லித் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா ஷெப்பர்ட் எழுதிய மூன்று நூல்களை முதுகலை படிப்புகளுக்கான அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்திலிருந்து அகற்ற தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.

நூல்களில் உள்ள கருத்துக்கள் இந்து மதத்தை அவமதிப்பதாக கூறி இந்நடவடிக்கையை தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கான நிலைக்குழு கடந்த அக்டோபர் 25, 2018 அன்று பரிந்துரைத்தது. இம்முடிவு கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதைப்பற்றி விவாதிக்க எதிர்வரும் நவம்பர் 15-க்கு முன்னதாக ஒரு கூட்டம் நடத்தப்படும். மேலும் ’தலித்’ என்ற சொற்பதத்தையே வழக்கொழிக்கவும் இக்குழுவிற்கு நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முதுகலை படிப்புகளுக்கான ஒன்பது பாடத்திட்டங்களைப் பற்றிய விவாதம் ஒன்று நடந்ததாக நிலைக்குழு உறுப்பினரும் பேராசிரியருமான ஹன்ஸ்ராஜ் சுமன் கூறியுள்ளார். “நான் ஏன் ஒரு இந்து அல்ல (Why I am not a Hindu), எருமை தேசியவாதம் (Buffalo Nationalism) மற்றும் இந்து இந்தியாவிற்குப் பின் : தலித் – வெகுஜன சமூக ஆன்மிக மற்றும் அறிவியல்பூர்வப் புரட்சி பற்றிய ஒரு பிரசங்கம் (Post-Hindu India: A Discourse in Dalit-Bahujan Socio-Spiritual and Scientific Revolution) ஆகிய நூல்கள் இந்து மதத்தை இழிவு செய்வதால்தான் அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம். மாணவர்கள் அதை படிப்பது பொருத்தமானதாக இருக்காது என்று கருதினோம்” என இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அய்லைய்யாவின் நூல்கள் இந்து மதத்தை பற்றிய அவரது சொந்த புரிதலின் அடிப்படையில் இருந்தன என்றும் அவரது புரிதலை நிறுவுவதற்கு ஆய்வின் அடிப்படையிலான தகவல்கள் எதுவும் அதில் இல்லை” என்று தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி குழுவின் உறுப்பினரான பேராசிரியர் கீதா பட் நியூஸ்18 செய்தியாளரிடம் கூறினார்.

மேற்கூறிய மூன்று நூல்களைத் தவிர நீக்கப்பட வேண்டிய மற்றொரு நூலையும் அவர்களது அறிக்கை முன்வைத்தது. அரசியல் தத்துவஞானியாக கடவுள் : பார்ப்பனியத்திற்கு புத்தரின் சவால் (God as Political Philosopher: Buddha’s Challenge to Brahminism) என்ற நூலும் கூட பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.

படிக்க:
சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி
பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

“அரசியல் விஞ்ஞான துறை அதன் பாடத்திட்டங்களை சரிபார்க்க வேண்டும். காஞ்சா அய்லைய்யாவின் நூல்கள் இந்து நம்பிக்கையின் மீதான கசப்புணர்வையே காட்டுகின்றன. மேலும் நூலாசிரியரின் எழுத்துக்கள் உண்மைக்கு புறம்பாகவும் உள்ளன” என்று பட் கூறினார். “என்னுடைய முஸ்லிம் மற்றும் கிறுத்துவ உடன்பிறப்புக்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டுமென இந்துத்துவா பள்ளி எப்படி விரும்பியது” என்றும் “காவிப் பொட்டை பார்க்கும் போதெல்லாம் அது எப்படி அவரை துன்புறுத்துகிறது” என்றும் அய்லையா எழுதியுள்ளதாக அவர் கூறினார். அவருக்கு தவம் (tapasya) என்ற சொல்லில் பிரச்சினை இருக்கிறது. அவரது எண்ணத்தையும் இந்து நம்பிக்கையை எப்படி அவர் புரிந்து வைத்துள்ளார் என்பதையும் பொருத்ததுதான் இதெல்லாம். பாடத்திட்டம் என்ற வகையில் அவரது எழுத்தில் எதுவும் இல்லை எனவே அதை கற்பிக்க காரணம் எதுவும் இல்லை. அவரது அனைத்து நூல்களிலும் இந்த கசப்புணர்வுதான் உள்ளது” என்று அவர் கூறினார்.

“சிலரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகள்தான் காஞ்சா அய்லைய்யாவின் நூல்கள் மீதான சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாங்கள் தொடர்ந்து அவற்றை கற்பிக்க விரும்பினால் அதற்கு எதிர் கருத்தையும் மாணவர் முன் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. எனினும் சிலர் அந்த நூல்களை நீக்க விரும்பினார்கள். நாங்கள் ஒரு ஜனநாயகக் குழுவாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் ஒன்றாக அய்லைய்யாவின் நூல்களை எதற்காக கற்பிக்க வேண்டும் என்பதை விவாதித்து ஜனநாயகபூர்வமாக ஒரு முடிவெடுப்போம்” என்று அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவரான வீணா குக்ரேஜா கூறியுள்ளார்.

மேலும் இரண்டு நூல்களுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அவற்றை நீக்கச்சொல்லி அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.. பேராசிரியர் நந்தினி சுந்தர் எழுதிய கீழ்நிலை அதிகாரிகளும் மன்னர்களும் : பாஸ்தரின் மானுடவியல் வரலாறு (Subalterns and Sovereigns: An Anthropological History of Bastar’ and professor Archana Prasad) மற்றும் பேராசிரியர் அர்ச்சனா பிரசாத்தின் சூழலியல் புனைவியத்திற்கு எதிராக : வெர்ரியர் எல்வின் மற்றும் நவீனத்திற்கு எதிரான பழங்குடியின எதிர்ப்பின் உருவாக்கம் (Against Ecological Romanticism: Verrier Elwin and the Making of an Anti-Modern Tribal Identity (2003)) என்ற இரண்டு நூல்கள்தாம் அவை.

பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா எழுதிய கொமட்லு சமூகக் கடத்தல்காரர்கள் (Komatlu Social Smugglers) என்ற நூலைத் தடைச்செய்ய வேண்டி 2017-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ஒரு வக்கீல் தொடுத்த பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீண்டத்தகாத கடவுள் (Untouchable God’) என்ற அவரது நூலின் சாரத்தை இங்கே படிக்கலாம்.

படிக்க:
என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து,  நாடெங்கிலும் பாடத்திட்ட பாடநூல்கள் மாற்றம் கண்டன. பள்ளி பாடநூல்களிலிருந்து மொகலாயர்கள் மெதுவாக மறைந்து போகிறார்கள். வரலாறு திரிக்கப்பட்டு மீண்டும் எழுதப்படுகிறது. மகாத்மா காந்தி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரைப் பற்றிய இன்றியமையாத குறிப்புகளை பள்ளி பாடநூல்களிலிருந்து அகற்றியதற்காகவும் வரலாற்றை மாற்றியதற்காகவும் இராஜஸ்தான் பேர் பெற்றது. இந்தியா, 1962-ல் சினோ – இந்தியப் போரில் இந்தியா வென்றதாக மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பாடநூல்கள் பொய்யுரைக்கின்றன. மகாத்மா காந்தியை நாதுராம் கோட்ஸே படுகொலை செய்ததை பற்றிய குறிப்பும் கூட நீக்கப்பட்டுவிட்டன.

“புதிய பள்ளி பாடநூல்கள் மூலம் தன்னுடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடியின் மீது புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது கல்வியமைப்பை தன்னுடைய சொந்த அரசியல் கொள்கைகளை விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக மோடி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. 85 விழுக்காட்டு பணத்தாள்களை மதிப்பழிக்க செய்த பணமதிப்பழிப்பு திட்டத்தையும், நிதிப்பற்றாக்குறையால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் பெண்குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தையும் நல்ல விதமாக கூறுவதற்காக பாடநூல்களில் புதிதாக சில பத்திகள் இணைக்கப்பட்டுள்ளன.  25 பாட நூல்களை ஆய்வு செய்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இதனை கண்டறிந்துள்ளது” என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

தமிழாக்கம் :

 

நன்றி: Sabrangindia.in

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க