Sunday, May 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 532

வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !

0
பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்

வருங்கால வைப்புநிதி மோசடிகள்: அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம்!

ற்போதுநடைமுறையில்இருக்கும்தொழிலாளர்நலன், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்களாலும், தியாகத்தாலும் கிடைக்கப் பெற்றவையாகும். அத்தகைய உரிமைகளில் ஒன்றுதான் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி. குறைந்தபட்சம் 19 ஊழியர்களுக்கு மேலுள்ள ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தில் இருந்து சுமார் 12% தொகையைப் பிடித்தம் செய்து,அதே அளவு தொகையை நிர்வாகமும் தன் பங்காக அளித்து, அவையிரண்டையும் ஒவ்வொரு மாதமும் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் செலுத்த வேண்டும். இத்தொகைக்கு 8.8% வட்டியும்அளிக்கப்படுகிறது. வேலைஇழப்பு ஏற்படும் காலங்களில், அவசியச் செலவுகள் ஏற்படும் காலங்களில், எல்லாவற்றுக்கும் மேலாகப் பணி ஓய்வுக்குப் பிறகு இந்தச் சேமிப்புதான் தொழிலாளர்களின் வாழ்க்கை ஆதாரமாக இருந்துவருகிறது.

pf-fraud-bengalure-workers
தேவை ஏற்படும் சமயத்தில் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதைத் தடை செய்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி பெங்களூரு ஆயுத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

வருங்கால வைப்பு நிதிக்காகத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை முறையாக அரசிடம் செலுத்தாமல், தொழில் நிறுவனங்கள் மோசடி செய்து சுருட்டிக் கொள்வது இந்தியாவில் கேட்பாரின்றி நடந்து வருவது புதிய விசயமல்ல என்றாலும், சமீபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 10,932 நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அரசு மற்றும் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் முன்மாதிரி நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 1,195 நிறுவனங்கள் இத்தகைய திருட்டு, மோசடியில் ஈடுபட்டிருப்பதும், குறிப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மட்டுமே சுமார் 4,000 கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் செலுத்தாமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருப்பதும் இந்த மோசடியின் பிரம்மாண்டத்தைப் புட்டு வைக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையைச் சுருட்டிக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், தாம் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல், செலுத்தியது போன்று ஒரு மோசடியான தணிக்கை அறிக்கையைத் தயார் செய்கின்றன. சுருட்டிக் கொண்ட தொகை அனாமத்தாகக் கிடைத்த மூலதனமாகவோ அல்லது கருப்புப் பணமாகவோ மாறிச் செல்கிறது. தொழிலாளர்களோ தமது சேமிப்பு கிடைக்குமா, கிடைக்காத என்ற திரிசங்கு நிலையில் அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திருப்பித் தரப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இந்த 4,000 கோடி ரூபாய்தான் பேருந்துகளுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதரிபாகச் செலவீனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடுகின்றன.

வருங்கால வைப்பு நிதி வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இந்த மோசடி நடைபெற வாய்ப்பில்லை என்பதோடு, இந்தக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட முதலாளிகளை, அதிகார வர்க்கத்தை விரல்விட்டு எண்ணிவிடலாம். பசுவைப் பாதுகாப்பதற்குத் தனிச் சட்டமிருக்கும் இந்த நாட்டில், இலட்சக்கணக்கானதொழிலாளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொள்ளும், நம்பிக்கை மோசடி செய்யும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டம் கிடையாது.

புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த மறுநிமிடமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டன. வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது தமது வைப்பு நிதி முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை ரத்து செய்யப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த மறுநிமிடமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டன. வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது தமது வைப்பு நிதி முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை ரத்து செய்யப்பட்டது.

போனஸைப் போலவே, வைப்பு நிதிக்கு வழங்கப்படும் முதலாளிகளின் பங்கு, தொழிலாளி ஓய்வுபெறும் நிலையில் கொடுக்கப்படும் பணிக்கொடை, ஓய்வுதியம் ஆகியவையும் தொழிலாளிக்குக் கொடுக்கப்படாத ஊதியத்தின் ஒருபகுதிதானே தவிர, முதலாளியின் கைக்காசிலிருந்து செலவழிக்கப்படுவது அல்ல. ஆனால், தொழிலாளியின் வைப்பு நிதியைத் திருடிக் கொள்ளும் இந்தப் பகற்கொள்ளைக் கூட்டம், இவை அனைத்தையும் தம் மீது சுமத்தப்பட்ட சுமையாக, அதனைத் தியாக உள்ளத்தோடு தாம் சுமக்க முடியாமல் சுமந்துவருவதாக முதலைக் கண்ணீர் வடிக்கிறது. மேலும், இந்தச் சுமையை அரசும், தனியாரும் இனியும் சுமக்க முடியாது, அரசின் வருமானத்தில் ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே பெரும் பங்கு போய்விட்டால், மக்கள் நலப் பணிகளுக்குச் செலவு செய்ய முடியாது என்ற மோசடியான வாதங்களை முன்வைத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை, புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் கடந்த 2004-ஆம் ஆண்டில் கொண்டு வந்தும்விட்டது.

தொழிலாளர்களின் வைப்பு நிதியைச் சட்டவிரோதமான முறையில் தமது இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட முதலாளிகளை, அந்நிதியைச் சட்டபூர்வமாகவே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது, புதிய ஓய்வூதியத் திட்டம். இது அமலுக்கு வந்த மறுநிமிடமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டன. வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது தமது வைப்பு நிதி முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை ரத்து செய்யப்பட்டது.

பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியைப் பராமரிக்கும் பொறுப்பை அரசு வங்கிகளிடமிருந்து பறித்து, அதனைத் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்களான ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி.யிடம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனங்கள் அந்த வைப்பு நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கை பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடவும், அச்சூதாட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

தொழிலாளர்களைப் பொருத்தவரை, அவர்களின் வைப்பு நிதியை எந்த நிறுவனத்திடம் பராமரிக்க ஒப்படைப்பது, எந்தத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒப்புதல் தருவது என்ற உரிமை மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது வெட்டப்படும் ஆட்டிற்குத் தலையாட்டி சம்மதம் தெரிவிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லை.

இந்து மதவெறிக் கும்பல் பதவிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து ஏறத்தாழ 19,000 கோடி ரூபாய் பங்குச் சந்தையில் கொட்டப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொழிலாளர்கள் தமது வைப்பு நிதியிலிருந்து தேவைப்படும் சமயத்தில் பணம் எடுக்கும் உரிமையை ரத்து செய்து, 58 வயதுக்குப் பிறகுதான் அவர்கள் பணம் எடுக்க முடியும் என்ற மாற்றத்தையும் கொண்டு வந்த மோடி அரசு, தொழிலாளர்களின் சேமிப்பு கரைந்து போகாமல் இருக்கும் பொருட்டுதான் இதனைக் கொண்டுவந்திருப்பதாக நியாயப்படுத்தியது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான் இது. உண்மையில், தொழிலாளர்களின் வைப்பு நிதியை எவ்விதத் தடையுமின்றி, நீண்ட காலத்திற்குப் பங்குச் சந்தை சூதாடிகளின் காலடியில் கொட்டும் நயவஞ்சகம்தான் இது.

பெங்களூரைச் சேர்ந்த ஆயுத்த ஆடை பெண் தொழிலாளர்கள், தங்களின் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்துப் பெரும் போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த மாற்றத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது, மோடி அரசு. மேலும், ரத்து செய்யப்பட்ட பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் மீண்டும் கொண்டுவரப்படும் என அறிவித்திருக்கிறது. எனினும், புதிய ஓய்வூதிய திட்டம் என்னும் கத்தி தொழிலாளி வர்க்கத்தின் தலைக்கு மேலே இன்னமும் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

கூலி வெட்டு தொழிலாளி வர்க்கத்தின் நிகழ்காலத்தைப் பறிக்கிறது என்றால், வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் செய்யப்படும் மாற்றங்களும், மோசடிகளும் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்காலத்திற்குக் குழிபறிக்கிறது.

– சோலை
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

17

1990-க்குப் பின் எண்ணற்ற ஊரடங்குகளை காஷ்மீர் கண்டிருக்கிறது. ஆனால், ஈத் பண்டிகை அன்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாதது இந்த ஆண்டில்தான். செல்பேசிகள், இணையம் ஆகிய தகவல் தொடர்புகள் அனைத்தும் ஈத் பண்டிகையையொட்டி 72 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டிருக்கின்றன. ஆளில்லா உளவுக்கருவிகளான டிரோன்கள் விண்ணிலிருந்து கண்காணிக்கின்றன. இதுதான் இன்றைய காஷ்மீர்.

kashmiri-struggle-against-indian-oppression-3
கோப்புப் படம்

காஷ்மீர் மீதான ஒடுக்குமுறை, பாலஸ்தீனத்தைப் பிரதிபலிக்கிறது. பண்டிட்டுகளுக்கான தனிக் காலனிகள், இராணுவத்தினருக்கான குடியிருப்புகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்துமயமாக்கும் பாரதிய ஜனதா அரசின் முயற்சி இஸ்ரேலின் அணுகுமுறையை அப்படியே ஒத்திருக்கிறது. போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை மட்டுமின்றி, இழிபுகழ் பெற்ற பெல்லட் ரவைகளையும் இந்திய அரசு இஸ்ரேலிடமிருந்துதான் இறக்குமதி செய்திருக்கிறது. புர்ஹான் வானியின் கொலையைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 10,000 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். 73 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 700 இளைஞர்களின் பார்வை பறிபோயிருக்கிறது.

“கடுகு அளவே உள்ள இந்த காரீய ரவை ஒன்றை உடலிலிருந்து அகற்றுவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. விழிகளில் பாய்ந்திருக்கும் இந்த ரவைகளை அகற்றுவது எப்படி என்று எங்களுக்கு எந்த மருத்துவப் பாடநூலிலும் சொல்லித் தரப்படவில்லை” என்று கூறிக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள். இந்தக் கொடூரமான அடக்குமுறை உலகெங்கும் அம்பலப்பட்டுப் போனதன் காரணமாக, பெல்லட் குண்டுகளின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, அதற்கு மாற்று உத்திகளை யோசிப்பதாகக் கூறினார் ராஜ்நாத் சிங். சொல்லி சில நாட்களிலேயே ஒவ்வொன்றிலும் 635 ரவைகள் கொண்ட ஒரு இலட்சம் தோட்டாக்கள் சி.ஆர்.பி.எப். படையினருக்கு வந்து சேர்ந்தன.

இருப்பினும், தோட்டாவால் துளைக்கப்பட்ட மக்கள் “ஆசாதி..ஆசாதி” என்று முழங்க, துப்பாக்கி ஏந்திய பா.ஜ.க. அரசின் இராணுவம் அவர்களின் முன்னே மண்டியிடும் காட்சியை நாம் காண்கிறோம். “முதல்வர் மெகபூபாவை உங்கள் மகளாக நினைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்று ஹுரியத் தலைவர் கிலானிக்கு கடிதம் எழுதுகிறது ஆளும் பி.டி.பி. கட்சி. காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370-வது பிரிவை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று பேசிவரும் பாரதிய ஜனதாவின் உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், “அரசியல் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு யாருடன் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறோம்” என்று கூறி, 370-வது பிரிவை விழுந்து கும்பிடுகிறார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஆத்திரம் கொண்ட முதல்வர் மெகபூபாவை அடக்க முயன்று, அனைவர் முன்னிலையிலும் அசடு வழிகிறார் ராஜ்நாத் சிங். அவருடன் காஷ்மீர் சென்ற யெச்சூரி, ராஜா உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்கள் ஹுரியத் தலைவர் கிலானியின் வீட்டு வாசலுடன் திருப்பி அனுப்பப்படும் காட்சி எல்லா ஊடகங்களிலும் சந்தி சிரிக்கிறது. “உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் போராட்டத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று முகத்தில் அடித்தாற்போல அவர்கள் கூறிய பதில், ஒருமைப்பாட்டு புரோக்கர்களை நிலைகுலைய வைக்கிறது.

எனினும், நம் கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தை, பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்து ஒரு முன்மாதிரியை உருவாக்கிக் காட்டியிருக்கும் அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைப் புரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள். இதுதான் நாட்டுப்பற்று என்றால், அதைக் காறி உமிழ்வோம்!
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

APSC- invited lecture on New education policy – 2016 held in IIT

2

apscAmbedkar-Periyar Study Circle
(An independent student body recognized by IIT Madras)

A Critique of the recent MHRD draft on
“National Education Policy(NEP) 2016”
“Neo-Macaulay + Neo-Manu dharma”

By
Ramesh Patnaik
Organizing secretary, All India Forum for Right to Education
on 21-09-2016

Education plays a vital role in enlightening the society. However it is also one of the powerful tools in the hands of State through which a particular domain of knowledge is transferred to working masses, thus serving the ruling class interests and lays the foundation for seamless exploitation. The Modi govt.’s “New education policy-2016 (NEP)” is another step in this direction. The recent draft on NEP heavily stresses on “skill development” for the workers of our country. It is committed to produce skilled bonded labor for global capital by denying education to 80% of working masses with the Brahminical value which is referred in the preamble of the draft as “global citizens with their roots deeply embedded in Indian culture and traditions”.

APSC-NEP-bannerLast year Ministry of Human Resource development (MHRD) formed a five member committee headed by T. S. R. Subramanian to draft the New Education Policy-2016(NEP). Four among these members are bureaucrats and the sole academician is J.S Rajput who made NCERT a courtyard of RSS while serving as its chairman. The committee submitted the NEP report on April 30th. Subsequently MHRD has released 43 page document titled “Some inputs for the draft of New Education Policy 2016”, seeking public opinion.

The committee claims that the quality of school education, in terms of learning outcomes, is deniably poor, particularly in government schools. The committee proposes a dreadful recommendation to improve the outcomes by excluding majority of working masses from education. The draft says that “Alternative schools (evening schools) will be provided for children from slums and migrant labor background; no detention policy will be limited up to class V and detention will be restored at the upper primary (6th-8th); Open schooling for the school dropouts, 10th exams will be at two levels: Part-A at a higher level and part-B at a lower level; Only 10 lakh scholarship for higher education” and so on;

As per RTE Act-2009 free and compulsory education is fundamental right till the age of 14 to all children. But implementation of NEP will lead to denial of school education for slum children who are in socially and economically deprived condition. According to the annual Status of Education Report -2014 (ASER) survey nearly 50% of Class 5 students and 25 % of class 8 students are not able to read a Class 2 level text and their basic arithmetic skill is poor. Mere restoration of detention policy above 5th class without assuring quality of education will further increase the dropouts in upper primary.

As per NEP 10th has two levels: Part-A at a higher level and part-B at a lower level. Students who feel that science, technology engineering and mathematics (STEM) is difficult can choose level-B. But they are not eligible to pursue higher education in STEM stream. Further, NEP recommends national talent test after class 10th to receive higher education fellowship. Currently 33.3 million students are enrolling in higher education but NEP will be offering only 1 million fellowships. i.e. a mere 3% of students can get fellowships. Moreover these exam will be mostly based on the CBSE frame work which will turn out to be beneficial for children from urban elite; those from rural area will be worst affected. Only a small section comprising upper caste and upper middle class will have access to higher education.

The District Information System for Education-2014 statistics reveals that level wise school drop outs for Ist –Vth, Ist– VIIth and Ist-Xth are 20%, 36.3% and 47.4% respectively. The recommendations of NEP instead of enhancing the learning outcomes, sets out to double the dropout level and the dropouts are tactically pushed to skill training. As per Prof. Anil Sadgopal(AIFRTE) “this policy will be aggressively pursued to exclude more than 80% of the Indian population comprising SCs, STs, OBCs and Muslims from education, and push them into skill shops.”

In the same line Modi government introduced the Child Labor (Prohibition and protection) amendment act 2016. It allows children to “help the family in the fields, do home-based work or work in the forest” after the school hours, on holidays and children can be engaged in entertainment industry. “Home based work” is nothing but caste based occupation. Instead of abolishing child labor, RSS-Modi govt. is pushing the children to caste based occupations which in turn leads once again to compartmentalized caste system . The old Manu Dharma denies education for Panchmas and Suthras and reserves education exclusively for Brahmins which makes them so power full in the Brahminical system and made them rulers in the feudal system. Similarly in the Neo-Manu Dharma, New Education Policy-2016 creates a new division of laborers by denying education to 80% of Indian population and training them as skilled wage laborers to serve imperialism and reserving knowledge based work for small section of people, a regeneration of caste compartmentalization.

NEP recommendations in higher education section are in line with WTO-GATS agreement. NEP acts as the strategic framework to implement the GATS agreement completely. CEO in the governing bodies, Educational tribunal, curbing student politics in campus; financial autonomy; compulsory in-take of foreign students and faculty in higher education institutes; GAIN, dismantling the UGC and AICTE; MOOCs; allowing foreign universities; center for excellence; incubation centers; fees hike; allowing foreign direct investment (FDI) and so on. More than half of the recommendations have been already implemented in IITs. For instance, MHRD singed a MoU with U.S. to import 1000 faculty every year to teach in Indian institutions under GIAN program. Each U.S. faculty’s salary is 7.2 lakh for 20 sessions. India signed similar MoU with Germany, Canada and other European countries. Further, MHRD decided to conduct a job fair in top institutions (mostly from U.S.) to recruit a faculty for IITs. MHRD claims Indian students are (PhDs from IITs, NITs) not up to the mark. However 2,600 faculty positions are vacant in IITs and 16,000 faculty positions are vacant in IITs, NITs, IIITs, IISERs and central universities. NEP/MHRD worries more on foreign faculty than the qualified Indians. Any country which committed its education to WTO-GATS, mode-4 “Movement of natural person”, should give importance to teachers/professors from other countries. Indian education system is controlled by WTO-GATS. Similarly trades in Goods, services and intellectual rights are also controlled by the WTO through various agreements (GATS, GATT, TRIPs) to serve the interest of the imperialists. (We refer this as recolonization)

Macaulay education system trained Indian people to be physically Indian but English in their thought process so that they serve British imperialists without any hesitation. Now Neo Macaulay education policy (NEP) will produce millions of skilled work force as cheap labor for global capital; it welcomes foreign educational monopolies as a quality education provider to loot the Indian education market.

Finally, NEP recommends that Sanskrit must be a compulsory subject in schools. Already, MHRD has initiated several activities with an agenda; to saffronize young minds imposing Sanskrit in central government schools and Sanskrit cell in IITs with the intention of achieving their long term agenda Hindu-Hindi-Hindu Rashtra. Text books will preach Rama is the greatest king in Tamil Nadu, Mahabali is a demon, artificial intelligence were discovered in Vedic period, aerodynamics laboratory was first established in Ayodya and so on. Such unscientific, irrational nonsense will be taught in class rooms as Indian history and our glorious past. Our future generations’ mind will be flooded with the conservative thoughts and superstitious beliefs which retards rational scientific thinking and nurtures slave mentality. Naturally, such an employee in a factory won’t understand and question the unlimited exploitation of global capital. During feudal era what caste system did for the feudal exploitation, in recolonization era, Hindutva will play a same role in protecting/justifying exploitation by imperialists. Hence, Hindu Rashtra is not merely a Hindu state; it is a state which assures subordination of Indian working masses and Natural resources to sustained exploitation by U.S. imperialists. Such an anti-people education policy must be prevented at any cost. We the students of the frontier Institute should be at the fore-front to demolish the National education policy-2016.

Let us unite to defeat the NEP-2016

காவியைக் கரைக்கும் காவிரி !

2

காவியைக் கரைக்கும் காவிரி!

cauvery-trichy
‘‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை”

‘‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை”
என,
மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால்
மகிழ்ந்து பாடப்பட்ட காவிரி!
இன்று,
‘‘சூழ்நிலைத் திரிந்து
கன்னட இனவெறி வாட்ட
காவிரி டெல்டா மீத்தேன் குடிக்க
கார்ப்பரேட் பணவெறி மூட்ட
தன் வாழ்நிலை இழந்து பாலையாக”
நம் கண்முன் காயும் காவிரி.

மங்கிய வாழ்வின் நினைவுகளாய்
மனதில் உறைந்த இரத்தம்
குடிக்க
அன்னை காவிரி மீதினிலே
ஆயிரமாயிரம் மணல் லாரி!

எடியூரப்பா
(எடியூரப்பா) திருட்டு ஊழல் சொத்தைக் காக்க திருநள்ளார் சனீஸ்வரனின் தீர்த்தம்

குறுவையை
கொலை செய்தது
இந்திய தேசியம்
இப்போது,
சம்பாவுக்கும் சாவு மணி

­­ஒரு சொட்டுத் தண்ணீரும்
தரமுடியாதென
சட்டவிரோத திமிரில் பேசுவது
கர்நாடகாவை ஆளும் காங்கிரசின்
அமைச்சர் மட்டுமல்ல
இந்தியாவை ஆளும் பா.ஜ.க
எடியூரப்பாவும்தான்!

திருட்டு ஊழல் சொத்தைக் காக்க
திருநள்ளார் சனீஸ்வரனின்
தீர்த்தம் கேட்குது,
உரிய நீரை தமிழகம் கேட்டால்
எடியூரப்பாவுக்கு நமச்சல் எடுக்குது!

ஊழல் சொத்துக்கு வரம் கேட்க
உனக்கு தமிழ்நாட்டு சாமி கேட்குது,
உரிய காவிரியின் வரவைக் கேட்டால்
உடம்பெல்லாம் சாமியாடுது,
வரும் கோபத்தில்
கோயில் மாடுகள்
சாணி சேர்க்குது!

bigotry and cow flesh
மாட்டுக்கு ஒன்று என்றால் நாட்டுக்கே கேடு என ஆளையே உரிக்கிறது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம்

காவிரிக் கரையில்
காங்கிரசுக்கு ‘தர்ப்பணம் கொடுத்து
காலம் பல ஆச்சு.
காவியே, இனி உனக்கும்
உரிய நேரம் வந்தாச்சு!

மாட்டுக்கு ஒன்று என்றால்
நாட்டுக்கே கேடு என
ஆளையே உரிக்கிறது
ஆர்.எஸ்.எஸ் பரிவாரம்
நம் ஆற்றுக்கு ஒன்று எனில்
ஆடக் காணோமே!
ஆளை ஏய்க்குது
‘இந்து தேசிய அரிதாரம்!

இல்லாத ராமனுக்கு
கோயில் கட்ட
இங்கிருந்து செங்கல் எங்கள்
இல் வாழும் காவிரிக்கு
எங்கே கர்நாடகாவில் உன் குரல்?

‘ராமஜென்ம பூமியை
மீட்க! வா என
மசூதியை இடிக்க
கடப்பாறையோடு வரச்சொன்ன
‘இந்து ஒற்றுமையே
காவிரி உரிமையை மீட்க
கபினியின் பக்கம்
எங்கே உன் கரசேவை?

‘தமிழ்த் தும்பி தருண் விஜய் கூட
கருநாடகா பக்கம் போய்
தமிழ்க் காவிரிக்காக
பறபறக்கக் காணோமே!

tarun_vijay_modi
‘தமிழ்த் தும்பி தருண் விஜய் கூட கருநாடகா பக்கம் போய் தமிழ்க் காவிரிக்காக பறபறக்கக் காணோமே!

அய்யன் வள்ளுவருக்கு
சிலை எடுப்பது இருக்கட்டும்
முதலில்,
அருமைக் காவிரிக்கு
ஒரு நிலை எடுத்துக் காட்டட்டும்
இந்தத் திடீர்த் தமிழ்க் காதலர்!

திருவள்ளுவருக்கு
கங்கைக் கரையில் அவமானம்
காவிரிக்கு
தேசிய நீரோட்டத்தால் ஊனம்.
எங்கே உங்கள்
‘இந்து ஒற்றுமை பொங்…கல்!

பிள்ளையார் சிலையைத் தூக்கிக்கொண்டு
கடலில் கரைக்க ஊர்வலம் போகும்
‘இந்து உணர்வு
காவிரியை அழைத்துக் கொண்டு வரமட்டும்
கால் மரத்துப்போகும் இரகசியம் என்ன?

மத்தியில் காவி ஆட்சி
காவிரிக்கு சிறை!
இனி
மகா கணபதியையும்
கொண்டு போய்
கர்நாடகாவிலேயே கரை!

மோடி
தேடித் தேடிப் பார்த்தாலும் காவிரிப் பக்கம் காணவில்லை ‘‘மன் கி பாத் மோடி!

தமிழக விவசாயி ‘இந்துவுக்கு
தண்ணீர் தராமல்
எந்த லஸ்கர் தடுக்குது?
உன் காவி அனுமார்தான்
எங்கள் காவிரிக்கும் வேட்டு வைக்குது!

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளே
‘இந்து ஒற்றுமை எங்கே வாழுது!

கங்கையை புனிதமாக்க பல கோடி
காவிரியைப் பிணமாக்க
கார்ப்பரேட் பா.ஜ.க ஜோடி!
தேடித் தேடிப் பார்த்தாலும்
காவிரிப் பக்கம் காணவில்லை
‘‘மன் கி பாத் மோடி!

cauvery-L-1
காவி தேசபக்…தீ…யில் பாரத மாதாவின் தலையும் எரியுது… காலும் எரியுது….

ஊரை ஏய்க்க இந்திய தேசியம்
ஊரை கெடுக்க இந்து தேசியம்
காவி தேசபக்…தீ…யில்
பாரத மாதாவின்
தலையும் எரியுது…
காலும் எரியுது….
காஷ்மீர் முதல் காவிரி வரை
சாயம் வெளுக்குது.

தமிழகக் ‘கோமாதாக்கள்
தண்ணீரின்றித் தவிக்குது,
கோமாதாவுக்கு ஒன்றெனில்
குதித்துவரும் காவிகளே…
உங்கள் கர்நாடகா ஆவிகளுடன்
கலந்து பேசி,
காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது
பாக்கிஸ்தான் சதியா?
பார்ப்பனிய சதியா?

பகர்மின்!
கோமாதாவின் பாங்கர்களே…!

– துரை.சண்முகம்

தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்

0

மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதலை கண்டித்து பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

புதிய கல்விக் கொள்கை- 2016: பார்ப்பன பாசிச ஜெயா அரசின் சாயம் வெளுத்தது!

nep-burning-rsyf-chennai-bannerபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிய பு.மா.இ.மு மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி 4 பேரை கைது செய்து சிறையிலடைத்ததை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!

சமஸ்கிருதத்தை திணித்து நாட்டை பார்ப்பனியமயமாக்குவது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவையான திறமையான கொத்தடிமைகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது மோடி அரசு. அதை முழுமையாக வெளியிட்டால் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்பதால் “தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்” என்ற பெயரில் 43 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பக்கத்துக்குப் பக்கம் கொடிய பார்ப்பனிய விசத்தைக் கக்கும் புதிய கல்விக் கொள்கை நகல் அறிக்கை வெளிவந்தது முதல் அதை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாணவர்களைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினோம். போராடிய எமது பு.மா.இ.மு மாணவ – மாணவிகள் மீது போலீசை ஏவி கொலைவெறித்தாக்குதலை நடத்தியது, ஜெயா அரசு. மாணவ – மாணவிகளை தரத்தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். சென்னை, கோவையில் ஆண் போலீசார் மாணவிகள் – இளம்பெண்களை சாலையில் தள்ளி ஆடையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தினார்கள். விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை விரட்டியடித்துவிட்டு பு.மா.இ.மு முன்னணியாளர்களான ஞானவேல், சதீஸ், வித்யாசாகர், பிராங்க்ளின் ஆகிய நான்கு மாணவர்களை மட்டும் கைது செய்து 143, 285, 188 IPC ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாட்டின் பெருவாரியான மாணவர்களின் கல்வி உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிய பு.மா.இ.மு மாணவ – மாணவிகள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதையும், 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். பிற்போக்கு சக்திகள், தனியார்பள்ளி முதலாளிகளின் நலனுக்காக அன்று அறிவியல் பூர்வமான – சிந்தனையாற்றல் கொண்ட சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கியது இதே ஜெயலலிதா அரசுதான். உண்மையில் அதே வழியில்தான் இன்று சமஸ்கிருதத்தை திணிக்கும், தனியார் கல்விக் கொள்கையர்களுக்கு கல்வியை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்து, பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட – இந்தித் திணிப்பை விரட்டியடித்த தமிழ் மண்ணில் இதை அனுமதிக்கக் கூடாது.

எனவே, விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட 4 பு.மா.இ.மு மாணவர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மாணவர்கள் – பேராசியர்கள் – ஜனநாயக சக்திகள் குரல்கொடுக்க வேண்டும்.

சிதம்பரத்தில் வரும் 25-ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேரணி -கருத்தரங்கம் – பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று போலீசார் அனுமதியை மறுத்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருபோதும் அஞ்சாது போராட்டத்தைத் தொடரும்.

இவண்
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் செய்தி, படங்கள்

1. சென்னை

20-09-2016 அன்று புதிய கல்விக்கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தபோவதாக, அண்ணாசாலை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்து பீதி அடைந்த போலீசு காலை 8.00 மணியில் இருந்தே அண்ணாசாலை தபால்நிலையத்தில் 6-க்கும் மேற்ப்பட்ட போலீசு வேன்கள், பேரிகாடுகளுடன் எரிப்பதை தடுக்க நின்று கொண்டிருந்தது.

nep-burning-chennai-police-in-forceஅதில் ஒரு போலீசு “நா.. பாத்ததுலயே இவங்க மட்டும் தா…ப… விடாபிடியா போராடுவாங்க…” என்று பத்திரிகை நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

“இவங்க மட்டும் தான் எப்போமே நமக்கு ஹாட் நியூஸ் தருவாங்க! இவங்க எங்க போராட்டம் பண்ணும்-னு நினைக்கிறாங்களோ அங்கதான் போராட்டம் பண்ணுவாங்க பா… போலீசெல்லாம் இவங்க மதிக்கவே மாட்டாங்க” என்று ஒரு பத்திரிகையாளர் புதிதாக வந்த பத்திரிகை நண்பரிடம் பு.மா.இ.மு-வை பற்றி அறிமுகப்படுத்தினார்.

ஒரு பெண் பத்திரிகை நண்பர் “நான், RSYF – க்கு போன் பன்னிக்கேட்டேன் அவங்க ரெண்டு பக்கம் இருந்தும் வருவாங்களாம். நம்ம எப்பிடி, ரெண்டு பக்கமும் விஷுவல் எடுக்கிறது” என்ற ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இதை ஒட்டுக்கேட்ட போலீசு, தாங்கள் அழைத்து வந்த 100-க்கும் மேற்ப்பட்ட அடியாட்களை இரண்டு பக்கமும் செல்வதற்காக 50 – 50 போலீசாக பிரித்து நிற்க வைத்துக் கொண்டிருந்தது.

சரியாக, நண்பகல் 1.00 மணியளவில், சென்னை அண்ணாசாலை தர்கா அருகிலிருந்து சாலையே அதிரும் அளவிற்கு முழக்கவிட்டபடி, தபால்நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் போராட்டம் துவங்கியது. ஏற்கனவே பிரிக்கப்பட்ட போலீசுகள் ஓட ஆரம்பித்தனர். மீதி இருந்த போலீசு, சாலையில் அந்தப்பக்கம் வந்துவிட போகிறார்கள் என தாபால்நிலையத்தின் வாயிலிலேயே ஈ அடித்துக்கொண்டிருந்தது.

nep-burning-chennai-rsyf-03மற்ற கட்சிகாரர்களிடம் கேட்பது போல “அங்கவந்து கைதுஆவுங்க” என்றது போலீசு. தோழர்கள், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் போலீசு அதிகாரி போராட்ட தலைவர் சாரதியிடம், “என்ன சாரதி அங்கவந்து கைதாவுறீங்களா? இல்ல இங்கயே கைதாவுறீங்களா?” என்று கேட்டார்.

தோழர்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், திடீரென கல்வி மறுப்புக்கொள்கை நகலை பற்ற வைத்தனர். பதறிப்போனது, போலீசு. “ஏய், என்ன பண்ற என்ன பண்ற” என பீதியில் கத்தியது. உடனே ஓடிவந்து எரிந்துக் கொண்டிருந்த பேப்பரை அணைத்து வீரச்செயல் புரிந்தது போலீசு. மறுபுறம், பேப்பரை கொளுத்தத் துவங்கினர் தோழர்கள், போலீசு பாய்ந்து வந்து பேப்பர்களை பிடுங்கிச் சென்றனர். இந்த வீரசெயலில் ஈடுபட்டதற்கு அம்மாவிருது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

nep-burning-chennai-rsyf-02போலீசு தோழர்களை கைதுசெய்ய துவங்கியது. எரிப்புப்போராட்டத்தை அடுத்து மறியலாக போராட்டத்தை நீட்டித்தார்கள் தோழர்கள். பெண்கள் குழந்தைகள் என பாராமல் அனைவரையும் ரோட்டில் தரதரவென இழுத்து வேனில் ஏற்றியது போலீசு. இதில் ஒரு பெண் தோழர் மயக்கமடைந்தார். அதற்கு, “உன் புள்ள படிக்கதான நாங்க போராடுறோம்” என்று முழங்கினர் பு.மா.இ.மு தோழர்கள்.

பெண் தோழர்களை கைதுசெய்ய அழைத்து வரப்பட்ட பெண் போலீசுகள், பெண் தோழர்களை பார்த்து, பயந்து தொலைவிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே கோபமாக இருக்கும் போலீசு அதிகாரி, “ஏய்! அங்க என்ன பன்ற இங்க வா!”- என கத்தி கூச்சலிட ஆரம்பித்துவிட்டார். உண்மையில் மறியலுக்கு போலீசே அனுமதியளித்து நடத்தியது போலும், ஏனெனில் தோழர்களை கைதுசெய்ய, என்ன செய்வது என தெரியாமல், வாகனங்களை நடுரோட்டில் போட்டுவிட்டது. இதனால், அந்த சாலையில் அரைமணிநேரம் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

30 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கைதுசெய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைத்தது போலீசு. காகிதத்தை காப்பாற்றிய போலீசே, இந்த கல்விக் கொள்கையால் உன்வீட்டில் தீப்பற்றி எரியும் அப்போது வருவாய் எங்களிடம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

2. கோவை

 

 

கோவை – காந்திபுரம் டவுன் பஸ்டாண்டு போர்க்களமானது.nep-burning-kovai-rsyf-12

ரியாக 11 மணியளவில் போராட்டம் துவங்கியது. காலையில் இருந்தே காத்துக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட போலீசு, வந்த ஐந்து நிமிடத்திலேயே கைதுசெய்ய முற்ப்பட்டது. தோழர்கள் கல்வி மறுப்புக் கொள்கை நகலை எரிக்க ஆரம்பித்தனர். காகிதத்தை எரிய விடாமல் காப்பாற்றுவதற்காகவே அழைத்துவரப்பட்ட IS போலீசுகள் 4 பேர் அந்த காகிதத்தை பிடுங்கிக் கொண்டனர். அதன் பின் போலீசுக்கும், தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. தோழர்களை தள்ளிவிடுவது, ரோட்டில் தரதரவென இழுத்து செல்வது என தனக்கே உரிய வெறிச்செயலை காட்ட ஆரம்பித்தது.

nep-burning-kovai-rsyf-11“ஆம்பளய ஏன் அணைச்சிட்டு இருக்க, மூடிட்டு வண்டில ஏறு” என்று பெண் தோழர்களையும், “ஏண்டா போய் பொம்பள பின்னாடி இருக்க” என ஆண் தோழர்களையும் ஆபாசமாக பேச ஆரம்பித்தது, காகிதம் பொறுக்க அழைத்து வரப்பட்ட IS போலீசுகள். பின்னர், போலீசுக்கும் தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. தோழர்கள் பறையடித்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். கல்வி மறுப்புக் கொள்கை நகலை எரித்தனர். இந்த நகல் எரிப்புப் போராட்டம் கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடைபெற்றது. இதனால் கோவை-காந்திபுரம் டவுன்பஸ்டாண்டு போர்க்களமானது.

nep-burning-kovai-rsyf-10சுமார் 30-க்கும் மேற்ப்பட்ட தோழர்களை அடித்து தரதரவென இழுத்து வேனில் ஏற்றி கைதுசெய்தது. எஞ்சி இருந்து 4 பெண்தோழர்கள் கடைசிவரை முழக்கமிட்டு கொண்டிருந்தனர். ஒரு ஆண் பொறுக்கி போலீசு, ஒரு பெண் தோழரின் ஆடையை கிழித்தான். தோழர்களை இழுத்து சென்றதில் ஒரு புதிய தோழர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். பின் அனைவரையும் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

மண்டபத்தினுள் தோழர்கள், “பெண்களை இழுத்து ஆடையை கிழித்த பொறுக்கி போலீசையும், இன்னும் தோழர்களை அடித்து இழுத்து சென்ற போலீசுகளும், தோழர்களை ஆபாசமாக பேசிய IS போலீசுகளும், எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல், உணவு சாப்பிடமாட்டோம்” என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணிநேரத்திற்கு பின் போலீசு அனைவரும் வந்து தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.

தோழர்களின் இந்த விடாப்பிடியான போராட்டம், அரசுக்கு அஞ்சாத நெஞ்சூரத்தை நமக்கு பறைசாற்றுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

3. திருச்சி

nep-burning-trichy-rsyf-07மோடி அரசின் புதியகல்விக் கொள்கையை எதிர்த்து புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக தொடர் பிரச்சாரம் தமிழக அளவில் நடைபெற்று வருகிறது. செப் 1-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து மாவட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 20.09.2016 காலை 10.30 மணியளவில் திருச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் நகலை புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலர் விக்கி தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 23 பேர் கலந்து கொண்டு எரித்து கைதாகினர். ஏற்கனவே இந்த நகலெரிப்பு போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி 10,000 துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு 15-க்கும் மேற்பட்டபள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்தது.

nep-burning-trichy-rsyf-04இதையறிந்த காவல்துறையினர் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை செயலருக்கு போன் செய்து, “எங்கு நடத்தப் போகிறீர்கள்? என்னசெய்யபோகிறீர்கள்? எத்தனைபேர் கலந்து கொள்ள்போகிறீர்கள்? சின்னக் குளூ கொடுங்கள்” என மாறி மாறி கேட்டுக் கொண்டே இருந்தனர். காவல்துறையினரை திசைதிருப்பும் வகையில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் என்று கூறி பிறகு திருச்சி ரயில் நிலையத்தில் ஒன்று கூடி அங்கிருந்து தலைமை தபால் அலுவலகம் முன்புவந்து போராட்டம் நடத்தப்பட்டது. சரியான நேரத்தில் துவங்கப்பட்டு தோழர்கள் பு.மா.இ.மு சீருடையுடன் அணிவகுத்து நின்று முழக்கமிட்டதும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த ஊடக நண்பர்கள் ஓடி வந்து புகைப்படமெடுத்தனர். சுமார் 20 நிமிடங்கள் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள், வாகனத்தில் செல்பவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சட்டம் ஒழுங்கு போலீசார் வர தாமதம் ஆனதால் வரைவுத்திட்ட நகலை எரித்து கொண்டிருந்ததை அணைக்க உளவுப்பிரிவு போலீசர் ஒருவர் அங்கு ஜூஸ் கடை நடத்திக் கொண்டிருந்த பெண்மணியிடம் தண்ணீர் கேட்க அப்பெண்மணி அதை கவனிக்காதது போல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தண்ணீரை தேடி கண்டு பிடிப்பதற்குள் நகலறிக்கை எரித்து முடிக்கப்பட்டது. போராட்டம் துவங்கிய உடனே அப்பகுதியில் உள்ள கடைகள், பொது மக்கள் மத்தியில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்தது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றது. தலைமை தபால் அலுவலகம் நகரின் முக்கியமான பெரிய சிக்னல் அருகே அமைந்துள்ளதால் நமது போராட்டம் சிறிது நேர பரபரப்பை ஏற்படுத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி
.
99431 76246

4. விழுப்புரம்

ர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் அடியாளான மோடியின் புதிய கல்விக் கொள்கை –2016 ஐ எதிர்த்து புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம் விழுப்புரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

nep-burning-vpm-rsyf-09முதலில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனுமதி கோரினோம். நகல் எரிப்பு வேண்டாம், போராட்ட வடிவத்தை மாற்றுங்கள் அனுமதி தருகிறோம் என்று தாலுக்கா காவல்நிலையம் சார்பில் நமக்கு பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து போஸ்டர், நோட்டீஸ் போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். மீண்டும் காவல்துறை அதே பழைய பல்லவியையே பாடியது. அதனால் அனுமதி மறுப்பை மீறி நகல் எரிப்பை நடத்துவதென முடிவெடுத்தோம்.

nep-burning-vpm-rsyf-06விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி அருகில் மாணவர்கள் கூடும் மாதா கோயில் பேருந்து நிறுத்தத்தில், தாலுக்கா காவல் நிலையம் எதிரில் திடடமிட்டவாறு பு.மா.இ.மு.வின் அமைப்புக்குழு செயலாளர் தோழர் ஞானவேல்ராஜா தலைமையில் திரண்ட மாணவ – இளைஞர் படை, ஆர்.எஸ்.எஸ் அடியாளான மோடியின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாற்பத்தி மூன்று பக்க புதிய கல்விக் கொள்கை- 2016-ன் நகலை எரித்து, முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் திரண்டு செய்திகளை சேகரித்தனர். தாமதமாக தகவல் கிடைத்து வந்த காவல்துறையினர் நகல் எரித்து முடிந்தவுடன் ஆர்ப்பாட்ட முன்னணியாளர்கள் நான்கு பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வேடிக்கை பார்த்த மக்கள் நகல் எரிப்பிற்கு வாழ்த்துகளையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர். கைது செய்யப்பட்ட ஞானவேல், வித்யா சாகர், ஃபிராங்கிளின், சதீஷ் ஆகிய நான்கு தோழர்களும் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த கைது, சிறைவாசத்திற்கு அஞ்சாமல் பு.மா.இ.மு தொடர்ந்து மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒழிக்கும் வரை போராடும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு: 99650 97801

திருத்துறைப்பூண்டி சமஸ்கிருத எதிர்ப்பு – விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை

0

1. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திருத்துறைப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ttp-pvr-1ர்.எஸ்.எஸ. கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக்குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை! என்ற தலைப்பில் மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுக்க புரட்சிகர அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக பிரச்சாரம், போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக 17-09-2016 தந்தை பெரியாரின் பிறந்த நாளன்று திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வீச்சாக நடந்தேறியது.

புதிய கல்வி கொள்கையின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் பிரசுரங்கள் அச்சிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் இடையே விரிவான பிரச்சாரம் செய்யப்பட்டு பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.

மக்கள் அதிகாரம் தோழர்கள் மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை தமிழ் மண்ணை விட்டே விரட்டியடிப்போம் என உறுதி ஏற்றனர். மாலை 4.30 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் தி.க. திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் தோழர் சித்தார்தனன், திருத்துறைப்பூண்டி தி.மு.க ஒன்றியத் துணைத்தலைவர் திரு எம்.என். ராஜா, சி.பி.ஐ–ன் ஒன்றியத் துணைத் தலைவர் தோழர் சந்திரசேகர ஆசாத், வி.சி.கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வி.த. செல்வன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திரு. ஜமால், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர். க. முத்துக்குமார், ம.தி.மு.க நகரச் செயலாளர் திரு. கோவி. சேகர், மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பனர் தோழர். மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ttp-pvr-4இவர்கள் அனைவரும் பார்ப்பனியத்தின் வரலாறு, புதிய கல்வி கொள்கையை அம்பலப்படுத்தியும், தங்களுக்குள் பல்வேறு கருத்துகள், கொள்கைகள் வேறுபாடு இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ. – பி.ஜே.பி. மாவெறி கும்பலை விரட்டியடிப்பதற்கு ஒன்று திரண்டுள்ளதாகவும், மக்கள் அதிகாரத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் பேசினர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயோனல் அந்தோனிராஜ் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது, “‘லார்டு’ மெக்காலே பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு ஆதரவாக கொண்டுவந்த கல்வி முறையே இன்றுவரை தொடர்கிறது, டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் குழுவின் அறிக்கையோ மெக்காலே கல்வி முறையோடு, காவி மயமாக்கும் சதித்திட்டத்தை அறங்கேற்ற முயற்சிக்கிறது” என்றும், சமஸ்கிருதத்தை திணிப்பதின் நோக்கமே, பிற்போக்குத்தனம், மூடத்தனம், அடிமைத்தனங்களைப் பரப்பி அதன்மூலம் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். பாரத பாரம்பரிய பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், எது பாரம்பரிய பண்பாடு? சம்பூகனை படுகொலை செய்ததை, வாலியை ஏமாற்றி கொன்றதை, ஏகலைவன் கட்டவிரலை வெட்டியதை, வர்ணாஸிரமத்தை சரியானது என்பதை திணிக்கவே சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கின்றனர்.” என்றும்

ttp-pvr-speakers-9“தமிழுக்கு தொல்காப்பியத்தில் இலக்கணம் எழுதும்போது, வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழியாக (எழுதா கிளவி) சமஸ்கிருதம் இருந்தது. தமிழ்மொழி “பிறபொக்கும் எல்லா உயிருக்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” போன்ற உயரிய பண்பாட்டை போதிக்கிறது” என்று சமஸ்கிருதத்திற்கும் தமிழ்மொழிக்கும் உள்ள போராட்டத்தையும், “1965-ல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மாணவர்கள் போராட்டத்தைப் போன்று இந்த புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் போராட்டம் நடத்தி முறியடிக்க வேண்டும்” என்றும் எழுச்சியுரையாற்றானார்.

திருத்துறைப்பூண்டி என்பது செங்கொடி இயக்கத்திற்கும், திராவிட அரசியலுக்கும் பெயர் பெற்ற ஊர். பல்வேறு கம்யூனிச இயக்கத் தலைவர்கள், தியாகிகளை அளித்த மண். ஆனால் தற்போதோ இடதுசாரி, முற்போக்கு அரசியலை பின்னுக்கு தள்ளி பிற்போக்கு சக்திகளான ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பல்கள் விரைவாக வளர்ந்து வரும் பகுதியாக மாறிவருகிறது. இப்பகுதியில் உள்ள வேலையில்லாத இளைஞர்களை பிடித்து பணம், பதவி என்று ஆசைக்காட்டி லும்பன் கும்பல்களை உருவாக்கிவைத்து அவர்களை தனக்கு அடித்தளமாக பயன்படுத்திக் கொள்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலை விரட்டியடிக்க மக்கள் அதிகார அமைப்பினர் நேருக்கு நேராக களத்தில் இறங்கி ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பலை ஒழித்துக்கட்ட அப்பகுதி அனைத்து ஜனநாயக, முற்போக்கு, சமூக அமைப்புகள் – கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் ஆர்.எஸ்.எஸ். –பிஜே.பி. கும்பலை எச்சரிக்கும் விதமாக இருந்தது. செங்கொடிக்கு புகழ்பெற்ற மண்ணில் புதிய இரத்தம் பாய்ச்சுவதாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம்,
திருவாரூர் – 9626352829.

2. விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம்

2016 செப்டம்பர் 17-ம் தேதி விஜயமாநகரம், வடவாடி, புவனூர், கட்டியநல்லூர், கோ.பவழங்குடி, மாத்தூர் பகுதியில் ஒரு வாரம் பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டி விஜயமாநகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

tasmac-vdm-struggle-1அதன்படி 17-ம் தேதி காலை அனைவரும் அணிதிரட்டல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது 16-ம் தேதி இரவு கியு பிரிவு போலீசார், எஸ்.பி.சி.ஐ.டி, மப்டி போலீசு உட்பட அனைவரும் ஊரில் தங்கி வேலை செய்யும் தோழர்களை கைது செய்யும் வேலையில் ஈடுபட்டனர். காலையில் 9 மணி முதலே போலீசார் தெரு தெருவாக, வீடு வீடாக சென்று 10 க்கும் மேற்பட்ட முன்னணியாளர்களை கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில், பேருந்தில் செல்பவர்களை வழிமறித்து சோதனை செய்து போராட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்து வேனில் ஏற்றுவேன் என்று மிரட்டினார்கள்.

உள்ளுர் அ.தி.மு.க கட்சி ஆள்காட்டி வேலையை செய்தது. குறிப்பாக டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் சேல்ஸ்மேன் இருவரும் அப்பகுதி முன்னணியாளர்களை வீடுகளை காட்டியும் அடியாள் வேலை செய்தனர்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை போலீசு தெரு தெருவாக சுற்றி வந்த்து. இந்த அனைத்து தடைகளையும் மீறி 300-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர். போலீசின் அச்சுறுத்தல் காரணமாக 86 பேர் கைதாகினர். அதன் பிறகு மேலும் இரு குழுக்களாக பிரிந்து முற்றுகை இட்டனர். காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை 200 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் 6 போலீசு காவலுக்கு நின்றது. போராட்டம் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டம் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்

சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !

1

கள்ளர் சாதி வெறியர்களின் அட்டகாசம்! சிவகங்கை அரசனூரில் தலித்துகளின் வீடுகள் உடைப்பு! பொருட்கள் சூறையாடல்!
சாதிவெறியைத் தூண்டி விட்ட எச்.ராஜா, லொடுக்கு கருணாஸ் கும்பல்! அமைச்சர் பாஸ்கரன் அம்பலத்தின் ஆசீர்வாதம்!

சிவகங்கையிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, அரசனூர். இங்கு கள்ளர் சாதியினர் சுமார் 650 வீடுகளில் பெரும்பான்மைச் சாதியினராக வசிக்கின்றனர். ஆதிதிராவிடர் சமூகத்தினர் சுமார் 85 வீடுகளில் வசித்து வருகின்றனர். இவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்திலும் கள்ளர் சாதியினரே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதில்லை.

08-09-2016 அன்று இரவு சுமார் 07.30 மணி. அரசனூர் தலித் குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் திருமணம். அதேசமயம் இன்னொரு திருமணத்திற்காக பெரும்பாலான இளைஞர்கள் அருகிலுள்ள கிராமமான தமறாக்கிக்குச் சென்றிருக்கின்றனர். அரசனூரில் மணமகன் வீட்டில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென மின்சாரம் தடைபடுகிறது. சுமார் பத்து பெண்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் கொண்ட கும்பல், கம்பு, அரிவாள், கடப்பாறை ஆகியவற்றுடன் தலித் குடியிருப்பிற்குள் நுழைகிறது. வீட்டின் ஓடுகளையும் ஆஸ்பெட்டாஸ் தகடுகளையும் அடித்து நொறுக்குகிறது. வீடுகளின் கதவுகளை உடைத்து வீட்டிலிருந்த பீரோ, பெட்டி, டி.வி. பிளாஸ்டிக் குடங்கள், சில்வர் பானைகள், பாத்திரங்கள், அம்மா கொடுத்த கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை அடித்து நொறுக்குகின்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆவேசக் கூச்சலுடன் வந்த அக்கும்பல் திருமண வீட்டில் நுழைகிறது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து ஓடுகின்றனர். கண்ணில்படும் பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்குகிறது. விருந்தில் மொய் எழுதிக் கொண்டிருந்தவரிடமிருந்து 30,000 ரூபாய் இருந்த பணப்பெட்டியைப் பறித்துக் கொள்கிறது. மண வீட்டிற்கு வந்திருந்த ‘டவேரா’ காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அங்கு நின்றுகொண்டிருந்த ‘பைக்குகள்’ அடித்து நொறுக்கப்படுகின்றன. மொத்தம் ஒன்பது பைக்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. ஒரு ‘ஆட்டோ’வும் அடித்து நொறுக்கப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை உயிருக்குப் பயந்து பைக்கை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். கும்பல் அவரை விரட்டி மறிக்கிறது. பைக்கைப் போட்டுவிட்டு தப்பி ஓடி அருகிலுள்ள சமத்துவபுரத்தில் ஒளிந்துகொள்கிறார். சுமார் அரைமணிநேரம் வெறியாட்டம் ஆடித்தீர்த்துவிட்டு அக்கும்பல் சென்றுவிடுகிறது.

ஊருக்குக் கிழக்கே தலித் மக்கள் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. இவர்கள் கடந்த பதினாறு வருடங்களாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடி வருகிறார்கள். “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” எனும் சீர்காழியின் பாட்டு, வருடந்தோறும் ஒலிக்கும். ஆனால், இந்த வருடம் அந்த விநாயகனே வினையைக் கொண்டு வந்துவிட்டான்.

விநாயகர் சதுர்த்தி வினை

broken-roof
உடைக்கப்பட்ட கூரை

இத்தனை ஆண்டு காலமாக இல்லாத பழக்கமாக இந்த ஆண்டு தாங்களும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட வேண்டும், பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் எனக் கள்ளர் சாதியினர் போலீசிடம் அனுமதி கேட்டுள்ளனர். முதலில் அனுமதி மறுத்த போலீசு பின்னர் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஊர்வலம் நடத்த அவர்களுக்கும் அனுமதி கொடுத்துள்ளது.

05-09-2016 அன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை வழக்கம்போல ஊரிலுள்ள மந்தை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தச் சென்ற தலித்துகளை கோவிலுக்குள் நுழையக்கூடாதென்று கள்ளர் சாதியினர் தடுக்கின்றனர். பின்னர் போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு தலித்துகள் கோவிலுக்குள் நுழைகின்றனர்.

அன்று இரவு தலித் மக்கள் ஏற்பாடு செய்திருந்த வள்ளி திருமண நாடகத்தை கிராமப் பொது மேடையில் நடத்தக் கூடாது எனக்கூறி கள்ளர் சாதி இளைஞர்கள் மேடையின் மீதேறி அமர்ந்து கொள்கின்றனர். மீண்டும் போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு நாடகம் நடைபெறுகிறது.

மறுநாள் 06-09-2016 அன்று காலை 06.00லிருந்து 08.30 மணி வரையில் தலித்துகளுக்கும் 08.30லிருந்து 10.00 மணி வரையில் கள்ளர்களுக்கும் பிள்ளையாரின் களிமண் சிலையைக் கரைப்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது போலீசு.

காலை எட்டு மணிக்கெல்லாம் தலித்துகள் சிலையைக் கரைத்து முடித்துவிட்டனர். ஆனால், கள்ளர்கள் கரைக்கவில்லை. போலீசார் கேட்டதற்கு பாஜக தலைவர் எச்சு.ராஜா வருவதாகவும் அவர் வந்துதான் சிலையைக் கரைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். வினை மாலை 04.00 மணியளவில் வருகிறது. ராஜாவும் வருகிறார்; பேசுகிறார்; பற்றவைத்துவிட்டு சென்றுவிடுகிறார்.

சாதிவெறி நிகழ்வுகள்

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் சுவரொட்டிஅரசனூரில் கள்ளர் சாதியைச் சேர்ந்த பெண் புவனேஸ்வரி. அவர் திருமணமாகி குழந்தையுடன் இருந்தார். தனது கணவனால் ஒதுக்கப்பட்டு இருந்த அவரும் முத்துப்பாண்டி எனும் தலித் இளைஞரும் காதலித்தனர். குழந்தையுடன் இருவரும் ஊரை விட்டுச் சென்று விடுகின்றனர். புவனேஸ்வரியின் உறவினர்கள் அவர்களைக் கண்டுபிடித்துத் தனியாகப் பிரித்து மீண்டும் ஊருக்குக் கூட்டிவந்து விடுகின்றனர். ஆனால், பத்து நாட்களில் மீண்டும் அவர்கள் சேர்ந்து ஓடிவிடுகின்றனர். இதனால் வெறுப்படைந்த புவனேஸ்வரியின் குடும்பத்தார் முத்துப்பாண்டியினது குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையை மட்டும் வாங்கிக்கொண்டு அவர்களை விட்டு விலகி விடுகின்றனர். இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

08-09-2016 தலித் குடியிருப்பில் நடந்த திருமணத்திற்கு சென்னையிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் அங்கிருந்த பெட்டிக்கடையில் செல்போனில் பாட்டுக் கேட்டவாறு இருந்துள்ளனர். ‘நா ரெடி, நீங்க ரெடியா’ பாடல் ஒலிக்கிறது. இரண்டு உள்ளூர்ச் சிறுவர்கள் அந்தப் பாடலோடு சேர்ந்து தாங்களும் பாடிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவ்வூரைச் சேர்ந்த கள்ளர் சாதிப் பெண் பேருந்திலிருந்து இறங்கி அந்தப் பக்கமாக நடந்து வருகிறார். சிறுவர்கள் பாடியதைக் கேட்ட அவர், தன்னைத்தான் கேலி செய்கிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, சிறுவர்களைத் நோக்கித் திரும்பிப் பார்த்து, ‘செருப்பு பிஞ்சிரும்’ எனச் சொல்ல சிறுவர்களும் எதிர்த்துப்பேச, அப்பெண், தனது அப்பாவிடம்போய்த் தன்னைச் சிறுவர்கள் கேலி செய்ததாகக் கூற, யாரென்று விசாரித்து அச்சிறுவர்களையும் அவர்களது பெற்றோரையும் வரச்சொல்லி அச்சிறுவர்களை அடித்துக் கண்டித்து அனுப்பி விடுகிறார். ஆனால், அதன்பிறகு பலரது ஆலோசனைக்குப் பிறகு அவர் பூவந்தி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார்.

மாலையில் நான்கு போலீசார் வந்து கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் இப்பிரச்சினை குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் அந்தக் கும்பல் தனது சூறையாட்டத்தை நடத்துகிறது. திருமண வீட்டையும் தாக்குகிறது.

எச்சு.ராஜா உசுப்பேத்தல்

இரண்டு நாட்களுக்கு முன்பாக 06-09-2016 அன்று இரவு கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, கலப்பு திருமணங்களுக்கு எதிராக பேசி “நீங்கள்லாம் என்ன செய்றீங்க?” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி’ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.

‘முக்குலத்தோர் புலிப்படை’ எனும் அமைப்பை வைத்துப் பிழைப்பு நடத்தும் நடிகர் லொடுக்கு பாண்டி கருணாஸ், சில மாதங்களுக்கு முன்னால், அரசனூருக்குள் வந்து கொடியேற்ற முயன்றபோது, கள்ளர் சமூகத்துப் பெரியவர்களே கடுமையாக எச்சரித்து அதனைத் தடுக்கவும் சிவகங்கை – மதுரை ரோட்டிலேயே கூட்டத்தை நடத்திவிட்டுப் போகிறார். பின்னர் ஒருநாள் சாமி கும்பிட வருவதாகச் சொல்லி சிலர் அவரை அழைத்துவந்து திடீரெனக் கம்பை ஊன்றிக் கொடியையும் ஏற்றிவிடுகின்றனர். ஊர்க்காரர்கள் சொல்லை மீறியதாலும் பேருந்து திரும்புவதற்கு அக்கம்பு இடையூறாக இருப்பதாலும் அதை அகற்றவேண்டும் என கொடி ஊன்றியவர்களிடம் கெடு வைக்கிறார்கள். ஆனால், அவர்களோ, அன்று இரவே கொடிக்கம்பின் அடிப்பாகத்தில் செங்கல், சிமிண்ட் வைத்துக் கட்டிவிடுகின்றனர்.

இப்பகுதியின் எம்.எல்.ஏ அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். கூட்டுறவுத் துறைக்கான அமைச்சராக இருக்கிறார். ஏற்கனவே சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர். தமறாக்கியைச் சேர்ந்தவர். கள்ளர். பெயர் பாஸ்கரன் அம்பலம். அரசனூரில் இவரது நெருங்கிய உறவினர்கள் பலர் உள்ளனர். சூறையாட்டத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை அரசனூர் வந்த அவர் அவரது உறவினர்களை மட்டும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்.

சூறையாடல் நடந்த அன்று இரவே கலெக்டர், எஸ்.பி, அதிரடிப்படையுடன் வந்துள்ளனர். காலை 10.00 மணிக்குள் குற்றவாளிகளைக் கைதுசெய்துவிடுவோம் என உறுதி கொடுத்துள்ளனர். தலித் மக்களுக்குச் சாப்பாடு கொடுத்துள்ளனர். பிறகு ரேசன் கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளச் சொல்லி டோக்கன் கொடுத்துள்ளனர். ஆனால், ரேசன் கடைக்காரர் 100 ரூபாய் கொடுத்தால்தான் பொருள் தருவேன் என்று சொல்லி வசூலித்துள்ளார். இது குறித்து புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டே நாட்களில் உடைக்கப்பட்ட ஓடுகளும் வீட்டுக் கதவுகளும் சரி செய்யப்பட்டு விட்டன. ‘டவேரா’ காரும், ஆட்டோவும் ஒர்க்‌ஷாப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. தடயத்தை மறைப்பதில் அரசுக்கு அவ்வளவு அவசரம்.

வீரணன் என்பவரும் இவரது அண்ணன் தினகரனும்தான் சூறையாடியதில் முன்நின்றவர்கள். இதில் தினகரன் ஊராட்சி மன்ற 3ஆவது வார்டு உறுப்பினர். இவர்தான் மூளை. தினகரன் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஊருக்குள்தான் திரிகிறார்.

38 பெயர் தெரிந்த குற்றவாளிகள்மீது தலித் மக்கள் சார்பில் கெளரி என்பவர் புகார் கொடுத்துள்ளார். 48 பேரை அழைத்துச்சென்ற போலீசு அதில் 13 பேரை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

போலீசா கொக்கா?

08-09-2016 அன்று ஒரு பெண்ணைக் கேலி செய்ததாக பூவந்தி போலீசில் அப்பெண்ணின் தந்தை கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் 10-09-2016 அன்று அதாவது இரண்டு நாட்களுக்குப் பிறகு சூறையாடல் குறித்து புகார் கொடுத்த கெளரியின்மீது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததான பிணையில் வர முடியாத பிரிவின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது பூவந்தி போலீசு. அமைச்சர் பாஸ்கரன் அம்பலத்தின் ஆணைப்படி இது நடந்துள்ளது.

“சும்மாதான் எஃப்.ஐ.ஆர் போட்டு வைத்திருக்கிறோம். கைதெல்லாம் செய்யமாட்டோம்” என சிவகங்கை எஸ்.பி கூறியிருக்கிறார். எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டு, அதைக் கைது செய்வதற்காகப் போடவில்லை என்று எஸ்.பி சொல்வதை எந்த இளிச்சவாயன் நம்புவான்? ஒருவேளை கலெக்டர் நம்புவாரோ!

“வெறும் சாதி வெறியர்கள்”

சி.பி.எம்மும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தங்களது கண்டனச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை மக்களைத் திரட்டி 13-09-2016 அன்று சிவகங்கையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பல்வேறு அமைப்பினரும் அதில் கண்டன உரையாற்றினர். சி.பி.ஐயின் மூத்த தலைவர் நல்லகண்ணு இதில் கலந்து கொண்டார். ஆனால், அதில் எச்சு.ராஜா, கருணாஸ், பாஸ்கரன் அம்பலம் ஆகியோர்மீது யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. வெறும் சாதி வெறியர்கள், சாதி வெறியர்கள் என்றுதான் சொன்னார்களே தவிர, அவர்கள் கள்ளர் சாதி வெறியர்கள் என்று யாரும் சொல்லவில்லை.

cpm-tntom-poster
சி.பி.எம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போஸ்டர்

மக்கள் அதிகாரம் அமைப்பானது, கள்ளர் சாதி வெறியையும், எச்சு.ராஜா, கருணாஸ், அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் ஆகியோரையும் அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்டவர்கள் வெளியூர்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசியில் மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் மிரட்ட முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதிலிருந்தே ‘அம்மாவின் டாஸ்மாக் தண்ணி’யடித்துக்கொண்டு கும்பலாக உட்கார்ந்து பேசுகிறார்கள் என்பது தெரிகிறது.

எச்சு.ராஜாவுக்கும் கருணாஸுக்கும் அமைச்சருக்கும் இதில் சம்பந்தமில்லையென்று போனில் பலர் சொல்கிறார்கள். அப்படியானால், அவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரும் சோம்பேறியான ‘மனித உரிமை ஆணய’மே வந்துபோய்விட்டது. இன்னமும் தொகுதி எம்.எல்.ஏயும் அமைச்சருமான பாஸ்கரன் அம்பலம் அங்கே வரவில்லையே. ஏன்?. நரித்தனமாகக் கொடி ஊன்றிச் சென்ற கருணாஸ் எங்கே?. ‘தெய்வமே, தெய்வமே’ எனப் பாடிக் கொண்டு திரிகிறாரா?

வினாயகர் சதுர்த்திக்காகத்தான் எச்சு.ராஜா வருகிறாரென்றால், தலித் மக்களின் வினாயகர் சதுர்த்திக்கும் வரலாமல்லவா? ஏன் வரவில்லை? தலித் மக்கள் வணங்கும் பிள்ளையார் என்ன ‘பாகிஸ்தானி’லிருந்து வந்தவரா? அவருக்குத் தெரியும், பிள்ளையாருக்கும் சாதி இருக்கிறது. பிள்ளையாராகவே இருந்தாலும் அது ஆதிக்க சாதி இந்துக்களின் பிள்ளையாராக இருந்தால்தான் எச்சு.ராஜா வருவார்.

கள்ளர் சாதி வெறி என்றால் ஏன் கோபம்?

கள்ளர் சாதி வெறியென்றால் ஏன் கோவப்படுகிறார்கள்? அவ்வெறிச் செயலைச் செய்தவர்கள் கள்ளர் சாதியினர் இல்லையா? இது கோபமல்ல. அச்சம். அம்பலப்பட்டுப் போனதால் வருகின்ற அச்சம். மொட்டையாக சாதி வெறிச் செயல் என்று சொன்னால் அவ்வெறிச் செயலைச் செய்த ‘கோழை’களுக்குக்கூடக் கோவம் வருவதில்லை. ஆனால், சாதியின் பெயரைச் சொல்லி ‘இந்தச் சாதி வெறி’ என்ற உண்மையைச் சொன்னால் சாதி உணர்வை மறைத்துக் கொண்டு இருக்கும் ‘மாவீரர்’களுக்குக்கூட முகம் வெளுக்கிறது. வாய் உளறுகிறது. கை,கால் நடுங்குகிறது. உதறல் எடுக்கிறது.

அப்படிப் பலருக்கும் எடுத்திருக்கிறது. இந்த சுவரொட்டியைப் படித்த சி.பி.எம்மின் மாவட்டப் பொறுப்பிலுள்ள முக்கியப் பிரமுகர் ஒருவர், ‘வெறித்தனமாக சுவரொட்டி அடித்திருக்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார். கள்ளர் சாதிவெறி என்று சொல்வதில் இவருக்கு ஏன் வெறி வருகிறது? குற்றம் செய்யும் சாதியின் பெயரைச் சொல்லத் துப்பில்லாத சூரப்புலிகள்தானே இவர்கள். வெறிச் செயலைச் செய்த சாதியின் பெயரை இவர்களால் ஒருநாளும் சொல்லமுடியாது. காரணம், நாளைக்கு ஓட்டு வாங்க இதே சாதிக்காரர்களிடம்தானே போய் நிற்க வேண்டும். கள்ளர் சாதிவெறி என்று சொன்னால் கள்ளர் ஓட்டு விழுமா? அதனால்தான் மொட்டையாக சாதி வெறி, சாதி வெறி என முழங்குகிறார்கள். கள்ளர் சாதிவெறி என்று சொல்லப் பயப்படுகிறார்கள். உண்மையைச் சொல்வதன் மூலமாக, சாதி, மத வெறியர்களை மட்டுமல்ல இது போன்ற ‘கருத்து கந்தசாமி’களையும் உதறல் கொள்ள வைக்கும் ஆற்றல் புரட்சிகர அமைப்புகளின் சுவரொட்டிகளுக்கும் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பி.ஜே.பி சாதிவெறி அரசியல் திட்டம்

இத்தனை ஆண்டு காலமாக வெளிப்படாத சாதி வெறி இன்று வெளிப்பட்டதோடு மட்டுமல்லாமல் தலைதூக்கி ஆட்டம் போடுவதற்கு, எச்சு.ராஜாவின் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான பேச்சும் தூண்டுதலுமே காரணம். கருணாஸ் போன்ற சாதி வெறியர்கள்தான் இச்சாதி வெறியர்களுக்குத் தார்மீகப் பலமாக இருக்கின்றனர்.

அரசனூர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பி.ஜே.பியின் திட்டமே இதுதான். சாதிய ஒழுங்கைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதையே இந்து தர்மமாக உருவாக்க நினைக்கும் இந்துத்துவ பயங்கரவாத நரித்தனத்தின் ஒரு சின்ன சாம்பிள்தான் அரசனூர் அட்டகாசம்.

சிவகங்கைப் பகுதியில் உள்ள தி.மு.க; அ.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் உள்ள சொந்த சாதிக்காரனோடு போட்டிபோட முடியாததால், கொள்ளையடித்துச் சம்பாத்திக்க முடியாமல் புலம்பித் திரிந்த ஆதிக்க சாதியினரையெல்லாம் இந்து எனும் பெயரில் அணுகித் திரட்டிச் சிறிதுசிறிதாக இப்பகுதியில் மத, சாதி வெறியினை வளர்த்து வருகிறது பி.ஜே.பி.

வாசனைகூடத் தெரியாமலிருந்த இந்து முன்னணி சிவகங்கையில் மண்டபம் பிடித்துக் கூட்டம் நடத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அரசுக் கலைக் கல்லூரி மைதானத்தில் தினமும் ‘சாகா’ நடத்துகிறது. அரசுக் கலைக் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு சந்தில் வருவாய்த் துறையில் வேலை செய்யும் அரசு ஊழியரான ராமநாதன் என்பவர் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் விடுதி கிடைக்காத மாணவர்களை இலவசமாகத் தங்க வைத்துள்ளார். அதோடு கல்லூரியில் விடுமுறை விடப்பட்டு விடுதிகள் அடைக்கப்படும்போது அந்த விடுதி மாணவர்களையும் அங்கே தங்கவைத்து தினமும் பலரைக் கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவினை நடத்தி இந்துத்துவ மூளைச் சலவை செய்து வருகிறார். இந்த வீட்டைக் ‘காரியாலயம்’ என்றே மாணவர்கள் அனைவரும் அழைக்கின்றனர்.

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் காலங்காலமாகத் தொழில் நடத்தியும் குடியிருந்தும் வருகின்ற ‘நேரு பஜார்’ பகுதியில் இதுவரை சீந்துவாரத்துக் கிடந்த பழைய இடிந்துபோன இரண்டு கோயில்களை புதியதாக்கி தற்போது தினந்தோறும் ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பக்ரீத் பண்டிகையின்போதுகூட மசூதியின் பக்கமாக ஸ்பீக்கரைத் திருப்பி வைத்து அந்த ஒலிபரப்பை நடத்தினார்கள்.

ஒருபுறம் முஸ்லீம்களுக்கும் மறுபுறம் தலித்துகளுக்கும் எதிராகக் குறிவைத்து இந்துத்துவ வாதிகளும் ஆதிக்க சாதியினரும் இணைந்து செயல்படுகிறார்கள். இந்து மத உணர்வை இந்து மத வெறியாக மாற்றுவதையே இந்தியாவிற்கான கொள்கையாகக் கொண்டுள்ள இந்துத்துவக் கும்பல், இப்போது சாதிய உணர்வை சாதிய வெறியாக மாற்றுவதைத் தமிழகத்திற்கான கொள்கையாகக் கொண்டு களமிறங்கியுள்ளது. அதன் விளைவுதான் அரசனூரில் நடைபெற்ற கள்ளர் சாதிக் கும்பலின் சூறையாடல்.

இதுவரை சிவகங்கைச் சுற்றியுள்ள பகுதியில் இன்னும் தாக்குதலுக்கு உள்ளாகாமலிருக்கும் தலித்துகளுக்கு அரசனூர் சூறையாடல் ஒரு எச்சரிக்கை. எல்லோரும் எதிர்க்கத் தயாராகுங்கள். இந்துத்துவம் எனும் பெயரில் உள்ளே நுழையும் ஆதிக்க சாதி வெறித்தனத்தை அனுமதிக்காதீர்கள். பதிலுக்குப் பதில். முடிந்தால், கேள்விக்கே பதில் சொல்லவும் தயாராகுங்கள். புரட்சிகர அமைப்புகள் உங்கள் அருகிலேயே களத்தில் நிற்கின்றன. அவற்றோடு இணைந்து கொள்ளுங்கள்.

தகவல்

செய்தியாளர்
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2016 மின்னிதழ் : காஷ்மீரின் குரலைக் கேள்

0

puthiya-jananayagam-september-2016

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. வருங்கால வைப்புநிதி மோசடிகள் : அரசு-முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம்!

2. காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம்!

3. இந்தியனே… காஷ்மீரின் குரலைக் கேள்!

4. காவிரி : தேசிய ஒருமைப்’பாட்டை’ நிறுத்து!
மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது.

5. சதியும் சாதியும்
சதி வேறு, சாதி வேறு அல்ல. சதி என்பது சாதியத்துடன் இணைந்த பெண் அடிமைத்தனம். பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம்.

6. “மாட்டுச் சாணம்” கோஹினூர் வைரத்தைவிட மதிப்புமிக்கது!”
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

7. கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து
மோடி அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் சட்டமும் புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் குறிவைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்.

8. நீட் (NEET) தேர்வு: நரியின் சாயம் வெளுத்தது!
தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்) தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகி விட்டது.

9. தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி!

10. மக்களாட்சியா, மர்ம ஆட்சியா?
ஞான தேசிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடைநீக்கமும், டி.ஜி.பி அசோக்குமாரின் திடீர் ஓய்வும் போயசு தோட்டமானது அலிபாபா குகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

11. கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவ பாசிசத்தின் நவீன ஏஜெண்டுகள்!
ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களின் சட்ட விதிமீறல்களை விட ஆபத்தானது அக்கும்பலின் இந்துத்துவ விஷம் கலந்த உபதேசங்கள்

12. “உங்களுக்குள் ஆதிக்க சாதிப் புத்தி இல்லையா?”
இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் குப்பையை, மலத்தை, சாக்கடையைச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே சுமத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் இந்த அடிமைத் தொழிலை ஒழிக்க முன்வராமல், கண்டும் காணாமல் இருப்பதும் தீண்டாமைக் குற்றம்தான்.

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

சிதம்பரம் : புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம்

0

ன்பார்ந்த மாணவர்களே!

nep-notice-1காவிமயம், கார்ப்பரேட்மயம் இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம்தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (2016). இது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய கலாச்சார ஒற்றுமைக்கும் சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு சமஸ்கிருதத்தை கற்றுத் தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறது. இது முற்றிலும் பொய். இதன் நோக்கமே பார்ப்பனர்கள் வேதம் மட்டுமே ஓத பயன்படுத்தக் கூடிய சமஸ்கிருதத்தை ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை திணிப்பதே; தாய்மொழிவழிக் கல்வியை மறுப்பதே; இதற்கேற்பதான் ஐவர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஜே.எஸ்.ராஜ்புத் எனும் ஆர்.எஸ்.எஸ்காரர். மற்றவர்கள் அனைவரும் அரசு செயலர்கள். இந்தக் குழுதான் புதிய கல்விக் கொள்கையை தீர்மானிக்கும். இது எப்படி இருக்கிறது என்றால் ‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையிலும் நெய் வழியும்’ என்பது போல உள்ளது.

மேலும் தரம் என்ற பெயரில் 5-ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு அதற்குமேல் கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை. அவர்களுக்கு திறம் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுமாம். அதாவது, படிப்பில் பின்தங்கும் ஏழை மாணவர்களுக்கு இனி 5-ம் வகுப்புக்கு மேல் கல்வி இல்லை என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். அதையும் தாண்டி சிலர் பத்தாம் வகுப்பு வரை சென்று விட்டால் அவர்களுக்கு Part-A, Part-B என்று இரண்டு பிரிவுகளை முன்வைக்கிறது. முதல் பிரிவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்கள் இடம் பெறும். இரண்டாம் பிரிவில் தொழிற்கல்வி இடம் பெறும். பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி போக விரும்பும் மாணவர்கள் Part-B எனும் இரண்டாம் பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறது. மாணவர்களை தரம் பிரிப்பதிலும், தொழிற்கல்விக்கு துரத்துவதிலுமே குறியாக உள்ளது. அதாவது, இரண்டாம் ‘பிரிவு பள்ளி மாணவர்களுக்கு பாதி நேரம் படிப்பு மீதி நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்ய வேண்டும்’ என்பதே. இதைத்தான் பார்ப்பன நரி ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக் கல்விமுறை என்கிறோம். இப்பொழுது புரிகிறதா இவர்களின் நோக்கம் என்னவென்று?

மற்றொருபுறம், ஒட்டுமொத்தக் கல்வித் துறையும் தனியார்வசம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவும், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக் கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிறது. மேலும் இணைய சேமிப்புக் கிடங்குகளான MOOC (பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்) மூலம் பாடங்களை உருவாக்குல், கல்வியை கணினிமயமாக்கி ‘Digital India’ திட்டம் மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல், ஆன்லைனில் படிப்பு, தேர்வு நடத்த வேண்டும் என்கிறது. இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த புதிய கல்விக் கொள்கை.

nep-notice-2இது ஏழைமாணவர்களின் கல்வி உரிமையை மறுப்பது மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைப்பதை மறுக்கிறது. மாணவர்களை கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்போம் எனக் கூறி மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாகப் பறிக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் போராட்ட குணத்தை அறுத்தெரியத் துடிக்கிறது, இந்த புதிய கல்விக் கொள்கை. இது மட்டுமல்ல, கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்குக் கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது. முக்கியமாக, உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க அன்று ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வித் திட்டத்தை புகுத்தியதைப் போல இந்து, இந்தி, இந்தியா எனும் பார்ப்பனிய தேசியத்தை கட்டுவதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தத்தான் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் கொண்டு வருகிறது மோடி அரசு.

மொத்தத்தில் இது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம், சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி? எனும் பார்ப்பனிய மனுதர்மமும் காசு இல்லாதவனுக்கு எதுக்கடா கல்வி? எனும் மறுகாலனியாக்க கல்விக் கொள்கையும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டதே இந்த புதிய கல்விக் கொள்கை. இதை நம்மீது திணிக்க அனுமதிக்க முடியாது.

புதிய கல்விக் கொள்கை 2016!
கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக பேரணி-பொதுக்கூட்டம்
மாலை 5 மணி செப்டம்பர் 25, 2016 ஞாயிறு போல்நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் மணிவாசகன், செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை
முன்னிலை : வழக்கறிஞர் சி. செந்தில், சிதம்பரம், இணைச் செயலாளர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்

சிறப்புரை
புலவர் பொ.வேல்சாமி, தஞ்சாவூர்
திரு ரமேஷ், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி – சென்னை
வழக்கறிஞர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம்!

  • இந்தித் திணிப்பை எதிர்த்து களம் கண்டு விரட்டியடித்த வீரஞ்செறிந்த மாணவர் போராட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். இந்தப் புதிய கல்விக் கொள்கை (2016) திணிப்பையும் முறியடிப்போம்.
  • தாய்மொழிக் கல்வி, சமத்துவமான, அறிவியல் பூர்வமான, இலவச கட்டாயக் கல்வி எனும் உரிமையை நிலைநாட்ட இன்றே களமிறங்குவோம்!
  • இந்துத்துவா கொள்கையையும், மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கையை (2016) முறியடிப்போம்!
  • சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-யின் இந்து ராஷ்டிரக் கனவை தகர்த்தெறிவோம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

காவிரி முழு அடைப்பு – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் போராட்டம்

0

1. தர்மபுரி

cauvery-issue-dharmapuri-rail-roko-agitation-6காவிரி நதிநீர் வழங்ககோரி தமிழகம் தழுவிய பந்தை ஆதரித்து அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் தருமபுரியில் நடைப்பெற்றது. 16-09-2016 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நடந்த இந்த ரயில் மறியல் போராட்டத்தில் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தோழர் முத்துக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரமும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

அனைத்துக் கட்சிகளும் சுமார் 12 மணியளவில் அரசு மருத்துவமனை அருகில் ஒன்று திரண்டு பேரணியாகச் முழக்கமிட்டவாறே சென்றனர், அப்போது மூன்று இடங்களில் தடுப்பரண்களை அமைத்தது போலீசு. அனைத்தையும் கடந்து சென்று ஆக்ரோசமாக முன்னேறினர்.

கைதாகும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். ரயிலை மறித்து பின்னால்தான் கைதாகுவோம் என்று அனைவரும் கூறினர். பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முழக்கமிட்டவாறே ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரயில் வந்த பின்னர், போலீசார் கயிறு மூலம் ஏற்படுத்திய தடுப்பரண்களை கடந்து ரயிலை மறித்தனர். அதன் பிறகே 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகார முழக்கங்களை அனைத்து கட்சிகளும் ஆக்ரோசத்தோடு முழங்கினர். இந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

செய்தி
மக்கள் அதிகாரம்.
தருமபுரி
9043400580

2. கரூர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர்

3. புதுச்சேரி

cauvery-issue-puduvai-demo-1காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்! செப் – 16 : புதுச்சேரியில் முழக்க ஆர்ப்பாட்டம்!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகள், சொத்துக்கள் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழக பேருந்துகளை தாக்கியும், எரித்தும் வருவதுடன், வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் வருகின்ற 16 – செப், 2016 அன்று தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் – அமைப்புகள் ஒரு நாள் கதவடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்திருந்தன. இந்தக் கதவடைப்புப் போராட்டத்தினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரித்து புதுச்சேரி நகரின் முக்கிய சாலைச் சந்திப்பான ராஜீவ் காந்தி சதுக்கத்தில் புதுச்சேரி பு.ஜ.தொ.மு தலைவர், தோழர் சரவணன் தலைமையில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

cauvery-issue-puduvai-demo-3செப் – 16 கதவடைப்புப் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் காலை முதலே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்ததால், தமிழக அரசின் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நகரத்தின் எல்லையில் நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு பகல் 11.00 மணிக்கு மேல் வாகனங்களை நகரத்திற்குள் அனுமதித்திருந்தது போலிசு. நமது போராட்டம் பகல் 11.30 மணிக்கு மேல் நடத்தப்பட்டதால் நமது முழக்கம் மக்கள் மத்தியில் சென்றடையும் வகையில் இருந்தது.

போராட்டத்தில்

  • தமிழகத்துக்கான பங்கில் சூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியின் சம்பா பருவ விவசாயத்துக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் விடப்பட வேண்டும். ஆனால், வெறும் 35.97 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே விடுவித்ததால் டெல்டா விவசாயிகளது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்டுவோம்!
  • cauvery-issue-puduvai-demo-4மாநிலத்தில் ஆளும் காங்கிரசு, தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தாததால் கர்நாடக வாழ் தமிழ் மக்களின் உடமைகள், சொத்துக்கள், சேதப்படுத்தப்படுத்தப்பட்டதற்கும், தமிழக வாகனங்கள் எறிக்கப்பட்டதற்கும் உரிய நட்ட ஈடு வழங்க கர்நாடக அரசினை நிர்ப்பந்திப்போம்!
  • தேசிய ஒருமைப்பாடு பேசுகின்ற காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகளோ காவிரிப் பிரச்சினையில் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாடு எடுத்து உழைக்கும் மக்களைப் பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தி அவர்களைப் புறக்கணிப்போம்!
  • கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வரும் பி.ஜே.பி. சங் பரிவார் கும்பலை அம்பலப்படுத்துவோம்!
  • மழை வளம் குறைவதும், நிலத்தடி நீர் குறைவது – மாசடைவதும் தனியார்மய, தாராளமய, உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப் படுவதால், உருவானவையே. தனது லாபவெறிக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும், அதற்கு துணைநிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தப் போராடுவோம்!

ஆகிய விசயங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகவும் வீச்சாகவும் முழக்கமிடப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முழக்கமிடத் துவங்கிய 20 நிமிடத்தில் போலிசு அனைவரையும் கைது செய்தது. வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பிறகு, அதிகாரிகள் சொன்னால் தான் வெளியில் அனுப்புவோம் என கூறியதால், வந்திருந்த தோழர்கள் மத்தியில் காவிரிப் பிரச்சினையைப் பற்றி விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது. சிறிது நேரத்தில் நம்மை அழைத்த போலிசு, அதிகாரி இங்கு வர வாய்ப்பில்லாததால், போனில் தொடர்பு கொண்டு பேசி நம்மை அனுப்புவதாகக் கூறி விடுவித்தனர்.

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, 9597789801

4. தேனி

cauvery-issue-theni-meeting-1காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
தீர்ப்பை அமுலாக்கா வக்கற்ற மோடிஅரசு!!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதி மன்றம்!!!
செயலற்று கிடக்கும் ஜெயா அரசு!!!

ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் தென்மண்டலம் சார்பில் 15-09-2016 அன்று கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இறுதிநேரம் வரை அனுமதிக்கான விண்ணப்பத்தையே வாங்க மறுத்த போலிசு, கடைசியாக “சரி உங்களுக்கு தெரிந்தைப் பாருங்கள்.எங்களுக்கு முடிந்ததை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கூறிய பிறகுதான் அனுமதியளித்தது.

cauvery-issue-theni-meeting-4ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் மோகன் போலிசின் மேற்கண்ட அலட்சியத்தை வன்மையாக கண்டித்ததுடன், தனது தலைமை உரையில்,”காவிரி, முல்லைப் பெரியாறு ஆகிய நதிநீர் பிரச்சனைகளில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தினார். குறிப்பாக தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் தனது கல்லூரியின் விழாவுக்கு கர்நாடக சாமியாரைக் கூட்டிவந்து கவுரவப் படுத்துகிறார்! அந்த சாமியாரோ பெங்களூரில் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்! மேலும் முல்லைப்பெரியாறின் நீரை உறிஞ்சி விற்பதற்காக பெப்சி கம்பெனி அரசின் எந்தத் துறையிலும் அனுமதிபெறாமல் தனது ஆலைக் கட்டிடத்தை பகிரங்கமாக கட்டி வருகிறது. மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் இது நன்கு தெரிந்தாலும் திட்டமிட்டே இதை மூடிமறைத்து வருகிறார்கள். இதற்கு எதிராக ஒரு கட்சியும் வாய்திறக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, ஆற்று மணலைக் கொள்ளையடிப்பதிற்கும், விளைநிலத்தை தரிசாக்கி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்பதற்கும்தான் திட்டமிட்டு நதிநீர் பிரச்சனைகளில் ஓட்டுக்கட்சிகள் அமைதி காக்கின்றன!” என்று பேசினார்.

cauvery-issue-theni-meeting- thiru-karuppaiya-mullai-periyaru-dam-protection-movement
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தேவாரம் திரு.கருப்பையா

அடுத்து, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தேவாரம் திரு.கருப்பையா, “பிஜேபி கட்சியும், இனவெறி அமைப்புக்களும்தான் கர்நாடகாவில் இன்று கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ‘இந்தியா ஒரேநாடு! நாம் எல்லோரும் இந்தியர்கள்! இந்துக்கள்!” என்று கூப்பாடுபோடும் இவர்கள் தமிழகத்திற்கு மட்டும் தண்ணீர் தரக்கூடாது என்கிறார்கள். ஏன்?…தமிழகம் இந்தியாவில் இல்லையா? தமிழகத்தில் இந்துக்கள் இல்லையா?

ரஜினியை கூட்டிப் போனால் காவிரி நீர் நமக்கு வந்துவிடும் என்கிறார் தமிழிசை. உங்கள் பிள்ளையாரை தூது விட வேண்டியதுதானே?” என்று காவிரி பிரச்சனையில் பிஜேபி-யின் இரட்டை வேடத்தை தோலுரித்தார்!

மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தனது உரையில்,”காவிரியில் தமிழகம் தனது தேவைக்காக பிச்சை எடுக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் சட்டரீதியாக தமிழகத்திற்கு ஒதுக்கிய பங்கீட்டு நீரைத்தான் கேட்கிறோம். இதுநம் உரிமைப் பிரச்சனை! என்று விளக்கியதோடு, கர்நாடகாவுக்கு எதிராக வன்முறையை-இனவெறியை தூண்டுவது நம் நோக்கமல்ல. தமிழகத்தின் உரிமைக்காக விவசாயிகள் கட்சி வேறுபாடின்றி போராட முன்வர வேண்டும் என்றுதான் கோருகிறோம்!” என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் திரு.செங்குட்டுவன், ”காவிரி நீருக்கான போராட்டத்தில் வியாசாயிகள்தான் ஒன்றுபட்டு போராடவேண்டும். கட்சிகளை நம்பி எந்தப்பயனும் இல்லை. முன்பெல்லாம் ஆடுமாடுகள் நீர்குடிக்கும் குளத்தில்தான் நம்மளும்குடித்தோம். அப்போதெல்லாம் யாருக்கும் எந்த நோயும் வரவில்லை. இப்போ விவசாயியே பாட்டில் தண்ணியை வாங்கி குடிக்கும் நிலைக்கு ஆளாயிட்டோம்! பன்னாட்டுக் கம்பெனிக் காரனுக்கு நட்டம்னா ஓடிப்போயி உதவிசெய்யிற இந்த அரசு, சொந்த நாட்டு விவசாயிக்கு நட்டம்னா காசில்லைங்குது! ஒரு கட்சியும் நம்மளப்பத்தி கவலைப்படுறதில்ல! எனவே நம்மதான் நமக்காக போராடி பிரச்னையை தீத்துக்கணும்!” என்று விவசாயிகள் மொழியிலேயே சிறப்பாகப் பேசினார்.

cauvery-issue-theni-meeting-com-kathiravan-pala-joint-sec
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலர் தோழர் கதிரவன்

சிவகங்கை தோழர் நாகராஜ் தனது உரையில், ”ஒன்றோடு ஒன்று எதிரி நாடுகளாக நின்று போரிட்டுக்கொள்ளும் நாடுகள் எல்லாம் தங்களுக்குள் நதிநீரை பங்கிட்டுக் கொள்வதில் ஒற்றுமையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்குள் இருக்கும் இருமாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீரை பகிர்ந்து கொள்ளமுடியா விட்டால் இந்திய ஒருமைப்பாடு எங்கே இருக்கிறது? நாட்டின் கணிமவளத்தைக் கொள்ளையடிப்பதிலும், விவசாயத்தை ஒழித்துக்கட்டி விவசாயிகளை நிலத்திலிருந்து விரட்டியடிப்பதிலும் ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக நிற்கின்றன என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்!” என்று கூறினார்.

இறுதியாக பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலர் தோழர் கதிரவன், “பெங்களூரு நகரம் கன்னடர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அங்கு மூன்றில் ஒரு பங்கினராக உள்ள தமிழர்களின் உழைப்பில்தான் பெங்களூரு இன்று பெருநகரமாக உயர்ந்து நிற்கிறது” என்று தொடங்கி, காவிரி பிரச்சனையில் பி.ஜே.பி.யின் இரட்டைவேடத்தை தோலுரித்துப் பேசியதோடு, அதன் இந்துமதவெறி அரசியலையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

கூடியிருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவிரி பிரச்சனையில் நமது நிலையை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
தேனி

5. திருவள்ளூர்

  • காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
  • தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசு!!
  • நடுநிலை நாடகமாடும் உச்ச நீதிமன்றம்!!!

காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மெளனம் காக்கும் மத்திய அரசை அம்பலப்படுத்தியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தொழிலாளர்களை அணிதிரட்டி 16-09-2016 காலை 10:30 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் தோழர்.ம.சி.சுதேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையாக காவிரி நதிநீர் பிரச்சினை இருந்துவருகிறது. இந்த பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்பையுங்கூட நடைமுறைபடுத்த மறுத்து திட்டமிட்டு இனக்கலவரத்தை நடத்தி தமிழகத்தை வங்சித்து வருகிறது, கர்னாடக இனவெறி அமைப்புகள். இத்தகைய சூழலில் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்த ஒருநாள் பந்த் அன்று நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பகுதி மக்களிடையே மிகுந்த ஆதரவை பெற்றது. கும்மிடிப்பூண்டி பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தபோதிலும், எந்த ஓட்டுக்கட்சியும் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.
தொடர்புகொள்ள: 9444461480

6. திருவெண்ணெய் நல்லூர் ரயில் மறியல்

திருவெண்ணெய் நல்லூர், மக்கள் அதிகாரம் , வி.வி.மு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து ரயில் மறியல் போராட்டம். 100 க்கும் மேற்பட்டோர் கைது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணெய் நல்லூர்

7. திருவாரூர்

காவிரியில் உரிய தண்ணீர் முழுவதும் பெற்று கொடுத்திட, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைத்திட, கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட வேண்டி மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி காவிரி போராட்டக்குழு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் 16-09-2016 அன்று திருவாரூர் வெள்ளக்குடியில் உள்ள மத்திய அரசின் GAIL நிறுவனம் முற்றுகையிடப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் உள்ள மன்னார்குடி சாலையில் காலை 10 மணியில் இருந்து, 11.30 வரை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு அதன்பிறகு GAIL நிறுவனம் முற்றுகையிடப்பட்டது. பிறகு காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து மாலையில் விட்டனர். இதில் தி.மு.க., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

8. பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் மக்கள் அதிகாரத்தை சார்ந்த 20 தோழர்கள் கொடி மற்றும் முழக்கத்துடன் மணிக்கூண்டில் பேரணியாக சென்று அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளுடன் தோழர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்
PH.:9626352829

9. விருத்தாச்சலம்

விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

10. வேதாரண்யம்

மிழகத்தின் காவிரி உரிமையை அடாவடியாக மறுத்து வரும் கர்நாடக அரசையும் கள்ள மௌனம் சாதிக்கும் தமிழக அரசையும்,தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் கன்னட வெறியர்களைக் கண்டித்தும் 16-09-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் கடையடைப்பு ,பேருந்து மற்றும் சாலை மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 15 பேர் பகுதி தி.மு.க அணிகளுடன் இணைந்து வேதாரண்யம் நாகப்பட்டினம் சாலையில் பேருந்து மறியலில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

தோழர் மணிவண்ணன் நினைவேந்தல்

1

நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்

com-manivannan-ninaivendal-11

com-manivannan-ninaivendal-04ரம்ப காலத்து அரசியலை
மாமரத்து கீழேயும்
சமூக அவலத்தைக்
மக்காச் சோளம் தோட்டத்திலும்
கற்றார்
சகதோழர்களுடன் சமூக மாற்றத்திற்கு
சனங்களிடம் சென்றார்.

கோயம்புத்தூர்
ஒரு குட்டி காஷ்மீர்
சாதி வெறியும், மதவெறியும், லாபவெறியும்
கோலோச்சும் இங்கே
பேசமுடியாது, எழுத முடியாது, கூட முடியாது
இருபத்தி ஐந்து முறை சந்தித்த
சிறைச்சாலையே சொல்லும்
தோழர் செய்த கலகம் என்னவென்று.

com-manivannan-ninaivendal-05சொல்லில் அடங்காத துயரங்களை
எண்ணிய போதெல்லாம்
மக்களுக்கு அறைகூவல் விடுக்க
அமைப்பின் சுவரொட்டிக்கும் தடை என்பதினாலே
காணும் இடமெல்லாம்
நகரம் கலையிழந்து போய் இருப்பதனைக் கண்டு
இரவு முழுவதும் தன் கையாலே எழுதி ஒட்டுவார்.

பறையிசை எழுப்பி பாடுவார்
மக்கள்படும் பாடுகளைக் கொண்டு
அரசின் துகிலுரிப்பார்.

அருமையான தோழர்
எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்
பெருந்தன்மைக்குச் சொந்தமானவர்

com-manivannan-ninaivendal-06

லஞ்சமும் ஊழலும் மிஞ்சியிருக்கும்
அரசு கட்டமைப்பு நெருக்கடியில்
தாலி கொடுக்கும் நிகழ்ச்சியும்
தாலி அறுக்கும் நிகழ்வும்
டாஸ்மாக் வியாபாரத்திலே நடக்குது.

com-manivannan-ninaivendal-17அரசிடம் கெஞ்சாதே
போலீஸ்க்கு அஞ்சாதே
எவன் வருவான் பார்ப்போமென்று
கடையை உடைத்தார் எரித்தார்

போராடக் கற்றுக் கொடுத்த தோழர்
இறந்து விட்டாலும்
போராடுங்கள் என்று
புன்னகையுடன்
அழைக்கும் அவரது முகம்
நம் நெஞ்சை விட்டு
அகலாது!

போராடுவோம்
போராடிக் கொண்டே இருப்போம்

தோழருக்கு வீரவணக்கம்!

ம.க.இ.க தோழர் மணிவண்ணன் படத்திறப்பு

சாதி, மத பிற்போக்குக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் சுயநலம், ஒதுங்கும் போக்கை ஊக்குவிக்கும் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு எதிராகவும் போராடி புரட்சிகரப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்தவர் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தோழர் மணிவண்ணனுக்கு படத்திறப்பு நிகழ்வு நடந்தது. கோவையில் அவர் வாழ்ந்த ஒண்டிப்புதூரில் பகுதி வாழ் மக்கள், உறவினர்கள் மற்றும் திரளான தோழர்க்ள் குழுமியிருக்க நினைவஞ்சலியுடன் படத்திறப்பு நடந்தது.
நாள் : 11-09-2016 ஞாயிறு காலை 10 மணி

தலைமை : தோழர் சித்தார்த்தன் செயலர் ம.க.இ.க, கோவை

உரை
தோழர் மூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கோவை
தோழர் சம்புகன், ம.க.இ.க, கோவை
தோழர் தெய்வேந்திரன், சி.பி.எம்
தோழர் குணசேகரன், சி.பி.ஐ
தோழர் ராஜன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் ஆறுமுகம், மணிவண்ணனின் சகோதரர்
தோழர் வினோத், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தோழர் சூர்யா, மக்கள் அதிகாரம், திருப்பூர் மாவட்டம்
தோழர் அன்பு – கவிதாஞ்சலி
தோழர் விளவை ராமசாமி, மாநில துணைத் தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் கோவன், பொறுப்பாளர், மைய கலைக்குழு, ம.க.இ.க, தமிழ்நாடு

தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க, தமிழ்நாடு

ஆகியோர் தோழரது நினைவுகளை படிப்பினையோடு பகிர்ந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“புரட்சிகரப் பணி என்பது இறக்கி வைக்கப்படக் கூடிய சுமையல்ல மாறாக ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றி வைக்கக் கூடிய இறக்கி வைக்க முடியாத கடமை என்பதை தோழர்கள் உணர்ந்து புரட்சிகரப் பணியை நிறைவேற்ற வேண்டும்” என்று தோழர் கதிரவன் தனது இறுதி உரையில் கூறினார். அதை ஆமோதித்தவாறு தோழர் மணிவண்ணன் எங்களது நினைவுகளில் நீங்கா இடம்பெற்று விட்டார்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கோவை
9487916569

காவிரி – மோடி அரசின் சதியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

1

காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசு!!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதிமன்றம்!!!

cauvery-vpm-pp-demo-1என்ற தலைப்பில் சென்னை, திருவாரூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

முழக்கங்கள்

காவிரியை முடக்குது கர்நாடக அரசு!
தீர்ப்பை அமலாக்க வக்கற்றது
மோடி அரசு! மோடி அரசு!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
காவிரியை முடக்கும் கர்நாடக அரசை!
தமிழர்களை தாக்கும் கன்னட வெறியர்களை!
தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசை!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதி மன்றத்தை!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
வன்மையாக கண்டிக்கின்றோம்!

cauvery-issue-puduvai-pp-demo-6காவிரி, பாலாறு, சிறுவாணி
பவானி, முல்லைப் பெரியாறு
ஆறுகளின் தமிழக உரிமையை
தடுத்து நிறுத்துது தேசிய நீரோட்டம்!
துப்புக்கெட்ட தேசிய நீரோட்டம்!

புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
மாநில உரிமையை பாதுக்காக்காத
மக்கள் விரோத தேசிய நீரோட்டத்தை
புறக்கணிப்போம்!  புறக்கணிப்போம்!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
காவிரி ஆற்றின் தமிழக உரிமையை
நிலைநாட்ட துப்பில்லாத
தமிழக அரசை கண்டிக்கின்றோம்!

cauvery-issue-pp-chennai-03முல்லைப் பெரியாறின் தமிழக உரிமையை
பாலாற்றின் தமிழக உரிமையை
சிறுவாணியாற்றின் தமிழக உரிமையை
பவானியாற்றின் தமிழக உரிமையை
நிலைநாட்ட துப்பில்லாத
ஜெயா அரசைக் கண்டிக்கின்றோம்!
வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

மீதேன், கெயில் அழிவுத் திட்டங்களும்
வடமொழியும் திணிப்பு!
கல்வி உரிமையும் பறிப்பு!
வழக்கறிஞர் உரிமை பறிப்பு!
தமிழன் தலையில் ஏறி மிதிக்குது மோடி அரசு!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
இந்து மதவெறி மோடி அரசை!
வன்மையாக கண்டிக்கின்றோம்!

cauvery-issue-tvr-demo-12தூக்கியெறிவோம்!  தூக்கியெறிவோம்!
மாநில உரிமையை பாதுகாக்காத
ஆளத்தகுதி இழந்த மத்திய அரசை!
தோற்றுப்போன இந்திய அரசை!
தூக்கியெறிவோம்!  தூக்கியெறிவோம்!

தீராது! தீராது!
எதிர்நிலை சக்தியாகி போன
இந்த அரசு கட்டமைப்பில்
மக்கள் பிரச்சனைத் தீராது

கிளர்ந்தெழு!   கிளர்ந்தெழு!
தமிழ்ச் சமூகமே கிளர்ந்தெழு!
சாராய போதை, போலிசு பயம்
சினிமா மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்
தமிழ்ச் சமூகமே கிளர்ந்தெழு!
மண்ணைக்காக்க கிளர்ந்தெழு!

பிற மாநில மக்களின்!
உரிமையை மதிக்கின்ற
உயர்வான பண்பாட்டை
மக்களிடம் உருவாக்கப்
போராடுவோம்! போராடுவோம்!

1. சென்னை, குமணன்சாவடி

சென்னை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் 14–9-2016 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் மருது
தோழர் மருது

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சென்னை மண்டல குழு தோழர் மருது

”கர்நாடகாவில் ஒரு இளைஞர் இணையத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என எழுதியதற்காக அவரை கர்நாடக இளைஞர்கள் அடித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என சொல்ல வைத்துள்ளனர். கர்நாடகாவில் பேருந்து, லாரிகள் எரிக்கப்படுகின்றன. தமிழர்கள் என்று தெரிந்தாலே தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு நதி ஓடுகிறது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீர் பங்கிட்டு கொள்ளப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் நடுவே ஒரு நதி ஓடுகிறது தினமும் போர் நடக்கிறது குண்டுகள் போட்டு 100 உயிர்கள் தினமும் கொல்லப்படுகிறது ஆனால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் பங்கிடப்படுகிறது. ஒரு நதியை 6 நாடுகள் பங்கிட்டு கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஏன் சாத்தியப்படவில்லை?

மத்திய அரசோ மாநில அரசோ இதை சரி செய்ய வக்கில்லாமல் உள்ளன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டியதில்லை என தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பேசுகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நாடே கொந்தளித்தது. மாணவர், மக்கள் என அனைவரும் போராடிக்கொண்டிருந்தார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை போல ஒரு போர் இன்று தேவையாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையில் ஒரு லட்சம் மக்கள் திரண்டு போராடி எப்படி அணையை கட்டவிடாமல் இனவெறி கேரள அரசிடமிருந்து காப்பாற்றினோமோ இன்று அப்படி போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு இந்தக் கட்டமைப்பில் தீர்வு இல்லை” என எழுச்சியோடு பேசினார்.

இதனைத் தொடர்ந்து தோழர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கண்டன உரையாற்றிய சென்னை மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்,

com-vetrivel-chezhiyan
தோழர் வெற்றிவேல் செழியன்

“இன்று கர்நாடகாவில் காவிரியை வைத்து இனவெறியை தூண்டும் கன்னட அமைப்புகள் சுதந்திரமாக நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க வக்கற்று உள்ளது இந்த அரசு கட்டமைப்பு.

காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமான நதியல்ல. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என நான்கு மாநிலங்களுக்கு சொந்தம். ஆற்றின் ஓட்டம், வரலாறு ரீதியான அதன் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டிற்கு 58% கர்நாடகவிற்கு 37% தரப்பட வேண்டும். சர்வதேச நதிநீர் சட்டத்தின் படி கடைமடை பகுதிக்கு உரிமையுண்டு இது தானம் என்பது போல் பேசப்படுகிறது அல்ல இது நம்முடைய உரிமை.

ஜூன் மாதம் 242 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் சராசரியாக ஒரு வருடத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் திறக்கவில்லை. அதை இந்த அரசும் கேட்கவில்லை. தமிழக விவசாயிகள் போராடிய பிறகு தூங்கி கொண்டிருந்த ஜெயலலிதா எழுந்து கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என ஆகஸ்ட மாதத்தில் சித்தாரமையா கூறுகிறார். இதுவே அந்த கர்நாடக மக்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கருத்தை உருவாக்குகிறது அதனால் சித்தாரமையா தான் இந்த பிரச்சனையில் முதல் குற்றவாளி.

cauvery-issue-pp-chennai-02இவ்வளவு பிரச்சனை நடக்கும் போது செயலற்ற ரோமாபுரி மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல இருந்த ஜெயலலிதா மக்கள் போராடிய பிறகே கடிதம் எழுதுகிறார். கடிதம் எழுதி என்ன நடக்க போகிறது ஒன்றும் நடக்காது அதனால் ஜெயலலிதா தான் இரண்டாவது குற்றவாளி. பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுபயணத்தில் காலம் கழிக்கிறார் எந்த பிரச்சனையையும் சரி செய்ய வக்கற்ற மோடி மூன்றாம் குற்றவாளி.

பொன் ராதா கிருஷ்ணன் மொழி தீவிரவாதிகளால் தான் பிரச்சனை என்று பேசுகிறார். கர்நாடகாவில் எடியுரப்பா தான் இந்த பிரச்சனைகளை தூண்டி விடுகிறார். தேசியப் கட்சி என்று கூறி கொள்ளும் இவர்கள் அங்கு தண்ணீர் திறக்கக்கூடாது என அடிக்கிறார்கள். இங்கே தண்ணீர் கொடுக்கச் சொல்லி நாடகமாடுகிறார்கள். அரசியல் ஆதாயம் ஒன்றே இவர்கள் நோக்கம்.

காவிரியை வைத்து கன்னட இன பெருமை பேசிப்படுகிறது. எப்படி சாதி பெருமை பேசி எந்த நியாயத்தையும் பேச விடாமல் கண்ணை கட்டுகிறார்களோ அது போல் இன பெருமை பேசி தூண்டி விடுகிறார்கள். இரண்டு மாநிலங்களுக்குள்ளும் காவிரி நீர் மட்டும் பங்கிடப்படவில்லை. பல்வேறு கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. ஆகவே ஆரோக்கியமான உறவு வேண்டும் என்பதை பற்றி யாரும் பேசுவதில்லை. இனவெறியை தூண்டி அரசியல் ஆதாயம் அடையவே பி.ஜே.பி போன்ற கட்சிகள் செயல்படுகிறார்கள்.

cauvery-issue-pp-chennai-10குடகுமலையில் தான் காவிரி தொடங்கும் இடம் அங்கு நட்சத்திர விடுதிகள் கட்டப்படுகின்றன. நீர்நிலைகள் பாதுகாக்கபடுவதில்லை. காடுகள் அழிக்கப்படுகின்றன. மழை குறைந்து விட்டது. இயற்கை சமநிலையை குலைக்கிறார்கள். இதனால் காவிரியில் தண்ணீரே இல்லாத நிலை உருவாகி வருகிறது.

மீத்தேன் திட்டத்தை அமுல்படுத்த இந்தியாவில் விவசாயத்தை அழித்து விட்டால் நிலத்தை விட்டு விவசாயியை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம் என்ற திட்டத்தில் தான் இது நடக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவகம் செய்வே இது நடக்கிறது.

நீதிமன்ற உத்திரவை மதிக்காமல் கர்நாடக அரசு நடந்து கொள்கிறது அதை கேட்க வக்கில்லாமல் மோடி அரசு உள்ளது. இதுவே இந்த அரசு இயந்திரம் தோற்றுப்போய்விட்டதற்கு சான்று.

தேவகவுடா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க தேவையில்லை என்கிறார். யார் இவர் முன்னாள் பிரதமர். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடப்பேன் என அடித்து சத்தியம் செய்தவர். மதிக்கத் தேவையில்லை என்று அவர் சொல்கிறார். அவர்கள் இயற்றிய சட்டத்தை அவர்களே மதிப்பதில்லை. இதைத்தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

press-meetகாவிரியில் எவ்வளவு கொள்ளவு தண்ணீர் இருக்கிறதோ அதில் 58% தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும் ஆனால் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது ”வாழு வாழவிடு” என்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. 15 டி.எம்.சி கொடு என கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறி நிற்கிறது. அவன் போட்ட சட்டத்தை அவனே மதிப்பதில்லை. அவன் உருவாக்கிய விதியை அவனே மீறுகிறான். இது தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

இந்த அரசியல் கட்டமைப்பில் சாதி, மத இன பிரச்சனைகளை தீர்க்க முடியாது. தேசிய ஆணையம், மாநில ஆணையங்கள் பல இருந்தும் அது செயல்படுவதில்லை.

இதற்கு வெளியே தான் தீர்வு என்கிறோம். மக்களுக்கு மற்றவர் உரிமையை பறிப்பது தவறு என்ற உயரிய பண்பாட்டை உருவாக்க வேண்டியுள்ளது. எடியூரப்பா பேசும் போது கர்நாடக மக்களே எதிர்த்தால் இப்படி பேசுவாரா? மக்கள் தான் போராட வேண்டும் என்று இந்த பிரச்சனையை நிலவும் கட்டமைப்பில் தீர்த்து கொள்ள முடியாது” – என பேசினார்.

“இந்த போராட்டம் இன்று முடியவில்லை தொடங்குகிறது” என்று முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவுப்பெற்றது.

ஆர்ப்பாட்டம் நடந்த இடம் நான்கு முனை சந்திப்பு என்பதாலும், பேரூந்து நிறுத்தம் என்பதாலும் பொதுவான மக்களும் தொழிலாளர்களும் அதிகம் கூடுமிடம் என்பதாலும் ஆர்ப்பாட்டத்தை நின்று கவனித்தனர். பிரசுரம் தரும் பொழுது கவனமாக படித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

2. திருவாரூர்

cauvery-issue-tvr-demo-1113-09-2016 காலை 10.30 மணிக்கு பேருந்து நிலையம், திருவாரூரில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட மக்களதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி தலைமையேற்று கண்டன உரையாற்றினார். தோழர் சண்முகசுந்தரம் – மக்களதிகாரம், மண்டலக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து – மக்களதிகாரம், மண்டலக்குழு உறுப்பினர் தோழர் தனியரசு – மக்களதிகாரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் – மக்களதிகாரம், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் தோழர் GV எனப்படும் G.வரதராஜன், மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் காளியப்பன் – மக்களதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர் சுந்தரமூர்த்தி – மக்களதிகாரம் நன்றி கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,

மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

3. புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதி தென்கோபுர வீதியில் மாலை 5 00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

cauvery-issue-puduvai-pp-demo-1“இரண்டு மாநில மக்கள் காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்ள முடியாமல் தடுத்து இன உணர்வுகளை தூண்டி மோத விட்டு ரசிக்குது மத்திய மாநில அரசுகள். மக்களின் அடிப்படையான எந்த உரிமையும் கொடுக்காத அரசு கட்டமைப்பு நமக்கு இனி தேவையில்லை, தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை கர்நாடக அரசு மீறும் போது இதில் தலையிட்டு பேசி தீர்க்க வக்கில்லாத துப்பில்லாத அரசு கட்டமைப்பை அடித்து நொறிக்கிவிட்டு மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என தலைமையுரையில் பேசினார் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர் தோழர் பிரகாஷ்.

cauvery-issue-puduvai-pp-demo-2இவரை தொடர்ந்து பேசிய தோழர் தீனா, அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி, “தண்ணீர் கேட்டு நடக்கும் போராட்டம் என்பது இனரீதியில் மக்களை பிளவு படுத்தும் போராட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரை தடை விதிப்பதற்கு அவர்கள் யார்? இனவெறியை தூண்டி தமிழ் மக்களை அடித்து துண்புறுத்துவது கண்டிகத்தக்கது இந்த கலவரத்திற்கு பின்னால் பா.ஜ.க அரசு இருக்கிறது அவர்களின் அகண்டபாரத்தை வீழ்த்தாமல் நமக்கு விடுதலை இல்லை” என்று உணர்வுபூர்வமாக பேசினார்.

அடுத்ததாக தோழர் லெனின் சுப்பையா, “மோடி ஒரு முகமூடி என்றும் மோடி இந்தியாவை சுரண்டிகொடுக்கும் முதலாளிகளின் எடுபிடி, பன்னாட்டு கம்பெனிகளின் மூளை” என மோடியின் உண்மை முகத்தை தோலுரித்து பாடல் மூலம் வெளிப்படுத்தினார்.

cauvery-issue-puduvai-pp-demo-4தோழர் சாந்த குமார், பகுதி ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி தனது கண்டனவுரையில், “காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தரமறுக்கும் கர்நாடகத்தை கண்டிக்க தோற்று போய் நிற்கிறது மத்திய மாநில அரசும். கர்நாடகாவில் இனவெறியை தூண்டுவதில் வன்முறையில் ஈடுபடுவதில் மோடி அரசுக்கு பங்கிருக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு தரவேண்டிய நியாயமான உரிமையை உச்சநீதி மன்றமே குறைத்து கொடுக்க சொல்லி துரோகம் செய்துள்ளது. காவிரி நீரை பங்கிட்டுக்கொள்ளும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றமே மீறுகிறது. காவிரி பிர்சனையில் எதிரிகளை ஒளித்து வைத்து விட்டு இரண்டு மாநில விவசாயிகளையும் மக்களையும் இன ரீதியில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசு அமைப்புகள். அங்குள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீரை விற்கின்றனர். கர்நாட விவசாயிகள் தினம் தினம் இந்த அரசால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே இந்த அரசு மக்களை ஆளும் தகுதி இழந்து மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பது காவிரி பிரச்சனையில் தெரிந்துவிட்டது இனி மக்கள் அதிகாரமே தீர்வு” என்று பேசினார்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி

4. விழுப்புரம்

cauvery-vpm-pp-demo-3லைமை : தோழர் மோகன்ராஜ், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் . விழுப்புரம்.
கண்டன உரை:
தெய்வக்கண்ணு, உழவர் மன்றம், விருதை .
வழக்கறிஞர் வைத்திஸ்வரன், கடலூர்.
தோழர் ரவி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் , சீர்காழி மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு டெல்டா மாவட்டம்.
தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

செப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்

2

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் – ஏன்?

அன்பார்ந்த மாணவர்களே!

  1. புதிய கல்விக் கொள்கை
    புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

    அன்று, ‘பார்ப்பனர் அல்லாத சாதிகளுக்கு கல்வியறிவு தேவையில்லை என்றது மனுதர்மம்’ இன்று, உழைக்கும் சாதி மற்றும் வர்க்கங்களுக்கு 5-ம் வகுப்புக்கு மேல் கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை.

  2. அன்று, உடலால் இந்தியர்களாகவும் சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்குவதற்காக மெக்காலே கல்வி திட்டத்தை புகுத்தினார்கள் ஆங்கிலேயர்கள். இன்று, இந்து, இந்தி, இந்தியா எனும் பார்ப்பனிய தேசியத்தை கட்டுவதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்துவதற்காகவே புதிய கல்விக் கொள்கை எனும் நவீன மெக்காலே கல்வி திட்டத்தை புகுத்துகிறது மோடி அரசு.
  1. ஆரம்பக் கல்வி முதல் ஐ.ஐ.டி.ல் சமஸ்கிருத திணிப்பின் மூலம் ராமாயணம் மாகாபாரதம், பகவத் கீதை போன்றவைகள் பாடமாக நடத்தப்படும். இனி வேத காலத்திலேயே விமானம், டி.வி, மரபணு அறிவியல் எல்லாம் இருந்தது என சொல்லித் தரப்படும். மொத்தத்தில் பல்வேறு இனம், மொழி, பண்பாடு, வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஆரிய – பார்பனர்களின் பண்பாடே இந்தியாவின் பண்பாடாக முன்னிறுத்தப்படும்.
  2. உயர்கல்வித் துறையின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளும், நிர்வாக அமைப்புகளும் WTO-GATS வழிகாட்டுதலின்படி அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
  3. கல்விநிறுவனங்கள்மீதானபுகார்கள் இனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாது, கல்விதீர்ப்பாயத்தில் தான் (Educational tribunal) விசாரிக்கப்படும். அங்கு ஏழை மாணவர்களுக்கு நீதி மறுக்கப்படும்.
  4. அரசு, அரசு உதவி பெறும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கக் கூடாதாம். நிதி தன்னாட்சியை (financial autonomy) அதாவது, மாணவர்களிடமே கட்டணம் வசூலித்துக்கொள்ள வேண்டுமாம்.
  5. அரசு, அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களை மூடுவது, கல்வியை தனியார்வசம் ஒப்படைப்பது, வெளிநாட்டுப் பல்கலைகழங்களை அனுமதிப்பது இது தான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.
  6. வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்கள் இனி இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவார்கள். நம்நாட்டு ஆரிசியர்கள் – பேராசிரியர்கள் வீதிக்கு துரத்தப்படுவார்கள்.
  7. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைக்க தடை, கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்பு என கல்வி நிறுவனங்கள் சிறைச்சாலையாக மாற்றப்படும்.
  8. பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மத்தியபட்டியலுக்கு கொண்டு செல்லப்போகிறார்கள். இது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது மட்டுமல்ல, ஒரே பாடத்திட்டம், நுழைவுத்தேர்வு என்ற பெயரில் ஒருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக மலிவான உழைப்புசக்தியாகவும், மறுபுறம் பண்பாட்டு ரீதியாக பார்ப்பனிய அடிமை சிந்தனையில் ஊறியவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவதாகும்.

இந்தித் திணிப்பை விரட்டியத்த வீரம்செறிந்த வரலாறு கொண்டவர்கள் நாம். அலையலையாக மாணவர்கள் அணிதிரள்வோம்!
கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அடிமை விசுவாசத்தையும், கொடிய பார்ப்பனிய விசத்தையும் கக்கும்,
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான நகலை தீயிட்டுக் கொளுத்துவோம்!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம்!

செப்டம்பர் – 20

சென்னையில்: காலை 12 மணி
இடம்
: அண்ணாசாலை தபால்நிலையம் அருகில்.

மற்றும் விழுப்புரம்/விருத்தாச்சலம்/திருச்சி/கோவை/நெல்லை.

தகவல்,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு
. 9445112675

 

மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்

0

வேலூர் மாவட்டம் எசையனூர் மக்களின்
மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம் கற்பிக்கும் பாடம் !

esaiyanur-river-sand-miningவேலூர் மாவட்டம் எசையனூர் கிராம பாலாற்று படுகையில் சட்ட விரோதமாக மணல் திருடிய இரண்டு ஹிட்டாச்சி இயந்திரத்தை கைப்பற்றிய ஊர் மக்கள் ஊருக்குள் கொண்டு வந்து சிறைபிடித்தனர். இது பாலாற்றையே நாசமாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான மணற்கொள்ளையன் கரிகாலனின் இயந்திரம் என்பதால் ஊர் மக்கள் தகவல் சொல்லியும் வருவாய்த்துறை அதிகாரிகளோ, பொதுப் பணித்துறையோ, போலீசோ அங்கு வரவில்லை. உடனே ஊர் மக்கள் சாலை மறியல் செய்து போக்குவரத்தை தடுத்தவுடன் டி.எஸ்.பி மதிவாணன், ஆற்காடு தாசில்தார் சாந்தி ஆகியோர் போலீசு படை சகிதமாக வந்து மறியலை கைவிடுமாறு ஊர்மக்களை மிரட்டினர்.

மணல் அள்ளிய இயந்திரத்தை பறிமுதல் செய்து மணற் கொள்ளையன் கரிகாலனையும் கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம் என் மக்கள் கோரியதை அதிகாரிகள் ஏற்றதால் மறியல் கைவிடப்பட்டது. ஊர் பொதுமக்கள் சார்பில் கையெழுத்திட்டு புகார் அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த மணல் கொள்ளையன் போலீசு துணையோடு மக்களை மிரட்டிப் பார்த்தான். மக்கள் அனைவரும் அவனை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து அடிக்க பாய்ந்தனர். ஓடிப்போய் அவன் வந்த ஜீப்பிற்குள் உட்கார்ந்து கதவை சாத்திக் கொண்டான். அவன் ஜீப்பை மக்கள் முற்றுகையிட்டனர். அதன் பிறகு போலீசு ‘பாதுகாப்பு’டன் மணற் திருடிய குற்றவாளி கரிகாலன் தப்பிச் சென்றான்.

இரண்டு ஹிட்டாச்சி இயந்திரங்களையும் எப்படியாவது மீட்டு மணல் திருடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ‘கடமை’ உணர்வோடு காத்திருந்த டி.எஸ்.பி மதிவாணன் இரவு ஆனதும் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு பறிமுதல் செய்த எந்திரத்தை கொண்டு செல்வதாகவும் மணல் திருடன் மீது வழக்கு போடுவதாகவும் கூறி இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றை கடந்து மணல் திருடன் கரிகாலனிடமே ஒப்படைத்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

எப்பேர்பட்ட கடமை உணர்ச்சி பாருங்கள். ‘வேலியே பயிரை மேற்கிறது’ என்ற பழமொழியை நடைமுறையில் நிருபித்து காட்டியுள்ளார். மதிவாணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. மணற்கொள்ளைக்கு எதிராக நடத்த பல மக்கள் போராட்டங்களை போலீசை வைத்து ஒடுக்கி மணற் கொள்ளையனுக்கு அடியாள் வேலை செய்து வருபவர்தான் இந்த மதிவாணன்.

palar-sand
கோப்புப் படம்

மறுநாள் காலை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று எசையனூர் கிராம மக்கள் கைப்பற்றிய இயந்திரம் பற்றி கேட்ட போது அங்கிருந்த போலீசு ‘‘எங்க ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உங்கள் ஊர் வராது” என்று கூறிவிட்டனர். அதன் பிறகு டி.எஸ்.பி மதிவாணனிடமே ஊர் மக்கள் போன் செய்து பறிமுதல் செய்த இயந்திரம் எங்கே என்று கேட்ட போது ஊர் மக்கள் தந்த பொதுவான புகார் மூலம் நடிவடிக்கை எடுக்க முடியாது என்றும் குறிப்பாக ஒருவர் ஆற்காடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் தந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை தொடர்ந்து ஊர் மக்கள் 7 பேர் ஆற்காடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றனர்.

அங்கு போலீசு படையுடன் காத்திருந்த ஆய்வாளர் விஜயகுமார் ஊர் மக்கள் கொண்டு வந்த புகாரை பெறாமல் ஹிட்டாச்சியின் கண்ணாடியை உடைத்ததற்கும், சாலை மறியல் செய்ததற்கும் உங்கள் அனைவரையும் ரிமாண்டு செய்கிறேன் என்று மிரட்டி போலீஸ் நிலையத்திலேயே உட்கார வைத்து ரிமாண்ட் செய்யாமல் வெளியே விட்டால் போதும் என்ற மனநிலைக்கு ஊர் மக்களை தள்ளிய போலீசு “இனிமேல் மணல் எடுக்கும் விசயத்தில் தலையிடக் கூடாது” என மிரட்டி அனுப்பி வைத்துள்ளது.

சாலை மறியல் செய்த போது அங்கு வந்த ஆற்காடு தாசில்தார் சாந்தி அவர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி என்றும் மேலிடத்து அழுத்தம் காரணமாக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவரே கூறியதாகவும் ஊர் மக்கள் கூறினர். சகாயம், சாந்தி போன்ற நேர்மையான அதிகாரிகளால் மக்களுக்கு என்ன பயன் நேர்மையானவர்களின் அதிகாரம் இந்த அரசுக் கட்டமைப்பில் செல்லாக்காசாகிப் போயுள்ளது என்பதே இச்சம்பவம் நமக்கு தெரிவிக்கும் தெளிவான உண்மையாகும்.

வேலூர் மாவட்டத்தில் தலையாரி முதல் கலெக்டர் வரையிலும் சாதாரண போலீசு முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரையிலும் மணற் கொள்ளையின் பங்குதாரர்களாக உள்ளனர். பாலாற்றிலும் குவாரி அமைத்து சட்டத்திற்கு உட்பட்டு மணல் அள்ளும் வேலையை பொதுப்பணித்துறை செய்ய வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய வேலையை மணற் கொள்ளையன் கரிகாலன் செய்கிறான். வேலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் மணற்கொள்ளையின் பங்குதாரராக உள்ள போது இதனால் பாதிக்கப்படும் மக்கள் யாரிடம் சென்று சட்டப்படி முறையிடவும் தீர்வு காணவும் முடியும்? மணற் கொள்ளையால் பாதிக்கப்படும் கிராமத்தின் வார்டு கவுன்சிலர் முதல் பஞ்சாயத்து தலைவர் வரையிலும் மாதச் சம்பளமாகவே மணற்கொள்ளையின் பங்கு போய் சேர்கிறது. இது ஊரறிந்த ரகசியமாகும்.

இந்த மணல் திருட்டு சம்பவம் மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளில் வெளிவந்தும் கூட சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை பற்றி வருவாய்துறை அதிகாரிகளோ, பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, போலீசோ கவலைப்படவில்லை. தான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் விலங்குகள் போல ஆற்றையும் நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டி மக்கள் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுப்பணித்துறையே அதை அழித்து நாசம் செய்கிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் தகுதியை இழந்து தோற்று போய் நீர் நிலைகளை அழிக்கும் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்டது பொதுப்பணித்துறை.

சட்டப்படி வழக்கு பதிவு செய்ய முடியாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தகுதியை இழந்து சட்டப்படி புகார் கொடுத்த மக்களையே எதிர்நிலையில் நின்று மிரட்டுகிறது போலீசு. இச்சம்பவம் மொத்த அரசு கட்டமைப்பும் மக்களை ஆளும் தகுதியை இழந்து தோற்றுப் போய் மக்களுக்கு எதிரான சக்தியாக மாறிபோய் உள்ளது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்து தோற்றுப் போய் நாட்டின் ஆகப் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை நாம் தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும். இந்த அரசுக் கட்டமைப்பிற்கு வெளியேதான் பிரச்சனையை தீர்க்க முடியும், இதுதான் தீர்வு.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்

காவிரி : செப்டம்பர் 16 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம் !

1

1. மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
செப்டம்பர் 16 அன்று நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் அனைவரும்
பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்!

buses-torched
கர்நாடகாவில் எரிக்கப்பட்ட பேருந்துகள்

பலநாடுகளைக் கடந்து செல்லும் நதிகளில் தண்ணீர் பங்கீட்டு உரிமை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் சர்வதேச நீதிமன்றம், சர்வதேச நதிநீர்க் கொள்கை அதை கண்காணித்து அமுல் படுத்த பொதுவான அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை என தீர்க்கப்படுகின்றது. இருநாடுகளும் பேசி ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் அல்லது உத்தரவுகளை ஒரு நாடு மீறினால் பொருளாதாரத்தடை, கடன் கொடுக்க மறுப்பது, இராணுவ நடவடிக்கை போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க மைய ரீதியான பொது அமைப்பு இல்லை. தற்போதுள்ள மைய அரசு கர்நாடகாவின் ஆட்சி அதிகாரத்தை நோக்கமாக வைத்து ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. மைய அரசு காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல மீத்தேன், கெயில், கூடங்குளம், நியூட்ரினோ, கழிவுகளை கொட்டுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தை ஓரவஞ்சனையாக நடத்துகிறது.

நதி உற்பத்தியாகின்ற இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை உள்ள நிலப்பகுதி மக்களுக்கு, அந்த மாநிலங்களுக்கு அந்த ஆற்று நீரின் மீது உரிமை உண்டு. எங்களுக்கே பற்றாக்குறை என்ற கர்நாடகாவின் நாடகத்தை யாரும் எப்போதும் ஏற்கமுடியாது. வெள்ள காலங்களில் அதனின் பாதிப்புகளை கடைமடைப் பகுதியான தமிழகம் தான் எதிர்கொள்கிறது.

ஒரு தெருக்குழாயில் வரும் தண்ணீரை தண்ணீரின் இருப்புக்கு ஏற்றவாறு அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் முன் குழாய் உள்ளது என்பதாலேயே நீர் முழுவதும் அந்த வீட்டுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கோர முடியாது. இந்த அடிப்படையை உணராத கன்னட இனவெறியர்கள் குறுகிய அரசியல் லாபத்திற்காகவும் பிழைப்பு வாதத்திற்காகவும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை தாக்குகிறார்கள், வாகனங்களை கொளுத்துகிறார்கள். தற்போது நடக்கும் கலவரத்தை கர்நாடக பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்தான் நடத்திவருகின்றது என்பது முக்கியமானது. இதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

இயற்கை வளங்களை, மனிதவளங்களை கனிம வளங்களை, உடனடி லாபத்திற்காக சூறையாடுவதில் கொள்ளையடிப்பதில் மைய, மாநில அரசுகள் ஒற்றுமையோடு பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக தனியார்மய தாராளமய கொள்கையை அமல்படுத்துகின்றன. நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான, இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொலை நோக்குத்திட்டம் இந்திய அரசிடம் இல்லை. மாநில அரசிடமும் அத்தகைய திட்டம் ஏதும் இல்லை.

நிலவுகின்ற அரசுக்கட்டமைப்பும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை , சட்டவிதிகளை அமல்படுத்த முடியாமல் தோற்று போய்விட்டது. ஆறுகளில் ரசாயன – மருத்துவக்கழிவுகளை கொட்டுவது, ஆலைக்கழிவுகளை, சாக்கடைகளை கலக்க விடுவது, மணற்கொள்ளையை முன் நின்று நடத்துவது, ரியல் எஸ்டேட் , மாபியாக்களுக்கு நீர்நிலைகளை பட்டா போட்டு கொடுப்பது, கிரானைட், தாதுமணல் கொள்ளைக்கு கூட்டாளியாக செயல்படுவது, காடுகள் மலைகளில் பன்னாட்டு கம்பெனிகளின் சுற்றுலாத்தலங்கள் அமைப்பது என முன் நின்று செய்கின்றது. இதற்கு எதிராகப் போராடும் மக்களை போலீசை வைத்து அடக்கி ஒடுக்க முயல்கின்றது.

தனியார்மய – தாராளமய என்ற மறுகாலனிய நாசகார கொள்கையை ஏற்றுக்கொண்ட, அதை அமல் படுத்துகின்ற ஓட்டுச்சீட்டு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களையும் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கின்ற மக்கள் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். இந்தப் புரிதலோடு தற்போதைய காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நமக்கான தண்ணீர் பங்கீட்டை ஊன்றி நின்று விடாப்பிடியாகப் போராடி வென்றே தீரவேண்டும். அதே நேரத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி பாதுகாக்க தமிழகத்தில் ஏரிகள் , குளங்கள் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மணற்கொள்ளையை அடியோடு ஒழித்துக்கட்டி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதுதான் நிரந்தரத்தீர்வு.

செப்டம்பர் 16 வெள்ளி அன்று நடக்க உள்ள முழுஅடைப்பு போராட்டத்தில் மட்டுமல்ல தொடர்ந்து நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் அனைவரும் பங்கேற்று முழு ஆதரவை அளிக்க வேண்டும். காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு போராடுவோம். நாளை தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்

வழக்கறிஞர். சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம்

2. பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகள், சொத்துக்கள் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழக பேருந்துகளை தாக்கியும், எரித்தும் வருவதுடன், வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் வருகின்ற 16 – செப், 2016 அன்று தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் – அமைப்புகள் ஒரு நாள் கதவடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்தக் கதவடைப்புப் போராட்டத்தினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரிக்கிறது.

காவிரி நதியானது கர்நாடகாவில் பிறப்பெடுத்தாலும், தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் வழியாகப் பாய்வதால் மேற்படி 4 மாநிலங்களுக்கும் காவிரி நீரில் உரிமை உள்ளது என காவிரி நடுவர் மன்றம் நதிநீரைப் பகிர்ந்து கொள்வது பற்றி 2007-ல் இறுதித் தீர்ப்பையும் அறிவித்து மத்திய அரசின் அரசிதழிலும் (கெசட்) வெளியிடப்பட்டது.

நடுவர்மன்றத் தீர்ப்பின் படி, மொத்த கொள்ளளவான 740 டி.எம்.சி. தண்ணீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி.யும், கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி.யும், புதுவைக்கு 7 டி.எம்.சி.யும் பங்கிடப்பட வேண்டும். ஒரு நதி உருவாகி அது பாய்கின்ற கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பது சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதி. ஏனெனில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது திறக்கப்படும் வெள்ள நீரால் இழப்பினை சந்திப்பது கடைமடைப் பகுதி தான். இதன் படி தமிழகத்திற்குத் தண்ணீர் தர வேண்டும் என்பது நியாயமான உரிமை ஆகும்.

தமிழகத்துக்கான பங்கில் சூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியின் சம்பா பருவ விவசாயத்துக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் விடப்பட வேண்டும். ஆனால், வெறும் 35.97 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே விடுவித்ததால் டெல்டா விவசாயிகளது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்டப்பட வேண்டும்.

இவை எதையும் கணக்கில் கொள்ளாமல், கட்சிகளின் எம்.பி.க்கள் முதல் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்கள் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதால், இவர்கள் பெயரளவிலான போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் இனவெறி அரசியலை முன் வைக்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு பேசுகின்ற காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகளோ மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாடு எடுத்து உழைக்கும் மக்களைப் பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பி.ஜே.பி. சங் பரிவார் கும்பலோ கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வருகிறது. எனவே தான், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. நதிநீர்ப் பிரச்சினையில் தலையிட மறுத்து வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரசோ, தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுகவோ, தான் பி.ஜே.பி.யின் ‘பி’ டீம் என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்காமல் கள்ள மெளனம் சாதிக்கிறது.

தமிழகத்திற்கு உரிய பங்கினைப் பெற்றுத் தரவேண்டிய உச்சநீதி மன்றமோ, நடுநிலை நாடகமாடுவதுடன், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலே துரோகம் இழைத்து வருகிறது. எனவே, தமிழக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மழை வளம் குறைவதும், நிலத்தடி நீர் குறைவது – மாசடைவதும் தனியார்மய, தாராளமய, உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப் படுவதால், உருவானவையே. தனது லாபவெறிக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும், அதற்கு துணைநிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தப் போராடுவதும் அவசியமாகிறது.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி