Tuesday, November 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 814

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

41

vote-012சென்னைக் கேளம்பாக்கம் அருகிலுள்ள தையூர் எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இம்மாணவியை சக மாணவர் ஒருவருடன் பேசியதற்காக அபராதம் விதித்தும் மிக இழிவான வசைமொழிகளால் திட்டியும் தற்கொலைக்குத் தூண்டியது கல்லூரி நிர்வாகமே. மாணவர்களின் புகாரை அடுத்து கல்லூரி சேர்மன் தலைமறைவாகியிருக்கிறார். இதற்கு மேல் அனித்ராவின் மரணத்தைக் குறித்து விரிவாக எழுத நான் புலனாய்வுப் பத்திரிகையாளனும் இல்லை, சம்பவம் நடந்த தமிழகத்திலும் வசிக்கவில்லை. இது குறித்த எனது சிந்தனைகளை மட்டும் இப்பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என்கிற தலிபானியச் சட்டம் இந்த ஒரு கல்லூரியில் மட்டும் இருப்பதில்லை. சுயநிதி இருபாலர் கல்லூரிகள் அனைத்திலும் இது எழுதப்படாத விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொடூரத்தின் உச்சமாக அனித்ரா படித்த கல்லூரி சிசி டிவி கேமெராக்களை நிறுவி மாணவர்களைக் கண்காணித்திருக்கிறது. எதற்காக இப்படி ஒரு விதி என்று கேட்டால் “பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கத்தான் அனுப்புகிறார்கள். அவர்களுடைய கல்வி சிறப்பாக அமைய நாங்கள் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான்” என்று பெற்றோர்கள் மீது மிகுந்த அக்கறையுள்ளது போலப் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

புரையோடிப் போன சாதியக் கண்ணோட்டம் இன்னமும் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. இதைக் கொண்டே இவர்களது கல்லூரிகளைப் பெற்றோரிடையெ சந்தைப் படுத்துவதுதான் சுயநிதி இருபாலர் கல்லூரிகளின் நோக்கம். இந்தக் கல்லூரியில் சேர்ந்தாலே உங்கள் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றுவிடுவார்கள் என்பதான மாயையையும் இவர்கள் உருவாக்கத் தவறுவதில்லை. இது ஒன்றும் இவர்கள் உழைத்து உருவாக்குகிற நற்பெயர் அல்ல.

தத்தமது கல்லூரிகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சியைக் காட்டுவதற்காக தேர்வில் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் செய்கிற அக்கிரமமும் இது போன்ற பல சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தோல்வியடைய வாய்ப்பில்லாத அல்லது தோல்வியடையும் சாத்தியம் குறைவாக உள்ள மாணவர்களை மட்டும் தேர்வெழுத அனுமதிப்பதன் வாயிலாக நூறு விழுக்காடுகளோ அல்லது இவர்கள் எதிர்பார்க்கிற தேர்ச்சி விழுக்காடுகளோ எவ்வித முயற்சியுமில்லாமல் தானாகவே வந்துவிடும். இதனால் ஆசிரியர்கள் செய்கிற முயற்சிகளை நான் குறை சொல்லுகிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆசிரியர்கள் அளிக்கிற மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் நிர்வாகம் செய்கிற இழிவான செயல் இது.

சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றிலும் ஒரு அம்சம் தவாறாமல் இடம்பெற்றிருக்கும். வாராந்திரத் தேர்வுகள். மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிரமப் படாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் தேர்வுகளே இவை என்று சொல்லப்பட்டாலும், இத்தேர்வுகளுக்கான அசல் நோக்கம் என்பது வேறு. மாணவர்களில் தேர்ச்சியடையக் கூடிய மாணவன் யார் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவன் யார் என்பதைக் கண்டறியவே இந்த வாராந்திரத் தேர்வுகள்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளைப் (ஹால் டிக்கெட்) பிணையாக வைத்துக் கொண்டு பணம் பறிக்கிற கயமையையும் பல சுயநிதிக் கல்லூரிகள் செய்து வருகின்றன. ப்ரேக்கேஜ் கட்டணம் என்று ஒரு வசூலிப்பார்கள். ஆய்வகங்களைப் பயன்படுத்துகிற வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவு மாணவர்களிடம் இக்கட்டணத்தை வசூலிப்பதிலாவது ஓரளவு நியாயம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆய்வகங்களை எட்டிக் கூடப் பார்க்காத வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் மாணவர்களிடமும் இதே கட்டணத்தை அடாவடியாக வசூலித்தது நான் படித்த கல்லூரி (பொன்னையா ராமஜெயம் கல்லூரி. இப்போது PRIST (நிகர்நிலை) பல்கலைக் கழகமாக இருந்து தனது நிகர்நிலைத் தகுதிப்பாட்டை இழந்திருக்கிறது).

இவையல்லாமல் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். என் மகனோ மகளோ அரசியல் செயல்பாடுகல் எதிலும் பங்கெடுக்க மாட்டார்கள், கல்லூரியைக் குறித்து ஊடகங்களுக்கு எவ்விதத் தகவல்களையும் கொடுக்க மாட்டார்கள் என்பவை உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட ஒப்பந்தம் அது. இது போன்ற ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தெரியாவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக மாணவர்களை, நம் பெற்றோரின் குடுமியை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறோம் என்ற அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கும் ஏற்பாடுதான் இது.

சுயநிதிக் கல்லூரிகள் எதிலும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் எதுவும் நடைபெறுவதில்லை. எப்படித் தனியார் தொழிற்சாலைகள் தொழிற் சங்கம் அமைப்பதை எதிர்க்கின்றனவோ அவ்வாறே சுயநிதிக் கல்லூரிகளும் மாணவர் பேரவை அமைப்பதை அனுமதிப்பதில்லை. பேருக்கு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களாகப் பார்த்து வகுப்புத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமனம் செய்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொள்வார்கள். நானும் அப்படி ஒரு செமஸ்டருக்குத் தலைவனாக இருந்து தொலைத்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருப்பவர்கள் நிர்வாகத்திற்குக் கங்காணிகளாக இருக்க வேண்டும் என்பது வாய்மொழியாகக் கூடச் சொல்லப் படாத விதி. படித்த காலத்தில் பாவம் புண்ணியம் என்பன போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்ததால் சக மாணவர்கள் எவரையும் நான் காட்டிக் கொடுத்ததில்லை.

என்ன விதிமீறல் நடக்கும் எதைக் கொண்டு அபராதம் விதிக்கலாம் என்று காத்திருந்து அபராதம் விதிப்பார்களோ என்ற அச்சத்துடனேயே மாணவர்கள் இருக்க வேண்டியிருக்கும். கல்லூரி விதிகளை ஒரு புத்தகமாக அச்சடித்துத் தருவார்கள். அதில் இருப்பவை அனைத்தும் எல்லா கல்லூரிகளிலும் பின்பற்றப் படுகிற பொதுவான மற்றும் பார்வைக்கு நியாயமாகப் படுகிற விதிகள்தான். ஆனால் அபராதம் போடுவது, பெற்றோரை வரவழைப்பது போன்ற விஷயங்கள் பெரும்பாலான சமயங்களில் அந்தப் புத்தகத்தில் சொல்லப் படாத ஒரு செயலுக்காகவே நடைபெறும். இந்த புத்தகத்தில் இல்லாத சட்ட விதிகளைக் காட்டித்தான் மாணவர்களின் நியாயமான தேவைகள் அல்லது விருப்பங்கள் கூட மறுக்கப்படும். உதாரணமாக நான் படித்த கல்லூரியில் நடந்த இரு சம்பவங்களையும் அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக எப்படி முறியடித்தோம் என்பதைக் குறித்து சொல்லுகிறேன்.

மூண்றாம் ஆண்டு இறுதியில் கடைசி வகுப்பு நாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக என் நண்பன் தனது கேமெராவை எடுத்து வந்திருந்தான். வகுப்பறையில் நுழைந்து அடாவடியாகக் கேமெராவைப் பறித்துச் சென்றார் நிர்வாகப் பணியாளர் ஒருவர். கேமெரா எடுத்து வரக் கூடாது என்பது கல்லூரி விதிகளில் இருப்பதாகச் சொல்லிவிட்டு கேமெராவுடன் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டார். ஹால் டிக்கெட் கைக்கு வராத நிலையிலும் அத்தனை மாணவர்களும் ஒற்றுமையாகக் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டோம். கல்லூரி விதிகளடங்கிய நூலில் கேமெரா கருவி குறித்த எந்த விதியும் இல்லாததைச் சுட்டிக்காட்டிய பிறகு எங்கள் தரப்பு நியாயத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டு கேமெரா திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்தார். முதல்வர் அறையிலேயே கொடுக்க முற்பட்ட அந்த சிப்பந்தியிடம் எங்கே இருந்து பறிமுதல் செய்தீர்களோ அங்கேயே வந்து கொடுங்கள் என்று கூறிவிட்டு வகுப்பிற்கு வந்துவிட்டோம். எங்கள் நிபந்தனை நிறைவேறியது.

சக மாணவன் ஒருவனின் தந்தை மறைந்த போது துக்கம் கேட்பதற்காகவும் உதவி செய்யவும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டோம். வருகைப் பதிவு குறைந்து விடக் கூடாதே என்பதற்காகவே அவர்களிடம் அனுமதி கோரினோம். சூழ்நிலையின் தீவிரத்தை உணராமல் அனுமதி மறுத்தது நிர்வாகம். மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருகைப் பதிவைக் குறித்து கவலைப் படாமல் அந்த மாணவனுக்கு உதவி செய்யச் சென்றோம். மறுநாள் “எந்த சினிமாவுக்குப் போனிங்க” என்ற துறைத் தலைவரின் கேலியையும் எதிர்கொள்ள நேர்ந்த்து. மனிதாபிமானமுள்ள மற்ற பேராசிரியர்கள் அவர்களது வகுப்புகளுக்கு வருகைப் பதிவளித்தனர். இவை ஏதோ நான் தலைமை ஏற்று நடத்தியவை என்ற பெருமைக்காகச் சொல்லவில்லை. சுயநிதிக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் நியாயமான தேவைகளுக்குக் கூட எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதை விளக்கவே இவற்றைச் சொன்னேன்.

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான். ரிட்டையர்மெண்ட்டில் வரப் போகிற பிராவிடண்ட் ஃபண்டு போல கல்வியையும் ஒரு முதலீடாகப் பார்க்கத் தொடங்கிய அல்லது பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காரணத்தால் தான் சுயமரியாதையை சில ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்தால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் பெற்றோரும் மாணவர்களும். தயை கூர்ந்து பெற்றோர்களோ, மாணவப் பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தையாவது விட்டு வையுங்கள்.

_______________________________________________

விஜய் கோபால்சாமி

நண்பர் விஜய் கோபால்சாமி இரண்டு ஆண்டுகளாய் பதிவு எழுதி வருகிறார் இவரது வலைப்பூக்கள் http://vijaygopalswamihyd.blogspot.com மற்றும் http://vijaygopalswami.wordpress.com

________________________________________________

[பின்னூட்டமிடும் நண்பர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படித்தவர்களாய் இருந்தால் உங்கள் கல்லூரிகளில் இருந்த இருக்கிற இது போன்ற தலிபானிய விதிகளைக் குறித்துத் தெரிவியுங்கள். நன்றி]

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!


vote-012இந்த பதிவை எழுதும் முன்பாக பின்னூட்டம் எழுதப் போகும் வாசகர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவெனில் சிலபல ஆயிரங்கள்  சம்பளம் பெறும் விமானப்பணியாளர்களைப் பற்றி எழுதுவதற்கு பதிலாக பஞ்சாலைத் தொழிலாளி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலை தொழிலாளி, முறைசாராத் தொழிலாளிகளின் சிரமங்களைப்பற்றி எழுதலாமே என நீங்கள் கேட்கலாம்.

84 ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலாளி வர்க்கம் பல போராட்டங்களை நடத்தி, இழப்புகளை சந்தித்து, இரத்தம் சிந்தி பெற்ற “தொழிலாளர் நலச்சட்டங்கள்” என்பதும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, சங்கம் அமைத்து உரிமைகளை கோரும் உரிமை ஆகியவையும் இன்று ஏர்இந்தியா விசயத்தில் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் பரவும் அபாயம் உள்ளது என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு பின்னர் பின்னூட்டத்திற்கு தயாராகுங்கள்

இந்த ஏர் இந்தியா வேலைநிறுத்தம் குறித்த செய்திகள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்தரிகையின் இணைய தளத்தில் படிக்கும் போது  பின்னூட்டங்களில் பலர் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது என எழுதியிருந்தனர். அதன் நடுவில் ஒருவர் எழுதியிருந்த பின்னூட்டத்தில் “எனது தந்தை விமானியாக பணியாற்றுகிறார் – பிரச்சனையான நாணயத்தின் ஒரு பக்கத்தினை மட்டும் பார்க்காமல் அதன் மறு பக்கத்தையும் வாசகர்கள் பார்க்க வேண்டும் – எனது தந்தை எனக்கு நினைவு தெரிந்து 12 லிருந்து 14 மணி நேர பணிபுரிந்துவிட்டு திரும்பி வருவார்.  அவர்களுக்கும் யாரேனும் விடுப்பு எடுத்தால் பணிச்சுமை அதிகமாகி ஓவர்டியூட்டி என்பது வரும்- தொழில் ரீதியாக பல சிரமங்களை அடக்குமுறைகளை வீட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்” என எழுதப்பட்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன்னால் வெள்ளித்திரையில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் இளவரசியாக வரும் கொடுங்கோலாட்சி நாயகி ஆயிரம் பேர் தலையைச் சீவுவதாக பார்த்திருக்கிறோம்.  கடந்த 2001ம் ஆண்டு பாசிச ஜெயலலிதா முதல்வராக இருந்த போது லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ‘டிஸ்மிஸ்’ என்று கொத்துக் கொத்தாக கோட்டையிலிருந்து வெளியே வீசியது நினைவிருக்கலாம்.  அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் (டி.கே.ரங்கராஜன் -எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கில்) அரசு ஊழியர்களுக்கு “வேலை நிறுத்த உரிமை இல்லை” என்றது.  அது ஒரு வகை நீதிமன்ற பாசிசம். (ம.க.இ.க. வின் வெளியீடாக நீதிமன்ற பாசிசம் குறித்து விரிவாக பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தகமாக வெளிவந்திருக்கிறது.)

இருப்பினும் இன்றைய நிலையில் குஷ்பு வழக்கு, ரிலையன்ஸ் சகோதரர்களின் வழக்கு போன்ற ‘அரசியலமைப்புச் சட்டச் சிக்கலெழும்’ (Is it constitutionally important one?!..) வழக்குகளில் விரைவு தீர்ப்பு தவிர மற்றவற்றில் இல்லை என்பது உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஒரு இடுகை எழுத ஆவல் – அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன் – தற்போது ஏர் இந்தியா பிரச்சனைக்கு வருவோம்

அந்த நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டி இன்று வரை தொழிற்சங்க சம்மேளனங்கள் எதுவும் மனுச்செய்யவில்லை. வேலை நிறுத்த உரிமை இல்லை என்று ஜெ உத்திரவிட்டவுடன் எதிர்ப்பு குரல் கொடுத்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (திமுக), அரசு ஊழியர்களுக்காக வாதாடிய ப.சிதம்பரம் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இரண்டும் தற்போது ஆட்சியில் இருக்கின்றன. எனினும் தொழிற்தாவாச் சட்ட சரத்திற்கு (மத்திய சட்டம்) எதிராக மாநில அரசு சட்டம் கொண்டு வர முடியாது – ஜெ கொண்டுவந்தது செல்லாது என சட்டத்திருத்தம் (தேர்தல் வாக்குறுதி கொடுத்தவர்கள்) கொண்டுவர இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  விளைவு இன்று ஏர் இந்தியா சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் அரவிந்த ஜாதவ் பேனாவையே வாளாக்கி தொழிலாளர்களின் தலையை சீவிக்கொண்டிருக்கிறார்.

நடந்தது என்ன?

ஒருபுறம் இந்த விபத்து குறித்து உயிரிழப்பு குறித்து நாடே வருத்தத்தில் இருக்கும் போது மற்றொரு தடத்தில் செல்ல வேண்டிய விமானத்தை சான்றளிக்க ஏர் இந்தியா பொறியாளருக்கு பதிலாக தனியார் நிறுவன பொறியாளரை பயன்படுத்தியதை ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்த்தனர்.

ஆதாரம் ( http://livestreamingx.com/air-india-strike-2010-story-behind-air-india-strike-05252583.html ).

இதை உடனடியாக பொறியாளர்கள் சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு புகார் மனுவாக அளிக்கிறது.  ஆனால் நிர்வாகம் “எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்பாக செய்தி ஊடகங்களில் இந்த தகவல் எவ்வாறு வந்தது?” என கொதிக்கின்றனர்.  அதற்கு தொழிற்சங்க தரப்பிலிருந்து தொழிற்சங்க நிர்வாகி என்ற அடிப்படையில் நடந்த விபரத்தை மக்கள் அறியச் செய்ய செய்தி ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் தவறொன்றுமில்லை என தெரிவிக்கிறார்.  அன்று இரவே தொழிலாளர் எவரும் எந்த செய்தி ஊடகத்திற்கும் எதையும் சொல்லக்கூடாது என்ற தடை சுற்றறிக்கை போடப் படுவதுடன் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

ஒருபுறம் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த விமான ஓட்டி, பணிப்பெண்கள் உள்ளிட்ட தனது சக ஊழியர்களுடன் பல உயிர்கள் மாய்க்கப்பட்டிருக்கிறது என்கிற உணர்வில் வேதனையுற்றிருந்த தொழிலாளர்களிடையே இந்த தற்காலிக வேலை நீக்க நடவடிக்கை கோபத்தை தூண்ட உடனடி வேலைநிறுத்தத்தில் சுமார் 20000 பேர் ஈடுபடுகின்றனர் (மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 32000).   ஏர் இந்தியா இரண்டு மூன்று கம்பெனிகளாக கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிற மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.  தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டது என்பதுடன்- மத்திய பொதுத்துறை என்ற அடிப்படையில் முன்மாதிரி நிர்வாகியாக (model employer) செயல்பட வேண்டிய பொறுப்பும் உள்ள நிறுவனம்.

இவைகளை ஒன்றுபடுத்தி செயல்படுகிற நாசில் (நேஷ‌னல் ஏவியேஷ‌ன் கம்பெனி ஆப் இந்தியா) என்கிற நிறுவனம் சார்பில் மறுநாள் காலை மும்பாய்- மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் இந்த வேலை நிறுத்தம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.  அதே சமயம் தொழிற்தாவாச் சட்டப்படி முன்னறிவிப்பு கொடுக்கப்படாத வேலைநிறுத்தம் என்ற போதிலும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பங்கெடுத்திருப்பதால் சமரச நடவடிக்கையில் ஈடுபட மத்திய தொழிலாளர் நல ஆணையாளர் திரு முகோபாத்யாயா உடனடியாக இதை ஒரு தாவாவாக விசாரணைக்கு எடுக்கிறார்.  நீதிமன்றம் அன்றே விசாரித்து “நடைபெறும் வேலைநிறுத்தம் சட்ட விரோத வேலை நிறுத்தம், எனவே சமரச அலுவலர் முன்னிலையில் தாவாவை தீர்த்துக் கொள்ள வேண்டும்- அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்” என்கிறது.

தொழிலாளர் ஆணையரும் அனைவரும் வேலைக்குச் செல்லுங்கள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறியதை ஏற்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறது.  இந்நிலையில் இரண்டு தினங்கள் அம்பானிகள், டாட்டாக்கள், அமைச்சர் பெருமக்கள், மேட்டுக் குடியினர் தவித்துப் போனதால் வேலை நிறுத்தத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் பேட்டி கொடுக்கிறார்.  உடனே ஏர் இந்தியா நிர்வாக இயக்குனர் அரவிந் ஜாதவ் தன்னுடைய பேனாவையே கூர்வாளாக மாற்றி 17 பேர்கள் பணிநீக்கம், 24 பேர்கள் தற்காலிக பணிநீக்கம் என்கிறார்.

தொழிலாளர் ஆணையர் திரு முகோபாத்யாயா வியந்து போய் “நான் சமரச நடவடிக்கை துவக்கியிருக்கும் போது ஏன் இப்படி செய்கிறார்கள்” என செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக 29 மே இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது.  மறு தினத்திற்குள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மேலும் பலர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.  இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.  தொழிற்சங்க அலுவலகம் இரண்டிற்கும் சீல் வைக்கப்படுகிறது.   இங்குதான் நாம் சோனியா சாவி கொடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் மன்மோகன் அரசில் இருக்கிறோமா? அல்லது திடீரென ஹிட்லர் போன்ற சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா என்ற வியப்பு மேலிடுகிறது.

ஏற்கனவே தொழிலாளர் ஆணையர் தாவா நடவடிக்கை தொடங்கி விட்டதால் பழிவாங்கும் நடவடிக்கை எது மேற்கொண்டாலும் அது தொழிலாளர் விரோத நடவடிக்கை என தொழிற்தாவாச் சட்டம் வகைப்படுத்துகிறது.  மேலதிகமாக தொழிற்சங்கங்களிலிருந்து முறையாக மீண்டும் ஒரு 14 நாட்கள் முன்னறிவிப்பாக வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்படுகிறது.  அந்த அறிவிப்பு தொழிலாளர் ஆணையரை சென்று சேர்ந்த நிமிடம் முதல் சமரச நடவடிக்கை துவங்கியதாகவே கொள்ள வேண்டும் என்பது சட்டத்தி்ன் நிலைப்பாடு.

தொழிலாளர் நலச்சட்டங்கள் அமுலில் இருக்கிற நிறுவனங்களில் வேலைநீக்கம் செய்வதென்றால் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்க வேண்டும். பதில் தர சந்தர்ப்பம் தர வேண்டும். பதில் திருப்தியளிக்காவிட்டால் உள்துறை விசாரணை நடத்த வேண்டும். விசாரித்தபின் விசாரணை அலுவலர் தரும் முடிவின் மீது குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி கருத்து தெரிவிக்க உரிமை அளிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் வேலை நீக்கம் என்ற தண்டனை தர உத்தேசித்தால் அந்த உத்தேச தண்டனை குறித்து காரணம் காட்டக் கோரும் அறிவிப்பு கொடுக்கப் பட வேண்டும். அதற்கு பதில் பெற்றபின் அதுவும் திருப்தியளிக்கவில்லை என்றால்தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

அதுவும் பல தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தாவா நிலுவையிலிருக்கிறபோது வேலை நீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொண்டால் தொழிலாளர் ஆணையரின் ஒப்புதல் பெறவேண்டும்.  இவையெல்லாம் நான் சொல்லவில்லை பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட வரலாற்றிற்கு பின்னர் இயற்றப்பட்ட 1947ம் ஆண்டு தொழிற்தாவாச்சட்டம் சொல்கிறது.  (இந்த சட்டங்கள் எவையும் எமக்கு பொருந்தக் கூடாது என இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கலைஞருடனும், துணை முதல்வர் ஸ்டாலினுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் SEZ புதிய பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் துவங்கும் பன்னாட்டு கம்பெனிகள் கூறி வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை)

இது ஒருபுறமிருக்க வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கக் கூடாது என “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும்” என எண்ணுவதைப் போன்று தொழிற்சங்க அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டால் தொழிலாளர்கள் அடங்கிவிடுவார்கள் என சர்வாதிகாரி அரவிந் ஜாதவ் எண்ணுவது எங்கணம் என்பது நமக்கு புரியவில்லை.  இந்திய தொழிற்சங்க சட்டத்தில் அங்கீகாரம் என்பதற்கு தொழிலாளர் ஆணையர் தலையிட்டு தொழிற்சங்கங்களுக்கிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தொழிலாளர்கள் தேர்வு செய்யும் தொழிற்சங்கத்திற்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கலாம் என்றுள்ளது.

ஒரு தொழிற்சங்கத்திற்கு பதிவு செய்யும் அதிகாரம் படைத்த தொழிலாளர் துணை ஆணையர் அந்த பதிவை ரத்து செய்ய முழு உரிமை உள்ளது என்ற போதிலும் இரண்டு மாத முன்னறிவிப்பு கொடுத்து அதன் மீது பதில் பெற்றபின்னர்தான் காரண காரியங்களை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தொழிற்சங்க சட்டம் கூறுகிறது.  அதேபோல் அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் முன்னறிவிப்பு கொடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளாமல் இது போன்ற சர்வாதிகாரப் போக்கினை அனுமதித்தால் நாளை எந்த தொழிற்சாலையிலும் தொழிற்சங்கங்களே இருக்காது.  தொழிற்சங்கங்களே இருக்கக் கூடாது, அரசுத் துறையே இருக்கக் கூடாது, எல்லாம் தனியார் மயமாக வேண்டும், தனது குறையை முறையிடும் வாய்ப்பு தொழிலாளிக்கு இருக்கக் கூடாது என்ற மறு காலனியாதிக்க நடவடிக்கைகளின் மறுபதிப்புத்தான் அரசுத்துறையான ஏர் இந்தியாவில் இன்று அரங்கேறியிருக்கிறது.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் சுமார் 32000 பேர் பணிபுரியும் ஏர் இந்தியாவில் 14 தொழிற்சங்கங்கள் இருக்கிறதாம்.  இது போல் ஆலைகள் தோறும் பணிப்பிரிவு, அரசியல் சார்பு வாரியாக தொழிலாளர்கள் பிளவுபட்டு நிற்பதுதான் இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு துணைபோகும் விதமாக அமைந்துவிடுகிறது.  இந்த செய்தியின்மீது தொழிற்சங்க தலைவர்களின் கண்டன அறிக்கைகள் கூட இல்லையென்பது வேதனையான ஒன்று.  இந்திய தொழிலாளி வர்க்கம் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புத்தன்மையை விட்டு வெளியேறி புரட்சிகர இயக்கங்களின் தலைமையில் ஒரு ஆலைக்கு ஒரு தொழிற்சங்கம் என்று ஒன்றுபடுவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஏர்இந்தியா போன்ற மேல்தட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கே கதி இதுதானென்றால் மற்ற சாதாரண நிறுவனங்களின் நிலைமை பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. நாட்டிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் மறுகாலனியாக்க கொடுமையை முறியடிக்க ஒன்றிணைந்து போராடினால்தான் இந்த போக்கை முறியடிக்க முடியும். அந்த அரசியலை இந்திய தொழிலாளி வர்க்கம் என்று கையிலெடுக்கப் போகிறது?

___________________________________________

– சித்திரகுப்தன்.

___________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகம்

12

vote-012இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.

ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.

‘ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள்  எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது. பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வெள்ளி 11 -6-10 அன்று மாலை 6 மணிக்கு இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!

வரவேற்புரை – வெங்கட பிரகாஷ்
கருத்துரை – தமிழருவி மணியன், பாமரன், வீர சந்தானம், இயக்குனர் ராம்
நன்றியுரை – ப்ரியா, கீற்று.காம்

(மின்னஞ்சலில் செய்தி/படங்கள் அனுப்பிய நண்பருக்கு நன்றி)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!


vote-012அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

மும்பைத் தாக்குதல் வழக்கில், கசாபுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. “தானே முன்வந்து முஜாகிதீன் படையில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, சதித் திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது, அப்பாவிகளைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களை கசாப் இழைத்திருப்பதாகவும், அவன் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், தூக்கு தண்டனை விதிப்பதாகவும்” அத்தீர்ப்பு கூறுகிறது.

அஜ்மல் கசாப் செய்த கொலைகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மறுக்க முடியாத வீடியோ ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கசாப் போன்ற கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும் புறவயமான அரசியல் சூழ்நிலைகளுக்கும் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 80-களில் பாகிஸ்தானில் அமெரிக்கா உருவாக்கிய இசுலாமியத் தீவிரவாதம், அதே காலகட்டத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடிய பார்ப்பன பாசிசம், இந்திய அரசு காஷ்மீரில் நடத்தும் இராணுவ ஒடுக்குமுறை, தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக இளைஞர்களை இசுலாமியத் தீவிரவாதத்துக்கு ஆட்படுத்தி இந்தியாவின் மீது ஏவிவிடும் பாகிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகள் – என்ற இந்த அரசியல் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட பாகிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் – அஜ்மல் கசாப். அவன் இசுலாமியத் தீவிரவாதத்தின் கையில் அகப்பட்ட இன்னொரு கருவி.

எந்தக் குற்றங்களுக்காக கசாப்பைத் தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லை என்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.

கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போ நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்குக் காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டு கிறது, பாரதிய ஜனதா.

பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவுதான் தற்போதைய தீர்ப்பு.

பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பேலஸ் மீதான தாக்குதலைப் போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.  வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு. அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகொலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள், யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அரசியலை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால், இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித் திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.

1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்’கள்தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.

தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் (டிசம்பர் 2009), “தவறானதாக இருந்தபோதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி, மத மறுப்பு திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும்போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்தபோதிலும், குற்றவாளியின் உளவியலைக் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையைத் துணைக்கழைத்த உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற விழையும்போது, குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின் படி அஜ்மல் கசாபின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு இசுலாமியத் தீவிரவாதத்துக்கு பலியான அந்த இளைஞனின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.

வெவ்வேறு வழக்குகள்.. வெவ்வேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆளுகின்ற உளவியல், ஆதிக்க சாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.

இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.

**********************************************************************************

புதிய ஜனநாயகம் ஜூன் 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

52


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு இந்துமதவெறியர்கள் உள்ளிட்ட ‘தேசபக்தர்கள்’ அடிக்கடி கூப்பாடு போடுகின்றனர். அப்சல் குருவைத் தூக்கில் போட்டால்தான் பா.ஜ.க மற்றும் அன்றைய அரசாங்க சதிகள் மறைக்கப்படும் என்பதால் அவர்களும் ஊடகங்களும் இதை வலியுறுத்துகின்றனர். அப்சல்குருவைத் தண்டிக்க போதிய முகாந்திரங்கள் இல்லையென்றாலும் தேசத்தின் பொதுப்புத்தியை கணக்கில் கொண்டு இந்த தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. கசாப்பும் மற்றைய பயங்கரவாதிகளுடன் சுமார் 150 பேரை கொலை செய்திருக்கின்றனர். இதையும் தேசத்தின் மனசாட்சி வரவேற்கவே செய்கிறது.

ஆனால் போபால்?

1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?

1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது.

1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது.

இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.

கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே?

பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.

ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!

ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

40

vote-012ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் கனியும் போது உண்மை முகத்தை விரும்பியே வெளிப்படுத்துவார்கள். ஜெகத் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

சென்ற வருடம் கொடூரமான இன அழிப்புப் போர் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது இந்தப் பாதிரியால் ” இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் ” என்ற  ஸ்லோகனோடு கார்த்திக் சிதம்பரம், ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோரால் துவங்கப்பட்டதுதான் “நாம்” என்னும் அமைப்பு. ஒரு தன்னார்வ நிறுவனமாக பதியப்பட்டுள்ள இந்த நிறுவனம், எழுபதாயிரம் மக்களைக் கொன்றொழித்த கொலைகார ராஜபட்சேவுக்கும் கொலைக்குத் துணைபோன போர் வெறி இந்தியாவுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளது . நாம் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிகை இதுதான்,

“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு (தமிழில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்குமான வார்த்தை வித்தியாசத்தையும் கவனியுங்கள்)’ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம்.”

“இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், ரோட்டரி-லயன்ஸ் போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில் -வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி இலங்கை அதிபர் திரு. மகிந்த ராஜபக்சே புது டில்லி வருவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தருணம மேற் சொன்ன பரிந்துரையை இந்தியப் பிரதமர் முன்வைத்து செயல்வடிவம் பெறச் செய்திட வேண்டுகிறோம். உடனடி புனர்வாழ்வு தேவைகள் என்னவென்பதை பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன. அவற்றினடிப்படையில் உடனடிப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களாக விரிவு செய்யப்படலாம். இதற்கென மத்திய மாநில அரசுகள் ஆதார நிதியொன்றை அறிவிப்பதையும் தமிழுலகம் காலம் கருதிய நற்செயலாய் வரவேற்கும் புனர் வாழ்வு- பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளை நீதியான அரசியற் தீர்வு தான் நிரந்தர அமைதிக்கு வழி என்பதையும் வலியுறுத்துகிறோம்.”

“தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு” (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்பதுதான் ஃபாதர் போட்டிருக்கும் மெகா ப்ராஜெக்ட்… இதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என பெரிய ப்ராஜெக்டுக்காக பெரிய மனிதர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். ஆக இந்த பெரிய மனிதர்கள் யார் என்பதையும் பார்த்து விடுவோம்.

பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

அதற்கு முன்னால் இது தொடர்பாக சென்னையில் நாம் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய முன்னாள் பேராசிரியரும், புலி ஆதரவாளரும், இந்நாளில் கருணாநிதி ஆதரவாளருமான  சுப.வீரபாண்டியன் பேசும் போது “இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் உள்ளூர் அரசியலை பேசக் கூடாது” என்றார். அதாவது புலிகளை காட்டிக் கொடுத்து கழுத்தறுத்த சந்தர்ப்பவாதிகளைப் பற்றி பேசினால் எல்லாமே குழம்பி விடும் என்கிறார். மேலதிகமாக இதில் கருணாநிதி பெயர் கெட்டு விடக் கூடாது என்கிற கவலை பேராசிரியருக்கு உண்டு… ஆனால் உள்ளூர் அரசியலைப் பேசாமல் உலக அரசியலைப் பேச முடியாது என்பதாலும் மிக ஆபத்தான ஒரு ஒப்பந்தத்தை ஜெகத் துவக்கி வைப்பதாலும் மக்களிடம் இதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி எழுதுகிறோம்.

இனி ப்ராஜெட் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ள பெரிய மனிதர்களைப் பார்ப்போம்.

ஜெகத் கஸ்பர் ராஜ் ( பச்சைத் தமிழன்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். பங்குப் பாதிரியாராய் இருந்த இடத்தில் இந்து, கிறிஸ்தவர் மோதல் வெடிக்க அங்கிருந்து செழிப்பான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம்  புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். போருக்குப் பின்னர் நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி வைத்து வினவு அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

ஆனாலும் விட்ட பாடில்லை, போராளிகளின் வீரமரணங்களை நினவு கூறும் நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி கொல்லபப்ட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுதான் ஈழ மக்களுக்கு பாதிரி காட்டிய பாசத்துக்கு எடுத்துக்காட்டு. ஊரே சிரித்த சிரிப்பில் இனி இந்த கடை கல்லா கட்டாது என்பதால் ஈழ ஆதரவுக் கடையை மூடி விட்டு இப்போது நேரடியாக ராஜபக்சேவிடமே ப்ராஜெக்டுக்கு தனது டில்லி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவரது வித விதமான விஸ்வரூபங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை ஏமாற்றி இவர் செய்த “மௌனத்தின் வலி” நூலையும் அதன் அரசியல் அயோக்கியத்தனத்தையும்  வினவு அம்பலப்படுத்திய போது தவறை உணர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பாதிரியை விட்டு ஒதுங்கினார்கள். நன்றி கெட்ட நாய், வீட்டுக்காரன் மீதே பாய்கிற மாதிரி உடனே பத்திரிகையாளர்கள் மீதே பாயந்தார் இந்தப் பாதிரி…. உஷாரானவர்கள் அந்தப் பக்கம் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எல்லாப் பழியையும் பத்திரிகையாளார்கள் மீது போட்டு விட்டு வழக்கம் போல தப்பிக்கப் பார்த்தார் பாதிரி.

சசிகுமார் ( மலையாளி)

தென்னிந்தியாவில் சன் டிவிக்கு இணையான வரலாற்றைக் கொண்ட மலையாள சேனலான் ஏஷியா நெட் தொலைக்காட்சியைத் துவங்கியவர்களில் ஒருவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய என்.ஜீ.ஓ நெட்வொர்க்கைக் கொண்டவர். தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் மூலம் கிடைத்த முற்போக்கு முகமூடியை இன்று வரைத் தாங்கிக் கொண்டிருப்பவர். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பெரும் பண்ணை வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள்.

அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபட்சே கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது. சசிகுமார் இந்து ராமின் ஒர்க்கிங் பார்ட்டனர். இந்து ராம், சசிகுமார், இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பார் ஈழ மக்களுக்கான ப்ராஜக்ட்டைப் போட்டிருக்கிறார். இந்து ராமின் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் இலங்கையில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொடுக்கிறது என்பதாகவும் சொல்கிறார்கள். சசுகுமாரின் மனைவிதான் tulika என்றொரு குழந்தைகளுக்கான பதிப்பகத்தை நடத்துகிறார். கணவரைப் போல பணம் கறக்கும் தன்னார்க் குழுக்களின் பிதாமகள் என்றே இவரைச் சொல்லலாம். பார்ப்பன எலைட் பெண்களால் நடத்தப்படும் பான்யன் என்னும் அமைப்பில் சசிகுமாரின் மனைவிக்கும் பங்குண்டு. பான்யன் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ப்ராஜெக்ட்டை ஈழத்திற்கு விரிவு படுத்தும் நோக்கோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பகவான் சிங் ( தெலுங்கர்)

தமிழகத்தின் பல புலி ஆதரவாளர்கள் புலத்து மக்களின் பணத்தில் குளித்தது போலவே புலத்து மக்களால் அழைக்கப்பட்டு விருந்து வைக்கைப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 புலிகள் ஆதரவு ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங் ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்றே பேசினார். பின்னர் 2009- ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த போது சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங் சென்னை திரும்பிய பின்னர்தான் இவர் பொறுப்பேற்றிருக்கும் சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசின் ஆதரவுக் கருத்துக்கள் தொடர்ந்து வந்தன.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதை வெளியிடாமல் பதிலுக்கு சிறப்புப் பேட்டியாக கருணாவின் பேட்டியை வெளியிட்டது அப்போது அம்பலமானது. அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தர்மசங்கடமான அந்தச் சூழலில் வெளியிட்டன. பின்னர் பத்திரிகையாளர்கள் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போருக்கு எதிராகப் போராடிய பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு போரைத் தொடுத்த இலங்கை அரசின் சென்னைத் தூதர் அம்சாவிடமே போரை நிறுத்தும் படி மனுக் கொடுக்க வைத்த பகவான் சிங் இப்போது உளவாளி ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ராஜபக்சேவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

ரவிக்குமார் ( பச்சைத் தமிழர்)

இவர் தலித்துக்களின் தத்துவாசிரியன் ரேஞ்சுக்கு புகழப்பட்டார். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது பவர் புரோக்கிங், ரியல் எஸ்டேட் என வளர்ந்திருக்கிறார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறாராம், இந்த பழைய பின் நவீன – தலித் தத்துவாசியிரியர். தனது பிழைப்புவாத அரசியலுக்கு ஏற்றவாறு தான் எழுதும் ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு.

ஜூனியர் விகடனில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருக்கே இவர் போட்டுக் கொள்ளும் சலாம் வகை. என்றாலும் இங்கே கவனிக்கத் தக்கது இந்தியா வரும் திரு.ராஜபட்சேவை வலியுறுத்தி இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பைக் கோரும் ரவிக்குமார் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர் திருமாவளவன். எம்.எல்.ஏ ரவிக்குமாரோ ராஜபக்சேவிடம் கூட்டமைப்பைக் கோருகிறார். திருமாவளவனோ இனவெறியன் ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதுதான் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் உறுமல் யோக்கியதை….

ஏ.எஸ் பன்னீர் செல்வம் (பச்சைத் தமிழர்)

கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க ப்ரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவாகரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் panos south asia  என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான்.

இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும் மெகாப்ராஜெக்டில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

இனக்கொலைக்கு எதிரனவாரா? ஜெகத் கஸ்பார்?

போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு கிறிஸ்தவப்பாதிரி என்னும் போர்வையில் உலவும் ஜெகத் கூட பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா? அவர்தான் “மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபக்சேவை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று சாபம் விட்டவர் ஆயிற்றே? இவர் எப்படி சென்னையில் உள்ள இலங்கைத் தூதகரத்தோடு நெருக்கம் பேணுவார் என்று நினைக்கிறீர்கள்?

கொலைகார ராஜபக்சேவை மன்னிப்பதல்ல…. ராஜபக்சேவின் மயிரைக் கூட கர்த்தர் கழட்ட மாட்டார் என்பது தெரிந்ததனாலோ என்னவோ, இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை சென்னை மயிலை பேராயர் சின்னப்பா சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியை இலங்கைத் தூதரகத்தின் இதழாக வந்து கொண்டிருக்கும் நீரிணை இதழில் இலங்கைத் தூதரகமே பதிவு செய்திருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் அதன் கள்ளக் குட்டி பதினாறடி பாய்கிறது. பிஷப் இலங்கைத் தூதரைப் பார்தார் ஃபாதரோ ராஜபக்சேவையே பார்க்கக் கிளம்பிவிட்டார்.

ஒவ்வொரு பேரழிவுமே இவர்களுக்கு நல்வாய்ப்புதான்…

இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபட்சேவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?  நிதி ப்ராஜெக்ட், தன்னார்வக் குழுக்கள், நிவாரணப் பணிகள், இதெல்லாம் இவரது வருமானத்திற்கான ஒப்பந்தங்கள் என்பதற்கப்பால் நம்மிடம் எஞ்சியிருப்பது ஒரே ஒரு கேள்விதான்……. இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் iifa திரைப்பட விழாவிற்கு சென்று வந்த இந்தி நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் தடை? அவர்கள் துரோகிகள்… சல்மான்கானோ, ஷாருக்கானோ செய்தால் அது துரோகம். அதையே ஒரு பச்சைத் தமிழன் செய்தால் அது என்ன தமிழ் தேசிய இறையாண்மையா?

பிபாஷா பாசுவோ, ஜான் ஆப்ரஹாமோ, சல்மான்கானோ சென்றது ஒரு திரைப்பட விழாவுக்காக. ஒரு இனம் என்ற வகையில் நம்மைப் போன்ற உணர்வு ரீதியான பிணைப்போ, புரிதலோ ஈழம் குறித்து இல்லாதவர்கள். இந்த நடிகர்கள் செல்வதால் ஏற்படுவதோ கலாசார சீரழிவு மட்டும்தான். ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரியத்தைச் செய்யத் துணிந்து விட்டார்கள் பாதிரி தலைமியில் உள்ள கூட்டணியனர்.

இது iifa விழாவை விட ஆபத்தானது. மலையாளியான சசிகுமாரும், தெலுங்கரான பகவான் சிங்கும், பச்சைத் தமிழர்கள் ரவிக்குமாரும், ஜெகத்தும், பன்னீர் செல்வமும் இணைந்து செயலபடுத்தப் போகும் இந்த இந்தோ இலங்கை ப்ராஜெக்ட் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக அழிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுகள் கூட்டாக தயாரித்துக் கொடுத்த திட்டம் என்றே தோன்றுகிறது. போருக்குப் பின்னர் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராம் என்ற ராஜபட்சே இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு அல்லக்கையை வியந்து போற்றி ஒரு போராளியாக உருவாக்கியதும் இதே ஜெகத்கஸ்பர்தான். நக்கீரன் பத்திரிகை அதற்கான பின் தளமாக இருந்தது.

யார் இந்த பத்திரிகையாளர் பாண்டியன்?

இலங்கை என்று ‘கேணல்’ ராமைச் சந்தித்து நக்கீரனில் செய்தியாக வந்த இவர் யார்? திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா இந்து வெறியனுக்காக தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். நகைமுகனைப் பற்றி எல்லா தமிழக இயக்கங்களுக்குமே தெரியும். இப்போது நகைமுகன், அர்ஜூன் சம்பத், பாண்டியன், பாலகுரு, என புதுக்கூட்டணி. ஒரு காலத்தில் வாடகை கொடுக்கக் கூட வழியில்லாத  இந்த பாண்டியன் நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து நக்கீரன் இதழில் முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுக்கிறார். பிரமாண்ட செலவில் பாலகுரு பல கூட்டங்களை நடத்துகிறார். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பார் ராஜ்.

ஈழ மக்களின் இன்றைய தேவை

புலிகளின் போராட்ட வழிமுறையும் புலிகளின் அரசியலுமே அவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. மக்களை பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தி மக்களை நம்பாத புலிகள் இந்திய, மேற்குலக அரசுகளையும் தமிழக புலி ஆதரவாளர்களையுமே நம்பியிருந்தனர். தமிழக மக்களின் ஆதரவையோ, ஈழ மக்களின் ஆதரவையோ ஒருங்கிணைத்து பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தை கட்டியமைக்காத புலிகள் இப்போது தாமும் அழிந்து மக்களையும் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

நிலம், உயிர், என எல்லாவற்றையும் இழந்து சுவாசிப்பதற்குக் கூட திராணியற்று பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு ஈழ மக்கள் ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஈழ ஆதரவாளர்களைக்  கண்டு கொள்ளாத புலிகள், உளவாளிகளோடுதான் எப்போதும் உறவு கொண்டிருக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது.  பெரும் அவலச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஈழ மக்களின் இன்றைய தேவை அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்திய பெரு நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளுக்காக இலங்கை திறந்து விடப்பட்டுள்ளது. மன்னாரின் எண்ணைய் வளமும், திருகோணமலைத் துறைமுகமும், வடக்குக் கிழக்கின் பல்லுயிர்ச் சூழலும் தனியார் நிறுவனங்களில் கழுகுக் கணகளில் பட்டு அபகரிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்திய கட்டுமான நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இது வரை நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை அரசோடு செய்து முடித்து விட்டன.

முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது என்பதுதான் ராஜபக்சே சொல்லும் செய்தி….. ஆமாம் கை, கால்கள் இழந்து மௌனிகளாக்கப்ப்ட்டுவிட்ட மக்களின் கல்லறைகளின் மீது கட்டிடம் கட்ட படையெடுக்கக் காத்திருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்….. அரசியல் ரீதியாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்து இனி எப்போதும் அரசியல் ரீதியாக ஈழ மக்களை எழும்ப விடாமல் அடித்துப் புதை குழியில் தள்ள கூடவே படையெடுக்கிறது தன்னார்வ நிறுவனங்கள்.

மறுக்கப்பட்ட சிவில் உரிமைகளை நாங்களே வழங்குவோம் என்று சொல்கிற தன்னார்வக் குழுக்கள் புதிதாக சொல்கிற வார்த்தை ” மீள் கட்டுமானம்” ஆமாம்  இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்கா கட்டமைத்த பயங்கரவாத கதையாடலோடு துவங்கிய ஈராக், ஆப்கான் யுத்தத்தின் பின்னர் அவர்கள் அடுத்து சொன்னதுதான் இந்த ”மீள்கட்டுமானம்”.

முதலில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தார்கள். பின்னர் மீள்கட்டுமானம் என்று அழித்ததை மீண்டும் கட்டுகிறார்கள். அழிப்பின் போது ஆயுத வியாபாரம்… மீளக்கட்டும் போது ஒட்டு மொத்த இடங்களையுமே கைப்பற்றிக் கொள்வது………ஆக ஒவ்வொரு பேரழிவும் ஒரு நல் வாய்ப்பாக இவர்களுக்கு வாய்த்து விடுகிறது… பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஜெகத் கஸ்பருக்கும்தான்……..

பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கான சொர்க்கம் இலங்கை என்று சொல்லியே உலக நாடுகளை ஏமாற்றி பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தது இலங்கை.

நிவாரணம் உள்ளிட்ட மக்களின் சிவில் சமூக உரிமைகளை தன்னார்வக் குழுக்கள் வழங்கினால் இனி எப்போதும் அவர்களால் மீளவே முடியாது. மாறாக அவர்களிடமிருந்து பறிக்கபப்ட்ட நிலங்களை அவர்களிடம் மீள ஒப்படைப்பதும் உழைப்பிற்கான உத்திரவாதத்தை வழங்குவதோடு சிவில் உரிமைகளைப் முழுமையாக வழங்கி, இராணுவக் கண்காணிப்பை நீக்கினாலே தங்களுக்கான மீள் கட்டுமானத்தை சில ஆண்டுகளில் அவர்கள் செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் விவசாயிகள், மீனவர்கள், இன்னபிற உழைக்கும் மக்கள்.

சாம்பலில் இருந்து மீண்டெழுவதை அவர்களுக்கு ஜெகத் கும்பல் மட்டுமல்ல வேறெந்த தன்னார்வக குழுக்களும்  கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக பாதிரி தலைமையில் அணிவகுத்திருக்கும் இந்தக் கும்பல் ஈழமக்களை அரசியல் ரீதியில் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே பாதிரி கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!

____________________________________________

– புதூர் ராசவேல்

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!

126

vote-012முடித்துக் கொள்ளலாம்தான் – முடிவு நியாயமானதாக இருந்தால். தவறிழைத்தவர் உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தால்.

ஆனால் முல்லையின் துணைவர் முகில் எழுதிய பதிவை முன்வைத்து முடித்துக் கொள்ள சிலர் துடிக்கிறார்கள்.

முகிலின் கடிதம் வெளிப்படுத்தும் வேதனையையும் சங்கடத்தையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். குறிப்பாக வினவு எழுதியுள்ள பதிவில், நர்சிம்மின் எழுத்தை “வன்புணர்ச்சி” என்ற சொல்லால் குறித்திருப்பதை “கொச்சைப்படுத்தியிருப்பதாக” அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண்ணோ அவரது குடும்பத்தினரோ அதை வெளியில் கூறுவதற்குக் கூசும் துயரத்தின் வெளிப்பாடே அவரது கூற்று என்றே நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

இந்தப் புரிதல் எங்களுக்கு இருந்ததனால்தான் எமது பதிவை வலையேற்றுவதற்கு முன் அதனை முல்லைக்கு அனுப்பி, அவரது ஒப்புதல் பெற்று அதன் பின்னரே பிரசுரித்தோம். பிரச்சினையை மிகைப்படுத்திக் கூறி பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல “ரேப்” என்ற அந்தச் சொல்.

பண்டிட் குயின் திரைப்படத்தில் வரும் கொடூரமான அந்தக் காட்சியைப் போன்ற ஒன்றை மனத்திரையில் ஒடவிட்டு, அது ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிக்கும் துன்பத்தை எண்ணி, ரசித்து எழுதப்பட்டதுதான் நர்சிம்மின் புனைவு. பணத்திமிர், பார்ப்பன சாதித்திமிர் போன்றவையெல்லாம் வினவின் புனைவுகள் அல்ல. நாங்கள் சாதி பிளவை உறுவாக்கவும் இல்லை அது நர்சிம்மின் எழுத்துக்குள் புழுத்து நெளிகின்றது, அவருக்கு கிடைக்கும் ஆதரவில் தனித்து தெரிகின்றது.

சந்தனமுல்லை என்ற பதிவருடன் வினவு கொண்டிருக்கும் நட்புக்காகவோ, அல்லது நர்சிம் என்பவர் மீதான பகைமைக்காகவோ எங்கள் பதிவு எழுதப்படவில்லை என்பதை முகில் புரிந்து கொள்வார் என்றே நம்புகிறோம். இந்த விவகாரம் எழும்புவதற்கு முன் நர்சிம் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.

நடுவீதியில் ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறையில் யாரேனும் ஒரு கயவன் ஈடுபடும்போது, நேர்மையான எந்த மனிதனும் என்ன செய்வானோ, செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அந்தப் பெண்ணின் பெயர் சந்தன முல்லை, அவரது கணவர் முகில் என்பதெல்லாம் அப்புறம் தெரியவரும் விவரங்கள். அவ்வளவுதான். நண்பர் முகில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்.

முகில் எழுதிய பதிவுக்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலர், “ஒரு பெண்ணின் நலனில் கணவனைத் தவிர வேறு யார் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கமுடியும்?” என்ற பாணியில் எழுதியிருக்கிறார்கள். புரியாமல் எழுதியிருந்தால் இது அசட்டுத்தனம். புரிந்து எழுதியதாகவே தெரிவதால் இது விசமத்தனம்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட பெண்களும் சரி, அவளது குடும்பத்தினரும் சரி அதனை வெளியில் சொல்வதற்கே தயங்குகின்றனர். குடும்பத்தின் கவுரவம் மற்றும் பெண்ணின் எதிர்காலம் கருதி மறைக்கவும் விரும்புகின்றனர். இந்தச் சந்தில் ஒளிந்து கொண்டுதான் பல ஆணாதிக்கப் பெருச்சாளிகள் அடிபடாமல் தப்புகின்றன. மறப்பதற்கோ, மன்னிப்பதற்கோ நண்பர் முகில் தனது சொந்தக் காரணங்களையும் அளவுகோல்களையும் வைத்திருக்கலாம். அவற்றில் முகிலும் முல்லையும் ஒன்றுபடலாம் அல்லது வேறுபடலாம். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கிடையில் ஒத்த கருத்து வரவேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.

ஆனால், அந்த அளவில் மட்டுமே இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை. மற்றப்படி “திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தான். பிறகு திரௌபதியிடமோ தருமனிடமோ மன்னிப்பு கேட்டு விட்டான். அவையோரே கலைந்து செல்லுங்கள். மகாபாரதம் முடிந்தது” என்று பஞ்சாயத்து செய்ய முனைபவர்கள் துச்சாதனனை விடக் கொடிய அயோக்கியர்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.

“வினவு என்ன பதிவுலகின் நாட்டாமையா?” என்று குமுறுபவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது இதைத்தான்: இந்த பாரதக் கதையை வினவு தொடங்கி வைக்கவில்லை. அதே நேரத்தில், “இது பாஞ்சாலியின் பாடு அல்லது தருமனின் பாடு.. நமக்கென்ன” என்று அவையில் நெடுமரமாய் சமைந்திருக்கவும் எங்களால் முடியாது. அவமானப் படுத்தப்பட்டிருப்பது சபையோராகிய நாம் அனைவரும்தான்.

ஏனென்றால் இந்தப் பிரச்சினையில் அநாகரிகங்களின் அத்தனை வகைகளையும் பார்த்து விட்டோம். தொடங்கி வைத்த நர்சிம், அதற்கு விசிலடித்து கைதட்டி பின்னூட்டமிட்டவர்கள், பின்னர் டிவிட்டரில் முல்லையைப் பற்றி அவதூறு செய்தவர்கள், ஒரு பக்கம் முல்லையிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வினவின் பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டவர்கள் வரிசையில் கடைசியாக பைத்தியக்காரனையும் வினவையும் தாக்குவது போலக் காட்டிக் கொண்டு நர்சிம்முக்கு முட்டுக் கொடுக்க தனது புலனாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார் சுகுணா திவாகர். அதுதான் ஆபாசத்தின் உச்சம். அநாகரிகத்தின் எல்லை. ஐந்தாம்படை வேலைக்கு இலக்கணம்.

இந்த இடத்தில் தோழர் ரயாகரனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தம். அவருடன் கடுமையான கருத்துப் போராட்டத்தை வினவு ஏற்கெனவே நடத்தியிருக்கிறது என்ற போதிலும், ஆணாதிக்க எதிர்ப்பு என்ற நியாயத்துக்காக தானே முன்வந்து அவர் தோழமைக் கரம் நீட்டியிருக்கிறார். இதற்குப் பெயர்தான் தோழமை உறவு. தனது தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளுக்கு ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்கள் நட்பு பற்றியோ, தோழமை பற்றியோ பேசும் அருகதை அற்றவர்கள்.

இன்று, “பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு என்ற முல்லையின் பதிவுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு குத்தித் தள்ளுகிறார்கள் சில ஐந்தாம்படைப் பேர்வழிகள். இவர்கள் சிறுபான்மை என்றாலும் இதுவும் பதிவுலக நாகரிகத்தின் இலட்சணம்தான்.

நர்சிம்மை முல்லை கேலி செய்தார். நர்சிம் எதிர் வினையாற்றினார் என்று இன்னமும் சிலர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச்சு அசலாக இதுதான் மகாபாரதக் கதை. “இந்திரப்பிரஸ்தத்தின் அரன்மணையில் துரியோதனனைக் கேலி செய்து திரௌபதி சிரித்தாள்; பதிலுக்குப் பழிவாங்க துரியோதனன் அவளைத் துகிலுரிந்தான்” என்ற துவாபர யுகத்தின் நியாயம் இந்தக் கலியுகத்துக்கும் பொருந்தும் என்றால், வேறு வழியில்லை – யுத்தம்தான் முடிவு.

கலியுகம் பிறந்து விட்டது உண்மையானால், பெண்ணுரிமை, சமத்துவம் போன்ற சொற்களிலாவது பதிவுலகத்துக்கு நம்பிக்கை இருக்குமானால், நாம் நாகரிகமான தீர்வுகளைப் பற்றி யோசிக்கலாம்.

“முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும். ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது.

முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.

எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.

சும்மா வெக்கப்படாதீங்க சார்! வாங்க!

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

நர்சிமின் பூக்காரி பதிவு

புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

4


புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. கொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா!
  2. நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!
  3. அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்
  4. நச்சுவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி!
    முதலாளித்துவ பயங்கரவாதக் கொடூரம்!!
  5. தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் “வளர்ச்சி வேட்டு”!
  6. மாவோயிஸ்டு வேட்டையா? பழங்குடி வேட்டையா?
  7. “நீங்கள் எங்களோடு இல்லையென்றால்…” அறிவுத்துறையினருக்கு எதிராக ப.சி.யின் பகிரங்க மிரட்டல்
  8. “மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி, இயற்கை வளங்களைச் சூறையாடுவது உலகெங்கும் புரட்சியைப் பெற்றெடுக்கிறது!”
    – நிகரகுவா நாட்டு மனித உரிமைப் போராளி பியாங்கா ஜாக்கருடன் ஒரு நேர்காணல்.
  9. தனியார் நகரங்கள்: நவீன சமஸ்தானங்கள்!
  10. சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை
  11. சாதி கௌரவக் கொலைகள்: கேலிக்கூத்தானது இந்தியக் ‘குடியரசு’
  12. ஜாட் சாதிவெறித் தீயில் கருகிப் போன தாழ்த்தப்பட்டோர் வாழ்வு
  13. பா.ம.க. இராமதாசின் சமூக நீதி பாரீர்!
  14. அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: இந்து பயங்கரவாதத்துக்கு இன்னுமொரு சான்று
  15. காட்டுவேட்டை: அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!

புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 7 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!

101

vote-012நர்சிம்மைக் கண்டித்து வினவு தளத்தில் வெளிவந்த பதிவை பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதும் சிவராமன் தான் எழுதியிருக்கிறார் என்றும், அவர் வினவுக்கு எழுதி அனுப்பிய பிரதியை எடிட் செய்து வெளியிட்டிருப்பதாகவும், இதையும் வினவில் வந்துள்ள கட்டுரையையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி சுகுணா திவாகர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

“நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவில், வினவு தளத்தையும் விமரிசித்திருக்கிறார். ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த அறமற்ற செயல் குறித்து எழுதுவதற்காகத்தான் இந்தப் பதிவு என்றும் பதிவுக்கான நோக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார். பச்சைப் பார்ப்பனியத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் (சிவராமனிடம்) பார்ப்பன எதிர்ப்பு குறித்து பதிவு வாங்கி அதையும் வினவு பெயரில் வெளியிட வெட்கமாக இல்லையா என்றும் கேட்டிருக்கிறார்.

சிவராமன் எழுதிய பதிவு தனக்கு எப்படி எப்படி கிடைத்தது என்பது தேவையில்லை என்றும், தேவையானால் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறவேண்டாம். அதை நாங்களே கூறுகிறோம்.

இந்த விவகாரம் குறித்து எழுத வேண்டும் என்று நாங்கள் எண்ணும் பொழுதே பல வலையுலக நண்பர்களும் தொலைபேசியில் அழைத்து எழுதச்சொல்லி வலியுறுத்தினார்கள். நாங்களும் பலரைத் தொடர்பு கொண்டோம். அவர்களில் தோழர் பைத்தியக்காரனும் ஒருவர். நர்சிம் உள்ளிட்ட நபர்களைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் சொல்லப்போனால் நர்சிம் தனது நண்பர் என்றும் அவர் தனக்கு கடனுதவி செய்திருக்கிறார் என்றும் இருந்தபோதிலும், இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்தாக வேண்டும் என்பதால், தான் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதை வினவில் வெளியிட்டால் பரவலாகப் போய்ச்சேரும் என்பதால், அதனைக் கோரிப்பெற்றோம். அதை திருத்தங்கள், சேர்க்கைகள் செய்வதற்கு அவர் ஒப்புதல் தந்தார்.

தேவையற்றவை, பொருத்தமற்றவை என்று நாங்கள் கருதியவற்றை எடிட் செய்தோம். அவர் அனுப்பிய பதிவின் அளவு சுமார் 1945 சொற்கள். அதில் அவர் சுகுணா திவாகர் பற்றி எழுதியுள்ள பகுதி உட்பட பலவற்றை எடிட் செய்திருக்கறோம். வேறு சிலர் தந்த தகவல்களையும் சேர்த்திருக்கிறோம். அந்தக் கட்டுரைக்கான தரவுகளைப் பலர் கொடுத்திருந்தாலும் கட்டுரை வினவினுடையதுதான். இவ்வாறு வினவு வெளியிட்டுள்ள கட்டுரையின் அளவு 3456 சொற்கள். எனவே இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவது உண்மையல்ல.

மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.

இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார். தன்னைப் பற்றி சிவராமன் எழுதியிருப்பதைப் படித்தவுடனே அறம் கொன்ற சீற்றம் அவரை ஆட்கொண்டு விட்டதா, அல்லது நர்சிம்மை எழுதியதால் வந்த கோபமா, அவருடைய உள் விவகாரம் நமக்குத் தெரியாது. மாபெரும் ஊழலைக் கண்டு பிடித்து வினவை அம்பலப்படுத்தி விட்டதைப் போல எழுதியிருக்கிறார் சுகுணா திவாகர்.

அந்த நண்பர், சிவராமனின் கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்ததன் நோக்கம் நர்சிம்மை காப்பாற்றுவது. நர்சிம்முக்கு எதிராக எழுதியவர்களை காரெக்டர் அசாசினேசன் செய்வது அதற்கு ஒரு சிறந்த வழி. அந்த வேலையை தான் செய்வதை விட ‘பெண் விடுதலைப் போராளி’யாகிய சுகுணா திவாகர் செய்வது பொருத்தம் என்று கருதி இந்த அடியாள் வேலையை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சுகுணா திவாகர் ஒப்படைக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விட்டார்.

சந்தன முல்லையைப் பற்றி நர்சிம் எழுதி வெளியிட்டது முதன்மையான பிரச்சினை இல்லை. தன்னைப் பற்றி சிவராமன் எழுதி வெளியிடாத தகவல்தான் (அதாவது வினவால் எடிட் செய்யப்பட்டது)  அவருக்கு முக்கியப் பிரச்சினை. அதில் சிவராமன் சுகுணா திவாகரைப் பற்றி கூறியது உண்மையா, பொய்யா என்பது பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. ஏனென்றால் அது வினவினால் எடிட் செய்யப்பட்டுவிட்டது. வெளியிடப்படாத ஒரு விசயம்,

தனிப்பட்ட முறையில் இரு நபர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுபவை ஆயிரம் இருக்கும். அவை சரியாகவோ தவறாகவோ மிகையாகவோ இருக்கலாம். எழுத்தில் என்ன வெளிவந்தது என்பதுதான் வாசகனைச் சென்று அடைந்திருப்பது. அதுதான் வெளியிடப்பட்ட கருத்து. ஒரு கட்டுரையின் மூலத்தைக் கூட ஒரு எழுத்தாளன் தானே எடிட் செய்துதான் வெளியிடுகிறான். “இதோ பார் எடிட் செய்யப்படாத மூலக்கட்டுரை” என்று எந்த யோக்கியனும் புலனாய்வு செய்து வெளியிடுவதில்லை. அதனை எந்த வாசகனும் மதிப்பதும் இல்லை.

சுகுணா திவாகர் என்ன சொல்ல வருகிறார்? தன்னைப் பற்றி சிவராமன் சொன்னது பொய் என்று கூரை மீது ஏறி எதற்கு கூவுகிறார்? சுகுணா திவாகர் கூறுவது போல சிவராமன் தனிப்பட்ட வாழ்க்கையில் பார்ப்பனியத்தை ‘கைவிடாத’ நபராகவே இருக்கட்டும். அவர் நர்சிம்மை பற்றி சொன்னது உண்மையா இல்லையா? அவர் நர்சிம்மிடம் கடன் வாங்கியிருந்தாலும் நர்சிம் அவருக்கு தனிப்பட்ட நண்பராக இருந்தாலும், நட்பு முறியும் என்று தெரிந்த போதும் அவர் வெளிப்படையாக நர்சிம்மை எதிர்த்து அவருடைய கட்டுரையிலேயே “காறித் துப்புகிறேன்” என்று பின்னூட்டம் போட்டார்.

வினவு கட்டுரை நீ எழுதியதா என்ற கேள்விக்கு “நான் எழுதினாலும் வரிக்கு வரி அப்படித்தான் எழுதுவேன்” என்று தனி பதிவே போட்டார். தன்னோடும் ஜ்யவரோம் சுந்தரோடும் சாதி அடிப்படையிலும் உறவு கொண்டாட நர்சிம் முயல்வதாகவும் வெளிப்படையாக எழுதி நர்சிம்மை அம்பலப் படுத்தியிருக்கிறார் சிவராமன். இவையனைத்தும் வலைப்பூக்களில் காணக் கிடக்கின்றன.

சுகுணா திவாகர் கூறுவதைப் போல சிவராமன் இன்னமும் பார்ப்பானாகவே இருந்தாலும், சாதி அடிப்படையில் நர்சிம்மை ஆதரிக்காமல் சொந்த சாதிக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்பதே இச்சம்பவத்தில் நடந்திருக்கிறது.

ஜெயேந்திரனை சங்கரராமன் என்கிற பார்ப்பனர் அம்பலப்படுத்தியபோது, “நாங்கள் ஜெயேந்திரரை ஆதரிப்பவர்கள் இல்லை. இருந்தாலும் சங்கரராமன் பெரிய யோக்கியனா?” என்று ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் ஜெயேந்திரனின் அல்லக்கைகள். ஜெயேந்திரனின் கிரிமினல் வேலைகளை நேரடியாக அம்பலப்படுத்த முடியாத போது, அவரைத் தப்ப வைப்பதற்கான குறுக்கு வழி, குற்றம் சாட்டுபவன் மீது சேறு வாரி இரைப்பதுதான் என்று புரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட பிரச்சாரம் அது. அதே வேலையைத்தான் சுகுணா திவாகர் இப்போது செய்கிறார்.

இதுதான் புதிய பார்ப்பனியம்.

சிவராமன் உண்மையிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, சொந்த வாழ்க்கையில் எதையும் கடைப்பிடிக்க வில்லை என்ற விமரிசனங்களையெல்லாம், நட்புடன் பழகும்போது அவரிடம் நேரில் சொல்லியிருக்கவேண்டும். கண்டித்திருக்க வேண்டும். தன்னைப் பற்றி சொன்னவுடன் “நீ பத்தினியா?” என்று லாவணி பாடுவது குழாயடிச் சண்டையைக் காட்டிலும் தரம் தாழ்ந்த அணுகுமுறை.

நர்சிம்மின் ஆணாதிக்கத் திமிரையும் வக்கிரத்தையும் எதிர்த்து பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையில் எப்படி என்று ஆராய்ச்சி செய்து, யார் யார் நர்சிம்மை விமரிசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குவாரா சுகுணா திவாகர்?  “லீனாவின் கவிதையை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள், மாறுபடுபவர்களும் இருக்கிறார்கள், வேறுபடுபவர்களும் இருக்கிறார்கள். கருத்துரிமைதான் பிரச்சினை” என்று லீனாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய அதே நாக்குதானே பேசுகிறது? அங்கே பேசியவர்கள் எல்லாம் பெண் விடுதலைப் போராளிகளா என்று உரசிப் பார்த்து தான் மேடையேற்றினீர்களா?

சிவராமன் போன்ற நயவஞ்சகர்களிடம் நாங்கள் ஏமாந்துபோவதாக எச்சரித்திருக்கிறார் சுகுணா திவாகர். நன்றி. அந்த ‘நயவஞ்சகரிடம்’ ஏமாந்து நர்சிம்மைப் பற்றி என்ன தவறாக எழுதிவிட்டோம்? ஏன் சுகுணா திவாகர் துடிக்கிறார்? அந்த விசயத்தை அவர் சொல்லட்டும். “நர்சிமிக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்” என்று சொல்லித்தான் தோழர் சிவராமனது மடல் அவரது நண்பர் மூலம் சுகுணாவுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்வெஸ்டிகேஷனது நோக்கமே நர்சிம் என்ற பொறுக்கியைக் காப்பாற்றுவது என்ற பிறகு நடிப்பு எதற்கு?

மற்றப்படி ம.க.இ.க என்ற அமைப்பின் தோழர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளுக்கு சிவராமன் போன்றோரால் நேரக்கூடிய ‘ஆபத்து’ பற்றி ம.க.இ.க தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள். ம.க.இ.க வினரை பழமைவாதிகள், ஒழுக்கவாதிகள் என்று என்று எள்ளி நகையாடும் கலகக்காரர்கள் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இறுதியாக ஒரு விசயம். சுகுணா திவாகரைப் பற்றி சிவராமன் எழுதியது பொய்யே ஆனாலும், அது வினவு தளத்துடன் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட கடிதப் பரிவர்த்தனை. அதனை வெளியிட்டு வினவு தளத்தை ‘அம்பலப்படுத்தியிருக்கிறார்’ சுகுணா திவாகர் என்கிற ரீ.சிவகுமார்.  அவர் ஆனந்த விகடனில் வேலை பார்க்கிறார்.  பல விதமான ஊழல்கள், முறைகேடுகள் பற்றிய செய்திகள் ஆனந்த விகடனுக்கு வந்தாலும், எவற்றை வெளியிடலாம், எவற்றை வெளியிட வேண்டாம் என்பதை ஆனந்த விகடன் ஆசிரியர் குழு முடிவு செய்யும். மக்களுக்குத் தெரிந்தே தீரவேண்டிய பல அநீதிகள் ஆனந்த விகடன் நிர்வாகத்தின் நலன் காரணமாகவோ அல்லது போதிய ஆதாரமல்ல என்ற காரணத்தினாலோ அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.

தன்னைப் பற்றி சிவராமன் எழுதியதை வெளியிட்டிருக்கும் சுகுணா திவாகர், ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்ட அத்தகைய தகவல்களையும்  தன்னுடைய தளத்தில் வெளியிடுவாரா? அவருடைய தனிப்பட்ட கவுரவப் பிரச்சினையைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகள் பெரிதென்று அவருக்கு தெரியாதா என்ன? அல்லது இது நர்சிம்முக்கு மட்டும் செய்யப்படும் உதவியா?

அவரே பதில் சொன்னாலும் சரி. அல்லது அவரது ‘பத்திரிகை அறம்’ குறித்து ஆனந்த விகடன் நிர்வாகத்திடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

  1. நர்சிமின் பூக்காரி பதிவு

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?

328

vote-012வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.

முதலில் அது தொடர்பான பிரச்சினையை சுருக்கமாகப் பார்க்கலாம். பதிவர் ஆதிமூலக் கிருஷ்ணன் என்பவர் இந்த நர்சிமிடம் ஒரு நேர்காணலை (PDF) எடுத்து வெளியிட்டார். அந்த நேர்காணலில் ஆ.விகடன் பாணியில் மரண மொக்கை கருத்துக்களை அதுவும் தன்னை முன்னிறுத்தி நர்சிம் பேசியிருப்பார். இந்த நேர்காணலை அதற்கே உரிய அற்பத்தனத்தை போட்டுடைத்து பெண் பதிவர் மயில் என்பவர் நகைச்சுவையாக ஒரு பதிவு (ZIP) வெளியிடுகிறார். அதில் பதிவர் சந்தனமுல்லை பின்னூட்டமிடுகிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நர்சிம்பூக்காரி (PDF) என்ற கதையை வெளியிடுகிறார். அதில் சந்தனமுல்லையை எவ்வ்வளவு கீழ்த்தரமாக குறிப்பிட முடியுமோ அவ்வளவு குதறியிருக்கிறார். அதன் பி.டி.எஃப்பை இணைப்பில் படித்தால் நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

பார்ப்பனியத் திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என எளிமைப் படுத்தி இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது.  இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு விடை தேடுவது நம் புரிதலுக்கு வழிவகுக்கும்.

ஏன் செய்யவேண்டும்?’

இந்த இரண்டாவது கேள்விக்கு முதலில் விடை தேடுவோம். இதற்கு சில பழைய கணக்குகளை தூசி தட்ட வேண்டியிருக்கிறது. பல பதிவர்களும் குறிப்பிடுவது போல் இது ‘ஒரு இடுகை’ சார்ந்த பிரச்னை இல்லை. கிட்டத்தட்ட 18 மாத ஆணாதிக்க பகை. நரித்தனத்துடன் வஞ்சம் தீர்க்கும் பார்ப்பனியத்தின் விஷத்துக்கு பல நூறாண்டு கால வரலாறு உண்டு, எனில் பதிவுலகில் அதற்கான பல மாத வரலாறு உண்டு.

பழைய கணக்கு

‘நான் கடவுள்’ திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன் வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்திய பெண் பதிவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) “இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?” என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை – ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் – அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத் தாண்டி பெண்கள் வேறு எந்த விதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதோடு ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை – ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம். இந்த ஆண் பதிவர்கள் அனைவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. ஆனால், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனு தர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். அதனால் ஆணாதிக்கத்தை இயல்பாக எழுத்திலும் சிந்தனையிலும் வரித்தவர்கள்.

கார்க்கி ராப்சந்தனமுல்லை

முன்னணி படைத் தளபதியாக இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் கார்க்கி பவா (வினவில் எழுதும் தோழர் கார்க்கி அல்ல ),  முன்பு ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இப்போது சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக அறிகிறோம். தனது வலைத் தளத்தில் தன் அக்கா மகன் குறித்து அவ்வப்போது இடுகைகள் எழுதுவார். அந்தச் சிறுவன் சிரித்தாலும் பதிவு. அழுதாலும் பதிவு. கிண்டல் அடித்தாலும் பதிவு என்று எழுதும் இந்த கார்க்கி –

தன் மகள் பப்புவின் வளர்ச்சி குறித்து பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் சந்தனமுல்லையின் பதிவுகளை உண்மையில் ஆதரிக்க வேண்டுமல்லவா? ஆனால், எதிர்க்கிறார். என்ன காரணம்?

கார்க்கியின் ‘சாளரம்’ வலைத் தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆணாதிக்கத் திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையோடு, ஒரு போகப்பொருளாக அன்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை. இந்த கார்க்கியும் – வெளிநாட்டில் வசிக்கும் ராப்பும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். கார்க்கி தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி எழுதுவதை, ராப் கண்டித்தார். உடனே கார்க்கி, ‘ராப்’ என தலைப்பிட்டு எவ்வளவு மோசமாக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பெண்களை இழிவுப்படுத்தி ஒரு இடுகையை எழுதினார். இதற்கு எதிர் வினையாக ராப், ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை. ஒரேயொரு குப்பைத் தொட்டியின் படம். அதில் கார் கீயை தூக்கிப் போடுகிறார்கள். இடுகையே அவ்வளவுதான்.

இதற்கு ‘சபாஷ்… கலக்கிட்ட… சரியான எதிர்வினை’ என்று பொருள் தரும் மறுமொழியை சந்தனமுல்லை எழுதினார். சந்தனமுல்லை மீது கார்க்கி கொள்ளும் கோபத்துக்கு அடிப்படை இந்த மறுமொழிதான். அதனால்தான் இப்போது ‘மயில் (விஜி) தளத்தில் சந்தனமுல்லையின் மறுமொழி கண்டிக்கத்தக்கது’ என கார்க்கி கூச்சலிடுகிறார். உண்மையில் அந்த பழைய மறுமொழியை மனதில் வைத்துத்தான் இப்போது லபோ திபோ என உறுமுகிறார். சந்தனமுல்லை அன்று சொன்னதை, இப்போது வினவு மேலும் அழுத்தமாகச்  சொல்கிறது,“ராப் எழுதிய குப்பைத் தொட்டி பதிவிற்கு பொருத்தமாக அதில் புரண்டு நெளியக்கூடிய ஆண்வெறித் திமிரான விலங்குதான் இந்த கார்க்கி”

ஆணாதிக்க பதிவர்கள்

புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் சில ஆண் பதிவர்கள் வல்லவர்கள். ‘ஆபரேஷன் சல்மா’ மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். அவற்றை இவர்கள் இருவரும் எப்போது பொது வெளியில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர்கள் இது குறித்து மௌனம் காப்பது இந்த ஆணாதிக்க வெறியர்களைக் காப்பாற்றுவதற்கும், இவர்களால் கடித்துக் குதறப்படும் பெண்பதிவர்கள் பதிவுலகை விட்டு ஓடுவதற்கும்தான் துணை புரியும் என்பதை அவர்களுக்கு தோழமையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.

மேலே குறிப்பிட்ட ஆண்வெறி ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் அரசல் புரசலாக சந்தனமுல்லைக்கு  தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அந்த பதிவர்களுக்கு சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதனால்தான் இந்தக் கழிசடைகள் பொறுக்கி நர்சிம்மை ஆவேசத்துடன் ஆதரிக்கின்றன.  கடந்த ஓராண்டில் மட்டுமே ராப் – ‘சோம்பேறி’ உட்பட பல பெண் பதிவர்கள், எழுதுவதை நிறுத்தி, வலையுலகை விட்டே ஒதுங்கியிருக்கிறார்களே… அதற்கு என்ன காரணம்? சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் இதற்கு விடையளிக்க வேண்டும்.

யார் இந்த நர்சிம்?

பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பார்ப்பனர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத் தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத் தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத் தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை கண்டுகொள்ளவில்லை என்பது நர்சிமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் பிரபல பதிவர்களின் அன்பைப் பெற்றால், தன் கடையும் பிரபலமாகும் என்று திட்டமிட்ட நர்சிம், யார் யார் பிரபலமானவர்கள் என லிஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் தன் சாதியை சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியக்காரன் ஆகியோரையும் (இவர்கள் பார்ப்பனியத்தை ஏற்காதவர்கள் என்றாலும்), தன் சாதியாக இல்லாவிட்டாலும் வருணாசிரமத்தை ஏற்கக் கூடிய பிற ஆதிக்க சாதியை சேர்ந்த பதிவர்களையும் அணுகி நட்பு பாராட்டி தானாகவே சீடனாகி இருக்கிறார். நன்றாக கவனித்தால் தனது ‘குரு’வாக எந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களையும் தலித்துகளையும் இவர் ஏற்கவில்லை என்பது புரியும். அதுமட்டுமல்ல, எந்த பெண் எழுத்தாளரையும் குறைந்த பட்சம் வழிகாட்டியாகக் கூட நர்சிம் ஏற்றதில்லை. அறிவு ஆண்களுக்கு மட்டுமே – அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே – சொந்தம் என்பதில் அவ்வளவு நம்பிக்கை!

பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது ‘குரு’க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே ‘இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி’ என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, ‘தனது சீடர்’ என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் சாதியை பார்க்கிறீர்கள்… நர்சிம்மின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை அவரது ஆண்வெறி ஆதரவாளர்கள் எழுப்பலாம்.

நல்லது, நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்? இதையும் அவர் திருடித்தான் செய்திருக்கிறார். “பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் பேப்பரை பார்த்து காப்பி அடிப்பதாக”, பதிவர் மயில் கிண்டலடித்ததற்கு காரணம் இதுதான். இந்த ‘உண்மை’யை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது யார் தெரியுமா? இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் ‘முற்போக்கு’ பதிவரான லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாதான்.

ஒருமுறை நர்சிம் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்தக் கதை மின்னஞ்சலில் வலம் வரும் ஒரு ஆங்கிலக் கதையின் அப்பட்டமான காப்பி என்ற உண்மையை லக்கிலுக் போட்டு உடைத்தார். உடனே என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அந்த இடுகையையே தன் தளத்திலிருந்து நர்சிம் தூக்கிவிட்டார்! இப்படித்தான் நர்சிம் கதைகளை எழுதுகிறார். பழைய குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளிவந்த ஒருபக்க, இருபக்க கதைகளை டிங்கரிங் செய்து புனைவாக்குவதுதான் அவர் வேலை.

கம்பரையும், வள்ளுவரையும், குறுந்தொகையையும் தன் தளத்தில் எழுதும் இந்த நர்சிம், ஒருபோதும் எந்த அறிஞரின் விளக்கவுரையிலிருந்து தான் எடுத்திருக்கிறோம் என்று சொல்லியதில்லை. வார்த்தை மாறாமல் அந்த விளக்கவுரையை டைப் செய்து தன் தளத்தில் வெளியிடுவது மட்டுமே இவரது வேலை. இந்த உழைப்புக்கு கிடைத்த பட்டம்தான் ‘கார்ப்பரேட் கம்பர்!’ வாங்கிய காசுக்கு மேல் கூவுவது என்பது இதுதான். கம்பனை இதற்கு மேல் இழிவுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை என்பது தமிழறிஞர்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா? ஈழப் பிரச்னை தொடர்பாக ‘சோ’த்தனமாக ‘தினமலரை’ காப்பியடித்து ஒரு இடுகையை எழுதப் போக, பெயரிலி என்ற பதிவர் வெளுத்து வாங்க, ‘ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்’ என சரண்டர் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதானே? நித்தியானந்தா அம்பலப்பட்ட போது, பிரேமானந்தாவையும் உடன் இணைத்து பதிவு எழுதியவர், ஜெயேந்திரனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ‘அவாள்’ பாசம். நித்தியானந்தரின் இணையதள பி.ஆர்.ஓ.வாக செயல்பட்ட சாருநிவேதிதாவையாவது கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை. இதில் மக்கள் இந்த சாமியார்களை நம்பி ஏமாறக்கூடாது என்று அட்வைசு வேறு. சாருவை நம்பி பல வாசகர்கள் நித்தியிடம் ஏமாந்தது எல்லாம் இந்த கார்ப்பரேட் கம்பனின் கணக்கில் வராது போல.

ஆக எந்த பொதுப்பிரச்சினைக்கும் ஆவேசமோ, கோபமோ வராத டிப்பிக்கல் நடுத்தர வர்க்க, அதுவும் சென்னைப் பார்ப்பானின் சபா டைப் ஜிகினா அறிவாளிதான் இந்த நர்சிம். வங்கியிலோ, எல்.ஐ.சியிலோ, இல்லை ஐ.டி துறையிலோ வேலை செய்யும் பார்ப்பனர்களின் பொது அரட்டைப் பண்பைத் தாண்டி நர்சிமிடம் எந்த வெங்காயமுமில்லை. இப்படிப்பட்ட அக்மார்க் சுயநலவாதிதான் இன்று தன்னை கேலிசெய்தார் என்பதற்காக ஒரு பெண்ணை எழுத்தில் கடித்துக் குதறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஆண்வெறியனின் இரண்டரைக் கதைகளையும், ஒன்னேமுக்கால் கவிதைகளையும் வெளியிட்டதற்கு ஆ.விகடன்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால், சந்தனமுல்லை தொடர்ந்து பொதுப் பிரச்னைகள் சார்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் மாத ‘உன்னதம்’ இதழில் ‘தெலுங்கானா’ பிரச்னை குறித்து ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்தவர்,  மே மாத ‘உன்னதம்’ இதழில் ‘தலித்துகள் ஏன் நீதிபதியாக வரமுடியவில்லை?’ என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார். தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியே சமூக பிரச்னைகளை ஆராய்கிறார். வினவில் கூட மகளிர் தினப்பதிவுகளில் எழுதியதோடு மற்ற பெண் பதிவர்களின் கட்டுரைகளை உற்சாகத்துடன் ஆதரித்தார். வினவு போன்ற இடதுசாரி ‘தீவிரவாதி’களை ஆதரிப்பதற்கு கூட பயப்படும் சில ஆண் பதிவர்களின் சூழலில் இதுவே பெரிய கலக நடவடிக்கையில்லையா?   தண்ணீர் தினத்தை முன்னிட்டு ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலை வெகு அழகாக சென்னை கூவம் நதிக்கரையோர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சந்தனமுல்லை எழுதிய இடுகைக்கு சமமான இடுகையை எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?

நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுமொழிகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. தன்னை மீறி ஒரு பெண்பதிவர் பிரபலமடைவதும், சொல்லப் போனால் வினவு போன்றவர்கள் சந்தன முல்லைக்கு பின்னூட்டமிடுவதும், தனது தளத்தில் எழுதவைப்பதும், நர்சிம் என்ற அப்துல்கலாம் மரண மொக்கைக்கு இதுவரை வினவு பின்னூட்டம் போடாததும் கூட இந்த பார்ப்பன ஆண்வெறி பதிவருக்கு ஆத்திரத்தை உருவாக்கியிருக்கும். என்றால் இவர் சந்தன முல்லையை வேறு எப்படி எதிர் கொள்ள முடியும்?

குட் டச் பேட் டச்

தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ‘குட் டச் பேட் டச்’ நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா. சிறுமிகள் மீது நிகழும் வன்கொடுமைகளை கண்டித்து தீபா ஒரு பதிவு எழுத, இது குறித்து அரங்கக் கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் மறுமொழியில் சொல்ல… அப்படித்தான் இக்கூட்டம் அரங்கேறியது. பெண் பதிவர்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது இவர்களுடன் நட்பு பாராட்டிய நர்சிம், தானும் உதவுவதாக சொல்லி களத்தில் இறங்கினார். அவ்வளவுதான். வந்தது வினை. டாக்டர் ருத்ரனுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்ற நர்சிம், டாக்டரை தொடர்பு கொள்ளவேயில்லை. பதிவுகளில் வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு டாக்டர் போட்ட பின்னூட்டம் இன்றும் நினைவில் இருக்கிறது. “யாரும் என்னை முறைப்படி தொடர்பு கொண்டு தேதியை சொல்லவில்லை. இருந்தாலும் பதிவர்களுக்காக நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்று பொருள்பட எழுதினார். இதற்கு அடுத்து நடந்த க்ளைமாக்ஸ்தான் முக்கியம்.

இந்நிகழ்வு குறித்து ‘ஜூனியர் விகடனில்’ செய்தி வெளியிட்ட ரமேஷ் வைத்யா, இந்நிகழ்வு நடக்க முழுக்க முழுக்க நர்சிம்தான் காரணம் என கூலிங் க்ளாஸ் அணிந்த நர்சிம்மின் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். பிரமாதமாக ஏதோ தானே உழைத்து நிகழ்ச்சியை நடத்தியதுபோல் நர்சிம்மும் பேட்டியளித்திருந்தார். இப்படி பார்ப்பன ஊடகங்களில் அவாள்களுக்கு மட்டுமே ஒளிவட்டம் போடப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ‘ஜூ.வி’ வெளிவந்ததும் வழக்கம்போல் ‘நன்றி ஜூ.வி’ என இடுகை எழுதிய நர்சிம், மறுமொழியில் பல பதிவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தீபாதான் காரணம் என்று சொன்னதும், அந்த இடுகையையே தூக்கிவிட்டார். ஆக, தான் அம்பலமாகாத இடுகைகளை மட்டுமே நர்சிம் தன் வலைத்தளத்தில் வைத்திருக்கிறார். திருட்டுக் குற்றம் வெளிப்பட்ட இடுகைகளை சத்தமில்லாமல் தூக்கிவிடுவார்.

இந்த நிகழ்வில் சமூகப் பொறுப்புணர்வுள்ள சந்தனமுல்லை தன்னாலான உதவிகளை தீபாவுக்கு செய்தார். எதுவும் செய்யாமல், ஆனால், எல்லாம் தன்னால்தான் என்று சீன் காட்டும் நர்சிம்மை நண்பனாகக் கூட இதன் பிறகு சந்தனமுல்லை மதிக்கவில்லை. ஆக, சந்தனமுல்லை மீது நர்சிம் ஆத்திரப்பட இதுமாதிரியான பல திருட்டுகளே காரணம். அறிவுச்சரக்கும் சமூக அக்கறையும் இல்லாமல் ஆதிக்க சக்திகளின் பலத்தில் தானும் ஒரு எழுத்தாளராக வலம் வரவேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர இவருக்கு எந்த கொள்கையும், வெங்காயமும் இல்லை.

இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல! ஆனால் பாலபாரதி அவர்களே அதை இனியும் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண் வெறி விலங்குகள் இன்னும் ஆடுவார்கள் என்பதை மட்டும் இங்கே என்பதை நட்புடன் சுட்டிக் காட்டுகிறோம்.

தீபாநர்சிம்நகைச்சுவைமயில்

கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர் பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான ‘குசும்பு’ பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை ‘எட்டாதபடி’ கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான். இதன்மூலம் அரசர் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் காது திறந்திருப்பார் என்று பொருளல்ல. ஆனால் எப்போதும் அரசனை பிரச்சினைகளின்றி மகிழவைப்பதே கோமாளியின் வேலை. பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.

இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டமாக ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள். உங்களது பதிவுலக சேவையின் பரிணாம வளர்ச்சி இப்போதுதான் பொருத்தமாக வந்திருக்கிறது.

‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்று பெயர் வாங்கத் துடிக்கும் நர்சிம், அவ்வப்போது இதுமாதிரியான நகைச்சுவை இடுகைகளை எழுத முயன்றிருக்கிறார். உரையாடல் அமைப்பு சார்பில் சிறுகதைப் பட்டறை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக ஒரு ‘காமெடி’ இடுகையை நர்சிம் எழுதியது ஒரு உதாரணம். எப்படியாவது பதிவுலகில் பெயர் பெற்ற வழிமுறைகளுடன் தானும் ஒரு பிரபல பதிவராக மாறவேண்டும் என்பதின் மலிவான முயற்சிகள்தான் இவை.

ஆனால் இவர் நகைச்சுவையாக எழுத முயன்றது போன்று முன்பு தீபாவும், இப்போது மயிலும் செய்தபோது நர்சிம் துள்ளி குதித்து விஷத்தை கக்குகிறார். தீபா விஷயத்தில் என்ன நடந்தது?

சுயமோகியான நர்சிம், தனக்கு வந்ததாக ஒரு வாசகர் கடிதத்தை தன் தளத்தில் பிரசுரித்தார். அதில் அவரை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியொரு வாசகர் கடிதம் வந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். படு மொக்கை இடுகைகளை எழுதும் நர்சிம்மையும் மதித்து பாராட்டும் மொக்கைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

நர்சிம்மின் இந்த வாசகர் கடிதத்தை கிண்டல் செய்து தீபா ஒரு இடுகையை எழுதினார். அந்த இடுகையில் சந்தனமுல்லை மறுமொழி எழுதினார். இப்போது நர்சிம்மை ஆதரிக்கிறார்களே… அவர்களேதான் அப்போதும் தீபாவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்கள். சந்தனமுல்லைதான் இதற்கெல்லாம் காரணம் என டார்கெட் செய்தார்கள். வலையுலகமே இரண்டு பட்டது.

இந்த பழைய வரலாறுதான் இப்போதும் நடந்திருக்கிறது. ஆதிமூல கிருஷ்ணன் என்ற பதிவர், நர்சிமை பேட்டியெடுத்து வெளியிட்டார். அதில் ஆ.விகடன் பாணியில் தன்னை முன்னிறுத்தி மரண மொக்கை கருத்துக்களை நர்சிம் வீசியிருந்தார். அதை கிண்டல் செய்து பதிவர் மயில் ஒரு பதிவு வெளியிட அதில் சந்தனை முல்லை பின்னூட்டம் போட இதுதான் நர்சிம் வெறி கொண்ட பின்னணி.

அப்போது நர்சிம்முக்கு வந்த வாசகர் கடிதம். இப்போது நர்சிம் அளித்த பேட்டி. இரண்டு இடங்களிலும் நர்சிம்மை கிண்டல் செய்தவர்கள் பெண் பதிவர்கள். இரண்டிலும் அந்த கிண்டலை ஆதரித்து மறுமொழி எழுதியவர் சந்தனமுல்லை.

ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நர்சிம் இதேபோல் பார்ப்பன விஷத்தை கக்குவாரா? நர்சிம்மை ஆதரிக்கும் பதிவர்கள் இதேபோல் எதிர்வினை புரிவார்களா? கலாய்த்தல் என்பதும், கிண்டல் என்பதும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண்கள் அப்படி செய்யக் கூடாதா? இப்போது அந்த பெண்பதிவர்கள் செய்த கிண்டலை சீரியஸாகவே வினவு ஆமோதிக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் எடுத்த நர்சிம்மின் பேட்டியை கிண்டல் அடித்து மயில் எழுதிய இடுகையை வரிக்கு வரி ஆமோதிக்கிறோம். திருஞான சம்பந்தன் போல குழந்தையாக இருக்கும் போதே ஞானப்பால் குடித்த மேதையாக தன்னைக் கருதிக் கொள்ளும் நர்சிமை, மிகச்சரியான முறையில் பதிவர் மயில் நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார். அதை வரிக்கு வரி நாங்கள் பாராட்டுகிறோம். பழைய புத்தகக் கடையிலிருந்து திருடித்தான் நர்சிம் பதிவு எழுதுகிறார் என்பது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும் கூட. இதை சந்தனமுல்லை ஆமோதித்து மறுமொழி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?

குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா? ஏன் வினவைக்கூட கிண்டலாகவும், வன்மத்துடனும் சிலர் பதிவாகவும், இங்கே பின்னூட்டமாகவும் எழுதுகிறார்கள். இதற்காக என்றைக்காவது நாங்கள் கோபப்பட்டிருக்கிறோமா? இவ்வளவிற்கும் நாங்கள் நர்சிமைப் போலவோ, அவரது ஆதரவாளர்களைப் போலவோ மரணமொக்கைகளை எழுதுவதில்லை. அதுவும் நாங்களெல்லாம் பதிவுலகில், ஊடகங்களில் மாபெரும் எழுத்தாளராக பவனி வரவேண்டும் என்ற பச்சையான சுயநலத்திற்காக எழுதவில்லை. அத்தனையும் மக்களுக்கான நோக்கில் எழுதுகிறோம். அப்படியெனில் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்? வரவில்லை என்றால் அது நடைமுறையில் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புதான் அப்படி வழிநடத்துகிறது. அற்பவாதியும், பொதுநலவாதியும் இப்படித்தான் வேறுபடுகிறார்கள்.

விதூஷ்டி.ஆர்.அசோக்

எந்தளவுக்கு நர்சிம்மும் அவரது ஆதரவாளர்களும் பார்ப்பன வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் டி.ஆர்.அசோக். இவர் பதிவர் சங்கம் குறித்து ஒரு இடுகை எழுதினார். அதில் சங்கத்தின் முதல் பெஞ்சில் இருப்பவர்களெல்லாம் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பின்னூட்டமிட்ட விதூஷ் (வித்யா) என்ற பெண்பதிவருக்கு பதிலளிக்கும் போது நீங்கள் அழகாக அடக்கமாக இருக்கிறீர்கள் என்று பதிலளித்திருந்தார். உடனே நர்சிம் சாமியாடினார் பாருங்கள்… அடேங்கப்பா நினைத்தாலே புல்லரிக்கிறது. ‘ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்வதற்கு சமம்… இப்படியெல்லாம் ஆண்கள் இருந்தால் எப்படி பெண்கள் எழுத வருவார்கள்…’ என்றெல்லாம் கேள்வி கேட்டார். மறுமொழியிலும் பலர் நர்சிம்மை ஆதரித்து, டி.ஆர்.அசோக்கை எதிர்த்து எழுதினார்கள். உண்மையில் பார்ப்பனர்களை கேள்வி கேட்ட அசோக்கை வஞ்சம் தீர்க்கவே நர்சிம் இதை எழுதினார் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் இப்போது சந்தனமுல்லையை குறிவைத்து எழுத்தில் வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம்மின் செயல் எப்படிப்பட்டது? இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. விதூஷ் என்கிற வித்யா ஒரு பார்ப்பனப் பெண். அவரது அழகை வர்ணித்த டி.ஆர்.அசோக் பார்ப்பனரல்லாதவர். பார்ப்பன பெண்ணை வேறொரு சாதி ஆண் எப்படி ரசிக்கலாம் என்ற பார்ப்பன இளைஞனின் சுயசாதிக் கோபம் அதுவும் நாயகிகளைக் காப்பாற்றும் எம்.ஜி.ஆர் டைப் ஹீரோயிசம்தான் நர்சிம்மிடம் அப்போது வெளிப்பட்டது.  மற்றபடி பெண்களை காப்பாற்றும் எந்த புண்ணாக்கு செயலும் இதில் இல்லை. ஒருவேளை டி.ஆர்.அசோக் பார்ப்பனராக இருந்திருந்தால், நர்சிம் இந்த ‘கமெண்ட்டை’ ரசித்திருப்பார்.

சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் குதறியிருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய ‘இயல்பாக’ இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் ‘பொழுதுபோகலைனா…’ என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?

நர்சிம் செய்த வன்புணர்ச்சி

சந்தனமுல்லை மீது இந்தளவுக்கு கீழ்த்தரமான வசவுகளை நர்சிம் பயன்படுத்தக் காரணம், ஆண் என்ற வெறியும், ஆதிக்க சாதிக்காரன் என்ற ஆணவமும்தான். இத்துடன் முதுகெலும்போடு சந்தனமுல்லை நிமிர்ந்து நிற்பது நர்சிம்முக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறது. அதனால்தான் சந்தனமுல்லையை குறிவைத்து நர்சிம் எழுதிய ‘பூக்காரி’ என்ற படுமட்டமான செக்ஸ் கதையில் இந்த //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.//  சொற்பிரயோகம் வருகிறது.

என்ன சொல்ல வருகிறார் நர்சிம்? தன் குலம் பார்ப்பனக் குலம்… தன் வளர்ப்பு மேம்பட்ட வளர்ப்பு  என்பதுதான் இதன் பொருள்.

” இவ பஜாரி முண்டைப்பா…அவ காரியம் ஆகணும்னா எவனையும் ஊ.. துபத்தி வாங்கி கும்புடுற கொலமகளப்பா..ஒக்காலி நல்ல மாடுன்னா உள்ளூர்ல விலபோகும்..இவ பவுசு தெரியாத வெளிநாட்டுப் பயலுகலோட தொடுப்பு வச்சு சம்பாதிக்கிற தொழில்காரிய என்னாண்டு சொல்லச் சொல்ற?” இதற்கு என்ன பொருள்?

” “அப்பிடித்தான் மாப்ள ஒதுங்கிப்பேனேன்.. தேவிடியா கைய்யி சும்மா இருக்குமா, அரிக்குது போல..கையக்காட்டுறா, கண்ணக்காட்டுறா.. ஒக்காலி ரோட்டுல விட்டுத்திருப்புனா சரியாப் போகும்” இதன் பொருள் என்ன?

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்து பார்ப்பன வன்மத்துடன் குரல் கொடுத்த சத்தியமூர்த்தி ஐயரின் இருபத்தியோராம் நூற்றாண்டு குரல்தான் நர்சிமினுடையது. ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களோ இல்லை பதிவர்களோ அடக்க ஒடுக்கமாக இருப்பதைத்தான் இந்த வெறியர்கள் விரும்புவார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக ஹீரோ போல உலா வருவதையும், ஓசிக்காசுக்காக ஹீரோ என மொக்கைகள் உசுப்பேத்தி விடுவதையும் ரசித்து வாழும் நர்சிம் போன்ற அற்பங்களை இந்த பெண்கள் போட்டுடைத்தால் என்ன நடக்கும்? அதுதான் நர்சிமின் ஆண்குறித் திமிர் வெறி.

நர்சிமின் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று நர்சிமின் பின்னூட்டத்தில் பார்க்கலாம். இவர்களுக்குள்ளும் அப்பட்டமான ஆணாதிக்க வெறி மறைந்திருக்கிறது. இருப்பினும் அதை சற்றே நாசுக்காக மயில், முல்லையின் வினைக்கான எதிர்வினைதான் நர்சிமின் பூக்காரி என்று முட்டுகொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அற்பங்கள் முல்லை எழுதியது என்ன, நர்சிம் எழுதியது என்ன என்று தெரியாமலா பேசுகிறார்கள்? இல்லை தெரிந்தே ஊளையிடுகிறார்கள்.

“நர்சிமின் மேல் யாராவது அதுவும் ஒரு பெண் கைவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?” என்பதே இவர்களது எச்சரிக்கை. இவர்களது கருத்துதான் பொதுவில் செல்வாக்குடன் இருக்கிறது. இந்த செல்வாக்கில் சிக்குண்ட அப்பாவிப் பதிவர்களைப் பார்த்து கேட்கிறோம். முல்லை எழுதியதில் கருத்து வேறுபாடு என்றிருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அதைக் கண்டிக்கிறேன் என்று எழுதுவதை யார் தடுத்தது? ஆனால் முல்லை எழுதியதால் அவரது கையை உடைப்பதோடு, அவரது ஆளுமையையும் கடித்துக் குதறுவேன் என்று நர்சிமை எழுத வைத்தது எது? அந்த வினைக்கு இதுதான் எதிர்வினை என்றால் நர்சிமின் வினைக்கு நாங்கள் எங்கள் வினையாக அவரை பாலியல் வன்முறை செய்த குற்றவாளி என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறோம். பத்துவருட சிறைதண்டனை வழங்கப்படவேண்டுமென்று கோருகிறோம். உங்கள் பதில் என்ன? வினையின் விளைவுதான் இந்த எதிர்வினை என்று ஜல்லியடிக்கும் ‘நடுநிலைமையாளர்கள்’ அத்தனை பேரும் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

நித்தியானந்தா பிரச்சினையில் சாருவை அம்பலப்படுத்தி வினவு எழுதிய கட்டுரையின் பின்னூட்டத்தில் ரியல் என்கவுண்டர் என்ற தோழர் சாரு அபிமானிகளாக லக்கிலுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கர் முதலானோர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்ட போது பதிவர் தண்டோரா துள்ளிக் குதித்தார். “எப்படி சக பதிவர்களை தாக்கி எழுதலாம்” என்று “வினவு என்னும் பிடுங்கிகள்” என்பதாய் பதிவு போட்டார். சகபதிவர்கள் ‘தாக்கப்படுவதை’க் கண்டு பொங்கியெழுந்த பதிவர்கள் பத்துப்பேர் தண்டோரா கட்டுரைக்கு ஓட்டு போட்டு ஜல்லியடித்தார்கள். பதிவர்களின் மீது இவ்வ்வளு பாசம் வைத்திருக்கும் இந்த வேடதாரிகள் இப்போது எங்கே போனார்கள்? அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?

இதுவரை மாதவராஜ், காமராஜ், செந்தழல்ரவி, தீபா, மலர்வனம், முகுந்த அம்மா ஆகியோர்தான் நர்சிமைக் கண்டித்து பதிவிட்டிருக்கிறார்கள். சில பதிவர்கள் பின்னூட்டத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினர் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் இல்லையென்றால் நர்சிமிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். “பர்தா நற்குடி” பிரச்சினையில் இந்துப் பெண்களின் மானம் கப்பலேற்றப்பட்டதாக பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.

பதிவுலக வரலாற்றிலேயே இல்லாத அளவு ஏன் போலி டோண்டு பிரச்சினையை தூக்கிச் சாப்பிடும் அளவு உள்ள இந்த நர்சிமின் வெறியை ஆதரிப்பவர்கள்தான் கடும் விமரிசனத்திற்குறியவர்கள். நர்சிம் ஒன்றும் முகமூடி அணிந்த அனானி அல்ல. எவ்வளவு திமிர் இருந்தால் பூக்காரி இடுகையை புனைவு என்ற வகையில் தைரியமாக வெளியிட்டு விட்டு இப்போது அந்த இடுகையைத் தூக்கிவிட்டு பதிவுலகை விட்டு தற்காலிகமாக விலகுகிறேன் என்றெல்லாம் சீன் போட்டு ஏதோ அவர்தான் இப்போது பாதிக்கப்பட்ட அப்பாவி போல நடிக்க முடியும்? இந்த தைரியம் – இல்லை வெறி கொண்ட திமிரின் அடிப்படை அவரது செயலை – இல்லை வன்மத்தை நடுநிலைமை என்ற பெயரில் நியாயப்படுத்தும் பதிவர்களிடம்தான் குடி கொண்டிருக்கிறது. இல்லை, அதற்கும் நர்சிம் வாங்கிக் கொடுத்த காஸ்ட்லியான பீரும், ஃபாரின் சரக்கும்தான் காரணமோ தெரியவில்லை. அ.மார்க்சின் சீடப்பிள்ளை கூட இதுவரை வாய் திறக்காததற்கு இந்த நன்றிக் கடன்தான் காரணமோ புரியவில்லை.

சீமாட்டி லீனா விவகாரத்தை நர்சிமின் கொடுரத்தோடு இணை வைத்து வினவு மீது சிலர் இப்போது வன்மம் தீர்க்க முனையலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். லீனா பிரச்சினையில் எங்களை ஆதரித்த பதிவர்கள் கூட இப்போது நர்சிமுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். லீனாவை ஆதரித்தவர்கள் இப்போது எங்களை ஆதரிக்கலாம். ஆனால் இந்த எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் எங்களுடையதல்ல என்பதை மட்டும் குறிப்பிடுகிறோம். லீனா புனைவு என்ற பெயரில் ஒடுக்கப்படும் மக்களை, அவர்களது விடுதலையை, இயக்கங்களை, தலைவர்களை காறி உமிழ்ந்திருந்தார். அது குறித்து வெளிப்படையான விமரிசனத்தை வினவிலும், நேரிலும், தெரிவித்தோம். புனைவு என்ற பெயரில் அழுகுணி ஆட்டம் ஆடவில்லை. நர்சிமின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு லீனா ஆதரவாளர்கள் வினவை முத்திரை குத்த முயன்றால் அதுவும் நல்லதுதான். ஏனெனில் லீனாவும், நர்சிமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வாசகர்கள் உணர இது ஒரு அரிய வாய்ப்பு.

தமிழ்மணத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கை வைக்கும்படியான சூழ்நிலை வருமென்று நாங்களே எதிர்பார்த்ததில்லை. பதிவுலகில் வலது, இடது,முற்போக்கு, பிற்போக்கு என்று எல்லாமும் இடம் பெறுவதுதான் ஜனநாயகம். அதை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களைத் திட்டுவதையே அல்லது வினவை தடை செய்யவேண்டுமென்றும், கைது செய்ய வேண்டும் என்றும் கூப்பாடு போடும் ஜந்துக்களைக்கூட நாங்கள் தடை செய்யவேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நர்சிம் இழைத்திருப்பது கருத்து வேறுபாடு பற்றிய பிரச்சினை அல்ல. ஒரு அப்பட்டமான பாலியல் வன்முறை. அதற்கு அந்த எழுத்தே சான்று. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.

பெண் பதிவர்களில் சிலர் கூட நர்சிமை ஆதரிக்கும் அவலமான நிலையும் இருக்கிறது. சிலர் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கவும் கூடும். சிலர் யாரையும் விரோதித்துக் கொள்ளக்கூடாது என்று குழம்புகிறார்கள். சிலர் இந்த அநீதியை அப்பட்டமாக கண்டித்திருக்கிறார்கள். ஆனால் பெண்பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை ஒரு பரபரப்பான பதிவரசியல் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவெளியில் பெண் இயங்கும் போது ஆணாதிக்கம் போடும் தடைகள் என்பதை உணரவேண்டும். இல்லையேல் ஆயுசுக்கும் யாருக்கும் நோகாமல் மொக்கைகளையும், கும்மிகளையும் போட முடியும். காத்திரமான சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து வாயைத் திறக்க முடியாது. சந்தன முல்லை உறுதியாக இருக்கிறார். அந்த உறுதியை எங்களால் மட்டுமல்ல எல்லா பெண் பதிவர்களாலும், மற்ற பதிவர்கள், வாசகர்களாலும் பலப்படுத்த வேண்டும். இல்லையேல் முல்லை இல்லை. பெண் பதிவர்களின்றி பதிவுலகமும் இல்லை.

இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:

1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.

2) இத்தகைய நபர்களை தனிமைப் படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை  கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.

3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழி செயலை நேரில் சென்று விளக்கலாம்.

4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.

இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.

ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

  1. ஆதி – நர்சிம் பேட்டி
  2. மயிலின் பதிவு
  3. நர்சிமின் பூக்காரி பதிவு

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

12

vote-012கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் விடாப்படியாக நடத்திவரும் போராட்டத்தின் காரணமாக, கேரள மாநில அரசு, கோக் ஆலைக்கு எதிராக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவொன்றைச் சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அந்நிபுணர் குழு, கோக் ஆலையின் செயல்பட்டால் அப்பகுதியின் நிலத்தடி நீர் வற்றிப் போனதையும், அவ்வாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் நிலத்தடி நீரும் நிலமும் மாசடைந்து போனதையும் தற்பொழுது உறுதி செய்திருப்பதோடு, இதற்காக கோக் நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை நட்ட ஈடாக வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யவும் அதிகாரமிக்க கமிட்டியொன்றை அரசு அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக அறியப்படுவது பாலக்காடு மாவட்டம். பிளாச்சிமடா கிராமம் அமைந்துள்ள சித்தூர் வட்டம் நெற்களஞ்சியத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த பகுதி. நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், ரப்பர் மற்றும் காய்கனிகள் என முப்போகம் விளைந்த பிளாச்சிமடா பகுதி, கோக் ஆலை பிளாச்சிமடாவில் இயங்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலைவனம் போலாகிப் போனது. கோக், ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி எடுத்ததாலும், தனது ஆலைக் கழிவுகளை வயல்வெளியிலேயே கொட்டியதாலும் ஏற்பட்ட நிலைமை இது.

ஆலைக்கு நிலத்தை விற்ற பண்ணையாரிடம் கூலி வேலை செய்து வந்த பழனி, ஒரே வரியில் இந்த அவலநிலைமையை விளக்குகிறார். “அன்று ஒரு ரூபாய் சம்பளம். சோற்றுக்கும் பஞ்சமில்லை; நல்ல தண்ணீருக்கும் அன்று பஞ்சமில்லை. இன்று பண்ணையார் கொடுத்த 5 செண்டு நிலமிருக்கிறது. ஆனால், கிணற்றில் தண்ணீர் இல்லை.” கோக் ஆலைக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஷாகுல் அமீது 2002-க்குப் பிறகு தன்னால் விவசாயமே செய்ய முடியவில்லை என்கிறார். நான் 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இன்று மகனுடைய சம்பளத்தில்தான் தனது வயிற்றை கழிவிக் கொண்டிருப்பதாகப் பொருமுகிறார், அவர்.

நீர் வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் கோக் ஆலையின் வருகைக்குப் பின்னர், தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கே லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோக் ஆலையால் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைத் துணிகளைத் துவைப்பதற்குக்கூடப் பயன்படுத்த முடியாது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கோக் ஆலையால் இப்படி மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரையும், நிலத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்துவதற்கும், கோக் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இந்த 200 கோடி ரூபாய் போதுமானதா எனக் கேட்க வேண்டிய நேரத்தில், கோக் ஆலையோ தனக்குத் தண்டனை அளிக்க இந்த நிபுணர் கமிட்டிக்கு அதிகாரம் கிடையாது எனக் கொக்கரிக்கிறது. நிபுணர் குழு விசாரணைக்கு அழைத்தபொழுது, அதற்கு உடன்படவும் மறுத்து வந்தது, கோக் நிர்வாகம். அரசு அமைத்த நிபுணர் குழுவின் உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போல் தூக்கி வீசுவது, அரசின் அதிகாரத்திற்கே சவால் விடுவதற்குச் சமமானது என்ற போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும் கேரள மாநில சி.பி.எம். அரசாங்கம் கோக்கின் இந்தத் திமிருக்கு எதிராக அடக்கியே வாசிக்கிறது.

இடதுசாரிக் கூட்டணியின் கையில் அதிகாரம் இருந்தால், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டத்திற்கு ஆப்பு வைத்துவிடுவோம் என சி.பி.எம். உதார்விட்டு வருவதைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இதோ, கேரள மாநில அதிகாரம் இடதுசாரிக் கூட்டணியின் கையில்தான் இருக்கிறது. அக்கூட்டணி ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தால், “உடனடியாக 200 கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவில் கட்டச் சொல்லி கோக்கிற்கு உத்தரவிட்டிருக்கலாம். அப்படிக் கட்டத் தவறினால், கேரளாவிலுள்ள கோக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என ஒரு வார்த்தைக்காகவாவது மிரட்டல் விட்டிருக்கலாம். நிபுணர் குழுவின் பரிந்துரையையொட்டி கோக் நிர்வாகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கூட்டணி ஆட்சி, ஒப்புக்குச் சப்பாணியாக, அதே பாலக்காடு மாவட்டத்தில் இயங்கிவரும் பெப்சி ஆலை நிர்வாகத்திடம், “இனி, 7 இலட்சம் லிட்டர் நீருக்குப் பதிலாக, 2.34 இலட்சம் நீரைத்தான் நிலத்தடியிலிருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைக் கேட்டு பெப்சி நிர்வாகம் ஆடிப் போய்விடும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? பிளாச்சிமடாவில் உள்ள கோக் ஆலைகூட ஒவ்வொரு நாளும் 5 இலட்சம் லிட்டர் நீரைத்தான் நிலத்தடியில் இருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால், கோக் நிர்வாகமோ ஒவ்வொரு நாளும் 15 இலட்சம் லிட்டருக்கும் மேலாக நீரை உறிஞ்சி எடுத்துப் பயன்படுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தண்ணீர் திருட்டுக்காக கோக் நிர்வாகம் ஒருமுறையேனும் தண்டிக்கப்பட்டதுண்டா?

பிளாச்சிமடா மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த இந்த வெற்றியைச் செயல்படுத்த வேண்டும் என்றால்கூட, கோக்கிற்கு எதிராக நடந்துவரும் இப்போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், கோக்கின் பண பலமும் அரசியல் செல்வாக்கும் பாதாளம் வரை பாயக்கூடியது. இதற்கு ஆதாரமாக கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.

கோக்கின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைக் கண்ட பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியம், கோக்கின் ஆலை செயல்படுவதற்குத் தடை விதித்தது; கேரள மாநில அரசைக் கொண்டே இந்தத் தடையை உடைத்தெறிந்தது, கோக். இதற்கடுத்து, 34 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி எந்தளவிற்கு நீரைப் பயன்படுத்துவரோ, அதே அளவு நீரைத்தான் கோக் ஆலையும் பயன்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தின் மூலம் ஒரு தீர்ப்பைப் பெற்றனர், பிளாச்சிமடா மக்கள். இதனையும் கேரள உயர்நீதி மன்றத்தைப் பயன்படுத்தியே உடைத்தது, கோக். பிளாச்சிமடா மக்கள் குடிதண்ணீருக்காகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தபொழுதுதான், இப்படிபட்ட தீர்ப்புகளையும், அரசாணையையும் கோக் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சினை பற்றி தலையங்கம் எழுதியுள்ள “எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி” என்ற ஆங்கில வார இதழ், “பிளாச்சிமடா மக்கள் கடந்த பத்தாண்டுகளாக சட்டபூர்வமாகப் போராடி இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். இது நடைமுறைக்கு வரவில்லையென்றால், நீதியைப் பெறுவதற்கு ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் மக்கள் போராடத் தொடங்கி விடுவார்கள்” என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.

இந்த வரிகளைத் தோலுரித்தால், இந்திய ‘ஜனநாயகமும்’, அதன் ஆட்சியாளர்களும், ஓட்டுக் கட்சிகளும் எந்தளவிற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் ஏவல் நாய்களாக நடந்து வருகிறார்கள் என்பது அம்பலமாகும். ஆனாலும் என்ன செய்வது? எத்தனை முறை குச்சியை வைத்துக் கட்டினாலும், நாய் வாலை நிமிர்த்திவிட முடியாதே!

_______________________________________________

புதிய ஜனநாயகம் – மே 2010
_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

திருப்பூர் காதல் !

88

vote-012ஏழு ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப் பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

வெளியூரில் காதலித்து விட்டு இங்கு ஓடிவரும் சிலராலும் இங்கு வந்த பின்பு காதலிக்கும் பலராலும் நிறைந்திருக்கிறது எங்கள் நகரம். வேலை தேடி வரும் பலரும் இளையோர்கள், பெரும்பாலான பணியிடங்கள் நெருக்கடியானவை, நீண்ட பணி நேரங்கள் (குறைந்தபட்சம் 12 மணி நேரம் ), சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கு கிடையாது. இவையெல்லாம் இளையோர்கள் ஒரு துணையைத் தேடிக் கொள்வதற்கான காரணத்தையும் வாய்ப்பையும் தருகின்றன. நான் தஞ்சாவூரிலோ அல்லது புதுக்கோட்டையிலோ மட்டும் இருந்திருந்தால் இந்த பதிவெழுதும் யோசனை கூட வந்திருக்காது என்பதுதான் நிஜம்.

என் அண்ணன் கல்லூரியில் படித்த போது அவனுடன் படித்த மாணவனின் பதிவுத் திருமணத்தை தஞ்சாவூரில் நடத்தி வைக்கும் வேலையை செய்தான் (ஒரு குழுவாக). சுமாராக ஒரு வாரம் ஜோடியை தலைமறைவாக வைத்து, தேடி வந்த மணமகனின் தந்தையை எதுவுமே தெரியாது என்று அப்பாவி போல சொல்லி நம்பவைத்து.., அவன் செய்த இந்த ஒரு செயற்கரிய செயலைத் தவிர வேறு சொல்லிக் கொள்ளும்படியான சம்பவம் அங்கு நடந்ததில்லை. அவனது அந்த காரியம் “எவ்வளவு பெரிய கிரிமினல் வேலை” என்று என் அம்மாவால் வருணிக்கப்பட்டது.

வேலை தேடி இங்கு வந்த போது நான் தங்கியது ஒரு அடித்தட்டு மக்கள் வசிக்கும் காலனி வீட்டில் (அது என் அப்பாவின் நண்பரின் அலுவலகம் அல்லது அது போன்றதொரு இடம், அவர் சாயத் தொழிலுக்கான வேதிப் பொருட்களை விற்பனை செய்பவர்.. ஆகவே மற்ற வட்டார வீடுகளில் அவர் மூலப் பொருட்களை இருப்பு வைக்க அனுமதிக்க மாட்டார்கள்). இதை நான் குறிப்பிடக் காரணம் எனது திருப்பூர் நண்பர்கள் பலர் இது போன்ற  வீடுகளை பார்த்தேயிராதவர்கள். அந்த தெருவில் வசிக்கும் யாவரும் வாரக் கூலி வாங்குபவர்கள். சரிபாதி பேர் பிரம்மச்சாரிகள். அங்குதான் காதல் திருமணங்கள் எத்தனை சுலபமானது என்பதை தெரிந்து கொண்டேன்.

எங்கள் காலனியின் முதல் வரிசை வீட்டிலிருந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டாம் வரிசை வீடு ஒன்றில் வசித்த கேரளப் பெண்ணும் காணாமல் போனார்கள். பதினைந்து நாட்கள் கழித்து அதே காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார்கள். கொடுமையிலும் கொடுமையாக அது குறித்து தெருவில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது குழப்பத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட காலனிவாசி திருமணத்திற்கான எளிமையான வழியை சொன்னார்.

நண்பர்கள் சிலருடன் காதலர்கள் சிவன்மலைக்கு செல்வது, அங்கு திருமணம் செய்து கொண்டு பிறகு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் குடியேறுவது.. சுலபம். யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமா? ஏரியாவை மாற்றினால் போதும். நகரைச் சுற்றி புறாக் கூண்டு வீடுகள் சிதறிக் கிடக்கின்றன.

குடியிருப்புக்கு நேர் எதிரான நிலையில் இருந்தது அப்போது நான் வேலை செய்த அலுவலகம். அங்கு பணியாற்றிய எல்லோரும் முப்பது வயதுக்குக் குறைவான ஆண்கள் (ஓரிருவர் தவிர).

பிறகு அங்கு  ஒரு பெண் வரவேற்பாளராக நியமிக்கப் பட்டார். அதுவரை தூங்கி வழிந்த அந்த அலுவலகம் அதன் பிறகு வழிந்த படியேதான் விழித்தது. ஓயாது ஒலித்த தொலைபேசிகள், நிற்க இடமில்லாமல் நிறைந்திருந்த வரவேற்பறை, என எங்கள் தகுதிக்கு மீறிய கூட்டத்துடன் காணப்பட்டது அலுவலகம். ஸ்ரீராமனின் தோளை பார்த்தவர்கள் தோளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கம்பர் சொன்னதைப் போல இங்கு அலுவலகம் வந்தோர் “ரேஷ்மா கண்டார் ரேஷ்மாவே கண்டார்” என்று சொல்லும் படியானது நிலைமை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ).

தலைப்புக்கு அனாவசியமான சம்பவம் என்றாலும் இதில் ஒரு செய்தி இருக்கிறது, அதாவது சைட் அடிக்கவும் நம் ஆட்கள் தகுதி பார்க்கிறோம் என்பதுதான் அது. இதே தகுதி பார்க்கும் பழக்கம் காதலிலும் தொடர்கிறது. நான் பார்த்தவரை அலுவலகப் பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு நிகரான பணியில் உள்ளவர்களையே காதலியாகத் தெரிவு செய்கிறார்கள் (இதே தகவலை மூன்றாமாண்டு உளவியல் பாடமும் உறுதி செய்கிறது). நடுத்தர வர்க்கத்தவர்கள்தான் காதலிப்பதில் மிகவும் திட்டமிடலோடு இருப்பதாக நான் கருதுகிறேன்.

காதலிப்பவரின் பொருளாதார நிலை, அவரது சாதி ஆகியவை காதலை திருமணத்தை நோக்கி நகர்த்துவதற்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. என் உடன் படித்த மாணவி, அவளது காதலன் விரும்புவதாக தெரிவித்த போது அவனது சாதியை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே தான் சம்மதித்ததாக தெரிவித்தாள். அதாவது துணைவர் தனது சாதிக்காரராக இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் தனக்கு நிகரான சாதிக்காரராக இருக்கவேண்டும் என்பதுதான் (பிற்பட்டவர் =பிற்பட்டவர்). மிடில் கிளாஸ் காதல் பெரும்பாலும் பெற்றோருக்கு பதிலாக மணமக்களே செய்து கொள்ளும் திருமண ஏற்பாடு எனும் கருத்து ஓரளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். (நான் பார்த்தவற்றை வைத்து சொல்கிறேன் உண்மை இதற்கு மாறானதாவும் இருக்கக் கூடும்).

இதுவரை திருப்பூர் மேல்தட்டு வட்டாரங்களில் காதல் திருமணத்தை நான் கண்டதில்லை. இங்கு அவர்களது திருமணமும்  ஒரு வியாபார ஒப்பந்தத்தைப் போலவே உள்ளது. ஆகவே நிதி மிகுந்தோரது காதல் பற்றிய தகவல் ஏதும் எழுதுவதற்கில்லை. எல்லா இடங்களிலும் போலிகள் வந்த பிறகு காதலிலும் இல்லாதிருக்குமா என்ன? அதற்கும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

என் சென்னை நண்பன் ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ‘சின்சியராக’ காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். கொங்கு வட்டாரத்தில் உள்ள எனது கல்லூரி கால நண்பன் ஒருவன் கடைசிகட்ட நிலவரப்படி ஏழு பெண்களுடன் நட்புக்கும் காதலுக்கும் இடையேயான ஒரு விஷயத்தை தொடர்கிறான்.  ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனி செல்போன் எண் வைத்துக் கொண்டு அவன் அதை கையாளும் லாவகம் நம்மால் கற்பனைகூட செய்ய முடியாதது.

தொழில்முறை (ப்ரொபஷனல்) காதலனான அவனும் இதைப் படிக்கக் கூடுமென்பதால் அவன் ஓய்வு நேரத்தில் ஒரு நூற்பாலையில் பணி செய்வதையும் நான் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது ( நீங்க அவனை வெறுமனே காதல் மட்டும் செய்பவனாக நினைக்கக் கூடாதில்லையா?? ). ஆயினும் ஆறுதலான செய்தி யாதெனில் திருமணத்தில் முடியும் காதல்கள் திருப்பூரில் மிக அதிகம்.

காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் ஆச்சரியமளிப்பதல்ல, பார்வையாளர்களுக்கும் அவ்வாறானதே. நான் கடைசியாக வேலை பார்த்த அலுவகம் உள்ள அடுக்ககத்தில் ஒரு சேட்டு வீடு இருந்தது. அவரது வீட்டு பதினேழு வயது வேலைக்கார (உ.பி மாநில)  இளைஞன் ஒரு நாள் தனது முதலாளியம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அன்றே அருகிலிருக்கும் அங்காடியில் வேலை செய்த ஒரு இளம் பெண் அவனை தேடி எங்கள் வளாகத்துக்கு வந்தாள்.

நடந்தது என்னவென்றால் இளைஞன் கடைக்கு சென்று வந்த வகையில் இருவருக்கும் காதலாகியிருக்கிறது. கடையை மூடிவிட்ட கவலையில் இளைஞன் முதலாளியுடன் சண்டையிட்டு வெளியேற காதலியோ கடையில்லாவிட்டாலும் காதல் இருக்கும் நம்பிக்கையில் வந்துவிட்டாள். இதில் ஆச்சர்யப்படும் சங்கதி என்னவெனில் இவர்கள் சந்தித்து மூன்று மாதங்களே ஆகியிருக்கிறது, பையனுக்கு தமிழ் தெரியாது. பெண்ணுக்கு ஹிந்தி தெரியாது. இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆண் பெண் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு சாதகமானதாக இல்லை ஆயினும் காதல் வந்து விட்டது!!.

கிட்டத்தட்ட ஆயுளின் பாதியை தொட்டுவிட்ட என் முப்பது வருட வாழ்கையிலும் இதைவிட பேரதிசயம் ஒன்றை நான் கண்டதில்லை. ( விடுபட்ட தகவல்கள் இருக்கின்றன பதிவை தொடரும் எண்ணமும் இருக்கிறது… பார்க்கலாம் ).

______________________________________________________________

–          வில்லவன்

________________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!

198


vote-012இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.

கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட  கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

_____________________________________________

இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!

1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.

1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.

உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.

ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.

________________________________________________

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

______________________________________________________________

விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!

தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.

பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.

தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர்.  உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.

புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து  தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.

குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.

அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.

இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.

அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.

இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.

இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.

இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.

கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.

இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம்,  பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.

____________________________________________________________

இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!

3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.

10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும்  வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.

இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.

ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.

தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?

பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.

பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.

உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.

இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.

______________________________________________________

•  புதிய கலாச்சாரம், மே – 2001

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!

49

vote-012பதிவர் சங்கம் தொடர்பாக வினவு கருத்து தெரிவிக்க வேண்டுமென்று சில நண்பர்கள் அப்போது தொலைபேசியில் கோரியிருந்தார்கள். அலை ஓய்ந்த பிறகு பொறுமையாக சில கருத்துக்களை தெரிவிக்கலாமென்று காத்திருந்த நிலையில் அலை மட்டுமல்ல கடலையே காணோம்! கடலே காணாமல் போன பிறகு நாம் கடல் கொந்தளிப்பு பற்றி எழுதுவது தேவையில்லைதானே?

எனினும் அண்ணன் உண்மைத்தமிழன் அப்போது எழுதிய பதிவர் சங்க கனவு திட்டம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. அதன்படி சங்கம் ஆரம்பித்த பிறகு அலுவலகம் ஒன்று திறந்து, சில கணினிகளை வாங்கி நிறுவி, முதலில் தன்னார்வத் தொண்டு பதிவர்கள் மூலமும், பின்னர் சம்பளத்துக்கு ஆள் போட்டும், வலைப்பதிவுகள் எப்படி ஆரம்பிக்க வேண்டுமென்று புதியவர்களுக்கு சொல்லி கொடுப்பார்களாம். இதன்மூலம் தமிழுக்கும், பதிவுலகுக்கும் சீரிய பங்கை சங்கம் செய்யுமென்று உண்மையண்ணன் தூய தொண்டுள்ளத்தோடு சிந்தனையை பகிர்ந்திருந்தார். இதில் முதல் படம் பற்றி ஒரு உதவி இயக்குநர் கொண்டிருக்கும் கனவைப் போல அவர் சிலாகித்திருந்தார்.

இங்கே அவரது கனவை கேலி செய்வதாக யாரும் எண்ண வேண்டாம். ஆனால் தமிழுக்கும், பதிவுலகிற்கும் பல முன்னோடிகள் செய்த, செய்துவரும், அமைதியான, பணிவான, ஆர்ப்பாட்டமில்லாத பங்களிப்பையும், தொண்டையும் அண்ணன் உண்மைத்தமிழன்தான் கேலி செய்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம். ஏன்?

________________________________________________

ஆங்கிலம் கோலேச்சி வந்த இணையத்தில் தமிழை புகுத்தி, தரப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, இன்னும் அத்தனை மென்பொருள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைத்து அதற்கான சேவைகளை இலவசமாக வழங்குபவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களின்றி தமிழ் பதிவுலகமும் இல்லை, எனவே வினவும் இல்லை.

தமிழை யூனிகோடில் கொண்டு வந்தது, தமிழ் தட்டச்சு முறையை உருவாக்கியது, அதை கற்றுக்கொடுப்பதற்கான வசதிகள், தேடுபொறிகளை தமிழ்ப்படுத்தியது, பிலாக்கர், வோர்ட்பிரஸில் இரண்டிலும் தமிழைக் கொண்டுவந்தது, விக்கி பீடியாவில் தமிழை வளர்ப்பது என்று இன்னும் நமக்குத் தெரியாத மென்பொருள், தொழில்நுட்ப விவகாரங்களையெல்லாம் எந்த விளம்பரமோ, பண ஆதாயமோ இன்றி பல ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். தமிழார்வலர்கள் தவிர்த்த சில பெரும் நிறுவனங்கள் உள்ளூர் சந்தையைப் பிடிக்க வேண்டுமென்று கூட இதில் இறங்கியிருக்கலாம். அதே சமயம் தமிழார்வமுள்ள திறமையாளரின்றி இதுவும் கூட சாத்தியமில்லை.

இவர்களுக்கு கணினி அறிவும், தமிழார்வமும் சேர்ந்து இருந்தது நமக்கு கிடைத்திருக்கும் பேறு. இவர்கள் செய்யாதவற்றையா உண்மைத் தமிழனும், அவரது கனவும் செய்யப் போகிறது?

இணையம் என்பது மெய்நிகர் உலகம் அதாவது விர்ச்சுவல் உலகம். இங்கே எந்தப் பணியையும் பௌதீக ரீதியாக உடனிருந்து நேரிட்டுப் பார்த்துப் பேசி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி இருப்பதாக நினைப்பவர்களுக்கு இந்த ஊடகம் பற்றி எந்த அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது வலைப்பதிவர்களாக இருப்பவர்களெல்லாம் மெய்நிகர் உலகின் வசதிகளைத் தானே கற்றுக்கொண்டுதான் இன்று தனிராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள். சில பதிவர்கள் புதியவர்கள் பதிவு ஆரம்பிப்பதற்கான தொழில் நுட்ப விவகாரங்களை எளிமையாக இன்றும் எழுதி வருகிறார்கள்.

இன்று தமிழ் பதிவுலகில் சுமார் ஏழாயிரம் வலைப்பதிவர்கள் இருப்பதாக தெரிகிறது. பதிவர்கள் கணக்கு இதுவென்றால் வாசகர்கள் கணக்கு சில இலட்சங்களில் இருக்கும். இவர்களில் எழுத்தார்வமும், துறை சார்ந்த அறிவும் கொண்டவர்கள் ஏராளமிருப்பார்கள். இவர்களெல்லாம் எழுத வந்தால்தான் தமிழ் பதிவுலகம் இன்னும் தரமானதாக வளரும். எனினும் வலைப்பதிவு ஆரம்பிப்பது குறித்து நிறைய தயக்கங்களும், சந்தேகங்களும் பலருக்கு இருக்கக்கூடும்.

அவை அத்தனைக்கும் பதிலளித்து, எளிமையாகவும், செய்முறை வரைபடங்கள் மூலமும் பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று தமிழ்மணம் ஒரு கையேடு தயாரித்திருக்கிறது. இதை முன்னர் தமிழ்மணம் காசி தயாரித்ததை இன்று தமிழ்சசி புதுப்புத்திருக்கிறார். இதை படிக்கும் வாசகர்கள் எவரும் கையோடு ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். எனவே நண்பர்கள் தமிழ்மணத்தின் அந்த கையேட்டை முதலில் படித்துவிட்டு வாருங்கள்.

பலரும் வலைப்பதிவு என்றால் நிறைய செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்று நினைக்கலாம். இல்லை, ஒரு கணினியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும். அதைத்தாண்டி ஒரு நயா பைசா செலவில்லாமல் வலைப்பதிவு என்ற மின் பத்திரிகையை ஆரம்பிக்கலாம். அடுத்து இதற்கு நிறைய தொழில்நுட்ப அறிவு தேவை என்று சிலர் கருதலாம். அப்படி இல்லை. ஒரு செல்பேசியையோ, இல்லை தொலைக்காட்சி ரிமோட்டையோ இயக்கத் தெரிந்த எவரும் அடிப்படைக் கணினி அறிவை விரைவில் கற்கலாம். ஒரு மின்னஞ்சல் கணக்கை பராமரிக்கத் தெரிந்த எவரும் வலைப்பதிவை சுலபமாக நடத்தலாம்.

மற்றபடி போகப் போக இது தொடர்பான தொழில்நுட்ப பிஸ்தாவாக நாம் மாறலாம். வினவு ஆரம்பிக்கும் போது நாங்களும் அப்படித்தான் அறிவிலிகளாக இருந்தோம். பின்னர் மெல்ல மெல்ல கற்றுக் கொண்டு இயங்கி வருகிறோம். அடுத்த சந்தேகம் தமிழில் தட்டச்சு தெரியாமல் இருப்பது, அதற்கான மென்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற கேள்வியெல்லாம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதற்கும் தமிழ்மணம் விரிவாகப் பதிலளித்திருக்கிறது. பதிவர்கள் எவருக்கும் முறையான தட்டச்சு தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பதிவை எழுதுவது ஓரிரு மணி நேர விடயமென்பதால் ஒலியியல் மூலமாக கூட தமிழில் எழுதலாம். இன்று பின்னூட்டமிடும் வாசகர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

ஆனால் ஒரு நீண்ட காலநோக்கில் தமிழ் தட்டச்சு பயில்வது நல்லது. வினவு அனுபவத்தைப் பொறுத்த வரை நாங்கள் தமிழ் 99 தட்டச்சு முறையை கையாள்கிறோம். இதை நீங்களும் சுலபமாகக் கற்கலாம். எனது அனுபவத்தில்  ஐந்து நாட்களில் இதைக் கற்றுக்கொண்டு ஆறாவது நாளில் கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டேன். இதைக் கற்பதும், இதற்கான மென்பொருளும் இலவசமாகவே கிடைக்கின்றன. தமிழ்சசி இவற்றை விளக்கமாக விவரித்திருக்கிறார்.

புதிய வலைப்பதிவர்கள் என்ன மாதிரி எழுத வேண்டும் என்பதற்கு நடப்பிலுள்ள பதிவர்களின் வகைமாதிரிகளை பார்த்து முடிவு செய்யலாம். அரசியலா, சமூகமா, இலக்கியமா, சினிமாவா, செய்தியா, டயரிக்குறிப்பா, குழந்தை வளர்ப்பா, சமையலா, என்று ஏகப்பட்ட பதிவர்கள் தமிழில் இயங்கி வருகின்றனர். இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளை தமிழ்சசி தருகிறார். அதில் பல்சுவைப் பதிவுகள் என்ற வகையினத்திற்கு அண்ணன் உண்மைத்தமிழனை சான்றாக காட்டுகிறார். அந்த வகையில் நமது அண்ணனும் புதிய பதிவர்களுக்கு எப்படியோ ஒரு முன்னோடியாக மாறிவிட்டார்.

அடுத்த பிரச்சினை புதிய பதிவர்கள் எழுத ஆரம்பித்தாலும் அவற்றை யார் படிப்பார்கள் என்ற கேள்வி வருகிறது. அதற்குத்தான் திரட்டிகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் மற்றவற்றில் இல்லாத தொழில்நுட்ப வசதிகளுடன் தமிழ்மணம் இயங்கி வருகிறது. தமிழ்மணத்தின் மூலம் உங்கள் எழுத்து உலகெங்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐந்து கண்டங்களில் உள்ள தமிழ் மக்கள் உங்கள் எழுத்தை படித்து கருத்து தெரிவிப்பதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது. தமிலிஷ் போன்றவற்றில் நாம்தான் நமது இடுகைகளை அளிக்க வேண்டும். அதை படிப்பவர்கள் வாக்கு போட்டு முதல் பக்கத்திற்கு சிபாரிசு செய்வார்கள். இன்னும் பல திரட்டிகள் தமிழில் இருக்கின்றன. இவையெல்லாம் போகப்போக உங்களுக்கு தெரியவரும். ஆரம்பத்தில் நீங்கள் தமிழ்மணத்தின் மூலமாகக் கூட உங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

இதன்பிறகு நீங்களும் ஒரு பதிவராக ஆகிவிடுவீர்கள். உடனே உங்களுக்குத் தெரியாமலேயே உங்களிடம் ஒரு மாற்றம் தொடங்கும். பின்னூட்டமிடுவது, மற்ற பதிவர்களுடன் விவாதிப்பது, தனது பதிவில் வரும் வாதங்களுக்கு பதில் சொல்வது, குறிப்பிட்ட பிரச்சினையில் அரசியல் நிலைப்பாடு எடுப்பது எல்லாம் போகப்போக பழக்கமாகும்.

பதிவுலகில் இயங்குவது, எதை எழுதுவது, எதை படிப்பது, இவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம். இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது வாசகர் அனைவரும் பதிவு ஆரம்பிக்க முடியும் என்பதையே.

தமிழ்மணம் சார்பாக தமிழ்சசி விரிவாக தயாரித்திருக்கும் இந்த நடைமுறைக் கையேடை பிரபல பதிவர்கள் அறிமுகம் செய்யவேண்டும். அண்ணன் உண்மைத்தமிழன் இதையாவது செய்தாரென்றால் அவரது வாசகர்களில் பலர் பதிவராக சுலபமான வழியில் ஆக முடியும். தமிழ்மணத்தின் இந்த நடைமுறைக் கையேட்டில் இதுவரை நான்கு பேர்தான், அதிலும் மூன்றுபேர்தான் பின்னூட்டமிட்டு இந்த முயற்சியை வாழ்த்தியிருக்கிறார்கள். அதில் முதல் பின்னூட்டமிட்டது யார் என்பது பிரபல பதிவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். அது கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போல தொண்டரை தொண்டரே புரிந்து கொள்வர் என்றும் சொல்லலாம். உண்மைத்தமிழன் கூட இந்த பதிவை இன்று வரை படித்த மாதிரி தெரியவில்லையே. ஏனோ?

இப்படி சுலபமான முறையில் புதிய பதிவர்களை உருவாக்கும் வசதிகள் இருக்கும் போது உண்மையண்ணன் கானல் நீராக கனவு மடம் கட்ட வேண்டியதில்லை. பதிவுலகில் மட்டுமல்ல இந்த உலகிலேயே மிக வேகமாக தமிழ் தட்டச்சு செய்பவர் இந்த அண்ணன்தான் என்று ஒரு பதிவர் சொன்னார். இருக்கலாம். ஆனால் வேகமிருக்கும் இடத்தில் விவேகம் இருக்க வேண்டியதில்லையே!

புதிய பதிவர்களுக்கான  தமிழ்மணத்தின்  செய்முறைக் கையேடு

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!

60

vote-012இப்போது நான் மலேசியாவில் பணி புரியும் ஒரு அந்நிய நாட்டு தொழிலாளி. இங்கு யார் மீதும், அல்லது இந்நாட்டின் மீதோ அவதூறு கூறும் நோக்கம் எனக்கு இல்லை. அந்நிய நாட்டில் வேலை வாய்ப்பு தேடும் பொழுது ஏற்படும் வலிகளையும் ஏமாற்றங்களையும் முடிந்தவரை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

______________________________________________

அந்நிய நாட்டுக்கு வேலை தேடி செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தமிழ்நாட்டு தமிழனாக இருந்தால், ஊரில் சம்பாதிப்பதை விட குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு சம்பாதித்து பின்னர் ஊர் திரும்பி வளமான வாழ்வு வாழலாம். வாட்டும் வறுமையில் இருந்து தப்பிக்கலாம். கூடப் பிறந்த சகோதர சகோதரிகளை கரையேற்றலாம்.  ஊரிலேயே சம்பாதித்து அடைக்க முடியாத கடனை வெளிநாட்டில் சென்று சம்பாதித்து அடைக்கலாம். இலங்கை தமிழனாக இருந்தால் காரணம் சொல்லாமலே புரியும். இப்படி காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம் இறுதியில் எல்லோரும் சந்திப்பது ஒரே நேர்கோட்டில் தான்.

அந்நிய நாட்டு வேலைக்காக முகவர் நிலையத்தில் பணத்தை கட்டுவதில் இருந்து அலைச்சல்களும் உளைச்சல்களும் ஆரம்பமாகி விடுகின்றன. அம்மாவின், சகோதரியின், மனைவியின் நகைகள், சேர்த்து வைத்த நிலங்கள் எல்லாவற்றையும் விற்று இல்லை கடன் வாங்கியோ, முகவருக்கு கொடுத்து பின்னர் அவர்களுக்கு பின்னாலேயே நாயாய் பேயாய் அலைந்து ஒருவாறாக விமானமேறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு நாள் காலையில் வந்து இறங்கும் ஒரு அந்நிய தொழிலாளியின் ஏமாற்றங்களும், துன்பங்களும் இங்கு புதிதாக ஆரம்பிப்பதில்லை. ஊரில் முகவர்களிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கட்டுவதில் இருந்தே அவை தொடங்குகின்றது.

முகவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்களா? அல்லது ஒழுங்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்களா?, வெளிநாட்டு வேலையை பற்றி, சம்பளத்தை பற்றி அவர்கள் கூறியதெல்லாம் உண்மைதானா? எல்லாம் நிறைவேறும் போது மட்டுமே கண்டுகொள்ள முடியும். இங்கு என்னையே உதாரணத்திற்க்கு எடுத்துக் கொள்ளலாம். இலங்கை தலைநகரில் வெள்ளவத்தையில் உள்ள ஓர் பிரபலமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம். அவர்கள் என்னிடம் கூறிய வேலை, கணினி வன்பொருள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் பொதி செய்யும் வேலை. அவர்கள் கூறியதை நம்பினேன். அவர்கள் கூறியதை வேறு வழிகளில் உறுதிப்படுத்தும் வழிகள் இருந்த போதும் அத்தகைய மனநிலையில் நானும் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் கொழும்பில் அப்போதிருந்த நெருக்கடியில் அங்கிருந்து வெளியேறினால் போதும் எனும் மனநிலையே இருந்தது.

_________________________________________

அப்படிப்பட்ட நிலையில் அந்நிய நாட்டில் வந்திறங்கிய அடுத்தநாள் அதே நிறுவனம் ஒரு கணினி வன்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை அல்ல, ஒரு கட்டுமான குத்தகை நிறுவனம் என்பதும், அடுத்தநாள் காலையில் உங்களுக்கு ஓர் பாதுகாப்பு காலணியும், பாதுகாப்பு தலைக்கவசமும் தந்து கையில் மண்வெட்டியுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் நெடுஞ்சாலையில் பிரிமிக்ஸ் அள்ளிப்போடும் வேலைக்கு அனுப்பினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எனக்கு அப்போதிருந்த மனநிலையில் என்னை இங்கு அனுப்பி வைத்த முகவர் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாராவது என் முன் வந்திருந்தால் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்குமென்றே தோன்றுகிறது. வெளிநாட்டு வேலைக்கு வந்த முதல் நாளே ஆத்திரத்துடன் கூடிய கடுமையான ஏமாற்றத்தை சந்தித்தேன்.

நான் நினைத்திருந்தால் அடுத்த ஆறாவது மாதத்தில் என்னுடைய சொந்த செலவிலேயே விமான பயண சீட்டு எடுத்து நாடு திரும்பியிருக்க முடியும். ஆனால் முகவர் நிலையத்துக்கு கட்டிய ஒரு லட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாவும், நான்கு வருடத்திற்கு முந்திய இலங்கை நிலவரமும் என்னை சமாதானம் செய்ய வைத்தது. வேறுவழி? இதுகூட பரவாயில்லை. விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்று, எம்மை பொறுப்பேற்க எமது நிறுவனத்தை சார்ந்த யாரும் வராததால், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எங்களை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு இடைத்தங்கல் தடுப்பு முகாமில் கொண்டு சென்று விட்டனர். அங்கு இந்தியா பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த பலர் அங்கு இருந்தனர்.

ஒவ்வொருவருடைய கதையும் மிக மோசமான சோகக் கதைகள். தமிழ்நாடு வேதாரணியம் பகுதியை சேர்ந்த ஒருவர், அவர் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் காத்திருப்பதாகவும், தனக்கு கூறப்பட்டிருந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் வந்து தன்னை அழைத்து செல்லவில்லை என கூறி வேதனைப்பட்டார். இதே போல் இன்னொரு தமிழக தமிழர் இவருக்கு வேலை தரும் முகவர்களால் கூறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு நிறுவனமுமே இங்கு செயல்படவில்லை என குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் இவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி “எங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுங்கள்” என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட போது, “அது இந்திய தூதரகம் முயற்சி எடுத்தால் நீங்கள் இந்தியா திரும்பலாம். நாங்கள் அவர்களுக்கு அறிவித்து விட்டோம்” என கூறியிருந்தார்கள்.

இது இவ்வாறிருக்க கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இன்னொருவரின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் கிட்டத்தட்ட சித்தப்பிரமை பிடித்தவர் போல் வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம். இருந்த நிலத்தை அடமானம் வைத்தும், நகைகளை விற்றும் முதல் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் மலேசிய நாட்டுக்கு விமானம் ஏறியிருக்கிறார். வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் கம்பனியை சேர்ந்த யாரும் வந்து அழைத்து செல்லாத நிலையில், வீட்டுக்கும் தகவல் சொல்லமுடியாத நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர் கூறினார். இவர்களை போல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு தங்கி இருக்கும் இந்திய நாட்டவர்கள் இன்னும் பலர் இதே நிலையில் இருந்தனர்.

இவர்கள் எல்லோரும் கட்டிட நிர்மாண வேலைகளுக்காகத்தான் இங்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர். இங்கு இவர்கள் வெவ்வேறு இடங்களில் செய்யப் போகும் வேலை ஒன்று. ஆனால் அதற்கு இவர்கள் தங்கள் முகவர்களிடம் கொடுத்த தொகையோ ஆளாளுக்கு மாறுபடுகிறது. இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே பயம் பிடித்து விட்டது. எனக்கும் இவ்வாறு ஆகிவிட்டால்?  நான் அங்கு இருந்த நான்கு நாட்களில் அத்தடுப்பு முகாமிற்கு பலர் வந்து கொண்டிருந்தனர். வந்த அடுத்த நாளிலோ அல்லது அதற்கு பின்னரோ அவர்கள் வேலை செய்யப் போகும் நிறுவனத்தை சார்ந்தவர்கள் வந்து அவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தனர். இவர்களை அழைத்து செல்லத்தான் யாரும் வரவில்லை.

ஆனால் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறினால் மட்டும் இவர்களது துன்பங்களுக்கு முடிவு கிட்டுவதில்லை. கதையே இங்குதான் ஆரம்பம். முகவர்களின் ஏமாற்று எங்கே ஆரம்பிக்கிறது என பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கப்பல் திருத்தும் துறைமுகம் ஒன்றில் பணிபுரிய தமிழ் நாட்டில் இருந்து சிலர் வருகின்றனர். கப்பல் திருத்தும் தொழிலகத்தில் பணி புரிவதற்கு முன்னர் பணி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அடிப்படையிலேயே பணிக்கு அனுப்பப்படுவர். வந்தவர்களில் ஒரு சிலர் படிப்பு வாசனையே அற்றவர்கள். இப்போது இவர்களின் நிலை என்ன? “ஊரில ஏஜெண்ட் கப்பல் வேலைன்னு சொன்னான், மாசம் பதினையாயிரம் சம்பாதிக்கலாம்னும் சொன்னான், ஆனால் பரீட்சை எழுதனும்னு சொல்லலையே படுபாவிங்க, தொண்ணூறாயிரம் ரூபாவை சுளையா வாங்கிட்டான்களே?, என்ன பண்ணுவேன்” என புலம்பினார்.

இப்பொழுது இப்படிப்பட்ட நிலைமையில் இவர் நாடு திரும்பவும் முடியாது. வந்த கடனை அடைத்தே தீர வேண்டுமானால் வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டி வரும். அப்படி செய்வதானால் அது சட்டவிரோதம். மலேசியாவில் அந்நிய தொழிலாளர் சட்டவிதிகளின் படி, எந்த நிறுவனத்தில் வேலை செய்ய வந்தார்களோ, அதில்தான் அவர்களின் ஒப்பந்த காலம் முடியும் வரைக்கும் வேலை செய்யலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சம்பள தகராறுகள் அல்லது முதலாளி மீதான அதிருப்தி காரணமாக ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை. வேறு நிறுவனங்களில் வேலை செய்தால் அது சட்ட விரோதம். ஆனால் அதையும் மீறி சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் உருவாகும் இடம் இங்கே தான்.வந்த நிறுவனத்திலும் வேலை செய்ய முடியாது, வேறு நிறுவனத்திற்கும் போகமுடியாது, ஊரில் வேறு கடன் வாங்கி வந்திருக்கிறோம், ஆதலால் சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை. பிடிபட்டால் தண்டனை நிச்சயம்.

______________________________________________________

இங்கு பெரும்பாலான இடங்களில் எட்டு மணி நேரத்திற்கான அடிப்படை சம்பளம் மலேசிய வெள்ளி பதினெட்டில் இருந்து இருபத்தி ஐந்து வரைக்கும் இருக்கிறது. குறிப்பாக உணவகங்கள், கார் கழுவும் இடங்கள் போன்றவை. ஒப்பந்தத்தில் என்னவோ எட்டு மணி நேர வேலையின் பின்னர் கிடைக்கும் மேலதிக ஒவ்வொரு மணிக்கும் மேலதிக வேலை நேரக் கூலி இருந்தாலும், அன்றாடம் பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுவதுண்டு. அயலில் உள்ள இந்திய முஸ்லீம் உணவகம் ஒன்றில் ஒன்றில் வேலை செய்யும் ஒரு வெளிநாட்டு பணியாளர் காலை ஏழு மணிக்கு இறங்கினால் மாலை ஏழுமணிக்கு தான் பணி முடிவு பெறும். பொதுவாக இங்குள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் பணி செய்யும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வார விடுமுறைகளோ, மாத விடுமுறைகளோ கிடையாது (வருடத்தில் ஒரு நாள் வரும் ரமலான் பெருநாள் பண்டிகைக்காக வழங்கப்படும் விடுமுறையை தவிர).

உடம்புக்கு முடியவில்லை என்று அவர்களாக விடுப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே உண்டு. இங்கு யாரும் யாருடனும் நியாய அநியாயங்கள் குறித்து பேசமுடியாது. பேசினால் முரண்பாடுகள் உருவாகும். முரண்பாடுகள் உருவாகினால் வேலை பறிபோகலாம். கட்டுமானத்துறை சார்ந்த வேலைகளை குத்தகை எடுத்து செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் நிலை இன்னும் சிக்கலானது. கட்டிட நிர்மாண துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் சற்றே அதிகம். எட்டு மணி நேர வேலைக்கு வெள்ளி முப்பத்து ஐந்திலிருந்து நாற்பத்தைந்து வரைக்கும் வழங்கப்படுவதுண்டு. காரணம் இது கடினமான வேலை என்பது மட்டும் காரணமில்லை.

இதையும் எனது நிலையில் இருந்தே விளக்கலாம். நான் பணிபுரியும் நிறுவனம் ஓர் குத்தகை நிறுவனம். குறிப்பிட்ட பிரதேசத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பிரதான புதிய நீர்க்குழாய்களை பதித்து, பின்னர் அதில் இருந்து வீடுகளிற்கு புதிய இணைப்பு வழங்குவது எங்கள் பணி. எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை ஒன்றை முழுவதும் முடிக்க எடுக்கப்படும் காலம் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள். எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை அதன் காலம் முடிவடைவதற்குள், டெண்டர் போடப்பட்டு புதிய குத்தகை நிறுவனத்திற்கு கிடைத்தால் எமக்கு வேலைக்கு பிரச்சனை இல்லை. சம்பளம் மாதம் தவறாமல் கிடைத்து விடும். இல்லை எனில் நிலைமை சிக்கல். கிடைக்கப்போகும் புதிய குத்தகைக்காக ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு வேலை இல்லாமல் காத்திருக்கும் காலப் பகுதியில் சம்பளம் கிடைக்காது.

ஆக வேலை இல்லாமல் குந்திக்கொண்டிருக்கும் காலங்களுக்கும் சேர்த்தே இந்த அதிக சம்பளம். வருடத்தில் குறைந்தது நான்கு மாதங்கள் இவ்வாறு புதிய வேலைக்காக காத்திருக்க வேண்டி வீணே உட்கார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரிய வீடமைப்பு திட்டங்கள், பால கட்டுமான திட்டங்களில் பணிபுரிபவர்கள் நிலைமை ஓரளவு பரவாயில்லை என கூறலாம். அந்நிய தொழிலாளர்களின் வேலையிட நலன்கள் இப்படி இருக்கின்றனவெனில் சமூகப் பாதுகாப்பு மிக மோசமானது.

என்னுடன் சிறிது காலம் பணியாற்றிய தமிழகத்தவர் ஒருவரின் காதில் ஒரு வெட்டுக்காயம் ஒன்று இருக்கும். அவரிடம் கேட்டேன்,”எதனால் இவ்வாறு ஏற்பட்டது”? அவர் எமது நிறுவனத்தில் பணி புரிவதற்கு முன்னர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டுமானத் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், நிலுவையில் இருந்த தனது இரண்டு மாத சம்பளத்தை தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் முதலாளி அருகில் இருந்த கத்தியை தூக்கி தமிழக தொழிலாளி மீது வீசி காதில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அன்றிலிருந்து அவர் சட்ட விரோத தொழிலாளியாகவே வேலை செய்தார். சிறிது காலத்தின் பின்னர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றில் பிடிபட்டு, தண்டனை காலம் முடிந்த பின்னர் தமிழ் நாட்டுக்கு சென்று விட்டார்.

கோலாலம்பூர் பிரதான புகையிரத நிலையத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். தலையும் ஆடையும் கலைந்திருந்தது.வயது இருபத்தியிரண்டு இருக்கலாம். கையில் ஒரு பழைய துணியால் கட்டுப் போட்டிருந்தார். தயங்கியபடியே என்னை நோக்கி வந்தார். “அண்ணை தமிழோ” என கம்மிய குரலில் வினவினார். “ஆமா, என்ன பிரச்சனை” என்று கேட்க “தான் ஒரு தமிழரின் கார் கழுவும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், நேற்றிரவு கூடுதலான நேரம் வேலை பார்த்ததால் காலையில் வழமையான நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை, அதனால் முதலாளிக்கும் எனக்கும் பிரச்சனையாகி விட்டது, அங்கு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அவர் என்னை இரும்புக் கம்பியால் தாக்க முற்பட்டபோது, தடுத்ததில் உள்ளங்கையில் கிழிந்து விட்டது,” எனகூறி காயத்தை காட்டிய போது எனக்கு கண்கள் இருண்டு விட்டது. “சரி ஏன் காயத்துக்கு மருந்து கட்டவில்லை” என கேட்க, “கையில் காசில்லை, பாஸ்போர்ட் முதலாளியிடம் இருக்கு” எனக் கூறினார்.

அப்போது என்னால், அவரை ஒரு கிளினிக்கிற்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்து கட்டிவிட்டு, அன்றைய நாளிற்கான உணவு செலவிற்கு பணம் கொடுக்க மட்டும்தான் முடிந்தது. அவரிடம் இருந்து விடை பெறும் போது “அண்ணை எனக்கு எங்கேயும் ஒரு வேலை வாங்கி தரமுடியுமா?” என வினவினார். அவருக்கு எனது நிலையை தெரிவித்து விட்டு “அவரின் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அதற்கு ஏதேனும் மக்கள் நல அமைப்பின் உதவியை நாடுங்கள், அல்லது மலேசிய இந்தியர் அரசியல் அமைப்புக்களிடம் உதவி கேளுங்கள் என கூறிவிட்டு விடை பெற்றேன்.

நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வேலை செய்பவர்கள் ஒருபுறமிருக்க, நிறுவனங்களில் இடம்பெறும் இது போன்ற காரியங்களும் சட்ட பூர்வமாக இருக்கும் ஒரு தொழிலாளியை சட்டவிரோத தொழிலாளராக மாற்றி விடுகின்றன. இதை விடவும் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளி, தனது நிலுவை சம்பளத்தை கேட்ட காரணத்திற்காக, தமிழர்களான வீட்டு உரிமையாளர்களினாலேயே அறைக்குள்ளேயே சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, உடம்பில் கொதிநீர் ஊற்றி சித்திரவதை செய்து செம்பனை தோட்டத்தில் வீசப்பட்ட செய்திகள் பலர் அறிந்திருக்க கூடும். தமிழ் நாட்டு தொழிலாளர்கள் சிலரை, அவர்கள் தமது கூலியை கேட்ட ஒரே காரணத்திற்காக தனது நண்பர்களை கொண்டு அடித்து துவைத்த முதலாளி, சிறிது காலத்தின் முன்னர் கோழிப்பண்ணையில் வேலை செய்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் அடைத்து வைத்து சித்திரை என சம்பவங்கள் பல. இதை விட ஏனைய இந்தோனேசியர்களின் கொள்ளை முயற்சிகளில்  சிக்கி தமது அவயங்களில் வெட்டுக் காயத்துடன் நாடு திரும்பிய தமிழக தொழிலாளர்களும் உள்ளனர்.

வேலையிடம் ஒன்றில் அங்கிருந்த இயந்திர உபகரணங்களை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்த பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசியர்கள் நால்வர், அங்கிருந்த தமிழக தொழிலாளியை தாக்கியதில் வலது கையில் நான்கு விரல்களிலும் மோசமான வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன் கழுத்திலும் காயமடைந்தார். நஷ்டஈடு? அதைப்பற்றி யாரும் பேசவுமில்லை, அந்த தொழிலாளியும் அதை கேட்கவும் இல்லை. மலேசியாவும் வேண்டாம், வேலையும் வேண்டாம் உயிரோடு ஊர் போய் சேர்ந்தால் போதும் என வந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே நாடு திரும்பிவிட்டார்.

மலேசியாவில் பாதிப்புக்குள்ளான தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலோர் மலேசிய தமிழ் முதலாளிகளினாலேயே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது கொஞ்சம் வேதனையான உண்மை. பிற இன முதலாளிகளினால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இருப்பினும் அவற்றுக்கு நிர்வாகத்திற்குள்ளேயே தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. சித்திரவதை செய்யும் அளவிற்கு மோசமான சம்பவங்கள் இடம்பெறவில்லை.

தமிழ் நாட்டில் பணம் பிடுங்கும் முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வை தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டபூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவர்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது நலன்விரும்பிகளோ அவர்களது செலவில் பயணசீட்டு வாங்கித் தரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் நாடு திரும்பலாம். இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது.

பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் இறுதியாக தஞ்சம் புகும் தருணத்திலும், அங்கும் இவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது வடஇந்திய தொழிலாளர்களாக இருந்தால், அவர்களிற்கான தூதரகத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியாகவும், தென்னிந்திய தொழிலாளர்களுக்கான அணுகுமுறை ஒரு மாதிரியாகவும் இருப்பதாக புகார்கள் பத்திரிகையில் செய்திகளாக வந்துள்ளன. அந்நிய தொழிலாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானது. இங்கே தமிழக தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியதன் காரணம் இந்த நாட்டில் வேலை பார்க்கும் பதினேழு இலட்சம் இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என செய்திக் குறிப்பொன்று கூறுகின்றது.

தேவைக்கு அதிகமாகவே சட்டரீதியான, சட்டவிரோதமான அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் நலன் பேணும் விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம், அல்லது நாடு திரும்பலாம் என இருக்கும் பட்சத்தில் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் உணவகத்துறை உட்பட்ட சேவைத் துறைகளில் அந்நிய தொழிலாளர்களை ஆட்குறைப்பது பற்றியும் அந்த இடங்களுக்கு உள்நாட்டவர்களை நியமிப்பது பற்றியும் அரசதரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

___________________________________________________

கனவுகளைச் சுமந்து வரும் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைகள் இங்கே ஏராளம். அடிபட்டு, காயம்பட்டு, சிறைபட்டு, இறுதியில் எப்படியாவது தாய்நாடு திரும்புவோமா என்று எண்ணுபவர்களும் அதிகம். அப்படி ஊர் திரும்பினாலும் அங்கே அவர்கள் வாங்கிய கடன் மிச்சமிருக்கும் வாழ்வை சித்திரவதை செய்யப் போதுமானது. அதனாலேயே இங்கே சட்டவிரோதமாக தங்கிக் கொண்டு கடுமுழைப்பு செய்து குறைந்த கூலியிலும் காலத்தை ஓட்டுபவர்கள் ஏராளம்.

மற்ற முதலாளிகளை விட தமிழ் முதலாளிகள்தான் தமிழனென்ற முறையில் இந்த சுரண்டல் மோசடியை அதிகம் செய்கின்றனர். தேசிய இனப்பெருமிதம் இங்கே வறியோனை வலுத்துவன் சுரண்டுவதற்கே உதவுகிறது. மலேசியாவிலிருந்து ஒரு பார்வதி அம்மாள் இந்தியா வருவதற்கு இவ்வளவு பிரச்சினை என்றால் அவரைப் போன்ற பிரபல பின்னணி இல்லாமல் மலேசியாவில் நாளைத் தள்ளும் சாமானியர்களின் கதி?

தமிழ்நாட்டு முகவர்கள், மலேசிய முதலாளிகள், மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் மலேசிய அரசின் கண்டு கொள்ளாமை, இந்தியத் தொழிலாளிகளின் நலனை கவலைப்படாத இந்தியத் தூதரகம் என்ற இந்த அதிகார வலைப்பின்னலில் விட்டில் பூச்சிகளாய் சிக்கி வதைபடும் தொழிலாளிகளை யார் காப்பாற்றுவார்கள்? விடை தெரியாத கேள்விகளோடு நானும் வாழ்வை ஓட்டுகிறேன். வேறு வழி?

_______________________________________________

–          பிரகாஷ், மலேசியா.

பின்குறிப்பு: வாசகர்களும் படைப்பாளிகளாக வினவில் பங்கேற்க வேண்டும், பங்கேற்பார்கள் என்ற எமது அவாவின் மற்றுமொரு அறிமுகமாக நண்பர் பிரகாஷை இங்கே பெருமையுடன் அறிமுகம் செய்கிறோம். – வினவு

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்