இன்று காலை 10 மணி முதல் இடிந்தகரையில் தொடங்கி 48 கரையோர கிராமங்களின் மக்கள் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.
இன்று காலையில் இப்போராட்டம் துவங்குவதை வாழ்த்தி இடிந்த கரை போராட்டப் பந்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:
“இன்றைய தினம் காவல்துறை வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பற்றிப் பரவி வருகிறது. கல்பாக்கம் மக்கள் அங்குள்ள அணு உலை ஊழியர்களை உள்ளே செல்லாதீர்கள் என்று மறித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று இடிந்த கரையில் மட்டுமல்ல, அனைத்து கிராமங்களிலும் மீனவ மக்கள் போராடி வருகிறார்கள். இது ஏதோ உள்ளூர் பிரச்சினை போல காங்கிரசு அரசு திட்டமிட்டே சித்தரிக்கிறது. இங்கே விபத்து ஏற்பட்டால் ஈழத்திலே மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா, கேரள மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? செர்னோபில் விபத்தின் விளைவுகள் பிரிட்டனிலே ஏற்பட்டதை மறுக்க முடியுமா?
ஏதோ யுரேனியம் நிரப்பி விட்டால் அத்துடன் முடிந்தது என்பது போல பேசுகிறார்கள். ஏன் அதற்கப்புறம் மூட முடியாதா, மூடியதில்லையா? செலவழித்து விட்டோம் மூட முடியாது என்கிறார்கள். 13000 கோடி உன் அப்பன் வீட்டுப் பணம் அல்ல மக்கள் பணம். மக்கள் சொல்கிறோம் மூடு.
திறக்கலாம் என்று கோர்ட் சொல்லிவிட்டதாம். கோர்ட்டைப் பற்றி யார் பேசுவது? முதல்வரா? பெங்களூரு நீதிமன்றத்தை வாய்தா வாங்கியே கேவலப்படுத்துபவர்களா நமக்கு புத்திமதி சொல்வது?
நிலக்கரியும் இரும்பும் பாக்சைட்டும் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தம் என்பதுதான் அரசின் கொள்கை என்று மத்திய மாநில அரசுகள் சொல்கின்றன. நீதிமன்றமும் அதையே சொன்னால் பாதிக்கப்படும் மக்கள் அதை எதற்காக ஒப்புக்கொள்ளவேண்டும்? போராடுவது மக்களின் பிறப்புரிமை.
அம்மையாரின் அரசியல் எதிரி திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். அவர் தேடப்படும் குற்றவாளி இல்லையாம். அமைதி வழி போராட்டம் நடத்திய உதயகுமார் தேடப்படும் குற்றவாளியா?
பத்து போலீசார் சேர்ந்து கொண்டு ஒரு வயதான பெண்மணியை அடித்து வீழ்த்திவிட்டால் அது வீரமா? கீழே விழுந்த பெண் அந்தபோலீசு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதுதான் வீரம். அதுதான் இங்கே நடந்திருக்கிறது. அடி வாங்குவது அவமானமில்லை, அடிபணிவதுதான் அவமானம்.
யார் தேடப்படும் குற்றவாளி? பிரேம்குமார் என்ற போலீசு அதிகாரி எஸ்.பி பதவியில் இருக்கும்போதே இரண்டு ஆண்டு காலம் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவர் மீது பிடி வாரண்டு இருந்தது. இன்னும் எத்தனை உயர் போலீசு அதிகாரிகளின் உதாரணம் வேண்டும்?
உதயகுமார் மீது இருப்பது வெறும் முதல் தகவல் அறிக்கை. அது பல நூறு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு மக்கள் போராட்டத்தை தேசத்துரோகம் என்று வழக்கு போட்டால் அது தேசத்துரோகம் ஆகிவிடுமா? இது நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல, மக்கள் மன்றத்தில், மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இது இடிந்தகரைக்கு மட்டுமான போராட்டமல்ல. இந்தியா முழுவதும் அணி உலைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டம். நாடு முழுவதும் பரவ வேண்டிய போராட்டம். போராட்டத்தை பரவ வைப்போம்.”
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!
- கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!
- உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!
- கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!
- இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்!
- அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
- கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
- கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
- கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
- கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
- நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்!
- மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
- கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!