Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 612

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்

1

க்சல்பாரி எழுச்சியின் முப்பதாம் ஆண்டை ஒட்டி 1997-ம் ஆண்டு வெளியான இந்நூலின் இரண்டாம் பதிப்பை கீழைக்காற்று வெளியீட்டகம் கொண்டு வந்திருக்கிறது.

naxalbari-front naxalbari-back

நக்சலைட்டுகள் என்றாலும், நக்சல்பாரிகள் என்றாலும் ஏதோ விரக்தி அடைந்த இளைஞர்கள் செய்யும் கலக நடவடிக்கையாக ஊடகங்களும் அரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதே நேரத்தில் சிபிஎம் சிபிஐ போன்ற போலி கம்யூனிஸ்டுகளோ அவர்களை சிஐஏ ஏஜெண்டுகள் என்றெல்லாம் கூட அவதூறு செய்கிறார்கள்.

உண்மையில், 1967 மார்ச் 18 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிலிகுரி வட்டத்தை சேர்ந்த நக்சல்பாரி கிராம் எப்படி நாடாளுமன்ற போலி ஜனநாயகம் மூலம் குத்தகை விவசாயிகளுக்கு விடிவு இல்லை என்பதைக் காட்ட வட்டார மாநாட்டில் எடுத்த புரட்சிகர முடிவின்படி செயல்படத் துவங்கியது என்பதை இந்நூலின் பக்கங்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஜோதிதார் போன்ற பண்ணையார்கள், தேயிலை தோட்ட முதலாளிகளின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிறது.

நிலப்பிரபுக்களுக்கு துணையாக நிற்கும் போலி கம்யூனிஸ்டு மாநில கூட்டணி அரசை எதிர்த்து அக்கட்சியின் வட்டார விவசாயிகள் மாநாடு நடைபெறும் போதே  ஹரி கிருஷ்ண கோனார் போன்ற கட்சியின் பிற அமைச்சர்கள் கீழிருந்துதான் முன்முயற்சி வர வேண்டும் என ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தனர். கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற வட்டார தலைவர்கள் இந்த போலித்தனத்திற்கு மாறாக உண்மையிலேயே இப்புரட்சியை துவக்கினர்.

அப்பகுதியில் இருந்து 15 ஆயிரம் விவசாயிகள் முழுநேர ஊழியராக மாறி விட்டனர். கொல்கத்தா நகரத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இப்புரட்சி பற்றிப் படர்ந்த்து. பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் வெளியேறினர்.

நக்சல்பாரி புரட்சியில் விவசாயிகளும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாகத்தான் இம்மாநாடு அப்பகுதி மக்களையும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்த புரட்சியாளர்களையும் கிராமங்களை நோக்கி திருப்பியது. மாணவர்கள் ஒரு பையில் வேட்டி சட்டையுடன் நகரங்களில் இருந்து கல்வியை துறந்து கிராமங்களை நோக்கிக் கிளம்பினர். பட்டாக்கள், கடன் பத்திரங்கள் பறிக்கப்பட்டதோடு, பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான தலைகளும் கீழே உருண்டன. அரசின் அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டு மோதல் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.

உடனடியாக இதனை அடக்காவிடில் மாநில ஆட்சி போய்விடும் என்பதால் போலி கம்யூனிஸ்டு அமைச்சர்கள்  தமது பதவியை காப்பாற்றும் பொருட்டு நக்சல்பாரிக்கு விரைந்து மூக்குடைபட்டதையும் புத்தகம் விளக்கிச் செல்கிறது.

மத்திய அரசு அதன் பிறகு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து போன சோவியத் யூனியனுடன் இணைந்து பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. முதலாளிகளுக்கு ஆதரவாக அடிக்கட்டமைப்பை உருவாக்குவதே இந்த பொதுத்துறையின் நோக்கம். இந்நிலையில் தனது ஆட்சிக்கு ஆபத்து என்றவுடன் இந்தியாவுக்கே ஆபத்து என அவசர நிலையை கொண்டு வருகிறார் இந்திரா. அதையும் போலி கம்யூனிஸ்டுகளின் ஒரு பிரிவினர் ஆதரித்தனர்.

60-களின் இடி முழக்கமாக பிறந்த நக்சல்பாரி எழுச்சி சில பின்னடைவுகளை அடைந்திருந்தாலும் இன்றும் இந்தியாவின் விடிவெள்ளியாக மார்க்சிய லெனினிய கட்சியே திகழ முடியும். சிதறுண்ட நக்சல்பாரி குழுக்களில் அடிப்படை நிலைப்பாடுகளில் ஊன்றி நின்று போராடும் கட்சிகளே இன்றும் ஊக்கமாக செயல்படுகின்றன. அரசு அடக்குமுறை காரணமாக முடக்கப்பட்ட நக்சல்பாரியின் குரல் மீண்டும் எழுந்து வரும்.

மேலும் ராஜீவ், அவரது தனியார்மய கொள்கை, பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை எப்படி பிறப்பெடுத்து இன்று மீண்டும் பொதுத்துறை தாரை வார்க்கப்படுகிறது என்பது வரை சொல்கிறது இந்த புத்தகம். இன்றும் எப்படி நிலைமை மாறி விடவில்லை. மாறாக இன்னும் மோசமாகி உள்ளது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுவதோடு, இதற்கு என்ன தீர்வு என்பதை ஆக்கப்பூர்வமாகவும் முன்வைத்துள்ளது, இப்புத்தகம்.

புத்தகத் திருவிழாவில் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று இது.

நக்சல்பாரி

புரட்சியின் இடிமுழக்கம்

வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை : ரூ 20
பக்கங்கள் : 24

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

 

மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறைக்கு பணிவதா?

4

உழைத்து வாழும் நாம், மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறைக்கு பணிவதா?

டந்த 03/01/2015 அன்று மதியம் கீழ்ப்பாக்கம் G3 காவல்நிலைய வாசலில் 30 பேருக்கும் மேலாக மக்கள் திரண்டு, சலசலப்புடன் நின்று கொண்டிருந்தனர். கோபத்துடன் இருந்த அந்த மக்கள் சாலையை மறித்துவிடுவார்கள் என்ற பயத்தோடு 100 போலீசார் சுற்றி அரண் அமைத்து இருந்தனர்.

விசாரித்த பொழுது, 24 வயது, மெக்கானிக் ராஜ் என்ற சுதர்சனை காவல்துறை மாமூல் கூடுதலாக கேட்டு மிரட்டியதாலும், பொய் கேசுகள் தொடர்ச்சியாக போட்டும், அடி, உதை என சித்ரவதை செய்ததால் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார்கள்.

சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்சுதர்சனின் தாயார் கோவிந்தம்மாள் கோபத்துடனும், அழுகையுடனும்

“நானும் என் மகன் சுதர்சனும் லேடர்ஸ் கேட் (Laders Gate), பிளவர்ஸ் சாலை, புரசைவாக்கம் பக்கத்தில் குடியிருக்கோம். நாலுவருசமா என் வீட்டுக்காரர் சுரேஷ், திவான் ராமா ரோட்டுல பைக் மெக்கானிக் கடை வைச்சிருந்தாரு! எங்க பொழப்பே அத வைச்சு தான் நடந்துச்சு! 3 வருடத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரரு செத்துட்டாரு!

அவருக்கு பின்னால், என் மகனுக்கு வேலை தெரிஞ்சதால, அவன் செய்துவந்தான். G3 போலீசு ஸ்டேசனிலிருந்து போலீஸ்காரனுங்க ஓசியில சர்வீஸ் பண்ணிட்டு போவாங்க! அப்பப்ப மாமூல் காசும் கேட்டு மிரட்டி வாங்குவானுங்க! இதுல எஸ்.ஐ. எழிலரசன் என்றவன் ரெம்ப ஓவரா பண்ணுவான்! இவன் 2000, 3000 ரூபாய் பணம் வாங்குறது மட்டுமில்லாம, அசிங்கம் அசிங்கமா திட்டுவான், எதிர்த்து கேட்டா ரோட்டுலேயே அடிப்பான்.

இவனுக்கு காசும் கொடுத்துட்டு, கேசும் வேற கொடுக்கனும்! நீயே சொல்லு! இவனுங்க வண்டியை மட்டுமில்லாமல், இவனுங்க சொந்தக்காரனுங்க வண்டியெல்லாம் ரிப்பேர் பண்ணனுன்பாங்க! சரி போனா போகுதுன்னு பண்ணாக்கூட ஏதாவது பொருள் மாத்துனாக்கூட அதுக்கு காசு தரமாட்டான், எங்க காச போட்டாப்பா பொருள் மாத்தமுடியும்! இதுல ஏதாவது ஒன்ன எதிர்த்து கேட்டா குண்டர் சட்டத்தில போடுவேன்னு மிரட்டுவான்.

போனமாசம் 24ந் தேதி வண்டிய ரிப்பேர் செய்யனும்னு வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போனான். என்மவன் ராத்திரி முழுக்க வீடு வந்து சேரல! இன்னான்னு ஸ்டேசன்ல போய் பார்த்த என் மவனை ஜட்டியோட நிக்க வைச்சிருந்தானுங்க! ராத்திரி முழுக்க மிருகத்தனமா அடிச்சிருக்கானுங்க! பிறகு காசைக் கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்!

அதே மாதிரி நேத்து (02/01/2015) சாய்ந்தரம் 5 மணிக்கு அதே எஸ்.ஐ. எழிலரசன் வீட்டுக்கு வந்து வண்டிய ரிப்பேர் பண்ணனும்னு கூட்டிட்டு போனான். ரெம்ப நேரம் வரல்லன்னு ஸ்டேசனுக்கு போய்ப்பார்த்தா, முன்ன அடிச்ச மாதிரியே என் மவன அடிச்சுன்னு இருந்தாங்க! என் மவன் முன்னாலேயே எழிலரசன் என்னை அசிங்கம் அசிங்கமா திட்டினான்! என் மவன் அவமானத்தில குறுகிப்போயிட்டான். ! பிறகு அவனுங்க கிட்ட பேசி, என் மவன வீட்டுக்கு கூட்டியாந்தேன்.

என்மவன் என்கிட்ட “இந்த போலீசுகாரங்க இதே போல அடிக்கடி என்ன கொடுமைப்படுத்துக்கின்னே இருக்கானுங்க! யாரும் இத கேட்கமாட்டேங்கிறீங்க! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைன்னு கோபமாகவும், விரக்தியாகவும் பேசினான். அப்புறம் வீட்டுல ஆள் இல்லாத சமயத்தில தூக்கு போட்டுக்குணாம்பா! இப்படி அநியாயமா என் பையனை கொன்னுப்புட்டானுங்கப்பா! என்னை அனாதையா நிக்கிறேன்! இவங்களை சும்மா விடக்கூடாது!”

என சொல்லிவிட்டு, சத்தமாய் அழத்துவங்கினார்.

எஸ்.ஐ. எழிலரசன் மீது புகார் கொடுக்கப்பட்டதா? என கேட்ட பொழுது, புகாரையே வாங்க மறுத்திருக்கிறார்கள். கமிசனர் அலுவலக முற்றுகைக்கு பிறகு தான் புகாரையே வாங்கியிருக்கிறார்கள்.

சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்
மனித உரிமை பாதுகாப்பு மைய சுவரொட்டி

அன்றிரவே எஸ்.ஐ. எழிலரசனை அம்பலப்படுத்தியும், அவன்மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சுவரொட்டி தயாரித்து பரவலாக ஒட்டப்பட்டது. அன்றிரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் சுவரொட்டி முழக்கங்களை உறவினர்களின் ஒருவரே சத்தமாக படித்துக் காண்பித்தார்.

அவர்களின் கோபத்தை சுவரொட்டிகளின் வார்த்தைகளில் பார்த்ததும், “எங்ககிட்ட கொஞ்சம் கொடுங்க! நாங்க ஒட்டுகிறோம்!” என முன்வந்து வாங்கி ஒட்டவும் செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் “நாளைக்கு பாடியை எடுப்பதற்குள், நம்ம ஏதாவது செய்யணும் சார். நீங்களும் கலந்துக்கங்க!” என வலியுறுத்தினார்கள்.

sudharsan-suicide-police-si-responsible-1இவ்விசயம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கிளை செயலர் மில்ட்டன் காவல்துறை ஆய்வாளரிடம் பேசும் பொழுது, “எழிலரசன் அப்படிப்பட்டவர் இல்லை! இருந்தாலும் விசாரிச்சுத்தான் நடவடிக்கை எடுக்கமுடியும்” என எஸ்.ஐ. எழிலரசனைப் பாதுகாத்து பேசினார்.

sudharsan-suicide-police-si-responsible-3துணை ஆணையரிடம் பேசிய பொழுது, “இப்போதைக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கோம். மத்ததெல்லாம் பின்பு தான்” என தெரிவித்தார்.

அடுத்த நாள் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் சுதர்சனின் உறவினர்கள், சொந்தங்கள், நண்பர்களை ஒன்று திரட்டி, காவல்துறை எஸ்.ஐ. எழிலரசனை பாதுகாக்கிறது என விளக்கி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது!

நீதி வேண்டும்! நீதி வேண்டும்!!
சுதர்சன் சாவுக்கு நீதி வேண்டும்!

மெக்கானிக் தொழிலாளி சுதர்சனை
மாமூல் கேட்டு சித்ரவதை செய்து
தற்கொலைக்கு தூண்டிய உதவிஆய்வாளர் எழிலரசனை
கைதுசெய்! சிறையிலடை!

மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும்
அதிகாரத் திமிரில் ஆட்டம் போடும்
போலீசின் கொட்டத்தை அடக்குவோம்!
மக்கள் நாம் அடக்குவோம்!

சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்சுதர்சன் சாவு கற்றுத்தருவது
இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும்
அடக்குமுறைக்கு எதிராக
ஒன்றிணைவதே! போராடுவதே!

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும்
காவல்துறையே! கிரிமினல் துறையே!
துரோகம் செய்யாதே! துரோகம் செய்யாதே!!
மக்களுக்கு துரோகம் செய்யாதே!

போலீசுக்கு வேண்டப்பட்டவர்கள்
பொய் புகாரை கொடுத்தால் கூட
உடனே எப்.ஐ. ஆர் பதியும் போலீசு
புகார் கொடுத்து ஒருநாளாகியும்
எப்.ஐ.ஆர் இல்லை! நடவடிக்கை இல்லை!

எடுக்கமாட்டோம்! எடுக்கமாட்டோம்!
சுதர்சன் சாவுக்கு காரணமான
உதவி ஆய்வாளர் எழிலரசன் மீது
நடவடிக்கை எடுக்கும் வரை எடுக்கமாட்டோம்!
சுதர்சன் உடலை எடுக்கமாட்டோம்!

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி
மக்களுக்கு எதிராய் வேலை செய்யும்
துறைகள் எதற்கு? ஒழித்துக்கட்டு!

சஸ்பென்ஸ் செய்! சஸ்பென்ஸ் செய்!!
கிரிமினல் போலீசு மாமூல் எழிலரசனை
சஸ்பென்ஸ் செய்!

பதிவு செய்! பதிவு செய்!!
கிரிமினல் வழக்கினை பதிவு செய்!

பாதுகாக்காதே! பாதுகாக்காதே!!
உ.ஆய்வாளர் எழிலரசனை
காவல்துறையே பாதுகாக்காதே!

மக்கள் பிரதான சாலையான அழகப்பா சாலையில் உட்கார்ந்து கோபத்துடனும் முழக்கமிட்டனர். பின்பு ஆய்வாளர் மக்களிடையே நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்தியதில் “என்னை நம்புங்க! நான் கண்டிப்பா உங்களுக்கு செய்வேன். எழிலரசனை கண்டிப்பாக தண்டனைக்குள்ளாக்குவேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என பேசியதில், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டதால், ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது!

sudharsan-suicide-police-si-responsible-4உழைத்து வாழும் மக்களாகிய நாம், மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறையை கண்டு அஞ்சக்கூடாது! நாம் அமைப்பாக ஒன்றிணைந்து தொடர்ந்து போராடும் பொழுது தான், சுதர்சனின் அநியாய சாவுக்கு நீதி கிடைக்கும்!.

தகவல் :
வழக்குரைஞர் மில்ட்டன்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

தொடர்புக்கு : 9094666320

தொடர்பான பத்திரிக்கை செய்திகள் :

40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்

12

ங்கஜ், வயது 40, மும்பையைச் சேர்ந்தவர். ஐ.டி துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் அமைப்பது பற்றிய பிரச்சாரத்தின் போது அவரை சந்தித்தோம். முதலில் நம்மிடம் பேச தயங்கியவர் பிறகு தனது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தார்..

jobloss“நான் அமெரிக்காவில் ஹவாய், புளோரிடா, கனடா என வட அமெரிக்கா முழுவதும் 12 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். எச்1பி விசா காலாவதி ஆனதால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பினேன். ஒரு நடுத்தர அளவு கம்பெனியில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன். அதன் பிறகு அதே கட்டிடத்தில் இருந்த சிறு நிறுவனத்திற்கு மாற முனைந்த போது எல்லா ஃபார்மாலிட்டியும் முடிந்த பிறகு எச்.ஆர் ஒரு கலந்துரையாடலின் போது முந்தைய மட்டத்திலேயே இங்கும் பணிபுரிய முடியுமா எனக் கேட்டார்.

இரண்டு மாத கால நோட்டீசு காலத்திற்கு மத்தியில் முந்தைய நிறுவனம் என்னைப் பற்றிய எதிர்மறை தகவல்களை கொடுத்திருக்கிறது என யூகித்தேன். அதற்குள் நான் முந்தைய வேலையையும் ராஜினாமா செய்து விட்டேன். இப்போது ஒன்றரை ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நிறுவனங்கள் தமக்குள் ஒரு தொழில்முறை வலைப்பின்னலைக் கொண்டுள்ளன. தொழிலில் தமக்குள் சில ஒத்துப்போகும் வேலைப்பாணியை பெற்றிருக்கின்றனர். நான் திரும்ப வேலைக்கு முயற்சித்த போது எங்கும் வேலை கிடைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். நவுக்ரி, டைம்ஸ் ஜாப், மான்ஸ்டர், ஷைன் போன்ற இணைய தளங்களில் இருந்து அவ்வப்போது வேலைக்கான அழைப்புகள் வரும். சில சுற்றுக்கள் நேர்முகம் கூட முடிந்து விடும். கடைசியில் வாய்ப்பில்லை என சொல்வார்கள். இதெல்லாம் எனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் சொல்கிறேன்.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை சந்தையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஆனால் நமக்கு மூடப்பட்டு தெரியும் அவை நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் இருப்பதுதான் உண்மை. எனது பதினான்கு ஆண்டு கால தகவல்தொழில்நுட்பத் துறை வேலையில் ஊடாக சொந்த அனுபவத்தில் கற்றறிந்த பாடம் இது. எனது ஆர்.டி சேமிப்பு பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஐ.டி நிறுவனம் நினைத்தால் உங்களது சொந்த ஈமெயிலுக்கு வரும் தகவல்களைக் கூட அட்சரம் பிசகாமல் கண்காணிக்க முடியும். நவுக்ரி, மான்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து வரும் இணைய கடிதங்களையும் கண்காணிக்க முடியும். இதுவும் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கூறுகிறேன்.

ஐடி துறையில் இருப்பதாலேயே நாம் ஒயிட் காலர் கூலிகள் என்ற உண்மை இல்லாமல் போய் விடாது. ஐ.டி நிறுவனங்கள் மிகவும் இளமைத் துடிப்பான ஊழியர்களை எதிர்பார்க்கிறது. என்னைப் போல நாற்பதுகளை தொட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் துறையில் தொடர்வது மிகவும் கடினமானது. வேலைக்கான சந்தை நாற்பதைத் தொடுபவர்களுக்கு பாதகமாக உள்ளது. இங்கே மற்ற தொழிலாளிக்கும் ஐடி வெள்ளைக் காலர் தொழிலாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கூடுதலாக, ஐடி துறையில் எல்லாமே அரசியல்தான். சொல்லப் போனால் 80 சதவீதம் அரசியல்தான்.

நீங்க கணினி அறிவியலில் முதுகலையோ அல்லது பி.எச் டியே படித்திருந்தாலும் இதுதான் நிலைமை. இல்லையெனில் நீங்கள் நிர்வாகத் தரப்பு ஊழியராக தாவிச் சென்றிருந்தால் தப்பிக்க முடியும். இன்னமும் கோடிங் அடித்துக் கொண்டிருந்தால் தப்பிக்க முடியாது. இப்போது வரும் இளைஞர்களுக்கு இப்படி தப்பிக்கத்தான் நான் வழி சொல்லுவேன். அப்படிச் செல்பவர்கள் தப்பித்து பிழைத்துக் கொள்ள முடியும்.

முப்பதுகளில் இருப்பவர்கள் நாற்பதுகளை விட நன்றாக கோடு எழுதுவார்கள். வேகமாக எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்வார்கள் என்பது தான் நிர்வாகத் தரப்பின் நியாயங்கள். அவர்கள் லைஃபை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

தொழில்முறை வலைப்பின்னலுடன் செயல்படும் இந்நிறுவனங்களைப் பற்றி போலீஸ் எஸ்.பி, சிபிஐ என்று புகார் கொடுத்தும் எந்த பலனுமில்லை. நாஸ்காம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். பிக்கி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஒரு திறமையான ஊழியரை நிறுவனமும், வேலை தேடுவதற்காக இருக்கும் நிறுவனமும் நினைத்தால் வெளியேற விடாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எனது சொந்த அனுபவமே சான்று.

நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது. எல்லா இடத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அரசாங்கம் சட்டங்களை வலுவாக்கினால் இதனை தடுக்க முடியும். முக்கியமாக வயதையோ, திருமணமானவரா என்ற விபரத்தையோ நிறுவனங்கள் கேட்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.”

____________________

ஆனால், மோடி அரசு இருக்கும் சட்டங்களை நீர்க்கச் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து தற்போது இறந்து விட்டார். எல்லா படிப்பிலும் டிஸ்டிங்சனில் பாஸான் இவர் எம்.எஸ் படிப்பிலும் அமெரிக்காவில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்வானவர் என்பது முக்கியமானது. இப்படி திறமைசாலிகளான மாணவர்களைப் பொறுக்கியெடுத்து அவர்களது உழைப்பை, இளமையை உறிஞ்சி கரும்புச் சக்கையைப் போல வெளியே தள்ளுகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

அவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு 9 வயது இருக்கும். வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவனிடம் ‘உங்க அப்பா என்ன செய்கிறார்?’ என்று கேட்ட போது “அவர் எப்பவும் சோகமாக இருக்கிறார். வேலை தேடுகிறார்” என்று சொன்னான். வீடு எளிமையாக இருந்தது. புத்தகங்கள் தான் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

மனைவி அருகில் உள்ள ஒரு பள்ளிக்கு இந்தி ஆசிரியையாக சென்று வருகிறார். அவரது குழந்தைகள் அங்குதான் படிக்கின்றனர்.

சக்கையாக பிழியப்பட்டு தூக்கியெறியப்பட்டதை பிறரிடம் இவர் பகிர்ந்து கொண்டால் யாருமே இதனைக் கண்டு கொள்ளாமல் அதனை ஒரு வயதானவனின் புலம்பலாக கடந்து செல்வதை வேதனையோடு குறிப்பிட்டார். ‘’இன்று எனக்கு, நாளை உங்களுக்கு’’ என அத்தகைய பிழியப்படும் இளைஞர்களை அவர் தொடர்ந்து எச்சரித்தபடியே இருப்பதாகவும் குறிப்பிட்டார். “After 40 you are nothing” அவர்களிடம் கூறுவாராம். பெரும்பாலும் முப்பது வயதுகளில் இருக்கும் சீனியர் அனலிஸ்ட், சீனியர் புரோகிராமர்களிடம் சொல்வாராம்.

யூனியன் ஆரம்பித்தால் வேலை போய் விடுமா, வேறு வேலை கிடைக்காதா என்ற கேள்விகள் அவரிடமும் வந்தன என்பதுதான் ஆச்சரியம். தனியாக கார்ப்பரேட் விதிகளின்படி உழைத்தும் அவரது வேலை போனதோடு, வேறு வேலை கிடைப்பதும் தடுக்கப்பட்டு வருகிறது என்பதை விளக்கியவுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

கண்ணீரை மீறி மன அழுத்தம் அவரிடம் இருப்பதை அவரது மூத்த மகனால் புரிந்துகொள்ள முடிகிறது என்பதும், அது வயதுக்கு மீறிய அனுபவமாக அவனுக்கு இருப்பதையும் பார்த்தால் எதார்த்தம் சுடுகிறது.

——————–

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff

Phone : 90031 98576

TCS Siruseri Gate Meeting – Telugu

TCS Siruseri Gate Meeting – Comrade Mukundan – Malayalam

TCS Siruseri Gate Meeting – Advocate Indira

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1

puthiya-jananayagam-january-2015

புதிய ஜனநாயகம் ஜனவரி மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. கழுத்தை இறுக்குது இலாபவெறி! தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு!!

2. பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டம்!

3. ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்
புஸ்வாணமாகிப் போனது மோடி அலை! நிரந்தரமானது சாதி-மத பிளவு நிலை!!

4. ஆற்று மணல் கொள்ளை : தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம்!
மணற்கொள்ளையை, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை எனப் புரிந்து கொள்வதே சரியானது.

5. ஆற்று மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா?
ஆற்று மணல் கொள்ளை நதிகளையும் அதில் வாழும் தாவரங்களையும் உயிரினங்களையும் அழிப்பதோடு, சமூகப் பேரழிவுகளையும் உருவாக்கும் என்கிறார் பேராசிரியர் அருணாசலம்.

6. கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு! ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!

7. மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு! அதிகாரத்தைக் கையிலெடு!!
பொருளாதார வளர்ச்சிக்காக ஆற்று மணலை அள்ளுவது என்ற அரசின் கொள்கைதான் கொள்ளையாகப் பரிணமிக்கிறது. எனவே, மனு கொடுப்பதன் மூலம் இதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

8. தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசனைப் பாதுகாப்பது யார்?

9. மறுகாலனியத் தாக்குதலும் இந்துவெறியர்களின் கொட்டங்களும் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

10. ஜெயா பிணை மனு : உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் அதீத அக்கறை – அவசரம்
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

11. முல்லைப் பெரியாறு : அணையைப் பாதுகாக்க அணிதிரள்வோம்!

12. குற்றவாளி ஆளும் தமிழகம்! நீதிமன்றத்தின் முகத்தில் மலம்!!
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது

13. சி.ஐ.ஏ.: பயங்கரவாதத்தின் பிதாமகன்!

14. நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!
மக்கள்  நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.

15. சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று

புதிய ஜனநாயகம் ஜனவரி மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3.2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்

0

குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது பற்றி பல மூட நம்பிக்கைகள் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளன. ‘மழலையர் வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியில் பயின்றால்தான், சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியும், அறிவு வளரும், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகள் திறக்கும்’ என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். உழைக்கும் மக்கள் கூட தமது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு தமது குழந்தைகளை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

kalvi-postஇன்னொரு புறம், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, நூலகங்கள், ஆய்வகங்கள் இல்லை, முக்கியமாக போதுமான ஆசிரியர்களை நியமிக்காமை என இத்தகைய புறக்கணிப்பினால் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தகுதியற்றவையாக அரசு பள்ளிகளை மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், ஆசிரியர்களின் அலட்சியமும், பொறுப்பின்மையும் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில், பல பத்தாண்டுகள் கல்வித்துறையில் பணியாற்றிய மூத்த கல்வியாளரான எஸ்.எஸ். ராஜகோபாலனின் அனுபவங்களும், கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

2004-ம் ஆண்டு நடந்த குடந்தை தீவிபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் வினவு தளத்தில் வெளியான ராஜகோபாலனின் நேர்முகத்தை தொகுத்து கீழைக்காற்று வெளியீட்டகம் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியில் தனியார் மயம் உருவான வரலாற்றில் ஆரம்பித்து, குழந்தைகளின் இயல்பான முழுமையான வளர்ச்சிக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை பல நாட்டு உதாரணங்களுடன் விளக்குகிறது இந்த புத்தகம்.

தமிழ் வழியில் படித்தால் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பது தவறு என்பதை மிக எளிமையாக விளக்குகிறார் ராஜகோபாலன். பாடத்திட்டம் வகுக்கும் குழு உறுப்பினராக அவர் மாணவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள், கோவையில் உள்ள சர்வஜன உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக அவர் இருந்த போது மாணவர்கள் தம்மை முறைப்படுத்திக் கொள்ள முன்முயற்சியுடன் செயல்பட்டது ஆகியவற்றை சொல்கிறார்.

இறுதியாக, கல்விக் கொள்கையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆரம்பித்த மாற்றங்களையும், பா.ஜ.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்துத்துவத்தை கல்வியில் புகுத்துவதைப் பற்றியும் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி கற்பிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

சமூகத்தின் மீதும், நமது சநததியினர் மீதும், எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய நூல், இது. வினவு தளத்தில் பதிவுகளை ஏற்கனவே படித்தவர்களும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாங்கிக் கொடுத்து குழந்தைகளின் கல்வி குறித்த சரியான கண்ணோட்டத்தை சமூகத்தில் பரப்பும் கடமையை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

kalvi-front kalvi-back

வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி

எஸ்.எஸ் ராஜகோபாலன்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 25
பக்கங்கள் : 32

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு

0

மனித உரிமைப்பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக்கிளை.

150-ஈ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20. – 9443471003.

மாவட்டச் செயலாளர் மாவட்ட துணைச்செயலாளர் மாவட்ட துணைத்தலைவர்
ம.லயனல் அந்தோணிராஜ் சே.வாஞ்சிநாதன். பா.நடராஜன்

****************************************************************************************************

விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலம்பட்டி.

தோழர் குருசாமி – வட்டாரச்செயலாளர், உசிலை வட்டம். (9894312290)

****************************************************************************************************

கிரானைட் கொள்ளை
கிரானைட் கொள்ளை பேரழிவை ஆய்வு செய்கிறார் சகாயம்

பெறுநர்

உயர்திரு. சகாயம் அய்.ஏ.எஸ் அவர்கள்
கிரானைட் குவாரி முறைகேடுகளுக்கான உயர்நீதிமன்ற ஆணையர்,
மதுரை.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக 90 குற்ற வழக்குகள் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மீது பதியப்பட்டு பி.ஆர்.பழனிச்சாமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தமிழக அரசின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மேற்படி நடவடிக்கைகள் சரியாக உள்ளதா? என்பதை விசாரிக்க தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய-ஜனநாயகம்
கிரானைட் கொள்ளையர்கள் குறித்த புதிய-ஜனநாயகம் அட்டைப்படம்

ஆனால் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில்

(அ) மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் நடந்த ஊழலின் மொத்தத் தொகை எவ்வளவு? அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அரசே கிரானைட் தொழிலை நடத்தியிருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்? ஊழல் பணத்தை பறிமுதல் செய்து, கிரானைட் அதிபர்களின் சொத்துக்களை முடக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பவை பற்றி உரிய விசாரணை நடத்தப்படவில்லை.

(ஆ) கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், 2012-ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி தாக்கல் செய்த அறிக்கையில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மாநிலம் முழுவதும் 20,000 ஏக்கருக்கும் மேலான பல நூறுகோடி பெறுமானமுள்ள நிலங்கள் வைத்திருப்பதாகவும், அந்நிலங்கள் வாங்கத் தேவையான பணம் எப்படி வந்தது? என விசாரித்து வருவதாகவும், மேலும் மத்திய கலால், சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தூத்துக்குடி, சென்னை துறைமுகக் கழகங்கள், கோல்டன், விமல், பிஎஸ்டிஎஸ் கப்பல் கம்பெனிகள் ஆகியோரிடமும் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை மேற்படி விசாரணை முழுமையடையவில்லை.

(இ) கடந்த 20.09.2012-ல் DIRECTORATE OF VIGILANCE AND ANTI CORRUPTION A.D.S.P. மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாய் இருந்த அய்.ஏ.எஸ் அதிகாரிகள் மதிவாணன், காமராஜ், கனிமவளத்துறை துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எஸ்.பி.யும் கடந்த 15 ஆண்டுகளாக கிரானைட் குவாரிகள் தொடர்பான துறைகள் சார்ந்து பணிபுரிந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோத கிரானைட் தொழிலுக்கு உடந்தையாய் இருந்த அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

(ஈ) கடந்த 29.08.2012-ல் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மேலூர் மற்றும் மதுரை வடக்குத் தாலுகா, பெரியாறு பாசனக் கால்வாய்ப் பகுதியில் 36 குளம், கண்மாய்கள், கால்வாய்கள் கிரானைட் முதலாளிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயம் முற்றிலும் இப்பகுதிகளில் அழிந்துள்ளது. விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்ய கிரானைட் குவாரிகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

(உ) மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை கிரானைட் அதிபர்கள் தாக்கல் செய்து குற்ற மற்றும் இழப்பீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்துகிறார்கள். தமிழக அரசும், அதிகாரிகளில் பலரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரும், மேலூர் குற்றவியல் நடுவரும் கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். குறிப்பாக மற்ற மாவட்டங்கள் எதுவென்றே குறிப்பிடாமல் பி.ஆர்.பி நிறுவனம் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிரானைட் அதிபர்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முக்கிய சாட்சிகளாக குற்றவாளிகளுக்கு வேண்டியவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரே குற்ற வழக்குகளில் புகார்தாரராகவும், இழப்பீடு வழக்கில் நீதிபதி போலவும் செயல்படுவதாக கிரானைட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றன. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மதுரை வந்த நாட்களில் கூட கிரானைட் குவாரி வழக்குகளில் ஆஜராகவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உத்தரவின்படி நடக்கும் விசாரணை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மேலும் சட்டத்தின் சந்து, பொந்துகளில் கிரானைட் குவாரி முதலாளிகள் புகுந்து தப்பிவிடும் வாய்ப்புள்ளது.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

ஆகவே கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் கிரானைட் குவாரி தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் (SPECIAL BENCH) மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும். குற்றவியல் வழக்குகளுக்கு பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கு போல் தனி நீதிமன்றம் அமைத்து உயர் நீதிமன்ற கண்காணிப்பில் தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்தப்படவேண்டும்.

(ஊ) கிரானைட் குவாரி வழக்குகளை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள், வழக்கை நடத்தி வரும் அரசு வழக்கறிஞர்கள் கிரானைட் குவாரி மாபியாக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சரியான விசாரணைக்கு நேர்மையான அதிகாரிகள் குழுவும், சரியான சட்ட நடவடிக்கைகளுக்கு நேர்மையான சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர் குழுவும் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட வேண்டும்.

கிரானைட் கொள்ளை ஆவணப் படம் 1
கிரானைட் கொள்ளை பற்றிய ஆவணப்பட வெளியீடு (கோப்புப் படம்)

(எ) கடந்த 22-12-2014 அன்று பல்லாயிரம் கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம், மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வுத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் பி.ஆர்.பி நிறுவனத்தினர் தெற்குத்தெரு ஆலையை இயக்கி வருகின்றனர். இதற்கு காவல்துறையும், அரசும் உடந்தையாக உள்ளனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆசியுடனே மீண்டும் பி.ஆர்.பி நிறுவனம் இயங்கி வருவதாகத் தெரிகிறது. அரசின் இவ்வாறான இரட்டை நிலைப்பாடுகள் குறித்து சகாயம் அவர்கள் விசாரணை நடத்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட எமது கோரிக்கைகளை உயர்நீதிமன்ற ஆணையர் சகாயம் அவர்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். இத்துடன் கிரானைட் கொள்ளை தொடர்பான எமது ஆவணப் பட டி.வி.டி. மற்றும் உயர்நீதிமன்றத்தில் அரசால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் இதர ஆவணங்களை இணைத்துள்ளோம்.

நாள்: 10.01.2015
இடம்: மதுரை

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி

உதயமானது ஐ.டி துறை யூனியன்

22

250 பேர் வந்திருந்தனர்! வந்திருந்தவர்களில் கணிசமானவர்கள் ஐ.டி. ஊழியர்கள்.

‘தொழிற்சங்கம் என்பது அழுக்கில் வேலை செய்யும் ஆலைத் தொழிலாளர்களுக்கானது; உரிமைகளைக் கோரி போராடுவதும், அடக்குமுறைக்கு எதிராக ஆர்த்தெழுவதும் படிக்காதவர்கள் செய்யும் வேலை – இப்படி சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். பலர் சமூகத்தின் அங்கமாக தம்மை உணர்ந்து பழக்கப்படாதவர்கள். இப்போது இரண்டாம் முறையாகப் பிறந்துள்ளார்கள், சமூக மனிதர்களாக!!

புஜதொமு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கூட்டம்
சமூக மனிதர்களாக!

டி.சி.எஸ் வேலை நீக்க நடவடிக்கை செய்தியை தமிழ் இணைய உலகில் முதன் முதலாக நாங்கள் வெளிக் கொண்டு வந்து தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம். இதன் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கான அறிவிப்பை 7-ம் தேதி தான் வெளியிட்டோம். ஐ.டி துறை ஊழியர்களின் பணி பாதுகாப்பையும், பணியிட உரிமைகளையும் உறுதி செய்ய தொழிற்சங்கமே தீர்வு என்று வினவு மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில்  பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தோம்.  மூன்றே நாட்களில், பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள்தான்.

இதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள படூரில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை 10-ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.

டி.சி.எஸ் லேஆஃப் - புஜதொமு கூட்டம்
எச்.ஆர் உளவாளிகளை எச்சரிக்கும் வாயில் பேனர்

செங்கொடியைக் கண்டும் கேட்டுமிராத ஐ.டி காரிடரில் வந்திறங்கினர் பு.ஜ.தொ.முவின் தொழிலாளர்கள். பிரச்சாரம் சோழிங்கநல்லூரில் துவங்கியது. இதற்காக கும்மிடிப்பூண்டி, பட்டாபிராம் பகுதிகளில் வேலை செய்யும் பு.ஜ.தொ.மு தொழிலாளர்கள் தங்களது இரவு ஷிப்டுகளுக்குப் பிறகு ரயில் நிலையத்திலேயே ஓரிரு மணிநேரம் படுத்து தூங்கி விட்டு, சோழிங்க நல்லூர் வந்தார்கள். அதிகாலையில் அரைத்தூக்கத்திலாழ்ந்த படி பேருந்தில் சென்று கொண்டிருந்த ஐ.டி ஊழியர்களை, தட்டி எழுப்பினார்கள். போலீசின் தொந்திரவுகள், அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை விநியோகித்து விட்டு, அங்கிருந்த படியே அடுத்த ஷிப்டிற்கு சென்றார்கள்.

ஐ.டி ஊழியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம், அவர்கள் செல்லும் பேருந்துகளிலும் மின்சார இரயில்களிலும் பிரச்சாரம், ஐ.டி துறையினர் புழங்கும் இணையம், சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸப்பில் பிரச்சாரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசுரங்கள், பல நூறு போஸ்டர்கள் என்று மூன்றே நாட்களில் இந்தக் கலந்துரையாடல் கூட்டம்  ஐ.டி துறையினரிடையே முக்கிய பேசு பொருளாக்கப்பட்டது.

இந்தப் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக, சனவரி 9-ம் தேதி காலையில் சிறுசேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பாதுகாப்பு அரணுக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலில் நடைபெற்றது மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் மற்றும் பு.ஜ.தொ.மு தோழர்களின் பிரச்சாரம். தொழிற்சங்கம் என்ற சொல்லையே உச்சரிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றழைக்கப்படும் கார்ப்பரேட்டுகளின் கர்ப்பகிரகத்தினுள் செங்கொடி நுழைந்தது. அந்த பிரச்சாரம் ஊழியர்களிடம் தோற்றுவித்த முக்கிய விளைவு – நம்பிக்கை, தைரியம்.

திட்டமிட்டபடி 10-ம் தேதி மாலை கலந்துரையாடல் கூட்டத்தைத் துவக்கினர் பு.ஜ.தொ.மு தோழர்கள்.

கூட்டத்திற்கு நேரடியாக வந்தவர்களைத் தவிர, பல ஊர்களில் இருந்தும் தொலைபேசியில் அழைத்து ஆதரவு அளித்தவர்கள் பலர். கூட்ட மேடையிலேயே இரண்டு ஐ.டி ஊழியர்கள் தாம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் இணைவதாக அறிவித்தனர். கூட்டத்திற்கு வந்தவர்களில் மேலும் பலர் சங்கமாக இணைய முன்வந்து தங்கள் பெயர்களையும் தொடர்பு எண்களையும் அளித்துச் சென்றுள்ளனர்.

”ஐ.டி ஊழியர்களாவது, சங்கம் கட்ட முன்வருவதாவது” என்ற பொதுப்புத்தியின் அவநம்பிக்கை குரல் ஜனவரி 10-ம் தேதியோடு நொறுங்கி விழத் துவங்கியிருக்கிறது. என்றாலும், இதைத் துவக்கி வைத்ததை எமது சாதனையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. ஐ.டி துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வது ஒன்றே அவர்களது எதிர்காலத்தையும் வேலையையும் காப்பாற்றும் என்ற எதார்த்தமான முடிவை நோக்கி அவர்களைத் தள்ளியது நாங்கள் அல்ல – – அந்தப் பெருமை டிசிஎஸ் மற்றும் ஐ.டி கார்ப்பரேட்டுகளையே சாரும்.

பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் விஜயகுமார்
பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் விஜயகுமார்

கலந்துரையாடல் கூட்டத்தை பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் விஜயகுமார் ஒருங்கிணைத்து நட்த்தினார். அறிமுக உரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் இந்திரா ஐ.டி துறையில் நிகழும் ஒடுக்குமுறைகளையும் அதை எதிர்த்து முறியடிப்பதற்கு ஊழியர்களுக்கு இருக்கும் சட்ட பூர்வமான வாய்ப்புகளைக் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ஐ.டி பிரிவு துவங்கப்பட்டதை அறிவித்த தோழர் விஜயகுமார், அதற்கான நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் அமைப்பாளராக தோழர் கற்பகவிநாயகம் தெரிவு செய்யப்பட்டிருப்பதையும் அறிவித்தார்.

தோழர் கற்பக விநாயகம்
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவின் அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம்

அதைத் தொடர்ந்து உரையாற்றிய கற்பகவிநாயகம் தனது 17 ஆண்டு கால ஐ.டி துறை வாழ்க்கை குறித்தும் அதில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் பேசினார். தனித்தனியாக தீர்வை தேடுவதால் பலனில்லை என்றும் சங்கமாக சேர்வதன் மூலம் மட்டுமே தீர்வுக்கான வழிபிறக்கும் என்பதையும் தனது அனுபவத்தின் வாயிலாக எடுத்துக் கூறினார். சட்டப்பாதுகாப்புகளே இல்லாத காலத்தில் 33 வயதான வ.உ.சி தொழிலாளர்களை அமைப்பாக்கி போராடியதை நினைவு கூர்ந்த அவர் அந்த பாரம்பரியத்தை வரித்துகொண்டு நம்மாலும் அதை செய்துகாட்ட முடியும் என்று பேசினார்.

அடுத்து பேசிய மனநல மருத்துவர் ருத்ரன் ஐ.டி துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், சங்கமாக சேர்வது எப்படி அதிலிருந்து விடுவிக்கும் என்பது பற்றி விளக்கி பேசினார்.

டி.சி.எஸ் லேஆஃப் - புஜதொமு கூட்டம்
டாக்டர் ருத்ரன் உரை

மேலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மீனாட்சி, மில்டன், பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.

டி.சி.எஸ் லேஆஃப் - புஜதொமு கூட்டம்
ஊழியர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்

கலந்துரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்த ஐ.டி துறை ஊழியர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அவர்களது கேள்விகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் விளக்கமளித்தார். ஊழியர்கள் தங்கள் கேள்விகளை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க, அதில் சட்டரீதியான கேள்விகளை சாராம்சமாக தொகுத்துக் கொண்டு அவை குறித்த விளக்கங்களை வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் அளித்தார். ஐ.டி தொழிலாளர்கள் கேட்டிருந்த சந்தேகங்களில் தொழிற்சங்கம் குறித்தும் பு.ஜ.தொ.மு குறித்தும் தொழிற்சங்கம் துவங்குவது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பு.ஜ.தொ.முவின் மாநில பொருளாளர் விஜயகுமார் பதிலளித்து பேசினார்.

உடனடியாக என்ன செய்வது என்பதைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, ”நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ராஜினாமா கடிதம் கொடுக்காதீர்கள். தொழிற்சங்கத்தில் சேருங்கள்” என்பதே ஊழியர்களுக்கு பு.ஜ.தொ.மு கூறும் செய்தி என்பதை வலியுறுத்தினார்.

வழக்கறிஞர் தோழர் மீனாட்சியின் நன்றி அறிவித்தலுடன் கூட்டம் நிறைவு பெற்றது. வந்திருந்த ஐ.டி தொழிலாளர்கள் நம்பிக்கை மின்னும் கண்களோடு புறப்பட்டனர்.

நுழைவாயிலைக் கடந்த ஐ.டி ஊழியர் ஒருவர் அங்கே வைக்கப்பட்டிருந்த “HR SPIES WILL BE STRICTLY DEALT WITH” என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு தனது நண்பரிடம் சுட்டிக்காட்டினார் –

“மச்சி, ஹெச்சார் ஆளுங்க இங்க நம்ப வந்ததை பார்த்தா தூக்கிர மாட்டானுங்க?” என்றார் ஒருவர்.

“இனிமேட்டு கைவைக்க யோசிப்பானுங்கடா.. அப்டியே வச்சாலும் பெர்பாமென்சுக்காக இல்லாம இதுக்குத் தான் போச்சின்னு வீரமா சொல்லிக்கலாம் இல்ல? விட்றா பாத்துக்கலாம்” என்றார் இன்னொருவர்.

வேலை போய்விடும் என்ற அச்சத்தை விடுவதுதான், வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஊழியர்கள் உணரத் தொடங்கியிருப்பதே இக்கூட்டத்தின் முக்கிய வெற்றி.

– வினவு செய்தியாளர்கள்

குறிப்பு: கலந்துரையாடல் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் காணொளிப் பதிவுகளும், எழுத்து வடிவமும் வினவு தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

பத்திரிகை செய்திகள்

உனக்காக ஒருமுறை பேசிவிடு !

5

ண்பா…..
உன்னால் கேட்க முடிகிறதா?
அந்தக் குரலை!
சகிக்க முடியாத அடக்குமுறைகள்
உடைத்து
குர்கானில் ஒலித்தது
அந்தக் குரல்….

வால் ஸ்ட்ரீட் முற்றுகைநாடி நரம்புகள்
நசுக்கப்பட்ட
பங்களாதேசின்
ஆயத்த ஆடைகளின்
இறுக்கத்தைத் தகர்த்து
வீதியில் வெடித்தது
அந்தக் குரல்….

இருப்புப் பாதையில் அழுத்தப்பட்டு
பிழிந்தெடுத்தப் பிடிகளை உடைத்து
இங்கிலாந்தை அதிர வைத்தது
அந்தக் குரல்….

கனவுகளையும் திவாலாக்கி
கடைசிச் சொட்டு உதிரத்தையும்
உறியும் அமெரிக்க – கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது
அந்தக் குரல்….

ஏதென்ஸ்… கிரீஸ்… மெக்சிகோ
திரும்பெரும்புதூர்… இருங்காட்டுக் கோட்டையென
மூலதனம் வாழ்வை முடக்கும் திசையெங்கும்
முடிவிலாது வெடிக்கிறது
கலகக் குரல்!

தாவரங்களும் உயிரினங்களும்,
மிதிக்கும் கால்களைத் தோற்கடிக்கும்
ஒற்றைப் பசும்புல்லும்
போராடும் உலகத்தில்
உன்னால் மட்டும்
தனித்திருக்க முடியுமா என்ன?

தவிர்க்கவியலாமல்
காற்றலைகளாய் பரவி
அது உன் சுவாசத்தில் கலப்பதை
உன்னால் உணர முடிகிறதா?

தயக்கங்களையும் தாண்டி
அது உன் விருப்பங்களை ஒலிப்பதை
உன்னால் கேட்க முடிகிறதா?
வர்க்கத்தை மறைக்க
யாரால் முடியும்?

நீயும் ஒரு தொழிலாளிதான் என்பதை
நிலைமைகள் உணர்த்தும் தருணத்திலாவது
பேசிவிடு!

இது பேசியதால் அல்ல,
பேசாததால் வந்த அவலம்!
வந்த அடக்குமுறைக்குப் பதிலாக
சொந்த அடக்குமுறை எதற்கு?

அடங்கமாட்டாமல்
கிளர்ந்தெழும் உணர்வுகளை
போராடும் வர்க்கத்தோடு சேர்ந்து
பேசிவிடு!

உலகம் கேட்க விரும்புகிறது
உனக்காக ஒருமுறை பேசிவிடு!

– துரை.சண்முகம்

TCS Siruseri Gate Meeting – Telugu

TCS Siruseri Gate Meeting – Comrade Mukundan – Malayalam

TCS Siruseri Gate Meeting – Advocate Indira

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff

Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

Meeting at

Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm

கலந்துரையாடல் கூட்டம்

பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி

ஐ.டி ஊழியர் மனச்சோர்வும் மருந்தும் – டாக்டர் ருத்ரன்

1

ளம் வயது கனவுகளோடும் ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் வாங்கியும் ஐ.டி துறையில் சேரும் ஊழியர்களின் பிரச்சினைதான் என்ன?

தன்னை நிறுத்திக் கொள்ள கடும் போட்டி, திறமைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், பணித்திறன் பற்றிய பயங்கள், ஆன்சைட் தோற்றுவிக்கும் ஆசைகள், இரவுப் பணி, திடீரென்று பெஞ்சில் அமர வேண்டிய துர்பாக்கியம், இறுதியில் பணி நீக்கம் என்று மொத்த வாழ்வும் துயரங்களால் சூழப்பட்டிருக்கின்றது.dr-rudran-3

மற்ற எவரையும் விட மனச்சோர்வும், உளவியல் பிரச்சினைகளும் ஐ.டி ஊழியர்களுக்கு அதிகம் ஏற்படுவதை அறிவோம். அதன் பின்னணி, செயல்பாடு, விளைவு குறித்து மருத்துவர் ருத்ரன் சுருக்கமாக விவரிக்கிறார்.

இறுதியில் தொழிற்சங்கம் என்பது ஐ.டி ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து என்பதை அனுபவத்துடன் விளக்குகிறார்.

ஐ.டி துறை நண்பர்களே!

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

IT layoff and depression – Union as solution : Dr. Rudhran

4

Part 1

Part 2

Part 1

Those youth employed in IT face various psychological problems. Primarily the whole process starts not just after joining, even much before. The root of the problem, if you look at the boys and girls who join IT, they will be joining in the very early twenties. That is just after finishing their college education.

Throughout their school years, after 12th they have been mechanically studying and doing nothing else. They have no clue about the external world. Nor were they having interest in the external affairs, social political or even personal. Next phase during college, their focus again is to get good marks, get a good campus interview, get selected, join a job. This process does not allow them to think about learning new things, about social issues, personal issues, or even about their own personal likes and dislikes. They do not show any passion for other things.

dr-rudran-3Now, this boy or girl joins an IT firm, starts working. Immediately there is a pressure. He has to perform. And Unless he performs he will not be able to go abroad like his peers. And going abroad is a fantasy for every kid who joins in IT. Now when working towards that, he gets into a anxious state. He has to perform well, that pressure of performance, automatically results in a residual anxiety.

This gets heightened when he is reprimanded, if he is not producing, the way company wants him to produce. Now this would ultimately lead to a state of anxiety, and anxiety can be exhibited as a mild fear, and uneasiness a restlessness, and at times sleeplessness. Generally if someone is not sleeping well, he or she would know that something is wrong I am not able to sleep. But in these cases these boys and girls are used to spending long hours of the night without sleep, and so they will not even be able to identify that sleeplessness is a symptom of a psychological problem. Therefore they would not even know that they are getting depressed. Not only they would not know, even their family would not be able to identify that the boy is sleepless and having a problem.

The pressure comes to them in a different form also. These boys and girls at one point of time say about 5-6 years before, even 10 years earlier, they were able to wait for an opportunity to move to another company and grow further, if this company is not good enough for them. Now if this company says that you are not good, they know that they cannot move on to another group, or another company and get a better salary or even the same salary. They are living in a fear of their job.

A job cannot be enjoyed if it is approached with fear and anxiety. This would automatically reduce their performance level. When the performance comes down they face the danger of expulsion, they may loose the job. What happens when a person is suddenly is ablut to loose the job. Initially there will be extreme anxiety. This anxiety would further provoke personal discomfort. He would not even be able to interact, relate and have good inter personal relationship with his family and friends.

The next phase is the person looses the job and he goes into a depression. Depression need not be sitting in a corner and crying. Depression can be lack of energy, lack of motivation, lack of direction, sleeplessness, lack of appetite and a general apathy towards the world and disinterest in self. He would stop taking care of himself psychologically and physically. This would further worsen and in some cases causes suicidal ideas to come. All is this because they have not focused on anything else right from their school days. They do not have other avenues to enter relax and rejuvenate themselves. Moreover once upon a time in IT field there was an opportunity to move on, get another job.

Now it is not so. If you are going to loose the job you are in trouble. You wont get any other job. You wont get the same pay. And then you cant even start a business. Because already you are in a financial crunch. You have a loan for a car, for a house and for whatever, and your credit cards are maxed. You are in trouble. That cheque which is going to solve the problem is not going to come at the end of the month. This fear, this panic would tend in severe depression.

Part 2

All the IT professionals, the youngsters in the IT field, have a lot of inter personal problems, not because they are not capable of showing love and affection, primarily they do not have the time, or they think they do not have the time to show that love and affection.

dr-rudran-2In many cases it is true that they spend a lot of time in office, rather than at home. This would lead to a lack of communication, a reduction in communication, reduction in quality time being spend together. Because the guy or the girl who spends long hours in office, in the weekend would rather prefer to take rest than go out with the family and have fun time. This causes a disruption in the communication pattern in a family between husband and wife and at times in the children, who start feeling neglected.

This distancing  is not deliberate, but once the distancing sets in the person would automatically not have the same empathetic feeling towards the other member of his family, and so he would not even be able to identify that his children are feeling sad, or his wife is angry, his pre occupation would be, be in the job, do better, move to the next step in the ladder.  All these inter personal problems again gradually lead to a deterioration in self care, because the vasic unit of the person, the family, is getting disrupted, even without his knowledge. It need not disintegrate and go into a divorce. It can still be a disrupted family where the people are not close, but rather distant from each other. This would again lead to a severe depression.

These interpersonal problems would in a way reflect even in his work place. When both the husband and wife are working in an IT firm, in different IT firms, one firm might close off at 5 pm, and the other firm might even start working only at 5 pm. So the way they even see each other and spend time with each other becomes less. This is the time when they spend more time with the colleagues, sometimes whoever the partner is, the husband or wife, sees the husband or wife spending more time with the colleagues of the same sex or the opposite sex, a mild paranoia sets in and they start feeling that they are neglected, they are not given importance, the person is giving more importance to somebody in the office, and this would again lead to a disruption of marital life.

dr-rudran-4All these problems are not addressed by these people,  they are not even thinking about it, and they do not even consider this as a problem. This would affect things in the long run. Once upon a time it was in the long run, they could understand it when they are in the late forties. Now people in their late twenties and early thirties are facing this problem. Compounding this problem, is the fact that they might not be continuing in the job, or they wont be safe enough in the job, and this is not the security which they imagined.

Now would trade unions be an answer? What exactly is a trade union? It is not just a group of people waving a red flag and starting a strike. No. That is a myth. It is a myth propagated deliberately by the material world, so that the workers unity can be suppressed.

An ideal trade union would not just take care of your salary your job, and would not be simply fighting with the boss. It could take care of you. You as a person. It could start providing you enough to nurture yourself  and make yourself comfortable in your social and personal environment. That is the ideal trade union.  It is a group.

Man as a social animal is not an individual. He cannot survive alone. He needs a group. And this group, this humanity should be the focus of every trade union. Since a man is an individual, he would be some times be inside the group, or sometimes outside the group. But the basic unity which is needed, is what makes a man secure.  I am living in this street,  I belong to the street, I belong to this city, in the same way, ‘I belong to this group of people’. The sense of belonging is itself is strength. That gives a security.

And this security if excercised properly, and if used properly, if exhibited properly would definitely solve a lot of problems. In fact some people mention that there is a study which says, that those who are in a trade union suffer less depressive disorders, and face less psychological and inter personal problems, which is very much possible and true. Because in a union there is unity. It’s a society by itself. A miniscule  society which takes care of itself. And this gives a security which your fantasy employment may not be able to offer you for lifelong.

கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

16

டவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் எங்கே இருக்கிறார்? கடவுளை எப்படிப் பார்ப்பது? – சுவாரசியமான கேள்விகள் இவை. ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் மதங்களின் இருப்புக்கே ஆதாரமான இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் வித விதமான ‘விடைகளில்’ தான் மதங்கள் உயிர் வாழ்கின்றன. இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேடும் ஒருவன் அவற்றை எப்படி ’அறிந்து’ கொள்ள வேண்டும் என்பதை விட எப்படி அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் மதபீடங்கள் தெளிவாக இருக்கின்றன. அந்த வகையில் உண்மை என்பது மதங்களைப் பொறுத்தவரையில் ‘தடுக்கப்பட்ட கனி’ தான்.

kadavul backஉண்மை என்கிற ’தடுக்கப்பட்ட கனியை’ அறிவியலின் துணையோடு அணுகுகிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ என்கிற நூல். அறிவியலைக் கற்பது, புரிந்து கொள்வது என்பதெல்லாம் மிகவும் கடினமானதென்றும் அறிவுத் தேடல் சாதாரணர்களுக்கானதல்ல என்பதுமே நாம் பழக்கப்பட்டிருக்கும் மனப்பாடக் கல்வி நமக்கு ஏற்படுத்தியிருக்கும் மனப்பதிவு. அறிவியல் என்கிற ‘டைனோசரை’ பாதுகாப்பான தூரத்தில் தள்ளி நின்று வியந்து நோக்கவே இந்தக் கல்விமுறை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இதற்கு மாறாக, அறிவியலை எளிமையான மொழிநடையில் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். வினவு இணையதளம் மற்றும் புதிய கலாச்சாரம் பத்திரிகையில் வெளியான அறிவியல் கட்டுரைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ளது ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ நூல்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளையும் இயற்கைத் தேர்வு கொள்கையையும் பள்ளிக்கூட பாடநூல்களில் வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் வறண்ட வரிகளில் அல்லாமல் உயிர்த்துடிப்பான வரிகளோடும் அந்தக் கோட்பாடு தோன்றியதற்கான வரலாற்றுப் பின்புலம் மற்றும் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் அறிமுகப்படுத்துகிறது முதல் கட்டுரையான ‘டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்’ என்ற கட்டுரை.

போலவே டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வெறி கொண்டு மறுத்த திருச்சபையைத் தோலுறிக்கிறது அடுத்த கட்டுரையான ‘அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!’. நவீன அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் மூலம் பரப்பும் ’நற்செய்தியாளர்களின்’ இரட்டை நாக்கு வரலாற்றில் விஞ்ஞான உலகத்தின் மேல் கக்கிய வெறுப்பையும் அதன் வெப்பத்தில் தங்கள் உயிரையே பலிகொடுத்த விஞ்ஞானிகள் பற்றிய விவரங்களையும் இந்தக் கட்டுரை ஒரு பருந்துப் பார்வையில் அறிமுகம் செய்து வைக்கிறது.

நவீன அறிவியல் வாழ்வின் இண்டு இடுக்குகளில் இருந்தும் ‘கடவுளை’ நெட்டித் தள்ளியபின், இறுதியாக பக்தர்களின் தனிப்பட்ட அனுபவங்களிலும், படைப்பு குறித்த மருட்சி என்ற பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ’கடவுளை’ புகை போட்டு வெளியே விரட்டுகிறது ‘கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்’ என்ற கட்டுரை. விஞ்ஞானம் என்ற சூரிய வெளிச்சத்தில் புரண்டு துடிக்கும் கடவுள் என்கிற புழுவின் அவஸ்தையான அசைவுகளை அந்தக் கட்டுரையின் கவித்துவமான வரிகளில் வாசிப்பது ஒரு பேரானந்தம்.

kadavul-iruttuபிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து மத நூல்களின் அம்புலிமாமா கதையாடல்களை ஊதித் தள்ளி அந்த இடத்தில் அறிவியல் ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கிறது ஹிக்ஸ் போசான் துகள் குறித்து வெளியாகியிருக்கும் இரண்டு முக்கியமான கட்டுரைகள். ஹிக்ஸ் போசான் துகள் பற்றிய செய்திகள் வெளியாகத் துவங்கியதும் அஞ்சி நடுங்கிய மதவாதிகள் தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விஞ்ஞானத்திற்கு தங்கள் அஞ்ஞான விளக்கங்களால் முலாம் பூச முற்படுவதை காத்திரமான வார்த்தைகளில் சாடுகிறது “கடவுளை நொறுக்கிய துகள்” கட்டுரை.

அறிவியலால் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்களை முன்வைத்து அவையெல்லாம் கடவுளின் இருப்புக்குச் சான்றுகளென்று அடித்து விளையாடிய கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளின் போங்காட்டத்தை இக்கட்டுரை ”பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து, கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டு பிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று எள்ளி நகையாடுகிறது.

ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் ஒன்று உள்ளது. “எல்லாம் சரிங்க. விஞ்ஞானம் கிட்டத்தட்ட எங்க கடவுளை காலி ஆக்கிடுச்சின்னே வச்சிக்கலாம்.. ஆனா உங்கள் விஞ்ஞானத்தால் ஒரு உயிரை உண்டாக்கிக் காட்ட முடியுமா? அழிவைத் தானே உங்கள் விஞ்ஞானம் இதுவரைக்கும் சாதித்திருக்கிறது?” என்ற வாதத்தை நொறுக்கிப் போடுகிறது ‘செயற்கை உயிர்ர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?’ என்ற கட்டுரை. இக்கட்டுரை கடவுளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, அறிவின் வளர்ச்சிக்கு மத்திய கால மதபீடங்கள் தடையரணாக இருந்ததைப் போல் இன்றைக்கு முதலாளித்துவ உடைமை உறவும் அதை நிலைநாட்டும் ஏகாதிபத்திய கட்டமைப்பும் எப்படி தகர்த்தெறிய வேண்டிய தடைச்சுவராக உள்ளன என்பதையும் விளக்குகிறது.

எதிர்வரும் புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பகத்தாரின் கடையிலும் பிற முற்போக்கு நூல்கள் கிடைக்க கூடிய கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்நூல் அவசியம் வாங்கியே ஆகவேண்டிய நூல்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நூல் ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’. இந்நூலை நீங்கள் வாங்கிப் படிப்பதுடன், தெரிந்தவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்நூலை பரிசளிப்பது அறிவியலைக் கற்பது குறித்த அச்சத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.

கடவுள் இருட்டு அறிவியல் வெளிச்சம்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 70

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

TCS Layoff – NDLF Combats – ஐடி ஊழியருக்கு தொழிலாளர் ஆதரவு Video

1

NDLF (New Democratic Labour Front) workers in solidarity with IT employees .TCS is in the process of laying off 25,000 employees.

On 7th of January 2015, 100s of workers belonging to New Democratic Labour Front assembled in Chennai IT Corridor to show solidarity with TCS employees. They called on IT employees going to their morning work to join Trade Union and protect their rights, by distributing thousands of pamphlets.

Police intervened and tried to prevent the workers. But, workers asserted that campaigning against the mass layoff by TCS is their democratic right and continued pamphlet distribution.

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது குறித்து வினவில் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இது தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் இணைந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இணையத்தில் தொடங்கிய பிரச்சாரம் களத்திலும் தொடர்கிறது.

வேலைநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக திரண்டு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறைகூவியும் 07.01.2015 அன்று காலை 8 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில் திரண்டனர். ஐ.டி ஊழியர்களைக் காப்பாற்ற ஆலைத் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தையும், போராட்ட குணத்தையும் பறை சாற்றுவதாக இருந்தது.

இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 5 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்!

TCS Layoff - NDLF (9)

Join US…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

Meeting at
Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm

New Democratic Labour Front

கலந்துரையாடல் கூட்டம்

பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

மன்னார்குடி : மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழு முற்றுகைப் போராட்டம்

5

காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக

  • தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை தரிசாக்கும் மத்திய, மாநில அரசுகளே!
  • விவசாயிகளின் வாழ்வாதாரங்களை கார்ப்பரேட்டுகளுக்கு பலி கொடுக்காதே!
  • காலாவதியான மீத்தேன் – பழுப்பு நிலக்கரி எடுப்பு ஒப்பந்தங்களைக் கிழித்தெறி! ஓ.என்.ஜி.சி துரப்பணப் பணிகளைக் கைவிடு
  • காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்காதே!
  • மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்காதே
  • விவசாயிகளின் கழுத்தை நெறிக்கும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்!
    முழு பிரீமியத் தொகையையும் அரசே செலுத்த ஏற்பாடு செய்!
  • கூலி ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட சதி செய்யாதே!

ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 03.01.2015 அன்று மன்னை தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்

விவசாயிகள் விடுதலை முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் கு.மா பொன்னுசாமி தலைமையில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் புரட்சிகர அமைப்புத் தோழர்கள் மன்னை பேருந்து நிலையத்தில் அணி திரண்டனர்.

மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழு வலங்கைமான் அமைப்பாளர் தோழர் சின்னதுரை, விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் தோழர் கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ்குமார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்திக் கண்டன உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத் தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் உரையாற்றி முற்றுகைப் பேரணியைத் தொடக்கி வைத்தார்.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்விண்ணதிர முழக்கமிட்டபடி மன்னை தலைமை தபால் நிலையம் நோக்கித் தோழர்களும், விவசாயிகளும் முற்றுகைக்காக முன்னேறினர்.

“ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தோம். கலைந்து செல்லுங்கள். கைது செய்ய நேரிடும். ரிமாண்டும் ஆகலாம்” என்று கூறி தோழர்களை அச்சுறுத்தியது காவல் துறை. எழுச்சி மிக்க முழக்கங்களுடன் காவலை மீறி பேரணி முன்னேறவே காவல்துறை பின்வாங்கியது.

“பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்லுங்கள். கைதைத் தவிர்க்கலாம்” என்று வழக்கறிஞர்கள் மூலம் தூது விட்டது.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்

அதை ஏற்க மறுத்து தலைமை தபால் நிலையம் நோக்கி முன்னேறிய பேரணியை 50 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தியது போலீஸ். அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு அனைவரையும் கைது செய்த காவல் துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்ட நிகழ்வு விவசாயிகளை ஒடுக்குவதற்குத் தனிச்சிறப்பாக அமைக்கப்பட்ட கிசான் போலீசை எதிர்கொண்டு வரலாறு படைத்த மன்னை மண்ணின் மாண்பை மீட்டெடுக்கும் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்

தகவல்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு
விவசாயிகள் விடுதலை முன்னணி
ம.க.இ.க பு.மா.இ.மு

சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்

3

amma-cementபடம் : ஓவியர் முகிலன்