privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் !

நூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் !

-

கம்யூனிசமும் குடும்பமும் ! – அலெக்சான்ட்ரா கொலந்தாய்

ஆசிரியர் குறிப்பு :

அலெக்சான்ட்ரா கொலந்தாய் 1872 -ல் பிறந்தார். 1899 -ல் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். பின்பு, 1903 -ல் லெனினது போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார். 1917 புரட்சிக்கு பிறகு சமூக நலத்துறையில் மக்கள் கமிசாராக இருந்தார். சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகளில் சோவியத்தின் அரசியல் தூதராக பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கம்யூனிச உணர்வுக்கு அங்கீகாரமாக அன்று வழங்கப்பட்டு வந்த லெனின் விருது (1933), உழைப்பின் செங்கொடி விருது (1945) போன்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.

புத்தகத்திலிருந்து… சில பகுதிகள்.

“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” (பக்கம் 7 )

“அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது”  (பக்கம் 11)

“உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்” (பக்கம் 16)

“அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்” (பக்கம் 19)

“வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்” (பக்கம் 16)

“முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே துன்பச் சங்கிலியாக இருக்கிறது” பக். 21

“முன்னர் ஆண்-பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்பட்டதாக உருவாகி மாறிவருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிச சமூகத்தின் இரு சம உரிமையுள்ள ஆண் பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்து வாழாத இருவருக்கு இடைப்பட்ட உறவுமுறையாக இருக்கின்றது” (பக்கம் 22)

“கம்யூனிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல” (பக்கம் 22)

“மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும்” (பக்கம் 23)

“உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” (பக்கம் 23)

“பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது!” (பக்கம் 24)

ரசியப் புரட்சியின் நூற்றாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில்  அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.

நூலின் முகப்பு

2011-ல் இப்புத்தகத்தின் முதல் பதிப்பை கொண்டு வந்தார்கள். இடைக்காலங்களில் தேடினாலும் கிடைக்கவில்லை. இப்பொழுது இரண்டாவது பதிப்பையும் கொண்டு வந்துள்ளார்கள்.

படியுங்கள்…

– குருத்து

(1920ம் ஆண்டில் வெளிவந்த Communism and the Family – என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.)
விலை ரூ. 20/- பக்கங்கள் : 24

வெளியீடு :
பெண்கள் விடுதலை முன்னணி,
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 600 095.
தொலைபேசி : 98416 58457

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க