அயோத்தி இராமன் கோவில் பணத்தைக் களவாண்ட காவிக் கும்பல்
பக்தி என்ற பெயரில் இராமன் கோவிலை மையமாக வைத்து சுற்றுலாப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இன்று இராமன் கோவிலின் பணத்திலும் கொள்ளை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத்: மாநிலம் தழுவிய விவசாயிகளின் நீண்ட பேரணி – போராட்டம்
மின்சார பரிமாற்ற கட்டமைப்புகளுக்காக, விவசாய நிலங்கள் உரிய ஆலோசனையோ அல்லது போதுமான இழப்பீடோ இன்றி கையகப்படுத்தப்பட்டும், மின்கம்பங்கள் அமைக்கப்படும்போது சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருவதை எதிர்த்து இப்பேரணி - போராட்டமானது நடந்துள்ளது.
பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!
பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”
சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்.எஸ்.எஸ். மட்டும் விதிவிலக்கு – இதுதான் இந்துத்துவ நீதி!
அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ. பி: ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்!
மது போதையிலிருந்த மூன்று பேர் ராஜ்குமாரை தங்களது கால்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியுள்ளனர். அதனை ராஜ்குமார் மறுக்கவே சாதிவெறி தலைக்கேறி மூன்று பேரும் பெல்ட் மற்றும் இரும்புக் கம்பியால் ராஜ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உ.பி லக்னோ தீ விபத்து: யோகி அரசின் அலட்சியத்தால் 15 பேர் பலி
இக்கட்டடம் குடியிருப்பு பயன்பாட்டிற்காகவே அனுமதி பெற்றிருந்தது. ஆனால் சட்டவிரோதமாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, இது விபத்தல்ல; யோகி அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!
2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.
அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்
தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத்
தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
https://youtu.be/ex2sopI6hRU?
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: பிபிசி தமிழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!
மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோவை: நீட் தேர்விற்கு மீண்டும் ஒரு மாணவி பலி!
தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து, மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் குறைந்தது 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த ரேணு மீனா, டேராடூனைச் சேர்ந்த ரியா குமாரி தாபா, சீகார் பகுதியை சேர்ன்ஹ பிரதீப் மஹிச் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனுகீர்த்தனா என கடந்த நான்கு நாட்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!
இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.
உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.

























