privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்இட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்!

இட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்!

-

செய்தி-14

பார்ப்பனர்-பிராமணர்ட ஒதுக்கீடு தொடர்பான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு பதவி உயர்வில் சலுகைகள், விதித்தளர்வுகள் செய்யலாம் என்று 82வது சட்டதிருத்தம் கொண்டு வந்ததை மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினாராம்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஒரு சட்டதிருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்திருப்பதைக் கண்டுதான் தினமணிக்கு கவலை. வைத்தி மாமா சாராமாகக் கூறுவதனைப் பார்க்கலாம்.

அதாவது கல்வி, வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு இருக்கலாமாம். ஆனால் பதவி உயர்வு என்று வரும் போது இட ஒதுக்கீடு தருவது முறையற்றது என்கிறார் வைத்தி. அரசு ஊழியர் என்பவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் அவரை அப்படி சாதி ரீதியான ஊழியராகக் கருதி பதவி உயர்வு தருவது அறமல்ல என்றும் கூறுகிறார். இதன்படி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எந்த சாதி அதிகாரியும் வரலாமாம். இந்து அறநிலையத்துறைக்கு ஒரு நாத்திகரோ, இசுலாமியரோ கூட வரலாம் – ஆனால் நடைமுறை சங்கடங்களை கருத்தில் கொண்டு அப்படி இல்லை என்பதையும் வைத்தி ஒத்துக் கொள்கிறார்.

அடையார் போட் கிளப்பில் வசிக்கும் ஒரு பார்ப்பனரோ இல்லை சைவ வேளாளரோ, கோவையில் தொழில் குடும்பத்தில் பிறந்த ஒரு நாயுடுவோ இல்லை கொங்கு வேளாளக் கவுண்டரோ ஆதி திராவிடர் நலத்துறைக்கு வந்தால் என்ன நடக்கும்? முதலில் சாதி ரீதியான கொடுமைகளையும், அவற்றின் பரிணாமங்களையும் இத்தகைய ஆதிக்க சாதி அதிகாரிகள் அறியாத போது, அத்தகைய ஆதிக்கத்தையெல்லாம் இயற்கை நீதி என்பதாக நம்பிக் கொண்டு வாழும் இவர்கள் எங்கனம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு போவார்கள்?

அவ்வளவு ஏன்? பரமக்குடி துப்பாக்கி சூட்டில் தலித் மக்களின் உயிரை பறித்தவர்கள் எல்லாரும் ஆதிக்க சாதி போலீஸ் அதிகாரிகள்தானே? அந்த அதிகாரிகள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதிகளாய் இருந்திருந்தால் அப்படி ஒரு துப்பாக்கி சூடு நடந்திருக்குமா? இங்கு சாதி மட்டுமல்ல வர்க்கமும் கூட இணைந்திருக்கிறது. குக்கிராமத்தின் ஏழை ஒருவர் அரசு மருத்துவராக பணியாற்றுவதற்கும், அமெரிக்கா போவதற்காக அரசு மருத்துவராக பயிற்சி எடுக்கும் ஒரு பணக்காரரும் எப்படி வேலை செய்வார்கள்? இதில் ஏழைகளின் பால் இயல்பாகவே நாட்டம் கொள்வது யாரிடம் இருக்கும்?

சரி அரசு ஊழியர்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்தானே? எனில் இந்திய அரசின் உளவுத் துறை ரா, ஐ.பி, இந்திய இராணுவம், சி.பி.ஐ போன்றவற்றுக்கு இதுவரை முசுலீம்கள் யாராவது பதவி வகித்திருக்கிறார்களா? என் இல்லை? குறைந்த பட்சம் தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு அரசு பதவி இல்லை என்று கொண்டு வந்தாலே முக்கால்வாசி அதிகாரிகளை நீக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் மாலை நேர விழாக்களில் மொக்கை போடும் வைத்தி மாமா அறியமாட்டார்.

தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதைத் தாண்டி தேர்வு, மதிப்பெண்ணில் அவனுக்கு சலுகை கொடுப்பது நியாயமில்லை என்கிறார் வைத்தி. அதன்படி தற்போது பொறியியல், மருத்துவ படிப்புகளுக்காக குறைவாக இருக்கும் கட்ஆப் மதிப்பெண்ணை பொதுப்பிரிவோடு சேர்க்க வேண்டும் என்பதுதான் அவரது உட்கிடை.

இட ஒதுக்கீடு இல்லாத துறைகளில் ஊழல் நடந்திருக்கிறதே, அதன் காரணம் என்ன? அர்ஷத் மேத்தா ஊழல் முதல் ஆதர்ஷ், நிலக்கரி ஊழல் வரை குற்றவாளிகள் அனைவரும் ‘மேல்’ சாதி, மேட்டுக்குடியினரைச் சார்ந்தவர்கள்தானே? ‘திறமை’ மூலம் முன்னுக்கு வந்தவர்கள் ஏன் ஊழல் செய்ய வேண்டும்?

அரசுத் துறைகளில் எஸ்.எஸ்டி ஊழியர்கள் சங்கத்தை உருவாக்கி அரசு இயந்திரத்தில் தேவையற்ற பாகுபாட்டை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள் என்று சாடுகிறார் வைத்தி. இதன்படி வன்னியர்கள் சங்கம், கிறித்தவ, முசுலீம்கள் ஊழியர் சங்கம் என்று பிளவுண்டு போனால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்றும் கவலைப்படுகிறார்.

முதலில் தாழ்த்தப்பட்டவர்களது சங்கங்கள் அரசு அலுவலங்களில் இருக்கும் தீண்டாமை காரணமாகவே தோன்றுகின்றன. என்றாலும் அவற்றை அப்படி உருவாக்கி வளர்த்து விடுவதை எல்லா நிர்வாகங்களும் தனிக் கவனம் கொடுத்து செய்கின்றன. ஊழியர்கள், தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்று சேரக்கூடாது என்ற காரணத்திற்காகவே தாழ்த்தப்பட்டோருக்கான சங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் ஆதரவுடன் பராமரிக்கப்படுகின்றன.

ஆனால் பார்ப்பனர்கள், வேளாளர்கள், தேவர்கள், நாயுடுக்கள் போன்றோருக்கு சங்கங்கள் இல்லை என்றாலும் அவர்களெல்லாம் சாதி ரீதியாகத்தான் செயல்படுகின்றனர். ஒரு அரசு அலுவலகத்தின்  தேநீர் கடையில் பேசினாலே அந்த சாதி அரசியலை கண்டு பிடிக்க முடியும்.

ஆக இட ஒதுக்கீட்டை தகுதி, திறமை என்ற பெயரில் எதிர்க்கும் ஆதிக்க சாதியினரின் வாதங்களைத்தான் வைத்தியும் முன்வைக்கிறார். ஆனாலும் பூணூலை மறைக்க முடியவில்லையே?

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________

  1. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கேட்பதில் சற்றும் தர்மம் இல்ல

  2. <>

    இந்த விஷயத்திலும் என்னை தெளிவு படுத்தியதற்கு நன்றி! ஊழலிலும் ‘ஒதுக்கீடு’ பெற இட ஒதுக்கீடை எதிர்க்கிறார்கள்.

  3. இனி மேல் +௨ தேர்வு கிடையாது. கல்லூரியில் உள்ள 2000 மாணவர் சேர்க்கை, OBC-1000; SC/ST 500; MBC – 300; FC – 200 என அட்மிசன் போடலாம். குரூப் ௨ – தேர்வு கிடையாது. மேல குறிப்பிட்ட ஒதுக்கிடு தொடரும்.

    • ஏங்க TNPSC தேர்வு நடக்கும் முறை நல்லாத்தானே இருக்கு, அதை ஏன் மாற்ற சொல்லுரீங்க?
      தேர்வு நடக்கும் முன்பே வினாத்தாளை விற்றுவிடுவது எவ்வளவு நல்ல விடயம்….

  4. அரசு அதிகாரத்துக்குள்ள போனவுடனே சாதி மதம் எல்லாம் காணாம போயிடுதா என பாமரனுக்கு கூட தெரியும் போது தினமணிக்கு தெரியலையே

  5. பதவி உயர்வில் இடஒதுக்கீடு தேவையா என அறிய, ஏதாவது புள்ளிவிபரங்கள் உள்ளதா?
    அதாவது, உதாரணத்திற்கு, 20% இடஒதுக்கீடு முறையில் கீழ்மட்ட வேலைக்கு சேர்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், எத்தனை சதவிகிதம்பேர் ஒவ்வொரு மேல்மட்ட பதவிக்கு முன்னேறுகிறார்கள்? அது எப்படி மற்ற 80% பேருடன் ஒப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், தாழ்ந்த சாதியினர் எப்படி வேலையில் கூட அமுக்கப்படுகிறார்கள் என்று நிரூபிக்கும்பட்சத்தில், மக்களுடைய ஆதரவு கிடைக்கலாம். உங்களுக்கு, அப்படி ஏதாவது புள்ளிவிபரங்கள் கிடைத்தால் இங்கே போடுங்களேன்.

  6. எஸ்சி எஸ்டி பெடரேஷன் அனைத்து அரசு அமைப்புகளிலும் அரசியல் சட்ட ரீதியாக உள்ள உரிமை.வேறு சாதியினருக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.அவர்கள் பிரச்னையை வேறு யார் கவனிப்பார்கள்?அதில் நூலை ஏன் நுழைக்கிறார் வைத்தி?

  7. முலாயம் சிங் கட்சி தலித்களுக்கு மட்டும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது, ஒபிசி பிரிவினருக்கும் வேண்டும் என்கிறது.உங்கள் கருத்து என்ன.

  8. கேள்வி அவர்களே.. இதென்ன அபத்தமான கேள்வி? பார்ப்பனர்களைத் தவிர யாருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும் வினவுக்கு சம்மதம்தான். அது கஸாப் போன்றவர்களுக்குனா முதல் ஆதரவாளர் வினவுதான்..
    ஆனால் குஜராத் இசுலாமிய்ர்களே தாங்கள் மோடியின் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என சொன்னாலும் விடாது மோடி மீது பழி போடும் உணர்வு தொடரும். அது வினவு போன்ற போலி மதச்சார்பின்மை கும்பல்களின் நீண்ட வருட பழக்கம். நாய் வாலையும் வினவின் இந்துமத எதிர்ப்பையும் மாற்ற முடியாதுதான்.

    • இட ஒதுக்கீடு பற்றி தங்கள் மேலான கருத்தையும் பதிவு செய்யலாமே மனிதன். அதை ”படிச்சு பாத்து பின்னால வர்ற சந்ததிகள் தெளிவா நடந்துக்குவாங்க”

  9. பதவி உயர்வில் இட ஓதிக்கிடு என்பது நியாயம் இல்லாதது பதவி உயர்வு என்பது ஒருவரின் வேலையின் பால் உள்ள அர்பணிப்புக்கு கொடுக்க வேண்டுமே தவிர ஒதிக்கீடு இதில் வரவே கூடாது எங்காவது ஒரு இடத்தில் ஆவது செயல் ஊக்கம் கொடுக்கும் நிலை வேண்டும் எல்லாமே இலவசம் எல்லா இடத்திலும் ஓதிக்கிடு என்றால் அது ஆரோக்கிரம் அல்ல

  10. ஒருவர் வேலையை சரியா செய்யாவிட்டாலும் பதவி உயர்வு உண்டு என்றால் அவர் எதுக்கு வேலை செய்யணும்…மனித பலவீனத்தை மேலும் தட்டிக் கொடுக்கிற காரியம் பதவி உயர்வில் இடஒதுக்கீடு.லஞ்சலாவண்யம் மேலும் பெருத்துப்போகும். நடவடிக்கை எடுக்கமுடியாது.அதிலும் இடஒதுக்கீடு பேச்சு வருமே!

    • போன்டா பஜ்ஜி மற்றும் ஆனந்த விகடனுடன் அரசு அலுவலகங்களில் பொழுது போக்கிக்கொண்டிருக்கும் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தவர்களை எல்லாம் தட்டிக்கொடுப்பது யார் ?

      பார்ப்பனர்கள் தாம் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் மாமாக்களையும் மாமிகளையும் கொண்டு வந்து நிரப்பி அந்த அலுவலகங்கங்களை எல்லாம் அக்கிரகாரமாக மாற்றி வருவதற்கு என்ன பெயர் ?

      இட ஒதுக்கீடே இல்லாமல் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும், உயர்பதவிகளை பெற்று வரும் பார்ப்பனர்களை பற்றி பேச மறுக்கும் நாக்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்கிற போது மட்டும் ஓலமிடுவது ஏன் ? ஏனெனில் அது தான் சாதிவெறி. அரசு பதவிகளில் பஞ்சம மக்களை பார்க்க பொறுக்காத சாதிவெறி. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களிடம் அது தான் இங்கே கூடவோ குறையவோ வெளிப்படுகிறது.

  11. கடைசியில் அரசு வேலை எல்லாம் கான்ட்ராக்ட் வேலைக்கு போய்விடப் போகிறது.இப்போதே பாஸ்போர்ட் ஆபீசில் உள்ள ரீனீவல் வேலைகளை டி.சி.எஸ் கம்பெனிக்கு கொடுத்திருக்கிறார்கள்.எனக்கு மூன்றே நாட்களில் புது பாஸ்போர்ட் கைக்கு வந்தது.அஞ்சு பைசா கூட லஞ்சம் கிடையாது.இந்த கான்ட்ராக்ட் மெட்ரோ நகரங்களில் மட்டும்தான்.

  12. DEAR VINAVU COMRADES
    YOU HAVE MENTIONED THEVARS ALONG WITH BRAHMINS,VELLALAS AND NAIDUS.
    THOUGH SOME OF THE SUBSECTS BENIFIT BY MBC/BC RESERVATION NUMBER OF
    THE SENIOR OFFICIALS FROM THAT COMMUNITY IS A MICROSCOPIC MINORITY.
    THOUGH AMBEDKARS OWN COMMUNITY MAHAR HAS A REGIMENT OR ITSELF DOWN
    IN SOUTH INDIA THOUGH THIER MARTIAL TRADITIONS ARE KNOWN BECAUSE OF THEIR RBELIOUS NATURE AGAINST BRITISH NO REGIMENT EXISTS TODAY (I DONT WANT AND SUCH SEGMENTATION OF SOCALLED MARTIAL TRIBES WAS CUNNING PLOY BY BRITISH, IT HELPED THEM TO CONSOLIDATE THIER POWER REQUIRING UNFLINCHING LOYALTY TO THEIR EXPLOITIVE RULE ). THE THEVARS SOMETIMES CALLED AS ATHIKA JATTI SUFFERED OPPRESSION UNDER TELUGU KANADA SPEAKING VIJAYANAGAR RULERS, MUSLIM RULERS AND FORCED TO SLEEP IN POLICE STATIONS UNDER C.T. ACT. MAJORITY OF THEM ARE WORKING CLASS MASSES AND RIOTS ARE ENGINEERED BETWEEN THEM AND DALITS. HENCE PLEASE DO NOT COMPARE THEM WITH OTHER FORWARD CASTE COMMUNITIES

    COMMING TO RESERVATION IT IS USED AS ATOOL TO PROMOTE DIVISIONS AMONG WOKING CLASS PEOPLE. AFTER A PERSON SELECTED FOR CIVIL SERVICES NO MORE FACE ANY KIND OF OSTRACISM OR ILLTREATMENT. THERE ARE COURTS AND GOVT LAWS WHERE HE/SHE CAN SUE FOR JUSTICE

  13. அவர் சொன்னதில் என்ன தப்பு..?இத்தனை வருஷம் இட ஒடுக்கீடு வழங்கியதில் உண்மையான தலித்துகள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்..சலுக்லை அடைந்தவனே அந்த சலுகையை பாதிக்கப் பட்டவனுக்கு கிடைக்காமல் மீண்டும் மீண்டும் தானே அடைந்துகொள்கிறான்…அப்புறம் கிறுஸ்துவ மதத்திற்கு மாறியும் சலுகைக்காக அதை வெளியே சொல்லாத பலர் உண்மையான தலித்துக்கு கிடைக்க வேண்டிய சலுகையை பறித்துக் கொள்கின்றனர்….ஆக இந்த சலுகை 100க்கு 10 சதவிகிதந்தான் உண்மையான நபர்களுக்கு கிடைக்கிறது…..

  14. யாருக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார்களோ அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்…முதல் தர குடிமக்கள். வந்தேரிகளுக்குதான் இட ஒதுக்கேடு கிடையாது…என்ன ராம் நான் சொல்றது சரிதானே

Leave a Reply to Phoenix பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க