privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை - வீடியோ!

இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ!

-

காசாவில் கமால் குடும்பம்


காஸாவில் 1390 மக்களை கொன்ற இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட கமால் குடும்பத்தின் போராட்டத்தை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

திடிரென நடைபெற்ற தாக்குதலில் முழு வீடும் தரைமட்டமாகி விட மிகுந்த இன்னலுடன் காப்பாற்றப்பட்ட தங்கள் குழந்தைகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர கமால் தம்பதிகள் போராடுகிறார்கள். அன்பான குழந்தைகள், அமைதியை விரும்பும் குடும்பம், ஆனால் காரணமில்லாமல் அவர்களை வெறியுடன் தாக்கும் இசுரேலிய ராணுவம்.

கமாலின் குடும்ப போராட்டமும், இழப்பும் சோகமும் பாலஸ்தீன குடும்பங்களின் அன்றாட நிகழ்வு. கமால் குடும்பத்தின் கதையை கேட்பதன் மூலம் மொத்த பாலஸ்தீனத்தின் அலறலும் நமது இதயத்தை உலுக்குகிறது.

_____________________________________________________________________

எங்கள் கதை


இந்த வீடியோவில் PNI இன் தலைவரான முஸ்தஃபா பகௌத்தி பாலஸ்தீன வரலாற்றையும், அது இசுரேலால் தொடர்ந்தும் கொடூரமாகவும் வஞ்சிக்கப்படுவதைப் பற்றி விவரிக்கிறார்.

விண்ணுயர விஞ்ஞானம் மற்றும் மனித சமுகம் வளர்ந்துவிட்டதாக கருதப்படும் இந்த நூற்றாண்டில் தான் இசுரேலின் பாஸிஸ அரசும், இராணுவமும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை எதிர்ப்பார் இல்லாமல் மேற்குலகின் அங்கீகாரத்தோடும் நடத்தி வருகின்றன.

1947ல் 45 சதவீதமாக இருந்த பாலஸ்தீன நிலம் இப்பொழுது இசுரேலால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 11 சதவீதம்தான் மிச்சமிருக்கிறது. இசுரேலை பொருத்தவரை பாலஸ்தீன மக்கள் என்போர் மூன்றாந்தரமான அடிமைகள். பாலஸ்தீன மக்கள் 1.30 மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வந்தால் அதற்காக அனைத்து ராணுவ செக்போஸ்ட்களையும் எதிர் கொண்டு சோதனை செய்யப்பட்டு கடந்து போக 7 மணிநேரமாகிறது. இசுரேலியர்களுக்கான சாலையில் காரில் அல்ல நடந்து போனால் கூட 6 மாதம் சிறை தான்.

தண்ணிர், மின்சாரம் என எல்லாம் இசுரேலியர்களுக்கு கிடைப்பதைவிட இரண்டு மடங்கு அதிக விலையில் அதுவும் தட்டுப்பாட்டோடுதான் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும். இசுரேலின் திடீர் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீன மக்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் 86,000 வீடுகள் தரமட்டமாக்கப்பட்டன. 6 லட்சம் பாலஸ்தீனியர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ளனர். குழந்தைகள் குண்ட்டிப்பட்டு இறப்பது இயல்பான நிகழ்வு.

இத்தனை அடக்குமுறைகள் இருந்தும் அதை மீறி பாலஸ்தீன மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காக்வும், நாட்டிற்காகவும், போராடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். படத்தை பாருங்கள், இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!

___________________________________________________________________________

– படங்கள் தெரிவு மற்றும் குறிப்பு: அக்னிபார்வை

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்