Friday, June 9, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

-

மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

இத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது.  பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன.  முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன.  திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

மனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை.  இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது.  முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும்.  இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது.  இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?  இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர்.  இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின.  கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

வினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது? ————————————————– அந்த திருமணத்தில் மட்டுமல்ல எந்த இசுலாமிய திருமணத்திலும் குர்ஆன் ஒத தேவையில்லை இந்த சாதரண விஷயம் கூட ஒங்களுக்கு தெரியவில்லை

    • ஹைதர் அலி, மற்ற எந்தக் கட்டுரை குறித்தும் கருத்து தெரிவிக்காதது ஏன் ?..

      • ///ஹைதர் அலி, மற்ற எந்தக் கட்டுரை குறித்தும் கருத்து தெரிவிக்காதது ஏன் ?..//// எனக்கு தெரிந்து மற்ற விஷயங்களிள் பொய் இல்லை எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக அறிந்துக் கொள்ளாமால் விமர்சிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளவன் ஆனால் இந்த கல்யாண மேட்டர பத்தி எனக்கு நல்ல தெரியும்

  2. 1. புதிய ஜனநாயகம் இதழில் வேளியான தவறான பொய்யான செய்திக்கி மறுப்பு அந்தத் திருமணத்தில் குரான் ஒதப்படவில்லை; புரட்சிகர பாடல்கள் ஒலிபரப்பட்டன! இது எப்படி சாத்தியமானது? என்று தலைப்பிட்டு (பெட்டி செய்தியாக) வேளியாகியிருந்தது அதில் நிறைய பொய்கள் அடித்து விடப்பட்டிருக்கின்றன தவறுகளை திருத்தி கொள்ளவும். பொய் நெ.1 மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகள்.? பொய் நெ.2 பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில்? பொய் நெ.3 தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுய விருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்? உண்மை நெ.1மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகளல்ல எப்புடி இப்படி ஒரு பொய்யை துனிந்து சொல்கீறிர்கள் என்று தெரியவில்லை? தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர்கள்:
    எம்.ஐ சுலைமான்
    +91 9952035111
    கோவை ரஹ்மதுல்லாஹ்
    +91 9944132622 , +91 9150502450
    இவர்கள் தான் தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர்கள் இவர்கள் இருவரும் இளைஞர்கள் ஒருவருக்கு 32 வயது மற்றவருக்கு 34 வயதிருக்கும் இவர்களில் யாரும் அந்த மணமகளின் தந்தை கிடையாது அப்புறம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர் செயலாளர் யாரும் அந்த மணமகளுக்கு சொந்தம் கூட கேடயாது
    தலைவர்:நூர் முஹம்மது 9443423741
    து.தலைவர்:முஹம்மது சுல்தான்:9865048082
    செயலாளர்:அப்துல் காதர் 9842204322
    வேண்டுமேன்றால் அவர்களுடைய கைத்தொலைப்பேசி எண்கள் உள்ளன தொடர்பு கொள்ளவும் உண்மை நெ.2 பொதுவாகப் பச்சைக் கொடி முசுலிம்களின் அடையாளமாக சித்தரிக்க படுகின்றன உண்மை அதுவல்ல அப்புறம் அந்த எப்போழுதும் பச்சைக்கொடி பறக்கும் என்று ( பச்சைக்கொடி செவப்புக்கொடி இவர்களின் எதுகை மொனை ரசனைக்காக) புதிய ஜனநாயகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த மண்டபத்தில் இதுவரை எந்த பச்சை கொடியும் பறந்ததில்லை உண்மைநெ.3 தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை

    • ஹைதர் அலி,
      கீ பலே ஹால்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது உங்களுக்கு பொருத்தம்தான்.
      இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மணமகளின் தந்தை காரைக்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நகரச் செயலாளர். அவரின் பெயர் அப்பாஸ். இக்கட்டுரையில் மணமகளின் தந்தை தவ்ஹீதின் மாநிலத் துணைத் தலைவர் என்பது தவறாக குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் அம்மண்டபத்தில் செங்கொடிகள் பறந்ததும், மகஇக பாடல்கள் ஒலிப்பரப்பட்டதும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதில்லை, வர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்ற வாசகம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது என்பதும் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,பகத்சிங் ஆகியோரின் படங்களும், வைக்கப்பட்டிருந்தன என்பதும், திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும், பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை எனும்போதே மணமகன் கடவுள் மறுப்பாளர் என்பது புரிகிறது. பின் ஏன் இரு ஜமாத்தும் திருமனத்தை பதிவு செய்து கொள்ள சண்டையிட்டனர் என்று புரியவில்லை. ஹைதர் கூறுவதுபோல குரான் ஓதப்படவில்லை என்பது பெரிய பிரச்சினையில்லாவிட்டாலும் கூட உருவப்படங்கள் வைக்கப்பட்டு ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பதே பெரிய பிரச்சினைதான். மணமகனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மணமகனின் கருத்திற்கு ஆதரவளித்த மணமகளுக்கும் மணமகளின் பெற்றோர்களுக்கும் மணமகனின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      ஹைதர் உங்கள் வயிறு எரியுதா!

      • சாகித் ஒங்க எரிச்சலுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் தண்ணி ஊத்துகிறேன்

        • தோழர் ஹைதர் அலி, இந்த பிரச்சினையை நேர்மறையில் எடுத்துக் கொண்டு விவாதிக்கவும். இசுலாமிய மக்களிடம் கம்யூனிசம் பரவுவதும், அதையே அவர்கள் நடைமுறை படுத்துவதும் நிச்சயம் நாம் வரவேற்க வேண்டுமல்லவா. உழைக்கும் மக்கள் என்ற வகையில் இசுலாமிய மக்களின் பெரும்பான்மையினர் நம்மிடம் சேருவதைத்தான் நீங்களும் விரும்புகிறீர்கள் என்பதை பணிவுடன் நினைவு படுத்துகிறேன்.

        • இங்கு காட்டரபியாக ஒருவன் உங்களுக்கு பதில் கொடுக்க வீணாக சாகித் என்பவரை வம்பிழுக்குவது ஏனோ? இதை நியாயப்படுத்த TNTJ பைலாவில் ஏதேனும் விதி இருக்கிறதா? மற்றபடி வயிற்றெரிச்சலுக்கு தண்ணீர் வேண்டாம் gelusil இருந்தால் ஊற்றுங்கள்.

        • இது தொடர்பான ஒரு நல்ல தகவலுடன் இணையதளத்தில் விரைவில் சந்திப்போம் ஹைதர்அலி. வயிற்றெரிச்சல் எனக்கு எப்பொழுதும் ஏற்படுவதில்லை. மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர்களைக்குறித்து மகிழ்சியடைவதுபோல பழைய உலுத்துப்போன கோட்பாடுகளை பிடித்துத் தொங்குபவர்களிடம் அனுதாபமே ஏற்படும். அதற்கு எம்போன்றவர்களும் ஒரு காரணம் எனபதையும் உணர்ந்தவர்களே.

      • காட்டரபி,

        எதற்காக தோழர் ஹைதர் அலி வயிறு எரிய வேண்டும்? முதலில் அவர் குறிப்பிட்டது போல புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில துணை தலைவர் என்று வந்த செய்தி தவறானது. இது குறித்து அடுத்த இதழில் மறுப்பு வெளியிடுவதாக புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி காட்டரபி குறிப்பிட்டிருக்கும் தகவல் சரியானதே.

        திருமணத்தில் குர் ஆன் ஓதப்படவில்லை என்பது ஒரு குறியீட்டுச் சொல்தான். அதே போல கம்யூனிச அடையாளங்களோடு ஒரு இசுலாமிய திருமணம் நடைபெறுவது மிக மிக அரிதான ஒன்றுதான். எனவே இத்திருமணம் குறித்து தோழர் ஹைதர் அலி மகிழ்ச்சிதான் அடைவார், வாழ்த்தும் தெரிவிப்பார்.

        • #தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை#
          ஹைதரலியின் இந்த வரிகள் அவரது வயிற்றெரிச்சலைக்காட்டவில்லையா?
          தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்ற மாபெரும் உண்மையை அவர் எங்கிருந்து கண்டுபிடித்தாரோ?
          பாவம் அவர். தவறானவர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

        • அன்புள்ள நண்பர் வினவுக்கு. நான் உங்களுடைய தோழன் அல்ல உங்களுடைய மொழியில் சொல்வதாக இருந்தால் நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி இதை நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் இன்னும் என்னை தோழன் என்று நம்பி கொண்டிருக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக நான் கம்யூனிஸ்ட ஆகிவிட முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

        • @ஹைதர் அலி

          // நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி இதை நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் இன்னும் என்னை தோழன் என்று நம்பி கொண்டிருக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக நான் கம்யூனிஸ்ட ஆகிவிட முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன் //

          நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு வணக்கம்..

          உண்மையில் உங்களது மேற்கண்ட வசனத்தைக் கண்டு அதிர்ந்து விட்டேன்.
          உங்களை மத அடிப்படைவாதி என்று கூறிக்கொள்ள உங்களால் முடிகிற போது , மற்றொரு விசயத்தையும் நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று பொருள். அதாவது ஆர்.எஸ்.எஸ். , சங் பரிவார், ராம்சேனா,சிவசேனா, வி.எச்ஹ்.பி , இந்து முண்ணனி போன்ற மத அடிப்படைவாதிகள் குஜராத் தொடங்கி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் நீங்கள் அங்கீகரிப்பது போன்றதாகும். உங்கள் மத அடிப்படைவாதம் எப்படி இஸ்லாமிய நம்பிக்கையில் தொடங்குகிறதோ அதே போல் தான் அவர்களது மத அடிப்படைவாதமும் இந்து நம்பிக்கையில் தொடங்குகிறது. உங்கள் அடிப்படைவாதம் சரி என்று நீங்களே கூறிக் கொள்கையில் அவர்களது அடிப்படைவாதம் தவறு என்று எவ்வாறு உங்களால் கூற முடியும் ?.

          உங்கள் மத நம்பிக்கையால் எங்காவது மக்கள் படும் கஸ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறதா ?..
          கம்யூனிசத்தினால் விடுதலை பெற்றோர் பல கோடி. உங்கள் மதம் உங்களுக்கு பொருளாதார விடுதலைக்கு என்றாவது வழிகோலுகிறதா ?..

          மதத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முன் ”நமது சமூகத்திற்கு என்ன வேண்டும் ?.. அதற்கு மதம் சரியான தீர்வா ?… இல்லை கம்யூனிசம் சரியான தீர்வா? “ என்று சிந்தித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

          சரியான் முடிவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

          தோழமையுடன்
          செங்கொடி மருது.

        • அன்புள்ள தோழர் ஹைதர் அலி,

          நீங்கள் இங்கே கூறியிருப்பது ஏட்டிக்கு போட்டி என்ற முறையில்தான் என்பது நம்மிருவருக்கும் தெரியும். மதம் குறித்த பிரச்சினைகளில் நீங்கள் சற்று உணர்ச்சிவசப்படுபவர் போல மற்றவர்களுக்கு, சில தோழர்களுக்கு தெரியலாம். நாங்கள் அப்படி கருதவில்லை. உங்களை மதவாதி போல நினைத்துக் கொண்டு சில தோழர்கள் விவாதிக்கிறார்கள். அந்த அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

          நீங்கள் குறிப்பிட்ட வகாபியிசத்துக்கு புரவலராக இருப்பது சவுதி ஷேக்குகள்தான். கூடவே அமெரிக்க அடிமைகளாவும், சொந்த நாட்டு மக்களை சுரண்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். கம்யூனிசம்தான் அரபு மக்களுக்கு நண்பனாக இருப்பதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் வல்லமையையும் கொண்டிருக்கிறது.

          இன்றைய இசுலாமிய பெரும்பான்மை மக்கள் என்பவர்கள் வர்க்கம் என்ற முறையில் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சமூக விடுதலை என்பது நாம் வர்க்கம் என்ற முறையில் ஒன்று சேர்வதிலேயே அடங்கியிருக்கிறது. அந்த இணக்கத்தில்தான் நீங்கள் வினவோடு நட்போடு தோழமையோடு இருக்கிறீர்கள்.

          எனவே நீங்கள் என்ன சொன்னாலும் உங்களை தோழராக மாற்றும் முயற்சியிலிருந்து நீங்களோ, நாங்களோ பின்வாங்கமுடியாது. அது சமூக நலனுக்குகா நாம் செய்யும்முயற்சி. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இசுலாமியத்திருமணத்தில் கம்யூனிச அடையாளங்களோடு நிகழ்வு நடைபெறுகிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்பது உங்களது மனசாட்சிக்கு தெரியும். மற்றபடி இந்த பொருள் குறித்து வினவில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

      • காட்டரபி. அஹ்லன் அஹ்லன்(வருக வருக) ////////////////கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை//////////////// இது யாருக்கு பொருந்துமுன்னு பாப்பமா /////இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மணமகளின் தந்தை காரைக்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நகரச் செயலாளர்./// சரியாக சொன்னிர்கள் எனக்கும் இதில் மற்று கருத்தில்லை ஆனால் இப்போழுது எந்த பொறுப்பிலும் இல்லை (தேவைப்பட்டால் அவருடைய கைத்தொலைபேசி நம்பர் தர தாயர்) ////////////அம்மண்டபத்தில் செங்கொடிகள் பறந்ததும், மகஇக பாடல்கள் ஒலிப்பரப்பட்டதும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதில்லை, வர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்ற வாசகம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது என்பதும் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,பகத்சிங் ஆகியோரின் படங்களும், வைக்கப்பட்டிருந்தன என்பதும்/////// உண்மையிலும் உண்மை ////////ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும்,/////// இப்பதான் மக பொய்யனாக அவதாரம் எடுக்குறீக உண்மையில் என்ன நடந்தது ஏன்றால் நம்ம அப்பாசு இருக்கார்ல அப்பாசு அவரு கரைக்குடி காரரு என்பதினால் சிவகங்கை மவட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவரும் என் நண்பருமான அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சவூதியல இருந்து நம்ம அப்பாசு போன் பொட்டு என்னுடைய மகளுக்கு தவ்ஹீத் முறைப்படி திருமணம் நடக்கவிருக்கிறது அதானல் உங்களின் தவ்ஹீத் மண பதிவேடு புத்தகத்தை எடுத்துட்டு போங்க அதில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் நம்ம அப்துல் ரஹ்மான் அத நம்பிகீனு புத்தகத்த தூக்கி கிட்டு வந்தூட்டர் வந்து பாத்தவுடனே ஆக இது செவப்பு கொடியா கீது அப்ப இது வேற கலியாணம் எங்க புஸ்தாகத்துல பதிய முடியாதுன்னு சொல்லிட்டு கேளம்பி வந்துட்டாங்க இதாப்பு உண்மை //////பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே.//////// பந்திக்கி முன்னாடியை கேளம்பி போயிட்டாங்க அதானல தான் நீங்க சண்டையில்லாம அமைதியா பிரியாணி சப்பிட்டிருக்கியா அவங்க கேளம்பி போன பிறகு தான் சண்டையிம் ஒஞ்சிருக்கு /////////////////திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை///////////////// திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக எந்த முசுலீமும் நம்புறதில்லை குர் ஆனிலையும் இல்லை இது நம்ம டி விஜய ரஜேந்தர் படத்துல வர்ர பாட்டு (கால்யணந்தாம் சொர்க்கத்துல நிச்சயிக்கபடுதாம் பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப் படுதாம்) அவரு மக கலியணத்துல கொண்டு பொயி போர்டு வையுங்க பொருத்தமாக இருக்கும். அப்புறம் நம்ம டி ரஜேந்தர் மாதிரி சொர்க்கம். வர்க்கம். தர்க்கம் அப்புடியின்னு அடுக்கு மொழி வசனத்த யூஸ் பன்னி போர்டு வச்சுட்ட அது முசுலிம்களின் நம்பிக்கை அயிடுமா? ஒரு நேர்மையான பத்திரிக்கையாக இருந்தால் தள்ளு முள்ளு நடந்ததை எழுதியிருக்க வேண்டும் மணமகனிடம் தவ்ஹீத் ஜமாத்தார்கள் தாவா செய்து விட்டு வெளியேறி போனதை எழுதியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாற்றமாக (தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர், அக்:2010 பு.ஜ. பாக்கம் 17)திட்டி விட்டு சென்றவர்களை வாழ்த்திவிட்டு சென்றதாக எழுதியாது உண்மையா?

        • ஹைதர்,
          கீ பல ஹால். உங்களது பின்னூட்டங்களிலிருந்து உங்களது வயிறு எரிகிறது என்பது தெளிவாகிறது. இது வினவுக்கு தெரியவில்லை என்பதுதான் மர்மமாக உள்ளது.
          சரி விஷயத்திற்கு வருவோம். சவூதியில் இருக்கும் அப்பாசு புதுகையில் இருக்கும் ரஹ்மானுக்கு போனில் விபரத்தைச் சொன்னதாகவே இருக்கட்டும். ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பாகவே தவ்ஹீத் ஜமாத்தினர் மணமகனை அழைத்து சுமார் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணை செய்திருக்கின்றனர். அதில் மணமகன் தப்பித்தவறிக் கூட அல்லா இருக்கிறான் என்று பொருள்படும்படி எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கவில்லை. அதுமட்டுமல்ல அல்லா இருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு, திருமணத்திற்கு இக்கேள்வி அவசியமா எனப் பதிலுரைத்திருக்கிறார். விசாரணை முடிந்தவுடன் உங்களருமை நண்பர் என்ன செய்திருக்க வேண்டும், சவூதியில் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் அப்பாசுக்கு போன் மூலம் இதனைத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு அப்பாசு என்ன செய்திருக்க வேண்டும் உள்ளூர் ஜமாத்தினை தொடர்புகொண்டு இந்தத் திருமணத்தில் எனக்குச் சம்மதமில்லை என்பதை விளக்கியிருக்க வேண்டும். குறுக்கு விசாரணையின்போது ரஹ்மான் தூங்கிட்டார்னு நீங்கள் அடம்பிடிக்கலாம். இருந்தபோதிலும் மண்டபத்தைப் பார்த்த பிறகாவது அப்பாசை தொடர்புகொண்டாரான்னு பாத்தாஅதுவும் இல்லை. திருமணத்தில் கலந்தும்கொண்டுவிட்டு, சண்டையும்போட்டுவிட்டு,பந்தியில் கையையும் நனைத்துவிட்டு,போததுக்கு ஏப்பமுமிட்டுவிட்டு, பிறகு கேட்டா, திருமணமா!அப்படியா!எங்களுக்கு தெரியாதே!நாங்க அலாவுதீனின் அற்புத விளக்கென்னு நெனெச்சில்ல உள்ளார போனோம்னு சொன்னா, கேக்குறவன் கேனையன்! பாத்தவன் குருடனா!

        • //நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி//

          ஆயாசமாக இருக்கிறது.

        • ////ஆயாசமாக இருக்கிறது/// ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கதீங்க என்னையே வஹாபின்னு கண்டுபிடிச்சு முதன் முதலில் பட்டம் கொடுத்ததே நீங்கதான் ஆதாரம் வேனுமா? இதோ /// தீவிர வஹாபியான உங்களை இப்பிரச்சினையில் குரானை பின்பற்ற தடுப்பது எது?//// சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்! என்கிற தலைப்புல விவாதிக்கமொது ஒங்களுக்கு ஆயாசமாக வரலையே ஏன்?

        • அப்போ நீங்க வஹாபியில்லையா? நானாத்தான் ஒங்கள வஹாபியாக்கிட்டேனா?

        • ////அப்போ நீங்க வஹாபியில்லையா? நானாத்தான் ஒங்கள வஹாபியாக்கிட்டேனா?///நீங்க தான் கண்டுபிடிச்சீங்க தவிர நீங்க என்னை வஹாபியாக்கவில்லை

      • என்னதான் வினவு பொய்யை உண்மையாக்க நினைத்தாலும் முடியாது. இந்த ஒரு கட்டுரையிலிருந்தே உங்களோட அனைத்து கட்டுரைகளும் பொய்யும் புளுகு மூட்டயுமாதான் இருக்க கூடும்.

        • இந்நிகழ்சியை பொய்யும் புழுகுமூட்டையும் என்று கூறும் அஜ்மல் அவர்களே. இந்ந நிகழ்சி உண்மை என்று நாங்கள் உங்களுக்கு எந்த வகையில் நிறுபிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

    • உங்கள்து இல்லங்களிலோ அல்லது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலோ பச்சைக்கொடி பறக்க விடுகிறீர்களோ இல்லையோ, செவப்புக் கொடியை பறக்க விடுவீர்களா! இத்திருமணத்தில் செவப்புக்கொடி பறந்ததே ஒரு மாற்றம்தான்

      • எங்களுடைய இல்லங்களில் பச்சைக்கொடி பறக்க விடுவதில்லை

  3. திய ஜனநாயகம் என்ற மாத இதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி தவறான செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியி்ட்டது. வெளியான செய்தி தவறானது மேலும் சாத்தியமில்லாதது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சம்பந்தபட்ட இதழுக்கு பின் வரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மதிப்பிற்குரிய புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆசிரியர் சண்முகம் அவர்களுக்கு,

    ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!

    கடந்த அக்டோபர் 2010 இதழின் 17 ஆம் பக்கத்தில் புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவரின் மகளுக்கு புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டு திருமணம் நடந்ததாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள்.

    ஆனால் மணமகளின தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களில் அவர் சாதாரண கிளைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.அதுமட்டுமின்றி தற்போது மாநில துணைத் தலைவர்களாக பதவி வகிக்கும் எம்.ஐ.சுலைமான் மற்றும் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு திருமணமாகும் வயதில் பிள்ளைகளும் இல்லை. மேலும் இத்திருமணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    எனவே இதையே மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு: இஸ்லாமிய திருமணம் என்பது மணமக்களுக்கு இரண்டு சாட்சிகளுடன் மணமகளின் தந்தை அல்லது பொறுப்பாளர் திருமண ஒப்பந்தம் செய்து கொடுப்பதே இஸ்லாமிய திருமணம்.

    இதில் மாலைகள் கூட இருக்காது.இதைத்தவிர இதில் எந்த வித சடங்குகள் , சம்பரதாயங்கள் , பாடல்கள் , வரதட்சணை ,பெண் வீட்டார்களிடமிருந்து எந்த விதமான கையூட்டலும் பெறாமலும் புரோகிதர்கள் துணையின்றி தனித்தன்மையுடன் நடைபெறும் திருமணமே இஸ்லாமிய திருமணம்.

    இதையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் அதைச் சார்ந்தவர்களும் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர் குறிப்பிடுகிறோம்.

    இப்படிக்கு

    ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
    மாநில துணைத் தலைவர்

    • மணமகளின் தந்தை அப்பாஸ் அவர்கள் தவ்ஹீது ஜமாத் அமைப்பின் நகரத்தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர். இன்றும் அவ்வமைபில் உள்ளவர்தாம். தமது சொந்த செலவில் அமைப்பிற்காக நிறைய செலவு செய்பவரும்கூட. அவருக்கும் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ராஜவம்சமான தவ்ஹீது ஜமாத் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கூறியிருப்பது உண்மையாக வேண்டும் என்பதுதான் எம்போன்றவரின் விருப்பம்.
      அப்பாஸ் அவர்கள் இவ்வறிக்கையை படித்தபிறகாவது புரிந்துகொள்வார் என எதிர்பார்போம்.
      திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது உண்மை.
      அவர்களின் தில்லுமுல்லுகளுக்கு ராஜவம்சத்தின் அறிக்கை ஒரு சான்று.

      • /////மணமகளின் தந்தை அப்பாஸ் அவர்கள் தவ்ஹீது ஜமாத் அமைப்பின் நகரத்தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர். இன்றும் அவ்வமைபில் உள்ளவர்தாம்.////ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லதீர்கள் மணமகளின் தந்தை சவூதியில் தான் வேலை செய்கிறார் அதுவும் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலே அவர் இன்று தவ்ஹீத் ஜமாத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை (அவருடைய போன் வேண்டுமா? தர தயாரய் இருக்கிறேன்) மற்றபடி இப்போழுது டுட்டி டயம் 5 மணிக்கி(இந்தியா டயம் 7 மணிக்கி) வேல முடியும் ஒக்கந்து பேசுவேம்

        • எங்கே நந்தனை கணவில்லை ஜொதியில் கலந்து விட்டாருன்னு நெனைக்கிறேன் நந்தா ரெடியா

        • #ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் #
          ஹைதர்அலி அவர்களே! நீங்கள் சிந்திப்பவர்தானே! நான் அப்பாஸ் அவர்கள் காரைக்குடியில் இருக்கிறார் என் சொல்லவில்லையே. தவ்ஹீத் அமைப்பில் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவர் சவதியில் இருந்தால் அவ் வமைப்பில் இல்லை என்று பொருளாகிவிடுமா? ஒரு வேளை தவ்ஹீத் ஜமாத் தேச பக்திமிக்க அமைப்போ? வெளிநாட்டிலிருப்பவர்களை அமைப்பைவிட்டு விலக்கிவிடவார்களோ?
          அவசரக்காரனுக்கு…….

        • திருவாளர் ஹைதர்,
          மணமகன் அப்பாஸின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்

        • @ ஹைதர் அலி
          ///எங்கே நந்தனை கணவில்லை ஜொதியில் கலந்து விட்டாருன்னு நெனைக்கிறேன்////

          நந்தன் – ஜோதியில் கலந்தது…. சிதம்பரத்தில் நந்தனை பார்பனபிண்டங்கள் எரித்ததையா இப்படி உவமையாக கூறியுள்ளீர்கள்?

          எப்படி உங்களால் அதை பகடி செய்ய முடிகிறது? அவ்வளவு வக்கிரம் உங்கள் உள்மனதில் இருக்கிறதா? இல்லையெனில் இதற்கு மன்னிப்பு கேட்கவும்!

          இதே போல பார்பன பாசிஸ்டுகளுக்கு குஜராத்-பெஸ்ட்பேக்கரியில் எரித்து சுடப்பட்டதும் வெறும் ரொட்டி துண்டுகளாக தெரிந்தால், அதை வைத்து பகடி செய்தால் அதையும் ஏற்கும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

          தோழமையுடன்,

          அக்காகி.

        • நந்தன் அவர்களே. ////ஹைதர்அலி அவர்களே! நீங்கள் சிந்திப்பவர்தானே! நான் அப்பாஸ் அவர்கள் காரைக்குடியில் இருக்கிறார் என் சொல்லவில்லையே. தவ்ஹீத் அமைப்பில் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவர் சவதியில் இருந்தால் அவ் வமைப்பில் இல்லை என்று பொருளாகிவிடுமா?//// அய்யா நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அவர் சவூதியில் இருப்பதால் அதுவும் நான் வேலை செய்யும் ஊரிலே இருப்பதால் அவரை சந்தித்து அவரே நான் தவ்ஹீத் உறுப்பினர் இல்லை என்பதை போனில் அறிவிப்பார் அதற்கான சாத்தியம் இருக்கிறது தயார என்று உங்களுக்கு சவால் விடத்தான் அப்படி சுருக்கமாக சவூதியில் தான் இருக்கிறார் என்று சொன்னேன் மணமகளும் மணமகளும் தங்களது நிலையை விளக்கியது போல் மணமகளின் தந்தையை நான் இன்னும் தவ்ஹீத் ஜமாத்தில் தான் இருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல வைத்து விடுங்கள் பார்ப்போம் இது ஒங்களுக்கான சவால்

        • காட்டரபி
          ///திருவாளர் ஹைதர்,
          மணமகன் அப்பாஸின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்//// அய்யா டுப்ளிகேட் காட்டரபி ஒரிஜினல் காட்டரபி மொகர எப்புடியிருக்கும் ந ஒனக்கு சொல்லி தரேன் 2ம் நம்பர் பின்னூட்டம் இருக்குல அதுக்கு பதிலு போட்டுறுக்காரு போயி பாரு ஒரிஜினல் காட்டரபி போன் நம்பர் கேட்டால் கொடுக்க தயார்

        • அண்ணே அக்காவி ////நந்தன் – ஜோதியில் கலந்தது…. சிதம்பரத்தில் நந்தனை பார்பனபிண்டங்கள் எரித்ததையா இப்படி உவமையாக கூறியுள்ளீர்கள்?
          எப்படி உங்களால் அதை பகடி செய்ய முடிகிறது? அவ்வளவு வக்கிரம் உங்கள் உள்மனதில் இருக்கிறதா?//// சத்தியமாக ஒரு வக்கிரமும் கேடயாதுண்ணே எப்படி எரித்துவிட்டு ஜொதியில் கலந்து விட்டார் என்று பொய் சொல்லப்பட்டதோ அது போல இந்த நந்தன் அப்பாசு தவ்ஹீத் ஜமாத்தில் இன்னும் இருக்கிறார் என்று சொல்வது பொய் அதை தான் உவமையாக சொன்னேன்

  4. புரட்சிகர அமைப்புகளில் பணியாற்றும் தோழர்கள் ஒரு மாற்று திருமணமுறையை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தும் வருகின்றனர். தன்னலத்தை பின்னுக்குத் தள்ளி பொது நலனுக்காக வாழும் இவர்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையின் மூலம் அனைத்து மதத்தினர் மத்தியிலும் பிற யாரைக்காட்டிலும் சிறந்தவர்களாகத் திகழ்கின்றனர்.

    மாற்று திருமண வடிவம் என்ற நிகழ்வை மய்யமாக வைத்தே “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது? என்ற பெட்டிச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிது என்றே கருதுகிறேன். மற்றபடி அது பொய் இது பொய் என்று விவாதம் செய்து மய்யக் கருத்திலிருந்து – அதாவது மாற்று திருமண வடிவம் பற்றிய கருத்திலிருந்து விவாத்தை திசை திருப்ப முயல வேண்டாம். எது சிறந்த திருமண முறை என்பது குறித்து அறிய ”உலகின் அழகிய மணமக்கள்” என்ற கட்டுரையில் எனது பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

    ஊரான்.

  5. மணமகளின் தந்தை டி.என்.டி.‍_ன் பொறுப்பாளர் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால்,பின்னூட்டமிடுபவர்கள் அதனால் மட்டும் கோபப்படுவதாகத் தெரியவில்லை.எனவே கோபத்திற்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிடவேண்டும். அதுவே, ஒரு அவசியமான விவாதத்திற்கு வழிவகுக்கும். திருமணம் வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது, பற்றி நண்பர்கள் கருத்துச் சொல்லலாம். பல இடங்களில் பு.ஜ செய்தி நகல் எடுத்துக் கொடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.இஸ்லாமிய நண்பர்களிடம் ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறோம். குருசாமிமயில்வாகனன்.

    • ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறோம்

      —————–

      அதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்..

  6. இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்! | வினவு!…

    மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?…

  7. I am not a indian,therefore i dont know more about this matter but,
    சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும். இந்த ஒருதிருமணத்தைப் பார்த்துவிட்டு முஸ்லிம் மக்களிடம் கம்யூனிசம் பரவுவதுஎன்பது சிருபிள்ளைத்தனமானது ஏனெனில் இது இன்டனெட் யுகம். சற்று இன்டனெட்டில் உலன்றுபாருங்கள் இதைப்போன்று ஆயிரம் திருமணங்கள், திருமணத் தம்பதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேயிருக்கிறார்கள் (ஒவ்வோருநாளும்). இதையெல்லாம் அலட்டிக்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு நேரமில்லை.

    • ///சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல ////

      இஸ்லாமிய முறைப்படி நடக்காத இஸ்லாமியர்களது திருமணத்திலுமா ?..

      அல்லா கோவிச்சுக்கப் போறாரு சாரு ..

    • ஆனாலும், தவ்ஹீத் ஜமாத்தினர் தம் அமைப்பு சாராத பிற இசுலாமியர்களின் திருமணங்களில்கூட ‘ஹராமான’ திருமணம் என்று கலந்துகொள்வதில்லை.

  8. புரட்சி என்றால் என்ன? ஆயஇரம் பொய் சொல்லி ஒரு கல்யானம். அவற்றில் சில பொய்கள் இவை. பொய் சொல்வதுதான் புரட்சியா?

    • இதோ வந்துட்டாருடா .. வாங்க கோயபல்சின் வாரிசே ..

      ஏதோ இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமணத்தை இங்கே புரட்டி கம்யூனிஸ முறைத் திருமணம் என்று பொய் கூறியது போல் தான் வாதாட வருகின்றனர் இந்த பார்ப்பனக் கைக்கூலிகள்.

      ஒரு சில தகவல்கள் தவறாக கிடைத்திருக்க அதை தோழர்கள் பிரசுரித்ததால் அதை இவ்வாறு பொய் என்று கூறி ஆதாயம் தேடத் திரியும் கும்பலுக்கு பதில் ஒன்று தான்.

      நீங்கள் எவ்வளவு குரைத்தாலும் உண்மை மறைக்கப்பட முடியாதது. ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

      தவறான தகவல்கள் சிறிய பெட்டிச்செய்தியில் அதிக சிரத்தை எடுக்காத காரணத்தால் வந்து விட (தவறுகள் கண்டிக்கத் தக்கவையே) அதை பொய் சொல்கிறார்கள் என்று மாற்றிக் கூறும் முட்டாள்களே உங்களிடம் கேட்க விரும்பும் ஒன்று தான்.

      இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தோழர்கள் இருவர் மணவாழ்வில் புரட்சிகர முறையில் இணைந்ததைப் பற்றி ஒரு கருத்து வெங்காயமும் சொல்லாதது ஏன்?.. மணமக்களின் தந்தையின் பதவி பற்றி தவறான செய்தி வெளியானதற்கு குதிக்கின்ற நீங்கள்.. சரியான முறைப்படி வரதட்சணை வாங்காமல் நடந்த இந்தத் திருமணத்தை எதிர்ப்பது ஏன் ?..
      (இஸ்லாமியத் திருமணங்கள் அனைத்தும் வரதட்சனை இல்லாமல் நடக்கின்றன என்று ஒரு மகா பொய்யை எந்த முட்டாளும் இங்கு மொழியாது என்று நம்புகிறேன்)

      • நாங்கள் சொல்வதுதா சரி என்று மார் தட்டும் ஈங்கள் சில பொய்களை ஏன் மூடி ம்றைக்கிறீர்கலள்? ‘\’[ஒரு மூட்டை பொய்களுக்கு ஒரு பொய் பதம்.\]என்பது தெரியாதா உங்களுக்கு?

  9. மகிழ்ச்சிக்குறிய மாற்றம்..

    வரவேற்கத்தக்கது..

    இது போல நிறைய மாற்றம் நிகழ வாழ்த்துகள்.

  10. நல்ல சிந்தனை விதைத்த வினவுக்கு நன்றி,

    “மதம் ஒரு அபின் “என்று சொன்ன காரல்மார்க்ஸ் ய் நினைத்து பார்க்கிறேன்.

    முற்ப்போக்கு எண்ணத்தோடு இல்லறம் கண்ட மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    …மெய்தேடி.

  11. […] This post was mentioned on Twitter by karthick, சங்கமம். சங்கமம் said: இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!: மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திர… http://bit.ly/a8mC1Y […]

  12. மணமேல்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரதட்சணை மிக மிக அதிகம். 7 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்கம், ஒரு வீடு என்னும் அளவில் தற்பொழுது இருக்கின்றது. தவ்ஹீது அமைப்பு உறுப்பினர் வீட்டுக் கல்யாணங்கள் சில தவிர மற்ற அனைத்துத் திருமணங்களிலும் பெரும் அளவிலான வரதட்சணை கொடுக்கப்படும். அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் நடைபெற்ற திருமணத்தில், வரதட்சணை இல்லாததை முதலில் வரவேற்போம். தவ்ஹீது அமைப்பினரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.

    மணமேல்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்துத் திருமணங்களும் சுன்னத் ஜமாஅத் அமைப்பினரின் திருமணப் பதிவு புத்தகத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகின்றன, தவ்ஹீது அமைப்பு உறுப்பினர்களின் திருமணங்கள் உட்பட. அப்பகுதிகளில் தவ்ஹீது அமைப்பினர் திருமணப் பதிவு புத்தகம் கூட வைத்துக்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய பழமைவாதிகள் நிறைந்திருக்கும் பகுதியில், இஸ்லாமிய சடங்குகளை பின்பற்றாமல் நடைபெற்ற திருமணத்திற்கு வாழ்த்துகள்.

  13. .சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும். இந்த ஒருதிருமணத்தைப் பார்த்துவிட்டு முஸ்லிம் மக்களிடம் கம்யூனிசம் பரவுவதுஎன்பது சிருபிள்ளைத்தனமானது .

    • @@@@@@@@@@
      சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும்.
      @@@@@@@@@@@@@@@@

      இதிலேருந்து எனக்கு புரிவது ஒரு விசயம்தான், குறிப்பிட்ட இந்த திருமணம் இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருந்தாலும், இஸ்லாமிய முறைப்படி நடக்காததால் அது அவர்கள் முஸ்லிம்களே அல்ல. மாற்று மதத்தினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதை போலத்தான் ஜமாத்து நண்பர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

      ஆக நாட்டாமை மதத்திலேருந்தே தள்ளி வச்சிட்டார்!

      • ////இதிலேருந்து எனக்கு புரிவது ஒரு விசயம்தான், குறிப்பிட்ட இந்த திருமணம் இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருந்தாலும், இஸ்லாமிய முறைப்படி நடக்காததால் அது அவர்கள் முஸ்லிம்களே அல்ல. மாற்று மதத்தினர் வீட்டு தி