முகப்புவாழ்க்கைஅனுபவம்இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

-

மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

இத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது.  பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன.  முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன.  திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

மனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை.  இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது.  முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும்.  இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது.  இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?  இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர்.  இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின.  கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

வினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது? ————————————————– அந்த திருமணத்தில் மட்டுமல்ல எந்த இசுலாமிய திருமணத்திலும் குர்ஆன் ஒத தேவையில்லை இந்த சாதரண விஷயம் கூட ஒங்களுக்கு தெரியவில்லை

    • ஹைதர் அலி, மற்ற எந்தக் கட்டுரை குறித்தும் கருத்து தெரிவிக்காதது ஏன் ?..

      • ///ஹைதர் அலி, மற்ற எந்தக் கட்டுரை குறித்தும் கருத்து தெரிவிக்காதது ஏன் ?..//// எனக்கு தெரிந்து மற்ற விஷயங்களிள் பொய் இல்லை எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக அறிந்துக் கொள்ளாமால் விமர்சிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளவன் ஆனால் இந்த கல்யாண மேட்டர பத்தி எனக்கு நல்ல தெரியும்

  2. 1. புதிய ஜனநாயகம் இதழில் வேளியான தவறான பொய்யான செய்திக்கி மறுப்பு அந்தத் திருமணத்தில் குரான் ஒதப்படவில்லை; புரட்சிகர பாடல்கள் ஒலிபரப்பட்டன! இது எப்படி சாத்தியமானது? என்று தலைப்பிட்டு (பெட்டி செய்தியாக) வேளியாகியிருந்தது அதில் நிறைய பொய்கள் அடித்து விடப்பட்டிருக்கின்றன தவறுகளை திருத்தி கொள்ளவும். பொய் நெ.1 மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகள்.? பொய் நெ.2 பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில்? பொய் நெ.3 தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுய விருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்? உண்மை நெ.1மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகளல்ல எப்புடி இப்படி ஒரு பொய்யை துனிந்து சொல்கீறிர்கள் என்று தெரியவில்லை? தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர்கள்:
    எம்.ஐ சுலைமான்
    +91 9952035111
    கோவை ரஹ்மதுல்லாஹ்
    +91 9944132622 , +91 9150502450
    இவர்கள் தான் தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர்கள் இவர்கள் இருவரும் இளைஞர்கள் ஒருவருக்கு 32 வயது மற்றவருக்கு 34 வயதிருக்கும் இவர்களில் யாரும் அந்த மணமகளின் தந்தை கிடையாது அப்புறம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர் செயலாளர் யாரும் அந்த மணமகளுக்கு சொந்தம் கூட கேடயாது
    தலைவர்:நூர் முஹம்மது 9443423741
    து.தலைவர்:முஹம்மது சுல்தான்:9865048082
    செயலாளர்:அப்துல் காதர் 9842204322
    வேண்டுமேன்றால் அவர்களுடைய கைத்தொலைப்பேசி எண்கள் உள்ளன தொடர்பு கொள்ளவும் உண்மை நெ.2 பொதுவாகப் பச்சைக் கொடி முசுலிம்களின் அடையாளமாக சித்தரிக்க படுகின்றன உண்மை அதுவல்ல அப்புறம் அந்த எப்போழுதும் பச்சைக்கொடி பறக்கும் என்று ( பச்சைக்கொடி செவப்புக்கொடி இவர்களின் எதுகை மொனை ரசனைக்காக) புதிய ஜனநாயகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த மண்டபத்தில் இதுவரை எந்த பச்சை கொடியும் பறந்ததில்லை உண்மைநெ.3 தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை

    • ஹைதர் அலி,
      கீ பலே ஹால்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது உங்களுக்கு பொருத்தம்தான்.
      இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மணமகளின் தந்தை காரைக்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நகரச் செயலாளர். அவரின் பெயர் அப்பாஸ். இக்கட்டுரையில் மணமகளின் தந்தை தவ்ஹீதின் மாநிலத் துணைத் தலைவர் என்பது தவறாக குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் அம்மண்டபத்தில் செங்கொடிகள் பறந்ததும், மகஇக பாடல்கள் ஒலிப்பரப்பட்டதும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதில்லை, வர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்ற வாசகம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது என்பதும் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,பகத்சிங் ஆகியோரின் படங்களும், வைக்கப்பட்டிருந்தன என்பதும், திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும், பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை எனும்போதே மணமகன் கடவுள் மறுப்பாளர் என்பது புரிகிறது. பின் ஏன் இரு ஜமாத்தும் திருமனத்தை பதிவு செய்து கொள்ள சண்டையிட்டனர் என்று புரியவில்லை. ஹைதர் கூறுவதுபோல குரான் ஓதப்படவில்லை என்பது பெரிய பிரச்சினையில்லாவிட்டாலும் கூட உருவப்படங்கள் வைக்கப்பட்டு ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பதே பெரிய பிரச்சினைதான். மணமகனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மணமகனின் கருத்திற்கு ஆதரவளித்த மணமகளுக்கும் மணமகளின் பெற்றோர்களுக்கும் மணமகனின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      ஹைதர் உங்கள் வயிறு எரியுதா!

      • சாகித் ஒங்க எரிச்சலுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் தண்ணி ஊத்துகிறேன்

        • தோழர் ஹைதர் அலி, இந்த பிரச்சினையை நேர்மறையில் எடுத்துக் கொண்டு விவாதிக்கவும். இசுலாமிய மக்களிடம் கம்யூனிசம் பரவுவதும், அதையே அவர்கள் நடைமுறை படுத்துவதும் நிச்சயம் நாம் வரவேற்க வேண்டுமல்லவா. உழைக்கும் மக்கள் என்ற வகையில் இசுலாமிய மக்களின் பெரும்பான்மையினர் நம்மிடம் சேருவதைத்தான் நீங்களும் விரும்புகிறீர்கள் என்பதை பணிவுடன் நினைவு படுத்துகிறேன்.

        • இங்கு காட்டரபியாக ஒருவன் உங்களுக்கு பதில் கொடுக்க வீணாக சாகித் என்பவரை வம்பிழுக்குவது ஏனோ? இதை நியாயப்படுத்த TNTJ பைலாவில் ஏதேனும் விதி இருக்கிறதா? மற்றபடி வயிற்றெரிச்சலுக்கு தண்ணீர் வேண்டாம் gelusil இருந்தால் ஊற்றுங்கள்.

        • இது தொடர்பான ஒரு நல்ல தகவலுடன் இணையதளத்தில் விரைவில் சந்திப்போம் ஹைதர்அலி. வயிற்றெரிச்சல் எனக்கு எப்பொழுதும் ஏற்படுவதில்லை. மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர்களைக்குறித்து மகிழ்சியடைவதுபோல பழைய உலுத்துப்போன கோட்பாடுகளை பிடித்துத் தொங்குபவர்களிடம் அனுதாபமே ஏற்படும். அதற்கு எம்போன்றவர்களும் ஒரு காரணம் எனபதையும் உணர்ந்தவர்களே.

      • காட்டரபி,

        எதற்காக தோழர் ஹைதர் அலி வயிறு எரிய வேண்டும்? முதலில் அவர் குறிப்பிட்டது போல புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில துணை தலைவர் என்று வந்த செய்தி தவறானது. இது குறித்து அடுத்த இதழில் மறுப்பு வெளியிடுவதாக புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி காட்டரபி குறிப்பிட்டிருக்கும் தகவல் சரியானதே.

        திருமணத்தில் குர் ஆன் ஓதப்படவில்லை என்பது ஒரு குறியீட்டுச் சொல்தான். அதே போல கம்யூனிச அடையாளங்களோடு ஒரு இசுலாமிய திருமணம் நடைபெறுவது மிக மிக அரிதான ஒன்றுதான். எனவே இத்திருமணம் குறித்து தோழர் ஹைதர் அலி மகிழ்ச்சிதான் அடைவார், வாழ்த்தும் தெரிவிப்பார்.

        • #தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை#
          ஹைதரலியின் இந்த வரிகள் அவரது வயிற்றெரிச்சலைக்காட்டவில்லையா?
          தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்ற மாபெரும் உண்மையை அவர் எங்கிருந்து கண்டுபிடித்தாரோ?
          பாவம் அவர். தவறானவர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

        • அன்புள்ள நண்பர் வினவுக்கு. நான் உங்களுடைய தோழன் அல்ல உங்களுடைய மொழியில் சொல்வதாக இருந்தால் நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி இதை நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் இன்னும் என்னை தோழன் என்று நம்பி கொண்டிருக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக நான் கம்யூனிஸ்ட ஆகிவிட முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

        • @ஹைதர் அலி

          // நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி இதை நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் இன்னும் என்னை தோழன் என்று நம்பி கொண்டிருக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக நான் கம்யூனிஸ்ட ஆகிவிட முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன் //

          நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு வணக்கம்..

          உண்மையில் உங்களது மேற்கண்ட வசனத்தைக் கண்டு அதிர்ந்து விட்டேன்.
          உங்களை மத அடிப்படைவாதி என்று கூறிக்கொள்ள உங்களால் முடிகிற போது , மற்றொரு விசயத்தையும் நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று பொருள். அதாவது ஆர்.எஸ்.எஸ். , சங் பரிவார், ராம்சேனா,சிவசேனா, வி.எச்ஹ்.பி , இந்து முண்ணனி போன்ற மத அடிப்படைவாதிகள் குஜராத் தொடங்கி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் நீங்கள் அங்கீகரிப்பது போன்றதாகும். உங்கள் மத அடிப்படைவாதம் எப்படி இஸ்லாமிய நம்பிக்கையில் தொடங்குகிறதோ அதே போல் தான் அவர்களது மத அடிப்படைவாதமும் இந்து நம்பிக்கையில் தொடங்குகிறது. உங்கள் அடிப்படைவாதம் சரி என்று நீங்களே கூறிக் கொள்கையில் அவர்களது அடிப்படைவாதம் தவறு என்று எவ்வாறு உங்களால் கூற முடியும் ?.

          உங்கள் மத நம்பிக்கையால் எங்காவது மக்கள் படும் கஸ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறதா ?..
          கம்யூனிசத்தினால் விடுதலை பெற்றோர் பல கோடி. உங்கள் மதம் உங்களுக்கு பொருளாதார விடுதலைக்கு என்றாவது வழிகோலுகிறதா ?..

          மதத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முன் ”நமது சமூகத்திற்கு என்ன வேண்டும் ?.. அதற்கு மதம் சரியான தீர்வா ?… இல்லை கம்யூனிசம் சரியான தீர்வா? “ என்று சிந்தித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

          சரியான் முடிவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

          தோழமையுடன்
          செங்கொடி மருது.

        • அன்புள்ள தோழர் ஹைதர் அலி,

          நீங்கள் இங்கே கூறியிருப்பது ஏட்டிக்கு போட்டி என்ற முறையில்தான் என்பது நம்மிருவருக்கும் தெரியும். மதம் குறித்த பிரச்சினைகளில் நீங்கள் சற்று உணர்ச்சிவசப்படுபவர் போல மற்றவர்களுக்கு, சில தோழர்களுக்கு தெரியலாம். நாங்கள் அப்படி கருதவில்லை. உங்களை மதவாதி போல நினைத்துக் கொண்டு சில தோழர்கள் விவாதிக்கிறார்கள். அந்த அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

          நீங்கள் குறிப்பிட்ட வகாபியிசத்துக்கு புரவலராக இருப்பது சவுதி ஷேக்குகள்தான். கூடவே அமெரிக்க அடிமைகளாவும், சொந்த நாட்டு மக்களை சுரண்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். கம்யூனிசம்தான் அரபு மக்களுக்கு நண்பனாக இருப்பதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் வல்லமையையும் கொண்டிருக்கிறது.

          இன்றைய இசுலாமிய பெரும்பான்மை மக்கள் என்பவர்கள் வர்க்கம் என்ற முறையில் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சமூக விடுதலை என்பது நாம் வர்க்கம் என்ற முறையில் ஒன்று சேர்வதிலேயே அடங்கியிருக்கிறது. அந்த இணக்கத்தில்தான் நீங்கள் வினவோடு நட்போடு தோழமையோடு இருக்கிறீர்கள்.

          எனவே நீங்கள் என்ன சொன்னாலும் உங்களை தோழராக மாற்றும் முயற்சியிலிருந்து நீங்களோ, நாங்களோ பின்வாங்கமுடியாது. அது சமூக நலனுக்குகா நாம் செய்யும்முயற்சி. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இசுலாமியத்திருமணத்தில் கம்யூனிச அடையாளங்களோடு நிகழ்வு நடைபெறுகிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்பது உங்களது மனசாட்சிக்கு தெரியும். மற்றபடி இந்த பொருள் குறித்து வினவில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

      • காட்டரபி. அஹ்லன் அஹ்லன்(வருக வருக) ////////////////கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை//////////////// இது யாருக்கு பொருந்துமுன்னு பாப்பமா /////இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மணமகளின் தந்தை காரைக்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நகரச் செயலாளர்./// சரியாக சொன்னிர்கள் எனக்கும் இதில் மற்று கருத்தில்லை ஆனால் இப்போழுது எந்த பொறுப்பிலும் இல்லை (தேவைப்பட்டால் அவருடைய கைத்தொலைபேசி நம்பர் தர தாயர்) ////////////அம்மண்டபத்தில் செங்கொடிகள் பறந்ததும், மகஇக பாடல்கள் ஒலிப்பரப்பட்டதும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதில்லை, வர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்ற வாசகம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது என்பதும் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,பகத்சிங் ஆகியோரின் படங்களும், வைக்கப்பட்டிருந்தன என்பதும்/////// உண்மையிலும் உண்மை ////////ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும்,/////// இப்பதான் மக பொய்யனாக அவதாரம் எடுக்குறீக உண்மையில் என்ன நடந்தது ஏன்றால் நம்ம அப்பாசு இருக்கார்ல அப்பாசு அவரு கரைக்குடி காரரு என்பதினால் சிவகங்கை மவட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவரும் என் நண்பருமான அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சவூதியல இருந்து நம்ம அப்பாசு போன் பொட்டு என்னுடைய மகளுக்கு தவ்ஹீத் முறைப்படி திருமணம் நடக்கவிருக்கிறது அதானல் உங்களின் தவ்ஹீத் மண பதிவேடு புத்தகத்தை எடுத்துட்டு போங்க அதில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் நம்ம அப்துல் ரஹ்மான் அத நம்பிகீனு புத்தகத்த தூக்கி கிட்டு வந்தூட்டர் வந்து பாத்தவுடனே ஆக இது செவப்பு கொடியா கீது அப்ப இது வேற கலியாணம் எங்க புஸ்தாகத்துல பதிய முடியாதுன்னு சொல்லிட்டு கேளம்பி வந்துட்டாங்க இதாப்பு உண்மை //////பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே.//////// பந்திக்கி முன்னாடியை கேளம்பி போயிட்டாங்க அதானல தான் நீங்க சண்டையில்லாம அமைதியா பிரியாணி சப்பிட்டிருக்கியா அவங்க கேளம்பி போன பிறகு தான் சண்டையிம் ஒஞ்சிருக்கு /////////////////திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை///////////////// திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக எந்த முசுலீமும் நம்புறதில்லை குர் ஆனிலையும் இல்லை இது நம்ம டி விஜய ரஜேந்தர் படத்துல வர்ர பாட்டு (கால்யணந்தாம் சொர்க்கத்துல நிச்சயிக்கபடுதாம் பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப் படுதாம்) அவரு மக கலியணத்துல கொண்டு பொயி போர்டு வையுங்க பொருத்தமாக இருக்கும். அப்புறம் நம்ம டி ரஜேந்தர் மாதிரி சொர்க்கம். வர்க்கம். தர்க்கம் அப்புடியின்னு அடுக்கு மொழி வசனத்த யூஸ் பன்னி போர்டு வச்சுட்ட அது முசுலிம்களின் நம்பிக்கை அயிடுமா? ஒரு நேர்மையான பத்திரிக்கையாக இருந்தால் தள்ளு முள்ளு நடந்ததை எழுதியிருக்க வேண்டும் மணமகனிடம் தவ்ஹீத் ஜமாத்தார்கள் தாவா செய்து விட்டு வெளியேறி போனதை எழுதியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாற்றமாக (தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர், அக்:2010 பு.ஜ. பாக்கம் 17)திட்டி விட்டு சென்றவர்களை வாழ்த்திவிட்டு சென்றதாக எழுதியாது உண்மையா?

        • ஹைதர்,
          கீ பல ஹால். உங்களது பின்னூட்டங்களிலிருந்து உங்களது வயிறு எரிகிறது என்பது தெளிவாகிறது. இது வினவுக்கு தெரியவில்லை என்பதுதான் மர்மமாக உள்ளது.
          சரி விஷயத்திற்கு வருவோம். சவூதியில் இருக்கும் அப்பாசு புதுகையில் இருக்கும் ரஹ்மானுக்கு போனில் விபரத்தைச் சொன்னதாகவே இருக்கட்டும். ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பாகவே தவ்ஹீத் ஜமாத்தினர் மணமகனை அழைத்து சுமார் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணை செய்திருக்கின்றனர். அதில் மணமகன் தப்பித்தவறிக் கூட அல்லா இருக்கிறான் என்று பொருள்படும்படி எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கவில்லை. அதுமட்டுமல்ல அல்லா இருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு, திருமணத்திற்கு இக்கேள்வி அவசியமா எனப் பதிலுரைத்திருக்கிறார். விசாரணை முடிந்தவுடன் உங்களருமை நண்பர் என்ன செய்திருக்க வேண்டும், சவூதியில் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் அப்பாசுக்கு போன் மூலம் இதனைத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு அப்பாசு என்ன செய்திருக்க வேண்டும் உள்ளூர் ஜமாத்தினை தொடர்புகொண்டு இந்தத் திருமணத்தில் எனக்குச் சம்மதமில்லை என்பதை விளக்கியிருக்க வேண்டும். குறுக்கு விசாரணையின்போது ரஹ்மான் தூங்கிட்டார்னு நீங்கள் அடம்பிடிக்கலாம். இருந்தபோதிலும் மண்டபத்தைப் பார்த்த பிறகாவது அப்பாசை தொடர்புகொண்டாரான்னு பாத்தாஅதுவும் இல்லை. திருமணத்தில் கலந்தும்கொண்டுவிட்டு, சண்டையும்போட்டுவிட்டு,பந்தியில் கையையும் நனைத்துவிட்டு,போததுக்கு ஏப்பமுமிட்டுவிட்டு, பிறகு கேட்டா, திருமணமா!அப்படியா!எங்களுக்கு தெரியாதே!நாங்க அலாவுதீனின் அற்புத விளக்கென்னு நெனெச்சில்ல உள்ளார போனோம்னு சொன்னா, கேக்குறவன் கேனையன்! பாத்தவன் குருடனா!

        • //நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி//

          ஆயாசமாக இருக்கிறது.

        • ////ஆயாசமாக இருக்கிறது/// ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கதீங்க என்னையே வஹாபின்னு கண்டுபிடிச்சு முதன் முதலில் பட்டம் கொடுத்ததே நீங்கதான் ஆதாரம் வேனுமா? இதோ /// தீவிர வஹாபியான உங்களை இப்பிரச்சினையில் குரானை பின்பற்ற தடுப்பது எது?//// சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்! என்கிற தலைப்புல விவாதிக்கமொது ஒங்களுக்கு ஆயாசமாக வரலையே ஏன்?

        • அப்போ நீங்க வஹாபியில்லையா? நானாத்தான் ஒங்கள வஹாபியாக்கிட்டேனா?

        • ////அப்போ நீங்க வஹாபியில்லையா? நானாத்தான் ஒங்கள வஹாபியாக்கிட்டேனா?///நீங்க தான் கண்டுபிடிச்சீங்க தவிர நீங்க என்னை வஹாபியாக்கவில்லை

      • என்னதான் வினவு பொய்யை உண்மையாக்க நினைத்தாலும் முடியாது. இந்த ஒரு கட்டுரையிலிருந்தே உங்களோட அனைத்து கட்டுரைகளும் பொய்யும் புளுகு மூட்டயுமாதான் இருக்க கூடும்.

        • இந்நிகழ்சியை பொய்யும் புழுகுமூட்டையும் என்று கூறும் அஜ்மல் அவர்களே. இந்ந நிகழ்சி உண்மை என்று நாங்கள் உங்களுக்கு எந்த வகையில் நிறுபிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

    • உங்கள்து இல்லங்களிலோ அல்லது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலோ பச்சைக்கொடி பறக்க விடுகிறீர்களோ இல்லையோ, செவப்புக் கொடியை பறக்க விடுவீர்களா! இத்திருமணத்தில் செவப்புக்கொடி பறந்ததே ஒரு மாற்றம்தான்

      • எங்களுடைய இல்லங்களில் பச்சைக்கொடி பறக்க விடுவதில்லை

  3. திய ஜனநாயகம் என்ற மாத இதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி தவறான செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியி்ட்டது. வெளியான செய்தி தவறானது மேலும் சாத்தியமில்லாதது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சம்பந்தபட்ட இதழுக்கு பின் வரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மதிப்பிற்குரிய புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆசிரியர் சண்முகம் அவர்களுக்கு,

    ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!

    கடந்த அக்டோபர் 2010 இதழின் 17 ஆம் பக்கத்தில் புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவரின் மகளுக்கு புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டு திருமணம் நடந்ததாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள்.

    ஆனால் மணமகளின தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களில் அவர் சாதாரண கிளைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.அதுமட்டுமின்றி தற்போது மாநில துணைத் தலைவர்களாக பதவி வகிக்கும் எம்.ஐ.சுலைமான் மற்றும் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு திருமணமாகும் வயதில் பிள்ளைகளும் இல்லை. மேலும் இத்திருமணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    எனவே இதையே மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு: இஸ்லாமிய திருமணம் என்பது மணமக்களுக்கு இரண்டு சாட்சிகளுடன் மணமகளின் தந்தை அல்லது பொறுப்பாளர் திருமண ஒப்பந்தம் செய்து கொடுப்பதே இஸ்லாமிய திருமணம்.

    இதில் மாலைகள் கூட இருக்காது.இதைத்தவிர இதில் எந்த வித சடங்குகள் , சம்பரதாயங்கள் , பாடல்கள் , வரதட்சணை ,பெண் வீட்டார்களிடமிருந்து எந்த விதமான கையூட்டலும் பெறாமலும் புரோகிதர்கள் துணையின்றி தனித்தன்மையுடன் நடைபெறும் திருமணமே இஸ்லாமிய திருமணம்.

    இதையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் அதைச் சார்ந்தவர்களும் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர் குறிப்பிடுகிறோம்.

    இப்படிக்கு

    ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
    மாநில துணைத் தலைவர்

    • மணமகளின் தந்தை அப்பாஸ் அவர்கள் தவ்ஹீது ஜமாத் அமைப்பின் நகரத்தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர். இன்றும் அவ்வமைபில் உள்ளவர்தாம். தமது சொந்த செலவில் அமைப்பிற்காக நிறைய செலவு செய்பவரும்கூட. அவருக்கும் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ராஜவம்சமான தவ்ஹீது ஜமாத் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கூறியிருப்பது உண்மையாக வேண்டும் என்பதுதான் எம்போன்றவரின் விருப்பம்.
      அப்பாஸ் அவர்கள் இவ்வறிக்கையை படித்தபிறகாவது புரிந்துகொள்வார் என எதிர்பார்போம்.
      திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது உண்மை.
      அவர்களின் தில்லுமுல்லுகளுக்கு ராஜவம்சத்தின் அறிக்கை ஒரு சான்று.

      • /////மணமகளின் தந்தை அப்பாஸ் அவர்கள் தவ்ஹீது ஜமாத் அமைப்பின் நகரத்தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர். இன்றும் அவ்வமைபில் உள்ளவர்தாம்.////ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லதீர்கள் மணமகளின் தந்தை சவூதியில் தான் வேலை செய்கிறார் அதுவும் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலே அவர் இன்று தவ்ஹீத் ஜமாத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை (அவருடைய போன் வேண்டுமா? தர தயாரய் இருக்கிறேன்) மற்றபடி இப்போழுது டுட்டி டயம் 5 மணிக்கி(இந்தியா டயம் 7 மணிக்கி) வேல முடியும் ஒக்கந்து பேசுவேம்

        • எங்கே நந்தனை கணவில்லை ஜொதியில் கலந்து விட்டாருன்னு நெனைக்கிறேன் நந்தா ரெடியா

        • #ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் #
          ஹைதர்அலி அவர்களே! நீங்கள் சிந்திப்பவர்தானே! நான் அப்பாஸ் அவர்கள் காரைக்குடியில் இருக்கிறார் என் சொல்லவில்லையே. தவ்ஹீத் அமைப்பில் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவர் சவதியில் இருந்தால் அவ் வமைப்பில் இல்லை என்று பொருளாகிவிடுமா? ஒரு வேளை தவ்ஹீத் ஜமாத் தேச பக்திமிக்க அமைப்போ? வெளிநாட்டிலிருப்பவர்களை அமைப்பைவிட்டு விலக்கிவிடவார்களோ?
          அவசரக்காரனுக்கு…….

        • திருவாளர் ஹைதர்,
          மணமகன் அப்பாஸின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்

        • @ ஹைதர் அலி
          ///எங்கே நந்தனை கணவில்லை ஜொதியில் கலந்து விட்டாருன்னு நெனைக்கிறேன்////

          நந்தன் – ஜோதியில் கலந்தது…. சிதம்பரத்தில் நந்தனை பார்பனபிண்டங்கள் எரித்ததையா இப்படி உவமையாக கூறியுள்ளீர்கள்?

          எப்படி உங்களால் அதை பகடி செய்ய முடிகிறது? அவ்வளவு வக்கிரம் உங்கள் உள்மனதில் இருக்கிறதா? இல்லையெனில் இதற்கு மன்னிப்பு கேட்கவும்!

          இதே போல பார்பன பாசிஸ்டுகளுக்கு குஜராத்-பெஸ்ட்பேக்கரியில் எரித்து சுடப்பட்டதும் வெறும் ரொட்டி துண்டுகளாக தெரிந்தால், அதை வைத்து பகடி செய்தால் அதையும் ஏற்கும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

          தோழமையுடன்,

          அக்காகி.

        • நந்தன் அவர்களே. ////ஹைதர்அலி அவர்களே! நீங்கள் சிந்திப்பவர்தானே! நான் அப்பாஸ் அவர்கள் காரைக்குடியில் இருக்கிறார் என் சொல்லவில்லையே. தவ்ஹீத் அமைப்பில் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவர் சவதியில் இருந்தால் அவ் வமைப்பில் இல்லை என்று பொருளாகிவிடுமா?//// அய்யா நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அவர் சவூதியில் இருப்பதால் அதுவும் நான் வேலை செய்யும் ஊரிலே இருப்பதால் அவரை சந்தித்து அவரே நான் தவ்ஹீத் உறுப்பினர் இல்லை என்பதை போனில் அறிவிப்பார் அதற்கான சாத்தியம் இருக்கிறது தயார என்று உங்களுக்கு சவால் விடத்தான் அப்படி சுருக்கமாக சவூதியில் தான் இருக்கிறார் என்று சொன்னேன் மணமகளும் மணமகளும் தங்களது நிலையை விளக்கியது போல் மணமகளின் தந்தையை நான் இன்னும் தவ்ஹீத் ஜமாத்தில் தான் இருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல வைத்து விடுங்கள் பார்ப்போம் இது ஒங்களுக்கான சவால்

        • காட்டரபி
          ///திருவாளர் ஹைதர்,
          மணமகன் அப்பாஸின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்//// அய்யா டுப்ளிகேட் காட்டரபி ஒரிஜினல் காட்டரபி மொகர எப்புடியிருக்கும் ந ஒனக்கு சொல்லி தரேன் 2ம் நம்பர் பின்னூட்டம் இருக்குல அதுக்கு பதிலு போட்டுறுக்காரு போயி பாரு ஒரிஜினல் காட்டரபி போன் நம்பர் கேட்டால் கொடுக்க தயார்

        • அண்ணே அக்காவி ////நந்தன் – ஜோதியில் கலந்தது…. சிதம்பரத்தில் நந்தனை பார்பனபிண்டங்கள் எரித்ததையா இப்படி உவமையாக கூறியுள்ளீர்கள்?
          எப்படி உங்களால் அதை பகடி செய்ய முடிகிறது? அவ்வளவு வக்கிரம் உங்கள் உள்மனதில் இருக்கிறதா?//// சத்தியமாக ஒரு வக்கிரமும் கேடயாதுண்ணே எப்படி எரித்துவிட்டு ஜொதியில் கலந்து விட்டார் என்று பொய் சொல்லப்பட்டதோ அது போல இந்த நந்தன் அப்பாசு தவ்ஹீத் ஜமாத்தில் இன்னும் இருக்கிறார் என்று சொல்வது பொய் அதை தான் உவமையாக சொன்னேன்

  4. புரட்சிகர அமைப்புகளில் பணியாற்றும் தோழர்கள் ஒரு மாற்று திருமணமுறையை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தும் வருகின்றனர். தன்னலத்தை பின்னுக்குத் தள்ளி பொது நலனுக்காக வாழும் இவர்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையின் மூலம் அனைத்து மதத்தினர் மத்தியிலும் பிற யாரைக்காட்டிலும் சிறந்தவர்களாகத் திகழ்கின்றனர்.

    மாற்று திருமண வடிவம் என்ற நிகழ்வை மய்யமாக வைத்தே “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது? என்ற பெட்டிச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிது என்றே கருதுகிறேன். மற்றபடி அது பொய் இது பொய் என்று விவாதம் செய்து மய்யக் கருத்திலிருந்து – அதாவது மாற்று திருமண வடிவம் பற்றிய கருத்திலிருந்து விவாத்தை திசை திருப்ப முயல வேண்டாம். எது சிறந்த திருமண முறை என்பது குறித்து அறிய ”உலகின் அழகிய மணமக்கள்” என்ற கட்டுரையில் எனது பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

    ஊரான்.

  5. மணமகளின் தந்தை டி.என்.டி.‍_ன் பொறுப்பாளர் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால்,பின்னூட்டமிடுபவர்கள் அதனால் மட்டும் கோபப்படுவதாகத் தெரியவில்லை.எனவே கோபத்திற்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிடவேண்டும். அதுவே, ஒரு அவசியமான விவாதத்திற்கு வழிவகுக்கும். திருமணம் வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது, பற்றி நண்பர்கள் கருத்துச் சொல்லலாம். பல இடங்களில் பு.ஜ செய்தி நகல் எடுத்துக் கொடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.இஸ்லாமிய நண்பர்களிடம் ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறோம். குருசாமிமயில்வாகனன்.

    • ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறோம்

      —————–

      அதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்..

  6. இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்! | வினவு!…

    மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?…

  7. I am not a indian,therefore i dont know more about this matter but,
    சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும். இந்த ஒருதிருமணத்தைப் பார்த்துவிட்டு முஸ்லிம் மக்களிடம் கம்யூனிசம் பரவுவதுஎன்பது சிருபிள்ளைத்தனமானது ஏனெனில் இது இன்டனெட் யுகம். சற்று இன்டனெட்டில் உலன்றுபாருங்கள் இதைப்போன்று ஆயிரம் திருமணங்கள், திருமணத் தம்பதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேயிருக்கிறார்கள் (ஒவ்வோருநாளும்). இதையெல்லாம் அலட்டிக்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு நேரமில்லை.

    • ///சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல ////

      இஸ்லாமிய முறைப்படி நடக்காத இஸ்லாமியர்களது திருமணத்திலுமா ?..

      அல்லா கோவிச்சுக்கப் போறாரு சாரு ..

    • ஆனாலும், தவ்ஹீத் ஜமாத்தினர் தம் அமைப்பு சாராத பிற இசுலாமியர்களின் திருமணங்களில்கூட ‘ஹராமான’ திருமணம் என்று கலந்துகொள்வதில்லை.

  8. புரட்சி என்றால் என்ன? ஆயஇரம் பொய் சொல்லி ஒரு கல்யானம். அவற்றில் சில பொய்கள் இவை. பொய் சொல்வதுதான் புரட்சியா?

    • இதோ வந்துட்டாருடா .. வாங்க கோயபல்சின் வாரிசே ..

      ஏதோ இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமணத்தை இங்கே புரட்டி கம்யூனிஸ முறைத் திருமணம் என்று பொய் கூறியது போல் தான் வாதாட வருகின்றனர் இந்த பார்ப்பனக் கைக்கூலிகள்.

      ஒரு சில தகவல்கள் தவறாக கிடைத்திருக்க அதை தோழர்கள் பிரசுரித்ததால் அதை இவ்வாறு பொய் என்று கூறி ஆதாயம் தேடத் திரியும் கும்பலுக்கு பதில் ஒன்று தான்.

      நீங்கள் எவ்வளவு குரைத்தாலும் உண்மை மறைக்கப்பட முடியாதது. ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

      தவறான தகவல்கள் சிறிய பெட்டிச்செய்தியில் அதிக சிரத்தை எடுக்காத காரணத்தால் வந்து விட (தவறுகள் கண்டிக்கத் தக்கவையே) அதை பொய் சொல்கிறார்கள் என்று மாற்றிக் கூறும் முட்டாள்களே உங்களிடம் கேட்க விரும்பும் ஒன்று தான்.

      இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தோழர்கள் இருவர் மணவாழ்வில் புரட்சிகர முறையில் இணைந்ததைப் பற்றி ஒரு கருத்து வெங்காயமும் சொல்லாதது ஏன்?.. மணமக்களின் தந்தையின் பதவி பற்றி தவறான செய்தி வெளியானதற்கு குதிக்கின்ற நீங்கள்.. சரியான முறைப்படி வரதட்சணை வாங்காமல் நடந்த இந்தத் திருமணத்தை எதிர்ப்பது ஏன் ?..
      (இஸ்லாமியத் திருமணங்கள் அனைத்தும் வரதட்சனை இல்லாமல் நடக்கின்றன என்று ஒரு மகா பொய்யை எந்த முட்டாளும் இங்கு மொழியாது என்று நம்புகிறேன்)

      • நாங்கள் சொல்வதுதா சரி என்று மார் தட்டும் ஈங்கள் சில பொய்களை ஏன் மூடி ம்றைக்கிறீர்கலள்? ‘\’[ஒரு மூட்டை பொய்களுக்கு ஒரு பொய் பதம்.\]என்பது தெரியாதா உங்களுக்கு?

  9. மகிழ்ச்சிக்குறிய மாற்றம்..

    வரவேற்கத்தக்கது..

    இது போல நிறைய மாற்றம் நிகழ வாழ்த்துகள்.

  10. நல்ல சிந்தனை விதைத்த வினவுக்கு நன்றி,

    “மதம் ஒரு அபின் “என்று சொன்ன காரல்மார்க்ஸ் ய் நினைத்து பார்க்கிறேன்.

    முற்ப்போக்கு எண்ணத்தோடு இல்லறம் கண்ட மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    …மெய்தேடி.

  11. […] This post was mentioned on Twitter by karthick, சங்கமம். சங்கமம் said: இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!: மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திர… http://bit.ly/a8mC1Y […]

  12. மணமேல்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரதட்சணை மிக மிக அதிகம். 7 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்கம், ஒரு வீடு என்னும் அளவில் தற்பொழுது இருக்கின்றது. தவ்ஹீது அமைப்பு உறுப்பினர் வீட்டுக் கல்யாணங்கள் சில தவிர மற்ற அனைத்துத் திருமணங்களிலும் பெரும் அளவிலான வரதட்சணை கொடுக்கப்படும். அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் நடைபெற்ற திருமணத்தில், வரதட்சணை இல்லாததை முதலில் வரவேற்போம். தவ்ஹீது அமைப்பினரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.

    மணமேல்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்துத் திருமணங்களும் சுன்னத் ஜமாஅத் அமைப்பினரின் திருமணப் பதிவு புத்தகத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகின்றன, தவ்ஹீது அமைப்பு உறுப்பினர்களின் திருமணங்கள் உட்பட. அப்பகுதிகளில் தவ்ஹீது அமைப்பினர் திருமணப் பதிவு புத்தகம் கூட வைத்துக்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய பழமைவாதிகள் நிறைந்திருக்கும் பகுதியில், இஸ்லாமிய சடங்குகளை பின்பற்றாமல் நடைபெற்ற திருமணத்திற்கு வாழ்த்துகள்.

  13. .சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும். இந்த ஒருதிருமணத்தைப் பார்த்துவிட்டு முஸ்லிம் மக்களிடம் கம்யூனிசம் பரவுவதுஎன்பது சிருபிள்ளைத்தனமானது .

    • @@@@@@@@@@
      சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும்.
      @@@@@@@@@@@@@@@@

      இதிலேருந்து எனக்கு புரிவது ஒரு விசயம்தான், குறிப்பிட்ட இந்த திருமணம் இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருந்தாலும், இஸ்லாமிய முறைப்படி நடக்காததால் அது அவர்கள் முஸ்லிம்களே அல்ல. மாற்று மதத்தினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதை போலத்தான் ஜமாத்து நண்பர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

      ஆக நாட்டாமை மதத்திலேருந்தே தள்ளி வச்சிட்டார்!

      • ////இதிலேருந்து எனக்கு புரிவது ஒரு விசயம்தான், குறிப்பிட்ட இந்த திருமணம் இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருந்தாலும், இஸ்லாமிய முறைப்படி நடக்காததால் அது அவர்கள் முஸ்லிம்களே அல்ல. மாற்று மதத்தினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதை போலத்தான் ஜமாத்து நண்பர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.
        ஆக நாட்டாமை மதத்திலேருந்தே தள்ளி வச்சிட்டார்!//// மணமகன் அலாவுதீன் மாதிரி நடிக்கமா உண்மையை பேசுகிற நம்ம கலீல் ரஹ்மான் என்கிற சொங்கொடியின் யாரு முசுலிமாக இருக்க முடியும் என்பதற்கான அழகான விளக்கம்
        மனதளவில் எப்போது நான் கடவுள் இல்லை என உணர்ந்தேனோ அக்கணமே நான் மதங்களை விட்டு வெளியேறிவிட்டேன் என்பதல்லவா உண்மை. நான் என்பது என் சான்றிதழ்களில் இருக்கும் என் பெயரோ மதமோ அல்ல. அவைகள் வெறும் அடையாளம் மட்டுமே. என்ன செய்கிறேன்?, எப்படி செயல்படுகிறேன்?, என்னவிதமாய் சிந்திக்கிறேன்? என்பவைகள் மட்டுமே நான் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் நான் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முயற்சித்துக்கொண்டிருப்பவன். நான் பிறந்த மதம் உட்பட எந்த மதத்தின் சாயலும் என்னுடைய செயலில் தென்பட்டுவிடாதிருக்க மிகுந்த முனைப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். மட்டுமன்றி என்னுடைய செயலில் சாரமற்று மதத்தின் சாய்ம் ஒட்டிக்கொண்டிருப்பதாக யாரேனும் சுட்டிக்காட்டினால் அதை மாற்றிக்கொள்ள அக்கணம் முதல் ஆயத்தமாயிருக்கிறேன்.
        மதம் சார்ந்த எந்த சலுகைகளும் எனக்கு அவசியமில்லை, அதை ஏற்றுக்கொள்ள நான் சித்தமாயில்லை என்பதை வெளிப்படுத்த ஒரு சிறிய எடுத்துக்காட்டு தரலாம் என எண்ணுகிறேன். இங்கு சௌதியில் நோன்பு மாதம் முழுவதும் முஸ்லீம்களுக்கு ஆறு மணிநேர வேலையும் ஏனையோருக்கு எட்டுமணிநேர வேலையும் என்பது விதி. ஆனால் நான் ஏனையோரைப்போல எட்டுமணிநேரம் வேலை பார்த்து வருகிறேன் என்பதும் அந்த இரண்டு மணி நேர வேலைக்கு ஓவர்டைம் வேண்டாம் என எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
        இதன் மூலம் என் பெயரில் மதம் ஒட்டியிருப்பதற்கு நடைமுறை சார்ந்த காரணத்தைத் தவிர சலுகைகளோ பலன்களோ காரணமல்ல என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குப்பிறகும் தகுந்த காரணமின்றி நான் சலுகைகளுக்காகவோ, பலன்களுக்காகவோ தான் பெயர் மாற்றாமலிருக்கிறேன் எனக்கூறுவோரை அலட்சியம் செய்கிறேன்.
        என் செயல்பாடுகளில் மதம் இல்லை என ஐயமற தெரிந்த பின்னும் பெயர் குறித்து கேள்வி எழுப்புபவர்களின் அரசியல் என்ன?

    • ஆனாலும், தவ்ஹீத் ஜமாத்தினர் தம் அமைப்பு சாராத பிற இசுலாமியர்களின் திருமணங்களில்கூட ‘ஹராமான’ திருமணம் என்று கலந்துகொள்வதில்லையே நல்லவரே!

  14. எல்லோருமே தயவு செய்து உண்மையான இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் விளக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு விவாதிப்பது நல்லது. ஒரு சிறு உதாரணம், உங்கள் திருமணங்களை எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கனமாக எளிமையாக நடத்த முடியுமோ அவ்வாறே நடத்துங்கள் என்பதுதான் நபிமொழி . இஸ்லாமிய மக்கள் வரதட்சணை,ஆடம்பரம் என்று நபிமொழிக்கு மாறாகத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். கம்யுனிஸ்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய புரட்சியை இஸ்லாமிய மதமும் ,நபிகளாரும் செய்திருக்கிறார்கள். நவீன காலத்தில் கூட முஸ்லிம் மக்களிடம் உள்ள இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு சில மூட நம்பிக்கைகளை களைவதில் சமுதாய இயக்கங்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சணை இல்லாத திருமணங்களை ஆயிரக்கணக்கில் நடத்திக்கொண்டுதான் உள்ளது. மேற்படி திருமணத்தை இரண்டு வீட்டாரும் முழு விருப்பத்தோடுதான் செய்தார்கள் என்றால் இதில் எந்த ஜமாத்தோ,தனி மனிதரோ தலையிட முடியாது.வேண்டும் என்றால் இது தொடர்பான மத ஆலோசனைகள் மட்டுமே செய்ய முடியும். புரட்சி,புரட்சி,புரட்சி என்பவர்கள் தயவு செய்து இஸ்லாமிய வரலாற்றையும்,நபிகளின் வாழ்வையும் முழுமையாக படிக்கவும். வினவில் பல கட்டுரைகள் இப்படிதான் மத எதிர்ப்பு என்கிற போர்வையில் அர்த்தமற்றதாகவே வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரோ,அல்லது தமிழகத்தில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களோ உடனடியாக வினாவை சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகளை விளக்குங்கள்,அல்லது அது சம்பந்தமான புத்தகங்களையாவது கொடுங்கள். இனிமேலாவது இஸ்லாமிய தொடர்புள்ள கட்டுரைகள் எழுதும் பொது பயன்படும்.

  15. குவைத் தமிழன் உள்ளிட்ட இஸ்லாமிய நண்பர்களுக்கு,

    ”உண்மையான இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும்” ”தயவு செய்து இஸ்லாமிய வரலாற்றையும்,நபிகளின் வாழ்வையும் முழுமையாக படிக்கவும். வினவில் பல கட்டுரைகள் இப்படிதான் மத எதிர்ப்பு என்கிற போர்வையில் அர்த்தமற்றதாகவே வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரோ,அல்லது தமிழகத்தில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களோ உடனடியாக வினாவை சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகளை விளக்குங்கள்,அல்லது அது சம்பந்தமான புத்தகங்களையாவது கொடுங்கள். இனிமேலாவது இஸ்லாமிய தொடர்புள்ள கட்டுரைகள் எழுதும் பொது பயன்படும்” என்ற உங்களைப்போன்றோரின் ஆதங்கம் புரிகிறது.

    மாற்று திருமண வடிவங்களை பேசுவதிலும் நடைமுறைப் படத்தவதிலும் இஸ்லாமிய மத எதிர்ப்பு எங்கே வருகிறது. திருமண வடிவங்களில் எது சிறந்தது என்பதே விவாதத்திற்குரியது.

    1.விதி விலக்காக ஒரு சில திருமணங்களைத்தவிர ஆகப் பெரும்பாலான திருமணங்கள் ”சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை, அவை வர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன” என்பதே நடைமுறை எதார்த்தம். இந்த எதார்த்த உண்மை புரட்சிகரத் திருமணங்களுக்கு மட்டமல்ல எல்லாத் திருமணங்களுக்கும் பொருந்தும்.

    2. மணமகனின் அல்லது மணமகளின் உருவத் தோற்ற்ம், அழகு குறித்த அம்சங்களைப் பார்ப்பதை விடுத்து மணமக்கள் உழைப்பை நேசிக்கிறார்களா என்பதே மணப்பொருத்தத்தில் மிகச்சிறந்த மணப்பொருத்தம் என புரட்சிகரத் திருமணமுறை வலியுறுத்துகிறது. யார் உழைப்பை நேசிக்கிறார்களோ அவர்களே நடை முறையில் பிறரை மதிப்பவர்களாக,
    நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். இது வர்க்க சிந்தனையிலிருந்து வருகிறதேயொழிய மதக்கோட்பாடுகளிலிருந்து எழுவதில்லை.

    3. வரதட்சணை, சீர், மொய் உள்ளிட்ட நடவடிக்கைகள் உயரிய மனித உறவை வெறும் பண உறவாகச் சிறுமைபப்படுத்தும் கயமைத் தனத்தை ஒழித்துக்கட்டுவதில் புரட்சிகரத் திருமண முறை முன்னோடியாகத் திகழ்கிறது.

    4. திருமணத்தில் தாலி உள்ளிட்ட சடங்குகள், சம்பிரதாயங்களை கடை பிடித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும் தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்தப்பிரச்சனையையும் தீர்க்க உதவுவதில்லை என்பதே எதார்த்தம். அப்படி இருக்க எதற்காக இந்தச் சடங்குகள் (அந்தந்த மதத்திற்கு ஏற்ப) சம்பிரதாயங்கள்?
    இதில் பணவிரயம் என்பது மட்டுமல்ல பிரச்சனை; வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு, பிரச்சனைகளுக்கான உண்மைக்காரணத்தைத் கண்டறியும் வழிமுறைகளை பின்பற்றவும் அவைகளைக் களையவும் தடையாக நிற்கின்றனவே. அதனாலேயே சடங்குகள், சம்பிரதாயங்களை தவிர்க்கக்கோருகிறது புரட்சிகரத் திருமண முறை.

    5. வாழ்க்கையில் இருவருக்குமிடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்வதும் விட்டுக் கொடுக்கக்கூடிய வற்றில் விட்டுக் கொடுத்து வாழ்வதும் என்கிற இரு பாலருக்குமான சம உரிமையை வலியுறுத்துகிறது புரட்சிகரத் திருமணம். தீர்க்கமுடியாத அளவிற்கு முரண்பாடுகள் முற்றிவிட்டால் இருவரும் நிபந்தனைகள் ஏதுமின்றி பிரிந்து வாழவோ அல்லது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு துணையை தேடிக் கொள்ளவோ இரு பாலருக்குமான சம உரிமையைப் பேணுகிறது புரட்சிகரத் திருமண முறை.

    6. தம்பதியர் தன் குடும்பம் தன் சுற்றம் என்று வரம்பிட்டுக் கொள்ளாமல், யாருக்கு அநீதி இழைக்கபட்டாலும் அதற்காகப் போராட வேண்டும் என்ற பிறர் நலன் பேணும்
    பண்பை வலியுறுத்துகிறது புரட்சிகரத் திருமண முறை. அதனால்தான் பிற யாரைக்காட்டிலும் இத்தோழா்கள் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள். இதற்கான சான்றுகளை புரட்சிகர இயக்கங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்.

    இவ்வாரான சிறந்த அல்லது இதைவிடச் சிறந்த திருமண முறை மற்றும் வாழ்க்கை நெறிகளை வலியுறுத்தும் மார்க்கம்/பண்பு ”நடைமுறையில்” இருக்கமேயானால் இதை அன்பா்கள் ஆதாரத்துடன் வெளியிட்டால் பிற பதிவர்களுக்கு அது பயன்படுமே.

    மேலும், எது சிறந்த திருமண முறை என்பது குறித்து விவாதிக்க ”உலகின் அழகிய மணமக்கள்” என்ற கட்டுரையில் எனது பின்னூட்டத்தைப் பார்க்க மீண்டும் ஒருமுறை மீள் பதிவு செய்கிறேன்.

    ————————-
    ”புரட்சிகரத் திருமணங்கள் தேவைதானா!
    (உலகின் அழகிய மணமக்கள்! கட்டுரையின் மீதான விவாதத்தையொட்டி எழும் கேள்விகளும், அதற்கான விடைகளையும் இங்கே தொகுக்கிறேன்.)
    பதிவர்களுக்கு வணக்கம்.
    வழக்கமான திருமணத்திலிருந்து இந்தத் திருமணம் மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால், இதில் சரி தவறு என்ற அறிவு பூர்வமான விவாதத்தை நடத்துவதை விடுத்து பதிவர்கள் பொருளற்ற அல்லது தலைப்பிற்கு தொடர்பில்லாத கருத்துக்களை முன்வைப்பது, பதிவர்களை எது சரி என்று எடை போடுகின்ற ஆற்றலை வளர்ப்பதற்கு பதிலாக சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
    அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் உணர்ந்ததை மட்டுமே, சரியானது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். “People not talk about the world(reality), but about their perception” அதாவது, எதார்த்தம் என்பதை எதார்த்தமாகவே உணரும் போதுதான் எல்லோரும் ஒரே கருத்தை வந்தடைய முடியும். அந்த எதார்த்தத்தை அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு (ஜார்ஜ் தாம்சனின் கூற்றுபடி) புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை என்ற இயங்கியல் / அறியவியல் அணுகுமுறைதான் எந்த ஒரு செயல்பாட்டையும் சரியா தவறா என்பதை தீர்மானிக்க உதவும்.
    இங்கு விவாதம் என்பதே வடிவம் சார்ந்த தாக அமைந்து விட்டதால் அதனுள் நின்று கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு வர இருக்கின்ற வாழ்க்கை பிரச்சனைகள் இங்கு விவாதத்திற்கு வரவில்லை அல்லது அது தனியான பிரச்சனை. அதனால், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு பண்பாடு என்ற முறையில் இதன் வடிவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசுவது சரியாக இருக்கும்.
    திருமணத்தை ஏன் ஊர்கூட்டி நடத்த வேண்டும்? பழைய திருமண முறைகள் எல்லாம் ஊர்க்கூட்டித்தான் நடத்தப்படுகிறது. ஆனால், ஆடம்பரமும் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாத முறையில் புரட்சிகரத் திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு எளிமை என்ற விசயத்தை ஏன் சொல்லவில்லை எனில், பழைய திருமணமுறையில் நடக்கும் திருமணங்களில் கூட எளிமையுடன் நடத்தப்படுகிறது. ஆனால், சடங்கு சம்பிரதாயத்தை புறக்கணித்து நடத்தப்படுவதில்லை. காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொள்பவர்கள் கூட, “கோயில்ல வச்சி ஒரு தாலி கட்டிட்டுவது” என்ற சடங்கைச் செய்கிறார்கள். ஆகையால், ஆடம்பரம், சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றை புறக்கணித்து நடக்கிறது என்பதுதான் இந்தத் திருமணத்தின் முக்கிய அம்சம்.
    ====================================================================
    பழைய திருமணமுறைகள் எவ்வாறு நடத்தப்படுகிறது?
    முதல் பொருத்தம் கருப்பா, சிவப்பா; நெட்டையா, குட்டையா; ஊத்தப்பல்லா, நல்லப்பல்லா; சப்பை மூக்கா; மாறு கண்ணா, நல்ல கண்ணா; காது, நடை, பாவனை, குரல்….. ஆணா இருந்தா ஹாண்ட்ஸம்ப்; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்; இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது.
    இரண்டாவது வசதி; ஆணா இருந்தா என்ன வேலை, கை நிறைய சம்பளம் (குறிப்பா கவர்மெண்ட் மாப்பிள்ளையா), பொண்ணை உட்கார வச்சி சாப்பாடு போடுவானா (அதாவது, உழைக்காமல் வாழவேண்டும், உழைப்பை வெறுப்பது); சம்பளத்தோடு மேற்படி வருமானம்(கிம்பளம்) எவ்வளவு (அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா); வீடு நிலபுலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு; ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதி பார்த்து – இதனை பங்கு போட உடன் பிறந்தவர்கள் (நாத்தனார், கொழுந்தனார், மூத்தார்) இருக்கிறார்களா; சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு (நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே!) என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே, அடுத்த பொருத்தத்திற்கு செல்கின்றனர்.
    இதே போல பெண்ணைத் தேடுபவர்கள், கலரா இருக்க வேண்டும். (ஐஸ்வர்யா ராய் போல இது பையனின் எதிர்ப்பார்ப்பு) இதற்குமேல், பையனை பெற்றவர்கள் எதிர்பார்ப்புகள் தனி. மற்ற உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில். முதல் விசயமே, பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள் குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது (எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். இப்போதைக்கு வாங்குவதையும் விடுவதில்லை). முன்பெல்லாம், பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய இருக்க வேண்டும் என்று கருதினர் (மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள், காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று).
    சாதாரண வீட்டு பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது….மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.
    வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கி கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து கட்டத்தில் கூட அந்தப் பெண் உதவக் கூடாது. இதில் வேலை வேறு வேறு இடத்தில் இருந்தால் வேலையை விடக்கூடாது, மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் வேலையை விடத் தயாராக இருக்க வேண்டும்.
    அடுத்து நகை. பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா; கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? சாதாரண குடும்பத்திலே டூவீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக் கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மேடையின் அருகிலே, மணமக்களுடன் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.
    இவையேல்லாம் உறுதி செய்த பிறகுதான் ஐயரைப் பார்ப்பது, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது; ஜாதகப் பொருத்தம் முன்னப்பின்னே இருந்தாலும் மேலே சொன்ன பொருத்தங்கள் பொருந்திவிட்டால் ஜாதகப் பொருத்தத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்கு ஐயரும் துணை புரிவார்.
    ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது!
    என்ன உளவு? சாதி உறுதி செய்வது; பையன் (பீடி சிகிரேட்டு, தண்ணி, கிண்ணி, சீட்டு, பொம்பள கிம்பள இத்தியாதி இத்தியாதி) நல்லவனா கெட்டவனா, பெண் நல்லவளா (ஆண்களுடன் இயல்பாகும் பழகுவது ஒரு குற்றம் என்ற வகையில்), குறிப்பாக பெண்ணுடைய தாயார் நல்லவளா, சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா என உளவு (CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் எம்மாத்திரம்) பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகே அடுத்த படலம் தொடரும்.
    இனி பெண் பார்க்கும் படலம்; மாப்பிள்ளை பார்க்கும் படலம்;
    முதலில் நெருங்கியவர்கள் மட்டுமே சென்று பார்ப்பது. இதற்கு நாள், நேரம் அதாவது கிழக்கே போவதா, தெற்கே போவதா எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டு தான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டு இல்லாத பெண்ணோ கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா, அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கைமட்டும் நைனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ?
    அடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு சென்று பார்ப்பது. இதற்கு குறிப்பாக பிற சாதியினரை ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்தில் குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை (வாடகைக்குத் தான்) வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது! இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.
    பொருத்தம் பொருந்திவிட்டால் அடுத்து கை நனைக்கும் படலம். இதற்கு படைபலம் சற்றே கூடுதல். செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோயிலில் தேங்காய் கட்டாயம் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக (கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ) எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR (நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்) போட்டுக் கொள்வார்கள்!
    இப்போதுதான் பெண்ணை அலங்காரம் செய்து அழைத்து வருதல். இதற்கு தனி கலைஞர்களை அழைத்து வந்து அழகு படுத்தி காட்டுவது உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பொண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால் தான் இரண்டாம் படலம் தொடர்கிறது. இந்த அலங்காரமெல்லாம், படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக. விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும்.
    அடுத்து நிச்சயதார்த்தம். இதை நடத்துவது யார் என்பது இருவீட்டாரில் யார் இளிச்சவாயர் என்பதைப் பொருத்தது. நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தை காட்டவேண்டாமா, நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு!
    கல்யாணத்திற்கு நாள் குறிப்பது: இவர்களே முதலில் பஞ்சாங்கத்தைப் பார்த்து தோராயமாக நாள் தீர்மானித்துக் கொள்வார்கள். ஒரு ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR போட்டுக் கொண்டு தங்களை சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், முகூர்த்த நாள் பஞ்சாங்கப்படி மாதத்தில் மூன்றோ நான்கோ தானே பிறகு எப்படி ஒரே நாளில் பத்து திருமணங்கள் செய்ய முடியும்? மண்டபம் மட்டுமல்ல, ஐயரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக ஐயர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.
    முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோயில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.
    அடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்க போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சணம் என்று மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் யாருடைய பேருக்கு பின்னாலும் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டாலும் சாதிப் பட்டம் (கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா); கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் இவர் கல்யாணத்தில் மிஸ்ஸிங்.
    பத்திரிக்கை வீட்டுக் வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
    பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர், கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் (சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா!)
    மணப் பொண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு! பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.
    சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க, செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்த பிரச்சனை அதிகமாக வரும்.
    தாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.
    பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது (எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்) குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.
    பசிக்கு சோறுபோடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவைத் (ஐயிட்டங்கள்) தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே, அதற்காகத் தான் இவ்வளவும்.
    முன்பெல்லாம், சோறு, கத்திரிக்காய், முருங்கைக் காய் சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒருசிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.
    திருமண வைபவம்
    முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; லைட்னிங், பிரம்மாண்டமான மேடை பின்புறம். முதலில் வாயிலில் அலங்கார வளையம் அமைப்பது தொடங்கி பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனரில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்னியாக வேண்டும். ஜானவாசம் என்ற பெயரில் நடக்கும் மாப்பிளை அழைப்பிற்கு அலங்கார வண்டி ஏற்பாடு. அதற்கான நாதஸ்வரம். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது – பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ணவிளக்குகளால் பூத்து குலுங்கும் – வரவேற்பு மேடை அமைப்பது. குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகளை அத்தனையும் அள்ளி தெளித்து முடிந்தால் புறாக்களை வைத்து, வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் அலறுகிறார்கள் (பாட்டு கச்சேரிதான்).
    திருமணத்திற்கு நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த மேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது.
    மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.
    காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. இடம் கருதி இவற்றை விவரிக்கவில்லை.
    ”மொய்யில்லாமல் கல்யாணமா”, மாமன் வச்ச மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து (கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமாலும் திண்டாடுவது தனிக்கதை). ஏற்கெனவே எழுதிய மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்ப தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இதில் இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை! இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.
    மேற்கண்ட எமது விளக்கங்கள் இந்து மத சம்பிரதாயத் திருமண வடிவம் என்ற வகையில் அமைந்தவை. இன்னமும் கூடுதலாகவோ, குறைவாகவோ சம்பிரதாயங்களும், சடங்குகளும் அமையக் கூடும். இதில் இசுலாமிய, கிருத்துவ மதத் திருமண வடிவங்கள் மதம் சார்ந்த சம்பிரதாயங்களில் மாறுபட்டிருந்தாலும் உள்ளடக்கமான நடவடிக்கைகள் பொருந்தக் கூடியவையே.
    =========================================================================
    மாற்றுத் திருமண வடிவத்தை பரிசீலிப்போம்!
    ஒரு ஆண் உயிரினமும் பெண் உயிரினமும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்வது என்பது உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). ஒரு உயிரியல் தேவை என்ற அடிப்படையில் ஒரு ஆணும் பெண்ணும் தான் சேர்ந்து இல்லறவாழ்வில் ஈடுபடமுடியும் என்ற வகையில் மட்டுமே தனது துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு சமூகம் ஏற்படுத்தியுள்ள சடங்குகள் சம்பிரதாயங்கள் தேவைதானா என்ற கண்ணோட்டத்திலிருந்து மாற்று திருமண முறையைத் தீர்மானிக்க வேண்டும்.
    மாற்று திருமண வடிவத்தை யார் நாடுகிறார்கள்? குறைந்த பட்சம் மணமக்களில் ஒருவர் நிலவுகின்ற இந்த சமூகத்தில் உள்ள இழிவுகளுக்கு எதிராக சிந்திக்கிற, போராடுகிற போராளியாக இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பொருத்தம் தன்னுடைய இந்த சமூகப் பணிக்கு இடையூறு இல்லாத துணையைத் தேடுகிறார்கள். இதுதான் அவர்கள் பார்க்கும் முதல் பொருத்தம்!
    இங்கே சாதியோ, மதமோ, குலமோ, கோத்திரமோ தேவைப்படுவதில்லை. ஒரே சாதியில் ஒரே மதத்தில் அமைந்தாலும் அதை ஒரு பொருத்தமாக எடுத்துக் கொண்டு திருமணம் செய்வதில்லை.
    மணமக்களில் ஒருவர் மற்றவரைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் உழைப்பை நேசிக்கிறார்களா, உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை தகுதியாகப் பார்க்கிறார்கள். உழைப்பில் ஈடுபடுபவர்கள் மட்டுமே, உழைப்பை நேசிப்பவர்கள் மட்டுமே உழைப்பாளி மக்களை, சொந்த பந்தங்களை நண்பர்களை உறவினர்களை நேசிப்பார்கள் என்ற புரிதலிலிருந்து இந்தத் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
    முக்கியமான, அவசியமான இந்தப் பொருத்தங்களை மட்டுமே எடுத்துக் கொள்வதால் பிற பொருத்தங்கள் தேவையற்றதாகிவிடுகிறது.
    இப்படிப் பொருந்தி விட்ட பிறகு மணவாழ்க்கையைத் தொடங்கிவிடலாமே, எதற்கு அதற்கு ஒரு விழா என்ற கேள்வி எழுகிறது.
    சாதி, அந்தஸ்து, சம்பிரதாயம், சடங்குகள், ஆடம்பரங்கள் போன்ற முகமூடிகளுக்குள் திருமணங்களைப் பார்த்த இந்தச் சமூகம் மாற்று திருமண நிகழ்வை தன்னுடைய உறவினர் செய்யும் போது அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் பழைய திருமண முறை, புதிய மாற்று திருமண முறையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகிறது. அதற்கெதிரான போராட்டத்தின் மூலமே புதிய மாற்று திருமணமுறை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே, ஊர்க்கூட்டி புரட்சிகர திருமணங்களை நடத்த வேண்டியுள்ளது. வடிவம் என்ற அடிப்படையில் இத்திருமணமுறையை பிறர் கற்றுக் கொள்ளவும், கடைபிடிக்கவும் வேண்டும் என்பதற்காவே பகிரங்கமாக பலர் முன்னிலையில் செய்ய வேண்டியதாகிவிடுகிறது.
    அழைப்பதற்கு ஒரு பத்திரிக்கையும், சில நேரங்களில் சுவரொட்டிகளும், எளிய முறையில் தேவைப்படுகிறது. வருகிறவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இடம் தீர்மானிக்கப்படுகிறது. வீடோ, மண்டபமோ, அல்லது தெருமுனையோ முடிவு செய்யப்படுகிறது. வருபவர்களுக்கு எளிய உணவு பரிமாறப்படுகிறது. சில நேரங்களில் அது டீ என்ற அளவில் சுருங்கி இருந்ததும் உண்டு. இருந்தாலும் தவறேதும் இல்லை! வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்குத்தான் இந்த நிகழ்வேயன்றி, தங்களது பகட்டை பறைசாற்றுவதற்கல்ல.
    பட்டாடைகளும், பகட்டாடைகளும் இங்குத் தேவையில்லை. அதாவது, வரவேற்பின் போது மேற்கத்திய கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கனாகவும் – அது மே மாத வெயிலாக இருந்தாலும் கூட – மறுநாள் காலை தாலி கட்டும் போது, பூணூல் போட்ட புராதன இந்தியனாகவும் வேடம் போடவேண்டியத் தேவை இங்கே இல்லை.
    முதலில் பார்ப்பானுக்கு பெண்டாட்டியாகி பிறகு மணமகனுக்கு மனைவியாகும் அற்பங்கள் இங்கே நிகழ்வதில்லை. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பஞ்ச பூதங்களையும் சொந்தங்களையும் சாட்சிக்கழைத்து, நடத்தப்படும் திருமணங்களில் ஆணோ அல்லது பெண்ணோ அவற்றுக்காக பயந்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் விருப்பத்திற்கேற்ப முரண்பாடுகள் வரும் போது முறித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால், புரட்சிகரத் தம்பதியினர் தங்களுக்கு சமூகக் கடமை இருப்பதினால், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளை பேசித்தீர்த்துக் கொள்கிறார்கள். காரணம், தங்களது சமூகப் பணிக்கு இல்லற செயல்பாடு குறுக்கிடக் கூடாது என்ற உயரிய நோக்கமே! மற்ற திருமணங்களில் சில இடங்களில் பேசித் தீர்த்துக் கொள்வதில்லையா என்று கேட்கலாம், அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளில் இருந்து, பழைய சமூகம் அவர்கள் மீது திணித்துள்ள மதிப்பீடுகளில் இருந்து முடிவு செய்து கொள்கிறார்கள். இங்கே சமூகத்திற்கான கடமை, பொறுப்பு என்பதெல்லாம் எதுவும் கிடையாது!
    புரட்சிகர வடிவத்தில் மணமக்கள் உறுதி மொழியும், சிலர் உரையாற்றுவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான கலைநிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெறுகிறது. இதுவும் ஒரு ஒழுங்கில் நடக்கிறது.
    சில பதிவர்கள், ”ஏன் மாலை மாற்றிக் கொள்ளவேண்டும்”, ”பெற்றோர்கள் ஏன் பட்டாடை உடுத்திக் கொள்ள வேண்டும்” என்பன போன்ற ஒரு சில அம்சங்களை வைத்து கேள்வி எழுப்பி இந்த மாற்று திருமண முறையையே கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். ஒரு அவசரமான முத்திரையைத் திணிக்க எத்தனிக்கிறார்கள். மாற்றுத் திருமணங்களை ஆதரிப்பவர்கள் போல வந்து இது போன்று குறை கூறுவதன் மூலம், அவர்களிடம் பழைய சமூகக் கருத்துக்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறார்கள்.
    ஏற்கெனவே, சொன்னது போல மாற்று திருமண முறையில் பட்டாடைகள் தேவையில்லை தான்! குற்றம் சொல்வதை விட அவர்களுக்கு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.
    மாலை மாற்றுவது என்பது இங்கு சடங்காகத் தான் செய்யப்படுகிறது என்றே கருதவேண்டும். சம்பிரதாயம் என்ற அடிப்படையில் இவையும் தவிர்க்கப்பட வேண்டும்.
    இந்தத் திருமண முறை என்பது கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க., மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களால் கடைபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருகிறார்கள். இந்த விவாதம் இணைய பதிவர்களுக்குத்தான் புதியதேயொழிய, வெளியே வாழும் தோழர்கள், அன்றாடம் மக்களோடு மக்களுடன் விவாதித்தும் தெளிவு படுத்தியும் வருகிறார்கள். மேலும், இந்தத் திருமண வடிவங்களை எளிமைப்படுத்தவும், விரிவுபடுத்தவும் பதிவர்கள் முனைவார்களேயானால், அதுவே அவர்கள் இந்தச் சமூகத்திற்கு செய்யும் பெரும் தொண்டாகும்.
    பதிவர்கள் முடிந்தால் இது போன்ற திருமணங்களில் பங்கேற்பதும், தம்பதியரின் வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமும் மட்டுமே, இதுதான் சிறந்த திருமண முறை என்பதை அவர்கள் உணர முடியும்.”

    ஊரான்

    • கட்டுரை ரொம்ப நல்லாட்ட்கஹான் இருக்கு, ஊரான் நீங்கள் கல்யாணம் ஆனவரா? உங்கள் வாளழ்க்கையில் எப்படி? ஊருக்கு உபதேசமா? இல்லை என்று சொன்னால் உம் நம்பிட்தானே ஆகவேண்டும். எல்லாம் எல்லாம் எங்கள் தலை எழுட்து.

      • அய்யா சரவணன் அவர்களே,

        கட்டுரை நல்லா இருக்கு என்றால் அதில் உள்ளவை உண்மையானவைதானே. இதை வெளிப்படையாக சொல்லுவதில் தயக்கம் ஏன்? நான் திருமணம் ஆனவன்தான். 24 ஆண்