1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 17 | 1988 ஜூலை 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
புதிய ஜனநாயகம் மார்ச் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
தலையங்கம்– மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!
திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!
முருகனைப் பற்றிய பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!
டெல்லி தேர்தல் முடிவு: பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் – திட்டமற்ற கட்சிகளின் அந்திமகாலம்
பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தீர்வு தரும் திசை எது?
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசைப் பணியவைக்க போர்க்களம் புகுவோம்!
கத்தார் மன்னரின் இந்திய வருகை: செல்வம் கொழிக்கப் போகும் அதானி
இராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க
டெண்டர் அறிவிப்பு! தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 15 | 1988 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
2024 டிசம்பரில் தனிநிர்வாக அதிகாரம் கோரி பா.ஜ.க-வின் குக்கி எம்.எல்.ஏ-க்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலால் தொடங்கப்பட்ட குக்கி பழங்குடியின மக்கள் மீதான இனவெறி கலவரத்தால், இன்றுவரை ஒட்டுமொத்த மணிப்பூரும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9 அன்று, இக்கலவரத்தை முன்னின்று நடத்திவந்த மெய்தி இனவெறியாளனும் மணிப்பூர் முதல்வருமான பைரன் சிங் பதவி விலகியுள்ளார்.
இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டதை வரவேற்கும் பலரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இதுவே சரியான சூழல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், குக்கி பழங்குடியின மக்களை மணிப்பூரின் காடுகளை விட்டு விரட்டியடித்துவிட்டு அங்குள்ள வளங்களை அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் சதித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலால் இக்கலவரம் தூண்டிவிடப்பட்டது. அந்த பாசிச சதித்திட்டத்தில் உறுதியாக உள்ள பாசிச கும்பல் அதன் ஓர் அங்கமாகவே தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துள்ளது.
தீவிரமடைந்த பாசிச கும்பலின் நெருக்கடி
மணிப்பூரில் இந்த இரண்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான குக்கி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டு 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மெய்தி இனவெறியர்களால் இரண்டு குக்கி பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரச் சம்பவம், மணிப்பூரில் இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. மெய்தி மக்கள் வாழும் சமவெளிக்கும் குக்கியின மக்கள் வாழும் மலைகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பள்ளி-கல்லூரிகள்; மருந்து, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு; முகாம்களில் தொற்றுநோய் பரவல் என மணிப்பூர் மக்கள் மனிதகுல நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இது குக்கி பழங்குடியின மக்கள் மத்தியில் மட்டுமின்றி மெய்தி மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை உருவாக்கியுள்ளது.
இந்த எதிர்ப்புணர்வு காரணமாகவும், குக்கி பழங்குடியின மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்; குக்கி மக்களின் தனிநிர்வாக அதிகாரத்திற்கான கோரிக்கை காரணமாகவும் கலவரம் தொடங்கிய சிறிது காலத்திலேயே பாசிச கும்பலின் தோல்வி முகம் தீவிரமடைந்து கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலைக்கூட நடத்த முடியாத சூழல் நிலவியதால், இக்கலவரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்த மெய்தி மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உத்தரவிட்ட, மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனின் தீர்ப்பை இரத்து செய்தது. ஆனால், குக்கி அமைப்புகளும் பெரும்பாலான மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர்; அத்தேர்தலில் மணிப்பூரில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் காங்கிரசிடம் பா.ஜ.க. பறிக்கொடுத்தது.
இந்நிலையில்தான், கடந்த 2024 ஆகஸ்டில், மணிப்பூர் கலவரம் எவ்வாறு தனது தலைமையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒலிப்பதிவு ஒன்று குக்கி மாணவர் அமைப்பால் வெளியிடப்பட்டது. இந்த குரல்பதிவு போலியானது என்று காவிக் கும்பல் கூக்குரலிட்டாலும், தனியார் ஆய்வகம் நடத்திய சோதனையில் இந்தக் குரல்பதிவானது 93 சதவிகிதம் பைரன் சிங் குரலுடன் ஒத்துப்போவதாக, இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது குக்கி மற்றும் மெய்தி மக்களிடையே கடும் எதிர்ப்பையும், பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் கட்டவிழ்த்துவிட்டது. இனக்கலவரம் வெடித்து 16 மாதங்கள் ஆகியும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாத ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தி மாணவர்களும் மக்களும் போராட்டங்களில் இறங்கினர்.
குக்கி மக்கள் மத்தியிலும் போராட்டங்கள் வெடித்த நிலையில், நவம்பர் 2024-இல் அரம்பை தெங்கோல் இனவெறிக் கும்பலால் சோ என்ற பழங்குடியினப் பெண் வீடு புகுந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியது. மேலும், குக்கி மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மருந்துப்பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதில் பைரன் சிங் அரசு காட்டிய பாரபட்சம் ஆகியவை குக்கி பழங்குடியின மக்களின் தன்னாட்சி கோரிக்கையை தீவிரமடையச் செய்தது.
மறுபுறம், மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் தீவிரமடைந்தன. முன்னர் உருட்டுக்கட்டைகள், துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வன்முறைகள், பைரன்சிங்கின் குரல் ஒலிப்பதிவு வெளியானதற்கு பிறகு டிரோன்கள், வெடிமருந்துகள் நிரப்பிய ஏவுகணைகளைக் கொண்டு மூர்க்கத்தனமாக நடத்தப்பட்டன. மக்கள் மீது மட்டுமின்றி, இம்முறை பைரன்சிங், பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டங்களின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில்தான், பிப்ரவரி 10 அன்று பைரன் சிங் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக மணிப்பூர் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், மணிப்பூரில் அதிகாரத்தை இழக்கும் நெருக்கடி பாசிச கும்பலுக்கு உருவானது. இதனையடுத்து, பிப்ரவரி 9 அன்று பைரன் சிங் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் அவசர அவசரமாக டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தப்பிறகு, அன்று மாலையே தான் பதவி விலகுவதாக மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவிடம் கடிதம் கொடுத்தார்.
இருப்பினும் பைரன் சிங்கிற்கு மாற்றாக வேறு யாரையும் முதல்வராக நியமிக்க முடியாத நிலையில் உள்ள பாசிச கும்பல், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துள்ளது. இது மணிப்பூரின் ஆட்சியதிகாரத்தை பாசிஸ்டுகளின் கரங்களில் தக்கவைத்து கொள்வதற்கான ஏற்பாடே அன்றி, பாசிச கும்பல் கனவிலும் விரும்பாத, அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையல்ல. காஷ்மீரின் சிறப்புரிமையை இரத்து செய்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்து காஷ்மீர் மக்களை ஒடுக்கியது போலத்தான் மணிப்பூரிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது.
பாசிச சதித்திட்டதை முறியடிப்போம்!
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ள நிலையில், அமித்ஷாவிற்கு நெருக்கமான பாசிச அடிவருடியான ஆளுநர் அஜய் பல்லாவிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன. இதன்மூலம் குக்கி மக்கள், குழுக்களை ஒடுக்குவதற்காக பாசிச கும்பல் சத்தமின்றி ஆயத்தமாகி வருகிறது.
மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா பிப்ரவரி 20 அன்று, சட்டவிரோத ஆயுதங்களை அனைத்து குழுக்களும் ஏழு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து, இன அழிப்புக் கலவரத்தை முன்னின்று நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட மெய்தி இனவெறி அமைப்பான அரம்பை தெங்கோல், பிப்ரவரி 28 அன்று 300 ஆயுதங்களைச் சமர்ப்பித்தது. மேலும், அரசின் உத்தரவை மதித்து பிற குழுக்களும் ஆயுதங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று குக்கி குழுக்களுக்கு ‘அறிவுரை’ வழங்கியது. இதனையடுத்து ஆயுதங்களைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆயுதக் கிடங்குகளிலிருந்து மெய்தி இனவெறி அமைப்புகளால் கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, அரம்பை தெங்கோல் சமர்ப்பித்திருப்பது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே என்பதைக் குக்கி அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. மேலும், அரம்பை தெங்கோல் ஆயுதங்களைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா அரம்பை தெங்கோலின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது, குக்கி மக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதற்கான சதிவேலைகள் நடந்துவருவதை உறுதி செய்கிறது.
2008 ஆகஸ்ட், மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், ஒன்றிய அரசு, மணிப்பூர் அரசு மற்றும் 25 குக்கி போராளி அமைப்புகளுக்கிடையே கையெழுத்தான முத்தரப்பு சண்டை நிறுத்த (போர் நிறுத்த) (Suspension of Operations) ஒப்பந்தம், பின்னாட்களில் குக்கி போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழிவகுத்தது. ஆனால், மணிப்பூர் கலவரத்திற்கான தயாரிப்புகளில் பாசிச கும்பல் ஈடுபட்டிருந்தபோது, 2023 மார்ச் மாதத்தில், குக்கி தேசிய இராணுவம் (KNA) மற்றும் சோமி புரட்சிகர முன்னணியுடனான (ZRF) அமைதி ஒப்பந்தத்திலிருந்து மணிப்பூர் அரசு திடீரென விலகியதன் மூலம், ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுதபாணியாகியிருந்த குக்கி போராளி குழுக்களை ஒடுக்குவதற்கு ஆயத்தமானது.
கலவரம் தொடங்கியவுடன் மணிப்பூர் அரசும், மணிப்பூர் அரசால் தாரைவார்க்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு மெய்தி இனவெறி அமைப்புகளும் இணைந்து நிராயுதபாணியாகியிருந்த குக்கி பழங்குடியின மக்கள், போராளி குழுக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தின. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குக்கி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தங்கள் மீதான இனவெறித் தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவதற்காக இரும்பு பட்டறைகளில் கைத்துப்பாக்கிகள், சிறு ஆயுதங்களைத் தயாரித்து குக்கி பழங்குடியின மக்கள் எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர். குக்கி பழங்குடியின மாணவர்கள்-இளைஞர்கள் பள்ளி-கல்லூரி படிப்பைத் துறந்துவிட்டு ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். கிராம தன்னார்வலர்கள் (Village volunteers) என்ற பெயரில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டும் நாகா ஆயுதக் குழுக்களுடன் இணைந்தும் போராடுகின்றனர்.
ஒன்றிய-மாநில அரசு என்ற பிரம்மாண்ட-ஆயுதமயமாக்கப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக, தங்களது நிலத்தையும் இனத்தையும் காப்பதற்காக உறுதியுடன் போராடிவரும் குக்கி பழங்குடியின மக்களின் எழுச்சி பாசிச கும்பலுக்கு கிலியூட்டியுள்ளது. எனவே, மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2024 நவம்பரிலும் குக்கி அமைப்புகளிடமிருந்து மட்டும் சட்டவிரோத ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவுள்ளதாக மணிப்பூர் அரசு நிறைவேற்றிய தீர்மானம், குக்கி அமைப்புகளாலும் எம்.எல்.ஏ-க்களாலும் கடுமையான எதிர்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாசிச கும்பலின் கோரமுகத்தை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ள குக்கி அமைப்புகள், “தனிநிர்வாக அதிகாரம்”, “குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து மணிப்பூர் போலீசை திரும்பப்பெறுதல்”, “மெய்தி குழுக்கள் கொள்ளையடித்த ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தல்” மற்றும் “குக்கி கிராம தன்னார்வலர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குதல்” உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் ஆயுத சமர்ப்பிப்பு செய்ய முடியும் என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
குக்கி கூட்டமைப்புகளின் இந்த நிலைப்பாடு சரியானதும் வரவேற்கத்தக்கதுமாகும். எனினும், குக்கியின அமைப்பினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைப்பது; கொன்று குவிப்பது; இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் துல்லியமான அதீத ஆற்றல்கொண்ட கொடூரமான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது; ஊரடங்கு, இணைய முடக்கம் பிறப்பித்து ஒடுக்குவது என பல்வேறு வகைகளில் குக்கி இன மக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் மணிப்பூரில் அரங்கேறி வருகின்றன. ஆனால், மோடி அரசின் அடிமையாகிப்போன ஊடகங்கள் மக்களுக்கு இச்செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில்லை.
எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டிவிடும் என்ற ஆளும் வர்க்க ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களை முறியடித்துவிட்டு, குக்கியின மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் தனிநிர்வாக கோரிக்கையை வலியுறுத்தியும் குரல் கொடுப்பதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள், பலதரப்பட்ட மக்களின் கடமையாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 14 | 1988 ஜூன் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 13 | 1988 மே 15-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 12 | 1988 மே 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 11 | 1988 ஏப்ரல் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 10 | 1988 ஏப்ரல் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல. பொறுக்கி அரசியல். இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் – வசவுகள், பேசும் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித் தாள்கள்-பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!
“நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது” என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும் மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழ்வும், அதையே ரசிக்கவும்கூடப் பழகி விட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர் (Crowd Pullers) – கவர்ச்சி நிறை தலைவர்கள் (Charismatic Leaders) தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
“பொறுக்கி அரசியல்” என்று சொல்லும்போது இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு – விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்லுகிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்தாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல் நான்.
பொறுக்கி அரசியலின் சமூக அடிப்படை – உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புறப் பாமர மக்கள்:
காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்திய கிராம சமுதாயத்தில் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத் தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கொடுத்து குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையாயிருந்தது. காலனிய ஆட்சியும், அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
வருடத்தில் பல நாட்கள் வேலை வாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரை குறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள். படித்தும் வேலை வாய்ப்பின்றி சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கனவே நகரத்து குடிசைப் பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.
பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்புற சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோத சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களை பொறுக்கி அரசியலும் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள்.
பிற்போக்கு சிந்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன.
ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடி மறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.
பொறுக்கி அரசியலின் தமிழக கதாநாயகி; தொண்டர்களுக்கு பால்கனியிலிருந்து தரிசனம் தருகிறார்.
கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர் உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய ”அண்ணாயிசம்” பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். “முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்” மூன்றும் இணைந்ததுதான் ’அண்ணாயிசம்’ என்று எம்.ஜி.ஆர் அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து ‘அண்ணாயிச’த்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தரகு அதிகார முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது, அதே சமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிக மிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதுதான் எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுபடுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீ, நிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமுகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் “அன்பளிப்பு”களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால் அரசாங்க “இலவச – அன்பளிப்பு”த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது – இதுதான் எம்.ஜி.ஆரின் ‘அண்ணாயிசம் – கவர்ச்சிவாதம்’.
பொறுக்கி அரசியல் வேர்விட்டுப் பரவுகிறது. ஜானகி கட்சிக் கூட்டத்துக்கு ரயில் கூரை மீதேறி தொண்டர்களின் யாத்திரை.
பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்:
காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேதகாரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை – அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால் பிழைப்பு வாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் – அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயக்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.
தலைவர்கள் மட்டுமல்ல நகர வட்டங்கள் – கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்பு வாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எத்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதை பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்பு வாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள்.
தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்ளுகிறார்கள். மற்ற காலங்களில் சத்துணவுத் திட்டம் போன்ற இலவசத் திட்டங்கள், வெள்ளம் – வறட்சி – தீ விபத்து ஆகியவற்றுக்கு முன்னின்று அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்ளுகிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீஸ் நிலைய வழக்குகள், வேலைவாய்ப்புகள் – சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் ”அங்கீகரிக்கப்பட்ட” தரகர்களாக இருக்கிறார்கள்.
கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்பு வாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி எம்.எல்.ஏக்-கள், எம்.பி-கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியில் கோவில்கள், வாரியங்கள், பள்ளி – கல்லூரிகள் போன்ற சகலமட்டங்களிலும் கட்சி பிழைப்பு வாதிகளுக்கு “பொறுப்புகள்” பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு “ஏற்பாடு” செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் – அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார் எம்.ஜி.ஆர்.
பொறுக்கி அரசியல், தமிழகத்துக்கு ஒரு பாரம்பரியம் உண்டு:
பொறுக்கி அரசியலை அறிமுகப்படுத்தி, நிறுவி வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கு ஒரு பாரம்பரியப் பெருமை உண்டு, அதன் பிதாமகனும் பெருமைக்குரியவரும் கருணாநிதிதான்! மூப்பனார், வாண்டையார், தென்கொண்டார், மன்றாடியார் போன்ற நிலப்பிரபுக்களின் பண்ணை வீடுகளிலும், கோவை நாயுடுக்கள், வடபாதி மங்கலம் முதலியார், சென்னை டி.டி.கே – சிவசைலம், மதுரை டிவிஎஸ் போன்ற முதலாளிகளின் விருந்தினர் மாளிகைகளிலும் காமராஜர் தேர்தல் அரசியல் நடத்தி வந்தார். வோட்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சாதி அரசியல் பேரங்கள் மூலமே ஆட்சி நடத்தினார்.
அந்த சாதி அரசியலை வீழ்த்த பொறுக்கி அரசியலால்தான் முடிந்தது. “பேரறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர்” போன்றவர்கள் மட்டுமே இருந்திருந்தால் காமராஜரின் சாதி அரசியலை வீழ்த்தியிருக்க முடியாது. அதை முறியடிக்க மாவட்டத்துக்கு ஒரு பொறுக்கி அரசியல் தலைமையை உருவாக்கினார் கருணாநிதி. நெல்லைக்கு ஒரு தூத்துக்குடி சாமி, மதுரைக்கு ஒரு முத்து, திருச்சிக்கு ஒரு அன்பில், தஞ்சைக்கு ஒரு மன்னை, கோவைக்கு ஒரு ராஜமாணிக்கம், சேலத்துக்கு ஒரு வீரபாண்டி, ஆற்காடுக்கு ஒரு ப.உ.ச என்று பொறுக்கி அரசியலுக்குரிய சகல தகுதிகள் கொண்ட தலைமையை உருவாக்கியவர் கருணாநிதி.
அவர்கள் திராவிட அரசியலின் ”பழக்கதோஷம்” உள்ளவர்கள் – கருணாநிதிக்கு விசுவாசமாக நின்று விட்டவர்கள் – என்ற நிலையில் முழுக்க முழுக்க தமது ரசிகர்களை மட்டும் கொண்ட புதிய பிழைப்புவாதக் கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர். இன்று வீரப்பன் கும்பலின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மந்திரிகள், ஜேப்பியார் போன்றவர்கள், ஜெயலலிதா கும்பலின் கருப்பசாமி பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சென்னை மதுசூதனன், திருநாவுக்கரசு.போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் பொறுக்கி அரசியலின் செல்லப் பிள்ளைகள். இவர்களில் எவருக்கும் திராவிடம், தேசியம் என்கிற பேதமில்லை. “எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்”தான் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம். பிழைப்பு வாதம்தான் இவர்களின் லட்சியம். பொறுக்கி அரசியல்தான் இவர்களின் கொள்கை!
பொறுக்கி அரசியலில் தேசியவாதிகளும் தஞ்சம் புகுந்தார்கள்.
காங்கிரசின் ஜனநாயக சோசலிசப் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி 1987 தேர்தலில் பல மாநிலங்களில் தோற்கடித்தனர். மத்தியிலும் சொற்பப் பெரும்பான்மையே பெற்றது. கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த இந்திரா மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமை, அரசுத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் போன்ற போலி சோசலிச நாடகமாடத் துவங்கினார். மொரார்ஜி, காமராஜ், பாடீல், சஞ்சீவரெட்டி, அதுல்யாகோஷ், சி. பி. குப்தா போன்ற பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகளுக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது போன்ற பிழைப்புவாதத் தலைவர்களை அணிசேர்த்தார். இந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுக்கி அரசியல் வழிமுறைகளில் கூட்டம் சேர்க்கத் தலைப்பட்டார். 1921 வங்கதேசப்போரும், தேர்தல் வெற்றியும் ஏற்படுத்திய செல்வாக்கு மங்கி அரசியல் பொருளாதார நெருக்கடிகள் முற்றியது. நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது அரசு எந்திரத்தைக் கொண்டு அவற்றை அடக்கிய அதே சமயம் பிழைப்புவாதிகளைக் கொண்டு அரசியல் முட்டுக் கொடுத்து காங்கிரசைத் தூக்கி நிறுத்தினார்.
குஜராத், பீகார் போராட்டங்கள் வெடித்து, வளர்த்து கடைசியாக இந்திரா தேர்தல் செல்லாது என்கிற தீர்ப்பு வந்து அவரது ஆட்சியே ஆட்டங்கண்டபோது, நாடாளுமன்றத்துக்கு வெளியே நேரடியான மோதலில் எதிர்க்கட்சிகள் இறங்கின. இந்திரா காங்கிரசு முழுக்க முழுக்க பொறுக்கி அரசியலில் தஞ்சம் புகுந்தது. பணத்தை வாரி இறைத்து லாரிகளில் ஆள் பிடித்து வந்து இந்திரா வீட்டு முன்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சஞ்சய் காந்தி இந்திராவின் வாரிசாக மட்டுமல்ல,பொறுக்கி அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிழைப்புவாதிகளின் குண்டர்படை கட்டினார். அவசரநிலை ஆட்சியின்போது உள்ளூர் அதிகாரம் அவர்களின் கைகளில்தான் இருந்தது.
அவசரநிலை ஆட்சிக்குப்பிறகு பிரச்சாரங்கள், கூட்ட ஏற்பாடுகள் உட்பட எல்லாத் தேர்தல் வேலைகளும் தொழில் ரீதியில் நடத்துபவர்களுக்கே ஒப்படைத்தது காங்கிரசு. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின. டெல்லி, பம்பாய் போன்ற பெரும் நகரங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு (ஆள் சப்ளை) மக்களைத் திரட்டித் தருவதையே தொழிலாகக் கொண்டே கும்பல்கள் உள்ளன. பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிரிமினல் குற்றவாளிகளே எம்.எல்.ஏக்-கள் மந்திரிகளாகும் அளவுக்குப் பொறுக்கி அரசியல் வளர்த்து விட்டது.
பொறுக்கி அரசியலுக்குப் பலியான நடுத்தர வர்க்கம் ராஜீவின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறது.
சஞ்சய் காந்தியின் பொறுக்கி அரசியலை எதிர்ப்பதாகவும், அரசியல் தரகர்களை ஒழிக்கப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தபோது சவடாலடித்தார் ராஜீவ். ஃபேர் பேக்ஸ், போபார்ஸ் விவகாரங்கள் அம்பலமாகி ராஜீவின் யோக்கியதைகள் தெரிந்துவிட்ட நிலையில் அவரும் பேரணிகள் நடத்தத் துவங்கி விட்டார். நவீனப்படுத்துவது, தொழில் மயமாக்குவது, திறமை -நிர்வாகத்துக்கு முதலிடம் தரப் போவதாக சவடாலடித்தவர் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் தமது கொள்கையென்று சஞ்சம் புகுந்து விட்டார். பிழைப்புவாத அரசியல் கும்பலிடம் சரணடைந்து விட்டார். எம்.ஜி.ஆர் பாணியிலான “இலவச அன்பளிப்பு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி தேர்தலைக் குறிவைத்து செயல்படுகிறார். எம்.ஜி.ஆர் பாணியிலே சினிமா நடிகர்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில் இறங்கியுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதி நிலை பொறுக்கி அரசியல்:
காமராஜரின் காலத்தில் பண்ணையார் – முதலாளிகள் மாளிகையில் நடந்த சாதி அரசியல் வீழ்த்தப்பட்டு கருணாநிதியின் பொறுக்கி அரசியல் முன்னுக்கு வந்தபோது “பழுத்த ஜனநாயகவாதிகள்” அருவருப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் அண்ணாத் துரையின் ”பெருந்தன்மை”, கருணாநிதியின் ”நிர்வாகத் திறமை”, பிறகு எம்.ஜி.ஆரின் ”மனிதாபிமானம்” ஆகியவற்றைச் சொல்லிச் சகித்துக் கொண்டார்கள். சஞ்சய் காந்தியின் அவசரநிலை ஆட்டங்கள் அந்தப் பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு பீதியூட்டினாலும் ராஜீவ் பதவிக்கு வந்தபோது “பரிசுத்தம்” வந்ததென்று மகிழ்ந்து போனார்கள். இப்போது தமிழ்நாட்டில் வீரப்பன் – ஜெயலலிதா கும்பல்களும், டில்லியில் ராஜீவும் பொறுக்கி அரசியலை முழு வீச்சில் நடத்துகிறார்கள். அது “பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு” பீதியூட்டுகிறது.
“உலகிலேயே சிறந்தது, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை; சில பிழைப்புவாதிகள் அரசியலில் புகுந்து கெடுத்து விட்டார்கள்; அரசியல் தரம் தாழ்ந்து போய்விட்டது” என்று ‘சமாதானம்’ சொல்லுகிறார்கள், போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா, காங்கிரசிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசியலுக்கு வெளியிலுள்ள “பழம் தேசபக்தர்கள்” ஆகிய “பழுத்த ஜனநாயகவாதிகள்”. ஆனால் பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்க ரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசியவாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைத்ததைப் போல கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) பாசிச ராஜீவ் கும்பலுக்கு உதவும். நாஜிக் கட்சியைப் போல பிழைப்பு வாதிகளைக் கொண்ட காங்கிரசு, எம்.ஜி ஆர், கருணாநிதி கட்சிகள் அரசியல் – அமைப்பு அடிப்படையைக் கொடுக்கும்.
ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரவாதத்தின செல்வாக்கில் இருக்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளின் பிழைப்பு வாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதார வாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து பாமரத்தனமான சோசலிச சித்தாந்தத்தைப் போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதனால்தான் பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டை சமூக அடிப்படையாகவும், மார்க்சிய – லெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக இருந்து அதை முறியடிக்க முடியும்.