Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 708

தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !

8

அடிபணிதல் கலாச்சாரங்களும், தேவயானி-சங்கீதா பிரச்சனையும் : நிசிம் மன்னத்துக்காரன்

பெரிய பண்ணையார் கடந்து போகும் போது புத்திசாலி விவசாயி குனிந்து வணங்கி, குசுவை அடக்கி விடுவான்  (எத்தியோப்பிய பழமொழி)

அமெரிக்க தூதரக விசா வரிசை
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம்.

ர்ணாப் கோஸ்வாமியுடன் முற்போக்கு அரசியல் ஒத்துப் போகிறது என்றால் அது அபாய மணிகள் ஒலிக்க வேண்டிய நேரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். சென்ற வாரம் அரங்கேற்றப்பட்ட காட்சிகளை அட்டகாசமானவை என்றுதான் வர்ணிக்க வேண்டும். தேவயானி கோப்ரகடே பிரச்சனையில், தவறிழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஒரு மூன்றாம் உலக நாடு, ஏகாதிபத்திய சைத்தானை ஒரு வழியாக எதிர்த்து நின்றது. வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பிடிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான். அதன் பின்னே புதைந்திருக்கும் தீவிரமான காரணிகள் மட்டும் இல்லாதிருந்தால் அது சிரித்து ரசிக்க வேண்டிய நாடகமாக இருந்திருக்கும்.

அமெரிக்க உலகப் பார்வையுடன் முழுதும் ஒத்துப் போகும் (அமெரிக்காவை நேசிக்கும் தேசங்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது), அமெரிக்காதான் ஜனநாயகத்தின் சிறந்த முன்மாதிரி என்று கருதும் (ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் வேறு எந்த நாட்டையும் விட அதிக இந்தியர்கள் அமெரிக்கா ஒற்றைத் துருவ அரசு இல்லை, பன்முகத் தன்மை கொண்ட அரசு என்று கருதுவதாக தெரிய வந்தது) மேட்டுக் குடியினரையும் நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்ட தேசம் இது. அமெரிக்கக் கனவில் வாழும் மாணவர்களும், இளைஞர்களும் (அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம்) நிறைந்த நாடு இது. அமெரிக்க ஆளும் அமைப்புடன் நிரந்தர நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் கனவில் புளகாங்கிதம் அடையும் ஆட்சியாளர்கள் (இந்திய-அமெரிக்க நீண்டகால ஒப்பந்தம், 21-வது நூற்றாண்டின் திருப்புமுனை உறவு என்று அழைக்கப்படுகிறது) வாய்த்த நாடு இது.

போபால் விஷவாயுக் கசிவு
போபால் விஷ வாயுக் கசிவில் உயிரிழந்த 5,295 பேருக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத தேசம் இது.

‘நாம் அமெரிக்காவை ஆராதிக்கும் அளவுக்கு அமெரிக்கர்கள் நம்மை நேசிக்கவில்லை’ என்ற நிதர்சனத்தை சென்ற வாரம் இவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால்தான் ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்டு விரக்தியடைந்த காதலனைப் போல எதிர்வினைகள் பொங்கி வழிந்தன.

அவ்வாறு பெருகி ஓடிய கோபங்கள் நமது கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான, மோசமான ஒன்றை வெளிப்படுத்துகின்றன. நமது சுயமரியாதை மற்றும் அவமானத்தின் அளவுகோல்களை அது அம்பலப்படுத்தியது.

உலகிலேயே மிக மோசமான தொழில் துறை விபத்தான போபால் விஷ வாயுக் கசிவில் உயிரிழந்த 5,295 பேருக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத தேசம் இது. அந்த கோர விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க, அமெரிக்க தூதரகத்தின் முன்பு பாதுகாப்பு தடைகளை மட்டுமல்ல, தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது. இவர்கள்தான் ஒரு பெண் தூதரக அதிகாரி சோதனையிடப்பட்ட அவமானத்தையும், தனது குழந்தைகளின் முன்பு கைது செய்யப்படக் கூடாது என்ற அவரது உரிமை மீறப்பட்டதையும் கண்டு பொங்கி எழுந்தார்கள்.

(ஒரு வேளை, லல்லு பிரசாத் யாதவ், சஞ்சய் தத் போன்ற கைதிகளையும், கேரளாவில் சிறையிலிருந்தே பேஸ்புக் நிலைத் தகவல் போடும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரின் கொலையாளியையும் நாம் நடத்துவது போல அமெரிக்க நீதித் துறை தனது விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை மரியாதையுடன் நடத்துவது இல்லை என்று இவர்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம்!)

சாவனூர் போராட்டம்
சாவனூரில் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை தமது உடலில் பூசி போராட்டம்.

நமது குடிமக்களில் பெரும்பான்மையினர் இதை விட படு மோசமான இழிவுகளை தினமும் சந்திக்கின்றனர் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சோனி சோரியின் துவாரங்களில் போலீஸ் கற்களை திணித்து வலுவந்தம் செய்த போது இந்த மேட்டுக் குடியினரின் கோபம் எங்கே போயிருந்தது? 2010-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் சாவனூரில் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை தமது உடலில் பூசி போராடிய போது இவர்களது புண்படக் கூடிய இதயங்களும், அவமானப்படும் சுயமரியாதைகளும் எங்கு போயிருந்தன? அவர்களைப் பொறுத்த வரை, தம் சக இந்தியர்களின் மலத்தை சுமக்கும் அந்த பாங்கி சாதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை ஒன்று இருந்தால்தானே, இழப்பதற்கு!

ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த கோடிக் கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் கொத்தடிமை சூழல்களில் உழைத்துக் கொண்டிருப்பது பற்றி நமது தூதுவர்களும், தூதரகங்களும் என்ன செய்கிறார்கள்? அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்வதில் மும்முரமாக இருந்த இந்த அரசு முசாஃபர் நகர் நிவாரண முகாம்களின் மனிதர் வாழ தகுதியற்ற சூழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 50,000 பேருக்கு, போர்த்திக் கொள்ள கம்பளிகள் இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் அவர்களது குழந்தைகளுக்கு என்ன செய்கிறது என்று இந்த தேசம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? இவர்களது சுயமரியாதையின் வரையறைதான் என்ன?

அமெரிக்க வியர்வைக் கூடங்கள்
அமெரிக்க வியர்வைக் கூடங்கள்

இந்தத் தருணத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பும் போது, “உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாடுகளில் ஏகாதிபத்தியம்” என்ற கொள்கையை மிக நேர்த்தியாக, மிகத் திறமையாக கடைப்பிடிக்கும், “தனக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு வேறு சட்டம்” என்று வைத்திருக்கும் உலகின் மகத்தான ஜனநாயகத்தின் இரட்டை முகங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த வழக்கை தீர்த்துக் கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியாது என்பது இந்திய அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையேயான இந்த சச்சரவு தொடர்பான ஒரு முக்கிய விபரம். ஏனென்றால் அமெரிக்கா அந்த நீதிமன்றத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் இதைப் பற்றி பேசுவதால், அமெரிக்காவில் குறைந்த பட்ச கூலியை விட குறைவான ஊதியத்துக்கு, எந்த வித சட்ட பாதுகாப்பும் இல்லாமல் உழைக்கும் ஆயிரக் கணக்கான சட்ட விரோத குடியேறிகள் இல்லை என்று ஆகி விடாது. தெற்கு கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட 1,500 சோதனைகளில் 93 சதவீதம் சட்ட மீறல் இருப்பதாக தெரிய வந்த வியர்வை உழைப்புக் கூடங்கள் இல்லை என்று ஆகி விடாது.

அவர்களது உள்நாட்டு நிலைமை இந்த அளவு மோசமாக இருந்த போதிலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித்துவ சமூகங்கள் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அடிமைத் தனம் இதை விட கொடூரமானது. தமது குப்பைகளை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவது போல, உழைப்பாளர்கள் மீதான அவமானங்களையும், மனிதச் சுரண்டலையும் வேறு இடங்களுக்கு அனுப்பி விடுவதன் மூலம் ‘முன்னேறிய’ நாடுகள் தமது தெருக்களையும், மனசாட்சியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது, தமது குடிமக்களுக்கு குறைந்த பட்ச சம்பள சட்டத்தை செயல்படுத்த முடிகிறது.

வங்க தேச படுகொலை
இவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம் கிறிஸ்துமசுக்கும், பாக்சிங் டேக்கும் அமெரிக்கர்களுக்கு மலிவான விலைகளில் ஆடைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது

இவ்வாறாக மற்றவர்களின் வலியை பார்க்காமல் தவிர்த்துக் கொள்கிறது அமெரிக்கா. வால்மார்ட் உட்பட மேற்குலகின் முக்கியமான ஆடை நிறுவனங்களுக்கு ஆயத்த ஆடைகளை செய்து அனுப்பும் வங்கதேசத்தின் ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்த இடிபாடுகளில் பிரிக்க முடியாத இறுதி அணைப்பில் புதைந்து கிடந்த தம்பதியினரின் அச்சுறுத்தும் முகங்களை எதிர் கொள்வதை அது தவிர்த்துக் கொள்கிறது.

அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடன் புதைக்கப்பட்ட 1,129 தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட மாத ஊதியம் $38.5. அதுதான் அவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம். கிறிஸ்துமசுக்கும், பாக்சிங் டேக்கும் அமெரிக்கர்களுக்கு மலிவான விலைகளில் ஆடைகள் கிடைப்பதை இந்த ஊதியம்தான் உறுதிப்படுத்துகிறது. சராசரி கார்ப்பரேட் தலைமை அலுவலரின் சம்பளம் சராசரி தொழிலாளியின் சம்பளத்தை விட 273 மடங்காக இருக்கும் (சில பத்தாண்டுகளுக்கு முன்பு 10-20 மடங்காக இருந்ததிலிருந்து அதிர்ச்சியளிக்கும் அதிகரிப்பு) அமெரிக்கா இந்த குறைந்த பட்ச சம்பளத்தின் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முடியுமா, என்ன?

அமெரிக்காவும் மற்ற வளர்ந்த சமூகங்களும் தமது பெட்டிகளுக்குள் பல பிணங்களை மறைத்து வைத்திருந்தாலும், நமது அடிமை கலாச்சார அவமானத்தை மறைத்துக் கொள்ளும் மரவுரியாக அவற்றை பயன்படுத்த விடக் கூடாது. இந்த தூதரக அதிகாரியின் பிரச்சனை அப்படித்தான் மாற்றப்பட்டிருக்கிறது.

அர்ணாப் கோஸ்வாமி
அர்ணாப் கோஸ்வாமியின் கட்டப் பஞ்சாயத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக, தேவயானிக்கு ஆதரவாக யார் சாட்சி சொன்னார்கள் என்று தெரியுமா?

இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நீதிமன்றங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதோ, தூதரக அதிகாரியை வில்லனாக சித்தரிப்பதோ தேவையில்லாத ஒன்று. பார்க்கப் போனால், தேவயானி குறைந்த பட்ச ஊதியம் வழங்கவில்லை என்ற சட்ட மீறல் அவரால் மட்டும் செய்யப்படுவது இல்லை. இது சில காலமாகவே இருந்து வரும் கட்டமைக்கப்பட்ட பிரச்சனையின் ஒரு பகுதி. இந்திய, அமெரிக்க அரசுகள் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தன.

ஆனால், இந்த நிகழ்வுக்கான எதிர்வினைகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தன என்பதை சொல்வதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. தேவயானியின் ‘புனிதத் தன்மை’யையும், ‘எவ்வளவு கருணையான எஜமானி அவர்’ என்பது பற்றியும் ஊடகங்களில் பல விபரங்கள் வெளியாகின. அர்ணாப் கோஸ்வாமியின் கட்டப் பஞ்சாயத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக, தேவயானிக்கு ஆதரவாக  யார் சாட்சி சொன்னார்கள் என்று தெரியுமா? (நிகழ்ச்சியில் தோன்றி வாயைத் திறக்க விடாமல் உட்கார்ந்திருப்பதற்கு சம்மதித்த அந்த அமெரிக்கர்கள் யார் என்று ஆச்சரியமாக இருக்கிறது). அந்த சாட்சி தேவயானியின் தந்தைதான். அவரது சாட்சியத்தின் அடிப்படையில் தேவயானி மீதான குற்றச்சாட்டுகளில் எந்த நியாயமும் இல்லை என்று கோஸ்வாமி தீர்ப்பு சொன்னார். சங்கீதா ரிச்சர்டின் சார்பாக பேசுவதற்கு அவர் யாரையும் அழைக்கவில்லை என்பதை சொல்லவும் தேவையில்லை.

சங்கீதாவைப் பற்றி நாம் பல விபரங்களை கேள்விப் படுகிறோம்; அவர் வளர்ச்சிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தவர்; அவருக்கு சொந்தமாக ஐ-பேட் இருந்தது (ஒரு ‘வேலைக்காரி’க்கு ஐ-பேட் சொந்தமாக இருக்க முடியுமா, சரிதானே?); அவருக்கு  செல்வாக்கு மிகுந்த தொடர்புகள் இருந்தன (அவரது உறவினர்கள் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்கிறார்கள்); அவர் ‘நன்கு உடையணியும்’, ‘நன்கு படித்த’ நபர்.

பிரபு தயாள்
வீட்டு வேலை செய்யும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நியூயார்க்கில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தூதர் பிரபு தயாள்.

தேவயானியை போலவே வீட்டு வேலை செய்யும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நியூயார்க்கில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தூதர் பிரபு தயாள், ” ‘அமெரிக்கக் கனவுகளை துரத்தும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்’ வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அமெரிக்காவில் பணி புரியும் இந்திய தூதரக அதிகாரிகள் வாழ்கிறார்கள்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரைப் பொறுத்த வரை இந்திய அதிகார வர்க்கத்தின் மிக உயர்ந்த மேட்டுக் குடியினரான வெளியுறவு அதிகாரிகள், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். “கடந்த பல ஆண்டுகளில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற பல வீட்டு வேலை செய்யும் பணியாளர்களும், பாதுகாவலர்களும் தலைமறைவாகி விட்டார்கள்” என்று அவர் விளக்குகிறார். இந்தியாவில் பாலும், தேனும் ஓடிக் கொண்டிருந்தால், தயாள் சொல்வது போல இந்தியர்கள், “அமெரிக்காவுக்குப் போய் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்தாவது அங்கு தங்கி விட முயற்சிப்பது” ஏன்? (இந்திய அதிகாரிகளில் சிலர் தம் தாய் நாட்டுக்குத் திரும்பி வராமல் தலைமறைவான நிகழ்வுகளைப் பற்றிச் சொல்ல அவர் மறந்து விடுகிறார்).

இந்த வழக்கின் எதிர்தரப்பான, வேலை செய்யும் பெண்ணின் நியாயங்கள் முழுக்க முழுக்க இருட்டடிக்கப்படுவது நாம் எப்படிப்பட்ட சமூகம் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.  உணர்வு ரீதியாகவோ, உணர்வு ரீதியாக அல்லாமலோ பொருளாதார வழிகளிலும் கலாச்சார கட்டுத் திட்டங்களாலும் உழைக்கும் வர்க்கத்தை அடிபணிய வைத்து இழிவு படுத்துவதில் திளைக்கும் நமது கூட்டு மனசாட்சியை அது அம்பலப்படுத்துகிறது. இந்த உழைக்கும் மக்களில் பெரும் எண்ணிக்கையிலான ஆயாக்களும், வீட்டு வேலை செய்பவர்களும் அடங்குவார்கள். இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு) மட்டுமே வீட்டுப் பணியாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளன.

தேவயானி, சங்கீதா
வெளியுறவுத் துறை அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அவரது தந்தைக்கும் எதிராக ஒரு பணிப்பெண் இந்திய நீதி அமைப்பில் என்ன செய்து விட முடியும்?

வீட்டுப் பணியாளர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தலித் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினரை சேர்ந்தவர்கள். தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பொறுத்த வரையில் பொருளாதாரச் சுரண்டலுடன் சாதி அடிப்படையிலான அவமானங்களால் சேர்ந்து சுரண்டலை கடுமையாக்குகின்றன.

இத்தகைய கட்டமைப்பில், சுரண்டல் கலாச்சாரத்தில், வெளியுறவுத் துறை அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அவரது தந்தைக்கும் எதிராக ஒரு பணிப்பெண் இந்திய நீதி அமைப்பில் என்ன செய்து விட முடியும்? (இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் சங்கீதாவின் குற்றத்தையும், பிழையையும் பலர் முன் முடிவு செய்கின்றனர். ஆனால் கோப்ரகடேக்கள் இந்திய நீதிமனங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க முடிந்த வேகமே அவர்களுக்கும் சங்கீதாவுக்கும் இடையேயான அதிகார ஏற்றத் தாழ்வை காட்டவில்லையா?). அமெரிக்க நீதி அமைப்பில் அதற்கேயுரிய சமத்துவமின்மைகளுடனும் குறைபாடுகளுடனும் சங்கீதாவுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குக் காரணம் அமெரிக்கா புனிதர்களின் நாடு என்பதில்லை. மாறாக, கடந்த கால வரலாற்றில் உழைக்கும் வர்க்கங்கள் போராடிப் பெற்ற வெற்றிகளின் மூலம் அமெரிக்காவின்உழைக்கும் மக்களும், ஒடுக்கப்பட்டவர்களும் (குடிமக்களுக்கும், சட்டபூர்வமான குடியேறிகளுக்கும் மட்டுமாவது) பல மடங்கு மேம்பட்ட பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள்.

டொமினிக் ஸ்ட்ராஸ் கான்
நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் பணிப் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்ட டொமினிக் ஸ்ட்ராஸ் கான்.

ஐ.எம்.எஃப் அமைப்பின் தலைவராக இருந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த, உலகிலேயே மிக சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான டொமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் பணிப் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்டார். குற்றவியல் வழக்கு தொடரப்படா விட்டாலும், நீதிமன்றத்துக்கு வெளியே $6 மில்லியன் நிவாரணம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டி வந்தது. 1985-ம் ஆண்டு போபால் விஷ வாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான மக்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு ஒதுக்கிய மொத்த இடைக்கால நிவாரணத் தொகையில் பாதி இது.

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்தான், ஏழைகள் மீதும், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதும் ஒரே மாதிரியான பார்வையையும், உலகிலேயே மிக மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கொண்டவைதான். இருப்பினும் வரலாற்று மற்றும் சமகால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி காரணங்களினால் இரு நாடுகளின் கலாச்சாரமும், அடிமைத்தனமும் வேறுபட்டிருக்கின்றன. அமெரிக்கா அடிமைக் கலாச்சாரத்தை வெளி இடங்களுக்கு அனுப்பி விட்டு உள்நாட்டில் அறிவுபூர்வமான சட்ட ஒழுங்கையும், ஜனநாயகம் போன்ற தோற்றத்தையும் பராமரிக்க முடிகிறது. மாறாக, இந்தியாவின் அடிமைக் கலாச்சாரம் அதன் எல்லைகளுக்குள்ளாகவே குடி கொண்டிருக்கிறது.

இந்த வழக்கை தேவயானி-சங்கீதா என்ற இரண்டு தனி நபர்களுக்கிடையேயான பிரச்சனையாக குறுக்கி விடாமல் (அவர்களில் யார் தவறு செய்தார்கள் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை) அல்லது இரண்டு தேசங்களுக்கு இடையேயான பிரச்சனையில் ஒரு தேசத்தின் பெருமை காயப்படுத்தப்பட்டதாக குறுக்கி விடாமல், நமது அடிமைக் கலாச்சாரத்தின் சுரண்டல் மற்றும் வன்முறை கட்டமைப்பு குறித்த பொது விவாதத்தை தொடங்க வேண்டும். நமது பரந்து பட்ட சமூகத்தில் காணப்படும் இந்த கலாச்சாரம்தான் நமது அதிகார அமைப்பிலும், அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

கதவு திறந்து விடுபவர்
இந்த கலாச்சாரம்தான், தொழிலாளர்களும், பணியாளர்களும் நமக்காக கதவைத் திறந்து விடக் கோருகிறது.

இந்தக் கலாச்சாரம்தான், தொழிலாளர்களும், பணியாளர்களும் நமக்காக கதவைத் திறந்து விடக் கோருகிறது. நாம் போகச் சொல்வது வரை அவர்களை நமக்கு சேவை செய்ய காத்திருக்க வைக்கிறது. இந்த கலாச்சாரம்தான், இப்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கும் விவாதத்தில் பார்ப்பது போல, யாரையும் நியாயமான சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தும் சுதந்திரத்தை தொழிலாளர்களையும், பணியாளர்களையும் கொடுமையாக சுரண்டுவதற்கான நமது உரிமையாக மாற்றுகிறது.

அதனால்தான் பிரபு தயாளும் மற்ற தூதரக அதிகாரிகளும் முன் வைக்கும் தீர்வுகளில் எல்லா தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக சட்ட விலக்கு அளிப்பது மட்டும் பேசப்படுகிறது. தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியாவிலிருந்து இந்தியப் பணியாளர்களை அழைத்துச் செல்வதைப் பற்றியும், தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் இந்தியாவில் இல்லாத நிலையில் தமது எஜமானர்களுடன் வசிக்கும் அவர்கள் எதிர் கொள்ளும் அடக்குமுறை சாத்தியங்கள் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை.

600 முதல் 700 அதிகாரிகளை மட்டுமே கொண்ட நமது வெளியுறவுத் துறை அமைப்பின் அதிகாரிகள் (நியூசிலாந்து, மலேசியா போன்ற சிறு நாடுகளின் வெளியுறவுத் துறைகளில் கூட இத்தனை அதிகாரிகள் உள்ளனர்), மற்ற துறையினரை அனுமதித்து இந்த மேட்டுக் குடி கிளப்பை விரிவாக்குவதை கடுமையாக எதிர்க்கின்றனர். வளர்ந்து வரும் இந்தியாவுக்கு தூதரக அதிகாரிகளின் பற்றாக்குறை இருந்த போதும் இந்த நிலைமை (சீனாவில் இதைப் போன்ற ஏழு மடங்கு அதிகாரிகள் உள்ளனர்) பராமரிக்கப்படுகிறது. இத்தகைய தூதரக அதிகாரிகளும், ஆட்சிப் பணி அதிகாரிகளும் தமது மேட்டுக்குடி சலுகைகளை விட்டுக் கொடுக்க எப்படி சம்மதிப்பார்கள்?  அவர்களுக்கு வழங்கப்படும் மேட்டுக்குடி சலுகைகள் பற்றிய விவாதம் எப்படி நடக்கும்?

போபால் பேரழிவு
அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்கு டொமினிக் ஸ்டராஸ் கான் கொடுத்த நிவாரணம் போபால் விஷ வாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான மக்களுக்குக் கிடைத்த நிவாரணத் தொகையில் பாதி.

கேரளா குறித்த எனது ஆய்வு தொடர்பாக அரசு அதிகாரிகளாக இருக்கும் நண்பர்களுடன் பேசிய போது, ‘அதிகாரிகளுக்கு மரியாதை காட்டாத’ கேரள அதிகார அமைப்பின் ‘அடிபணிய விரும்பாத’, ‘ஆணவம் மிக்க’ ஊழியர்கள் சில வெளி மாநில அதிகாரிகளுக்கு ‘கொடுங் கனவா’க இருக்கிறார்கள் என்பது தொடர்பான சில நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு ஐ,.ஏ.எஸ் அதிகாரிக்கு உட்கார இடம் கொடுக்காத ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், சரியாக மாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்ட ஓட்டுனரால் தானே காரை ஓட்டிக் கொண்டு வீடு போக நேர்ந்த பெண் அதிகாரி, ‘மலையாளிகள் தமது எஜமானர்களை மதிக்காமல் நடந்து கொள்வது போலத்தாம் தன்  தாய், தந்தையிடமும் நடந்து கொள்வார்களா’ என அதிர்ச்சியடைந்த ஒரு மூத்த அதிகாரி போன்றவை இதில் அடங்கும்.

பரந்து பட்ட அடிமைக் கலாச்சாரத்தின் சிறு துணுக்குகள்தான் இவை. கேரளா போன்ற மாநிலங்களின் தொழிலாளர்களும், பணியாளர்களும் இந்த அடிமைக் கலாச்சாரத்தை வளைத்து சில உரிமைகளை பெறவும், சிறிதளவு சுயமரியாதையை பேணவும் முடிந்திருக்கிறது. இருப்பினும், இங்கும் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுபவர்களில் பெரும் பகுதியினர் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள்தான். இந்த பகுதிகளிலும் அடிமைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படாமல் அமெரிக்காவில் இருப்பதைப் போன்று புதிய, மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளாகத் தொடர்கின்றன.

இப்போதைய விவாதங்களின் இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சமாக, ஒரு முன்னேறிய தலித் பெண்ணாக ‘வெளி உலகுக்கு நமது பெருமையை பிரதிநிதித்துவப்படுத்தும்’ தேவயானியின் பெயரால் சங்கீதாவின் பெயரை இழிவுபடுத்துவதாகவும், பணிப்பெண்களின் குரலையும் உரிமைகளையும் முடக்குவதாகவும் நடக்கும் பொதுவிவாதத்தில் முற்போக்கு தலித் இயக்கத்தின் ஒரு பகுதியினர் பங்கேற்பது அதிர்ச்சியூட்டுகிறது. சங்கீதா என்ன சாதி என்று நமக்கு இன்னும் தெரியாது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ‘முன்னேறிய பெண்ணாகவோ, நமது பெருமையை வெளி உலகுக்கு பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ’ இல்லை. அதனால்தான், அவரது போராட்டம் (சங்கீதா, தான் சுரண்டப்படுவதாக சொல்வது இந்த வழக்கில் பொய்யாக போனாலும், வீட்டுப் பணியாளர்கள் அனைவரின் போராட்டம்) சாதி உட்பட அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

மாயாவதி - தலித் அரசியல் மகாராணி
தேவயானி மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான விமர்சனங்களும் வைக்கப்படக் கூடாது என்பதுதான் தலித் முற்போக்கு அரசியலா? (மாயாவதி – தலித் அரசியல்)

தேவயானி தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் (அமெரிக்க அமைப்பின்படி குறை கூலி கொடுத்தது தொடர்பான குறுகிய வரையறையில் மட்டுமின்றி, அவரும் சங்கீதாவும் ஏற்றுக் கொண்ட ஷரத்துகளின் அடிப்படையிலும், இந்தியாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும்) அவர் ஆதிக்க சாதியினரால் இயக்கப்படும் இந்த சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாகவும் பங்கு பெறுபவராகவும் மட்டுமே இருப்பதால் அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான விமர்சனங்களும் வைக்கப்படக் கூடாது என்பதுதான் தலித் முற்போக்கு அரசியலா? இதே சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்தப் போக்குகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தலித் அதிகாரிகளுக்கு அது என்ன மதிப்பைத் தரும்.

அடிமைக் கலாச்சாரத்தை தேசிய அடையாளம் அல்லது சாதி அடையாளத்தின் மூலம் மட்டும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முடியாது. இந்த எல்லைகளைத் தாண்டிய ஒடுக்குமுறைகளும் நிலவுகின்றன. தேவயானி மேட்டுக்குடி அதிகார வர்க்க அமைப்பில் இருந்தாலும், அவர் இன்னொரு மட்டத்தில் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் அடக்குமுறைகளை சந்திக்கலாம். அமெரிக்காவில் அவர் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்ததேசமும் தேவயானிக்காக நிற்கிறது, சங்கீதாவுக்காக யாரும் நிற்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் சங்கீதாவுக்காக வாதிடுவதற்கு அமெரிக்கர்களைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லை.

ஒரு பெண்ணுக்கு எதிராக இன்னொரு பெண்ணை நிறுத்துவது இங்கு பிரச்சனை இல்லை. (இறுதியில் இருவரில் ஒருவரது குற்றச்சாட்டுதான் உண்மையாக இருக்க முடியும்), ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எஜமானர்களையும், சேவகர்களையும் உருவாக்கும் சுரண்டலின் அமைப்பையும் வடிவத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இதைப் பயன்படுத்தி அனைத்து விதமான தொழிலாளர்களையும் பணியாளர்களையும் பாதுகாப்பது குறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்குவது பற்றியும், சிறுபான்மை எண்ணிக்கையிலான தூதரக அதிகாரிகளும் மேட்டுக் குடியினரும் அனுபவிக்கும் அளவுக்கதிகமான மேட்டுக் குடி ஆடம்பரங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் இந்த சுரண்டல் அடுக்குகளிலும் சங்கிலியிலும் நாம் பங்கெடுப்பது பற்றி விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது அளவில் அனுபவிக்கும் மேட்டுக் குடி உரிமைகளை புரிந்து கொள்வது குறித்தும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு நாம் அடிமையாக இருப்பது பற்றியும் விவாதிக்க வேண்டும்.

நிசிம் மன்னத்துக்காரன் கனடாவின் டல்ஹௌசி பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார்.

நன்றி: kafila
தமிழாக்கம்: அப்துல்

விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !

2

அடிக்கரும்பு முதலாளிகளுக்கு – திருடனுக்கு கடன் சலுகை
நுனிக்கரும்பு விவசாயிகளுக்கு – பறிகொடுத்தவனுக்குப் பட்டை நாமம்.
சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலையின் மோசடியும்  கரும்பு விவசாயிகளின் கசப்பான நிலையும்.

நா மகாலிங்கம், ப சிதம்பரம்
ப.சிதம்பரத்துடன் நெருக்கமான உறவில் உள்ளவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்தான் சக்தி குழுமத்தின் உரிமையாளர்.

சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளில் பெரும்பாலோனரை ஆலைக்கரும்பு விவசாயத்திற்கு மாற்றியது படமாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சக்தி சர்க்கரை ஆலை. ப.சிதம்பரத்துடன் நெருக்கமான உறவில் உள்ளவரும் பொய், ஃப்ராடு, பித்தலாட்டம், சட்டவிரோதம், மக்கள்விரோதம், வெளிவேஷம், ஆகியவற்றின் நவீன கால இந்தியத் திருடர்களின் பிரதிநிதியான அம்பானிக்கு இணையான தமிழகப் பிரதிநிதி பொள்ளாச்சி நா. மகாலிங்கம்தான் இந்த சக்தி குழுமத்தின் உரிமையாளர். பொருட்செல்வம் சேர்ந்ததால் அருட்செல்வரான இந்த ஆன்மீகச் செம்மலின் ஆலை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமை சொல்லில் அடங்காதது.

சரியான நேரத்தில் கரும்புக் கருனைகளை முழுமையாக வழங்காதது; கட்டிங் ஆர்டர் எனப்படும் வெட்டாணையை கரும்பு விளைச்சலுக்குப் பொருத்தமான நேரத்தில் வழங்காமல் ஆலையின் உற்பத்தி வசதிக்கேற்ப வழங்குவது; இதெல்லாம் போக, தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையில் கரும்பை எடைபோடும் மிஷினில் தில்லுமுல்லு செய்து அளவையைக் குறைத்துக் காண்பிக்கும் மகா மோசடி; விவசாயிகளை வஞ்சித்தே கொழுத்துப்போன இந்த ஆலை இப்போது அடிக்கும் கொள்ளை தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் பாணியில் அடிப்பதுதான்.

கரும்பு விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. விளைவிக்கப்பட்ட கரும்புகளை வெட்டி ஆலைக்குக் கொண்டு வரும் விவசாயிகளுக்காக ஆலை கொடுக்க வேண்டிய பணத்தில் வங்கிக் கடனுக்கான பணத்தை பிடித்தம் செய்து கொள்கிறது. பின்னர் அதை வங்கியில் கட்டி விடுகிறது. விவசாயிகளின் மீது நம்பிக்கையில்லாமல் கடன்தொகையை வசூலிப்பதற்காக விவசாயிகளை இழிவுபடுத்தும் இப்படி ஒரு ஏற்பாட்டை வங்கிகளும் ஆலையும் சேர்ந்து ஆரம்பத்திலிருந்தே நடத்திக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையினை ஆலையானது வங்கியில் செலுத்தவில்லை. விவசாயிகளை நம்பாமல் ஆலையை நம்பிய வங்கிக்கு இப்போது ஆலை நாமம் சாத்தி வருகின்றது. விவசாயிகளும் தொடர்ச்சியாக இது குறித்து அரசிடம் முறையிட்டுக் கொண்டே வருகிறார்கள். அரசும் ஆலையோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே வருகின்றது. இந்த வருடம் வரை ஆலையானது வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 60 கோடி. வெறும் 6,000 ரூபாய் பாக்கிக்காக விவசாயிகளின் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் சக்தியிடம் 60 கோடியை வசூலிக்க முடியாமல் வெறும் வாயை மெல்லுகின்றன. ஆலையோ வங்கிகளின் நாக்கில் சர்க்கரையைத் தடவுகிறது.

சக்தி சர்க்கரை ஆலை
சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் எனும் மெகா சீரியல் நாடகத்தில் இப்பிரச்சினையை விவசாயிகள் எழுப்ப முடிவு செய்த போது, கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சினையை இப்போது எழுப்ப வேண்டாம், அவர்கள் கடனைக் கட்டுவதாக உறுதி கூறியுள்ளதாகச் சொல்லித் தடுத்திருக்கிறார். இவர் மாவட்டக் கலெக்டரா? சக்தி சுகர்ஸ் மேனஜரா? காங்கிரஸ், சி.பி.ஐ. சி.பி.எம், சில உதிரிகள், மற்றும் ஆலையே சில அல்லக்கைகளை வைத்து நடத்தி வருகின்ற விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகள் இந்த ஏமாற்று வேலைக்குத் துணை போயுள்ளனர்.

நீதி, போலீசு, வருவாய், வேளாண்மை பள்ளிக் கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சிவகங்கைக்கு வரும் போதெல்லாம் ஆலையின் விருந்தினர் இல்லத்திற்குத்தான் வந்து ஓய்வெடுக்கிறார்கள். அங்கே சகலவிதமான சேவைகளும் அவர்களுக்கு செய்யப்படுகின்றன. எனவே எந்த அதிகாரியும் சக்திக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. அவர்கள் வாயைத் திறந்து சொல்வதென்னவோ, வாழ்க வளமுடன் மட்டும்தான்.

இந்த நான்கு ஆண்டுகளில் இப்பகுதியின் கரும்பு உற்பத்தி 8 லட்சம் டன்னிலிருந்து 3 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. விவசாயிகள் தங்களது கரும்புகளை மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அரசு ஆலைக்கு அனுப்ப முடிவு செய்து கலெக்டரிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைக் கொடுப்பதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடனாக ரூபாய் 7,500 கோடியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியிருக்கிறார்.

இதுதான் அரசின் முதலாளித்துவ விசுவாசம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எதையும் செய்யாதது மட்டுமல்லாமல் இந்த ஆண்டிற்கான கரும்பின் கொள்முதல் விலையையும் குறைத்துள்ள அரசு விவசாயிகளின் பணத்தில் மஞ்சக்குளிக்கும் ஆலைகளுக்கோ வட்டியில்லாக் கடன் வழங்குகிறது, அதுவும் 7,500 கோடி ரூபாய்.

இப்போது விவசாயிகளுக்குத் தேவை ஒரு சரியான சங்கம்தான். ஓட்டுக் கட்சிகள் கட்சிகளாக தங்களுக்குள் எவ்வளவோ முரண்பாடு இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் சங்கம் என்று வருகையில் கூட்டுப்பங்கு போடுவதுதான் அவைகளுக்குக் குறியாக உள்ளது. அதுவும் விவசாயிகளைப் பொறுத்த வரையில் போலிக்கம்யூனிஸ்டுகளின் சங்க ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் முன்னொரு காலத்திய சங்க நினைவுகளில் மூழ்கி அவர்களின் பின்னால் விவசாயிகள் நிற்கிறார்கள். இதனால்தான் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் கேட்க நாதியற்றுப் போகின்றன. சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலைக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளின் நிலையும் இதேதான். புதிய சங்கம் ஒன்றை விவசாயிகள் தேர்ந்தெடுக்காத வரையிலும் அவர்களின் கதியும் இதேதான்.

ஆலையையும், அதற்கு வாலாட்டும் போலிச்சங்கவாதிகளையும், அரசையும் அம்பலப்படுத்த புரட்சிகர சக்திகள் தயாராகி வருகின்றன. விரைவில் அவைகள் இப்பகுதியில் ஒரு போராட்டத்தைத் தொடங்கும். அதுவரை மட்டுமானால், ஆலையின் அருட்செல்வர் வாழ்க வளமுடன் என்று புலம்பிக் கொள்ளலாம்!

–    புஜ செய்தியாளர், சிவகங்கை.

தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !

3

“டிசம்பர் 25-வெண்மணித் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் 25-12-2013 அன்று “சிதம்பரம் நடராசர் கோயிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” என்ற கிளர்ச்சிப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை திட்டமிடப்பட்டிருந்தது.

காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்தால், முற்றுகைக்கு அனுமதி தரமாட்டோம், மீறி நீங்கள் முற்றுகை நடத்துவோம் என்று பிரசாரம் செய்தால், ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி தர மாட்டோம். இதை மீறி நீங்கள் கூட்டம் நடத்தினாலே கைதுசெய்வோம்.” என்று டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ. கதிரவன் அடங்கிய அதிகார வர்க்க கும்பல் நமது தோழர்களை மிரட்டிக் கொண்டிருந்தது.

இந்த சூழலில், காலை ஒன்பது மணிக்கெல்லாம் சிதம்பரம நடராசர் கோயிலின் நான்கு வீதிகளிலும் திரண்டிருந்த எமது தோழர்கள் எங்கு வருவார்கள் என்று காத்திருந்த காவல் துறையின் கண்காணிப்புகளை மீறி, தெற்கு வாயில் எதிரில் நூறடி தூரத்தில் பேனர், கொடிகள், முழக்கத் தட்டிகள் சகிதமாக ஒன்று கூடினர். உடனே ஓடி வந்த காவல் துறை, தோழர்களை தெற்கு வாயிலை நோக்கி முன்னேற விடாமல், அருகில் உள்ள மண்டபத்திற்குள் திணிக்க முயன்றது. ஒரு நிமிடம் கூட ஆர்ப்பாட்டமோ முற்றுகையோ நடத்தாமல், அனைவரையும் கைது செய்து விடலாம் என்று மனப்பால் குடித்தது. உடனடியாக நமது செயல்திட்டத்தை மாற்றி, காதி வஸ்த்ராலயம், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, கீழ வீதி அரச மரத்தடி, சீனிவாசா மருந்தகம் என்று வெவ்வேறு முனைகளைத் தெரிவு செய்து, பு.மா.இ.மு. கடலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கருணாமூர்த்தி, பு.ஜ.தொ.மு. புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் பழனிசாமி, வி.வி.மு. தி.வெ. நல்லூர் செயலாளர் தோழர் ஹரிகிரிட்டிணன் ஆகிய தோழர்களின் தலைமையில் அலையலையாக தெற்கு வாயிலை நோக்கி முற்றுகையிட தோழர்கள் முன்னேறினர்.

காலை பத்து மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணிவரை முற்றுகைப் போராட்டமும் கைதுகளும் நீடித்தன. பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். அடையாள போராட்டங்கள், போலீசிடம் முன்னரே அறிவித்து விட்டு பெயருக்காக புகைப்படத்திற்குப போஸ் கொடுத்துக் கைதாவது போன்ற ‘அசாத்தியமான’ போராட்டங்களையே கண்டிருந்த போலீசுக்கு, புரட்சியாளர்களின் போர்க் குணம் மிக்க, சமரசங்களுக்கு அடிபணியாத போராட்ட முறை மிரட்சியை ஏற்படுத்தியது. காலை எட்டுமணி வரை ஈயாடிக் கொண்டிருந்த சிதம்பரம் நகர வீதிகள், செஞ்சட்டைகளின் அணிவகுப்பால் நிரம்பின. சிதம்பரம் நகரத்தில் ஏதோ நிகழப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் கூடுதல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி., பல காவல் நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட துணை ஆய்வாளர்களும், பத்துக்கும் மேற்பட்ட போலீசு வாகனங்களும் தெற்கு வீதி முழுவதும் ஆக்கிரமித்திருந்தன.

பொது மக்களும் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த விவசாயிகள் சிலர் தாங்களாகவே ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் கலந்து கொண்டு தோழர்களுடன் கைதாகினர். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் சிலர் கூட சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் முற்றுகையில் கலந்து கொண்டது நமது போராட்டத்தின் வீச்சைப் பறைசாற்றுவதாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் முடலூர், கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு சிறுகடை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களும் தமது ஆதரவினைப பல்வேறு வழிகளில் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மாவட்ட இணைச் செயலாளர் செந்தில் குமார் தலைமையில் திரண்டு ஆரம்பம் முதலே போராட்டக் களத்தில் நின்று கொண்டிருப்பதை தமது முரட்டுத் தனமான ஒடுக்குமுறைகளை ஏவுவதற்கு பெரும் இடையூறாகக் கருதினர் போலீஸ் அதிகாரிகள். கைது செய்த பிறகும் கூட மண்டபத்தின் உட்புறம் செல்லாமல் நுழைவாயில் அருகிலேயே அமர்ந்து கொண்டு தோழர்கள் ஆர்பாட்டம் நடத்தியது, சாலையில் சென்ற ஆயிரக் கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. காவல்துறை தோழர்களை மண்டபத்திற்குள் செல்லுமாறு தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தது. அனைத்துத் தோழர்களும் கைது செய்யப் பட்ட பிறகே மண்டபத்திற்குள் தோழர்கள் சென்றனர்.

மண்டபத்திற்குள் தோழர்களின் எழுச்சியூட்டும் உரைகள், கல்லூரி மாணவர்களின் நந்தனார் பற்றிய நாடகம், புரட்சிகரப் பாடல்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நிகழ்த்திய “தெற்கு வாயில் தீண்டாமைச் சுவர் தகர்த்தெறியப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவதன் அவசியம்” குறித்த விளக்க உரைகள் என பல்வேறு புரட்சிகர நிகழ்வுகளோடும் முழக்கங்களோடும் தொடர்ந்து போராட்ட உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தன.

நமது போராட்டத்தை ஆதரித்து மண்டபத்தில் கைதாகியிருந்த தோழர்களிடையே பேசிய நந்தனார் ஆய்வு மையத்தின் அமைப்பாளர் காவியச் செல்வன், “வெண்மணித் தியாகிகளின் நினைவுதினத்தில் நடந்துள்ள இந்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார்.

உண்மைதான்! ‘நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது’ என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்ட தோழர்கள் தடுத்துக் கைது செய்யப்பட்ட போது இடையில்இருந்த தூரம் வெறும் நூறடிதான். சிதம்பரம் நடராசர் கோவிலில் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக களம் கண்டு அதன் மையப் பகுதியான சிற்றம்பல மேடை வரை முன்னேறிய எமது தோழர்களுக்கு இந்த நூறடி என்பது பெருந்தொலைவு இல்லை என்பதே வரலாற்று உண்மை.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

போடா அந்த பக்கம் – வருவது தொழிலாளி வர்க்கம் !

0

1. கும்மிடிப்பூண்டி

சிவந்த கும்மிடிப்பூண்டியை பார்த்து கலங்கிய போலீசு.

வேலைப்பறிப்பு – தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்ற மைய முழக்கத்தின் கீழ் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்த இயக்கத்தின் அடுத்த கட்டமான பேரணி, ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் அலுவலகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வழியாக கடந்து ‘பாண்டியன் ஹோட்டல்’ அருகில் நிறைவுற்றது.

பேரணியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் கே. எம். விகேந்தர் தலைமை உரையாற்றினார். தொழிலாளர்களின் உயிரை கிள்ளுக்கீரையாக மதிக்கும் முதலாளிகளுக்கு சவுக்கடி கொடுக்க தொழிலாளி வர்க்கமாய் நாம் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் துவக்கி வைத்த பேரணி, செங்கொடிகளும் சிவப்பு பதாகைகளும், ஆசான்களின் படங்களும், தோழர்களின் ஆவேச முழக்கமும் காவல் துறையினரை கலக்கமடைய வைத்தது. “எங்கே எந்த வழியாக செல்கிறீர்கள், என்ன திட்டம் என தொடர்ச்சியாக மாவட்ட செயலாளரை அழைத்துக் கேட்டுக் கொண்டே இருந்தது போலீசு” பேரணி செல்கின்ற வழியை தெளிவாக தோழர் கூறிய பின்னும் கலக்கம் தெளியாத போலீசு பய பீதியுடனே பேரணி முழுக்க நம்முடனே வந்தது.

ஒரு 50 பேர்தான் வருவார்கள் என்று நினைத்து, எந்த ஏற்பாடும் செய்யாமல் வெறும் 5 போலீசு மட்டும் வந்திருந்தனர். பேரணி துவங்கி சாலைக்கு வந்ததும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பேரணியின் முன்னரும் பக்கவாட்டிலும் பிரசுரம் விநியோகித்த தோழர்களிடம், “தம்பி, வேண்டாம்பா, ட்ராபிக் அதிகமாகுது, சமாளிக்க முடியல” என்று கெஞ்சியது போலீசு. ஆனால், 4 அடியில் சிவப்பு தடியுடன், செஞ்சட்டையணிந்த தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே நிகழ்ச்சி முழுதும் நடப்பதைக் கண்ட போலீசு ஓரமாக நின்று பேரணியை பார்த்துக் கொண்டிருந்தது.

பேரணி தொடங்குவதற்கு முன்னரே வந்த சிப்காட்டை சேர்ந்த முதலாளி ஒருவன் வேவு பார்க்கத் தொடங்கினான். முதலாளிகளைப் போல வேடமணிந்து, முதலாளிகளை இழிவுபடுத்தியதையும், தனக்கு ஆப்பறையவிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் கட்டுக்கோப்பையும், முழக்கங்களையும் கண்டும் காணாதவன் போல பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தான்.

பேரணியின் முதல் வரிசையில் பிரச்சாரக் குழு தோழர்களின் நடனத்துடன் கூடிய பறை முழக்கமும், தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேனர், பு.ஜ.தொ.மு கொடி, பின்னர் கொள்ளையடிக்கும் முதலாளிகளை இழிவுபடுத்தும் மாறுவேடம் என அரை கிலோமீட்டர் தூரத்துக்கு பேரணி நீண்டது. வழி நெடுக நின்ற உழைக்கும் மக்கள் மற்றும் கடைவீதியில் இருந்த தொழிலாளர்கள், பயணிகள் என அனைவரும் பேரணியை வரவேற்றனர்.

2 கிலோமீட்டரை கடந்த பேரணி இறுதியாக பாண்டியன் ஹோட்டல் அருகே நிறைவுற்றது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால், அருகில் இருந்த கடைகளில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் இடத்திற்கு வந்தனர். இதனால் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மிகவும் இடையூறானது. போலீசு சமாளிக்க முடியாமல் திணறியதால், தொண்டர் படையைக் கொண்டு போக்குவரத்தை சீராக்கினோம்.

ஆவேச முழக்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம. சி சுதேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். தனது எழுச்சியுரையில், பகுதியில் நடந்த ஆலைச் சாவுகளைப் பட்டியலிட்டு, அதற்கு காரணமான முதலாளிகளைத் தண்டிக்க வேண்டிய போலீசு, அதை ஒரு வழக்காகக் கூட பதிவு செய்யாமல் முதலாளிகளின் ஏவல் நாயாக செயல்படுகிறது என்றும், சுதந்திர தினம் என்று சொல்லப்படுகின்றன ஆகஸ்டு 15 அன்று கூட ஒரு தொழிலாளி ஆலைக்குள்ளே இறந்துள்ளார்.அ தையும் கூட பதிவு செய்ய துப்பில்லாத இந்த போலீசு யாருக்காக எனக் கேள்வி எழுப்பினார். அரசின் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளினால், நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்தகையதொரு போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் நின்று தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் உங்களை இணைத்துக் கொண்டு போராட்டத்துக்கு அணி திரளுங்கள் என்று அறைகூவி தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சதீஷ் நன்றியுரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம் – 9445389536

2. திருப்பெரும்புதூர்

”வேலை பறிப்பு-தற்கொலைகள் ஆலைச்சாவுகளை தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து தொழிலாளி வர்க்கத்தை விழிப்புறச்செய்வது, உரிமை பறிப்புக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வது என்ற நோக்கத்துடன் கடந்த 2 மாதங்களாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்-ஆவடி அம்பத்தூர் பகுதி குழு தத்தம் பகுதிகளில் ஆலைவாயில் பிரச்சாரம், பகுதி பிரச்சாரம், பேருந்து-இரயில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கும் கருத்தினை தொழிலாளி வர்க்கத்திடம் கொண்டு செல்லப்பட்டது.

இருங்காட்டுக் கோட்டை சிப்காட், ஒரகடம் சிப்காட், திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பிரசித்திப்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 21/12/2013 அன்று மாலை 4.30 மணிக்கு திருப்பெரும்புதூர் தேரடி பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி துவங்கி திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முடிவுற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்பேரணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், தோழர் சிவா தலைமையேற்று ’’பகுதியிலும், நாடு முழுதிலும் இன்று தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் தாக்குதலை அம்பலப்படுத்தி இதற்கெதிராக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி” துவங்கிவைத்தார். பிறகு பேரணியானது திருப்பெரும்புதூர் பிரதான சாலையின் வழியாக செல்கையில் சாலையின் இருபுறமும் இருந்த கடைகள், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள்,வாடிக்கையாளர்கள் பலரையும் பேரணியும், முதலாளித்துவத்திற்கு எதிரான முழக்கங்களும் ஈர்த்தது. பேருந்து நிலையம் அருகே முடிவுற்ற பேரணி ஆர்ப்பாட்டமாக துவங்கியது. தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டது பகுதி மக்களையும், தொழிலாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சி.வெற்றிவேல் செழியன் அவர்கள் கண்டன உரையாற்றினார். தனது உரையில் “பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வேலை கொடுக்க வந்தவை, நாட்டை முன்னேற்ற வந்தவை என்று எல்லா ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாலும், ஆளும் வர்க்கங்களாலும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை நிலைமையில் இந்நிறுவனங்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலையையும் பறித்து வெறியாட்டம் போடுகின்றது. இக்கொடுமைகளுக்கு முடிவுக் கட்ட வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்பதுடன் – புதிய ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டியது தேவை” என்று அறைகூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

சிவா.
(பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்)
தொடர்புக்கு – 8807532859

3. திருச்சி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக வேலைபறிப்பு, தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் கடந்த 3 மாதமாக பிரசார இயக்கம் மேற்கொண்டிருந்தனர்.

இம்மாதம் 21-ம் தேதி திருச்சி திருவரம்புரில் இதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு திருச்சி பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் தோழர்.சுந்தர்ராசு தலைமை தாங்கினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர். சுப.தங்கராசு

“மக்களின் அடிப்படை தேவைக்கு ரூ 3 லட்சம் கோடிதான் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. கடந்த வருடம் வரை வங்கிகளின் வாரா கடன் ரூ 1,55,000 கோடியாக உள்ளது. சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இந்த மொத்த வாராக் கடனில் பெரும் பகுதி 30 நிறுவனங்களிடம் தேங்கியுள்ளது என்று கூறுகிறார். இந்த சூழலில் தான் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மானத்திற்கு அஞ்சி 2 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றியதில் தி.மு.கவின் T.R.பாலுவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அடக்கம். பெருநிறுவனங்கள் வங்கிக் கடனை ஏமாற்றியது மட்டுமல்லாமல் வரிகளையும் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். அதன் விளைவு தான் இந்த விலைவாசி உயர்வு. தக்காளி முதல் வெங்காயம் வரை அனைத்திற்கும் சாதாரண உழைக்கும் மக்கள் வரி கட்டுகின்றனர், ஆனால் இந்நிறுவனங்கள் வரி கட்டுவதில்லை. இவர்களை வரி மற்றும் வாராக்கடனை கட்டும் படி நிற்பந்தித்தால் அவர்களின் ஊக்கம் குறைந்துவிடும் என்று நிதி அமைச்சர் பேசுகிறார். இது எப்படி உள்ளது என்றால் ஒரு திருடன் பல வீட்டில் பொருட்களை திருடி ரோட்டோரமாக போட்டு மலிவு விலையில் விற்கிறான் என்று வைத்துக் கொள்வோம். காவல்துறை அவனை கைது செய்ய வந்தால், ‘இவரை ஏன் கைது செய்கிறீர்கள் இவர் மலிவாக பொருட்களை விற்கிறார். நீங்கள் அவரது ஊக்கத்தை கெடுக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள்’ என்று கூறுவது எத்தனை அயோக்கியத்தனமானதோ அத்தனை அயோக்கியதனமானது நிதி அமைச்சரின் பேச்சு.

மேலும், நமது விளை நிலங்களையும் பறித்து இத்தகைய நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் வாரி வழங்குகின்றனர். இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவின் எந்த சட்டத்திற்க்கும் கட்டுப்படாமல் குட்டி சமஸ்தானமாக செயல்பட்டு வருகின்றன. நமது நாட்டு தொழிற்சங்க சட்டங்கள் எதுவும் இங்கு செல்லுபடியாகாது. 8 மணி நேரம்தான் வேலை என்பது மீறப்படுகிறது. பாதுகாப்பு கருவிகளுக்கு செலவு செய்ய மறுக்கின்றனர். இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அதற்கும் முறையான இழப்பீடு கிடையாது. குறைந்த பட்ச ஊதியம் கிடையாது. இது சிறப்பு பொருளாதார மட்டும் அல்லாது மற்ற நிறுவனங்களிலும் இதேயே நடைமுறைப்படுத்துகின்றனர். நோக்கியாவில் ஆயிரக்கனக்கான தொழிலாளிகளை எப்படி திடீரென விரட்டினானோ அதே போன்றே திருச்சி சித்தார் வெசல்சிலும் விரட்டினான். இந்தியாவில் 46 தொழிற்சங்க சட்டம் உள்ளது. இதை எந்த முதலாளிகளும் முழுமையாக கடைபிடிப்பதில்லை. இந்த சட்ட மீறல்களை நாளுக்கு நாள் மூர்க்கமாக மீறுகிறான்.

மார்க்ஸ் காலத்தில் ஒரு தொழிலாளியின் 8 மணி நேர உழைப்பில் 4 மணி நேர உழைப்பின் ஊதியம்தான் அவனுக்கு போய்ச் சேர்கிறது. மீதி 4மணி நேர உழைப்பு முதலாளியால் திருடப்படுகிறது என்றார். ஆனால் இன்றோ 1மணி நேர உழைப்புதான் தொழிலாளிக்கு வழங்கப்படுகிறது. மீதி 7மணி நேர அவனது உழைப்பு முதலாளியால் கொடூரமாகத் திருடப்படுகிறது. இப்படி கிரிமினல்தனமாக செயல்படும் எந்த ஒரு முதலாளியும் கூட இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தண்டிக்கப்பட்டதில்லை. இந்த முதலாளிகளைத்தான் நாங்கள் பயங்கரவாதிகள் என்கின்றோம் . இவர்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாத்தைதான் முதலாளித்துவ பயங்கர வாதம் என்கின்றோம். ஆனால் இந்த முதலாளிகளோ தங்களது சங்கத்தின் மூலமாக, ‘புதிய ஜனநாயகத் தொழிளாளர் முன்னணி ஒரு தீவிரவாத சங்கம் இதை தடை செய்ய வேண்டும்’ என்று முதலமைச்சரிடம் மனு கொடுத்தனர்.

உடனடியாக பு.ஜ.தொ.மு மீது எதுவும் கிரிமினல் வழக்குகள் உள்ளதா எனத்தேடிப்பார்த்தனர். ‘ஒரு வழக்குகூட எங்கள் மீது இல்லை. ஆனால் நாங்கள் இந்த முதலாளிகள் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளோம். அந்த வழக்குகள்தான் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் மட்டும் தீர்க்க முடியாது. இதை மக்கள் மன்றத்தின் மூலமாக ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே தீர்க்க முடியும். இவர்களின் இந்த சுரண்டலுக்கெல்லாம் அடிப்படையாக உள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதார கொள்கையையும் அதன் மூலமாகவே முறியடிக்க முடியும். அத்தகைய புரட்சிகரப் பாதையில் இங்குள்ள உழைக்கும் மக்களும் தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்து போராட எங்கள் அமைப்பில் இணைய வேண்டும்”

என்று சிறப்புரை ஆற்றினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைகுழுவினர் பாடிய புரட்சிகர பாடல்கள் தொழிலாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. அவர்கள் பாடிய “மூஞ்சப்பாரு! மூஞ்சப்பாரு! முதலாளி வர்க்கம்” என்ற பாடலை அங்கு நின்றிருந்த தொழிலாளிகள் உற்ச்சாகமாக கைதட்டி ரசித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை பார்த்த தொழிலாளி ஒருவர், “நீங்கள் ஒருவர் மட்டும்தான் எங்களுக்காக போராடுகிறிர்கள்” என்றார். “அதை மற்றவர்களுக்கும் கேட்க்கும்படி சற்று உரக்க கூறுங்கள்” என்று தோழர்கள் கேட்டவுடன், “நான் நிச்சயமாக மற்ற தொழிலாளிகளிடம் இது பற்றி பேசுவேன்” என்று கூறினார்.

திருச்சி பகுதி பல தொழிற்சங்க போராட்டதிற்க்கு பெயர் பெற்ற பகுதி. பொன்மலை தொழிலாளர் போராட்டம், சிம்கோ மீட்டர் போராட்டம் என பல உதாரணங்கள் கூறலாம். பல ஆண்டுகளாக இந்த போராட்ட குணம் மழுங்கடிக்கப்பட்டு கிடந்ததை பு.ஜ.தொ.மு தோழர்கள் தங்களது வேர்வையை சிந்தி மீண்டும் சிவக்கச் செய்ய போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் பொழுது கூட திடீர் என மேடை ஏற்பாடு செய்து நடத்தலாம் என முடிவு செய்தவுடன் சில மணி துளிகளில் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து மேடையாக மாற்றி காட்டினர். தொழிலாளித் தோழர்கள் தங்களது மெய்வருத்தி கைவண்ணத்தை காட்டினர்.

தங்களது கை வண்ணத்தில் புதிய உலகத்தை படைப்போம் என்ற உற்சாகத்துடன்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
பு.ஜ.தொ.மு., திருச்சி

4. கோத்தகிரி

கோத்தகிரி பகுதி – நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி – மார்க்கெட் ஜீப் நிலையத்தில் 21-12-2013 அன்று காலை 10.00 மணிக்கு “வேலை பறிப்பு – தற்கொலைகள் – ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! “ என்ற முழக்கத்தின் அடிப்படையில் முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும் அதனை முறியடிக்க அறைகூவல் விடுத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தோழர் ஆனந்தராஜ் தலைமையேற்றார். தோழர் பாலன் உரையாற்றினார். தோழர் ராஜா நன்றியுரை கூறினார்.

முன்னதாக சுவரொட்டி மூலமும் கைபிரதி கொடுத்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

ராஜா
தி.அ.தொ. சங்கம்
கோத்தகிரி பகுதி

5. கோவை

21.12.2013 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “வேலைப் பறிப்பு-தற்கொலைகள் ,ஆளைச்சாவுகளை தீவிரமாகும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் “ என்ற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில்​ ​V.K.K ​மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி பேரணி புறப்பட்டது . எழுர்ச்சி மிகு முழக்கங்களுடன் புறப்பட்ட பேரணியை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போலீசுடனான நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு காவல் துறை போராளியாக புறப்பட்ட எமது தோழர்களை கைது செய்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. சிவகங்கை

“வேலை பறிப்பு – தற்கொலைகள், ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” எனும் தலைப்பில் தமிழகம் – புதுச்சேரி தழுவிய பிரச்சார இயக்கத்தின் நிறைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக சிவகங்கையில் 27/12/2013 அன்று மாலை 4 மணிக்கு அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இப்பகுதியில் திகழ்கின்ற பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சக்தி சர்க்கரை ஆலை மற்றும் முருகப்பா குழும ஈ.ஐ.டி பாரிக்குச் சொந்தமான சாராய ஆலையை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு தோழர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

சிறப்புரையாற்றிய சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன், இந்தியா முழுவதும் முதலாளிகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கும் கொடூரங்களையும் சக்தி சர்க்கரை ஆலை முதலாளி பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் அப்பா கஞ்சா விற்று பணம் சம்பாதித்த கதையையும், மாவட்ட நிர்வாகமும் போலி விவசாய சங்கத் தலைவர்களும் நடத்தும் பித்தலாட்டத்தையும் தோலுரித்துக்காட்டியதோடு, சிவகங்கை மாவட்ட தொழிற்சாலைகள் ஆய்வாளரிடம் தகவல் கேட்டால், தட்டச்சர் இல்லை என்று பதில் கொடுத்த கேவலத்தையும் அம்பலப்படுத்தினார்.

கேப்டன் டி.வி செய்தியாளர் சுரேஷ் அனுப்பியதாகக் கூறி ஒருவர் முழு நிகழ்ச்சியையும் வீடியோ எடுத்தார். இடையில் வெளியே சென்ற அவர் ஒரு ஸ்டில் கேமராவைக் கொண்டுவந்து சில படங்களை எடுத்து பின்னர் அந்தக் கேமராவைக் கொண்டுபோய் இன்னொருவரிடம் கொடுத்தார். கேமராவை வாங்கிய அந்த நபர் உடனடியாக அருகிலிருந்த கம்ப்யூட்டர் சென்டரில் போய் படங்களை மெயில் செய்துவிட்டு வெளியேறி விட்டார். இந்த முருகப்பா குழும வேலைகளை உடனே அம்பலப்படுத்திப் பேசினார், அடுத்ததாகப் பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், மேலும் சென்னையில் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் கொடுக்காமல் பிடிவாதம் பிடித்த முருகப்பா குழுமத்தின் வீம்பை ஒடுக்கிய பு.ஜ.தொ.முவின் போராட்டத்தை விளக்கியதோடு, முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் நாயாக அரசு அதிகாரிகள் செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சாராய ஆலைப்பகுதிலிருந்து வந்திருந்த சில விவசாயிகள் தோழர்களைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…

1

ரிக்கும் பார்வையிலிருந்து
இன்னும் தப்பமுடியவில்லை
தாழ்த்தப்பட்ட மக்கள்.

trichy-demonstrationநந்தனைப் பார்த்த
தில்லைவாழ் அந்தணன் முதல்
இளவரசனைப் பார்த்த
திண்டிவனம் ராமதாசு வரை
எரிந்து விழுகிறார்கள்!

அவர்களாகப் பார்த்து
பிச்சையிடுவதை
பிறழாமல் வாங்கிக்கொண்டால்,
பெரிய புராணம்!

தானாகத் தலைநிமிர்ந்து
உரிமைகளை கையிலெடுத்தால்
வெண்மணிப் பிணம்!

கழனி தொடங்கி ஐ.ஐ.டி. வரை
வெண்மணி வெறிநாக்கு
விதம் விதமாக
துப்புகிறது கங்குகளை.

மண்கலம் மட்டுமே
அனுமதிக்கப்பட்ட கைகளில்
வெண்கலமும்.

இடுப்புத்துண்டு மட்டுமே
அனுமதிக்கப்பட்டவர்கள்
ஜீன்ஸ் அணிவதையும்,

பாதை மறுக்கப்பட்ட கால்களில்
பல வித ஷீக்களும்,

எந்நேரமும்
ஆண்டையின் பிம்பம் மட்டுமே
இருத்தப்பட்ட கண்களில்
கூலிங் கிளாசும்… பார்த்து
பற்றிக்கொள்கிறது
ஆதிக்க சாதி மனம்!

தாழ்த்தப்பட்ட பெண்
‘நாப்கின்’ வாங்குவதைப்
பார்த்து கூட,
”பாத்தியா!” என ஜாடை காட்டி
வயிறெரியும் ஊர் தெரு வக்கிரம்,

வெண்மணியில்
கருக்கிய நெருப்பு
இன்னும்,
பலரின் கண் மணிகளில்
புகைந்து கிடக்குது!

வாய்ப்பு கிடைக்கையில்
வர்க்கத் திமிரோடு
வருகிற சாதிவெறி,
இலவச உழைப்பை
சுரண்ட முடியாத கடுப்பில்
தலித்துகள்
உழைத்துச் சேர்த்த செல்வங்களை
எரித்த புகையில்
இதயம் நிறைகிறது!

நாகரிகத்தின் தோற்றத்தில்…
காரிய ஒப்பனைகளில்…
மறைந்துகொள்ளும் சாதீய நகம்
சந்தர்ப்பம் வாய்க்கையில்
எந்த ஊர்?… எந்தத் தெரு?
அப்பா பெயர்?… என
நுட்பமாக சுற்றி வளைக்கிறது.

அடங்கும் இடங்களில்
கையில் விபூதி எறியும்
ஆண்டை சாமிகள்,
திமிறும் இடங்களில்
ஆளையே சாம்பலாக்கும்
அநியாயங்கள்
இன்னும் முடிந்தபாடில்லை!

மூவாயிரம் மைல்கள் தாண்டி
இலக்கைத் தாக்கி அழிக்கும்
அக்னி மூன்றை அனுப்பிவிட்டதாய்
அலப்பறை போடும் அன்பர்களே!
மூணு தெரு தாண்டி
ஊர் பொதுக்குழாயில் நீரெடுக்கவும்,
ஊர் பஞ்சாயத்தின் இலக்கைத் தொடவும்
ஒரு தாழ்த்தப்பட்டோரை அனுப்ப
உங்களிடம் கருவி உள்ளதா காட்டுங்கள்!

தில்லை… வெண்மணி…
குறிஞ்சாண் குளம்… கொடியன்குளம்… மேலவளவு…
உஞ்சனை… விழுப்புரம்… பரமக்குடி
காலந்தோறும் கைமாறி வருகிறது
ஆதிக்க நெருப்பு,

பக்திக்கும் உரிமையில்லை
சொத்துக்கும் உரிமையில்லை
அது நந்தன் காலம்,

விளைநிலங்கள் அழிக்கப்பட்டு
கைத்தொழில்கள் எரிக்கப்பட்டு
அத்துக் கூலிகளாய் தலித்துகளை
அடித்து நகரத்திற்கு துரத்தும் உலகமயம்!

இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின்
நெருப்புக்குத் தப்பியவனை
இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி
எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!

ஆண்டையின்
கொலைக்களத்திற்கு தப்பிய
படியாளின் மகனை,
ஹீண்டாயின் காண்ட்ராக்ட் வேலை
கழுத்தறுக்கிறது!

சவுக்கடிக்கும், சாணிப்பாலுக்கும் தப்பிய
நடவாளின் கைகளை,
நோக்கியாவின் மதர்போர்டு
நறுக்கி எறிகிறது!

வெண்மணித் தீ முடியவில்லை
அது மூலதனத்தின் வழி நீள்கிறது,
வெண்மணி ரத்தமும் உறையவில்லை
அது செங்கொடி முழக்கத்தில் எழுகிறது!

உள்ளடக்கத்திலும், வடிவத்திலும்
உருமாறும் ஆதிக்க நெருப்பை
எதிர்கொள்ளும் அரசியலை
ஏற்கனவே தம் பிணத்தின் மீதும்
அடையாளம் காட்டியவர்கள்
அந்த வெண்மணித் தியாகிகள்!

கார்ப்பரேட் ஆண்டைகள்,
மறுகாலனிய சவுக்குகள்,
நீதிமன்ற சாணிப்பால்கள்…
பாராளுமன்ற கிட்டிகள்…

ஏற்க மறுத்து, எதிர்த்து அடித்து
பதிலடி தந்தவர் செங்கொடி தியாகிகள்!
சோற்றுக்கு மட்டுமல்ல
சுரணைக்கும்,
கூலிக்கு மட்டுமல்ல
அரசியல் உரிமைக்கும்,
வர்க்கப்போரைத் தொடுத்ததின்
அடையாளம் வெண்மணி…

எரிய எரிய
சாம்பலாகாமல் – மக்கள்
சங்கமான
ஒரே இயக்கம்… கம்யூனிச இயக்கம்…
வெண்மணி தியாகிகளின்
விடுதலைத் தாகமும் அதுவே!

– துரை.சண்முகம்

முருங்கைக்காய் பறித்தால் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு !

11

சென்னை திருவான்மியூரிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த செல்வம், சக்தி ஆகிய இருவரும் இ.பி.கோ. 385-வது பிரிவின் கீழ் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நபரையேனும் பணம் பறிக்கும் நோக்கில் தாக்கிக் காயப்படுத்துவதாக மிரட்டினால் தொடரப்படும் வழக்கின் பிரிவுதான் 385 என்பதாகும். இந்த வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறைவாசம் விதிக்கமுடியும்.

குற்றமும் தண்டனையும்
குற்றமும் தண்டனையும்

திருவான்மியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குனர் (ஏ.டி.ஜி.பி.) வெங்கடேசன். அவரது மனைவி ராணிவெங்கடேசன் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். மகள் பியூலா ஒரு போலீசு அதிகாரி. மருமகனோ சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ். செல்வமும் சக்தியும், மழையால் சரிந்து கிடந்த வெங்கடேசன் வீட்டு முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் முருங்கை இலையையும் சில காகளையும் பறித்ததும், அக்குடும்பத்தினர் போலீசிடம் புகார் தந்தனர். இந்த மாபெரும் குற்றத்திற்காகத் தரப்பட்ட புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்குமே! உடனே இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.கள், 10 போலீசார் உள்ளிட்ட ஒரு படையே சென்று கைது நடவடிக்கையில் இறங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணிவெங்கடேசன், “நூறு கோடி திருடினா என்ன, முருங்கையைத் திருடினா என்ன,எல்லாமே திருட்டுதானே” என்று ‘நியாயம்’ பேசுகிறார்.

அதே சென்னையில், அடகுக்கடை நடத்தி வந்த நிக்ஷாசந்த் என்பவர் திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறி, அவரிடமிருந்து 203 கிராம் தங்கத்தை நான்காண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றார், மயிலாப்பூர் போலீசு நிலைய தலைமைக் காவலர் சம்பத். இச்செயல் சட்டவிரோதமானதென்றும் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செயவேண்டுமென்றும் நிக்ஷாசந்த் புகார் கொடுத்தார். ஆனால், போலீசாரோ வழக்குப் பதிவு செயாததால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார், அடகுக் கடைக்காரர். 2012-இல் தலைமைக் காவலர் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டாகியும் இதனை போலீசு நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நிக்ஷாசந்த் தொடுத்தார். தங்கத்தை அபகரிக்க முயன்ற வழக்கிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நியாயப்படி தலைமைக் காவலரை கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதை காரணம் காட்டி அவரை மன்னித்துள்ளது, நீதிமன்றம். போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – ஓசூரில் பேரணி

1

நவீன கொத்தடிமைக் கூடாரமான ஒசூரில் தொழிலாளர்களைத் திரட்டி பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!

“வேலைபறிப்பு – தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் – புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தின் இறுதியாக, “தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய அளவில் பேரணி – ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒருபகுதியாக, ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொழிலாளர்கள் ஆதரவுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது.

“நவீனத் தொழில்துறையானது தந்தைவழிக் குடும்ப ஆண்டானுடைய சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியினது பெரிய தொழிற்சாலையாய் மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் நெருக்கமாய்க் கூட்டப்பட்டிருக்கும் திரளான தொழிலாளர்கள் படையாட்களைப் போல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறைச் சேனையின் படையாட்களாகிய இவர்கள், ஆபீசர்கள் என்றும் சார்ஜெண்டுகள் என்றும் முற்றும் படிநிலைக் கிரமத்தில் அமைந்த படைத் தலைமையின் கீழ் இருத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அடிமைகளாய் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் மட்டுமல்ல; நாள் தோறும் மணிதோறும் இயந்திரத்தாலும், மேலாளர்களாலும், யாவருக்கும் முதலாய்த் தனித்தனி முதலாளித்துவ ஆலையதிபராலும் இவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுங்கோன்மை எவ்வளவுக்கு எவ்வளவு பகிரங்கமாய் இலாபத்தைத் தனது இறுதி முடிவாகவும் குறிக்கோளாகவும் பிரகடனம் செய்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் இது இழிவானதாய், வெறுக்கத்தக்கதாய், கசப்பூட்டுவதாய் இருக்கிறது.” –

கம்யூனிஸ் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் குறிப்பிட்டிருக்கும் ஆலை உற்பத்தியில் தொழிலாளர்கள் அடிமைகளாக இருத்தப்பட்டிருக்கும் நிலைமை, இன்று நாம் காணும் சமகால தொழிலாளர் நிலைமைக்கும் பொருந்தும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட பின்னர் இந்த 160 ஆண்டுகளில் ஆலையதிபர்கள் இடத்தில் தற்போது கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ந்து வந்துள்ளனர். ஆபீசர்கள், சார்ஜெண்டுகள் இடத்தில் சூப்பர் வைசர், எக்சிகியூட்டிவ், எம்.டி., எச்.ஆர்., என்றும் இவர்கள் ஒவ்வொருவரிலும் பல உட்பிரிவுகளோடும் இந்த படைவரிசை மிக பிரம்மாண்டமாக வளர்ந்து தொழிலாளர்கள் மீது அமர்ந்து அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இலாபவெறி மேலும் மேலும் தலைக்கேறி வளர்ந்துள்ளது. தொழிலாளர்கள் அடிமையாக்கப்படுகிறர்கள் என்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வாசகங்கள் இன்றும் எதார்த்தமாக உள்ளது. முதலாளிகள் தொழிலாளர்கள் மீது செலுத்தி வந்த கொடுங்கோன்மை முதலாளித்துவ பயங்கரவாதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

“தொழில் துறை சார்ந்த நகரங்கள் நவீன கொத்தடிமைக் கூடாரங்கள்” என்ற வகைப்படுத்தும் வகையில் ஒசூரும் உள்ளது. தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் பல வடிவங்களில் ஆழமாகவும் விரிவகற்சியாகவும் தோண்டத் தோண்ட வந்து கொண்டிருக்கும் நீண்ட தொடர் கதையாகவும் உள்ளது. ஒரு ஆலையில் உள்ள தொழிலாளர்களை ஒவ்வொருமுறை சென்று சந்திக்கும் போதும் தங்கள் மீது முதலாளிகள் தொடுத்துவரும் புதிய புதிய அடக்குமுறைகளை சொல்கின்றனர்.

இந்த பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்ட இந்த சில மாதங்களில் ஒசூரில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

  • அசோக் லேலாண்டு, லூக் இன்டியா, கேட்டர்பில்லர், ஆவ்டெக் போன்ற பல ஆலைகள், தொழிலாளர்கள் மீது லேஆப் அடக்குமுறை செலுத்தி வருகின்றன. குறிப்பாக, அசோக் லேலாண்டு தனக்கு தேவையான உற்பத்தியை எல்லாம் எடுத்துவிட்டது. இந்த ஆண்டுக்கான போனசை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. இது மட்டுமின்றி அடுத்த ஆண்டு 180 நாட்கள் லேஆப் விடுவதற்கான சதித்திட்டத்தை தீட்டிக்கொண்டிருக்கிறது. லேலாண்டை பின்பற்றி மேற்கண்ட ஆலைகளும் தொழிலாளர்கள் மீது லேஆப் அடக்குமுறையை செலுத்தி வருகின்றன.
  • கார்போரண்டம், வென்ட் இண்டியா, லூக் இன்டியா போன்ற ஆலைகளில் நீண்ட நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் வலியுறுத்தியும் பணிநிரந்தரம் செய்யாமல் ஸ்டாஃப் (Staff – ஆலை நிர்வாக ஊழியர்) ஆக மாற்றியுள்ளன. இதனால், தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, எப்பொழுது வேண்டுமானாலும் வேலையைவிட்டு விரட்டியடிப்பதற்கான கத்தி தொழிலாளர்கள் மீது தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை என்பதை, அந்த ஆலையில் உள்ள எச்.ஆர். என்ற கங்காணி தீர்மானிப்பதுதான். கூலியும் அதே போலத்தான் வழங்கப்படுகிறது. இந்த வேலையைவிட்டால் அடுத்து என்ன செய்வது என்ற தொழிலாளர்களின் அவலவாழ்க்கை நிலைமை தான் இந்த ஸ்டாஃப் என்ற அடிமை வாழ்க்கையை ஏற்க வைத்துள்ளது.
  • ஆவ்டெக், மிண்டா டூல்ஸ், பிரபா இஞ்ஜினியரிங் போன்ற ஆலைகளில் மட்டும் சுமார் 2000க்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் யாருக்கும் போனசு இல்லை. குறைந்த பட்ச கூலி என்பது நாளொன்றுக்கு ரூ.200 கூட கிடைப்பதில்லை. கட்டாயம் கூடுதல் நேரம் வேலை செய்தாலும் இந்த நிலைமை தான் என்று சொல்லி தொழிலாளர்கள் கவலைப்படுகின்றனர். இவ்வாலைகள் பெரும்பாலானவற்றில் மதிய உணவு கொடுப்பதில்லை. கேண்டீன் வசதியும் இல்லை.
  • நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கும் அதிகமான கேஸ்டிங்க் ஆலைகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நல்ல சோறு கிடைப்பதால்தான் இங்கு வேலைக்கு வந்துள்ளதாகக் கூறி ரேசன் அரிசியைக் காட்டுகின்றனர். 10அடிக்கு 10 அடி என்ற அளவில் உள்ள ஒரு அறையில் 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் எல்லோரும் 12 மணிநேர வேலை என்பதால் பகலில் 10 பேர் அறையில் ஓய்வெடுப்பது, இரவில் 10 பேர் அறையில் ஓய்வெடுப்பது என்று தங்கி தங்களது வாழ்வைக் கழித்து வருகின்றனர். அறை நிலைமையே இதுவென்றால் கழிப்பறை பற்றியோ, தண்ணீர் தேவைபற்றியோ சொல்லத் தேவையில்லை. அவை அறவே இல்லை. ஆலைக்குள்ளேயே குளிப்பது, ஆலையைவிட்டு வரும்போது கேனில் தண்ணீர் எடுத்து வருவது என்பனதான் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலை.
  • மிண்டா ஆலையில் புதிதாக துவங்கப்பட்ட ஆலை. தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 10வது, +2 முடித்த இளம் பெண்களை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இவ்வாலை நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு கிராமத்தில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள், நகருக்கு அடிக்கடி சென்றுவருவதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவு. இந்த இளம் பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பு குறைவு. என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்ற கோணத்தில் திட்டமிட்டு இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது ஆலையா? இளந்தொழிலாளர்களுக்கான நவீன கொத்தடிமை கூடாரமா? என்பதுதான் நமது கேள்வி. ஏனென்றால், இந்த ஆலைக்கு பிரசுரத்தை வினியோகம் செய்ய தோழர்கள் சென்றனர். உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஒழுங்காக, வரிசையாக வருகிறார்களா என்று கண்காணிக்க தலைமை ஆசிரியர் குச்சியுடன் வாயிலில் நின்று கண்காணிப்பது போல, தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழைவதை எச்.ஆர். அதிகாரியாக உள்ள பெண் கண்காணித்து வந்தார். தோழர்கள் பிரசுரம் வினியோகிக்கத் தொடங்கியவுடன் பதறியடித்துக்கொண்டு வந்து தொழிலாளர்களிடமிருந்து, “குடுங்கடி” என்று பிரசுரத்தை பிடிங்கினார். மேலும், தோழர்களை நோக்கி ஆத்திரத்துடன் சீறிக்கொண்டு வந்தார். “உங்களுக்கு இங்க நோட்டீசு கொடுக்க அனுமதி கொடுத்தது யார்?” என்று வானுக்கும் பூமிக்கும் தாவினார். இதனை தோழர்கள் முறியடித்து பிரசுர வினியோகம் செய்தனர். அப்போது, அவ்வாலைக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற பிரச்சனை இருப்பதாக ஒரு பெண் தொழிலாளி பேச முற்பட்டார். ஆனால், எச்.ஆர். அதிகாரிக்கு பயந்து பின்வாங்கினார்.
  • ஒசூரிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் என்ற அளவில் உள்ள பேட்டா ஆலையில் கூட சில காலமாக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்தத் தொடங்கியுள்ளது. இங்கு தொழிலாளர்களுக்கு இயர்னிங் லீவு கொடுக்க மறுக்கிறது ஆலை நிர்வாகம்.

மின்வெட்டு அதிகரித்திருப்பதால் பல பட்டறைகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது மிகவும் மோசமான நிலையில் பட்டறைகள் உள்ளன. அதிக உழைப்பை சுரண்டும் நிலைமை இங்கும் உருவாகியுள்ளது. தற்போது சில மாதங்களாக பட்டறைகளில் கேமரா வைத்து தொழிலாளர்களைக் கண்காணிக்கும் முறை அதிகரித்து வருகிறது. தான் உற்பத்தி செய்த பொருளுக்கான விலையை தீர்மானிக்கும் உரிமையற்ற இந்த சிறுமுதலாளிகள், தங்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதன் மூலம் தங்களது தொழிலை விரிவுப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். தனியார்மயம் தாராளமயம் என்பது முற்றிலுமாக பட்டறை தொழிலையே ஒழித்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டி மீது விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி மறைக்கும் வேலையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒசூர் முதலாளிகள் சங்கம், இந்த முறையும் எதிர்ப்பார்த்தபடி சுவரொட்டிகள் மீது விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி தனது ஈனத்தனத்தைக் காட்டிக் கொண்டது. இதனை முறியடிக்கும் வகையில் சுவரொட்டிகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் ஒட்டியதன் மூலம் பிரச்சாரம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

போலீசு  தன் பங்கிற்கு பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்தது. கடந்த இரு மாதங்களில் இருமுறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்து தோழர்கள் கைதானதை கணக்கில் கொண்டு இந்த முறை ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி விட்டது போலும். போக்குவரத்து நெரிசல், போலீசு சட்டங்களைக் காரணம் காட்டியது போலீசு. பிரவீன் தொகாடியா என்ற இந்துமதவெறி பிடித்த ரவுடி ஒசூருக்கு வந்த பொழுது, அவனுக்காக போக்குவரத்தையே திருப்பிவிட்ட போலீசு, தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று அனுமதி கேட்கும் போது அனுமதி மறுத்து வருகிறது.

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு ஒசூர் நகராட்சி முன்பாக எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 150க்கும் அதிகமான தோழர்கள், தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கலந்து கொண்டனர். முன்னதாக, தொழிலாளர்களை பரந்த அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கும் பொருட்டு, 40க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு பு.ஜ.தொ.மு. சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சில ஆலைகளில் இருந்து தொழிலாளர்கள் பார்வையாளர்களாகவும் சில ஆலைத் தொழிலாளர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்திலும் வந்து கலந்து கொண்டனர். மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சாரத்தை பார்த்து வந்து கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்திற்கு வந்த பல தொழிலாளர்கள் ஒலிப்பெருக்கியின் சத்தம் கேட்டு ஆர்ப்பாட்டத்தை இறுதிவரை முழுமையாக நின்று கவனித்து ஆதரவளித்தனர்.

குறிப்பாக, உயர்ந்த இரு செங்கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் இருமருங்கிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. இது ஆர்ப்பாட்டத்திற்கு கம்பீரத்தை கொடுத்தது. பார்க்கும் மக்களைக் கவரும் வண்ணம் அமைந்தது. செங்கொடிகள், முழக்க அட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் எழுச்சிகராக தொடங்கியது. தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.

மேலும், அம்பானி – டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளை வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அம்பானி, டாடா ஆகிய இருவரையும் கட்டி வைத்து அடிப்பது போன்ற காட்சி விளக்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏன், இந்த இரு முதலாளிகளை அடிக்கிறீர்கள் என்று சிலர் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு ஆதரித்தனர்.

தோழர்.செந்தில் குமார், மாவட்ட செயற்குழு, பு.ஜ.தொ.மு. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்திற்காக மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தில் கிடைத்த அனுபவங்களை முன்வைத்து முதலாளிகள் சட்டத்தை மீறி அடக்குமுறை செலுத்தி வருவதை அம்பலப்படுத்தினார். மேலும், கமாஸ் வெக்ட்ரா ஆலையில் ஒட்டுமொத்தமாக சட்டவிரோத உற்பத்தி செய்யப்படுவது மட்டுமின்றி தொழிலாளர்கள் மீது 12 வகையான சட்டவிரோத அடக்குமுறைகள் செலுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்.

இதன் பின்னர் பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு பொறுப்பாளர் தோழர்.இரவிச்சந்திரன் தெலுங்கு மொழியில் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி பேசினார்.

ஹரிதா ரப்பர் தொழிற்சாலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக திரு.கோபால், டி.வி.எஸ். நிர்வாகம் தங்கள் மீது செலுத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார்.

இதனை தொடர்ந்து தோழர்.பரசுராமன், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு. சிறப்புரையாற்றினார். இந்த ஒருவார காலத்தில் தொழிலாளர்கள், பிற ஆலை சங்க நிர்வாகிகளிடம் பேசியதிலிருந்து கிடைத்த அனுபவங்களை தொகுத்து முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார்.

இந்திய தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியக் கடனைக் கட்டாமல் இருப்பது மட்டுமல்ல, அதனை மறுசீரமைப்பது என்ற வகையில் ஆட்டோ மொபைல் துறையில் உள்ள தரகு முதலாளிகளுக்கு மட்டும் ரூ.3000 கோடி கடன் நிலுவையை மறுசீரமைப்பு செய்ததன் மூலம் தள்ளுபடி செய்ததையும் இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ரூ.600 கோடி இத்துறையைச் சேர்ந்த தரகு முதலாளிகள் கோரியிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால், கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் தொழிலாளர்கள் நிலைமை மேலும் கீழ் நிலைக்குச் சென்றுள்ளதையும் ஒப்பிட்டுக்காட்டி இந்த அரசு முதலாளிகளுக்கு எந்த அளவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை சுட்டிகாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக தோழர்.சங்கர், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ.மு. நன்றியுரையாற்றினார்.

பு.ஜ.தொ.மு.வின் இந்த ஆர்ப்பாட்டம் ஒசூர் தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடமுடியும் என்ற நம்பிக்கையை வரவழைத்தது என்பது மிகையல்ல. இந்த ஆர்ப்பாட்டம் முடியும் தருவாயில், அசன் சர்க்யூட் என்ற ஆலையில் பணி புரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஒரு கையை இழந்த தொழிலாளி, உடல்நலமின்றி போனதால் இறந்துவிட்டார் என்ற தகவல் தோழர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் வந்தது. அந்தத் தொழிலாளிக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காகவும் அவர்கள் பு.ஜ.தொ.மு.வை நாடினர். அந்தத் தொழிலாளியின் உடலை கொண்டு ஒசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்று முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர் தோழர்கள்!

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வாழ்க
, வாழ்க, வாழ்கவே!

ஓங்குக, ஓங்குக
புதிய ஜனநாயகப் புரட்சி
ஓங்குக
, ஓங்குக

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தொழிலாளர் நலச் சட்டங்களை
மீறுகின்ற முதலாளிகள் மீது
கிரிமினல் சட்டப்படி
நடவடிக்கை எடு
! நடவடிக்கை எடு!

மத்திய அரசே, மாநில அரசே
அமுல்படுத்து
! அமுல்படுத்து!
தொழிலாளர் நலச் சட்டங்களை
கறாராக அமுல்படுத்து
!

பதிவு செய்! பதிவு செய்!
புதிய சங்கம் துவங்குவதற்கு

30
நாட்களுக்குள் பதிவு செய்!

தடை செய்! தடை செய்!
ஒர்க்கர்ஸ் கமிட்டி என்ற பெயரில்
முதலாளிகள் கையாளுகின்ற
அடியாள் படையை தடை செய்
!

நிர்ணயம் செய்! நிர்ணயம் செய்!
குறைந்த பட்ச ஊதியமாக
எல்லா தொழி லாளர்களுக்கும்
பதினைந்தாயிரம் நிர்ணயம் செய்
!

சமத்துவம் வழங்கு! சமத்துவம் வழங்கு!
ஊதியத்திலும் பாதுகாப்பிலும்
பெண் தொழி லாளர்களுக்கு
சமத்துவம் வழங்கு
! சமத்துவம் வழங்கு!

தொழிலாளர்களே! தொழிலாளர்களே!
முறியடிப்போம்
! முறியடிப்போம்!
தனியார்மயம்
, தாராளமயம்
உலக மயம் என்கிற
மறுகாலனியாக்க சதிதிட்டத்தை
முறியடிப்போம்
! முறியடிப்போம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை
கட்டியமைப்போம்
! கட்டியமைப்போம்!

***

ஐயோ கொடுமை, ஐயோ கொடுமை!
தொழிற்சாலை என்ற பெயரில்
தொழிலாளருக்கு நடப்பதெல்லாம்
கொடுமை
, கொடுமை, ஐயோ கொடுமை!

நோக்கியா ஆலையின் அம்பிகா,
டிவிஎஸ் ஆலையின் முத்து
,
குளோபல் கம்பெனியின் எல்லீசு
,
பிரிமியர் மில்லில் கிருஷ்ணவேணி
ராஜ்சிரியாவில் நாகவேணி
இவர்கள் யார் உனக்குத் தெரியுமா
?
வேலைக்கு வந்த பாவத்திற்காக
உயிரைவிட்ட தொழிலாளர்கள்
?
மிசினிலே உடல்நசுங்கி
,
பாய்லர் வெடித்து உடல்கருகி
.
வேலை போனதால் தற்கொலை செய்து
இவர்களைப் போல இறந்தவர்கள்
எண்ணிக்கை சொல்லி மாளாது
!

வேலைக்கு வந்த பாவத்திற்காக
விபத்துகளில் கை கால்களை
இழந்தி ஊனமாவும்
தொழிலாளர்களே தொழிலாளர்களே
!

வேலூர், ஆம்புர், ஓசூர் என்று
நாடெங்கும் தொடர்கிறது
தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள்
!

12 மணிநேர வேலை நேரம்
.டி. என்பது கட்டாயம்,
குறைந்த கூலி
, ஓய்வு இல்லை
போன்ற பல கொடுமைகளை
எதிர்த்துக் கேட்க சங்கம் அமைத்தால்
வேலை நீக்கம்
, இடமாற்றம்!

பயங்கரவாதம் பயங்கரவாதம்
தொழிற்சாலை என்ற பெயரில்
தொழிலாளர்களுக்கு இழைப்பதெல்லாம்
முதலாளித்துவ பயங்கரவாதம்
!

காரணம் யார்? காரணம் யார்?
ஆலைக்குள்ளே இறப்பதற்கும்
தற்கொலை செய்துகொள்வதற்கும்
காரணம் யார்
? காரணம் யார்?

சட்டப்படி கொடுக்க வேண்டிய
பாதுகாப்புகள் கொடுக்காமல்
,
சட்டபடி இருக்கின்ற
பாதுகாப்புகளை நீக்கிவிட்டு
உற்பத்தியைப் பெருக்குகின்ற
லாபவெறி பிடித்தலையும்
முதலாளிகளே குற்றவாளிகள்
?

விபத்து, தற்கொலை என்பதெல்லாம்
முதலாளிகளே திட்டமிட்டு
நடத்துகின்ற படுகொலைகள்
!

அசோக் லேலாண்டு, டிவிஎஸ்
கமாஸ் வெக்ட்ரா
, கார்போரண்டம்
போன்ற பல ஆலைகள்
சட்டவிரோதமாக தொழிலாளர்களை நடத்துது
!
முதலாளிகளின் அடக்குமுறைகளை
ஏற்காத தொழிலாளர்களை
வேலை நீக்கம்
, இடைநீக்கம்,
வெளிமாநிலத்திற்கு இடமாற்றம்
என்று சொல்லி தண்டனை வழங்குது
!

பிணந்திண்ணும் கழுகளைவிட
மலம் திண்ணும் பன்றிகளைவிட
பணந்திண்ணும் முதலாளிகளே
தொழிலாளர்களை கொலை செய்யும்
கொடியவர்கள்
! கொடியவர்கள்!
சட்டத்தை மீறி உற்பத்தி செய்யும்
முதலாளிகளே கிரிமினல்கள்
!

சட்டத்தை மீறும் முதலாளிகளை
தண்டிக்காமல் காப்பது யார்
?
தொழிற்சாலை ஆய்வாளர்
,
தொழிலாளர் அலுவலர்
,
போலீசும்
, நீதிமன்றமும்
முதலாளிகளின் அடியாள்படையே
!

சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு
வரிச்சலுகை
, கடன் ரத்து
வரிக்குறைப்பு
, மானியம்
என்ற பெயரில் பல ஆயிரம்கோடி
மக்கள் பணத்தை வாரி இறைப்பது

மத்திய மாநில அரசுகளே!
இயற்கைக்கு
, மனித குலத்திற்கு
எதிரான முதலாளித்துவத்தை

தனியார்மயம் தாராளமயம்
உலகமயம் என்ற பெயரில்
ஊட்டி வளர்ப்பதும் இந்த அரசுகளே
!

தீர்வு என்ன? தீர்வு என்ன?
தொழிலாளர்கள் படுகின்ற
துன்பங்களுக்கு தீர்வு என்ன
?

எப்படி? எப்படி?
சட்டத்தை மீறும் முதலாளிகளை
தண்டிப்பது எப்படி
? எப்படி?

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
கட்டியமைப்போம்
! கட்டியமைப்போம்!
முதலாளிகளை தண்டிக்க
இழந்த உரிமைகளை மீண்டும் பெற
வீதியில் இறங்கிப் போராடுவோம்
!

ஓங்குக! ஓங்குக!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
ஓங்குக
! ஓங்குக!

பிற ஆலைகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு:

தோழர்களே!

ஒசூரில் தொழிலாளர்கள் மீது ஆலைக்குள் சட்டவிரோதமான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அசோக் லேலாண்டில் தொழிலாளர்கள் மீது சட்டவிரோத அடக்குமுறைகள் (கடுமையாக வேலைபளு அதிகரித்தல், போதிய பாதுகாப்பு அம்சங்களை கொடுக்க மறுத்தல், பயிற்சி தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துதல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர உற்பத்தியில் ஈடுபடுத்துதல்,..) செலுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வி.ஆர்.எஸ்.இல் (ஆட்குறைப்பு) வெளியேற்றுவதற்கு திட்டமிட்டு இயங்குகிறது. கமாஸ் ஆலையில் ஒப்பந்தத்தை மீறுதல், சங்க நிர்வாகிகள் வேலைநீக்கம், இடமாற்றம் போன்றவற்றை சட்டவிரோதமாக செய்கிறது. லேலாண்டு, கார்போரண்டம், எக்ஸைடு உள்ளிட்ட பல ஆலைகள் சட்டவிரோத ஒப்பந்தங்களை போட்டு தொழிலாளர்களை கசக்கி பிழிகின்றன. வெக் இன்டியா, டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜ்சிரியா போன்ற பல ஆலைகளில் சட்டவிரோதமான முறைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. வெண்ட் இண்டியா, கார்போராண்டம் உள்ளிட்ட பல ஆலைகள் தொழிலாளர்களை ஸ்டாஃப் ஆக்குவதன் மூலம் சட்டபூர்வ உரிமைகளை பறிக்கின்றன.

தற்போது ஒசூரில் பெரும்பாலான ஆலைகள், மேற்கண்ட சட்டவிரோத முறைகளில் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து, தங்களது சந்தைத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு, சட்டவிரோத லேஆப் விடுவது அதிகரித்து வருகின்றன. இவ்வாறான கொடுமைகளுக்கு ஒசூர் முதலாளிகளுக்கு லேலாண்டு நிர்வாகம் வழிகாட்டியாக உள்ளது.

இவற்றின் விளைவாக, தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளுதல், மன உளைச்சலுக்கு ஆளாகி பலவகை உடல் நோய்களுக்கு ஆளாகுதல், ஆலையில் விபத்துக்கள் என்ற பெயரில் தொழிலாளர்கள் கொல்லப்படுதல், உடலுறுப்புகளை இழத்தல், அற்ப கூலிக்கு வேலை செய்ய வேண்டி வருதல் போன்ற பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றின் ஒட்டுமொத்தத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வேலைமுறை நவீன கொத்தடிமை நிலைக்கு தாழ்ந்து வருகிறது.

இவற்றை எதிர்த்து, தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளைக் காக்க, “தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகளை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 21-12-2013 அன்று மாலை 5.00 மணிக்கு ஒசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். ஒசூர் தொழிலாளர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு – ஒற்றுமையைக் கட்டியமைக்க எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஏற்கனவே ஆதரித்து வருகிறீர்கள். அது போல இந்த எமது முயற்சிக்கும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை திரட்டி வந்து பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

பேரணி தொடங்கும் இடம்: தாலுக்கா அலுவகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம்: நகராட்சி அலுவலகம் முன்பு

பிற ஆலைத் தொழிலாளர்களுக்கும், சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி ஆங்கிலத்தில்:

Dear Comrades,

In Hosur, illegal oppressions are increased on the workers in factories. Ashok Leyland Company is planning to expel hundreds of workers under VRS (Retrenchment) by illegal oppressions on the workers like increasing the hard work, refused to give proper safety, using apprentice in production, using contract labour in regular production.

Kamas Vectra Company is also doing illegal oppressions like breaking the agreement, termination and transfer of the union bearers. The Management of Carborundum and Exide like companies oppress the workers who are in union by making agreement with traitors among workers.

Now, many industries in Hosur increased oppressions like illegal exploitations on workers by above methods, fulfill the demands in production for the market and illegal layoff. For all these cruelties,  Leyland Management is the role model for Hosur capitalists.

Due to the above cruelties, workers are in many sufferings like suicides, deceases due to mental distortion, murder of workers in the name of accidents, loss of physical parts of the workers, accept to work for poor wages. On the whole, work nature is worsening as bonded labour due to the abolition of permanent workers.

Support the struggle under the slogan “Arrest the owners who break the labour laws under criminal act!” against all the above cruelties imposed on the workers and to secure legal rights of the workers.

செய்தி :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784.

பெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை !

1

குடும்ப வன்முறை குறித்துக் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் பதிவான 4,547 புகார்களில், பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழகத்தில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் பதிவாகியுள்ள மொத்தப் புகார்களில் 80 சதவீதத்துக்கும் மேலானவை தமிழகத்தில்தான் பதிவாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு 6-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது உள்துறை அமைச்சகம் அளித்த தகவல் இது. மற்ற மாநிலங்களில் புகார்கள் பதிவு செயப்படவில்லையே தவிர, குற்றங்கள் நடக்கவில்லை என்று பொருளல்ல. ஜார்கண்டு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் தகவல்தான் உள்ளதாகவும், இதர மாநிலங்கள் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

சேலம் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர் அருகே மண்டபம் கிராமத்தைச் சேர்ந நான்கு இருளர் பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவிய கிரிமினல் போலீசாரைத் தண்டிக்கக் கோரி, சேலத்தில் 15-12-2011 அன்று பெண்கள் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

பெண்கள் மீதான வன்முறை குறித்து இவ்வளவு புகார்கள் பதிவாகியுள்ள போதிலும், இக்கொடுமைகளுக்கு எதிராகத் தமிழகம் கொதித்தெழுந்து போராடாமல் இன்னமும் அமைதியாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியுள்ள நிலையில், மிக அதிகமான குற்றங்கள் நடந்துள்ள தமிழகமோ சொரணையற்றுக் கிடக்கிறது.

பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கச் சமூகம், பெண்கள் மீதான வன்முறைகளை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை. மறுபுறம், மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, இத்தகைய நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டுரகச் சீரழிவுப் பண்பாட்டை உருவாக்கி வளர்த்து வருகிறது. நுகர்வியமும், நகரமயமாக்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

பெண்கள் மீதான வன்முறைகளைக் கொடிய குற்றமாகச் சித்தரித்து அதற்கெதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தாமல், பரபரப்பூட்டும் வகையிலும் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் வகையிலும்தான் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டே உருவாக்கப்பட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது.

இதனால் அநீதி இழைப்பதும், அதைக் கண்டும் காணாமல் இருப்பதும், சகித்துக் கொள்வதும் சகஜமானதாகி வருகிறது. சன் டி.வி அகிலாவுக்கு என்ன நேர்ந்ததோ, அதுவே இன்று எல்லா பெண்களுக்கும் தங்களது பணியிடங்களில் தவிர்க்கவியலாத தொல்லையாக நிலவுகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கும் சீண்டல்களுக்கும் பஞ்சாயத்துக் கூட்டி அபராதம் விதிப்பதைப் போலத்தான், நகர்ப்புறங்களில் இழப்பீடும் மன்னிப்புக் கேட்பதும் கௌரவமான முறையில் நடத்தப்படுகின்றன.

பெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஜெயலலிதா அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், குடும்ப வன்முறைக்கு எதிராகத் தமிழக பெண்கள் துணிவுடன் புகார் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள 3,838 புகார்களில், போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள புகார்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டும்தான். இந்த 9 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வெறும் 11 பேர்தான். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் போலீசிடம் புகார் கொடுத்தாலும், குற்றவாளிகளான கணவன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவதில் அதிகார வர்க்கமும் போலீசும் ஆணாதிக்க மமதையுடன் அலட்சியப்படுத்துவதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.

மிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் கடந்த ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணிக்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றுள்ளனர். ஆனால், ஜார்கண்டு மாநிலத்தைவிட எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் அதிகமாக – 1296 போலீசு நிலையங்களுடன், ஏறத்தாழ 250 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஒரு லட்சம் போலீசாரும் கொண்டுள்ள தமிழகத்தில், புகார்கள் மீதான நடவடிக்கை என்பது மிகமிக அற்பமானதாக இருக்கிறது. இதை மூடி மறைத்து, புகார்களை விசாரிக்க கூடுதலாக போலீசார் இல்லாததாலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்று தமிழக போலீசு புளுகுகிறது. இத்தகைய போலீசிடம்தான் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செயப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்படாமலேயே உள்ளன. தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டுப் பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.

வாச்சாத்தி ஆர்ப்பாட்டம்
கும்பல் பாலியல் வன்முறையை ஏவிய போலீசு, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகளைத் தண்டிக்கக் கோரி வாச்சாத்தி பழங்குடியினப் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், இத்தகைய வழக்குகளை மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீசு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவும், இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை கடந்த ஜனவரியில் பரபரப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், இத்தகைய அறிவிப்பு வெற்றுச் சவடால் என்பதையே மேற்கூறிய புள்ளிவிவர ஆதாரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

இது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 2009 முதல் ஆகஸ்டு 2013 வரையிலான காலத்தில், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 124-ஐ மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததையும், தமது கள ஆய்வின் மூலம் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார், எவிடென்ஸ் என்ற தன்னார்வக் குழுவின் திட்ட இயக்குநரான திலகம்.

இவையனைத்தும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ளதையும், பெயரளவிலான ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும்கூடச் செயல்படுத்த வக்கற்று, தோல்வியடைந்து செல்லரித்துப்போக் கிடப்பதையும் மெப்பித்துக் காட்டுகின்றன. ஆண்-பெண் உறவில் ஜனநாயக விழுமியங்கள் மலர வேண்டுமானால், இன்றைய தந்தைவழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்துவதற்கான புதிய ஜனநாயகப் புரட்சிப் போராட்டங்களில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும். எங்கே ஜனநாயகக் கண்ணோட்டம் இருக்கிறதோ, அங்குதான் இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் நடக்கும்; அங்குதான் பெண் விடுதலையும் மலரும். இதற்கு மாறாக, போலீசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் மேலும் அதிகாரங்களைத் தரும் வகையிலான புதிய கமிசன்களும் சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் பாம்புக்குப் பால் வார்த்த கதையாகவே முடியும்.

– மனோகரன்

______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

4

1985 -இல் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக நவோதயா வித்யாலயா என்ற பெயரில் ராஜீவ் அரசாங்கம் இந்தியா முழுவதும் 600 பள்ளிகளைத் தொடங்கியது. இப்பள்ளிகள் தாய் மொழிவழிக் கல்வியை ஒழித்துக்கட்டி, இந்தி-ஆங்கிலத்தைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அதே நவோதயா வித்யாலயாவின் நவீன வடிவமான ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயரிலான 2,500 மாதிரி பள்ளிகளை அரசு-தனியார் கூட்டில் நாடு முழுவதும் தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 356 பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளன.

நவோதயா பள்ளிகள்
தாய் மொழிவழிக் கல்வியை ஒழித்துக்கட்டி, இந்தி-ஆங்கிலத்தைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்ட நவோதயா பள்ளிகள்.

இம்மாதிரிப் பள்ளிகளை அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்கனவே இயங்கும் தனியார் பள்ளிகள் போன்றவை ஆரம்பிக்கலாம். இந்த பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவில் 25 சதவீதத்தை ஆண்டுதோறும் 5 வருடங்களுக்கு மத்திய அரசும், அதன் பிறகு மாநில அரசும் அளிக்கும். இத்தொகை ஆண்டுக்கு 5 சதவீத அளவுக்கு உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளில் 40 விழுக்காடு மாணவர்கள் அரசு நுழைவுத்தேர்வு மூலமும், 60 விழுக்காடு மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தின் வழியாகவும் சேர்த்துக்கொள்ளப்படுவர். இந்த 40 விழுக்காடு மாணவர்களின் கட்டணத்தை ஆண்டு தோறும் தலைக்கு 22,000 ரூபாய் என்கிற முறையில் அரசு செலுத்திவிடும். மீதி 60% மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் – என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயத்திலும், நிர்வாகத்திலும் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்று முதலாளிகள் இழுத்தடித்ததால், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலெல்லாம் நவோதயா வித்யாலயாக்களை எதிர்ப்பேயின்றி நடத்திவரும் மத்திய அரசு, இப்புதிய மாதிரிப் பள்ளிகளையும் மாநில அரசுகள் வரவேற்றுச் செயல்படுத்த வேண்டுமென்கிறது. ஆனால், ஜெயா அரசோ இதனை எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது.

அரசு – தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள். மாநில மொழியையே தடை செய்து, இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்து, அரசுப் பள்ளிகளை ஒழித்து மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதே இப்புதியவகை பள்ளிகளின் நோக்கம்.
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்

2

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ., பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா மீது சதிக் குற்றச்சாட்டைச் சுமத்தி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு வெளிவந்த இந்தியா டுடே இதழ் (நவ.6, 2013) “பயத்தில் தத்தளிக்கும் தொழிலதிபர்கள்” எனத் தலைப்பிட்டு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டது. கே.எம்.பிர்லா, தனது பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் மதிப்பு மிக்க பங்குதாரர்களுள் ஒருவர் என்பதற்காக மட்டும் அக்கட்டுரையை இந்தியா டுடே வெளியிடவில்லை. ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அல்லது சம்பந்தப்பட்டுள்ள தரகு முதலாளிகள் – அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சுனில் மிட்டல், ரவி ரூயா, அசிம் கோஷ், சஞ்சய் சந்திரா மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய ரத்தன் டாடா, அனில் அம்பானி; நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நவீன் ஜிண்டால்; கர்நாடகாவில் நடந்த இரும்பு வயல் ஒதுக்கீடில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சஜ்ஜன் ஜிண்டால்; கே.ஜி. இயற்கை எரிவாயு வயல் முறைகேடு விசாரணையை எதிர்கொள்ளும் முகேஷ் அம்பானி – அனைவருக்கும் அக்கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தது, இந்தியா டுடே.

குமாரமங்கலம் பிர்லா
நிலக்கரி வயல் ஊழலில் சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா.

“யார் மீது கை வைத்திருக்கிறா தெரியுமா?” எனச் சவால்விட்டுப் பேசும் தொனியில் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), மத்திய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மத்திய ஊழல் கண்காணிப்பு கமிசன் (சி.வி.சி.) ஆகிய மூன்று அமைப்புகளையும் மூன்று பூதங்களாகச் சித்தரித்தது. “தீவிரக் கண்காணிப்பு ராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது; இதனால் தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்குகிறார்கள்; கடந்த 18 மாதங்களில் இந்தியா 1,00,000 கோடி ரூபாய் முதலீட்டை இழந்திருக்கிறது; அனைத்திற்கும் மேலாக, கொள்கை மாற்றம் வந்து விடுமோ எனத் தொழிலதிபர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்றவாறெல்லாம் அக்கட்டுரை உடுக்கை அடித்திருந்தது.

“வழக்கைச் சட்டப்படிச் சந்தித்து குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என ஊழலில் சிக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் எடுத்து விடும் வசனத்தைச் சொல்லுவதற்குக் கூட கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தயாராக இல்லை. அவர்களைப் பொருத்த வரை குற்றஞ்சாட்டப்பட்ட பிர்லா நேர்மையான பிசினஸ்மேன். அவருக்கு மட்டுமல்ல, இன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கு, நெருக்கடிக்கு அரசின் கொள்கை தடுமாற்றம்தான் காரணம் என்பது அவர்களின் வாதம். மாட்டிக் கொண்டவுடன் கூட்டாளியின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தைத் தவிர, வேறு புதுமை எதுவும் இந்த வாதத்தில் இல்லை.

கார்ப்பரேட் முதலாளிகளைப் புனிதர்களாக, செய்யாத குற்றத்திற்குச் சிலுவையில் அறையப்பட்டவர்களாகச் சித்திரிக்கும் இந்த வாதத்தை முதலாளித்துவ அறிஞர்களுள் ஒரு சாரர் ஏற்றுக் கொள்வதில்லை. “கார்ப்பரேட் முதலாளிகள், ஆளுங்கட்சியினர், அதிகார வர்க்கம் ஆகியோர் கூட்டுக் களவாணிகளாக இணைந்து கொண்டு பல முறைகேடுகள் நடத்துவதை” அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தனியார்மயத்திற்கு முன்பாக லைசென்சு-பெர்மிட் ராஜ்ஜியம் நிலவிய காலத்தில் இவை போன்ற முறைகேடுகள் நடப்பது சகஜமானது. ஆனால், அதனை ஒழிக்கும் மாமருந்தாக முன்னிறுத்தப்பட்ட தனியார்மயத்தில் இந்த முறைகேடுகள் தொடர்வது தம்மைக் கலங்க வைப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.

“தனியார்மயக் கொள்கையில் குறை காணமுடியாது. ஆனால், முதலாளிகளுக்குள்ளேயே இரண்டு வகையான பேர்வழிகள் உள்ளனர். ஒரு சாரர் அரசியல்வாதிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இன்னொரு சாரர் நேர்மையானவர்கள்; அவர்கள் போட்டியை விரும்புகிறார்கள். நாம் இரண்டாவது வகை முதலாளிகளை ஊக்குவிக்க வேண்டும்; அதற்கேற்ப தொழிற்கொள்கையை வகுக்க வேண்டும். ஐக்கிய முன்னணி ஆட்சியில் இதில் குளறுபடி இருக்கிறது” என வாதிடுகிறார்கள் இவர்கள்.

விரைவுச் சாலைகள்
விரைவுச் சாலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அங்கு நடைபெறும் வரிக் கொள்ளைக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புல்லரிக்க வைக்கும் வாதத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பின்வருமாறு கூறுகிறார்: “இந்தியாவில் சமீபத்தில் கோடீசுவரர்களான பலர் நிலம், கனிம வளங்கள் போன்றவற்றை முறைகேடான வழிகளில் சுருட்டிக் கொண்டதன் வழியாகத்தான் செல்வத்தைத் திரட்டியுள்ளனர். அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான கூட்டு தொடர்வதை நாம் அனுமதித்தால், வியாபாரப் போட்டி இல்லாமல் போகும். இது நமது ஜனநாயகத்திற்கும் கேடாக முடியும். எனவே, போட்டி, வெளிப்படைத்தன்மை, அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதிலும், நிலங்களைக் கையகப்படுத்துவதிலும் இன்னும் கூடுதலான திறந்த கொள்கை ஆகியவற்றில் நாம் கவனம் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.”

ஊழலே செய்யாத, தமது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அரசோடு கள்ளக் கூட்டு வைத்திராத, போட்டி போட்டு முன்னேறக் கூடிய முதலாளித்துவம் இருக்கிறது; இருக்கவும் முடியும் என்ற இந்த வாதம் நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களுக்கானது எனக் கூறப்படும் மோசடிக்கு நிகரானது. லைசென்சு-பெர்மிட் ராஜ்ஜியமாக இருந்தாலும் சரி அல்லது தனியார்மயப் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, அரசு-ஆளுங்கட்சியைச் சாராமல், அதனின் துணை, பாதுகாப்பு இல்லாமல் முதலாளித்துவம் ஜீவித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், தனியார்மயக் காலத்தில்தான் அரசோடு கூட்டு வைத்துக் கொண்டு முதலாளிகள் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் அடித்துவரும் கொள்ளை பல்லாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் ஆளுங்கட்சியோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு முறைகேடான வழிகளில் இலாபம் அடைவது, இயற்கை வளங்களைச் சுருட்டிக் கொள்வதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் எந்த மாநிலத்தில் தொழிலைத் தொடங்க முன்வருகிறார்களோ, அம்மாநில அரசு அவர்களுக்குக் குறைந்த விலையில் நிலம், மலிவாக மின்சாரம், தண்ணீர், வரி விலக்கு, வரி விடுப்பு, குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. இந்தச் சலுகைகளை யாரும் சட்ட விரோதமானது எனக் கூறிவிடக் கூடாதென்பதற்காகவே சட்டங்கள் திருத்தப்பட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

தனியார் ஊழல்
தனியாரின் ஊழல் மற்றும் இலாபத்திற்கு இடமளிக்கும் வகையில்தான் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தீட்டப்படுகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என மைய அரசு அறிவிக்கவில்லையா என்ன? 2ஜி அலைக்கற்றைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதை ஊழலெனக் குற்றஞ்சுமத்தும் நியாயவான்களுள் ஒருவர் கூட, அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் நிலம் போன்ற இயற்கை வளங்களும், சாலைகள், விமான நிலையங்கள் போன்ற அடிக்கட்டுமான வசதிகளும் சட்டபூர்வமான முறையில் தனியாரின் கொள்ளைக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிப்பது இவையனைத்துமே அரசுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தனியார் முதலாளிகள் சுருட்டிக் கொள்வதற்கான ஏற்பாடுகளாகும். “லிப்டிங் மற்றும் லோடிங் காண்டிராக்ட்” என்ற முறையின் மூலம் தமிழ்நாட்டில் மணல் வியாபாரம் தனியார் மயமாக்கப்பட்டிருப்பது இந்தக் கொள்ளைக்குச் சிறந்த உதாரணம். ஆனால், இந்தக் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால் ஊழல் என்று நீதிமன்றங்கள் கூட முத்திரை குத்துவதில்லை. போட்டி முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் ரகுராம் ராஜன் போன்றவர்கள் கூட அரசிடமிருந்து இப்படிபட்ட ‘சட்டபூர்வ’ சலுகைகளைப் பெறத் தேவையில்லை என வாதாடுவதில்லை.

பெரு முதலாளிகள் அரசோடு கூட்டு வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, அலைக்கற்றை விற்பனை, மணற்கொள்ளை போன்ற பெரிய பெரிய திட்டங்களில் மட்டும்தானா நடந்து வருகிறது? தெருக்களில் சாக்கடை கட்டுவது தொடங்கி நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதம் வாங்குவது வரை அரசின் அனைத்துத் திட்டங்களும், உள்ளூர்க் கட்சிக்காரன், ஒப்பந்ததாரர் முதல் பெரும் முதலாளிகள் உள்ளிட்ட பலரின் இலாபத்தைக் கணக்கிட்டுத்தான் தீட்டப்படுகின்றன. இவையன்றி, முதலாளிகளின் கஜானாவை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தயாரிக்கப்படும் திட்டங்களும் உள்ளன.

கடந்த தீபாவளி சமயத்தில் நுகர்பொருள் கடன் வழங்குவதற்காகப் பொதுத்துறை வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அரசின் கஜானாவிலிருந்து எடுத்துக் கொடுத்தார், ப.சி. இது அரசுப் பணத்தை நுகர்பொருட்களைத் தயாரிக்கும் கார்ப்பரேட் வர்க்கத்திடம் நடுத்தர வர்க்கம் வழியாக கொண்டு சேர்க்கும் தந்திரம் அன்றி வேறில்லை. கல்விக் கடன் திட்டத்தின் மூலம் கொழுத்தது யார்? கடனாளியாகி அவமானப்படுவது யார்? பூவிற்குள் நாகம் ஒளிந்திருப்பதைப் போல, அரசுப் பணத்தைத் தனியார் கல்வி முதலாளிகளின் கஜானாவில் கொட்டுவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்திற்குப் பெயர் கல்வி உரிமைச் சட்டம்.

கல்விக் கடன்
கல்விக் கடனைக் கட்டத் தவறிய மாணவர்களின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனரில் போட்டு அவமானப்படுத்த தயங்காத வங்கி நிர்வாகம், வாராக் கடன்களை வைத்திருக்கும் முதலாளிகளை இப்படி அசிங்கப்படுத்தத் துணியுமா ?

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் இலவச வீட்டுத் திட்டம் போன்றவை இரும்பு, சிமெண்ட் முதலாளிகளின் நலனை மறைத்துக் கொண்டுள்ளன. இத்திட்டங்களை ஒரு கறி விருந்தோடு ஒப்பிட்டால், சதைப் பகுதி முதலாளிகளுக்கு எலும்புத் துண்டு மக்களுக்கு என்பதுதான் விகிதாச்சார சூத்திரம். ஏழை நோயாளிகளின் உயிர் காக்கும் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஸ்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சம்பாதித்த தொகை ஏறத்தாழ 600 கோடி ரூபாய்க்கும் அதிகம். இலவச மிதிவண்டித் திட்டம், இலவச மடிக் கணினி, இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம் என மக்கள் நலனை முன்னிறுத்தி போடப்படுவதாகக் கூறப்படும் திட்டங்களும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைத்தான் அடிநாதமாகக் கொண்டுள்ளன.

சாலை போடுவது, நடைபாதை கட்டுவது, அதில் கற்களைப் பதிப்பது, மாற்றுவது என எந்தவொரு ‘பொது’த்திட்டத்தின் பின்னும் ஏதோவொரு கும்பலின் நலன்கள் இருப்பதைத் தோண்டிப் பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். இப்படி அரசின் கஜானாவைச் சுருட்டிக் கொள்ளும் திட்டங்களைத் தயாரித்து முன் வைக்கும் வேலையைத்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதிகாரவர்க்கமும் கூட்டாகச் செய்து வருகின்றன. அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்றவற்றில் அரசின் கஜானாவுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தை கார்ப்பரேட் கும்பல் முறைகேடாக எடுத்துக் கொண்டதென்றால், இவை போன்ற பொதுத் திட்டங்களில், அரசின் பணம் சட்டபூர்வமான வழிகளில் கார்ப்பரேட் கும்பலின் கரங்களுக்கு, காண்டிராக்டர்களின் கரங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது.

ஊழலற்ற, போட்டியை விரும்பும் முதலாளித்துவம், அரசைச் சாராமல் சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவம் என்பதெல்லாம் இருக்க முடியாது என்பதைத்தான் இந்த உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரசும் கார்ப்பரேட் கும்பலும் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆயிரக்கணக்கான வழிகளில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் நிர்வாகிகள், அவர்களின் வழக்குரைஞர்கள் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, இந்தக் கும்பல்தான் வல்லுநர்கள் குழு என்ற போர்வையில் அரசின் கொள்கைகளை, திட்டங்களைத் தீர்மானிப்பவையாக மாறி விட்டன.

இந்த உறவு அடிப்படையிலேயே மக்கள் விரோதமானது. ஆனால், அரசும் தனியாரும் இணைந்து பணியாற்றுவதன் மூலம்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்ற வாதத்தின் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். தனியார்மயமே ஊழலுக்கு அடிப்படையானது என்பது மறைக்கப்பட்டு, ஊழல் என்பது திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் இடறல் என்பதாக, ஒரு சிலரின் பேராசையாகக் காட்டப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் இப்பேராசை பிடித்த கும்பலைத் தண்டித்து விட முடியும் என்ற நாடகம் நடத்தப்படுகிறது.

– செல்வம்
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தயார் , சாவதற்கு யார் தயார் ?

7

‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானமும், ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ஜெயா பேசிய வசனமும் கூழை கும்பிடு போடும் ஓபீஎஸ்-ன் மடங்காசனமும் அதை ரசிக்கும் செயாவின் முகமும் அனைத்து ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக மின்னியதை நாம் அறிவோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்த வருங்கால பிரதமரை வரவேற்று போயஸ் கார்டன் முதல் வானகரம் வரையிலான வழி நெடுக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதுவும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் 5 அடிக்கு ஒன்று என ஆயிரக்கணக்கான கட் அவுட்டுக்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும் போது இது யார் அப்பன் வீட்டுப்பணம் ? என்ற கேள்விதான் வர வேண்டும்.

செயா வருகிறார் என்றாலே அவர் வருகின்ற சாலை முழுக்க முழுக்க பேனர்கள் நிரம்பி வழிகின்றன. சாதாரண பொது மக்கள் சாலை ஓரத்தில் செல்ல முடியாதபடி வழியை அடைக்கின்றன. பார்வையற்றவர்கள் பலர் அந்தத் தடுப்புக்களில் அடிபட்டு விழுவதை ஊடகங்கள் கூறிய போதும் கட் அவுட்டுக்கள் தொடர்கின்றன. எவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? பிரதமராக அம்மா முடிவு செய்து விட்டார் அவ்வளவுதான்.

வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் பேனர்களுக்கும் காட்சி விளக்கங்களுக்கும் பின்னால் இருக்கும் கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. எத்தனை கோடிகள் இந்த வரவேற்பு விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிட முடியாது. நெடுஞ்சாலையில் அய்ந்து அடிக்கு ஒரு பேனர் என்றால் கோயம்பேடு பாலத்தில் அடிக்கொரு பேனர்கள். மினி பஸ் செல்வதை போல, கணிணி கொடுப்பது போல, அம்மா உணவகம் என மீதமிருந்த இடங்களில் காட்சி விளக்கங்கள். தில்லைக்கோயிலில் தீட்சிதர்களுக்கு தமிழக அரசு மாமா வேலை பார்ப்பதை சித்தரிக்கும் காட்சி விளக்கமும் போலீசு ஸ்டேசன் பாலியல் வன்புணர்வு காட்சிகளும் இந்த கொலுவில் இடம்பெற்றிருந்தால் அம்மா மகிமை முழுமை பெற்றிருக்கும்.

இவ்வாறு நெடுஞ்சாலை முழுவதும் கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்து அலங்கார மின்விளக்குகள் எரிவதை பார்க்கும் போது நம் வயிறு எரிகிறது. வீட்டில் மின்சாரம் இல்லாமல் நாம் புழுங்கிக் கொண்டிருக்க “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்” என்று செயாவை வரவேற்று எம்ஜியார் பாடிக் கொண்டு இருக்கிறார்.

செயாவின் மனதில் இடம் பிடிக்க அவரின் கடைக்கோடி பார்வையைப் பெற்று, தான் தொடர்ந்து மக்களை கொள்ளையடிக்க ஆசியைத் தேடும் நபர்கள்தான் இந்த விளம்பரங்களையும் பேனர்களையும் வைக்கிறார்கள். ஒவ்வொரு பேனருக்குப் பின்னாலும் மக்களின் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு கவுன்சிலரும் எம்.எல்.ஏவும் 100 முதல் 150 பேனர்களையும் பல காட்சி விளக்கங்களையும் பல லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கிறார்கள் என்றால் அது யாருடைய பணம்? ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்றும் போலீசு நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தும் ஊரில் உள்ள நிறுவனங்களை எல்லாம் மிரட்டி பணம் பிடுங்கியும் அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியும்தான் இன்று வரவேற்பு விளம்பரங்களாக மின்னுகின்றன. எவன் அப்பன் வீட்டு காசில் யார் வாழ்வது ? அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் மதுரவாயல் பகுதி.

அதிமுக பொதுக்குழு கூடிய வானகரத்திற்கு மிக அருகில் உள்ள இப்பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் வைத்த பேனர்களுக்கு பின்னால் மக்களின் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. இப்பகுதியில் எந்த நிலமும் சும்மா இருந்தால் உடனே போலிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு கவுன்சிலர்களின் நிலங்களாகவே மாறிவிடும். இதை எதிர்த்து கேள்வி கேட்டாலே பொய் வழக்கு போட போலீசு தயாராக இருக்கின்றது. எதிர்த்து கேள்விதான் கேட்க வேண்டும் என்று இல்லை, ஆளுங்கட்சியின் உள்ளடி சண்டைகளுக்கும் போலீசுதான் எதிரணியினர் மீது வழக்குகளைப் போட்டு கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்களை பாதுகாக்கிறது.

செயலலிதாவை வரவேற்பதற்கென்று கூறிக்கொண்டு பள்ளி மாணவிகளை பல மணி நேரம் வெயிலில் நிற்கவைத்ததும் அருகில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியை மிரட்டி அதை இரண்டு மணிக்கே இழுத்து மூட வைத்து அந்தத்தொழிலாளிகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் தெருவில் நிற்க வைத்ததும் இந்த அடிப்பொடிகளின் சாதனைகள்.

விளையாட்டு மைதானம் அமைக்க துப்பில்லாத அவர்கள் இளைஞர்கள் எங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறார்களோ அதை இரவோடு இரவாக வீட்டு மனைகளாக மாற்றுகிறார்கள். இப்பகுதியில் பொதுக் கழிவறைகளோ விளையாட்டு திடல்களோ இல்லாத நிலையில் கவுன்சிலர்களும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் எந்த நிலத்தையும் விட்டு வைப்பதில்லை.

‘பள்ளி மாணவர்கள் சங்கமாக சேரக் கூடாது’ என்று சீருடை அணியாத போலீசார் காவல் காத்து வருகின்றனர், பள்ளிகளின் முன்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு அரசியல் எதுக்கு என்று யோக்கிய சிகாமணிகள் பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தில் ஊளையிடுகின்றன. ஆனால் செயாவை வரவேற்க மாணவர்கள் கால் கடுக்க வெயிலில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். யாரும் உரிமைக்காக போராடக் கூடாது? அடிமைகளாக வேண்டுமானால் வரலாம் அதற்கான கடமை மட்டுமே உண்டு.

எவன் கக்கூசு போனால் எனக்கென்ன? தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் என்ன? சாலை இல்லை என்றால் என்ன? நான் பொறுக்கித் தின்ன வேண்டும் என்ற தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களின் கையில் சிக்கி சீரழிந்த பகுதிகளில் இருந்து மதுரவாயல் மட்டும் வேறுபட்டதா என்ன? அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு சுவரொட்டி ஒட்ட முடிகிறதா? இல்லை மக்களின் கோரிக்கைகளை வலியுயுறுத்தி ஒரு போராட்டத்திற்கு அனுமதி வாங்க முடிகிறதா? புரட்சிகர – சனநாயக அமைப்புக்கள் வேலை செய்யக் கூடாது என்று சுவரொட்டியைக் கூட மோப்பம் பிடிக்கும் அதே போலீசுதான் இந்த பேனர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டு இருக்கிறது. ஊரில் மக்களுக்கு கழிவறை கட்டித் தர வக்கில்லை, இதில் பெருமையாக பேனர் வேறு! சுதந்திரம் வாங்கியதாகக் கூறுகிறார்கள்,  எதற்கு? தடையின்றி கொள்ளையடிக்கவும் கேள்வி கேட்டால் போட்டுத் தள்ளவும் தானே? இதற்கு பெயர் பயங்கரவாதம் இல்லையா?

ஒவ்வொரு கவுன்சிலரும் 100-க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்திருந்தார்கள். எதற்கு? நான்தான் அதிகம் கொள்ளை அடித்தேன் என்பதைக் காட்டுவதற்காக. தமிழகத்தை மொட்டையடித்தது போதாது என்று டெல்லி கிளம்பி இருக்கும் ஆத்தாளிடம் சர்டிபிகேட் வாங்க வேண்டாமா என்ன? நீதி நேர்மை நியாயம் என்பதை ஒரு பெயருக்காகவாவது சொல்ல வேண்டும் என்பதெல்லாம் மாறிப் போய் நான் தான் கொள்ளையடித்தேன், அப்படித்தான் கொள்ளையடிப்பேன் என்று சவால் விடுகிறார்கள் இந்தக் கொள்ளைக்காரர்கள். அதன் தலைவியோ மவுனமாக ரசிக்கிறார். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

அம்மா பிரதமர் ஆவதற்கு முன்னரே இப்படி என்றால் பிரதமராகி விட்டால் உலகத்தில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமும் செயாவை வரவேற்பதற்கு போதாமல் கூட போகலாம். இப்போதே காலை முதல் மாலை வரை டிராபிக் ஜாம் என்றால் பிரதமராகிவிட்டால் அவர் வரும் வழியெல்லாம் சுடுகாடாக்கவும் தயங்க மாட்டார்கள் இந்தக் கொள்ளைக்காரர்கள்.

டிஜிட்டல் பேனர்களை வைக்கும் அடிப்பொடிகளே இப்படி என்றால் பிரதமாராகும் ‘மம்மீ’ செயா எத்தனை பேர்களின் வாழ்க்கையை அழித்து இருப்பார்? இப்படி செயா பிரதமராக தகுதியானவர்தான் என்பதையும் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் அடிப்பொடிகள் தாங்கள்தான் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் தெளிவாக செருப்பால் அடித்தது போல கூறி விட்டார்கள். உண்மைதான், அம்மாவுக்கும் அவரது அடிமைகளுக்கும் தகுதி இருக்கலாம். தன்மானமுள்ள, சுயமரியாதையுள்ள நமக்கு அந்த வரிசையில் சேரத் தகுதி இல்லை என்பதை அந்த எருமைத்தோலில் உரைக்கும்படி கூற வேண்டியதுதான் தற்போதைய அவசியம். சென்னை டூ செங்கோட்டைக்கு ரயில் கிளம்பி விட்டது, டிராகுலா செயாவோ எஞ்சின் டிரைவராக ஆசைப்படுகிறார், அடிப்பொடிகள் நம் மீது தண்டவாளத்தை போட வருகிறார்கள் நமக்கு என்ன வழி இருக்கிறது. தண்டவாளத்தை தகர்ப்பதைத் தவிர.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

சென்னை கல்லூரி மாணவர் மோதல் – புமாஇமு அறைகூவல் !

12

அன்பார்ந்த மாணவர்களே,

‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது. கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.

கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான் மாணவர்களை ரவுடிகள், பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கி வருகின்றன.

கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும், இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே. இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள், பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப் போல் அடித்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்? எனவே இதை உடனே கைவிடுவோம். நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.

சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூகச் சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ் நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை, கழிவறை வசதியும் இல்லை, கேண்டீனும் இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித் திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை. மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும் நீதிமன்றத் தடை. இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளி விட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடகங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும், அதற்கேற்ற புதிய, புதிய ஜீன்ஸ், டி –சர்ட், ஷூ போட்டுக் கொண்டு, அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை ‘வளைத்துப் போட’ பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும் (கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித் திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது, அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப் பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக ஏற்றுக் கொண்டு வலம் வர கற்றுத் தருகின்றன.

போலீஸ் தாக்குதல்
சுற்றி வளைத்து தாக்கும் போலீசையும், நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் நம்மை நெருங்க விடாமல் அடித்து விரட்டுவோம்.

மேலும், புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டி வருகின்றன. அதோடு, நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிரக் கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக், கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்குக் கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச் செய்கிறது.

ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான், “யாருடைய கல்லூரி பெரியது”, “யாருடைய ரூட் பெரியது”, மாப் காட்டுவது, வெயிட் காட்டுவது, கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த மாநிலக் கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்

மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள், பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது; இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்க்குணத்தை இந்த அரசும், போலீசும், அரசியல்வாதிகளும், சினிமா-பத்திரிக்கை–தொலைக்காட்சி ஊடகங்களும் வளர விடுமா ? விடாது.

புமாஇமு
நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

நம்முடைய போர்க்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றி வளைத்து தாக்கும் போலீசையும், நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் நம்மை நெருங்க விடாமல் அடித்து விரட்டுவோம்.

இதற்கு

  • மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம்.
  • ரூட் என்று, கல்லூரி என்று, ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம்.
  • “நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை. இந்த அரசும் – ஓட்டுப் பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான்” என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.
  • இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.
  • இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம்.
  • மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம்.
  • நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

அனைத்துக் கல்லூரி மாணவர்களே!

  • கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!
  • மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!
  • போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
  • மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும், கல்வியை வணிகமயமாக்கும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

அம்மா பஜனையில் அமைச்சர்களை விஞ்சும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆசாமிகள்

15

ந்தியா மேதகு பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியின் கீழ் இருந்த போது அவ்வப்போது இந்திய சமஸ்தான மகாராஜாக்களின் மாநாடு நடக்கும். அந்த தர்பாருக்கு தமது மகாராஜா தொப்பி, பளபளக்கும் உடைகள் அணிந்து, பாதாதி கேசம் வரை நகைகள் அணிந்து, முன் பக்கம் மேல் வளைந்த செருப்பு அணிந்து போய் பேரரசரின் பிரதிநிதிக்கு மரியாதை செலுத்துவார்கள் சமஸ்தான மகாராஜாக்கள்.

மேதகு பேரரசரின் இந்திய பிரதிநிதி வைஸ்ராயிடம் மண்டியிட்டோ, தண்டனிட்டோ, போற்றி பாடியோ தமது கீழ்ப்படிதலை தெரிவித்துக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த மாநாடு வரை தத்தமது சமஸ்தானங்களில், தத்தமது அரண்மனை வாழ்வில் திளைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். நிர்வாகத்தையும், ஆட்சியையும், மக்களை சுரண்டுவதையும் பிரிட்டிஷ் பிரதிநிதி கவனித்துக் கொள்வார்.

ஜெயலலிதாஅது போல, ‘புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில்’ தமிழ்நாட்டின் மாவட்டங்களையும், நகரங்களையும் ஆளும் ஆட்சித் தலைவர்களையும், போலீஸ் அதிகாரிகளையும் ஆண்டுக்கொருமுறை ஒரே இடத்தில் கூட்டி தன் மீதான அவர்களது விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் “தாயினும் சாலச் சிறந்த அம்மா”.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு மூன்று நாட்கள் நடந்திருக்கின்றது. அந்த மாநாட்டின் இறுதியில் 322 அறிவிப்புகளை தனது திருவாயால் அருளியிருக்கிறார் அம்மா. அறிவிப்புகளின் கூட்டுத்தொகை ஏழு வருகிறது. முன்பெல்லாம் ஒன்பதாக வரும். தற்போது நியூமரலாஜி மாறிவிட்டதோ என்னமோ?

தி.மு.க ஆட்சி மாநாட்டில் உள்ளது போல அமைச்சர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல் அம்மா சிங்கிளாகவே அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டு முடித்து, அ.தி.மு.கவில் தன்னைத் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாமே சைபர்கள்தான் என்ற உலகறிந்த உண்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பேசாத அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தர்கள, அயர்ந்து தூங்கினார்களா என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகாரிகள் அம்மா என்று ஒவ்வொரு முறையும் கூப்பிடும் போது கைதட்டும் வேலையை இவர்களை விட யார் கச்சிதமாக செய்ய முடியும்?

அதிகார வர்க்க குறுநில மன்னர்கள் கீழ்ப்படிதலை காட்டுவதோடு தமது கோரிக்கைகளை முன் வைக்கவும், அவற்றை பரிசீலித்து அருள் பாலிக்கவும் அனுமதித்திருக்கிறார் அம்மா. உதாரணமாக, நீலகிரி எஸ்.பியான செந்தில் குமார், “நீலகிரியில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு நீல நிற கோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக நீல நிற கம்பளி உடை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையை அம்மாவின் திருச்செவிக்குள் போட, அம்மா உடனடியாக, “உடனே வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல… மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை” என்று அருள்பாலித்தார். பக்த கோடிகளின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

குளிருக்கு கம்பளி வேண்டும் என்று கேட்பதும், அதை தானம் செய்வதுமான அரசு நடைமுறைகள் இந்த பூவுலகில் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை. நீலகிரி போலீஸ்காரர்களுக்கு அம்மாவின் ராசியான நிறமாக பச்சை நிறத்தில் கம்பளி உடைகள் வழங்க வாய்ப்பில்லை என்ற குறை இருந்தாலும், மாநாட்டில் கலந்து கொண்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தனியாக கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகள் பச்சை நிறத்தில் இருந்தது. அடையாள அட்டை நிறத்தில் கூட அதிகார வர்க்கம் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறது. என்னா ஒரு அம்மா எஃபக்ட்டு!

விழுப்புரம், சேலம், நாமக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை கலெக்டர்களும், சேலம், கன்னியாகுமரி எஸ்.பிக்களும் முதல்வரை அம்மா என்றுதான் அழைத்திருக்கிறார்கள். அம்மாவின் தாயுள்ளம், அ.தி.மு.க தொண்டர்களையும், தண்டனிடும் அமைச்சர்களையும் தாண்டி அதிகாரிகளையும் ஆட்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக விளங்கியது.

நாம் மேலே கடன் வாங்கியிருக்கும், “தாயினும் சாலச் சிறந்த அம்மா” என்று தமிழ் மொழியை வளப்படுத்தும் வாக்கிற்கு சொந்தக்காரர் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரன்.

சேலம் கலெக்டர் மகரபூஷணம் “அம்மாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்” என்று தனது ஐ.ஏ.எஸ் ஆளுமையை அம்மாவின் காலில் சமர்ப்பித்திருக்கிறார்.

கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற அம்மா செயல்பட்டு வருகிறார்” என்று அன்னலட்சுமி தாயான அம்மாவின் தர்ம குணத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

விழுப்புரம் கலெக்டர் தனது ஐஏஎஸ் பயிற்சியையும், நவீன தொழில்நுட்பத்தையும் திறமையாக இணைத்து, அம்மா பல ஆண்டுகளாக கஜானாவில் சேர்த்து வைத்த பணத்தில் வாரி வழங்கிய சீருடைகள், ஸ்கூல் பேக், புத்தகங்கள், ஜாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், சத்துணவு, இலவச பஸ் பாஸ் இவற்றை எல்லாம் பெற்ற பள்ளி மாணவர்கள் உருகி பேசும் காட்சிகள் இடம் பெற்ற, குறும்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.

“அம்மா.. உங்களால், எங்க வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர்,  ஃபேன், கறவை மாடுகள் எல்லாம் கிடைச்சுது. செலவே இல்லாமல் எங்களுக்கு கல்வியைக் கொடுத்திருக்கீங்க. நீங்கள் எப்ப பிரதமர் ஆகப் போறீங்கன்னு ஆவலாகக் காத்திருக்கிறோம்”. அம்மாவின் எதிர்கால கனவுக்கு அச்சாரம் சொன்ன வசனத்துக்கு கூடியிருந்து ஐபிஎஸ்களும், ஐஏஎஸ்களும் தட்டிய கைத்தட்டல் அடங்கவேயில்லையாம். அம்மாவின் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ஒளிர்ந்ததாம். பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கு குறித்து இதே முகம் எப்படி எதிர்கொள்ளும் என்ற குறுகுறுப்பு ஒரு நல்ல கற்பனை.

ஈரோடு கலெக்டர், தனது பரந்து விரிந்த உலக அறிவைக் கொண்டு ஆய்வு செய்து ஒரு முடிவை அறிவித்தார். “உலகத்துக்கே இந்தியா முன்னிலை வகிக்கப் போகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், பாரத தேசத்துக்கே முன்னிலை வகிக்கும் சாத்தியக் கூறுகள் தமிழகத்தில் தெரிகின்றன” என்று அம்மாவின் செங்கோல் ஆட்சியின் கீழ் தமிழகம் அடைந்துள்ள உன்னத நிலையை விளக்கியிருக்கிறார். “நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன” என்று சண்முகம் சொன்ன போது குறுக்கிட முதல்வர் அம்மா அவர்கள், “கால்கள் இருந்தால்தான் ஒருவர் நடமாட முடியும்” என்ற அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டு, சண்முகம் போன்ற ஆய்வாளர்களுக்கே தான் முன்னோடி என்பதை நிறுவினார். தொடர்ந்து, “அதனால், நடமாடும் என்று சொல்லக் கூடாது. நகரும் மருத்துவமனை என்று குறிப்பிடுங்கள்” என்று திருத்தினார். முச்சங்கம் கண்ட தமிழில் அம்மாவுக்கு இருக்கும் ஆழமான புலமையைக் கண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் வர்க்கங்கள் திகைத்துப் போயின.

சேலம் எஸ்.பியான சக்திவேல் அம்மாவின் ஆட்சியில் இடைத்தேர்தல்களில் கூட அம்மா வன்முறையை ஒழித்துக் கட்டி விட்டது குறித்து தனது வியப்பை வெளியிட்டார். “தி.மு.க. நிர்வாகி மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் கூட ஏற்காடு தேர்தலில் எந்த வன்முறையும் ஏற்படாத வகையில் அம்மாவின் ஆட்சி சட்டம் ஒழுங்கை கடைப்பிடித்தது” என்ற அவதானிப்பை பதிவு செய்த அவர், தேர்தலில் “அம்மா மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவுக்கே சாதனையை நிகழ்த்திக் காட்டினார்” என்று  தேர்தல் நடத்துபவரும் தானே, சட்ட ஒழுங்கை பராமரிப்பவரும் தானே, தேர்தலில் போட்டியிடுபவரும் தானே, வெற்றி பெற்றதும் தானே என்ற அம்மாவின் சர்வவியாபகத் திறனை உணர்ந்த உண்மையான பக்தனாக மிளிர்ந்தார்.

டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக, “எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் அகற்றச் சொல்லி விட்டேன். அதையும் மீறி அகற்றாமல் இருக்கும் பேனர்களை நீங்கள் எந்த தயவு தாட்சணியமும் பார்க்காமல் அகற்றலாம்” என்று  அந்த விஷயத்தில் அ.தி.மு.கவினரிடம் போலீஸ்காரர்கள் கறாராக நடந்து கொள்ளலாம்; ‘போலீஸ் என்றால் அவ்வப்போது விறைப்பு காட்டினால்தானே மதிப்பு, ஒரேயடியாக குழைந்து கொண்டே இருந்தால் காவல் துறையின் தன்னம்பிக்கை என்ன ஆகும்’ என்பதை உணர்ந்து கருணை பாலித்தார் அம்மா. ஆனால் விழா முடிந்த பிறகுதான் பேனர்களை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ள படியால் அவர் தொண்டர் அடிமைகளையும் கைவிடவில்லை, அதிகார அடிமைகளையும் கைவிடவில்லை என்பதை புரிந்து கொள்க.

திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன், “நான் உங்களோடு நிற்பேன்” என்று உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னரும், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனேயே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படையை இடிந்தகரைக்கு திருப்பி விட்டு மக்களைத் தாக்கிய அம்மாவினை டைனமிசத்தை உணர்ந்து, அவருக்கு டைனமிக் லீடர் என்று நாமம் சூட்டி மகிழ்ந்தார்.

கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கும், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ் யாதவும் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமான இந்துத்துவ நிகழ்வுகளைப் பற்றிய சாதனைகளை குறிப்பிட்டார்கள். திருச்சியில் மோடி வருகைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது, கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திக் கொடுத்தது என்று தொடரும் அம்மா அரசின் சாதனைகளை விளக்கினர்.

அம்மாவுக்கு பழைய லாட்டரி வியாபாரி மார்ட்டின் பற்றி நினைவு வந்து விட, கோவையில் சட்ட விரோத லாட்டரி வியாபாரம் நடக்கவில்லை என்று உறுதி செய்து அம்மாவை மகிழ்வித்தார் அர்ச்சனா.

“சி.பி.சி.ஐ.டி.யின் நரேந்திரபால் சிங், சைபர் கிரைம் அதிகரித்துக்கொண்டே போவதால் அது தொடர்பான விசாரணைக்கு சாஃப்ட்வேர், ஹார்ட்வேர்கள் எல்லாம் தேவைப்படுகின்றன. அதற்கு அரசு உதவ வேண்டும்” என்று அம்மாவிடம் கோரிக்கையை முன் வைத்தார். அம்மாவுக்கு கோப்புகளில் எழுதி அனுப்பி இத்தகைய கோரிக்கைகளை கேட்பதை விட நேரில் கேட்பதற்கு பவர் அதிகம் என்பதை, புட்டபர்த்தி சாயிபாபாவை படத்தை வைத்து வழிபடுவதை விட நேரில் சந்தித்து பாதம் பணிவது அதிக பலனளிப்பது என்பதுடன் ஒப்பிட்டுப்பார்த்து ஆன்மீக அன்பர்கள் மகிழலாம்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சென்னையில், கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் முந்தைய ஆண்டுகளை குறைவாக உள்ளது என்று பெருமைப்பட்டிருக்கிறார். ஆனால், ஆட்சிப் பொறுப்பு ஏற்றுவுடனேயே கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று அம்மா அறிவித்திருந்தும் இன்னமும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடப்பது ஏன்? ஒருவேளை கிரிமினர்களும் அம்மா ஆட்சியை விரும்புகிறார்களோ என்னமோ!

சட்டமன்றத்தில் மட்டுமல்ல, ஊடகங்களின் தலையங்கத்தில் மட்டுமல்ல, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார வர்க்க மாநாடுகளிலும் அம்மா பஜனைதான் என்பதை நிரூபித்த இந்த மாநாட்டிற்கு நாம் நிறையவே நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இனி இந்த படிச்ச கோமான்கள் நாட்டை திருத்துவார்கள் என்று கருத்து கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள் அல்லவா?

–    அப்துல்

நன்றி : ஜூனியர் விகடன் 22-12-13 தேதியிட்ட இதழில் வெளியான ரிப்போர்ட்

பிரிக்காமல் அழகு பார்த்தால் பிஸ்கட் தின்ன முடியுமா – வெங்கடேசன்

13

என்னை செதுக்கிய ஆசிரியர்கள் – 15

த்தொடரில் நல்லாசிரியர்கள் பற்றி இது வரை வெளியான நண்பர்களின் பதிவுகளில் இருந்து இக்கட்டுரை சற்று மாறுபட்டதோர் கோணத்தில் அமைந்து விட்டது என நினைக்கிறேன். மாணவர்கள் பால் பரிவும், அக்கறையும் கொண்ட ஒரு நல்லாசிரியரை பற்றி பேசுவது ஒரு வகை. வினவு பாணியிலானது. ஒரு செடி தன் மீது பரிவும், அக்கறையும் கொண்டு தன்னை வளர்த்த ஒரு தோட்டக்காரரை பற்றி எழுதுவது போல. மாறாக, ஒரு செடி தனக்கு ஒளி தந்த சூரியனை போற்றி ஆதித்ய ஹிருதயம் பாடும் வைகையில் பேசுவது மற்றொரு வகை . இந்த இரண்டாவது வகையில், எனக்கு கல்விப்புல ரீதியாக வழிகாட்டிய நல்லாசான்கள் பற்றியது இப்பதிவு.

பள்ளிப் படிப்பு முழுதும் செங்கல்பட்டில் படித்தேன். முதலில் ராமகிருஷ்ணா பள்ளி. பின்பு புனித சூசையப்பர் பள்ளி. இரண்டும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி. பின்பு ஆங்கில வழியில். பள்ளிக் கூடத்தில் எனக்கு கிடைத்த பல நல்ல ஆசிரியர்கள் மனதில் நிழலாடுகின்றனர். கணித ஆசிரியர் ராகவ சிம்மன், அறிவியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன், இயற்பியல் ஆசிரியர் மகாலிங்கம், தமிழாசான் மரிய ஜோசப். கட்டுரையின் நோக்கம் எனது கல்லூரிப் பருவம் பற்றி ஆதலால், விரிக்காமல் மேலே செல்வோமாக.

பள்ளியில் பாடங்களை ஆர்வத்தோடு, உள்வாங்கிப் படித்ததாக சொல்லிக் கொள்ள முடியாது. தேர்வு சமயத்தில் மதிப்பெண்களை குறி வைத்து முக்கிய கேள்விகளை படிக்கும் பாணி படிப்புதான் பெரிதும் நடந்தது. குறிப்பாக பனிரெண்டாம் வகுப்பு. ஒவ்வொரு பாடத்தையும் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து போட்டு படித்தால் எந்த கேள்விக்கும் பதில் எழுத முடியும். இப்படி எல்லாம் தேர்வுக்கு தயார் செய்தால் மதிப்பெண்கள் அருவி மாதிரி கொட்டும். பக்கெட்டில் பிடித்துக் கொள்ளலாம். பொதுக் கருத்துக்கு மாறாக, இவ்வாறு தயாராக தனிப்பயிற்சி (tuition) எதுவும் தேவையில்லை. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சொந்தமாக கூட செய்ய முடியும்.

இவ்வாறு டெக்னிகலாக பின்னிப் பெடலெடுத்து படித்ததில், அண்ணா பல்கலை கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிணியியல் துறையில் இடம் கிடைத்தது. அங்கு கிடைத்த நண்பர்களின் பயனால், தேர்வுகளை மீறி புரிந்து படிப்பது, சிந்திப்பது போன்ற விஷயங்களும் உள்ளன என தெரிய வந்தது. இத்தகு சமயத்தில் முன்ஜென்ம புண்ணியத்தின் பலனாக என் கல்விப்புல வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இருவர் தொடர்பு ஏற்பட்டது.

கணிணியியல்முதலாமவர் எனது ஆத்ம நண்பர் வெங்கட்ராகவன். இவர் பாடங்களை உள்வாங்கி, சிந்தித்து படிக்கும் படிக்கும் பரம்பரையை சார்ந்தவர். துறை சார்ந்த கல்வி என்பதையும் கடந்து பல விஷயங்களும் அறிந்த சூரப் புலி. எங்களது பின்புல வேறுபாடுகளையும் மீறி நட்பு வளர்ந்ததில் அறிவு ரீதியாக பாடங்கள் படிக்கும் வழக்கம் பிறந்தது. அந்தப் பூவோடு சேர்ந்ததில் இந்த நாருக்கும் சற்று வாசனை கிடைத்தது. கல்லூரி பாடங்கள் தவிரவும் மற்ற பல விஷயங்களும் விவாதிப்பதுண்டு. அவரது வீட்டிலேயே தங்கி, உண்டுறங்கி, கல்லூரி செல்லும் வழக்கமும் இருந்தது. இருபது வருடங்கள் கடந்தும் மழுங்காமல் இன்றும் நட்பு தொடர்கிறது..

இந்த வேளையிலே எங்களுக்கு Computer Organization என்றொரு பாடம். சொல்லித்தந்தவர் பேராசிரியர் ஸ்ரீதர் கந்தசாமி. ஒரு கணிணியிலே முக்கிய உறுப்பு (component) CPU. இதன் அடிப்படைகூறு கேட்டுகள் (gates) எனப்படுபவை. இந்த கேட்டுகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது மின்னணுவியல் (electronics) துறையின் கீழ் சென்று விடும். அதைப்பற்றி பேசாமல் கேட்டுகளை தென்னாடுடைய ஈசன் படைத்தான் என வைத்துக் கொண்டு ஒரு எளிய வகை CPU வடிவமைப்பது பாடத்தின் நோக்கம். ஒரு விஷயத்தை முற்றுணர்ந்த ஒருவர் பாடம் நடத்தினால் எப்படி இருக்கும் என உணர்ந்த முதல் தருணம். முதல் நாள் “ஆதியில் கேட்டுகள் இருந்தன” என்று தொடங்கியவர் படிப்படியாக வளர்த்து சில மாதம் கடந்து “ஆமென்” என்று சொல்லி முடித்த போது என் கையில் ஒரு CPU இருந்தது. மதிப்பெண்கள், தேர்வுகள் பற்றி மட்டுமே அக்கறை என்பதை மாற்றி, வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு விஷயத்தை உள்வாங்கி சிந்திக்க வைத்தவர். தேர்வுக்கு தயாராவது என்பது அலட்டல் இல்லாத வேலை ஆனது. தேர்வுக்கு முன்னால் அவரது வகுப்பில் வெங்கட்ராகவன் எடுத்த குறிப்புகளை சில மணி நேரம் புரட்டி விவாதிப்பது மட்டுமே தயாராகும் வழிமுறை. முதல் தீப்பொறி கொடுத்தவர் என்ற வகையில் மறக்க முடியாத ஆசிரியர்.

கல்விப்புல ரீதியாக எனக்கு அடுத்து உதவியது ஒரு புத்தகம். ஜான் ஹாப்கிராப்ட் (John Hopcroft) மற்றும் ஜெப்ரி உல்மன் (Jeffrey Ullman) என்ற இரு புகழ் பெற்ற பேராசிரியர்கள் எழுதிய கிளாசிக் வகையிலான ஒரு நூல். கணிணியியல் துறைகளை எளிமைப்படுத்தி இரண்டு வகையில் பிரிக்கலாம். ஒன்று கணிணி வடிவைமப்பு, பல்வேறு மென்பொருள் வடிவமைப்பு என பயன்பாடு என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு உலகாயதமாக செல்வது. இவற்றை systems என அழைக்கக் கூடும். இரண்டாவது வகையில் பயன்பாடு என்பதை இரண்டாம் பட்சமாக்கி, கணிணியியலின் அடிப்படை கேள்விகளை கணித ரீதியில், ஒரு தத்துவ நோக்கில் ஆராய்வது. இதை theory என அழைப்பர். இதில் இரண்டாவது வகையான Theory of Computing என்ற துறைக்கு பால பாடம் நடத்துவது இந்த புத்தகத்தின் நோக்கம். உச்சி மோந்து நிலாச்சோறு கதை சொல்லும் புத்தகங்களுக்கு மத்தியில், உச்சி மண்டையில் ஓங்கி அடித்து ஆழமாக பேசும் வகையிலான புத்தகம். குறிப்பாக பாடங்களின் பின் கொடுக்கப்படும் கேள்விகள். சாதாரண பயிற்சி கேள்விகள் முடிந்தபின் மண்டை காய வைக்கும் பல புதிர்களும், கேள்விகளும் இருக்கும். தியரி துறை பால் எனக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கிய நூல். என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு ஆசானாகவே இந்நூலைக் கருதுகிறேன்.

ஐஐடி,  சென்னை
ஐஐடி, சென்னை

கல்லூரி படிப்பு முடிந்தபின் முதுகலை படிப்புக்காக போய்ச் சேர்ந்த இடம் சென்னை ஐஐடி. அங்கே அறிமுகமானவர் பேராசிரியர் கமலா கீர்த்திவாசன். முதல் செமஸ்டரிலேயே அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தியரி துறையில் ஆழ்ந்த புலமை பெற்று, பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியவர். பழகுவதற்கு இனிமையானவர். ஆர்ப்பாட்டம் ஏதுமற்று, பூரண அமைதி கொண்டவர். அவரது மேற்பார்வையில் ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தல், சொந்தமாக புதிய பொருள்களை ஆராய்தல் என அடுத்த கட்ட நகர்வு நிகழ்ந்தது. விவாதங்கள் செய்ய அவரது அறை எப்போதும் திறந்திருக்கும். விடுதியில் இருந்து ஒரு போன் கால் போட்டு விசாரித்து விட்டு நேரே அவரது அறைக்கு சென்று விடலாம். ஓரிரு முறை, வார இறுதி நாட்களில் திங்கட்கிழமை வரை காத்திருக்க பொறுமை இன்றி, அவரது வீட்டில் விவாதித்து இருக்கிறோம். அவரது மேற்பார்வையில் எனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். இத்துறையில் எனது ஆர்வத்தை முழுமையாக்கி, “இனி நமக்குத் தொழில் தியரி” என முடிவு செய்ய வைத்தவர்.

மற்றொரு வகையிலும் அந்த ஐஐடி வாழ்க்கை மறக்க முடியாததாய் அமைந்தது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான சூழலில் விடுதி அறை. மத்திய அரசு புண்ணியத்தில் கிடைத்த கல்வி உதவித் தொகையில் கையில் புரண்ட காசு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, பல தரப்பட்ட நண்பர்கள். கணிணியில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த இனிய சூழலில் கணிணியியலுக்கு வெளியேயும் ஆர்வம் பிறந்து, இன்று வரை தொடர்கிறது. கணிதம், மானுடவியல், தாவரவியல், சங்க இலக்கியம், நாலாயிரம் என கண்டதையும் கலந்து கட்டி படித்த காலம். இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றொரு வாழ்வு. அதன் பிறகு, அவ்வளவு சந்தோஷமான காலம் அமையவில்லை. இப்படிப்பட்ட சூழல் எனது அறிவுப்புல ரீதியில் வளர பெரிதும் உதவியது.

இங்கே ஒரு விஷயம் சுள்ளென்று உறைக்கிறது. சமீபத்தில், வினவில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி பற்றி புகைப்படங்களுடன் சில கட்டுரைகள் வந்திருந்தன. இந்த விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை? சிந்திக்க வேண்டிய விஷயம். கட்டுரை திசை மாறுகிறது என்பதால், இத்துடன் நிறுத்தி மேலே செல்கிறேன்.

அடுத்து முனைவர் பட்டம் படிக்க அமெரிக்காவில் விஸ்கான்சின் (Wisconsin) மாகாண பல்கலைக்கு போய் சேர்ந்தேன். அந்நாட்டின் முன்னணிப் பல்கலைகளுள் ஒன்று. மாடிசன் (Madison) என்னும் நகரில் அமைந்தது. அழகான அமைதியான ஊர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப்படி அமெரிக்காவில் வாழச் சிறந்த நகரங்களுள் ஒன்று என சொல்லப்பட்டது. கல்லூரியை விட எனக்கு அதிகம் பிடித்தது அங்கிருந்த ஓர் ஏரி. அருகிலேயே, கல்லூரியின் பல நூலகங்களில் ஒன்று. பிரம்மாண்டமானது. உலக இலக்கியம் எல்லாம் கிடைக்கும். தமிழ் கூட. தொல்காப்பியம் தொடங்கி, தமிழன்பன் வரை. நவீன தமிழ் கவிதைகள் இங்கு தான் படிக்க தொடங்கினேன். சில்லென்ற ஏரிக்காற்று! கூடவே தமிழ்! இனிமை! இனிமை! (அண்ணா நூலகத்தை விட இது அளவில் பெரியது என்பது என் கணிப்பு என சொல்லி சைக்கிள் கேப்பில் கலைஞரை சீண்டிக் கொள்கிறேன் 🙂

மின்னணுவியல்
மின்னணுவியல்

அங்கிருந்த கணிணியியல் துறை பேராசிரியர்கள் கல்விப்புல ரீதியாக முக்கிய ஆய்வுகள் செய்து, தத்தம் துறைகளில் உலக அளவில் அறியப்படும் ஆளுமைகள். இவர்களிடம் பாடம் படித்தது என் அதிர்ஷ்டம். எனது ஆய்வுப் படிப்பில் நேரடித் தொடர்பு கொண்ட மூன்று பேராசிரியர்கள் பற்றி சொல்லி விட்டு, கதையை முடிப்போம்.

முதலாமவர் பேராசிரியர் ஆன் கான்டன் (Anne Condon). முதல் பத்தியில் சொன்ன வினவு பாணி கட்டுரை எழுதினால் அவசியம் குறிப்பிட வேண்டியவர். கல்விப்புல ஆளுமை என்பதை தாண்டி, தமது மாணவர்கள் மீது அதிக அக்கறை காட்டுபவர். பழகுவதற்கு இனிமையான, மென்மையானவர். கையைப் பிடித்து என்னை கல்விப்புலத்தின் அடுத்த தளத்துக்கு அழைத்து சென்றவர். எனக்கு தியரி துறையின் உட்பிரிவான computational complexity theory என்பதை அறிமுகப் படுத்தி பால பாடம் சொல்லித்தந்தவர். கணிணியல் என்பதில் இருந்து விலகி, மேலும் இருகிப் போய், கணிதவியளுக்குள் நுழைந்து விடும் துறை இது. முனைவர் பட்டத்துக்கான எனது ஆய்வுகள் இத்துறையில் அமைந்தன. இவரது மேற்பார்வையில் ஒரு வருடம் படித்து வந்தேன். துரதிர்ஷ்டவசமாக, இவர் வேறொரு பல்கலைக்கு மாற்றலாகிப் போனதில் மேய்ப்பரற்ற ஆடாக சில காலம் சுற்ற வேண்டி வந்தது.

இரண்டாமவர் பேராசிரியர் டீட்டர் வான் மெல்கபீக் (Dieter van Melkebeek). வயதில் இளையவர் என்பதால், ஒரு நண்பரோடு பழகுவது போன்ற உணர்வு இருந்ததுண்டு. அங்கு படித்த காலம் முழுதும், எனக்கு பல வகையிலும் ஆதரவும், ஊக்கமும் அளித்தவர். சர்வாகம பண்டிதர் என சொல்லத்தக்க வகையில், மேலே சொன்ன உட்துறையில் ஆழ அகலம் முழுதும் அறிந்தவர். எனக்கு நேரடி பழக்கம் உள்ளவர்களுள் இத்துறையில் மிகப் பரந்த ஞானம் கொண்டவர் இவர் என்பேன். எந்த சிறு செயலிலும் அதில் இவர் காட்டும் சிரத்தை அதிசயிக்கத் தக்கது. மிகக் கடினமான பாடங்களைக் கூட ஒரு சிறு பிறழலும் இன்றி இவர் சொல்லித் தருவது மலைக்க வைக்கும்.

மூன்றாமவர் பேராசிரியர் ஜின்-யி சாய் (Jin-Yi Cai). எனது முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர். கணிதவியல் பாடங்கள் இரண்டு விதங்களில் சொல்லித்தர முடியும். முதலாவது, சுஜாதா வார்த்தையில் சொல்வதானால், ஆஸ்பத்திரி சுத்தத்தோடு, கணிதத்துக்கே உரிய கறார்தனத்தோடு பேசுவது. இவரது பாணி இரண்டாவது வகையிலானது. கறார் தனத்தை சற்று குறைத்துக் கொண்டு, பாடத்தின் உட்கருவை (intuition) உயிருடன் கொண்டு வந்து கண்முன் நிறுத்தும் முறை. ஒரு முறை பயின்றால் ஜென்மத்துக்கும் மறக்காது. நான் பாடம் பயின்றவர்களுள் இந்த இரண்டாவது பாணி ஆசிரியர்களில் இவரையே முதன்மையானவராக கருதுகிறேன். இத்தனைக்கும் இவர் சொல்லித் தந்தவை மிகச் சிக்கலான பாடங்கள். பாட விஷயங்கள் முற்றுணர்ந்து உடம்பில் ஊறிப் போனால் தான் இப்படி செய்ய முடியும். இத்துறையில் பயின்ற பாடங்களில் மனதில் பதிந்து போனவை பெரும்பாலும் இவர் சொல்லித் தந்தவை என சொல்லி குரு வணக்கம்!

பிஸ்கட்
“பிரித்தால் தான் பிஸ்கட் தின்ன முடியும்”

எந்த விஷயத்திலும் உட்கருவை உய்த்துணர வேண்டும் என்பதில் அசாத்திய உறுதி கொண்டவர். ஒரு நிகழ்வு பற்றி குறிப்பிட விருப்பம். ஆரம்ப காலத்தில், ஒரு ஆய்வுக் கட்டுரையை படித்து வந்து விளக்க சொல்லி இருந்தார். நான் மேம்போக்காக படித்து விட்டு செல்ல, அவர் அடுத்த கட்ட கேள்விகள் கேட்கத் தொடங்கினார். “அதெல்லாம் தெரியாது சார்” என சொல்ல அவருக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. மேஜை மேல் இருந்த பிரிக்கப்படாத பிஸ்கட் பாக்கட்டை எடுத்தவர், “இப்படியே பிரிக்காமல் அழகு பார்த்தால் பிஸ்கட் தின்ன முடியுமா” என்றார். “முடியாது சார்”. “பின்பு என்ன செய்ய வேண்டும்?”. “பிரிக்க வேண்டும் சார்”. “ஆமாம், பிரித்தால் தான் பிஸ்கட் தின்ன முடியும்” என்றவர் ஆக்ரோஷமாக பாக்கட்டை பிரிக்க அறை எங்கும் பிஸ்கட் சிதறியது! அதிர்ச்சி அடைந்தாலும், எனது ஆய்வுத்துறை தொடர்பாகவாவது, மேம்போக்காக படித்தல் என்பது விலகிய தருணம்! மறக்க முடியாதது!

இதைப் படி, அதை பற்றி யோசி என அறிவுரை சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட மாட்டார். தானும், ஏர்பிடித்து சேற்றில் இறங்கும் ஜாதி! ஒரு முறை, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு கணிதவியல் புதிரை நாம் தீர்க்க முயல்வோம் என சொல்லி குண்டு தூக்கி போட்டார்! அது தொடர்பாக படித்து சிந்தித்து, ஒரு ஆறு மாதம் போன பின், புதிருக்கு விடை கிடைத்து விட்டதாக ஒரு பிரமை! இரண்டு நாட்கள் முழுதும், வேறு வேலை வெட்டி ஏதுமின்றி, விடை சரிதானா என விவாதித்துக் கொண்டிருந்தோம். முடிவில், “ஆம்! தீர்ந்தது இது” என முடிவு செய்து விட்டோம். அடுத்த பத்து தினங்கள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அவர் ஏதும் பேசவில்லை. பிறகு, ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு தொலைபேசி அழைப்பு! “உமது தீர்வில் குற்றம் இருக்கிறது” என நக்கீரர் போல சொல்லி பலூனில் ஊசி குத்தி விட்டார்! நான் சும்மா இருந்த பத்து நாளும், மனிதர் சிந்தித்து கொண்டு இருந்திருக்கிறார்! பிறகு, குற்றத்தை பற்றியும், இடிந்து வீழ்ந்த மணல் மாளிகையில், கல்லு, மண்ணு, ஜல்லி என ஏதாவது ஒப்பேத்த முடியுமா என்பது பற்றியும் இரண்டு நாள் விவாதித்துக் கொண்டிருந்தார்! முடிவில், தேத்த முடிந்ததை பொறுக்கி எடுத்து கட்டமைத்ததில் எனது ஆய்வு ஏட்டின் (thesis) முக்கிய அத்தியாயம் கிடைத்தது!

ஒரு சாதாரண மாணவனாக இருந்த எனக்கு கணிதம், கணினியியல் துறைகளில் உள்ளார்ந்த ஆர்வம் ஏற்படுத்தி என்னை உயர்த்திய இந்த ஆசான்களுக்கு ‘ஆசார்ய தேவோ பவ’ என சொல்லி குரு வந்தனங்கள். நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுமாறு, இவர்கள் போலவே நல்லதோர் கல்லூரி ஆசிரியராகி கல்விப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசை துளிர்த்துள்ளது. மேலும், இன்றளவும் மேற்சொன்ன துறைகளில் ஆய்வு என்ற பெயரால் ஏதோ ஒரு மூலையில் எலி பிடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த செயலை ஒரு கல்வி நிறுவன சூழலில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. இப்போது தொங்கிக் கொண்டிருக்கும் கிளையை விட்டு விட்டு மேலே சொன்ன கிளைக்கு தாவுவது சில பல காரணங்களால் தடை பெற்றுள்ளது. முக்கியக் காரணம் காந்தியடிகள். வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்திச் சிரிப்பாரே அவரேதான்! இப்போதிருக்கும் கிளையில் அதிகம் சிரிப்பவர், கிளை தாவினால் குறைவாக சிரிப்பார் என்றொரு தயக்கம்! தயக்கங்களும், தடைகளும் விரைவில் விலக திருமால் அருள் புரியட்டும்!

வெங்கடேசன்

தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?

5

வ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையொட்டி, தேவர் சாதியினரின் அபிமானத்தைப் பெற பல அறிவிப்புகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தேவர் சாதிவெறிக்கு வக்காலத்து வாங்கும் சம்பத் கமிசன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பரமக்குடியில் நடந்த தாழ்த்தப்பட்டோரின் தலைவரான இம்மானுவேல் சேகரன் குருபூசையின் போது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு குறித்து கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட பல உண்மையறியும் குழுக்கள், இந்தப் படுகொலையானது அரசின் ஆதரவுடன், போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

08-caste-atrocity-1ஆனால், படுகொலை நடந்த இரண்டாவது நாளன்றே தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிசன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கலவரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அவசியமானது” என இப்படுகொலையை நியாயப்படுத்துவதுடன், பதற்றமான சூழலில் விவேகத்துடன் செயல்பட்டதாக போலீசாரைப் பாராட்டுவதோடு, தனது ஆதிக்கசாதி மனோபாவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

“தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்களுள் ஒருவரான ஜான் பாண்டியன், 11.9.2011 அன்று பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் சமாதிக்குச் செல்வதாக இருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிகுமார் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன், வேறு சாதியைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டான்.அந்த இறப்பு குறித்தும் விசாரிக்க ஜான் பாண்டியன் பரமக்குடிக்கோ,பச்சேரிக்கோ சென்றால், அவரது ஆதரவாளர்களுக்கும், தேவர் சாதியினருக்குமிடையே மோதலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் போலீசுக்கு ஏற்பட்டது.

எனவே, தூத்துக்குடி உயர் போலீசு அதிகாரிகள் உத்தரவுப்படி 11.9.2011 அன்று ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதற்கெதிராக அவரது ஆதரவாளர்கள் 200 பேர் பரமக்குடி – ஐந்துமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில், அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் இன்னொரு தலைவரான கிருஷ்ணசாமி செல்லவே, இவருக்கு மட்டும் அனுமதியளித்துத் தங்களது தலைவரைத் தடுத்து விட்டதாகக் கோபமடைந்த ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் வாகனங்களையும் தாக்கினர். இதனைத் தடுக்க முயன்ற பரமக்குடி துணை போலீசு கண்காணிப்பாளர் கணேசனும் மற்ற போலீசாரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் கலவரக்காரர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தாக்கி, அங்கிருந்த போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இதனால் கமுதி வட்டாட்சியர் சிவக்குமார் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டார். வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிக்கு வன்முறை பரவுவதைத் தடுக்கவும் இந்தத் துப்பாக்கிச் சூடு அவசியம் என்று கமிசன் கருதுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமலிருந்தால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிகமாக ஏற்படுவதோடு, தென்மாவட்டங்களுக்கும் வன்முறை பரவியிருக்கும். எனவே, இந்தத் துப்பாக்கிச் சூடு அவசியமானது” என்று சம்பத் கமிசன் அறிக்கை கூறுகிறது.

2011-ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் குருபூசை அரசு விழாவாக அறிவிக்கப்படும் என்று தாழ்த்தப்பட்டவர்கள் பெரிதும் நம்பியிருந்த சூழலில், அதனைத் தடுக்க வேண்டும் என்று ஆப்பநாடு மறவர் சங்கம் உள்ளிட்ட தேவர் சாதிவெறி அமைப்புகள் பகிரங்கமாகப் பேசி வந்ததுடன், அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். கலவரத்தைத் தூண்ட வேண்டுமென்றே இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தில் ‘தேவர் பேரவை’ என்று எழுதி, அதில் மலம் கழித்து அசிங்கப்படுத்தித் தாழ்த்தப்பட்டோரை ஆத்திரமூட்டியுள்ளனர்.

ஆனால், ஜான்பாண்டியன் கைது செயப்பட்டது போல, தேவர் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் எவரும் ஏன் கைது செயப்படவில்லை என்ற கேள்வியே கமிசன் அறிக்கையில் இல்லை.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்குள் வர விடாமல் தடுத்துக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்திற்காகவே முத்துராமலிங்கத் தேவரை ஒன்பது என சுவற்றில் எழுதியதாக அவதூறு பரப்பி, பச்சேரியில் சிறுவன் பழனிகுமாரைத் தேவர் சாதி வெறியர்கள் கொலை செய்தனர். சிறுவன் பழனிகுமாரைக் கொன்றவர்களை ஏன் இது வரை கைது செய்யவில்லை என்றும் சம்பத் கமிசன் கேட்கவில்லை.

ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் ஏறத்தாழ 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோதே, போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், கூட்டம் அதிகரிக்கும் வரை காத்திருந்து விட்டு, திடீரென தடியடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டு போடவில்லை என்றும், முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரெனக் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களின்படி, போலீசார் பெரும் கற்குவியல்களைச் சாக்குப்பையில் வைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் மீது வீசுகின்றனர். எனில், போலீசார் இவ்வளவு கற்களைக் முன்கூட்டியே கொண்டு வந்து குவித்தது ஏன்?

முதலில் துப்பாக்கியால் சுட்டவர் கணேசன் என்கிற உதவி போலீசு கண்காணிப்பாளர். இவர்தான், ஜான்பாண்டியன் ஆதரவாளர்களால் படுமோசமாகத் தாக்கப்பட்டவர் என கமிசன் அறிக்கை கூறுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் எவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு வந்து முதல் ஆளாகச் சுட்டார் என நீதிபதி சம்பத் கேட்கவில்லை. சென்னை அடையாறில் துணை ஆணையராக இருந்த செந்தில்வேலன், பரமக்குடிக்கு ஏன் கொண்டுவரப்பட்டார் என்றும் விசாரிக்கவில்லை.

துப்பாக்கிச் சூடு நடந்துமுடிந்த பிறகு, போராட்டக்காரர்களை விரட்டிவிட்டுத் தங்களது “வஜ்ரா” வாகனத்திற்கும் பிற வாகனங்களுக்கும் போலீசார்தான் தீ வைத்தனர் என்று இப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி சம்பத் கமிசன் வாய் திறக்கவேயில்லை.

மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய போலீசின் தாக்குதல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், துடிதுடித்து இறந்து கொண்டிருக்கையில் அவர்களை அப்படியே கொளுத்தும் வெயிலில் போட்டு வைத்திருந்ததுடன், உயிரிழந்த ஒருவருடைய சடலத்தை மனிதாபிமானமே இல்லாமல் நாயைத் தூக்குவது போலத் தூக்கிச் சென்று போலீசார் வீசியெறிந்தனர். கண்ணில் பட்ட தாழ்த்தப்பட்டோரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி இரத்தம் வரும்வரை அடித்துத் துவைத்துள்ளனர். போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து அருகிலிருந்த மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தவர்களையும் விடாமல் விரட்டிச் சென்று, வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.

இவை அனைத்தும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் உண்மையறியும் அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. இவ்வாறு இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கும் போது, அவற்றில் ஒன்றைக் கூட விசாரிக்காத நீதிபதி சம்பத், நடந்த எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிக் கூறும் போது “கலவரங்களில் ஈடுபடும் வகையில் தவறாக வழி நடத்தப்பட்டு அதனால் பலியானவர்கள்” என்று கூறுகிறார். கொல்லப்பட்டவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அரசின் பெருந்தன்மையை வேறு பாராட்டியுள்ளார்.

இறுதியாக, இது போன்ற சாதித் தலைவர்களின் குருபூசையைத் தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி சம்பத் அரசிற்குப் பரிந்துரைக்கிறார். இதற்காக “இம்மானுவேல் சேகரனின் குருபூசையை ‘டம்பம் அடிப்பதற்கான நிகழ்ச்சி’ எனப் பலரும் கூறியுள்ளனர்; அந்த விமர்சனங்களுக்கு அடிப்படைக் காரணம் உள்ளது” எனத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ‘தேசியத் தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்கத்தின் குருபூசையை அரசு விழாவாகக் கொண்டாடும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது தலைவரான இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடத்தினால், அது டம்பம் அடிப்பதற்கான நிகழ்ச்சியாம்! அதனைத் தடை செய்ய வேண்டுமாம்!

“மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா?” எனக் காலம்காலமாகக் கேட்கப்படும் ஆதிக்கசாதியின் அதே குரல்தான் சம்பத் கமிசனின் அறிக்கையிலும் எதிரொலிக்கிறது.

– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________