Saturday, February 7, 2026
தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட குதிராம் போஸிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.
ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (தலித்) குழந்தைகளுக்கிடையிலான உயர இடைவெளியோடு தீண்டாமை நடைமுறை தொடர்புடையது என்பதை ஆதாரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றன.
நியாயமற்ற சம்பள குறைப்புகளால் வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கும், கட்டிட வேலை, விவசாய வேலை, உணவு, பல்பொருள்கள் வினியோகிக்கும் வேலைகளுக்கும் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
9 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுச் செய்து கொலை செய்யவும், அந்தச் சிறுமியின் தாயாரை மிரட்டி உடலை எரிக்கவும் அந்த சுடுகாட்டுப் புரோகிதனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் எது தைரியம் கொடுத்தது?
தமிழகத்தில் சாதிக் கலவரங்களுக்கும், வட இந்தியாவில் மதக் கலவரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது.
ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைதான் அறிவார்ந்த குழந்தை எனும் இந்த உளவியல், தமிழ்நாட்டு மக்களின் மேல் மறுகாலனியாக்கம் ஏவியிருக்கும் அடிமைப் புத்தியாகும். இதனை எங்கும் விரவச் செய்கிறது, அரசு
மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல மதங்களின் மீதும் மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்றார் ஆசாத்.
தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக எடுத்தியம்புகிறது இந்நாவல்.
கேரளாவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 66 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. படிப்பறிவில் முதன்மை மாநிலமான கேரளாவிலேயே இந்த நிலை என்றால், உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் நிலை என்ன ?
ஒரு நாள் போக்குவரத்து போலீஸார் எனது மோட்டார் சைக்கிளைத் துரத்தி வந்து 'நீ ஒரு பெண் என்பதால் இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள்களை ஓட்டக் கூடாது. வேண்டுமென்றால் ஸ்கூட்டர் சைக்கிளொன்றை ஓட்டு' என்றார்கள்.
ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" எனும் நூல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை வெளிப்படுத்தியது போல், இந்நூல் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்துகிறது.
நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும் கள எதார்த்ததைக் காட்டுகிறது
செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடி போராட்டத்திற்குத் தயாராகினர்.
முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும்  ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.
“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.

அண்மை பதிவுகள்