Wednesday, November 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 808

அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !

206

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஜமாத்தாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மணமகன் அலாவுதீன், மணமகள் ஷபனா ஆஸ்மி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற  சீர்திருத்த திருமணம் குறித்த செய்தியை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டிருந்தது. அதனை வினவு தளத்தில் பிரசுரித்திருந்தோம். அச்செய்தியில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரப்பிழை குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கும் தெரிவித்து விட்டோம்.

அப்பகுதியின் ஜமாத்தை சேர்ந்தவர்களும், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட அப்பகுதி முஸ்லிம் மக்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்றும் மேற்கூறிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “கிடையவே கிடையாது” என்று இதற்கும் சில பேர் மூச்சைக் கொடுத்து வாதாடினார்கள்.

கடைசியாக, தன்னுடைய திருமணம் மிகப்பெரிய விவாதப் பொருளாக  மாறியிருப்பதைக் கேள்விப்பட்ட மணமகன் அலாவுதீன், வினவு தளத்தில் தனது விளக்கத்தை அளித்தார். அது அவரது விளக்கமல்ல, வினவு செட்டப் செய்து போட்டது என்று அவதூறு புலனாய்வு செய்து கண்டுபிடித்து சில இசுலாமிய தளங்களில் கட்டுரைகள் எழுதினார்கள்.

விவகாரம் அதோடும் முடியவில்லை என்று தெரிகிறது. நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்குமாறு மணமேல்குடி ஜமாத்திலிருந்து தனக்கு தாக்கீது வந்திருப்பதாக அலாவுதீன் எங்களிடம் தெரிவித்தார். வளைகுடாவில் இருக்கும் ஷபனா ஆஸ்மியின் தந்தை அப்பாஸ் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர். நான் உறுப்பினர் இல்லை என்று அறிக்கை விடும்படி அவரையும் நிர்ப்பந்திக்கிறார்களாம். இந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவை குறித்தெல்லாம் நாங்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில நாட்களில் எல்லாவற்றுக்கும் முடிவு தெரியத்தான் போகிறது.

இவர்களுடைய அணுகுமுறையைக் கண்டு ஒருபுறம் கோபம் வருகிறது. இன்னொரு புறம் இசுலாமிய மக்களின் நிலைமையை நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள். அவர்களோடு ரம்ஜான் கஞ்சி குடிப்பார்கள். அதிலெல்லாம் இவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் நேரடி இந்துமதவெறிக் கட்சியான பாஜகவுடனும், மறைமுக இந்துமதவாதக் கட்சியான காங்கிரசுடனும் கூட்டு சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு பிரச்சினை இல்லை.

அவ்வளவு ஏன், தற்போதைய அலகாபாத் தீர்ப்பை கண்டித்து எந்தக் கட்சியும் பேசவில்லையே அதுபற்றி கேட்பதற்கும்  இவர்களுக்குத் துப்பில்லை. யாராவது ஒரு அலாவுதீன் கம்யூனிச அடையாளத்தோடு திருமணம் செய்து கொண்டால் அதுதான் இவர்களுக்கு பிரச்சினை. உடனே விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் தூள் பறக்கிறது.

வரதட்சிணை வாங்கிய இசுலாமியர்கள், வட்டிக்கு விடும் இசுலாமியர்கள், லாட்டரி சீட்டு விற்றே ஜனாப் ஆன ஹாருண்கள், ஏழை முஸ்லிம்களை வளைகுடாவுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தும் முஸ்லீம் பெருமக்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் கலீல்ஜி போன்ற தலைவர்கள்… இவர்களையெல்லாம் தவ்ஹீத் ஜமாத் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். “நான் ஒரு கம்யூனிஸ்டு” என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் அலாவுதீன்தான் இவர்களுக்குப் பிரச்சினை.

இந்தப் பிரச்சினையும், இன்று இந்த விவாதம் நடைபெறும் சூழலும் எங்களுக்கு 1980களை நினைவு படுத்துகிறது. அன்று குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி ஜீவனாம்சம் கோரிய ஷாபானு என்ற அப்பாவி வயோதிக முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தார்கள் இசுலாமிய அடிப்படைவாதிகள். உடனே பல்டியடித்த ராஜீவ் காந்தி ஷரியத் கோர்ட்டை கொண்டு வந்தார். அதனை சரிக்கட்டும் விதத்தில் இந்து அடிப்படைவாதிகளை தாஜா செய்வதற்காக 1986 இல் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபாட்டுக்குத் திறந்து விட்டார். விளைவு – நாடு முழுவதும் நாம் கண்டு வரும் இந்து வெறியின் கோரதாண்டவம்.

இன்று, அலகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதனை எதிர்த்துக் கண்டிப்பதற்கு, இப்தார் விருந்து வைத்த எந்த ஓட்டுக் கட்சிக்கும் துப்பில்லை. அந்தக் கட்சிகளில் இருக்கும் இசுலாமியர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவிக்குமா? அவர்களையெல்லாம் எந்த ஜமாத்தாவது விசாரிக்குமா? அலாவுதீன் மீது விசாரணை நடத்தப்போகிறார்களாம். இந்தக் கேலிக்கூத்தை என்னவென்பது?

இந்து மதவெறிக்கு எதிராக சமரசமின்றி குரல் கொடுக்கும் ம.க.இ.க வும் வினவு தளமும்தான் இவர்களுக்கு எதிரிகள். கேட்டால் “இந்து மதவெறியையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இசுலாமிய மக்கள் உங்களை நம்பி இல்லை” என்று ஜம்பமாக பதில் சொல்வார்கள். தங்களுடைய உரிமையைப் பாதுகாப்பது இசுலாமிய அமைப்புகளா, மதச்சார்பற்ற அமைப்புகளா என்று குஜராத் முஸ்லிம் மக்களிடம் அல்லவா கேட்கவேண்டும்? பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்ட குஜராத் படுகொலை வழக்குளை உலகறியச் செய்த தீஸ்தா சேதல்வாத், ஒரு இறை நம்பிக்கையற்ற காஃபிர். மோடியை எதிர்த்து நிற்கும் பல மனித உரிமை ஆர்வலர்களும் கூட இறைநம்பிக்கையற்ற காஃபிர்கள்தான்.

இசுலாத்தை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் இசுலாமிய மக்களின் மீது பரிவும், அக்கறையும் கொண்ட எங்களைப் போன்ற காஃபிர்களுடன் ஒரு முஸ்லிம் என்ன விதமான உறவைப் பேண வேண்டும்? “இத்தகைய காஃபிர்களை நம்முடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஹராம் இல்லை. ஆனால் அந்த நச்சுப் பாம்புகளோடு நெருக்கமான சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் போன்றோரின் கருத்து.

ஆனால் அது அப்படி இருப்பதில்லை. பேய் என்றும் பிசாசென்றும் சாத்தானென்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய சித்திரத்தை தவ்ஹீத் ஜமாத்தார் உருவாக்கினாலும், எங்களுடன் நேரடியாகப் பழகும் சாதாரண முஸ்லிம் மக்கள் கம்யூனிஸ்டுகளின் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார்கள். கல்வி வள்ளல்களின் நன்கொடைக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி நாங்கள் போராடும்போது அதில் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள்; தொழிற்சங்கத்தில் முஸ்லிம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்; இவர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தவ்ஹீத் ஜமாத்திடம் விடை இல்லை.

இவற்றுக்கு நியாயமான, அறிவுக்கு உகந்த தீர்வுகளைச் சொல்லும் கம்யூனிசக் கொள்கைகளின் பால் ஒரு இசுலாமியர் ஈர்க்கப்படுவதில் என்ன தவறு? அப்படி ஈர்க்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் தான் அலாவுதீன். நேற்று இந்துவாக, கிறித்தவனாக, ஆதிக்க சாதியாக, திமுக காரனாக, அதிமுக காரனாக, ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்தவர்களெல்லாம்தான் கம்யூனிஸ்டுகளாக மாறியிருக்கிறார்கள். யாரும் காஃபிராகவே வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. பிறப்பால் இந்து உண்டு, முஸ்லிம் உண்டு, கிறித்தவன் உண்டு. ஆனால் பிறப்பால் யாரும் கம்யூனிஸ்டு இல்லை. கம்யூனிஸ்டுக்கு மகனாகப் பிறந்தாலும், அவனுக்கு கம்யூனிசத்தின் மீது பற்று இருந்தால் மட்டும்தான் கம்யூனிஸ்டாக வளர்வதற்கு முயற்சிக்கிறான்.

அலாவுதீனையே எடுத்துக் கொள்வோமே. அவர் குடிகாரரோ, பெண் பித்தரோ, சூதாடியோ, வட்டிக்கு விடுபவரோ இல்லை. வரதட்சிணையும் வாங்கவில்லை. அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான். “இசுலாமுக்கு எதிராக எதையாவது செய்தே தீருவது” என்று முடிவு செய்து அதற்காக தனது திருமணத்தை அவர் இப்படி நடத்தவில்லை. இதுதான் அறிவுக்கு உகந்தது, நாகரிகமானது என்று கருதுவதனால் சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார்.

உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக பகத்சிங், மார்க்ஸ், லெனின் போன்றோரின் படத்தை அவர் மேடையில் வைக்கவில்லை. அவர்கள் மனித குலத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதனால் மேடையில் வைத்தார். இன்னும் திப்பு சுல்தான், ஹசரத் மகல், இஷ்பகுல்லா கான் போன்றோரின் படங்களைக் கூட வைப்போம். அவர்கள் இசுலாமியர்கள் என்பதற்காக அல்ல, விடுதலைப்போரின் முன்னோடிகள் என்பதனால். பிறப்பால் இந்துக்களான எங்களது தோழர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஹசரத் என்றும் திப்பு என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படிப்பட்ட இசுலாமியப் பெயர்களை வைப்பதற்கு நாங்கள் தவ்ஹீத் ஜமாத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமோ?

அவ்வளவு ஏன், 1920களில் தென்னிந்தியாவுக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவரே பிறப்பால் முஸ்லீமான தோழர் அமீர் ஹைதர் கான் என்பவர்தான். அவர் போட்ட விதையில் முளைத்த சாத்தான்கள்தான் நாங்களெல்லாம். ஒருவேளை அன்று தவ்ஹீத் ஜமாத் இருந்திருந்தால், அவருடைய கதி என்ன, நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது!

புத்தனோ, கிறிஸ்துவோ, நபிகள் நாயகமோ அவரவர் காலத்தில் மனிதகுலம் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவர்கள் சிந்தித்து விடையளித்தார்கள். அதற்குப் பின்னர் உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் ஏராளம். இந்த மரபுகளின் நேர்மறையான அம்சங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்டு இன்றைய உலகத்தின் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் கம்யூனிசம். ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர் ஆனோ கிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும். கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்.

“எக்கேடு கெட்டும் போ. கண்ணுக்கு மறைவாக, ஊரை விட்டு ஓடிப்போய் எங்கேயாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத்தாரின் கோரிக்கை. அலாவுதீன் அப்படி ஓடி, ஒளிந்து செய்யவில்லை. தனது சொந்த ஊரில் முஸ்லிம் மக்கள் மத்தியில், அவர்கள் அங்கீகாரத்துடன் செய்திருக்கிறார். “இசுலாத்துக்கு விரோதமான காஃபிர்கள் ஒன்றுகூடி சிவப்புக் கொடி ஏற்றி ஒரு திருமணத்தை நடத்த, நம்மாளுக அதை தட்டிக் கேட்க துப்பில்லைன்னாலும், கலந்து கொண்டு, வாழ்த்தி, பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்களே, இப்படியே போனால் இசுலாத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் காரர்களின் கவலை.

தங்களுடைய கொள்கையின் மீது தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், “சுயமரியாதை திருமணம் ஏன் தவறு, இசுலாமிய திருமணம் எப்படி சரியானது” என்று மணமேல்குடியில் கூட்டம் போட்டு முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். “ஐந்து வேளை தொழுது, ரம்ஜானுக்கு நோன்பிருக்கும் உண்மையான முஸ்லிம்களாகிய நீங்கள் காஃபிர்கள் நடத்திய இந்த திருமணத்திற்கு எப்படி போனீர்கள்?” என்று அந்த மக்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். தனது கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள், “ஊர்விலக்கம், ஜமாத் விசாரணை” என்று கோழைத்தனமாக எதற்கு குண்டாந்தடி எடுக்க வேண்டும்?

இசுலாமியர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். இசுலாத்தின் எதிர்காலத்தைப் பற்றி தவ்ஹீத்துக்கு கவலை. சுயமரியாதை உள்ளவனை சும்மா விட்டால், தங்களுடைய கோட்டையில் விரிசல் விழுந்து விடும் என்பது அவர்கள் பிரச்சினை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் முஸ்லிம் மக்களின் சுயமரியாதையை பேரம் பேசலாம். அதில் தவ்ஹீத்துக்கு ஆட்சேபம் இல்லை. யாருடன் கூட்டணி வைக்கலாம், வைக்கக் கூடாது என்று குர் ஆனிலோ, ஹதீஸிலோ எதுவும் சொல்லப்படவில்லையே. எப்படி திருமணம் செய்யவேண்டும் என்பது பற்றித்தானே இசுலாமில் வழிகாட்டுதல் இருக்கிறது!

வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் ஒரு பாசிசத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. “இதனை எதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பில் அலாவுதீன் என்ற நம் பையன் இருக்கிறானே” என்பது பற்றி ஒரு முஸ்லிம் மகிழ்ச்சி கொள்ளவேண்டுமா, அல்லது அவனை ஜமாத்தில் நிறுத்தி ஊர்விலக்கம் செய்யவேண்டுமா?

சாதிப்பஞ்சாயத்துகள், மதப்பஞ்சாயத்துகள் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம் மக்கள்தான். இசுலாம் என்றாலே தலிபான்தான் என்ற முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு, தங்களது நடவடிக்கை மூலம் வலு சேர்க்கிறது தவ்ஹீத் ஜமாத்.

இந்துக்கள் எல்லோருக்கும் நான்தான் அத்தாரிட்டி என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதற்கும், முஸ்லிம்கள் எல்லோருக்கும் நாங்கள்தான் அத்தாரிட்டி என்று தவ்கீத் ஜமாத் கூறுவதற்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது பெரும்பான்மை மதம் சார்ந்த மதவெறி அமைப்பு. ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தை இசுலாமிய மக்களுக்கு அடையாளம் காட்டிய அலாவுதீன் – ஒரு அற்புத விளக்குதான்!

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!

26

வெளிநாடு வாழ் இந்தியப் பிரஜைகளுக்கு வாக்குரிமையும் ,அவர்களின் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்லும் உரிமைக்காகவும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் வயலார் ரவி. தேர்தல் வாக்குச் சீட்டு என்கிற பம்மாத்தெல்லாம் எதற்கு பேசாமல் இந்திய தொழில் கூட்டமைப்பிடம் பாராளுமன்றத்த்தை குத்தகைக்கு விட்டால் அவர்களாக பார்த்து பதவிகளை விற்று விட்டு ஒரு தொகையை ராயல்டியாக அரசுக்கு கட்டி விட்டுப் போவார்கள் என்கிற அளவுக்கு நாடு நாறிக் கிடக்கது. தொழிலதிபர்கள், வாரிசுகள், உயரதிகார்கள் எல்லாம் எம்பியாகி நூற்றி பத்து கோடி இந்தியர்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் பாராளுமன்றம் சாதா நேரமும் தொழில் முதலைகளுக்காகவும், தொழில் நிறுவனங்களுக்ககவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டே தாய்நாட்டின் மீதான பற்றில் துடிக்கும் மேட்டுக்குடி வெளிநாடு வாழ் இந்தியர்களின் தாய்நாட்டுப் பாசத்திற்காக சலுகை காட்டுகிறது இந்திய அரசு. ஆனால் இவர்கள் தேச பக்தி என்பதே தேர்தலில் ஓட்டுப் போடுவதும், கொழுத்த பணத்தோடு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம்பியாவதும்தான். இந்த பணக்கார வெளிநாட்டு வெள்ளைத் தோல் மனிதர்களும், தன் குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள கடன் வாங்கி வெளிநாடு சென்று கடின உழைப்பில் கால நேரமில்லாமல் ஈடும் தொழிலாளர்களும் ஒன்றல்ல, எண்ணெய் கிடங்கில், கட்டிடத் தொழிலில், சாலைப்பணியில், வீட்டுத் தொழிலில், மருத்துவப் பணிகளில், மீன் பிடித்தொழிலில் என பல்லாயிரம் ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு பீபீ லுமாடா.

ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.

________________________________

தொம்பன்
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!

23
கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!

கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!நல்லொழுக்க சீலர்களும், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசி அறியாதவர்களும், நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும், சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் “காக்கி டவுசர்” கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது.

குமாரசாமியின் தலைமையில் “ரத யாத்திரை” கிளம்பிய 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் மற்றும் 5 சுயேச்சை உறுப்பினர்கள், தேசமெல்லாம் சுற்றியபின் கடைசியில், “இராவணன் ஆட்சிதான் (இது கருணாநிதி பற்றிய வேதாந்தியின் வர்ணனை) எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு” என்று சென்னையில் சரணடைந்தது குறித்த வரலாறு வாசகர்கள் அறிந்ததே. ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் எல்லாம் நடந்து யுத்த காண்டமும் நேற்று முடிந்து விட்டது. பட்டாபிஷேகம்தான் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் என்.ஆர்.ஐ அம்பிகள் இந்த காண்டத்தை, condom என்று புரிந்து கொண்டு, எங்களை ஹிந்து விரோதிகளாக சித்தரிக்கும் அபாயம் இருப்பதால் இது சமஸ்கிருத “காண்டம்” என்று தெளிவு படுத்திவிட்டு விசயத்துக்கு வருகிறோம்.

நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொண்டு எம்.எல்.ஏக்கள் நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய ஆங்கில சானல்கள். கான்ஸ்டிடியூசனல் கிரைசஸ் (constitutional crisis) என்று அதனை வர்ணித்தன. சட்டை கிழிந்ததனால் அரசியல் சட்டமே கிழிந்து விடுவதில்லை. “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கவுண்டமணி சொல்வது நம் காதில் விழுகிறது. இருப்பினும், மேற்படி சட்டை கிழிந்த எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான் இப்போது பிரச்சினை.

000

முன்னொரு காலத்தில் அயோத்தி மாநகரத்தில் பாப்ரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இருந்தது. டிசம்பர், 6, 1992 அன்று அதனை சங்கபரிவாரம் இடித்துத் தள்ளியவுடன், அந்த இடத்துக்கு “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேற்படி சர்ச்சைக்குரிய இடம் ராமன் பிறந்த இடம் என்று ஹிந்துக்கள் (அதாவது பாரதிய ஜனதா) நம்புவதால், அதை அவர்கள் பெயருக்கு எழுதி போன மாதம் தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

டிசம்பர் 6 போலவே, அக்டோபர் 11 ம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நேற்று அதிகாலை 6 மணிக்கு 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களையும், எடியூரப்பா அரசை முன்னர் ஆதரித்த 6 சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர். அதிகாலை 6 மணிக்கு சட்டமன்றம் கூடிவிட்டதோ என்று வாசகர்கள் எண்ண வேண்டாம். அவாளுக்கு தேவைப்படும்போது சட்டசபை அதிகாலையில் கூடும். உயர்நீதிமன்றம் நடுராத்திரியிலும் பெயில் கொடுக்கும். “தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

இப்போது இந்த 11+6 பேருடைய “ஸ்திதி” என்ன என்பது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் சட்டப்புலியும் முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான சோலி சோரப்ஜியை இறக்கியிருக்கிறது பாரதிய ஜனதா. நேற்று இரண்டரை மணிநேரம் விவாதம் நடந்ததாம். இன்று காலை 10.30 முதல் நீதிமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

“அந்த 11+6 பேரும் தலா 25 கோடி வாங்கிவிட்டார்கள். அவர்கள் என் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அதனால் அவர்களை இடித்து விட்டேன்” என்கிறார் எடியூரப்பா. “பணம் வாங்கினோமா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. கட்சிக் கொறடாவை மீறி வாக்களிக்காத போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எங்களை இடித்தீர்கள்?” என்பது 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களின் கேள்வி.

சுயேச்சை எம்.எல்.ஏக்களின் வாதம் இன்னும் சுவையானது. “நாங்கள் கோவிலும் அல்ல மசூதியும் அல்ல. எந்தக் கட்சி வேண்டுமானாலும் கட்டிடம் கட்டக் கூடிய காலி மனையே நாங்கள். காலி மனையை சபாநாயகர் எப்படி “இடிக்க” முடியும்?” என்பது அவர்களுடைய கேள்வி.

இந்த 11+6 பேரையும் ஓட்டுப் போட அனுமதித்து தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க எடியூரப்பா தயாராக இல்லை. டிசம்பர் 6, 1992 அன்று கடப்பாரை சேவை நடத்தி, பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய இடமாக மாற்றியதைப் போலவே, குரல் வாக்கெடுப்பு நடத்தி, இடிபாடுகளின் மேல் ராம் லல்லாவை நிற்க வைத்து டென்டு அடித்து இதுதான் “கோயில்” என்று இரண்டு விரலைக் காட்டி விட்டார் எடியூரப்பா.

இப்போது நீதிமன்றம் என்ன செய்யும்? ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதியான எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ராமஜென்ம பூமியை அவருக்கு எழுதிக் கொடுக்குமா? அல்லது 11+6 வழங்கும் சான்றாதாரங்களைப் பரிசீலிக்குமா? இதுதான் இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் சட்ட நெருக்கடி.

இன்றைக்கு இப்பிரச்சினை குறித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தினமணி. “தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதும், பாஜக உறுப்பினர்கள் 11 பேரும், சுயேச்சை உறுப்பினர்கள் 5 பேரும் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தெரிந்த பிறகும், முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிக்க ஏன் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும்? துணிந்து சட்டப்பேரவையை சந்தித்து, வாக்கெடுப்பு நடத்தி வெற்றியோ, தோல்வியோ, துணிவுடன் எதிர்கொண்டிருந்தால் அவரது மதிப்பும் மரியாதையும் இமயமாக உயர்ந்திருக்குமே..” என்று தினமணி அங்கலாய்த்திருக்கிறது.

என்ன செய்வது, பாபர் மசூதியில்தான் ராமர் பிறந்தார் என்பதை விவாதம் நடத்தி ஆதாரபூர்வமாக நீரூபித்திருந்தால் அத்வானியின் மதிப்பும்தான் இமயமாக உயர்ந்திருக்கும். ஆனால் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா? அதற்காகவல்லவோ கடப்பாரையைக் கையில் எடுத்தார் அத்வானி!

எடியூரப்பாவின் “மதிப்பு இமயம் போல உயர்ந்திருக்குமாம். போன வருசம் நவம்பர் மாதம் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கி, தொலைக்காட்சி காமெராக்களின் முன்னால் கண்ணீர் விட்டு அழுதாரே எடியூரப்பா, அன்றே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் அவருடைய மதிப்பு கிரானைட் மலையை விட இரண்டு அங்குலம் அதிகமாகவே உயர்ந்திருக்கும். அது எடியூரப்பாவுக்கு தெரியாதா என்ன?

இருப்பினும் மதிப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? பொருள் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவையல்லவோ எடியூரப்பாவும் ஹிந்து சமூஹமும் எதிர்கொள்ளும் தத்துவஞானக் கேள்விகள். இந்த பிரம்ம விசாரங்களுக்கான விடைகள் “ரெட்டியோபநிஷத்”தில் அல்லவோ கொட்டிக் கிடக்கின்றன!

“இராம பிரானே தேசிய நாயகன், ஹிந்து கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம், ஹிந்து தர்மம்தான் ஜனநாயக பூர்வமானது” என்பவையெல்லாம் சங்கபரிவாரத்தின் நம்பிக்கைகள். “நேற்றைய குரல் வாக்கெடுப்பில் தனது ஆட்சி வெற்றி பெற்றுவிட்டது” என்பதும்கூட எடியூரப்பாவின் நம்பிக்கைதான்.

11+6 பேருடைய ஸ்திதி சர்ச்சைக்குரியது என்றும், நேற்றைய குரல் வாக்கெடுப்பில் பாரதிய  ஜனதா வெற்றி பெற்றுவிட்டது என்பதும் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அசோக் சிங்கால், இல.கணேசன், பொன் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அடங்கிய பெரும்பான்மை ஹிந்து சமூஹம் மற்றும், ஹிந்து சமூஹத்தை வழிநடத்துகின்ற “ஹிந்து தர்ம சன்ஸாத்” தின் வசிஷ்டர்கள் ஆகியோர் அனைவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின்கீழ் வருகிறது. (25 ஆவது பிரிவு என்பது மத நம்பிக்கை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவு)

ஹிந்துக்களின் நம்பிக்கை குறித்தெல்லாம் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ன? பாபர் மசூதி தொடர்பான டைட்டில் சூட்டில், பட்டா-பாத்தியதையையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியதே அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதான் இனி ஹிந்துக்கள் தொடர்பான எல்லா வழக்குகளுக்கும் வழிகாட்டி.

விசாரிப்பதென்றால் அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின் கீழ் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தட்டும். அப்போதுதான் இந்த அரசியல் சட்ட நெருக்கடியிலிருந்து இந்தியா மீள முடியும். இந்திய அரசியல், ஹிந்து தர்மத்தினால் வழிநடத்தப்பட்டால் மட்டும்தான் நாட்டில் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்ட முடியும்.

ரெட்டி பிரதர்ஸ் வாழ்க! நல்லொழுக்கம் வாழ்க! குரல் ஓட்டு வாழ்க!

ஜெய் ஸ்ரீராம்!

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

 

அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!

66

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?

கற்பனைக்கு அடங்கா
மனவெளிக்கு அழைத்துச் சென்று
மகிழ்ச்சியின் நிழல் பரப்பும்,
வண்ணப் பூச்சுக்கள் இல்லை.

துரோகமும், லாபவெறியும்
கைகோர்த்துக் கொண்டு
போபால் வீதிகளில்
வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
அதற்காக,
இன்றும் கதறிடும்
அழுகையும் விம்மலும்
செவியில் அறைந்து கொண்டிருக்க,
தூரிகையை வண்ணங்களில் புதைத்து
அழகு பார்ப்பது முரணின் உச்சம்.

நீதிக்கான குரலை
கோடுகளால் பேசும்
கனமாய் விரிகிறது…
இந்த காட்சிப் படிமங்கள்.

1984, டிசம்பர் 2, போபால் – யூனியன் கார்பைடு: துரோகத்தின் விலை என்ன?
ஓவியக் கண்காட்சி

ஓவியங்களின் வழியே கலைபூர்வமான
தன் எதிர்வினையைத் தருகிறார் தோழர் முகிலன் (ம.க.இ.க)

ஓவியக் காட்சி திறப்பு: ஓவியர் மருது

ஓவியக் காட்சி பற்றி கலந்துரையாடல்: மாலை 6 முதல் 7.30வரை

நாள்: 10.10.2010 ( காலை 8 முதல் இரவு 8 வரை)

இடம்: செ.தெ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில்.

–   மக்கள் கலை இலக்கியக்  கழகம், சென்னை

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??

சர்ச்சைக்குரிய இடம்…

முதலாளித்துவச் சமூகத்தில்
மூட்டைப்பூச்சிக்கும், கொசுவுக்கும் கூட வர்க்கமுண்டு,
இயலாதவரையே ஏறிக்கடிக்கிறது!

இந்த லட்சணத்தில்…
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும்
சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி
நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று
யாராவது நம்பினால்…?
அயோத்தி தீர்ப்பே
அந்த எண்ணத்திற்கு ஆப்பு!

“சர்ச்சைக்குரிய இடம்” யாருக்குச் சொந்தம்?
சட்ட, ஆதாரப்படி சொல் என்றால்,
சர்ச்சைக்குரிய பிறவிக்கே இது ‘ஜென்ம பூமி’ என்று
தீர்ப்பை சொல்கிறான் என்றால்..
இது நீதிமன்றமா… சங்கரமடமா!
இவன் நீதிபதியா… சங்கராச்சாரியா!
இந்து மதவெறியன் கடப்பாரையில்
இடித்துச் சொன்னதை…
“பார் அட்லா”  சுத்தியலால்
அடித்துச் சொல்லியிருக்கிறான்..
வேறுபாடு கருவியில்தான்
மற்றபடி இந்திய நீதித்துறை
எப்போதும் போல் பார்ப்பன படித்துறை.

உழைக்கிற உழவுமாட்டுக்கு சூடு,
திரிகிற கோயில் மாட்டுக்கு தீனி, அகத்திக்கீரை!
இதுதான் இந்து தர்மம்!

உழைக்கும் மக்கள் அர்ச்சகராகி
கருவறைக்குள் நுழைய எதிர்ப்பு!
சந்நிதானத்திலேயே சங்கரராமனை போட்டுத்தள்ளிய
ஜெயேந்திரனுக்கு சட்டம் ஒரு செருப்பு!
இதுதான் அரசியல் சட்டம்!
இவனிடமா நீதி கிடைக்கும்?

பிரியங்கா போட்மாங்கே என்ற
தாழ்த்தப்பட்ட பெணணை
கும்பலாக வன்புணர்ந்து
பிணமான பின்பும் அவளைக் கடித்துக் குதறி,
அவள் பிறப்புறுப்பில் கட்டையைச் செருகிய
ஆதிக்கசாதி வெறிநாய்கள் மேல்,
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்காட முடியாது என
அரசியல் சட்டத்தை அவள் பிணத்தில் செருகிய
ஆதிக்கசாதி பயங்கரவாதிகள்தான்
இந்த நீதிபதிகள்.

இந்தியாவின் முகத்தின் மேல்
என் கழிவை இறக்குவேன்…
அதன் வேதிவினை பற்றி
விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கில்லை..
இது எங்கள் தொழில் ரகசியம் என
கொக்கரிக்கும் கோக்கோ கோலாவிடம்
பேசாமல்… சட்டப்புத்தகத்தால்
தன் பின்வாயைப் பொத்திக் கொள்ளும் நீதித்துறை
‘பந்த்’ வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்ன
போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்கிறது!
புரிகிறது…
இளிச்சவாய் இந்தியனென்றால் விடாது இ.பி.கோ.!
பன்னாட்டுக் கம்பெனி என்றால்
நீதிமன்ற தராசையும் எடுத்துக்கோ!

முப்பதாயிரம் இந்தியர்களை
போபாலில் படுகொலை செய்த
அமெரிக்க யூனியன் கார்பைடு நச்சுப் புகையின்
வேதியியல் பெயர் “மெத்தில் ஐசோ சயனேட்
அதன் அரசியல் பெயர் “இந்தியன் பீனல் கோட்
அமெரிக்க ஆண்டர்சனின்
சிகரெட் குவளைக்குள் கிடக்கிறது
இந்திய நீதிமன்றங்களின் சாம்பல்

யூனியன் கார்பைடின் இலாபத் தாரசின்
எடைக்கு எடை இந்திய நீதிபதிகள்

இன்றும் கூட.. போபாலில்
உதடுகள் பிளந்து, கண்கள் பிதுங்கி,
மரபணு சிதைந்து…
பிறக்கும் குழந்தைகளின் முகத்தில்
விகாரமாய்த் தெரிகிறது நீதித்துறை!

ஆந்திரா தேர்வு மையத்தில் காப்பியடித்து..
அலகாபாத் நீதிமன்ற ஊழியர்களின்
ஓய்வூதியத்தை கொள்ளையடித்து,
மாட்டிக் கொண்டவர்களை மடக்கிப் பிடித்தால்
அத்தனை பேரும் நீதிபதிகள்

விழுந்து, எழுந்து போராடும்
உழைக்கும் மக்களின் உரிமை மூச்செங்கும்
அழுந்திக் கிடக்கும் நீதித்துறையின் தழும்புகள்

அதிர்ச்சியடையத் தேவையில்லை
சர்ச்சைக்குரிய இடம்… இனி
பாபர் மசூதியோ, ராமன் பொம்மை பிறந்த இடமோ அல்ல,
இந்த நீதித்துறைதான்.
தெரிந்து விட்டது உண்மை
தெருவில் இறங்கி வழக்கை முடி!

_________________________________________________
* துரை.சண்முகம்
_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

இத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது.  பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன.  முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன.  திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

மனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை.  இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது.  முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும்.  இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது.  இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?  இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர்.  இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின.  கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

வினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

36

சி.என்.என்-ஐ.பி.என், டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்:

கரண் தபார்: மாவோயிஸ்டுகள் பற்றிய தங்களது பார்வை மற்றும் அவர்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றிய தங்களது கருத்துகளுடன் விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன், சமீபத்தில் பீகாரில் நான்கு போலீசார் கடத்தப்பட்டு எட்டு நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டது, அவர்களில் ஒருவரான லூக்காஸ் டிட்டி கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அருந்ததி ராய்: தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த ஒருவரைக் கொலை செய்வதில் புரட்சிகரமானது ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஆந்திரத்தில் போலி மோதலில் ஆசாத்தைக் கொலை செய்த போலீசாரின் செயலை ஒத்ததே இச்செயல் என நான் இதுபற்றி அறிவித்திருக்கிறேன்.  ஆனால், நமது தொலைக்காட்சிகளில் வரும் வன்முறை அடிப்படையிலான பகுப்பாய்வுகளில் இருந்தெல்லாம் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.  ஏனென்றால், இவ்வாறான விவாதங்கள், எதற்காக இந்தப் போர்? இந்த போரை விரும்புகிறவர்கள் யார்? இந்த போர் யாருக்குத் தேவையாக இருக்கிறது? என்ற விரிந்த பார்வையை (big picture) நீங்கள் இழந்து நிற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றன.

தபார்: அந்த விரிந்த பார்வை பற்றி விவாதிக்கப் பெரிதும் விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் நான் வேறு சிலவற்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  மாவோயிஸ்டுகள் கடந்த ஓராண்டில் பிரான்சிஸ் இண்டுவார், சஞ்சய் கோஷ் ஆகியோரது தலையைக் கொய்திருக்கிறார்கள், லூக்காஸ் டிட்டியைக் கொன்றிருக்கிறார்கள், பிற போலீசாரைக் கடத்தியிருக்கிறார்கள்; நிலைகுலைய வைக்கும் தாக்குதல்கள் தண்டிவாடாவில் நடத்தப்பட்டிருக்கின்றன; கியானேஸவரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டு இருக்கிறது.  இவை எல்லாம் அவர்களது நியாயமான போர்த்தந்திர அல்லது செயல்தந்திர நடவடிக்கைகளா? அல்லது அவர்களது லட்சியத்தில் இருந்தான பிரழ்வுகளா? நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அ.ராய்: எல்லாவற்றையும் மொத்தமாகக் கட்டிச் சுமத்தாதீர்கள்.. உதாரணத்துக்கு அந்த ரயில் விபத்து.  அதை யார் செய்தார்கள் என்று இன்று வரை யாருக்காவது தெரியுமா?

தபார்: மாவோயிஸ்டுகள்தான் என்று எல்லோருமே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்..

அ.ராய் : எல்லோருரையும் ஏற்கச் செய்திருக்க முடியும்.  ஆனால், ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது, மெய்ப்பிக்கப் புறச்சான்றுகள் வேண்டும்.  நாளும் வெளிப்படும் உண்மைகள் சிக்கவிழ்த்த வண்ணம் இருக்கின்றன.

தபார் : சரி, தண்டிவாடா, தலை கொய்தல்கள், ஆள்கடத்தல்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அ.ராய் : தற்போது நிகழ்வது என்ன.. ஒரு சண்டை, நிலவுவது ஒரு போர்ச் சூழல்.  நீங்கள் எல்லோரும் அதில் ஒரு தரப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரமான வன்செயல்களை முன்வைத்துப் பாயிரம் பாடுகிறீர்கள்.  அதே சமயம் மறுபுறம் என்ன நடக்கிறது என்ற சித்திரத்தை ஓரங்கட்டி விடுகிறீர்கள்.  அது, ஆகப் பரிதாபகரமான அந்த கிராமங்களை இரண்டு லட்சம் துணை ராணுவத் துருப்புகள் சூழ்ந்துகொண்டிருப்பதும், மக்களை இடம் பெயர்த்து எரிவதும், எரித்துக் கொல்வதும் பற்றியது.  எல்லா வன்முறைகளும் பயங்கரமானவைதான்.  ஆனால், உண்மையில் நடப்பது என்ன என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிய விரும்பினால் அதுபற்றி நாம் சற்று விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.

தபார் : ஆக, நீங்கள் சொல்ல வருவது, வன்முறை திருகுச்சுருள் போல விரிந்து செல்கிறது, அதில் ஒரு தரப்பின் செயல் மற்றதன் எதிர்வினையை நியாயப்படுத்தி விடுகிறது; ஒரு விதத்தில், நீங்கள் இதில் எந்த ஒரு தரப்பின் மீதும் குற்றம் காண விரும்பவில்லை.  இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாகக் காண்கிறீர்கள், அப்படித்தானே?

அ.ராய் : இல்லை, அவ்வாறு இல்லை. இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாக நான் பார்க்கவில்லை, இதில் எதையும் நியாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை.  ஒரு அரசு தனது ஆதிவாசி மக்கள் தொடர்பாகத் தான் வைத்திருக்கும் அரசியலமைவுச் சட்டத்தின் சரத்துகள் ஒவ்வொன்றையும் உடைத்தெறியும் போது, பல பத்து லட்சம் மக்களின் தாய்மண்ணில் ஒரு படுகொலையை நிகழ்த்தும்போது, அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கத்தான் செய்கிறது, அது இச்செயலைத் தடுக்கத்தான் செய்கிறது.  அந்த சூழ்நிலை தற்போது மூர்க்கமானதாகவும், மோசமானதாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.  இந்த சூழலில் இருந்து நெறிசார் விளக்கம் பெற விழைவீர்களானால் விஞ்சுவது குழப்பமாகத்தான் இருக்கும்.

 

தபார் : ஆனால், இந்த அரசுதான் முதல்நிலைக் குற்றவாளி எனக் காண்கிறீர்கள் என்பது உங்கள் கூற்றில் இருந்து தெள்ளத் தெளிவாகத் துலங்குகிறது. அதாவது, பெரும் தவறு, முதல் தவறு அரசாங்கத்தினுடையது, மாவோயிஸ்டுகள் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறார்கள் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்.

அ.ராய் : நிச்சயமாக இந்த அரசை வலுச்சண்டைக்காரனாகவே நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டுகளைப் பொருத்தவரை அவர்களது கொள்கையும் இந்திய அரசை பலாத்காரத்தால் தூக்கியெறியும் கொள்கைதான்.  இருப்பினும், இந்திய அரசு ஒரு நீதிவழுவா அரசு என நான் நினைக்கவில்லை. அது அவ்வாறு இருக்குமானால், சாமானிய மக்கள் இங்கு தாங்களும் நியாயம் பெறமுடியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையேனும் பெற்றிருப்பார்களானால், மாவோயிஸ்டுகள் மக்கள் ஆதரவற்ற போர்க்குணம் கொண்ட மிகச் சிறிய குழுவாகவே இருந்திருப்பார்கள்.

தபார் : ஆக, நியாயமானது என்று நீங்கள் நம்பத் தயாரில்லாத இந்த அரசின் தன்மையின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் தங்களது பலத்தையும், ஆதரவையும் பெற்றார்கள்…

அ.ராய் : மாவோயிஸ்டுகளை விடுங்கள், ஆயுதம் தாங்கிய, தாங்காத அனைத்து எதிர்ப்பு இயக்கங்களும், இன்றைய மாவோயிஸ்டுகளும் கூட அரசியல் அமைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரிப் போராடுகிறார்கள். ஆனால், அரசோ அதற்குக் குழிபறிக்கிறது.

தபார் : எனவே, உண்மையான சட்டவாதிகள் மாவோயிஸ்டுகள், சட்டத்தை உடைப்பவர்கள் இந்த அரசாங்கம்.. அப்படித்தானே?

அ.ராய் : மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா எதிர்ப்பு இயக்கங்களும்தான்.

தபார் : இவ்வாரச் செய்திகள் முழுவதிலும் அடிபட்டவர்கள் என்பதால், தற்போதைக்கு மாவோயிஸ்டுகள் மீது கவனத்தை செலுத்துவோம். தேசத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைப் பார்க்கிறார் பிரதமர்.  அவர்களைப் பற்றிய உங்களது கருத்து முற்றிலும் மாறுபட்டது எனக் கருதுகிறேன். மாவோயிஸ்டுகளைப் பற்றிய உங்களது பார்வைதான் என்ன?

 

அ.ராய் : நாடு, நகரம், காடுகளில் உள்ள எதிர்ப்பு இயக்கங்களின் அலைவரிசையில் மிகவும் போர்க்குணம் மிக்க முனையில் முதல் நிலை வக்கிக்கும் குழுவினராக அவர்களைப் பார்க்கிறேன்.

தபார் : ஆனால் அவர்கள் என்ன செய்ய விழைகிறார்கள்?  அவர்கள் தரப்பு நியாயம் என்ன?

அ. ராய்: அவர்களது இறுதி இலக்கு, அவர்களே தெளிவாகச் சொல்வது போல, இந்த இந்திய அரசைத் தூக்கியெறிந்துவிட்டு பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தைக் கொணர்வதுதான்.  அது அவர்களது இறுதி இலக்கு.  ஆனால்,…

தபார் : சொல்லுங்கள் அருந்த்திராய் அவர்களே, நீங்கள் அந்த இலக்கை ஆதரிக்கிறீர்களா?

அ. ராய்: நான் அந்த இலக்கை ஆதரிக்கவில்லை.  என்ன அர்த்தத்தில் என்றால், உலகம் இன்று சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு கம்யூனிச அல்லது முதலாளியக் கற்பனைகளில் இருந்து பிறக்கும் என நான் நம்பவில்லை…

தபார் : அது எனக்குப் புரிகிறது.  ஆனால், இந்த அரசைத் தூக்கியெறியும் முயற்சி எதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அ. ராய்: சரிதான், ஆம், ஆதரிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது.  பிறகு இங்கிருந்தே விலங்கிட்டு அழைத்துச்செல்லப்படுவேனே.

தபார் : இந்தக் நடைமுறை சிக்கலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நீங்கள் ஆதரிப்பதாகத்தான் தெரிகிறது.

அ. ராய்: இருப்பினும், இந்திய அரசு மக்கள் மீதான தனது பொறுப்புணர்ச்சியைக் கைகழுவிவிட்டது என்று நான் நம்புகிறேன்.  இந்திய அரசியலமைப்புக்கு சட்டப்படியோ, தார்மீக ரீதியாகவோ இந்த அரசு கட்டுப்படாதபோது, ஒன்று, நாம் இந்த அரசியல் அமைப்புச்சட்ட முன்னுரையின் மேற்கோள் வாசகத்தை மாற்றி எழுதலாம். அது சொல்கிறது…

தபார் : அல்லது ?

அ.ராய் : நாம் ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு என்று அது சொல்கிறது.  அதை மாற்றி இது ஒரு கார்ப்பரேட் முதலாளிகள், இந்துத்துவ சக்திகளை சுற்றிச் சுழலும் துணைக்கோள் என்று அழைக்கலாம்.

தபார் : அல்லது  ?

 

அ.ராய்: அல்லது இந்த அரசியலமைப்பை மதித்து நடக்கும்படியான ஒரு அரசை நாம் பெற்றாகவேண்டும். அல்லது, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்.

தபார் : உடைத்துச் சொல்கிறேன்… இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் உறுதிப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.  அதைச் சொல்வதற்கு சாதுர்யமான, பூடகமான வழிகளைக் கையாள்கிறீர்கள்.  சிறைப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள்..  பார்வையாளர்களுக்குத் தங்களது பேச்சின் பொருள் இதுபோலத்தான் ஒலிக்கிறது.

அ.ராய் : இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் விருப்பத்தை ஆதரிக்கிறேன் என்று நான் சொன்னால், நான் என்னை ஒரு மாவோயிஸ்டு என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.  ஆனால் நான் ஒரு மாவோயிஸ்ட் அல்ல.

தபார் : ஆனால் நீங்கள் அவர்களது அனுதாபி… இல்லையா?

அ.ராய் : எல்லா இயக்கங்களுக்கும்தான் நான் அனுதாபி.  நான் இருப்பது கோட்டின் இந்தப்பக்கம்; உள் நாட்டில் மட்டுமல்ல, உலகலிலேயே கொடும் ஏழையான மக்களின் மீதே தனது இராணுவத்தைப் ஏவத்துடிக்கும் அரசுதான் இங்கு இருக்கும் அரசு என்று இடித்துரைக்கும் மக்களின் பக்கம் நான் இருக்கிறேன்.  இச் செயலை நான் ஆதரிக்க முடியாது.

 

தபார் : சரி, இப்படிக் கேட்கிறேன்.  நீங்கள் மாவோயிஸ்ட் இலட்சியத்தின்பால் அனுதாபம் காட்டுகிறீர்கள்.  ஆனால், அவர்கள் நடைமுறைப்படுத்தும் செயல்தந்திரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?  பிரச்சினை என்னவென்றால், மாவோயிஸ்டுகள் மக்களைக் கருத்தொருமிக்கச் செய்தோ, சட்டபூர்வமான தேர்தலில் வென்றோ அல்லாமல் ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையைச் சாதித்து ஒரு புதிய ஜனநாயக சமூக ஒழுங்கமைவைக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.  பலருக்கும் இச்செயல் ஒரு உள்நாட்டுப் போரை ஒத்த விசயம்.  இதில் நீங்கள் அவர்களுடன் கைகோர்த்துச் செல்கிறீர்களா?

அ.ராய் : ஏற்கனவே இங்கு ஒரு உள்நாட்டுப் போர்தானே நடக்கிறது. வன்முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு எதிர்ப்பு இயக்கம் புதிய ஜனநாயகத்துக்கு வழிநடத்தும் என்று நான் நம்பவில்லை.  உறுதியாக நான் நம்பவில்லை.  அதுபோலவே, நீ அகிம்சாவாதியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று கோட்பாடு பேசுவீராயின் அதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.  இவ்வாறு பேசுவது நடப்பில் உள்ள அநீதியை ஆதரிக்கும் புரட்டுப் பேச்சு என்றே நம்புகிறேன்.  எதிர்ப்பு இயக்க அலைவரிசையில் ஒன்றாக அதுவும் இடம்பெறுகிறது என்றே கருதுகிறேன்.  800 மத்திய சேமக்காவல் படையினரால் உங்கள் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு, வண்புணர்ச்சி, தீயிடுதல், சூரையாடுதல் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக்கும்போது, நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று உங்களால் சொல்லமுடியாது என்றும் நம்புகிறேன்.  அச்செயல்களை எதிர்க்கும் மக்களின் உரிமையை நான் ஆதரிக்கிறேன்.

தபார் : இருக்கட்டும், என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.   நீங்கள் அதை ஆயுதந்தாங்கிய விடுதலைப் போர் என்றோ வேறு எதுவாகவோ அழைத்துக்கொள்ளுங்கள், அதற்கான உங்கள் நியாயவாதம் எதுவாயினும் இங்கு ஒரு பொருட்டல்ல; மாவோயிஸ்டுகளின் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு உரிமையை நீங்கள் ஆதரிப்பீர்களானால்..

அ.ராய் : இப்படி மாவோயிஸ்டுகளை நோக்கியே  சுற்றியே பேச்சை கொண்டு செல்கிறீர்கள், இது நியாயம் இல்லை…

 

தபார் : நீங்கள் அதை ஆதரிப்பீர்களானால், அது எந்த அடிப்படையில் என்பது இங்கு விசயமல்ல,  அதே சமயம் அரசு ஆயுதம் எடுத்துத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை உங்களால் எப்படி மறுக்க முடியும்?

அ.ராய் : அரசுக்கு தன்னைத் பாதுகாத்துக் கொள்வதா வேலை,  மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், பாதுகாப்பதுமே அதன் கடமை என கருதப்படுகிறது

தபார் : ஆனால், அரசு தாக்கப்படுமானால், அது மக்கள் தாக்கப்படுவதாகவே பொருள். மேலும்…

அ.ராய் : கரன., அரசு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அதுதான் தாக்குதலைத் தூண்டுகிறது.  அதைத்தான் நான் புரியவைக்க முயல்கிறேன்.  தனது சொந்த அரசியல் சாசனத்துக்கு முரணாகச் செயல்படுவதுடன் ஒரு தாக்குதலையும் முன் தள்ளுகிறது. சமீபத்திய பஞ்சாயத் ராஜ் அறிக்கையைப் பார்த்தீர்களானால், அதன் கண்டன அத்தியாயத்தில் அரசு தனது செயல்பாடுகளில் முற்றிலும் சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  ஒரு மாறுதலுக்கு நான் உங்களை கேட்கிறேன், ராணுவம், போலீசு, துணை ராணுவப்படை, விமானப்படை அனைத்தும் கூடி ஏழை மக்கள் மீது ஒரு போரைத் தொடுக்கத் தொடங்கும்போது அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?  இடத்தைக் காலி செய்துவிட்டு கூடாரத்தில் குடியேறவேண்டுமென்றா? தங்களது நிலத்தைப் பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சுரங்கத்துறையினர் அபகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றா?

 

தபார் : ஆக, மாவோயிஸ்டுகளும் மற்ற அனைத்து எதிர்ப்பு இயக்கத்தினரும் இதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்த வேறு வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறீர்கள், இல்லையா?

அ. ராய் : நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசு வன்முறையற்ற எதிர்ப்புக்கு மதிப்பளிக்குமேயானால் -இந்த அரசு மதிப்பளிக்காவிட்டாலும் – பல ஆண்டுகளாக, பல பிரச்சனைகளுக்காக  மக்கள் அமைதிவழியிலான போரட்டத்தைதான் கடைபிடித்துவந்திருக்கிறார்கள்.  நீங்கள் அந்த அகிம்சைப் பாதையை அலட்சியப்படுத்துவதன் மூலம் தன்னியல்பாக வன்முறையை பிரதானமாக வளரச் செய்கிறீர்கள். அதைத்தான் இந்த அரசு செய்கிறது.

தபார் : ஆனால், நீங்கள் கூறுகின்ற இந்த வன்முறையற்ற பாதையில்தான் மாவோயிஸ்டுகள் தங்கள் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்களா?  அது தானே பிரச்சினை.  அவர்களது லட்சியம் அவர்கள் பின்பற்றும் வழிமுறையை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம்.  கேள்வி என்னவெனில், அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்களா, இல்லையா?

அ. ராய் : என் சொற்களுக்கு நீங்கள் காதுகொடுக்கவில்லை.  பலபத்து லட்சம் மக்களை அவர்தம் மண்ணிலிருந்து பிய்த்தெறியும் கண்மூடித்தனமான அநீதி இங்கு நாளும் முன்னேறிச் செல்கிறது என்று நான் கூறுகிறேன்.  ஏன் இந்த நாட்டில் 83 கோடியே 36 லட்சம் மக்கள் 20 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கொண்டு ஒரு நாளைத் தள்ள வேண்டியிருக்கிறது?  உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட 6 கோடி மக்களை நாம் கொண்டிருக்கிறோமே, ஏன்?  ஏன் என்றால் இந்த அரசு முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.  கடந்த 25 ஆண்டுகளாக இந்த அரசு அமைதிவழி கோரிக்கைகளைக் கேட்கவும் மறுத்திருக்கிறது.

தபார் : ஆகவே, மாவோயிஸ்டுகளை இதற்குப் அநீதியால் பாதிக்கப்பட்டவற்களாக நீங்கள் பார்க்கிறீர்களா..?

அ. ராய் : மக்கள் எதற்கோ பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டு கொள்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால், எதற்கும் பலியானவர்களாகத் தங்களை அவர்கள் கருதவில்லை.   ஆனால் இந்த அரசு இழைத்துவரும் மாபெரும் அநீதியின் காரணமாக மாவோயிஸ்டுகளின்  கொள்கை ஒரு  வெகுஜனக் கருத்தாக்கமாக பெருவாரியான மக்களிடம் எடுபடுகிறது.

தபார் : சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட எல்லாத் தவறும் அரசுத் தரப்பினுடையதுதான் இல்லையா?

அ.ராய் : ஆம்.

தபார் : இதைத் துணிந்து , வெளிப்படையாக சொல்கிறீர்கள்.. அப்படித்தானே?

அ.ராய் : நிச்சயமாக.

தபார் : பேச்சுவார்த்தையின் நிலவரம் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன்னால், ஆசாத் பற்றிச் சொல்லுங்கள்.  மாவோயிஸ்ட் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யுமாறு சுவாமி அக்னிவேஷை உள்துறை அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.  அதன்படி அக்னிவேஷ் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.  மே மாதம் தொட்டு இச்சூழல் தலைதூக்குகிறது.  ஆனால் ஜூலை மாதத்தில் விவரிக்க முடியாததொரு போலீஸ் மோதலில் ஆசாத் திடீரென்று இறந்துபோகிறார்.  ஆசாதை வெளிக்கொணர்ந்து கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டமே இது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அ. ராய் : ஆம், நம்புகிறேன்.

தபார் : உண்மையிலேயே அது அப்படித்தான் என்கிறீர்களா? ஆசாத்தைக் கொல்ல அரசு சதிவலை விரித்ததா?

அ. ராய் : வெளிவரும் உண்மைகளில் இருந்து பெறக்கூடியதாகவும், அவ்வுண்மைகள்  சுட்டிக்காட்டுவதாகவும் இம் முடிவுதான் இருக்கிறது.

தபார் : ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்?  பேச்சுவார்த்தைக்கான நியாயமான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்த ஒரு மனிதரையே அவர்கள் ஏன் கொலை செய்ய வேண்டும்?

 

அ. ராய் : இந்த போர் அரசின் தேவையினால் நடக்கும் ஒன்று என்று கடந்த சில மாதங்களாகவே நான் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறேன்.  அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆதிவாசி நிலங்களைக் காலிசெய்யவும், கைமாற்றவும், கையெழுத்திடப்பட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொணரவும் இந்த போர் தேவை.  தொழில்-வர்த்தக ஏடுகளைக் கவனிப்பீர்களானால் அவர்கள் இவ்விசயத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரியும்.

தபார் : அரசுக்குப் போர்தான் தேவை என்றால் அதன் பேச்சுவார்த்தை முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே.

அ. ராய் : ஆமாம்.  அதற்குப் போர் தேவைப்படுகிறது.  அதே சமயம் கருணைமிகு புன்முறுவலுடன் கூடிய ஜனநாயக முகமூடியும் அதற்குத் தேவைப்படுகிறது.  எனவேதான் ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்போதே மறு பக்கம் அதற்குக் குழிபறிக்கிறது.

 

தபார் : ஆனால், அரசு இரட்டை முகமுடையது என்ற இந்த முற்றிலும் விசித்திரமான கோட்பாட்டை ஒப்புக்கொண்டாலும்,

அ. ராய்: நான் அது இரட்டை முகமுடையது என்று சொல்லவில்லை

தபார் : ஒப்புக்கொண்டாலும்.. ஆசாத்தைக் கொல்வதன் மூலமாக அது தனது முகமூடியை ஏன் அவிழ்க்கவேண்டும், தன்னைத்தானே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?

அ. ராய்: ஏனென்றால், அப்போது நிகழ்ந்தனவற்றை நீங்கள் கவனித்தால், ஆசாத் அபாயகராமான அளவுக்கு நியாயமாக பேசத்துவங்கினார்…

தபார் : யாருக்கு?

 

அ. ராய் : நம் எல்லோருக்கும்தான்.

தபார் : ஹிந்து நாளேட்டுக்கு அளித்த ஒரு பேட்டியை வைத்தே அப்படி முடிவு கட்டிவிட்டீர்களா?

அ.ராய் : பாருங்கள் கரண், நாம் அனைவரும் ஆசாத்தை அறிவோம்.  நம்மிடையே அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமாக எழுதியிருக்கிறார்.

தபார் : உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  ஆனால், மக்களுக்கு அதெல்லாம் தெரியாது.  அவர்களைப் பொருத்தவரை ஆசாத் ஒரு புதிர், அவ்வளவுதான்.

அ. ராய் : இல்லை. நிச்சயமாக இல்லை.  உதாரணமாக, அவர் அவுட் லுக் இதழுக்கு எழுதியதைப் பாருங்கள்.  அது அவர் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது.  ஆனால், அதற்கு முன்னாலேயே அனுப்பப்பட்டிருந்தது.

தபார் : ஆனால், அவர் பெரிதும் பேசத்தொடங்கினார், நியாயமானவராக தோன்றத் தொடங்கினார் என்பதால் அச்சமுற்ற அரசு அவரைக் கொன்றுவிட்டது என்ற உஙக்ளது கோட்பாட்டை ஒருவர் ஒப்புக்கொண்டாலும் கூட, அந்த அம்சங்கள் அவரை மதிக்கத்தக்க ஒரு நடுவராக அரசின் முகமூடியில் நன்கு பொருந்தக்கூடியவராக மட்டுமே செய்திருக்க முடியும்.  நிச்சயமாக, அதுவே அவரைக் கொன்றதென்பது ஒருவிதத்தில் இக்கருத்தின் நகைக்கத்தக்க முரணாகவே இருக்கிறது.

அ. ராய் : ஏன் அப்படி இருக்கவேண்டும்?  போரில் இரு தரப்புகள் இருப்பதாகக் கொள்வோம்.  இரண்டுக்கும் மேற்பட்டவை இருப்பினும், எல்லோருமே அதை இருமைப்படுத்தவே விரும்புவதால், வாதத்தின் பொருட்டு அதை ஒப்புக்கொள்வோம்.  ஒரு தரப்பு ஒரு தூதரை அனுப்ப, மறுதரப்பு அவரைக் கொலை செய்கிறதென்றால் அதற்கு என்ன பொருள்?  அத்தரப்பு அமைதியை விரும்பவில்லை என்பதுதானே.  அதுதான் இதற்குப் பொருள். இது ஒரு  அறிவார்ந்த அனுமானம்.

 

தபார் : ஆக இது ஒரு மோசடியான அரசு.. ?

 

அ. ராய்: நிச்சயமாக.

 

தபார் : அப்படி என்றால், நான் கேட்க விரும்பும் சிக்கலான விசயத்துக்கே வருகிறேன்.  பேச்சுவார்த்தைக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?  மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிடுவார்களேயானால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பார்வம் கொண்டிருப்பதாக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.  ஆயுதங்களைக் கீழே போடுங்கள் பேச்சு நடத்துவோம் என்று சொல்லிக் கேட்கக்கூட இல்லை.  பலரும் இதை மிகவும் நியாயமான, சொல்லப்போனால், பெருந்தன்மையான முன்வைப்பு என்று கருதுகிறார்கள்.  பேச்சுவார்த்தை பற்றிய அரசின் நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அ. ராய்: நீங்கள் அந்த காடுகளுக்குள் சென்று அங்கு நடப்பனவற்றைக் காண்பீர்களானால் தெரியும்.  இரண்டு லட்சம்  துணை ராணுவத் துருப்புகள் அந்த ஆதிவாசி கிராமங்களைச் ரோந்து வருகின்றன.  சுற்றிவளைப்பும் தேடுதல் வேட்டைகளும் நடத்தப்படுகின்றன, படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன, மொத்தப்பகுதியும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் வன்முறையைக் கைவிடுங்கள் என்று சொல்வதன் பொருள்தான் என்ன?  சண்டை நிறுத்தம், இருதரப்பு சண்டை நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதுவே உண்மையில் நியாயமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.  பிறகு நாம் பேசலாம்.  அதைவிடுத்து, நீ வன்முறையைக் கைவிடவேண்டும் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்?

 

தபார் : ஆக, வன்முறையை ஒரு தரப்பு கைவிடக் கோருவது ஏற்கத் தக்கதல்ல, இருதரப்பு சண்டை நிறுத்தமே தேவை என்று கருதுகிறீர்கள், இல்லையா?

அ.ராய் : இருதரப்பு சண்டை நிறுத்தம்தான் அவசரத் தேவை எனக் கருதுகிறேன்.

தபார் : ஒரே நேத்ததிலா?

 

அ.ராய் : ஆம்.  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என அரசாங்க அறிக்கைகள் சொல்லுகின்றன.  சிதம்பரம் அவர்களே அவற்றைக் கிடப்பில் போடுவேன் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.  ஏன் அவர் அவ்வாறு செய்யவில்லை?

தபார் : மாவோயிஸ்டுகளிடம் இருந்து பேச்சுவார்த்தை தொடர்பான சாதகமான சமிக்ஞை வருவதற்காக அவர் ஒருக்கால் காத்திருக்கலாம்.  தன்னிச்சையாக இதை செய்ய அவர் விரும்பாதிருக்கலாம்.

அ. ராய்: அவர்கள் இப்போது எழுத்துமூலமாக பதிலளித்திருக்கிறார்கள்.  ஆசாத் தனது எழுத்தின் மூலம் பதிலளித்தார்.

தபார் : ஆசாத் இனி இல்லை.  நான் உங்களைக் கேட்கிறேன்.  இந்த நேர்காணலின் மூலமாக, இருதரப்பும் சமகாலத்தில் என்ன செய்தால், அது ஒருக்கால் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்பது பற்றி பரிந்துரைக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்.  நீங்கள் மாவோயிஸ்டுகளை அறிந்திருப்பதால், அவர்களால் நம்பப்படுபவராக இருப்பதால், பேச்சுவார்த்தையில் ஒரு நடுவராக செயல்படத் தயாராக இருக்கிறீர்களா?

அ. ராய்: ஆந்திரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாகப் படித்திருந்தீர்களானால் தெரியும். யாராவது ஒருவரைப் பொருக்கி எடுத்து அவரை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அறிவிப்பது, இப்படி இரு தரப்புமே செய்திருக்கின்றன.  சிதம்பரம் தன்னிச்சையாக சுவாமி அக்னிவேஷை தேர்ந்தெடுத்து அறிவித்தார்.  மாவோயிஸ்டுகளும் அது வேண்டும், இது வேண்டும் எனத் தங்கள் கோரிக்கைகளைத் தன்னிச்சையாக வானொலி வாயிலாக அறிவித்தனர்.  ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இப்படி நடப்பதில்லை.  ஆந்திரத்தில், தம்மைப் பேச்சுவார்த்தைக்குப் பொருப்பானவர்களாக அமர்த்திக்கொள்ள குடிமக்கள் கமிட்டிக்குக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பிடித்தது.  நடுவராகச் செயல்படுவது ஒரு நபராக இருக்க்க் கூடாது.

தபார் : தன்னிச்சையாய்ப் பொருக்கி எடுக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும் சுவாமி அக்னிவேஷ்தான், ஆசாத்தை பேச்சுவார்த்தையின் விளிம்புவரை கொண்டுவருவதில் வெற்றிகரமாய் செயல்பட்டிருக்கிறார்.  நீங்கள் சொல்வது போல அவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையைத் தவிர, அக்னிவேஷ் தனது பொறுப்பைப் பெரிதும் நிறைவேற்றியிருக்கிறார்.  எனவே, நான் மீண்டும் கேட்கிறேன், நீங்கள் மாவோயிஸ்டுகளால் நம்பப்படுவதால், இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளும் வகையில், குறைந்த பட்சம் ஆங்கிலத்தில், புரியும் மொழியில் பேசுவதால், நீங்கள் ஒரு பேச்சுவார்த்தையின் நடுவராக இருக்கத் தயாரா?

அ. ராய் : பாருங்கள் கரண், அது ஒருவராகத்தான் இருக்கவேண்டும் என்று நான் கருதவில்லை.  கூட்டுச் சிந்தனைக்கும் முடிவுக்கும் பழக்கப்பட்டவர்கள் அடங்கிய ஒரு குழுவினராக அது அமைய வேண்டும் என நான் கருதுகிறேன்.

 

தபார் : ஒரு கமிட்டியாக…?

அ. ராய் : நிச்சயமாக. அதுதான் ஆந்திரத்தில் நிகழ்ந்தது.  சிலர் அடங்கிய கமிட்டி அங்கு இருந்தது.

தபார் : அது ஒரு குளறுபடி இல்லையா?

 

அ. ராய் : இல்லை.  அது அத்தியாவசியமான ஒன்று.

தபார் : அதில் ஒரு உறுப்பினராக இருப்பீர்களா?

அ. ராய் : நான் அதில் பொருந்துவேன் என்று கருதவில்லை.  நான் சுதந்திர சிந்தனையுடயவள்.

தபார் : நீங்கள் அந்த கமிட்டியில் ஒருவராக இருக்கத் தாயாரா?

அ. ராய்: அப்படி இல்லை.  நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை.  ஏனென்றால் அதற்கான திறமை எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.  அதற்குப் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.

தபார் : ஜீன் மாதம் ஹிந்து பத்திரிகைக்கு எழுதிய நீதிபதி கிருஷ்ணய்யர், மாவோயிஸ்டுகள் நிபந்தனையற்ற வகையில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.  நீங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவீர்களா?

அ. ராய் : மாட்டேன்.  இரண்டு லட்சம் துணைராணுவத் துருப்புகள் அந்த கிராமங்களை நெருக்கிக்கொண்டிருக்கையில் நான் அவ்வாறு செய்யமாட்டேன்.  நிபந்தனையற்ற வகையில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறேன். பிறகு நீங்கள் அதன் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

தபார் : ஆனால், நடுவராக இருந்தோ, கமிட்டியில் ஒரு அங்கமாக இருந்தோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நீங்கள் தயாராக இல்லை.

அ. ராய் : நான் முயற்சிக்கிறேன்.

 

தபார் : முயற்சிக்கிறேன்! அட, உடனே உங்கள் நிலையில் தலைகீழ் மாற்றமா?

 

அ. ராய் : இதைப் பற்றி எப்படி யோசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

தபார் : கொஞ்சம் தள்ளிவிட்டால், இதமாக எடுத்துச் சொன்னால் ஒருக்கால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

அ. ராய் : நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் பேசுவதைப் போல என்னிடம் பேசுகிறீர்கள். ‘தேர்தலில் போட்டியிடுவீர்களா?’

தபார் : இல்லை.  எனது கேள்விக்குத் தெளிவான பதிலை நீங்கள் அளிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.  நான் என்ன உணர்கிறேன் என்றால், உங்களிடம் ஒரு உந்துதல் இருக்கிறது ஆனால் தெளிவான முடிவெடுக்க தயங்குறீர்கள்.

அ. ராய் : நாம் எல்லோருமே நம்மால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்று கருதுகிறேன். ஆனால், கமிட்டி போன்றவற்றில் அங்கம் வகிக்க நான் பொருத்தமானவள் அல்ல என்று உறுதியாக உணர்கிறேன்.  நீண்ட அனுபவம் உள்ள B.D. சர்மா போன்று பேச்சுவார்த்தைகளில் அனுபவம் மிக்கவர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அவசியம் என்று நான் கருதுகிறேன்.

 

தபார் : சற்று மாறுபட்ட ஒரு விசயத்துக்கு வருவோம்.  இந்த அரசாங்கம், குறிப்பாக உள்துறை அமைச்சர், மாவோயிஸ்டு குறிக்கோள்களில் அனுதாபம் கொண்டவர்களை அவர்களது கூட்டாளிகள் என்று குறிப்பிடுகிறார்.  செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினர் அவர்களைத் துரோகிகள் என்றும் அழைக்கிறார்கள்.  அவ்வகையினரில் முதன்மையானவர் அருந்ததி ராயாகத்தான் இருக்கிறார். இப்படி முத்திரை குத்தப்படுவதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

 

அ. ராய் : என்ன சொல்ல, எல்லாம் அதே பழங்கதை தானே.

தபார் : ஆனால் இப்போக்கு ஒவ்வொரு முறையும் மூர்க்கமாய்த் தொடர்கிறதே.

அ.ராய் : இந்த அரசு, மற்றும் இப்பிரச்சினையில் தெளிவாய் ஒரு பக்கச் சார்பு எடுக்கும் பெரும்பாலான பத்திரிகைகள் எல்லோருமே ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.  காரணம் என்னவெனில், அடர்ந்த காடுகளில் புதைந்து ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் இருந்து, இந்தக் காட்டுவேட்டை தொடங்கியதும், ஏராளமான மனித உரிமை செயல்வீரர்களும், அறிவுஜீவிகளும் முன்வந்து இது எங்களுக்கு ஏற்புடையதல்ல என அறைந்து கூறினர்.  இச் செயல் அதுவரை இயல்பாய் நடந்துவந்த இலை மறை காயாக வைத்திருந்த விசயத்தை அம்பலப்படுத்தி ஆட்டங்காணச் செய்தது.

தபார் : ஆக, அரசின் நிலையிலான உறுதிப்பாடு மாவோயிஸ்டுகளை ஆதரித்த அறிவுஜீவிகளால் பலவீனப்படுத்தப்பட்டு  ஆட்டங்கண்டது.  அதனால்தான் அரசு அவர்களை “கூட்டாளிகள்” என்று முத்திரை குத்துகிறது.. இல்லையா?

 

அ. ராய்: மீண்டும் நீங்கள் மாவோயிஸ்டுகள் என்றே குறிப்பிடுகிறீர்கள்.

 

தபார் : ஆனால், அதனால் தானே அரசு அவர்களை கூட்டாளிகள் என்று அழைக்கிறது?

 

அ. ராய் : என்ன நடந்திருக்கிறது என்றால், இந்த அரசு தன்னுடன் ஒத்துப்போகாத எல்லோரையும் குறிப்பிடும் அளவுக்கு மாவோயிஸ்ட் என்பதன் வரையறுப்பை நீட்டித்திருக்கிறது.  என்னைப் போன்றவர்கள் நிலைமையைச் சிக்கலாக்கிவிட்டோம் என்பதுதான்.  இந்த ஏச்சுகள் எல்லாம் அவ்வளவு சல்லிசாக எடுத்துக்கொள்ளக் கூடிய விசயமல்லதான். இருப்பினும்,  நான் எனக்குத் தெளிவாய்ப் பட்டதைச் சொல்ல விரும்புகிறேன் என்பதால் அது என்னைப் பாதிக்கவில்லை.  எனக்கு பெயர்கள் வழங்குவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.

தபார் : மேலும், இந்த அரசு உங்களைக் ’கூட்டாளி’  என்று அழைப்பது ஒரு விதத்தில், நீங்கள் உண்மையிலேயே இந்த அரசை நிம்மதி குலையச்  செய்திருக்கிறீர்கள் என்பதற்கு நிரூபணம்.

அ. ராய்: நான் இந்த அரசை நிம்மதி குலையச் செய்திருப்பேன் என்றால், அதற்காகப் பெருமைப்படுகிறேன்.  ஏனென்றால், அது செய்யும் வேலைக்கு அது நிம்மதியற்றுத் திரியத்தான் வேண்டும்.

 

தபார் : தங்களுடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

___________________________________________________

ஆங்கில மூலம்http://ibnlive.in.com/news/india-is-a-corporate-hindu-state-arundhati/130817-3.html
-தமிழாக்கம்: அனாமதேயன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

42

மகஇக வின் அறிக்கை மீது இரயாகரன் இரண்டு பதிவுகள் எழுதிவிட்டார். அறிக்கையை வரி வரியாகப் பிய்த்துப் போட்டு எதிர்வாதம் செய்வதாகவும், வாக்கியங்களுக்கு தவறான பொருள் கற்பித்து வியாக்கியானம் செய்வதாகவுமே அவரது பதில் அமைந்திருக்கிறது. தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக இல்லை. இணையத்தில் விவாதம் நடத்துவது அரட்டைக்கும், அவதூறுக்கும் பயன்படுமே தவிர குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை பயன்படாது என்பதனாலேயே ம.க.இ.க ஒரு பகிரங்க விசாரணையை முன்மொழிந்தது.  நேரடி விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார். அதனை மறைப்பதற்காக வளைத்து வளைத்து எழுதுகிறார்.

“ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா.நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான பகிரங்க விசாரணைக்குத் தயார் என்கின்றனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை.

குற்றம் சாட்டிய இரயாகரன் அதனை நிரூபிக்கத் தயாராக இல்லை. “சம்பவம் உண்மை. அவர்களே அதை ஏதோ ஒரு வகையில் ஓத்துக்கொள்கின்றனர்” என்று மிக அலட்சியமாகப் பேசுகிறார். பிரச்சினையை தீர்ப்பதற்கு ம.க.இ.க முன்வைத்திருக்கும் இந்த வழிமுறையை குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற வழி, என்றும் “எல்லா சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்கும் முயற்சி” என்றும் சாடுகிறார்.

இப்பிரச்சினையில் குற்றம் சாட்டியவரும், பிறகு குறுக்கு விசாரணை நடத்தியவரும், தீர்ப்பு வழங்கியவரும் ரயாகரன்தான். ம.க.இ.க  வழங்கியிருப்பது தீர்ப்பு அல்ல. பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் குற்றமிழைத்தவரைக் கண்டறிவதற்குமான ஒரு வழிமுறை – அவ்வளவே. “இருதரப்பும் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு நடுநிலையாளர் இந்த விசாரணையை நடத்தட்டும்” என்று ம.க.இ.க வின் அறிக்கை தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறது.

இது இந்தப் பிரச்சினையை ஒட்டி நாங்கள் கண்டுபிடித்திருக்கும் வழிமுறையும் அல்ல. எமது அமைப்புத் தோழர் ஒருவர் தவறிழைத்திருப்பதாக ஊர்மக்கள் யாரேனும் குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்டவர்களை நேரில் வைத்து பலர் முன்னிலையில்தான் விசாரிக்கிறோம். அதே வழிமுறையைத்தான் இப்பிரச்சினையிலும் முன்மொழிந்திருக்கிறோம். இது இரயாகரனுக்காகவோ, நாவலனுக்காகவோ பிரத்தியேகமாகத் உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல.

“அத்வானி தலைமையில் இந்து பாசிட்டுகள்  (மசூதியை) இடித்தனர் என்பதை, அதற்கு எதிராக போராடும் மக்கள் நிறுவ வேண்டும் என்று கோருவது போன்றது இந்த விடையம்” என்று கூறி ம.க.இ.க முன்வைக்கும் வழிமுறையை ரயாகரன் நக்கலடிக்கிறார். அவருடைய பாணியிலேயே பதில் சொல்கிறோம். அத்வானியின் குற்றத்தை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றனர். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல்,  அத்வானிதான் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பி ஓடி ஒளிகிறார். இது ரயாகரனுக்கு தெரியாது போலும்!

இரயாகரன் முன்வைக்கும் வழிமுறை என்ன? ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சாட்டி, அறிக்கை – மறுப்பறிக்கை விட்டு அரசியல் நடத்தும் ஓட்டுக்கட்சிகளைப் போல இணையத்தில் அறிக்கைப் போர், அக்கப்போர் நடத்த அவர் அழைக்கிறார். பிரச்சினையை நேரில் விசாரித்து முடிவுக்கு வருவோம் என்று சொன்னவுடனேயே, தன்னுடைய குற்றச்சாட்டை “அரசியல் ரீதியாகவும் எடுக்கலாம், ஊடகவியல் சார்ந்ததாகவும் எடுக்கலாம்” என்று விளக்கமளித்து குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கூச்சமே இல்லாமல் நழுவுகிறார்.

சென்ற மாதம் தில்லை தீட்சிதர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் குற்றவழக்கின் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள்ளே நடைபெற்ற ஒரு மர்மமான மரணம் குறித்து சிதம்பரத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் வாய்மொழியாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்களிடம் தெரிவித்தார். அதேபோல, சிதம்பரம் நகரத்தின் நக்கீரன் நிருபர் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நடைபெறும் காமக்களியாட்டங்கள் குறித்து பத்திரிகையில் அம்பலப்படுத்தியிருந்தார். ஆனால் இவை குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசு மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக ( sworn affidavit ) தாக்கல் செய்து, ஒரு சாட்சியமாக முன் நிற்குமாறு அவர்களைக் கோரினோம். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தனர். அதன் விளைவாக தற்போது தீட்சிதர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

“எதற்கு வம்பு” என்று அவர்கள் கருதியிருந்தாலோ, “வழக்கு வாய்தா என்று கோர்ட்டுக்கும் போலீசு நிலையத்துக்கும் அலைய வேண்டுமே” என்று நினைத்திருந்தாலோ இது நடந்திருக்காது. தான் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, ஒரு போலி கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரும், ஒரு முதலாளித்துவ பரபரப்பு பத்திரிகையின் நிருபரும் கொண்டிருக்கும் தார்மீகப் பொறுப்புணர்ச்சி இரயாகரனிடம் இருக்கிறதா?

சம்பவம் குறித்து அவர் அளிக்கின்ற வியாக்கியானத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம். அவர் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமாம். அவர் கேட்கும் ஆவணங்களையெல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்புறம் அவர் கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமாம். -இதுதான் ரயாகரன் முன்வைக்கும் வழிமுறை. தமிழரங்கத்தையும் ரயாகரனையும் அத்தகையதொரு சர்வதேச நீதிமன்றமாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்கி விடலாம். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷையே உலகம் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லையே!

குற்றம் சாட்டுபவராகவும், குறுக்கு விசாரணை செய்யும் வக்கீலாகவும், பிறகு நீதிபதியாகவும் ரயாகரனே இருக்க விரும்புகிறார். இப்பிரச்சினை குறித்து 2.9.2010 அன்று ரயாகரன் முதன்முதலாக எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பபையும், துவக்க வரிகளளையும் கீழே தருகிறோம் :

இந்தியப் போலீசுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார்.”

இதற்குப் பெயர் கிரிமினல் குற்றச்சாட்டா, அல்லது அரசியல் விமரிசனமா? இந்தக் கிரிமினல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும் நேரில் வருமாறு அழைத்தால்,  இதனை “அரசியல் ரீதியாக எப்படி பார்த்தல் என்பதில் வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக விளக்கலாம்” என்று கூறி தப்பிக்கிறார் ரயாகரன். இதைவிட நாணயமற்ற பேச்சை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு மனிதன், அவன் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு வெங்காயவாதியாக இருக்கட்டும், அவனைத் “திருடன்” என்று கூறுவதும், ஒரு பெண்ணை “வேசி” என்று தூற்றுவதும் அரசியல் விமரிசனங்களா? மார்க்சிய லெனினியத்தில் ரயாகரன் அளவுக்கு எமக்கு ஆழ்ந்த புலமை இல்லாததால் இதனைக் கிரிமினல் குற்றச்சாட்டு என்று புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் குற்றம் சாட்டுபவர் விசாரணைக்கு வந்து தனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

நாவலன், எழிலன் குறித்த எங்கள் மதிப்பீடு என்னவாக இருந்தாலும், இந்த விசாரணை, நடுநிலையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதனால்தான் “பகிரங்க விசாரணை” என்ற வழிமுறையை ம.க.இ.க முன்வைத்தது. ஆனால் இதையே ஒரு குற்றமாக்கி, ம.க.இ.கவுக்கும் உள்நோக்கம் கற்பிக்கிறார் ரயாகரன்.

” புலிகள் பற்றிய எம் பார்வையும், அதை விமர்சனம் செய்யும் முறையும் தவறானது என்ற அரசியல் கண்ணோட்டம் தான், தீர்மானகரமாக எமக்கு எதிரான ம.க.இ.க.வின் நிலையாக மாறுகின்றது என்று கருதி வருகின்றோம். அனைத்தும் அரசியல் என்ற வகையில், இந்த விசாரணையும் தற்செயலானதல்ல”

“புலிகள் பற்றிய பார்வையில் அவருக்கும் ம.க.இ.க வுக்கும் கருத்து வேறுபாடு” என்று இரயாகரன் கூறுவதற்கும், தற்போது நாவலன் உள்ளிட்டோர் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கும் என்ன தொடர்பு? அரசியல் ரீதியான கருத்து வேறுபாட்டை கணக்குத் தீர்த்துக் கொள்ளத்தான் விசாரணை என்ற ஆலோசனையை (அல்லது சூழ்ச்சியை) முன்வைத்திருப்பதாக இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறார் ரயாகரன். அல்லது அவருடைய கருத்தின்படி ம.க.இ.க புலி ஆதரவு என்பதால், புலி ஆதரவாளர்களைத் தப்பிக்க வைக்க ம.க.இ.க தந்திரம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இதுதான் அவரது கூற்றின் பொருள்.  பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேர்மையானதொரு வழிமுறையை முன்வைத்திருக்கும் ஒரு புரட்சிகர அமைப்பை இதைவிடக் கேவலமான முறையில் யாரேனும் இழிவு படுத்த முடியுமா?

இத்தனையும் சொல்லியதற்குப் பிறகு, இந்தியா வருவதில் தனக்கு உள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றி அவர் எதற்காக விளக்கவேண்டும்? பகிரங்க விசாரணை என்பதை, “குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ம.க.இ.க வின் சதித்திட்டம்” என்பதாகச் சித்தரித்து, “வரமுடியாது” என்று நிலை எடுத்தவர் “விசா இல்லாததால் வர இயலாத நிலை”, “கைது செய்யப்படும் அபாயம்” ஆகியவை பற்றியெல்லாம் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும்? அனுதாபம் தேடுவதற்கா? “மரண தண்டனைக்குத் தயார், சிறைத்தண்டனைக்குத் தயார்” என்று நாவலனுக்கு சவால் விட்டு அவர் எழுதியவற்றை ஒருமுறை அவரே மீள வாசித்துப் பார்த்தல் நலம்.

குகநாதனையும், ஜெயபாலனையும், ரயாகரனையும் விருந்துக்கா வருந்தி அழைக்கிறோம்? அல்லது ம.க.இ.க வுக்கு வேறு வேலை இல்லையா? இணையத்தில் இக்குற்றச்சாட்டை முதன்முதலில் எழுப்பியவர் குகநாதன் அல்ல, ரயாகரன். அவருடைய வார்த்தைகளையே மேற்கோள் காட்டுகிறோம்.

“(குகநாதனை) நான்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதுதான், உங்களை கடத்தியதாக கூறுகின்றனரே யார் என்று கேட்கின்றோம். அப்படி யாரும் கடத்தவில்லை என்றதுடன், இது தனிப்பட்ட விவகாரம் என்றும், இதை எழுதுவதை தான் விரும்பவில்லை என்றார். நாம் எழுத உள்ளதை தெளிவுபடுத்தியும், இதில் நடந்தவற்றை பற்றியும் உரையாடினோம்”

இவ்வாறு தன்னுடைய சொந்த “முயற்சி”யில் நாவலன், செழியன், எழிலன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை எழுப்பியவர் ரயாகரன். குகநாதனைத் தேடிப்பிடித்து தனது குற்றச்சாட்டுக்கு விவரம் திரட்டியவர் ரயாகரன். எனவேதான் குகநாதனை அழைத்து வருவதும் ரயாகரனின் பொறுப்பு என்று கூறுகிறோம்.

தான் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்போ, நேர்மையோ இரயாகரனுக்கு இல்லை. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட “புனிதத் திருஉரு” வாக அவர் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதையே அவரது வாதங்கள் காட்டுகின்றன. அவர் மீது மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்த பல தோழர்கள் மத்தியிலும்கூட அவர் மதிப்பிழந்து வருகிறார். ஒரு அமைப்பு என்பது பல்லாயிரம் தோழர்களைக் கொண்டது என்ற மதிப்போ, மக்களுக்குப் பொறுப்பாக இருப்பது என்ற கம்யூனிஸ்டுக்குரிய பணிவோ அவரிடம் இல்லை. சுயபரிசீலனை அற்ற தன்னகங்காரமும், ஆணவமுமே அவரது பதில் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

பணத்தைப் பறிகொடுத்ததாகக் கூறும் குகநாதன், ஊடக தருமம் குறித்து பெரும் கவலை வெளியிட்ட “தேசம் நெற்” ஜெயபாலன் ஆகியோரிடமிருந்து எமக்கு எவ்வித பதிலும் வரவில்லை.

அதே நேரத்தில் “வீடியோவைக் கொடு, ஆடியோவைக் கொடு” என்று பலர் பின்னூட்டமிடுகிறார்கள். “அவை தங்கள் தரப்பு நியாயத்தை நிறுவுவதற்கான ஆதாரங்கள்” என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்து. விசாரணையின் போது அதனை அவர்கள் வெளியிடலாம். குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !

“விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம்” என்று ம.க.இ.க வெளிப்படையாக பொறுப்பேற்றுக் கொண்டபின்னரும், குற்றம் சாட்டும் இரயாகரன் நழுவுவதும், மற்றவர்கள் மவுனம் சாதிப்பதும், அவர்கள் சார்பில் சிலர் அவதூறாகப் பின்னூட்டம் போடுவதும், இந்த மொத்த விவகாரம் குறித்தும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இரயாகரனிடம் பதில்களும் அவர் பதிலளிக்கும் முறையும் அவரிடம் நேர்மை இல்லை என்பதையே காட்டுகின்றன. ம.க.இ.க வின் பத்திரிகைகளையும், ஒலி, ஒளித்தகடுகளையும் புலத்திலும் இணையத்திலும் தான் எடுத்துச் சென்றதையும், நாவலன் “திடீர் மார்க்சியவாதி” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கமென்ன? அவர் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது முதலாளித்துவ ஜனநாயகவாதியாக இருக்கட்டும், அதுவா பிரச்சினை?

விசாரணை என்று முன்மொழிந்தவுடனே, “குற்றவாளிகளைத் தப்பவைக்க ம.க.இ.க முயற்சிக்கிறது” என்று முத்திரை குத்துகிறார் ரயாகரன். அவர் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதற்கே வேறு மறைவான நோக்கங்கள் இருக்கின்றனவோ என்ற வலுவான சந்தேகத்தைத்தான் அவரது அணுகுமுறை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து அவர் நடத்தியிருக்கும் விசாரணை, ம.க.இ.க வுக்கு அவர் அளித்திருக்கும் பதில் ஆகியவற்றிலிருந்து அவருடைய மனோபாவம் குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. நாவலனுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு பற்றிக் கேள்விப்பட்டவுடனே, “ஆகா கிடைத்தது வாய்ப்பு” என்று அவர் மகிழ்ந்திருக்கிறார். குகநாதனின் யோக்கியதை என்ன என்பது பற்றிக் கூடக் கவலைப் படாமல் அவரைத் தேடிப்பிடித்து விவரம் கேட்டு, “கடத்தல், தரகுவேலை, மாமாவேலை, கட்டப்பஞ்சாயத்து” என்று எழுதிவிட்டார். “குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரலாம் -வாருங்கள்” என்று அழைத்தால் ஓடி ஒளிகிறார்.

விவகாரம் இத்தனை தூரம் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்த குற்றத்துக்காக நாவலன், எழிலன், செழியன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கோரவேயில்லை. அது அவரது நோக்கமும் அல்ல.  அவர் கேட்பது தன்னுடைய சந்நிதியில் ஒரு சுயவிமரிசனம். ஒரு மழுப்பலான சுயவிமரிசனத்தை அவர்கள் வெளியிட்டிருந்தாலும், உடனே அதனைப் “பெருந்தன்மையுடன்” ரயாகரன் அங்கீகரித்திருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள் சுயவிமரிசனம் செய்து கொள்ள மறுத்திருந்தால் புலம்பெயர் உலகத்தின் புகழ்பெற்ற குழாயடிச்சண்டை வரலாற்றில், இன்னொரு அத்தியாயமாக இது சேர்ந்திருக்கும்.

ம.க.இ.க இப்பிரச்சினையில் நுழைந்து இதனை ஒரு முடிவை நோக்கித் தள்ளும் என்று ரயாகரன் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால்தான் தான் பின்வாங்குவதை மறைக்கும் பொருட்டு, “ம.க.இ.க குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறது” என்று அவதூறு செய்கிறார். “நாங்கள் சொல்வதில் நம்பிக்கையில்லையா? எங்களை பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறீர்களே” என்று நாவலனோ அருள் எழிலனோ, அருள் செழியனோ எங்களிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு கேட்கவில்லை.

ஆனால் அவர்களைக் காட்டிலும் நெடுநாளாக எம்முடன் தொடர்பில் இருப்பவரும், ம.க.இ.க வின் அரசியலில் உடன்பாடு இருப்பதாகக் கூறுபவருமான ரயாகரன், அவருக்கு உவப்பில்லாத ஒரு வழிமுறையை நாங்கள் முன்வைத்தவுடனே, குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் கூறி, ம.க.இ.க வின் மீது எதிர்க்குற்றம் சாட்டுகிறார். அரசியல் உள்நோக்கமும் கற்பிக்கிறார்.

கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. அந்த வகையில் ரயாகரன் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவே.

மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.  நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!!

பெண்ணாடம் பாரத்
படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்
பெண்ணாடம் பாரத்
படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்

பெண்ணாடம் நகரத்திற்கு தெற்கில்,அரை கிலோமீட்டர் தூரத்தில்,மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வெளியில், கரும்புத்தோட்டங்களின் நடுவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக நாலாபுறத்திலும் சுற்றுச்சுவர். சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தின் ஒரு மூலையில் அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி.மொத்தத்தில் விடுதியில் வேலை செய்யும் கொள்ளைகாரர்களின் மர்ம பங்களா இது!

இங்கு 02.09.2010 அன்று பகல் 12 மணி வாக்கில் பத்தாம் வகுப்பு மாணவன் பாரத் விடுதியில் இறந்து விட்டதாக நகரில் செய்தி பரவியுள்ளது. இச்செய்தி எரப்பாவூரில் இருந்த மாணவனின் பெற்றோருக்கும்,உறவினர்களுக்கும் கிடைத்து விடுதிக்கு ஓடி வந்துள்ளனர்.அங்கே இருந்த சமையல்காரர்கள் ராமச்சந்திரன் மற்றும் செல்வராசு ஆகிய இருவரும் சமையல் வேலை செய்து கொண்டே மேலே பிணம் கிடப்பதாக மிகவும் அலட்சியமாக கூறியுள்ளனர்.அப்போது விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் அங்கு இல்லை.அவர் 12 மணிவாக்கிலேயே போலிஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார்.

பின்னர் பெற்றோரும்,உறவினர்களும் 1 மணி அளவில் போலிஸ் நிலையம் சென்றபோது அங்கு விடுதிக் காப்பாளரும்,போலிஸ்காரர்களும் சிரித்து பேசி கும்மாளம் அடித்துள்ளனர்.பெற்றோர் புகாரின் மீது போலிசார் எவ்வித அக்கரையும் செலுத்தாததாலும்,குற்றவாளியுடன் போலிசின் இணக்கமான போக்கையும் கண்ட மக்கள் 2 மணிவாக்கில் பெண்ணாடம் நகரில் சாலைமறியல் செய்துள்ளனர்.இதன் பின்னர் தான் விடுதிக்காப்பாளரும்.போலிசாரும் விடுதிக்கு வந்துள்ளனர்.அப்போது போலிஸ்காரர்களுக்கு சமையல்காரர்கள் டீ கொடுத்து உபசரித்துள்ளனர்.

இதன் பின்னர்தான் வட்டாட்சியர்,கோட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.விடுதிக் காப்பாளரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.பள்ளி,விடுதி ஆகிய இடங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில் மாணவன் பாரத்தின் வருகை பதிவிடத்தில் வெள்ளை பூசி அழித்திருப்பதை கண்ட கோட்டாட்சியர் அதிச்சியடைந்து அனைவரின் கண் முன்னாலேயே விடுதிக்காப்பாளரை பார்த்து “கொலையும் செய்து விட்டு,வருகை பதிவேட்டையும் திருத்தியுள்ளீர்களே” என் சாடிவிட்டு விடுதிக் காப்பளரை அடிப்பதற்கு கையை ஓங்கியுள்ளார்!

இதன் பின்னர் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் சமரசப்பேச்சு,சந்தேக மரணம் என 174/3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு,விடுதிக்காப்பாளர்,சமையல்காரர்கள் கைது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலிசின் வெளிப்படையான நடவடிக்கைகள்,சாலைமறியல் செய்தவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்போவதாக மிரட்டல்,அரசியல் கட்சிகளின் சமாதானம் ஆகியவைகளுக்கு பின்னர் மலை 5.30 மணிவாக்கில் மக்கள் சாலை மறியலை கைவிட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் தெரியாமலேயே மாணவன் பிணத்தை ஊரின் பின்புற வழியாக கடத்திச்சென்ற போலிசு,விடுதிக்காப்பாளருக்கு சேலைக்கட்டி அழைத்துச்சென்றுள்ளது.அன்று இரவு 12 மணிவாக்கில் மாணவனின் பெற்றோரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கான நகலை தந்துவிட்டு பிணம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூறிச் சென்றுள்ளனர். இதை நம்பிய பெற்றோரும்,உறவினர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.மாணவனின் பிணம் அங்கு இல்லாததை கண்டதும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு மாணவனின் பிணம் இருந்துள்ளது.இப்படி வேண்டும் என்றே அவர்களை அலையவிட்டுள்ளது போலிசு.

தடியடி நடத்துவதற்கு தேவையான அளவிற்கு போலிசை குவித்துக்கொண்டுதான் மாணவனின் பிணத்தை பெற்றோரிடம் தங்துள்ளனர்.போலிசின் இந்த ஒரு நடவடிக்கையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை காட்டிவிட்டது.அதிகாரிகளும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று மூடிமறைக்க பார்க்கிறார்கள்.ஆனால் உன்மையோ நடந்தது கொலை தான் என்கிறது.நடந்த சம்பவங்களை நங்கள் தொகுத்துத் தருகிறோம்.நடந்தது கொலையா.தற்கொலையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன் தனது வீட்டுக்கு சென்ற மாணவன் “விடுதியில் வார்டனும்,சமையல்காரர்களும் என்னை அடிக்கின்றனர், பள்ளியில் வார்டனின் உறவினர் தையல்நாயகி டீச்சர் அடிக்கிறார், ஆகவே நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன்” என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பையனின் பெற்றோரும் பெரியப்பாவும் சமாதானப்படுத்திதான் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். பள்ளிக்கூடம் சென்ற மாணவனை தையல்நாயகி அடித்து வெளியே துரத்தியுள்ளார்.

மாணவன் பாரத் ஆறாம் வகுப்பில் இருந்தே இந்த விடுதியில் தான் தங்கி படித்துள்ளார்.இப்போதுள்ள விடுதி காப்பாளருக்கு முன் இருந்த காப்பாளரிடம் சமையல்காரர்களின் திருட்டுத்தனத்தையும்,பெண்களை அழைத்து வந்து கும்மாளம் போடுவதையும்,சாராயம் குடிப்பதையும் பற்றி முறையிடும் போது அவரும் சமையல்காரர்களை கண்டித்து வந்துள்ளார்.அதன் பின் வந்துள்ள தற்போதைய விடுதிக்காப்பாளர் சுந்தர்ராஜன் சமையல்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவன் பாரத்தை பலமுறை அடித்தும்.,மிரட்டியும் வந்துள்ளார்.

இதனால் தனக்கு பலம் சேர்ப்பதற்காக இந்திய மாணவர் சங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு,அச்சங்கத்தை விடுதியில் கட்டுவதற்கு பாரத் முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த விடுதிக் காப்பாளர் தான் மட்டுமல்ல, தனது உறவினர் தையல்நாயகியையும் பயன்படுத்தி மாணவனுக்கு நெருக்கடி தந்துள்ளான்.சம்பவதினத்தன்று கூட மாணவனை கடைவீதியில் வைத்தே தலையில் கொட்டியுள்ளான்.

பள்ளியில் இருந்து தையல்நாயகியால் வெளியில் துரத்தப்பட்ட மாணவன் பாரத் விடுதிக்கு வந்துள்ளான்.நண்பகல் 11.15 வாக்கில் பள்ளி இடைவேளையின் போது பல மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக விடுதிக்கு வந்துள்ளனர்.இப்படி வருவது மாணவர்களின் அன்றாட நிகழ்வாகும்.ஆனால் அன்றைய தினம் மாணவர்களை உள்ளே வரவிடாமல் சமையல்காரர்கள் இருவரும் விரட்டியுள்ளனர். இதன் பின்னர் 12 மணி அளவில் தான் பெண்ணாடம் நகரம் முழுக்க மாணவன் இறந்த செய்தி பரவி பொதுமக்கள் விடுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது சமையல்காரர்கள் இருவரும் சிரித்துப் பேசி சமைத்துள்ளனர்.பொது மக்கள் மாணவன் எங்கே என்று கேட்டபோது ”மேலதான் கிடக்கரான் போயி பாருங்க” என்று எவ்வித நெருடலும் இல்லாமல் கூறியுள்ளனர்.இந்த நேரத்தில் விடுதிக்காப்பாளர் போலிசு நிலையத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏன் என்றால் 11.15மணிக்கு மாணவர்களை கண்டு மிரண்ட சமையல்காரர்கள் 12 மணி வாக்கில் மிகவும் தைரியமாக பேசியுள்ளனர்.பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்த போது மாணவன் உடல் தரையில் கிடந்துள்ளது.அதன் அருகில் சமையல்காரன் ஒருவனின் துண்டும் கிடந்துள்ளது. இந்த துண்டில் தான் மாணவன் சன்னலில் துக்குமாட்டிக்கொண்டதாக கூறியதன் மூலம் கேழ்வரகில் நெய்வடிகிறது நம்புங்கள் என்று இந்த கயவாளிகள் கூறியுள்ளனர்.

பெண்ணாடம்
5 அடி உயர மாணவன் தூக்கில் தொங்கியதாக சொல்லப்படும் 4.5 அடி உயர சன்னல்

தரைக்கும் சன்னலுக்கும் இடையில் உள்ள தூரம் இரண்டரை அடி,சன்னலின் உயரம் நான்கு அடி மொத்தம் ஆறரை அடி.துண்டின் நீளம் இரண்டு அடி,துண்டில் தூக்கு போட்டிருந்தால் ஒன்றரை அடி நீளம் சுருக்கு போடவே சரியாகிவிடும்.எஞ்சிய அரைஅடியில் சன்னலில் முடிச்சுப் போட முடியுமா?.சரி குதிரைக்கு கொம்பு முளைத்ததாகவே நம்புவோம்!.மொத்த உயரம் ஆறரை அடி பையனின் உயரம் ஐந்து அடி சன்னலில் தூக்கு போட்டிருந்தால் கழுத்துச்சுருக்குக்கும் சன்னலுக்கும் போட்ட முடுச்சுக்கும் இடையில் ஒரு அடியில் இருந்து ஒன்னரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான் சன்னலில் முகம் படாமல் சுருக்கை கழுத்தில் மாட்ட முடியும்,அப்படி மாட்டி இருந்தால் பையனின் கால் தரையிலேயே பதிந்திருக்கும்.தரையில் கால் பதிந்திருக்கும் போதே துக்குப்போட்டு சாக முடியுமா என்பதை,இதை தற்கொலை என்று கூறுபவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

சரி இப்போதும் நாம் நமது மூளையை கீழே கழற்றி வைத்து விடுவோம்!அந்த கத்தி போல் உள்ள சன்னலில்தான் மாணவன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்றால் பையனின் முகம்,சன்னலில் உராய்ந்து கடுமையான காயங்கள் எற்பட்டிருக்கும்.தூக்குமாட்டிக்கொண்டவனின் கால் மூட்டு கடுமையாக சுவற்றின் விளிம்பில் உரசி கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும்.ஆனால் மாணவனின் முகம் மற்றும் கால் மூட்டில் சிறு உராய்வு கூட இல்லை.ஆனால் போலிசும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று தான் சாதிக்கிறார்கள்.

இதற்கடுத்து மாணவன் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் இடத்திற்கும்,சமையல் கூடத்திற்கும் இடையே தெளிவாக பார்க்கும் வகையில் திறந்தவெளி உள்ளது.மாணவன் துக்குமாட்டிக்கொண்டு இருந்தால்,அங்கு பணியில் இருந்த சமையல்காரர்களுக்கு சத்தம் கேட்காமல் இருந்திருக்காது.அப்படி கேட்டிருந்தால் சமையல்காரர்கள் மாணவனை காப்பாற்ற ஏன் முயற்சிக்கவில்லை?

சரி, காப்பற்றுவது கிடக்கட்டும்.குறைந்தது ஒரு சாவு என்ற அடிப்படையில் அதிலும் தாங்கள் பணிபுரியும் விடுதியின் மாணவன் என்ற அடிப்படையிலாவது மாணவனின் சாவு அவர்களுக்கு துக்கத்தை தாரதது ஏன்?மாணவனின் சாவு காப்பாளருக்கும்,சமையல்காரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது எதனால்?இவர்களின் இப்படிப்பட்ட செயல்களே மாணவன் உடனான இவர்களின் பகையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இறந்த மாணவன் பத்தாம் வகுப்பு படிப்பவன்.சிறுவயதில் இருந்தே அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவன்.தனது எதிரிகளைப் பற்றி தனது பெற்றோர்களிடமும்,உறவினர்களிடமும் கூறிய மாணவன்,தற்கொலைச் செய்வது என்று முடுவு எடுத்திருந்தால் அதைப்பற்றி நிச்சயம் ஒரு கடிதமாவது எழுதியிருப்பான் ஆனால் அப்படி ஒரு கடிதம் அவன் எழுதவே இல்லை.

ஆக மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது நடந்தது தற்கொலையில்லை,கொலைதான் என்ற முடிவுக்கு வாராமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை!

ஆகவே விடுதிக் காப்பாளரும்,சமையல்காரர்களும் நன்கு திட்டமிட்டு தான் இந்தக் கொலையை செய்துள்ளனர்.ஏழையின் குரல் அம்பலம் ஏறாது. நாம் போராடாமல் நீதி கிடைக்காது!

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதியில் திருடுவது,தமது உரிமை என கருதுபவர்கள். அப்படி செய்வதற்காகவே குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து,போட்டியிட்டு இந்த பொறுப்பிற்கு வந்தவர்கள்.திருடுவதும்,திருடியதை தமது மேல் அதிகாரிகளுக்கு மாதா,மாதம் கப்பம் கட்டுவதும்தான் இவர்களின் திமிருக்கான,தைரியத்திற்கான அடிப்படைகளாகும்.இனிமேலும் இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்!

ஆகவே நம்து பிள்ளைகள் இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என்றால்,இந்த கழிசடைகளை எதிர்த்து போராடி இவர்களின் திமிரை நாம் அடக்க வேண்டும்.அது முடியாவிட்டால் நாம் நமது பிள்ளைகளை சூடுசொரணை அற்றவர்களாக,மானம் கெட்டவர்களாகத்தான் வளர்க்க வேண்டும்.இதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.நீங்கள் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!

________________________________________________________
–    தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்.
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1.    அயோத்தி: தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு அருகதை உண்டா?
2.    அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?
3.    ராகுல்: பழங்குடி அவதார்!
4.    இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம்
5.    “மறுகாலனியாக்கத்தைத் தகர்ப்போம்!” -பொது வேலைநிறுத்தத்தையொட்டி பு.ஜ.தொ.மு.-வின் அறைகூவல்
6.    சந்தி சிரித்தது இந்துஸ்தான் யுனிலீவரின் அடக்குமுறை
7.    “விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆக்கப்படுவதைத் தடைசெய்! ”வி.வி.மு.-வின் கண்டன ஆர்ப்பாட்டம்
8.    சாராயக் கடைக்கு மூடுவிழா! மக்களுக்குத் திருவிழா!
9.    இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!
10.    “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது?
11.    ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
12.    போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
13.    நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் (தொடர் கட்டுரையின் இரண்டாம் பகுதி)
14.    அநீதியைத் தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை! குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது போலீசு!
15.    மன்மோகன்சிங்: ஏகாதிபத்திய எடுபிடியா, ஏழைகளின் பிரதிநிதியா?
16.    கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது விவசாயி போண்டியாகிறான்
17.    போபால்: ராஜீவ், மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?
18.    ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
19.    மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><img class=”aligncenter size-full wp-image-8337″ title=”bhopal-special-issue” src=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/07/bhopal-special-issue.jpg” alt=”” width=”500″ height=”699″ /></a>

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற இங்கே அழுத்தவும்</strong></a>
<ol>
<li>போபால்: நீதியின் பிணம்</li>
<li>போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்</li>
<li>மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…</li>
<li>விபத்தா, படுகொலையா?</li>
<li>உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்</li>
<li>அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை</li>
<li>ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!</li>
<li>ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து</li>
<li>அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?</li>
<li>யோக்கியன் வர்றான்..போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டிகாங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.</li>
<li>இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?</li>
<li>அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு – பேரரசின் நீதி</li>
<li>பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் – பி.சாய்நாத்</li>
<li>டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்</li>
<li>ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா</li>
<li>அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?</li>
<li>இதற்குப் பெயர் நிவாரணமா?</li>
</ol>
<strong> </strong><a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற இங்கே அழுத்தவும்</strong></a><strong> </strong>

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
<ul>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US’);” href=”http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US” target=”_blank”>வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…</a></strong></li>
<li><strong><a href=”http://www.facebook.com/vnavu” target=”_blank”>பேஸ்புக்கில் வினவு</a>
</strong></li>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://twitter.com/vinavu’);” href=”http://twitter.com/vinavu” target=”_blank”>வினவை டிவிட்டரில் தொடர்க</a></strong></li>
<li><strong><a href=”../support/” target=”_blank”>வினவை ஆதரியுங்கள்</a></strong></li>
</ul>
<strong>தொடர்புடைய பதிவுகள்</strong>
<ul>
<li><strong><a href=”https://www.vinavu.com/category/politics/puja/” target=”_blank”>புதிய ஜனநாயகம் கட்டுரைகள் </a></strong></li>
<li><strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>புதிய ஜனநாயகம் ஜூன் 2010</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!” href=”../2010/05/13/puja-may-2010/”>புதிய ஜனநாயகம் மே, 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!” rel=”bookmark” href=”../2010/04/02/puja-april-2010/”>புதிய ஜனநாயகம் ஏப்ரல், 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/03/04/puja-mar-2010/”>புதிய ஜனநாயகம் மார்ச் 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/02/05/puja-feb-2010/”>புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/01/12/puja-jan-10/”>புதிய ஜனநாயகம் ஜனவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/12/07/puthiya-jananayagam-december/”>புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/11/04/puthiya-jananayagam-november-2009/”>புதிய ஜனநாயகம் நவம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/10/14/puthiya-jananayagam-october-2009/”>புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/09/09/puja-sep-09/”>புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/08/11/puja-aug-2009-download/”>புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009</a></strong></li>
</ul>
<strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>
</a></strong>

<abbr title=”2010-06-04T08:03:18+0000″></abbr>

இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

54

இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி, தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன், அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற், தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்தன.

“அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும், “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ, அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.

இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும்  இரயாகரன், குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.

“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும், ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத, அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி, அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி, அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி, அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே, டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர், பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.

எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை. இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.

இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி, அதனைத் தொடர்ந்து இதில் வினவு, மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே, நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில், ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன், அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும், அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.

இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

அதே நேரத்தில், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை, அவருடைய விசாரணை முறை, விவாத முறை, தீர்ப்பு வழங்கும் முறை, குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம். இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால், அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.

குகநாதனிடம் கேட்பதற்கும், குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

ஆகவே, இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது, பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு, முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை”  என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன், எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.

நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.

எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.

குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன், செழியன், எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா, தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன, எவ்வளவு பணம் கொடுத்தார், யாரிடம் வாங்கிக் கொடுத்தார், இதில் நாவலனின் பாத்திரம் என்ன, குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன, அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார், குகநாதன்-புலிகள், குகநாதன்-டக்ளஸ், குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன, 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.

இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள், உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும், சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவே, குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

“குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.

பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாவலன், அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.

இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே, தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால், எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான், தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.

இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள், பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு, இரயாகரன், ஜெயபாலன், நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…

25
நாராயணா... இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா...

நாராயணா... இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா...அய்யா அறிவு ஜீவி அம்பிகளே, உங்க பின்னூட்டத்தையெல்லாம் படிச்சு, பொறுத்துப் பொறுத்தப் பாத்துட்டு பொறுக்கமுடியாமத்தான் இத எழுதுறேன். “அது ராமர் பிறந்த இடம்னு நீதிபதி சர்மா மட்டும்தான் சொல்லியிருக்காரு. மத்தவங்க இந்துக்களின் நம்பிக்கைன்னுதான் சொல்லியிருக்காங்க”ன்னு ஒரு பயங்கரமான மேட்டரை புடிச்சிட்ட மாதிரி ஒருத்தர் விவாதம் பண்ணிகிட்டிருக்காரு. வினவு கட்டுரை பதிவேற்றம் பண்ணின நேரம் என்னான்னு பாத்தீங்களா? நேத்து ராத்திரி தீர்ப்பு என்ன சொல்லுதுன்னு என்.டி.டி.வி யில பர்கா தத்தும், டைம்ஸ் நௌ வில அர்னாப் அம்பியும் ஆராய்ச்சி பண்ணிகிட்டிருந்த நேரத்துல எழுதின பதிவு அது. அதான் தீர்ப்பின் சாரம்னு போட்ருக்காங்கள்ல விடு..  பிறந்த இடம்னு சொன்னா என்ன, நம்பிக்கைன்னு சொன்னா என்ன ரிசல்டு ஒண்ணுதானே. பிறந்த இடம்னு சர்மா சொன்னதாவது பரவாயில்லை. அவரு கோசலைக்கு பிரசவம் பார்க்கும்போது கூட இருந்திருப்பாருன்னு ஒத்துக்கலாம். அங்கதான் பொறந்ததா இந்துக்கள் நம்பறாங்கன்னு சொல்லி, அந்த இடத்த பட்டா போட்டு கொடுத்திருக்கிறானே, அதுக்கு என்னாப்பா சொல்ற?

“இந்து” “நம்பிக்கை” ரெண்டு வார்த்தையுமே ஃபிராடு. இந்த லட்சணத்துல அந்த மசூதியில மினாரெட் இல்லயாம். மற்றவர்கள் வழிபாட்டுத் தலத்தை இடிச்சு கட்டினா அது இசுலாத்துக்கு விரோதமாம். அதுனால இசுலாமிய முறைப்படி மசூதி இல்லையாம்.

“இந்து” வுக்கு அந்த முறையெல்லாம் கிடையாதாம். அம்பிகளுக்கு ஆகம விதி தெரியுமா? 12 வருசம் ஒரு கோவிலுக்கு கும்பாபிசேகம் பண்ணலன்னா, அந்தக் கோயில் சிலையில கடவுள் கிடையாது. செத்துப்போயிட்டாருங்குது ஆகம விதி. அப்படின்னா ராமன் செத்துப்போன இடம்னுதான் அதை சொல்லணும். அத வுடு. இந்தியா முழுவதும் 12 வருசமா கும்பாபிசேகம் நடக்காத கோயிலையெல்லாம் இடிச்சு கக்கூசு கட்டிடலாமா? தயாரா? கடவுள் செத்துப்போன கோயில்ல பார்ப்பான் மணியடிச்சு வசூல் பண்றது நியாயமா?

இன்னொருத்தன் வழிபாட்டுத்தலத்தை இடித்து அங்கே மசூதி கட்றது இசுலாமுக்கு விரோதம்னு சட்டம் பேசுறாரு சர்மா. பரவாயில்லயே. அது யோக்கியமான மதமா இருக்கே. புத்த விகாரையையும், சமணப் பள்ளியையும் இடிச்சு கட்டினதுதானே பல தென்னாட்டு கோயில்கள்? நாகப்பட்டினம் புத்தவிகாரையிலிருந்து புத்தரின் தங்கச் சிலையை திருடி உருக்கித்தான் சீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செஞ்சேன்னு திருமங்கையாழ்வார் எழுதி வச்சிருக்காரே, அந்த திருட்டு சொத்த என்ன செய்யலாம்? ஹிந்துக்களுக்கு அது தோஷம் இல்லையா?

மசூதின்னா அதுக்கு மினாரெட் இருக்கணுமாம். ஆனா விநாயகருக்கு அதெல்லாம் தேவையில்ல. பிள்ளையார்னா அத சாக்கடை மேல வக்கலாம். இடம் பிடிக்கணும்னா கக்கூசுக்குள்ளயும் வக்கலாம். குப்பை மேட்டிலயும் வக்கலாம். நாலு பொறுக்கிப் பசங்க மரத்தடில மங்காத்தா ஆடணும்னா அங்க ஒரு கல்லை நட்டு, குங்குமத்த பூசி அதையும் பட்டா போட்டுக்கலாம். ஏன்னா, ஹிந்துக்களை பொருத்தவரை பரம்பொருள் எங்கும் இருக்கிறார்னு சொல்றார் நீதிபதி. வெக்கமாயில்ல. தூ.

சரி. சாணியக்கூட கடவுள்னு ஒத்துக்குற அளவுக்கு இலக்கணம் வகுத்த பரந்த நம்பிக்கை கொண்டது இந்து மதம். விட்டுத்தள்ளு. இந்துவுக்கு என்ன இலக்கணம். இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுது அம்பிகளுக்கு தெரியுமா? யார் இசுலாமியன் இல்லையோ, கிறித்தவன் இல்லையோ, பார்சி இல்லையோ அவனெல்லாம் இந்து. இதுதான் விளக்கம்.

இந்த விளக்கத்தையே சிவில் வழக்குக்கு மொழிபெயர்த்தா எப்படி வரும்? எதுடா உன் வீடுன்னு கேட்டா கோவிந்தசாமி வீடு, எது குப்புசாமி வீடு, சிவசாமி வீடு தவிர மிச்சமெல்லாம் என் வீடுதான்னு பதில் வரும். அதான் இப்ப வந்திருக்கிற தீர்ப்பு. மத்தவனெல்லாம் பட்டாவைக் காட்டணும். இவுக மட்டும் நம்பிக்கை, பரம்பொருள்னு அடிச்சு விடுவாங்க.

“வெள்ளைக்காரன் மட்டும் இல்லைன்னா நாமள்ளாம் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காபாலிகம்னு ஒத்தருக்கொத்தர் அடிச்சுண்டு செத்திருப்போம். ஹிந்து மதம்னு ஒண்ணை உற்பத்தி பண்ணி நம்ம எல்லோரையும் ஒண்ணா சேத்தவன் வெள்ளைக்காரன்தான்” அப்டீன்னு காஞ்சி மகா பெரியவா எழுதி வச்சிருக்காள். அம்பிகளுக்குத் தெரியுமோ?

அயோத்தி ஒரு புனித ஸ்தலம்னு எந்த இந்துவும் எந்த காலத்திலயும் தீர்த்தயாத்திரை போனதில்லை. அது இந்தியா முழுவதும் புகழ் பெற்ற புனித ஸ்தலமானது 1980 களில்தான். அதுக்கு முன்னால ராமர் எப்படி இருப்பார்னு கேட்டா என்டி ராமராவ் மாதிரி இருப்பார்னு தான் மக்களிடமிருந்து பதில் வரும். ராமராவைப் பார்த்து மூஞ்சியில ராமர் கலரை பூசிக்கிட்டு, கூட ஒரு அனுமாரையும் கூட்டிகிட்டு, ஆர்மோனியப் பெட்டியோட சென்னை வீதிகளில் இன்னைக்கும் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிறார்கள் தெலுங்கு தேசத்து ஏழைகள். அப்புறம் அதே வேசத்தை வச்சி ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார் என்டி ராமாராவ். 1980 களில் தூர்தர்சனில் ராமாயணம் போட்டு பிரபலமாக்கியதற்கு அப்புறமாதான், இந்த ராமனை வச்சி நாடு பூரா பிச்சை எடுக்கலாமே ங்கிற ஐடியா அத்வானிக்கு வந்தது. இதான் ராமஜன்ம்பூமியின் கதை. 1949 இல சிலைய அங்கே திருட்டுத்தனமா வச்சி கலவரத்தை உண்டுபண்ணப் பாத்தும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால முடியல. அப்புறம் பசுவதைத் தடுப்பு, உள்ளூர் கலவரம், ஏகாத்மத யாத்ரான்னு என்னென்னமோ பண்ணிப்பாத்து முடியாம கடைசியில கிளிக் ஆன ஐடியாதான் ராம ஜன்ம பூமி. மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமா வச்ச சிலைக்கு வழிபாடு நடத்த திறந்து விட்டா உ.பியில இந்து ஓட்டை கவர் பண்ணிடலாம்னு நம்பி கதவைத்திறந்தாரு ராஜீவ் காந்தி. ஆனா அவர் நம்பிக்கைய அத்வானி பிக்பாக்கெட் அடிச்சிட்டாரு. இதான் கதை.

ஒரு பக்கம் நம்பிக்கைன்னு பேசுறது. இன்னொரு பக்கம் மசூதிக்கு அடியில கோயில் இடிபாடு இருந்தது, “ஆர்க்கியலாஜிகல் சர்வேயே சொல்லியிருக்காள்”னு அவுத்து விடறது. கோயில் இடிபாடு மட்டுமா இருந்த்து, பாரதிய ஜனதா ஆட்சியில நடத்திய அந்த ஆய்வுல எலும்பெல்லாம் கூடத்தான் கெடச்சது. அப்போ கோயில்ல உக்காந்து கறி தின்னது யாரு? அயோத்தி பல நூற்றாண்டுகள் தொன்மையான நகரம். ஏற்கெனவே அது பவுத்த மையம். இசுலாமியர்கள் ரொம்ப லேட்டா வந்தவங்க. அங்க வந்து மசூதி கட்ட ஆப்கானிஸ்தானிலேர்ந்தா நெலம் கொண்டு வர முடியும்? இந்தியாவுல வெள்ளைக்காரன் கட்டியிருக்குற கட்டிடங்களை தோண்டிப்பாத்தா எங்கயுமே அடியில கோயில் இருக்காதா? இல்ல இந்துக் கோயிலையெல்லாம் தோண்டிப்பாத்தா அடியில பவுத்த சமண விகாரைகள் இருக்காதா? அவ்வளவு ஏன், நீங்க நங்கநல்லூர், மடிப்பாக்கத்துல கட்டி கணபதி ஹோம்மஃ பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தின வீடுகளெல்லாம் கை படாத கன்னி நிலத்துல கட்டினதா? “சூத்ராள் சுடுகாடு இருந்த இடம்தான், இருந்தாலும் இந்தக் காலத்துல இதெல்லாம் பார்க்க முடியுமோ, சீப்பா கிடைக்கும்போது விடமுடியுமோ? பரிகாரம் பண்ணிட்டா போச்சு”ன்னு பூமிபூஜை போட்டு கட்டின வீட்ட இப்போ தோண்டிப்பாத்தா அடியில சுடுகாடு இருக்காதா? ஒரு முனீஸ்வரன் கோயில், ஒண்டிக் கருப்பணசாமி கோயில்கூட இருக்கதா? தோண்டிப் பார்க்கலாமா, தயாரா?

மத்தவனெல்லாம் கோயிலை இடிச்சு மசூதியோ, சர்ச்சோ கட்டினான். பார்ப்பன மதம் கடவுளய திருடின மதமாச்சே. சமண தீர்த்தங்கர்ருக்கு மூஞ்சியை மறச்சி நாமத்த போட்டு, கோயிந்தா கோயிந்தான்னு கதய முடிக்கலயா? ஒரே ஒரு நாள் வெங்கடாசலபதி டிரஸ்ஸைக் கழட்டி தண்ணி ஊத்திக் கழுவி ஒரிஜினல் உருவத்த காட்டச்சொல்லுங்க. அது சிரவண பெலகொலா விலேர்ந்து சுட்டுகிட்டு வந்தமாதிரி தெரியிதா இல்லயா பார்ப்போம்.

1980 களில் மகந்த், சாமியார், ராம கோபாலன் மாதிரி வேட்டி கட்டிய பார்ப்பனர்கள் டர்ரு புர்ருன்னு விட்ட அக்கிரகாரத்துக் குசுவையெல்லாம் இந்த தேசம் ஒரு மாதிரி சமாளிச்சிடுச்சி. ஆனா அவுகளோடு புத்திர சிகாமணிகள், ஜீன்ஸை மாட்டிகிட்டு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து கிட்டு, சத்தம் வெளியே கேக்காம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே… நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா….

________________________________________

தொரட்டி.
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

134
பாபர் மசூதி ராம ஜென்ம பூமி அயோத்தி  தீர்ப்பு
இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு  – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது  சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு  – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

_________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

42

தமிழக அரச சார்பில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்கு ஆயிரமாண்டு நிறைவு விழா நிகழ்த்தப் பெற்றது. மக்களாட்சிக்கு நிகரான நிர்வாகத்தையும், மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்திய ராசராசனின் ஆட்சியை போல மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நடைபெறுவதாக காங்கிரசு தலைவர் வாசன் கூறுகிறார். மக்களாட்சியை திறம்பட நடத்தியவன் ராசராசன் என்கிறார் கருணாநிதி. வரி கட்ட முடியாதவர்களின் நிலம் பறிக்கப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார். கோவிலை கட்டுவது பெரிதல்ல தொடர்ந்து அதனை நிர்வகிப்பதுதான் சிரமம் என்கிறார் கனிமொழி.

ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை, எனவே குழு அமைத்து வரலாறு எழுத வேண்டும் என்கிறார் அமைச்சர் துரைமுருகன். தமிழ் மொழியே ஒரு வரலாறுதானே. தமிழை முடக்க நினைத்தவர்களிடமிருந்து திருமறைகளை மீட்டவன் ராசராசன், வடமொழியில் பாடுபவர்களை விட அதிக அளவில் ஓதுவார்களை பெரிய கோவிலில் நியமித்தான், ஒரு கலாச்சார மாற்றத்தை தடுத்து நிறுத்தினான் என்கிறார் அன்பழகன். பிற்காலத்தில் இன உணர்வு மங்கியதால் சமஸ்கிருத ஆதிக்கம் மிகுந்ததாகவும் அதனை 20 ஆம் நூற்றாண்டின் இன உணர்வு மீட்டெடுத்ததாகவும், அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று ஆலயங்களில் தமிழில் வழிபாடு கட்டாயமாக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் பேசுகிறார்.

திருமறைகளை கண்டெடுத்ததாக சொல்லப்படும் சிதம்பரத்திலேயே மனித உரிமை பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகசாமியும் இரத்தம் சிந்தி போராடித்தான் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றனர் என்பது சமகால வரலாறு.  வரலாறு இல்லாமல் எந்த சமூகமும் இல்லை. ஆனால் வரலாற்றை திரிக்க நினைக்கும் ஆளும் வர்க்கம் மேற்கண்டவாறு முரண்பாட்டுடன் பேசுவது இயல்பே. பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில்  பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான். போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.

சோழர் காலத்தில் நீர்ப்பாசன வசதியை தனது கைப்பிடியில் வைத்திருந்தது கோவில் நிர்வாகமே. அன்றைய ஆளும்வர்க்கமான பார்ப்பன மற்றும் வெள்ளாள சாதிக்கு போக மீந்த ஆற்று மற்றும் ஏரி நீர்தான் குத்தகை விவசாயிகளுக்கு.  அதுவும் அவர்களுக்கு தோதான நேரத்தில்தான் அளிக்கப்பட்டது. எனவே விளைச்சல் குறைவதும், வரியோ பார்ப்பன வேளாள சாதிகளின் நில விளைச்சலுக்கு நிகராக இருப்பதும் தவிர்க்க முடியாத துயரமானது.

வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் ஏற்கெனவே வளமான நெல் விளையும் பூமியாகவும், தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டது முதன்முதலாக விவசாயத்திற்காக திருத்தப்பட்ட தரிசு நிலமாகவும் இருந்ததை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகிறது. அதிலும் நக்கன் போன்ற உயர்சாதி பெண்கள் தம்முடன் சொத்தாக பெற்று வரும் நிலத்திற்கு வரிவிலக்கு பெறுவதால் அவர்களே ஒரு கொடையாளியாகவும், வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரராகவும் இருந்தனர். ஆனால் தாழ்த்தப்பட்ட குத்தகை விவசாயிகளின் பெண்டிருக்கோ அரசு ஒரு வேலி நிலம் தரும்.  பயிரிடும் அவர்களது தந்தையால் வரி கட்ட முடியாமல் மீண்டும் சிவதுரோகி ஆவதும் தொடர்ந்தது. இதனை அடுத்து வந்ததுதான் சதுரி மாணிக்கம் போன்ற பெண்களின் கோபுர தற்கொலைகளும் தொடர்ந்து வந்த மக்களது கலகங்களும்.

பெரிய காற்றளி கோவில், பெரிய விமானம், பெரிய நந்தி, பெரிய சிவலிங்கம், பெரிய பிரகாரம் என பெரிய கோவில் பெரிதாக மாத்திரமே திகழ்வதால் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு இலக்கணமே ராசராசன்தான் என்கிறார் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன். பேரரசு ஒன்று தோன்றியதும் இப்போதுதான். சுயசார்புள்ள கிராமத்தின் குறைந்த உபரியை மாத்திரமல்ல அதன் சுயசார்பையும் உறிஞ்சிதான் கோவிலும் பேரர‍சும் செழித்தது. 12 சதவீத வட்டிக்கு பணம் தரும் லேவாதேவி வேலையையும் வட்டி வசூலிக்க ஒரு படையையும் வைத்திருந்த பெரிய கோவிலைத்தான் பகைவர்களின் தாக்கதலில் இருந்து காப்பதற்காகவும் கட்டியிருப்பார்கள் என்கிறார் அன்பழகன்.

ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மாத்திரம்தான் உறுப்பினராக முடியும். கோவில் பண்டாரம் ஆக கூட குறைந்த பட்ச தகுதி நிலம்தான். மன்னார்குடி ஊர்சபையே கூட வரி கட்ட முடியாமல் தாங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக போக இருப்பதாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள் என்றால் வரியின் கொடுமையை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

நந்தா விளக்கு எரிப்பதற்காக ராசராசன் நாற்பது சாவாமூவா பேராடுகளை (எப்போதும் எண்ணிக்கை மாறாத வகையில் இறந்தவற்றுக்கு பதில் புதியதை வாங்கி விட வேண்டும்) கோவிலுக்கு தானமளிக்கிறான். தினமும் உழக்கு நெய் கொடுத்து விட்டு மீந்தவற்றை மேய்ப்பவர்கள் வைத்துக் கொள்ளலாமாம்.  பழ நைவேத்தியம் செய்வதற்காக பழ வியாபாரிகளுக்கு தரப்பட்ட கடனிலிருந்து வட்டிப்பணத்தை எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பித்தான் ராசராசன்.

ஒரு சமுதாய நோக்கத்தோடு கோவிலுக்கான எல்லா தரப்பு மக்களின் பங்களிப்பையும் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில் காண முடிகிறது என்கிறார் தங்கம் தென்னரசு. 1000 பேர் ஆடிய கின்னஸ் சாதனை நடனத்தை கல்வெட்டிலும் பொறிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியம்.

அரசன் முதல் ஆண்டி வரை சோழர்களுக்கு ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள். தனது விருப்பமில்லாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்றா கோரியிருப்பாள்? தொழில் அடிப்படையில் தனது வாரிசுகளும் சேவை சாதிகளாக மாறுவ‌தற்கு உதவும் கல்வெட்டில் தனது பெயர் இல்லை என்பதற்காக குப்பனும் சுப்பனும் அழுதா இருப்பார்கள்? இழிவை உயர்வாக திரித்து விட்டு வரலாறு இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பார்கள் போலும்.

மதங்களை அரசுக்கு மேலாக வைத்திருந்த சூழலில் அவற்றை சமமாக பாவித்தவன் ராசராசன் என்கிறார் கனிமொழி. ஆனால் ஈசான சிவ பண்டிதர் என்பவரை காசுமீரத்திலிருந்து கொண்டு வந்து தனக்கு ராஜகுருவாக நியமித்து கொண்டான் ராசராசன். இவரது வழிகாட்டலின் பேரில் சூத்திர சாதியில் இருந்து சத்ரிய சாதியாக தன்னை மேனிலையாக்கம் செய்துகொள்ள விரும்பிய ராசராசன் ரண்யகர்ப்ப யாகமும் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கினான்.

ஒரு கலாச்சார படையெடுப்பையே தடுத்து நிறுத்தினான் ராசராசன் என்கிறார் அன்பழகன்.  ஆனால் பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு. அன்று எழுந்த வந்த வணிக வர்க்கத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு சுங்கம் விதித்து முட்டுகட்டை போட்டதும் இவனது ஆட்சியில்தான். இதனை இவனது பேரனான முதல் குலோத்துங்கன் வந்து விலக்கி சுங்கம் தவிர்த்த சோழனாக பெயர் பெற்றதும் வரலாறாகித்தான் உள்ளது.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கிய இக்காலத்தில் மன்னனுடைய மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை கூட மனுஸ்மிருதி யின் படி நாடுகடத்த மட்டுமே செய்தான் ராசராசன். கோவில் சொத்துக்களை இன்று போலவே அன்றும் பார்ப்பனர்கள் கையாடல் செய்ததை கல்வெட்டுக்களில் காணப்படும் தண்டனைகளின் வழியே அறிய‌ முடிகிறது. கோவிலை மையமாக கொண்ட ஊரும் அதற்கு வெளியே சேரியையும் அமைத்த பெருமையும் சோழர்களுக்கே உண்டு.

குடவோலை முறையில் ஜனநாயகம் அன்று இருந்ததாக நீண்ட காலமாக வரலாற்று பாடப்புத்தகத்தில் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அந்த குடவோலையானது சொத்துள்ளவர்கள் மாத்திரமே இருக்கும் ஊர்சபையில் உள்ள பார்ப்பனர்களில் அவர்களது பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு நடத்தப்படுவதே ஆகும் என்பதை சொல்லத் தவறுகிறார்கள். இப்போது நடக்கும் போலி ஜனநாயகத்திற்கான தேர்தலோடு தன்மையில், முடிவில் எல்லாம் ஒத்துப் போவதால் கருணாநிதி இதனை மக்களாட்சி என்று விளிப்பது ஒருவகையில் சரிதான்.

_______________________________________________

– வசந்தன்

_______________________________________________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?

 

தொடர்புடைய பதிவுகள்