Tuesday, May 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 630

சமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் – புமாஇமு கருத்தரங்கம்

9

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மோடி அரசின் சமஸ்கிருத வாரம் !
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

‘உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழி சமஸ்கிருதம்’ என்று
பொய் நெல்லைக் குத்திப்
பொங்குகிறார் மோடி.

மோடி - இந்துத்துவா
மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மறுகாலனியாக்கக் கொள்கையை
பார்ப்பனப் பாசிச வழியில்
உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி,
‘கடவுள் மொழி சமஸ்கிருத’த்தின்
ஆர்.எஸ்.எஸ் புத்திரனே
என்று புரிந்து கொள்வோம்!

நூறாண்டு முன்பே
பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து
சமஸ்கிருதத்திலிருந்து
முற்றாக வேறுபட்ட
தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று
முழங்கினார் கால்டுவெல்.

சமஸ்கிருதம் – இந்தி என்று
எங்கு எப்போது திணிக்கப்பட்டாலும்,
அதை எதிர்த்து முறியடிப்போம்!

கல்வியில் தமிழ் பயிற்றுமொழி
அரசு அலுவலகங்களில் தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடும் மொழி
என அனைத்து துறைகளிலும்
தமிழை ஆணையில் வைப்போம்.

மோடி அரசின் பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
இந்து – இந்தி-இந்தியா என்ற இந்து ராட்டிரத் திணிப்பே !

பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்துக்கு எதிரான இன்றைய போரில்
தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும் போர்வாளான கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!
மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என திரளாக கருத்தரங்கில் கலந்து கொள்வோம்!

கருத்தரங்கம்

நாள் :
செப்டம்பர் 16, 2014

நேரம் :
காலை 10.30 மணி

இடம் :
கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால்,
ஆவடி ரோடு,
கரையான் சாவடி, சென்னை.

சிறப்புரை :
தோழர் துரை.சண்முகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.

நோட்டிஸ்
Sanskrit

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

NLC தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

1

NLC நிர்வாகமே!

  • பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும்
    ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்!
  • தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட
    அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்று!

மத்திய அரசே!

  • உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும்
    NLC நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!

உழைக்கும் மக்களே!

  • ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட
    தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள்வோம்!
  • தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட வழிவகுக்கும்
    மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

என்.எல்.சி தொழிலாளர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்கள்
9444834519

குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!

0

ந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஆதாரபூர்வமாக இல்லையானாலும் ஒரு வாதத்திற்காவது சொல்லக்கூடியவாறு இருப்பவை, அரசியல் சட்டப் பிரிவுகள் 21,22. அவைதாம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் உறுதி செய்கின்றன. 1975-76-ம் ஆண்டுகளில் இந்திராவின் அவசரகால ஆட்சி அவ்வுரிமைகளை இரத்து செய்தது; அதனால், ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. “ஆம், அப்படித்தான் ஆகிறது” என்று சொன்னார்கள். இப்போது, இந்திய அரசியல் சட்டத்தின் 21,22-வது பிரிவுகளை இரத்து செய்துவிடும் விதமாக, அதாவது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் பறித்து எந்தவொரு குடிமகனையும் விசாரணையின்றி ஓராண்டு சிறையிலடைக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கும் குண்டர் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது, ஜெயலலிதா அரசு. இதன் மூலம் அவசரகால பாசிச ஆட்சியைத் தமிழகத்தில் மறைமுகமாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்த வகையில் பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக இது விளங்குகிறது.

1982-ல் பாசிச எம்.ஜி.ஆரால் குண்டர் தடுப்புச் சட்டம் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் தொழில்முறை ரவுடிகள், கள்ளச் சாராய வியாபாரிகள், போதை மருந்துக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், புறம்போக்கு – குடிசைப் பகுதி நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்கள் – என்று ஒவ்வொன்றாகச் சேர்த்து ஊதிப் பெருக்கி, இக்குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களையும் ஓராண்டு காலம் விசாரணையின்றிச் சிறையில் அடைப்பதற்கானதாக மாறியது.

இந்தச் சட்டத்தை மேலும் சில திருத்தங்களோடு கடுமையாக்கியுள்ளது, ஜெயலலிதா அரசு. இதன்படி இதுவரை தெளிவாக, கறாராக வரையறுக்கப்படாமல், கேடாக ஏவப்படும் இணையக் குற்ற வழக்குகள்; குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்து போகும் பாலியல் குற்ற வழக்குகள் – இவையும் விசாரணையின்றித் தண்டிக்கக் கூடியவையாகும். இதுவரை, கிரிமினல் குற்றங்கள் புரிவதை வழக்கமாகக் கொண்டவர்கள் மட்டும், அதாவது மூன்று, நான்கு முறை குற்றப்பதிவுக்கு ஆளானவர்கள் மீது மட்டும்தான் குண்டர் சட்டம் பாயும் எனச் சொல்லப்பட்டதை, இனி, முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இக்குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீதும் பாயும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. குற்றங்களைத் தடுப்பது, குறைப்பது என்ற பெயரில் கிரிமினல் குற்றவழக்கு முறைமைகளுக்கு எதிராகவும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும் நிரபராதிகளையும் தண்டிக்கவும் அரசும் ஆட்சியாளர்களும் கைக்கொள்ளும் பாசிச முறையிலானது இந்தச் சட்டம்.

கிரிமினல் குற்றங்களைப் புரிந்து விட்டு, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் குறுக்கு வழிகளில் தப்பித்துக் கொள்பவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுப்பதற்கான வழிதான் குண்டர்கள் தடுப்புச் சட்டம் என்று அரசியலற்ற பலர் நம்புவதுதான் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வசதியாக உள்ளது. ஆனால், பெரும்பான்மை வழக்குகளில் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறெனவே நீதின்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. ஜெயலலிதாதான் பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டும், குறுக்குவழிகளில் பல ஆண்டுகளாகத் தப்பித்துக்கொள்ளுவதை வழக்கமாகக் கொண்டவர். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புகளை மதியாது குற்றங்களைத் தொடரும் அவர்தான் முதலில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டியவர்.

– தலையங்கம்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

நாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா ?

2

ன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் நாவல்காடு பகுதியில் உள்ள ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவர்கள், கல்லூரி சேர்மன் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

james-college-studentsஐ.டி, எலக்ட்ரிகல், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சைன்ஸ், சிவில், எலக்ட்ரிகல்-எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த சுமார் 360 மாணவர்களை கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தொழில்துறை சுற்றுப் பயணத்துக்காக பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் என்ற நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றது கல்லூரி நிர்வாகம்.

ஆனால், தொழில் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பயன்பாட்டிற்கு அற்றது என்று கழிவு செய்து ஒதுக்கிய விமானத்தை மட்டும் காட்டியிருக்கின்றனர். தொழிற்சாலை என்று எதையும் காண்பிக்கவில்லை. மேலும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்ற இந்த நிறுவனம் மாணவர்கள் படிக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாதது ஆகும்.

இந்த பயணத்துக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ 7,850 வசூல் செய்திருக்கின்றனர். மொத்தம் நான்கு நாட்கள் தொழில்துறை பயணம் என்று கூறியும் எந்த ஒரு தொழில் நிறுவனத்திற்கும் அழைத்து செல்லவில்லை. மேலும் தரமான 3 நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளதாகவும், தரமான உணவு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கூறியிருக்கிறது. அதற்காகவே ரூ 7,850 வசூலித்துள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை, சரியான தங்கும் இடமும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வருவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் சரியான பேருந்து வசதி செய்யப்படவில்லை. 10 பேர் வரை நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை இருந்துள்ளது. சுமார் 40 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய கல்லூரி பேருந்தில் 50 பேரை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், இருக்கையில் இருந்து பயணம் செய்யும் அளவிற்கு மட்டுமே ஏறுவோம் என்று கூறி கடைசி பேருந்தில் இருக்கை கிடைக்காத மாணவர்கள் பேருந்தில் ஏறாமல் வெளியில் நின்று விட்டிருக்கின்றனர்.

இந்த தகவல் சொல்லப்பட்ட கல்லூரி சேர்மன் வழிகாட்டுதல்படி, இருக்கை கிடைக்காமல் பேருந்திற்கு வெளியே நின்ற மாணவர்களை அப்படியே விட்டு விட்டு பேருந்தை ஓட்டுநர் நகர்த்தி சென்று விட்டார்.

இதனை தட்டிக் கேட்ட பேராசிரியரையும், மாணவர்களையும் பேருந்து ஓட்டுநர், ஆபாசமாக, தரக்குறைவாக, கெட்ட வார்த்தையில் திட்டி முறைகேடாக நடந்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிறகு பேருந்தை நிறுத்தி கீழே நின்ற மாணவர்களை மீண்டும் பேருந்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார் ஓட்டுனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் பேருந்தின் உள்பக்க மேற்கூரையை அடித்து சத்தம் எழுப்பியதில் மைக்காவில் சிறிய ஓட்டை விழுந்துள்ளது. சேர்மன் வழிகாட்டலின்படி பேருந்தை ஓசூர் தாலுகா சூளகிரி காவல் நிலையத்திற்கு ஓட்டுநர் ஓட்டிச் சென்றிருக்கிறார். மாணவர்கள் கட்டாயப்படுத்தி கேட்டபின் காவல் நிலையம் செல்வதாக கூறியிருக்கிறார்.

காவல் நிலையம் செல்லும் வழியிலேயே சூழகிரி காவலர்கள் பேருந்தை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். மாணவர்கள் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி சேர்மன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருப்பதாக காவல் அதிகாரிகள் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்த மாணவிகள் காவல் அதிகாரியிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள்தான் பெங்களூரில் இருந்து இங்கு வரை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர் என்றும் கூறியிருக்கின்றனர். காவல் அதிகாரிகள் மாணவர்களை மிரட்டி பேருந்தின் மேல்கூரை மீது மாணவர்கள் நடனம் ஆடும்போது தலைப்பட்டு மைக்கா உடைந்தது என்று எழுதி வாங்கியிருக்கின்றனர்.

மேலும் பயணம் முடிந்து செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவர்களிடம்,  பிரச்சனைக்கு உள்ளான பேருந்தில் வந்த 36 மாணவர்களுக்கும் தலா ரூ 12,750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணத்தில் சென்ற 360 பேருக்கும் பொது அபராதமாக தலா ரூ 2,000 விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறிப்பிட்ட அபராதம் கட்டாத வரை மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என்றும் கூறியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். மேலும் தொழில்துறை பயணம் (ஐ.வி- IV) சென்ற மாணவ மாணவியரில் தாமதமாக கல்லூரிக்கு வந்தவர்களுக்கு தலா ரூ 1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் சேர்மனின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்தும், “இதுவரை கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது சட்டவிரோதமாக விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தும் செப்டம்பர் 2-ம் தேதி அன்று கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி நிர்வாகம் காவல் துறை மூலமாக மாணவர்களை சந்தித்திருக்கின்றனர். சேர்மன் 13-ம் தேதிதான் வெளியூரிலிருந்து வருவார், அன்று எல்லா பிரச்சனைக்கும் நல்ல முடிவை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித் தரும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.  ஆனால், அன்றைய தினம் இரவே போராட்டத்தில் முன் நின்ற கல்லூரி விடுதியில் உள்ள மாணவர் ஒருவரை, “இந்தக் கல்லூரியில் இனி நீ படிக்க முடியாது” என்று கூறி வெளியேற்றியிருக்கின்றனர்.

இவ்வாறு, நிர்வாகம் ஏற்றுக் கொண்டதற்கு முரணாக விடுதியில் தங்கியிருந்த மாணவனை கல்லூரியை விட்டு வெளியேற்றியதை செப்டம்பர் 3-ம் தேதி மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர். அப்போது கல்லூரி நிர்வாக அதிகாரியான ஐக்கிய கிறிஸ்தவ பேரவையைச் சேர்ந்த தியோடர் சாம் என்பவர், “இது எங்கள் இடம், நாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம். நாங்கள் போராட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வோம்” என்று கூறியதோடு மாணவர்களை அடிக்கவும் செய்திருக்கிறார்.

இந்த தியோடர் சாம்தான் வேறுபல கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடிய சமயங்களில் அங்கு சென்று அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிக் கொண்டவர். சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து இப்போது வெளியேறியவர்.

மேலும், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தின் அடாவடியை தட்டிக் கேட்ட மாணவர்களில் முன்னணியாக நின்றவர்களை செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்திருக்கின்றனர்.

காவல்துறை ஜேம்ஸ் கல்லூரியில் ஊதியம் பெறுவது போன்று கல்லூரிக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் 9-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளுடன் மனு கொடுத்தனர்.

  • சட்ட விரோதமாக அபராதம் வசூலிக்கும் கல்லூரி சேர்மன் ஜேம்ஸ் பிரேம்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சேர்மனுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் எவ்வித காரணமும் இன்றி அபராதம் என்று அடாவடியாக மாணவர்களிடம் வசூலித்த பணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று துறைக்கு தொடர்பில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவர்களை துன்புறுத்தியதற்கு கல்லூரி சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று கூறி ஏமாற்றி பணம் வசூல் செய்ததற்கும், மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக காவல்துறையில் பொய்புகார் கூறியதற்கும் கல்லூரி சேர்மன் மற்றும் ஓட்டுநர் ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று ஏமாற்றியதை கேள்வி கேட்டதற்காக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள்
    அகிலேஷ் ,ஐடி மூன்றாம் ஆண்டு
    எவின், எலக்ட்ரிகல் நான்காம் ஆண்டு
    எஸ்தர், எலக்ட்ரிகல் மூன்றாம் ஆண்டு
    செல்வ அசோக், எலக்ட்ரிகல் மூன்றாம் ஆண்டு
    ஆகியோரை எந்த நிபந்தனையுமின்றி மீண்டும் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்திய பின்பும், அதை மாணவர்களிடம் மறைத்து அதே மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்ததற்கு சேர்மன் ஜேம்ஸ் பிரேம்குமார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • கல்லூரி நிர்வாகம், சேர்மன் ஆகியோரின் அடாவடித்தன்மை, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத அபராத வசூல் ஆகியவற்றை கேள்வி கேட்டதற்காகவும் இது குறித்து புகார் செய்ததற்காகவும் எதிர்காலத்தில் எந்த விதத்திலும் பழிவாங்குதல் நடவடிக்கையில் சேர்மன் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஈடுபடாதவாறு பாதுகாப்பு தர வேண்டும்.

மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 36 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாணவர்களையே குற்றவாளிகள் போல சித்தரித்து பேசியுள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு, தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சட்ட விரோதமாக அபராதம் விதிப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறி விட்டார்.

மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக இதுவரை விதிக்கப்பட்ட அபராதங்களை அனைத்து மாணவர்களுக்கும் ரத்து செய்து விட்டதாக செய்தி கசிய விட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். போராடிய மாணவர்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்வது பற்றி எதுவும் கூறவில்லை, மாறாக ஒவ்வொரு மாணவர் பெற்றோருக்கும் தொடர்பு கொண்டு உங்கள் மகன் கல்லூரியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான், கலாட்டா பண்ணுகிறான் என்று பீதியூட்டி அவர்கள் மூலம் மாணவர்களை பின்வாங்கச் செய்யும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. மேலும் மாணவர்களை துறைரீதியாக அழைத்து ஒருவருக்கொருவர் ஒற்றுமை ஏற்படாதவாறு பிரிவினையூட்டி வருகிறது.

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி அங்கு படிக்கும் அனைத்து மாணவர்களையும் கொள்ளையடிக்கின்றது என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும். துறை ரீதியாக பிரிந்து போவது என்பது கேள்விக்கு இடமின்றி கல்லூரி நிர்வாகம் கொள்ளையடிப்பதற்கு மாணவர்களே வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும்.

கல்லூரி நிர்வாகத்தை வீரமுடன் தட்டிக் கேட்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது சக மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

அடாவடியாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகத்திடம் தன்மானத்தை இழக்க விரும்பாமல் போராடும் மாணவர்களுக்கு துணை நிற்பது சக மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்

தகவல்

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
நாகர்கோவில்.

விஷக்காலிகள்

0

“ஏய்… சின்னண்ணா நம்மூர் கயினி வெளியில எலி புடிக்க வருவாரே, பாவம் அவுரு, செத்துட்டார் தெரியுமா?…”

“யாரு வில்லியா…?…!” ஆச்சரியமாய் ஆரம்பித்த ஆதிகேசவன் சற்றுயோசித்து “வில்லி போய் பாம்பு கடிச்சி செத்துட்டாரா?” நிறுத்தி நம்பிக்கையில்லாமல் கேட்டான். “இன்னா கிண்டல் பண்றயா நாயே…” என்று கேலி, கோபம், ஆதங்கம், வேதனை அனைத்தும் கலந்த குரலில் மறுபடி மெதுவாகக் கேட்டான்.

“அய்ய… மூஞ்சப்பாரு, எது எதுல கிண்டல் பன்னுவாங்கன்னு வெவஸ்தையே இல்ல உனக்கு” உதடுகள் துடிக்க புருவங்களை நெருக்கிக் கொண்டு சற்று கோபமாகவே ஷானு சொன்னாள்.

“இல்லம்மா, எப்பேர்க் கொத்த பாம்புக் கடிக்கும் வெறும் பச்செல மருந்த குடுத்து, வைத்தியம் பாத்து செரியாக்குற வில்லி போய் பாம்பு கடிச்ச செத்துட்டார்னா நம்பவா முடியுது… ” சிறிதே நம்பிக்கை வந்தவன் நினைவுகள் பின்னுக்கு ஓடின.

“உனக்கு தெரியுமா ஷானு… ம்… நீயெல்லாம் அப்ப பொறக்கவே இல்ல நானே அஞ்சாவுதுதான் படிக்கர(ன்).”

“ஒரு நாள் ராத்திரி நல்ல அம்மாச கருக்கல் பன்னெண்டு மணியிருக்கும்; திடீர்னு கோழிகத்தற சத்தம் கேட்டு இன்னாடா இன்நேரத்துல கத்துத, காட்டு பூனை கீட்டுபூன வந்து புடிக்குதா, பொத்த கூடையால இல்ல கோழிகவுத்தம்னு துடிச்சிபுடிச்சு எழுந்து ஓடி கூடைய தொட்டுகீறாரு நைனா.

“சுருக்குனு குத்திகீது. ஒடனே இருட்ல இன்னாடா குத்துதன்னு, பக்கத்துல தடவினா அடுப்புக்கு தறிச்சி வக்கும் வேலிக்காத்தான் முள்ளைகூட காணல. சந்தேகம் வந்து ‘ஜ்ஜேய் பொண்ண கருக்காமலையா சீக்கரம் வெளக்க கொளுத்தியா, இன்னமோ சுருக் சுருக்குனு குத்துனமாரி இருந்திச்சி, ….ன்னதும் வாரிசுருட்டிக்கினு சித்தி ஓடி காலெளக்க (காடா விளக்கு) கொளுத்தியாந்து பாத்தா, நல்லபாம்பு கோழிகாலபோட்டு வலுவா பின்னிக்கினு தலைய கூடை பொத்தல் வழியா வெளிய வுட்டு நட்டுகினு பாத்துங்கீது.

“இன்னா பண்ணுவ, சித்தி பாவம் ‘கூவோ மொறையோன்னு’ கத்தி கூச்சல் போட்டதுல நம்ம சந்து ஜெனம் பூரா கூடிப்போச்சி. மாரிமுத்து அவுங்க அப்பன் ஓடியாந்து, இடுப்புல கட்டியிருந்த அண்ணாகவுர அறத்து கடிவாய்க்கு மேல நல்லா விகிஞ்ஜி கட்டு போட்டாரு.

“நடந்தா வெசம் விறுவிறுன்னு ஏறி தலமாடு கொண்டுடும்னு, கட்டல்ல படுக்கவச்சி ரெண்டுபேரா தலமேலையே தூக்கிக்கினு ஓடனாங்க. நாங்கூடத்தான்…

“மணி ஒன்னு ஒன்ற இருக்கும், கொரல் குடுத்தத்தான் தாமசம், அந்த வில்லி அறக்க பறக்க எழுந்து வெளிய ஓடியாந்து, இன்னா ஏதுன்னு விஷயத்த கேட்டு. ‘நீங்க யாருனா கடிவாய கடிச்சி வெசத்த உறிஞ்சி எடுத்தீங்களா சாமி…’ன்னதும், இவுங்க எல்லாரும் ‘இல்லை..ய்ய்யா கட்டுத்தான் போட்டோம்’னாங்க. அப்பல்லாம் நைனாவுக்கு ஒடம்பெல்லாம் தண்ணியா உட்டு தன்னமீறி போச்சி. கீரத்தண்டுமேரி வெலவெலன்னு உழுந்துட்டாரு.

“இந்த விசயத்த எல்லாம் கேட்டுக்குனே, சிடுக்கா நாழியில பச்செல மூலிகைய எடுத்தாந்து ‘நாலு கடி’ மருந்த உள்ளுக்கு குடுத்தாரு. நல்ல வேள வாந்தி வரல, வாந்தி மட்டும் வந்திருந்திச்சு ஆள கண்டுபுடிக்கறது அறிகண்ணாயமாயிட்டும் இருக்கும்.

“அன்னக்கி ராத்திரி வில்லிவூட்டு புள்ளகுட்டியெல்லாம் முழிச்சிக்கிச்சி. சும்மா சொல்லக்கூடாது. பொழுந்து விடியரவெரிக்கும் ஒருத்தரும் கண்ணாட கண்ணு மூடல, அந்தாளு சம்சாரம் பாவம் அந்நேரத்துல சூடா சுக்காப்பி போட்டு போனஜெனம் பூராத்துக்கும் குடுத்தாங்க.

“நாங்கூட குடிச்சேன், நல்லா நெனப்பு கீது ஷானு” என்றவன் சொல்லும்போது இப்போதுதான் அந்த காப்பியை குடித்ததுபோல் ரசித்து எச்சிலை கூட்டிக் கூட்டி விழுங்கினான்.

“அத்தோடவா வுட்டாங்க, பாம்பு கடிபட்டவங்க இருவத்தினாலு மணி நேரம் தூங்கக்கூடாதுல்லா, அதால வில்லிவூட்டு பசங்க அவுங்க கொலதெய்வத்த வேண்டி கூத்தாடுறதும், வில்லிங்க வீரத்த கதையா சொல்லும் ‘வில்லி வில்லி நாங்கத்தான் வேட்டக்காரு நாங்கத்தான்…’ பாட்ட பாடறதும், ஒரே அமுக்களம்.

“பளபளன்னு பொழுது வெடிஞ்சதும் சூரியன கும்புட்டு ஒரு வேள மருந்த கைல குடுத்து, ‘இனிமே கல்லால அடிச்சாலும் சாவு கெடையாது பயப்படாத கூட்டிம்போங்கம்மா” என்று சொன்னவர், “சொல்ல மறந்துட்டேன் மூணு நாளுக்கு உப்பில்லாத கஞ்சிதான் குடிக்கணும். நெனப்பு இருக்கட்டும் நாட்டு மருந்து பத்தியம் இல்லான்னா உசுருக்கு ஆபத்தாயிடும்”ன்னு தடித்த குரல்ல சொன்னார்.

சொன்னது சொல்லாங்காட்டியும், சித்தி அவர் கால்ல உழுந்து நீ நல்லா இருக்கணும் எப்பா, எனுக்கு மடிப்பிச்ச குடுத்த மவராசான்னு சொல்லிக்கினே எழுந்து, முந்தானியில முடிஞ்சி வச்சிருந்த பத்து ரூவாவ அவுத்து குடுத்தா.

வில்லி நெருப்ப தொட்டது போல “எம்மா இன்னா காரியம் பன்ன எங்க கொலதேவத டேண்டமாரிய பத்தி உனுக்கு தெரியாதா, இந்த பூலோக மக்க(ள்) உசுரகாக்கற இந்த மருந்துக்கு கூலியா பச்சதண்ணிகூட வாங்கமாட்டாம்னு சத்தியவாக்கு பண்ணிட்டு தான், ஆத்தா நல்ல பச்சலமூலிகய வச்சி படைச்சிட்டு மருந்தையே அம்மியில வச்சி அரைப்போம். அவ வாக்க மீறுனா எங்க குடும்பத்த வரக்கா சொறக்காவா ஆக்கிடுவான்னு சொல்லி வானத்தைப் பாத்து கும்பிட்டார்.

‘உடனே என்ன மன்னிச்சிடு யாம் பத்தினி மாரியம்மா புத்திகெட்டன் பீயத்துன்னன்’னு இன்னாவோ ஆணைக்கி கட்டுப்பட்டாமாரி ரெண்டு கைகளாலும் கன்னத்தில் மாறிமாறி புத்தி போட்டுக்குனு அழுதுடிச்சி சித்தி. வூட்டுக்குப் போவ காலெடுத்து வச்சது திரும்பி, ‘ஐயா மறந்தே பூட்டன் இவர கூட்டியார அவுசரத்துல பாம்பு எந்த பக்கம் போச்சின்னு அடிக்காம உட்டுட்டு ஓடியாந்துட்டம். இன்னிக்கி வூட்டான்ட வந்து அந்த கருமத்த புடிச்சாந்துடு சாமி, புள்ளகுட்டிவ நடமாடர எடம்’ன்னுட்டு வூட்டுக்கு கெளம்பினாங்க.

“கோழிய கடிச்சிபோட்டு சாக்கடை உள்ளே கொட்டிவச்சிருந்த பனங்கொட்டைங்க சந்துல போய் கமுக்கமா படுத்துக்குனு இருக்குது. இது தெரியாம மருந்து குடுத்து கூட்டியாந்த மனுசன வாசல்லயே ஒக்கார வச்சிட்டாங்க, பாம்பு எங்க வூட்டு உள்ளே போய்டுச்சோன்ற பயத்துல.

“சிவாவும், பாலண்ணனும் வாசல் எதுருல ஊடு கட்ட பதுவுபோட்டு வைச்சிருந்த பனஓலை, வெருவு எல்லாத்தையும் கலைச்சி போட்டுட்டு தேடினாங்க.

“ஆனா வில்லி வந்த ஒடன சொல்லிவச்சமேரி எறும்பு மொச்சிங்கெடந்த கோழிய பாத்துட்டு, நேரா அந்த பாம்பு போன வழிய கண்டு போய், கோமணத்த நல்லா இருக்கிவுட்டுக்கினு இடுப்புல கட்டிவச்சிருந்த மருந்த எடுத்து வாய்ல அடக்கிக்கினு பனங்கொட்டைங்க சந்துல கையவுட்டு லபுக்குனு புடிச்சி அசால்ட்டா இழுத்தார், மொழங்கால் கனத்துக்கு நெளியுது. வில்லிங்களுக்கு பாம்பு போற காலடி கரக்ட்டா தெரியும், அதான் பாம்பு எங்க போனாலும் புடிச்சிடறாங்க.

“அப்பவே வாய நெகிட்டி வெஷப்பல்ல புடிங்கிட்டு வாசல்ல உட்டாரு; மொறம் அகலத்துக்கு படம் எடுத்துக்கினு, பந்து எகுருறமாதிரி மனசன் மேல சீறிக்கினு பாயுது. நானு, மோகனு, கோய்ந்து எல்லாம், பெரியவங்களும் எங்ககூட சுத்தி நின்னுக்கினு வேடிக்க பாத்தோம்.

கொஞ்ச நேரம் வெள்ளாட்டு காட்டிட்டு பேனாகெத்தியால தலையாண்ட ஒரு கீறு கீறி புடிச்சி இஸ்தாரு. அப்பிடியே சொக்காய கழட்டுன மாதிரி தோலு உரிச்சிக்கினு வந்திச்சி.

“தோல உரிச்சிட்டதும் உக்கரம் ஜாஸ்தி ஆய்டிச்சி, வில்லிய எகிறி எகிறி அடிக்கிது. அத புடிச்சி சின்ன பசங்க மேல போடறமாதிரி காட்னதும் நான் ஓடியாந்து எங்க வூட்டு உள்ளே பூந்துக்கின(ன்).

“வூட்ட சுத்தி உப்பு மந்திரிச்சி கொட்டினார். உப்பு மந்திரிச்சி போட்டார்னா அத்தாண்டி பாம்பு உள்ளே வராது. வில்லி நாகராஜன் கிட்ட சத்தியம் வாங்கிடுவார். அத மீறி உள்ளே வந்த எந்த பாம்பா இருந்தாலும் செத்துடும்.

“சித்திய கூப்புட்டு ‘கோழிகள இங்க கவுக்கவேணாம். கோழிபீநாத்தத்துக்குத்தான் நல்லபாம்பு வரும். அதால இனிமே அந்த பூர்சமரத்து ஒட்டி தனியா கவுருங்கன்’னுட்டு, பாம்பு தோல கழுத்துல போட்டுக்குனு, உரிச்சிட்ட பாம்ப கைல சுத்தி புடிச்சிக்கினு, வில்லி தெருவுல நடந்து போவும்போது ஊர் ஜெனமே வாய்மேல வெரல வச்சிக்கினு பாத்திச்சி. சூராதி சூரனை பார்க்கறமேரி.

***

முடிந்த அளவு ஞாபகம் வந்த விசயங்களைக் கூறியதற்கே ஆதிகேசவனைச் சுற்றி சின்னபிள்ளைகள் கூட்டம் கூடிவிட்டது அதை பெருமையுடன் பார்த்து ஒரு மெல்லிய சோகம் கலந்த புன்னகையை வெளியிட்டான் ஆதி.

“ஆமாம்… யாரு டேண்ட டேண்ட டேண்ட மாரியம்மாளே…” பாட்டுப் பாடி பொம்பள வேஷம் கட்டிக்கினு ஆடுவரே அவரையா சொல்ற.” என்ற ஆதியின் மனதுக்குள் வில்லியர் மாரியாத்தா கும்பிடுவதற்காக ஆளாளுக்கு வேஷம் கட்டிக்கொண்டு வருவதும்; ஒத்தை மேளத்தை (பறை) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாய் சென்று ஆடும் ஆட்டங்களும், வித விதமான ராகங்களில் ஏற்ற இறக்கங்களுடன் பாடும் பாடல்களும் அலை அலையாய் வந்து சென்றன.

“இல்லை சின்னண்ணா மோளம் அடிச்சிக்கினே ஆடுவாரே அசப்புல நம்ம ஏமாறச்சக்கண்ணு பெரிப்பா மாதிரி…” ஷானு வார்த்தையை இழுத்து முடிப்பதற்குள் கெவுளியைப்போல் உச்சுக்கொட்டினான் ஆதி.

“அய்யய்யோ… ரெண்டு பேருமே மருந்து குடுப்பாங்க. நான் முன்ன சொல்லல நைனாவுக்கு மருந்து குடுத்தார்னு அவரும்மா, ச்… எத்தினி பேருக்கு பாம்பு வெஷத்துலர்ந்து காப்பாத்தி உசுர் குடுத்த மனுசன் கடைசில பாம்பே அவுருக்கு எமனாய்ட்டு கீதே.”

நுரையீரலுக்குள் உருவான வெப்பக்காற்றை ஸ்…. ஸ்சூ என ஊதி வெளியேற்றிவிட்டு மறுபடி நினைவில் நீந்திப் பேச ஆரம்பித்தான் ஆதி.

“நல்லா நெட்ட பனையாட்டம் இன்னா தேககட்டு. மல்லாட்ட கொல்லையில எலிபுடிக்க வந்தார்னா ஊதலான் வச்சி பொகை ஊதி எத்தினி எலிபுடிச்சாலும், நாங்க சின்ன பசங்கள்ளாம் சுட்டுத்தின எலிவேணுன்னு கேட்டா புடிச்சத பூராத்தையும் எங்களாண்ட குடுத்துட்டு மொளச்சி போன நெல்லையும், மல்லாட்டையையும் தான் அள்ளிக்கினு போவார்.

“களத்துமேட்டில் நெல்லோ, மொளகாயோ எது காஞ்சிங்கெடந்தாலும் யாரும் காவலுக்கு இல்லாட்டா கூட கையவச்சி தொடமாட்டார் நம்பளா மனசு வந்து குடுத்தா உண்டு.

“ச்சே எப்பேர்பட்ட மனுசனுக்கெல்லாம் எப்பிடியெல்லாம் சாவுவந்து தொலைக்குது… அது செரி ஷானு. எங்க… எப்பிடி செத்தாரு. மருந்து கைல வச்சில்லய்யா…

ஆதியை மறித்து ஷானு வில்லிக்கு நேர்ந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

“நம்ம உண்டை பெரியப்பா வூட்டு கயினில்ல மடுவா இருக்கு. அங்க… அந்த கயினில நண்டு வள நோண்டும் போது நோண்ட நோண்ட ஆழமா போய்க்கீது “எம்மா பெரிய ஆழன்டா எப்பான்தான் கையவுட்டு பாத்துக்கீறாரு. வலைல இருந்த பாம்பு வெடுக்குனு கைய கடிச்சிகீது. அப்ப இவுரு “கைய்யாடி கடிக்கிர உன்ன உப்பு மொளகா தடவி சுட்டு கடவாய்ல வச்சி கடிக்காம வுடரதில்லன்னு” புடிச்சி இஸ்துகீறாரு. நல்லா வெட பாம்பு ஒரு ஆள் நீட்டுக்கு கைல நாய் கோத்துபுடுங்கறமாறி புடுங்கிக்கினு தொங்குதாம்.”

“…ம்… டக்குனு மடியில கட்டியிருந்த பச்செல மருந்த வாயில போட்டு அடக்கி சிரிச்சிக்கினே என்னையாடி கடிக்கர உன்னை எலியின்னுல்ல நெனச்சேன் இன்னா பண்றன் பார்னு பல்ல ஒடச்சிட்டு தோலை உரிச்சி வேஷ்டியில் வைச்சி மூட்டை கட்டிக்கினு பாம்ப அடிச்சி கெணத்து மேட்டில் பள்ளந்தோண்டி பொதச்சிட்டு பஸ் ஸ்டேண்டு போவாங்காட்டியும் தலை சுத்த ஆரம்பிச்சிட்டு இருக்குது.

“அய்யய்யோ அப்பறம்…”- ஆதி பதறினான்.

“பயந்துபோய் ராஜி டாக்கடர் வூட்டுக்கு ஓடி இந்தமாரி இந்தமாரின்னு வெவரத்த அழமாட்டாத கொரையா சொல்லிகீறாரு. அதுக்கு அந்த டாக்கடர் முன்னூத்தி அம்பது ரூவா ஆவும்ன்னானாம். “ஆனா ஆயிட்டு போவுது வுசுருக்கு மிஞ்சியின்னா மசுரு சொல்லும்மா” என்று திண்ணையிலிருந்த ஆதி மேடை நுனிக்கே வந்துவிட்டான்.

“பாம்பு தோல், சேறும் மண்ணுமா கெடந்த மொளவிட்ட நெல்லு, மல்லாட்ட எல்லாத்தையும் சேத்து, கிழிஞ்சி போன அழுக்கு வேஷ்ட்டியால கட்டின மூட்டைய செவுத்து ஓரமா வச்சிட்டு, காச வூட்டுக்கு தான் போய் எடுத்தார்னும்னு வில்லி முடிக்காங்காட்டியும். “போய்யா… போய்… மொதல்ல காச எடுத்துட்டு வான்”னு சொன்னானாம் ராஜி.

“அடக் கொடும்… பாவி…” கண்களை மூடி மூடித் திறந்து கொண்டு ஆதி சொன்னதும், ஷானுவும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பேசினாள்.

“பாவம் அந்த வில்லி. ராஜி டாக்கட்டர் கால்ல நெடுஞ்சாண்கட்டையா விலுந்து ரெண்டு காலையும் கெட்டியமா புடிச்சிக்கினு, ‘அய்யா என் உசுர காப்பாத்துங்க நான் இப்பிடியே காட்லர்ந்து தான் வர்ரேன். சின்னதும் சீத்தானுமா ஆறும் பொட்டபுள்ளங்க சாமி, என்னை வுட்டா அவுகளுக்கு நாதி கெடையாது. மருந்த தாங்க நான் வூட்டுக்கு போய் பணத்த கொண்டாந்து தந்துடரேன். உங்க புள்ள குட்டிவளுக்கு கோடி… கோடி… புண்ணியம் வந்து சேரும்’ன்னு. இன்னான்னாவோ சொல்லி அழுது பொலம்பி கெஞ்சியிருக்கறார். ‘வாத்தியார் கூலியும் வைத்தியர் கூலியும் குடுக்காதவங்களுக்கு எமதண்டியில இன்னா தெண்டனன்னு எனுக்கு தெரியும் சாமின்னு கூட சொல்லி கலங்கியிருக்கார்.

“அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி… கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.

“கண்டிப்பா நீ ஒன்னாபாரு ராஜி செத்தான்னா அவனுக்கு அட்டகுழி, அரணகுழி, பாம்பு குழி, பல்லி குழிதான்….” எச்சிலை கூட்டி கூட்டி முழுங்கி அழுத்தி அழுத்தி கூறும்போது ஷானுவின் கண்கள் கலங்கியிருந்தன.

“யார் காந்தி டாக்டரா, வைஜெயந்திமாலாவா நல்லா யோசிச்சி சொல்லு, ராஜி டாக்டர் அப்படி செஞ்சிருக்கமாட்டாரே.”

இவ்வளவையும் கேட்டபின்பு ஆதி இப்படி கேட்டது ஷானுவுக்கு அளவில்லா கோபத்தை உண்டாக்கியது.

“நான், ராஜி… ராஜின்னு.. படிச்சி படிச்சி சொல்ரன் வெடிய வெடிய ராமாயணம் கேட கதயா இன்னா பேசர நீ” என்று நிறுத்தினாள் ஷானு.

ச்சே. ஒரு டாக்டர், தாசிகூட செய்யக்கூசுற காரியமல்லவா, இவன்லாம் நினைக்க நினைக்க உலைகொதிப்பது போல் கொங்கியது கோபம். இதுநாள் வரை மருத்துவர்கள் மீது ஆதி வைத்திருந்த அதீதமரியாதைகள் என்ன ஆனதென்று அவனுக்கே தெரியவில்லை.

“அந்த பொறுக்கி ராஸ்கோலை சும்மாவா வுட்டாங்க ஜனங்க.”

“தெற்கசேரி ஜெனங்க மட்டும்….” ஷானு வாயெடுப்பதற்குள் இன்னொரு குரல் எழுந்தது.

“ஆமாம் போய் கீய்… ச்சிட்டாரு பணம் இல்லாம எவன்தான் மருந்து குடுப்பான்” கட்டையாக சம்பத்தின் குரல். இவன் எப்ப வந்தான் இங்க என்பது போல ஆதி திரும்பிப் பார்த்தான்.

“டே… செம்போத்து உசுர்டா காலகாலப்புடிச்சி செஞ்சிக்கீறான். நெனச்சாலே நெஞ்சி அபுக்குன்னுதுடா.”

“ஆமாம் பெர்… ரீ… ய உசுரு அவன் எம்மாம் செலவு பண்ணி படிச்சி பட்டம் வாங்கியிருப்பான்.”

“…யான்டா டேய்… டாக்டருக்கு படிக்கறது ஊர் ஜெனங்களுக்கு உயிர்பிச்ச குடுக்கடா, ஏழை பாழை தாலியறுத்து எள்ளுந்தர்ப்பனை பண்ரதுக்கா இல்ல.”

“போடா டேய் அவன சாவடிச்சது இன்னாவோ டாக்கடர்ன்ர மாதிரி பேசற ஃபஸ்ட் எயுடு கூட பண்ணிக்க தெரியாதது அந்த வி…ல்…லியோட தப்பு”

‘வில்லி’ என்ற பெயரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக உச்சரித்தான் சம்பத் தொடர்ந்து.

“கண்ட கண்ட மருந்தல்லாம் வேற தின்றது திருந்தாத ஜென்மங்க, அது சரி மருந்துன்னா டாக்டருக்கு மட்டும் சும்மாவா கெடக்கிது, நீயெல்லாம் இருந்தா வில்லிய திரும்பி கூட பாத்திருக்க மாட்ட ஏதோ அவரா இருக்கவோ நின்னு பதிலாவது சொன்னாரு”

நிறுத்தி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு,

“நாய்ங்க ஒரு டாக்டர்னுகூட பாக்காம வூட்டு ஜன்னல் கண்ணாடியெல்லாம் ஒடச்சியிருக்குதுங்க. இன்னாதான் இருந்தாலும் சேரி புத்திய காட்டிருச்சிங்க பார்”

நிறுத்தியதுதான் தாமதம்.

“அந்த நாதாகு படிச்ச புத்திய கான்னதுக்கப்புறம் இவுங்க சேரி புத்திய காட்டினதுல இன்னாடா தப்பு. அவன போஸ்ட் கம்பத்துல கட்டி செருப்பெடுத்து சிங்காரிச்சியிருக்கணும்டா ஏற… எறங்க… அத செய்யாம வுட்டதுதான் ஜெனங்க தப்பு” என்று வரவோட்டில் போட்ட நெல்மணிகளைப்போல் பொறிந்து தள்ளிவிட்டு “இதுக்கு மேல அந்தப் பரதேசி நாய்க்கு பரிஞ்சி பேசன…” பட்டென்று நிறுத்தி சரசரவென்று வீடுபோய்ச் சேர்ந்தான் ஆதிகேசவன்.

இரவு நீண்ட நேரம் ஆதிக்கு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் இவன் கற்பனை செய்திருந்த டாக்டர்கள் நினைவுத்திரையில் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொண்டு பெரிய பெரிய கட்டிடங்களின் வரண்டாக்களில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

“டாக்டருக்கு படிக்கரதுதாண்டா ஒலகத்திலயே புண்ணியமான படிப்பு”

“டாக்டருங்க தெய்வத்துக்குச் சமானம்”

“கட்ன பொண்டாட்டிங்கூட படுத்திருந்தாகூட நோவாளி வந்தா எழுந்து வந்து பாக்கணும்னு படிக்கப் போவும் போதே சத்தியவாக்கு வாங்கிக்குவாங்களாம்”

அம்மாவும், அன்னக்கிளி அத்தையும் சிறியவனாய் இருந்தபோது பேசிக்கொண்ட வார்த்தைகள் பாழுங்கிணற்றில் போட்ட கல்லின் ஒலியாய் விட்டுவிட்டு ஒலித்தன.

எப்போது தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை படுபயங்கரமான கனவுகள், ஆதிகேசவன் கழனிக்கு குளிக்க செல்கிறான். அதுவரை மீன்கள் மட்டுமே நீந்திக் கொண்டிருந்த தண்ணீரில் இவன் இறங்கியவுடன் கிணறு முழுக்க தண்ணீர் பாம்புகள் நீந்துகின்றன. திடீரென்று எல்லாவற்றுக்கும் பெரிய பாம்பு ஒன்று சிரித்துக் கொண்டே இவனைத் துரத்துகிறது.

பயந்துபோய் வேகமாய் நீந்தி படியேற முயல்கிறான் கால்கள் தன்னாலேயே பின்னுக்கு இழுக்கின்றனவே தவிர முன்னால் செல்வது கடினமாக இருக்கிறது. ஆனால் பாம்பு மட்டும் சர்… சர் என்று ராக்கெட் வேகத்தில் பாய்கிறது. படியேறி எப்படியோ மேலே வந்து மூச்சு விடும்போது பாம்புக்கு இரண்டு பக்கமும் ரெக்கை முளைத்து பறந்து தரைக்கு வந்து உடனே நல்ல பாம்பாக மாறித் துரத்துகிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்று ஓடும்போது காலில் எட்டி குத்திவிட்டு மீண்டும் சீறுகிறது பாம்பு. சரி ஏதாவது வைத்தியம் பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் விஷம் ஏறிவிழுந்து தான் செத்துவிட்டது போல் ஆன உடன், பட்டென்று கனவில் தொடர்பு அறுந்து ஆதிகேசவன் கண் எதிரிலேயே வில்லி வாயில் நொப்பும் நுரையும் தள்ளி சுருண்டு விழுந்து சாகிறான்

ராஜி டாக்டர் அலட்சியமாய் திரும்பிச் சென்று கதவடைக்கப் போகிறான் உடனே அலறி துடித்து “டாக்டர் அந்த வில்லிய பாம்பு கடிச்சிடிச்சி காப்பாத்துங்க காசு நான் தரேன் காப்பாத்துங்க” என்று தூக்கக் கலக்கத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொண்டு கத்தியவுடன் பக்கத்து திண்ணையில் படுத்திருந்த அவன் அம்மா அன்னம்மா “இன்னாடா பையா எங்க… இன்னா பாம்பு” என்று கூறிக்கொண்டே தட்டுத்தடுமாறி ஓடிவந்து, இவன் கையை காலை பிடித்து உருவிவிட்டுக் கொண்டே பதறினாள்.

“இன்னா எப்பா பயந்துகியந்து பூட்டாயா” என்று அம்மா கேட்பதைக் கூட உணர முடியாமல் ஆதிகேசவன் “அடப்பாவி… சாவுடிச்சிட்டயே…. ராஜி… வில்லி… டாக்டர்…. என முணகிக் கொண்டே இருந்தான்.

– நிதி. கோமேதகம்
______________________

புதிய கலாச்சாரம் 1999
______________________

கோடீசுவரக் கொள்ளையர்கள் !

4

முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், திலிப் சாங்வி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி: கோடீசுவரக் கொள்ளையர்கள்!

1990-களில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தரகு முதலாளிகள்தான் உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இப்பொழுது அந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ 46. அன்று 32 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அக்கோடீசுவர முதலாளிகளின் சொத்து மதிப்பு, இன்று 17,630 கோடி டாலர்களாக விசுவரூபம் எடுத்திருக்கிறது. இந்த 46 கோடீசுவர முதலாளிகளுள் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ஆர்சிலர் ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர் லட்சுமி மிட்டல், சன் ஃபார்மா அதிபர் திலிப் சாங்வி, விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் நிறுவனப் பங்குதாரர் பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி ஆகிய ஐந்து பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் 5,23,897 கோடி ரூபாயாகும். இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் சரிபாதி இந்த ஐந்து தரகு முதலாளிகளிடம் குவிந்திருப்பதாக (8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிடுகிறது.

10-poorஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், வெறும் 5 பேர் அடைந்திருக்கும் ‘வளர்ச்சி’ மலைக்கத்தக்கதாக இருக்கும்பொழுது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ பேரழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

  • இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் (64 கோடி பேர்) வறுமையின் நிழலில் வாழ்கின்றனர்.
  • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5,000 குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல், நோய் தாக்குண்டு இறந்து போகின்றனர். உலகின் மொத்தமுள்ள நோஞ்சான் குழந்தைகளுள் 46 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாகும்.
  • கொடிய பட்டினியால் தாக்குண்டுள்ள 79 நாடுகளில் இந்தியா 65-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • இந்திய விவசாயிகளுள் 49 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்குண்டு உள்ளன. இந்தக் குடும்பங்களின் சராசரி கடன் சுமை தலா 25,891 ரூபாய். கடந்த இருபது ஆண்டுகளில் கடனை அடைக்க வழியின்றித் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,70,490.
  • தனியார்மயத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகளின் ஆண்டு வருமானம் 30,000 மடங்கு அதிகரித்திருக்கும்பொழுது, இந்தியத் தொழிலாளர்களின் கூலி 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபொழுதில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் – அதாவது தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படும் வேகம் 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இவை போன்ற மலைக்கும் மடுவிற்குமான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விசயம் நிச்சயம் புலப்படும். கோடிக்கணக்கான விவசாயிகளின், தொழிலாளர்களின், பிற உழைக்கும் மக்களின் உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி, வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி, சமூக அடுக்கின் உச்சியில் இருக்கும் மேட்டுக்குடி கும்பலிடம் கொண்டுபோய் சேர்த்ததன் விளைவாகத்தான் 5 பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு 5,23,897 கோடி ரூபாயாக வீங்கிப் போயிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதிதாகப் பதவியேற்றுள்ள மோடி அரசு ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு மானியங்களை ஒழிக்க வேண்டுமென்றும், தொழிலாளர் நலச் சட்டத்தையும் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் திருத்த வேண்டுமென்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்டவற்றை அறவே நீக்க வேண்டுமென்றும் கூறி வருகிறது. மோடி அரசின் இந்த வளர்ச்சிப் பாதை இந்திய உழைக்கும் மக்களுக்குப் பேரழிவுப் பாதையேயாகும்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

மோடி தர்பார் – கார்ட்டூன்கள்

0
மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் : அரசியல் சட்டத்தைத் தாக்கும் ஹிந்து ராஷ்டிர கருத்துக்கள்
ரயில் கட்டண உயர்வு
ரயில் கட்டண உயர்வு : “எந்திரிச்சி நில்லு, இன்னும் நிறைய இருக்கு…”
மோடி மதவாதம்
“ஒரேயடியாக இல்ல, ஒரு 10 வருஷத்துக்கு மட்டும் மதவாதத்தை அணைத்து வைப்போம்” : மோடி.
அமித் ஷாவுக்கு நற்சான்றிதழ்
அமித் ஷாவுக்கும் இந்திரேஷ் குமாருக்கும் நற்சான்றிதழ் : “சீக்கிரமே, எல்லா பல்லையும் கழுவி சுத்தமா துடைச்சிரலாம்” – விசாரணை கமிஷன்.
காசா தாக்குதல்
காசாவின் மீது இசுரேல் தாக்குதல் – அமெரிக்கா, ஐநா இரட்டை வேடம்

 கார்ட்டூன்கள் : நன்றி IndiaTomorrow.net

குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

16
child-marriage

லகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ நடத்திய கூத்துகளை வெளியிடுவதில் மும்முரமாக இருந்த ஊடகங்கள் இந்த செய்தியை  கண்டு கொள்ளவில்லை.

குழந்தை திருமணம்
குழந்தைத் திருமணம்

உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வய்து வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

பீகாரில் அதிக அளவில் (68%  திருமணங்கள்) குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன். மற்ற ‘முன்னோடி’ மாநிலங்களாக ராஜஸ்தான், பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளன. இங்கும் அதிக அளவில் அதாவது 51.9% முதல் 68.2 % வரை குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாநிலங்களில் 20-24 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் இரண்டில் ஒரு பெண் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் என்கிறது அந்த அறிக்கை.

தென்னிந்தியாவில் ஒப்பீட்டளவில் குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருக்கிறது. அதே சமயத்தில் கேரளாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை. கேரளாவில் வடஇந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகரித்து வருவதால் இந்த புள்ளிவிவரம் உயருவதாக கூறுகிறார் யூனிசெஃபின் இந்திய அதிகாரி டோரா ஜியுஸ்டி.

இந்த புள்ளிவிவரத்தை நோக்கும் போது பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வடஇந்திய இந்தி மாநிலங்கள் பிற்போக்கு பழக்கங்களுக்கு பலியாகி வீழ்ந்து கிடப்பது தெரிகிறது. அதே சமயம் சுயமரியாதை இயக்கம் போன்ற பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட பழைய சென்னை மாகாண மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியுள்ளன என்பதையும் இது காட்டுகிறது.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை

குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் கூட இல்லை என்கிறது அந்த அறிக்கை. “குழந்தைத் திருமணம் கடந்து இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு சதவீதம்தான் குறைந்துவருகிறது. இப்படியே போனால் குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆகும்” என்று கவலை தெரிவித்துள்ளார் யுனெஸ்கோவின் இந்திய அதிகாரி டோரா.

குழந்தைத் திருமண ஒழிப்பு குறித்து அக்கறை கொண்டவர்கள் இந்திய வரலாற்றில் குழந்தைத் திருமண ஒழிப்பு தொடர்பாக இதுவரை நடந்துள்ள நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது அவசியம். அப்பொழுது தான் உண்மையான எதிரியை இனங்கண்டு எதிர்த்து போராட முடியும்.

ந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு வேதகாலம் தொடங்கி இன்று வரை ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. ‘பெண்குழந்தை பூப்பெய்தும் முன் திருமணம் செய்து வைக்கா விட்டால் பெற்றோர் நரகத்திற்கு செல்ல நேரிடும்’ என்றும் ‘பூப்பெய்திவிட்ட பின்னர் கணவன் இல்லை என்றால் பெண்கள் நடத்தை கெட்டு விடுவார்கள்’ என பலப்பல காரணங்களை கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறது பார்ப்பன இந்துமதம்.

அதே போல இதை எதிர்த்த போராட்டத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. குறிப்பாக இன்று நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமண தடைச் சட்டமும் அதற்கு முந்தைய சம்மத வயது சட்டமும் எளிதில் நிறைவேறி விடவில்லை. பெரியார், மலபாரி போன்றவர்கள் தொடர்ந்து இதற்காக குரல்கொடுத்து வந்தார்கள்.

1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான். சிறுமிகளை திருமணம் செய்து உடலுறவு கொள்ளுதல் என்பது அன்று வழக்கத்தில் இருந்த ஒன்று. இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரினர்கள் முற்போக்காளர்கள். இந்த விவகாரம் விவாதப் பொருளாகியது.

ஆங்கிலேய அரசு சம்மத வயது சட்டத்தை (Age of Consent Act, 1891) தாக்கல் செய்தது. இதன்படி 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று அறிவித்தது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது.

திலகர்
திலகர்

குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றதும் வெகுண்டெழுந்தார்கள் இந்து ‘தேசியவாதிகள்’. இந்த சட்டம் இந்து மதவிவகாரத்தில் தலையிடுவதாகவும், இது ஒரு  ஆபத்தான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும் கூறி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் யார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களின்  ஒருவரும் மாபெரும் தேசியவாதி என்று பார்ப்பன இந்துமத வெறியர்களால் பாராட்டப்படும் ‘லோகமானிய’ திலகர் தான் அவர்.

திலகர் தன்னுடைய கேசரி இதழில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கட்டுரைகளை எழுதினார். இந்து மதத்தின் அடிப்படை கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று  முழங்கினார். மேலும் இந்த சட்டத்திற்காக போராடிய மலபாரி என்பவர் பார்சி இனத்தவர் என்பதால் அவர் இந்து மதவிவகாரங்களில் தலையிடாமல் தன்னுடைய பார்சி இனப் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவரை கண்டித்தார் திலகர்.

விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் கட்டுவது போல இன்று திலகரை தேசியவாதியாக காட்ட இந்துத்துவா ஆதரவாளர்கள் பகீரத முயற்சி செய்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலய அரசு கொண்டு வந்ததால் தான் அந்த சட்டத்தை திலகர் எதிர்த்தார் என்று  கேலிக்குரிய வாதங்களை வைத்தாவது திலகருக்கு முட்டுக்கொடுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

அன்றைய சட்டசபைகளில் இருந்த பார்ப்பன இந்துமத வெறியர்களாலும் அந்த சட்டம்  எதிர்க்கப்பட்டது. ஆயினும் இவர்களின் எதிர்ப்புகளை மீறி சட்டம் நிறைவேறியது.

பின்னர் 1929-ல் திருமண வயதை 10 லிருந்து 14 ஆக அதிகரிக்கும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கும் இந்து சனாதனவாதிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சின் மூதாதையர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சம்மத வயது  சட்டத்தை திலகர் எதிர்த்தாரென்றால் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தை மாளவியா, முன்ஷி போன்ற இந்து மதவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக அன்றைய இந்து மன்னர்கள், சங்கராச்சாரிகள் பிரிட்டிஷ் அரச பிரதிநிதியிடம் தூது சென்றார்கள். தி இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். சில இஸ்லாமிய தலைவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக மனு செய்துள்ளார்கள்.

‘மதத்திற்கு ஆபத்து’ என்பது முதல் ‘பெண்கள் ஒழுக்கம் கெட்டுவிடுவார்கள்’ என்பது வரை பலவிதமான காரணங்களை கூறி பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். சிலர் இன்னும் நுணுக்கமான வழிகளில் பல்வேறு சூழ்ச்சிகளுடன் சட்டத்தை ஒழிக்க களமிறங்கினார்கள். குறிப்பாக மருத்துவ அடிப்படையில் குழந்தைத் திருமணம் தவறு தான் என்று ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் ‘பார்ப்பன இந்து மதம் குழந்தைத் திருமணம் செய்ய வலியுறுத்துவதால் தடைசட்டம் கொண்டு வரக்கூடாது, இது மதவிவகாரம்’ என்று சிலர் எதிர்த்தனர். இன்று அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை வரையில் பார்ப்பன இந்துத்துவவாதிகளின் வாதம் இதுதான்.

மூஞ்சே
பி. எஸ். மூஞ்சே

இந்த காலகட்டம் பெரியாரின் சுயமரியாதை இயக்க காலகட்டமாகும். இவர்களை பெரியார் அம்பலப்படுத்தினார். குடியரசு இதழில் இது குறித்து பல கட்டுரைகளை எழுதினார். “பார்ப்பனர்கள் சட்டத்தை எதிர்த்து கூட்டம் போட்டால் அதே இடத்தில் நீங்களும் சட்டத்தை ஆதரித்து கூட்டம் போடுங்கள்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

“குழந்தைத் திருமண தடுப்பு விஷயமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்து சட்டசபைகளில் பிரஸ்தாபித்து வந்திருப்பது யாவருக்கும் தெரியும். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் வைதீகர்கள் என்பவர்களும், இந்து மதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பவர்களும், தேசியவாதிகள் என்பவர்களும் ஆட்சேபணை செய்துகொண்டே தான் வந்திருக்கிறார்கள். இந்த சமயத்திலும் தேசியவாதிகளே பெரும் முட்டுக்கட்டையாக நின்று எவ்வளவோ சூழ்ச்சிகளுடன் ஆட்சேபித்து பார்த்திருக்கின்றார்கள்.

‘பழுத்த தேசாபிமானிகளும் பிரபல தேசியத் தலைவர்’ களுமாகிய திருவாளர்கள் மாளவியா, கேல்கார், மூஞ்சி, எம்.கே.ஆச்சாரியார், கே.வி.ரங்கசாமி ஐயங்கார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார், மோதிலால் நேரு ஆகியவர்கள் எல்லாருமே இந்த இருபதாம் நூற்றாண்டில் இடையூறாக இருந்திருக்கிறார்கள் …..

மேற்கூறிய எல்லா தேசியவாதிகளும் மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லிக்கொண்டே ஆட்சேபித்திருக்கிறார்களென்றால் இனி ஒப்புக்கொள்ள முடியாத விசயத்தில் இவர்கள் ஆட்சேபணை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்த்தால் விளங்காமல் போகாது.”

திரு மாளவியா அவர்கள் ஆட்சேபணைக்கு சொல்லப்பட்ட காரணமென்றால் “14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லது தான். ஆனாலும் ராஜியை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்” என்றார்.

திரு. மூஞ்சே சொன்ன ஆட்சேபணையை கவனிப்போம். இவர் பார்ப்பன – பார்ப்பன மாணவர்களை மாமிசம் சாப்பிடவேண்டுமென்று சொல்பவர் – வைத்தியர் – வைத்திய சாஸ்திரப்படியும் உடற்கூறு சாஸ்திரப்படியும் பெண்களுக்கு 18 வயதுக்கு முன் விவாகம் செய்வது கெடுதி என்ற அபிப்பிராயம் கொண்டவர். அப்படி இருந்தும் இந்த மசோதா விசயத்தில் 12 வயதுக்கு மேல் கலியாண வயது இருக்கக் கூடாது என்று வாதம் செய்தார்.

மதன்மோகன் மாளவியா
மதன்மோகன் மாளவியா

திரு கேல்கர் திலகரின் ஸ்தானத்திற்கு வந்தவர். அவரோ மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லி ஆனால் வைதீகர்கள் இஸ்டத்திற்கு விரோதமாய் சட்டம் செய்யக்கூடாது என்றனர். இனி சென்னை “தலைவர்களை” பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமிருக்காதென்றே நினைக்கிறோம்…

எனவே நமது நாட்டிற்கென்றோ சமூகத்திற்கென்றோ எவ்வித திருத்தம் கொண்டு வந்தாலும் இந்தக் கூட்டத்தவர்களே அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம் தேசியத்தின் பெயராலும், மற்றொரு புறம் மதத்தின் பெயராலும், மற்றொரு புறம் சாஸ்திரத்தின் பெயராலும், மற்றொரு புறம் மனசாட்சியின் பெயராலும் தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாக பார்த்து வருகின்றோம்.”

முன்காலத்தில் அதாவது ‘இந்து'(மூட) ராஜாக்கள் அரசாங்கத்திலும் இப்படியே செய்துவிட்டு இப்பொழுது வெள்ளைக்கார (அறிவாளிகள்) அரசாங்கத்திலும் இப்படியே செய்து நமது சமூகத்தை மிதித்துக்கொண்டிருக்க கருதுவதை இனி அரை நிமிஷமும் நம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்பதை வெளிப்படையாகவும் உறுதியாகவும் சொல்லித்தீர வேண்டி இருக்கிறது அதற்காகவே சர்க்காருக்கு ஜே! என்றும் பார்ப்பனீயம் வீழ்க! என்றும் சொல்லுகின்றோம்.

– குடியரசு – தலையங்கம்- 29.09.1929

வேத விற்பன்னர்கள்
தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள்

தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள்.  இந்த மசோதாவிற்கு எதிராக பேசிய அன்றைய பாராளுமன்றத்தின் தமிழக பிரதிநிதியும், பார்ப்பன வருணாசிரம ஆதரவாளருமான ஆச்சாரியார் “பால்ய விவாகமில்லா விட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை”, “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும்”, என்றும் குழந்தைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் கைது செய்யப்படும்படி சட்டவிதி இருப்பதை காட்டி “புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும். பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசியிருக்கிறார். இதை அன்றைய சுதேசமித்திரன் நாளேடு பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி குடியரசில் கண்டித்து எழுதியுள்ளார் பெரியார்.

“இது பார்ப்பனர்களுக்காக என்றோ அல்லது அய்யங்கார் கூட்டத்திற்காக என்றோ திருவாளர் ஆச்சாரியார் பேசி இருப்பாரானால் நமக்கு அதைப்பற்றி அவ்வளவு கவலையில்லை. ஆனால் நம்மெல்லோருக்குமே பிரதிநிதி என்கிற முறையில் பேசியிருப்பதால் நாம் அதை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை…

ஒரு சமயம் தாம் மற்றவர்களைப் பற்றித்தான் சொன்னதாக சொல்வாரானால் தம் சமூகத்துப் பெண்களும் பக்குவமடைந்து விட்டால் அவர்கள் கலியாணமில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்று கருதி சொன்னவராகவே நினைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர் எப்படியும் பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தியதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரு. ஆச்சாரியார் இப்படி சொல்ல நேர்ந்தது பார்ப்பனியத் தன்மையேயொழிய வேறல்ல. ஏனெனில் பார்ப்பன தன்மையான இந்து மதம் என்பதில் பெண்கள் காவலில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்றே சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்துக்கள் என்பவர்கள் கல்யாண காலத்தில் கல்யாணப் பெண்களுக்கு கற்புக்கு உதாரணம் காட்டி உறுதிவாங்க வழங்கும் மகா பதிவிரதையென்று சொல்லப்படும் அருந்ததி என்னும் ‘உத்தம ஸ்திரீ’ யின் யோக்கியதையை பார்த்தால் மற்ற பெண்களுடைய நிலைமை தானாகவே விளங்கும். அதாவது ஒரு சத்தியம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் அருந்ததி சொல்வதாக :-

“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும்வரையில் தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகாயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல்காக்க வேண்டும்”.

என்பதாக தேவர்களிடத்தில் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினதாக இந்துமதம்- அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான மகாசிவபுராணம் சொல்லுகிறது.

இதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும் அதாவது திரௌபதையும் அருந்ததி சொன்னதைத்தான் சொல்லி சத்தியத்தை நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:

“ஆண்கள் இல்லாதிருந்தாலொழிய பெண்கள் கற்புடையவர்களாக இருக்க முடியாது” என்பதாக பாரதத்தில் இதைப்பற்றி சொல்லும் போது “வசிஷ்டர் நல்லற மனைவியை அணையா” அதாவது அருந்ததிக் கொப்பானவள் சொன்னாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த கொள்கைகளையுடைய இந்துமத பிரதிநிதியிடம் அதிலும் வருணாசிரம தர்மியிடம் வேறு என்ன எதிர்பார்த்திருக்க முடியும்.

புருஷர்கள் சிறைக்குப் போய்விட்டால் பெண்களின் நடத்தை கேவலமாகி விடுமென்றும் சொல்கிறார். இவை எவ்வளவு தூரம் பெண்களை இழிவுபடுத்துவதாகிறது. இந்துமதமும், வேதமும், புராணமும், வைதீகமும், வருணாசிரமும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் அஸ்திவாரமாக கொண்டதால் இம்மாதிரியான வார்த்தை நமது இந்திய சட்டசபை பிரதிநிதிகளிடமிருந்து வருவது ஒரு அதிசயமல்ல.

உதாரணமாக கடவுளுடைய அவதாரமாக சொல்லப்படும் ராமனே கடவுள் பெண்சாதியின் அவதாரமென்று சொல்லப்படும் சீதையின் கற்பில் சநதேகப்பட்டு அவள் நெருப்பில் பொசுக்கப்படவும் பூமியில் புதைக்கப்படவும் செய்ததிலிருந்து ……. திரு ஆச்சாரியார் மற்ற பெண்கள் புருஷனை விட்டு நீங்கியிருந்தால் ஒழுக்கம் கெட்டு விடுவார்கள் என்று சொல்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.

-குடியரசு – தலையங்கம் -23.09.1928

அன்று பெரியார் உள்ளிட்ட சீர்த்திருத்திருத்தகாரர்கள் குழந்தைத் திருமண தடை சட்டத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போட்ட அன்றைய இந்துத்துவாவினருடன் போராடிக் கொண்டிருக்கும்போது பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்தை ஆதரித்து எழுதின. சுதேசமித்திரன் பத்திரிகை சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் போன்றோரின் கருத்துக்களை வரவேற்று எழுதியிருக்கிறது. போராட்ட காலத்தில் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு “தி இந்து” பத்திரிகை 10 அல்லது 12 வயது மணமகள் தேவை என விளம்பரம் செய்தது.

இதை எதிர்த்துக் கேட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கு பின்வருமாறு அயோக்கியத்தனமாக பதிலளித்தது தி இந்து.

“10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாக காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே அது தான் விவாகம்.”  என்று திமிர்த்தனமாக கூறியது.

சீர்திருத்தக்காரர்கள் இதற்கு என்ன மறுமொழி சொல்லவேண்டும் என்பதையும் கோடிட்டுகாட்டி ஒரு உரையாடல் போல பின்வருமாறு எழுதுகிறார் பெரியார்.

“ஓ இந்துவே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல கண்ணுக்கு தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா?” என்று கேட்டார்.

உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல “இந்து” இதற்கு ஒரு மறுமொழி சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது. மற்றும் பல சமயங்களில் அது நம்மவர்களுக்கு விரோதமாக எவ்வளவோ கொலை பாதகத்திற்கு ஒப்பான கொடுமைகளைச் செய்திருக்கின்றது. செய்கின்றது. செய்யக் காத்திருக்கிறது.”

-குடியரசு தலையங்கம் 11.03.1928

இன்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால் விதந்தோதப்படும் பாலகங்காதர திலகர், முன்ஷி, மாளவியா போன்ற பார்ப்பன இந்துமதவாதிகளின் உண்மையான முகம் இதுதான்.

குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது, 14 வயதுக்குள் திருமணம் செய்யக்கூடாது போன்ற இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் விசயங்களுக்கே கூட திலகர் போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது. பார்ப்பன பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக சளைக்காமல் போராடியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

இன்று பார்ப்பன பாசிசம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் திலகரின் வாரிசுகள் தெருவெங்கும் விநாயகரை வைத்து பார்ப்பனீயத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை முறியடித்து பிற்போக்குத்தனத்தின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் இந்த மண்ணில் குழந்தைத் திருமணமல்ல, எந்த பிற்போக்குத் தனத்தையும் வீழ்த்த முடியாது.

மேலும் படிக்க..

இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !

6

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனிக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது சுபேதார் தோட்டம். உதிரிப் பாட்டாளிகள் அதிகமாக குடியிருக்கும் பகுதி. ஜக்காரியா காலனி நடுத்தர வர்க்கம் வசிக்கும் பகுதி. சுபேதார் தோட்டத்தில் இந்து முன்னணி பெயர்ப்பலகை இருக்கும் இடத்தில் 6 அடி பிள்ளையார் சிலையும் அதற்கு முன்புறமாக 2அடி பிள்ளையாரும் வைக்கப்பட்டிருந்தது.

‘அது என்ன சின்னப் பிள்ளையார்’ என்று காவலுக்கு இருந்தவரிடம் கேட்டோம். அப்போது இரவு சுமார் எட்டரை மணி. “அது பணம் கொடுத்தா தலைமல கொடுக்கது சார்” என்றார். முழு போதையில் இருந்தவர் காய்கறி, பழங்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டு போய் அன்றாடம் வீதியில் விற்பாராம். வாய்ப்பு கிடைத்தால் சர்ச்சில் ஏதாவது தினக்கூலி வேலைக்கு கூப்பிட்டாலும் போய் வருவாராம். பாக்கு வேறு போட்டிருந்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் பிள்ளையாரை சீண்டுவாரில்லை. போலீசாரும் அங்கு இல்லை.

“எனக்கு நாற்பத்தி இரண்டோ ஐந்தோ ஆகுதுங்க. இந்திரா காந்தி செத்தப்போ நான் பள்ளிக் கூடத்த விட்டேன்னா பாத்துக்கங்களேன்” என்றார்.

“அப்போ ப்ளஸ் டூ படிச்சீங்களா’ என்றோம்.

சிறுவர்கள்
ஒரு வார காலம் தூங்க தேவையில்லாத இரவு நேர கொண்டாட்டம்

‘நீ வேற ! அப்பாவுக்கு முடியல. ஆறாவதோ எட்டாவதோ படிக்கறச்சே செய்யாறுல அவரு அப்பாவாண்ட எடுத்துண்டு போயி வுட்டாரு. அப்பால வயசு ஆனவுடனே மெட்ராசுக்கு திருப்பி வந்துட்டேன். என் தம்பி மட்டும் இங்கதான் இருந்தான். இப்போ கழுத்துல ஜெயின்லாம் போட்டு ஒரு இரண்டு ஆட்டோவெல்லாம் வுட்டு, வட்டிக்கு விட்டுகுனு இங்கதான் சுபேதார் தோட்டத்துல ஒரு ஆளாயிட்டான்’ என்றார். ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டாராம்.

தான் தண்ணி அடிக்கவில்லை என்பதை சத்தியம் அடிக்காத குறையாக சொன்னார். இங்கு ஏன் சில பகுதிகளில் இருப்பதை போல பிள்ளையார்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை எனக் கேட்டோம். ‘எங்க ஏரியால தலைவருக்கு போட்டியா யாரும் இன்னும் வரல. அதான் கட்சி சார்பா இது ஒன்னு மாத்திரம் இருக்கு. நீங்க சொல்ற மத்த ஏரியால யாரு பெரியவனு போட்டியாகி பெரிசு பெரிசா வச்சிருப்பாங்க’ என்றார்.

‘எத்தனை ஆண்டுகளாக இங்கு கொண்டாடுகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘’இது பதினைந்தோ பதினொன்றோ சார். நான் இப்போ ஐந்து வருசமாகத்தான் இங்கு வருகிறேன். தலைவர் கண்ணுல பட்டு இரண்டு வருசம் தான் ஆகுது.’’ என்றார். ‘’ஊர்வலம் போவீர்களா?’’ என்று கேட்டோம். ‘’பின்ன நாங்க இல்லாமலா?’’ என்றார். மசூதி பக்கம் போகும்போது அதிகமாக முழக்கம் போடுவது, முசுலீம்களுக்கு எதிராக முழக்கம் போடுவது எல்லாம் தனக்கு பிடிக்காது என்றார். ‘உங்க தலைவர் ராமகோபாலன் அப்படித்தானே செய்கிறார்’’ என்று சொன்னோம். அது தவறுதான் என்று ஒத்துக்கொண்டார்.

‘’உங்களது மனைவி மக்களை கூட்டிக் கொண்டு கோவில் குளம் ஏதாவது இதுவரை போயுள்ளீர்களா?’’ என்று கேட்டோம். ‘’இல்ல சார். அதுக்கெல்லாம் துட்டு வேணாவா? இப்போ திருத்தணியே போறதுன்னா கூட ஈசிதான். ட்ரெயின சென்ட்ரல்ல பிடிச்சா போயிடலாம். சப்போஸ் அத விட்டுட்டா அரக்கோணம் போய் பஸ்ல போவணும். அதில் எதாச்சும் கடையாண்ட போயி பொண்ணோ ஒயிப்போ ஏதாச்சும் கேட்டா நம்மாண்ட காசில்லண்ணு வச்சுக்கோ, கடக்காரன் என்னா நெனப்பான் ‘தோடா! இதுக்கே வழியில்லாத இன்னாத்துக்கு கோவிலுக்கு வந்தே’னு பாப்பான். இதெல்லாம் தேவையா சார்.’’ என்றார்.

‘’இல்ல உங்க மனைவி கிறிஸ்தவர் ஆச்சே. இந்து கோவிலுக்கெல்லாம் வருவாங்களா?’’ என்று இழுத்தோம். ‘’அதெல்லாம் வருவாங்க சார். கூட்டிட்டு போக நமக்கு வசதி தான் இல்ல’’ என்றார். மகளை அரசுப் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார். இப்படி இரவெல்லாம் கண் விழிப்பதால் பணம் ஏதும் கிடைக்காது என்றும், சபரி மலைக்கு போவது போல இதுவும் ஒரு பக்தி அனுபவம் என்றார்.

ஜக்காரியா காலனியில் ஏன் பிள்ளையார் சிலை இல்லை என்று கேட்டோம். ‘சார் அவங்கல்லாம் வசதியான ஆளுங்க. சுபேதார் தோட்டத்துல இருக்கவுங்க நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க. நம்ம வருவோம். அவங்க ஏன் சார் வரணும்’ என்று சீரியசாகவே கேட்டார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு அம்பி இன்னும் சில தலைவர்களுடன் அங்கு வந்தார். நம்முடன் பேசிக் கொண்டிருந்தவர் எழுந்து நின்று கொண்டு மரியாதை செலுத்தினார். அவர்கள் வேறு ஒருவரை எதிர்ப்பாத்திருப்பார்கள் போலும், இவரை கண்டுகொள்ளவே இல்லை.

பிள்ளையார்
வட்டார சாதி, பணக்கார பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு, பக்தி, பிள்ளையார் என்ற பெயரில் ஏற்பாடுகள் செய்கின்றனர்.

டுத்த பகுதி. அசோக் நகரில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஒருவர் துவங்கி வைக்க இருக்கும் விநாயகர் ஊர்வலத்திற்கான பிள்ளையார் பிளக்சை பார்க்க நேர்ந்தது. அதில் ‘ஊர்வலம்’ என்ற சொல் ‘ஊர்வளம்’ என்று இருந்தது. இந்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் சுட்டிக் காட்டினோம். ‘ஒரு தமிழன் என்ற முறையில் இதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது பாஸ்’ என்று தள்ளாடியபடியே சொன்னார். உடனே பக்கத்தில் இருப்பவர் ‘ஆமா சார் லட்டுக்கு வரும் ல தான் சார் வரணும்’ என்று நம்மிடம் சொல்லி விட்டு, முன்னவரை அமைதியாக்கினார்.

டுத்து நுங்கம்பாக்கம் கக்கன் காலனியில் உள்ள செல்வ விநாயகர் சிலைக்கு முன் இருந்தோம். விநாயகரை சுற்றி ரூபாய் நோட்டுக்களால் மாலை கட்டிப் போடுவது தான் செல்வ விநாயகர்.

தலித் மக்கள் நிறைந்த இப்பகுதியில் இது ஐந்தாமாண்டாக கொண்டாடுகிறார்கள். விநாயகர் சிலை செய்யவே ரூபாய் இருபதாயிரம் வரை செலவாகி விட்டதாம். விநாயகர் ஊர்வலம் கிளம்பும் அன்று காலை அன்னதானம் போட இருப்பதாக குறிப்பிட்டனர்.

அங்கே வழக்கம் போல கானாப் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. சிறுவர்களில் முசுலீம் சிறுவர்களும் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு வார காலம் தூங்க தேவையில்லாத இரவு நேர கொண்டாட்டம். அங்கிருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வேலைக்கும் செல்லாத ஏரியாவின் சுகவாசிகள் என்பதை அவர்களது வாக்குமூலங்களே தெளிவாக்கின.

பிள்ளையாரை தூக்கிப் போக என்று தனியாக ஒரு பாடை வேறு வைத்திருந்தார்கள். அந்த பிள்ளையார் தினமும் அந்த ஏரியாவில் ஊர்வலம் போவாராம். தலித் இளைஞர்களை குறிவைத்து இந்து முன்னணி இயங்குவதற்கு இந்த ஏரியா நல்லதொரு உதாரணம்.

இந்து முன்னணி பிள்ளையார்
இந்து முன்னணி பிள்ளையார்

டுத்து நுங்கம்பாக்கம் ஜோஸ்யர் தெரு. இங்கு தலித், வன்னிய இளைஞர்கள் இணைந்து எட்டு அடி உயரமுள்ள பிள்ளையாரை வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் அடிப்படை வேலைகளில் உள்ளவர்கள். அலுவலக உதவியாளர், செக் வசூலிப்பவர், கூரியர் பாய் என்ற வேலைகளை மாதமொன்றுக்கு நான்காயிரம் முதல் எட்டாயிரம் சம்பளத்தில் பார்த்து வருபவர்கள். ஆளுக்கு தலா எட்டாயிரம் போட்டு இந்த பிள்ளையாரை வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் பெண்கள் ஓரளவுக்கு பிள்ளையாரை பார்க்க வந்தனர். இங்கு இந்த ஆண்டுதான் பிள்ளையாரை முதன்முறையாக வைத்துள்ளனர்.

எங்களை சந்தித்த இளைஞர் ராகேஷ் ஒரு கிறிஸ்தவர். அவரது தந்தை கிறிஸ்தவர், அம்மா இந்து. வங்கி ஒன்றில் செக் பணம் வசூலிப்பவராக இருக்கிறார். ‘’அடுத்த வாரம் அம்மன் திருவிழா. அதுவரைக்கும் சுத்தபத்தமா இருப்போம் சார்’’ என்றார். அவரிடமிருந்து மது வாடை ஆளையே தூக்கியது. அவரது நணபர் ஒருவர் வந்தார். தனியாக நடனக்குழு ஒன்று வைத்திருக்கிறாராம். அவரும் போதையில் இருப்பதை ஒத்துக்கொண்டார். அதனால் தான் மேடைக்கு அருகில் தாங்கள் போவதில்லை என்றும், பொறுப்பாளர் மட்டும் போவார் என்றார்கள். ‘இந்த ஒரு வாரம் மட்டுமாவது சுத்தபத்தமாக இருக்கலாமில்லையா?’’ என்று கேட்டோம். அதெல்லாம் வேலைக்காவாது சார். அதான் நாங்க கேரம் ஆடிண்டு காவல் இருக்கோமில்ல என்று கோரசாக சொன்னார்கள்.

றுநாள் திருவட்டீஸ்வரன் பேட்டை விநாயகர் அதாவது ராமகோபாலன் ஆரம்பித்து வைக்கும் மையமான விநாயகரை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். திருவல்லிக்கேணி பகுதியில் 24 விநாயகர்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். அதில் பெரும்பான்மை இந்து முன்னணி பிடிக்காமல் அதிலிருந்து வெளியேறிய ஆதிபராசக்தி பீடம் போன்ற ஏரியாவாசிகள் அமைத்திருப்பது. பெரிய தெருவில் இருக்கும் பிள்ளையார், ராமகோபாலன் குழு பிள்ளையாரை விட ஐந்து வயது மூத்தவர், 36 ஆண்டுகளாக ஊர்வலம் போகின்றவர் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதற்கு அருகில் உள்ள தெருவில் அன்று ஒரு சாவு நடந்திருந்த காரணத்தால் பிள்ளையாரை வெள்ளைத் துணி போட்டு மூடியிருந்தார்கள். பல இடங்களில் முதலாண்டு பிள்ளையாரை வைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா இடங்களிலும் செல்வ விநாயகர் சிலைகள் தான் பத்து முதல் பன்னிரெண்டு அடிகள் வரை இருந்தன.

திமுக பேனர்
கருணாநிதி மகன் மு.க. தமிழரசு மற்றும் திமுக மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் நிதி பெற்று பிளக்சு பேனர்.

திருவட்டீஸ்வரன் பேட்டைக்கு போனோம். அதே தெருவில் இன்னொரு பிள்ளையாரும் இருந்தார். அங்கே பெரும்பாலும் தலித் இளைஞர்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வரை போட்டு வைத்ததாக கூறியவர்கள் நம்மிடமும் காசு கேட்டார்கள். ஆளை விட்டால் போதும் என்று மெயின் பிள்ளையாரை பிடித்தோம். மொத்தமே நான்கு பேர்தான் சிலையை சுற்றிலும் இருந்தார்கள். அதில் ஒருவர் அப்பகுதியின் தொகுதி பாஜக பொறுப்பாளர். பார்ப்பதற்கு பார்ப்பனரைப் போல இருந்தார். குறிப்பாக பேசும்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நஞ்சு கக்கினார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

நாங்கள் பேச ஆரம்பித்த போது தனக்காக ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டவர் கடைசி வரை நம்மை உட்காரச் சொல்லவேயில்லை. அவரிடம் ஒரு மணி நேரம் பேசியதில் இருந்து சில கருத்துக்கள்.

அங்கே ஒரேயொரு ஏட்டையா மட்டும் தான் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். ‘மிகவும் பதட்டமான பகுதி என்று அரசு அறிவித்துள்ள இப்பகுதியிலேயே இத்தனை குறைவாக காவலர்களா?’’ என்று பாஜக காரரிடம் கேட்டோம்.

‘’சார்! எங்களைப் பொறுத்தவரை காவல்துறையே வரக் கூடாது. ராமனது அரசாட்சியில் கதவுகளே இல்லாமல் இருந்த்தாம். இல்லாமை இல்லாமற் போனதால் கதவே வீடுகளுக்கு தேவையில்லாமல் போய்விட்டதாக கம்பன் கூறுகிறான். அதுபோல இங்கு அமைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை ஒவ்வொரு முசுலீமும், கிறிஸ்தவனும் தன்னுடையதாக நினைத்து பாதுகாக்க முன்வர வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்’’ என்றார்.

‘’தமிழ் நாட்டை திராவிட இயக்க ஆட்சி வந்து தான் கெடுத்து விட்டது.’’ என்றவரிடம் ‘’அப்படியானால் கருணாநிதி மகன் மு.க. தமிழரசு மற்றும் திமுக மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் நிதி பெற்று பிளக்சு பேனர் போட்டு இங்கே சிலை வைத்துள்ளீர்களே!’’ என்று கேட்டோம். ‘’சார்! நாங்கதான் கருணாநிதியை பலமுறை ஜெயிக்க வைத்தோம். அன்பழகனையே எடுத்துக்கோங்க. அவர் வேட்பாளர் படிவத்தில் இந்து என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் என்ன கொள்கை பேசினாலும் அவர் இந்து தானே’’ என்றார்.

நாத்திகம் பேசும் எவரும் தம்மை இந்து என்றுதான் அரசு பதிவேட்டில் பதிய முடியும் என்றார். ‘’இல்லையே சார்! அப்படி மதம் இல்லாதவர்கள் என்று பதிய சட்டத்தில் புதிய ஜி.ஓ இருக்கிறதே’’ என்று சுட்டிக் காட்டினோம். ‘’பார்த்தால் படித்தவர் போல இருக்கீங்க. நீங்களே இப்படி வெவரமில்லாத இருந்தா மத்தவங்கள என்ன சொல்றது’’ என்று குறைபட்டுக் கொண்டார்.

போலீசு படை குவிப்பு
லீவு ரத்து செய்து போலீசு படை குவிப்பு

“எங்களை விட சாஸ்திரம், சம்பிரதாயம், வேதம், புராணம் பற்றியெல்லாம் கலைஞருக்கு நன்றாக தெரியும். அவர் தான் ராமனை திட்டுவதாக சொல்லிக் கொண்டு எங்களை விட அதிக தடவை ராம நாமத்தை உபயோகிக்கிறார். அந்த அளவுக்கு விவரமானவர்’’ என்றார். ‘’இந்து ஒற்றுமையை திராவிட இயக்கம் வந்து தான் சார் கெடுத்துட்டாங்க’’ என்றார்.

“சரி சார் இங்கே நம்ம ஜெயலலிதா ஒரு ராம பக்தை. மத்தியில் நம்ம மோடி. அப்புறம் ஏன் சார் பிள்ளையார் ஊர்வலத்தை மசூதி முன்னால எடுத்துட்டுப் போக தடை’’ என்று கேட்டோம்.

மோடி பெயரை கேட்டதும் குதூகலமானவர், “சார் நம்ம ஊர்ல இருக்கும் அம்மா உணவகத்தை பதினோரு ஆண்டுகளுக்கு முன்னரே குஜராத்தில் மோடி ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்து அம்மா அடித்த காப்பிதான் இங்கு செயல்பாட்டில் உள்ளது’’ என்றார்.

இந்த பொறுப்பாளர் ஏதோ தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாக சொன்னார். எப்போதும் பான்பராக் மென்று கொண்டிருந்தார். மறுநாள் ஊர்வலத்தில் கடைசி வரையில் இவர்தான் இந்து முன்னணி கொடியை பிடித்த வண்ணம் வந்தார்.

“டாஸ்மாக் அடித்துக் கொண்டு உங்கள் தொண்டர்கள் இங்கு இருக்கிறார்களே’’ என்று கேட்டோம். “தனி மனிதன் திருந்துவது தான் சார் முதன்மையானது. அதனைத் தான் மோடி குஜராத்தில் செய்தார். என்னைக் கேட்டால் டாஸ்மாக்கை மூடக் கூடாது. ஏன் ஒருத்தன் தண்ணியடிக்கிறான். அவனுக்கு வயிற்றில் இடம் கொஞ்சம் மீதமிருக்கிறது. மோடி அவனுக்கு வயிறு முழுக்க சாப்பாடு கிடைக்க வழி செய்தார். இங்கும் அப்படி செய்து விட்டால் டாஸ்மாக் விற்பனை படுத்து விடும். ஆட்டோமெட்டிக்காக அரசு சாராய விற்பனையில் இருந்து விலகி விடும். இது தான் குஜராத்தில் நடந்தது’’ என்றார்.

’அதெல்லாம் சரி சார்! குஜராத்தில் கறி சாப்பிடுவது குறைவு தானே! அப்படியானால் உடல் வலி அதிகமாகி தொழிலாளிகள் மதுவை நாட வாய்ப்புள்ளதே’’ என்று கேட்டோம். ‘’இல்ல சார்! சைவ உணவில் தான் நல்ல தரமான புரத சத்து உள்ளது. இது சயின்டிஸ்டுகளே சொன்ன உண்மை. அதுனால நீங்க சொல்றது உண்மையில்ல’’.

“சரி சார்! தனி மனித ஒழுக்கத்த பற்றி சொல்றீங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னால பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் கர்நாடகா சட்டசபையில் பிட்டு படம் பார்த்து மாட்டிக் கொண்டார்களே!’’ என்று இழுத்தோம். ‘’அதான் சார்! தனி மனிதன் திருந்த வேண்டும். கட்சிக்குள்ள வந்தாலும் தனி மனிதனை திருத்த நாங்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் அவர்களாக திருந்துவது தான் சரி. சட்டம் போட்டெல்லாம் திருத்த முடியாது’’ என்றார்.

“தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்கிறீர்கள். அப்படி வருபவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?’’ என்று கேட்டோம். ‘’அவங்க இந்துவா இருக்குறப்போ என்ன சாதியா இருந்தாங்களோ அந்த சாதி தான்’’ என்றார். ‘’அது இந்த தலைமுறையில் மாறியிருந்தால். மூணு நாலு தலைமுறைக்கு முன்னால் மாறியிருந்தா என்ன சாதின்னே தெரியாதே சார்’’ என்று கேட்டோம். ‘’சார் சாதி என்னாத்துக்கு கேக்குறீங்க. ரிசர்வேஷன். ரிசர்வேசனே தப்புங்குறதுதான் சார் பிஜேபி தரப்பு.’’ என்றார்.

“சாதின்னு வேண்டாம்னு சொன்னீங்கன்னா, அவங்க எங்க சார் பொண்ணு கட்டுவாங்க’’ என்று கேட்டோம். ‘’அதெல்லாம் தெரியாது சார். இந்துவாக மாறுவது தான் முக்கியம். அதுக்கும் சாதிக்கும் சம்பந்தமில்ல. அப்படிப் பாத்தா எல்லா மதங்களிலும் சாதிங்குறது, இந்து மதத்தை விட அதிகமாகத்தான் இருக்கு. கிறிஸ்தவர்களில் 1200 க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கு. முசுலீம்களில் 800 க்கும் மேல. இந்துவில் ஒரு 126 சாதி மட்டும் தான்’’ என்றார். ‘’எப்படி.’’ என்று கேட்டதற்கு நாடுகள் வாரியாக பிரிந்து கிடக்கும் இனங்களையும் சாதிகளாக குறிப்பிட்டார்.

“தமிழில் அர்ச்சனை, பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை உருவாக்கியிருக்கும் கருணாநிதியின் திட்டம் பற்றி..’’ என்று கேட்டதற்கு “தமிழில் அர்ச்சனை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். அப்படியானால் மற்ற எல்லா மொழிகளையும் பயன்பாட்டில் இருந்து தமிழகத்தில் தூக்கியாக வேண்டும். அராபியாவில் உருவான உருதுவை இங்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் மெக்கா, மெதினாவிலேயே சமஸ்கிருதம் தான் ஓதுகிறார்கள். சமஸ்கிருதமும் நமது இந்திய மொழிதானே! அதில் அர்ச்சனை செய்வதில் எந்த தவறும் இல்லை. நம்ம பார்லிமெண்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கிலீஷில் பேசினால் காரியம் நடக்காது. இந்தியில் பேசினால் காரியம் சீக்கிரம் நடக்கும். அது போலத்தான் இறைவன் சந்நிதியிலும். பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களைப் பொறுத்தவரை, இன்னார் இன்ன தொழில்தான் செய்ய வேண்டும் என்பது நமது மரபு. அந்தக் காலத்தில் பண்ணையார் பார்த்து அனைவருக்கும் தேவையானவற்றை கவனித்துக் கொள்வார். சம்பளம், கூலி என்று நம்மை அதற்கு அடிமையாக்கியவன் ஆங்கிலேயன். அப்படி பார்க்கையில் பிராமணர்கள் அர்ச்சகர் வேலையை பார்க்கிறார்கள். புனிதமான அந்த தொழிலில் அடுத்தவன் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் வேலை எதுவும் கிடையாது. எல்லாவற்றிலும் இருந்து எங்களை துரத்தி விட்டீர்களே. இதிலும் எங்களது பிழைப்பில் கைவைத்தால் நாங்கள் என்னதான் செய்வது?’’ என்று சற்று கோபமாகவே கேட்டார்.

‘’நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னரே வசூலை ஆரம்பித்து விடுவோம். எல்லோரும் பணமாக தர மாட்டார்கள். சிலர் எண்ணெய் தருவார்கள். சிலர் திரி மட்டும் வாங்கித் தர இயலும் எனச் சொல்லி அதனை வாங்கித் தருவார்கள். சிலர் கற்பூரம் வாங்கித் தருவார்கள். அனைவரது பங்களிப்புடன் தீபம் எரிகிறது அல்லவா, அந்த தீபம் தான் இந்து மத ஒற்றுமை’’ என்று குறிப்பிட்டார். ‘’நாளை இங்கு வந்தால் புகைப்படம் எடுக்க முடியுமா ஊர்வலத்தை’’ என்று கேட்டோம். ‘’சாத்தியமில்லை. முடிந்தால் பாருங்கள். கூட்டம் அதிகமாக இருக்கும்’’ என்று எச்சரித்தார்.

டுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் சென்றோம். உட்கார்ந்திருந்தவர்கள், சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் சேர்த்து பார்த்தால் ஒரு ஐம்பது பேர்தான் இருந்தனர். நாங்கள் போகையில் எச்.ராஜா தனது விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார். இந்துசமய அறநிலையத் துறை இந்து மதத்திற்கு மட்டும்தானா? இங்கே இந்துக்களுக்கு ஊர்வலம் போக உரிமையில்லையா? என்றும் கேட்டார்.

அடுத்து தரும்புரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த மகராஜ் சுவாமிகள் என்ற சாமியார் பேச ஆரம்பித்தார். சாமியார் ஏதாவது ஆன்மீகம் பேசுவார் என்று பார்த்தால் எச்.ராஜா பேசியதை விட அதிகமாக மதவெறிக் கருத்துக்களை பேசினார். “நமது காலண்டர் நட்சத்திரம், சூரியன், சந்திரன் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. ஆங்கில காலண்டர் என்பது இயேசு பிறந்தவுடன் துவங்குகிறதே தவிர அதற்கு சூரிய, சந்திர அடிப்படை கிடையாது’’ என்று ஒரு போடு போட்டார். ‘’காந்தி குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கவில்லை, நேருவும் அப்படி செய்யவில்லை, இதில் நேரு கம்யூனிச வாதியும் கூட. அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டுதான் முசுலீம்களின் நண்பர்களாக வலம் வந்தார்கள். எனவே நானும் அப்படி சொல்லிக் கொள்வதில் எந்த தவறுமில்லை என்று கேள்வி கேட்டவர்களிடம் பெருமையாக சொன்னாராம் மோடி” என்று இந்துத்துவ ஆட்சியின் ‘பெருமை’களை அளந்து கொண்டிருந்தார்.

ஊர்வலத்தில் மெயின் பிள்ளையாருக்கருகில் சில பக்தர்கள் பான்பராக்கோடு நிறுத்தியிருந்தனர். முன்னால் குத்தாட்டம் போட்டவர்கள் நல்ல போதையில் இருந்தனர். சேரிப் பகுதியில் இருந்து அழைத்து வரப் பட்ட பெண்களும், திருநங்கைகளும் கூட குத்தாட்டம் போட்டனர். ஏற்கெனவே திருவெட்டீஸ்வரன் பேட்டையில் முந்தைய நாள் மெயின் பிள்ளையாருக்கே குத்துப் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘’இன்றைக்காவது பக்தியோடு இருக்க கூடாதா?’’ என்று அந்த இளைஞர்களிடம் கேட்டதற்கு ‘’சார்! இப்போ ராகு காலம் சார். அதுனால பிள்ளையாரு கண்டுக்க மாட்டாரு’’ என்று அதற்கொரு விளக்கம் தந்தார்கள் அந்த இளைஞர்கள்.

திருநங்கையுடன் ஆபாச ஆட்டம்

‘’மடையா மடையா.. பிள்ளையாருக்கே தடையா’’ என்பது போன்ற முழக்கங்கள் போலீசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. போலீசார் செம கடுப்பில் இருந்தாலும் அரசு தரப்பில் இவர்களை மென்மையாக அணுக சொல்லியிருப்பதால் நம்மிடம் தங்களது பிரச்சினைகளை எழுதச் சொல்லிப் புலம்பினர்.

ஊர்வலத்தை சரிசெய்ய முயன்ற எஸ்.ஐ ஒருவரை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே ஒரு இளைஞன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான். இது வேறு மக்கள் போராட்டமாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. இதைப் பற்றி ஏசியிடம் முறையிடப் போன அவருக்குதான் டோஸ் விழுந்தது தனிக்கதை.

யார் ஆடும் டான்சு சூப்பர் என்பதை காண்பிக்க ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கும் கோஷ்டியிலேயே சிலருக்குள் போட்டி. அதற்காக ஆளுக்கொரு டிரம்ஸ் செட் மட்டுமின்றி ஆடுவதற்கும் நபர்களை வெளியில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். அதில் அவர்களுக்குள் முதலில் முட்டிக் கொண்டது தான் முதல் முக்கிலேயே நடைபெற்றது.

குத்தாட்டம் போடுவதில் போட்டி

ஒவ்வொரு இடம், பில்டிங், நபர்களை காட்டி இது யாருடையது என்று கேட்டு முழக்கமிட்டது ஒரு பார்ப்பன இளைஞர் கூட்டம். அதில் அவர்கள் அடிக்கடி கைகாட்டியது ஒரு மசூதியை நோக்கி. அப்போது கூட்டத்தின் கோஷ ஸ்ருதி அதிகரித்தது.

மசூதிக்கு அருகில் மதவெறிக் கூச்சல்

போலீசாரின் எண்ணிக்கை போதாது என்பதை நன்கு உணர முடிந்தது. ‘’இவனுக பண்ற காவாலித் தனத்தால பெண்கள் யாருமே சாமி கும்பிட வர்றதில்ல சார்’’ என்றார் அந்த தலைமைக் காவலர். ‘’கேட்டால் நெறய சொல்லலாம் சார்.’’ என்றவர் எஸ்.ஐ ஒருவரை கூப்பிட்டு தங்களது பிரச்சினைகளை சொல்லும்படி கேட்டுக் கொண்டார். ‘’இப்போ யாருக்கும் பெர்மிஷன், லீவு கூட கெடையாது சார். இப்போ என் வீட்ல விட்டுட்டு வர ஒரு மணி நேரம் கேட்டேன். கெடைக்கல. கொஞ்சம் இவர பாத்துக்க சொல்லிட்டி ஏசி ரவுண்டு வர்றதுக்குள்ள வரணும்னு அரக்க பரக்க ஓடியார வேண்டியதாயிட்டு சார்’’ என்றார்.

‘’ரெண்டு நாளைக்கு முன்னால இந்த ஏரியா இந்து முன்னணி பிரமுகரு ஒருத்தரு. போலீசு வண்டில ஏறி உக்காந்திருந்தாரு. நாங்களே அப்படி உக்கார மாட்டோம். அதுனால, ‘சார் அது போலீசு வண்டி. இறங்குங்க சார்’ என்று மரியாதையாகத்தான் சொன்னோம். ‘ஓகோ! அப்படியா. டேய்! இந்த போலீசு நாய்ங்களுக்கெல்லாம் போட்டிருக்கும் சேர்களையெல்லாம் தூக்கி அடுக்குங்கடா’ என்று சொல்லிவிட்டு இறங்குறார் சார். இதெல்லாம் கொஞ்சம் எழுதுங்க சார்’’ என்றார். இவரும் அதே பகுதியில் தான் முக்கியமான போலீசு ஸ்டேஷனில் எஸ்.ஐ ஆக இருப்பவர்.

மழையில் பிள்ளையாரை கவரால் மூடி ஊர்வலம் கூட்டிச் சென்றனர். ஊர்வலம் துவங்கும்போதே கழன்று கொண்ட பெரியவர்கள், மழையால் பாதியில் கழன்று கொண்ட இளைஞர்கள் என இவர்களை தாண்டி சிறுவர்கள் மற்றும் சிலருடைய உதவியால் தான் பிள்ளையார் பட்டினப்பாக்கம் வரை போக முடிந்தது. சில பகுதிகளில் இந்து முன்னணி பொறுப்பாளர்களின் குடும்பத்தினர் மூடிய கார்களில் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாரும் கீழே இறங்கவேயில்லை.

மசூதி வரும் இடங்களில் கோஷங்களும், ஊர்வலத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதும் அதிகமாக இருந்தது. இந்து முன்னணி தவிர்த்த சிலர் தனியாக ஊர்வலம் நடத்தினர். வாலஜா சாலையில் திடீரென போலீசார் குவியத் துவங்கினர். ஏதோ கலவரமோ என்று ஓடினோம். அங்கு ஆயிரம் விளக்கு மசூதிக்கு அருகில் உள்ள இளைஞர்கள் கொண்டு போகும் பிள்ளையார் ஊர்வலம் மட்டும் தனியாக ஒரு முப்பது நாற்பது பேருடன் போய்க் கொண்டிருந்த்து. அதன் உச்சியில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டிருந்த்து. ஊர்வலத்திற்கு மத்தியில் முன்னால் ஓடி பிளாட்ஃபார்மில் தங்களது கட்டுச்சோற்றை முடித்துக் கொண்ட அந்த இளைஞர்கள் ‘’நாங்க இந்து முன்னணியில இருந்து வெலகிட்டோம் சார். எங்க பிள்ளையார் மட்டும் தனியானவரு. தேசிய கொடிய மாட்டிதான் கொண்டு போவோம். கரைக்குறப்ப மட்டுந்தான் கழட்டுவோம்’’ என்றார்கள்.

ஜாம்பஜார் பகுதியில் இருந்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட இன்னொரு ஏரியாவாசியை அணுகினோம். அவர்தான் அந்த பிள்ளையாருக்கு பொறுப்பு. பெயிண்டராக இருந்து வருகிறார். “நாங்க முதல்ல பத்து வருசம் இந்து முன்னணி கூட தான் சார் வந்தோம். அவங்க ரூட்டு அதிகமாக இருக்கு. அதில வேற போற வழில கோஷம் போட்டு சண்ட இழுக்குறாங்க. அதான் ஒரு பதினைந்து வருசமா தனியா போக ஆரம்பித்து விட்டோம். நாளப் பின்ன பாத்து பழக வேண்டியிருக்கு இல்லையா’’ என்று எதார்த்தமாக கேட்டார். “அதுல வேற அப்போ வந்து அவங்க கூட்டம் போராட்டத்துக்கு ஆளுங்கள இட்டார சொல்றாங்க. எங்க பசங்களுக்கு இதெல்லாம் பிடிக்கல. நமக்கு தேவ பக்தி. அவ்ளோதான் சார்” என்றார். அவர்களும் குத்தாட்டத்துடன் தான்.

மொத்தமாக பார்த்த வரையில் இந்து முன்னணி சில பகுதிகளை தனது கலவரமூட்டல் காரணமாக இழந்து வருகிறது. புதிய பகுதிகளில் சென்று சிலைகளை நிறுவ முயற்சிக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள், உதிரிப் பாட்டாளிகள், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகப் பார்த்து தான் தேர்வு செய்கிறார்கள். குத்தாட்டம் தான் இளைஞர்களை கவர வழி என்பதால் ஆர்.எஸ்.எஸ் அதற்கும் அனுமதி அளிக்கிறது. ஓம் காளி ஜெய் காளி, இந்துஸ்தான் போன்ற கோஷங்கள் இங்கு எடுபடவில்லை. அதே நேரத்தில் கணேஷ் மண்டல் என்ற பெயரில் சேட் பசங்களுக்காக தனியாக ஒரு அமைப்பையும் இவர்கள் நிறுவி உள்ளனர். இவர்களும் இந்து முன்னணியில் உள்ள தமிழ் பசங்களும் இணைந்து இருப்பதை எங்கேயும் காண முடியவில்லை.

அதே போல மெயின் பிள்ளையார் பக்கம் இருந்த பார்ப்பன ஆதிக்க சாதியினர் அளவுக்கு பிற பிள்ளையார்கள் மத்தியில் அவர்களைக் காண இயலவில்லை. பிள்ளையார் ஊர்வலத்திலும் சாதி, இனம், வர்க்கம் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக சங்க பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன. பல இடங்களில் வட்டார சாதி, பணக்கார பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு, பக்தி, பிள்ளையார் என்ற பெயரில் ஏற்பாடுகள் செய்கின்றனர். பக்தர்களை இழுப்பதற்கு பல இடங்களில் அன்னதானம் போடுகின்றனர். சில இடங்களில் மைக்கேல் ஜாக்சனே இடைவிடாமல் பாடிக் கொண்டிருந்தார். போலிசாருக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதில் பிள்ளையார் சிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏழைகள் பகுதியில் பணம் கொடுத்து சிலை வைப்பதோடு, ஊர்வலத்திற்கு ஆள் சப்ளையும் இவர்கள்தான். இவர்களை இந்துக்களாக புடம் போடும் வகையில் சங்க பரிவார உறுப்பினர்கள் இடையிடையே வந்து போகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு இந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் மும்பை போல ஒரு சமூக ஆதிக்க நிகழ்வாகவும், வருடா வருடம் பிரச்சினைகளை கொண்டு வரும் மதவெறி தினமாகவும் மாறப்போவது உறுதி.

–    வினவு செய்தியாளர்கள்

அனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி

1

ன்னடத்தின் புகழ்பெற்ற முற்போக்கு எழுத்தாளரும், காந்திய கொள்கைகளில் பற்று கொண்டவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி கடந்த ஆகஸ்டு 22 அன்று, 82 வது வயதில் பெங்களூருவில் மரணமடைந்தார். ஞானபீட பரிசை வென்ற எட்டு கன்னட எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரது சம்ஸ்காரா, பார்வதிபுரம் போன்ற நாவல்கள் ஒரு மாறி வரும் சமூகத்தின் நிகழ்வுகளையும், அதில் உள்ள சமூகப் பிரச்சினைகளையும் களமாகக் கொண்டு தனிநபர்களிடம் நடக்கும் புதுமைக்கும், பழமைக்குமான போராட்டங்களையும் உணர்த்துகிறது.

u_r_ananthamurthyஆகவே அனந்தமூர்த்தியோடு பழம்பெருமை பேசும் இந்துமதவெறியர்கள் எந்த முறையிலும் நேசத்தை கொண்டிருக்க இடமில்லை. ஆம், அவரது மரணத்தை மங்களூரில் பஜ்ரங் தள் என்ற பரிவார கும்பல் வெடிபோட்டு மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அனந்தமூர்த்தி ஒரு வைதீக பார்ப்பன பின்னணியைக் கொண்டவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு ஆய்வுப் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற இடத்தில் அவரது பேராசிரியரின் ஆலோசனையின் பேரில் மாறி வரும் இந்திய சமூகத்தை பற்றிய நாவல் ஒன்றை எழுத முனைந்தார். அதுதான் சம்ஸ்காரா நாவல்.

1965-ல் வெளியான இந்த நாவல் அப்போதைய அளவில் பார்த்தால் கன்னட இலக்கியத்தில் பெரும் கலகம்தான். நவோயா இயக்கம் என்ற பெயரில் அவரும், கிரீஸ் கர்னாட்டும் அங்கே புகழ்பெற்றிருந்த காலம் அது. கர்நாட் எழுதிய துக்ளக் நாடகமும் கூட மிகவும் புகழ்பெற்றது தான். அதன் அரசியல் நகைச்சுவைகளை பார்த்த பிறகு அதன் பாதிப்பில் சோ ராமசாமி போட்டுக் கொண்ட சூடுகள் தான் அவரது துக்ளக் காமெடி நாடகம்.

அக்ரகாரம் மட்டுமே இருக்கும் ஒரு மேற்கு கர்நாடக கிராமம் ஒன்றுதான் சம்ஸ்காரா நாவலின் கதைக்களம். அங்குள்ள இரு இளைஞர்களில் ஒருவன் சனாதனவாதி. கடுமையாக இந்துமத கொள்கைகளை, சாதி அனுஷ்டானங்களை கடைபிடித்து மோட்சத்திற்கு செல்ல முயல்பவன். காசிக்கு சென்று சமஸ்கிருதம் படித்து வந்த அவனை ஊரே கொண்டாடுகிறது. திருமணம் செய்து கொண்டு தாம்பத்ய உறவை தவிர்த்து அதன் மூலம் தனது மனைவிக்கும் மோட்சத்திற்கு வழிகாட்டுவதாக அவன் கருதிக் கொள்வான். அதே ஊரில் இன்னொரு பார்ப்பன இளைஞன் இருப்பான். நகரத்திற்கு சென்று படிக்கும் அவன் எல்லா ‘கெட்ட’ பழக்கங்களும் உள்ளவன். விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை கூட்டி வந்து அவளுடன் தனது வாழ்க்கையை அக்கிராமத்தில் துவங்குவான். அப்போது ஊரில் நடக்கும் கெட்டவை, பிளாக் நோய்கள் அனைத்துக்கும் அவனைத்தான் காரணமாக கூறுவார்கள். சாதியை விட்டு விலக்கி வைப்பார்கள்.

அவன் வேறு சாதிப் பெண்ணை சேர்த்து கொண்டதுடன், மாமிசம் சாப்பிடவும் பழகி விட்டான் என்றும் கூறி அவனுக்கு தண்டனை தரும்படி முதலாவது நல்லவனிடம் கூறுவார்கள் மக்கள். அவன் திருந்தி விடுவான் என்று அவர்களுக்கு பதில் சொல்வான் அவன். இரண்டாமவன் ஒருநாள் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போவான். அவனை எரிக்க யாருமே முன்வர மாட்டார்கள். பார்ப்பன பிணத்தை பார்ப்பனர்கள்தான் எரித்தாக வேண்டும். அவன் பிணத்தை எரிக்கும் வரை மற்ற பிராமணர்கள் சாப்பிட கூடாது என்பது மரபு. இந்நிலையில் இரண்டாமவனது மனைவி நல்லவருக்கு பிணத்தை எரிக்க பண உதவி செய்வாள். அவளது அழகில் இவரும் மயங்கி விடுவார். அவருக்கு உதவியாக பணத்திற்காக சில பிராமணர்கள் வைதீகத்தை கொஞ்சம் மூட்டை கட்டி வைப்பார்கள். பிறகு அவர் திரும்பி ஊருக்கு வருவார். முடிவை வாசகர்கள் எடுக்குமாறு இந்தக் கதை பின்னப்பட்டிருக்கும்.

பலமான பார்ப்பனர்களின் எதிர்ப்பை இதனால் சம்பாதித்துக் கொண்ட அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். சம்ஸ்காரா பிறகு 1972-ல் திரைப்படமாக்கப்பட்டு சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு நாவலான பாரதிபுரா விலை மாதர்களைப் பற்றியது. இதுபோக மூன்று நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுப்புகளையும் எழுதியிருக்கும் இவர் ஒரு கவிஞரும் கூட.

அவரது அவஸ்தை நாவல் மாறிவரும் அரசியல் போக்குகளைப் பற்றிய ஒரு காந்தியவாதியின் சலிப்புடனே பேசும். அதனால் பிற எல்லா அரசியல் கோட்பாடுகளையும் அந்நாவலில் கேள்விக்குள்ளாக்குவார். தெலுங்கானா போராளிகளை மாத்திரம், தியாகத்திற்கு நிகராக தனி மனித ஒழுக்கத்தை சரிவரப் பேணாதவர்கள் என்ற அவதூறையும் போகிற போக்கில் தூவி விட்டுச் சென்றிருப்பார். பிறப்பு என்ற நாவல் சாமான்ய குடும்பத்தில் வளர்ந்து வரும் பெண்களிடம் இருக்கும் சமூக கோபங்களை வெளிப்படுத்தும் சிறிய நாவல்.

ஆங்கில பேராசிரியராக, துணைவேந்தராக, மத்திய பல்கலையின் வேந்தராக எனப் பல பொறுப்புக்களையும் வகித்த இவர், நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமி போன்றவற்றிலும் பல முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர். பலமுறை ஜனதா தளக் கட்சி சார்பில் ராஜ்யசபாவிற்கும், மக்களவைக்கும் போட்டியிட்டு தோற்ற அனந்த மூர்த்தி தீவிரமான காந்தி பக்தர். அந்த வகையில் ராம் மனோகர் லோஹியாவின் எழுபதுகளின் இளைஞர்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

காந்தியை ஆதரித்த காரணத்தால் நேருவை விமர்சிக்க புகுந்த அவர், அதன் ஊடாக சர்வதேசிய கோட்பாடுகளை விமர்சிக்கவும் தயங்கவில்லை. அதனால் தான் காந்தி முன்னிறுத்தும் ராமனை, ‘தியாக’ மனிதனாக பார்க்கிறார். அதனாலேயே காந்தியின் தவறுகளை ராமனை வைத்து சமனப்படுத்த முயல்கிறார். கம்யூனிஸ்டுகள் காரிய சாத்தியமான விசயங்களை காந்தியை போல பரிசீலிக்க தவறுவதாக விமரிசிக்கிறார்.

அனுபவத்தின் மூலமாக மாற்றிக் கொள்ள ஏற்கெனவே திட்டம் என எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னையே தனது செயலுக்கு நீதிபதியாக நியமித்து பக்கசார்பின்றி நடந்து கொண்டார் காந்தி என்று சொல்லி, கோட்பாடுகளை, திட்டங்களை வைத்திருப்பவர்களை விட காந்தி உயர்ந்தவர் என நிலைநாட்ட முயல்கிறார். ஆனால் காந்தியமே ஒரு கோட்பாடு என்ற முறையில் ஜனநாயகத்தை மறுக்கும் பிடிவாதமாகவே காந்தியிடம் வெளிப்பட்டது. மக்களின் எதிர்ப்புணர்வை தணிப்பதற்கு காந்திய முறைகளும் கொள்கைகளும் ஆபத்தற்ற முறையில் இருந்ததாலேயே ஆங்கிலேயர்கள் சத்யாகிரகத்தை அனுமதித்தார்கள். போராட்டம் எல்லை மீறும் போது ஆங்கிலேயர்கள் பதட்டம் அடையத் தேவையின்றி காந்தியே கோபம் கொண்டு நிறுத்தியிருக்கிறார். இத்தகைய ஆளும் வர்க்க அடிப்படையை புரிந்து கொள்ளுமளவு அனந்தமூர்த்தியின் வரலாற்று பார்வை வளரவில்லை. அன்றைய கால முற்போக்கில் இத்தகைய பார்வை கொண்டோரும் கணிசமாக இருந்தனர்.

அதே நேரம் இந்திராவின் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து பேச அவர் தயங்கியதே இல்லை. பி.எம்.ஸ்ரீ, சிவராம் காரந்த், மஸ்தி வெங்கடேஷ் ஐயங்கார், டி.பி.கைலாசம் என இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால இலக்கிய முன்னோடிகள் அனைவருமே பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறை போன்றவற்றை ஆதிக்க சாதிப் பின்னணியிலிருந்து வந்தே எதிர்க்க ஆரம்பித்திருந்தனர். நாற்பதுகளில் ஏ.என் கிருஷ்ணா ராவ், டி.ஆர். சுப்பாராவ் (தா.ரா.சு) போன்றவர்கள் சமூக மாற்றத்துக்கான கருவியாக இலக்கியத்தை மேற்கொண்டனர். தாராசுவின் மசனாட கூவு என்ற நாவல் விலை மாதர்களைப் பற்றியது, ஹம்ச கீதா என்பது சித்ரதுர்கா பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சூபி பாடகனின் திப்பு மீதான அர்ப்பணிப்பான வாழ்வு பற்றிய வரலாற்றுப் புதினம்.

அறுபதுகளில் தான் ராம் மனோகர் லோஹியாவின் சீடர்கள் இலக்கிய உலகில் பிரகாசிக்க துவங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் இன்று இந்துத்துவா கொள்கையை தூக்கிப் பிடிப்பதற்காக 2007-ல் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தை கொடூரமானதாக சித்தரிக்கும் நாவலை எழுதிய பைரப்பா. இது போக ஜி.எஸ். சிவருத்ரப்பா, பி.லங்கேஷ், நிசார் அகமது என ஒரு பெரிய படைப்பாளிகள் பட்டாளமே அரங்கிற்கு வந்தது. தொன்னூறுகளில் வந்தவர்கள் இதற்கு எதிரான நவயோதரா பிரிவை சேர்ந்தவர்கள். பூர்ணசந்திர தேஜஸ்வி, தேவனூர் மகாதேவா போன்றவர்கள் இப்போது வந்துள்ளனர். சமூக வேலையிலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்களாக இவர்கள் பரிணமித்தனர்.

கன்னட எழுத்தாளர்கள் பொதுவில் சமூக அக்கறை உள்ளவர்களாகவே இருந்திருக்கின்றனர். மதக் கலவரங்கள், கன்னட இனவெறியர்களது தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் போன்றவற்றை எதிர்த்து பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களுக்குள் இணைந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இத்தகைய நிலைமைய தமிழக இலக்கிய உலகில் நாம் காண முடிவதில்லை.

பொதுப் பிரச்சினைகளுக்காக முதல்வர்களை சந்தித்து அங்குள்ள எழுத்தாளர் சங்கங்கள் மனு அளிப்பதும் அவ்வப்போது நடக்கும். பெங்களூரு உள்ளிட்ட பத்து நகரங்களின் பழைய பெயர்களை மீண்டும் சூட்டக் கோரி அரசுக்கு ஆலோசனை வழங்கி பழைய பெயர்களை காலனிய முறையில் இருந்து மீட்டவர் யு.ஆர்.அனந்தமூர்த்தி. தாமே தேவையான போது கையால் எழுதிய சுவரொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் வீதியில் ஒட்டி விட்டு வருவார்கள் அங்குள்ள எழுத்தாளர்கள். அனந்தமூர்த்தி அப்படி பலமுறை செய்திருக்கிறார்.

2004-ல் தேவ கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தள வேட்பாளராக தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தார் அனந்தமூர்த்தி. பிறகு அதே மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, ‘முன்னாள் நண்பர்களே! உங்களது இந்த இழிவுச் செயலை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் சேரும்போதே தேவகவுடா கும்பலின் ஆளும் வர்க்க அடித்தளத்தை புரிந்து கொள்ளும் தேவை அவரது சிந்தனையில் இல்லை. 2007-ல் பைரப்பாவின் நாவல் ஔரங்கசீப் ஆட்சியில் நடந்த லவ் ஜிகாத் என்ற புனைவினை முன்வைத்த போது ‘பைரப்பாவுக்கு எழுதவே தெரியவில்லை’ என்று மென்மையாக தனது கண்டனத்தை முன்வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு கூட்டத்தில் ‘மோடி பிரதமரானால் நான் இந்தியாவின் பிரஜையாக இருப்பதை விரும்ப மாட்டேன். அப்படி ஒருவேளை வந்துவிட்டால் நேருவும், காந்தியும் கனவு கண்ட இந்தியா நமக்கு கிடைக்காது. ஊழல் செய்தார்கள் என்பதனால் காங்கிரசு தண்டிக்கப்பட வேண்டுமேயொழிய, மோடியை தேர்ந்தெடுப்பது அதற்கு தீர்வாகாது’ என்றும் பேசினார். இந்துத்துவ வானரங்கள் இதனால் அவருக்கு எதிராக கடுமையான மிரட்டலை கண்டனங்களாக பதிவு செய்தன. அதனாலேயே, தான் உணர்ச்சிவசப் பட்டு சொன்னதாக கொஞ்சம் பின்வாங்கினார் யு.ஆர். அனந்தமூர்த்தி. இந்துமதவெறியை எதிர்த்து ஒரு காந்தியவாதி இவ்வளவு உறுதியாக இருப்பதே பெரும் விசயம். அதே நேரம் அதுவே அவரது வரம்பையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது.

மோடி வென்ற பிறகு அனந்தமூர்த்திக்கு பாகிஸ்தான் விமான டிக்கெட் போட்டு அவருக்கே அனுப்பி வைத்தனர் இந்துமத வெறி பாசிஸ்டுகள். தொடர்ந்து மெயில்கள், செல்பேசிகள் மூலமாக அவருக்கு தொல்லைகள் பலவற்றை கொடுத்து வந்தனர். பல இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்ததால் காவல்துறையினரின் பாதுகாப்பு அவருக்கு தரப்பட்டது. எனினும் மன உளைச்சல் அதிகரித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

அவர் மரணமடைந்த அன்று உடனடியாக மோடி இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். ஆனால் மங்களூர் நகரத்தில் உள்ள மோடி ரசிகர்களான பஜ்ரங் தள் அலுவலகத்தில் அன்று அதனை வெடி போட்டு கொண்டாடி இருக்கிறார்கள். மோடியின் இரங்கல் ஒரு நாடகம் என்பதை அந்த வெடிகள் உலகிற்கு தெளிவாக அறிவித்தன. அம்பேத்கரின் மறைவு நாளான டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதியை இடிக்க ஆர்.எஸ்.எஸ் முடிவெடுத்தது. மசூதியை இடித்த கொண்டாட்டத்தையும், அம்பேத்கரின் திவசத்தையும் ஒரு விழா போல கொண்டாடினார்கள்.

இத்தகைய மதவெறியர்களிடம் அனந்த மூர்த்தியின் மறைவன்று மட்டும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்.?

–    கௌதமன்.

சிறை எம்மை முடக்கி விடாது

4

மது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்திய GSH நிறுவன மற்றும் அவர்களுக்கு ஆதரவான பிற தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு 167 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் வெளிவந்த தொழிலாளர்கள் 23-ம் தேதி காலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமது சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

1. GSH கிளை நிர்வாகி தோழர் புரட்சி மணி :

ஆகஸ்ட் 15-ல் தொழிலாளர் கைது
ஆகஸ்ட் 15-ல் தொழிலாளர் கைது

சிறைக்குச் சென்றதன் மூலம் தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களும் அரசியல்படுத்தப்பட்டுள்ளன, எனவே எங்களை சிறைக்கு அனுப்பி எங்கள் குடும்பத்தை அரசியல்படுத்தும் நல்ல வேலையை செய்திருக்கும் அரசுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களோடு கைதான முன்னணித் தோழர்கள் சிறையில் எங்களுக்கு முன்மாதிரியாகவும், நம்பிக்கையூட்டுபவர்களாகவும் இருந்தனர். எதிர்கால புதிய ஜனநாயக சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை சிறையில் இருந்த போது நாங்கள் கூட்டாக, குழுவாக வேலைகளை செய்த போது உணந்துகொண்டோம். இனி சிறைக்கு எப்போதும் செல்லத் தயாராக இருக்கிறோம்.

சிறை எங்களுக்கு அரசியலை மட்டுமல்ல கலையையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. சிறைக்குள் நாங்கள் கவிதைகள் எழுதினோம், பாடல்கள் எழுதினோம், பாடினோம், நாடகங்கள் எழுதினோம், நடித்தோம். சிறைச்சாலை எங்களை கவிஞர்களாகவும் பாடகர்களாகவும் கலைஞர்களாகவும் மாற்றியது.

2. GSH கிளை நிர்வாகி தோழர் சிறீதர் :

அனுபவக் கூட்டம்
அனுபவக் கூட்டம்

முதல் முறை சிறைக்குச் சென்ற அனைவருக்கும் ஒருவித தயக்கமும் பயமும் இருந்தது உண்மை தான். பல தொழிலாளிகள் குடும்பத்திற்கு தெரிவிக்கவே இல்லை, ஆனால் அந்தத் தயக்கமும் பயமும் இப்போது இல்லை. சிறையில் அனைத்து வேலைகளுக்கும் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பல தொழிலாளர்களின் பெற்றோர்களும் துணைவியார்களும் இங்கு வந்திருக்கிறீர்கள். இனி உங்கள் வீட்டில் நீங்கள் எந்த குழம்பை வைத்தாலும், அதில் உப்பு, காரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் கணவன்மார்கள், பிள்ளைகள் குறை கூறாமல் சாப்பிடுவார்கள், உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். சிறையும், சிறையில் நாங்கள் குழுவாக சேர்ந்து வேலை செய்ததும் எங்களிடமிருந்த தவறுகளையும் குறைகளையும் களைந்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் நாங்கள் கைது செய்யப்பட்டோம், சிறையில் இருந்தோம், இப்போது வெளியிலும் வந்து விட்டோம், ஆனால் இந்தப் போராட்டத்தில் இரண்டு உயிர்கள் போய்விட்டன. போலீசு நடத்திய தடியடியில் ஆணா பெண்ணா என்று தெரியாத இரண்டு கருக்கள் கலைந்து விட்டன. நமக்காக இல்லையென்றாலும் பிறக்காமல் போன அந்த கருக்களுக்காகவாவது நாம் போராட வேண்டாமா? போராட வேண்டும். இனி சிறை என்றால் முறையாக வீட்டில் தெரிவித்துவிட்டு தான் செல்வோம்.

3. பு.ஜ.தொ.மு காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் சிவா :

தோழர் முகுந்தன் உரை
தோழர் முகுந்தன் உரை

சிறை என்பது தொழிலாளர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் மேடையாக இருந்தது. அரசு என்பது வர்க்க ஒடுக்குமுறை கருவி என்பதை தொழிலாளர்கள் படித்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இப்போது தான் முதல் முறையாக அதை எதிர்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்கள் நடத்தியது வெறும் உரிமைகளுக்கான போராட்டமல்ல, இது வர்க்கப் போராட்டம். இந்த போராட்டம் தொடரும், ஆனால் இதை எப்போதுமே சட்ட வரம்பிற்குள் நின்று செய்ய முடியாது. நமது அடுத்தடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் வெல்ல வேண்டுமானால் மீண்டும் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும். எந்த பிரச்சினைகளுமின்றி பாதுகாப்பாக வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு நமது உரிமைகளைப் பெற முடியாது.

4. ஒரு தொழிலாளியின் துணைவியார் :

னைவரையும் பிணையில் எடுக்க உதவியாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றி. எனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அமைப்பு தோழர்கள் தான் எங்கள் வீட்டுக்கு வந்து என்ன என்ன தேவை என்பதை கேட்டு செய்து கொடுத்தனர். எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல கைதான அத்தனை தொழிலாளிகளின் வீடுகளிலும் என்ன தேவை, கையில் பணம் இருக்கிறதா இல்லையா, சமையல் பொருட்கள் இருக்கிறதா இல்லையா, குழந்தைகள் பெரியவர்கள் உடல்நலப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அருகில் இருந்து கவனித்துக்கொண்டனர். கைதான முதல் நாளில் மட்டும் சங்கத்தின் பொருளாளர் தோழர் விஜயகுமாருக்கு தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்திருக்கிறது, அனைத்திற்கும் தோழர் பொறுமையாக பதில் கூறியிருக்கிறார்.

தோழர் சு.ப.தங்கராசு உரை
தோழர் சு.ப.தங்கராசு உரை

இப்படி ஒரு அமைப்பை இதுவரை நான் பார்த்தது இல்லை. உண்மையில் எனது கணவர் பு.ஜ.தொ.மு வில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கே வந்திருக்கின்ற தொழிலாளர்களின் அப்பா அம்மாவா இருந்தாலும் சரி, மனைவிகளாக இருந்தாலும் சரி நீங்களும் அவர்கள் அமைப்பில் இருப்பதை பெருமையாக நினைக்கணும். இனி எந்த போராட்டம் நடந்தாலும் அவரை நான் மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பேன் அதே போல நீங்களும் உங்களுடைய பிள்ளைகளையும், கணவன்மார்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.

5. பு.ஜ.தொ.மு ஆவடி அம்பத்தூர் பகுதி தோழர் முகிலன்:

ங்களோடு முதல் முறையாக சிறைக்கு வந்த தொழிலாளியின் அம்மா அவரை பார்க்க வந்த போது அவர் என்னையும் உடன் அழைத்துச் சென்றார். தோழர் தனது அம்மாவிடம் பேசும் போது, என்னை அறிமுகப்படுத்தி இவர் தான் என்னை போராட்டத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார். அதை கேட்ட அந்த தாய் என் பிள்ளையை நல்ல தைரியசாலியாக மாத்தியிருக்கீங்க தம்பி என்றார். பல தொழிலாளிகளுக்கு ஹான்ஸ், பான்பராக் போடும் பழக்கங்கள் இருந்தன, அந்தப் பழக்கங்களை எல்லாம் சிறையில் இருந்த இந்த ஏழு நாட்களில் தொழிலாளர்கள் கைவிட்டுவிட்டனர்.

தொழிலாளர்களும் குடும்பத்தினரும்
தொழிலாளர்களும் குடும்பத்தினரும்

வீட்டில் வேலை செய்யாத பல தொழிலாளிகள் சிறையில் கூட்டாக உழைத்ததன் மூலம் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், துணைவியாருக்கு உதவ வேண்டும் என்பதை கற்றுக்கொண்டனர். நாம் முறையாக இயங்கியது, நமது பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டது, உணவு உழைப்பு என்று அனைத்தையும் சமமாக பகிர்ந்து கொண்டதை எல்லாம் பார்த்துவிட்டு விடுதலையாவதற்கு முதல் நாள் எங்கள் மத்தியில் வந்து பேசிய ஜெயிலர், “உங்களிடமிருந்து நாங்களே நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கே இருந்திருந்தால் மொத்த சிறையையும் மாற்றிவிடுவீர்கள் போலிருக்கிறதே” என்றார். சிறைக்கு வந்த தொழிலாளர்கள் நிறைய கற்றுக்கொண்டு வெளியே வந்திருக்கின்றனர். இது அவர்களை மேலும் உறுதியான போராட்டங்களை நடத்த பக்குவப்படுத்தும்.

6. தோழர் அசோக்குமார் :

சிறையில் அடைப்பதற்கு முன்னால் அனைத்து கைதிகளையும் ஜட்டி வரை கழட்டி பரிசோதனை செய்து அங்க அடையாளங்களை குறித்துக்கொள்வது தான் சிறை வழக்கம். நமது தோழர்களையும் அப்படி உடைகளை கழட்டச் சொன்னார்கள், ஆனால் முன்னணியாக நின்ற தோழர்கள், “நாங்கள் கிரிமினல்கள் இல்லை அரசியல் கைதிகள் எனவே உடைகளை எல்லாம் கழட்ட முடியாது” என்று கூறியதோடு, “யாரும் சட்டை பட்டனைக் கூடக் கழட்டக் கூடாது” என்று கூறிவிட்டனர். “மச்சம் தானே வேணும் இதோ பார்த்துக்க”ன்னு ஒவ்வொருவரும் தமது அடையாளங்களை காட்டினோம். உடைகளை கழட்ட மறுத்ததும், “ஐயா, சட்டையை கழட்ட மாட்டேங்கிறாங்கய்யா”ன்னு ஜெயிலரிடம் போய் முறையிட்டனர், ஜெயிலர் வந்தார்.

தொழிலாளர்கள்“நீங்கல்லாம் என்ன அமைப்புப்பா” என்றார்.

“பு.ஜ.தொ.மு” என்றோம்.

“ஓ.. ம.க.இ.க வா! சரிய்யா, இவங்க கம்யூனிஸ்டுகள் இவங்களை சட்டையை எல்லாம் கழட்டாம அப்படியே அடையாளத்தை குறிச்சிக்கங்க”ன்னு சொன்னார். இந்த முதல் சம்பவமே எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்டோம். முதல் நாள் இரவு குடும்பத்தை நினைத்து ரொம்ப கஷ்டமா இருந்தது. பல தொழிலாளிகள் மிகவும் மன வருத்தத்தில் உடைந்து போகும் நிலையில் இருந்தாங்க. நானும் அப்படி தான் இருந்தேன் பிறகு எப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்தோம். முன்னணியாக இருந்த தோழர்கள் 167 பேரையும் சுகாதாரக் குழு, மருத்துவக் குழு, உணவுக் குழு, குடிநீர் குழு, விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு, தொண்டர் குழு என்று ஆறு குழுக்களாக அமைத்தனர். ஒரு குழுவுக்கு 10 தோழர்கள் இருந்தனர். இந்த குழுக்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டன.

எனக்கு சிறை அனுபவம் புதிதாக இருந்ததால், என்னடா இது சிறைக்குள்ள வந்தும் குழு அது இதுன்னு பண்ணிக்கிட்ருக்காங்களேன்னு தோணிச்சி. ‘நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே’ன்னு கொஞ்சம் எரிச்சலாவும் கூட இருந்துச்சி, பிறகு தான் அது எவ்வளவு சரியானது என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.

ஆகஸ்ட் 15 அன்று அடக்குமுறை
ஆகஸ்ட் 15 அன்று அடக்குமுறை

அமைப்பு கூட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் செல்லும் போது தோழர்கள் புதிய ஜனநாயக சமூக அமைப்பைப் பற்றி விளக்குவார்கள். புதிய ஜனநாயக அரசில் நாம் தான் அரசு, நாம் அமைப்பதுதான் அரசாங்கம். மக்கள்தான் அரசை நடத்துவார்கள். அந்த அரசில் ஒவ்வொரு குடிமகனும் தலைவனாக இருப்பான். மக்கள் கூட்டாக உழைப்பார்கள், உழைப்பவர்களுக்கு தான் உரிமைகளும் அதிகாரமும் இருக்கும், மக்களைச் சுரண்டுபவர்கள் கொள்ளையடிப்பவர்களுக்கு அதிகாரம் இருக்காது, இப்படித்தான் சீனாவில் மாவோ தலைமையிலான சீன அரசு இருந்தது என்று விளக்கும்போதெல்லாம் அதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறையில் இந்த ஏழு நாட்களில் நாங்கள் 167 பேரும் ஒரு குட்டி அரசாங்கமாகவே இயங்கினோம். நாங்கள் குழுக்களாக இயங்கியது போலத் தான் புதிய ஜனநாயக சமூக அமைப்பும் இயங்கும், ஆனால் அது இதை விட பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான குழுக்களைக் கொண்டு இயங்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இனிமேல் சிறையில் கற்றுக்கொண்ட ஒழுங்கு முறைகளை எனது குடும்பத்திலும் அமுல்படுத்துவேன். இந்த மாதிரியான முறைகளை கடைபிடித்தால் ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைகளை எவ்வளவோ குறைத்துக் கொள்ள முடியும், முறைப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு பொருந்துகின்ற இந்த முறைகள் ஒரு நாட்டிற்கு ஏன் பொருந்தாது? இதை ஒரு நாட்டிற்கு பொருத்தினால் அந்த நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உண்மையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசை நம்மால் கட்டியமைக்க முடியும், அதை நாமே நிர்வாகம் செய்யவும் முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையை இந்த சிறை அனுபவம் தான் எனக்கு அளித்தது.

குடும்பத்தினர்உதாரணத்திற்கு பார்த்தீங்கன்னா தினமும் வெவ்வேறு தொழிலாளர்களின் உறவினர்கள் வந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில நாட்கள் உறவினர்கள் குறைவாக வருவார்கள், உணவுப் பொருட்களும் குறைவாக வரும். அப்படி ஒரு நாள் மொத்தமே ஆறு வாழைப்பழங்கள் தான் வந்தது. சரி இந்த ஆறு வாழைப்பழத்தை எப்படி 167 பேருக்கு பிரித்து கொடுக்கப்போறாங்கன்னு பார்ப்போமேன்னு நான் உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் தோழர்கள் அதையும் 167 பேருக்கு பகிர்ந்தளித்தனர். தனியாக நின்று யோசித்தால் என்னடா இது முட்டாள்தனமா இருக்கு, 167 பேருக்கு ஆறு பழம்னா தோல் கூட கிடைக்காதேன்னு தான் தோணும், ஆனால் உண்மை அப்படி இல்லை. கூட்டாக சிந்திக்கும் போது, கூட்டாக உழைக்கும் போது அனைத்தையும் செய்ய முடியும் என்பதையும் இதில் கற்றுக்கொண்டேன் என்றார்.

7. கோவிந்தராஜ், தொழிலாளி

ன்னைக்காவது ஒரு நாள் சிறைக்கு போகணும்கிற வித்தியாசமான ஆசை எனக்கு இருந்தது. ஆனா அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் அமையும்னு நான் எதிர்பார்க்கல. நிறைய கூட்டங்கள்ல நம்ம தோழர்கள் பேசும் போது சோசலிச சமூகத்தை பத்தியும், புதிய ஜனநாயக சமூகத்தை பத்தியும் சொன்னதை எல்லாம் இதுவரை கற்பனையா தான் மனதில் ஓட்டிக்கிட்டிருந்தேன், ஆனால் அதை நடைமுறையில் பார்க்கும் வாய்ப்பு இந்த சிறை அனுபவத்தில் கிடைத்தது.

குழந்தைகள்இந்த அரசை ஏன் தொழிலாளி வர்க்கத்தால் நடத்த முடியாது, உழைக்கும் மக்களாலும் ஒரு அரசை நடத்திக்காட்ட முடியும் என்கிற நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்க மட்டும் கைதாகவில்லை, எங்களோடு வந்து நின்ற ஒரு தொழிலாளியின் அப்பாவும், இன்னொரு தொழிலாளியின் அண்ணனையும் கைது செய்து விட்டனர். அந்த தொழிலாளியின் அண்ணன் முதல் நாள் கொஞ்சம் வருத்தப்பட்டார், பிறகு சகஜமாகி விட்டார். எனக்கு இதுவரை ஒரு தம்பிதான் இருந்தான், இப்ப 167 தம்பிங்க கிடைச்சிருக்காங்கன்னாரு. மற்றொரு தொழிலாளியின் அப்பா நாங்கள் சிறையில் நாடகம் போட்ட போது அந்த நாடகத்தில் ஒரு தொழிலாளியின் அப்பாவாகவே பங்கேற்று நடித்தார்.

நாங்க இருந்த வரைக்கும் அந்த பிளாக்கில் எந்த பிரச்சினையும் இல்லை, தண்ணீர் பிரச்சினை சுத்தமாக இல்லை, அனைத்து தேவைகளும் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. நாங்க குழுவாக ஒற்றுமையாக வேலை செய்ததைப் பார்த்த மற்ற சிறைக்கைதிகள் அவர்களுடைய பிரச்சினைகளை எங்களிடம் சொல்லி அதற்காகவும் எங்களை போராடச் சொன்னார்கள். அப்பாவியாக மாட்டிக்கொண்டு சிறையில் இருக்கும் பல கைதிகளிடம் அரசியல் பேசியிருக்கிறோம், இந்த அரசியல்தான் சரியானது என்றும் கூறினார்கள்.

அரசு என்றால் என்ன என்பதை இதுவரை தோழர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்பதை சிறைக்குச் சென்றதன் மூலம் தெரிந்து கொண்டோம். பல அப்பாவிகளை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள், சின்னச் சின்ன திருட்டு வழக்குகளில் மாட்டியவர்கள் மீதெல்லாம் பல பொய் வழக்குகளை போட்டு உள்ளே வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரிய பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே சுதந்திரமாக சுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சிறை அனுபவம் மூலம் நன்றாக தெரிந்து கொண்டோம். இந்த சமூக அமைப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த சிறை நல்ல உதாரணமாக இருக்கிறது. இந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றி ஒரு புதிய ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தீவிரமாக வேலை செய்ய வேண்டிய தேவையையும் எங்களை சிறைக்கு அனுப்பியதன் மூலம் இந்த அரசு எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

8. சிறை சென்று வந்த GSH தொழிலாளி புரட்சி மணியின் தந்தை தோழர் கருப்பையாவுக்கு 65 வயது. திருவாரூர் மாவட்டத்தில் CPI கட்சியின் விவசாயத்தொழிலாளர் சங்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டவர். தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிலமீட்பு இயக்கத்தின் போது மூன்று முறை கைதாகி சிறை சென்றிருக்கிறார்.

“நான் மூன்று முறை சிறைக்கு போய்ட்டு வந்திருக்கேன். ஒரு நியாயமான கோரிக்கைக்காக சிறை சென்று வந்த தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் ஆதரிக்க வேண்டும்.

சிறை எல்லாம் எங்க குடும்பத்துக்கு பழக்கப்பட்ட இடங்க, என் பையன் போய்ட்டு வந்தது பெருமையா தான் இருக்கு. யூனியன் தலைவர் சொன்ன மாதிரி சிறைக்கு போனவங்க எல்லாம் என்ன கொலையா பண்ணிட்டு போனாங்க போராடிட்டு தானே போனாங்க.

எங்க மாவட்டமே சிவப்பு மாவட்டங்க, சீனிவாசராவைப் பத்தி கேள்விப்படிருக்கீங்களா? எங்க ஊர் பக்கம் பல பிள்ளைகளுக்கு இப்பவும் சீனிவாசன்னு தான் பேரு, அவரோடெல்லாம் ஒப்பிடும் போது நாம என்ன வேலை செஞ்சிருக்கோம். என் பையனுக்கு கல்யாணசுந்தரம் தான் பேர் வச்சாரு, அந்த பேர் தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு. கம்யூனிஸ்ட் இயக்கமெல்லாம் கொடிகட்டி பறந்த காலம் ஒன்னு இருந்துச்சிங்க.

இந்த அரசு முதலாளிகளுக்கான அரசு, தொழிலாளர்களை ஒடுக்கத்தான் செய்யும், பாட்டாளி வர்க்க சோசலிச அரசு தான் உழைக்கும் மக்களுக்கான அரசு. அதைத் தான் நாம் உருவாக்க வேண்டும்.

– வினவு செய்தியாளர்

சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?

106

வீடியோ

vinavu cartoons 9.9 (5)

தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா
தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா

vinavu cartoons 9.9 (2)

vinavu cartoons 9.9 (4)vinavu cartoons 9.9 (7)vinavu cartoons 9.9 (3)vinavu cartoons 9.9 (1)vinavu cartoons 9.9 (8)

bjp-09

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளரான வெள்ளையம்மாள் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று தனது கைக்குழந்தையுடன், கணவர் ராஜா, வக்கீல் மகாராஜன் ஆகியோருடன் வந்து தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மேயராக அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்துள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க வேட்பாளர் வாபஸ் என்றும் “மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்களை ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புலம்பியிருக்கிறார். வெள்ளையம்மாள் 3 நாட்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வளைக்க முயற்சித்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு பதவி விலகிய பிறகு சட்டமன்றம் கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை அடுத்து, சட்ட மன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையை சரிக்கட்ட, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ரூ 4 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயற்சித்திருக்கிறது. சங்கம் விகார் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் தினேஷ் மொகானியாவுக்கு, பா.ஜ.க டெல்லி துணைத் தலைவர் ஷெர்சிங்க் தாகர் ரூ 4 கோடி கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும், தேர்தலில் தோற்றால் ஏதாவது வாரியத் தலைவர் பதவி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இது தொடர்பான உரையாடல், காட்சிப் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

லேடியும் சரி, கேடியும் சரி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ‘ஜனநாயக’த்தை விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள் என்பதைத் தவிர இது வேறு எதைக் காட்டுகிறது?

நெல்லை தவிர இன்னும் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு வழி விட்ட பா.ஜ.க வேட்பாளர்கள்.

1. பா.ஜனதா வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு – “நான் வாபஸ் கடிதம் கொடுக்கவில்லை” என்கிறார் பா.ஜனதா வேட்பாளர்.

– மதுரை மாநகராட்சி 85-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு

2. ஆலந்தூர் மண்டல 166-வது வட்ட இடைத்தேர்தல் : பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ்; அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு.

– பா.ஜனதாவினர் அவர்கள் கட்சி வேட்பாளர் நீதிசேவியர் வீட்டின் முன் போராட்டம்

3. ஆவடி நகராட்சி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ் – அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

– ஆவடி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தரணி திடீரெடனு தனது மனுவை வாபஸ் பெற்றார். அவருடன் மாற்று வேட்பாளர் ஸ்ரீகிருஷ்ணவேணியும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இருவரும் பா.ஜ.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.

4. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு பா.ஜனதா வேட்பாளர் உட்பட 4 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5. சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

6. பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க தவிர பா.ஜ.க வேட்பாளர் உட்பட மற்றவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றது.

தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்

20

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா என்கிற பகுதியைச் சேர்ந்த சல்மான் என்கிற இசுலாமிய இளைஞர் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அன்று நள்ளிரவில் போலீசாரால் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் இழுத்துச் செல்லப்படும் சல்மான், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு “பயங்கரவாதியைப்” போல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சல்மான்
சல்மான்

அதிர்ச்சியடைந்த சல்மானின் பெற்றோர் தங்கள் மகனின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டுள்ளான், அவன் செய்த குற்றம் என்ன என்பதை அறிய மறுநாள் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். போலீஸ் தரப்பில் அவர்களுக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. ஆகஸ்டு 21-ம் தேதி மாலை “தேசிய கீதத்தை அவமதித்த” காரணத்தின் பேரில் சல்மான் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார், பின்னர் முகநூலில் தேசத்திற்கு விரோதமான தகவல்களை சல்மான் பரிமாறியதாகச் சொல்லி தேச துரோக குற்றத்தையும் இணைத்துக் கொண்டனர்.

ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்தப்படுவதற்கு காரணமாக கூறப்பட்ட சல்மானின் தேசதுரோகச் செயல் என்ன?

கடந்த 18-ம் தேதி சல்மானும் அவரது ஆறு நண்பர்களும் (அதில் இருவர் பெண்கள்) கேரள மாநில அரசுக்குச் சொந்தமான திரையரங்கு ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அங்கே திரைப்படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் போட்டிருக்கின்றனர். தேசிய கீதம் திரையில் ஓடிய சமயத்தில் சல்மானும் அவரது நண்பர்களும் அமர்ந்தே இருந்துள்ளனர். இதைக் கவனித்த இந்துத்துவ காலிகள் சிலர் சல்மான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக அங்கேயே கலாட்டா செய்து போலீசிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

சல்மானின் அடையாளம் அவர் இசுலாமியர் என்பதல்ல. திருவனந்தபுரத்திலும் அவர் வசிக்கும் பகுதியிலும், கல்லூரியிலும், நண்பர்கள் வட்டத்திலும் அவருக்கு வேறு அடையாளம் இருந்தது. சல்மான் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரிடையேயும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலராக இருந்தார். கடந்த ஆகஸ்டு 14-ம்  தேதி திருவனந்தபுரத்திலுள்ள அரசுத் தலைமைச் செயலகத்தின் முன் ஊஃபா சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கெடுத்திருந்தார். மேலும், மனித உரிமை மீறல் தொடர்பான சில மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருந்தார். அவரது முகநூலில் பதிந்திருக்கும் அனேகமான நிலைத் தகவல்கள், போலீசாரின் அதிகார அத்துமீறலைக் கண்டிப்பதாகவே உள்ளன.

திரையரங்கில் ’தேசிய கீதத்தை’ அவமதித்து வெளியேறிய சல்மான், அவரது பெண் நண்பர் ஒருவர் “தேசியக் கொடியின் நிறத்தில் உள்ளாடை தேவை” என்பதைப் போல வெளியிட்டிருந்த முகநூல் நிலைத்தகவல் ஒன்றிற்கு விருப்பம் தெரிவித்திருந்த தேச ‘துரோக’த்தையும் செய்திருந்தார். இத்துடன் அவர் ஒரு இசுலாமியராகவும் இருக்கவே போலீசார் அவர் மேல் தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

தேசிய கீதம் குறித்து இந்தளவுக்கு அக்கறை காட்டி தம் கட்டும் அதிகார வர்க்கம் ஏன் அரசுத் திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்க விடுகிறது? ஏன் தனியார் திரையரங்கில் ஒலித்துக் கொண்டிருந்த தேசிய கீத ரிக்கார்டை உருவிப் போட்டது?

ஏனென்றால், திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்படும் போது மக்களே அதை மதிக்கவில்லை. தேசமே அடிமையாகும் போது தேசிய கீதத்திற்கு மட்டும் என்ன மதிப்பிருக்க முடியும்? ஆகவே சுதந்திரமாக வெளியே தம்மடிக்க சென்று விட்டனர். எனவே தான், முன்பு தனியார் திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்த விதிமுறையைத் தளர்த்தினர். ”தேசியப் பெருமிதத்திற்கு அவமரியாதை நேர்வதைத் தடுக்கும்” 1971-ம் ஆண்டின் சட்டம் ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” என்று சொல்வதன் படி பார்த்தால், முதலில் தண்டனைக்குரியவர்கள் தனியார் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை தடுத்த அதிகாரிகள் தான்.

சல்மான் ஆதரவு போஸ்டர்
சல்மான் ஆதரவு போஸ்டர்

அப்படியே தனியார் திரையரங்குகளில் மீண்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்தாலும் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’, ’மாயக்கா’ போன்ற ஷக்கீலாவின் திரைக்காவியங்கள் துவங்குவதற்கு முன் தேசிய பெருமிதத்தை எழுச்சியுறச் செய்த குற்றத்தை இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஆபாசப் படங்களுக்கும் தேசிய கீதம் போடவேண்டுமென்றால் பிறகு இணையத்தின் நீலப்பட தளங்களுக்கும் அதை அமல்படுத்தலாமே? தற்போது ஷகீலா திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டாலும், வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் வரும் குத்தாட்டங்கள் ஷகீலா படங்ககளுக்கே சவால் விடுப்பதாகவே இருக்கின்றன என்பது வேறு விசயம்.

தேசியக் கொடியை அவமரியாதை செய்த குற்றத்தைப் பொருத்தவரை, இந்தியாவிலேயே தேசிய பெருமிதம் அதிகபட்சமாக பொங்கி வழியும் ஒரே இடம் கிரிக்கெட் மைதானம் தான். மைதானங்களில் உயர் வர்க்க குலக்கொழுந்துகளின் முகரைகளிலும், முதுகு மற்றும் மார்புகளிலும் தேசிய கொடியின் வண்ணங்கள் சீப்பறுந்து சீரழியும் காட்சிகள் நமக்குப் புதிதில்லை. தேசிய கொடியின் வண்ணத்தில் உள்ளாடை கிடைக்குமா என்று கேட்டதற்கு விருப்பம் தெரிவித்தது தேச துரோகம் என்றால், கொடியைத் தன் சளியொழுகும் மூஞ்சியில் வரைந்து கொண்டும், கொடியால் விசிறிக் கொண்டும் மைதானத்தில் அமர்ந்து 20-20 கிரிக்கெட்டை ரசிக்கும் திருமதி. அம்பானியையும் ப்ரீதி ஜிந்தாவையும் எத்தனை முறை கைது செய்யலாம்?

காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது. இந்த வரையறையின் படி பார்த்தால், ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும், தண்டகாரண்யா, கூடன்குளம், ஜெய்தாபூர், விதர்பா என்று நாடெங்கும் பரவலாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும். ’இந்திய அரசே ஒழிக’ என்பதும் ’தேச துரோக’ குற்றமாகி விடும். 99% சதவீத மக்களின் செயல் தேச துரோகமென்றும் எஞ்சிய 1% கொழுப்பெடுத்தவர்களே தேசபகதர்கள் என்றும் சொல்கிறது ஆங்கிலேயன் போட்ட சட்டம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெரும் நிலப் பிரதேசங்களையும், தண்ணீர் தனியார்மயத்தின் கீழ் ஆறுகளையும், பன்னாட்டு சுரங்க நிறுவனங்களிடம் மலைகளையும், வங்கி இன்சுரன்சு துறைகள் தனியார்மயமாக்கல் என்கிற பெயரில் மக்களின் சேமிப்பையும், இராணுவத்துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில் இராணுவத்தையும் – ஆகமொத்தத்தில் முழு நாட்டையும் கூறுகட்டி விற்பது தேசபக்தியில் சேர்த்தியா என்பது பற்றி வெள்ளைக்காரன் சட்டங்கள் ஏதும் போட்டுள்ளானா, நமக்குத் தெரியவில்லை; ஏனெனில், என்னதான் சுதேசிகளாக இருந்தாலும் தேச பக்தி அல்லது துரோகம் என்று வரும் போது காலனிய எஜமானர்கள் கழித்துச் சென்ற அளவுகோல்களைத் தானே பயன்படுத்தியாக வேண்டியுள்ளது?

நாட்டின் இறையாண்மையை விற்பது தேசபக்தி, பொருளாதார நடவடிக்கை என்றும் அதை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றும் சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சல்மான்கள் கைது செய்யப்படாமலிருந்தால் தான் அதிசயம். சமகாலத்தில் தேசத்தை விற்றதன் மூலம் புகழ்பெற்ற ‘தேசபக்தர்களின்’ பெயர் பட்டியலைப் பார்த்தால், நாமெல்லாம் தேச துரோகிகளாக இருப்பதே உத்தமம்!

எனவே, தேச துரோகிகளாக மாறுவோம் – தேசத்தைக் காப்போம்!

அவாக்கள் யாருமில்லை – ஃபேஸ்புக் பிள்ளையார் பதிவுகள்

0

1. உண்மைத்தமிழன் (truetamilan)

பிள்ளையார் பெயரில் நச்சைப் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்
பிள்ளையார் பெயரில் நச்சைப் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்

தமிழ்க் கலாச்சாரத்திலேயே இல்லாத இந்த பிள்ளையார் கரைப்பு.. ஊர்வலமாகக் கொண்டு செல்வது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் பாரதீய ஜனதா கட்சி தலையெடுத்த பின்புதான் நாட்டில் அதிகமாகப் பரவியது.. மத பின்னணியில் ஆட்சியைப் பிடித்தவர்கள் செய்த கோலம் இது..!

ஊர்வலத்துல தண்ணிய போட்டுட்டு ஆடிக்கிட்டே போயிருக்காங்க..! ஆக… ஒரு பக்கம் தண்ணியை போட்டுட்டு தலையை விரிச்சுப் போட்டு கிராமத்துல பிள்ளையாரோட அப்பன் முனியாண்டியை பிரியாணி விருந்து போட்டு வணங்குற ஒரு கூட்டம்.. இன்னொரு பக்கம் இப்படி புல்லா ஒரு கட்டுகட்டிட்டு.. ஒரு ஆஃப் அடிச்சிட்டு மவனைத் தூக்கிட்டு போய் கடல்ல தூக்கி வீசுற எந்தக் கொள்கையுமில்லாத இன்னொரு கூட்டம்..!

பக்தியை நல்லா வளர்க்குறாய்ங்கய்ய நாட்டுல.!

பிள்ளையாரப்பா உன்னால் முடிந்தால் இவர்களை தண்டித்து பார்..! நீயே இந்த நாட்டுல இருக்க மாட்ட..!!!

2. பிரகாஷ் ஜே பி (prakash.jp.73)

இன்று காரில் “U” டேர்ன் சிக்னலுக்காக காத்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தங்களின் இருசக்கரவாகனத்தில் அதே சிக்னலுக்கு காத்திருந்தனர்… கணவன், மனைவி, பிள்ளைகள் (பர்தா & தொப்பி அணிந்து)…

மசூதிக்கு அருகில்
மசூதிக்கு அருகில் வலிந்து நிறுத்தப்படும் பிள்ளையார் ஊர்வலம்.

அப்போது பக்கத்தில் ஒரு மினி டெம்போவில் ஒரு பத்து பேர் காவி துண்டுகள் அணிந்து, ஆட்டமும் பாட்டமுமாய், அந்த இரு சக்கர வாகனத்தை மிக நெருங்கி வந்து, அவர்களை பார்த்து ஏளனமாய் சத்தத்துடன் ஊளையிட்டு, நேராக சென்றுவிட்டது… விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு வருகிறார்கள் போல்..

இடது பக்க சாலையில் நேராய் செல்ல காலியாக இருந்தபோதும், இவர்கள் நின்றுகொண்டிருந்த வலதுபக்கம் தேவையில்லாமல் நெருங்கிவந்தனர்… அந்த முஸ்லிம் குடும்பம், அமைதியாய், தலைதொங்க, மீடியன் பக்கமாக தள்ளிவந்து நின்றுகொண்டார்கள்….

இன்று பார்த்த இதுபோன்ற பல மினி டெம்போக்களில் “அவாக்கள்” யாரும் கிடையாது.. நமது ஆட்கள்தான் இப்படி வழிதவறி ஹிந்துத்துவா அடியாட்களாய் இருக்கிறார்கள்…

3. கார்ட்டூனிஸ்ட் பாலா (cartoonistbala)

(பழைய மும்பை அனுபவம்) பாவம் அந்த பிள்ளையார்!
—————————————
மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. இதேப்போன்ற ஒரு விநாயகர் சதுர்த்தியின் மழை நாளில் தான் அவரை நான் பார்த்தேன்.

பத்தாண்டுகள் இருக்கும். அப்போது `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் உதவி ஆசிரியராக பணியிலிருந்தேன். அன்றைய பணி முடிந்து நானும் அலுவலக சகாக்கள் இருவரும் தாதர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். நேரம் இரவு மணி பத்தரை இருக்கும். லைட்டாக மழை தூறிக் கொண்டிருந்து.

தாதர் ரயில் நிலையத்தில் எல்லா நாளும் கூட்டம் அள்ளும். அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் அழகான குட்டி பிள்ளையார் சிலைகளை தங்கள் பகுதிக்கு ரயில் கொண்டு செல்ல காத்திருந்தனர்.

சில நிமிடத்தில் சர்ச்கேட் டூ போரிவலி ரயில் வந்தது. சிலைகளை வைத்திருந்த குரூப் ஒன்று முண்டியடித்து ஏறியது. அவர்களுக்குப் பின்னாடியே என் சகாக்கள் இருவரும் ஏறிவிட்டிருந்தனர்.

நான் மட்டும் கூட்டம் உள்ளே போகட்டும். வாசல் ஓரம் நின்றுக் கொள்ளலாம் என்று வாசலை ஒட்டி இருந்த சிறு கைப்பிடியை பிடித்துக் கொண்டு ரயிலில் ஒரு காலும் பிளாட்ஃபார்மில் ஒரு காலும்வைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ரயில் கிளம்புவதற்கான `பூம்ம்ம்ம்ம்ம்..’ அலாரம் ஒலித்தது. மெதுவாக ரயில் நகர ப்ளாட்ஃபார்மிலிருந்த எனது காலை எடுத்து ரயில் வைக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.

மெலிந்த உடலும், பரட்டை தலையும், தாடியும், அழுக்கு உடையுமாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ரயிலின் உள்ளிருந்த கூட்டத்தை பிளந்தபடி மிதித்து தூக்கி வீசப்பட்டார்.

ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் மிதித்து வீசப்பட்டது நிஜம்.

விழுந்த நபர் கூட்டத்துக்கு நடுவே அப்படியே சுருண்டு கிடந்தார்.

யார் அந்த நபர்.. உள்ளே என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் யாரோ ஒருவரை ஓடும் ரயிலிருந்து மிதித்து தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

கோபத்துடன், “ அரே க்யூம் அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்கா..” (ஏன் இப்படி அடிச்சு வீசுறீங்க.. அந்த ஆள் செத்துப்போவான்” ) என்று சத்தம் கொடுத்தேன்.

பிள்ளையார் ஊர்வலம்
பிள்ளையார் மீது நகம் பட்டால் கூட பொறுக்காத பக்தர்கள் (சென்னை ஊர்வலத்தில்)

அவ்வளவுதான்.. அடுத்த நொடி,

“ஆய்லா.. கோன் ஆய்ரே த்தோ..” (..த்தா.. யார்ல அது..) என்று உள்ளிருந்து தடித்த குரல் ஒன்று வந்தது.

குரல் மிதித்து தள்ளியவனுடையதுதான். 40 வயது இருக்கும். மராட்டியர்களுக்கான பாரம்பரிய வெள்ளை உடையுடன் ஆள் வேறு பார்க்க கொஞ்சம் `பல்க்காக’ இருந்தான்.

கூடவே அவனுக்கு ஆதரவாக இருக்கையில் உட்கார்ந்திருந்த குஜராத்தி, மார்வாடிகள் வேறு குரல் எழுப்பினார்கள். அவர்கள் எப்போதுமே அப்படிதான்.. சண்டைபோட மாட்டார்கள்.. வெட்ட மாட்டார்கள்.. குத்தமாட்டார்கள். ஆனால் மத கலவரத்தை பின்னிலிருந்து நன்கு ஊதி பெருசாக்குவார்கள்.

கேள்வி எழுப்பியது நான் தான் என்பதை பார்த்துவிட்டான் அந்த தடியன்.. பதுங்கவும் முடியாது. என்னுடைய குரலுக்கு ஆதரவாக யாராவது வந்திருந்தால் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும்.

ஆனால் நான் நிற்கும் இடம் மதவெறியர்களுக்கு மத்தியில். எதிர்த்து நின்றால் அடுத்து ரயில் நிலையத்தில் மிதித்து தள்ளப்படப்போவது நானாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை.. இந்த இடத்தில் பதுங்க வேண்டும் என்று என் ஏழாம் அறிவு அவசரமாக எச்சரித்தது.

இந்த ரகளை நடந்து கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த சகாக்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவில் குனிந்து தலையை மறைத்து எஸ்ஸாகியிருக்க கூடும்.

கொழுப்பெடுத்துப்போய் கேள்வி கேட்ட குற்றத்திற்காக நான் அடிவாங்கலாம். கூட வந்த பாவத்திற்காக அவர்கள் அடி வாங்க முடியாதில்லையா..

என்னை நோக்கி முன்னேறி நகர்ந்து வந்த அந்த நபரை நோக்கி,

“பாய்.. அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்ஹாதோ க்யா கரேகா தும்..” என்றேன் குரலை தாழ்த்தியபடி..

(அண்ணே.. இப்படி மிதிச்சு தள்ளுறீங்களே.. அவன் செத்துப்போனா என்ன பண்ணுவீங்க..)

அந்த முரடன் அதற்கு பதில் சொல்லாமல் முறைத்தபடி, `

“தூ கோன் ஆய்ரே..” என்றான். ( நீ யார்ரா..)

அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும். ஒரு மதபோதை ஏறியவனின் கண்களை நீங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறீர்களா.. நான் பார்த்தேன்.. அவன் கண்களில் அத்தனை வெறி.

அந்த முரடன் மராட்டியன் என்பது தெரிந்ததால்,

“மீ… பிரஸ்ச்சா மானூஷ்..” என்று மராட்டியில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.

பிரஸ் என்றதும் அவன் மூர்க்கம் லைட்டாக குறைந்தது. ஆனால் குரலின் கடுமையை குறைக்காமல்,

“பிரஸ் மஞ்சே காய்பன் போல்னார் காய்..குட்சா பிரஸ்?”

( பிரஸ்னா என்ன வேணும்னாலும் சொல்வியா .. எந்த பத்திரிகை?) என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

அப்போதுதான் என் `மீடியா புத்தி’ கூடுதலாக வேலை பார்க்க ஆரம்பித்தது. சும்மாவே வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு எரிச்சல் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இழிவு படுத்துவார்கள்.

அதனால் தமிழ் டைம்ஸ் என்று தமிழ் பத்திரிகை பெயரை சொல்லாமல், எங்கள் குழுமத்திலிருந்து வெளிவரும் மராட்டி பத்திரிகையானா `மும்பை சவ்ஃப்பர்’’ என்ற பெயரை குறிப்பிட்டேன்.

மராட்டியர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகை அது. அவனும் அதன் வாசகனாக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன். கொஞ்சம் கூலாகிவிட்டான்.

“அரே.. அப்லா சவ்ஃப்பர்ச்சா மானூஷ் ஆய்காய்.. கசா.. அசா போல்தே துமீ.. தோ பாஹல் அப்லா கண்பத்திலா டச் கேலே.. மாய்த்தேகாய்.. தெஜா சாட்டி மீ மார்லே..” என்று சொல்லிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டான்.

நடந்த விசயம் இதுதான்..

அந்த பிச்சைக்காரர் இருக்கையில் படுத்து கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்த வேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பதறி எழுந்ததில் அந்த பிச்சைக்காரரின் கை தடியன் கையில் வைத்திருந்த பிள்ளையார் சிலை மீது பட்டுவிட்டது.

பிள்ளையார் சிலையை தொட்டுவிட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காகதான் அந்த பிச்சைக்காரர் மிதித்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்..

சிலையை ஒரு பிச்சைக்காரன் தொட்டுவிட்டான் என்ற அல்ப காரணத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து ஒருவரை மிதித்து தள்ள மனம் வர முடியுமா என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை.

“கண்பத்தி பப்பா மோரியா..’’ கோஷம் காதுகளை பிளக்க.. ரயில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது..

அமைதியாக வாசல் ஓரம் நகர்ந்து வெளியே எட்டிப்பார்த்தேன்..

ரயிலிலிருந்து மிதித்து தள்ளப்பட்டு ப்ளாட்ஃபார்மில் பரிதாபமாக விழுந்து கிடைந்த பிள்ளையாரை சிலர் கைதூக்கி எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்…

-கார்ட்டூனிஸ்ட் பாலா

29-8-14

கலையரசன் (Kalaiy Arasan)

விநாயகர் சதுர்த்தி அன்று, இந்து மக்கள் கட்சி விநாயகர் சிலையை கொண்டு சென்று கடலில் கரைக்கும் ஊர்வலம் ஒன்றை ராமேஸ்வரத்தில் நடத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யோகேஸ்வரன், அதில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்றிருந்தார். ஆனால், தமிழக பொலிசார் அவர் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கவில்லை. யோகேஸ்வரன் இது குறித்து “ஈழத் தாய்” ஜெயலலிதாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் இந்து மக்கள் கட்சியும், சிறிலங்காவில் புத்தர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் பொதுபல சேனாவும், ஒரே மாதிரியான கொள்கை கொண்ட மதவெறி அமைப்புகளாகும். பத்து வருடங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை கொண்டு செல்லும் ஊர்வலங்கள் இஸ்லாமியருக்கு எதிரான மதவெறியை தூண்டியதால், பல தடவை மதக் கலவரங்கள் நடந்துள்ளன. யோகேஸ்வரன் எம்.பி., ஒரு மதவெறி அமைப்பின் ஊர்வலத்தில் கலந்து கொண்டது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அறிய முடியவில்லை.