் யோகா பயின்று சென்ற டைட்டானிக் நாயகி கதே வின்ஸ்லட், சிலுவையைப் புணருவதைப் போல் நடித்து, கத்தோலிக்கத்தின் புனிதத்தைக் கட்டவிழ்த்த மடோனா, நர்த்தகி ஒருத்தியுடன் பரதம் ஆடி மூன்றாம் உலகின் கலைமரபை மேற்குலகம் தெரிந்து கொள்ள வைத்த மைக்கேல் ஜாக்சன், பெளத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஸ்டீவன்செகல், ரிச்சர்டு கிர்ரே, கருப்பு நடிகன் டென்சில் வாஷிங்டனுக்கு ஆஸ்கார் வழங்க வேண்டும் எனக் குரலுயர்த்திய ஜூலியா ராபர்ட்ஸ், ஏசுநாதரின் இறுதி 12 மணிநேரத்தை லத்தீன் மொழியில் படமெடுக்கத் துணிந்த மெல்கிப்சன் என்று ஹாலிவுட்டின் பரிமாணங்கள் பல.
இந்தக் கலக மரபில்தான் ‘பேசிக் இன்ஸ்டிங்ட் உள்ளிட்ட 14 மெகா வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை வடித்த, உலகிலேயே அதிக ஊதியம் பெறும் திரைக்கதைச் சிற்பி ஜோ எஸ்தெராஸும் வருகிறார். தனது வெண்திரை மாந்தர்களைக் கவர்ச்சியான புகையிழுப்பாளர்களாகக் காட்டியதன் மூலம், ஊர் பெயர் அறியாத எண்ணிறந்த மனிதர்கள் புகையினால் கொல்லப்படுவதற்குத் துணை போய்விட்டதாக அவர் மன்னிப்பு கேட்கிறார். இந்த இரத்தக்கறை படிந்த கைகளை வைத்தே தனது வங்கிக் கணக்கின் இருப்பை உயர்த்தியது குறித்து வெட்கப்படுகிறார் அந்த நல்ல மனிதர். மேலும் – “எனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன். புகைப் பழக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தனிப் பட்ட உரிமை என்றே முன்பு நம்பினேன். அதைத் தடை செய்யும் முயற்சிகள், அரசியல் ரீதியில் சரியெனக் கூறுவது தனிநபரின் சுதந்திரத்தை அழிக்கும். இப்படி என்னுடைய கருத்துக்களையும் என் திரைக்கதைகளில் சொல்லியிருக்கிறேன்.”
”பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் புகைபிடிப்பது செக்சுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஷெரோன் ஸ்டோன் (நடிகை) புகைப்பார். இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன. பேசிக் சிகரெட் என்ற புதிய பிராண்டையே அறிமுகப்படுத்தின. என் படம் எவ்வளவு பணத்தை அள்ளியதோ அவ்வளவு பணத்தை அவர்களின் சிகரெட்டும் ஈட்டியது. இப்போது நான் செய்ததவறுக்குப் பரிகாரம் செய்வதாகக் கடவுளிடம் உறுதியளித்திருக்கிறேன். என்னைப் போல் ஏனைய படைப்பாளிகளும் இந்தத் தவறு செய்வதைத் தடுத்து நிறுத்த முயல்கிறேன்.”
எனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன் – ஜோ எஸ்தெராஸ்
”ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவரின் கையிலிருக்கும் சிகரெட் உண்மையில் 12 அல்லது 14 வயதுச் சிறார்களைக் குறி வைக்கும் ஒரு துப்பாக்கிக்கு நிகரானது. இருந்தும் இதை நியாயப்படுத்தும் புத்தார்வச் சுதந்திரம், கலைச்சுதந்திரம் போன்ற சொற்குவியல்களின் புகைமண்டலப் பின்னணியில் தஞ்சம் கொள்கிறோம். ஆனால் இந்த அலங்கார வார்த்தைகள் அத்தனையும் பொய்…” – என்று மனதாரப் பேசுகிறார் இந்தத் திரைக்கதைப் படைப்பாளி. இவருடன் வேறு சில பிரபலங்களும் இந்தப் புகை எதிர்ப்புக் கலகத்தை ஹாலிவுட்டில் எழுப்பி வருகிறார்கள். 1960-இல் வெளிவந்த படங்களைவிட 2000-இல் வெளிவந்த படங்களில் புகையிழுப்புக் காட்சிகள் 50 மடங்கு அதிகரித்திருக்கின்றனவாம். எனவே திரைப்படங்கள் என்பது சிறார்களுக்குச் சிகரெட்டை விளம்பரப்படுத்தும் விசயமாகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார்கள் இந்தப் பிரபலங்கள்.
இன்னொருபுறம் இப்படிச் சினிமாதான் எல்லாரையும் கெடுக்கிறது என்பது கேலிக்கூத்து என்று சில அறிஞர் பெருமக்கள் எதிர்வாதம் வைக்கிறார்கள். ‘புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது’ என்று தெரிந்தே பிடிப்பவர்களுடைய தனிப்பட்ட பொறுப்பு பற்றித்தான் பேசவேண்டும் என்று வாதிடுகிறார்கள். அமெரிக்காவில் இத்தகைய ‘புனிதமான’ கருத்துப் போர்கள் வழக்கமானவை.
துப்பாக்கிக் கலாச்சாரம், போதைப் பொருள் பழக்கம், வன்முறை வீடியோ விளையாட்டுக்கள், பாலுணர்வு வக்கிரங்கள் என்று பல பிரச்சினைகளில் தடை செய்ய வேண்டும் என்றும், கூடாது என்றும் தேசிய அளவிலான விவாதங்கள் அனல் பறக்க நடக்கும்.
இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன
இங்கே பாபர் மசூதிப் பிரச்சினை, கல்வியில் காவிமயம், பசுவதைப் பிரச்சினை, மதமாற்றம் இன்னபிறவற்றில் வாஜ்பாயியை விட்டு ’தேசீய விவாதம்’ செய்யும் இந்துமத வெறியர்கள் இன்னொரு பக்கம் கடப்பாரைச் சேவையில் காரியங்களை முடித்துக் கொள்வார்கள். அதைப் போல அமெரிக்கப் பிரச்சினைகள் குறித்து உரையாடல் நடத்தும் அமெரிக்க அறிவுஜீவிகளை, தனிநபர் உரிமை, சுதந்திரம் என்ற அமெரிக்கச் சட்டத்தின் பிரம்மாஸ்திரத்தை வைத்து எளிதில் வீழ்த்தி விடுவார்கள் அமெரிக்க முதலாளிகள். ஆக பிரச்சினைகளை முடிந்த அளவு பேசிக் கொள்வது மட்டுமே அங்கே ஒரு மரபாகி விட்டது.
அப்படிப் பேசிக் கொள்வதிலாவது ஒரு நேர்மை இருக்கிறதா என்பதே நமது கேள்வி. பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் சிகரெட்டைப் பிரபலமாக்கிச் சிறார்களைக் கெடுத்து விட்டதாக ஜோ எஸ்த்ராஸ் வருத்தத்தில் ஹமாம் சோப்பு அளவுக்காவது நேர்மை இருக்கிறதா?
இந்தப் படத்தின் சர்ச்சையும், பிரபலமும், வருமானமும் அதன் புகையிழுப்புக் காட்சிகளில் இல்லை, பச்சையான படுக்கைக் காட்சிகளில்தான் இருக்கிறது. ஷேரோன் ஸ்டோனும், மைக்கேல் டக்ளசும் ஒருவரையொருவர் கடித்துக் குதறுவது போன்ற காட்சிகளை உருவாக்கிய கைதான் உண்மையில் கழுவாய் தேட வேண்டும். மனிதனின் இயல்பான பாலுணர்வை, ஆவேச வெறியாகப் புனையப் பழக்கியது இத்தகைய படங்கள்தானே?
கடந்த 10 ஆண்டுகளாகப் பெருகி வரும் மாத்ருபூதங்களும், நாராயண ரெட்டிகளும், பாலுணர்வுக் கோளாறுகளைக் கேள்வி பதிலாக்கும் பத்திரிக்கைகளின் குடும்பப் பிரச்சினைப் பகுதிகளும் என்ன செய்கின்றன? ஹாலிவுட் பாணி படுக்கைக் கலையை அல்லது வக்கிரங்களைக் கல்வி என்ற பெயரில் கற்றுக் கொடுக்கின்றன. சிறார்களுக்குப் பிஞ்சிலே பழுக்க வைப்பதையும், இளைஞர்களுக்கு மிகையான கற்பனையையும், தம்பதியினருக்குத் திருப்தியின்மையையும், தோல்வி மனப்பான்மையையும், பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.
அரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை.
ஏற்கெனவே பின்தங்கிய சமூகமான இந்தியாவில் ஆண் – பெண்ணைப் பிரித்து வைத்திருக்கும் மரபில், இயல்பாகவே பாலுணர்வு அறியாமையில் மூழ்கியிருக்கும் மக்களை இவை மேலும் கள்குடித்த குரங்காக்கி விடுகின்றன.
இதனால் அமெரிக்கா பரவாயில்லை என்பதில்லை. அங்கே கூடுதலாகக் குரங்கின் காதில் ஒரு கட்டெறும்பையும் போட்டு விடுகிறார்கள். ஹாலிவுட் உருவாக்கியிருக்கும் செக்ஸ் வெறி அனைவரையும் மாயமானைத் தேடி அலைபவர்களாக மாற்றிவிட்டது. ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக, இயற்கையாகப் பாலுறவுகொள்ளும் யதார்த்தம், அதீதப் புனைவுடன் பயங்கரமாக, கவர்ச்சியாக, இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது.
இப்படி உலகெங்கும் ஹாலிவுட் பாணி செக்ஸ் கல்வி காசு பார்ப்பதோடு, நோயும் பரப்புகிறது. இதெல்லாம் ஹாலிவுட்டின் மனிதநேயப் போராளிகளுக்குத் தெரியாமல் போனது ஏன்? ஏனெனில் புகைப்பழக்கம் நேரடியாக நுரையீரலைப் பாதித்து புற்றுநோயைத் தருகிறது. செக்ஸ் வக்கிரமோ நேரடியாக உடலைப் பாதிப்பதில்லை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி வழங்கும் பெயரில் ரணமாக்குகிறது. இது கூட அமெரிக்க மனிதநேயத்திற்குத் தெரியாமல் போனது ஏன்?
காரணம் – தின்பதற்கும், செரிப்பதற்கும். கழிப்பதற்கும். பார்ப்பதற்கும். இன்னும் அத்தனைக்கும், அதாவது, மாபெரும் நுகர்வு ரசனையை விரித்துக் கொண்டே இருப்பதில்தான் அமெரிக்கா உயிர் வாழ்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் அடுத்த விநாடியே அமெரிக்கா செத்துப் போய்விடும். எனவே அமெரிக்கா உயிர் வாழ்வதற்கான விதியிலிருந்தே அமெரிக்க மனிதநேயம் எழுகிறது.
அதனால்தான் அதிக மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கத்திருந்து மீட்பதற்கு ஒரு புதிய மாத்திரை, இதய நோய் உள்ளவர்களுக்குக் கொழுப்பில்லாத சிப்ஸ், கலோரிகள் அதிகமுள்ள கோக் பானம் குடிப்பதால் வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக டயட் கோக், அப்புறம் பாதுகாப்பான பாலுறவுக்கான ஆணுறை மட்டுமல்ல பெண்ணுறை என்று உடல் நலிவடைந்தோருக்கான அமெரிக்க ‘மனிதநேயக் கண்டுபிடிப்புகள்’ தொடருகின்றன. சிகரெட்டுக்கு மட்டும் அப்படி ஒரு மாற்று வரவில்லை என்பது அதன் தற்போதைய சோகம்.
இத்தகைய பண்பாட்டுப் பிரச்சினைகளில் புகை மீது மட்டும் பகையுடன் சீறும் அத்தகைய ஹாலிவுட் கலைஞர்களும், இந்தக் கட்டுரையில் முதல் பத்தியில் பார்த்த கலகக்காரர்களும் உண்மையில் கலகக்காரர்களல்ல. ஆம். அமெரிக்க அரசும், முதலாளிகளும் ஏதோபோனால் போகட்டுமென்று தள்ளுபடி செய்யும் ஆபத்தில்லாத பிரச்சினைகளில் மட்டுமே அவர்கள் கலக விளையாட்டை ஆடலாம்.
அரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை. ஆனால் ஹாலிவுட் நடிகன் கையிலிருக்கும் சிகரெட் மட்டும் ஒரு சிறுவனைக் குறிவைக்கும் துப்பாக்கி என்பது அயோக்கியத்தனமில்லையா? மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும்? இதுவே இவர்களது ரத்தக்கறை படிந்த கைகள் சொத்து சேர்த்த கதையின் இலட்சணம்.
இதற்கும் மேல் ‘சிகரெட்டைப் புகைப்பது ஒரு தனிமனிதச் சுதந்திரம் என்று தவறாக நினைத்தேன்’ என்று தத்துவம் பேசும் நமது கட்டுரை நாயகருக்கும் எந்தக் காலத்திலும் எந்தச் சுதந்திரமும் இருந்தது கிடையாது. அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவில் எழுதப்படும் திரைக்கதைகள் ஒரு இயக்குநருக்கோ, ஸ்டுடியோ முதலாளிக்கோ, அச்சுக்கோ, எந்த எழவுக்கும் தரப்பட வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது, அக்கதை ”அமெரிக்க நலனுக்கு எதிரானது இல்லை” என்று அமெரிக்க அரச சான்றிதழ் தரவேண்டும். இந்தச் சான்று கிடைக்காதவை குப்பையிலோ, படைப்பாளியின் பாழடைந்த டிரங்குப் பெட்டியிலோ மட்டும் வாழலாம்.
நல்ல வேளை, கோடம்பாக்கத்தில் அனாதையாகச் சுற்றி வரும் திரைக்கதை இளைஞர்கள் பலர் தண்ணியிலிருக்கும் தயாரிப்பாளர்களிடம் தான் வாய்வலிக்கக் கதை சொல்லி அழ வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போல முதலில் ஜெயலலிதாவிடமும், முரளி மனோகர் ஜோஷியிடமும்தான் கதை சொல்ல வேண்டும் என்ற நிலைமை இல்லை! அப்படிப் பார்த்தால், அமெரிக்காவை விட இந்தியா ஜனநாயக நாடாகத் தெரிகிறதே!
28-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்
சென்னையில்
29-06-2016 காலை 11.30 மணி வள்ளுவர்கோட்டம்
மாணவர் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்!
மாணவர்களே அணிதிரண்டு வாரீர்!
அன்பார்ந்த மாணவர்களே,
சமற்கிருத ஆதிக்கம்
இந்த கல்வி ஆண்டு (2016 – 17) முதல் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டிருக்கிறார். கல்வித்துறையில் காட்ஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதையும், இந்துத்துவா கருத்துக்களை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவுத்திட்டம்- 2015 சமஸ்கிருதத்தை தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது.
தேசிய கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட 5 பேர் குழுவில் உள்ள ஜே.எஸ் ராஜ்புத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஆதரவாளர். இக்கல்விக்கொள்கை மூலம் கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு செயல்படுவதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான ‘பாரதிய சிக்சன் மண்டல்’ வழிகாட்டுதலின்படிதான் நடைபெற்று வருகிறது.
சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்தி – இந்து – இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இவர்கள் சொல்லும் இந்த இந்துராஷ்டிரத்தின் நோக்கம் என்ன? இயற்கைவளம், கனிமவளம், மனித வளம் என ஒன்றையும் விடாமல் நாட்டை சூறையாடி வரும் ஏகாதிபத்திய முதலாளிகள், அதானி, அம்பானி, டாடா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலபிரபுத்துவ சக்திகளான ஆளும் வர்க்கங்களுக்கு, அதாவது பெருவாரியான உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் இந்துராஷ்டிரம்.
நாட்டின் கல்வித்துறையை உலகவர்த்தக கழகத்தின் காலடியில் அடகு வைத்துவிட்டது மோடி அரசு. அதன் விளைவாக கல்விக்கான மானியங்களை ஒழிப்பது, கல்வி உதவித்தொகைகளை நிறுத்துவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை இறக்குமதி செய்வது; அரசுப் பள்ளி, கல்லூரிகளையே ஒழித்துவிட்டு ஆன்-லைன் கல்வி; தேர்வு என கல்வியை வியாபாரப் பண்டமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் தாரை வார்க்கப்படுகிறது. பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. மருத்துவம், பொறியியல் என படித்து முடித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள், பன்னாட்டுக் கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து வீதிக்குத் தள்ளியதால் விரக்தியடைந்த இளைஞர்களின் தற்கொலைகள் அச்சத்தை உருவாக்குகின்றன. விவசாயம், தொழில்துறை, சிறு தொழில்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடி வரும் வேலையில், இதை எதிர்த்துப் போராடுவதில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை, மக்களை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அவ்வப்போது சாதி-மத வெறியைத் தூண்டி விடுகின்றன.
அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்ப் எப்படி வெளியில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறியைத் தூண்டி விடுகிறானோ அதைப் போல, மோடியின் பார்ப்பன பாசிச கும்பல் முஸ்லீம்களுக்கு எதிரான இந்துமதவெறியைத் தூண்டி விடுகின்றன. முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல பெருவாரியான உழைக்கும் மக்களுக்கும் எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்-ம், அதன் இந்துத்துவாக் கொள்கையும். இந்த அபாயங்களின் ஒரு பகுதிதான் சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பு. இதை அனுமதிக்கக் கூடாது. 1965 ல் இந்தித் திணிப்பை முறியடித்தவர்கள் நம் மாணவர்கள். மீண்டும் வீறுகொண்டெழுவோம் இன்று சமஸ்கிருத – வேதகலாச்சாரத்தை திணித்து வரும் ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி நெ.41,பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95 போன்: 9445112675