privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
119 பதிவுகள் 0 மறுமொழிகள்

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

0
முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.

“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!

0
”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி”

முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை

0
நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.

அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்

0
உதவிப் பேராசிரியர் தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!

0
இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்

0
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது.  இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!

0
மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!

1
ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!

0
ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ

1
ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது.

மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

0
மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

0
கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!

0
கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்

மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

0
வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

0
எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.