Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 808

மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

பொருத்தமில்லாத மனிதர்களோடு
பொருந்திப்போக முடியாமல்
வருத்தத்தோடு நிற்கிறது
இருசக்கர வாகனம் ஒன்று.

மிச்சம் வைக்காமல்
மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
புது மாப்பிள்ளையின்
சுரண்டல் விரல்கள் பட்டவுடனேயே
அவமானத்தால் ஆடிப்போகிறது அதன் கைப்பிடி!

மாமனார் கழுத்தறுத்து மாட்டிக்கொண்ட
மைனர் செயின், பிரேஸ்லெட்டின்
தங்கக் கவுச்சி தாங்காமல்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வண்டிச்சாவி.

ஓசியில் வாங்கியவன்
உட்கார்ந்து ஓட்டப்போவதை நினைத்து
கோபத்தில் பல்லைக் கடிக்கிறது டயர்.

சுயமரியாதை உணர்ச்சியில்லாதவன்
கால்பட்ட அருவருப்பில்
விலகித் துடிக்கிறது கியர்.

சூடு, சுரணையின்றி
வரதட்சணையாக வண்டியைக் கேட்டவனின்
மன வண்டையைத் தாங்காமல்- சூடேறி
குந்தியவனுக்கு எதிராக
குமுறுது என்ஜின்.

வரதட்சணை மாப்பிள்ளைக்கு
சூடுவைக்க முடியாமல்
கேடுகெட்டு போனதாய்
புலம்பும் கார்ப்பரேட்டுக்கு
போய் புத்திசொல்லி
ஆத்திரத்தைக் கிளப்பும் பெட்ரோல்.

அடுத்தவன் காசில்
அனைத்தையும் அடைய நினைப்பவனின்
குரூரம் பார்த்து
குலை நடுங்கி
தன்னை மறைத்துக் கொள்கிறது வண்டிச் செயின்.

இந்த வெட்கம் கெட்ட பயலுக்கு
“எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்’ வேற – என்று
நான்கு கண்களால்
“இன்டிகேட்டர்’ ஜாடை காட்டுது.

அடுத்தவரிடமிருந்து பிடுங்குவதற்கு
ஒரு அளவே இல்லையா?

வரும் கோபத்தில்
அப்படியே! பிடுங்கிக் கொண்டு போய்விடலாமா – என
வால்டியூப்
காற்றோடு கலந்தாலோசிக்கிறது.

தட்டுமுட்டுச் சாமான்களோடு
பெண்ணையும்,
தள்ளிக் கொண்டு போகிறவனின்
தந்திரமறிந்து
நட்டும் போல்ட்டும் கூட
கெட்ட வார்த்தையால் திட்டுது.

உண்மையில்
இவன் வண்டியை மணக்கவே… அதாவது
என்னை மணக்கவே
பெண்ணை மணந்தான் – எனும்
உண்மை புரிந்துவிட,
சகமனிதனை உறிஞ்சி வாழும்..
சகல மனித மாண்பையும் உதிர்த்து வாழும்..
இயந்திர இதயத்தை,
சுமக்க முடியாமல்,
சகிக்க முடியாமல்,
சைலன்சர் வழியாக
காறித்துப்புகிறது வண்டி!

இப்படியொரு வண்டி
உங்களுக்குத் தேவையா?

_____________________________________

–    துரை. சண்முகம்
_____________________________________

பெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! – ஒலிப்பதிவு !

446

vote-012பெரியார்தாசன் இசுலாத்திற்கு மதம் மாறியது அவரது சொந்த விடயமென்றாலும், தமிழகம் அறிந்த நாத்திக, பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரகர் என்பதனால் “ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.

சமீப ஆண்டுகளில் சேதுக்கால்வாய் விவகாரம், சங்கராச்சாரி கைது, தில்லை போராட்டம் போன்றவை தொடர்பான ம.க.இ.கவின் கூட்டங்களில் அவர் உரையாற்றியிருக்கிறார்.

2002லிருந்து அவர் குர்ஆனை ஆய்வு செய்ததாக இப்போது கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக ம.க.இ.க தோழர்களிடம் அவர் ஏதும் உரையாடியதில்லை. பெரியார்தாசன் குறித்து வேறு விதமான விமரிசனங்கள் சிலருக்கு இருந்தாலும் யாரும் அவரது மத எதிர்ப்பு பார்வை மீது ஐயம் கொண்டதில்லை. எனவே அவரது இந்த முடிவு பலருக்கும் விடை தெரியா புதிர்தான்.

தோழர் சாகித் இந்தப் பிரச்சினைக்காக அவரது சொந்த முயற்சியில் பெரியார் தாசன் என்ற அப்துல்லாவிடம் மதம் மாறிய காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரியார்தாசனிடம் சாகித் எழுப்பும் கேள்விகளுக்கு அப்துல்லா அளிக்கும் பதில்கள் எப்படியிருக்கின்றன என்பதறிய ஒலிப்பதிவை கேளுங்கள்.

–          வினவு

_______________________________________________________

“மக்காவுடைய மண்ணை எடுத்து

சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி

சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை

அது பொம்மை இல்ல பொம்மை இல்லை

மனிதன் என்பது உண்மை.”

களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது. அதுபோல ஏதோ ஒரு காரணத்தால் அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன், கேள்விமேல் கேள்விகளால் உருக்குலைந்து விடாமலிருக்க இசுலாமிய அமைப்புகள் இனி யாராக இருந்தாலும் முன் கூட்டியே கேள்விகளை அனுப்பினால்தான் பெரியார்தாசனின் பேட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ஒப்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறிய அடுத்த நாளே எஸ்.எம்.எஸ்.களும் இ.மெயில்களும் என்னை துளைத்துவிட்டன. வீடியோவும் பலரால் அனுப்பப்பட்டது. பார்த்ததும் அதிர்ச்சிதான். இசுலாமியராக மாறியதற்கான வலுவான காரணங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்த்ததில் இசுலாமியர்களின் வழமையான “இறைவன் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன், மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டுண்ணு நம்புகிறேன், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றால், இல்லை என்று சொன்னாலும் இருக்கு என்று சொன்னாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, கடவுள் இருந்துவிட்டால் நம்பிக்கை கொள்ளதாவன் நரகத்திற்கு போகனுமே” போன்ற சொத்தை வாதங்களை அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஆனாலும் “2002லிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன், நபியின் வாழ்க்கையை படித்தேன், அதனால் இசுலாத்திற்கு வந்தேன்” என்றும் சொல்வதால் அவர் அப்துல்லாவாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறியதற்கான நமது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பேட்டி எடுக்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டது.

ஏதோ ஒரு வெளிநாட்டிலுள்ள ஒருவராக இருந்திருந்தாலும், பலரால் அறியப்படாத, பலருக்கு நாத்திகத்தை பிரச்சாரம் செய்யாத ஒரு நபராக இருந்திருந்தாலும் வழமையான ஒன்றாக கருதி சும்மா இருந்துவிடலாம். ஆனால் தர்க்கவியல் படித்தும், பிரச்சாரம் செய்தும் பல ஆயிரக்கணக்கானோரை நாத்திக வழிக்கு கொண்டு வந்த பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லாமலிருக்க முடியாது. புத்தமதத்திற்கு இவர் வி.என்.சித்தார்தாவாக மாறியதும், புத்தருடைய “தம்மம்” என்ற நூலைப்பற்றி டாக்டர் அம்பேத்தார் எழுதிய “புத்தரும் அவருடைய தம்மமும்” என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். புத்தரின் அந்தநூல் சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பே இயற்றட்டப்பட்ட சிறந்த நூலாகும். அப்படிப்பட்ட அவர் தலைவிதி தத்துவத்தை போதிக்கும் மதங்களில் ஒன்றான இசுலாத்திற்கு சென்றது ஏன்?

நான் பிரபலமில்லாத ஒருவன் என்பதால் “நாளைவிடியும்” பத்திரிகைக்காக அவரிடம் பேட்டியெடுக்க அப்பத்திரிக்கையின் ஆசிரியர் அனுமதியுடன் முயற்சி செய்தேன். அது போல பெரியார்தாசனுக்கு இப்பொழுதுள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் (எஸ்.எம்.எஸ்.ஆல் துளைத்தவர்கள்தான்) பேட்டி எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சித்தேன்.

தற்சமயம் பெரியார்தாசனின் பிரச்சார திட்டங்களை ஒழுங்கமைப்பவர் என்று சென்னை பூந்தமல்லிக்கு அருகில் நூம்பல் என்ற இடத்தில் உள்ள காசிபுல் ஹுதா என்ற அரபிக்கல்லூரியின் பேராசிரியர் திரு ஜலீல் என்பவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் “கேள்வி என்ன? எந்த நோக்கத்திற்காக கேட்கப்படுகிறது என்று முன்கூட்டியே சொன்னால்தான் பேட்டிக்கான நேரம் ஒதுக்கப்படும்” என்று கறாராக கூறிவிட்டார். “முன்கூட்டியே கேள்வியைச் சொன்னால், நீங்கள் பதில் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நாங்கள் பதில் பெறுவதாகத்தானே இருக்கும்” என்று கேட்டபோதும் “அப்படியல்ல, இருந்தாலும் அதற்கு மாற்றும் இல்லை என்று கூறிவிட்டார்.

2002-லிருந்து 8 வருடமாக குர்ஆனை ஆய்வு செய்தவருக்கு முன்கூட்டியே என்ன கேள்வி என்று தெரியவேண்டும் எனக் கூறுவது நமக்கு சந்தேகத்தை உருவாக்கியது எனினும் பரவாயில்லை கேள்வியை முன்கூட்டியே கொடுப்பதனால் மட்டும் இவர் அறிவு பூர்வமாக பதில் கூற முடியாது என்பதால் கேள்விகளை தொலைபேசி மூலமாக சொல்லிவிட்டோம். ஆனாலும் இரண்டு நாளாக பதில் ஏதும் கிடைக்காததால் மீண்டும் திரு.ஜலீலை தொடர்புகொண்டதில் பெரியார்தாசன் மறுத்து விட்டதாகவும் மேலும் பெரியார்தாசன் புத்தமதத்திற்கு போனது, மற்றும் குர்ஆன்களை ஆய்வு செய்து அடுக்கி வைத்துள்ளது, போன்றவர்களை எல்லாம் குறிப்பிட்டு, “அவர் அறிவாளிதான் ஆனாலும் விவாதங்களை தவிர்க்க விரும்புகிறார்” என்பதுபோல் பதில் கூறினார். (அதற்கும் என்னிடம் தொலைபேசி உரையாடலின் பதிவு உள்ளது).

இவரிடம் தொடர்பு கொள்வதற்கு முன்தினம் பலமுறை தொலைபேசியில் முயற்சி செய்தும் ஜலீல் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் பெரியார்தாசனிடமே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அது என்னவென்று இந்த ஆடியோவைக் கேளுங்கள். அவரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளும் இத்துடன் உள்ளது. படித்துக் கொள்ளுங்கள்.

பெரியார்தாசனிடம் உரையாடிய மறுநாள் கோவை குர்ஆன் அறக்கட்டளையின் சார்பாக குர்ஆனின் புதிய பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. அதில் என்னுடைய முதல் கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார்.

“சிலபேர் நம்மிடம் மனிதனை களிமண்ணால் படைத்ததாக குர்ஆன் சொல்கிறதே என்று கேட்கின்றனர். களிமண்ணில் படைத்ததாக குர்ஆன் சொல்லவில்லை. களிமண்ணை சுட்டு படைத்ததாகவும் கேட்கின்றனர். குர்ஆனில் எங்கேயும் சுட்டதாக வரவில்லை. களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தான் என்றுதான் குர்ஆன் கூறுகிறது” என்று உரையாற்றியுள்ளார். இப்பேச்சின் ஆடியோ இன்னும் வெளிவரவில்லை.வந்ததும் வாசகர்களுக்கு வழங்கப்படும். அவர் சொன்னது சரிதானா என்பதை கேள்விகளில் உள்ள குர்ஆன் சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இருந்தாலும் இவரின் இந்த மதமாற்றத்திற்கு ஏதேனும் வலுவான காரணமில்லாமல் இருக்க முடியாது. ராகுல் சாங்கிருத்தியன் போல் தன்னையும் கருதிக்கொண்டு, புத்தமதத்திற்கு சென்று புத்தமதத்தை நன்கு அறிந்துகொண்டு புத்தரின் நூலை இவர் மொழிபெயர்த்தது போல இசுலாத்திற்கு சென்று இசுலாத்தை நன்கு தெரிந்து கொண்டு இசுலாத்தைப்பற்றிய தமது ஆய்வை எழுதலாம் என்று சென்றிருப்பாரோ?

ஆய்வு செய்தே இசுலாத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் இவர் “நான் புதுசு எனக்கு தெரியாது மௌலவிகளிடம் கேளுங்கள்” என்றெல்லாம் முரண்பாடாக கூறுகிறார். எனவே நாத்திகத்தை வீழ்த்திவிட்டது இசுலாம் என்று இசுலாமியர்கள் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை என்பதற்கு அவரது உரையாடலே சான்றாக உள்ளது.

______________________________________________________

அவரிடம் கேட்க முயற்சிக்கப்பட்ட கேள்விகள்:

பெரியார் தாசனாக இருந்து ஆப்துல்லாவாக மாறியுள்ள தாங்கள் 2002-லிருந்து குர்ஆனை ஆய்வு செய்து இசுலாமிய மதமே  சரியான மதம் என்று முழுவதுமாக நம்புவதாக கூறியுள்ளீர்கள். குர்ஆன் கூறும் சில வசனங்களுக்கான எமது கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?

  1. அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.

அ)   களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்த வசனம் 38;71

ஆ)  களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள்  6;2,  22;5,  23;12,  30;20,  32;7, 33;11,  38;76

இ)   ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம்   37;11

ஈ)   அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறிய வசனங்கள்  15;26,  15;28,  15;33

ஊ)  அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறிய வசனங்கள்  15;29,  38;72

அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?

  1. ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.

இதற்கான குர்ஆன் வசனங்கள்  20; 118 மற்றும் 121,  70;20, 22, 27

அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.

இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21

ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?

  1. பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.

ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

  1. கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.

இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

  1. “குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

_________________________________________________

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

____________________________________________

–   சாகித்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

265

vote-012“என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை” என்ற படாடோபமான தலைப்பின கீழ், சீமாட்டி லீனாவையும் அவருடைய கவுஜையையும் காப்பாற்ற, கருத்துரிமைக் காவலர் அ.மார்க்ஸ் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு கூட்டம் நடந்தது.

போலீசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட (இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த்து) ஒரு புகார், சில இணைய தளங்களில் லீனாவின் எழுத்துக்கு எதிராகப் பரவிவரும் கலாச்சார அடிப்படைவாதம் – இதுதான் தமிழகத்தில் படைப்பாளிகளைச் சூழ்ந்து வரும் பேராபத்தாம். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

சீமாட்டி லீனாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எழுத்தாளர் உலகில் ஏற்கெனவே பிரசித்தம் போலும்! பலரும் கழட்டிக் கொள்ளவே, விவகாரம் அ.மார்க்சின் மானப்பிரச்சினையாகி விட்டது. ஒண்ணரை கவிதை எழுதினவன், சரக்கடித்து விட்டு மூளையிலிருந்து கவிதை வெளியேறுவதற்காக காத்திருப்பவன், படைப்பாளிகளுடன் சரக்கைப் பகிர்ந்து கொண்டதனாலேயே படைப்பாளி ஆனவன்.. உள்ளிட்ட ஒரு லிஸ்டு தயாராகி விட்டது.

அதில் சில பேரைத் தொடர்பு கொண்டு “ஐயா இது நீங்க எழுதின கவிதைதானா” என்று கேட்டோம். அவர்களோ “எனக்குத் தெரியவே தெரியாது. இது மண்டபத்தில எவனோ செய்த சதி” என்று பதறினார்கள். இப்படி ‘அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்’ பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், முக தாட்சண்யத்துக்கு அஞ்சி வந்து விட்டு, நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும்.  மீதி 50 பேர் ம.க.இ.க தோழர்கள், ஆதரவாளர்கள்.

கம்யூனிசத்தையும், அதன் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருந்த கவுஜைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்களும், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள். பதில் கிடைக்கவில்லை. அல்லக்கைகளின் ஊளைச்சத்தமும், வசவுகளுமே பதிலாகக் கிடைத்தன. ஆவேசமாக அடிக்க வந்தார் சீமாட்டி லீனா.

இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.

கூட்டத்தலைவர் அ.மார்க்சுக்கோ, அரங்கத்தின் நாற்காலிகள், ஜன்னல்களுக்கோ, மிக முக்கியமாக கவுஜாயினி லீனாவின் மேக்கப்புக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. “கலாச்சார போலீசிடமிருந்து” படைப்பாளிகளைப் பாதுகாப்பதற்காக வரவழைக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைப் போலீசுக்கு ‘படைப்புச் சுதந்திரத்தை’ காப்பாற்றத் தடியடி நடத்தும் வேலையும் இல்லாமல் போயிற்று. இது கதைச்சுருக்கம்.

தோழர்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்பு, ம.க.இ.க காரர்கள் செய்ததிலேயே முட்டாள்தனமான காரியம் இதுதான்” என்று தோழர்களின் நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்தார் அ.மார்க்ஸ்.

அதென்னவோ உண்மைதான்.தோழர்களை அடிப்பதற்கு ஓங்கின லீனாவின் கையை அங்கேயே முறிக்காமல் வந்தது முட்டாள்தனம்” என்றுதான் அரங்கை விட்டு வெளியே வந்த பெண் தோழர்கள் குமுறினார்கள்.

என்ன செய்வது சீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் கூட இப்படித்தான் நடந்தது. கருவறையில் நுழைந்த தோழர்கள் பட்டாச்சாரிகளையும் கைத்தடிகளையும் நாலு தட்டு தட்டி உருட்டி விட்டார்கள். எவனாவது செத்துத் தொலைஞ்சால் அப்புறம் கருவறைப் பிரச்சினை கல்லறைப் பிரச்சினை ஆகி, காரியம் கெட்டு விடும் என்பதால், “அடி வாங்கினாலும் பரவாயில்லை. திருப்பி அடிக்க வேண்டாம்” என்று தோழர்கள் நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம்தான் பாப்பான்கள் தம் “வீரத்தை” காட்டினார்கள்.

அங்கே பாப்பான்கள் காட்டிய வீரத்துக்கும் இங்கே படைப்பாளிகள் காட்டிய வீரத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான்.

இருந்த போதிலும், அரங்கத்தில் ஊளையிட்ட அல்லக்கைகளும் தோழர்கள் வெளியேறிய பின்னர் மேடையில் வீரவசனம் பேசியவர்களும் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரப் படாதீர்கள். அடுத்த கூட்டத்தில் சந்திக்காமலா போய்விடுவோம்?

இனி அ.மார்க்சிடம் வருவோம். “ம.க.இ.க வினர் முட்டாள்கள்” என்ற சான்றிதழை வழங்கியதற்காக அ.மார்க்சுக்குப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்கிறார் ப.சிதம்பரம். இதைவிட கவுரவமான சான்றிதழை மாவோயிஸ்டுகளுக்கு யாரேனும் தர இயலுமா? ஒருவேளை சிதம்பரம் மாதிரியான நபர்கள் மாவோயிஸ்டுகளை “தேசபக்தர்கள்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மானக்கேடாக இருந்திருக்கும் – யோசித்துப் பாருங்கள்!

“மார்க்சியமே முட்டாள்தனமான சித்தாந்தம்” என்பதுதான் அறிஞர் அ.மார்க்சின் கருத்து. எனவே முட்டாள்கள்களாகிய நாங்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் வியப்பில்லைதானே!

இனி, முட்டாள்கள் அறிவாளிகளை எதிர்கொண்ட முறை பற்றியும் அறிவாளிகளின் நடத்தை பற்றியும் பார்ப்போம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே கூடியிருந்தவர்களிடம் துண்டறிக்கையை விநியோகித்திருந்தார்கள் தோழர்கள். இந்து மக்கள் கட்சியை எதிர்த்து நடத்தப்படுவதாக கூறப்படும் இந்தக் கூட்டம், உண்மையில் ம.க.இ.க வை எதிர்த்து நடத்தப்படுவதுதான் என்பதை அந்த துண்டறிக்கையில் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் கூட்டத்தினருக்கும் பேச்சாளர்களுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

அ.மா பேசத் தொடங்கினார். “கருத்துரிமை, படைப்பு சுதந்திரம் இந்து மக்கள் கட்சி” என்று சுற்றி வந்தாரே தவிர இந்தக் கூட்டம் ம.க.இ.க வைக் குறி வைத்தே நடத்தப்படுகிறது என்பதை மழுப்பினார், மறைத்தார்.

இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்டு ச.தமிழ்ச்செல்வனும் தனது அறிக்கையில் பெயர் சொல்லாமல் ம.க.இ.கவை தாக்கியிருந்தார். கூட்டம் பற்றித் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் வினவு தளத்தை எதிர்த்தும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் அந்த உண்மையை அவர் கூட்டத்தில் பேசவில்லை.

மார்க்ஸ் பேசி முடித்தவுடன் ஒரு தோழர் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஊளைச் சத்தம்தான் பதிலாக வந்த்து. யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று உரைப்பது மாதிரி இன்னொருவர் கேட்டார். பிறகு அல்லக்கைகள் தலைவர் நாற்காலியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டம் தொடர்ந்தது. அடுத்து ராஜன் குறை பேசினார். உலகளவில் வளர்ந்து வரும் முதலீட்டியம்தான் இப்படிப்பட்ட தடை கோரும் போக்குக்கு காரணம் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்தார். சீமாட்டி லீனா இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஆகிவிட்டார். அவருடைய கவுஜையில் உதிர்ந்த மயிர் உலக முதலீட்டியத்தையே ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறதென்றால் சும்மாவா?

அப்புறம் “திராவிட இயக்கம் புராணங்களை எதிர்த்தது. ஆனால் புராணப்படங்களுக்கு தடை கோரவில்லை. சும்மா வுட்டுட்டா அது தானா செத்து போயிடும்” என்றார். இப்போது அவரது கூற்றுப் படி சீமாட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கவிதை புராணக்குப்பையாகி விட்டது. ஒரே நேரத்தில் ஒரே கவிதையை ஒரே வாசகன் எப்படி பன்முக வாசிப்புக்கு உள்ளாக்க முடியும் என்பதற்கு ராஜன் குறையின் உரை ஒரு எடுத்துக்காட்டு. இந்த தெளிவுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி எழுப்பினார்கள் தோழர்கள்.

“இப்ப லீனாவின் கவிதைக்கு நாங்கள் தடை விதிக்க சொன்னோமா?” “நாங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்றார்கள். “25 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அப்புறம் 26 அவதாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார் அ.மார்க்ஸ். நாங்கள் எங்கள் கேள்வியை கேட்டு விடுகிறோம். அப்புறம் 25 பேரும் விளக்கம் சொல்லட்டும் என்றார்கள் தோழர்கள்.

மீண்டும் அல்லக்கைகளின் கூச்சல். குழப்பம். பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.

உடனே சீறியெழுந்த சீமாட்டி லீனா, தோழர் கணேசனை அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் தோழர்கள் சீமாட்டிக்கு உரிய மொழியில் பதில் அளிக்க, கையில் செருப்பை எடுத்தனர். படைப்பாளிகள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டிருந்த சில லும்பன்கள் வசவு மாரி பொழிந்தனர். லீனாவின் கணவர் ஜெரால்டு ஆத்திரமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தார். “உங்க மனைவி லீனா எது வேணா எழுதுவாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா விளக்கம் சொல்லக்கூட மாட்டாங்களா?” என்று ஜெரால்டைக் கேட்டார் ஒரு தோழர். ஏண்டா, தொழிலாளிய கை நீட்டி அடிப்பீங்க. கேட்டா படைப்பாளி உரிமையா? இங்கயே உரிச்சு தொங்க விட்றுவோம்” என்றார் இன்னொரு தோழர்.

கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது நோக்கமல்ல என்பதால், ஒரு சிலரைத் தவிர மற்ற தோழர்கள் யாரும் இதில் தலையிடக் கூடாது என்று நிறுத்தப்பட்டிருந்தனர். அடிப்பதற்கு வந்த லீனாவின் கை தோழர் கணேசன் மீது பட்டிருந்தால், கணக்கு அங்கேயே முடிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு நடக்காமல் சில தோழர்களே தடுத்து விட்டதால், சீமாட்டியும் அல்லக்கைகளும் பிறகு வீர வசனம்  பேசும் வாய்ப்பு பெற்றனர்.

அனுபவத்தை சொல் என்று கேட்டவுடனே அம்மையாருக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? அனுபவம்னா எந்த அனுபவம்னு அம்மா புரிஞ்சிகிட்டாங்க? அனுபவம்கிறது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையெல்லாம் கலக எழுத்துல உண்டா? அனுபவத்தை சொல் என்றுதானே கேட்டார். உலகின் அழகிய முதல் பெண்ணின் மூஞ்சியில் ஆசிட்டா ஊற்றினார். ஏன் துடிக்கவேண்டும்?

உண்டுன்னா உண்டுன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எதுக்கு தமிழ் சினிமா கற்புக்கரசி மாதிரி சாமி ஆடுறே?

பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.

பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.

நீ “யோனிமயிரு -உபரி மதிப்பு”ன்னு எழுதினா அது கருத்துரிமை. “அனுபவத்தை சொல்லு”ன்னு கேக்குறவனுக்கு மட்டும் கருத்துரிமை கிடையாதா? அந்த உரிமை படைப்பாளிக்கு மட்டும்தான் உண்டா? எந்த ‘பார்’ல படைப்பாளிக்கு அடையாள அட்டை கொடுக்கிறீங்க?

கம்யூனிஸ்டெல்லாம் பொறுக்கின்னு நீ எழுதினா அது கவித்துவ வெளிப்பாடு. கம்யூனிஸ்டுக்கும் ஜிகாதிக்கும் ஒரே கொள்கை ஆண்குறின்னு எழுதினா அது மார்க்சியம் குறித்த அரசியல் விமரிசனம். உன் அனுபவம் என்ன ன்னு கேட்டா அது தனிநபர் தாக்குதலா?

கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.

பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?

ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, பெண் விடுதலைப் போராளிகள் பாரதிராஜாவிடமும் சேரனிடமும் பல்லிளித்து, அவர்களுடைய பாராட்டுக்கு புல்லரித்து, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

வியர்வை வழிய உழைத்து சம்பாதித்து, பல்லிளிக்காமல், எவனிடமும் ஃபண்டுக்கு கையேந்தி நிற்காமல், எவனுக்கும் முதுகு சொரியாமல், கணவனின் ஆணாதிக்கம் முதல் சமூகத்தின் ஆணாதிக்கம் வரை அனைத்துக்கும் எதிராகப் போராடி, போலீசு முதல் சிறை வரையில் அனைத்தையும் எதிர்கொண்டு வாழும் பெண்களுக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சீமாட்டிக்கு வழங்காமல், அந்தப் பெண்களின் கையிலிருந்து செருப்பை பிடுங்கி விட்டோம். பிறிதொரு முறை கட்டாயம் அந்த வாய்ப்பை வழங்குகிறோம். இப்போது விசயத்துக்கு வருவோம்.

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?

“உன்னுடைய கவிதைக்கு நீயே விளக்கம் சொல்” என்றுதான் ம.க.இ.க தோழர்கள் கேட்டார்கள். படைப்பின் உக்கிரமான  மனோநிலையில் வெளிப்பட்ட சாணிக்கு பொருள் விளக்கம் கூறுமாறு கோயில் மாட்டிடம் எப்படி கேட்க முடியாதோ, அதே போல படைப்பாளியிடமும் பிரதிக்கு விளக்கம் கேட்க முடியாது என்பது படைப்பாளிகளின் கொள்கை.

வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன் லீனாவின் கவிதை பற்றிய விமரிசனம் வெளியான பின்பு ஒருநாள், நடு ராத்திரி 12 மணிக்கு முழு போதையில் வினவக்கு போன் செய்து “உனக்கு கவிதை தெரியுமா?” என்று கேட்டார் செல்மா பிரியதர்சன். அடுத்தது ஷோபா சக்தி. “சரி படைப்பாளிகளே, அட்ரஸை சொல்லுங்கள். நேரில் வருகிறோம்” என்றோம். உடனே அவர்களுடைய போதை தெளிந்து போனை வைத்து விட்டனர்.

நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன். எழுதினதுக்கு விளக்கமும் சொல்லமாட்டேன் என்பதுதான் லீனாவின் கொள்கை. அங்கே கண்டனக் கூட்டம் நடத்திய படைப்பாளிகளின் கொள்கையும் அதுதான். இப்படி பேசுபவன் படைப்பாளியா, பாசிஸ்டா? அப்படியானால் ஒரு வாசகன் அவன் புரிந்து கொண்ட முறையில் உன் கவிதைக்கு எதிர்வினை புரிவதை தவிர்க்க இயலாது. அது அவனுடைய உரிமை.

அப்படி எதிர்வினை ஆற்றக் கூடாதாம். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்க வேண்டுமாம். வினவு தளத்தில் அதைத்தான் செய்தோம். ஆனால் அது வக்கிரமாம், தனிநபர் தாக்குதலாம், கலாச்சார அடிப்படை வாதமாம், கலாச்சார போலீசு வேலையாம். இதை எதிர்த்து கேஸ் போடுவேனென்றும் லீனா மிரட்டினார். கேஸ் போடுறதுக்கு முன்னாடி இந்தக் கண்டனக் கூட்டம்.

சரி, என்ன தனிநபர் தாக்குதல் என்று சொல். பதிலளிக்கிறோம் என்று துண்டறிக்கையில் கேட்டோம். அதற்கும் பதில் கிடையாது. அப்போ என்னதான் செய்ய வேண்டும்? அம்மாவும் படைப்புலக ஆதீனங்களும் சொல்கிறபடியும் அவர்கள் மெச்சும்படியும் விமரிசனம் எழுத வேண்டுமா? பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே!

கருத்தை கருத்தால் சந்திக்கணுமாம். தோழர் கணேசன் மேடையிலிருந்து அரிவாளையா காட்டினார்? “உன் அனுபவத்தை சொல்” என்று கருத்துதானே கூறினார். அம்மா எதுக்கு கையை ஒங்கினாங்க? அவுக கையத் தூக்கினாலும் படைப்பு. காலைத் தூக்கினாலும் படைப்பு. நாங்க வாயைத் தொறந்தால் கூட அது வன்முறையா?

செங்கடல் படப்பிடிப்பிலும் இதுதானே நடந்தது? தொழிலாளி தீபக்கை அடிக்க ஓங்கிய கை தானே இது? புட்டேஜைப் பத்தி எனக்குத் தெரியாது ன்னு தீபக் கருத்து சொன்னா, மறுநாள் உக்காந்து கவிதை எழுது. இல்லைன்னா போலீசுக்கு புகார் எழுது. பாசிஸ்டு இந்து மக்கள் கட்சிக்காரன் கூட புகார் தானே கொடுத்தான்.

சோபாசக்தியும் லீனாவும் செஞ்ச வேலை என்ன? டக்ளஸ் தேவானந்தாவின் காசு முதல் என்.ஜி.ஓ காசு வரை வகைவகையான எச்சில் காசுகளைத் தின்று வளர்ந்த கொழுப்புதானே, அவர்களை தீபக்கிற்கு எதிராக கை நீட்ட வைத்தது? அதே கை தானே ம.க.இ.க தோழருக்கு எதிராகவும் நீண்டது?

கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

முன்வரிசையில் வந்து அமர்ந்த எங்கள் பெண் தோழர்களைக் கண்டவுடன் விளிம்புநிலைப் புரட்சித் தளபதிகளுக்கு எப்படி வியர்த்த்து என்பதைத்தான் பார்த்தோமே. படைப்பாளின்னா என்னா பெரிய வெங்காயமா? இவுக எழுதுவாகளாம். கேட்டா விளக்கம் சொல்ல மாட்டாங்களாம். அடேங்கப்பா, என்னா வீரம்டா!

இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த புகாரையே எடுத்துக்குவோம். ஒருவேளை போலீசு கிரிமினல் வழக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். படைப்பாளி அம்மா கோர்ட்டில என்ன சொல்வாக?

படைப்புக்கெல்லாம் படைப்பாளி விளக்கம் சொல்ல முடியாதுன்னு நீதிபதிய அடிக்க கை  ஓங்குவாகளா? பெரிய வக்கீலாக வைச்சு, “அந்த வரிக்கு அப்பிடி அர்த்தமில்ல, இந்த வரிக்கு இப்படி அர்த்தம் இல்ல”ன்னு விளக்கம் சொல்லி வாதாடுவாக. இல்லன்னா உள்ளே போகணுமே. அந்த பயம்.

அதாவது யோக்கியமான முறையில் கேட்டால் திமிர்த்தனம் பண்ணுவது. அடி விழும் என்று தெரிந்தால் பம்முவது. இப்படி ஆளுகளுக்குப் பேரு படைப்பாளி இல்லை -மேட்டுக்குடி லும்பன். அந்த அரங்கத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இத்தகைய லும்பன் கும்பல்தான்.

ஐந்திலக்க சம்பளத்துக்காக பத்திரிகை முதலாளியிடம் எழுத்துரிமை, கருத்துரிமை, சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்த ஊடகத்துக் காரர்கள், பதவிக்காக அதிகாரத்திடம் தலை சொரியும் பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் மேடையில் பொளந்து கட்டினார்கள்.

சினிமாவில் சிரிப்பாய் சிரித்த சீனுக்கெல்லாம் சிங்காரம் பண்ணுவதற்கு, முக்கி முனகி வார்த்தை முத்தெடுக்கும் கவிஞர்களில் சிலர், “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா” என்று ஆர்மோனியப் பெட்டிக்கு எதிராகப்  போர்க்கொடி தூக்குவதில்லையா, அந்த மாதிரி காமெடி இது.

பணம், அதிகாரம், உதை இந்த மூன்றைத் தவிர வேறு எதற்கும், எப்பேர்ப்பட்ட உன்னதமான கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் இவர்களுடைய படைப்பிலக்கியம் பணியாதாம். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் -தான்.

இப்படிப்பட்ட அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளை ம.க.இ.க வுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைக்கும் தனது நோக்கத்துக்காக, லீனா மணிமேகலை அ.மார்க்சை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது அ.மார்க்ஸ் லீனா மணிமேகலையைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 54 நாயன்மார்ளைத் திரட்டுவதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஹோல்சேலாக படைப்பாளிகள் கிடைக்குமிடம் போலி கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்பதால், அங்கே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்கள். தீக்கதிரில் இந்தக் கூட்டத்துக்கு விளம்பரம் வெளிவந்தது. த,மு.எ.க.ச வின் கண்டன அறிக்கையும் வெளிவந்தது. தாமரையில் சீமாட்டியின் கவிதை வெளிவந்தது.  ஆனால் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, தேவ பேரின்பன் போன்ற முக்கியப் புள்ளிகள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அலப்பறைக்குத் தேவைப்படும் அல்லக்கைகளை மட்டும் சப்ளை செய்திருந்தார்கள்.

அ.மார்க்ஸ் லீனா கூட்டணி வகுத்திருந்த இந்த ம.க.இ.க எதிர்ப்பு போர்த்தந்திரத் திட்டத்தின் முக்கியமான கூறுகள் இரண்டு.

முதலாவதாக, “ம.க.இ.க வை எதிர்ப்பதுதான் உண்மையான நோக்கம் என்பது பச்சையாக வெளியே தெரிந்தால் படைப்பாளிகள் தயங்கக் கூடும் என்பதால், காமோஃபிளேஜ் ஆக இந்து மக்கள் கட்சி என்ற டுபாக்கூர் கட்சியை முன்நிறுத்தி, கூட்டம் சேர்ப்பது.

இரண்டாவதாக ம.க.இ.க வை ஒழித்துக் கட்ட வேண்டிய பகைவர்களாக கருதும் மார்க்சிஸ்டுகளை இந்த “சுதந்திரப் போராட்டத்தின்” காலாட்படையாக வளைத்துப் போடுவது.

மார்க்சிஸ்டு கட்சி அ.மார்க்சுக்கு தாய்க்கழகம். லீனாவோ கம்யூனிஸ்டு பாரம்பரியம் என்பதால் ரெண்டுமே அவருக்கு குடும்பக் கட்சி. அப்புறம் என்ன?

அ.மார்க்ஸ், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து கிளம்பி, மக்கள் யுத்தக் குழு, டாக்டர் ஐயா, பின் நவீனத்துவம், தலித் அரசியல், இஸ்லாம், மனித உரிமை… என்று வனமெல்லாம் சுத்தி வந்து கடைசியாக இனத்துல அடைஞ்சு விட்டாரா அல்லது மார்க்சிஸ்டுகள் அ-மார்க்சிஸ்டுகளாகி இவருடன் இணைந்து விட்டனரா என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எனவே இந்தக் கூட்டணியின் ரசவாதம் இப்போதைக்கு தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இது பெரிய ராஜதந்திரம்தான். ம.க.இ.க தோழர்கள் அன்றைக்கு அரங்கை விட்டு வெளியேறும்போது, “ம.க.இ.க பாசிசம் ஒழிக” என்று கூச்சல் போட்டார்கள் சில அல்லக்கைகள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியின் வீடியோ பதிவை புத்ததேவுக்கு அனுப்பி வைத்தால், ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கு ஆதரவாக கல்கத்தா படைப்பாளிகளைப் படை திரட்டுவதற்கு மார்க்சிஸ்டுகளுக்கு அது பெரிதும் உதவும்.

என்ன இருந்தாலும் சில காரியங்களை சில பேரால்தான் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஜெயலலிதா மட்டும் இல்லையென்றால், அத்வானி, ஜஸ்வந்த் சிங், சு.சாமி, மணி சங்கர் ஐயர், டி.என்.சேஷன், சங்கராச்சாரி, இந்து ராம் முதலான பல கொம்பாதி கொம்பர்களின் உணைமையான முக விலாசத்தை உலகம் அறிந்திருக்க முடியுமா? அந்த வகையில் லீனா ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

கவிதை என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கே தகுதியில்லாத ஒரு கழிவுக்கு “சுக்குமி – ளகுதி – ப்பிலி” என்று பதம் பிரித்து, படைப்பாளிகளை பொருள் விளக்கம் சொல்ல வைத்ததன் மூலம், தனது இரண்டாவது கவிதையில் ஒரு கம்யூனிஸ்டை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்துச் சென்றாரோ, அதே இடங்களுக்கு படைப்பாளிகளையும் அழைத்துச் சென்று, அவர்களுடைய வாயில் தன்னுடைய சொற்களை ஒவ்வொன்றாய் பிடுங்கிப் போட்டு, அவற்றை மென்று கட்டவிழ்ப்பு செய்யும் வேலையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

படைப்பு சுதந்திரத்தின் காவலர்கள் பிரதியை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிசத்தையும் கம்யூனிசத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் எழுத்து என்பதுதான் லீனாவின் கவுஜை பற்றி நாங்கள் கூறிய விமரிசனம். அவ்வாறு இல்லை என்றால் அதன் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கவுஜாயினி விளக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இதை தந்திரமாக இருட்ட்டிப்பு செய்து விட்டு, “தடை விதிக்கிறார்கள், போலீசு வேலை செய்கிறார்கள்” என்று திசை திருப்பினார்கள். அப்புறம் “இது ஆபாசம் என்பதுதான் இந்து மக்கள் கட்சியின் கருத்து. ம.க.இ.க வின் கருத்தும் அதுதான். ரெண்டு பேரும் பழைய பஞ்சாங்கங்கள், ஒழுக்கவாதிகள், எனவே ரெண்டு பேரும் ஒண்ணுதான்” என்று முத்திரை குத்தினார்கள்.

“யோனி, மயிரு என்று எழுதி விட்டால் பெரிய வீரம் போலவும், அதைக் கேட்டு ம.க.இ.க காரர்கள் பயந்து நடு நடுங்கி துடிப்பதைப் போலவும் அந்த சீமாட்டிக்கும் படைப்பாளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோருக்கும் ஒரு நெனப்பு.

மேற்படி சொற்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.

“யோனி, புணர்தல், குறி” என்பன போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த, ரீஜென்டான சொற்களுக்குப் பழக்கமில்லாதவர்களும், ஒரிஜினல் தமிழில் மட்டுமே இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களுமான பெண்களுடன், கூட்டத்திற்கு வந்திருந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்க வருகிறோம்.

ஆமாம், கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

சரக்கின் உன்மத்த நிலையில் குடிகாரனின் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலுக்கு அந்தக் குடிகாரனும், படைப்பின் உன்மத்த நிலையில் படைப்பாளியின் வாயிலிருந்து தெறிக்கும் சொற்களுக்கு படைப்பாளியும் பொறுப்பேற்க முடியாது என்ற உங்கள் “படைப்புத் தத்துவத்தை” அவர்களுக்கும் விளக்குங்கள்.

தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம். செலவுதான். நாங்கள் கலாச்சார போலீசு இல்லை என்று நிரூபித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது?

நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. “உரையாடலைத் தொடர்கிறோம்”. அவ்வளவுதான்.

இந்த வழிமுறையெல்லாம் முறைகேடானது என்று யாரேனும் பதறினால் அவர்களைக் கேட்கிறோம் – படைப்பாளிகளை “முறை”க்குள் அடைக்க முடியுமா? வீடு, அலுவலகம் என்ற “வெளி”க்குள் அடைக்க முடியுமா?

“வேண்டுமானால் நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த மாதிரி எதிர்ப்பெல்லாம் ‘மரபு’அல்ல” என்று யாரேனும் முனகலாம்.

அவர்களுக்கு எங்கள் பதில் இதுதான்.

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

121

vote-012“என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற ரொமான்டிக்கான தலைப்பில், சென்னை மாநகரத்தில்  ஒரு கூட்டம் நடக்கப் போகிறதாம். பெயர் வைக்கும் உரிமையை நமக்குக் கொடுத்திருப்பதால் ஒரே ஒரு சொல்லை மட்டும் இந்த தலைப்பில் சேர்க்க விரும்புகிறோம். “என் கவிதைகளுக்கு கம்யூனிசத்தை எதிர்த்தல் என்று பெயர் வை” என்பதே அவர்கள் சொல்லத் தயங்குகின்ற உண்மையான தலைப்பு.

எதற்கு இந்தக் கூட்டம்? உலகின் அழகிய முதல் பெண்ணும், பெண் படைப்பாளிகளின் ஏகப் பிரதிநிதியுமான லீனா மணிமேகலை எனும் பெயர் தாங்கிய சீமாட்டியின் கவிதைகளுக்காக அவர் மீது வழக்கு போடச்சொல்லி இந்து மக்கள் கட்சியின் யாரோ ஒரு தல போலீசில் பெட்டிசன் கொடுத்தானாம். அந்தப் புகார் மீது போலீசு எப்.ஐ.ஆர் கூடப் போடாமல், அந்தக் காகிதத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

போடாத அந்த வழக்கின் விளைவாக பெண் படைப்பாளிகளுக்கு நேரக்கூடிய ஆபத்து பற்றி மீடியாவில் கவரேஜ். ஏனென்றால் இந்து மக்கள் கட்சி ஸ்ரீமான்கள், கவிதாயினியாகிய ஸ்ரீமாட்டி ஆகிய ரெண்டு தரப்புக்குமே மீடியாவில் ஆள் உண்டு. இப்படியாக கமிசனர் ஆபீஸ் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புகார் வரலாற்று ஆவணமாகிவிட்டது.

பெண் படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து இணையம் வரைக்கும் வந்துவிட்டதாம். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒண்டியாக நின்று சமாளிக்கும் கலை தெரியாதவரல்ல சீமாட்டி. அவருக்கு பெரிய்ய்ய இடத்திலெல்லாம் ஆள் இருக்கிறது. என்ற போதிலும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 20, 30 அறிஞர்களை பக்கவாத்தியம் வாசிக்க வைத்தால், அப்படியே தானும் ஒரு பாடகியாக (படைப்பாளி) அரங்கேற்றம் பெற்று விடலாம் என்பது சீமாட்டியின் திட்டமாக இருக்கக் கூடும். பக்கவாத்தியக் கலைஞர்கள் இந்த மேட்டர் புரிந்துதான் போகிறார்களா என்று தெரியவில்லை.

சரி. மெய் உலகில் இந்து மக்கள் கட்சியால் ஆபத்து. மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? சீமாட்டியோ அவரது படைப்பு உரிமைக்கு காவல் நிற்கும் ஸ்ரீமான்களோ அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் அந்த கவித்துவ உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும்.

அந்தச் சொல் வினவு.

லீனா மணிமேகலை – ஷோபாசக்தி – செங்கடல் விவகாரம் குறித்து முதன்முதலில் வினவு தளத்தில்தான் எழுதினோம். தினத்தந்தி கிரைம் நியூஸ் பகுதியின் வாயிலாகத்தான் லீனா என்ற படைப்பாளி எங்களுக்கு அறிமுகமானார். செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின், தமக்குரிய பேட்டாவை ஒரு வாரமாக கேட்டும் பெறமுடியாத தொழிலாளிகள் படப்பதிவை எடுத்துச் சென்றுவிட்டனர்.  தீபக் என்ற தொழிலாளிதான் (காமெரா அசிஸ்டென்ட்)  இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, மேற்படி படைப்பாளிகள் தீபக்கைத் தாக்கினர். தீபக் போலீசிலும், தனது தொழிற்சங்கத்திலும் புகார் கொடுத்தார். மேலிடத்துத் தொடர்புகளைப் பயன்படுத்தி, சிறைக்குப் போகாமல் ஃபைன் மட்டும் கட்டிவிட்டு, எஸ்கேப் ஆனார்கள் இந்தப் படைப்பாளிகள்.

சம்பள பாக்கியோ வேறு வில்லங்கங்களோ இருந்தால், பாக்கியைக் கொடுக்கும் வரை படச்சுருளை லேப் இலேயே முடக்கி வைப்பது திரையுலகின் விதி. பிரசாத் லேப் முதலாளியாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். தொழிலாளியை அடித்த படைப்பாளிகள் அந்த முதலாளியை அடித்திருப்பார்களா?

அம்மையாரின் படைப்புத்திறனால் பாதிக்கப்பட்டவர் தீபக் மட்டுமல்ல, இன்னும் பலர் என்ற விவகாரமும் தெரிய வந்தது.  எழுதினோம். கேஸ் போடுவேன் என்று மிரட்டினார் சீமாட்டி. பணத்தைப் பறிகொடுத்த ஈழத்தமிழர் லீனா செய்த மோசடியை தேசம் நெற் தளத்தில் எழுதி, “தைரியமிருந்தால் கேஸ் போடு” என்றார். அப்புறம் அடிபட்ட தொழிலாளி தீபக்கின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்தது.

லீனாவும் ஷோபாசக்தியும் படவேலை முடிவதற்காக அமைதி காத்தார்கள். “ஆமா அடிச்சேன், 1700 ரூபாய் அபராதம் கட்டினேன். அடிச்சது சரிதான்” என்று தெனாவெட்டாய் திமிருடன் தனது தளத்தில் எழுதினார் ஷோபாசக்தி. அந்தக் கட்டுரையைத் தனது தளத்தில் வெளியிட்டு வன்மத்துடன் ஆமோதித்தார் லீனா.

மீண்டும் வினவுக்கு வருவோம். தீபக்கை அடித்த சம்பவத்தைப் பார்த்த பிறகுதான், ‘தோழர்’ லீனாவும், ‘தோழர்’ ஷோபாசக்தியும் சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் வெறி கொண்ட தொழிலாளி வர்க்க எதிரிகள் என்பது தெளிவானது. அம்மாவின் கவிதையில் வழியும் கொழுப்பும், திமிரும் தீபக்கின் மீது விழுந்த அடியில் வெளிப்பட்ட கொழுப்பும் வேறு வேறல்ல என்பதை அவரது கவுஜையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். இவையிரண்டுக்கும் உள்ள உறவை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அதைத்தான் தனிப்பட்ட தாக்குதல் என்று கூவுகிறார் சீமாட்டி.

__________________________________________

உக்கிரமான அல்லது உன்மத்தமான நிலையில் வெளிப்படுவதல்லவோ கவிதை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் லீனா குழுவினர் தொழிலாளிகளின் கன்னத்தில் எழுதிய கவிதையையும் (பிளஸ் ஆர் மைனஸ் மொழி) இணையத்தில் எழுதிய கவிதையையும், அதாவது உணர்ச்சி வெளிப்பாட்டின்  இந்த இரு களங்களையும் ஒன்றாக்கி விட்டோம் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.

புஷ் முதல் மார்க்ஸ் வரை அனைவரது வழித்தோன்றல்களும் ஆணாதிக்கப் பொறுக்கிகளே என்பது அவரது கருத்து. சுதந்திரப் பாலுறவு பற்றிய லெனினுடைய கருத்து எள்ளி நகையாடத்தக்கது என்றும் அவர் ஃபிராய்டைப் புணர்ந்து பாலியல் உறவு குறித்த தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் லெனினுக்கு அவர் வழங்கும் உபதேசம். தனது மாற்றுக் கருத்துகளை அம்மையார் தாராளமாக கருத்தியல் தளத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். மாறாக கவிதைக்குள் புகுந்து கொள்கிறார். மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம். அல்லது சீமாட்டியின் தரத்துக்குப் பொருத்தமான தந்திரம்.

_____________________________________________

சீமாட்டியின் கவிதையில் வழியும் கொழுப்பை அம்பலப்படுத்தினால் அது தனிப்பட்ட தாக்குதலாம். பிரதிகளை முடிவின்றி கட்டுடைக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கு கிடையாதா?

தெரியாமல்தான் கேட்கிறோம். லீனாவின் கவிதையை நாங்கள் விமரிசித்திருக்கிறோம். அதற்கு லீனாவும், லீனா ரசிகர் மன்றத்தினரும் பதில் சொல்லியிருக்கிறார்கள். மறுபடி நாங்கள் எழுதுவோம். நீயும் எழுது. இதில் எது சரி என்பதை படித்து வாசகன் முடிவுக்கு வரட்டுமே? இதில் படைப்பாளி சுதந்திரத்திற்கு என்ன ஆபத்து?

உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.

லீனாவின் மீதான விமரிசனம், பெண் எழுத்தின் மீதான கலாச்சார அடிப்படை வாதிகளின் தாக்குதலாம்! இப்போது குரல் கொடுக்காவிட்டால், இனி பெண்கள் எழுதவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமாம். அடேங்கப்பா, சீமாட்டி இப்போது பெண்குலத்தின் பிரதிநிதியாகிவிட்டார். “பெண்ணென்றும் பாராமல் என்னை… ” என்று டயலாக் பேசி முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றிய அம்மாவின் ஞாபகம்தான் வருகிறது.

படைப்பாளி என்று அழைத்துக்க கொள்ளும் ஒரு பாசிஸ்டு குழு தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு, இன்னொரு பாசிஸ்டு கும்பலான இந்து மக்கள் கட்சியை வில்லனாக சித்தரிக்கிறது. லீனா – இந்து மக்கள் கட்சி சண்டை என்பது அசப்பில் ஜெயல்லிதா பாரதிய ஜனதா சண்டை மாதிரியே இருக்கிறது. நல்ல தமாஸ்தான்.

இந்து மக்கள் கட்சி பெரியார் சிலையை உடைத்த போது ம.க.இ.க தோழர்கள் சீரங்கம் கோயில் வாசலில் ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ஓசூரில் மோதி மண்டை உடைந்து சிறை சென்றார்கள். பெரியார் தி.க காரர்கள் என்.எஸ்.ஏ வில் சிறை சென்றார்கள். சிதம்பரத்துல தீட்சிதனுக்கு காவல் நிற்கும் இந்து மக்கள் கட்சியை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் எங்கள் தோழர்கள்.

சீமாட்டி என்ன செய்தார்? ஜீன்ஸ் பேண்டும், சே குவேரா டி ஷர்ட்டும் போட்டு திரியுறதெல்லாம் புரச்சிப் பெண்ணா? அப்படிப்பட்ட புரச்சிதான் நூத்துக்கணக்கில ஸ்பென்சர் பிளாசாலயும், சிட்டி சென்டர்லயும், ஸ்கை வாக்குலையும், மாயஜாலிலும் திரியுதே? அந்த டி சர்ட் புரச்சிக்கும் இந்தக் கவுஜைப் புர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

அயோத்தி கேஸ் முதல் குஜராத் கேஸ் வரை எதிலும் எந்த இந்து பாசிஸ்டும் தண்டிக்கப்படவில்லை. அதைக் கேக்க ஆளைக்காணோம். இல்லாத கேசுக்கு கண்டனக் கூட்டமாம். விற்காத படத்துக்கு புரடியூசரே காசு கொடுத்து பொதுநல வழக்கு போடச்சொல்லி படத்தை புரமோட் செய்யும் கதை மாதிரில்ல தெரியுது?

_________________________________________________

ஒரு விநோதமான பேச்சாளர் கலவை இந்தக் கூட்டத்தில் உரையாற்றப் போகிறது. த.மு.எ.க.ச (மார்க்சிஸ்டு கட்சியின் கலை இலக்கிய அமைப்பு) முந்திக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறது.

இடது தீவிரவாதம் பேசும் ஒரு சிறு குழு இலக்கியவாதிகளை மிரட்டுவதாகவும், லீனாவையும் அப்படி மிரட்டியிருப்பதாகவும் கூறுகிறது அவர்களது கண்டன அறிக்கை. இராக் பற்றி கொச்சையாக எழுதிய ஒரு “படைப்பாளியிடம்” கவிதைக்கு பொருள் கேட்டோம். கவிதைக்கு அர்த்தம் கேட்பது குற்றம் போலும்! லீனாவைப் பற்றி எழுதியதோடு சரி. நேரிலெல்லாம் போகவில்லை. ஜெயலலிதா, லீனா மாதிரியான மாதர்குல மாணிக்கங்களை தனியாக சென்று சந்திக்கும் தைரியம் தீவிரவாதிகளான எங்களுக்கு கிடையாது. லீனாவின் சார்பில் லீனாவின் கவுஜைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் விளக்கம் கூறிவிடுமானால் மகிழ்ச்சியே.

“உபரி என யோனி மயிரை விளித்தாய்..
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்..”

என்பன போன்ற கவித்துவம் வாய்ந்த வரிகளைத் தெரிவு செய்து விளக்கம் சொன்னால் கூடப்போதும்.

கலாச்சார போலீஸ் வேலைக்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுதியாகப் போராடும் என்று தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நித்தியானந்தா என்ற பரிதாபத்துக்குரிய 32 வயது இளைஞனின் படுக்கையறை உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தமிழ்ச்செல்வன் என்பது நமக்குத் தெரியும். அந்த பாக்கியம் வரதராசனுக்கும் கிடைக்கவில்லை, பால் சக்கரியாவுக்கும் கிடைக்கவில்லை.

சிங்குர், நந்திக்கிராமில் மக்கள் மீது ஏவப்பட்டது கலாச்சார போலீசு இல்லையே. அது சட்டம் ஒழுங்கு போலீசு. அந்தப் போலீசு மார்க்சிஸ்டுகளின் தோழன்.

கூட்டத்துக்கு ஆதவன் தீட்சண்யா வருகிறார். அவர் சிங்கள பாசிசத்தின் நண்பர். அதாவது, டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர். ஷோபா சக்திக்கும் நண்பர். இருந்தாலும் கலாச்சார போலீசை எதிர்க்கும் ஜனநாயகவாதி. எல்லாம் ஓ.கே தான். ஆனால் வரதராசனை கட்சிக்காரனுக கொன்னுட்டாங்கன்னு ஷோபா சக்தி எழுதியிருக்கிறார். ஆதவனுக்கு அதுவும் ஓ.கேயா இருக்கலாம். கட்சிக்கு ஓ.கேயான்னு தெரியவில்லை.

அப்புறம், சி.பி.ஐயின் தேவ. பேரின்பன் வருகிறார். பின் நவீனத்துவத்தின் கம்யூனிச எதிர்ப்பு முகமூடியைக் கிழித்து எழுதியவர். இந்த கவிதைக்கு அவரிடம்தான் பொருள் விளக்கம் கேட்கவேண்டும்.

காமெடி என்னவென்றால் பெண் கவிஞர்கள் பலரை இந்தப் பட்டியலில் காணவில்லை. அவர்கள் லீனாவை பெண்ணென்று ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது படைப்பாளியென்று ஒத்துக்கொள்ளவில்லையா தெரியவில்லை. இது தொடர்பான உண்மை அ.மார்க்சுக்குத்தான் தெரியும் என்கிறார்கள். எனவே அவர் அதை கூட்டத்தில் விளக்குவார் என்று நாம் நம்பலாம்.

சீமாட்டியின் உரிமை நிலைநாட்டு விழாவில் மொத்தம் 54 பேர் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பத்திரிகையில் கண்டுள்ள பெயர்களைப் பார்க்கும் போது கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்கும் தாய்மாமன் லிஸ்ட்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவுங்கள்லாம் தெரிஞ்சு வாராகளா, இல்ல இதெல்லாம் இந்த சீனுக்கு தேவையான “அட்மாஸ்பியர்”னு முடிவு பண்ணி லிஸ்டை அச்சடிச்சுட்டாங்களா தெரியல. ஆளுக்கு 10 நிமிடம் என்று வைத்தாலும் 540 நிமிடம். அதாவது பத்து மணி நேரம். மாலை 6 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

இருந்தாலும், நாங்கள் எல்லோர் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. நாலைந்து பேரைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம். “ஏண்டா என்னா ஏதுன்னு மேட்டரே தெரியாம எதுன்னாலும் பத்துப்பேர் கூட்டமா வாரீங்களே, உங்களுக்ககெல்லாம் வேற வேலயே கிடையாதா?” ன்னு வடிவேலு கேக்குற மாதிரி நாம கேக்க முடியாதில்லையா?

_______________________________________

தொழிலாளியை அடிப்பது படைப்பாளியின் உரிமை. 1700 ரூபாய் அபராதம் கட்டினால் போதுமென்பது ஷோபாசக்தி-லீனாவின் வாதம். அப்படி என்றால் அந்தப் படைப்பாளியை தொழிலாளி திருப்பி அடிக்க விரும்பினால், எவ்வளவு அபராதம் கட்டவேண்டியிருக்கும் என்பதற்கு அறிவாளிகள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எப்படிப் பார்த்தாலும் தொழிலாளிகளின் உரிமையை விட படைப்பாளிகளின் உரிமை கொஞ்சம் மேம்பட்டதாகத்தான் இருக்க முடியும். எனவே, தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் பெப்சி (தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனம்) தொழிலாளர்கள் 1700 ரூபாய்க்கு மேல் ஆயிரம், இரண்டாயிரம் கூடுதலாக எடுத்து வரவும்.

அடுத்தது கேள்வி பெண் படைப்பாளிகள் படைப்புரிமை பற்றியது. லீனாவின் கவிதையை வாசித்து, வாசிப்பு அனுபவத்தையும் கவிதை வெளிப்படுத்தும் உணர்வையும் செல்மா பிரியதர்சன் போன்ற கவிஞர்கள் நிச்சயமாக விளக்குவார்கள். கம்யூனிஸ்டுகளுக்கும், ஜிகாதிகளுக்கும், இந்து பாசிஸ்டுகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை பெண்ணியப் பார்வையில் லீனாவும் கட்டுடைத்துக் காட்டுவார். கவிதை அறிவோ, ரசனையோ இல்லாத சராசரி உழைக்கும் பெண்கள் இவற்றைக் கேட்டு புதிய தரிசனங்களைப் பெறலாம்.

இறுதியாக, லீனாவின் கவிதையை தமது கொள்கையின் மீதும், தங்கள் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகப் புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு: உபரி மதிப்புக்கும் யோனி மயிருக்கும், உற்பத்தி உறவுக்கும் தொப்புளுக்கும், அந்தரத்தில் தெறிக்கும் விந்துவுக்கும் கார்ல் மார்க்ஸின் பிரகடனத்துக்கும் உள்ள கவித்துவப் பிணைப்பு பற்றி “கம்யூனிசப் பாரம்பரியத்தில் பிறந்த” சீமாட்டி வகுப்பெடுப்பார்.

ஆமாம். தான் கம்யூனிச குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர் என்றுதான் லீனா சொல்லிக் கொள்கிறார். தேவர் மகன் தேவர், கவுண்டர் மகன் கவுண்டர் மாதிரி கம்யூனிஸ்டின் மகனோ, பேத்தியோ கம்யூனிஸ்டு என்று அம்மையார் நினைத்துக் கொண்டிருக்கிறார். போலி கம்யூனிஸ்டுகளும் அதை அங்கீகரித்து சீமாட்டியை தோழர் என்று அரவணைக்கிறார்கள்.

குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

“கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!

vote-012மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மாவட்ட தலைநகர் பேருந்து நிலையங்களில் எங்கு சென்றாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல் ஒவ்வொரு ஊருக்கும் கடைசி பேருந்து, காலை முதல் பேருந்து என்கிற நேர இடைவெளி இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் 24 மணி நேர சுழற்சியில் எப்பொழுதும் செல்லலாம் என வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.  இது அரசின் செயல்பாட்டை பாராட்டுவதற்காக அல்ல. பேருந்தில் சென்றால் – திரும்பினால்தான் நிச்சயம் என்கிற அபாயத்துடன் உள்ள இன்றைய தரைவழிப் போக்குவரத்தில் அரசு பேருந்து பணியாளர்களின் யதார்த்தத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

சாதாரண மனிதர்களுக்கு காலை 5 மணி முதல் 6 மணிக்குள் காலைக் கடன் கழிப்பு, 8லிருந்து 9மணிக்குள் காலை உணவு, மதியம் 1லிருந்து 3 மணிக்குள் மதிய உணவு, இரவு 8லிருந்து 10மணிக்குள் இரவு உணவு என்கிற நடைமுறைப் பழக்கம் உண்டு. ஆனால் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனருக்கு நடு இரவில் பணி துவக்கம் என்றால் அவரின் கழிப்பிட நேரத்திலிருந்து, உணவு அருந்தும் நேரம் வரை எல்லாமே அராஜகமாக இருக்கும்.

நாம் மதுரையில் பேருந்தில் ஏறியிருப்போம். சுமார் 3 மணி நேர பயணத்திற்கு பின் வழிநடை உணவகத்தில் (அந்த உணவகங்களின் தரம் என்பது மகா மட்டம் என்பதும், அதில் நிறுத்துகிற கட்டாயத்தில் கூட அரசியல்வாதி, அதிகாரி என அனைவரின் அதிகாரம் அடங்கியிருக்கிறது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை) நின்றவுடன் நம்மில் பலர் அதற்குள் இலவசமாய் சாப்பிட போட்டுட்டானா என புலம்புவோம்.  நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அந்தப் பேருந்து கோவையில் நடு இரவில் எடுத்து, 6 மணி நேர பயணத்திற்கு பின் மதுரையில் நிறுத்தி பயணிகள் ஏற்றி, இறக்கி தூத்துக்குடி செல்லும் தடத்தில் மோட்டலில் நின்றிருக்கிறது என்பது.

அதே போல் 20000 பேருந்துகள் இயங்குகின்ற நிலையில் ஏதேனும் சில பராமாரிப்பு பழுதுகள் ஏற்பட்டு அல்லது டயர் பஞ்சர் போன்ற நிகழ்வில் வழித்தடத்தில் இயக்கம் நிற்பது என்பதும் எப்பொழுதாவது தவிர்க்க இயலாத ஒன்று.  உதிரிப் பாகங்களே வாங்கித் தராமல், கடந்த 12 ஆண்டுகளாக பராமரிப்பு, அலுவலகப் பிரிவில் புதிய நியமனங்களே இல்லாமல், ஓய்வு பெற்றும், இறந்தும் போன தொழிலாளிகளின் பணிச்சுமையையும் சுமந்து பணிபுரிவதால் பல பேருந்துகள் முழுமையான பராமரிப்பு பார்க்காமலேயே வெளியில் வருகிறது என்பது இந்தத் துறைக்குள் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கி விட முடியாது. ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ ஓட்ட வேண்டும் என்கிற நெருக்கடி, மறுபுறம் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் போன்றவற்றின் இயக்கம் எதையும் முறைப்படுத்தாமல் பேருந்து நிலையங்களில் கழக அதிகாரிகளே தனியார் முதலாளிகளுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செயல்படும் நிலையில் வசூல் இலக்கு என தினமும் நடத்துனருக்கு நெருக்கடி. தமிழகத்தில் 365 பணிமனைகள், பணிமனைக்கு ஆளுங்கட்சி அனுசரிப்பு கட்சி பணியாளர்கள் 10 முதல் 20 பேருக்கு பணியே இல்லாமல் வருகைப் பதிவு.  இவர்களின் பணியையும் யாராவது வயிற்றுப்போக்கு, இழவு என விடுப்பு எடுக்கும் பணியாளர்களின் பணியையும், தடத்திற்கு சென்று வந்து இறங்குகிற ஓட்டுனரை தாஜா செய்து மீண்டும் பணிக்கு அனுப்புவது எத்தனை பேருக்கு தெரியும்?

இன்று வரை மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற தேசிய மய வரிகளின் ஆதிக்கத்தால் தனியார் பேருந்தின் தட நீளம் 120 கி.மீ க்கு மேல் இருக்க கூடாது.  ஆனால் அரசுப் பேருந்தின் தட நீளம் என்பது 500 கி.மீக்கு மேல் சென்று விட்டது.  தமிழகத்தில் 5800 தனியார் பேருந்துகளை, 20000 அரசுப் பேருந்துகளோடு ஒப்பிடும் போது 4 பங்கு அதிகமாய் அரசுப் பேருந்துகள் இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றும் ஏற்படுகிற விபத்தில் அரசுப் பேருந்து அதிகம் போல் தோன்றும்.  அதையெல்லாம் படிக்கிற நாம் தனியார் அதிகரிக்கட்டுமே என எண்ணுவது உழைப்புச் சுரண்டலை அதிகரிக்கவே செய்யும்.

____________________________________________________

சமீபத்தில் தினமணி நாளிதழில் (எவ்வாறு பல தரப்பு விபரங்களை ஆராயாமல் எழுதினார்கள் என தெரியவில்லை) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் அடுத்த ஆண்டு 250 கோடி செலவில் 3000 பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவித்ததை குறிப்பிட்டு “50 வயதிலும் தாய்ப்பாலா” என தலையங்கம் எழுதினார்கள்.

பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, சமூக தேவையை பூர்த்தி செய்யப்படுவதற்காக சுதந்திர இந்தியாவின் பிரதான அடித்தளமாக இருந்தது, இருப்பது தரைவழிப் போக்குவரத்து என்பது அனைவரும் அறிந்த வரலாறே.  தமிழகத்தில் பேருந்து தேசிய மயமும் அத்தகைய ஒரு சமூக முயற்சியின் சிறப்பான முடிவென்று நாட்டின் உச்ச நீதிமன்றமே உச்சி முகர்ந்துள்ளதை வாசகர்கள் கவனத்திற்கு இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

முதலீட்டுக்கு மேல் 5 சதமானம் வருமானத்தை இலக்காக கொண்டுதான் 1971 இல் தனியார் துறை கையகப்படுத்தப்பட்டு நிறுவனமாக பதிவு (கம்பெனி) செய்யப்பட்டு 1972 முதல் கழகமாக செயல்பட்டுவருவதுதான் அரசு போக்குவரத்துக் கழகங்கள்.  இன்று தினம் 2 கோடி பேருக்கு மேல் பயணித்து பலன் பெற வழிவகுத்துள்ளது.

சமூகத் தேவையின் தாக்கம், கிராம பொருளாதாரத்தை, நகர்ப்புற வளர்ச்சியுடன் இணைக்க வேண்டிய சமூகக் கட்டாயம், சாலை வசதி போதிய அளவு இல்லாவிட்டாலும் பேருந்து வசதி செய்ய வேண்டும் என்ற சூழலில் அரசுப் பேருந்துகளின் வழித்தட இயக்கக் கொள்கையும் மாற வேண்டிய கட்டாயம்.

சேவை முன்னுரிமை பெற, வரவு செலவும் சமனாகும் வழித்தடங்களின் விகிதாச்சாரம் கூட குறைந்து தற்போது 96 விழுக்காடுக்கு மேல் செலவினத்தை கூட தொட இயலாத வருமான இழப்பீட்டில் கழகங்கள் உள்ளது. ஒரு பயணியே இருந்தாலும் கூட பேருந்தை இயக்க வேண்டும் என்ற கட்டாயம். விளைவு கி.மீ. க்கு 15 பைசா வருமானம் என்றால் 21 பைசா செலவாகிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கி.மீட்டருக்கு 45 பைசா, கர்நாடகாவில் 52 பைசா, கேரளாவில் 38 பைசா என்ற விகிதாச்சாரத்தில் பேருந்து கட்டணம் இருக்கும் போது தமிழகத்தில் 28 பைசாதான்.  வேறு வருமானம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (இங்கு பேருந்துக் கட்டணங்கள் ஒரு புறம் தாழ்தள சொகுசு என்றெல்லாம் பெயர் வைத்து மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது நமது கருத்து அல்ல – யதார்த்தம் தெரிந்து கொள்ள இந்த விவரம் கொடுக்கப்படுகிறது)

ஆனால் செலவினம் என்று வரும் போது, ஆண்டு வருமானம் தோராயமாக 3950 கோடியிருக்கும் போது,

டீசலுக்கு மட்டும் : 1100 கோடி (கடந்த 10 ஆண்டுகளில் 28முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது)

உதிரி பாகங்கள் :  910 கோடி (ஆண்டிற்கு 10 சதம் விலை உயர்வு)

மோ.வாகன வரி :  115 கோடி

வட்டி, அரசுக்கு செலுத்த வேண்டிய பிற வரி :   50 கோடி

பேருந்து நிலைய கட்டணம் சுங்க சாவடி வரி :  2.5 கோடி

மோட்டார் வாகன வரி கூட தமிழகத்தில்தான் அதிகம் வசூலிக்கப் படுகிறது. இத்தோடு பேருந்திற்கு பயன்படுத்தப்படும் டீசலுக்கு 8 சதமானம் விற்பனை வரியும், டயர் உபயோகத்திற்கான திரட் ரப்பருக்கு 12 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது என்பதையும் வாசகர்கள் அறிய வேண்டும்.

தவிர அரசுப் பேருந்தே காரணமாக இல்லாவிட்டாலும், விபத்து நடந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்காக, “நான் லயபிலிட்டி” தொகை என்று ஒவ்வொரு விபத்திற்கும் ரூ 15 ஆயிரம் உடன் வழங்கப்பட வெண்டும்.  ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட ஓட்டுனார் மீது தவறில்லை என்று குற்றவியல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும், இழப்பீடு லட்சங்களில் வழங்கப்படுவதால் கழகங்களுக்கு ரூ 500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இந்த வருமானத்திற்கு மிஞ்சிய செலவினத்தை தினமணி ஊகித்திருப்பது போல் அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தவறான தகவல் போல் அன்றி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் 6 முதல் 12 சதமானம் வரை வட்டிக்கு கடன் பெற்றுத்தான் கழகத்தின் மூலதனத்தையும் (பேருந்து வாங்குவது) அன்றாட செலவினத்தையும் இன்றுவரை கழகங்கள் சந்தித்து வருகின்றன. அரசிடமிருந்து எந்தவிதமான மானியமோ, ஏன் வட்டியில்லா கடன் கூட கிடைப்பதில்லை என்பதே உண்மை. வட்டியே பல நூறு கோடிகள் நிலுவையிலுள்ளது.  அதனால் கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

சிலரது கூற்றுப் பிரகாரம் மக்களின் வரிப்பணம் எதையும் போக்குவரத்துக் கழகங்களுக்கு திருப்பி விடப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.  மாறாக அரசு வழங்கும் பங்கீட்டுத் தொகையில் பாதிக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.  ஆனால் மாணவர்கள், தியாகிகள், மாற்றுத்திறன் உள்ளவர்கள் என்று சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச பயணங்களுக்கு அனைவரும் நினைப்பது போலன்றி, 56 சதமானம்தான் ஈடு செய்யப்படுகிறது என்பதுடன் அந்த தொகையும் உடனுக்குடன் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.  (இதுநாள் வரை ரூ 250 கோடி நிலுவையிலுள்ளது).

விளைவு: பணியாளார்களின் ஊதிய விகிதம் மற்ற துறையை ஒப்பிடும் போது மிகக் குறைவு.  பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (ரூ 550 கோடி) அன்றாட செலவிற்கு பயன்படுத்தப்படுகிறது.  ஓய்வூதிய ஒப்படைப்பு, பணிக்கொடை போன்றவை ஆண்டுக்கணக்கில் நிலுவையிலுள்ளது.

இவ்வாறு தங்களது வருமானத்தில்தான் கழகத்தை நடத்திக் கொள்ள வேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கத்தை எந்த வித சமூகப் பங்களிப்பும் இல்லாமல் (இலவச பயணங்களை ஏற்றிச் செல்வதில்லை), தாங்கள் பெற்ற வழித்தடங்களிலேயே கூட (உதாரணமாக மதுரை-திண்டுக்கல் (வழி) சோழவந்தான் என அனுமதி பெற்று மாறாக நேர் வழி வாடிப்பட்டி வழியாக இயக்குவது) பேருந்தை இயக்காமல் நேராகவே இயக்கி லாபம் மட்டுமே நோக்கமாக செயல்படும் தனியார் துறை பேருந்துகள், மினிபேருந்துகள் (இவற்றின் விதி மீறல்கள் பற்றி பத்திரிகைகளில் பலமுறை செய்திகள் வந்துள்ளது) இயக்கத்துடன் ஒப்பிடுவது, சிலரின் பொதுத்துறை மீதுள்ள ஆழமான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை உணரமுடிகிறது.  வழங்கப்பட்டுள்ள ரூ 250 கோடியும் நாட்டின் சுற்றுச் சூழலைக் காக்கும் மாற்று எரிபொருளுக்கான அதிக விலையை கழகங்களே ஏற்கிறது என்பதுடன் அரசு ஏற்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.

உலக அளவில்  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பணக்கார நாடுகளில் சமீபகாலமாக திவாலாகி (அமெரிக்காவில் மட்டும் 82 தனியார் வங்கிகள்) மக்கள் பணம் திருப்பி விடப்படுவதும் என்ரான், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், சத்யம், குளோபல் டிரஸ்ட் வங்கி போன்ற தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் ஃ நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்று திரும்ப செலுத்தாத மக்கள் பணமே 1 லட்சத்தி 25 ஆயிரம் கோடி என்கிறது புள்ளி விபரம்.  இன்றைய அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்விற்கு தனியாரின் பதுக்கலும், ஆன் லைன் வர்த்தகமுமே காரணம் என்கிற நாளிதழ்களின் உண்மை அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன்.

இந்தியாவின் பொதுத்துறையை சார்ந்திருப்பதால் மட்டுமே வேறூன்றியுள்ள இந்திய தனியார் கம்பெனிகள் உள்ளிட்ட தனியாரின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ள பொதுத்துறைக்கு “50 வயதில் தாய்ப்பால் ஊற்றுவதற்கு பதில் காலம் முழுக்க உழைத்து குடும்பத்தை வளர்த்த தந்தைக்கு, தாய்க்கு முதுமைக் கால பராமாரிப்பு என்று ஏன் எடுத்துக் கொள்ள கூடாது?” இந்த முதுமையான துறைதான் இந்தியாவின் இதயமென்றும் சொல்லலாம். பல்வேறு சேவைகள் மக்களுக்கு மலிவாக வழங்குவதும் இந்த துறைதான்.

இப்படிப்பட்ட அரசு போக்குவரத்தில் 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்களை நியமனம் செய் விபத்துக்களை குறை என தொழிலாளர்கள் பேராடியதன் விளைவாக கடந்த 2006 லிருந்து இன்று வரை சுமார் 40,000 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் புதிய நியமனமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தினக்கூலிகளாகவே வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம்.

__________________________________________________

இந்நிலையில் உலக வங்கியின் கட்டளையை ஏற்று நாளடைவில் ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக இருக்கக் கூடாது என்பதை படிப்படியாக செயலாக்கம் செய்திட கடந்த 2003ல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தியா முழுமையும் அரசு, அரசுத்துறை, பொதுத்துறை என்ற எதிலும் 01-04-2003ற்கு பின்னர் பணியில் சேருபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது கிடையாது மாறாக “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” (புதிய பென்சன் திட்டம்) என்ற பெயரில் அவரவர் சம்பளத்தில் 10சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.  அதற்கு ஈடான தொகை அரசு அல்லது அரசு சார்பு நிறுவனம் போடும்.  இதற்கென்று ஒரு ஒழுங்குமுறை ஆணையம் காலக்கிரமத்தில் நிறுவப்படும்.  அந்த ஆணையம் எவ்வாறு பென்சன் கணக்கிட வேண்டும் என தெரிவிக்கும் என கூறினார்.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட போக்குவரத்து புதிய பணியாளர்களிடம் 10 சதவீத தொகை பிடிக்கப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் இருந்து வந்தது.  இதில் உண்மை என்னவெனில் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கென பங்களிப்பு திட்ட ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் என்பது இன்னும் அமைக்கப்படவில்லை.  அதனால் இந்த ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது யாருக்கும் தெரியாது.  2003ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2020க்கு மேல்தான் ஓய்வு என்பது துவங்கும்.  ஆனால் இதில் பலர் விபத்து காரணமாக இறந்திருக்கிறார்கள்.  இது போல் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு எவ்வாறு ஓய்வுவூயம் கணக்கிடுவது என போக்குவரத்துக் கழகங்கள் அவ்வப்போது அரசிற்கு எழுதி வந்தன.  அரசும் ஒழுங்குமுறை ஆணையம் அமையும் வரை பொறுத்திருக்கவும் என பதில் எழுதிக் கொண்டிருந்தது.

ஆனால் தீடீரென தற்போது ஒரு அரசு உத்திரவு (அரசுக் கடிதம் 15705/D/2009-1 நாள் 25-03-2010) வந்துள்ளதில் புதிதாக பணி நியமனம் பெற்று இறந்த பணியாளர்களைப் பொறுத்தவரை நிதித் துறை 18-10-2004ல் வெளியிட்டுள்ள உத்திரவினைப் பின்பற்றவும் என ஒரு கடிதம் வந்தது.  அந்த நிதித்துறை கடிதத்தில் (29593A/Finance (Pension) Department 2009 நாள் 25-08-09) இறந்தவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை மற்றும் அதற்கு ஈடான அரசுப் பங்கு இவற்றிற்கு 8 சதவீத வட்டி போட்டு வாரிசிடம் கணக்கு முடித்துவிடுங்கள் என மத்திய அரசு நிதி அமைச்சக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் செயல்படவும் என அனைத்து துறைக்கும் எழுதியுள்ளது.

ஏதாவது ஒரு வகையில் தனது ஓய்விற்கு பிறகு அல்லது இறப்பிற்கு பிறகு தனது வாரிசுகளுக்கு ஒரு சொற்ப தொகையாவது பென்சன் என கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வயலை விற்று அரசியல்வாதிக்கு செலுத்தி பணிக்கு வந்து பணிபுரிந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய மோசடி இது.  ஊருக்கு ஒரு நிதி நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணம் பெருமளவில் வசூலானவுடன் ஓடிப்போவதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமில்லை.

ஆனால் இதை எதிர்த்து ஒன்றுபட வேண்டிய தொழிலாளார் வர்க்கம் ஜெயா அரசும் கருணாநிதி அரசும் போட்டி போட்டு வளர்த்துவிட்ட 28 தொழிற்சங்கங்களால் பிளவுபட்டு நிற்கிறது.  போலி கம்யூனிச தோழர்களோ அவ்வப்போது சம்பிரதாய போராட்டங்களையும், ஒரு நாளில் கைதாகி திருமண மண்டபத்தில் கூத்தடித்துவிட்டு மாலை வீடு திரும்பும் போராட்டங்களையே முன்னெடுப்பதுடன் அது அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கண்ணாயிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புகளிலிருந்து வெளிவந்து ஒன்றுபட்டு போராட்ட இயக்கங்களை முன்னெடுப்பது ஒன்றே இவற்றிற்கெல்லாம் தீர்வாக அமையும். (இந்த துறையில் நடைபெறும் பணி நியமனம் முதல் கூண்டு கட்டுமானம், விபத்து இழப்பீடு வரை உள்ள ஊழல்களின் விபரம் தொடர்ந்து எனது அடுத்த கட்டுரையில்)

_____________________________________________________

– சித்திரகுப்தன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை !!

vote-012இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் தனிச் சிறப்பான முறையில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இராணுவம், போலீசு, உளவுப்படை, “வெள்ளை வேன்” கொலைப்படை, பேரினவாதச் செய்தி ஊடகம் ஆகிய கட்டுமான அமைப்பு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ‘பயங்கரவாதி’களை ஒழிப்பதற்கும், நாட்டின் ஒருமையைக் காப்பதற்கும் அவசியமானதுதான் என்று சிங்கள சமூகம் நம்பிக் கொண்டிருந்தது.

ஈழ மண்ணில் தமிழனின் இரத்த ஆறு ஓடுவதை வெற்றிப் போதை தலைக்கேற தென்னிலங்கையின் தெருக்களில் எக்காளமிட்டுக் கூத்தாடியது சிங்கள சமூகம். ஆனால், போதை தெளிவதற்குள்ளாகவே தான் ஊட்டி வளர்த்த இனவெறி பாசிச ஓநாய்கள் தன்னையே சூழ்ந்து கொள்ளும் என்பதைச் சிங்கள சமூகம் அறிந்திருக்கவில்லை. அந்தப் பாவத்துக்குத் தக்க விலை கொடுக்காமல், அது தப்பித்துவிட முடியாது என்பதை ராஜபக்சே குடும்பக் கும்பல் இப்போது காட்டி வருகிறது.

அதிபர் மகிந்த ராஜபக்சே – அவரது சகோதரர்களான பாசில், கோத்தபாயா, சாமல் இவர்களின் பிள்ளைகளான சுசீந்திரா, நாமல் மற்றும் மருமகன்கள் மூவர் இலங்கையின் இராணுவம், போலீசு, உளவு, நிதி, அயலுறவு, மதம் மற்றும் அரசு ஊடகம் உட்பட அனைத்து முக்கியத் துறைகளையும் தமது இரும்புப் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு மகிந்தாவின் நெருங்கிய உறவினர்கள் 15 பேராவது அரசு நிர்வாகத்தில் அதிஉயர் பொறுப்புகளில் இருப்பதால், நாட்டின் ஆண்டு வரவு-செலவில் எழுபது சதவீத நிதி இவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது.

2005-ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வந்தபோது தனக்கு விசுவாசமாக ஒரு சிறு அரசியல் கும்பலை மட்டுமே பெற்றிருந்தார். கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிர்வாக இயந்திரம் முழுவதையும் ராஜபக்சே குடும்ப கும்பலின் விசுவாசக் கருவியாக மாற்றிக் கொண்டதோடு, இலங்கையின் அரசியல் சட்டத்துக்குப் புறம்பான ஒரு பாசிசக் கொலைகாரக் கூலிப்படையையும் கோயபல்சு பாணியிலான பிரச்சார ஊடகத்தையும் அக்கும்பல் கட்டியெழுப்பிக் கொண்டது.

ராஜபக்சே கும்பலின் ஆணையில் இருக்கும் பாசிச அரசு இயந்திரம் மற்றும் பிற பாசிச பரிவாரங்களைக் கொண்டு இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மட்டுமல்ல; சிங்கள இனத்தவரானாலும் அதன் அதிகாரத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ துணிந்தால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் தயங்காது. இது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெளிப்படையாகவே தெரிந்தது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மீண்டும் ஒருமுறை தெரியவரும்.

கடந்த ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈழத் தமிழின அழிப்புப் போரினூடாக விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிப்பதில் சிங்கள அரசபடைகள் அடைந்த வெற்றி, மகிந்த ராஜபக்சேவுக்கே உரியதென்று ராஜபக்சே கும்பலின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊடகம் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சிகளும் வானொலிகளும் பத்திரிக்கைகளும் அவரை வீர நாயகனாகச் சித்தரித்து வருகின்றன. தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அவ்வாறான பாடல்களை இடைவிடாது ஒலி-ஒளிபரப்பி வருகின்றன. இதற்கு மாறாகச் செயல்படும் செய்தி ஊடகம் எதுவானாலும் ராஜபக்சே பாசிசப் படையின் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளானது. ஏற்கெனவே ராஜபக்சே கும்பலை விமர்சித்து எழுதிய பத்திரிகை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; ஒரு செய்தியாளர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். மகிந்தாவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா அதிபரானால் இலங்கையில் இராணுவ ஆட்சியே ஏற்படும் என்ற தொடர்பிரச்சாரத்துக்கு எதிராக, “தற்போது மட்டுமென்ன ஜனநாயக ஆட்சியா நடக்கிறது, ஒரு சர்வாதிகார ஆட்சிதானே நடக்கிறது” என்று எழுதிய குற்றத்திற்காக “லங்கா ஈ நியூஸ்” என்ற இணையதள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலியகெட தேர்தலுக்கு இருநாட்கள் முன்னதாக கடத்தப்பட்டு, அவர் பற்றிய விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. இதோடு வேறு மூன்று இணையதளங்கள் தடை செய்யப்பட்டன.

தமிழ் புலி ஆதரவு அமைப்பாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சரத் பொன்சேகா ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து விட்டதாகவும், அதில் புலிகளின் பழைய கோரிக்கைகளை ஏற்பதாக சரத் ஒப்புக் கொண்டதாகவும், இது ஒரு தேசத் துரோகம் என்றும் அந்த ஒப்பந்தத்தின் பிரதி என ஒன்றை அரசு அச்சகத்திலேயே அச்சிட்டு சிங்கள மக்களிடையே விநியோகித்துப் பொப் பிரச்சாரம் செய்தது.

அவ்வாறான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருப்பதாக ஒப்புக் கொள்ளும் இரா.சம்பந்தனின் நேர்காணல் என்ற ஒரு புனைவை லங்காதீபா என்ற முதன்மை சிங்கள நாளேடு வெளியிட்டது. அதிபரின் முதன்மை ஆலோசகரான பாசில் ராஜபக்சேவே இதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கிறார். இந்தக் கற்பனைப் பேட்டியை எழுதிய ஊடகவியலாளருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதையும், சட்டவிரோதமாக பிரச்சாரச் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும்படி தேர்தல் ஆணையாளர் விடுத்த பரிந்துரைகளை இலங்கை போலீசு மாஅதிபர் மகிந்த பாலசூரியா மதிக்கவே இல்லை.

தேர்தல் சட்டவிதி மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்தே வந்தபோதும், போலீஸ் மா அதிபரிடம் பலமுறை கோரியும் அவை குறையவில்லை என்பதால், தேர்தல் விதிமுறை மீறல்  குறித்த முறைபாடுகளை அனுப்ப வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவித்து விடலாம் என்றார், தேர்தல் ஆணையாளர்; தேர்தல் விதிமுறைகளையே ரத்து செய்து விடலாம் என்ற விதிப்புரையும் செய்தார். அரசு ஊடகங்களைச் சார்பின்றி நெறிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி செயல்பட முடியாமல் போனதால், தேர்தல் ஆணையாளரால் விலக்கிக் கொள்ளப்பட்டார். தனது உத்தரவுகளை அரசு மதிப்பதில்லை என்பதால் தானே விலகிக் கொள்ளப் போவதாக எச்சரித்திருந்தார். இறுதியில் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணையாளரும் அவரது மனைவியும் அதிபர் மாளிகைக்குள் அடைத்து வைக்கப்பட்டு, ராஜபக்சே கும்பலுக்குச் சாதகமான முடிவு அறிவிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மிரட்டல்களும் வன்முறைத் தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. எதிர்க்கட்சியினரின் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள் போலீசு துணையுடன் ஆளுங்கட்சிக் குண்டர்களால் தாக்கப்பட்டன. மக்களை அச்சப்படுத்தி வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில் தாக்குதல்கள் நடந்தன. எதிரணியினரின் செயலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; அவர்களின் ஊர்வலங்களின் மீது ராஜபக்சே கும்பலின் குண்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் ஒரு பெண்மணியும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டனர்.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள், இலங்கையின் வரலாற்றிலேயே மோசமான வன்முறைகளைக் கொண்ட தேர்தல் இதுதானென்று கூறியுள்ளன. இந்தத் தேர்தல் ஏற்றுக் கொள்ளத்தக்க ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட தேர்தலாக அமையவில்லை என்று பொது நலவாய (காமன்வெல்த்) நாடுகளின் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அறிக்கை கூறுகிறது.

ராஜபக்சே கும்பல் தனக்கு எதிராகத்தான் சிறுபான்மை இன மக்கள் வாக்களிப்பார்கள் என நம்பியதால், அவர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காகப் பல தாக்குதல்களை நடத்தியது. தேர்தலுக்கு முதல் நாளிரவு யாழ்குடா நாடு முழுக்க டக்ளஸ் தேவானந்தா, கருணா முதலிய துரோகக் குழுக்கள் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்து பீதி கிளப்பியது. அவற்றில் 13 சம்பவங்கள் பெரிய அளவிலானது. தேர்தலைப் புறக்கணிக்கும்படி, புலிகளின் பெயரில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு டக்ளசின் குழு யாழ்குடா நாடு முழுவதும் விநியோகித்தது. ராஜபக்சேவுக்கு எதிராகவும் சரத்துக்கு ஆதரவாகவும் ஈழத் தமிழர்கள் வாக்களித்து விடுவார்கள் என்பதால் இந்த உத்தி கையாளப்பட்டது. யாழ்குடா நாட்டில் தேர்தல் நாளன்று பொதுப் போக்குவரத்தை அரசு நிறுத்திவிட்டது. பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டால் நாட்டில் ஜனநாயகச் சூழல் திரும்பிவிடும் என்ற ராஜபக்சே உள்ளிட்ட சிங்கள, தமிழ்த் துரோக அரசியல் கட்சிகள் கூறி வந்தன. ஆனால், அதிபர் தேர்தல் வன்முறைகள் நிரம்பியதாகவும் 20 சதவீத தமிழ் மக்களே வாக்களிப்பதாகவும் அமைந்தது.

பல இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பதால், இவ்வளவு பெரிய தேர்தல் தில்லுமுல்லுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இந்தியாவிலுள்ள “இந்து” நாளேடு உட்பட ராஜபக்சே கும்பலின் விசுவாசிகள் சாதிக்கின்றனர். ஆனால், ராஜபக்சே கும்பல் கட்டியெழுப்பியிருக்கும் சிங்கள பாசிச பயங்கரவாத அமைப்பு மற்றும் சிங்கள – சிறுபான்மை இன அடிப்படையில் இலங்கையின் சிவில் சமூகம் முழுவதும் அணிபிரிந்து நிற்குமாறு ராஜபக்சே கும்பல் அரசியலை நெறிப்படுத்திக் கொண்டு சென்றது ஆகியவைதாம் அதன் வெற்றியை உறுதிப்படுத்தின. ஈழத்தமிழர்கள் சிறுபான்மை முசுலீம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள், இந்த இனங்களின் துரோக அரசியல் தலைமையின் வற்புறுத்தலையும் மீறி மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதாவது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எதிரணியினரின் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்து, மொத்தத்தில் அவர் 40 சதவீத வாக்குகள் பெறுமாறும், எஞ்சிய சிங்கள இலங்கை முழுவதும் ஒரு தலையாக மகிந்த ராஜபக்சேவுக்கு வாக்களித்து மொத்தத்தில் அவர் 58 சதவீத வாக்குகள் பெறுமாறும் செய்துள்ளனர்.

சிறுபான்மை இன மக்கள் எப்படியும் தமக்கு எதிராகவே வாக்களிப்பாளர்கள் என்று கருதியதால், சிங்கள மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் வாக்குகளை ஒருமுகமாக பெறவேண்டும் என்பதால்தான் மகிந்த ராஜபக்சே தேர்தல் பரப்புரையின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக நஞ்சு கக்கினார். சிறுபான்மை இன மக்களுக்கு எத்தகைய அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை; அதற்கு வகை செய்வதாக உள்ள உடன்படிக்கைகளைக் கிழித்தெறிவேன் என்றார். ஈழத்தமிழின மற்றும் விடுதலைப் புலிகள் ஒழிப்புப் போரை வழிநடத்திய சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதியை சிங்கள தேசத்தின் துரோகியாகவும், சதிகாரனாகவும் மோசடியாளனாகவும், எதிரணியினர் அனைவரும் இத்தகையவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டனர்.

“இலங்கையில் உள்ளது ஒரு இனப்பிரச்சினையே கிடையாது; முற்றிலும் பயங்கரவாதப் பிரச்சினைதான். அது யுத்ததத்தின் மூலம் தான் முறியடிக்கப்பட வேண்டும்” என்பதுதான் ராஜபக்சே கும்பல், சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி. ஆகியோரின் உறுதியான நிலையாகும். இந்த அடிப்படையிலேதான் ராஜபக்சே கும்பலும் மற்றும் ஜே.வி.பி.யினரும் அரசியல் பரப்புரையை வெறியோடு நடத்தின. பாசிச பயங்கரவாத இரத்த வெறிப் போரை ஈழத் தமிழர்க்கெதிராக முப்படைத் தளபதி மகிந்தாவும் மற்றும் இராணுவத் தலைமைத் தளபதி சரத்தும் சேர்ந்தே வழிநடத்தினர்.

ஈழப் போர் வெற்றியை அதிபர் தேர்தல் மூலதனமாக்கிக் கொள்வதற்காக, அதன் ஏகபோக உரிமையாக்கிக் கொள்ள ராஜபக்சே கும்பல் எத்தணித்தது. அதைப் பங்கு போடப் போட்டியாளர்களாக சரத்தும் ஜே.வி.பி.யும் வந்தனர். சிங்கள வாக்காளர்களை மட்டும் நம்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கணக்குப் போட்ட சரத், ஈழத் தமிழரின் ஆதரவைப் பெறுவதற்காக, ஈழப்போரின் இறுதி கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ராஜபக்சே கும்பல்தான் காரணமென்றும், அதுகுறித்த விசாரணை வந்தால் அதை உறுதி செய்து தாம் சாட்சியமளிக்கப் போவதாகவும் கூறினார். இது, போர் வெற்றிக்கு உரிமை பாராட்டுவது, அதேசமயம் போர்க் குற்றங்களுக்கான பழியைப் பிறர்மீது சுமத்துவது என்று இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்வது போலாகிவிட்டது. விளைவு, தலைக்குப்புற வீழ்ந்து விட்டார்.

சரத்தின் இரட்டை நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே கும்பல், போர்வெற்றியில் அவர் பங்கு பாராட்ட முடியாது; போரின் இறுதி நாட்களில் அவர் களத்தில் இருக்கவில்லை, வேறு களமுனை தளபதிகளே இறுதிப் போரை நடத்தினார்கள் என்றும், போர்க் குற்றங்கள் பற்றிப் பேசும் சரத் ஒரு தேச துரோகி, இராணுவ ஆட்சிக்கு சதி செய்தவர், ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தவர் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, சிங்கள இனவெறியை கிளப்பி ஆதாயம் தேடிக் கொண்டது. சரத் பொன்சேகாவை அரசியல் அரங்கில் இருந்து முற்றாக அகற்றிவிட முடிவு செய்து, மரண தண்டனைக்குரிய வழக்குப் போட்டு கைது செய்து, அவரது ஆதரவு இராணுவ அதிகாரிகளைக் களையெடுத்தது.

சிங்கள பாசிச இனவெறி அரசியல் இயக்கங்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய பிளவு, முரண்பாடு மோதல்களை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில் எஞ்சிய தமிழின அரசியல் இயக்கங்கள் தவறிவிட்டன. ஈழத் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் இசுலாமியர்களின் பெயரால் ராஜபக்சே கும்பல் அரசில் மந்திரி பதவிகளை சுவைத்துக் கொண்டிருக்கும் சிறுபான்மை இனத் துரோகத் தலைமை தொடர்ந்து அக்கும்பலுக்கு விசுவாசங்காட்டி வருகின்றன. எஞ்சியுள்ள சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைமைகளோ சிங்கள இனவெறி பாசிச சக்திகளின் இன்னொரு தலைமையாகத் தோன்றிய சரத் பொன்சேகாவை ஆதரித்தன.

சிங்கள இனவெறி பாசிசத்துக்கு எதிரான சிறுபான்மை இனங்கள் ஓரணியாக நிற்பதையே நடந்து முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை ஒரு அரசியல் அணியாக ஒன்று திரட்டுவதோடு, ராஜபக்சே கும்பலின் பாசிச பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கள சமூகத்தில் தோன்றக்கூடிய ஜனநாயக சக்திகளோடு ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியமைப்பது தான், இலங்கையில் ஒரு புதிய புரட்சிகர அரசியல் முன்னெடுப்புக்கு வழிவகுக்கும்.

– புதிய ஜனநாயகம், ஏப்ரல்-2010.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?

204

vote-012அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் குஷிப் பேர்வழிகளைத் தவிர்த்து அனைவரையும் அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது.

தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள மனிதர்களை, சிப்பந்திகளை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது ஆச்சரியமானது. அதனால் பாராட்டுக்குரியது. ஆனால் பாராட்டியவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் இந்த நவீன கலை ஊடகத்தின் பிரதியினால் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.

ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?

விபத்து, தற்கொலை, இரத்தம், எதிர்பாராத அடிகள், துன்பங்கள் என்பதைக் காட்டித்தான் ஏழ்மையைக் காட்ட முடியுமென்று வசந்த பாலன் நினைத்திருப்பது பா வரிசைப் படங்களிலிருந்து தமிழ் சினிமா மரபு கொண்டிருக்கும் உத்திதான். நல்லதங்காள் கதையைக் கேட்டு வளர்ந்த நாடுதானே இது? ஆனால் இன்று நல்லதங்காள் என்ற சோகத்தின் அரசி கதையில் அல்ல, அன்றாடம் நாளிதழில் அடிபடும் ஒரு செய்தித் துணுக்காக மாறிவிட்டாள். நமக்கும் நல்லதங்காள் உத்தி இன்று போதுமானதல்ல.

_________________________________________

கண் முன்னே கொடுரமாக அடிபட்டுத்தான் ஒரு எளியவனின் துன்பத்தை உணர முடியுமென்றால் நாம் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏழ்மையின் வாழ்வில் இத்தகைய திடுக்கிடும் திருப்பங்களை விட மெல்லக் கொல்லும் ‘அமைதியான’ வாழ்க்கைதான் கண்முன் காணும் உண்மை. அந்த உண்மையை ஊடுறுவிப் பார்ப்பது எப்படி? ஒரு விபத்தில் செத்துத்தான் ஒரு ஏழை தனது அவலத்தை புரியவைக்க முடியுமென்றால் சாகாத ஏழைகளின் கதி?

கே.கே நகர் விபத்து, லிங்கத்தின் தந்தை விபத்து, இரக்கமற்ற முதலாளி அண்ணாச்சி, கொடுரமான கங்காணி அண்ணாச்சி, இதயத்தை உலுக்கும் அந்த காதல் பெண்ணின் தற்கொலை, அவள் காதலனது மனமுடைந்த அவலம், கனியின் தங்கை நாகம்மையின் சித்தரிப்பு,  நின்ற கால் வியாதியால் சாகும் தொழிலாளி, மந்தைகளைப் போல அடைந்து வாழும் சிப்பந்திகள் என்று படம் முழுவதும் வரும் சோகங்கள், அவை கற்பனையல்ல உண்மை என்றாலும் படத்தில் அதிர்ச்சியை மிகையாக ஏற்படுத்த வேண்டுமென்பதாக மாறிவிட்டன. இவை அளவாக பயன்பட்டால் இயக்குநர் தான் காட்டவிரும்பும் கதை உணர்ச்சியை உணர்த்த முடியாது என்று நினைத்திருப்பரானால் அது அவரது பலவீனம். இயல்பாக செய்திருந்தால் அது அவரது அறியாமை.

அழகான, சுத்தமான, நவீனமான வாழ்க்கையில் முங்கித் திளைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தை இப்படிக் காட்டித்தான் அழவைக்க முடியுமென்றால் அந்த அழுகையின் காலம் சிலமணித்துளிகள் மட்டும்தான். சாரமாகச் சொன்னால் ஏழைகளின் அவலத்திற்கு காரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணத்தை ஆழமாக உணர்த்த வைப்பதுதான் கடினமென்றாலும், தேவையானது. அது அங்காடித் தெருவில் இல்லை.

ஒரு மலக்குழிக்குள் இறங்கும் தொழிலாளியின் நிலையைப் புரிந்து கொள்ள காமராவும் கூட இறங்குவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் சாக்கடைகளின் வாழ்க்கையை அறியாத ‘சுத்தமான’ சாக்கடைகளை அது மட்டுமே சுத்தப்படுத்திவிடாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஜி – 8 குழும நாடுகளது அதிபர்களின் கூட்டத்திற்கு மேலைநாடுகளின் தன்னவார்வக்குழுக்கள் MAKE POVERTY HISTORY வறுமையை வரலாற்றாக்கு என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தின. மேற்கத்திய நாடுகளின் பிரபலமான எல்லாப் பாடகர்களும் அதில் பங்கேற்றனர். இவர்களது கோரிக்கை வறுமையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை மேலைநாடுகள் இரத்து செய்யவேண்டுமென்பதுதான். ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையே ஏகாதிபத்தியங்களின் உற்பத்தியென்பதை மறுக்கும் இந்த அபத்தத்தை விட்டுவிட்டு பார்த்தால் ஒரு காட்சி மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.

இசை நிகழ்ச்சிகளின் இடையில் அவ்வப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை புள்ளவிவரங்களையும், சில ஆவணப்படங்கள் போன்ற காட்சித் துணுக்குகளையும் காட்டினார்கள். ஒரு ஆப்பிரிக்க குடிசையில் தாயும் சிறு குழந்தைகளும். குழந்தைகள் அம்மாவிடம் பசிக்கிறது என்று அடிக்கடி பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அம்மாவும் சமையல் தயாராகிறது என்று அடுப்பையும், பாத்திரத்தையும் காட்டியவாறு இருக்கிறாள். பாத்திரத்திலிருந்து சமையலின் புகை பரவுகிறது. அதைப் பார்த்தவாறே குழந்தைகள் பின்னர் ஏக்கத்தில் தூங்கிப் போகிறார்கள். உண்மையில் அந்தப் பாத்திரத்திலிருந்த நீரில் ஏதோ சில மரக்குச்சிகள் மட்டுமே இருந்தன. ஏதோ ஒன்று சமைப்பதாக குழந்தைகளை போக்குகாட்டி தூங்கவைக்கும் அந்தப்பெண்ணுக்கு இது தினசரி வாடிக்கை. எந்தக்குறுக்கீடோ, தயாரிப்போ, திட்டமோ இன்றி எடுக்கப்பட்ட இது போன்ற பல காட்சிகளைக் காட்டினார்கள்.

ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.

நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.

___________________________________________________

வசந்த பாலன் அங்காடித் தெருவை எடுப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். இதையெல்லாம் உள்ளொளியில் கண்டு கொள்ளலாம் என்ற ஜெயமோகன்களது மேதைத்தனம் அவரிடமில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இயக்குநர் சேகரித்த விவரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, முரண்பட்டு, வேறு ஒரு உண்மையை, யதார்த்த்த்தை, புதிய கண்டுபிடிப்பை உணரும், கலையும் தத்துவமும் இணைந்து சாத்தியமாக்கும் கதையை அவரால் எழுதமுடியவில்லை. அதுதான் மிகையான சோகக்காட்சிகள் மூலம் காட்டிவிடலாம் என்று போயிருக்குமோ?

முதலாளி அண்ணாச்சியின் சித்தரிப்பு ஒரு எடுத்துக்காட்டு. தீவிர கடவுள் பக்தர், எச்சக்கையை ஆட்டினால் இங்கேயே ஆள் கிடைக்குமென்ற திமிரான எக்காளம், விளம்பரத்திற்காக சினேகாவை முந்தானையை  விரித்து ஆடச் சொல்வது, பொய்ப் புகார் மூலம் கடைச் சிப்பந்தியான லிங்கத்தை போலீசு மூலம் அடிக்க வைப்பது, வியாபார நலனுக்காக எப்போதும் இரக்கமின்றி பேசுவது எல்லாம் முதலாளி அண்ணாச்சியைப் பற்றிய உண்மையான சித்தரிப்புகள் என்றாலும், அண்ணாச்சிகள் என்று பார்த்தாலும், நவீன முதலாளிகள் என்று போனாலும் அவையே முழு உண்மையல்ல.

அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்த நாகரீக முதலாளிகள்தான் அநாகரீக அண்ணாச்சி முதலாளிகளை விட தொழிலாளிகளை மட்டுமல்ல முழு சமூகத்தையும் இழிவாகவும், சுரண்டியும் நடத்தி வருகிறார்கள். சோப்பு, சீப்பு, பாத்திரம், துணி விற்பதற்காக சிநேகவை பளிச்சென்று சிவப்பு கலர் சேலையில் குத்தாட்டம் போடச்சொல்லும் அண்ணாச்சியை விட, கிங்ஃபிஷரின் காலண்டருக்காக ஏதோ ஒரு தீவில் பிகினி, முக்கால் நிர்வாணப் பெண்களைக் கூட இருந்து படமெடுக்கும் விஜய் மல்லையாக்கள்தான் ஆபத்தானவர்கள்.

படத்தின் கதையில் நாயகர்களான கடைச் சிப்பந்திகளது வில்லன்களாகத்தான் அண்ணாச்சி வருகிறார். ஆனால் முதலாளிகளான அண்ணாச்சிகளது ஆளுமையை அப்படி வில்லன் பார்வை இல்லாமலே கூட சாரத்தைச் சரியாகச் சித்தத்திருப்பதன் மூலம் அந்த நோக்கத்தை இன்னும் பரந்த அளவில் செய்திருக்க முடியும். ஏனெனில் அண்ணாச்சிகளின் உருவாக்கம் என்பது அவர்களது தனிப்பட்ட பண்புநலன்களால் மட்டும் உருவாகிவிடுவதில்லை. பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் ‘அப்படி’ இயங்குகிறார்கள்.

____________________________________________________

ஏதோ ஒரு தீபாவளி நாளில் கடைத்தெருவுக்கு சென்ற போது எல்லா கடைகளும் பூட்டியிருந்தன. திறந்திருந்த ஒரு அண்ணாச்சி கடையில் தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டேன். “பொழப்புக்காக மஞ்சப்பையை எடுத்துட்டு என்னைக்கு வந்தமோ அன்னையிலிருந்து தீபாவளியாவது, பொங்கலாவது” சலிப்புடன் சொன்னார்.

அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்த நாடார் மக்கள் பொதுவான சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்ற வளர்ச்சியில் மாறியவர்கள். சுயசாதி முன்னேற்றம், கூட்டுதவியின் மூலம் சற்று நிறுவன மயமான சாதியும் கூட. எனினும் பெரும்பாலான நாடார் மக்கள் செட்டியார்களைப் போல முழுதாக வாழ்க்கையின் பங்கைப் பெற்றவர்களல்ல. சிலர் முதலாளிகளாகவும், பெரும் வியாபாரிகளாகவும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் சிறு கடைகளை வைத்து அதற்குமேல் முன்னேற முடியாத நிலைமையில்தான் காலம் தள்ளுகிறார்கள்.

இந்த சிறு கடை அண்ணாச்சிகளின் வாழ்க்கை அங்காடித்தெரு காட்டும் உக்கிரத்தை விட அவலமானது. அதே போல இந்தக்கடைகளில் பயிற்சிக்காகவும், எதிர்கால பிழைப்புக்காகவும் வரும் இளைஞர்களின் நிலையும் அப்படித்தான். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியைப் போலவோ இல்லை இன்னும் அதிகமாகவோ இந்த சிறு கடை வியாபாரிகள் தனது பணியாட்களை நடத்துவார்கள். “அப்படித்தான் நானும் கஷ்டப்பட்டு இளமையைத் தொலைத்து, தொழிலைக் கற்று கடைவைத்தேன்” என்று அவர்களால் அதை நியாயப்படுத்தவும் முடியும்.

இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட காரணங்களினால் பெரும் கைகளாக உருவெடுத்திருக்கும் சரவணா ஸ்டோர், சரவண பவன் போன்ற சென்னையின் பணக்கார நாடார்களோ, அது போல இதயம் நல்லெண்ணெய் போன்ற பணக்கார விருதுநகர் நாடார்களோ, தினத்தந்தி குழும நாடார்களோ ஆரம்பத்தில் இப்படி இருந்தது உண்மையென்றாலும் அவர்களது ஆளுமையில் நிலவுடமை ஆதிக்கத்தின் சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொருளாதார நலன் சேர்ந்திருக்கிறது.

அவர்களது உழைப்பு, அதற்கு சமூகம் அளித்த வாய்ப்பு, அதைப் பயன்படுத்தி நிதி ஆதாரம் பெறுதல், ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து முன்னேறுதல் மூலம் பணக்காரர்களான இந்த நாடார்கள் தமது நிலையை தங்களது ‘உழைத்து முன்னேறிய’ கதையாக மட்டும் கருதிக் கொள்கிறார்கள். பணம் பெருகப் பெருக இந்தக் கருத்து முன்னிலும் உறுதியாக மாறுகிறது. அதே நேரம் தனது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த சுய முன்னேற்ற கொசுவத்தி இமேஜ் காரணமாக சுயசாதியின் ஏழைகளை நயவஞ்சகமாக சுரண்டுவதற்கும் பயன்படுகிறது.

________________________________________________

சுயசாதி ஏழைகளை வைத்து தொழில் நடத்தும் முதலாளிகளைப் பற்றி தோழர் கார்க்கி அவரது அங்காடிப் பட விமரிசனத்தில் எழுதியிருக்கிறார். அதைப் படியுங்கள். அங்காடித் தெருவில் வசந்த பாலன் காட்டத் தவறிய முக்கியமான விசயம் இந்த சுயசாதி ஏழைகள் சாதிப்பற்று காரணமாக தமது முதலாளிகளை சுயமரியாதை இன்றி ஏற்கவும் செய்கிறார்கள் என்ற உண்மைதான். அதனால்தான் பொதுவில் சாதிக்காரர்கள் மட்டுமோ அல்லது பெரும்பான்மையாகவோ இருக்கும் தொழில்களில் தொழிற்சங்கம் கட்டுவது கடினம். தொழிலாளி வர்க்க உணர்வை சாதிக்காரணம் சொல்லி அழிப்பது முதலாளிகளுக்கு வசதியென்றால், அதற்கு பலியாகியிருக்கும் தொழிலாளிகளைப் பொறுத்தவரை அது விமரிசக்கப்பட வேண்டியது.

தேவர் சாதி நா.சேதுராமன் நடத்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு பெயர் பெற்றது. எல்லா சாதி மக்களும் வந்தாலும் அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான சுயசாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஒரு சொந்த அனுபவத்தோடு ஒரு நண்பர் சொன்னார். அந்த வகையில் இந்த சுயசாதி பற்று சரவணா ஸ்டோர் ஊழியர்களிடமும் இருக்கிறது என்பதை வசந்த பாலன் காட்டியிருக்க வேண்டும். அவர்களது அவலத்தின் முக்கிய அஸ்திவாரமே இங்கேதான் இருக்கிறது. நெல்லையில் நாடார்களாக பார்த்து அதுவும் குடும்பப் பொறுப்புகள் அதிகமிருக்கின்ற இளைஞர்களை பொறுக்கி வரும் விடயத்தைப் போல இதுவும் முக்கியமான ஒன்று.

சரவணா ஸ்டோரில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அடிமைகளாக வாழும் துயரத்தின் வலிமை இந்த சுயசாதிப் பற்றில்தான் பொதிந்திருக்கிறது. அதே போல அந்தக் கடை அண்ணாச்சியின் எடுபிடிகளது இரக்கமற்ற நடைமுறைகளும் இந்த சுயசாதி பலத்தை வைத்தே ஆடுகிறது. அங்காடித் தெரு இதை விரிவாக பேசியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக பயணித்திருக்கும். வில்லனைப் போல இடம் பெற்றிருக்கும் அண்ணாச்சியின் சித்திரிப்பு, ஊழியர்களின் சாதிப்பற்றை விமரிசித்திருந்தால் மட்டுமே முழுமையடைந்திருக்கும்.

இது சரவணா ஸ்டோரோடு முடியவில்லை, இந்தியா முழுமைக்கும் உள்ள பிரச்சினை. தங்களது சொத்து மரபுரிமையால் கிடைத்ததாக எண்ணும் நிலவுடைமைப் பண்ணையாரும், உழைப்பினால் பெற்றதாக கருதும் முதலாளிகளும் பல விசயங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். பண்ணையாரின் ஆதிக்கத்தை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பும், முதலாளிகளின் ஆதிக்கத்தை முதலாளித்துவத்தின் ‘ஜனநாயக’மும் நியாயப்படுத்துகின்றன. மக்களும் அவற்றை இயற்கையான நீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

சில அறிவாளிகள் கருதுவது போல மேற்கத்திய கல்விமுறை, மேலாண்மைப் படிப்புகள் மூலம் முதலாளிகள் ஜனநாயக உணர்வு பெறுவதில்லை. அவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பது தொழிலாளிகள்தான். அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானியின் சொந்த மாநிலத்தின் வணிக சாதி மக்கள் கணிசமான அளவில் பங்குதாரர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல.

___________________________________________

அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.

சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம். இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.

ஆனால் சரவணா ஸ்டோரில் சங்கம் கட்ட முயன்று தோல்வியடைந்ததாக வைத்துக் கூட இதைவிட ஒரு நல்ல படம் எடுத்திருக்க முடியும். இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.

தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.

அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.

அங்காடித் தெரு அந்த ‘வெளிப் பார்வையை’க் கொண்டிருக்கவில்லை. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளின் மூலம் ஊழியர்களின் சோகத்தை காட்டியிருப்பதற்குப் பதில் இந்த வெளியுலகோடு அவர்களை பிணைக்கும் வகையில் யோசித்திருந்தால் ‘அமைதியான’ முறையிலேயே அந்த அவலத்தை வியப்பூட்டும் வண்ணம் பார்வையாளர்களுக்கு நெஞ்சில் அறைந்து சொல்லியிருக்கலாம்.

_____________________________________________

எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ உள்ள சென்னை மாநகரில் வாழும் அந்த கடை ஊழியர்கள் தனித்த பாலைவனத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். இது ஒருவகையில் உண்மையென்றாலும் மற்றொரு வகையில் உண்மையல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்துக் கேட்கும் வல்லமைக்கு சான்றுகள் பெருகி வரும் காலத்தில் ஒரு சூபர்வைசர் மானாவாரியாக அடிப்பதும், கண்ட இடத்தில் கை வைத்தும் பெண் ஊழியர்களை அவமானப்படுத்துவது எப்படிச் சாத்தியம்? இவை சரவணா ஸ்டோரில் நடந்திருக்கலாம். அதையொத்த பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. நடக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆயினும் சமூக யதார்த்தம் என்று வரும்போது இதை நாம் இப்படியே சொல்வது சரியா?

பாலியல் வன்முறைகள் எவ்வளவு நடக்கிறது என்பதை விட அதை எதிர்த்து அவ்வப்போது பெண்கள் காட்டும் எதிர்ப்பும் வளருகிறது என்பதே முக்கியம். சரவணா ஸ்டோரில் எல்லா சூபர்வைசர்களும் அப்படி விகாரத்துடன் நடப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்போதும் பொறுமையாக ஏற்குமளவு அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்க முடியாது.

படத்தில் இந்த எதிர்ப்பு பாதிக்கப்பட்ட கனியின் காதலன் என்ற முறையில் லிங்கத்திடம் இருந்தே வருகிறது. காதலித்த குற்றத்திற்காக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக இருக்கட்டும், இல்லை பெண் ஊழியர்கள் பாலியல் வக்கிரத்துடன் தண்டிக்கப்படும் சமயங்களாக இருக்கட்டும், இதை எல்லோ ஊழியர்களும் அடிமை போல ஒரு முணுமுணுப்புக் கூட இன்றி பேசா மடந்தைகளாக ஏற்றுக் கொள்வதாகவே படத்தில் வருகிறார்கள். சூபர்வைசரின் தலையில் ஒரு மூட்டையைப் போட்டு அவமானப்படுத்தும் காட்சியும், அதன் பிறகு வரும் பாடலும் இந்த பிரச்சினையை ஒரு காமடி போலத்தான் சித்தரிக்கிறது. பாலியல் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் இயக்குநரின் உத்தியை ஏற்க்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் கொடுமைகளை நகைச்சுவையின் மூலம் காட்டிய சார்லிசாப்ளினின் படங்களில் அவை இறுதியில் வெறும் காமடியாக மட்டும் உணரமுடியாத வண்ணம் அழுத்தமான சோகத்தை உணர வைக்கிறது.

அந்தப் பேரங்கடியில் அண்ணாச்சியின் கருங்காலிகளாக வேலை பார்ப்பவர்கள் ரவுடி போல இருப்பது பிரச்சினையல்ல. இதை ஏற்றுக் கொண்டு வேறு வழியின்றி வாழ வேண்டிய நிலையில் இருந்தாலும் ஊழியர்களின் ‘அமைதி’தான் முக்கியமானது. இடித்துரைக்கப்பட வேண்டியது. தன் காதலியின் மீது கைவைத்தான் என்று சூபர்வைசரை பந்தாடும் லிங்கம், கூடவே அமைதியான அடிமைகளாக இருக்கும் தனது சக ஊழியர்களையும், தன்னையும் வார்த்தைகளால் சுட்டிருக்க வேண்டும். தென்மாவட்டங்களின் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் அந்த பெண்களையும் உள்ளிட்ட இளைஞர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் பாராமுகமாக போய்விடக்கூடியவர்கள் இல்லை. அவர்களுக்கு தேவை ஒரு நெருப்பு. அதை படத்திலாவது இயக்குநர் பற்ற வைத்திருக்கலாம்.

_____________________________________________________

கடை ஊழியர்களை நாயக நாயகியாக்கியிருப்பதற்குப் பதில் ஒரு சூபர்வைசரை மையமாக்கி அங்காடி தெருவின் கதையைக் காட்டியிருந்தால் சரவணா ஸ்டோரின் எல்லாவகைப் பரிமாணங்களையும் ஒரு இழையில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 படத்தின் இயக்குநர் மது பண்டார்கர் முதலில் அந்தப் படத்தை மேட்டுக்குடியினரது வாகன ஓட்டுநர்களின் பார்வையில் சொல்ல நினைத்து பின்னர் மாற்றிக் கொண்டாராம். அதை ஏன் என்று அவர் விளக்கவில்லை. ஆனால் பேஜ் 3 உலகத்தின் போலித்தனத்தை அந்த உலகில் வாழக்கூடிய ஒரு பெண் பத்திரிகையாளரின் தடுமாற்றங்களிலிருந்து புரிந்து கொள்வதைப் போல ஏழை ஒட்டுநர்களின் பார்வையில் நிச்சயம் வாய்ப்பில்லை.

சூபர்வைசர்கள் சிப்பந்திகளாகவோ இல்லை அண்ணாச்சியின் உறவினர்களாகவோ இருந்து வந்திருக்கலாம். அவர்களுக்கு கீழ்மட்டத்தின் இயக்கமும், முதலாளியின் இயக்கமும், கடையின் வெற்றிக்கான பின்னணியும் தெரியும். நேர்மையானவராகவும், மனிதாபிமானியாகவும் ஆரம்பிக்கும் ஒரு சூபர்வைசர் பின்னர் அமைப்பின் இயங்குதளத்தில் மெல்ல மெல்ல பக்காவான சூபர்வைசராக மாறுகிறார். அதில் நிலை கொள்ள முடியாமல் தோல்வியடையும் ஒருவரது பார்வையில் இந்தப்படம் சொல்லப்பட்டிருந்தால் அது நாமறியாத அந்தப் பேரங்காடியின் முழுமையை உணர்த்தியிருக்கலாம்.

_________________________________________________

ஏழைகளும், நடுத்தர மக்களும் சரவணா ஸ்டோரை ஏன் விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு அண்ணாச்சி என்ன செய்தார் என்பதையும் அங்காடித் தெரு மருந்துக்கு கூட காட்டவில்லை. மற்ற கடைகளை விட மலிவு என்ற முறையில் மக்களிடம் இருக்கும் அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்காமால் என்ன சோகத்தை ஏற்படுத்த முடியும்? விலை குறைவு, அதிக விற்பனை என்ற சூத்திரத்தை அமல்படுத்தக் கூடிய எல்லா நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் உலகமெங்கும் ஆதிக்கம் செய்யும் வால்மார்ட்டைப் பற்றி கேள்விப்பட்டிராத ஒரு அண்ணாச்சி தனது கடையில் அதை அனுபவத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார்.

சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கினால் அதிகம் உழைக்காது என்று பேசும் மேல்தட்டினர் அதிகம் ‘உழைக்கக்’ கூடிய பெரிய நிறுவனங்களின் உடைகளை உயர் விலை கொடுத்து வாங்கினாலும் அவர்கள் அந்த உடைகளை கிழிந்து போகுமளவுக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஒரு ஆடையை அணிந்த பிறகு பல சுற்று முடிந்த பிறகே அதை மீண்டும் அணிய முடியும் என்ற நிலையில் அவை பழைய துணிகளாக வெளியேறுகிறது. அதுவே பத்து ரூபாய் ரெடிமேடாக தி.நகரின் பாதையோர வியாபாரிகளால் விற்கப்படுகிறது.

சரவணா ஸ்டோரின் விலை மலிவுக்கு என்ன காரணம்? வால்மார்ட்டின் மலிவுக்கான வலியை சீனத் தொழிலாளிகள் சுமப்பது போல ரங்கநாதன் தெருவின் மலிவுக்காக பல சிறு முதலாளிகளும், அவர்களது தொழிலாளிகளும் சுமக்கிறார்கள். எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிப்பவர்கள், பிளாஸ்டிக் பொருள் சிறு முதலாளிகள், தங்க நகை ஆசாரிகள், பட்டு நெய்யும் நெசவாளிகள் எல்லாரும் சரவணா ஸ்டோருக்காக கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள். அற்ப கூலிக்காக பீஸ் ரேட்டில் நெஞ்செலும்பை இழைத்து பாத்திரங்களை பளபளவைக்கும் அந்த தொழிலாளிதான் படோபடமான அங்காடித் தெருவின் அடிப்படை. சரவணா ஸ்டோர் போன்று பெரிய ஆர்டர்கள் வரும் போது அதை ஏற்கும் சிறு முதலாளிகளும் தமது மார்ஜினை தக்கவைப்பதற்கு தொழிலாளிகளை மேலும் சுரண்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஏக ஏழைகளுக்கு கிடைக்கும் மலிவுக்கு இன்னொரு ஏழையே தியாகம் செய்கிறான்.

சரவணா ஸ்டோருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அங்கிருக்கும் ஊழியர்களின் மையமான வேலையாக இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் ‘விற்பனை’ செய்வதற்கான நேரமும், தேவையும் அங்கில்லை. தீபாவளி சமயத்தில் கடை வாசலில் நிற்கும் செல்வரத்தினம் அண்ணாச்சி மக்களை வேறு கடைகளுக்கு போகச்சொல்லி கும்பிட்டவாறே வேண்டுகோள் விடுப்பாராம். பண்டிகைக் காலங்களில் தி.நகரின் மக்கள் கடைகள் அனைத்தும் மக்களை பன்றிக்கூட்டத்தைப் போல நடத்துவார்கள் என்பதை வேலை செய்த தோழர்கள் கூறக் கூட்டிருக்கிறேன். விலை மலிவு என்ற உண்மையில் விற்பவரும், வாங்குபவரும் தங்களது நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாத யதார்த்தம் சிப்பந்திகளிடம் என்ன உளவியலை ஏற்படுத்தியிருக்கும் என்பது ஒரு சுவராசியமான கேள்வி. கேரள ஓட்டல் தொழிலாளிகளின் நடத்தையில் அலட்சியத்தைக் கண்டுபிடித்த ஜெயமோகன், மனமொப்பி எழுதக்கூடிய வசனங்களுக்கு இந்த சீனில்தான் அதிகம் வாய்ப்பு.

_______________________________________________

கடை சிப்பந்திகளது மின்னல்வேக பணிகள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் ஒரு வகை மனித ரோபாக்கள் போலத்தான் இருப்பார்கள். சரவணா ஸ்டோரின் இந்த உடல்மொழி படத்தில் இல்லை. இந்த மனித எந்திர அடிமை வாழ்க்கையை சென்னையின் சேரிகளைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி ஏற்கமாட்டான். வேறுவழியின்றி அவன் ஏற்றாலும் பல்வேறு வகைகளில் முதலாளிகளுக்கு தொந்தரவு கொடுப்பான். எனவேதான் தென்மாவட்டங்ளிலிருந்து வெள்ளேந்தியாக வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் சரவணா ஸ்டோர் மலிவாக விற்க வேண்டுமென்றால் இப்படித்தான் மலிவாக தொழிலாளிகளை நடத்த முடியும். இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை.

நாயகி கனியின் கல்லூரி மாணவி போன்ற பாவனைகளை எக்காலத்திலும் அந்தக் கடையில் பார்க்க முடியாது. சமீபத்திய ஆண்டுகளாகத்தான் அங்கே அதிகம் பெண் ஊழியர்களைப் பார்க்கிறேன். முன்னர் அவர்களது எண்ணிக்கை வெகு சொற்பம். ஏழை ஆண்களை விட பெண்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவது சுலபம் என்பது தமிழகத்தில் சமீப காலமாக நடக்கும் புதிய போக்கு. அந்தக் கோணத்தையும் வசந்த பாலன் உணர்ந்திருக்கவில்லை.

கனியை சற்று அழகாக காட்டவேண்டுமென்பதற்காக மற்ற பெண்களை வேண்டுமென்றே கருப்பைக் கூட்டிக் காண்பித்திருப்பது நல்ல இரசனையல்ல. சொல்லப் போனால் நாயகியே அப்படி கருப்பாக இருந்திருந்தால் பிரச்சினையல்ல. சிப்பந்திகளின் அவலத்தை கருப்பான நாயகியின் மூலம் உணர்த்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் நாம் எந்த அவலத்தை பற்றி முதலில் கவலைப்படவேண்டும்?

கடுமுழைப்பில் இருக்கும் இத்தகைய தொழிலாளிகளின் வாழ்வில் சினிமா, கிரிக்கெட் போன்றவைதான் முக்கியமென்றாலும் அது விரும்பிய பொழுதுபோக்கா, இல்லை எளிதில் கிடைக்கும் பொழுதுபோக்கா என்பது பரிசீலனைக்குரியது. விளம்பரத்திற்காக சிநேகா அக்கா வருவதை திருவிழா போல சிப்பந்திகள் கொண்டாடுவது பிரச்சினையல்ல, பொய்யுமல்ல. ஆனால் விளம்பரமே தேவைப்படாத அந்தக் கடைக்கு பல இலட்சம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும், அந்த செலவின் சிறிய பங்கு கூட தொழிலாளிகளின் வாழ்வை நன்கு மேம்படுத்தியிருக்கும் என்பது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ வந்திருக்கவேண்டும்.

இந்த விமரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா விசயங்களையும் ஒரு சினிமாவாக எடுக்க முடியுமா, எடுத்தால் அது சினிமாவாக இருக்குமா என்று சிலருக்குத் தோன்றலாம். சினிமா நவீன கலை, இலக்கியங்களின் முன்னேறிய வடிவம். இரண்டு மணி நேரத்தில் இரண்டாம் உலகப் போரையே காட்ட முடியுமென்றால் அதோடு ஒப்பிடும்போது சரவணா ஸடோரின் களமும், காலமும் குறுகியதுதான். அதைக் கண்டுபிடிக்கும் கலையை இயக்குநர் அறிந்திருக்கவில்லை என்பதே பிரச்சினை. அவர் வெறும் விவரங்களின் சேர்க்கையில் ஒரு காதல் கதையை எழுதியிருக்கிறார். மற்றபடி படத்தில் எந்தத் தேவையுமின்றி வரும் ஊர்க்காட்சிகளும், பாடல்களும் நிறைய அடிகளைச் சாப்பிட்டிருக்கின்றன.

தமிழக ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கத்திற்கு சென்னையின் தி.நகர் என்பது எப்போதும் அள்ளிக்கொடுக்கக் கூடிய ஒரு அமுதசுரபி. அதனால் மட்டும்தான் அந்த குறுகிய தெருவில் எல்லா வகை விதிகளையும் மீறி சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் பிரம்மாண்டமாக எழுந்திருக்கின்றன. தி.மு.கவின் தில்லை நகர் தளபதி ஜே. அன்பழகனைப் போன்றவர்கள் யாரேனும் படத்தில் ஒரு பாத்திரமாக வந்திருக்க வேண்டும். கடைச் சிப்பந்களின் அடிமைத்தனத்தை காப்ப்பாற்றுவதில் அரசே முக்கிய பங்கு வகிக்கிறது.

______________________________________________

இதற்கு மேல் படத்தில் வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றாலும் பக்தர்களின் நலனுக்காக சில சாம்பிள்கள். கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். அவரால் தனது மகனுக்கு கலைக் கல்லூரி படிப்பை அதுவும் அரசு கல்லூரியில் மட்டுமே அதிகபட்சம் தரமுடியும். ஆனாலும் நாயகர்களை குறுகிய காலத்தில் வென்று காட்டும் சூப்பர்மேன்களாக கருதும் மனநிலையிலிருந்து ஜெயமோகனும் மாறவில்லை.  ஏழைகள் எவரும் நடுத்தர வர்க்கத்தைப் போல கனவுலகில் வாழ்வதில்லை. விருப்பங்கள் இருந்தாலும் அவர்கள் யதார்த்தத்தின் எல்லையை மீறாமல்தான் சிந்திப்பார்கள், பேசுவார்கள்.

மாடிப்படியில் தண்ணீர்  குடித்ததைப் போட்டுக் கொடுத்த சக ஊழியனை கோபத்தில் அடிக்கும் லிங்கம், வீட்டில் தான் ஒரு துரும்பு கூட எடுக்காமல் இருக்கும் வண்ணம் தந்தை பாராட்டி வளர்த்திருக்கிறார், இப்போது அவரில்லாத குடும்பத்தின் கஷ்டத்திற்காக இந்த அடிமைத்தனத்தை சகிப்பதாகவும்  பேசுவான். இது சூபர்வைசரிடம் அடிபட்ட சோகத்தை அதிகப்படுத்துவதற்காக காட்டப்படும் மிகையான பொய். விவசாயிகள், கிராமப்புறத்தினர் போன்ற உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள் இயல்பாகவே தமது வீட்டில் பல வேலைகளைச் செய்வார்கள். அதில் கூச்சமெல்லாம் பார்க்க மாட்டார்கள். வீட்டிற்கு வெள்ளையடிப்பதோ, சமயத்தில் சமைப்பதோ, மூட்டைகள் தூக்குவதோ சாதாரணம்.

வறுமையென்றாலும் விசாலமான கிராமப் புறத்தில் வாழும் அவனுக்கு நகர்ப்புறத்து அடைசல் வாழ்க்கையில் ஒன்றுவதுதான் கடினமாக இருக்கும். மற்றபடி பட்டினி, இருப்பதை வைத்து வாழும் பண்பு, அதை  நினைத்து எப்போதும் எரிச்சலடையாமல் இருப்பது என்பன போன்ற அவர்களது உளவியலை ஜெயமோகன் அறிந்திருக்கவில்லை. கிராமப்புற ஏழைகள் உழைப்புக்கும், வசதிகள் இல்லாத வாழ்க்கைக்கும் அஞ்சுபவர்களல்ல. ஏதோ அவர்களெல்லாம் வாழ்ந்து கெட்டவர்கள் போல ஜெயமோகன் கருதுகிறார். அல்லது எல்லா ஏழைகளும் விடுதலை பெற ஒரே வழி அவர்களெல்லாம் முதலாளிகளாவாது என்பதே இப்படி சுய புலம்பல் வசனங்களாக வருகிறது.

அதே போல கனி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை அழது கொண்டு கூறுவதும் யதார்த்தமல்ல. உழைக்கும் பெண்கள் யாரும் தமது துயரங்களை வரவிருக்கும் பொற்கால வாழ்க்கையின் கசப்பு நினைவுகளாக கருதுவதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் யதார்த்தம். சரியாகச் சொன்னால் ஒரு சோகமான புன்னகையோடு, கொஞ்சம் கிண்டலாக  கனி சொல்லியிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். இதிலும் ஜெயமோகனது வாழ்ந்து கெட்டவர்கள் என்ற நடுத்தர வர்க்கத்தின் உளவியலே வேலை செய்கிறது. ஏழைகளைப் பற்றிய பார்வை இயக்குநருக்கே சரியாக இல்லாத போது வசனகர்த்தாவிடம் அதை எதிர்பார்ப்பது அதிகமோ?

“யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கும்” என்ற பொருளற்ற, காலத்தின் உணர்வற்ற, கவித்துவமான வசனமெல்லாம் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் கனியின் தங்கை நாகம்மை பெரிய மனிசியாக மாறிய பின் வரும் காட்சியில் தனது தங்கை லிங்கத்தை யாரென்று அடிக்கடி கேட்டதாக கனி கூறும் போது “நீ என்ன சொன்னாய்” என்று லிங்கம் கேட்பான். ஒரு அழகான மௌனம், புன்னகைக்குப் பிறகு, சிரிச்சேன் என்று கனி கூறுவதுதான் நம்மைக் கவர்ந்த ஒரே இடம். ஆக ஜெயமோகன் எழுதாமல் அமைதியாக அடங்கும் இடம்தான் பிடித்திருக்கிறது என்றாலும் இந்தக் காட்சியின் அழகு அதை சிறப்பாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் பங்கின்றி மிளிர்ந்திருக்காது என்பதும் உண்மை.

“தன் வீட்டில் சொத்தில்லை, உனது வீட்டில் டவுரி கொடுக்குமளவு வசதியில்லை” என்பதாலேயே இரு குடும்பங்களின் நன்மைக்காக காதல் பற்றி தயக்கம் அடைந்ததாக லிங்கம் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை. ஏழைகள் ஆண்டைகளைப் பற்றி கேலிதான் பேசுவார்களே தவிர அந்த இடத்தில் தங்களை பொருத்திப் பிரச்சினைகளை பேசமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது விதியை நொந்து கொள்ளும் சுய எள்ளலாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.

ஏழைகள் வாழ்வில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிச் செல்லும் ஒரு எளிமையான அழகான கனவு அவர்களிடம் உழைப்பு என்ற வர்க்கப் பண்பாய் வெளிப்படுகிறது. அதுதான் அவர்களைத் திரட்டி அந்த ஏழைமையை விரட்ட முடியுமென்ற நடைமுறை நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்றுவித்திருக்கிறது. ஏழ்மையின் அந்த ‘அழகை’ இயக்குநரும், வசனம் எழுதியவரும் புரிந்து கொள்ளவில்லை.

_____________________________________________

இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும். இந்த விமரிசனம் கூட அத்தகைய முயற்சியில் ஒன்றுதான்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.

சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

இப்பகுதியிலுள்ள பஞ்சாலை, வெங்காயப் பதப்படுத்தும் ஆலை முதலானவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். விவசாயம் சார்ந்த சிறுதொழில் நிறுவனங்களில் 3000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் உருவான சிறிய நீர்த்தேக்கங்கள் மூலம், இப்பகுதியில் உப்புநீர் பரவாமல் தடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில் நிர்மா திட்டம் அமைந்துள்ளது. மேலும், சிமெண்ட் ஆலையால் 50,000 விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படும். சுற்றுச் சூழல் நாசமாகும். அதேசமயம், நிர்மா உருவாக்கும் ஆலையால் ஏறத்தாழ 500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

அரசின் கொள்கை முடிவை எதிர்த்தும், நிர்மா நிறுவனத்தின் குண்டர்களையும் போலீசையும் எதிர்த்தும் விடாப்பிடியாக விவசாயிகள் போராடியதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச் செயலரான ஷீலத் தலைமையிலான குழுவை அமைத்து, மக்களின் புகார்களைப் பரிசீலித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் போவதாக மோடி அரசு நாடகமாடியது. அதற்கேற்ப இந்தக் குழு, பாதிக்கப்படும் மக்களையோ, அல்லது இந்தப் பகுதியையோ பார்வையிடாமலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, கடந்த டிசம்பர் 13-ஆம் நாளன்று விவசாயிகள் வன்கார் எனும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த இப்பகுதியின் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியா, மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். உள்ளூர் விவசாயத் தலைவர்களை நிர்மா நிறுவனத்தின் அடியாட்கள் தாக்கினர். கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை போலீசார் அடித்து விரட்டினர்.

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதியன்று, நிர்மா நிறுவனத்தின் சிமெண்ட் ஆலைத் திட்டத்துக்கு எதிராக அமைதியாக ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது போலீசு தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியது. பொய்வழக்கு சோடிக்கப்பட்டு முன்னணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாளில் தோலியா கிராமத்துக்குச் செல்லும் வழியில் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியாவும் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். அவர்களது வாகனங்கள் நாசமாக்கப்பட்டன.

அரசின் ஆதரவோடு தொடர்ந்து இத்தகைய தாக்குதல்கள் நடப்பதால், இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பொதுக் கருத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, இப்பகுதி விவசாயிகள் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று, அகமதாபாத்தில் காந்தி உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திநகர் நோக்கி பெருந்திரளாக ஊர்வலம் நடத்தி, அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காகத் திரண்டனர். இந்த மனுவில் பாதிக்கப்படும் விவசாயிகள் 11,111 பேர் தமது இரத்தத்தால் கையெழுத்திட்டுள்ளனர்.

பெண்கள்-குழந்தைகள் என்றுகூடப் பாராமல், ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்திய போலீசார், 5,500-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா, இப்பகுதியின் பா.ஜ.க.எம்.எல்.ஏ.வான கனுபாய் கல்சாரியா, முன்னாள் பா.ஜ.க. நிதியமைச்சரான சனத்பாய் மேத்தா, சமூக சேவகி இலாபென் பதக், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் ஷா ஆகியோர் உள்பட பல பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் தமது வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருவதால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உள்ளூர் பா.ஜ.க.வினரும் இந்த நியாயமான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். பயங்கரவாத மோடி அரசோ, இந்த வட்டாரத்தில் மக்களிடமிருந்து – அதாவது, பெரும்பான்மை இந்துக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட்டு நிற்கிறது.

தமது கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகளோடு சேர்ந்து பா.ஜ.க.வினர் போராடிய போதிலும், அக்கட்சித் தலைமை அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பிற பகுதியிலுள்ள பா.ஜ.க.வினரும் இப்போராட்டத்தை எதிர்க்க முன்வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்த போது, “குஜராத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்!” என்று எச்சரித்த உயர்நீதி மன்ற நீதிபதி, இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

சட்டிஸ்கரின் தண்டேவாடா, மே.வங்கத்தின் லால்கார், மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூர், ஒரிசாவின் நாராயணப்பட்னா போலவே இன்று குஜராத்தின் மாகுவா மாறியுள்ளது. போராடும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எந்த ஓட்டுக் கட்சியானாலும் எந்த மாநிலமானாலும் இவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. மக்களின் வாழ்வுரிமையை விட முதலாளிகளின் சூறைாடல்தான் ‘வளர்ச்சி’க்கு முக்கியமானது என்பதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கையாகிவிட்டது.

டாடாவின் நானோ கார் தொழிற்சாலை தொடங்க தாராள சலுகைகளை அள்ளிக் கொடுத்து, தொழில் ‘வளர்ச்சி’யில் குஜராத் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகக் காட்டிக் கொண்ட மோடி அரசு, இப்போது தமது மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அத்தகைய ‘வளர்ச்சி’யை அடக்குமுறை மூலம் சாதிக்கக் கிளம்பியிருக்கிறது. இந்துத்துவ ஆட்சி என்றால் அது உள்நாட்டு – வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கு விசுவாச சேவை செய்யும் பயங்கரவாத ஆட்சிதான் என்ற உண்மையையும் நாட்டு மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.

_______________________________________

– புதிய ஜனநாயகம், ஏப்ரல்-2010.

_______________________________________

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!

10


vote-012திருவண்ணாமலையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனராக பணிபுரியும் ஏழுமலை, தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கருணைக்காக படி ஏறி இறங்கி அலைந்துகொண்டிருக்கிறார். இவர் செய்த குற்றம்தான் என்ன? முதலாளிகளுக்கே பிடிக்காத சம்பள உயர்வு கேட்டதுதான்.

வேலைக்கு சேர்ந்தபோது ஒவ்வொரு ஆண்டுக்கும் சம்பள உயர்வு உண்டு என்று நிர்வாகம் கூறியதை நம்பி ஒன்றரை ஆண்டாகியும் சம்பள உயர்வு தரவில்லையே என்று தலைமை அலுவலகத்தில் கேட்க “அதெல்லாம் கிடையாது. இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா வேலையைவிட்டு போங்க” என்ற பதிலால் விரக்கதியடைந்தார்.

கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் இது எனபதால் இந்த மாவட்டத்திலுள்ள ஓட்டுனர்களை திமுகவின் அடிப்படை உறுப்பினராக ஒன்று சேர்த்து  முதல்வரிடம் மனுக்கொடுப்போம் என்று திட்டமிட்டார். அவ்வாறு 22 ஓட்டுனர்களையும் திமுகவில் இணைத்தும்விட்டார்.

“நாம் காசைக்கொட்டி முதல்போட்டு தொழில் தொடங்கி இவனுங்களுக்கு வேலை கொடுத்தால் நம்மையே கேள்வி கேட்குறானுங்க” என்று முதலாளிகள் கோபப்படும் படும்போது, சங்கம் கட்டுறோம், மனுக் கொடுக்கிறோம்னு கிளம்பினால் முதல் போட்டவன் சும்மா இருக்க முடியமா?

திருவண்ணாமலைக்கு துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தபோது அவரிடம் மனுக்கொடுத்த குற்றத்திற்காக ஏழுமலைக்கு வேலை போய்விட்டது.

மற்ற ஓட்டுனர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததால் அம்மாவட்டத்தின் நிர்வாக அதிகாரி EO( Executive Officer)  அறிவுக்கரசு அனைவரையும் தனித்தனியாக “வேலையைவிட்டு தூக்கிடுவோம்” என்று மிரட்டியிருக்கிறார்.

_____________________________________________

இந்த ஓட்டுனர்களது கோரிக்கையையின் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களின் தொழிலைப் பற்றியும் சம்பளம் பறறியும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.

“குட்மார்னிங். திருவாடானை EMT – ங்களா?

குட்மார்னிங். ஆமாம்.

கேஸ் (case) –ல இருக்குறீங்களா?

இல்லை. Free –யா இருக்கிறோம்.

ஓகே! திருவாடானை தாலுகா.

ஓகே.

வலசைப்பட்டினம்

ஓகே

கிழக்குத்தெரு

ஓகே

அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகில்

ஓகே

Caller name (அழைத்துள்ளவர் பெயர்) அறிவழகன்

ஓகே

Phone number (தொலைபேசி எண்) 9487985126

ஓகே

ID number ( case ID number) 8745674

ஓகே. புறப்பட்டுடோம்.”

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸதூரிபாய் காந்தி பிரசவ மற்றும் குழந்தைகள் மருத்துவமனை  கட்டிடவளாகத்தின் ஒரு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் GVK EMRI ( GVK Emergency management Research institute) செயலகத்தின் செய்தி அனுப்பும் பிரிவிலிருந்து (dispatch section) வரும் செய்தியை செல்பேசியில் பேசிக்கொண்டே தகவல் வந்த நேரத்தையும் சேர்த்து மளமளவென்று குறிப்பேட்டில் குறித்துக்கொள்கின்றனர் இந்த EMT (Emergency Medical Technician) எனப்படும்  ஆம்புலன்ஸ் வண்டியின் மருத்துவ உதவியாளர்கள்.

அடுத்த கணம் வண்டியை நகர்த்திக்கொண்டே ஆம்புலன்ஸ் உதவி கேட்டவரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டு “108 புறப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம். (பெரும்பாலும் அரை மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வகையிலேயே 108ன் வாகனங்கள் 30கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒன்று என நிறுத்தப்பட்டுள்ளன) உங்கள் தொலைபேசியை ஸ்விட்ச்ஆஃப் (switch-off) செய்துவிடாதீர்கள். பிஸியாக வைத்திருக்காதீர்கள்” என்ற தகவலை சொல்லிவிட்டு ‘சைரன் ஒலிக்க’ செயலில் சுறுசுறுப்பையும் மனதில் நிதானத்தையும் கொண்டு விரைந்திடும் இவர்களின் சேவை வெறுமனே சொற்களால் மட்டும் பாராட்டக் கூடியதாக இல்லை.

விபத்து அல்லது நோயாளியின் இடத்தை அடைந்ததும் மளமளவென்று இறங்கி ஸ்ட்ரெச்சரை எடுத்து பாதிக்கப்பட்டவர்களை வண்டியில் ஏற்றி புறப்படும்வரை  அவர்கள் அங்கிருப்போரின் மனநிலையை சமாளிப்பது ஒரு நெருக்கடியாகவே உள்ளது. நோயாளிக்குத் தகுந்தவாறான அமைப்பில் ஸ்ட்ரெச்சர் அல்லது தள்ளு வண்டியைப் பயன்படுத்தி மேலும் பாதிப்பு உண்டாகாத நிலையில் நோயாளியை ஏற்றுவதற்குள் அங்கிருப்போரின் ‘எப்படியாவது சீக்கிரம் வண்டியில் ஏற்றுப்பா’ என்ற அவசர மனநிலையை சமாளித்து பின் வரும் உயிர்நிலைச் சோதனையை (Vital Test) செய்யவேண்டும். இதனடிப்படையிலேயே முதலுதவியைச் செய்ய வேண்டும் எனபதால் இது அவசியமாகும். முதலுதவி என்பதைவிட, செயலகத்திலிருந்து  தொடர்புக்கு வந்துவிடும் மருத்துவருடைய வழிகாட்டுதல்படி நோய்க்கான சிகிச்சையையே தொடங்கிவிடுகின்றனர். அதற்கான சிறப்பு பயிற்சியும் பெற்றவர்கள் இந்த EMT எனப்படுபவர்கள்.

உயிர்நிலைச் சோதனைகள்;

1. கண்விழிச் சோதனை. (Pupil Test): மயக்கமாகவோ, மூச்சு பேச்சற்றோ இருப்பவர்களின்  இமையை நீக்கி கண்ணில் டார்ச் ஒளியைசை செலுத்தி கண்விழிப் பாப்பா (Pupil) விரிந்து சுருங்குகிறதா என்று சோதிக்கவேண்டும். விரிந்து சுருங்கினால்தான் உயிர் இருப்பதாகப் பொருள்.

2. விலக்கப்படும் இரத்தம் மீளும் சோதனை (Capillary Test): விரல்நுனியில் இரத்தம் விலக அழுத்தி மீண்டும் இரத்தம் நிரம்பும் நேரத்தைக் கணக்கிடல். 2 வினாடிகளுக்குள் நிரம்பவேண்டும்.

3. நாடித்துடிப்புச் சோதனை. (Pulse rating test)

4. இரத்த அழுத்தம்  (Blood pressure) சோதனை.

5. உடலின் நீர்ச்சத்து நிலை (SpO2 saturation status)

கடைசி மூன்று சோதனைகளும் பாதிக்கப்பட்டவரை இசிஜி (ECG) எந்திரத்துடன் இணைப்பதன் மூலம் அறிந்து குறிப்பேட்டில் குறித்துக்கொள்கின்றனர்.

உயிர் இல்லை என்பது நிச்சயமாகிவிட்டால், இருதயம் நின்று 5 நிமிடத்திற்குள் இருக்கும் என்று யூகித்திருந்தால் இருதயத்தை மீண்டும் இயங்கவைக்கும் எந்திரமான De-fibrillation வசதியுள்ள ஆம்புலன்ஸ் வண்டியிலுள்ள EMT -கள்  அதனைப் பயன்படுத்தி உயிர்பிழைக்கவைக்க முயற்சிப்பர்.

அடுத்து நிறையபேர் உடன் வருகிறோம் என்று வண்டியில் ஏறுவதை சமாளிக்கவேண்டும். அதிகபட்சம் 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதியாம். அப்பொழுதுதான் வண்டிக்குள் வைத்து தேவையான மருத்துவ வசதிகளை செய்ய முடியும் எனகின்றனர். ஆனால் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலும் அதற்கு ஒப்புக்கொளள்ளாமல் நான்கைந்து பேராக உடன் செல்லவே முயற்சிப்பார்களாம். அவர்களின் மனநிலையில் அது சரியாகப் பட்டாலும் நோயாளிக்கு அது பாதகமாகவே முடியும் என்பதால் இரு துணை நபர்களை மட்டும் ஏற்றிச் செல்வதற்கு சற்று சிரமப்படுகின்றனர்.

அடுத்ததாக மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதில் மூன்று விதிமுறை உள்ளன.

  1. நோயாளியின் விருப்பம்  அல்லது துணைக்கு வருபவர்களின் விருப்பம் (Attender”s Choice)
  2. அருகில் வசதியுள்ள மருத்துவமனை. EMT-ன் பரிந்துரை
  3. கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை போதிய வசதியில்லாதபோது வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது. இதற்கு அம்மருத்துவமனை மருத்துவர் தக்க காரணத்துடன் செயலகத்திலுள்ள மருத்துவருக்கு பரிந்துரைத்து எழுதிக்கொடுக்க வேண்டும்.

நோயாளியோ, துணைக்கு வருபவர்களோ தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை தகுந்த வசதியில்லாததாக இருந்தால் நோய்க்கு தகுந்தவாறான மருத்துவமனைகளை EMT பரிந்துரைக்கிறார். முற்றிலும் பொருத்தமில்லாத மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகின்றனர்.

இதற்கிடையில் செயலகத்தின் மருத்துவரின் வழிகாட்டல் செல்லிடைபேசியில் தொடர அவருடன் தமது குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டு மருத்துவர் கூறும் சிகிச்சையை ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமான மக்கள் பிரச்சனையை நேரில் சந்திக்கும் சற்று ஆபத்தான தொழிலில் உள்ளவர்கள். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பாதிப்புக்குள்ளானவர்களின் இடத்திற்குச் செல்லாவிட்டால் கடுமையான விளைவுகளையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அதுவும் ஆளுங்கட்சிக்காரர்களின் அழைப்பு என்றால் ஆபத்து கூடுதலாகவே உள்ளது. காலதாமதத்திற்கு சாலை அமைப்பு, போக்குவரத்து இடையூறு, வண்டியில் எற்படும் பழுது போன்று ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் என்ற ஊரில் திருமணவீட்டில் லாரி ஒன்று புகுந்து பலபேர் காயமுற்றும் நான்கைந்துபேர் உயிர் கவலைக்கிடமாக இருந்தபோது அவ்வூருக்கு அருகிலுள்ள திருவாடானையின் 108,  மற்றும் தேவிபட்டினம் 108ம் வேறுநோயாளிகளுக்காக சென்றுவிட்டதால் சற்று கூடுதல் தொலைவிலுள்ள நைனார்கோவில் 108, தங்களின் வரம்புக்கு உட்படாத ஊராக இருந்தும் விபத்தினை ஏற்றுகொண்டு சென்றுள்ளனர். கூடுதல் தொலைவாக இருந்தும் அரைமணி நேரத்தில் சென்றுள்ளனர். ஆனாலும் காலதாமதமாக வந்ததாக அந்த 108 கல்லெறி தாக்குதலுக்கு உள்ளானது. திருமண விருந்தில் மப்பு கூடுதலாக இருந்த கருப்பு-சிவப்பு வேட்டிக்கரை அல்லக்கைகள் தங்கள் வீரத்தைக்காட்ட உயிர் காக்கப் போனவர்கள் உயிர்பிழைக்க தப்பி ஓடவேண்டியதாகிவிட்டது. (18-02-2010 தினகரன் நாளிதழின் மதுரைப் பதிப்பை பார்க்க)

நாளொன்றுக்கு இருமுறை வண்டியை சுத்தம் செய்வது, வண்டியிலேயே பிரசவமானால் பிரசவம் பார்த்து குழந்தையைப் பராமரிப்பது, அதனால் எற்படும் கழிவுகளை சுத்தம் செய்வது, மலம் சிறுநீர் கழித்துவிட்டால் சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் இவர்களே செய்ய வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளியா எனபது தெரியாமல் அந்நோயாளிகள் இரத்தக் காயமுற்றிருந்தாலும் பராமரிக்க வேண்டிய அபாயமும் இவர்களுக்கு உண்டு. ஒரு நோயாளியை இவர்கள் ஏற்றுக்கொண்டால் 17 பதிவுக் குறிப்பேடுகளில் விவரங்களை இவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து உணர்ச்சிபூர்வமான மனநிலையில் உள்ள மக்களுக்கு சேவைசெய்யும் இவர்களின் வாழ்க்கை அத்துக்கூலிக்கு அல்லல்படும் கொத்தடிமையாக உள்ளது.

__________________________________________________

சத்யம் EMRI ஆக இருந்து அதன் முதலாளி ராமலிங்க ராஜு மொத்தமாக சுருட்டிக்கொண்டு திவாலக்கிய பிறகு, GVK-EMRI ஆன இந்த நிறுவனம் தமிழக அரசுடன் செய்துக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் “இலாப- நட்டமற்ற சேவைக்கான ஒப்பந்தம்” (No Loss – No Profit) என்று கூறுகிறது. இப்படி கருணை உள்ளம் கொண்ட GVK- விற்கு தமிழகஅரசு ஆண்டுக்கு வழங்கும் தொகை 4200 கோடி ரூபாய்கள். அது மட்டுமல்லாது ஒரு பிரசவ சேவைக்கு 2000 ரூபாயும், பிற வகையின சேவை ஒன்றுக்கு 1500 ரூபாயும் தனி.

ஏற்கனவே தமிழக அரசு 1056 என்று இயக்கிய ஆம்புலன்ஸ் வண்டிகளை 108க்கு வழங்கப்பட்டே தமிழகத்தில் இச்சேவை தொடங்கப்பட்டது. மொத்தம் இயங்கும் வண்டிகள் 385. இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் (Portable), Nebulizer, ECG போன்ற அனைத்து வகை கருவிகளுடனான ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் மதிப்பு ஏற்குறைய 15 இலட்சங்களாம். இதில் ALS  என்று அழைக்கப்படும் வண்டிகளில் இதயம் நின்ற 5 நிமிடத்திற்குள் மீண்டும் உயிரூட்டும் Automate External Defibrillator (AED) என்ற கருவியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வகை வண்டிகள் மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு, மாநகராட்சிக்கு 4 என சுமார் 50 உள்ளன.

இப்படி அனைத்து வசதிகளுடனான ஆம்புலன்ஸ் வண்டிகளையும், ஆண்டுக்கு 4200 கோடிகளையும், ஒரு கேஸ் அழைத்துச் சென்றால் அதற்கான செலவுத் தொகையையும் பெற்றுக்கொண்டு சல்லிக்காசு இலாபமில்லை என்று சத்தியம் செய்து நம்மை நம்பச்சொல்லும் GVK EMRI, 8 மணி நேரம் வேலை 16 மணிநேரம் ஓய்வு, வாரம் ஒருநாள் விடுப்பு என்று வேலைக்கு சேர்ததுவிட்டு  12மணிநேர வேலை, 12 மணிநேர ஓய்வு, வாரம் 12 மணிநேரம் மட்டுமே விடுப்பு என்று வேலைவாங்கிக்கொண்டு,  EMT (Emergency Medical Technician) கொடுக்கும் ஊதியம் பிடித்தம் போக ரூ 5571, வண்டி ஓட்டுனர்களுக்கு (Pilot)  4716.

இந்த சம்பளத்திற்குள்ளேயே போக்குவரத்துச் செலவு, மூன்றுவேளை உணவு, தங்குமிடம் இன்னும் பிறவற்றையும் செலவு செய்தது போக குடும்பத்திற்கு 2000த்திலிருந்து 2500 ரூபாய்வரை கொடுப்பதே பெரும்பாடாக உள்ளது என்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்று கூறிய நிர்வாகம் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளதால் 12 மணிநேர வேலையையும் பொறுட்படுத்தாது, நிர்வாகம் வாக்களித்த சம்பள உயர்வாவது கிடைக்காதா என்று துணைமுதல்வரிடம் மனுக்கொடுக்கப்போய் ஏழுமலை இன்று வேலையை இழந்து நிற்கிறார்.

அடுத்து இலட்சக்கணக்காணோர் இந்தவேலைக்கு வரிசையில் (ரிசர்வ் பட்டாளம்) உள்ளதால் GVK-EMRI தனது எடுபிடிகளான அதிகாரிகளை வைத்து அனைவரையும்.மிரட்டுகிறது. 5500 சம்பளத்தில் கொத்தடிமைகளாக இவர்கள் பணியாற்ற, மாண்புமிகு துணைமுதல்வரோ 108 எங்கள் ஆட்சியின் சாதனை என்று பொன்னகரம் இடைத்தேர்தலில் உச்சிமோந்து வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு கேட்கிறார்.

இதுதான் நவீன முதலாளித்துவக் கொத்தடிமைத்தனத்தின் தனிச்’சிறப்பு’. மக்கள் நலத்திற்காக உருவான அரசுகள் இன்று தமது சேவைகளைக்கூட முதலாளிகளுக்கு ஆதாயம் அடையும் வண்ணம் மாற்றிவிட்டனர். இத்தகையச் சுரண்டலிலிருந்து மீள்வதற்கு தி.மு.கவில் சேருவதும், மனுக் கொடுப்பதும் பலனளிக்காது என்பதை தொழிலாளிகள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை அதன் சமூகம் தழுவிய அளவில் புரிந்து கொண்டு வேலை செய்யும் புரட்சிகர அமைப்புக்களில் அவர்கள் அணிதிரண்டால் இந்த உயிர்காக்கும் சேவையின் முக்கியத்துவத்தை, எவருக்கும் எந்த ‘மொழி’ தேவைப்படுகிறதோ அதில் புரியவைக்கலாம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !

vote-012அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர – மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடு பெருக்கக்  கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)  இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் இவரது ஒருநாள்  வாழ்க்கை, மதியம் கிடைக்கும் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் வேலை எனத் தொடர்கிறது. வீடு திரும்ப தினமும் இரவு 9 மணி  ஆகிவிடுகிறது. நான்கு வீடுகளில் கடினமாக உழைத்தாலும் கிடைக்கும் சம்பளமோ, வீட்டுவாடகை, மளிகைச் செலவு போன்றவற்றிற்குப் போதுமானதாக இல்லை.
கண்ணம்மாவைப் போல, அடுத்தவர்களின் வீட்டு வேலைகளைச் செய்யும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியா முழுக்க 9  கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதில் 20 சதவீதத்திற்கும் மேல் குழந்தைத் தொழிலாளர்கள்.

எங்கிருந்து இவர்களெல்லாம் வருகின்றனர்? கிராமப்புறங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாயம், பல குடும்பங்களை நகரை நோக்கி  விரட்டுகின்றது. நகரங்களில் கிடைக்கும் வேலைகளை ஆண்கள் செய்தாலும், அதில் கிட்டும் வருமானம், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்கே  போதுமானதாக இல்லாததால், பெண்கள் வீட்டுவேலைகளுக்குச் செல்லத் தயாராகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காடுகளையும் மலைகளையும் கிராமங்களையும் தாரைவார்த்த தனியார்மய உலகமயக் கொள்கை, அங்கிருக்கும் இலட்சக்கணக்கான பழங்குடியினரை விரட்டியடித்து வருகிறது. அவர்களில் கணிசமான பேர்கள் இந்தப் பணிகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 12 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் வீட்டுப் பணியாளர்களுக்கு உடற்சோர்வு, மயக்கம், தோல் எரிச்சல்,  ஒவ்வாமை, முதுகுவலி போன்ற தொழில்சார்ந்த நோய்கள், மாதம் ஒருமுறையாவது முடக்கிப் போட்டுவிடும். அதனால் வேலைக்கு வர இயலாத நாட்களுக்கு பல வீடுகளில் சம்பளத்தைப் பிடித்துவிடுவதை, ஏன் என்று கேட்கமுடியாது. கேட்டால் ‘நாளையிலிருந்து நின்றுகொள்’ எனச் சொல்லிவிட்டு, வேறு ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். சிகிச்சைக்கென மருத்துவரிடம் போனாலோ குறைந்தது ரூ. 100 ஆகிவிடும் என்பதால், பெரும்பாலும் கைப்பக்குவத்திலேயே வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். இவர்களை விடக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்ய ஆட்கள் நிறைய இருப்பதால், சம்பளத்தை உயர்த்தச் சொல்லிப் பேரம் பேசுவது கூட இவர்களின் வேலைக்கு வேட்டு வைத்துவிடுகிறது.

வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் நிலையோ பரிதாபகரமானது. 8 அல்லது 9 வயதிலேயேபெற்றோரை விட்டுப் பிரிந்து,  வேலைசெய்யும் வீட்டில் வாழ்வதும், தன் வயதொத்த அதே வீட்டாரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எவ்வித வசதிகளும் தங்களுக்கில்லா ஏக்கத்திலும், வீட்டு எஜமானர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வேலை செய்து, ஓய்வென்பதையோ, சிறுவயதுக்குரிய விளையாட்டுக்களையோ காணமுடியாமல் வளரும் சோகம், மிகக் கொடுமையானது. பெரியவர்களைவிட மிகக் குறைந்த கூலி பெற்றுக் கொண்டு, உழைத்து ஓய்ந்துபோகும் சிறுவர், சிறுமியரின் வேலைகளில் தென்படும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் அடி, உதை அல்லது கேவலமான வசைகள் என்பன சர்வசாதாரணம்.

நொய்டா (உ.பி.) போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டுப் பணியாளர்  தங்குவதற்கென்றே சமையலறையை ஒட்டினாற்போல் ஓர் அறை ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு எனப் பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கோழிக்கூடு போன்ற சிறிய அறைகளில் தங்கிக்கொண்டு நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வீடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் அவசரத்திற்கு உறவினர்களிடம் பேசக்கூட அவ்வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. மிச்சமீதியைத்தான் உண்ணமுடியும். நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்க வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது எனப் பல நிபந்தனைகளுடன், யாருமே வாழத் தகுதியற்ற வெளிச்சமோ காற்றோட்டமோ இல்லாத அறைகளில் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். வெளியுலகே தெரியாமல், தனிமையில் வாழும் இப்பெண்கள் சில சமயங்களில் மனநோயாளிகளாகவும் மாறியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் எனும் நிச்சயமற்ற நிலையில்தான் பணியில் நீடிக்கின்றனர்.

அருகிலுள்ள மேட்டுக்குடியினர் வீடுகளில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வீட்டுப்பணியாளர்களான பல பெண்களின் கொஞ்சநேர  நிம்மதியையும், அரசு நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடைகள் பறித்து விடுகின்றன. வீட்டுவேலைக்குப் போகும் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களின் கணவன்மாரில் 70 சதவீதம் பேர் குடிக்கு அடிமைகள் என்பதும், 60 சதவீதப் பெண்கள் வீட்டுக்குவந்தால், குடிகாரக் கணவர்களின்  சித்திரவதையை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

காலையிலேயே வேலைக்குக் கிளம்பிப்போய், வீடு திரும்ப இரவு 8 மணிக்கும் மேலாகிவிடுவதால், தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க  இப்பெண்களுக்கு நேரமிருப்பதில்லை. இது, அவர்களின் வளரும் குழந்தைகளின் ஆளுமையையும், கல்வியையும் சீரழிக்கிறது. சரியாகப் படிக்க இயலாத குழந்தைகள் 10 அல்லது 12 வயதானதும் இதே வேலைக்கு வந்துவிடுகின்றனர்.

இந்த சேவைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதும் அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற மாநகரங்களில் வீட்டு வேலை செய்வதற்கென்றே சேலம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்திருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளபடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு இவ்வேலைகளுக்கென 5 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்து பெண்களை அனுப்பிவைக்கும் தரகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறு செல்லும் பெண்களில் பலர் பாலியல் வன்முறையால் கேரளாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வேலைகளுக்கு வீடுகளுக்கு தகுந்த ஆட்களை அனுப்புவதற்கென பெருநகரங்களில் பல கங்காணிகள் பெருந்தொழில் நிறுவனங்களாக  உருவெடுத்துள்ளனர். இவர்களிடம் பெயரைப் பதிவு செய்தவர்களை மேட்டுக்குடியினரின் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம், இவர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை வீட்டு உரிமையாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அதில் கணிசமான தொகையைச் சுரண்டிக் கொண்டுதான்  வீட்டுப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது.

சென்னை போன்ற நகரங்களில், இவர்களுக்கு கிடைக்கும் அற்ப சம்பளத்துக்குள் குடிசைகளில்தான் குடியிருக்க முடிகிறது. நகரை  அழகுபடுத்தும் திட்டங்கள், இக்குடிசைகளை விட்டுவைப்பதில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரங்களில் குடியிருந்து வரும் இவர்களை, நகருக்கு  வெளியே துரத்தும் பணி ஆரம்பித்து விட்டது. செம்மண்சேரி போன்ற புறநகர்ப்பகுதிகளுக்கு அகற்றப்படவிருக்கும் இப்பணியாளர்கள், தினமும் நகருக்குள் வந்து செல்வது என்பது இன்னமும் வாழ்வை சிக்கலாக்கியுள்ளது.

இந்த அவல வாழ்வு வாழும் பெண்களை ‘திருடர்களாகப்’ பார்க்கும் பொதுக்கருத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்துள்ளது. பல  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலைக்கு செல்பவர்களின் கைரேகை, குடும்பப் பின்னணி போன்றவற்றை அருகிலுள்ள போலீசு நிலையத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்று போலீசு கட்டாயப்படுத்துகிறது. சில பத்திரிக்கையாளர்களோ, வீட்டு வேலைக்காரிகளை, வீட்டு எஜமானர்களை மயக்கும் சக்களத்திகளாகச் சித்தரித்து துணுக்குகளை எழுதுகின்றனர்.

ஏட்டளவில் இருக்கும் இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்கள் கூட வீட்டுப் பணியாளருக்கென்று இல்லை. மேலும், இவர்கள் சங்கமாக  அணிதிரட்டப்படாமலும் உள்ளனர். இவர்களுக்குச் சட்ட ரீதியாகத் தொழில் அங்கீகாரம் தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு  வந்துள்ளன.

உலகமயமாக்கம் தீவிரப்படுத்தப்பட்டபோது, இச்சேவைப்பணியில் ஈடுபடுவோர் இலட்சக்கணக்கணக்கில் பெருகியதால், இவர்களுக்கு சட்டப்  பாதுகாப்பு தேவை என சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்தன. பல தன்னார்வ நிறுவனங்கள் இதனை வாய் ப்பாகப் பயன்படுத்தி, பல குழுக்களை  இப்பெண்களிடையே உருவாக்கி, இக்கோரிக்கையை எழுப்ப வைத்தன. தமிழ்நாடு அரசும், 2007-இல் வரைவு சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.  இதன்படி, இச்சேவையில் ஈடுபடுவோர், வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் ஒன்றில் இணைக்கப்படுவர். ஆனால் தமிழ்நாடு அரசின் சட்டம், குறைந்தபட்சக் கூலியை இன்றுவரை வரையறுக்கவில்லை. 2005-இலேயே கேரள, கருநாடக அரசுகள் உருவாக்கியுள்ள சட்டத்தின்படி, 8 மணிநேர வேலைக்கு மாதத்துக்கு ரூ. 1800-மும், வேலை செய்யும் வீட்டில் 4 பேருக்கு மேலிருந்தால் ரூ. 2200-உம் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இவர்களுக்காக ஆரம்பித்திருக்கும் நலவாரியம் பற்றிய செய்தியோ, அரசின் இணையதளத்தில் மட்டும்தான் உள்ளது. அந்த  வாரியம், எங்கே இயங்குகின்றது எனும் தகவலைக் கூட அரசு விளக்கமாக அறிவிக்கவில்லை. கண்ணகி நகர் போன்ற சென்னைப் புறநகரில் தங்கி  இருந்து, வீட்டுவேலை செய்யும் பெண்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டுமானால், ஒருநாள் வேலைக்கு செல்லாமல் காஞ்சிபுரம் போய் தேடி அலைந்து வாரியத்தில் பெயர் பதிய வேண்டும் எனும் நிலைதான் உள்ளது. இதிலிருந்தே அரசுக்கு இந்தப் பணியாளர்கள் மீதான அக்கறை என்ன என்பது தெரிகிறது.
வேலை உத்திரவாதம், மருத்துவ வசதி, குறைந்தபட்ச விடுமுறைகள், தங்கள் குழந்தைகளின் கல்வி, ஆயுள் காப்பீடு போன்ற உடனடித்  தேவைகளை இப்பணியாளர்கள் போராடிப் பெற வேண்டியுள்ளது. பிழைப்புக்கான இடத்தின் அருகிலேயே குடியிருப்பு வசதி, ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, சேமநலநிதி போன்றவையும் இவர்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும். இதற்காக இத்தொழிலாளர்கள் அனைவரும் சங்கமாக ஓரணியில் திரள வேண்டும். கடுமையான உழைப்புச் சுரண்டலுடன் சட்டபூர்வ உரிமைகளையும் உலகமயம் பறித்துவரும் இன்றைய நிலையில், அல்லற்பட்டுவரும் இப்பணியாளர்கள் அமைப்பாகத் திரண்டு, மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே, தமது நலனையும் விடுதலையையும் சாதிக்க முடியும்.

–    புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

30

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 11

vote-012ஈழத்திலிருந்து உயிர் தப்பி, சிதறடிக்கப்பட்ட கனவுகளோடு அந்நிய தேசத்தில் அகதி நான். என் வாழ்வின் அடுத்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை இனி யாரால் அல்லது எந்த சட்டதிட்டங்களால் தீர்மானிக்கப்படும், தெரியவில்லை. என் சொந்த எதிர்காலத்தை கூட நிர்ணயிக்க முடியாத பரிதவிப்போடும், என் மீது வலிந்து திணிக்கப்பட்ட  அகதிநிலை பற்றி பல விடை தெரியாக் கேள்விகளுடனும் மனம் பாறையாய் இறுகிக்கிடந்தது. நான் அகதி என்ற யதார்த்தத்தை என்னையுமறியாமல் எனக்குள் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். மனித மனம் ஓர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் முதற்படிநிலை அதை “மறுதலித்தல்” என்பதுதான் என்ற அறிவு எனக்கு அன்று இருக்கவில்லை.

அந்த உணர்வலைகள் எனக்குள் சற்றே அடங்கியிருந்த வேளையில் என்னை சுற்றிக் கவனித்தேன். அங்கிருந்த ஆயிரக்கணக்கானோரும் ஏதேதோ பேசினார்கள், பெருமூச்சு விட்டார்கள், சாபம் போட்டார்கள், அழுகைக்கும் பேச்சுக்குமிடையே வார்த்தைகளுக்கு தவித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புதிதாக வந்தவர்களிடம் எந்த ஊரிலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து ஈழத்தில் மற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். யார், யாரோ பெயர்களை எல்லாம் சொல்லி அவர்கள் நலமா என்று ஆவலுடன் பதில் தெரியாத கேள்விகளை கேட்டு பதிலுக்காய் எங்கள் வாயை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இந்த பொம்மரும், ஆமியும் இல்லையெண்டால் ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்று எதார்த்தமாய் அங்கலாய்த்தார்கள். எங்களைப்போல் புதியவர்களின் வருகையால் பாதிக்கப்படாதவர்களும் இருந்தார்கள். இவர்கள் தான் யதார்த்தவாதிகள் என்று நினைத்துக்கொண்டேன்.

யார் எப்படி இருந்தாலும் ஈழம், அகதி என்ற பொதுவான ஒற்றுமையைத்தவிர வேறெந்த வேறுபாடும் அங்கே இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. எனது உணர்வுகளை கடந்து யதார்த்தம் என் அறிவை சுடத்தொடங்கிய போதுதான் அகதி முகாமின் அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு(??), கல்வி, எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரமான நடமாட்டம் இவை பற்றியெல்லாம் சிறிது, சிறிதாக மனம் கிரகிக்கத் தொடங்கியது.

இவர்களில் இனி நானும் ஓர் அங்கம். இந்த வலிகளை இனி ஜீரணிக்க என்னை நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஓலைக்குடில், அதில் நான்கைந்து சமையல் பாத்திரம், ஓர் அடுப்பு இதையெலாம் உங்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு கொடுத்தது. இன்ன பிற வசதிகள் என்றால் நான்கு தண்ணீர் குழாய்கள் மட்டுமே. உங்கள் மண்ணில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்து, இரண்டு வேளை சாப்பாடும் கொடுத்ததிற்கு என் போன்ற ஈழத்தமிழர்கள் சார்பில் உங்கள் எல்லோருக்கும் நன்றி.

முகாம் என்ற பெயரில் ஒற்றை மரம் கூட இல்லாத பொட்டல் வெளியில் போடப்பட்ட குடிசைகளுக்கு நடுவே நிழலுக்காய் மனம் தவித்த போது என் வீட்டு மாமரமும், தென்னையும் என் உயிருக்குள் நிழற்குடை விரித்தன. அகதி முகாமில் அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையே குளிரக்குளிர குளித்த போதெல்லாம் ஈழத்தில் என் வீட்டு கிணற்றடியும் நான் குளிப்பதற்காய் கட்டப்பட்ட மறைப்பும் என் நினைவுகளில் வந்து, வந்து போயின. கண்கள் பனித்தன. அதிகாலை மூன்று மணிக்கு இருள் கவிழ்ந்திருந்தாலும் என் அந்தரங்கம் இப்படி பொது வெளியில் கடை விரிக்கப்பட்டு விட்டதோ என்ற ஓர் உணர்வு என் மெய் தாள வைத்தது. இது தவிர, அதிகாலையில் சூரியன் சந்திரனை எதிர்த்திசையில் விரட்டுமுன், அந்த இருள் பிரியாத பொழுதிலேயே முகாமிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த சவுக்குத்தோப்பில் காலைக்கடன் முடித்தாக வேண்டும். இதுவே ஓர் அகதி முகாம் பெண் அகதியின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

இதையெல்லாம் படிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கூடத் தோன்றலாம். அப்படி ஒரு வாழ்கையை வாழ்ந்து பார்த்தால் தான் அதிலுள்ள கஷ்டமும், வலியும் புரியும். இந்த அன்றாட நிகழ்வுகளின் ஒவ்வோர் அங்கத்திலும் என் மண்ணும், வீடும், மனிதர்களும் என் நினைவுகளை நிலை கொள்ள விடாமல் அலைக்கழித்தன. மறுபடியும் என் ஊருக்கே திரும்பி ஓடவேண்டும் போல் துக்கம் தொண்டையை அடைக்கும். அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்கொள்ள எனக்கு மட்டுமா இந்த விதி, இது இங்குள்ள எல்லோருக்கும்தானே என்று என்னை நானே சமாதப்படுத்த முயன்று தோற்றும் போனேன். எனக்கு பைத்தியம் பிடிப்பததை தவிர்க்க என்னை சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் என் வழமைகளில் ஒன்றாய்ப்போனது. அந்த அகதி முகாமில் வெயில், மழை, காவற்துறை, அதிகாரிகள், அகதி மனிதர்கள் இவற்றை தவிர வேறேதும் என் கண்ணில் படவில்லை. ஓர் அசுவாரசியத்தோடு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தேன். இதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

என்னால் ஏற்கவும் முடியாமல், மறுப்பதற்கு மாற்று வழியும் இல்லாமல் அந்த அகதி முகாம் வாழ்க்கைக்கும், வழமைக்கும்  என்னை பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டேன். அகதி முகாமில் எல்லோரும் பெயரளவில் உண்டு, உறங்கி, இவையிரண்டிற்கும் இடையே எந்தவொரு வேலைவெட்டியும் அல்லது வெட்டி வேலையும் இல்லாமல் இருப்பதை முரண் நகையாய் பேசித் தீர்த்தார்கள். அப்படி அவர்கள் பேசி தீர்த்த வார்த்தைகளில் ஒளிந்திருந்த வலிகள் என் மனதை ஆழமாய் கீறிவிட்டுச் சென்றன. நான் முகாமிலிருந்த காலங்களில் யாருமே ஏதாதவது வேலை கிடைத்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை.

சமீப காலங்களில் கூட இங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தில் ஒளிபரப்பான ஈழத்தமிழர்களின் அகதி முகாம் வாழ்வு பற்றிய Talk Show பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் பற்றாக்குறை வாழ்வு, மூட்டை தூக்கிப்பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லாத அவலம், உயர் கல்விக்கு வாய்ப்போ, வசதியோ இல்லாமை, ஓர் முகாமிலுள்ள அகதி TVS 50 வாங்குவதில் கூட உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் கண்ணீருக்கும், சிரிப்புக்கும் நடுவே சொல்லித் தீர்த்தார்கள். எங்களுக்குத்தான் எங்கள்  உறவுகள் படும் அவஸ்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போலிருந்தது. ஈழத்தமிழா இது தான் உன் விதியா என்று நெஞ்சு கனத்தது. இலங்கை வான்படை, தரைப்படை, கடற்படை என்று எந்த படை உயிர் குடிக்கும் என்று தெரியாத நிலையிலும் ஈழத்தில் நாங்கள் எதையோ செய்து சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம்.

அகதியான அவலம் மானம் “மானியமாய்” எங்களைப் பார்த்து பல்லை இளித்தது. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கியது ராவணனின் நெஞ்சம் மட்டுமல்ல, எங்களினதும்தான். வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடான இந்தியாவின் வறுமைக் கோட்டைத் தாண்டத் துடிக்கும் மக்கள், அதை அழிக்கமுடியாத அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது இந்த மானியம் போதுமா அல்லது பற்றாக்குறையா என்று கணக்குப்பார்க்க, குறை கூற மனம் ஒப்பவில்லை. இது தான் எங்கள் விதியோ? இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்றபயமும், தன்மானமும் தான் உயிரை பாடாய்ப் படுத்தியது. சொந்த மண்ணில் எல்லோருக்குமே ஏதோவொரு தொழில், போதுமோ, போதாதோ ஏதோ வருமானம் என்று எல்லாத்தையுமே போர் தின்றது போக இப்போது மீதியுள்ளது உயிர் மட்டுமே. அந்த உயிரும் கூட இந்த அகதி முகாம் வாழ்வில் கசந்து முகாமிற்கும் ஈழத்திற்குமிடையே அல்லாடிக்கொண்டிருந்தது.

குண்டுகள் உயிர் குடிக்கவில்லை. ஒருவேளை உணவேனும் உயிர்ப்பயமின்றி உண்ண முடிகிறது. சரி, அடுத்தது என்ன என்று யோசித்தபோது குறுக்கும், மறுக்குமாக “ஆமி, பெடியள்” விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் கண்ணில் பட்டார்கள். தலைமுறைக்கும் இவர்கள் இதைத்தான் விளையாடப் போகிறார்களா? அவர்களின் எதிர்காலம் அகதி முகாமுக்குள்ளேயே முடக்கப்படப் போகிறதா? என் அடுத்த தலைமுறைக்கு நான் எதை விட்டுச் செல்லப்போகிறேன்? அகதி அந்தஸ்தையும், அவலச் சொத்தையுமா? அல்லது, இந்த உலகம் பழிக்கும் படி, படிக்காத முட்டாள் கூட்டம் என்ற அவப்பெயரா? அகதி வாழ்வின் எச்சங்கள் இவைகள் தானென்றால் எங்களுக்கு ஓர் சேரியும், இருண்ட எதிர்காலமும்தான் விதியாகிப் போகும்.

ஆகவே, ஈழத்தமிழன் எதை இழந்தாலும் கல்வியை இழக்கக்கூடாது. முகாமில் எங்கள் அடிப்படை தேவை ஏதோ வகையில் திருப்தி இல்லாமலே தீர்ந்தாலும், அடுத்து கல்விக்கும் இந்த அகதிமனம் ஆசைப்பட்டது. அது பற்றி விசாரித்த போதுதான் சொன்னார்கள். அந்த ஊரிலிருந்து நிறைய தூரத்தில் ஓர் சிறிய பாடசாலை மட்டுமே இருக்கிறதாம் என்று. பள்ளிக்கூடம் இருக்கிறது. அறிவும், திறமையும் எங்கள் குழந்தைகளிடமும் இருக்கிறது. ஆனால், நிர்வாகம் எதிர்பார்க்கும் இத்யாதிகள் ஈழத்தமிழர்களிடம் இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால், ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன், அகதி அட்டையை காட்டினால் அனுமதி கிடைத்தது என்று சொன்னார்கள். பிறகேன் எல்லாக்குழந்தைகளும் பாடசாலை செல்லவில்லை? நூறு குழந்தைகள் படிக்குமிடத்தில் எப்படி ஆயிரம் குழந்தைகள் படிக்க முடியும். உங்கள் கல்வியை பங்கு கேட்க நாங்கள்!

இப்போது புரிந்தது ஏன் முகாமிலுள்ள எல்லாக்குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகவில்லை என்று. பிச்சை புகினும் கற்கை நன்றே. யார் சொன்னது? ஞாபகமில்லை. ஆனால், அந்த சொற்கள் மட்டும் பசுமரத்தில் ஆணியாய் மனதில் பதிந்து போனது. அடிமை சகதியிலிருந்து விடுபட எங்களுக்கு கல்வியும் முக்கியம். எங்கள் வலிகளிலிருந்து அதை புரிந்து கொண்டு எல்லா ஈழத்தமிழர்களும் படிக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. இப்போதெல்லாம் அகதி முகாமிலிருந்து கொண்டே படித்து ஒரு சிலர் மட்டுமே அப்படி தமிழ்நாட்டில் முன்னேறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.  தமிழ்நாட்டில் அகதி முகாமில் எல்லாக்குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா தெரியவில்லை. ஆம் கிடைக்கிறது என்று நீங்கள் யாராவது சொன்னால் சந்தோசப்படுவேன். உலகில் எந்த குழந்தைக்கும் கல்வி கனவாய் போகாமல் அது மெய்ப்பட வேண்டும். கல்விக்காகவே அன்று நாங்கள் முகாமிலிருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்தோம்.

சிங்கள ராணுவம் இல்லாத இடமெல்லாம் எங்களுக்கு சொர்க்கபுரிதான். அது அகதி முகாமே ஆனாலும். முட்கம்பி இல்லாத முகாம், காலில் பூட்டப்படாத விலங்குகளோடு சுதந்திர அடிமைகளாய் வலம் வந்தோம். போர் பூமியைத்தாண்டி, அகதி முகாமிற்கு வெளியே இன்னோர் இயல்பான உலகம் இயங்குவதை பார்க்க, அதில் நாங்களும் ஓர் அங்கமாக கலந்து போக ஆசைதான். ஆனால், சங்கடங்களும் எங்களுக்கு அங்கே தான் ஆரம்பித்தன.

முதலில், முகாமை விட்டு யாருமே வெளியே போக முடியாது என்றார்கள். பிறகு, சிலர் வெளியே சென்று வந்ததைப் பார்த்து, விசாரித்தோம். வெளியே சென்று வருவதன் நடைமுறைகளை சொன்னார்கள். யாராவது முகாமிற்கு வெளியே வேலையாக செல்வதானாலும் பொறுப்பிற்கு இரண்டு பேரை முகாமில் விட்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் திரும்பி முகாமிற்கு வருவோம் என்று கையெழுத்து போட்டு கொடுத்து விட்டுத்தான் செல்லமுடியும். யாரும் எங்களை அடிபணிய வைத்து அழைத்து வரவில்லை. சங்கிலிகளால் எங்கள் கை, கால்கள் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், முகாமிற்குள் முடக்கப்பட்ட போது அடிமை போல் உணர்ந்தேன். அதை தவிர்க்க முடியவில்லை.

இப்போது நான் அகதியா அல்லது அடிமையா? எனக்குள் குழம்பிக்கொண்டிருந்தேன். இந்த குழப்பத்துடனேயே முகாமில் என் நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அடித்துப் பெய்த மழையில் அங்கிருந்த குடிசைகள், பாத்திரங்களோடு நாங்களும் இரவிரவாய் தூங்காமல், உட்காரவும் இடம் இல்லாமல் கால்கள் கடுக்க மழை வெள்ளத்தில் மிதந்தோம். வெள்ளம் வடிகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு பிறகு வருவது வரட்டும் என்று முகாமை விட்டு அன்றோடு வெளியேறினோம்.

முகாமிலிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளியே வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். வீடு கட்டி முடித்த கையோடு, புத்தம் புது வீட்டில் வாடைகைக்கு அமர்த்தப்பட்டோம். முகாமில் ஒரு விதமான கஷ்டம் என்றால் வெளியில் அது வேறோர் விதமாக இருந்தது. இதை சொல்வதா வேண்டாமா என்று பலமுறை யோசித்து விட்டு தயக்கத்தோடுதான் சொல்கிறேன்.

நாங்கள் இருந்த தெருவில் இருந்தது எல்லாமே பிராமண சமூகத்தினரின் வீடுகள்தான். நாங்களிருந்த வீட்டின் உரிமையாளரும் பிராமணரல்லாத ஒருவர். அந்த தெருவில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓய்வுபெற்ற ஒரு பிராமணர் இருந்தார். அவருடைய வாழ்நாள் குறிக்கோள் அந்த தெருவை ஓர் “அக்ரஹாரம்” ஆக்குவதுதான் என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருந்ததோ பிராமணரல்லாத ஒருவரின் வீடு. அவருடைய ஆசைக்கு குறுக்கே அந்த வீடும், நாங்களும் இருந்தது அவருக்கு பொறுக்கவில்லை என்பது அவரின் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த வன்மைத்தை எல்லாம், “கள்ளத்தோணிகள், நீங்கள்ளாம் பெரியாரின் ஆட்களடி, உங்கள இங்கிருந்து தொரத்தணும்” இப்படியெல்லாம் தான் கொட்டித்தீர்த்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

எங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் காவல் துறையிடம் பற்றவைத்தார். இவரின் உளவியல் சித்திரவதை தாங்க முடியாமல் ஒருநாள் வீட்டை காலி செய்கிறோம் என்று வீட்டின் உரிமையாளரிடம் சொன்னோம். அவர் ஏன் என்று காரணங்களை  கேட்டு விட்டு, “நீங்கள் வீட்டை காலி செய்யவேண்டியதில்லை. மிகுதியை தான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அவர் யாரிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. கொஞ்ச நாள் பிரச்சனையில்லாமல் இருந்தோம். நான் தமிழ்நாட்டில் என்றென்றும் நன்றி சொல்லவேண்டிய மனிதர்களில் ஒருவர். இன்னொருவர் எங்களை தன் சொந்த சகோதரிகளைப்போல் பாசம் காட்டிய ஓர் ஆட்டோக்காரர். எப்பொழுதாவது சினிமாவுக்கும் எங்களை இவர்தான் கூட்டிக்கொண்டு போவார். சினிமா ஆரம்பிக்கவும் தூங்குகிறவரை, அது முடிந்ததும் பத்திரமாய் தட்டியெழுப்பி கூட்டி வருவோம்.

அடுத்து, நாங்கள் இருந்த தெருவிலிருந்த மற்றைய பிராமணர்கள். “நீங்கள்ளாம் சிலோன் அகதிகளா…” என்று தொடங்கிய நட்பு. எங்களிடம் பாரபட்சம் பார்க்காமல் நட்பு கொண்டவர்கள். என் கசப்பான அகதி வாழ்க்கைக்கு சின்ன, சின்ன சுவாரசியங்களை சேர்த்த மனிதர்கள்.

தமிழ்நாட்டில் வெளியே தங்கியிருப்பதால் காவல் துறையிடம் பதிந்துகொள்ள வேண்டும் என்று வேறு சொன்னார்கள். அந்த நடைமுறையை செவ்வனே செய்துமுடிக்கு முன், பேசாமல் ஊருக்கே திரும்பி போய் குண்டடிபட்டு அல்லது சிங்கள ராணுவத்திடம் சித்திரவதைப்பட்டு செத்துப்போகலாம் என அழுகைதான் வந்தது. அப்படி எங்களை நாய் படாத பாடாய்   படுத்திவிட்டார்கள். இவ்வளவு அக்கப்போருக்கு நடுவிலும் என்னால் என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மனமும், வாழ்வும் ஒட்டவில்லை. ஈழத்திற்கு ஓடிப்போக வேண்டும்போலிருந்தது. வீட்டில் அழுது புரண்டு ஒப்புதல் வாங்கி மறுபடியும் நான் இலங்கை போனேன்.

இந்த பதிவை முடிக்குமுன், இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். அண்மையில் கூட சிலபேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். புலத்திலிருந்து பணம் வருபவர்கள் ஓரளவுக்கு வசதியாய் இருக்கிறார்கள். முகாமிலிருப்பவர்களின் வாழ்வுதான் இன்னும் சவால்களுடனேயே நகர்கிறது. அண்மையில் கூட இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது பற்றிய அரசியல் அறிக்கைகள், தொலைக்காட்சி வழங்கப்பட்டது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

இதையெல்லாம் ஏற்பதும், மறுப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. யார் அகதியானாலும் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டியவர்களே. அதில் எங்களுக்கு நிச்சயமாய் வருத்தமில்லை. ஆனால், என் நெஞ்சை அறுக்கும் விடயம் இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்? தமிழ்நாட்டையும் தாண்டி படகுகளில் கடல் மேல் தங்கள் உயிரை பணயம் வைத்து அவுஸ்திரேலியா தங்களை அரவணைக்கவில்லை என்று தெரிந்தும் அங்கே போய் உயிர் தத்தளிக்கிறார்களே ஏன்? புரியவில்லை. யோசித்தால் வலி தான் மிஞ்சுகிறது.

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. மோசடி தொழில் நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடி போராட்டம்!
  2. அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!
  3. பட்ஜெட்: வலுத்துவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை
  4. பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!
  5. சாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து
  6. தரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி
  7. பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்
  8. கருப்புப் பணம்-காமக் களியாட்டம்: இதுதான் கார்ப்பரேட் ஆன்மீகம்!
  9. ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை
  10. “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!” – மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC ) போராட்டம்
  11. “லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்.
  12. சாலையா? மரணக் கிணறா? –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
  13. அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்: கொண்டாட்டமா? போராட்டமா?
  14. தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை
  15. மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு
  16. கொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன்! உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்!
  17. “ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு!
  18. ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! – வி.வி.முவின் இடைத்தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்
  19. தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!
  20. காவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா!
  21. சட்டப் பேரவையின் எழிலும் தொழிலாளர்களின் அவலமும்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 10 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!


vote-012தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத் தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” முடக்கிப் போடப் போகின்றது.

மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிலுள்ள 2.5 லட்சம் மீனவர்கள், 6200 மீன்விசைப் படகுகள், 50 ஆயிரத்து 360 பாரம்பரியக் கலன்களைக் கொண்டு அண்மைக்கடல், தூரக்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கென ’70-களில் நீலப்புரட்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தின்படி, விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகு வகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் “மீன்பிடிக் கலன்” என ஒரே வார்த்தையில் வரையறுத்து, அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளது.

இச்சட்டப்படி, எல்லா வகைப் படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போதே பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் மீன்பிடிக்கப்படும், எந்த முறையில் மீன்பிடிப்பு நடக்கும் முதலான அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்; என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்; இதற்கான அனுமதிகளையும் மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். பிழைப்புக்கா, வணிகத்துக்கா, ஆய்வுக்கா என்றெல்லாம் துருவிக் கொண்டிருக்கப் போகிறது அரசு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வரும் கடலை மீனவர்களிடம் இருந்து பிரித்து, அவர்களை நாட்டினுள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளைப் போல கேள்வி மேல் கேள்வி கேட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்தெடுக்கத் துடிக்கிறது, அரசு.

நாட்டின் பாதுகாப்புக் காரணத்தையோ அல்லது அரசு தீட்டும் கடல் அல்லது மீன்வளம் சார்ந்த திட்டத்தைக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளையும் சலுகைகளையும் ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சில குறிப்பிட்ட வகை மீனினங்களைப் பிடிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் இச்சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம்; பன்னிரண்டு கடல்மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதம்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.

கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது. விசைப்படகேறி, கடலில் நெடுந்தொலைவு பயணித்து, பல நாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவருமாயின் மீனவர்கள் இனி கடல் இருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாது.

விதிமுறைகளை மீறும் மீனவரைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றிற்கு இழப்பீடும் கோரமுடியாது. சந்தேகத்தின்பேரில் தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றிற்காக கடலோரக் காவல்படையைக் குற்றம் சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக்காவல் படைக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது.

ஏற்கெனவே மீனவர்களின் வாழிடங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கென கரையோரங்களிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரமாகியிருக்கும் உலகமயத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து, கடலோர நகரங்களிலிருந்து தினமும் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகள், சாக்கடைகள், அனல் மின்நிலைய சாம்பல்கள் போன்றவையும், ஏற்கெனவே இருந்த மீன்வளத்தை அழித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில், மீனவர்களின் மேல் இன்னுமோர் பேரிடியாக ஏன் இந்தக் கெடுபிடிச் சட்டம்?

இதற்கு இந்திய அரசு, “ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை” எனக் கூறுகிறது.

வேளாண்மைத் துறை அமைச்சகமோ, கடல்வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதல்கள் போல இனி நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல் பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது. ஆனால் உண்மையோ வேறு.

1990-களில் நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, ‘கூட்டு முயற்சி’ எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது. இம்முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது. இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீன கருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை இரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன்குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டிவிடுகின்றன. மீன்வளத்தின் ஆதாரமான முட்டைகளைத் துப்புரவாகத் துடைத்தொழித்து வரும் இவற்றின் அகோரப் பசிக்கு இடையூறாக இருக்கும் இந்திய மீனவர்களை முற்றிலுமாக கடலிலிருந்து துரத்துவதுதான் ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு.

அந்த நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம், அதற்காகக் கடுமையான நிபந்தனைகளையும், தண்டனைகளையும் வரையறுத்துள்ளது. அதே நேரத்தில் மீனவர்களை அத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாற்றுத் தொழில் கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான தன்னார்வக் குழுக்கள், சுனாமி பேரழிவுக்குப் பிறகு இந்தியக் கடற்கரை நெடுக வலை விரித்துள்ளன. ரொட்டி தயாரிப்பு, உள்ளீடற்ற செங்கல் தயாரிப்பு போன்ற சிறுதொழில்களுக்கு மீனவர்களை மாற்றும் சதித்திட்டத்தில் நாகை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில் இவை இயங்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அடக்குமுறை சட்டம் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீனவர்கள் மீது ஏகாதிபத்தியமும் இந்திய அரசும் போரைத் தொடுத்துள்ளன.

இச்சட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள பரவலான எதிர்ப்புக்கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் சதிகளுக்கெதிராகப் போராடாமல், இலக்கற்ற போராட்டங்களாகவே உள்ளன. அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து, நமது கடல்வளத்தைக் கொள்ளைகொண்டு போகவரும் ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் திசையில் மீனவர்களின் போராட்டம் முன்னேறாவிடில், நமது கடல் இனி நம்முடையதாக இருக்காது.

–          புதிய ஜனநாயகம், மார்ச் – 2010.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !!

vote-012காலாவதியான மருந்துகளைப் புதிய லேபிள்களில் அடைத்தும்,  போலி மருந்துகளைத் தயாரித்தும் தமிழகமெங்கும் விற்பனை செய்த கும்பல் சமீபத்தில் பிடிபட்டுள்ளது. இருப்பினும் இது புதிய செய்தியல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ’கேப்ஸ்யூல்ஸ்’ எனப்படும் கூட்டு மாத்திரையில் வெறும் மஞ்சள் பொடியை அடைத்து விற்பனை செய்த கம்பெனியொன்று பஞ்சாப்பில் பிடிபட்டதை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதுதான் இது போன்று  நடப்பதைப்போல செய்திகள் பரப்பப்படுகின்றன.

போலி மருந்து எனும் சொல்லே மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாக இவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன? குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், என எத்தனையாயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணமடைந்திருப்பார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள்? அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் போலி, மற்றும் காலாவதியான மருந்துகள் இருக்கிறதா? அரசு மருத்துவமனைகளிலே ஒரு நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் சாகக்கூடிய இந்தியாவில்  இக்கேள்விகள் எதற்கும் பதிலில்லை.

மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், எனப் படித்திருக்கிறோம், பார்த்துமிருக்கிறோம். அவர்களெல்லாம் மருந்துகளினால் பலனின்றி உயிரிழந்தார்களா? அல்லது மருந்துகளின் பலனால் உயிரிழந்தார்களா? யாருக்கும் தெரியாது. மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைபாதகச் செயலை நம்மால் மன்னிக்க முடியுமா?

ஏராளமான அல்லது போதுமான அளவிற்கு சொத்து; கையிருப்பாகக் கணிசமாகப் பணம்; அதிகபட்ச செலவுகளையும் கூடத் தாக்குப் பிடிக்குத் தாண்டுமளவிற்கான சேமிப்பு; எல்லாச் செலவுகளும் போக மீதம் வரக்கூடிய அளவிற்கான மாத வருமானம்; எதற்கும் எந்தப் பய தயவும் தேவையில்லை என யாரையும் எதிர்பாராது இறுமாப்போடு வாழும் நிலை; இவைகளெல்லாமிருப்பதால் சமூகம், நாடு, மக்கள் குறித்த அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை என  சுயநலத்தோடு தெனாவட்டாக பேசிக்கொண்டு வாழ்கின்ற பலர் கூட இந்தப் போலி மருந்துச் செய்தியைக் கேட்டுப் பதறுகிறார்கள். இந்தப் பதட்டம் தரும் டென்ஷனினால் ஏற்கனவே பிரஷ்ஷருக்காகப் பயன்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்குகிறார்கள்,

தற்போது சரணடைந்து சிறையிலிருக்கிற மீனாட்சிசுந்தரம் விற்பனை உரிமம் எடுத்திருந்த மருந்துக் கம்பெனியை ஒரு பன்னாட்டு மருந்துக் கம்பெனி வாங்கும்போது அதன் விற்பனையைக் குறித்த அறிக்கையை ஆய்வு செய்த போதுதான் இந்த விசயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.. தாங்கள் செய்கிற வேலையை ஒரு மீனாட்சி சுந்தரம் செய்வதா? என்கிற வகையில் தான் இந்த விசயத்தைக் கசிய விட்டிருக்கிறது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி. நித்யானந்தாவைத் தர்மானந்தா போட்டுக்கொடுத்தது போல ஒரு காலாவதியை ஒரு போலி போட்டுக்கொடுத்த நல்ல காரியம் நடந்திருக்கிறது. ஆனாலும் இதன் முழுப்பரிமாணத்தையும் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது அதிர்ச்சியும், பயமும் தரக்கூடிய விசயமாக மட்டுமே ஊடகங்கள் எழுதி, பீதியைக் கிளப்பிவிடுகின்றன. ஆனால் இது அவ்வாறான பிரச்சினை மட்டுமே அல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு மருத்துவப் பயங்கரவாதிகளும் அரசும் விளையாட்டுக் காட்டுகின்ற பிரச்சினை. மக்களைப் பாதிப்படையவைக்கின்ற  ஒரு குற்றப் பிரச்சினை. அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கையினால் உருவாக்கப்பட்ட, புதிய மருந்துக் கொள்கையினை இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்திய பிறகுதான், மருத்துவப் பயங்கரவாதிகள் துணிச்சலாக இந்தகைய  குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் முதலாளிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் மருந்து தயாரிக்க அனுமதியளித்திருக்கிறது இந்திய அரசு. அயல் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பல ஆபத்தான மருந்துகளும் கூட இந்தியாவில் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகள் வெளிப்படையாகவும், சில மருந்துகள் ரகசியமாகவும் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இப்பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு இந்திய மக்களைப் பயன்படுத்துகின்றன. 2001 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஒரு அமெரிக்கக் கம்பெனியின் புதிய மருந்தினை மக்கள் மீது பரிசோதனை செய்து பார்த்த செய்தி வெளிவந்ததைப்  பார்த்தோம். இந்தப் பரிசோதனை செய்வதிலேயே ஆண்டொண்டிற்கு ஒரு மருந்துக்கு சுமார் 1500 கோடி ரூபாய்கள் சம்பாதிக்கின்றன. எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் நடத்தப்படுகின்ற இந்தப் பல்வகைக் கொள்ளைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் காலாவதி, மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்து செய்யும் விற்பனை. போலி மருந்துகளின் விற்பனையில் மட்டும் இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாய் புழங்குவதாக முன்னர் அவுட்லுக் ஏடு வெளியிட்டிருந்தது.

துவக்கத்தில், புகார்கள் வந்தபோது போலியான மற்றும் காலாவதியான மருந்துகளைக் கண்டறிய போலீசும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சென்றார்கள். ஒரு பத்திரிக்கையாளர், ”மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறதே”, எனக் கேட்கிறார், ”அவர்களும் எங்களோடுதான் வருகிறார்கள், அவர்கள்தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்கள், அவர்கள் மீது எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதும் புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று பதில் கூறுகிறது போலீசு.

பல இடங்களில், பலகோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய போலி மற்றும் காலாவதியான மருந்துகள் கிட்டங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தமிழகமெங்கும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடரவும் சுதாரித்த மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், ”போதுமான அதிகாரிகள் இல்லை, தமிழ்நாடு முழுவதிற்குமே 50 பேர்தான் இருக்கிறோம். எனவே, எங்களால் முழுமையாகக் கண்காணிக்க முடியவில்லைஎனப் பதட்டத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில் மருந்துக்கடைக்காரர்கள் தங்களிடமிருக்கும் காலாவதியான மருந்துகளை நள்ளிரவுகளில் சாக்கடைகளிலே கொட்டுகிற வேலையும் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. மருந்து விற்பனையாளர்கள் சங்கமோ, கடைகளை ஆய்வு செய்ய வரும்போது, போலீசு வரக்கூடாது, அதிகாரிகள் மட்டும் வந்தால் போதும். எங்களது கடைகளின் முன்னால் இந்தக்கடையில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படவில்லைஎன்று போர்டு மாட்டி வைத்துவிடுகிறோம், என அறிக்கை விடுகிறார்கள். மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளோடு இனி போலீசுமல்லவா மாமூலுக்கு வந்துவிடும் என்பது அவர்கள் கவலை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இவர்களின் வாக்குமூலமே இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 50 பேர் போதாது என்றால் அதை அதிகரிப்பதற்காக மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள்? அவர்களது சங்கம் இதற்காகப் போராடியதுண்டா? ஆட்களைக் கூடுதலாக நியமித்தால் பங்குத்தொகை குறைந்துவிடுமே என்பதற்காகத் தானே இவர்கள் பேசாமல் இருந்தார்கள். எப்பேர்ப்பட்ட பிரச்சினை இது! உண்மையாகவே, ஒரு உயிராதாரமான இந்தப் பிரச்சினையில் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்பதோடு அதை அலட்சியமானதாகவும் நினைக்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அலட்சியப்படுத்தக் கூடிய கூட்டமே மக்கள் என்கிற சிந்தனையில் அரசாங்கமே இருக்கும் போது அதன் ஊழியர்கள் மட்டும் வேறுமாதிரியாகவா இருப்பார்கள்!.

மருந்துக்கடைக்காரர்களோ மாதந்தோறும் மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாமூல் கொடுக்கிறார்கள். திருட்டுசி.டி, கள்ளநோட்டு, போலிமது, என்கிற வரிசையில் மருந்தையும் சேர்த்துவைத்து கப்பம் கட்டுவதுதானே இங்கே நடந்துகொண்டிருக்கிற உண்மை.

அரசு மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாமல், இந்த குற்றங்கள் நடந்திருக்கும் என்பதை முட்டாள் கூட நம்பமாட்டான். ஆனால் எல்லோரையுமே அடிமுட்டாள்களாக நினைத்துக் கொண்டு கதைகதையாய் அவிழ்த்துவிடுகிறார்கள் அரசு அதிகாரிகள். அவர்கள் மாதந்தோறும் கப்பம் கட்டுகிற  ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையே அவர்களை அவ்வாறு பேசவைக்கிறது.

மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல, மருந்து விற்பனையாளர்களே அரசியல்வாதிகளின் செல்வாக்கோடுதான் இந்தக் குற்றங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, தற்போது பிடிபட்டிருக்கிற மீனா ஹெல்த்கேர் மற்றும் வசந்தா பார்மசி நிறுவனத்தின் உரிமையாளன் காரைக்குடி மீனாட்சி சுந்தரம் கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினரென்றும் அவருக்காக வங்கியில் 150 கோடிரூபாய்களுக்கும் மேல் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறாரென்றும் தினகரன் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு ஆஸ்தான வழக்கறிஞர் என்பது நாமறிந்ததே!.

மருத்துவத்திற்கான மருந்துகள் மட்டுமல்ல, விவசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் காலாவதியும் போலியும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அது அசலாக வேலை செய்வது மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளச் சாப்பிடும்போது மட்டும்தான்.

இன்று போலி மற்றும் காலாவதி மருந்துகளை ஆய்வுசெய்து கண்டுபிடிப்பதாகச் சொல்கிறார்கள். காலாவதியான மருந்துகளைப் பழைய பேக்கிங்களிலிருந்து பிரித்து எடுத்து புதிய பேக்கிங்குகளில் வைத்திருக்கிறார்களென்றால், காலாவதியான மருந்துகள் எவை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு அட்டையிலிருந்து ஒரு மாத்திரையை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்து போலி இல்லை அல்லது காலாவதி இல்லை என்று சொன்னால், அதே அட்டையிலுள்ள இன்னொரு மாத்திரை போலியானது இல்லை என்று மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உத்திரவாதம் தர முடியுமா? முடியாது. இதே போன்றுதான் ஊசிமருந்துகளையும் கண்டுபிடிக்க முடியாது, குழந்தைகளுக்கான ஸிரப் போன்றவைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சோதனை செய்தாலொழிய, போலிகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் போலிகளே இல்லை என்று மருத்துவ இணை இயக்குநர் பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்திருக்கிறார். இதற்கும், ப,சிதம்பரம்- மீனாட்சி சுந்தரம்- உறவினர்-  சிவகங்கை மாவட்டம் என்பதற்கும் சம்பந்தமில்லாமலா இருக்கும்.

போலியான, காலாவதியான மருந்துகள் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக தமிழகம் முழுவதுமுள்ள இருப்பு மருந்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தி விட்டு நன்கு சோதிக்கப்பட்ட புதிய மருந்துகளை விற்பனை செய்ய வைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கும் என்பதற்கு நம்பிக்கை தரக்கூடிய எதுவும் தமிழகத்தில் இல்லை. .மக்கள் தெருவில் இறங்கி, அரசியலையே தொழிலாக்கியுள்ள இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களையும், அவர்களின் எஜமானர்களாகிய பன்னாட்டுக் கம்பனி முதலாளிகளையும் அடித்து விரட்டு வதைத் தவிர.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?

7

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 13

vote-012அலுவலக வாயிலில் அந்த வேலைக்காரப் பெண்கள் அவசர அவசரமாக பெரியதொரு ரங்கோலிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். வழக்கமான வேலைகளோடு கூடுதலாய் சேர்ந்துவிட்ட வேலை அது. ’எஜமானி அம்மாக்கள்’ வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே அணிதிரளத் தொடங்கிவிட்டதால், நேரமாகிவிட்டதே என்ற பதட்டம் வேறு.  எனவே வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்ததும் ஒரு மேசையில் பாங்காய் அமர்ந்திருந்த குடத்துக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. அது பூரணகும்பம்.  யாருக்கு? யாரோ அதிகாரக்கொம்பின் உச்சாணிக்கிளையைப் பிடித்துவிட்ட ஒரு அம்மணிக்கு. அவர் போன்றவர்கள்தான் இவர்களுக்கு ஆதர்ஷ புருஷிகள்.

இரும்புப் பெட்டியில் புழுங்கிக்கொண்டிருந்த தங்க நகைகளும், தங்க சரிகைச் சேலைகளும் பரோலில் வெளிவந்து எங்கும் பளபளத்தன. [கல்யாணம் கார்த்தி, அலுவலக விழாக்கள்.. இப்படி அவற்றுக்குக் கூட அடிக்கடி விடுதலை கிடைப்பதுண்டு] தடபுடலான விருந்து உபசாரங்கள், சம்பிரதாயச் சொற்பொழிவுகள் எல்லாம் நடந்தேறின. கூடவே, ஆண்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.  எதற்கு… சரிக்கட்டவா? தெரியவில்லை. விமர்சனங்கள் அற்ற இந்த விழாவே ஆணினத்துக்கு வழங்கிய இனிப்புதான் என்றாலும் பார்த்தறியத்தக்க பளபளப்புடன், வழங்கப்பட்ட சுவைத்தறியத்தக்க இனிப்பு ஒரு இலவச இணைப்பு.

எந்த ஆணுக்கும் உதட்டோரத்தில் வழிந்தோடிய எளக்காரச் சிரிப்பு தவிர்த்து இந்த விழா பற்றி வெளிப்படுத்த வேறு கருத்தில்லை.  ஆனால், வாயைப் பிடுங்கியபோது, “உலக ஆண்கள் தினம் என்னைக்கி வச்சுக்கலாம்” என்று கேட்டவர்களும் உண்டு. என்ன இருந்தாலும் நான் ”மேல் சாவனிஸ்டு தாங்க,  நீங்க என்ன சொல்றீங்க” என்றும் ஒருவர் கேட்டார்.  “நான் ஆணாதிக்கவாதி இல்லை, அட் லீஸ்ட், அப்படி இருக்க விரும்பவில்லை” என்றேன். “ஆங்.. என்று மடக்கிவிட்டது போல் சிரித்தார்”.  இருக்க விரும்பாதவனிடத்தும் அனிச்சையாய் ஒட்டியிருக்கும் அளவுக்கு வேர்விட்டு இருக்கும் அம்சம் பற்றிய சுய விமர்சனம் அது என்று அவருக்குப் புரியவில்லை.

இந்த கொண்டாட்டத்துக்குப் பெயர் உலக மகளிர் தினம் என்கிறார்கள். ஆயி, அப்பனிக்கு திதி வருவதை அய்யிரு வந்து அறிவிப்பார், அல்லது அம்மாசி அன்னைகோ, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கோ மொத்தமாய் கொடுப்பாங்க.. இந்த உலக மகளிர் தினத்தை நாள்காட்டியே அறிவித்துவிடுகிறது.. வித்தியாசம் வேறென்ன?  இதை கொண்டாடுவதும், கொண்டாடும் விதமும் கூட இங்கு ஒரு சடங்காகிப் போனது.

இந்த நாள் எதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது, தெரியுமா? இந்த செய்கைகளின் மூலம் யாரைக் கேவலப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறதா? என்ற கேள்விகள் என்றைக்குமே அவர்களது மேக்கப்பைக் கலைத்ததில்லை. வேறு எப்படிக் கேட்பது என்று எனக்கும் புரியவில்லை.  எனவே சென்றமுறை ”என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பெரிதாக டைப் செட் செய்து எனது இருக்கையின் பக்கத்தில் ஒட்டியிருந்தேன். அதைப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியாத அருகிலுள்ள ஓரிருவர் தவிர யாரும் அதைச் சீண்டவில்லை. யாரையும் அது சீண்டவும் இல்லை.

அவர்களது சொந்த வாழ்க்கை என்ற மதில் சுவரைத் துளைக்கவும் என்னால் முடியவில்லை.  பெருக்கியவர்களும், கோலம்போட்டவர்களும், எச்சில்தட்டு கழுவியவர்களும் அவர்களது சமூகத்தில் இல்லாததால், விரிந்த சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை பற்றிய கருத்து அவர்களிடம் எடுபடவில்லை. ஆனால், அந்த உதாரணத்துக்கு மட்டும், ”அவர்களுக்கும் ஃப்ரீயாவே சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டோம், பேமெண்டும் தனியா பண்ணிட்டோம்” என்று தர்மகர்த்தா பாணியிலான பதில் கிடைத்தது.

இதை எல்லாம் பார்க்கும்போது இது, உலக மகளிர் தினமா? உலக உழைக்கும் மகளிர் தினமா? தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றாலே உழைப்பாளி வர்க்கம் என்று கொள்ளத்தக்க வகையில், ஒப்பீட்டளவில் இன்றளவும் இருக்கிறதே.. அதுபோல் பெண்கள் என்றாலே, ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பெண்கள் என்று கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னுள் மோதின. சாதகமானதும், பாதகமானதுமான பதில்கள் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றன.  உங்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தது உண்டுதானே? பெண்கள் என்று பொதுமையில் பார்க்கும்போது, சாதகமானதைக் கொள்வதே சரியானது; சமூகத் தட்டுகள் கடந்து ஒடுக்குமுறை பல கோணங்களில் பெண்கள்மேல் செலுத்தப்படுகிறது என்றே தொன்றுகிறது.

அதற்கு ஒரு உதாரணம் பொருத்தமாக உலக மகளிர் தினத்தன்றே ஹிண்டு பேப்பரில் வெளிவந்திருக்கிறது.  அது, ஆணாதிக்கத் தந்தைவழி சமூகம் மற்றும் சாதிய அமைப்புமுறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கான சுஷ்மா [திவாரி] வின் போராட்டக் கதை.

________________________________________________________

உ.பி. மாநில பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த சுஷ்மா தாழ்த்தப்பட்ட சாதியான கேரளத்து ஈழவ சாதியில் பிறந்த பிரபு நொச்சில் என்பவரைக் காதலித்து மணந்தார்.  இதனால் ஆத்திரமுற்ற அவளது மூத்த சகோதரன் திலீப் திவாரி ஆட்களுடன் வந்து மும்பை அருகில் வசித்த அவர்கள் வீட்டில் புகுந்து அவளது கணவர், மாமனார் மற்றும் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட புகுந்தவீட்டார் அனைவரையும் படுகொலை செய்தனர், இருவரைப் படுகாயப்படுத்தினர்.  உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்ததால், கர்ப்பிணியான சுஷ்மா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மகாராட்டிர குற்றவியல் நீதிமன்றம் சுஷ்மாவின் சகோதரர் திலீப் திவாரிக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றமோ கடந்த டிசம்பர் 2009ல் அந்த மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் இப்படுபாதகச் செயலை செய்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ரத்து செய்த தனது தீர்ப்பை விளக்குகையில், ”இளைய சகோதரி வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யும்போது, அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழக்கில், இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது”.

மேலும், “அவன் தனது தவறான ஆனால் தூய்மையான சாதிய உணர்வுக்குப் பலியாகியிருப்பானானால், அச்செயல் அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நியாயப்படுத்தாது… சாதியம், சமூகம், மதம் எனும் நச்சுப்பிடி, முற்றிலும் நியாயப்படுத்தப்பட முடியாததாயினும், அதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம்” என்று கூறியிருக்கிறது.  அந்த மூர்க்கமான எதார்த்தத்துக்குத் தலைவணங்குகிறோம் என்று முடித்திருக்க வேண்டும்.  ஆனால் அந்த வரி மட்டும் அசரீரியாய் ஒலிக்கிறது. [Bold/ Italics என்னுடையது]

வழக்கத்துக்கு மாறாக, அதாவது, மரபு மீறிய அல்லது சாதிய நெறி மீறிய செயலுக்குப் பார்ப்பனீயம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் விட்டது. ஈழவக் குடும்பம் முழுவதும் எழவு விழுந்துவிட்டது.  உயர் சாதி கவுரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது.  பெருமை மிகு இச்செயலுக்கு மரண தண்டனை மூலம் களங்கம் ஏற்படுத்தலாமா?

இதில் அண்ணனாகிய ஒரு ஆண் தான் கட்டிக்காக்கக் கடமைப்பட்டுள்ள தர்மத்துக்காக, சாதிய, ஆணாதிக்க சமூகத்தால் தன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்காக ஒரு தவறு தானே செய்துள்ளான். அவனுக்கு மரண தண்டனை விதிப்பது நியாயமானதா?

இல்லை, கூடாது, கூடவே கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்.  சாதிய ஒழுக்கத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு, இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது என்று கொச்சைப்படுத்துகிறது. அது என்ன ரகசியக் காதல் விவகாரம்?  கனம் நீதிபதிகள் வெளிப்படையாக நீச பாஷையில் பேசமாட்டார்கள் என்றாலும், தினத்தந்திகளின் மொழியில் சொல்ல வேண்டுமானால், அது என்ன கள்ளக் காதல்?  வயதுவந்த ஒரு ஆணும் பெண்ணும்தானே காதலித்து மணந்தனர்.  ஏனிப்படிக் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள்.

மேலும், சாதிமறுப்புத் திருமணம் என்ற கூர்மையை மழுக்க எதற்கு இங்கே சமூகத்தையும் சேர்த்து இழுக்கிறார்கள்? திவாரி வீட்டுப் பெண் த்ரிவேதி வீட்டு அல்லது சதுர்வேதி வீட்டு அல்லது முகர்ஜி, பேனர்ஜீ வீட்டுப் பையனைத் திருமணம் செய்திருந்தால் இப்படி ஒரு நிகழ்வு அல்லது எழவு விழுந்திருக்குமா?

அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது என்று வியாக்கியானம் செய்கிறார்களே, இச்செயல் நியாயப்படுத்த முடியாதது என்று அறுதியிட்டுக் கூற சமூகம் நீதிபதிகளுக்கு ஏன் மனம் வரவில்லை? ’மாறாகவோ’ என்ற மழுப்பல் எதற்கு? நியாயப்படுத்த முடியாதாயினும் இதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம் என்று அது கண்டு அஞ்சுகிறார்களா? அல்லது எதார்த்தத்தின் பின்னால் ஒளிகிறீர்களா, ஒத்துப்போகிறார்களா? கனம் நீதிபதிகள் சமூகத்துக்கு மேலும் ஒரு கேள்வி. நீங்கள் ’சமூகம்’ என்று சொல்வது எந்த சமூகத்தை? அல்லது உங்கள் நீதி பிரதிபலிப்பது எந்த சமூகத்தை?

இச்செயலுக்கு எதிர்வினையாக ஈழவ சமூக சகோதரர்கள், ஏன், சகோதரிகளும் கூட தங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட கடமையாகக் கருதி திலீப் திவாரியின் குடும்பத்தை ஒருக்கால், பூண்டோடு ஒழித்திருப்பார்களானால் அங்குதான் மரண தண்டனைக்கு மாறான மனிதாபிமானத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் இதற்கு எதிராகத் தோன்றுகிறது?

மரபுக்கு மாறான ஒன்றைத் தடுத்து நிறுத்தவேண்டிய சமூக நிர்ப்பந்த்த்துக்கு மதிப்புக் கொடுப்பதானால், அந்த மரபுதான் ஐந்து வயதுப் பெண்குழந்தையை அறுபது வயதுக் கிழவன் மணமுடிக்க நெடுங்காலம் இந்நாட்டில் வழிவகை செய்தது. ஆறாவது வயதிலேயே அதன் தாலி அறுத்து மொட்டையும் போட்டது; வீட்டிலேயே பூட்டிவைத்தது; உடன்கட்டை ஏறச்செய்தது; தீட்டு, துடைப்பு, புனிதக் குறைவென்று இரண்டாம்தரமாய் அடக்கிவைத்தது. இன்னும் இந்த மரபு ஏரா..ளம் செய்தது. அவ்வப்போது கடுமுயற்சியால் அந்த நச்சுமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன.  ஆனால், சாதிமறுப்புத் திருமணம் என்ற பெயரில் அதன் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் செயலை மட்டும் செய்யக்கூடாது, அதன் நச்சுப் பிடிதான் இன்றைய எதார்த்தம்.  அந்த எதார்த்தத்தைப் பற்றி ஒழுகுவதுதான் இன்றைய நீதி.  இந்த எதார்த்தத்தை ‘நச்சுப் பிடி’ என்று சொல்ல வைத்துவிட்டது எங்களது இன்றைய துர்ப்பாக்கிய நிலை… இதுதானே உச்ச நீதி.

இப்படி இருக்க அம்பை [திலீப்கள்] தூக்கில் ஏற்றுவது இருக்கட்டும், எய்தவனை, அதான் சாதியத்தை, மனுநீதியைக் கூண்டிலேனும் ஏற்ற மனம் வருமா அவர்களுக்கு?

இந்த உச்ச ’நீதிக்கு’த் தலைவணங்கும் மரபையும் சேர்த்து முறிக்க ஒரு பெண் – அருந்ததிராய் – ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறார். அவர்கள் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். இப்போது, இதோ, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய இளம்பெண்கள் சிறப்புப் பேரவைக்கு வந்திருந்த இன்னொரு பெண், சுஷ்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வழக்காடுகிறார்.

“இத் தண்டனைக் குறைப்பு சாதிமறுப்புத் திருமணம் செய்ய விழையும் எல்லோருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போல் இல்லையா? சாதிய வெறுப்புணர்ச்சி என்பது தன்னிலையிலேயே கொடுங் குற்றமில்லையா?” என்று அவர் கேட்கிறார். ”என்னுடையதும், எனது ஐந்து வயது மகளுடையதுமான தனித்த பாதுகாப்புக்காக இல்லாவிடினும் மனிதப் பண்பைக் காப்பதற்கேனும் இந்த மரண தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும்” என்று போராடுகிறார்.

இச் செய்தி மகளிர் தினத்தன்றே வெளிவந்திருப்பது குறைந்த பட்சம் மகளிர் கண்களையாவது திறவாதா? மகளிர் தினம் அதன் உண்மைப் பொருளில் உணரப்படாதா? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

____________________________________________________

– அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்