மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!
பாசிச மோடி அரசின் சதித்தனங்களை போராடும் விவசாயிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். தேர்தலை எதிர்பார்க்காமல், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே எழுச்சிகரமான, விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நடைமுறை விதிகளையும் மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்துள்ளது மோடி அரசு. இது சாகக் கிடக்கும் டெல்டாவை கழுத்தை நெறித்து கொல்லும் செயலாகும்.
தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?
நிவர், புரெவி புயல்கள், பருவம் தப்பிப் பெய்த ஜனவரி மாத கனமழை ஆகியவை காரணமாக டெல்டா உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கையில், தமிழகம் வெற்றி நடைபோடுவதாகத் தினந்தோறும் விளம்பரங்களை வெளியிட்டு சுயதம்பட்டம் அடித்து வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி.