அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை...
உங்கள் பீரங்கி குண்டுகள் எங்கள் உயிரை பலியிடலாம்
ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!
ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.
இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின் பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.
தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.
சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும் இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.
ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது. எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் 117-வது பிறந்த நாள்
உன்னோடு நான்...
சோர்விலும்
ஏக்கத்திலும்
தளர்விலும்
எப்போதும் என்னுடன் இருக்கிறாய்
தடுமாறும் போது
எனை நம்பிக்கையூட்டி அழைத்துச் செல்கிறாய்
துவளும் போதும்
உன்னுடைய தியாகம்
என்னை சுட்டுப் பொசுக்குகிறது
அடக்குமுறைகள்
அச்சுறுத்தும் போது
உனது வீரம்
எனை
எள்ளி நகையாடுகிறது
உறவுகளில்
லயித்து கிடக்கையில்
உன் உறுதி
எனை
விழிப்படையச் செய்கிறது
மக்களுக்காக வாழும் வாழ்க்கையே உன்னதமானதென்ற
உன் வாழ்வே
எமக்கு ஒளி
சமரசமற்ற
உன்
கம்யூனிச சித்தாந்தமே
எமக்கு வழி
மருது
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
எதற்கு வாழ்த்துகிறீர்கள்?
உலகம் அறிந்த தலைவர்
நாடு போற்றும் பிரதமர்
G20-இன் நாயகன்
சந்திரயான்-3 விட்ட சாதனையாளன்
தாடி வளர்க்கும் சன்னியாசி
‘பாரத’ பிரதமர் மோடிக்கு
இன்று பிறந்தநாளாம்!
காவி கும்பலும்
கார்ப்பரேட் களவாணிகளும்
போட்டி போட்டுக்கொண்டு
வாழ்த்து சொல்கின்றனர்!
எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்?
பாரத தாயின் புகழ் பாடி
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி
வேடிக்கை பார்த்ததற்கா?
ஏழைகளை ஒட்டச்சுரண்டி
இந்திய நாட்டை
அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம்
அடகு வைத்ததற்கா?
“மனிதர்கள் மிருகமானால்”
என்ற படத்தை
குஜராத் கலவரத்தில்
நேரலையில் காட்டியதற்கா?
பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய மக்களை
பார்ப்பனியம் பழக...
எந்த ஆயுதமேந்த........
ஈரெட்டு இட்லிகளை
எடுக்க முடியும்
ஒரு அவியலில்..
வேகும் நேரத்தில்
விருப்பமான ஓர் முழு பாடலையும்
பாடிட முடியும் என்னால்..
புத்துணர்ச்சி தரும் புரட்சி பாடலாகவும் இருக்கலாம்
அல்லது
என் மீதான கழிவிரக்கத்தினைச்
சொல்லும் சோகப்பாடலாகவும் இருக்கலாம்...
அடுக்களைவிட்டு வெளியே போய்
முகங்கழுவி புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறிய அளவிலான நேரமும் கிடைக்கும்..
அதனாலேயே
இட்லி எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம்
அதற்காக
இட்லி அவித்து கொண்டே இருக்க முடியாது
காலம் முழுவதும்...
தோசை சுடுவதென்பது வரமுமல்ல
வட்ட தோசையாய் வராவிடில்
குறைசொல்ல...
எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.
மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !
அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!