Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 783

ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயலலிதா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்

தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.

அரசராட்சிக் காலத்தில் இப்படி நடந்ததாகக் கதைகளில் படித்திருக்கிறோம். அதாவது, ஆண்ட முடிமன்னருக்குத் தகுதியான பரம்பரை வாரிசு இல்லாமல் போனால் பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து வீதியில் அனுப்புவார்களாம்; பட்டத்து யானை யாருக்கு மாலை போடுகிறதோ ,அவனையோ, அவளையோ அரசராகவோ, அரசியாகவோ மகுடம் சூட்டி விடுவார்களாம். அதைப்போல, பெரும்பாலான நாட்கள் குளுகுளுமலையின் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு காரணமே இல்லாத திடீர் வாய்ப்பாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்துவிட்டார்கள், தமிழக வாக்காளர்கள்.

கருணாநிதியின் தி.மு.க. போல பரம்பரை அரசியல் வாரிசு இல்லை என்பதற்காக ஜெயலலிதாவின் கழுத்தில் வெற்றிமாலை விழவில்லை. கருணாநிதியின் தயாளு வழி, ராஜாத்தி வழி பரம்பரை அரசியல் வாரிசுகள் மட்டுமில்லை; ஈரோட்டுப் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, சேலம் – வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரம் பொன்முடி, தஞ்சை டி.ஆர்.பாலு, திருச்சி நேரு முதலானவர்களின் பரம்பரை அரசியல் வாரிசுகள், அவர்களின் அடாவடியான சொத்துக் குவிப்பு, அதிகார ஆதிக்கம் ஆகியவற்றைத் தமிழக மக்கள் கண்கூடாகக் கண்டனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் வாரிசுகளுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், அவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள் முதலிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் வேண்டி மத்தியில் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் – பிரணாப் கும்பலுடன் துரோகத்தனமான சமரசங்கள், அடிவருடித்தனங்களைச் செய்தது; சிங்கள பாசிச ராஜபக்சே கும்பலுடன் சேர்ந்து ஈழத் தமிழின அழிப்புப் போரை நடத்தியபோதும், இந்திய அரசு ஈழ இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தொடர்ந்து முயன்று வருவதாக துரோகத்தனமாகப் புளுகியது; இலவசங்களால் தமிழக மக்களை கட்டிப் போட்டுவிட்டு, அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.  இந்தக் குற்றங்களுக்கெல்லாம் தக்க தண்டனை தரவேண்டும் என்று தமிழக மக்கள் வெறுப்புற்று வெதும்பிக் கிடந்தனர். அந்த நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2-ஜி) ஊழல் வெளியானதைப் பயன்படுத்தி உண்மையும் பொய்யும் கலந்து பார்ப்பன ஊடகங்கள் பெருமளவில் நடத்திய அதிரடிப் பிரச்சாரந்தான் கருணாநிதியின் தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அலையாக உருவாகி, அதுவே ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களிடையே தமக்கு எதிராக நிலவிய வெறுப்பையும் எதிர்ப்பு அலையையும் உணராத கருணாநிதியின் தி.மு.க.வுக்கு, எதிர்க்கட்சி தகுதியைக் கூட அளிக்க மறுத்து பெரும்பாலான அமைச்சர்களையும் வீழ்த்தி படுதோல்வி அடையச் செய்து விட்டார்கள், தமிழக மக்கள். அதைவிட முக்கியமாக, “ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரசு எழுச்சி” என்ற பார்ப்பன ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நிராகரித்து, ஈழத்தில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரசையும் அதற்கு மறைமுகத் துரோகத்தனமாக நின்ற இராமதாசு-திருமாவளவன் கட்சிகளையும் அடியோடு சாய்த்து விட்டார்கள்.

தி.மு.க.- காங்கிரசு கூட்டணியின் மீதான வெறுப்பும், எதிர்ப்பு அலையும் வாய்தா ராணியாகவும் கொடநாட்டு உல்லாசவாசியாகவும் உழைக்காமலேயே சதாகாலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு லாட்டரியில் விழுந்த கொழுத்த பரிசாக ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கிறது. இதற்குத் துணைநின்ற பிழைப்புவாதி விஜயகாந்துக்கு எதிர்கட்சித் தகுதி கிடைத்திருக்கிறது. போலி கம்யூனிஸ்டுகள், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்ற உதிரிகளுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர்களையெல்லாம் போயஸ் தோட்டத்து பால்கனிப் பாவை விரைவில் எடுத்து விழுங்கி விடுவார் அல்லது எட்டி உதைத்து விடுவார் என்பது வேறு விடயம்.

இவர்கள் அடைந்துள்ள வெற்றி நேர்மறையிலானதோ, இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதாலோ கிடைத்தவை அல்ல. நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் மக்கள் ஒரு அரசியல் கட்சி அல்லது அணியை நிராகரிப்பதும், அல்லது வேறொரு கட்சியை அல்லது அணியை தெரிந்தெடுத்து ஏற்பதும் எந்த அடிப்படையில் என்பதைப் பார்க்க வேண்டும். தேர்தல்களின்போது தம்மிடம் வாக்குக் கேட்டுவரும் அரசியல் கட்சிகளின் கடந்தகால வரலாறு, அவற்றின் அணிகள் மற்றும் தலைமையின் செயல்பாடுகள், நம்பகத்தன்மை, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் காட்டும் ஜனநாயக, சமூக கண்ணோட்டம், அக்கறை, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள், இவை போன்றவை மீதான மதிப்பீடுகள் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதில்லை.தேர்தலுக்குச் சில காலம் முன்பு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பரபரப்பாகப் பேசப்படும் செய்திகள், தம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கும் பிரச்சினைகள் -ஆகியவற்றுக்கு அப்பால் அரசியல் கட்சிகள் அல்லது அணிகள் பற்றிய தொகுப்பான முழுமையான மதிப்பீடுகள் அடிப்படையில் வாக்களிப்பதில்லை.

மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை, விவசாயத்தின் அழிவு, நகரமயமாக்கம், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவது, தண்ணீர், கல்வி, மருத்துவம் அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது – எனத் தமிழக மக்களுக்கு ஓராயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், காற்றில் சிக்கிய சருகு போல உள்ள அவர்களின் வாழ்க்கையில் ஓட்டுக் கட்சிகளின் ஊழலும் கொள்ளையும், அக்கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களும்தான் உடனடியாகத் தெரிகின்றன. தற்போதைய, முந்தைய ஆட்சிகளில் என்ன நடந்தது என்று மக்களால் தொகுத்துப் பார்க்கத் தெரியாமல், 2ஜி அலைக்கற்றை ஊழல், குடும்ப ஆட்சி, மின்வெட்டு, விலையேற்றம் – என உடனடி நிகழ்வுகளை வைத்து மதிப்பிட்டு முடிவு சேகின்றனர். ஓட்டுக்கட்சிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற பொதுவானதொரு கருத்து மக்களிடம் நிலவிய போதிலும், தற்போதைய, முந்தைய ஆட்சிகள், ஓட்டுக்கட்சிகளுடைய அயோக்கியத்தனங்களையும் தன்மைகளையும் ஒப்பிட்டு இனம் காண்பதற்கான அரசியல் அறிவை மக்கள் பெற்று விடவில்லை.

தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்றால், மாற்றாக வரக்கூடியவர்களின் தகுதி என்ன, பின்னணி என்ன, வரலாறு என்ன என்பது பற்றி ஊடகங்களும் பேசுவதில்லை; ஆளும் கட்சிகளின் குறைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் எல்லாம் புதிதாக வந்தவைபோலவும் அவர்களுக்கென்று முந்தைய வரலாறு, செயல்பாடு எதுவும் இல்லை என்பது போலவும் எழுதுகின்றன.

ஆவணக் காப்பகம் போன்ற தகவல் தொகுப்பும் வசதி வாய்ப்புகள் இருந்தும் ஊடகங்கள் தி.மு.க. ஆட்சியையும், முந்தைய ஜெயா ஆட்சியையும் ஒப்பிட்டுக் காட்டி, அதிலிருந்து உண்மையைக் கூறி மாற்று அரசியல் சக்தியை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அவை பரபரப்புத் தகவல்களை வெளியிடுவதில்தான் குறியாக உள்ளன.

கடந்தகால ஜெயா ஆட்சியின் ஊழல், அதிகாரமுறைகேடுகள், பார்ப்பன பாசிச ஆட்சியின் அட்டூழியங்கள் முதலான அனைத்தையும் அறிந்திருந்தும் ஊடகங்கள் அவற்றைத் தொகுத்துச் சொல்லாது மூடிமறைக்கின்றன. மாறாக, ஜெயலலிதா மாறிவிட்டார் என்று கூறி ஆதரிக்கின்றன; தெரிந்தே மோசடி செய்கின்றன. மக்கள் இரு தரப்பையும் நிராகரித்து விட்டால், இன்றைய அரசியலமைப்பு முறையையே நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.

தி.மு.க.வையும் கருணாநிதியையும் சாடி, எதிர்தரப்புக்கு வாக்களிக்கும்படி நேரடியாகவும் மறைமுகமாவும் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், நேர்மறையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரத் தகுதியானவர்தானா என்று சொல்லவில்லை.

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களும் பிழைப்புவாதிகளும் முதலாளிகளும் வழக்கம்போலத் துதிபாடக் கிளம்பிவிட்டார்கள். ஆட்சி மாறும்போது இப்படியெல்லாம் நடப்பது வாடிக்கையானதுதான் என்றாலும், இப்போது பழைய பிசாசை புதிய அம்மனாகச் சித்தரிக்கும் கோயபல்சு வேலையை அவர்கள் திட்டமிட்டுச் சேது வருகிறார்கள். “ஜெயலலிதா இப்போது மாறிவிட்டார், அவரது ஆட்சி வித்தியாசமான ஆட்சியாக இருக்கும்” என்ற பிரமை தேர்தலுக்கு முன்பே ஊடகங்களால் திட்டமிட்டு ஊட்டப்பட்டன. தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குப் போராட்டமோ, மாற்றுத் திட்டமோ முன்வைக்காத போதிலும், ஜெயாவைத் துதிபாடி மக்களின் கவனத்தை அதை நோக்கிக் குவிப்பது என்று பார்ப்பன ஊடகங்கள் செயல்பட்டன.

“தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்கி ஓட்டுப் போட மாட்டார்கள், பணத்துக்கு ஓட்டுப் போடமாட்டார்கள், எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று இந்த ஊடகங்கள் மக்களைப் போற்றுவதாகக் காட்டிக் கொண்டு அ.தி.மு.க.வுக்குச் சாமரம் வீசுகின்றன. பணபலமிக்க ஆளும் கட்சியான தி.மு.க.தான் பணப்பட்டுவாடா செய்தது, மற்ற கட்சிகள் அப்படிச் செய்யவில்லை என்பதைப் போல எழுதுகின்றன. அதற்காகத் தேர்தல் ஆணையத்தைப் மிகவும் பாராட்டின. முன்பு ஜெயா ஆட்சியிலிருந்தபோது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும், லட்டுக்குள் மூக்குத்தி, கம்மல்களை வைத்து விநியோகித்ததும், இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட முடியாதபடி அராஜகமும் நடந்தது. இப்போதும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை ஜெயா ஆரம்பித்து நடத்தியதும், பொருட்களுக்கு ‘டோக்கன்கள்’ கொடுக்கப்பட்டதும் இப்போது அம்பலத்துக்கு வருகின்றன.

தி.மு.க.வின் இலஞ்ச-ஊழலை அம்பலப்படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டும் ஊடகங்கள், ஜெயா ஆட்சியில் நடந்த இலஞ்ச-ஊழல், கொள்ளைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. ஜெயா மீது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சோத்து சேர்த்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. ராசாவும் தயாநிதியும் சி.பி.ஐ. விசாரணை, வழக்கு காரணமாக பதவியில் இருக்கக்கூடாது என்கிற போது, ஜெயலலிதாவுக்கு மட்டும் அது பொருந்தாதா? இருப்பினும், ஜெயலலிதா கும்பலின் முந்தைய மகாத்மியங்கள் அனைத்தும் ஊடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றன.

“இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001 முதல் 2006 வரையிலான எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்கிறார், ஜெயலலிதா. அவர் தனது முந்தைய ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகச் சித்தரிக்கும் போது, அதன் யோக்கியதையைச் சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமையல்லவா? ஆனால், அவர் மாறிவிட்டார் என்று வானளவுக்குத் தூக்கிக் காட்டுவதோடு, தங்களது பல்வேறு விருப்பங்களையும் நோக்கங்களையும் அதில் ஏற்றிக் கூசாமல் புளுகவும் கிளம்பியிருக்கிறார்கள். “இவர் முந்தைய ஜெயலலிதா இல்லை, என்னேவொரு நிர்வாகத் திறமை, தலைக்கு மேலே ஒளிவட்டம் பாருங்கள்” என்று இந்தக் கோயபல்சுகள் இந்தக் கதாபாத்திரத்தை விளக்கி விளக்கி வியாபாரம் செய்யக் கிளம்பியுள்ளார்கள்.

“தமிழனென்று சோல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்கிற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ‘தினமணி’ பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது” என்று மெய்சிலிர்த்து தலையங்கம் எழுதுகிறது தினமணி. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து, தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சியைச் சாதித்துவிட்டதாக உச்சி முகர்ந்து கொண்டாடுகிறது, தினமணி. அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள். சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருக்கும் என்று தெரிந்த போதிலும், இருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானமிக்க தமிழக மக்கள் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு எதிராகக் குமுறி ஜெயா கும்பலை வெற்றி பெற வைத்து விட்டார்களாம். தி.மு.க.வின் குற்றங்களைப் பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் எழுதுவதில்லை.

“ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றார் என்ற உடனேயே, போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கி விட்டது. இனி தங்களுடைய அட்டகாசங்கள் அடக்கப்படும் என்பதை ரவுடிகள் உணர்ந்துவிட்டது போல நகர்ப்புறங்களில் ஒரு புதிய அமைதி காணப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பைக் காட்டுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி முதல் தினத்திலிருந்தே முறையான திசையில் செல்லத் தொடங்கி இருக்கிறது” என்று கோயபல்சை விஞ்சுமளவுக்குக் கூசாமல் புளுகுகிறார், பார்ப்பன துக்ளக் சோ. சென்னை நகரில் கொட்டமடித்து வந்த சங்கிலிப் பறிப்பு ரவுடிகள், உயிருக்கு அஞ்சி ஆந்திரா பக்கம் ஓடிஒளிந்து விட்டனர் என்று ஒரு கட்டுக்கதையை ஜெயாவே பரப்புகிறார். ஆனால்,சென்னை உட்பட தமிழகமெங்கும் சங்கிலிப் பறிப்புகளும் கொலை, கொள்ளைகளும்‌ அடுத்தடுத்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

“அவரது முகத்தில் எப்போதுமில்லாத புன்னகை – மென்மையான தாய்மையுணர்வுமிக்க தோற்றத்தைக் கொடுக்கிறது. கருணைமிக்க அம்மாவாகக் காட்சியளிக்கிறார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அர்த்தமுள்ளது என்பதை முதல்நாள் தொட்டே நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரத்திற்குப் பதில், வெளிப்படைத்தன்மையும் பதில் கூறும் பொறுப்புணர்வும் இந்த முறை பிரதிபலிக்கிறது” என்று ஜால்ரா போடுகிறது, இந்தியா டுடே. “இது மக்கள் புரட்சி. மக்கள் ஒரு மவுனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்று ஜெயா துதிபாடுகிறது, குமுதம் ரிப்போர்ட்டர்.

சசிகலா கும்பலை மடியில் கட்டிக் கொண்டுள்ள ஜெயலலிதாவின் வெற்றியை, குடும்ப ஆட்சிக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று வெட்கமின்றித் துதிபாடுகின்றனர் போலி கம்யூனிஸ்டுகளான தா.பா.வும் ஜி.ராமகிருஷ்ணனும். ஆட்சிக்கு வந்தவுடனேயே, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் முதற் பணி என்றார், ஜெயலலிதா. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இருதரப்புக்கும் இழுபறி நீடித்தபோது, அ.தி.மு.க. குண்டர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் போலீசுத் துறையில் தலையீடு இருக்காது, அத்துறையானது சுதந்திரமாகச் சேயல்படும் என்று பிரமையூட்டும் கோயபல்சுகளின் பிரச்சாரம் எவ்வளவு பெரிய பொய் என்பதை, ஜெயா ஆட்சியில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த மரியம் பிச்சையின் சாவையொட்டி திருச்சியில் நடந்துள்ள அ.தி.மு.க. குண்டர்களின் ரவுடித்தனம் நிரூபித்துக் காட்டுகிறது.

ஜெயலலிதாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கு ஊகமோ, காத்திருப்போ அவசியமில்லை. தி.மு.க. வின் ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்துப் பெருங்கூச்சல் போட்டே ஆட்சியைப் பிடித்து விட்ட ஜெயா செய்த முதற் காரியம், 1200 கோடி ரூபாய் விரயமாக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு, தானே தகுதியற்றதென்று நிராகரித்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு பழமை வாய்ந்த கல்லூரியை இடிக்க எத்தணித்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் வேறெரு இடத்தில் பூமி பூசையும் போட்ட ஜெயா, இப்போது ஜார்ஜ் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். ஏற்கெனவே அச்சிடப்பட்ட 200 கோடி ரூபாய் பாடப் புத்தகங்களை வீணாக்கி, மேலும் 100 கோடி செலவில் பழைய பாடப் புத்தகங்களை அச்சிட்டு ‘சமச்சீர் கல்வி’யை ஒழிக்கும் நோக்கில் உத்தரவு போட்டுள்ளார். இவற்றையெல்லாம் தனது கோயபல்சு பாணியில் நியாயப்படுத்த வாதம் புரிகிறார். இவையெல்லாம் பார்ப்பன-பாசிச ஜெயா மாறிவிட்டதையா காட்டுகின்றன?
___________________________________

– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011
___________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய ஜனநாயகம் – ஜூன் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜூன் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் ஜூன் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. “போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தூக்கிலிடு!” – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
  2. ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயாபல்சுகள்
  3. மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
    கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தண்டிப்போம்!! – நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மே தின அறைகூவல்
  4. கொலைவாளினை எடு! கொடியோர் செயல் அறு!! – தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிரான போர்!
  5. சமச்சீர் கல்வி ரத்து: சமூக அநீதி!
  6. மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்’டுகள் மண்ணைக் கவ்வியது ஏன்?
  7. கனிமொழி கைது: காங் – சி.பி.ஐ கூட்டணியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது
  8. ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!
  9. தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை புதிய பாதை!
  10. போபால் விஷவாயுப் படுகொலை: மீண்டும் அநீதி!
  11. புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது
  12. சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்
  13. “மதிப்பில்லாத சரக்குகள்!” – வட ஆப்பரிக்காவின் துயரம்!
  14. இந்திய நீதிமன்றங்கள்: கார்ப்பரேட் பயங்கரவாதிகளின் அடியார்கள்!
  15. குஜராத்தின் வளர்ச்சிக்கு பலியாகும் பழங்குடியின மக்கள்!

புதிய ஜனநாயகம் ஜூன் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!

கோவையில் தனியார் பள்ளி ஒன்றின் அதிகமான கட்டணம்  வசூலிக்கும் கொள்ளையால்  சங்கீதா என்றொரு தாய் தற்கொலை செய்துகொண்டார். இந்த கொலைக்குத்  தனியார்மயக் கொள்கைதான்  முழுக்காரணம். இந்த தனியார்மய கொள்ளைக் கூட்டத்திற்க்கெதிராக பெற்றோர்கள் போராட வேண்டும் என்ற நோக்கோடு  மனித உரிமை பாதுகாப்பு மையம்  கோவையில் பெரும் பிரச்சாரம் செய்து வருகிறது.

அதன் அங்கமாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக்   கண்டித்தும் வேடிக்கை  பார்க்கும் தமிழக அரசை கண்டித்தும்   சுவரொட்டி ஒட்டியும்,  துண்டு பிரசுரம் வினியோகித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து கோவை செல்வபுரம் பகுதியில் ஸ்ருஷ்டி வித்யாலய என்ற தனியார்பள்ளி, கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக அந்தப்பகுதி பெற்றோர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு பள்ளியின் அடாவடிபோக்ககை பற்றி கூறினர்.  உடனடியாக பள்ளிகெதிராக பெற்றோர்களை ஒருங்கிணைத்து  பள்ளி முன் 25 /5 /2011 அன்று  முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர்களை மிரட்டும் தொனியில் பேசி, அராஜகமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் HRPC போராட்டத்தின் இறுதியில் பெற்றோர்களிடம் தவறை ஒப்புக்கொண்டு  இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டோம்,  அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் வசுலீப்போம்,  பணம் கட்டுவதற்கு ரசீது தருவோம், அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்போம்,   கட்டணப் பட்டியலை போர்டில் எழுதி வைப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் மீது TC  கொடுப்பது, துன்புறுத்துவது போன்ற  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கமாட்டோம்    என்று கூறி பெற்றோர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

போராட்டத்தில் திரளான பெற்றோர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகள் என்பதால் மனம்போன போக்கில் இனியும் கொள்ளையடிக்க முடியாது என்பதை இந்த போர்க்குணமிக்க போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. கோவை மனித உரிமை பாதுகாப்பு மையமும் தொடர்ச்சியாக இந்தக் கல்விக் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் சங்கீதாவின் மரணம் கோவையில் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதற்கு காரணாமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -

_____________________________________________________________________

– தகவல், படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!

31
பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!
ராம்தேவ்

து ஜனநாயகப் படுகொலை” என்று கூவுகின்றன இந்திய ஊடகங்கள். யோகாசனம் பயிலும் மேன்மக்களுக்கு பாதிப்பு வந்து விட்டதே என்று  கண்ணீர் வடிக்கிறது தினமணி. பாபா ராம்தேவ் ஒரு ஆன்மீக சுப்பிரமணியசுவாமி என்கிற உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒரு சில ஊடகங்களும் கூட போலீசாரின் நடவடிக்கைகளை பாசிசம் என்கிறார்கள்.

போலீசும் இராணுவமும் இந்தப் போலி ஜனநாயக அமைப்பைக் காக்கும் பாசிசக் கருவிகள் என்பதில் நமக்கும் கூட கருத்து வேறுபாடு இல்லை தான். ஆனால், இந்த மாபெரும் இரசியம் எந்த நேரத்தில் இவர்களுக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது எந்த நேரத்திலெல்லாம் நினைவுக்கு வரவில்லை என்பதில் இருந்து தான் இவர்கள் எதற்காக அக்கறை கொள்கிறார்கள் என்பதையே விளங்கிக் கொள்ள முடியும்.

அண்ணா ஹாசாரே வாழும் இதே தேசத்தில் தான் ஐரோம் ஷர்மிளாவும் வாழ்கிறார். பாபா ராம்தேவின் உடலில் ஒரு சிறிய கீறல் கூட விழாமல் பத்திரமாக விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள அதே தேசத்தில் தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் மத்திய இந்தியாவெங்கும் அலைந்து திரிகிறார்கள்.

ஒரு கோடீசுவர கார்ப்பொரேட் சாமியாரை ஒன்றுமே செய்யாமல் பத்திரமாக திருப்பியனுப்பியதற்கே காங்கிரசு கட்சித் தலைவரை நோக்கி செருப்பை வீசத் துணிகிறார்கள் அவரது பக்தர்கள். திக்விஜய சிங்கின் வீடு மீது கல்லெறிகிறார்கள். இந்த சில்லுண்டிச் சில்லறை சமாச்சாரத்தையெல்லாம் ஏதோ மாபெரும் மக்கள் கிளார்ச்சி போல் சித்தரிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் அவற்றைப் பெருமை பொங்க விவரிக்கின்றன.

ஆனால், அரை நூற்றாண்டு காலமாக காஷ்மீரத்திலும் வடகிழக்கிலும் இந்தியாவின் கொலைகார இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்து வீதியிலிறங்கிப் போராடி வருவதை மட்டும் இவர்கள் யாரும் போராட்டமாகக் கருதுவதில்லை.

கோழைத்தனம் என்பது சந்தர்பவாதத்தின் உடன்பிறவாச் சகோதரன். அண்ணா ஹாசாரே மற்றும் பாபாராம்தேவின் பின்னே ‘போராளிகளாக’ அவதரித்து அணிதிரண்டு நிற்கும் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கு போராட்டம் என்பது இன்னொரு பொழுதுபோக்கு. அவர்களைப் பொருத்த வரையில் போராட்டம் என்பது தங்களது மனசாட்சியை ஆறுதல் படுத்த அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் உயிருக்கோ உடலுக்கோ உடைமைகளுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு வராமல் தலையைக் காட்டி விட்டுப் போகும் பொழுபோக்கு நிகழ்வு தான்.

அண்ணாவின் பின்னும் பாபா ராம்தேவின் பின்னும் பாதுகாப்பாக நின்று கொண்டு மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்திக் கொண்டு பஜனை பாடுவதையே பயங்கரமான போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ராம் லீலா மைதானத்தில் வைத்து ஒரு சிறிய முன்னுரையை அரசு கொடுத்திருக்கிறது. நாடெங்கும் விவசாயிகள் இழவு வீட்டு சோகத்திலிருந்த போது ஊடகங்கள் ஜெஸ்ஸிகா லாலுக்குக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைப் போல – இப்போது இந்த நடுத்தரவர்க்க அச்சத்தையும் கோழைத்தனத்தையும் டி.ஆர்.பி ரேட்டிங்குகளாக மாற்றிக் கொள்ள கூடுமானவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய இந்தியாவின் கோண்ட் இன மக்களைப் போன்றோ, காஷ்மீரிகளைப் போன்றோ, வடகிழக்கு மக்களைப் போன்றோ, அல்லது நாடெங்கும் தங்கள் வாழ்வுரிமைகளுக்குப் போராடும் உழைக்கும் மக்களைப் போன்றோ ராம்லீலா மைதானத்து மான்கராத்தே வல்லுனர்களுக்கு இந்தப் போராட்டம் என்பது வாழ்வா சாவா போராட்டமன்று. இதோ இந்த மண்குதிரைகளை நம்பி களத்திலிறங்கிய இந்துத்துவ கும்பல் தன்னந்தனியே ரோட்டோரத்தில் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் – சத்தியாகிரமாம்!

வினவில் நாம் இந்த அற்பர்களின் போலித்தனங்களை தோலுரித்துக் காட்டிய போதெல்லாம் தவறாமல் ஆஜராகும் சில அன்பர்கள், ‘யாருமே போராடாமல் இருக்கும் நிலையில் இதுவாவது நடக்கிறதே; தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்று உருகுவதைக் கண்டிருக்கிறோம். அந்த உருகல்  உணமையான அறவுணர்ச்சியின் பாற்பட்டதே என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான் – தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் வாழ்வுரிமை இழந்து பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இழந்த தங்கள் வாழ்க்கையை மீட்க நாடெங்கும் போராடியே வருகின்றனர்.

மக்களுக்காகப் போராட வேண்டும் என்கிற உங்கள் உணர்ச்சி உண்மையானதென்றால் நீங்கள் மக்களோடு தான் கைகோர்க்க வேண்டும் – கார்ப்பொரேட் சாமியார்களின் குடுமிக்குள் முகம் புதைத்துக் கொள்ளக் கூடாது. போராடும் மக்களோடு நீங்கள் நிற்கும் போது தான் போராட்டம் என்பது மகிழ்ச்சி என்கிற மார்க்சின் முழக்கத்திற்கான மெய்யான பொருள் என்னவென்பது உங்களுக்கு விளங்கும். அதற்கு நீங்கள் தயாரா?

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!

20

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்! சைதாப்பேட்டை செட்டித்தோப்பைச் சேர்ந்தவர் பாண்டியன்(35). அவரது மனைவி செல்வி(28). இருவருக்கும் மணமாகி இரு குழந்தைகள் மைதீஷ் மற்றும் சந்துரு, முறையே நான்கு மற்றும் ஒன்றரை வயது.  பாண்டியனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. குடியினால் வரும் பிரச்சினைகள் சமயத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதை என்னவென்று சொல்ல?

பாண்டியனின் குடிப்பழக்கத்தால் தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்தபடி இருந்தன. கடந்த சனிக்கிழமையன்று தீக்குளித்து இருவரும் இறந்துவிட்டனர். கூடவே கைக்குழந்தையும் தீயில் கருகி இறந்தது. சிறுவன் மைதீஷை அவனது பாட்டி உணவூட்ட அழைத்துச் சென்றிருந்தபடியால் தப்பித்துவிட்டான்.

இந்த அவலச் செய்தியைக் கேள்விப்பட்டு செட்டித்தொப்புக்குச் சென்றபோது, சிறுவன் மைதீஷ் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் பக்கத்து வீட்டில்  விளையாடிக் கொண்டிருந்தான். செல்வியும் பாண்டியனும் தீக்குளித்து இறந்த வீடு ஒரு பொந்துபோல இருந்தது,  பாண்டியன்  நிரந்தர வேலையில் இல்லை. ஆனால், கிடைக்கும் போது டிரைவர் வேலைக்குச் செல்வார். பத்து நாட்களுக்கு  இரண்டு முறை அல்லது  மூன்று முறை வேலைக்குச்  செல்வார். பணம் கையில் இருக்கும்போது வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை வாங்கி வருவார்.

மீதிநாட்களில், வறுமைதான். அதோடு, குடிக்கப் பணம் கேட்டு செல்வியிடமும் சண்டை போடுவார். செல்வியிடம்  தையல் மெஷின் இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு துணிகள் தைத்து  அந்த வருமானத்தில் செல்வி குடும்பத்தை ஓட்டி வந்தார்.

செல்விக்கு கணவனது குடிப்பழக்கம் பிடிக்கவில்லை. அதை சகித்துக் கொள்ளமுடியாத அளவுக்கு தொல்லைகள் விசுவரூபம் எடுத்து வந்தன. இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்தாலும் அவர்களுக்குள்ளேயே சமாதானமாகி விடுவார்கள்.

சில சமயங்களில், செல்வி கோபித்துக் கொண்டு, மரக்காணத்திலுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிடுவார். சிலநாட்கள் கழித்து, பாண்டியன் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவார். இப்படி குறைந்தது இரு மாதங்களுக்கொரு முறை நடக்கும் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள்.

பாண்டியனின் குடிப்பழக்கமே இதற்குக் காரணம், அதைத் தாண்டி வேறு எந்த பெரிய பிரச்சினைகளும் இல்லையென்று அக்கம் பக்கத்து வீட்டினர் கூறுகிறார்கள்.ஆனால், அன்று என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை., கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு கதவைப் பூட்டிக்கொண்டு இருவரும் தீக்குளித்துவிட்டனர். வெப்பம் தாங்காமல் அருகிலிருந்த குழந்தையும் அந்தத் தீயில் கருகியதாக கூறுகின்றனர்.

பத்திரிகை மற்றும் போலீஸ் செய்தியின் படி செல்வி தீக்குளித்ததாகவும், பாண்டியன் காப்பாற்றப்போய் அவரும் தீக்காயம்பட்டு இறந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இதில் எப்படி சேர்ந்து இறந்தது என்பதற்கு பதில் இல்லை. இந்த துயர சம்பவம் என்னவாக நடந்திருக்கும் என்று நாம் ஊகிக்கத்தான் முடியுமே அன்றி அறுதியிட்டு இன்னதுதான் நடந்தது என்று கூற இயலாது. மேலதிகமாக அன்று என்ன நடந்தது என்று சொல்வதற்கு செல்வி உயிருடன் இல்லை. வேலையற்ற கணவனும், அவனது குடிப்பழக்கமும் அந்த ஏழைக்குடும்பத்தை எப்படி சீர்குலைத்திருக்கும் என்பதை கண்டுபிடிப்பதற்கு துப்பறிவாளர்கள் யாரும் தேவையில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை பாண்டியன் ஒரு மாத வருமானமுள்ள வேலையில் இருந்தார். கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுக்கு உடை எடுத்துக் கொடுத்தும் கொண்டாட்டங்களுக்கும் செலவிட்டுள்ளார். அனைவரிடமும் நன்றாக பழகுவாராம். அவருக்குக் குடிப்பழக்க்கம் உண்டானதிலிருந்து வேலை போயிற்று. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எந்த நிரந்தர வேலையுமில்லாமல் இருந்திருக்கிறார்.

“இங்க குடிக்காதவங்கன்னு யாருமே இல்ல, எல்லாரும்தான் குடிக்கறாங்க. ஒரு சிலதுதான் இந்த மாதிரி. இல்லன்னா, வேலைக்குப் போனமா, குடிச்சுட்டு சோறு துன்னமான்னு இருக்குதுங்க. யாரு வீட்டுலதான் சண்டை இல்ல. எல்லாம் குடிச்சுட்டு பொண்டாட்டிக்கிட்டே சண்டை போடதான் செய்துங்க. அந்த பையனை பொறந்து வளந்ததுலேருந்து பாத்திருக்கேன். என்னமோ, இப்டி பண்ணிக்கிச்சு” என்றார் வயதான அம்மா ஒருவர்.

அது உண்மைதானே, இன்று எவர்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? புள்ளிவிவரங்களைப் பார்த்தால், குடிப்பழக்கம் அதிகரித்திருக்கிறது பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களிலிருந்து சகலரும் குடிக்கிறார்கள். அதைப் பெருமையாக, தகுதிக்குரிய ஒன்றாகவும் கருதுகிறார்கள். வீக்எண்ட் வார விடுமுறை என்றாலே குடித்து விட்டு கொண்டாடுவது என்பது தேசிய பொழுது போக்காக மாறிவருகிறது.

அதற்கு தமிழக அரசின் டாஸ்மாக்குக்கு முக்கிய பங்கிருக்கிறது. டாஸ்மாக்கின் முக்கிய வாடிக்கையாளர்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடிகாரர்கள்தான்.

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே, சாராய விற்பனை ஐந்தாண்டுகளில் இருமடங்காகியிருப்பது நமது தமிழ்நாட்டில்தான் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எந்த பொருளாதார மந்தமும் டாஸ்மாக் விற்பனையை பாதிப்பதில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் 45 கோடியிலிருந்து 60 கோடிகள் வரை  விற்பனைசெய்து சாதனை படைக்கிறது.

இதில் அதிக பாதிப்புக்குள்ளாவது அன்றாடம் உழைத்து வாழ வேண்டியிருக்கும் அடித்தட்டு மக்களும் அவர்களது குடும்பங்களும்தான். நகரமயமாக்கலின் விளைவால் அதிகரிக்கும் உதிரிபாட்டாளி வர்க்கத்தினர் தங்களது உடலுழைப்பை மறக்க குடியையே நாடுகின்றனர். உடல் அலுப்பை மறக்க  குடிக்க ஆரம்பித்து முடிவில் வேலைக்கு செல்ல முடியாமல் குடிபழக்கத்துக்கு  அடிமையாகவே சிலர் மாறிவிடுகின்றனர்

அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டு உழைக்க முடியாத நிலைக்குத் தல்ளப்படுகிறார்கள். முடிவில், படிப்பறிவோ போதிய வேலைவாய்ப்போ இல்லாத இவர்களின் மனைவிகள்தான் குருவித்தலையில் பனங்காய் போல  அனைத்து சுமையையும் சுமக்கிறார்கள். விரக்தியடைந்தவர்கள் சிலர் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறும் நோக்கில்  தற்கொலையை நாடுகிறார்கள், அதற்கு எடுத்துக்காட்டுதான் பாண்டியன், செல்வி மற்றும் அந்தக் கைக்குழந்தையின் மரணம்.

இதுபோல பல மரணங்கள், தற்கொலைகள் நடக்கின்றன. உண்மையில் பார்த்தால் அவையெல்லாம் தமிழக அரசு செய்துவருகின்ற தவணை முறைக் கொலைகளே! மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் தீட்டாமல், பெருக்கெடுத்து ஓடும் நதியாக டாஸ்மாக்கை எல்லா ஊர்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசுதானே இதற்கு பொறுப்பு?

பாண்டியனது வீட்டைவிட்டு தெருமுனைக்கு வந்தபோது ஒரு கோயில் இருந்தது. அந்தக்கோயில் எதிரில் இரட்டை இலை சின்னத்தை ரோஜாப்பூவாலேயே வடிவமைத்திருந்தார்கள். நான் உங்க வீட்டுப்பிள்ளை என்ற பாடல் மைக் செட்டில் பாடிக் கொண்டிருந்தது. அன்று ஜெயலலிதா அம்மா இலவச அரிசியை வழங்குகிறாராம்.

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!
டாஸ்மாக் கடை

இப்படி இலவசமாக வழங்குவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது, இவர்களுக்கு? பாண்டியன்களின் உயிரையும் கூடவே அவர்களது குடும்பத்தினரின் உயிரையும் காவுகேட்டுதான் இன்று இலவசங்கள் வழங்கப்படுகிறது. இந்தப்பக்கம் டாஸ்மாக் மூலமாக சுரண்டி அந்தப்பக்கம் இலவசங்களாக அள்ளிக் கொடுக்கிறார்கள், ஏதோ தங்கள் வீட்டுப் பணத்திலிருந்து  கொடுப்பதுபோல. தாலியைப் அறுத்துவிட்டு லேப்டாப்பும் டிவியும் கொடுப்பது எதற்கு?

மகளிர் காவல் நிலையங்களுக்குச் சென்றால் குடித்துவிட்டு பிரச்சினை செய்யும் கணவர்களைப் பற்றிய புகார்கள்தான் முக்கால்வாசி இருக்கிறது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களோ அல்லது புதுப்பட ரிலீசோ எதுவாயினும் குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் இளைஞர்களைப் பற்றிய செய்திகளே அடுத்த நாள் செய்தித்தாளை ஆக்கிரமிக்கின்றன. இது ஏதோ சேரிக்களில் வாழும் பாண்டியன்கள்தான் இப்படி செய்வதாக எண்ணாதீர்கள்.

பல பன்னாட்டு நிறுவனங்களில், டார்கெட்டை எட்டியதற்கோ அல்லது டீம் அவுட்டிங் என்ற பெயரிலோ வெளியில் எங்காவது ரிசாட்டுக்கு அழைத்துச் சென்று தங்கள் பணியாளர்களுக்கு தண்ணி பார்ட்டி வைப்பதும் ஒரு பெரும் கலாச்சாரமாகவே உள்ளது. கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்த புதியவரானாலும் வெகு எளிதாக,  எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் குடிக்கப் பழகி விடுகிறார்கள். இந்தக் கும்பலில்  குடிக்காமல் இருந்தால் தனித்து விடப்படுவோம் என்பதே இவர்கள் சொல்லிக்கொள்ளும் சாக்கு.  இதனை சோஷியல் ட்ரிங்கிங் என்றும் அடைமொழி கொடுத்து அந்தஸ்து தேடிக் கொள்கிறார்கள்.

தனியார்மயத்தினால் வந்த கலாச்சார சீர்கேடு என்றே இதனைச் சொல்லலாம். குடிப்பழக்கத்தால் வாழ்வையே இழக்கும் அடித்தட்டு மக்களுக்காக மதுக்கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் இணைய வேண்டிய நடுத்தரவர்க்கம்  இப்படி  குடியில் மயங்கி கிடப்பது பெரும் சோகம்தான். இதற்கு நமது கூகிள் பஸ் – ட்விட்டரில் வழிந்தோடும் குடிபுராணமே எடுத்துக்காட்டு.

வெள்ளிக்கிழமை இரவானாலோ அல்லது விடுமுறை தினங்களிலோ வெகு டீசண்டான(!) நமது ட்விட்டர் / பஸ்ஸூலகில் பொங்கி வழிவது டாஸ்மாக்தானே! உள்ளூரோ வெளியூரோ நட்பை துவக்குவதற்கு பாட்டில்தானே பாலமாக இருக்கிறது, அது பிரபலமான இலக்கிய குருஜியாக இருந்தாலும் சரி, இல்லை சினிமா பதிவரானாலும் சரி பதிவுலகம் கூட போதையுலகம்தானே?

ஒன்றும் அறியாத குழந்தையும்கூட  மடிவது மனதை பிசையவில்லையா? ஆரம்பத்தில் அந்த வயதான அம்மா சொன்னது போல, ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள்  குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவனோடு மல்லு கட்டி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களென்றால் நினைத்துப்பாருங்கள். நரகமயமாக அல்லவா இந்த வாழ்க்கை இருக்கிறது?

வல்லரசு நாடென்பது  மக்களின் பிணங்களின் மீது நிற்பதுதான் போலிருக்கிறது. அன்றாடம் குடியினால் பெருகும் இந்தப் பிணங்களைப் பார்த்தாவது உயிருடன் இருக்கின்ற மனிதர்களுக்கு தெளிவு வரவேண்டும். இதை குடிப்பழக்கம் நல்லதல்ல என்ற புத்திமதியால் திருத்திவிட முடியாது. டாஸ்மாக் கடைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அணிதிரண்டு அடித்து நொறுக்கும் போதுதான் இதற்கு காரணமாக அரசை அசைக்க முடியும். செல்வியின் துயரமான தீக்குளிப்பு கோருவது அதைத்தான்.

______________________________________________________________

வினவு செய்தியாளர்
________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?

39
பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
பாபா ராம்தேவ்

“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…

“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு யாரும் மிரண்டு விட வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது சில கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியவுடனேயே அங்கிருந்த மான்கரேத்தே வீரர்கள் குபீர் என்று பாய்ச்சல் காட்டியுள்ளனர். இந்த புறமுதுகுப் போரின் விளைவாய் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தொடைநடுங்கிகள் பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம்பட்டுக் கொண்டதையே மாபெரும் படுகொலைச் சம்பவமான ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிடுகிறார்கள். மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்தி ‘போராடி’ வந்த வீரர்கள், போலீசு காட்டிய சின்ன கவனிப்புக்கே அலறித் துடிக்கிறார்கள். ‘ஐயோ.. இரண்டாம் எமர்ஜென்சி’ என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இரண்டாம் ‘எமர்ஜென்சியை’ எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அவர்கள் முதலாம் எமெர்ஜென்சியை எதிர்த்த லட்சணம் என்னவென்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறோம்.

இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்தி / கேமரா எபெக்ட்?), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த ”முற்றும் துறந்த” சாமியார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாய் சொல்லிக் கொண்டு இந்த கள்ளப்பண சாமியார் தில்லியில் வந்திறங்கிய போது காங்கிரசின் நான்கு காபினெட் மந்திரிகளே நேரில் போய் வரவேற்றனர். உண்மையில் ராம்தேவை அரசு ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவரது ஆசிரமத்தில் ஒரு சி.பி.ஐ ரெய்டு விட்டிருந்தாலே போதும். அது அவர்கள் நோக்கமல்ல.

இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும். கோவிந்தாச்சார்யா, சாத்வி ரிதம்பர போன்ற மார்கெட்டில் விலைபோகாத ஆர்.எஸ்.எஸின் அழுகிய கத்திரிக்காய்கள் சகிதம் மேடையில் அமர்ந்து கொண்டு கருப்புப் பண ஒழிப்பையும் ஊழல் ஒழிப்பையும் ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் நாட்டு மக்கள் அத்தனை பேரையும் மடையர்களாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போது சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது. பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் ‘ராமர் கோயில் + வெடிகுண்டு’ பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது. அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை  ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

காங்கிரசோ இது போன்ற ஆபத்தில்லாத போராட்டங்களை தடவிக் கொடுப்பதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களின் அபிலாஷைகளை ஓரளவுக்கு ஆற்றுப்படுத்த முடியுமா என்று பார்க்கிறது. அதுவும் கூட தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அளவில் இருக்கும் வரையில் தான் அதனால் சகித்துக் கொள்ள முடிகிறது. இப்படி இவர்கள் இருவருமே மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமான திசைவழியில் மடைமாற்றிக் கொள்ள முயல்வதன் ஊடாக எழுந்த சிறிய முரண்பாடு தான் சனி இரவு தில்லி ராம்லீலா மைதானத்தில் வெளிப்பட்டது.

ஆனால், இவர்கள் மட்டுமின்றி பிற ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஊடகங்களும் ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் ஊற்று மூலமாய் இருக்கும் தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். அதன் எதிர்மறை விளைவுகள் யாருக்கு சாதகமான திசைவழியில் செல்ல வேண்டும் என்பதில் தான் இவர்களுக்குள் முரண்பாடு.

இதில் சிவில் சமூகத்தின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அன்னா ஹசாரே கும்பலோ ராம்தேவின் சாமியார் கும்பலோ மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள். அதனாலேயே மக்களுக்கு எந்த வகையிலும் பதிலளிக்கக் கடமைப்படாதவர்கள். மிக அடிப்படையான ஜனநாயகப் பண்பே இல்லாத இவர்கள் முன்வைக்கும் யோசனைகளோ எந்தவகையிலும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதோடு கோமாளித்தனமானமாகவும் இருக்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்க ராம் தேவ் முன்வைக்கும் யோசனைகளெல்லாம் ஏதோ ஷங்கரின் பாடாவதிப் படத்தின் திரைக்கதை போலவே இருக்கிறது. முதலில் உண்ணாவிரதம் இருந்து அயல்நாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வருவார்களாம், அடுத்து அதை அதிகாரிகள் மூலம் ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அறுபதாயிரம் கோடிகள் மேனிக்கு பிரித்துக் கொடுப்பார்களாம். இதில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவதை உறுதி செய்ய அவர்களுக்கு ராம்தேவ் யோகாசனப் பயிற்சிகள் அளிப்பாராம். உள்நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்க ஐம்பது ரூபாய்களுக்கு மேல் இருக்கும் ரூபாய்த் தாள்களை ஒழித்து விடுவார்களாம்.  பிறகு எதிர்காலத்தில் கருப்புப் பணமே தோன்றாமல் இருக்க புதிய நாணயத்தை அறிமுகம் செய்வார்களாம்.

இந்த பித்துக்குளித்தனமான யோசனைகளெல்லாம் நடக்கவே நடக்காது என்பது வேறு யாரைக்காட்டிலும் ராம்தேவுக்குத் தெரியும். ஏனென்றால், அவரிடமுள்ள எல்லா பணத்தையும் ஐம்பது ரூபாய்களாக மாற்றி பதுக்க வேண்டுமென்றால் ஸ்காட்லாண்டில் இருக்கும் அவரது தீவே காணாது.

ஆக, அண்ணா ஹசாரேவும் ராம்தேவும் மக்களை அரசியலற்ற மொக்கைகளாக்கும் ஆளும் வர்க்க நலனையே பிரதிபலிக்கிறார்கள். ஜனநாயகமற்ற இந்த கும்பலின் அரசியல் மோசடிகளை மக்கள் அறிந்து கொள்வதோடு, கருப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் அடிப்படையாக இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வீழ்த்த முன்வரும் போது தான் உண்மையாகவே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும்.

_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

197

கேள்வி :

பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி வசந்தன் என்பவர் தேவையில்லாத விசயங்களை எழுதியிருக்கிறார்.

ஆர்.கே தாஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பசும்பொன் முத்துராமலிங்கம்

அன்புள்ள தாஸ்,

நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.

சரி, விசயத்துக்கு வருவோம். தேவர் சாதி மக்கள் பசும்பொன் தேவரை வணங்குவதற்கு சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை. 47க்குப் பிறகு சீர்திருத்த முறையில் முன்னேறி வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகள் வளர்ந்திருக்கின்றன. அரசு பதவிகள், வணிகம், ஓரளவு நிலவுடைமை என்று வளர்ந்த நிலையில் சுயசாதி அடையாளத்தின் வீச்சு முன்னெப்போதைக் காட்டிலும் வளர்ந்து விட்டது.

நவீன தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்த அளவுக்கு சாதி அபிமானம் குறைந்து விடவில்லை. மணமக்கள் விளம்பரங்களில் கூட சுய சாதி, உட்பிரிவு விதிகளுக்குட்பட்டே மணமக்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. சிதறிக்கிடந்த சாதி மக்களை ஊடகங்களும், திருமண நிலையங்களும், சாதி சங்கங்களும் ஒன்று சேர்த்திருக்கின்றன. இன்னொரு புறம் அரசியலில் அனைத்து சாதிகளும் தத்தமது செல்வாக்கை நிரூபித்து அதிகாரத்தின் பங்கை கேட்பதும் இக்காலத்தில்தான் துவங்கியது.

ஆனால் இத்தகைய முன்னேற்றங்களோடு தாழ்த்தப்பட்ட மக்கள் கொஞ்சம் தலைநிமிரத் துவங்கியதை மட்டும் ஆதிக்க சாதியினர் விரும்பவில்லை. தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடங்களிலெல்லாம் ‘கலவரங்கள்’ எழுந்தன. கொடியங்குளம் கலவரம் தொடர்ந்து அதிக பரப்பளவில் நீடித்ததற்கு இதுவே காரணம்.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சாதி கலவரங்கள் நடந்ததில்லை, அமைதியாக இருந்த தமிழகம் என்றெல்லாம் பலர் அபத்தமாக ‘ஆய்வு’ செய்து அப்போது கண்டுபிடித்தனர். அந்த அமைதிக்கு காரணம் என்ன? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா வகைக் கொடுமைகளையும் எதிர்க்க இயலாமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தனர். ஆயிரமாண்டுத் தீண்டாமைக் கொடுமை, காலம் காலமாக இருக்கும் ஒரு நியமம் என்ற அளவில் அவை சமூகத்தால் கேள்விக்கிடமின்றி பின்பற்றப்பட்டு வந்தன. தனித்து விடப்பட்ட சேரிகள் ஊரை எதிர்ப்பதற்கு அன்று வழியே இல்லை. இதுதான் அந்த அமைதியின் காரணம். பின்னர் பொருளாதார சுயபலம் வந்த பிறகு அவர்கள் அந்த கொடுமைகளை எதிர்த்துக் கேட்கின்றனர். அமைதி குலைந்து கலவரம் வருகிறது.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் பசும்பொன் தேவரது வாழ்க்கையை நாம் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. அமைதிக் காலத்தில் ஆதிக்க சாதிகளது ஆட்சியில் அடங்கிக்கிடந்த காலத்தில் தாழ்த்தப்பட்டமக்களுக்காக தேவர் என்ன செய்திருக்க முடியும்? அவர் கஞ்சி ஊற்றினார், பால்கனியில் இருந்து பொற்காசுகளை அள்ளி வீசினார், தான தருமம் செய்தார் என்றுதானே அதிகபட்சம் இருந்திருக்க முடியும்? எங்கேயாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைகளை தேவர் எதிர்த்திருக்கிறார் என்று பேச்சளவில் கூட எதுவும் வந்ததில்லையே?

தேவர் செய்த பண்ணையார் தரும சிந்தனைகள் கூட புதுச்சரக்கு அல்ல. காந்தி முதல் பல காங்கிரசு தலைவர்கள் அதைத்தான் செய்தனர். அந்த வகையில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் என்று காந்தி அழைத்தார். “ஆயிரங்காலம் அடிமை என்றாயே அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே” என்ற ம.க.இ.க பாடல் வரி அந்த தரும சிந்தனையின் மீதான வரலாற்றுக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இன்றளவும் தமிழக தலித் மக்களின் தேசிய கீதமாக அந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

இமானுவேல் சேகரன் ஒரு தலைவராக சரிக்கு சமமாக தன் முன் பேசுவதை தேவரால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் தேவரது அடியாட்களால் கொல்லப்படுகிறார். இதற்கு மேல் தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை கீழே தருகிறோம்.

தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். 1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தலித் மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.

1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்.

காமராசர்
குமாரசாமி காமராஜ்

ஒரே நாளில் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்விக்கு உதவிய காமராசரது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது பகுதிக்கு பள்ளிகள் வருவதை தடுக்கவும் பேசியிருக்கிறார். இங்கிலீசு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மதம் அரசிலிருந்து பிரிந்துவிடும் என்று அந்த முருக பக்தர் கூறவும் தவறவில்லை. காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை விமர்சிக்கும் எவரும் கூட அவரது கொலையை கொண்டாட முடியாது. ஆனால் அதற்காக மறைமுகமான நோக்கத்துடன் கோல்வால்கருக்கு  மதுரையில் பணமுடிப்பு வழங்கி விழா நடத்திவர் தேவர். இந்துமத துரோகி என்று காந்திக்கும் பெயர் சூட்டினார்.

தங்களது உழைப்பு, சுய சாதி சமூக உதவி, சீர்திருத்தம் காரணமாக நாடார் சாதியினர் இன்றும் முன்னேறுவதை நாடே அறியும். 19 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காணத் துவங்கிய அச்சாதியினருக்கு சமூக அந்தஸ்து ஒன்றும் ஆரம்பத்தில் எளிதாக கிடைத்து விடவில்லை. விவசாயம்,வணிகம் மூலம் முன்னேறிய நாடார் மற்றும் நாயக்கர் சாதியினர்களில் வர்ணாசிரம வரிசையில் கீழ்நிலையில் இருந்த நாடார்கள் மீது முத்துராமலிங்கத் தேவருக்கு ஆண்ட பரம்பரையின் இழந்துபோன வெறுப்பு மேலோங்கி இருந்த்து.

அவரது தேவர் சாதியினரோ நாயக்கர் கால ஆட்சியில் ஊர்க்காவல் வேலையைப் பார்த்து வந்தனர். வெள்ளையரின் முதலாளித்துவ பாணி காவல்துறை எல்லாம் வந்தபிறகு அவர்களுக்கு வேலை இல்லாமல் போகவே அவர்களில் சிலர் திருடுவதை கையிலெடுக்க வேண்டிய அவசியம் வந்தது. எனினும் தேவர் சாதிப் பெண்கள் காடுகளில் பாடுபட்டு உழைத்துக் கொண்டுதான் இருந்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவகாசி கலவரம் என்பதே இதுபோல ஆடு திருடும் கள்ளர்களுக்கும், ஆடுகளைப் பறிகொடுத்த நாடார்களுக்குமிடையில்தான் நடந்தது. திருடப் போகும்போதும், கன்னம் வைக்க முதலில் போகும் நபருக்கும் சிறப்பு பூஜைகளையெல்லாம் செய்யுமளவுக்கு திருட்டை சமூகமயமாக்கினர்.

அப்போது சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று கூறி அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டு சட்டத்தினால் அச்சாதி ஆண்கள் எல்லாம் காவல் நிலையங்களில் இராத் தங்க நேரிட்டது. இச்சாதிகளில் முக்குலத்தோரும் இருந்த காரணத்தால் அன்றைய கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து அச்சட்டத்திற்கு எதிராகப் போராடினார் பசும்போன் தேவர்.

காங்கிரசில் திறமை இல்லாமல் முன்னுக்கு வந்தவர் காமராசர் என்ற கணிப்பு தேவருக்கு நிரம்பவே இருந்தது. குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த காரணத்தால் பதவி விலக நேரிட்ட ராஜாஜி தனிமைப்பட்டிருந்த வேலையிலும், ஆசி வாங்க வந்த காமராசரிடம் “நீ முதலமைச்சர் ஆகாமல் கட்சித் தலைவனாகவே இருக்கலாமே” என்று கூறினாராம் தேவர்.

சாலைகளை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிக்க முனைந்தபோது, அது தங்களது நாட்டு அரசுகள் என்ற கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரானது என்பதால் “நாங்க எல்லாம் இன்றைக்கு அடித்துக் கொள்வோம் நாளை பேசி தீர்த்துக்கொள்வோம். சாலை எல்லாம் போட்டால் போலீசு எல்லாம் ஊருக்குள் வந்து விடும்” என்று கூறி மறவர் நாடுகளில் சாலை போடுவதையே தடை செய்தவர் தேவர். நம்ம வீட்டு கருமறத்திகள் வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு எடுக்கும் பருத்தியால விருதுநகர், கமுதி சாணாத்திகள் (நாடார் சாதிப் பெண்கள்) காது மூக்கு எல்லாம் தங்கமாக தொங்குகிறது என பொதுக்கூட்டத்திலே பேசி சாதி துவேசத்தை வளர்த்துவிட்டவர்தான் தேவர்.

ஆனால் இதனால் எல்லாம் தேவர்சாதி மக்கள் அனைவரும் நாடார் இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. அவரது கைத்தடிகள்தான் இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட்டனர். இந்து முன்னணி ராமகோபாலன் இன்று ”முசுலீம் கடையில் வாங்காதே” என முழங்குவதைப் போலவே அன்றும் “சாணார் கடையில் சாமான் வாங்காதே” என முழங்கினார் தேவர். இந்தியா – பாக் பிரிவினையின்போது பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக இங்குள்ள முசுலீம்களை விரட்டிவிடவும் வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் தேவர்.

இமானுவேல் சேகரன்
இமானுவேல் சேகரன்

1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அல்லக்கைகளிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த கீழத்தூவல் துப்பாக்கிச் சூடும் அதில் அரசு கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியும் தனிக்கதை.

தனது தந்தையிடம் வேலை பார்த்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக் குடும்பன் என்பவரையே அடியாளாக பயன்படுத்தி வந்த தேவர் அதை வைத்து தான்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தலைவன் என்றும், இமானுவேல் சேகரன் இல்லை என்றும் பேசினார். அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். பொதுவில் அவர் திராவிட இயக்கத்தை பார்ப்பனிய வருணாசிரம கண்ணோட்டத்துடனே கீழானவர்கள் என்பதாக வசைபாடியிருக்கிறார்.

சில தொழிற்சங்க போராட்டங்களை இவர் ஆதரித்தபடியால் ஈர்க்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இவரை ஆதரிக்கவும் செய்தனர். அரசியலற்ற பொருளாதாரவாதமும், காங்கிரசுக்கு வால்பிடிப்பதும் அன்று அவர்களிடம் மேலோங்கிய காரணத்தால் தேவரை ஒரு இடதுசாரியாக தவறாக பார்க்க வைத்தது. முதுகுளத்தூர் கலவரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அவரை கேடிகே தங்கமணி போன்றவர்கள் ஆதரித்தும் பேசி உள்ளனர்.

மற்றபடி தேவரின் காமடிகளுக்கு அளவே இல்லை.

நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.

தனது சொந்த சாதியினரின் கல்வியையும், நகருக்கு போய்வருவதற்கான வாய்ப்பையும் நாடாரான காமராசரை எதிர்க்க வேண்டும் என்ற தனது ஈகோவிற்காக பலிகொடுத்த தேவரை உழைக்கும் தேவர் சாதியினரோ அல்லது முன்னேற நினைக்கும் அச்சாதி அபிமானிகளோ கூட போற்ற முடியாது. இன்றும் மற்ற சாதியினர் படித்து பல்வேறு வேலைகளுக்கு போக முடிந்த வேளையில் கூட ரவுடிகளாவும், கொஞ்சம் முயற்சி செய்தால் போலீசாகவும் மட்டுமே போக முடிந்த அளவுக்குத்தான் மதுரையை சுற்றிலும் அச்சாதியின மக்களில் கணிசமானர் இருக்கின்றனர். இதற்கு ஒருவகையில் காரணமான தேவரை அம்மக்கள் குருபூசை நடத்தி கவரவிப்பது வியப்பாகவே உள்ளது.

நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.

90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?

தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா? இல்லை சேதுராமலிங்கத்தின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேவர் சாதி மக்களுக்கு மலிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எதுவுமில்லையே?

இப்படி இருக்கையில் இந்த சாதி உணர்வால் என்ன பயன்? தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலத்து மாற்றிக் கொள்ளட்டும்.

நன்றி.

ஆதாரம்:

1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
2)
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் – தொகுப்பு கே.ஜீவபாரதி
3)
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் – தொகுப்பு கே.ஜீவபாரதி
4)
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
5)
பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6)
சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு – தொகுப்பு கே.ஜீவபாரதி

_____________

இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

BODY OF LIES (2008) திரை விமரிசனம்: ‘நாகரீக’ உலகின் போரும், உணர்ச்சியும்!

23
BODY OF LIES திரைவிமரிசனம்: ‘நாகரீக’ உலகின் போரும், உணர்ச்சியும்!

ந்து கண்டங்களிலும் அமெரிக்கா நடத்தியிருக்கும் ஆக்கிரமிப்புகளை கேள்விப்பட்டிருப்போம். அமெரிக்க அரசின் அரசியல் மேலாதிக்கத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டிருக்கும் நமக்கு அந்த ஆக்கிரமிப்பின் கருவிகளாய் செயல்படும் அமெரிக்க அதிகாரிகள், இராணுவத்தினர், சி.ஐ.ஏ உளவாளிகள் குறித்து என்ன தெரியும்? காற்றைக் கிழித்துச் சீறிப் பாயும் போர் விமானங்களில் அமர்ந்து கொண்டு ஏவுகணைகளின் பட்டனைத் தட்டும் விமானி அந்த ஒரு கணத்தில் எவ்வாறு உணர்ந்திருப்பார்? ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தும் அமெரிக்க அதிகாரிகள் பெரும் மனிதப் பேரழிவை உண்டாக்கப் போகும் தமது கட்டளைகளை அளிக்கும் அந்தக் கணங்களில் எவ்வாறு உணர்ந்திருப்பர்?

இவர்கள் ஒன்றும் கடைவாயில் கோரைப் பற்களும், துருத்திய நாக்கும், தலையில் கொம்பும் வைத்துக் கொண்டும் அலையும் சாத்தான்கள் அல்ல. மனிதர்கள் தான். குடும்பங்கள் இருக்கும். அழகான குழந்தைகள் இருப்பார்கள். தான் வழங்கிய உத்திரவின் பேரில் ஆப்கானில் வீசப்பட்ட தொமஹாக் ஏவுகணையினால் பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் ஒரு அமெரிக்க அதிகாரி, எப்படி தன் குழந்தைகளிடம் அன்பாகப் பேச முடிகிறது? பாடி ஆஃப் லைய்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படம் அது குறித்த சித்திரத்தை வழங்குகிறது.

 BODY OF LIES திரைவிமரிசனம்: ‘நாகரீக’ உலகின் போரும், உணர்ச்சியும்!

இயக்குனர் ரிட்லி ஸ்காட்டினால் இயக்கப்பட்டு, லியார்னாடோ டிகாப்ரியோ, ரஸ்ஸல் க்ரோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க 2008-ல் வெளியான Body of Lies திரைப்படம் அமெரிக்காவை முழுமையாக விமரிசிப்பதாக சொல்ல முடியாது. ஆனால், அப்படத்தின் காட்சிகளினூடே நாம் காணும் அவர்களின் உலகம் ஒன்றை நமக்குச் சொல்கிறது –  அது, அவ்வுலகத்தில் வெற்றிகரமான ஒரு மனிதனாய் வாழ விரும்பும் எவனும் முதலில் தனது மனசாட்சியைக் கழட்டியெறிந்து விட வேண்டும். ஆனால் மனசாட்சியை துறப்பது குறித்த போராட்டங்களோ, நேர்மறை விழுமியங்களோ இல்லாமல் அதுவும் கடந்து போகக் கூடிய சாதாரணமான ஒன்றாக இருந்தால்? அறம் குறித்த ஒழுக்கம் அமெரிக்க விழுமியங்களின் படி எப்படி இருக்கும்?

கதையினூடாக அதைப் பரிசீலிப்போம்

கதை:

ங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் அல் சலீம் (பின்லாடனின் அல்கைதா போன்ற) என்கிற தீவிரவாதத் தலைவனின் கீழ் இயங்கும் ஒரு சிறிய குழுவொன்றைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கையொன்றிலிருந்து படம் துவங்குகிறது. இராணுவ அதிரடிப்படை வீரர்கள் தீவிரவாதக் குழு தங்கியிருக்கும் கட்டிடத்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள் – இதை உணர்ந்து கொண்ட அந்தக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் வெடிகுண்டைத் தூண்டி வெடிக்கச் செய்து தம்மைப் பிடிக்க வந்த வீரர்களோடு சேர்ந்து தாமும் மரணிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென்று வெடிக்கும் குண்டு வெடிப்புகளைத் தடுப்பதற்கும் அதன் சூத்திரதாரியான அல்-சலீமை வேட்டையாடுவதற்கான உத்திகளை வகுப்பதற்காகவும் சி.ஐ.ஏ(CIA)வின் உயர்நிலைக் கூட்டம் ஒன்று நடக்கிறது.

அக்கூட்டத்தில் சி.ஐ.ஏவின் முக்கிய அதிகாரியான எட்வர்ட் ஹாப்மென் (Russel Crowe) தனது சக அதிகாரிகளுக்கு மத்தியக் கிழக்கில் நிலவும் சூழல் பற்றி விளக்குகிறான்.

“இந்தப் போரின் முடிவைக் காண முடியாத களைப்பில் ஆழ்ந்துள்ளோம். நம் எதிரியும் நம்மைப் போலவே களைத்துப் போயிருப்பதாக நினைத்து நம்மை சமாதானம் செய்து கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவர்கள் களைப்படையவில்லை. நீடித்த ஆக்கிரமிப்புப் போர் எதிராளியைப் பணியவைத்து விடும் என்று நம்புவது முட்டாள்தனம். அது நம் எதிரியை வலுவடைய வைக்கிறது. தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு முகம் கொடுப்பது அவர்களை அந்தச் சூழலுக்குத் தகவமைத்து விடுகிறது. அவர்கள் திருப்பியடிக்கத் துவங்கி விடுகிறார்கள்”

மேலும் அவன், தாங்கள் எதிர்காலத்திலிருந்து வருவதாகவும் (நாகரீகமான உலகத்தைச் சேர்ந்தவர்கள்) தமது எதிரிகள் இறந்த காலத்தவர்கள் (அநாகரீகமான காட்டுமிராண்டிகள்) என்றும் சொல்கிறான். தொடர்ச்சியான நிறுவனமயமான ஒடுக்குமுறைகள் மட்டுமே தமது எதிரிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறான். அவர்களது குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் தங்கள் காலை ஒரு நொடி விலக்கி விட்டாலும் கூட தங்கள் உலகமே மொத்தமும் சிதிலமாகிவிடும் என்கிறான். தமது உலகம் ஒரு நாகரீக உலகமாயிருப்பதாலேயே அது எளிதான இலக்காகவும் இருக்கிறது என்றும் விளக்குகிறான்.

படத்தின் வேறு சில இடங்களிலும், ஹாப்மேன் தொலைபேசியில் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் போது குறுக்கீடு செய்யும் மனைவிக்கு மறுமொழியாக இதையே சொல்வான் – “நாகரீக உலகைக் காக்கும் போரில் பிஸியாக இருக்கிறேன் அன்பே”

நாகரீக அமெரிக்கா எதைக் கண்டு பயப்படுகிறது?

ஹாப்மெனின் கருத்துப்படி இந்தப் போர் அநாகரிக இசுலாமிய உலகால் நாகரீக உலகான அமெரிக்கா மேல் திணிக்கப்பட்டிருக்கிறது. சராசரி அமெரிக்கனின் நம்பிக்கையும் அதுதான். மூன்றாம் உலகைச் சேர்ந்த நம்மைப் போன்றோர் அமெரிக்காவின் போர்களை ஆக்கிரமிப்பு என்று கருதுவதற்கு நேரெதிராக அவர்கள் கருதுகிறார்கள். மதுவறை உரையாடல்களில் நீந்தியபடி இந்தக் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போர் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்து அலுத்துக் கொள்கிறார்கள்.

நேரடி ஆக்கிரமிப்பு, படுகொலைகளைவிட இந்த நாகரீக உலகின் தவிர்க்க முடியாத யுத்தம் என்பதான மேன்மக்களின் கருணைதான் அபாயகரமானது. ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் இரத்தத்தை எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லாமல் இந்த ‘நாகரீக’ கருத்து துடைத்து விடுகிறது. ஹிட்லரும் கூட தனது ஆரிய இனத்தின் மேன்மை குறித்தும், காட்டுமிராண்டிகளை அழித்தோ திருத்தியோ மாற்றும் கடமை குறித்தும் இப்படித்தானே பேசினான்?

தாம் கொஞ்சம் அசந்தாலும் தமது உலகமே மாறி விடும் என்றும் தாம் மிக எளிதான இலக்கு என்கிற அச்சம் ஹாப்மெனின் வார்த்தைகளில் தொனிக்கிறது. ஒசாமா பின்லேடனைக் கொல்லும் அதிரடி நடவடிக்கைகளுக்கு முன், பாகிஸ்தானின் சிறையில் ஒரு கொலை வழக்கின் நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சி.ஐ.ஏ உளவாளியை எப்படியாவது திரும்ப அழைத்துக் கொள்வதில் அமெரிக்கா எந்தளவுக்கு முனைப்பு காட்டியதென்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை அந்த உளவாளி சிறையிலிருக்கும் போதே ஒசாமா கொல்லப்பட்டு விட்டால் அவனுக்கு சக கைதிகளால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அந்த உளவாளி நாடு திரும்பும் வரை அவர்கள் ஒசாமாவை கொல்லும் நடவடிக்கையை கூட ஒத்திப்போட்டார்கள். மத்திய கிழக்கில் நூற்றுக்கணக்கில் விழும் பிணங்களை விட அரிதாக விழும் ஒன்றிரண்டு அமெரிக்கப் பிணம் தோற்றுவிக்கும் அதிர்ச்சி அலைகள் அமெரிக்காவில் அதிகம்.

60-70களில் வியட்நாமிலிருந்து விமானம் மூலம் இறங்கிய அமெரிக்க பிணங்கள்தான் போர் எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்படக் காரணமாயிற்று. அதன் பிறகு எல்லா ஆக்கிரமிப்புகளும் நவீன போர் உத்திகளால் அமெரிக்க சேதாரங்கள் குறைக்கப்பட்டே நடக்கிறது. தான் கொல்லும் ஆயிரக்கணக்க்கான மக்கள் குறித்து அலட்டிக் கொள்ளாத ‘நாகரீக’ உலகம் தான் அதுவும் ஓரிருவர் கொல்லப்பட்டாலே முழு உலகமும் அழிந்து போவதான எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

பாசிஸ்ட்டுகள் தமது நிழலைக் கண்டு கூட அஞ்சுவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. படுகொலை, ஆக்கிரமிப்பில் அதீத தைரியம், வீரத்தை காட்டும் இவர்களின் பின்னே அத்தகைய ஆழ்ந்ததொரு பயம் இருக்கிறது. சொல்லப் போனால் அந்த பயமே அவர்களது அநீதியான போர் குறித்த நடைமுறையிலிருந்தே எழுகிறது. அந்த வகையில் அமெரிக்காவைப் பொறுத்த வரை இந்த உலகம் என்பது எப்போதும் சந்தேகத்திற்குரியது; அபாயத்திற்குரியது; நம்பிக்கை இல்லாதது. மேற்கு உலகைத் தவிர்த்து விட்டு பார்த்தால் ஏனைய நாடுகள் அனைத்தும் அமெரிக்கர்களின் சுற்றுலாவுக்கு கூட பாதுகாப்பனதில்லை என்று அவர்களே அறிவித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ‘நாகரீக’ உலகின் பரப்பு வர வர மிகவும் சுருக்கமடைந்துதான் வருகிறது. பார்த்து பயமடையும் பொருட்கள், நபர்கள், இயக்கங்களின் பட்டியலும் அதிகரித்தே வருகிறது. எனினும் இவையெல்லாம் ‘நாகரீக’ உலகின் மனசாட்சியை தட்டி எழுப்ப போதுமானதல்ல. ‘நாகரீக’ உலகம் இளைப்பாறும் வசதி நிறைந்த வாழ்க்கையும் அதன் அடித்தளமும் இருக்கும் வரை அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியாது.

அமெரிக்க சொர்க்கத்தில் வாழ யாருக்குத்தான் ஆசையில்லை?

டத்தின் ஆரம்பக் காட்சிகளைத் தொடர்ந்து, ஹாப்மெனின் கீழ்  ஈராக்கில் கள அதிகாரியாகப் பணிபுரியும் ஃபெர்ரிஸ் (Leonardo), தனக்கு வந்த ஒரு தகவலை அடுத்து அல் சலீமின் இயக்கத்தைச் சேர்ந்த ஆள்காட்டி ஒருவனைச் சந்திக்க தனது சகாவோடு செல்கிறான். தற்கொலைப் போராளியாக மடிந்து போகவேண்டிய பட்டியலில் இருக்கும் அவன் அச்சப்படுகிறான். தான் முனைவர் பட்டபடிப்பு படித்திருப்பது குறித்து தெரிவிக்கிறான். முக்கியமாக அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறான்.

‘நாகரீக’ உலகில் வாழுவதற்கு யார்தான் ஆசைப்படுவதில்லை? கல்வியோ, பொழுது போக்கோ, தொலைக்காட்சியோ அந்த உலகம் குறித்தான படிமங்களையே நிரந்தர நினைவுகளாக்குகின்றன. எனினும் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்பதை விட அந்த நாடு அழிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தானே அதிகம்? குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாடுகளில்? ஆனால் அப்படி இல்லை என்று காட்டுவதற்காக இங்கே இசுலாமிய தற்கொலைப் போராளி ஒருவன் அமெரிக்காவில் தஞ்சம் அடையத் துடிப்பதாக காட்டப்படுகிறது.

அமெரிக்காவில் புகலிடம் அளிப்பதாக உறுதியளித்து அந்த ஈராக்கியனிடமிருந்து வேண்டுமளவிற்குத் தகவல்களைக் கறக்கிறார்கள். பின், இந்த விசயத்தைத் தனது மேலதிகாரியான ஹாப்மென்னிடம் சொன்ன போது, அவன் அந்த உறுதிமொழியை மதிக்க வேண்டிய தேவையில்லையென்றும், அவனை அப்படியே விட்டு விட்டால் அந்தக் கூட்டமே அவனைக் கொல்ல முயற்சிக்குமென்றும், அதன் மூலம் அவர்களைத் தொடரும் வாய்ப்பு கிட்டும் என்றும் சொல்கிறான். ஃபெர்ரிஸ் ஆரம்பத்தில் அளித்த  உறுதிமொழியை மீறித் தனக்குத் தகவல் கொடுத்த ஈராக்கியனைக் கைவிட, அவன் தனது சகாக்களால் கொல்லப்படுகிறான்.

ஈராக்கியனிடமிருந்து கிடைத்த தகவல்களை நூல் பிடித்துக் கொண்டு ஈராக்கின் பலாட் பகுதியிலிருக்கும் ஒரு தீவிரவாத பதுங்கு முகாமுக்குச் செல்கிறார்கள் ஃபெர்ரிஸும் அவனது ஈராக்கைச் சேர்ந்த கூட்டாளியும். அங்கே நடக்கும் சண்டையின் இறுதியில் அந்த முகாம் அழிக்கப் படுகிறது – ஃபெர்ரிஸின் கூட்டாளியும் கடுமையாக பாதிப்படைகிறான். அந்த நேரத்தில் அங்கே வரும் மீட்புப் படை, அதற்கு முன்னதாக முகாமிலிருந்து சில சி.டிக்களைக் கைபற்றியிருந்த ஃபெரிஸ்ஸை மட்டும் காப்பாற்றுகிறது – குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் அவனது ஈராக்கிய சகாவை சாக விட்டு விட்டுத் திரும்புகிறது.

உலங்குவானூர்தியில் ஃபெர்ரிஸைக் கிடத்தும் அமெரிக்க அதிரடிப்படை வீரன் தனது தலைமையகத்திற்கு இவ்வாறு தகவல் அனுப்புகிறான் “உளவுத் தகவல்கள் பாதுகாக்கப்பட்டது”

சி.ஐ.ஏவின் பலம் வெற்றியை ஈட்டுவதில்தான், நேர்மையான வழிமுறையில் அல்ல!

ங்கே கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஃபெர்ரிஸ் ஜோர்டானில் இருக்கும் இன்னொரு இரகசிய முகாமைக் கண்காணிக்க அனுப்பப்படுகிறான். இதற்கிடையே பலாடில் கொல்லப்பட்ட தனது சகாவின் நிலைமைக்காக ஃபெர்ரிஸ் தனது மேலதிகாரி ஹாப்மெனிடம் முறையிடுகிறான். கொல்ல்ப்பட்டவனது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு கோருகிறான். ஹாப்மெனோ, அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதிலளிக்கிறான். அதை ஃபெர்ரிஸ் கேள்விகள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்கிறான்.

நேரடிக் களத்தில் இருக்கும் ஃபெர்ரிஸ் இப்படி உள்ளூர்வாசிகளின் துணை கொண்டு இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் அவர்களை ஒரு தூக்கியெறியப்பட வேண்டிய கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்துமாறு ஹாப்மென் கோருகிறான். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்பட்டாலும் ஃபெர்ரிஸ் அதை ஏற்கிறான்.  இது மேலதிகாரியை பின்பற்றும் அதிகார நிறுவன வழிமுறையா இல்லை மூன்றாம் உலக மனித உயிரின் மதிப்பற்ற தன்மையை குறிக்கிறதா என்று நமக்குத்தான் கேள்வி எழும். இரக்கமற்ற சி.ஐ.ஏ மேலதிகாரியாக ஹாப்மென் சித்தரிக்கப்பட்டாலும் அந்த இரக்கமின்மை ‘நாகரீக’ உலகைக் காப்பாற்றும் கடமையுணர்விலிருந்து வருவதாகவே ஒரு அமெரிக்கன் நினைக்க வாய்ப்புண்டு.

ஃபெர்ரிஸை ஜோர்டானுக்கு அனுப்பும் ஹாப்மென், அங்கே ஃபெர்ரிஸையும் நம்பாமல் அவனது நடவடிக்கைகளுக்கு இணையான வேறு நடவடிக்கைகளை அவனுக்கே தெரியாமல் செயல்படுத்துகிறான். ஜோர்டான் உளவுத் துறையுடன் ஃபெர்ரிஸ் சேர்ந்து இயங்க விரும்புகிறான். ஏனெனில் உள்ளூர்வாசிகளின் உதவி கொண்டுதான் மத்திய கிழக்கில் சிறப்பாக இயங்க முடியுமென்பது அவனது நிலை. ஆனால் ஹாப்மென் அதை ஏற்காமல் தனியாக உத்தரவு போட்டு நடைமுறைப்படுத்துகிறான். இதனால் விளையும் குழப்பத்தில் ஃபெர்ரிஸின் முயற்சிகள் தோற்றுப் போகின்றன.

இந்தக் குறுக்கீடுகளால் ஒருவேளை ஃபெர்ரிஸ்ஸுக்கு ஆபத்தை உண்டாக்கி விட்டிருக்கலாம் என்கிற நிலையில் இது பற்றி தனது அதிகாரியான ஹாப்மெனிடம் ஆத்திரத்துடன் விளக்கம் கோருகிறான். அதற்கு ஹாப்மெனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், தமது  ஸ்தாபனமே (சி.ஐ.ஏ) உடனடி வெற்றிகளை ஈட்டும் இலக்கில் உள்ள நிறுவனமென்றும், எனவே அப்படியான வெற்றியை அடையத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் சரியானதே என்றும் சொல்கிறான். வேலை நடந்தாக வேண்டும். அது எப்படி நடக்கிறது என்பதைப் பற்றிய கவலையில்லை. நம்பிக்கை, தோழமை, பொய்யுரைக்காதிருத்தல், நேர்மையான அணுகுமுறை இவையெல்லாம் சி.ஐ.ஏ எனும் ‘உலக அமைதி’க்காக வேலை செய்யும் மாபெரும் நிறுவனம் வைத்திருக்க முடியாத விழுமியங்கள் என்பது ஹாப்மெனது நிலை.

ஃபெர்ரிஸோ நேரடி களப்பணியில் இருப்பதால் இத்தகைய விழுமியங்களை வைத்திருந்தால்தான் உள்ளூரில் நம்பிக்கை ஏற்படுத்தி வேலைகளை சாதிக்க முடியும் என்பது அவனது நிலை. ஆனால் உலகம் முழுவதும் சி.ஐ.ஏ என்பது ஹாப்மெனது அணுகுமுறையில்தான் செயல்படுகிறது. சி.ஐ.ஏவின் உள்ளூர் ஏஜெண்டுகள் கூட அமெரிக்காவின் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டே வேலை செய்கிறார்கள். யாரும் சுயமரியாதையோடு சி.ஐ.ஏவிற்காக வேலை செய்ய முடியாது. நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிமைத்தனத்தை இங்கே ஒப்பிட்டு பாருங்கள். இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொண்டுதான் அமெரிக்காவோடு உறவு வைத்திருக்க முடியும் என்று அவர் கனவில் கூட கருதமாட்டாரே?

தமது வேலைக்காக யாரையும் பலிகொடுக்கலாம் என்பதே அடிப்படை சித்தாந்தம் என்று நாசூக்காக ஃபெரிஸ்ஸுக்குப் புரியவைக்கிறான் ஹாப்மென்.

நாகரீக உலகத்தைக் காப்பதற்காக நாகரீகமற்ற காட்டுமிராண்டுகளோடு சண்டையிடும் இரக்கமற்ற யுத்தம் என்று ஹாப்மென் வருணிக்கும் இந்த சண்டையில் தனது உடல் உயிர் என்று அனைத்தையும் எந்தக் கேள்விக்கும் இடமின்றி அர்ப்பணிக்கும் படத்தின் நாயகனான ஃபெரிஸ் தனது மேலதிகாரியின் இந்த விளக்கத்தை ஏற்று மௌனமாகிறான்.

ஹாப்மென் – பெர்ரிஸ் முரண்பாடு வழிமுறையில்தான், நோக்கத்தில் அல்ல!

டம் நெடுக ஹாப்மெனுக்கும் ஃபெர்ரிஸுக்கும் இடையே நடைமுறை சார்ந்து கடும் முரண்பாடு இருப்பதாக காட்டப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த நலன்களை ஒட்டிய செயல்பாடுகள் என்று வரும் போது அந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்காமல் நமுத்துப் போய் விடுகின்றன. எதார்த்த நிலைமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஃபெர்ரிஸ், தான் செய்யவிழைவதைக் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கோடும் விட்டுக் கொடுப்புகளோடும் செய்து முடிப்பதே புத்திசாலித்தனம் என்கிறான் – ஹாப்மெனோ ஈவு இறக்கம் ஏதுமின்றி வலுக்கட்டாயமாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிறான்.

ஆனால், இருவரும் ஒன்று படும் புள்ளியென்பது ஏகாதிபத்திய நலன் என்பதால் இருவருக்குள்ளும் வரும் முரண்பாடுகளும் அதையொட்டிய வாக்குவாதங்களும் ஃபெர்ரிஸ் பணிந்து போவது என்கிற அளவிலேயே முடிந்து போகிறது. குறைந்தபட்சம் எதார்த்த நிலைமைகளை நேரில் காண்பதால் தனக்கு உண்டாகும் மனவுளைச்சலைத் தடவிக் கொடுப்பதற்குக் கூட ஃபெர்ரிஸின் ஆத்திரமான வாக்குவாதங்கள் பயனளிக்காமல் போகிறது.

தனக்கு ஆதாயம் ஏற்படும் என்றால் தனது சொந்த மக்களாகவே இருந்தாலும் கூட தூக்கியெறியத் தயங்காத பண்பு தான் முதலாளித்துவத்தின் சமூகப் பண்பு. உறவுகள், பாச நேசங்கள் உட்பட சகலத்திற்கும் ஒரு விலை உண்டு. நேற்றுவரை சிரித்துப் பேசிப் பழகிய தனது சக ஊழியனுக்கு திடீரென்று வேலை நீக்க உத்தரவான ‘பிங்க்’ சிலிப் அளிக்கப்பட்டு வீட்டுக்குத் துரத்தப்பட்டதைக் கண்டும் கூட அந்த அநீதிக்கு எதிராகப் போராடாமல் தன்னுடைய வேலை மிஞ்சியதா என்று பார்த்துக் கொண்டு போகும் கார்ப்பரேட் நிறுவன ஊழியரின் உணர்வும் ஹாப்மென் / ஃபெர்ரிஸின் உணர்வும் ஒத்துப் போகும் இடம் இது தான். முதலாளித்துவ ஆட்ட விதிகளின் முக்கியமானதும் முதலாவதுமான தனிநபர்வாதம், போட்டிகளில் இரக்கமற்று முன்னேறும் சுயநலம் என்பவற்றிலிருந்து தான் இவையனைத்தும் நியாயப்படுத்தப்படுகிறது. முன்பு தமக்குத் தகவல் அளித்து உதவ முன்வந்த ஈராக்கியனைக் கைவிட நேர்ந்த சந்தர்பத்திலாகட்டும், இப்போதும் இதற்குப் பின் வரும் வேறு சந்தர்பங்களில் ஃபெர்ஸைக் கைவிட நேரும் சந்தர்பங்களிலாகட்டும், ஹாப்மெனை இயக்குவது இந்த உணர்ச்சி தான்.

ஹாலிவுட்டின் மாறுபட்ட யதார்த்தமான காதல்?

தற்கிடையே, அல் சலீம் கும்பலைத் தேடி ஜோர்டானுக்குச் செல்லும் ஃபெர்ரிஸ், அங்கே ஆயிஷா என்கிற நர்ஸை சந்திக்கிறான். பலவருடங்கள் குடும்பத்தை மறந்து மத்திய கிழக்கில் அலைந்து திரிந்து கொண்டிருந்ததால் அவனது திருமணம் ஏற்கனவே முறிந்து போயிருந்த நிலையில், இந்த புதிய உறவு அவனது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது. வழக்கமான ஹாலிவுட் பட நாயகர்கள் நாயகிகளை அவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் நேரடியாக படுக்கையறைக்கு கொண்டு சென்று விடுவார்கள். இங்கே அது இல்லை. ஒரு அரபுப் பெண்ணின் யதார்த்தமான மரியாதையான நேசிப்பை இயக்குநர் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு வேளை ஃபெர்ரிஸின் பாத்திரத்தை இயல்பாக காட்டவேண்டியிருப்பதற்கு கூட இது உதவியிருக்கலாம். போகட்டும்.

ஏற்கனவே அபு சலீமைப் பிடிப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்து வரும் ஜோர்டானிய உளவுத் துறைக்கு ஃபெர்ரிஸின் இந்தக் காதல் தெரியவருகிறது. ஆயிஷாவைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது போல் ஒரு நாடகத்தை ஜோர்டான் உளவுத்துறையே நடத்துகிறது. தனது காதலியைக் காப்பாற்ற ஃபெர்ரிஸ் தன்னையே பணயம் வைக்கிறான் – அபு சலீம் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறான். இறுதிக் காட்சியில் அவனைக் கொல்ல தீவிரவாதிகள் முயல்கிறார்கள். ஆனால், அதற்குள் குறுக்கிடும் ஜோர்டானிய உளவுத்துறை ஃபெர்ரிஸைக் காப்பாற்றுகிறது.

ஃபெரிஸ் ஒரு பாலைவனத்தின் நடுவே தன்னந்தனியே நிற்கிறான். அப்போது ஆயிஷாவைக் கடத்திய தீவிரவாதிகள் வந்து அவனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஹாப்மென் தனது ஆள் அம்பு சேனைகளோடு கணினித் திரையின் முன் அமர்ந்து சாடிலைட் உதவியுடன் நேரடியாக அந்தக் காட்சியைப் பார்க்கிறான். ஃபெரிஸைப் பொறியாக வைத்து தீவிரவாதிகளைத் தொடர்வது தான் ஹாப்மெனின் திட்டம். ஆனால், ஃபெரிஸை அழைத்துப் போக வரும் தீவிரவாதிகளோ ஐந்தாறு ஒரே மாதிரியான கார்களில் வந்து ஃபெரிஸ் நிற்கும் இடத்தை ஒரு வட்டமாகச் சுற்றுகிறார்கள். அதனால் எழும் புழுதிப் புயல் மேலே சாட்டிலைட்டின் கண்களை மறைக்க, அதனூடே ஃபெரிஸை அழைத்துச் செல்கிறார்கள். எந்தக் கார் அவனைக் கொண்டு செல்கிறது என்று தெரியவில்லை. எதாவது ஒரு  காரைத்தான் சேட்டிலைட் பின்தொடர முடியும் என்பதால் குழப்பம் வருகிறது.

செல்பேசியில் கொடூரமான கட்டளைகள்! குடும்பத்தினரிடம் அன்பான தருணங்கள்!

மது அதிநவீன உளவுக் கருவிகள் பல்லிளித்து விட்ட நிலையில் ஹாப்மென் ஃபெரிஸை சுலபமாகக் கைகழுவி விட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறான். தனது பணியில் கறாராகவும் இரக்கமற்றும் நடந்து கொள்ளும் ஹாப்மெனுக்கு அன்பான ஒரு குடும்பமும் அழகான குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு கையில் செல்போனில் தனது உத்தரவுகளை வழங்கிக் கொண்டே இன்னொரு கையால் தனது செல்ல மகளை அணைத்து முத்தமிடுகிறான். ஒரு நேர்ப்பேச்சில் ஹாப்மெனுடன் உரையாடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் அவனது கனிவான பார்வையையும் மிருதுவான பேச்சையும் வைத்துக் கொண்டு அவனைப் போல் ஒரு உத்தமர் உலகிலேயே இருக்க முடியாது என்று நீங்கள் சத்தியம் செய்யக் கூடும். ஆனால், அந்த கனிவும், மென்மையும் தான் சதித்தனமான நடவடிக்கைகளின் மறுபக்கங்களாக இருக்கின்றன.

போர்கள் என்பதைப் பற்றி நீங்களும் நானும் கொண்டிருக்கும் அதே புரிதலை அவர்கள் கொண்டிருப்பதில்லை. பொருளாதார நோக்கில் தமது வியாபாரத்திற்கு பயன்படக் கூடிய ஒரு பொருளியல் நிகழ்வு என்பதே ஏகாதிபத்தியத்தின் புரிதல். அதில் ஏற்படும் மரணங்கள் வெறுமனே நடக்கும் சாதாரண நிகழ்வுகள் தாம். எனவே தான் ஒரு தொழில் நேர்த்தியுடனும் உணர்ச்சியற்றும் வெகு இயல்பாக தமது நடவடிக்கைகளை அவர்களால் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது.

கசாப்புக் கடையில் ஆடுகளையும் கோழிகளையும் கழுத்தைத் திருகிக் கொல்லும் ஒருவருக்கு அது எப்படி தொழில் ரீதியிலான கடமை என்பதாகத் தெரிகிறதோ அப்படியே தமது போர்களின் காரணமாக சக மனிதர்கள் படும் பாடுகளும், அவர்கள் அனுபவிக்கும் சித்தரவதைகளும், மரணங்களும், இழப்புகளும் அமெரிக்க அதிகாரிகளுக்கு கடமையாகத் தெரிகிறது. அந்தக் கடமையை இடையூறுகளின்றி நிறைவேற்றுவதையே நியாயம் என்கிறார்கள். ஏகாதிபத்திய நலன்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் தடைகளை இவ்விதமான வழிமுறைகளில் களைந்து கொள்ளும் ‘கடமைகளை’ ‘நியாயமாக’ செயல்படுத்தினால் கிடைப்பது  தான் “நீதி”.

மனிதர்கள், உறவுகள், உயிர்கள் என்பதைப் பற்றியெல்லாம் நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளிலிருந்து ஏகாதிபத்திய அறிவாளிகளின் மதிப்பீடுகள் முற்றிலும் வேறானது. முதலாளித்துவ உலகின் இரக்கமற்ற விதிகள் அம்மனிதர்களை எப்போதோ இதயமற்ற இயந்திரங்களாக்கி விட்டன.

ஹாப்மெனுக்கோ ஃபெரிஸுக்கோ தமது செயல்பாடுகளும் அதனூடாய் எழும் முரண்பாடுகளும், அச்செயல்பாட்டை ஒட்டி நிகழும் கொலைகளும் பெரியளவில் உறுத்தாத நிகழ்வுகளாகச் சுருங்கிப் போவதற்குக் காரணம் அவர்கள் முதலாளித்துவத்தின் ஆட்ட விதிகளுக்கு உட்பட்டே அந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதே. இதில் ஹாப்மெனுக்கும் ஃபெர்ரிஸுக்குமான முரண்பாடுகள் என்பது கழுத்தைக் கரகரவென்று அறுப்பதா – இல்லை குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி சத்தமில்லாமல் தண்ணீரில் முக்கிக் கொன்று விடுவதா என்பதில் தான்.

‘காட்டுமிராண்டிகளாகிய’ நாம் ‘நாகரீக’ உலகின் மீது கொள்ள வேண்டிய உணர்ச்சி எது?

விளைவு என்னவாய் இருக்க வேண்டும் என்பதில் அவர்களிருவரும் தெளிவாகவே இருக்கிறார்கள். மட்டுமல்லாமல் அந்த விளைவின் மூலம் எழும் எதிர்விளைவை எவ்வாறு பார்ப்பது என்பதிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். தனது காதலியின் சகோதரியைச் சந்திக்கச் செல்லும் ஃபெர்ரிஸ், தன்னை ஜோர்டானிய மன்னரின் அரசியல் ஆலோசகர் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அதற்கு அவள் மத்திய கிழக்குப் போர்களுக்கு முன் அரசர் உங்களிடம்  ஆலோசனை கேட்டாரா என்று கேட்கிறாள். ஆயிஷாவின் சகோதரியான அப்பெண்மணி ஈரான் – ஈராக் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈரானியப் பின்னணி கொண்டவள். அந்தத் தருணத்தின் சங்கடத்தைப் புரிந்து கொள்ளும் ஃபெர்ரிஸ், தானும் ஈராக்கில் நிலவும் சூழ்நிலைமைகளால் வருத்தமுறுவதாக சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறான். உடனே சூழ்நிலைமை என்று நீங்கள் குறிப்பிடுவது எதை என்று அப்பெண் கேட்கிறாள். ஒரு தயக்கத்திற்குப் பின் பதிலளிக்கும் ஃபெர்ரிஸ், அங்கே ஈராக்கிய போலீஸ் தாக்கப்படுவதும், மக்கள் தற்கொலைப் போராளிகளாக முன்வருவதையுமே அவ்வாறு குறிப்பிட்டதாகச் சொல்கிறான்.

எதிர்விளைவு குறித்துப் பேசும் ஃபெர்ரிஸ், அதனை உண்டாக்கிய விளைவான தமது அரசின் ஆக்கிரமிப்புப் போர் குறித்துப் பேச மறுக்கிறான். அது நாகரீகத்தை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கையாகவே ஃபெர்ரிஸ்ஸும் கருதுகிறான். ஆனால், ஹாப்மெனைப் போல் அல்லாது எதார்த்தத்தோடு நேருக்கு நேராக நிற்க வேண்டிய கட்டாயத்தில் ஃபெர்ரிஸ் இருப்பதால் அவனது நடவடிக்கைகள் ஒரு நெகிழ்வுப் போக்கோடு இருக்கிறது.

ஒரே நோக்கத்தின் பாற்பட்ட கறார்த்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் ஒரு கட்டத்திற்கு மேல் முரண்பட்டு எதிர்த்து நிற்க முடியாது. இறுதிக் காட்சியில் காதலிக்காக தனது வேலையைத் துறக்க முடிவு செய்யும்  ஃபெர்ரிஸ், அதற்கும் முன் தனது நண்பனைப் பறிகொடுத்த போதும் சரி – தனது உயிருக்கே ஆபத்து வந்த தருணங்களிலும் சரி, ஹாப்மெனின் இறக்கமற்ற அணுகுமுறையோடு சமரசமாகவே செல்கிறான். பிங்க் சிலிப் வாங்கிய ஐ.டி தமிழன்  இத்தனை வருடங்களாக தான் வருந்தி உழைத்த நிறுவனம் தன்னைக் கைவிட்டதையும் அதனால் தான் நிர்கதியாய் நிற்க நேர்ந்ததையும் அநீதி என்பதாகப் புரிந்து கொள்வதில்லை – அதை எதிர்த்து போராடவும் முன்வருவதில்லை. அதை மௌனமாக ஜீரணித்துக் கொண்டு வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று ஒதுங்கிப் போகிறான் – ஃபெர்ரிஸ் தனது வேலையை விடுத்து ஆயிஷாவைத் தேடி ஒதுங்கிப் போவதைப் போல.

ஊழல்படிந்த மேற்குல முதலாளித்துவத்தின் அரசியலை ஃபெர்ரிஸ் புரிந்து கொண்டது உண்மையா?

தீவிரவாதிகளின் பிடியில் கொல்லப்பட இருக்கும் ஃபெர்ரிஸை ஜோர்டானிய உளவுத்துறை காப்பாற்றுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட சி.ஐ.ஏவின் வழிமுறைகளைவிட மரபு ரீதியாக மனிதர்களின் திறனை நம்பி செயல்படும் ஜோர்டானிய உளவுத் துறை வெற்றிபெறுகிறது. இது உண்மையென்றாலும், மக்களிடம் பிடிப்போ, ஐக்யமோ, ஒன்றிணைவோ இல்லாத எத்தகைய உளவு அமைப்பும் அவை எத்தகைய வழிமுறைகளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுமா என்பது ஐயமே. நோக்கத்தில் பிழை இருக்கும்போது வழிமுறைகளின் திறன் மட்டும் என்ன செய்துவிடும்?

இறுதிக்காட்சியில் அல்சலீமோடு உரையாடும் பெர்ரிஸ் ஆச்சரியமூட்டும் வசனம் ஒன்றைப் பேசுகிறான். ஊழல் படிந்த மேற்குலகின் முதலாளிகளுக்கும், வாகாபி ஷேக்குகளின் நிதியுதவியால் எழுந்திருக்கும் இசுலாமிய மதவாதத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று அவன் பேசும் போது கொஞ்சம் அதிசியமாகத்தான் இருக்கிறது. அவனும் கூட அந்த ஊழல் படிந்த முதலாளிகளின் நலனுக்காக செயல்படும் சி.ஐ.ஏவின் ஊழியன்தான் என்ற நினைப்பு நமக்கு வருவது போல அவனுக்கு வருகிறதா என்று சொல்ல முடியவில்லை.

தனது சகாக்கள் கைவிடப்பட்டு அதனால் கொல்லப்பட்ட போதெல்லாம் சில ஆத்திரமான கேள்விகளைக் கொண்டே உறுத்தும் தனது மனசாட்சியை ஆற்றுப்படுத்திக் கொள்ளும்  ஃபெர்ரிஸ், அதே போன்றதொரு நிலை தனக்கே ஏற்படும் போது தான் அதற்கொரு அடையாள எதிர்ப்பை பதிவு செய்கிறான். ஒரு கொடும் கொலைக் கருவியாக உலகமெங்கும் வியாபித்திருக்கும் சி.ஐ.ஏவையும் அதனை இயக்கும் மூளையான ஏகாதிபத்தியத்தையும் தனது சொந்த வாழ்வின் அனுபவத்தினூடாக மட்டுமே விளங்கிக் கொள்வதன் இழிந்த நிலை தான் அதனை ஏற்றுக் கொண்டு விலகிச் செல்லும் முடிவுக்கு அவனைத் தள்ளுகிறது. மாறாக, இதன் முழுமையான பரிமாணத்தை அதன் நாசாகாரச் செயல்கள் உண்டாக்கிய சமூக விளைவிலிருந்தும் அந்த விளைவினால் உலகெங்கும் சீரழிந்து போயிருக்கும் மனித வாழ்க்கையின் பின்னணியில் இருந்தும் தனது  எதிர்ப்பை ஒரு போராட்டாமாகவே அவனால் முன்வைத்திருக்க முடியுமா?

அரசியல் சமூக நிலைமைகள் சொல்லிக் கொடுக்காத விசயத்தை நேரடி அனுபவத்தின் மூலம் அவன் கற்றுக் கொண்டானா என்று நாம் ஊகித்தறிய முடியவில்லை. ஆனாலும் அவன் சி.ஐ.ஏவிலிருந்து விலகித்தான் செல்லுகிறான். அவனை “buddy” என்று அன்பாக அழைக்கும் ஹாப்மெனும் கூட ஒரு உளவாளி அதிகபட்சம் இவ்வளவுதான் பங்களிக்க முடியும் என்பது போல எந்த வேதனையோ, உணர்ச்சியோ அற்று விடை கொடுப்பதிலிருந்து அறிய முடிகிறது. அவன் போனாலென்ன, அடுத்த பலிகடாக்கள் மந்தையிலிருந்து வராதா என்ன?

ஆனால் நாம் இந்தப் படத்தை அப்படி உணர்ச்சியற்று அதாவது தொழில் நுட்ப ரீதியில் மட்டும் பார்த்து இரசிக்க முடியாது. ஏனெனில் நாமெல்லாம் அந்த ‘நாகரீக’ உலகால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் ‘காட்டுமிராண்டிகள்’. விடுதலை உணர்வுள்ளவர்கள் இந்த படத்தை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள்!

__________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்…

23
அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்...
ஹிடால்கோ பாதிரியார்

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 6 (மெக்சிகோ, பகுதி: இரண்டு)

து என்னவோ தெரியவில்லை. மெக்சிகோவுக்கும் கடவுளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போவதில்லை. வரலாற்றில் எந்தப் பிரச்சினை வந்தாலும்  மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் நாடு கடத்தி விட்டனர். இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல. மெக்சிக்கோ வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள். காலனியாதிக்கம் செய்யும் எண்ணத்தோடு வந்த ஸ்பானியர்களை, அன்றைய அஸ்தேக் சக்கரவர்த்தி கடவுளின் தூதர்கள் என்று தவறாக கருதினான். அந்த தப்பெண்ணம், ஒரு தலை சிறந்த நாகரீகத்தின் அழிவிலும், இரண்டு லட்சம் மக்களின் இனப்படுகொலையிலும் சென்று முடித்தது. “பூர்வீக செவ்விந்திய மக்களை ஆண்ட மன்னர்கள் மதத்தின் பெயரால் மூடுண்ட சமுதாயத்தை வழிநடத்தினார்கள். மக்களை அறியாமை என்ற இருளில் வைத்திருந்தார்கள்.” நமது காலத்திய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும் இவ்வாறான பிரச்சாரம் செய்கின்றனர். (உதாரணம்: மெல் கிப்சனின் அபோகலிப்டோ திரைப்படம்)

ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மெக்சிகோ மக்களின் வாழ்வில் ஒளியேற்றவில்லை. நாடு முழுவதும் காளான் போல முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மக்களை அடிமை இருளில் வைத்திருந்தன. மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதி இந்த தேவாலயங்களின் சொத்தாக இருந்தது. அவற்றில் கூலி விவசாயிகளை கொத்தடிமைகளாக வேலை செய்வித்து சுரண்டிய பணத்தை தேவாலயங்கள் வட்டிக்கு கொடுத்தன. பிற நிலவுடமையாளர்களும், முதலாளிகளும் தேவாலயங்களிடம் கடன் வாங்கியதால், மதகுருக்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.

ஒரு ஊரில் ஒரு தேவாலயம் இருக்குமாகில், அந்த மத நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாதிரிகள் சாதாரண மக்களை சுரண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும். அவர் அதற்கென வசூலிக்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ஏழை உழைப்பாளி தனது வருமானத்தில் பாதியை ஆவது இது போன்ற செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் எந்த மனிதனும் சுதந்திரமாக வாழ முடியாது. யாராவது கட்டுப்படியாகாது என்று தேவையற்ற சடங்குகளை தவிர்க்க விரும்பினால் மதத்தில் இருந்து விலக்கப் படுவார்கள். மெக்சிகோ மக்களின் விடுதலைக்காக போராடிய ஹிடால்கோ கூட அவ்வாறு மத நீக்கம் செய்யப் பட்டார். இவ்வளவவிற்கும் மெக்சிகோவின் தேசிய நாயகனான ஹிடால்கோ ஒரு முன்னாள் பாதிரியார்!  எசுயிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்...
ஹிடால்கோ பாதிரியார்

மெக்சிகோ புரட்சியின் வேர்கள், அன்று தாய்நாடாக கருதப்பட்ட ஸ்பானியாவின் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. ஐரோப்பாவில் சிலுவைப் போர் காலத்தில், பல கிறிஸ்தவ இயக்கங்கள் தோன்றியிருந்தன. மதத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள், பிற்காலத்தில் பணபலம் கொண்ட தேசங்கடந்த நிறுவனங்களாக மாறி விட்டன. எசுயிஸ்ட் சபை அவற்றில் ஒன்று. மெக்சிகோவில் குடியேறிய அதன் அங்கத்தவர்கள் வைத்திருந்த அசையும், அசையா சொத்துகளும், விவசாய உற்பத்தியில் கிடைத்த வருமானமும், அரசை அச்சமடைய வைத்தது. எசுயிஸ்ட் அமைப்பினர் சித்தாந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப் பட்டன.

எசுயிஸ்ட் உறுப்பினர்கள் அரச அடக்குமுறைக்கு ஆளானதால், அவர்களின் பண்ணைகளும் அழிக்கப் பட்டன. இதனால், ஜீவனோபாயத்திற்காக எசுயிஸ்ட் பண்ணைகளில் தொழில் செய்த பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப் பட்டனர். ஹிடால்கோ பாதிரியார், அரச அடக்குமுறையினால் பாதிக்கப் பட்ட மக்களை ஒன்று திரட்டினார். மெக்சிகோவில் பிறந்த ஸ்பானிய வம்சாவழியினர் முதல், பூர்வீக இந்தியர்கள் வரை அவரின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற நடந்த முதலாவது சுதந்திரப் போரும் அது தான்.

ஹிடால்கோ தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி விரைவிலேயே அடக்கப்பட்டாலும், சுதந்திர வேட்கை மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்பெயினில் மன்னராட்சிக்கு எதிரான தாராளவாத (லிபரல்) கொள்கையாளர்களின் எழுச்சி, ஆங்கிலேயருக்கு எதிரான வட- அமெரிக்க காலனிகளின் சுதந்திரப் பிரகடனம், ஹைத்தியில் கறுப்பின அடிமைகளின் புரட்சி, போன்ற பல சர்வதேச நிகழ்வுகள் மெக்சிகோவின் சுதந்திரத்தை விரிவுபடுத்திய புறக் காரணிகளாகும். புதிய சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகளை கூறும் ரூசோ, வோல்டேயர் ஆகியோரின் நூல்கள் படித்தவர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன. இதன் விளைவாக நாஸ்திகவாதம் பேசும் லிபரல்கள் உருவாகினார்கள்.

மெக்சிகோவில், நூறாண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போருக்கும் கொள்கை வேறுபாடே காரணமாக அமைந்திருந்தது. நிலப்புரபுக்கள், பழமைவாதிகள், மதகுருக்கள் ஆகியோர் தமக்கென தனியான இராணுவம் ஒன்றை வைத்திருந்தனர். மறு பக்கத்தில், லிபரல், சமதர்ம கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோரும் இராணுவ பலத்தை கொண்டிருந்தனர். பூர்வீக இந்திய சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹுவாரேஸ் லிபரல்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த முரண்பாடு அதிகரித்தது.

மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகளுக்கும், மதச் சார்பற்ற லிபரல்களுக்கும் இடையிலான தீராப் பகை, இரத்தம் சிந்தும் போராக பரிணமித்தது. இரண்டு தரப்பிலும், தீவிரவாதிகள் குரூரத்தின் உச்சிக்கு சென்றனர். பழமைவாதிகள் மதச்சார்பற்ற பாடசாலை ஆசிரியர்களை கொன்றார்கள். பதிலுக்கு லிபரல்கள், பாதிரிகளை கொன்று தேவாலயங்களை கொளுத்தினார்கள். நீண்ட காலம் நீடித்த போரின் முடிவில், சில லிபரல்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ரஷ்யாவில், போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்த அதே காலத்தில், மெக்சிகோவிலும் உள்நாட்டுப் போர் நடந்தது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர யுத்தத்தின் இறுதியில் சோஷலிசம் மலரா விட்டாலும், வர்க்க எதிரிகளுக்கு இடையிலான சமரசமும், நிலையான ஆட்சியும் ஏற்பட்டது. அது வரையில் நடந்த உள் நாட்டுப் போர்களில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். தேசத்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதமடையும் அளவிற்கு சொத்தழிவு ஏற்பட்டது. ஒரு வகையில், மெக்சிகோவின் வறுமைக்கு அதுவும் ஒரு காரணம்.

மெக்சிகோவின் உள்நாட்டுப் போருக்கு, மக்களிடையே பிளவுகளை உருவாக்கிய சாதிய படிநிலை அமைப்பு முக்கிய காரணம். பிற நாடுகளில் நடந்ததைப் போல, லிபரல்கள் தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த “மெக்சிகோ தேசியத்தை” உருவாக்கினார்கள். அதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டின் கடல் கடந்த மாகாணமாகவே கருதப் பட்டு வந்தது. மெக்சிகோவை காலனிப்படுத்திய முதல் நாளில் இருந்து, சுதந்திரம் பெற்ற நாள் வரையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தனர். அதாவது, மெக்சிகோ நாட்டின் அரசியல், இராணுவ, பொருளாதார நிர்வாகப் பொறுப்புகளுக்கு, ஸ்பெயினில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களது சேவைக்காலம் முடிந்ததும், தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள். அப்படியானவர்களே ஸ்பெயின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது.

ஸ்பானிய குடாநாட்டை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தப்படும் “peninsulares ” வகுப்பை சேர்ந்தோரே உயர்சாதியினராவர்.  தமிழில் சாதி என்பதை, ஆங்கிலத்தில் “Caste” என்று மொழிபெயர்ப்பது தவறானது. ஏனெனில் “Caste” என்ற சொல், மத்திய/தென் அமெரிக்காவின் காலனிய கால சமுதாயத்தை குறிக்கும் சொல்லாகும். அதற்கும் இந்திய சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம், அதே நேரம் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. ஸ்பானிய பெற்றோருக்கு மெக்சிகோவில் பிறந்த பிள்ளைகள் “கிரயோல்கள்”. இவர்கள் தூய ஸ்பானிய வம்சாவழியினர் என்றாலும், மெக்சிகோ மண்ணின் மைந்தர்கள் என்பதால், விசுவாசம் குறைந்தவர்களாக கருதப் பட்டனர். சாதிய படிநிலையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், சொத்துடமையிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தாம் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்த கிரயோல்கள், ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார்கள். பூர்வீக இந்தியர்களுக்கும், ஸ்பானிய குடியேறிகளுக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் “Mestizo” என அழைக்கப் படலாயினர். பூர்வீக இந்தியர்களும், மெஸ்தீசொக்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக நடத்தப் பட்டனர். அவர்கள் பண்ணையடிமைகளாக, விவசாயக் கூலிகளாக மட்டுமே வேலை செய்ய முடியும். இவ்விரு சாதியினரும் உடமைகளற்ற ஏழைகளாக இருந்தனர். அந்த அவல நிலை 21 ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

மெக்சிகோவின் பொருளாதாரத்தை உள்நாட்டுப் போர்கள் சிதைத்து நாசமாக்கின. வெளிநாட்டு சக்திகள், இதையே சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவை அடிமை நாடாக்க முயன்றன. சுதந்திர நாடான மெக்சிகோவுக்கு பிரிட்டனும், பிரான்சும் கந்து வட்டிக்கு கடன் வழங்கி வந்தன. வட்டி, இடைத்தரகர்களின் கமிஷன் போன்ற செலவுகளை கழித்து விட்டு, அரைவாசி கடன் தொகையை தான் மெக்சிகோவுக்கு கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, பணத்தை அறவிடுவது என்ற சாட்டில் பிரான்ஸ் படையெடுத்தது.

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்
தளபதி சான்டா அனா

மெக்சிகோவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு இராணுவத்தை எதிர்த்து போராடி வென்ற, சாண்டா அனா என்ற படைத் தளபதி, பின்னர் ஆறு தடவைகள் ஜனாதிபதியானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் மெக்சிகோவை ஆண்ட, சாண்டா அனா காலத்தில் தான், வட அமெரிக்காவுடன் யுத்தம் வெடித்தது. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசின் மாநிலமான டெக்சாஸ் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பானியர்களுக்கு அங்கே சென்று குடியேறும் ஆர்வம் இல்லாதிருந்த படியால், அமெரிக்க-ஆங்கிலேயர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப் பட்டது. கத்தோலிக்க – புரட்டஸ்தாந்து மதப் பிரிவினைகள் ஆழமாக வேரூன்றி இருந்த காலம் அது. டெக்சாசில் (ஆங்கிலேய) புரட்டஸ்தாந்துகாரர்கள் அதிகளவில் குடியேறினர். அவர்கள் டெக்சாசை தனி நாடாக பிரகடனம் செய்தனர். சாண்டா அனா அனுப்பிய படைகள் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது.

எல் அலெமோ என்ற இடத்தில் டெக்சாஸ் பிரிவினைவாதிகளின் இராணுவத்தையும், மக்களையும் படுகொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியது எனலாம்.  மெக்சிக்கர்களுக்கு, அது ஒரு பிரிவினைவாதிகளை அடக்கிய “எல் அலெமோ யுத்தம்”. ஆனால், அமெரிக்கா அதனை “எல் அலெமோ  இனப்படுகொலை”  என்று பிரச்சாரம் செய்தது. உணர்ச்சிவசப்பட்ட மக்களின் “தேசிய எழுச்சி”, மெக்சிகோ மீது படையெடுக்க உதவியது.  நூறாண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கில் நடந்ததைப் போல, அதுவும் ஒரு “மனிதாபிமானத் தலையீடு” தான். குவைத்தை மீட்க ஈராக் மீது போர் தொடுத்தது போன்று, “டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்பதற்காக” அந்த போர் நடவடிக்கை அமைந்திருந்தது. பண்டைய காலங்களில் தான் பொண்ணுக்காக, பெண்ணுக்காக என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரு சாம்ராஜ்யம் தன்னை விஸ்தரித்துக் கொள்ளும். இது தனி மனித சுதந்திரத்தை சட்டமாக்கிய புரட்சிகர அமெரிக்கா அல்லவா? அதனால், “தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லாத” நாடுகள் மீது படையெடுக்கிறார்கள். 19 ம் நூற்றாண்டில் படையெடுத்து ஆக்கிரமித்த நிலங்கள், அமெரிக்க கண்டத்தில் இருந்தன. குறிப்பாக மெக்சிகோவின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா விழுங்கி விட்டது.

நூறாண்டுகளுக்கு ஒரு தடவை வரலாறு திரும்பும் போலும். அமெரிக்காவின் ஆயுதபலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல், இராணுவ பலம் குன்றிய ஈராக் குவைத்தை விட்டோடியது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் மெக்சிகோ தோற்றதற்கும் அதுவே காரணம்.   மெக்சிகோ படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், நவீன ஆயுதங்களுடன் போரிட்ட அமெரிக்க படைகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியது. டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்கும் போர் என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். குறைந்தது பத்து ஆண்டுகளாவது சுதந்திர நாடாக இருந்த டெக்சாஸ், “வாக்கெடுப்பில் மக்களின் விருப்பின் பேரில்” அமெரிக்காவின் மாநிலமாகியது. இன்று அது எண்ணை வளம் மிக்க பணக்கார மாநிலமாக திகழ்கின்றது. 1848 ல், மேலதிகமாக மெக்சிகோவின் பிற பகுதிகளும் அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டன. அமெரிக்க மாநிலங்களான நியூ  மெக்சிகோ, கலிபோர்னியா, போன்ற பகுதிகளை, அன்று 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்கள். ரியோ கிராண்டே ஆறு, இன்றுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக் கோடாக வரையறுக்கப் பட்டது.

இன்றைய அமெரிக்க அரசியலில், மெக்சிக்கர்களின் குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது. பணக்கார அமெரிக்காவை நாடி வரும் மெக்சிக்கர்கள் முன் வைக்கும் வாதமும் வலுவானது தான். அதாவது அண்ணளவாக மெக்சிகோவின் அரைவாசி நிலப்பரப்பு அமெரிக்க வசமாகியுள்ளது. “நாங்கள் எல்லையைக் கடக்கவில்லை. எல்லை தான் எங்களைக் கடந்தது.” என்பது மெக்சிகோ குடியேறிகளின் வாதமாகவுள்ளது.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் நடந்த போரும், ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களும் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அமெரிக்க மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் அல்ல. ஆனால், மெக்சிகோவின் இளம் சமுதாயம், “அந்த அவமானகரமான தோல்வியை”  நினைவு கூறுவது அவசியம் என்று அரசு கருதுகின்றது. இதனால் வடக்கே உள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்புவாதம் குறித்த அச்சம், இளையோர் மனதில் குடி கொண்டுள்ளது. அமெரிக்க- மெக்சிகோ போர், எதிர்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வருகையை கட்டியம் கூறியது. “அமெரிக்காவின் கொல்லைப்புறத் தோட்டம்” என்று வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளாகின.  ஆரம்பத்தில் பத்துக்கும் குறையாத ஆங்கிலேயக் காலனிகளைக் கொண்டு உருவான அமெரிக்கா என்ற புதிய தேசம், வட மெக்சிகோ மாநிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம் வல்லரசாகியது. நிலங்களை அபகரிப்பதிலும், வளங்களை சுரண்டுவதிலும் காட்டிய அக்கறையை, அங்கே வாழ்ந்த மக்கள் மீது காட்டவில்லை. அந்த மக்கள் தாம் இழந்த செல்வத்தை தேடி அமெரிக்கா செல்வது நியாயமானது. அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் என்பதால், கேட்பாரின்றி   திருப்பி அனுப்பப் படுகின்றனர். இதனால், அமெரிக்கா மீது வன்மம் கொண்ட மக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வருகின்றனர்.

(தொடரும்)

_________________________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 2

சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாதுகடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.

நீங்கள் வைத்ய உதவி அளிக்கும்போது அதற்கு வெகுமதியாக உங்களின் நோயாளிகள் கிறித்தவ மதத்தில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்

பொதுவாகக் கூற வேண்டுமெனில் எங்கெல்லாம் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அது ஒரு ஆன்மீகச் செயலாக எந்த விதத்திலும் இருந்ததில்லை. இவையெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்யப்பட்ட மதமாற்றமே”…

கிறித்தவ மத போதனைக் குழுக்கள் தங்கள் பணியை அக்கறையுடன் ஆற்ற வேண்டுமானால், ஹரிஜனங்களை மதமாற்றம் செய்யும் அநாகரிகமான போட்டியிலிருந்து அவர்கள் அவசியம் விலகிக் கொள்ள வேண்டும்”…

இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல; அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த மகாத்மாவின்கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ஹரிஜன்பத்திரிகையில் அவர் எழுதியவை. (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி10).

தமாற்றம் குறித்து ஒரு தேசிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வாஜ்பாயி கூறியவுடனே, ”இதுபற்றி அரசியல் சட்டமும் நீதி மன்றமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றன. புதிதாக விவாதம் எதுவும் தேவையில்லை” என்று காங்கிரசு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பத்திரிகைகளும் மடையடைத்ததற்கான காரணம் நேர்மையானதல்ல. குஜராத்தில் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டதைக் கண்டித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழ் (14.1.99) எழுதிய தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:

”குஜராத் மாநிலத்தின் இந்து செயல்வீரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டாலும் – அதாவது குஜராத் டாங்ஸ் மாவட்டத்தில் கட்டாயமாகவும், பணத்தாசை காட்டியும் மக்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு – அவற்றைக் கையாள்வதற்கு இப்போது இருக்கின்ற சட்டங்களே போதுமானவை.”

இப்போது இருக்கின்ற சட்டங்கள் என்ன சொல்கின்றன?

”ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, கட்டாயப்படுத்தியோ மத மாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிஸ்ஸா, ம.பி. ஆகிய இரு மாநில காங்கிரசு அரசுகள் 70களில்  ஒரு சட்டமியற்றின. இந்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்தனிஸ்லாஸ் என்ற பாதிரியார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு வழங்கும் ‘மத உரிமை’ எனும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதாடினார். ”மதப் பிரச்சாரம் செய்யும் உரிமை என்பது மதமாற்றம் செய்யும் உரிமை அல்ல” என்று கூறிய உச்சநீதி மன்றம் 1977-இல் அவரது வாழ்க்கைத் தள்ளுபடி செய்தது.

”சட்டப்பிரிவு 25(1) வழங்குகின்ற ‘மனச்சாட்சிச் சுதந்திரம்’ என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதேயன்றி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது மதத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது என்பதைக் கடந்து, அடுத்தவரை தன் மதத்திற்கு மாற்றுவது என்ற முயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால், அத்தகைய நடவடிக்கையானது மற்ற குடிமக்களின் மனச்சாட்சிச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.”

எனவே, ”ஏமாற்றியோ ஆசை காட்டியோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிசா, ம.பி. மாநில அரசுகள் இயற்றிய சட்டம் செல்லத்தக்கதே என 1977-லேயே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதுதான் மதமாற்ற உரிமை பற்றிக் கடைசியாக வந்துள்ள உச்சநீதி மன்றத் தீர்ப்பு. இனி, இந்தப் பிரச்சினை குறித்து ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி.சேஷாத்ரி, 5.2.99 அன்று ‘இந்து’ பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.

”ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன?” ”எடுத்துக்காட்டாக, பிரச்சாரம் செய்து மக்களைக் கூட்டுவது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் எனக்கு வியாதிகள் குணமானது என்று பொய்சாட்சி சொல்லும் நபர்களைக் காட்டுவது, காடுகளில் பழங்குடி மக்களைத் திரட்டி நள்ளிரவு முகாம்கள், விருந்துகள் நடத்தி வீடியோ திரைப்படங்கள் மூலம் மதப்பிரச்சாரம் செய்வது… – மதமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் இந்த வழிமுறைகள் எல்லாம் ‘ஏமாற்று’ இல்லையா?”

”மதம் மாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்துகள் கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் இவையெல்லாம் ”இவ்வுலக ஆசை”யைத் தூண்டுபவைதானே! இவற்றுக்கும் ஆன்மீக விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?” ”மகாத்மா காந்தியும், அன்றைய ம.பி.காங்கிரசு அரசு நியமித்த நியோகி கமிசனும் தெளிவாகக் கூறியதுபோல, கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய, கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள்; அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்.”

இதுதான் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சேஷாத்திரியின் குற்றச்சாட்டு.

இதுவரை படித்ததை நிதானமாக ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்! ஒரிஸ்ஸா பாதிரியார் கொலைக்குப் பிறகு பாரதீய ஜனதா ஒருபுறமும், அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள், பத்திரிகைகள், நீதிமன்றம் ஆகிய அனைத்தும் எதிர்ப்புறமும் நின்று மோதிக் கொண்டிருந்தது போலத் தெரிந்த மாயை கலைந்து விடும். மத மாற்றம் குறித்து அரசியல் சட்டமும், அகிம்சா மூர்த்தியும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் கூறுவது ஒன்றேதான் என்பது தெளிவாகும்.

மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்களை உயிருடன் கொளுத்துவதா, சட்டப்படி தண்டிப்பதா என்பதுதான் இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு!

பால் பவுடர்லவுகீகம், காமதேனுஆன்மீகம்!

ஜெபக் கூட்டம் நடத்தி மதம் மாற்றுவது ஏமாற்று! சோறு போட்டும், மருந்து கொடுத்தும் மதம் மாற்றுவது ‘இவ்வுலக ஆசையைத் தூண்டுவது’; காந்தியின் வார்த்தைகளில் சொன்னால் இந்த மதமாற்றங்கள் எல்லாம் ‘ஆன்மீகச் செயல்கள்’ அல்ல – சவுகரியத்திற்காகச் செய்யப்பட்ட லவுகீக (இவ்வுலகம் சார்ந்த) நடவடிக்கைகள்! இகலோக சவுகரியங்களுக்காக மதம் மாறுவது இழிவு, அவ்வாறு மதம் மாறுவதும், மாற்றுவதும் எப்படி என்று வாசகர்கள் தெளிவடைய வேண்டும்.

பைபிளையோ, குர்ஆனையோ வேத புராணங்களையோ ஆதாரமாகக் கொண்டு ”எங்களது சொர்க்கத்தில் ஒயின், ஆட்டிறைச்சி, அப்சரஸ் ஸ்திரீகள் போன்ற இன்னின்ன வசதிகள் உண்டு” என்று ஆசை காட்டலாம். அந்த ஆசையில் மயங்கி இவ்வுலக சிற்றின்பங்களை மறந்து மேற்படி ‘பேரின்பத்தில்’ நாட்டம் கொள்பவர்களை மதம் மாற்றலாம; அதை உச்சநீதி மன்றம் அனுமதிக்கிறது.

புரியும்படி சொல்வதானால் காமதேனு என்று ஆசை காட்டலாம், ஆனால், பால்பவுடர் விநியோகிக்கக்கூடாது; கற்பக விருட்சம் என்று ஆசை காட்டலாம். ஆனால், கல்வி அளிக்கக்கூடாது; கைலாய பதவி உண்டு என்று உத்திரவாதம் தரலாம. ஆனால், சாகக் கிடக்கிறவனுக்கு வைத்தியம் செய்யக்கூடாது. இதுதான் சட்டத்திற்கான விளக்கம். கல்விக்கு சரஸ்வதி, காசுக்கு லட்சுமி, மூளைக் கோளாறுக்கு குணசீலம், அம்மைக்கு மாரியம்மா, இன்னும் வயிற்றுவலி, வாய்க்கோளாறுக்குத் தனித்தனி கடவுள்கள் என்று இவ்வுலக இன்ப – துன்பங்களை இலாகா வாரியாகப் பிரித்துத் தனித்தனிக் கடவுள்கள் வைத்திருக்கும்போது இகலோக ஆசையைத் தூண்டுவதில் என்ன குற்றம்?

கடவுள் வரை போவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால், ”உடனடி நிவாரணம் – நீடித்த இன்பம்” என்று பிரச்சாரம் செய்யும் சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற ஆக்ஷன் – 500, வயாக்ரா மாத்திரைகள் எல்லாம் வழங்குவது என்ன பேரின்பமா? ஜெபக் கூட்டங்கள் ஏமாற்று என்றால், மழை வருவதற்கும், வெயில் அடிப்பதற்கும் காஞ்சி ‘முனிவர்’ நடத்தும் வேள்விகள் எல்லாம் பத்தரைமாற்றா? ஆனானப்பட்ட அப்பர் பெருமானே அல்சருக்காக மதம் மாறியவர்தானே, நான் கான்சருக்காக மாறினால் என்ன என்று கூடக் கேட்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பதில் கிடையாது. அப்பருக்கு வந்தது ‘ஆன்மீக அல்சர்’ என்று விளக்கம் சொல்லி விடுவார்கள்.

திருச்சபைக்குத் தெரியாதா இவர்களின் தில்லுமுல்லு? அதனால்தானே ”ஆத்தும சரீர சுகமளிக்கும் கூட்டம்” என்று சிற்றின்பத்துடன் பேரின்பத்தையும் ஒட்டவைத்து சட்டத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள்.

மனச்சாட்சியை ஆராயும் நீதிபதிகள்!

சரி. இகலோக ஆசை காட்டி மதம் மாற்றுவது குற்றம். அப்படி மாற்றியவர்களைச் சிறையில் தள்ளலாம். மாறியவர்களை எங்கே தள்ளுவது?

பால் பவுடர், பணம் காசு கிடக்கட்டும்; மீனாட்சிபுரத்தில் இசுலாமுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் பகிரங்கமாகச் சொல்கிறார்கள், ”சமமாக டீ குடிக்க வேண்டும், செருப்பணிந்து நடக்க வேண்டும், தோளிலே துண்டு போட வேண்டும், ஒரே கோயிலில் சாமி கும்பிட வேண்டும், சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் எல்லோர் வீட்டிலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் – போன்ற இகலோக ஆசைகளுக்காகத்தான் இசுலாமுக்கு மாறினோம்” என்று தெளிவாகச் சொல்கிறார்கள். மதம் மாறுவதற்கு முன் ‘டேய்’ என்று கூப்பிட்டவன் இப்போது ‘பாய்’ என்று கூப்பிடுகிறானென்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கோயிலை மசூதியாக மாற்றினான் என்று கூறி, மசூதியை இடித்து அதனை ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்று பெயரிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு விட்டவர்கள் மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை என்ன செய்வார்கள்? சட்டவிரோதமாக – கேவலம் செருப்பு அணிந்து நடப்பது போன்ற அற்பமான இகலோக சவுகரியங்களுக்காக – மதம் மாற்றப்பட்ட மக்களை சர்ச்சைக்குரிய மனிதர்களாக்குவார்களா? அவர்கள் இந்துவா முசுலீமா என்பதை உச்சநீதி மன்றம் தீர்மானிக்குமா?

இது குதர்க்கமல்ல; எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கோ, பின்பற்றாமல் இருப்பதற்கோ வழங்கப்பட்டுள்ள ‘மனச்சாட்சி சுதந்திரம்’ என்னும் சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை? மதம் மாறியவர்களின் மனச்சாட்சியை ஆராய்வது இருக்கட்டும்; கட்சி மாறிகளின் மனச்சாட்சியை நீதிமன்றம் ஆராயப்புகுந்ததுண்டா?

பிறப்பால் மதத்தைத் தீர்மானிப்பது இறையியலா, உயிரியலா?

இந்த நாட்டில் ஒவ்வொரு இந்துவும், முசுலீமும், கிறித்தவனும் சுயமாகச் சிந்தித்து ”இந்த வழிதான் எனது ஆன்மவிடுதலைக்கு உகந்தது” என்று தெளிந்து, தனக்குரிய பரலோகத்தால் கவரப்பட்டு அந்தந்த மதத்தில் இருக்கிறானா, அல்லது ‘நாய்க்குப் பிறந்தது நாய்க்குட்டி’ என்பது போல இந்துவுக்குப் பிறந்ததால் இந்து, கிறித்தவனுக்குப் பிறந்ததால் கிறித்தவன் என்ற கணக்கிலா? நடைமுறையில் குடிமக்கள் பலரின் மதத்தைத் தீர்மானித்துக் கொண்டிருப்பது இறையியலா, அன்றி உயிரியலா?

பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றுபவன் குற்றவாளி என்றால், பாலூட்டி, சோறூட்டி வளர்த்த ஒரே காரணத்தினால் மதமில்லாமல் பிறந்த மனிதக் குழந்தையை இந்துவாகவும், முசுலீமாகவும் மத மாற்றம் செய்யும் பெற்றோர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று கொள்ளலாமே? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை போல, வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் எல்லா மக நூல்களையும் கற்று, தன் மனச்சாட்சிப்படி ஒரு மதத்தைத் தெரிவு செய்து தழுவவோ, எதையும் தழுவாமல் இருக்கவோ முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளதா? ஆள்பவனைத் தெரிவு செய்யவே 18 வயதாக வேண்டும் எனும்போது ஆண்டவனைத் தெரிவு செய்ய அதற்கும் மேல் வயதும் அனுபவமும் வேண்டாமா?

இது வேடிக்கையல்ல, குடும்பத்திற்கும் மதத்திற்கும் உள்ள ‘இயற்கையான’ உறவை மீனாட்சிபுரத்தில் துண்டித்து விட்டார்கள். அப்பா மதம் மாறி அப்துல்லாவானார்; மகன் ரங்கசாமியாகவே இருந்து கொண்டான். மதம் மாறிய ஒரு பெண் இசுலாத்தில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பிடிக்காததால் பழைய படி ‘இந்து’வாகி விட்டாள். அவளைத் தாய் மதத்திற்கு வரவழைக்க எந்த விசுவ இந்து பரிசத்தும் போய் சடங்கு நடத்தவில்லை. இவர்களையெல்லாம் நீதிமன்றம் என்ன செய்யும்?

இத்தனை கேலிக்கூத்தான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் அவ்வளவு அடிமுட்டாள்களா என்று வாசகர்கள் வியப்படையலாம். இந்துமதச் சார்பை மனதில் வைத்துக்கொண்டு மதச் சார்பின்மை வேடம் அணிந்து கொள்ளும்போது அதன் விளைவு சட்டரீதியான கோமாளித்தனமாகி விடுகிறது. அவ்வளவுதான்!

படிப்பது கிறித்தவப் பள்ளி இடிப்பது மாதாகோயில்!

கோமாளித்தனம் கிடக்கட்டும். பார்ப்பன இந்து மத வெறியர்களின் அயோக்கியத்தனத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ”மதம் மாற்றும்  நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்து கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் அவையெல்லாம இவ்வுலக ஆசையைத் தூண்டுபவைதானே” என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செயலர் சேஷாத்ரி.

அப்படியே வைத்துக் கொள்வோம். கிறித்தவராக மதம் மாறியவர்கள் யாரும் மாதாக்கோயில் மணியோசையால் கவர்ந்திழுக்கப்படவில்லை எனும்போது தேவாலயங்களுக்கு நெருப்பு வைப்பானேன்? இவ்வுலக ஆசையைத் தூண்டி இந்துக்களை மதமாற்றம் செய்கின்ற பொறிகளான கிறித்தவப் பள்ளி கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் அல்லவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அடித்து நொறுக்கவேண்டும்!

ஆனால், அதைச் செய்ய முடியாது. காரணம் மனிதாபிமானமல்ல; அவை தேவைப்படுகின்றன. தோன்போஸ்கோவும், லயோலாவும், செயிண்ட் ஸ்டீபனும் இன்ன பிற பள்ளிகளும் கல்லூரிகளும் பார்ப்பன உயர் சாதி இந்துக்களுக்குத் தேவை. சர்ச் பார்க் கான்வென்டு, தோடர்கள் – இருளர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காகவா, கட்டப்பட்டிருக்கிறது? மதமாற்றச் சதியின் கூடாரங்களாக சேஷாத்ரி குறிப்பிடும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான் பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருக்கிறது ‘அவுட்லுக்’ வார ஏடு!

படிப்பது கிறித்தவப் பள்ளி, இடிப்பது மாதாகோயில்! ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் இந்த ‘ஆன்மீக வலிமை’ தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் இல்லாமற் போனதற்காக அவர்கள் பெருமைப்பட வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா?

மதம் மாறுபவன் தேசத் துரோகி! தேசம் மாறினால் தேசபக்தன்!

”கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்” என்று வருத்தப்படுகிறார் சேஷாத்திரி. விசுவ இந்து பரிசத்தின் தலைவரோ ”கிறித்தவர்கள் மேலை நாடுகளுக்கும் முசுலீம்கள் பாகிஸ்தானுக்கும்தான் விசுவாசம் காட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார். ”மதமாற்றம் என்பது தேசிய மாற்றம்தான்” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

குஜராத்திலும், ஒரிசாவிலும் மதம் மாறிய பழங்குடிகள் அதே காட்டில் தான் சுள்ளி ஒடித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவராக மதம் மாறிய மீனவர்களை விசைப்படகிலேறி அப்படியே அமெரிக்காவிற்கு ஓடவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் வெட்டுப்படுவதற்காக மண்டைக்காட்டுக்குத்தான் திரும்பி வருகிறார்கள். இவர்களெல்லாம் மதம் மாறியும் தேசத்தை மாற்றிக் கொள்ளாத ‘தேசத் துரோகிகள்’.

மதம் மாறாமலேயே தேசத்தை மாற்றிக்கொள்ளும் ‘தேச பக்தர்களை’ப் பார்க்க வேண்டுமா? அதிகாலை 5 மணிக்கே சென்னை அண்ணா மேம்பாலத்தின் மேல் நின்றபடி அவர்களைப் பார்க்கலாம். அமெரிக்க கான்சல் அலுவலகத்தின் வாயிலில், அந்தக் காம்பவுண்டு சுவரை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பார்கள்.

பாரதமாமாவின் மடியிலிருந்து தப்பி ஓடும் அந்த ”வெளிநாட்டில் குடியேறவிருக்கும் இந்தியர்”களில் இந்துக்கள் எத்தனை பேர், கிறித்தவர்கள் எத்தனை பேர் என்று ஆர்.எஸ்.எஸ் கணக்கெடுக்குமா? இராமனும், கிருஷ்ணனும், ரிஷிகளும், முனிவர்களும் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியை விட்டு ஓடுகிறார்களே, அவர்களை ஆசை காட்டி இழுப்பது யார்? அமெரிக்கப் பாதிரியார்களா? அவர்கள் பால்பவுடருக்கு மதம் மாறும் புளியந்தோப்பு, வியாசர்பாடி இந்துக்களல்ல; டாலருக்காக தேசம் மாறும் மயிலாப்பூர், மாம்பலம் இந்துக்கள். கட்டாய மதமாற்றம் போல இவர்கள் கட்டாயமாக தேசிய மாற்றத்துக்கு ஆளாகிறார்களோ? இல்லை. அன்றும் இல்லை, இன்றும் இல்லை.

பிஜியின் கரும்புத் தோட்டத்தையும் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தையும், மலேசியாவின் ரப்பர் தோட்டத்தையும் உருவாக்கக் கட்டாயமாகக் கப்பல் ஏற்றப்பட்ட உழைக்கும் சாதியினர் அகதிகளாகத் திரும்பி வந்தார்கள். கேம்பிரிட்ஜிற்கும்,  ஆக்ஸ்போர்டிற்கும் கப்பலேறிய அவாள், ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவும், ஐகோர்ட்டு வக்கீல்களாகவும் திரும்பி வந்தார்கள். இன்று வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களாகத் திரும்பி வருகிறார்கள். பார்ப்பான் கப்பலேறினால் சாதி – மதத்தை விட்டு நீக்க வேண்டும் என்று பேசியவர்கள், இன்று பகவானையே கப்பலேற்றி அனுப்புகிறார்கள்.

மதமாற்றத்திற்குத் தடை விதிக்கக் கோரும் பாரதீய ஜனதா, இந்தத் தேச மாற்றத்துக்குத் தூபம் போட்டு வளர்க்கிறது. ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவில் ஆலயம் அமைக்கிறார்கள். தியாகய்யர் உற்சவம் நடத்துகிறார்கள், அனைத்துக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கும் அள்ளித் தருகிறார்கள்.

சட்டத்தினால் ஒரு கொட்டடி!

அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள். கிறித்தவர்களும் முசுலீம்களும் இந்நாட்டில் குடியேறிய அந்நியர்கள்! தேசத்தையே மாற்றிக் கொண்டாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையும், இந்தியக் குடிமக்களைவிட மேலதிக உரிமைகளையும் பாரதீய ஜனதா வழங்கும். ஆனால், சாதிக்கொடுமையிலிருந்து தப்பிக்க கிறித்தவத்திற்கோ, இசுவாமிற்கோ மதம் மாறினால் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்யக்கோரும்.

இதுதான் கட்டாயம். இதுதான் மிரட்டல். ஏனென்றால் ஆசை காட்டிக் கவர்ந்திழுப்பதற்கு இந்து மதத்தில் எதுவும் இல்லை. கிறித்தவத்திற்கும் இசுலாத்திற்கும் மாறிய சூத்திர பஞ்ச சாதியினருக்குச் சேவை செய்து அவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கவர்ந்திழுக்க முடியாது. ஏனென்றால் இவாளுக்குச் சேவை செய்வதற்காகவே அவர்களை நியமித்திருக்கிறது இந்துமதம். மதமாற்றம், ‘சகோதரன் பிரிந்து விட்டானே’ என்ற துயரத்தை இந்து மத வெறியர்களுக்குத் தோற்றுவிக்க வில்லை. ‘வேலைக்காரன் ஓடி விட்டானே’ என்ற ஆத்திரத்தைத் தான் உண்டாக்குகிறது.

அதனால்தான் அடிமைத்தனத்திலிருந்து தப்பியோட முயன்ற கறுப்பின மக்களை அமெரிக்க வெள்ளை நிறவெறியர்கள் கொட்டடியில் அடைத்ததுபோல, கிறித்துவத்துக்கும் இசுலாமுக்கும் தப்பியோடி விடாமல் தடுக்க, சட்டத்தால் ஒரு கொட்டடி கட்ட முயல்கிறார்கள் இந்து மதவெறியர்கள். ‘ஆசை காட்டுவதற்கு’ப் பாதிரியாரும், அரபுப் பணமும் இல்லாமல் போனாலும் அறுத்துக்கொண்டு ஓடுவதற்கு அநேகம் பேர் தயாராக இருப்பதால்தான் கொட்டடியைப் பூட்டிவிட முயல்கிறார்கள்.  ஆசை காட்டுபவனைத் தண்டிக்கத் தானே சட்டம் இருக்கிறது. ”அறுத்துக் கொண்டு போகவே முடியாது” என்று சட்டம் போட்டுவிட்டால் சநாதன தருமத்தை நிரந்தரமாக்கி விடலாமே என்று திட்டம் போடுகிறார்கள்.

பார்ப்பன மதத்திற்கு மாற முயன்றதற்காக அன்று நந்தன் எரிக்கப்பட்டான். பார்ப்பன மதத்தைவிட்டு மாற முயற்சிப்பதற்காக இன்று நந்தனின் வாரிசுகள் எரிக்கப்படுகிறார்கள்.

– தொடரும்

பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

_________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!

154

பீஃப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி! -சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?

உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?

தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.

இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.

இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார்  ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?

இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.

மேலும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவரும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவரல்ல என்பதற்கு காரணம் அவர்கள் கோமாதைவை குலதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதல்ல. விவசாயத்திற்கும், பாலுக்கும் பயன்படும் கால்நடைகளை அவர்கள் கொல்ல விரும்பவதில்லை. ஆனால் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் வேறு வழியில்லை. இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. மேலைநாடுகள் போல இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலை இங்கு இல்லை. இதன்றி கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் என்பது குடும்பத்தின் பெரிய செலவுகளை ஏற்கும் ஒரு மலிவான முதலீடாக இருக்கின்றது. அவைகள் இறைச்சிக்கென்றே வளர்க்கப்படுகின்றன.

மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.

வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை  கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. அக்காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, ஜைன மதங்கள் விவசாயப் பொருளாதாரத்தை  காக்கும் வண்ணமும் கால்நடையை பாதுகாக்கும் பொருட்டும் சைவ உணவுப் பழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. அதன் பின்னரே பார்ப்பனிய இந்து மதத்தில் சைவ உணவுப் பழக்கம் வந்ததோடு அசைவ உணவு உண்பவர்களை இழிவாக பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை. அதற்கு இந்துமதவெறி அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் பார்ப்பனப் பண்பாட்டு பாசிசமே காரணமாகும். ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.

மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

இதற்கு மேல் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?

அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.

அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!

சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!

________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!

கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்  சங்கீதா. பட்டதாரியான‌ சங்கீதா தன்னை விட படிப்பில் குறைந்த, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மராஜை சாதி கட்டுப்பாடுகளை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பணி புரியும் இடத்தில் இயல்பாக ஏற்பட்ட இக்காதலை திருமணம் வரை கொண்டு செல்வதற்கு அவர் கடுமையாகப் போராடினார்.

சமூகத்தில் அரதப் பழசாகிப் போன சாதி நம்பிக்கையைத் தூக்கி எறிந்தவருக்கு, தனியார்மயம் தாராளமயம் உருவாக்கிய புதிய சமூகச் சீர்குலைவுகளைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு எளிதாகக் கைவரவில்லை. தன்னுடைய கணவரைப் போல் தன்னுடைய மகன் படிப்பில் சோடை போய் விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய சக்தியை மீறி செலவு செய்து, அந்தப் பகுதியிலேயே சிறந்த பள்ளி என்று கூறப்படும் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில்   சேர்த்துள்ளார் .

அவரது மகன் U K G செல்லும் போது ரூ.12,000 /- கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொண்டு ரூ.5000 /- செலுத்தியுள்ளார். மீதிப் பணத்திற்கு பல இடங்களில் கடன் கேட்டு பார்த்துள்ளார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த சங்கீதா கடைசியாக‌ மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேல் தீ வைத்துக் கொண்டார்.  தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார் சங்கீதா.

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அடைந்த தீக்காயங்களுடன் தர்மராஜ்

ஒரு புறம் தனியார்மயம், தாராளமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் சாதாரண மக்களது மனதை ஊடுருவிச் சீரழிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்கள் பிரதிபலிக்கும் மேட்டுக்குடி வாழ்க்கையைத்தான் உண்மையான வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு, தானும் அதுபோல வாழத் தலைப்படும் முயற்சி பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களிடமும் ஊடுருவி  செல்வாக்கு செலுத்துகிறது. ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம், மறுபுறம் தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளை லாபவெறி.

பிரச்சனைக்குட்பட்ட பள்ளியில் நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் என்னவோ ரூ.3558 தான். ஆனால் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் தொகையோ ரூ.12000. கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் சுமார் 3  மடங்கு அதிகம். குழந்தைகளை கடத்திப் பணம் பறிக்க அவர்களைத் தேடிப்போய், கடத்திப் பணம் பறிக்க வேண்டும். ஆனால்  இந்தக் கல்விக் கொள்ளையர்களிடம் பெற்றோர்களே தமது குழந்தைகளை ஒப்படைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் இந்தக் கல்விக் கொள்ளையர்களின் கையில்தான் உள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர். இந்தக் கொள்ளையர்களின் உத்திரவுக்கு குரங்குகள் போல் ஆடுகின்றனர்.

இந்த நாட்டு மக்களின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ, புதிதாக அரசுப் பள்ளிகள் எதையும் கடந்த 20 ஆண்டுகளாகத்  திறக்கவில்லை. அப்படியே திறந்திருந்தாலும் அது இந்த நாட்டின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும் போது ஒன்றுமேயில்லை.

அரசியலமைப்புச்  சட்டம் 21-4 பிரிவின்படி இலவசக் கல்வி அளிக்க வேண்டிய அரசே உலக வங்கி , உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் உத்திரவின் பேரில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் வேலையையே கந்து வட்டி, லேவா தேவிக்காரர்களிடமும், கருப்புப் பண முதலைகளிடமும், பகற்கொள்ளையர்களிடமும் ஒப்படைத்து விட்டது.

இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ள சில சில்லறை உரிமைகள் கூட  உலகம் முழுவதும் அதற்கு முன் நடந்த‌ மக்கள் போராட்டத்தின் விளைவே ஆகும். மக்களின் போராட்ட குணம் இன்று நீர்த்துப் போய்விட்ட படியால் மக்களின் எதிரிகள், பகற் கொள்ளையர்களின் கை மேலோங்கியுள்ளது.

மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள, மக்களை ஒன்று திரட்டிப் போராடும் முயற்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கல்விக் கட்டணத்திற்கு  எதிராகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டிய பெர்க்ஸ் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளனர்.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடத்தும் கல்விக் கட்டணக் கொள்ளைக்கெதிராகவும், கோவிந்தராசன் கமிட்டியின் கட்டணத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் கடந்த 20.05.2011  அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
ஆர்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்

ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுவான‌ ஜனநாயக ஆர்வல‌ர்களும் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் அபு தாகிர் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார் .

சங்கீதாவின் கொலைக்கு காரணமான பள்ளிக் கொள்ளையர்களின் இலாப வெறியை கோவை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களிடம் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தத்தமது பகுதி தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்து புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சங்கீதாவின் மரணம் அந்த வகையில் ஒரு தீப்பொறியாக பயன்பட்டிருக்கிறது.

__________________________________________________
தகவல் – மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
__________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

72

அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள்!

திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர்  கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

11 மணிக்கு  அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.

காலை  8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.

விபத்து நடந்த அன்றும்  அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான்  மரியம்பிச்சையின் இறப்புக்கு  அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.

ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?

சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.

கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.

மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)

மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம்  போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.

இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!

யார் இந்த மரியம்பிச்சை? ஒரு ரவுடி மந்திரியான கதை!

க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.  இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.

இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில்  புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப்  பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.

சொந்த  வாழ்க்கையில்  நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.

மேலும் தான்  வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின்  கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.

இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.

அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின்  மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும்  கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.

மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.

மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில்    தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும்  கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள்  போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.

உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

குறிப்பு :

1.         மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2.         பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை  கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும்  குறைத்துக்கொள்ள தயாரில்லை..

_________________________________________________________________

-தகவல், படங்கள்:  ம.க.இ.க, திருச்சி
_________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது வணக்கம்சொன்னவர், முசுலீமாக மாறும்போது அஸ்ஸலாமு அலைக்கும்என்கிறார்.

கிறித்தவர் தோத்திரம்அல்லது குட்மார்னிங்என்கிறார். வேட்டி மாறி பேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டு வைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய் உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக் கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்து செய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனித ஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன், கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம்புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன. முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியது போய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன. மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சில உதாரணங்களே.

இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்ற வெளியீட்டில் இருந்து.

____________________________________________________________________________

) நமஸ்காரம் போய் குட்மார்னிங், தோத்திரம், அஸ்ஸலாமு அலைக்கும்.

ணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.

அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?

தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.

கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.

மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.

ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

) வேட்டி போய் பேண்ட், லுங்கி

ந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.

உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.  டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.

இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.

) பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்து கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது

வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.

ஆனால், பார்ப்பன – மேல்சாதி  – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு  இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.

இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.

அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.

) பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் மறைந்து போதல்

விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.

அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.

) ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு பலதாரமணம், விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்கு மாறுகிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.

பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.

விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.

) பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனித நகரங்களை நினைப்பது

தன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?

அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?

வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!

பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.

) முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளைமுட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது

”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.

எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில்  அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.

) சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல், ஆன்மீகம் அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்

இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.

ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.

மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.

மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!

– தொடரும்

____________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!

ரங்க் தே பசந்தி : பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி !

ரங்க் தே பசந்தி : பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி !

ரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.

சினிமா ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதைப் போக்குவது என்பதன் பொருளே அது சினிமாதான் என்று மாறியிருக்கும்போது ஒரு திரைப்படத்தைக் கருத்தியல் தளத்தில் நின்று பார்ப்பது, சிந்திப்பது, விவாதிப்பதினூடாகத்தான் காட்சிக் கலையின் உணர்ச்சிக் கவர்ச்சியிலிருந்து நம் சொந்த விழிப்புணர்வு வழியாக விடுதலை பெற முடியும். இல்லையென்றால் அந்த அபினின் போதையில் நம்மிடம் கருக்கொண்டிருக்கும் முற்போக்கான அரசியல் பாதை நம்மையறியாமலே குழப்பமடையக் கூடும். அப்படித்தான் சாதாரண மக்களிடம் பல்வேறு ஆளும் வர்க்க அரசியல் கருத்துக்கள் குடியேறுகின்றன. இந்தக் குடியேற்றத்துக்கு இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரங் தே பஸந்தி இந்தித் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.

தற்போதைய சினிமா ஃபார்முலாவின் படி விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்க இயலாத வாசகர்களுக்காக கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.

லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும், என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.

புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.

ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.

இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.

இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.

ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப் படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.

அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.

ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.

இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.

நகர்ப்புற அதிலும் மாநகரப் பார்வையாளர்களைக் குறிவைத்து சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் 600 பிரதிகள் எடுக்கப்பட்டு உலகெங்கும் வெளியிடப்பட்டு முதல் வாரத்திலேயே தயாரிப்புச் செலவை வசூலித்து விட்டதாம். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன? மாறுபட்ட திரைக்கதை என்பதாலும் இருக்கலாம். அந்த மாறுபாடு என்ன, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள், இப்படத்தின் உணர்ச்சி தோற்றுவிக்கும் அரசியல் என்ன என்பதைப் பரிசீலிப்பதற்கு முன் சில கொசுறு விசயங்களைப் பார்த்து விடலாம்.

அந்த வெள்ளைக்காரப் பெண் தன் சமகால அரசியல் உணர்வுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஆக்கிரமித்திருக்கும் இராக்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும். சரி போகட்டும், இந்தியாவிற்கு வந்தவள் அந்த நண்பர் வட்டத்துடன் ஆடிப் பாடிப் பழகுபவள் மறந்தும் கூட இராக் மீதான ஆக்கிரமிப்பு குறித்துப் பேசவில்லை.

இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இருக்கிறது. படத்திற்கு ஸ்பான்சரே கொக்கோ கோலாதான். படத்தில் நண்பர்கள் சாப்பிட்டவாறே அரட்டையடிக்கும் பஞ்சாப் தாபா காட்சிகள் முழுக்க கோக் விளம்பரங்கள்தான். நடிகர் ஆமிர்கானும் கோக்கின் முக்கியமான விளம்பர நட்சத்திரமாவார். படம் வெளிவந்த தினங்களில் கோக் தனது பாட்டில்களில் ரங் தே பஸந்தி ஸ்டிக்கர் ஒட்டியே விநியோகித்திருக்கிறது. பிளாச்சிமடாவிலும், கங்கைகொண்டானிலும் போராடும் மக்களை ஒடுக்க தனி சாம்ராச்சியமே நடத்திவரும் கோக் இங்கே ஹீரோக்களின் மனம் கவர்ந்த பானமாக இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் இந்திய தேசபக்தியில் கோக்கும் ஒரு அங்கம் என்பது உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் ஒரு கள்ள உறவு போலும்.

அடுத்து மிக்21 விமானம் எனும் ரசியவிமானம் வாங்கியதில் ஊழல் என்று வருகிறது. இதுவே எப்16 எனும் தரங்குறைந்த அமெரிக்க விமானம் வாங்கியதில் ஊழல் என்று எடுத்திருக்க முடியுமா? அல்லது உண்மையான இராணுவ ஊழல்களான போஃபர்ஸ் பீரங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் போன்றவற்றை வைத்து எடுத்திருக்க முடியுமா?

அப்படி எடுத்திருந்தால் அமெரிக்க அடிமைத்தனத்திலும், இந்த ஊழல்களிலும் ஊறித் திளைத்திருக்கும் தற்போதைய காங்கிரசு அரசு, ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகையை நல்லடக்கம் செய்தது போல இந்தப்படத்தைப் புதைத்திருக்கும். எனவே, ஊழல் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் ஆளுபவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்ற விதியை படம் செவ்வனே பின்பற்றியிருக்கிறது.

மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பகத்சிங்கிற்கு பொட்டு வைத்தும், ஆசாத்துக்குப் பூணூல் போட்டும் இந்து மதவெறியர்கள் செய்யும் அநீதி ஒருபுறம். மறுபுறம் பாராளுமன்றப் பூசை செய்யும் போலி கம்யூனிஸ்ட்டுகள் தங்களால் கனவிலும் செய்யமுடியாத சாகசங்களைச் செய்திருக்கும் பகத்சிங்கை ஆக்ஷன் ஹீரோவாக அணிகளுக்குச் சித்தரிக்கும் அயோக்கியத்தனம். இப்போது இந்தப் படமும் தனது பங்குக்கு பகத்சிங்கை இம்சை செய்கிறது.

ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க போராட்டங்களை பலமுறை காட்டிக் கொடுத்தும் கருவறுத்தும் வந்தது காந்தி காங்கிரசு துரோகக் கும்பல். இந்தத் துரோக வரலாற்றுக்கெதிரான குறியீடுதான் பகத்சிங். தனது சிறைக்குறிப்புக்களில் இந்தியாவில் மலர வேண்டிய சோசலிச ஆட்சி குறித்தும், அதற்கு மக்களை அணிதிரட்டிச் செய்யவேண்டிய புரட்சிப் பணி குறித்தும், பரிசீலனை செய்து கனவு காணும் இந்த வரலாற்று நாயகனை பொய்யான சித்தரிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. இந்தப் படத்தில் கேளிக்கைகள் செய்வதிலும், மந்திரியைக் கொல்வதிலும் ஈடுபடும் மேட்டுக்குடி இளைஞர்களின் சாகச உணர்வை ஒளிவட்டம் போட்டுக் காண்பிப்பதற்காக பகத்சிங்கும் ஏனைய போராளிகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆவணப்படம் எடுக்க வந்த அந்தப் பெண் நல்ல நடிகர்கள் வேண்டுமென்றால் புதுதில்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றிருந்தால் விசயம் முடிந்திருக்கும். ஆனால் அதில் கதை இருந்திருக்காது. ரசிகர்களும் படத்தில் ஒன்றியிருக்க முடியாது.

பீர் கோக்கைக் குடித்துக் கொண்டு அந்தரத்தில் சாகசம் செய்யும் இந்த இளைஞர்கள், கும்மிருட்டிலும் ஜீப்பையும் பைக்கையும் அதிவேகமாய் ஓட்டும் இந்த இளைஞர்கள், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் அரட்டையுமாய் இருக்கும் இந்த இளைஞர்கள், ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த இளைஞர்களின் கூட்டத்தை படம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; அங்கீகரிக்கின்றனர்; அந்தக் குழுவில் சேர விரும்புகின்றனர்; அல்லது சேர்ந்து விட்டனர். இத்தகைய துடிப்பான இளைஞர் குழாமில்தான் பார்வையாளர்கள் தங்களைக் காண்கின்றனரே ஒழிய பகத்சிங் முதலான போராளிகளில் அல்ல. இந்த நண்பர் வட்டத்திற்குள் ஆவணப்படத்தின் மூலம் வந்து போவதால்தான் அந்தப் புரட்சி வீரர்களுக்குரிய சிறப்பை ரசிகர்கள் அளிக்கின்றனர்.

தகவல் புரட்சி நடைபெறும் மாநகரங்களில் ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கம் சனி, ஞாயிறு வார விடுமுறைகளில் இப்படித்தான் வாழ்கிறது அல்லது வாழ விரும்புகிறது. சுற்றிலும் சுயநலம் சூழ வாழ்ந்து கொண்டே இன்னும் மேலே செல்வதையே இலட்சியமாகக் கொண்டு நகரும் நிஜ வாழ்க்கையானது திரையில் தன்னை இவ்வாறு அறிந்துணர்வதில் வியப்பில்லை. இந்த வாழ்க்கையைத்தான் சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக அந்த வர்க்கம் கருதிக் கொள்கிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளைப் பேசி நடிக்கும் அந்த இளைஞர்கள் ஊரைச் சுற்றியவாறு கேலி பேசித் திரியும் தங்களது அற்பவாழ்க்கை குறித்து எள்ளளவேனும் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே நல்லவர்கள் எனவும் தங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது மட்டும் நல்லதல்ல என்று அதையும் மேலோட்டமாக பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்தியவாறு பேசிக் கொள்கிறார்கள். கோப்பையில் இருக்கும் மது தீர்வதற்குள் மாதவன் இறந்துவிட உடனே மந்திரியைக் கொன்று தியாகியாகிறார்கள்.

அந்த மந்திரிகூட மக்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியலில் பல படிகளைத் தாண்டி மந்திரியாகி அப்புறம்தான் ஊழல் செய்ய முடியும். ஆனால் இந்த மேட்டுக்குடி இளைஞர்களுக்கு இந்தப் படிநிலைகள் ஏதும் இல்லை. ஒரே அடியில் தலைவர்களாகி விடுகிறார்கள். இந்தப் படத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் இதுதான். எள்ளளவும் சமூகப் பொறுப்பற்று வாழும் மேட்டுக்குடி வர்க்கம் சமூகத்துக்குப் பொறுப்பான அரியணையில் தன்னை அமரவைத்து முடிசூட்டாததினால்தான் சமூகம் சீரழிவதாகக் கருதிக் கொள்கிறது.

இந்தக் கருத்துக்களை முதல்வன், அந்நியன் படங்கள் முதல் ஹிந்துப் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதும் ஓய்வு பெற்ற பார்ப்பன ஆதிக்க சாதி அரசு அதிகாரிகள் வரை எங்கும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். படங்களில் கூட நாயகன் வில்லனை அழிப்பதற்கு பல்வேறு காரணங்கள், நியாயங்கள், சம்பவங்கள் சொல்லப்பட்டு கடைசியில்தான் அநீதி ஒழிந்து நீதி வெற்றி பெறும். மேட்டுக்குடி வர்க்கத்திற்கு அந்தப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான் அதற்கு ஜனநாயகம் பிடிப்பதில்லை. பாசிசமும், சர்வாதிகாரமும் மேட்டுக்குடி வர்க்கத்திற்குப் பொருந்திவருகிற அரசியல் கோட்பாடுகள். எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் அருண்ஷோரி முதல் துக்ளக் சோ வரை பல அறிவாளிகளைக் கூறலாம். படத்தில் தங்கள் வட்டத்தின் மகிழ்ச்சி குலைந்துபோன ஒரே காரணத்திற்காக மட்டும் உடனே துப்பாக்கி தூக்குகிறார்கள். இல்லையேல் அந்தக் கைகளில் பீர் பாட்டில் மட்டும் இருந்திருக்கும்.

தற்போது தேசியப் பத்திரிக்கைகளில் அடிபடும் ஜெசிகாலால் விவகாரத்தைப் பாருங்கள். மனுசர்மா ஹரியானா காங்கிரசு மந்திரியின் மகன், விகாஷ் யாதவ் உ.பி. தாதா டி.பி. யாதவின் மகன், அமர்தீப் சிங், அலோக் கன்னா இருவரும் கோகோ கோலாவில் மானேஜர்கள்; இந்த நண்பர் வட்டம் 1999இல் ஒரு நள்ளிரவில் மதுவருந்த டாமரின்ட் கோர்ட் எனும் பாருக்கு செல்கிறார்கள். மது பரிமாறும் ஜெசிகா லால் நேரமாகிவிட்டது என்று மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்கின்றன. உடனே மனுசர்மா தனது ரிவால்வரால் ஜெசிகாவைச் சுட்டுக் கொல்கிறான்.

சுமார் 100 பேர் முன்னிலையில் நடந்த இந்தப் படுகொலைக்கான வழக்கு ஆறு ஆண்டுகளாய் நடந்து தற்போது குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நண்பர் வட்டத்திற்கும் படத்தில் வரும் அமீர்கானின் நண்பர் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் அந்த பாருக்குச் சென்று மது மறுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? துப்பாக்கி இல்லாமல் போயிருந்தால் வெறும் கைகலப்பில் முடிந்திருக்கும். மனுசர்மாவைக் காப்பாற்ற பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் மட்டுமின்றி சம்பவத்தின் போது உடன் சென்ற நண்பர்களும் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். இங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத்தானே செய்கிறார்கள். இந்த நட்புவட்டங்களின் மகிழ்ச்சிகளில் ஒன்றில் மந்திரி குறுக்கிடுகிறான், மற்றொன்றில் மது பரிமாறும் பெண் குறுக்கிடுகிறாள், அவ்வளவுதான் வேறுபாடு.

படத்தில் புரட்சிகரமான டி.வி.யாக வரும் பிரணாய் ராயின் என்.டி.டி.வி. நிஜத்திலும் அப்படிக் காட்டிக் கொள்ள முயலுகிறது. ஜெசிகாவுக்கு ஆதரவாக பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தியா கேட்டில் அமைதியாக எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். 2 இலட்சம் பேர் என்.டி.டி.விக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்களாம். அதை எடுத்துக் கொண்டு பிரணாய் ராய் அப்துல் கலாமைப் பார்த்து நீதி வேண்டுமென கோரிக்கை வைத்தாராம். இதை அந்த டி.வி. ஏதோ மாபெரும் புரட்சி நடவடிக்கையாக சித்தரித்து நேரடியாக ஒளிபரப்புகிறது.

இதே பிரணாய் ராய் லாவோசில் நடந்த பொருளாதார மாநாட்டில் அனில் அம்பானி உள்ளிட்ட முதலாளிகளோடு “”உலக முதலாளிகளே இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வாருங்கள்” என்று டான்ஸ் ஆடியவர். பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது பரம்பொருளைக் கண்ட பரவசத்துடன் பேட்டி எடுத்தவர். புஷ்ஷூக்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தபோது கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர். இப்படிப் பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஜந்து தன்னை ஒரு போராளியாகக் காட்டிக் கொள்வதை என்னவென்று அழைப்பது?

ஜெசிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பேசுவதிலும் ஒரு நடுத்தர வர்க்க அரசியல் இருக்கிறது. ஜெசிகா லால் ஒரு பெண், அதிலும் ஒரு விளம்பர மாடல். இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட சோகத்தை மாநகரத்து நடுத்தர வர்க்கத்தின் சோகமாக மாற்றுவதில் ஊடக முதலாளிகளுக்குப் பெரிய பலன் இருக்கிறது. ஜெசிகாவிற்குப் பதில் மதுக்கோப்பை கழுவும் ஒரு பையன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.

இந்தப் பத்தாண்டுகளில் பம்பாய்க் கலவரம், குஜராத் கலவரம், மேலவளவுப் படுகொலை, ரன்பீர்சேனா அட்டூழியங்கள் என்று நீதி கிடைக்காத சம்பவங்கள் எத்தனை இருக்கின்றன? அதற்கெல்லாம் என்.டி.டி.வி இயக்கம் எடுக்கவில்லை. குடியரசுத் தலைவரைப் பார்க்கவில்லை. படத்திற்கு கோக் போல ஸ்பான்சர் செய்திருக்கும் அந்த டிவி., திரையில் வரும் காட்சிகளைப் போல நிஜத்தில் காட்டிக் கொள்வதற்கு ஜெசிகாவின் வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. கூடவே இரண்டு இலட்சம் எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பிய அந்த நடுத்தர வர்க்கமும் தன்னை மாபெரும் சமூகப் போராளியாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோழைகள் எவரும் குறைந்தபட்சம் மனுசர்மாவைத் தூக்கில் போடவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.

ஜெசிகா லாலுக்கு நீதி வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கோரிக்கை. பொல்லாத நீதி! ஆக இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள் என்பதை ஜெசிகாவின் வழக்கு என்ற உண்மை எடுப்பாக விளக்கி விடுவதால், நாம் தனியாக விளக்குவதற்கு ஒன்றுமில்லை.

____________________________________________________________

– புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2006
____________________________________________________________

இது போன்ற எண்ணிறந்த முக்கியமான திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதியிருக்கும் புதிய கலாச்சாரம் மற்றும் வினவு கட்டுரைகள் இதுவரை இரண்டு புத்தகங்களாக வந்திருக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

புதிய கலாச்சாரம் இதழில் வந்த திரைப்பட விமரிசனங்கள், பிப்ரவரி, 2004. விலை ரூ. 70.00

  • நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு, விலை ரூ. 110.00

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்