Skip to content

சினிமா: திரை விலகும் போது…

cinema-thirai-copy

நூல் : சினிமா திரை விலகும்போது..

புதிய கலாச்சாரம் இதழில் வந்த திரைப்பட விமரிசனங்கள், பிப்ரவரி, 2004.

நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின்பால் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது, 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக் கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்து. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் – சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும், சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிகைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத்தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிகைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை ‘ தினத்தந்தி ‘ பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிகைகளோ, சினிமா என்ற அறிவியலின் தொழில் நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்று தமது விமரிசனப் புலமையைப் பறைசாற்றுகின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் ‘ மேதைமையையும் ‘ வியந்தோதுகின்றன.

எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபாடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டு பிடிக்க விரும்புகின்றன. முக்கியமாக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ஃபார்முலாவில் குழைக்கப்பட்டு, ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம். இந்த ரசிகர்களில் சாதரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்னபிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.

அதனால்தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பிரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கள் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.

செல்வாக்குமிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை, அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். அவ்வகையில் தமிழ் மக்கள் இசைவிழாவின் பதினொன்றாம் ஆண்டில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதே. புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.

- ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம், பிப்ரவரி, 2004

நூலில் இடம்பெற்ற விமரிசனங்கள்:

மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர்

வீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை!

காதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா!

காதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை

அழகி : ஒரு அற்மனிதனின் அவலம்!

அஞ்சலி: அனுதாபத்திலும் ஆதாயம் தேடுகிறார் மணிரத்தினம்

ரோஜா‘ அரசாங்கச் செய்திப் படம்!

வேதம் புதிது

தாக்கரேயின் ஆசிபெற்ற மணிரத்தினத்தின் பம்பொய்

ஜென்டில்மென்: 21ஆம் நூற்றாண்டின் சாணக்கியன்

தமஸ் ‘ இருளிலிருந்து ஒளி பிறக்கட்டும்!

பாரதி : பாரதி அவலம்

இருவர்: இருவரின் வெற்றி! மணிரத்தினத்தின் தோல்வி !

ஹேராம் : கதையா? வரலாறா?

அன்பே சிவம்: சி.பி.எம்இன் திரை அவதாரம்

சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை!

ராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு!

பொதெம்கின், டைட்டானிக் : வரலாற்றுக் கப்பலும் வரவுக் கப்பலும்

ஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு

பி.பி.சி செய்திப்படம்: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்: பிஞ்சுக் குமரிகள்

தீக்கொழுந்து : உருவாகிய கதை

இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன்  புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பெற முடியும். முகவரி,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

தமிழிஷ் பயணாளர்கள் உங்கள் தமிழிஷ் கணக்கு விவரங்களை கொண்டு இன்ட்லியில் வாக்களிக்கலாம்

11 Comments

  1. அரடிக்கெட்டு

    எச்சரிக்கை!!!!!!!!
    இதுவரை நீங்கள் ரசித்த திரைப்படங்களை நார் நாராய் கிழித்து, பஞ்சாய் பறக்க விடும் நூல்!!

    Posted on 09-Jan-09 at 10:07 pm | Permalink
  2. நான் கடவுள்

    என்னுடைய படத்தை பற்றியும் எழுதுங்க

    -அகம் பிரம்மாஸ்மி
    c/o கஞ்சா கருப்பு

    Posted on 10-Jan-09 at 12:09 am | Permalink
  3. அர டிக்கெட்டு !

    ஒரு ஆலோசனை…

    ஒரு விமரிசனத்தையாவது பதிவோடு இணைத்தால் நலம்.

    Posted on 10-Jan-09 at 2:20 am | Permalink
  4. Loverboy

    //சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை!

    ராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு!

    ஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு //

    இந்தப் கட்டுரைகளை இங்கே வினவு வலைத்தளத்தில் பதிய முடியுமா?

    Posted on 10-Jan-09 at 4:10 pm | Permalink
  5. //
    இந்தப் கட்டுரைகளை இங்கே வினவு வலைத்தளத்தில் பதிய முடியுமா?
    //

    நூலை எழுதியவர்களாகவே இருந்தாலும் புத்தகமாக வெளிவந்துவிட்டால், பதிப்பகத்தின் அனுமதி இல்லாமல் வேறு வழியில் மறுபிரசூரம் செய்ய இயலாது என்றே கருதுகிறேன்.

    Posted on 10-Jan-09 at 9:42 pm | Permalink
  6. உங்களிடம் இருந்து சத்யம் சரிவு குறித்து அருமையான கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்.

    தோழமையுடன்,
    குதிரு

    Posted on 12-Jan-09 at 10:57 am | Permalink
  7. bhuvanesh

    All the mainstream commercial magazines churn out nothing more than crap as reviews. And, literary magazines are no better. It has become fashionable to be esoteric there while anyone with a decent grasp and understanding of the medium would be able to call their bluff. What else can you expect from people who are willing to write dialogues for movies like Baba.

    A social perspective is an integral part of any review and should be more so for some of the films that you have added in your list. Failing to discuss their politics is nothing but wanton omission and there is a systemic bias to things that makes them do so. They will keep feeding this crazy crowd (includes all of us) day in and day out all the while keeping the chicken roop strong and tight. Serves them so well. And this is precisely why any alternative attempt at reviews should encompass all aspects of movies. That shatters other myths too (of only the elite being capable of mastering high arts). The attempt should be leave no stone unturned to unmask the politics behind these films. And by the way, most of these films are aesthetically poor too. So, it should not be a problem on that account also.

    As many have requested why dont you post some of the reviews in this blog? would benefit some of us who wont be able to get our hands on the book.

    Posted on 14-Jan-09 at 11:14 pm | Permalink
  8. k.pathi

    when u approach a bank for a small loan of around Rs,25,000 to run a small industries,u will be asked 25,000 Q:finally,they will refuse to sanction the loan!
    For,Sathyam,Banks has given away more than……..
    Ammadiyov!
    so what,as usual,there will be an enquiry commission:commission will have enquiry:commission will accept bribe…soon another commission to find out,whther the first commission obtained any commission…hi…hi…

    Posted on 20-Jan-09 at 2:20 pm | Permalink
  9. Radhakrishnan N

    We buy garbage magazines for exchange of money.But for getting higher standard articles like we get from Puthiya Kalacharam or from Vinavu web it is not correct to download them freely.
    Hence some subscription must be received for accessing the articles-NRK

    Posted on 23-Sep-09 at 4:46 pm | Permalink
  10. லவ்வர்பாய் நீங்கள் கேட்டுள்ள கட்டுரைகளை நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறோம் ( அனுமதியுடன் ). அரடிக்கெட்டும் இக்கோரிக்கையை வைத்திருக்கிறார்.இக்கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு நேரம் வேண்டும் என்பதுதான் பிரச்சினை. முயற்சிக்கிறோம். ஆனால் நீங்கள் புத்தகத்தை வாங்கினால் இன்னும் பல கட்டுரைகளையும் படிக்கலாம். ஒரு சில கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் வாசகர்கள் புத்தகத்தை வாங்குவதற்கு ஆர்வம் கொள்வார்கள் என்பதும் உண்மைதான்.
    நட்புடன்
    வினவு.

    Posted on 12-Jan-09 at 9:55 pm | Permalink
  11. குதிரு
    சத்யம் பற்றி விரிவாக எழுதுவது சாத்தியமில்லை என்றாலும் சுருக்கமாகவேனும் விரைவில் எழுதுகிறோம்.
    நட்புடன்
    வினவு

    Posted on 12-Jan-09 at 9:59 pm | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!