னித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் செப்-08 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.

-o0o-

என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிடும் கண்டன கூட்டறிக்கை.ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரை ஊஃபா (UAPA) சட்டத்தின் கீழ் குற்ற எண். 4/2018 வழக்கில் கைது செய்துள்ளது மகாராட்டிரா காவல்துறை. கோவா ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெ, பாதிரியார் ஸ்தான் சாமி உள்ளிட்டோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டாக ஊடகங்களில் பரப்பப்பட்டது ‘மோடியை கொல்லச் சதி செய்தார்கள்’ என்பதே. உண்மையில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டது பீமா கோரேகான் சம்பவத்திற்காக. தற்போது இரண்டையும் இணைத்து செய்தி பரப்பப்படுகிறது.

பீமா கோரேகன் நிகழ்வு:

1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர்,31,2017-இல் நூறுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்கள் உள்ளடங்கிய எல்கர் பரிசத் (Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.

2018 ஜனவரி 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு
நினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான தலித் மக்களும்- முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கோரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க., சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் டிச-31, 2017 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. – வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.

கைதிற்கு ஆதாரம் இல்லை – அரசியல் சட்டத்திற்கு எதிரானது

  1. டிச, 31, 2017 பீமா கோரேகன் நிகழ்வில் கைதான 5 செயல்பாட்டாளர்களும் பங்கேற்கவில்லை.
  1. கு.எண்.4/2018 முதல் தகவல் அறிக்கையில் கைதானவர்கள் பெயர்கள் இல்லை.
  1. கைது – உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ் குமார் – எதிர் – பீகார் அரசு மற்றும் டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் – எதிர் – மகாராஷ்ட்ரா அரசு வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது.
  1. கைது – அரசியல் சட்டத்தின் சரத்துகள் 14,19 & 21 மற்றும் சர்வதேச அரசியல் & மனித உரிமை பிரகடனம்,1976-க்கு எதிரானது.
  1. கைதை நியாயப்படுத்த மகாராஷ்டிர மாநில ஏ.டி.ஜி.பி. பரம்பீர்சிங் பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய “மோடி கொலை சதிக் கடிதம்” இன்றுவரை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் ரிபப்ளிக் டி.வி. அர்னாப் கோஸ்வாமியிடம் உள்ளது.
  1. “மோடி கொலை சதிக் கடிதம்” கு.எண். 4/2018 & பீமா கோரேகன் வழக்குகளில் இல்லை. குறைந்தபட்சம் கடிதம் தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கை கூட இல்லை.
  1. மோடியை கொல்லச் சதி செய்தார்கள் – ரஷ்யா – சீனாவிலிருந்து, நேபாளம் வழியாக ஆயுதம் கடத்த முயற்சித்தார்கள் – கம்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளில் படம் இருந்தது – என்ற கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
  1. பீமாகோரேகன் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர்களை அதே வழக்கில் சேர்ப்பது இந்திய சாட்சியச் சட்டம், வழக்கறிஞர்கள் சட்டம், 1961–க்கு எதிரானது. வழக்கறிஞர்களின் தொழில் உரிமையைப் பறிப்பது.

கருப்பு சட்டம் ஊபா (UAPA)

மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற ஊபா சட்டத்தின் கீழ். இச்சட்டத்தின்கீழ் பிணை வாங்குவது கடினம். 1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள், மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு.

இச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் திரு.முருகன் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாய் சிறையில் உள்ளார். ஏற்கனவே மருத்துவர் பிநாயக் சென், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் ஊபா சட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். தடா, பொடாவைப் போன்றே ஊபா சட்டமும் முழுக்க முழுக்க அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலரும் சிறையில் வாடி வருகிறார்கள். அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, வாழ்வுரிமை நீடிக்க ஊபா சட்டம் நீக்கப்பட வேண்டும்.

சீர்குலைக்கப்படும் சட்டத்தின் ஆட்சி

இந்தியாவில் நடைபெறுவது மோடி – அமித்சா ஆட்சி அல்ல – அது சட்டத்தின் ஆட்சி. சட்டமே மேலானது. சட்டத்தின் ஆட்சிதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் தற்போதைய மத்திய 7 மாநில பா.ஜ.க. அரசுகள், கட்சி மற்றும் துணை அமைப்புகள் நிகழ்த்திவரும் வன்முறைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இந்த சீர்குலைவு வேலை ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் அரசின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. வெளியிலிருந்து பசு பாதுகாவலர்கள், சனாதன் சன்ஸ்தா என்ற வடிவங்களிலும், உள்ளிருந்து போலி என்கவுன்டர், தேசிய பாதுகாப்பு, ஊபா சட்டக் கைதுகள் என்ற முறையிலும் நடைபெறுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்பவர்கள் “தேச விரோதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், இந்து விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள்” என முத்திரை குத்தி ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால், நேரடியாக கலவரம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சனதான் சன்ஸ்தா, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் மீது எப்போதும் ஊபா சட்டம் பாய்வதில்லை. மாறாக குற்றங்கள் மறைக்கப்படுகின்றன.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள மோடி அரசு அதனை மடைமாற்றம் செய்யவும், தன்னை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவும்தான் கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது.

பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை, பா.ஜ.க.-வை எதிர்ப்போர் என அனைவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம், ஊபாவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் ஆட்சி என்ற நிலை மாறி சர்வாதிகாரம் நிலைகொள்ளும். போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.

எனவே நாங்கள் அனைவரும், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைதையும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதிகளுக்கு எதிராக, அரசியல் சட்டம் – சட்டத்தின் ஆட்சியைக் காக்க அனைத்துத் தரப்பு மக்களும் போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம். இன்று நாம் போராடா விட்டால் நாளை ஊபா நம்மீதுதான் என எச்சரிக்கிறோம்.

-o0o-

வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள்- எழுத்தாளர்கள்

வழக்கறிஞர் லஜபதிராய்
மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான்
வழக்கறிஞர் ஹென்றி டிபேன்
வழக்கறிஞர் மகபூப் பாட்சா
வழக்கறிஞர் திருநாவுக்கரசு
வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்
வழக்கறிஞர் ராமச்சந்திரன்
வழக்கறிஞர் ஆறுமுகம்
வழக்கறிஞர் ஆனந்த முனிராஜன்
வழக்கறிஞர் கனகவேல்
வழக்கறிஞர் இராஜேந்திரன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்

-o0o-

பேராசிரியர் முரளி
பேராசிரியர் சீனிவாசன்
பேராசிரியர் விஜயகுமார்
பேராசிரியர் புவனேசுவரன்

-o0o-

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்
நாடக ஆசிரியர் பேரா.இராமசாமி
எழுத்தாளர் லிபிஆரண்யா

தகவல்: பேராசிரியர் முரளி, மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க